இரண்டு ஆண்டுகள் கடந்து போனதே தெரியவில்லை. இப்போது எல்லோரும் கல்லூரியின் மூன்றாமாண்டு துவக்கத்தில் இருந்தனர். ரஷ்மி, ராகவை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தாள். காற்றே என் வாசல் வந்தாய் மியூசிக் ஆல்பம் சூட்டிங் வெவ்வேறு லொகேஷன்களில் நடைபெற்றது. பிரதீபாவுக்கு தானும் ஒரு கிரியேட்டிவ் மெம்பர் ஆக இருப்பதில் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. ரஷ்மி ராகவ் இருவரும் தன்னுடைய வரிகளை பாடும் போது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இன்னும் என்ன improvement செய்ய வேண்டும் என பிரவீனாவிடம் அடிக்கடி பேசி வந்தாள் பிரதீபா. ஜோ வின் சூட்டிங் தொடங்கி விட்டிருந்தது. அந்த பாட்டு ரொம்ப பிரமாதமாக வந்திருந்தது. ஜோவும் டான்ஸ் சிறப்பாக ஆடினான். எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பூஜா அருண் எமோஷனல் வாதங்கள் ஸீன் வைப்பது தான் எப்படி என பிரவீனா குழம்பினாள். ரொம்பவும் கடுமையாக இருக்க கூடாது அதே சமயம் ரொம்ப மென்மையாகவும் இருக்க கூடாது என்று யோசித்தாள் . பூஜாவை கூப்பிட்டு பேசினாள். அதிக வசனம் இல்லாமல் ஸீன் வைத்திருக்கிறேன் அவன் உன்னை அறைவான் . நீ அழுது கொண்டே செல்ல வேண்டும் . இது ரொம்ப பழைய ஸீன் ஆச்சே என்றாள் பூஜா.அதற்காக கடைசி சீனில் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான் என்றாள். சரி மேம் நீங்கள் சொல்கிறபடி நடிக்கிறேன் என்றாள்.
பூஜா அருண் ஃபைட் ஸீன் எல்லா ஏற்பாடும் தயார் ஆனது. பூஜா பாட்டு போட்டியில் ஜெயித்ததும் அருண் தோற்றதும் இருவருடைய முக பாவங்களை பதிவு செய்து கொண்டாள் பிரவீனா. இப்போது அவனிடம் வெற்றி கோப்பையை காட்டும் போது அருண் பூஜாவை ஓங்கி அறைய வேண்டும் கப் ஆனது தரையில் உருண்டு ஓட வேண்டும் என்றாள் பிரவீனா. அருண் நான் எப்படி மேம் அவளை அறைய முடியும் என தயங்கினான். சும்மா ஒரு மோமென்ட் தான் அவள் அதற்குள் முகத்தை திருப்பி விடுவாள். எல்லாம் தயாரானது அருண் உண்மையாகவே அறைந்து விட்டான். பூஜா முகம் சிவந்து போய்விட்டது. கப் எங்கோ போய் உருண்டு கிடந்தது. பூஜா அழுவதை படமாக்கி கொண்டிருந்தாள் பிரவீனா. அருண் சாரி சாரி பூஜா என்றான். பூஜா பரவாயில்லை. ஸீன் நன்றாக வந்திருக்கிறது.பூஜாவுக்கு ஐஸ் பாக் ஒத்தடம் கொடுத்தான் அருண். என்ன அருண் இப்படி பண்ணிவிட்டாய் என்று பிரவீனா வருத்தப்பட்டாள். எல்லா பகுதிகளும் சூட்டிங் முடிவடைந்ததும் கிளைமாக்ஸ் மட்டும் பாக்கியிருந்தது,
கிளைமாக்ஸ் எடுக்க ஏர்போர்ட்டில் பர்மிஷன் வாங்க கொஞ்சம் சிரமமாய் இருந்தது. கடைசியில் கிருஷ்ணன் வாங்கி விட்டார். ரஷ்மி, ராகவ் இருவரையும் வைத்து சில சீன்கள் எடுத்தாள் பிரவீனா. ஏர்போர்ட் சீனுக்கு முன் அருண் பூஜா liplock ஸீன் எடுக்க வேண்டியிருந்தது. அருணிடமும், பூஜாவிடமும் பேசினாள் பிரவீனா. நாளைக்கு நீங்கள் ரெண்டு பேரும் பிரிஞ்சாலும் இந்த ஸீன் அப்படியே இருக்கும். உங்களுக்கு ஓகே வா என்றாள். பூஜா அப்படியெல்லாம் நடக்காது மேம் நீங்கள் சூட்டிங் ஏற்பாடு செய்யுங்கள் என்றாள். மாலை கடற்கரை ஓரம் வெயில் தாழ்ந்து மறையும் நேரம் சூரிய ஒளி குறைந்து இருக்கும நேரத்தில் இருவரும் கிஸ் பண்ணிக்கொள்ளும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு 5 நொடி மட்டுமே வரும் காட்சி என்றாலும் அது ஆல்பத்துக்கு தேவை என்று பிரவீனா விரும்பினாள். ஏர்போர்ட் காட்சியில் பூஜா வெளிநாடு போக தயாராய் இருக்கிறாள். பூஜா மனதில் அருண் அறைந்த காட்சி திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருக்கிறது. அவள் அதனை நினைத்து பார்க்கிறாள். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிகிறது. துடைத்துக்கொள்கிறாள். அவனை கடைசியாய் ஒருமுறை பார்க்க மாட்டோமா என ஏங்குகிறாள். அருண் அப்போது வேகமாக ஓடி வருகிறான். அவளுடைய ஃப்ளைட் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்து விடுகிறது. அவள் காலடியில் வந்து உருண்டு விழுகிறான் அருண். பூஜா தடுமாறிபோகிறாள். என்னை மன்னித்துவிடு என்கிறான். என் உயிரை நான் எப்படி மன்னிக்க முடியும் என்கிறாள் பூஜா. இருவரும் கட்டிப்பிடித்து கொள்கிறார்கள். கிளைமாக்ஸ் சூட்டிங் நிறைவு பெறுகிறது.எல்லோருக்கும் மகிழ்ச்சி.
எடிட்டிங் ,ஆடியோ மிக்ஸிங் மற்றும் சில ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கின. பூஜாவும் அருணும் சிறப்பாக நடித்திருப்பதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். மிக்ஸிங் வேலைகள் முடிந்ததும் எல்லோரும் மியூசிக் ஆல்பம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆல்பம் ப்ரமோஷன் வேலைகளும் துவங்கப்பட்டன. பூஜா அப்பாவுக்கும் இதில் சந்தோஷம் தான். பூஜா ,சௌமியா உள்ளிட்ட தி ஈகிள்ஸ் குழு மெமபர்கள் எல்லோரும் பிரிவியூ ஷோ பார்க்க வந்திருந்தனர். மீடியாவை சேர்ந்த சில பேரும் வந்திருந்தனர். ஆல்பம் துவங்கியதும் ஜோ விசில்களை பறக்க விட்டான். ஆல்பம் சிறப்பாக வந்திருந்தது. கிருஷ்ணன் பிரவீனா முதுகில் தட்டிக்கொடுத்தார். நீங்கள்தான் இந்த வாய்ப்பை தந்தீர்கள் என்றாள் பிரவீனா. காமிரா மேன் ரவி, நந்தினி உள்ளிட்டோருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தார். பிரதீபாவும் சௌமியாவும் கை குலுக்கி கொண்டனர், ஆல்பம் ரிலீஸ் ஆவதற்கு தேவையான ஏற்பாடுகளை கிருஷ்ணன் செய்தார். மீடியா மெம்பர்களும் பாசிட்டிவ் ஆக முடிவு தெரிவித்தனர். தென்றல் ,ராகவ், ஜோ,ரஷ்மி, சுகன்யா,ஸ்ருதி ஆகியோரும் பூஜா அருணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சௌமியாவின் விவாகரத்து வழக்கு இழுத்துக்கொண்டே போய் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பூஜா ஊருக்கு திரும்பும் நாள் வந்தது ஏறக்குறைய 3 வாரங்கள் பெற்றோரை பிரிந்து சூட்டிங்கில் இருந்தாள்.அருண் வருத்தப்படவில்லை. அவளை கஷ்டப்படுத்த அவன் விரும்பவில்லை. அருண் ரயில்வே ஸ்டேஷன் போயிருந்தான். தாங்க்ஸ் பூஜா நீ சிறப்பாக நடித்துக் கொடுத்து இருக்கிறாய் என்றான். உன்னை எப்பவும் என்னால் மறக்க முடியாது என்றாள் பூஜா. பூஜா ஆல்பம் ரிலீஸ் ஃபங்சன் வருவாயா என்றான் , நான் நிச்சயம் வருவேன் என்றாள். ஃபோன் பண்ணு பூஜா . அப்பாவை கேட்டதாக சொல் என்றான். கல்லூரி மூன்றாமாண்டு என்றதும் பொறுப்புகள் கூடின . அருண் படிப்பிலும் கவனம் செலுத்தினான். ரிலீஸ் தேதி குறித்து எல்லோரிடம் டிஸ்கஸ் பண்ணினார் கிருஷ்ணன். சௌமியாவின் விவாகரத்தும் கிடைத்து விட்டால் அதோடு சௌமியாவோடு எங்கேஜ்மெண்ட் நிகழ்ச்சியையும் நடத்தி விடலாம் என எண்ணினார். அது பற்றி சௌமியா இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை. அவள் எப்படியாவது விவாகரத்து கிடைத்தால் போதும் என நினைத்திருந்தாள்.
ரொம்ப நாட்களுக்கு பிறகு ராகவும், ரஷ்மியும் சௌமியா வீட்டுக்கு வந்திருந்தனர். என்ன உங்களுக்கும் ஆல்பம் நடிக்கணுமா என்றாள். அதெல்லாம் வேண்டாம் உங்கள் விவாகரத்து வழக்கு முடிய போகிறதாமே ஆமாம் முடியபோகிறது என்றாள். அடுத்து என்ன மேம் ?நீங்கள் அவசியம் கிருஷ்ணன் சாரை திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறீர்களா . எனக்கென்று யார் இருக்கிறார்கள். நெருக்கடியான நேரத்தில் அவர்தான் ஆதரவு நீட்டினார். எனக்கும் வேறு வழியில்லை. பிரதீபாவையும் நினைத்து பார்த்துதான் இந்த முடிவை எடுத்தேன் என்றாள். சரி என்ன சாப்பிடுகிறீர்கள் . டீ போதும் என்றான் . அப்புறம் உங்கள் படிப்பையும் கொஞ்சம் பாருங்கள். இனி எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டும் என்றாள். அதுதான் கவலையாக இருக்கிறது, இவனை பிரிந்து என்னாலும் இருக்க முடியாது. அதெல்லாம் பார்த்தால் முடியுமா , வேலைவாய்ப்பு எல்லாம் பார்க்க வேண்டும் என்றால் பிரிந்து தான் ஆக வேண்டும் என்றாள் சௌமியா. பிரதீபா ஃபோன் பண்ணியிருந்தாள் சௌமியாவுக்கு . என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் என்றாள். எனக்கு கொஞ்சம் டைம் குடு பிரதீபா என்றாள். நல்ல முடிவாக சொல்ல வேண்டும் என்றாள் பிரதீபா.
எக்ஸாம்ஸ் வருகிறது ப்ரிப்பேர் செய்ய வேண்டும் என்றாள் ரஷ்மி. எப்படியோ நல்ல மார்க் வாங்கி விடுவாள் ரஷ்மி. நீ என்ன செய்ய போகிறாய். நான் உங்களை நம்பித்தான் இருக்கிறேன் எப்பவும் போல நீங்கள்தான் என்னை கைட் பண்ணவேண்டும் என்றான் ராகவ். நீங்கள் பூஜா அருணை போல இருக்க வேண்டும் எவ்வளவு பொறுப்பாக இருக்கிறார்கள். குறும்புத்தனத்தை விட்டு இனி சீரியஸ் ஆகிய படிக்க வேண்டும் என்றாள் சௌமியா. சரி மேம் நாங்கள் கிளம்புகிறோம் என்றான், நல்ல முடிவாய் எடுங்கள் அவசரபடவேண்டாம் என்றான். ஆல்பம் சம்மர் ரிலீஸ் ஆக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யபட்டது . இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. பிரவீனா உட்பட எல்லோருக்கும் பேமண்ட் செட்டில் செய்தார் அருனுக்கும் பூஜாவுக்கும் கூட. அருணும் பூஜாவும் மகிழ்ந்து போனார்கள். பூஜா அப்பா கிருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணி நன்றி தெரிவித்தார்.
பிரதீபா எனக்கு ஒண்ணும் இல்லையா அப்பா என்றாள். எல்லாமே உனக்காகத்தான் என்ன வேண்டுமோ கேள் என்றாள். எனக்கு இப்போது எதுவும் வேண்டாம் ஆனால் நான் கேட்கும் போது மறுக்க கூடாது என்றாள். நிச்சயமாக என்றார். தி ஈகிள்ஸ் குழுவின் காற்றே என் வாசல் வந்தாய் என எல்லா இடத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. யுட்யூப் சேனல்களிலும் மற்ற எல்லா மீடியாவிலும் விளம்பரம் செய்யப்பட்டது. அருண், பூஜா தன்னுடைய நண்பர்களு க்கெல்லாம் ரிலீஸ் தேதி குறித்த விளம்பரத்தை whatsapp மூலம் அனுப்பி இருந்தனர். எக்ஸாம் நெருங்கி வருவதால் ஜோ கூட படிக்க தொடங்கினான். தென்றலும் சுகன்யாவும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. எல்லோரும் காற்றே என் வாசல் வந்தாய் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தார்கள். பிரவீனா, ரவி, நந்தினி உட்பட எல்லா டெக்னீசியன்சுக்கும் விருந்து அளித்திருந்தார் கிருஷ்ணன்.