Kangal Niraintha Oviyame in Tamil Fiction Stories by Monica Sathish books and stories PDF | கண்கள் நிறைந்த ஓவியமே

Featured Books
  • RAAKH - खामोश चीखों का शहर

    इस शहर में, सूरज उम्मीद जगाने नहीं उगता था; वह तो बस पिछली र...

  • Flower

    यह उस वक्त की बात है जब मैं 15 साल का था। मेरे लिए प्यार शब्...

  • औद्योगिक कचरा

    औद्योगिक कचरा और विकास  विवेक रंजन श्रीवास्तव आज आधुनिक विका...

  • अदृश्य पीया - 15

    (कमरा वही है… पर अब खाली नहीं—बल्कि दिखाई न देने से भरा हुआ।...

  • तेरे मेरे दरमियान - 76

    जानवी ने अपना चेहरा अपने हाथों में छुपा लिया।कार मे वो अकेली...

Categories
Share

கண்கள் நிறைந்த ஓவியமே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கண்கள் நிறைந்த ஓவியமே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Contents

1.       கண்கள் நிறைந்த ஓவியமே!! 6

2.       கண்கள் நிறைந்த ஓவியமே!! 13

3. கண்கள் நிறைந்த ஓவியமே!! 21

4. கண்கள் நிறைந்த ஓவியமே!! 30

5. கண்கள் நிறைந்த ஓவியமே!! 38

6. கண்கள் நிறைந்த ஓவியமே!! 45

7. கண்கள் நிறைந்த ஓவியமே!! 53

8. கண்கள் நிறைந்த ஓவியமே!! 60

9. கண்கள் நிறைந்த ஓவியமே!! 67

10. கண்கள் நிறைந்த ஓவியமே !! 73

11. கண்கள் நிறைந்த ஓவியமே !! 82

12. கண்கள் நிறைந்த ஓவியமே!! 90

13. கண்கள் நிறைந்த ஓவியமே!! 97

14. கண்கள் நிறைந்த ஓவியமே!! 105

15. கண்கள் நிறைந்த ஓவியமே!! 113

16. கண்கள் நிறைந்த ஓவியமே!! 120

17. கண்கள் நிறைந்த ஓவியமே!! 128

18. கண்கள் நிறைந்த ஓவியமே!! 136

19. கண்கள் நிறைந்த ஓவியமே!! 143

20. கண்கள் நிறைந்த ஓவியமே!! 150

21. கண்கள் நிறைந்த ஓவியமே!! 157

22. கண்கள் நிறைந்த ஓவியமே!! 165

23. கண்கள் நிறைந்த ஓவியமே!! 172

24. கண்கள் நிறைந்த ஓவியமே!! 179

25. கண்கள் நிறைந்த ஓவியமே!! 187

26. கண்கள் நிறைந்த ஓவியமே!! 195

27. கண்கள் நிறைந்த ஓவியமே!! 202

28. கண்கள் நிறைந்த ஓவியமே!! 211

29. கண்கள் நிறைந்த ஓவியமே!! 218

30. கண்கள் நிறைந்த ஓவியமே!! 225

31. கண்கள் நிறைந்த ஓவியமே!! 231

32. கண்கள் நிறைந்த ஓவியமே!! 237

33. கண்கள் நிறைந்த ஓவியமே!! 244

34. கண்கள் நிறைந்த ஓவியமே!! 250

35. கண்கள் நிறைந்த ஓவியமே!! 256

36. கண்கள் நிறைந்த ஓவியமே!! 262

37. கண்கள் நிறைந்த ஓவியமே!! 269

38. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+. 276

39. கண்கள் நிறைந்த ஓவியமே!! 283

40. கண்கள் நிறைந்த ஓவியமே!! 290

41. கண்கள் நிறைந்த ஓவியமே!! 297

42. கண்கள் நிறைந்த ஓவியமே!! 305

43. கண்கள் நிறைந்த ஓவியமே!! 311

44. கண்கள் நிறைந்த ஓவியமே!! 317

45. கண்கள் நிறைந்த ஓவியமே!! 323

46. கண்கள் நிறைந்த ஓவியமே!! 330

47. கண்கள் நிறைந்த ஓவியமே!! 337

48. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+. 343

49. கண்கள் நிறைந்த ஓவியமே!! 350

50. கண்கள் நிறைந்த ஓவியமே!! 356

51. கண்கள் நிறைந்த ஓவியமே!! 362

52. கண்கள் நிறைந்த ஓவியமே!! 369

53. கண்கள் நிறைந்த ஓவியமே!! 376

54. கண்கள் நிறைந்த ஓவியமே!! 382

55. கண்கள் நிறைந்த ஓவியமே!! 388

56. கண்கள் நிறைந்த ஓவியமே!! 395

57. கண்கள் நிறைந்த ஓவியமே!! 402

58. கண்கள் நிறைந்த ஓவியமே!! 408

59. கண்கள் நிறைந்த ஓவியமே!! 414

60. கண்கள் நிறைந்த ஓவியமே!! 420

61. கண்கள் நிறைந்த ஓவியமே!! 426

62. கண்கள் நிறைந்த ஓவியமே!! 432

63. கண்கள் நிறைந்த ஓவியமே!! 438

64. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+. 445

65. கண்கள் நிறைந்த ஓவியமே!! 451

66. கண்கள் நிறைந்த ஓவியமே!! 458

67. கண்கள் நிறைந்த ஓவியமே!! 465

68. கண்கள் நிறைந்த ஓவியமே!! 471

69. கண்கள் நிறைந்த ஓவியமே!! 478

70. கண்கள் நிறைந்த ஓவியமே!! 484

71. கண்கள் நிறைந்த ஓவியமே!! 490

72. கண்கள் நிறைந்த ஓவியமே!! 497

73. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+. 504

74. கண்கள் நிறைந்த ஓவியமே!! 511

75. கண்கள் நிறைந்த ஓவியமே!! 517

76. கண்கள் நிறைந்த ஓவியமே!! 523

77. கண்கள் நிறைந்த ஓவியமே!! 530

78. கண்கள் நிறைந்த ஓவியமே!! 537

79. கண்கள் நிறைந்த ஓவியமே!! 543

80. கண்கள் நிறைந்த ஓவியமே!! 551

81. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+. 558

82. கண்கள் நிறைந்த ஓவியமே!! 566

83. கண்கள் நிறைந்த ஓவியமே!! 574

84. கண்கள் நிறைந்த ஓவியமே!! 582

85. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+. 589

86. கண்கள் நிறைந்த ஓவியமே!! 598

87. கண்கள் நிறைந்த ஓவியமே!! 606

88. கண்கள் நிறைந்த ஓவியமே!! 613

89. கண்கள் நிறைந்த ஓவியமே!! 621

90. கண்கள் நிறைந்த ஓவியமே!! 628

91. கண்கள் நிறைந்த ஓவியமே!! 634

92. கண்கள் நிறைந்த ஓவியமே!! 641

93. கண்கள் நிறைந்த ஓவியமே!! 648

94. கண்கள் நிறைந்த ஓவியமே!! 656

95. கண்கள் நிறைந்த ஓவியமே!! 665

96. கண்கள் நிறைந்த ஓவியமே!! 673

97. கண்கள் நிறைந்த ஓவியமே!! 681

98. கண்கள் நிறைந்த ஓவியமே!! 688

99. கண்கள் நிறைந்த ஓவியமே!! 695

100. கண்கள் நிறைந்த ஓவியமே!! 702

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1. கண்கள் நிறைந்த ஓவியமே!!
 

சோமமங்களம்(கற்பனை ஊர்) சுயம்பு லிங்கமாக தோன்றி இந்த கிராமத்திற்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் சோமநாதார் சுவாமியும் அவருக்கு இடப்புரம் வீற்றிருக்கும் மங்களாம்பிகையும் தான் இந்த ஊரில் வசிக்கும் அநேக மக்களுக்கு குல தெய்வம்..

இவர்களின் திருநாமத்திலே இந்த கிராமம் சோமமங்களம் என்று அழைக்கப்படுகிறது.

முன்னூறு குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இங்குள்ள மக்களும் மலைவாழ் மக்களின் வம்ச வழியை சேர்ந்தவர்களே..காலங்கள் மாற மாற இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் மாற தொடங்கியது..

அரசாங்க உதவிகள் சரியான விகிதத்தில் கிடைக்க பெறாத இந்த ஊர், இயற்கை எழில் கொஞ்சும் சோலைவனம் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை..

புதியவை எவ்வளவு புகுந்தாலும், பழையன எதுவும் முழுதாக கழியவில்லை..உதாரணம் நம் முன்னோர்களின் பண்டம் மாற்றும் முறை.. பண்டம் மாற்றும் முறை இன்னும் இந்த கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது.

கல்வி செல்வத்தை பெற ஏழு மயில் நடந்தே செல்ல வேண்டும் என்ற அவள நிலை உள்ளதால், படித்தவர்களும் வெகு சிலரே. அதுவும் ஆண் பிள்ளைகளே..

சீம ஓட்டினால் ஆனா அந்த வீட்டின் அடுப்படியில் நின்று, புகைகளுக்கு நடுவே அந்த அடுப்பை எரிய வைக்க  சிரமபட்டு கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி பொற்குழலி, வீடு முழுவதும் புகை சூழ, வேகமாக சென்று அடுத்த அறையில் உறங்கி கொண்டிருக்கும்  அவள் செல்வ சீமாட்டியை கண்டு வந்தால் தாயானவள்.

அன்னையிடம் அமுதுண்டு, சொப்பனத்தில் சிரித்து கொண்டு, அழகான பூ குவியலாக தூங்கி கொண்டு இருந்தால் 11 மாதமே ஆனா பூர்ணிமா.

அதற்குள் ஒரு வாண்டு வந்து குழலி அக்கா.. குழலி அக்கா.. என்று வாசலில் அவள் பெயரை ஏலம் போட..

அவள் வெளியே வந்து ஏன்டா இப்படி கத்துற பாப்பா உள்ள தூங்கிட்டு இருக்கா என்று அமைதியாக கூற,

அந்த வாண்டோ குழலியின் கேள்விக்கு பதிலாக..

அக்கோய் உன்னய அம்மச்சி கோவிலுக்கு வர சொல்லுச்சு வா போலாம் என்றது,

டேய் பாப்பா தூங்கறா, அடுப்புல வேற சோறு போங்கனும் நான் எப்படி வர முடியும்? என்ன விஷயம்னு போய் கேட்டுட்டு வாடா.. அநேகமா கோவில்ல இப்போ பூஜை நடக்குதுல அதுக்குத்தான் கூப்பிட்டு இருக்கும் நான் வேலை முடிச்சிட்டு வரேன்னு சொல்லு என்றால்..

அதலாம் இல்ல அக்கா அங்க யார் யாரோ இருக்காங்க.. ஊர் தலைவரு கூட அங்க தான் இருக்காரு.. அம்மச்சி முகமே சரியில்ல நீ வந்து என்னனு பாரு கா..

அந்த பாலகன் சொன்னதை கேட்டதும், அவள் முகத்திலும் பதட்டம் தொற்றி கொண்டது..

இருக்காதே பின்னே அவளுக்கு அனைத்தும் அவள் தாயும் மகளும் மட்டும் தானே.. அவள் அன்னை அங்கு தவித்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும், தாவணியை இடுப்பில் சுற்றி கொண்டு உள்ளே சென்றவள் எரிந்து கொண்டு இருந்த அடுப்பை அனைத்துவிட்டு, உறங்கி கொண்டு இருந்த அவள் மகளை தோளில் போட்டு கொண்டு வேகமாக நடந்தால்.. காலில் செருப்பு கூட அணியவில்லை..

இருவது நிமிடத்தில் சோமநாதர் கோவிலை அடைந்து இருந்தால்.. அந்த சிறுவன் சொன்னது போல் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர்..கோவிலே திருவிழா போல் கட்சியளித்தது, சுக்ரவார பிரதோஷ காலம் இந்த கோவிலில் விமர்சயாக கொண்டாடப்படும்.

அவள் அன்னை முத்தரசி முகத்தில் உள்ள ஏதோ ஒரு தீவிரம் அவளையும் ஆட்கொண்டது..வேகமா அன்னையிடம் சென்றவள் அம்மா என்ன ஆச்சு ஏன் இங்க நிக்குற? இவங்கல்லாம் கூட இங்க இருக்காங்க ஏதாச்சும் பிரச்சனையா என்று கேள்விகளை தொடுத்து கொண்டே போனால்.

குழலி அம்மா சொல்றத கேப்பியா தங்கம் என்று ஆதுரமாக அவள் தலையை வருடி கொடுத்தார், அவள் அன்னை முத்தரசி..

சொல்லுமா நீ என்ன சொன்னாலும் செய்றன் என்றது அந்த பட்டாம்பூச்சி.

அம்மாக்காக நீ கல்யாணம் பண்ணிக்கணும் என்று ஒரு இடியை இறக்கினால்..

அம்மா என்ன பேசுற நீ? எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு எனக்கு பூரணி இருக்கா இப்போ மறுபடியும் வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்ற என்று படபடவென பொறிய, அதற்குள் ஊர் பெரிய மனுஷர்கள் நான்கு பேர் அவளிடம் பேச வந்தனர்..

இந்தாமா பொற்குழலி, இன்னும் எவ்ளோ நாள் நீ இப்படியே இருக்கலாம்னு இருக்க? கல்யாணம் ஆகி ஆறு மாசம் நீ வாழ்ந்து இருப்பியா??அது எல்லாம் ஒரு வாழ்க்கையா??

வாழ்க்கைனா என்னனு தெரியாத 17  வயசிலயே உன் அம்மா அசலூர் காரங்க வந்து பொண்ணு கேட்டாங்கனு ஒழுங்கா விசாரிக்கமா உனக்கு கல்யாணம் முடிச்சு வச்சிடுச்சு..

அந்த குற்ற உணர்ச்சில தான் உன் அம்மா இன்னும் தவிச்சிட்டு இருக்கு.. அத சரி பண்ணனும்னு தான் இப்போ இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணி இருக்கு, நீ பயப்படாத இந்த சம்மந்தம்  எல்லாம் தெரிஞ்ச இடத்துல இருந்து தான் வந்து இருக்கு..

என்ன புள்ள பாக்குற, உன் அப்பாவோட சிநேகிதன் மகன தான் உனக்கு பேசி முடிச்சு இருக்கோம் என்றார் இன்னொருவர்..

இன்னும் எவ்ளோ காலத்துக்கு இப்படி இருக்க போறவ? உனக்கு ஒரு துணை வேண்டாமா? இந்த முறை எங்கள நம்பு ஊர் பெரிய மனுஷங்க நாங்க எல்லாம் மாப்பிள்ளைய அவர் ஊருக்கே போய் விசாரிச்சிட்டு வந்தோம் மாப்பிளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. உன்ன நல்லா பாத்துக்குவாரு..

அந்தா அங்குட்டு ஐயனார் கணக்கா நின்னு போன் பேசிட்டு நிக்குறாரு பாரு அவர் தான் மாப்பிள்ளை என்றார் அவளிடம் பேசி கொண்டு இருந்த பெரிய மனிதர்..

அவர்கள் சொன்ன பக்கம் குழலியின் முடி கூட அசையவில்லை.. அவள் மனம் முழுக்க அவ்வளவு அழுத்தமாக இருந்தது, கண்ணீர் மட்டும் அருவியாக வழிந்து கொண்டு இருந்தது..

ஏனென்றால் இந்த 18 வயதில் அவள் அனுபத்த துன்பங்கள் சொல்லில் அடங்காதவை.. வாழ்க்கை தொடங்கும் முன்பே அவளுக்கு முடிந்துவிட்டது.

சிறு பெண் என்றும் பாராமல் கணவன் இறந்த உடன் அவளுக்கு செய்த சாங்கியங்கள் என்ற பெயரில் நடந்த அவலங்கள் அப்பப்பா..அதை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்கும் சிறு பெண்ணிற்கு.

ஆறு மாதம் திருமண வாழ்க்கை என்ற பெயரில் அவள் ஏமாந்து இருக்கிறாள் என்பது இன்னும் அவளுக்கு தெரியாது.. அதுவும் தெரிந்தால் முழுதாக உடைந்துவிடுவாள்..

அவள் அமைதியாகவே இருக்க, அவள் அருகில் வந்தார் கல்யாண சுந்தரம், மணமகனின் தந்தை.

குழலிமா நான் உன்ன சின்ன வயசுல பார்த்தது.. அதுக்கு அப்பறம் இப்போதான் பாக்குறன், நான் உன் அப்பா ஓட நண்பன் மா, நாங்க எல்லாம் ஒன்னா தான் படிச்சோம்.. அவன் உங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாங்க இப்போ இருக்க ஊர்ல தான் இருந்தான்..

எதிர்பாரா விதமா உங்க அப்பா நம்ம எல்லாரையும் விட்டு போய்ட்டான்.. இப்போ தான் நீங்க இங்க இருக்க இடம் எனக்கு தெரிஞ்சுதுமா.. மனசு கேட்கல வந்து பார்க்கனும்னு தோனுச்சு.. இங்க வந்து பார்த்த அப்ரோம் தான் தங்கச்சி எல்லாம் விஷயத்தையும் சொல்லுச்சு மா..

நான் தான் உன் அம்மாகிட்ட கேட்டன், பொற்குழலிய என் பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுன்னு..

நீ எத நெனச்சும் பயப்படாதமா, நாங்க எல்லாம் இருக்கும், என் வீட்டுக்கு நீ மருமகளா வா கண்ணு என்று வாஞ்சையோடு அழைத்தார்..

பொற்குழலி எதுவும் பேசவில்லை அவள் அம்மாவை தான் தேடினால்.. கூட்டத்தின் நடுவே கைகளை பிசைந்து கொண்டு குழலியின் பதிலுக்காக காத்து கொண்டிருந்தாள்..

குழலியை பொறுத்தவரை கல்யாணம் என்பது ஒரு குவளை நிறைய விஷத்தை பாலில் கலந்து கொடுப்பது போல் தான்..இப்போது அந்த விஷத்தை அவள் அன்னையே கலந்து கொடுக்க, அவர் மேல் உள்ள அன்பின் காரணமாக அதை குடிப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை..

இன்னொரு முறை திருமனம் என்னும் பாலை வனத்தில் பயணபட அவள் தயாராகிவிட்டால்..

நல்ல துணை அமைந்தால் திருமனம் என்பது பாலைவனம் அல்ல, விரும்பியே செல்லும் சோலை வனம் என்பது பாவம் சிறு பெண்ணிற்கு இன்னும் தெரியவில்லை.

அன்னையிடம் சென்றவள் எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் மா, என்றால்.. அவரும் ஆற்றமையில் குழலி என்று கதறி அழுதார்..

முரட்டு தூக்கத்தில் இருந்த பூரணி அப்போது தான் லேசாக விழித்து சிணுங்க தொடங்கினால்.. அவளை மெதுவாக தட்டி கொடுத்தவள்..

ஆனா எனக்கு ஒரு நிபந்தனை இருக்கு, என் பொண்ணு பூரணி என்கூட தான் இருப்பா.. யாருக்காகவும் எதுக்காகவும் என் பொண்ண நான் விட்டு கொடுக்க மாட்டன் என்று அவள் முடிவில் உறுதியாக நின்றாள்..

கல்யாண சுந்தரம் சிரித்து கொண்டே, குழலி அருகில் வந்தவர், குழந்தையைகையில் வாங்கி கொண்டு, இவ இனிமேல் என் பேத்தி நீயே சொன்னாலும் இந்த ஊர்ல அவளை நான் விட்டுட்டு போக மாட்டன்.. நம்ம ஊருக்கு கொண்டு போய் அவளை நல்லா படிக்க வச்சு பெரிய ஆளா ஆக்குவன் என்றார்..

குழலியிடம் இருந்து அதற்கு எந்த பதிலும் இல்லை.. அமைதியாக இருந்தால்.

அவள் சம்மதம் சொன்ன அடுத்த நிமிடம் கல்யாண வேலைகள் துரிதமாக்கப்பட்டது..

அங்கு அமைக்கபட்டு இருந்த எளிமையான மனமேடையில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஐயர் கூறி கொண்டு இருந்த மந்திரங்களை வேண்டா வெறுப்பாக கூறி கொண்டு இருந்தான் மணமகன் விஷ்வ கர்ணன்..

அவனுக்கு இந்த திருமணத்தில் துளி அளவும் சம்மதம் இல்லை..நயமாக மகனிடம் பேசி இந்த ஊருக்கு அழைத்து வந்தவர், இன்று உனக்கு கல்யாணம் என்று தலையில் இடியை இறக்கி இருந்தார்.. அவன் சம்மதிக்காமல் போன தருணத்தில் எமோஷனல் பிளாக்மெயில் செய்து இப்போது இதுவரை கொண்டு வந்துள்ளார் கல்யாண சுந்தரம்..

அவன் போன் தொடர்ந்து அலறி கொண்டு இருக்க, உச்சரித்து கொண்டு இருந்த மந்திரத்தை நிறுத்திவிட்டு போனை எடுத்து பார்த்தான். மையூரி என்ற பெயர் திரையில் ஒளிர்ந்து கொண்டு இருந்தது..ஒரு முறை அவன் முகம் மென்மையை தத்தெடுத்தது..

பின் அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தவன் பேபி நான் பிஸியா இருக்கன் அப்ரோம் பேசறன் என்று சொல்லிவிட்டு, எதிர் முனையில் பேச வருவதை கேட்காமல் அழைப்பை துண்டித்து இருந்தான்..

மயூரி அவன் காதலி, இங்கு நடக்கும் கூத்தை அவளுக்கு தெரியாமல் இருக்கவே இந்த அவசர துண்டிப்பு..

பொண்ண அழைச்சிட்டு வாங்கோ என்று ஐயர் குரலில், எளிமையான அலங்காரத்தில் தேவலோக ரதியாக வந்து விஷ்வ கர்ணன் அருகில் அமர்ந்தால், பொற்குழலி.

சுப முகூர்த்த நேரத்தில், மங்கள நாணை பொற்குழலியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டு, அவனின் சரி பாதியாக்கி இருந்தான் விஷ்வ கர்ணன்..

ஐயர் அக்னியை வளம்வர கூற, பொற்குழலி தன் மகளை தாயிடம் இருந்து வாங்கி கொண்டு, பெரியவர்கள் சொன்னது போல் விஷ்வ கர்ணனின் விரலை பிடித்து கொண்டு அவனோடு வளம் வந்தால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2. கண்கள் நிறைந்த ஓவியமே!!
 

முத்தரசி ஜெகதீசன் தம்பதியின் ஒரே பெண் வாரிசு தான் பொற்குழலி..

இருவரும் காதலித்து திருமனம் செய்து கொண்டவர்கள்..வேறு வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் எதிர்ப்புகள் அதிகமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் முத்தரசி வீட்டில் கவுரவ கொலை செய்ய முற்பட, அதை அறிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். ஜெகதீசனிடம் நடந்ததை கூற, கலங்கி போனார் அவர். அவரின் உற்ற நண்பர்களான கல்யாண சுந்தரம், பரந்தாமன் உதவியோடு முத்தரசியை திருமனம் செய்து கொண்டார்..

விஷயத்தை கேள்விபட்ட இரு வீட்டாரும் அருவாள் கத்தி கம்போட புறப்பட..

ஜெகதீசன் சுதாரித்து கொண்டு நண்பர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து, இரவோடு இரவாக முத்தரசியோடு அந்த ஊரை விட்டு வெளியே வந்தார்..

அடுத்து எங்கு செல்வது என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருக்க, பேருந்து நிலையத்தில் கண்ணில் பட்ட பேருந்தில் ஏறினர் இருவரும்..

அந்த பேருந்து கடைசி நிறுத்தமாக தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராசிற்கு வந்து நின்றது.. அடுத்து என்ன என்ற கேள்விக்கு இருவரிடமும் பதில் இல்லை.

கையில் உள்ள பணத்தை வைத்து முதலில் வயிற்றை நிரப்பி கொண்டனர்.

அன்றைய நாள் மதியம் வரை புதுமண தம்பதிகள் அந்த ஊரை சுற்றி பார்த்து அவர்கள் தங்குவதற்கு ஏற்ற சிறிய வீட்டை வாடகைக்கு பிடித்தனர்.

சிறிது நாட்களில் ஜெகதீசன் படிப்புக்கு ஏற்ப ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கௌன்டன்ட்டாக வேலை கிடைத்தது..

நண்பர்களிடமும் தங்களை பற்றிய தகவலை தெரிவித்து நலமாக இருப்பதாக கூறினார்..

கல்யாண சுந்தரம் பரந்தாமன் இருவருக்கும் திருமனம் ஆகிவிட்டது, கல்யாண சுந்தரத்திற்கு 7 வயதில் விஷ்வ கர்ணனும், 4 வயதில் சூர்யாவும்  இருந்தனர். பரந்தாமனுக்கு இரண்டு வயதில் ரஞ்சனி என்ற ஒரு பெண் குழந்தை இருந்தால்..

சிறிது நாட்களில் கல்யாண சுந்தரமும் பரந்தாமனும் குடும்பத்தை ஊரில் விட்டு மதராசிர்கே வந்து வேலை தேடி கொண்டனர்.. இடை இடையில் ஊருக்கு சென்று அவர்கள் குடும்பத்தை பார்த்து வந்தனர்..

வாழ்க்கை அழகாக சென்றது ஜெகதீசனுக்கு, முத்தரசி அப்போது கருவுற்று இருந்தால்..

மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார் ஜெகதீசன்..

ஒன்பது மாதத்தில் பெண் மகவை பிரசவித்தார் முத்தரசி.. குழந்தையை கொண்டாடி தீர்த்தனர் மூன்று ஆண்களும்..

குழந்தைக்கு பொற்குழலி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்..

மூன்று வயதில் குழந்தைக்கு கல்யாண சுந்தரம் மடியில் வைத்து காது குத்தி மொட்டை அடிக்கப்பட்டது.. தாய் மாமன் சீரை நன்றாகவே செய்து இருந்தனர் இரு நண்பர்களும்.

நாட்கள் குடும்பம் குழந்தை மனைவி என நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது..

அந்த நாள் வரும் வரை, மாலை அலுவலகம் விட்டு வீடு திரும்பும் நேரத்தில், ஆளுங்கட்சி தலைவர் சிறையில் அடைக்கபட்ட காரணத்தால் வன்முறை வெடித்தது.. அந்த வன்முறையில் அனைத்து இடங்களும் அளங்கோலமாக காட்சி அளித்து இருந்தது. அதில் பரிதாபமாக உயிர் துறந்தார் ஜெகதீசன்.. யாருமே இப்படி ஒரு துர் சம்பவத்தை எதிர் பார்க்கவில்லை..

அடுத்த நாள் காலை தான் அவர் இறப்பு செய்தி முத்தரசியை வந்து சேர்ந்தது.. இரவு முழுவதும் கணவனை காணாமல் தூக்கம் இன்றி இருந்தவள் இப்போது மயங்கி விழுந்து இருந்தார்.. நண்பர்கள் இருவரும் முத்தரசியை சமாளித்து அடுத்தடுத்த வேலைகளை கனத்த மனதுடன் செய்து முடித்தனர்.

ஜெகதீசன் இறந்து ஒரு மாதம் ஆனா நிலையில் விஷயம் அறிந்து அவர்கள் ஊரில் இருந்து வந்த உறவுகள் முத்தரசியை காரணம் இன்றி சாட, முத்தரசியின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர்..வாய் சண்டையில் துவங்கி கைகளப்பில் முடிந்தது..

ஒரு வழியாக முத்தரசியையும் அவளது நான்கு வயது மகள் பொற்குழலியையும் அவள் பெற்றோர் ஊருக்கே அழைத்து சென்றனர்..

கல்யாண சுந்தரம், பரந்தாமன் இருவராலும் இந்த பிரச்சனையில் தலையிட முடியவில்லை.. சரி நம்ம சொந்த ஊருக்கு தான கூட்டிட்டு போறாங்க நாம போய் அப்போ அப்போ தங்கச்சியும் பாப்பாவையும் பார்த்துட்டு வருவோம் என்று பேசி கொண்டனர்..

முத்தரசிக்கு ஒரு மாதம் அவள் வீட்டில் நன்றாக தான் சென்றது.. அன்று இரவு மகள் தூங்கிவிட்டால் என்று நினைத்து அவள் தாய் தந்தை பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவள் காதில் விழுந்தது..

முத்தரசிக்கு இன்னொரு திருமனம் செய்து வைக்க தான் திட்டம் தீட்டி இருந்தனர்.. கொடூரத்தின் உச்சமாக அவள் திருமணத்திற்கு தடையாக உள்ள நான்கு வயது பொற்குழலியை கொள்ளவும் திட்டம் செய்தனர்..

அனைத்தையும் கெட்ட முத்தரசியின் பெற்ற வயிர் கதி கலங்கியது.. அதன் பின் ஒரு முடிவு எடுத்தவளாக அன்றய இரவை தூங்கா இரவாக கழித்தால்.. மறுநாள் காலையே அனைவருக்கும் குடிக்கும் கருப்பு காபியில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து, அவர்கள் மயங்கியதும் மகளை தூக்கி கொண்டு புறப்பட்டார்.

அவள் வந்து சேர்ந்த இடம் தான், இந்த சோமமங்கள கிராமம்..

முத்தரசி கணவனை போல் பட்ட படிப்பு ஒன்றும் படிக்கவில்லை.. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பேராதாவர் தான் முத்தரசி.. படிப்பில் ஆர்வம் இல்லை.. ஆனால் கை தொழிலை கற்று வைத்து இருக்கிறார்..

நன்றாக கூடை பிண்ணுவார், பனை ஓலையில் கைவினை பொருட்களை  செய்வார், மர பொம்மைகளை அழகாக செதுக்கி வடிவமைப்பார், திருமனம் ஆனா பின்பு ஜெகதீசன் அவருக்கு தையல் கலை பயிலும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்..

கலை மகளின் அருள் அவளுக்கு பூரணமாக இருந்ததால் அந்த கிராமத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டு இன்று வரை தன் மகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்..

முத்தரசி செய்த பெரிய தவறு, மகளை பாதுகப்பாக வளர்க்க வேண்டும் என்ற பயத்தில் உலகம் தெரியாமல் வளர்த்து விட்டதுதான்..  எங்கே இவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவள் அம்மா அப்பாவால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற பயம் தான் காரணம்.

இதில் பொற்குழலியின் முதல் திருமனம் நடந்த சூழலை எல்லாம் கதையின் போக்கில் காண்போம்..

கொஞ்சம் நாட்களுக்கு முன்புதான் குடும்பத்தோடு சுற்றுல்லா வந்த பரமானந்தம் முத்தரசியை எதர்ச்சியாக கண்டு அடையாளம் கண்டு கொண்டார்..

முதலில் அவரிடமும் பேச பயந்த முத்தரசி பின்பு அவரின் நம்பிக்கையான பேச்சில் இத்தனை காலம் அவர் வாழ்க்கையிலும் அவர் மகள் வாழ்க்கையிலும் நடந்த அனைத்தையும் கூறினார்..

அனைத்தையும் கேட்ட அவருக்கு மனம் பொருக்கவில்லை முத்தரசியை ஒரு அண்ணனாக கடிந்து கொண்டார்..

பின் கல்யாண சுந்தரத்திற்கு அனைத்தையும் கூற அவரும் அடுத்த நாள் அந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

பரமானந்தம் இப்போது சென்ட்ரல் கோவெர்மென்ட் உதயோகத்தில் உள்ளார்.. கல்யாண சுந்தரம் சொந்தமாக தொழில் துவங்கி இப்போது நல்ல நிலையில் உள்ளனர்.

மீண்டும் முத்தரசியை சோமமங்களம் கோவிலில் அழைத்து பேசினர், பின் பொற்குழலியை பற்றி அறிந்து கொண்ட கல்யாண சுந்தரம் அவளை தன் மகன் விஷ்வ கர்ணனிற்கு மனம் முடிக்க கேட்டார்.. வேண்டவே வேண்டாம் என்று மறுத்த முத்தரசியை பேசி பேசியே இருவரும் சம்மதிக்க வைத்தனர்.

அவருக்கும் மகள் வாழ்க்கை நல்ல முறையில் அமைவது மகிழ்ச்சி தான், ஆனால் குழந்தையுடன் இருக்கும் தன் மகளை எப்படி அவர் மகன் ஏற்று கொள்வார் என்று தயங்கினார்.

அந்த தயக்கமும் கல்யாண சுந்தரம் மற்றும் பரந்தாமனின் நம்பிக்கை வார்த்தையினால் மறைந்து போனது..

மூவரும் பேசி முடிவு செய்ததே இந்த திருமனம், ஊர் பெரியவர்கள் என்ற முறையில் முத்தரசி, கல்யாண சுந்தரம் மற்றும் பரமானந்தம் இருவரையும் அவளின் சகோதரர்கள் என்று அறிமுக படுத்தி வைத்தார்..

அவர்களின் உதவியோடு மகளின் மனதை மாற்றி இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்தார்..

அனைவரும் ஒன்று கூடி திருமண வேலைகளை முடித்துவிட்டனர், கல்யாண சுந்தரம் மீண்டும் சென்னைக்கு சென்று மகனை இங்கு  அழைத்து வரும் திட்டத்தை செயல்படுத்தினார்..

கல்யாண சுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளுக்கு இரு புதல்வர்கள்.. முதல் மகன் விஷ்வ கர்ணன், இரண்டாம் மகன் சூர்யா.

மகேஸ்வரிக்கு பரந்தாமனையும் சரி ஜெகதீசனையும் சரி அப்போதில் இருந்தே பிடிக்காது, இதில் சொந்த தொழில் செய்து பணமும் செல்வாக்கும் கொஞ்சம் கூடி போக, மனிதர்களை மதிக்க தவறி போனார்..

பிறப்பில் இருந்தே செல்வ சீமாட்டியாக வளர்ந்தவர் போல் அப்படி ஒரு அலப்பறை செய்வார். அவரின் பொழுது போக்கு எல்லாம் லேடீஸ் க்ளப், அவர் வயது தோழிகளுடன் ஷாப்பிங் செல்வது என அவர் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருந்தார்.

விஷ்வா இன்ஜினியரிங் முடித்து விட்டு, ஒரு MNC நிறுவனத்தில் டீம் மேனேஜராக உள்ளான்.. லகரத்தில் மாத வருமானம்..அவனின் கீழ் 35 பேர் வேலை செய்கின்றனர்..

சூர்யாவும் இந்த ஆண்டு தான் படித்து முடித்து இருக்கிறான், நண்பர்களுடன் சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் தொழில் செய்ய திட்டிமிட்டு உள்ளான்..

ஆக இரு பிள்ளைகளுக்கும் தந்தையின் தொழிலை கையில் எடுக்க விருப்பம் இல்லை.

மகன்கள் இருவரும் குணத்தில் தந்தையை போல் தான்.. விஷ்வ கர்ணனிற்கு மட்டும் அவ்வபொழுது தாயின் குணமும் எட்டி பார்க்கும். மேனுஃபக்ட்சரிங் டிஃப்க்ட் ஒன்றும் செய்ய முடியாது.

அன்று இரவு போல், வீட்டிலே அலுவலக வேளையில் மூழ்கி இருந்த மகனின் அறையை தட்டினார் சுந்தரம்..கதவை திறந்தவன் என்ன மனநிலையில் உள்ளான் என்று கணிக்க மகனையே  உற்று பார்த்தார்..

என்னப்பா சொல்லுங்க இந்த நேரத்துல வந்து இருக்கீங்க என்று நிதானமாக கெட்டவனை பார்த்து உள்ள போய் பேசலாம்பா கொஞ்சம் முக்கியமான விஷயம் என்றார்.

உள்ளே சென்றவர்கள், எதிர் எதிரே உள்ள இருக்கையில் அமர, தந்தையை உற்று கவனித்தான் விஷ்வ கர்ணன்.. சொல்லுங்க பா என்ன விஷயம்?

அது வந்துப்பா, என் நண்பன் ஜெகதீசன பத்தி உங்ககிட்டலாம் சொல்லி இருக்கன் நியாபகம் இருக்கா என்க?? அத எப்படிப்பா மறக்க முடியும் சின்ன வயசுல இருந்து பூமர் அங்கிள் மாதிரி நாங்கல்லாம் அந்த காலத்துல அப்படினு பேச தொடங்கி அவர் இறந்த கதைய சொல்லி காதுல ரத்தம் வர வைப்பிங்களே.. இந்த கதைக்கு பயந்துகிட்டே நானும் சூர்யாவும் நைட்டு நீங்க வரும் போது தூங்குனா மாதிரி நடிப்போம்.. எங்க பெட் டைம் ஸ்டோரி சொல்றன்னு இந்த கதைய சொல்லிடுவீங்களோனு பயந்து.. என்று கூறிவிட்டு நம்மட்டு சிரிப்பு சிரிக்க..

விஷ்வா என்று குரல் உயர்த்தி அவன் கிண்டல் கேலியை அடக்கி இருந்தார் கல்யாணம்..

எப்போதும் கிண்டல் செய்தால் ஜாலியாக எடுத்து கொள்பவர் இப்போது இறுக்கம் அடைவதை கண்டு என்னப்பா ஏதாச்சும் பிரச்சனையா என்றான்..

ஆமா பிரச்சனை தான்.. நீ நாளைக்கு என்கூட ஊட்டிக்கு பக்கத்துல இருக்க சோமமங்கலம் கிராமத்துக்கு வரனும் என்றார்..

அப்பாவின் முகத்தை வித்யாசமாக பார்த்தவன், என்னப்பா விளையாடுறிங்களா? எனக்கு நாளைக்கு ஆபீஸ் இருக்கு உங்களுக்கு தெரியாதா என்றான்..

எல்லாம் எனக்கு தெரியும், ஆனா நீ என்கூட வந்து தான் ஆகணும்.

ஏன்பா அப்படி என்ன தல போற காரியம்?

பெரு மூச்சை விட்டவர், அங்க என் நண்பன் குடும்பத்தை பார்த்தன் விஷ்வா, அவங்க அங்க ரொம்ப கஷ்ட்டபடுறதா கேள்விபட்டன். எனக்கு அவங்கள பார்க்கணும், அவங்களுக்கு ஏதாச்சும் உதவி பண்ணனும்னு தோணுது நீ என் கூட எனக்கு துணையா வா டா என்றார் பொறுமையாக..

அப்பா நாளைக்கு எனக்கு வீக்லி மீட்டிங் இருக்கு, நீங்க உங்க ப்ரண்ட் பரமு அங்கிள்ள கூட்டிட்டு போங்க.. அவர் தான உங்களுக்கு பெஸ்ட் கம்பெனி.. அப்படி இல்லனா சூர்யாவ கூட்டிட்டு போங்க, பிசினஸ் பண்றனு சொல்லிட்டு ப்ரண்ட்ஸ் ஓட ஊர் சுத்திட்டு இருக்கான் என்று பிடி கொடுக்காமல் பேசினான்..

மகனை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே..

இந்த வீட்ல உன் அம்மா தான் என் பேச்சை கேட்க மாட்டா இப்போ பசங்க நீங்களும் அப்படியே மாறிட்டிங்க..என்ன பண்றது..

வயசான கொடுக்குறத தின்னுட்டு ஒரு ஓரத்துல இருந்துக்கணும் போல.. யார் கிட்டயும் நம்ம பேச்சு எடுப்படாது, என்று கொஞ்சம் பாவம் போல பேச அது நன்றாகவே வேலை செய்தது விஷ்வாவிடம்...

அப்பா ஏன்பா இப்படி பேசுறீங்க?? என்று நீண்ட மூச்சை விட்டு தலையை கோதி கொண்டான்..

ஒன்னும் இல்லப்பா நீ உன் வேலைய பாரு.. நான் போறன் என்றவர் எழுந்து நிற்க..

அப்பா என்று அடிக்குரளில் அழைத்தவன் கொஞ்சம் இருங்க என்று கூறி..

மெத்தையில் இருக்கும் போனை எடுத்து, அவனின் DGM(deputy general manager) க்கு கால் செய்து நாளை அவன் விடுப்பு எடுப்பதாக தகவல் கூறினான்..

சுந்தரம் முகத்தில் சந்தோஷ ரேகைகள் பரவியது, இதே போல் நாளை ஒரு நடிப்பை போட்டு மகனுக்கு திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று கனவு உலகில் வலம் வந்தார் கல்யாண சுந்தரம்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3. கண்கள் நிறைந்த ஓவியமே!!
 

விடியற்காலை 4 மணி போல் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்து சேர்ந்தனர், விஷ்வ கர்ணாவும் அவன் தந்தை கல்யாண சுந்தரமும்..

சுந்தரம் இன்னும் மகனிடம் உண்மையை கூறவில்லை.. எங்கே இப்போது சொன்னால் அப்படியே அடுத்த விமானத்தில் பறந்து விடுவானோ என்ற பயம் தான்..

சோமமங்கலத்திற்கு சென்று கோவிலில் வைத்து கூறி கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்..

ஏர்போர்ட்டில் காத்து கொண்டிருந்தவர்களை பரமானந்தம் தான் வந்து அழைத்து சென்றார், விஷ்வா தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.. அவர் அவன் பார்வையை தவிர்ப்பவறாக ஜன்னல் புறம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.. விஷ்வாவிற்கு மட்டும் ஏதோ மனதோரம் ஒரு சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது..யோசனையாகவே அமர்ந்து இருந்தான்..

ஒரு மணி நேர பயணத்தில்  சோமமங்கலம் வந்து சேர்ந்தனர் மூவரும்..கோவிலில் திருமண ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில் இருந்தது..

அப்பா ஏன் கோவிலுக்கு வந்து இருக்கோம், உங்க ப்ரண்ட் பேமிலிய பார்த்துட்டு கிளம்பலாம் வாங்க என்றான்.

பரமானந்தம், நண்பனிடம் நீ பேசு நான் மத்த வேலைய பார்க்குறன் என்று நழுவி கொண்டார்..

நண்பனை மனதின்னுள்ளே வசை பாடினார்..

அப்பா எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க உண்மைய சொல்லுங்க என்றான்..

அவன் குரலில் இப்போது நீங்கள் உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது..

சுந்தரம் அப்போதும் அமைதியாக இருக்க..

பெருமூச்சை விட்டவன், என் கெஸ் கரெக்ட்னா என்ன உங்க நண்பன் பொண்ணு ஆஹ்ன் பேர் என்ன குயில்லோ மயில்லோ என்னமோ சொல்விங்களே என்று அலட்சியமாக தந்தையிடம் கேட்டான்..

பொற்குழலி.. என்று சங்கடமாக உறைத்தார்..

அப்போ நான் சொன்னது உண்மை தான் இல்ல?

அவன் அமைதியாக கேட்டாலும் அவன் குரலில் அத்துணை கோவம் இருந்தது.

அவருக்கும் மனது கஷ்ட்டமாக தான் இருந்தது..ஒரே மகனின் திருமணத்தை ஊர் கூட்டி சொந்த பந்தங்களோட நடத்த முடியவில்லையே என்ற கவலை தானே அன்றி பொற்குழலியை மனம் முடித்து வைப்பதற்காக அல்ல..

மகனுக்கும் பொற்குழலிக்கும் திருமனம் முடித்து வைப்பதற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளார். விஷ்வாவும் இன்னும் சிறிது நேரத்தில் அதை உணர தான் போகிறான்..

விஷ்வா நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுப்பா, என் நண்பன் குடும்த்துக்கு இப்போ யாருமே இல்ல டா.. அவங்க ரொம்ப கஷ்ட்ட பட்டுட்டாங்க வாழ்க்கைல..

பொற்குழலி ரொம்ப நல்ல பொண்ணு டா, அவ முதல் வாழ்க்கை தான் சரியா அமையல உன் மூலமா நான் அமைச்சு குடுக்குற இந்த வாழ்க்கையாவது நல்லபடியா அமையனும்னு ஆசைபடுறன்..

வாட்?

முதல் வாழ்க்கையா?? அப்போ அந்த பொண்ணுக்கு இது செகண்ட் மேரேஜ்ஜா என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்..

ஆமா இது அவளுக்கு ரெண்டாவது கல்யாணம், 11 மாசத்துல ஒரு குழந்தை இருக்கு என்றார் வருத்தமான குரல்..

ஓஹ்... ஷிட் டிஸ்கஸ்டிங், என்ன பா நெனச்சிட்டு இருக்கீங்க என்ன பத்தி?? நான் ஒன்னும் நீங்க கீ கொடுத்தா தலை ஆட்டுற பொம்மை இல்ல.. என் லைப்ல நீங்க எப்படி முடிவு எடுக்கலாம்?

நீங்க என்னோட அப்பா அதுக்கான மரியாதை பாசம் எல்லாம் உங்க மேல இருக்கு.. அதுக்காகலாம் என் வாழ்க்கைய நீங்க சொல்ற பொண்ணோட அமைச்சுக்க முடியாது..

அண்ட் நான் ஒரு பொண்ண லவ் பன்றன், உங்களுக்கும் நான் லவ் பன்ற விஷயம் தெரியும்னு எனக்கும் தெரியும்..

எனக்கு நான் லவ் பன்ற பொண்ணு தான் என் லைப் ஸ்டைல்க்கு செட் ஆவா..

தயவு செஞ்சு இதோட இந்த பேச்சை விடுங்க.. உங்க பிரண்ட் பேமிலிக்கு எவ்ளோ பணம் குடுக்கணுமோ குடுங்க என்ன செய்யணுமோ செய்ங்க..

பட் இந்த மேரேஜ் ஐடியாவை இதோட ட்ரோப் பண்ணிக்கோங்க..

அண்ட் அந்த பொண்ணுக்கு நாமளே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்றான் உறுதியாக..

சுந்தரம் மகனையே தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தார்..

இதான் உன் முடிவா என்றார்..

அவனும் அதே உறுதியுடன் ஆமாம் என்றான்.

சரி என் முடிவையும் கேட்டுக்கோ.. நானும் அவங்களுக்கு வாக்கு குடுத்துட்டன் என் முதல் பையன பொற்குழலிக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதா..இப்போ என் பேச்சை கேட்டு கல்யாண ஏற்பாட்டை எல்லாம் முடிச்சு மனமேடை வர வந்து இருக்கு..

இப்போ போய் என்னால அவங்க முன்னாடி தலை குனிஞ்சு நிக்க முடியாது..

அது மட்டும் இல்ல உனக்கும் பொற்குழலிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்றது தான் என் ஆசை..

ஏற்கனவே உன் அம்மா அவ இருந்த இருப்பை மறந்து புது பணக்காரியா மாறி லேடீஸ் கிளப் குடியும் கூத்துமா சுத்திட்டு இருக்கா..

இதல நீ லவ் பன்றியே அந்த பொண்ணு மயூரி அவ உன் அம்மாவுக்கு கொஞ்சமும் சலச்சவ இல்ல..

உன் அம்மா மாதிரி இன்னொரு பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வர நான் எப்பவும் சம்மதிக்க மாட்டன்..

ஒன்னு நீ பொற்குழலிய கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா இந்த ஊர்லயே எனக்கு கொல்லி வச்சுட்டு போய்டு என்றார்..

விஷ்வா சிரித்து கொண்டே, என்ன பா வழக்கமான பேரண்ட்ஸ் மாதிரி எமோஷனல் பிளாக் மெயிலா என்றான் கேலியான குரலில்..

நீ எப்படி வேணும்னாலும் நெனச்சிக்கோ விஷ்வா, எனக்கு இந்த கல்யாணம் நடக்கணும் அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவன் என்றவர் பேண்ட் பாக்கெட்டில் உள்ள பாய்சன் பாட்டிலை எடுத்தார்..

சீல் கூட பிரிக்கவில்லை.. அது உண்மையில் விஷம் தான் அதில் எந்த தில்லு முள்ளும் செய்யவில்லை என்பதை நொடியில் உணர்ந்து கொண்டான் விஷ்வ கர்ணன்..

அவர் அந்த விஷத்தை வாயின் அருகே கொண்டு செல்ல வேகமாக தட்டவிட்டான் விஷ்வா..

உங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சு இருக்காப்பா ஏன் இப்படி டார்ச்சர் பண்றிங்க??உங்க நண்பன் பொண்ணோட வாழ்க்கைகாக என் வாழ்க்கைய கெடுக்குறீங்களே..

பையன் மேல உண்மையான அன்பு வச்சு இருக்க யாராச்சும் இப்படி ஒரு கல்யாணத்தை அவங்க பையனுக்கு பண்ணுவாங்காளா என்றான்..

நான் உனக்கு நல்லது தான் பன்றன் விஷ்வா.. நீ போக போக புரிஞ்சுக்குவ, பொற்குழலி உனக்கு நல்ல மனைவியா இருப்பா.

இதான் என் முடிவு. இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்.. இல்லனா நான் உயிரோட இருக்க மாட்டன் என்று முடிவாக கூறினார்.

விஷ்வ கர்ணன் எதுவும் பேசாமல் அந்த மரதடியில் உள்ள கல்லின் மேல் அமர்ந்து கொண்டான்.. ஒரு பக்கம் அவன் காதலி மயூரி நினைவில் வந்து சென்றால்..

வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் இருப்பதாக உணர்ந்தான்..

அவன் தந்தை அவனை மிரட்டுவதற்காக சொல்லவில்லை. இந்த திருமனம் நடக்கவில்லை என்றால் உண்மையில் உயிரை விட்டுவிடுவாரோ என்ற பயம் வேறு ஒரு பக்கம் அவனை பாடாய் படுத்தியது.

அனைத்தையும் யோசித்து முடிவு எடுத்தவன், தந்தையின் அருகே போய் நின்றான்.. நேராக அவர் முகத்தை பார்த்தவன்..

இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்குறன்..

விஷ்வா வார்த்தையை கேட்டதும் சுந்தரம் முகத்தில் அவ்வளவு மகிழிச்சி..

உங்கள நம்பி உங்க பேச்சை நம்பி உங்க கூட வந்ததுக்கு எனக்கு நல்லா பாடம் கத்து குடுத்துட்டீங்க..

இதுக்கு அப்ரோம் என் வாழ்க்கைல நீங்க தலையிட கூடாது..

இனி நான் எப்பவும் உங்கள அப்பான்னு கூப்பிட மாட்டன்.. என் மூஞ்சிலயும் நீங்க முழிக்க கூடாது.. நமக்குள்ள இருக்க அப்பா மகன் உறவு இந்த கல்யாணத்தோட முடிஞ்சு போச்சு என்றான்.. கண்களில் அவ்வளவு கோவம். பேச்சில் அவ்வளவு உறுதி.

மகன் பேச்சில் ஆடிதான் போனார் கல்யாண சுந்தரம்.. அவன் சொன்னதை செய்ய கூடியவனாயிற்றே..

சரி கலாம் அவன் மனதை மாற்றும்... இப்போதைக்கு இந்த திருமனம் நடந்தால் போதும் என்று நினைத்தவர், அடுத்தடுத்த வேளைகளில் முனைப்பு காட்டினார்..

மகனை நண்பனின் பொறுப்பில் விட்டவன், நடந்ததை சுருக்கமாக கூறி விஷ்வாவை தயாராக கூறினார்..

முகத்தில் இருக்கத்துடன் பட்டு வேட்டி சட்டையில் தயாராகி நின்றான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பொற்குழலியை அழைத்து வந்து அவளை ஒரு புறம் சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது..

விஷ்வாவிற்கு பொற்குழலியை அழைத்து வந்து பேசியது எல்லாம் தெரியாது.. அவனை பொறுத்தவரை பொற்குழலியும் அவள் அம்மாவும் அவன் அப்பாவிடம் சிம்பத்தி கிரியேட் செய்து இந்த திருமண ஏற்பாட்டை செய்து உள்ளனர் இதுவே அவன் கணிப்பு..

இன்னும் பொற்குழலியின் முகத்தை கூட பார்க்கவில்லை, அதற்குள் அந்த அப்பாவி பெண்ணை பற்றிய எதிர்மறை எண்ணங்களை வளர்த்து கொண்டான் விஷ்வ கர்ணன்..

இப்படி ஒரு மனநிலையில் தான் விஷ்வ கர்ணன் பொற்குழலி திருமனம் நடந்து முடிந்தது..

கோவிலினுல் கல்யாண விருந்து பரிமாற, விஷ்வ கர்ணன் சாப்பிடவில்லை.. பொற்குழலி மட்டும் குழந்தைக்காக உண்டால்.. அவள் உண்டால் தானே குழந்தைக்கு அமுது கொடுக்க முடியும்.

பொற்குழலிக்கு தன் கழுத்தில் தாலி கட்டியவனின் பெயர் கூட தெரியாது.. அவள் அன்னைக்காக இந்த திருமனம் என்று நினைத்து கொண்டால்..

விருந்து முடிந்ததும் மாப்பிள்ளை பெண்ணை முத்தரசி வீட்டிற்கு அழைத்து வந்தால்.

வீட்டில் எந்த சம்பிரதாயமும் வேண்டாம் என்று முன்பே கூறிவிட்டார் சுந்தரம்..

மகனின் குணத்தை அறிந்தவர் ஆயிற்றே..

குழலியை மட்டும் பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கு ஏற்ற கூறினார்.

மாலை போல் சென்னை செல்வதாக முடிவு செய்யபட்டது..விஷ்வ கர்ணனிடம் அந்த ரூம்ல ஓய்வு எடுத்துக்கோங்க தம்பி என்றார் முத்தரசி..

உங்க வயசுக்கு மரியாதை குடுக்கணும்னு நினைக்கறன்,
தயவு செஞ்சு என்கிட்ட வந்து பேசாதீங்க என்றான் அனல் விழிகளால்.

விஷ்வா என்று கல்யாண சுந்தரமும் பரந்தாமனும் ஒரே நேரத்தில் குரல் உயர்த்தினர்..

முத்தரசி அவர்களிடம் அண்ணா வேண்டாம் தம்பிய எதுவும் சொல்லாதீங்க என்றார்..

தம்பி எனக்கு புரியுது உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லனு.. உங்களுக்கு என்ன கோவம் இருந்தாலும் என்மேலயே காமிச்சிடுங்க தம்பி.. என் பொண்ண தாண்டிச்சுடாதீங்க.. உங்கள நம்பி தான் என் பொண்ண உங்க கூட அனுப்புறன் அவளை பத்திரமா பார்த்துகோங்க..

என் பொண்ணுக்கு சூதுவாது தெரியாது.. உலகம் தெரியாம வளர்ந்துட்டா.. யார் என்ன சொன்னாலும் நம்பிடுவா அவளை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க தம்பி என்று கண் கலங்கி கை எடுத்து கும்பிட்டு கேட்டார் முத்தரசி..

விஷ்வாவிற்கும் கொஞ்சம் தர்ம சங்கடமாக தான் இருந்தது அவர் இப்படி அழுது நிற்பது.. ஆனாலும் அவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்..

நண்பர்கள் இருவரும் முத்தரசியிடம் வந்தவர்கள் நாங்க பொற்குழலியையும் பாப்பாவையும் பத்திரமா பாத்துக்குறோம் நீ கவலை படாத..

உன்ன எங்க கூடவே கிளம்பி வர சொன்னா, நீதான் இந்த ஊரைவிட்டு வர மாட்டன்னு சொல்லிட்ட என்று பெரிதாக வருந்தினார் கல்யாணம்..

பொற்குழலி நடந்த அனைத்தையும் கண்டு கலக்கத்துடன் நின்று இருந்தால்..

ஒரு புறம் அவள் தாயை விட்டு பிரிய போகிறோம் என்ற கவலை வேறு ஒட்டி கொண்டது.

மகள் முகத்தை கண்டவர், நீ எதுவும் நெனச்சு மனச போட்டு குழப்பிக்காத குழலி, போ போய் உன் துணி பாப்பா துணிலாம் எடுத்து வை, அம்மா வரன் என்று மகளை அனுப்பி வைத்தார்..

மாலை புறப்படும் நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தான் விஷ்வா, அனைவரும் அவனுக்காக தான் காத்து கொண்டு இருந்தனர்..

குழலியின் பொருட்கள் காரில் ஏற்றப்பட்டு இருந்தது, விஷ்வாவும் போய் முன் இருக்கையில் ஓட்டுனர் அருகில் அமர்ந்து கொண்டான்.

பூரணி பாப்பா சுந்தரம் கையில் தவழ்ந்து கொண்டு இருந்தால்..

குழலி அவள் தாயிடம் கண்ணீரோடு நின்று கொண்டு இருந்தால்.. குழலிமா எத நெனச்சும் கவலை படாத, அங்க உனக்கு சுந்தரம் மாமா பரமு மாமா இருக்காங்க.. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க.. எதுனாலும் அம்மாக்கு போன் போடு.. அம்மா அப்போ அப்போ வந்து உன்ன பார்க்குறன் என்று மகளிற்கு தைரியம் கொடுத்தார்..

பின் பூரணி பாப்பாவை வாங்கி என் செல்லம் நீ இல்லாம உன் அம்மம்மா எப்படி இருக்க போறனோ என்று கண்கலங்கி குழந்தையை உச்சு முகர்ந்தார்.

நீயும் எங்க கூட வந்துடுமா என்று சிறு குழந்தையை விட அதிகமாக அழுதால் குழலி..

இல்ல தங்கம் எனக்கு இந்த ஊரு தான் இனி எல்லாம்.. நான் இங்கயே இருக்கன்.. எனக்கு என்ன பயம், ராவானா பக்கத்து வீட்டு பொன்னி அம்மா துணைக்கு வந்து படுத்துக்க போது நான் இங்க பத்தரமா இருப்பன் என்ன பத்தி கவலை படாத என்று மகளிற்கு தைரியம் கொடுத்தார் முத்தரசி..

விஷ்வாவின் நச்சரிப்பின் பெயரில் ஓட்டுனர், ஹார்ன் அடித்தார்..

அவர்களுக்கும் விமானத்திற்கு நேரமாவதை உணர்ந்த பரமு வாமா போலாம் என்றார் குழலியிடம்..

உடம்பு பார்த்துக்கோ மா.. நான் இல்லனு எப்பவும் வேலை செஞ்சிட்டே இருக்காத.. ஒழுங்கா சாப்பிடு, பத்தரமா இரு மா என்று அன்னையிடம் ஆயிரம் பத்தரங்களை கூறி விடை பெற்று வந்தால் குழலி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சுந்தரம், விஷ்வா பின்னாடி போய் உக்காருப்பா எனக்கு பின்னாடி உக்காந்தா தூக்கி தூக்கி போடுது என்று நயமாக பேசி பின்னே குழலி அருகில் அமர வைத்தார். தந்தை முகத்தை கூட பார்க்க விரும்பாமல் வேறு வழியின்றி அவர் சொன்னதை செய்தான் விஷ்வா..

அவனை குழலி அருகில் இன்னும் நெருங்கி அமர வைக்கும் பொருட்டு பின் இருக்கையில் வந்து அமர்ந்தார் பரமு..

விஷ்வாவால் எதுவும் பேச முடியவில்லை.. பூரணி பாப்பா தான் அந்த இருக்கமான சூழ்நிலையை மாற்றும் பொருட்டு மழலை மொழியில் ராகம் பாடி கொண்டு இருந்தால்..

கணவன் மனைவி இப்போதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை..

இடையிடையே குழலியின் தோள்கள் விஷ்வாவின் மார்போடு உரசி கொள்ள, அவள் தான் சங்கடபட்டு போனால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை..

குழலி இருந்த மனசோர்வில் ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்ந்து உறங்கிவிட்டால்.

பரமுவும் சுந்தரமும் கூட உறங்கிவிட..

பூரணி பாப்பா பொறுத்து பொறுத்து பார்த்தவள் அவளுக்கு விளையாட யாரும் இல்லை என்ற கோவத்தில் அருகில் வெறுமென கண் மூடி அமர்ந்து சீட்டில் சாய்ந்து இருந்த விஷ்வாவின் முகத்தில் சப்பென்று அடித்துவிட்டால்..

அவன் கண் விழித்து தன்னை தீண்டிய பிஞ்சு கையை பார்க்க, பூரணி பாப்பாவோ அவள் கையை வாய்க்குள் அதக்கி கொண்டு, குண்டு விழிகளால் அவனையே பார்த்து கண்களை உருட்டி கொண்டு இருந்தது..

இவ்வளவு நேரம் அவனிடம் இருந்த இறுக்கம் நொடியில் மறைந்து போனது...

ஆஹ் வுஹ் என்று ஏதேதோ மழலையில் பேசி கொண்டு இருந்தால் குட்டி தேவதை..

விஷ்வா அந்த மழலை மொழியில் மயங்கியவன் கண்ணை சிமிட்டி, புருவத்தை ஏற்றி இறக்கி, நாக்கை துருத்தி குழந்தைக்கு ஈடு கொடுத்து விளையாட்டு காட்டினான்..

தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த பரமுவும் சுந்தரமும் இந்த காட்சியை காண தவரவில்லை..

அவர்களின் கார் பயணம் இப்படியே கோயம்புத்தூர் ஏர்போர்ட் வரை நீண்டது.

விமானத்தில் ஏறி அமர்ந்தனர் நால்வரும், வழக்கம் போல் நண்பர்கள் இருவரும் தனியாக அமர்ந்து கொள்ள, விஷ்வாவும் குழலியும் அருகருகே அமர்ந்து கொண்டனர்..

ஜன்னல் பக்கம் உள்ள சீட்டில் குழலி அமர்ந்து கொண்டால்.. அவள் பஸ்ஸில் கூட அதிகம் செல்லாதவள்.. அவளை கூட்டி வந்து விமானத்தில் அமர வைக்க மிரண்டு விட்டால்..

சிறிது நேரத்திற்கு முன்

மாமா நான் பஸ்ல உங்க ஊருக்கு வரன், நான் இந்த விமானத்துல வரல பயமா இருக்கு என்று உடல் நடுங்க கூறினால்..

அப்போது தான் அவளை கண்டான் விஷ்வா.. இவ்ளோ சின்ன பொண்ணா இருக்காளே இவளையா நான் கல்யாணம் பண்ணன் என்று அவனையே கடிந்து கொண்டான்.

விஷ்வா இந்த பொண்ணு விஷயத்துல நீ ஒரு முடிவு எடுத்தே ஆகணும் என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டான்.

மீண்டும் அவர்களின் பேச்சு காதில் விழுந்தது..

அதலாம் ஒன்னும் இல்லாம நாங்கல்லாம் இருக்கோம்ல பயப்படாம வா என்று சொன்ன சமாதானங்கள் எதுவும் அவளிடம் வேலைக்கு ஆகவில்லை..

பொறுத்து பொறுத்து பார்த்த விஷ்வா, அவளை நெருங்கி அவள் கையில் உள்ள குழந்தையை வாங்கி கொண்டு முன்னே நடந்தான்..

ஹய்யோ என் குழந்தை என்று விஷ்வா பின்னாலே ஓடினால் குழலி..

சட்டென்று திரும்பினான் விஷ்வா. அவன் திடீர் என்று திரும்புவான் என அறியாத குழலி அவன் பாறை மார்பில் இடித்து நின்றாள்..

உண்மையில் அவள் நெற்றி வலி எடுத்துவிட்டது.. தலையை தேய்த்து கொண்டே அவனை பார்த்தால்..

அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.

என் குழந்தை குடுங்க என்று அவள் அவனிடம் இருந்து குழந்தையை வாங்க முற்பட..

ஷ்ஷ்ஷு வாய மூடு, இது ஏர்போர்ட் இங்க இந்த மாதிரி கண்ண கசக்கிகிட்டு கூச்சல் போட்டுட்டு இருந்தா போலீஸ் புடிச்சிட்டுc போய்டுவாங்க.. என்ன உனக்கு ஓகே வா??

சுற்றும் முற்றும் பார்த்தால்.. அவன் சொன்னது போல் சீருடை அணிந்த அதிகாரிகள் அங்குமிங்கும் உலாவி கொண்டு இருந்தனர்.. அவர்களை கண்டு மிரண்டவள் விஷ்வாவை பார்த்து பேந்த பேந்த வென்று விழித்தால்..

இது போல் அதிகாரிகளை அவள் இப்போது தானே முதன் முறை பார்க்கிறாள் அதனால் வந்த அச்சம்..

அவள் பார்வையில் சுவாரஸ்யம் கூடியது விஷ்வாவிற்கு..

இப்போ ஒழுங்கா எங்க கூட வா, வரமாட்டன்னு அடம் பன்னா நீ பிரச்சனை பண்றதா சொல்லி நானே உன்ன புடிச்சி குடுத்துடுவன் என்று சீரியஸ்ஸான குரலில் மிரட்ட..

இல்ல நான் உங்க கூடவே வரன், என்ன யார்கிட்டயும் புடிச்சு குடுத்துடாதீங்க என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நொடியில் அவன் அருகே வந்து நின்று கொண்டால்.

யார் பேச்சையும் கேட்காத பூனை குட்டி எஜமானின் பேச்சை மட்டும் கேட்டு அவர்களுடனே செல்லம் கொஞ்சி சுற்றி கொண்டிருக்கும் பொழுது மனதில் ஏற்படுமே ஒரு சந்தோஷம் அப்படி இருந்தது விஷ்வாவின் மனநிலை..

பின் அவளையும் அழைத்து கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான் விஷ்வா..

அவர்கள் பின்னால் நின்று நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த பரமுவும் சுந்தரமும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்து கொண்டனர்.

விமானத்தில் குழலியை ஜன்னல் சீட்டில் அவனுக்கு அருகிலேயே  அமர்த்தி கொண்டு சீட் பெல்ட்டை போட்டுவிட்டான்.

பூரணியை அவனோடவே வைத்து கொண்டான்..

"பாப்பா என்கூடவே இருக்கட்டும், நீ பயந்து அவளையும் பயப்பிட வச்சுடாத"..

அவள் விமானத்தில் ஏறியதும் குழந்தையை வாங்க முற்பட்ட போது அவன் கொடுத்த பதில் இது.

அப்போதில் இருந்து இப்போதுவரை அமைதியாக இருக்கிறாள் குழலி.

விமானம் புறப்பட அடிவயிறு கலங்கியது குழலிக்கு பயத்தில் விஷ்வாவின் கையை இருக்கமாக பிடித்து கொண்டு, தலையை கீழே குனிந்து முருகா முருகா என்று முனங்கி கொண்டு இருந்தால்..

என்ன பன்ற நீ? அவன் சாதாரணமாக தான் கேட்டான்.. பட்டென்று அவன் கரத்தை விட்டு வயிறு கலங்குது என்று அழுது விடுவது போல் கூறினால்..

விமான பணி பெண்ணை அழைத்து ஒரு பாட்டில் தண்ணீர் மட்டும் வாங்கி கொடுத்து அவளை குடிக்க கூறினான்..

அவன் கையில் விளையாடி கொண்டிருக்கும் பூரணியை பார்த்தான்.. இவளுக்கு இந்த பாப்பா எவ்வளவோ மேல் என்று தோன்றியது.

அதன் பின் அமைதியாக வந்தவள், அவன் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டால்..

எந்த தைரியத்தில் அவன் தோள் மீது சாந்தாலோ அவளுக்கே வெளிச்சம்..

அவனும் அவள் தன் தோள் மீது சாய்வால் என்று எதிர் பார்க்கதவன் அவள் செயலில் மென்மையாக அதிர்ந்து போனான்..

பின் அவளை கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தான்.

இரவு 9 மணி போல் சென்னை வந்து சேர்ந்தனர், பரமானந்தம் நானும் உங்களுடன் வீட்டிற்கு வருகிறேன் என்று ஒற்றை காலில் நின்றார்.. ஆனால் சுந்தரம் தான் மறுத்துவிட்டார்.

அவருக்கு மனைவியின் குணம் நன்றாகவே தெரியும், மகேஸ்வரிக்கு ஏற்கனவே அவர் நண்பர்களை பிடிக்காது... இதில் இந்த திருமண விஷயத்தில் பரமுவின் பங்கிடு உள்ளது என அறிந்தால் மிகவும் தரக்குறைவாக பேசுவாள் என உறுதியாக நம்பினார்.

பின் நண்பனிடம் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு, அவரை வீட்டில் இறக்கி விட்டு இவர்கள் பத்து மணி போல் வீடு வந்து சேர்ந்தனர்..

குழலி விஷ்வா மீதும் சுந்தரம் மீதும் தூங்கி தூங்கி விழுந்தால், குழந்தை சமத்தாக விஷ்வாவிடமே ஒட்டி கொண்டது..

செக்யூரிட்டி வாயிர் கதவை திறக்க, கார் உள்ளே நுழைந்தது.. அதற்க்குல் குழலியை எழுப்பி தண்ணீர் பருக வைத்து தூக்கத்தை களைத்து இருந்தார் சுந்தரன்..

சுந்தரம் குழலியிடம் இப்போ உன் அத்தைய பார்க்க போறோம், அவ கொஞ்சம் திட்டுவா நீ கண்டுக்காத சரியா..எதுவா இருந்தாலும் மாமா பேசிக்குறன் என்றார்..

விஷ்வா அவர்களிடம் செவியை கொடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தான்..

வரவேற்பரையில் அமர்ந்து இருந்தால் மகேஸ்வரி, வாசலில் மூவரும் குழந்தையுடன் வந்து நிற்க, கார் டிரைவர் குழலியின் டிரங்க் பெட்டியை கொண்டு வந்து வைத்துவிட்டு போனார்..

அந்த சத்தத்தில் மகேஸ்வரி அவர்கள் பக்கம் திரும்ப, என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல் நின்றார்..

சுந்தரம் தான் அந்த அமைதியை களைத்து, இவள் பொற்குழலி ஜெகதீசனின் மகள்  என்றும் பின் அவள் வாழ்வில் நடந்த துயரதிலிருந்து இப்போது விஷ்வாவுடன் அவளுக்கு நடந்த திருமனம் வரை கூறினார்..

மகேஸ்வரிக்கு நெஞ்சம் பொறுக்கவில்லை... வாயிலும் வைத்திலும் அடித்து கொண்டு கத்தினார்..

அந்த சத்தத்தில் பயந்த குழலி விஷ்வாவின் முதுகு பின்னே போய் மறைந்து கொண்டால்.

ஹய்யோ ஹய்யோ என் பையனுக்கு போய் இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சு இருக்கியே.. என் பையனுக்கு எனக்கு தெரியாம கல்யாணம் பண்ண உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும் என்று கணவரிடம் எகிறி கொண்டு போக, ஹேய் என்று அவர் போட்ட சத்தத்தில் கொஞ்சம் அமைதி ஆனார் மகேஸ்வரி.

பின் அவரை விட்டு மகனிடம் சென்றவர், டேய் விஷ்வா என்ன டா எல்லாத்தையும் பாத்துட்டு அமைதியா இருக்க??

உனக்கும் இந்த கல்யாணத்துல சம்மதமா?? என்று கேட்டவர் நொடி பொழுதில் விஷ்வா முதுகின் பின் மறைந்து இருந்த குழலியின் முழங்கையை பிடித்து முன்னே இழுத்தவள்...

என்னடி எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி அவன் முதுகு பின்னாடி போய் ஒளியிறியா?? போடி வெளிய.. போடி என்று அவளை பிடித்து வெளியே தள்ள பிடிமானம் இல்லாமல் கால் இடறி கீழே விழ போனவலை விஷ்வா அவள் இடுப்பில் கை கொடுத்து தாங்கியிருந்தான்..

பின் அவளை நேராக நிற்க வைத்து ஒன்னும் இல்லையே உனக்கு என்றான் குழந்தையிடன் கேட்பது போல்..

விஷ்வா அவளை விடு,  இந்த பீடை நமக்கு வேண்டாம் டா..

இவ பொறந்த ராசி இவ அப்பன முழுங்கிட்டா, தோ இந்த தரித்திரம் பெத்த இந்த குட்டி பிசாசுஸும் பொறக்கருதுக்கு முன்னாடியே அப்பன முழுங்கிடுச்சி..

இப்போ இதுங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்களே, ஹய்யோ இங்க யாருக்கு என்ன ஆகுமோ என்று அழுது கொண்டே கரித்து கொட்டினார்.

"அம்மா" என்றான் அழுத்தமான குரலில்..

சொல்றத கேளு விஷ்வா அம்மா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து வச்சு இருக்கன்.. இந்த ராசி கெட்டவள வெளிய அனுப்புடா என்று அழுதார்.

ம்மா கொஞ்சம் நிறுத்துறிங்களா... இவ இப்போ என்னோட மனைவி,  என்னோட பொறுப்பு..உங்களுக்கு புடிக்கலனா நீங்க ஒதுங்கி இருந்துக்கோங்க..

அதைவிட்டுட்டு என் பொண்டாட்டிய அனாவசியமா இனி ஒரு வார்த்தை பேச கூடாது என்றான் கட்டளையாக..

பின் குழலியிடம் சிணுங்கி கொண்டு இருந்த குழந்தையை கொடுத்துவிட்டு, அவளின் ட்ரங்க் பெட்டியை அவன் தூக்கி கொண்டான், பயத்தில் நடுங்கி கொண்டு இருந்த குழலியை தோளில் கை போட்டு அவன் அறைக்கு அழைத்து சென்றான்..

போகும் அந்த ஜோடியை தான் தாயும் தந்தையும் பார்த்து கொண்டு இருந்தனர்..

மகேஸ்வரி வன்மமாகவும், சுந்தரம் சந்தோஷமான மன நிலையுடனும்..

விஷ்வாவின் அறையில்??

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலியை அவன் அறைக்கு அழைத்து வந்த விஷ்வா, குழந்தையை வாங்கி கொண்டு  பாத்ரூம் அங்க இருக்கு சீக்கரம் போய் குளிச்சிட்டு வா.. நான் பாப்பாவை பாத்துக்குறன் என்றான்..

குழலி அவள் பேகில் உள்ள ஒரு புடவையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்தால்.

குழலி பாத்ரூமிற்குள் சென்று அரைமணி நேரத்தை தாண்டியிருந்தது இன்னும் வெளியே வரவில்லை..

குழந்தை வேறு சிணுங்கி கொண்டு இருக்க, அவளை சமாதானம் செய்து கொண்டே குளியலறை கதவை தட்டினான்.

கதவை திறந்த குழலி விஷ்வாவிடம் அது எனக்கு இந்த குளியலறைய எப்படி புழங்கரத்துனு தெரியல என்று கைகளை பிசைந்து கொண்டே கூற..

அத அப்போவே வந்து சொல்லியிருக்க வேண்டியது தான, என்றவன் அவள் பதிலை எதிர்பாக்காமல் அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றவன், ஷாவர் எப்படி ஆன் செய்ய வேண்டும் குழாய் தண்ணீரை எப்படி திருக வேண்டும், சூடு நீர் வர எதை திறக்க வேண்டும், அங்கிருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று அனைத்தையும் பொறுமையாக விளக்கினான்.

அனைத்தையும் கவனமாக கேட்டு கொண்டால் குழலி..

பின் அவளை வேகமாக குளித்து விட்டு வர கூறியவன் வெளியேறி இருந்தான் குழந்தையுடன்..

பூரணி பாப்பா கொஞ்சம் சமத்து பாப்பா தான் அதனால் அனைவரிடமும் இயல்பாக ஒட்டி கொள்வால்.. அதனால் விஷ்வாவிற்கு பாப்பாவை வைத்து கொள்வது அவ்வளவு கடினமாக இல்லை.

அடுத்த இருவது நிமிடத்தில் குழலி குளித்துவிட்டு வெளியே வந்தால்..

விஷ்வா குழந்தையை குழலியிடம் கொடுத்துவிட்டு.. வெளியே சென்றவன், அவனுக்கும் குழலிக்கும் இரவு உணவை எடுத்து வந்தான்.. பாப்பாவிற்கு மட்டும் இளம் சூட்டில் பால் கொண்டு வந்தான்.

குழலியிடம் ஒரு தட்டை நீட்டி நீ சாப்பிட்டு பாப்பாக்கு இந்த பால் குடுத்துடு என்றான்..

அவள் பாலை வாங்காமல் அவன் முகத்தை பார்க்க..

என்ன ஆச்சு?

பாப்பாக்கு நான் இன்னும் பால் நிறுத்தல, என்கிட்ட தான் பால் குடிப்பா..

ஓஹ் சரி, அப்போ இந்த பாலை நீ குடிச்சிடு என்று அவளிடம் கொடுத்தான்.. அவளும் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டால்.

பின் விஷ்வா அலுப்பு தீர குளித்து முடித்து, ட்ராக் பேண்ட், டீஷர்ட் சகிதமாக வெளியே வந்தான்..

அதற்குள் குழலி சாப்பிட்டு முடித்தவள், குழந்தையை தூக்கி கொண்டு பால்கனியில் அமர்ந்து அமுதுட்டி கொண்டிருந்தாள்..

அவளை காணாது தேடியவன் குழலி என்று குரல் கொடுத்தான்.. நான் இங்க இருக்கன்.. பாப்பாக்கு பசி ஆத்துறன் என்றால்.. பின் அங்கு செல்வதை தவிர்த்து அவன் உணவை உண்டு முடித்தான்.. அதற்குள் உறங்கி கொண்டு இருந்த குழந்தையை தோளில் போட்டு கொண்டு குழலியும் உள்ளே வந்தால்.

குழந்தையை அவளிடம் இருந்து வாங்கியவன், மெத்தையில் படுக்க வைத்தான். குழந்தை சிணுங்க மெதுவாக தட்டி கொடுத்து மீண்டும் தூங்க வைத்தான் விஷ்வா.

அவள் ஏதோ பேச வாய் திறக்க.. ரொம்ப டையார்ட்டா இருக்கு குழலி.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் இப்போ தூங்கு என்றான்.. அவள் பேந்த பேந்த முழிக்க பாப்பா பக்கத்துலயே தூங்கு. அப்போ தான் அவ எழுந்தா உன்னால பார்த்துக்க முடியும்.

அவளும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்தால்.. விஷ்வா இருந்த அசதியில் படுத்ததும் உறங்கி போனான்..

குழலி தான் உறக்கம் இல்லாமல் தவித்தால்.. கண் முடி திறப்பதற்குள் இந்த திருமனம் நடந்து முடிந்து விட்டது.. அடுத்து என்ன செய்வது இந்த வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்வது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது குழலிக்கு.

யோசித்து கொண்டே இருந்தவலை நித்ரா தேவி சுகமாக அனைத்து உறங்க வைத்தால்.

அதிகாலை 4 மணிக்கு எல்லம் விழிப்பு தட்டியது, படுக்கையை விட்டு எழுந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.. பின் அவள் உடையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்து குளித்து முடித்து வெளியே வந்தால்.

கட்டிலில் குழந்தையும் விஷ்வாவும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்..கதவை திறந்து வெளியே போனால். அவ்வளவு பெரிய வீட்டை, அந்த இருட்டில் காண்பதற்கே உள்ளுக்குள் கிளிப்பிடித்தது.. மீண்டும் அறைக்குள்ளே வந்து பதுங்கி கொண்டால்..

அவளுக்கு உறக்கம் வரவில்லை.. ஹய்யோ இப்போ என்ன பண்றது என்று யோசித்து கொண்டு இருந்தால்.. மணி ஆறை நெருங்க கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு மீண்டும் அறைகதவை திறந்து கொண்டு வெளியே சென்றால்.

வேலையாட்களும் அப்போது வந்து இருக்க..அவர்களை கண்ட குழலி தயங்கி நின்றாள்..யார் இந்த பெண் என்று அவர்கள் குழலியை வித்யாசமாக பார்த்தனர்..அப்போது அங்கு வந்த சுந்தரம் குழலி தயங்கி நிற்பதை கண்டு ஏன்மா இங்க நிக்குற என்று கேட்டவர், அங்கு இருந்த வேலையாட்களிடம் இவங்க தான் விஷ்வ கர்ணாவோட மனைவி, பேரு பொற்குழலி இந்த வீட்டோட மூத்த மருமக.. இங்க எல்லாருக்கும் என்ன மரியாதையோ அதே மரியாதைய தான் என் மருமகளுக்கும் கொடுக்கணும் என்றார்..

ஏனென்றால் அதில் மகேஸ்வரிக்கு ச்சிங் சாங் அடிக்கும் ஆட்களும் உண்டே. அதனால் தான் இந்த முன்னெச்சரிக்கை..

பின் அவர்களை அனுப்பிவிட்டு, மருமகளிடம் நீ ஏன்மா இவ்ளோ சீக்கரம் எந்திரிச்சுட்ட இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்ல என்றார்..

இல்ல மாமா சீக்கரம் எந்திரிச்சு பழகிட்டன்.. அதான் அதுக்கு அப்ரோம் தூக்கம் வரல..

சரிம்மா, உன் இஷ்ட்டம் போல இந்த வீட்ல இரு.. இது உன் வீடு இந்த வீட்ல எல்லா உரிமையும் உனக்கு இருக்கு எதுக்கும் தயங்காத என்றார்..

நேத்து உன் அத்தை உன்கிட்ட நடந்துகிட்டத நெனச்சு வருத்த படாத குழலி, அவ அப்படித்தான் மனுஷங்கள மதிக்க தெரியாதவ, அவ மாறுவாளா இல்ல கட்டையோடு கைலாசமான்னு தெரியல என்றார்..

ஹய்யோ ஏன் மாமா இப்படி பேசுறீங்க என்று பதறி போனால்.. சரி விடுமா காலைலயே எதுக்கு அவளை பத்தி பேசணும், நல்ல விஷயத்தை பேசுவோம்..

பாப்பா நைட்டு அமைதியா தூங்கிட்டாளா இல்ல புது இடம்னு அழுதால என்றார்.. இல்ல மாமா அவளுக்கும் உடம்பு அசதியா இருந்துச்சு போல தூங்க வச்சதும் தூங்கிட்டா..

சரிம்மா பாப்பா எந்திரிச்சதும் என்கிட்ட கொண்டு வந்து குடு.. நான் கொஞ்சம் நேரம் பாப்பாவை வச்சுக்குறன் என்றார்..

சரி மாமா..

பின் சற்று தயங்கி, நான் போய் சமைக்கவா மாமா என்றால்..

நீ ஏன்மா அந்த வேலைலாம் செய்யணும் அதுக்குலாம் ஆள் இருக்காங்க என்றார்..

இல்ல மாமா நான் எவ்ளோ நேரம் தான் சும்மா இருக்கறது? கொஞ்சம் இந்த மாதிரி வேலை செஞ்சா தான் நேரம் போறது தெரியாது.. அது மட்டும் இல்ல, எல்லாம் பழக்கபட்ட வேலை தான் மாமா என்றால்.

சரிடா உனக்கு என்ன தோணுதோ நீ செய் என்றார்.

பின் அங்கிருந்து சமையலறை புகுந்தவள் அங்குள்ள நவீன பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்று அங்கிருந்த வேலையாட்களிடம் கேட்டு தெரிந்து கொண்டால்..

எந்த பொருட்கள் எங்கே உள்ளது என கேட்டு தெரிந்து வைத்து கொண்டால்.. அங்குள்ள அனைத்து பொருட்களையுமே ஆச்சர்யமாக தான் பார்த்தால்.

வேலையாட்கள் ஒரு ஒரு பொருளின் பெயரையும் பேச்சுவாக்கில் சொல்ல அதை மனதில் பதிய வைத்து கொண்டால்.. முதலில் சற்று தடுமாறினாலும் போக போக சரியாக செய்தால்.

ஸ்டோவில் பாலை காய்ச்சி, சரியான அளவில் காபி கலந்து மாமனாருக்கு கொடுத்தால்.

அவள் கைபக்குவம் அவரை கண் மூடி ருசிக்க வைத்தது.. சூப்பர் மா, இனிமேல் உன் கையாலையே எனக்கு டெய்லி காபி குடுத்துடுமா என்று அன்பு கட்டளை விதித்தார்.

சிரித்து கொண்டே சரி மாமா என்றால்..

பின் மட மடவென காலை உணவை சமைக்க துவங்கினால்.. ஒரு ஸ்டோவில் பருப்பை வேக வைத்தவள், இன்னொரு ஸ்டோவில் இட்லி ஊற்றி வைத்தால், அடுத்த ஸ்டோவில் சாம்பார் பொடி அறைக்க தேவையான பொருட்களை வாணலியில் வறுத்து கொண்டு இருந்தால்..பின் அதை சூடார வைத்தவள் தேங்காய் சட்னி யும் ஒரு புறம் அரைத்து வைத்தால்..

அடுத்தடுத்த வேலைகளை வேகமாக முடிய, வேலையாட்கலே வாய் பிளந்து பார்த்தனர்..

பின் மாமனாரிடம் சென்றவள், மாமா அவர் காலைல டீ குடிப்பாரா காபி குடிப்பாரா??

மருமகள் யாரை பற்றி கேட்கிறாள் என்று தெரிந்தும்?? யாருமா என்றார் சிரிப்பை மறைத்து கொண்டு..

அது மாமா உங்க பையன் என்றால்..

அதற்கு மேல் மருமகளை சங்கட படுத்த விரும்பாதவர்..

விஷ்வா அதலாம் எதுவும் குடிக்க மாட்டான்மா.. எப்பவாச்சும் ரொம்ப தல வலிச்சா காபி குடிப்பான்.. அவ்ளோ தான் என்றார்..

சரி மாமா நான் மேல போய் பாப்பாவை பாக்குறன் என்றவள் மேலே ஏறி சென்றால்..

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, கட்டிலில் பூரணி மட்டும் தான் உறங்கி கொண்டு இருந்தால்..

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, திரும்பினால்.. விஷ்வா தான் இடையில் துண்டுடன் நின்று கொண்டு இருந்தான்..

அவள் இருப்பதை மறந்து எப்போதும் போல் வந்துவிட்டான்..

பின் உடையை எடுத்து கொண்டு பாத்ரூம்குள் நுழைய போனவனை தடுத்தது அவளின் குரல்.. இருங்க நான் வெளிய போறன்.. நீங்க துணி மாத்துனதும் உள்ள வரன் என்றவள் வேகமாக வெளியேறி இருந்தால்..

அவனுக்கும் பாத்ரூமில் உடை மாற்ற சிரமமாக இருக்க அவளை தடுக்கவில்லை.

உடை மாற்றிவிட்டு கதவை திறந்தான்.. குழலி உள்ளே வர, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இங்க பாப்பா தூங்கறா வா பால்கனி போலாம் என்று அழைத்து சென்றான்..

பால்கனியில் உள்ள சோபாவில் குழலி அமர்ந்து இருக்க எதிரே உள்ள டீபாய் மீது அமர்ந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தான் விஷ்வா..

அவளிடம் இந்த பேச்சை எப்படி துவங்குவது என்று தெரியவில்லை.. ஆனால் இன்றே பேசிவிடும் முனைப்பில் இருந்தான்..

குரலை செருமியவன், குழலி உனக்கே தெரியும் இந்த கல்யாணம் எதிர்பாராம நடந்தது..

என் வாழ்க்கைல வேற ஒரு பொண்ணு இருக்கா.. சொல்ல போனா ரெண்டு பேரும் லிவிங்ல இருந்தோம் என்றான்..

அவள் புரியாமல் முழிக்க.. லிவிங்னா கல்யாணம் பண்ணிக்காம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்து இருக்கோம்..

ரிசண்டா அவங்க பேமிலி சென்னைலயே வந்து செட்டில் ஆகிட்டாங்க. அதனால இப்போ அவ வீட்ல இருக்கா என்றான்.

அவள் கண்ணின் ஒரு சொட்டு கண்ணீர் அவள் கன்னத்தை நினைத்தது..

தொடரும்..


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

6. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வாவிற்கு குழலியின் கண்ணீரை கண்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவனுக்கும் இது கட்டாய கல்யாணம் அல்லவா..

இங்க பாரு குழலி இப்போ அழுது எந்த பிரயோஜனமும் இல்லை. அடுத்து என்னனு யோசிக்கணும்..

நானும் என் காதலி மையூரியும் இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணிக்கறதா பிளான் பண்ணி இருக்கோம்..

நீ ரொம்ப குட்டி பொண்ணு உன் ஏஜ் என்ன என்றான்?

ஏஜ்னா?

சலித்து கொண்டான்..

உன் வயசு என்ன?

18 முடிஞ்சிடுச்சு..

எனக்கு 26..

உன்ன விட நான் 8 வருஷம் பெரியவன்..

நான் சொல்றத பொறுமையா கேளு.. இந்த கணவன் மனைவி பந்தம் எல்லாம் நமக்கு செட் ஆகாது..நாம பிரிஞ்சு போறது தான் சரியான வழி, நம்மள சுத்தி இருக்க உறவுக்காக நாம நம்ம வாழ்க்கைய இழக்க கூடாது..

நாம விவாகரத்து பண்ணிக்கலாம். எனக்கு மயூரி கூட மேரேஜ் ஆகற வரைக்கும் நீ இந்த வீட்லயே இரு..

ஆனா இப்போதைக்கு நாம பேசுன விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றான் உத்தரவாக..

அவள் அமைதியாகவே இருந்தால்.

நீ என்ன படிச்சு இருக்க?

அழுகையை விழுங்கியவள், நான் பள்ளிக்கூடம் போனது இல்ல. அம்மா தான் தமிழ் எழுத படிக்க சொல்லி குடுத்தாங்க. ஓரளவுக்கு எழுதுவன் படிப்பன் என்றால்.

அவனுக்கு தலை சுற்றியது. நீ உன் எதிர்காலத்தை நினைச்சு எதுவும் பயப்பட வேண்டாம் குழலி.. உங்க குடும்பத்தை பத்தி அப்பா நிறைய சொல்லி இருக்குக்காரு.. நான் உன்ன அப்படியே அம்போனு விட்டுட மாட்டன்..

நீ படிக்கணும்னு ஆசை படுறியா..

இல்லை என்று தலையாட்டினால்..

ஏன்?

எனக்கு படிப்பு வராது..

தமிழே தகிடுத்தத்தம் என்றால்..

பெருமாள்னு எழுத சொன்னா பொருமாள்னு எழுதுவன்..

நீ நல்லா வாய் பேசுவ போல?

தேவையான அளவு பேசுவன்..

நீ ஸ்கூல் போய்லாம் படிக்க வேண்டாம்.. வீட்லயே உனக்கு கிளாஸ் எடுக்க மாஸ்டர் அரென்ஞ்சு பன்றன்.. ஆனா நீ படிக்கணும் புரியுதா என்றான்..

நான் தான் சொல்றன்ல எனக்கு படிப்பு வராதுன்னு அப்ரோம் ஏன் இப்படி படிக்க சொல்லி கட்டாய படுத்துறீங்க..

படிப்பு ஒன்னு தான் ஒரு மனுஷன்கிட்ட இருக்க அழியாத சொத்து. உன்கிட்ட இருக்க காசு பணத்தை யாரு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் அபகரிச்சுக்கலாம்.. ஆனா படிப்பை அப்படி அபகரிக்க முடியாது.

நீ ஒழுங்கா படிச்சா தான் உன் பொண்ணுக்கு நீ ரோல் மாடல்லா இருக்க முடியும்..

நீயே படிக்காத மக்கா இருந்தா உன்ன பார்த்து வளறுற உன் பொண்ணும் அப்படி தான் இருப்பா என்று சொல்ல..

மகளை சொன்னதும் கோவம் பொத்து கொண்டு வந்தது, என் பொண்ண பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்க எல்லைல இருந்துக்கோங்க என்றால் சட்டென்று முகிழ்த்த கோவத்துடன்..

விஷ்வாவும் அவளின் கோவ முகத்தை கவனித்தான்.. இவ்வளவு நேரமும் பச்ச மண்ணு மாதிரி இருந்துட்டு இப்போ இப்படி சண்டை கோழி மாதிரி சிலிர்த்துகிட்டு வராலே என்று நினைத்தான்..

சரி குழலி நான் உன் பொண்ண பத்தி பேசல, ஆனா உன் வாழ்க்கைய நல்ல முறைல அமைச்சு கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு..

என்ன நம்பிதான் உன்ன கல்யாணம் பண்ணி குடுத்து இருக்காங்க..

குழலி இதழ் வளைத்து சிரித்தால்..

உங்களுக்கு அது புரிஞ்சா சரி என்றால்..

எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசு..

நீங்களே சொன்னிங்களே உங்கள நம்பி தான் கல்யாணம் பண்ணி குடுத்து இருக்காங்கனு, ஆனா நீங்க என்ன பண்ண போறீங்க.. என்ன அத்து விட்டுட்டு உங்க காதலிய தான கல்யாணம் பண்ணிக்க போறீங்க..

அவளுக்குள் ஏதோ ஒரு வலி, இரண்டாம் வாழ்க்கையும் நமக்கு நிலைக்க போவது இல்லை என்ற விரக்தி..

அவளை பற்றி நினைத்ததை விட, அவள் அன்னையை பற்றி தான் அதிகம்  யோசித்தால்.. அவள் முதல் வாழ்க்கையை பறிகொடுத்து வந்த போதே அவள் அம்மாவின் உயிர் ஊசல் ஆடி கொண்டு இருந்ததே..

இப்போது இந்த வாழ்க்கையும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தால் என்று யோசிக்கும் போதே நெஞ்சமெல்லாம் படபடத்தது..

என்ன எதுக்கு உயிரோட வச்சு இருக்கீங்க, என்ற அவளின் மடத்தனமான கேள்விக்கு அவளின் மகள் பூரணி கண் முன் வந்து சென்றால்.

அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக பேசினான் விஷ்வா..

எனக்கு புரியுது குழலி நீயும் உங்க அம்மாவும் இந்த வாழ்க்கைய நினைச்சு கனவு கண்டு இருப்பிங்க.. மக வாழ்க்கை நல்லா அமைய போது.. இனி எந்த பிரச்சனையும் இல்லனு..

ஆனா நீயே யோசிச்சு பாரு குழலி உனக்கும் எனக்கும் செட் ஆகுமா? உன் லைப் ஸ்டைல் வேற என் லைப் ஸ்டைல் வேற??

அவன் பேசுவது குழலிக்கு புரியவில்லை..

பாரு இதல்லாம் பேசிக் இங்கிலிஷ், சாதாரணமா நடைமுறைல உள்ள இங்கிலிஷ் வார்த்தை அதை புரிஞ்சிக்கவே நான் உனக்கு ட்ரான்ஸ்லெட் பண்ணி சொல்ல வேண்டியதா இருக்கு நமக்குள்ள எப்படி ஒத்து போகும்னு நீ நினைக்குற??

நான் M.E முடிச்சு இருக்கன்.. நீ பள்ளிக்கூடம் பக்கம் கூட போனது இல்ல.. நான் பழகுற சர்க்ல்ல உன்ன எப்படி கொண்டு போய் என் மனைவினு அறிமுக படுத்த முடியும்?

எல்லாத்தையும் விட உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, ஒரு குழந்தையும் இருக்கு.. இதை சொல்ல எனக்கு கஷ்ட்டமா தான் இருக்கு ஆனா சொல்ல தோணுது..நீ ஒரு செகண்ட் ஹாண்ட்..அப்படினா நீ ஏற்கனவே உபயோகிச்ச பொருள் என்றான்..

அவள் அமைதியான முகத்துடன் அவனை பார்த்தால்.. ஆனால் மனம் உலை கனலாக இருந்தது. அவமானமாக இருந்தது. எனக்கு ஏன் இந்த அசிங்கமான நிலை என்று அவளையே கேள்வி கேட்டு கொண்டால்.

மீண்டும் தொடர்ந்தான்.

என்னால உன்ன என் மனைவியா பார்க்க முடியாது குழலி..

நான் உன் கழுத்துல கட்டியிருக்க மஞ்ச கையிருக்கு என்ன பொறுத்த வரைக்கும் எந்த அர்த்தமும் இல்ல.. என் அப்பா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கலனா செத்துடுவனு கைல விஷத்தோடு நிக்கிறாரு அந்த இக்கட்டான நிலைல என்ன முடிவு எடுக்கறதுனு தெரியாம தான் என் மனசுல ஒருத்திய வச்சிக்கிட்டு உன் கழுத்துல தாலி கட்டுனன்..

அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் குழலி மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது..

நான் பேசுன வார்த்தை உனக்கு கஷ்ட்டமா தான் இருக்கும்.. ஆனா என் மனசுல உள்ளத சொல்றதுக்கு எனக்கு வேற வழி தெரியல..

கமறிய குரலில் பதில் பேசினால்..

பரவால்ல நீங்க சொன்ன எல்லா விஷயமும் உண்மை தான். நான் உங்க வாழ்க்கைல தொந்தரவா இருக்க மாட்டன். நீங்க தாராலமா விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.

குழலி முகம் தெளிவாக இருந்தது.

அவள் இந்த விஷயத்தை புரிந்து கொண்டதில் விஷ்வா நிம்மதி பெருமூச்சுவிட்டான்..

ஆனால் பாவம் அவன் அறியவில்லை இன்று பேசிய வார்த்தைகள் அவள் காதளுக்காக அவன் ஏங்கும் பொழுது அவனையே தாக்கும் என்று.

நான் போலாமா என்றால்..

ஹ்ம்ம்..

அவன் மனசாட்சி கேட்டது ஏன்டா மயூரி கூட லிவிங்ல இருந்தன்னு பொய் சொன்ன??

அப்போ தான் அவ என்ன விட்டு விலக நினைப்பா..

என்னமோ போ என்ற மனசாட்சி உள்ளே ஒளிந்து கொண்டது..

உள்ளே சென்ற குழலி உறங்கி கொண்டிருந்த குழந்தையை கொஞ்சி கொஞ்சி எழுப்பினால்..

குட்டி இளவரசி, மல்லி பூ விழிகளை உருட்டி உருட்டி அன்னையை பார்த்தது..

மா.. மா.. என்று சிரிப்போடு ஆனந்த கூச்சல் போட, மகளின் மழலை மொழியில் மனதில் அழுத்தி இருந்த சோகமும் காணாமல் போனது..

வெளியே இருந்த ஒருவனுக்கும் குழந்தையில் குரல் ஒரு இதமான மனநிலையை கொடுத்தது என்பது தான் உண்மை.

குழந்தையை காண அவன் உள்ளே வர, குழலி பூரணியை தூக்கி கொண்டு குளியலறை சென்றால்..

பாப்பாவை  அழகாக குளிக்க வைத்து, குட்டி புத்தரை போல் டவலை சுற்றி வெளியே அழைத்து வந்தால்..

அதற்குள் விஷ்வாவும் உள்ளே வந்து பூரணி பாப்பாவை காண காத்திருந்தான்.

குழலி அவள் பைக்குள் உடையை தேடி கொண்டிருக்க.. விஷ்வா அவள் கையில் இருந்த குழந்தையை அவள் எதிர்பாரா நேரம் அவன் கைக்கு மாற்றி கொண்டான்..

குழலி எதுவும் கூறவில்லை.. அவள் இன்னும் குழந்தைக்கு தேவையான மை போட்டு, பவுடர், குழந்தைக்கு சட்டை என தேடி கொண்டிருந்தாள்..

விஷ்வா அவள் தேடுவதை கண்டு, குழலி அந்த கப்போர்டு காலியா தான் இருக்கு உன்னோட துணியும் பாப்பாவோட துணியும் அதல வச்சுக்கோ என்றான்..

அவன் இயல்பாக தான் இருந்தான்.. குழலி தான் அவனிடம் பேச அசௌகரியமாக உணர்ந்தால்..

சரி என்பதோடு முடித்து கொண்டால்..

பின் குழந்தையை வாங்கி கொண்டு, கீழே அமர்ந்து பாப்பாவிற்கு மனக்க மனக்க பவுடரை போட்டு, அவளே  வசம்புவினால் தயாரித்த மையை குழந்தைக்கு நெற்றியிலும் கன்னத்திலும் வைத்து குழந்தையை கிளப்பினால்..

விஷ்வா கீழே சென்று இருந்தான்.. தந்தையிடம் பேசாதவன், டைனிங் டேபிளில் போய் அமர்ந்தான்..

வேலையாட்கள் உணவு பரிமாற வர, அவர்களை தடுத்த சுந்தரம் மருமகளை மாடி நோக்கி அழைத்தார்.

குழலியும் அப்போது தான் மாடி இறங்கி வந்து கொண்டிருந்தாள்.. மாமனாரின் குரலுக்கு தோ வந்துட்டன் மாமா என்று பதில் கொடுத்து கொண்டே சற்று வேகமாக வர, பொறுமையா வா தங்க பொண்ணு என்றார்..

சொல்லுங்க மாமா,

குழந்தையை அவர் கையில் மாற்றி கொண்டவர், போமா விஷ்வாக்கு டிபன் எடுத்து பரிமாறு.. இனிமேல் நீ தான் இதெல்லாம் செய்யணும் என்றார்..

அவளால் என்ன பேச முடியும், பேசா மடந்தையாகி போனவள் விஷ்வா அருகில் சென்று அவன் தட்டில் மல்லிகை பூவிற்கு இணையான நான்கு இட்லியும், சாம்பார் ஊற்றி சட்னியும் வைத்தால்..

அமைதியாக போனை நோண்டி கொண்டிருந்த விஷ்வா, தட்டில் உணவு பரிமாற சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.

முதல் வாய் உணவை எடுத்து வைத்ததும் புரிந்து கொண்டான்.. இந்த வீட்டில் இருப்போர்கள் சமைக்கவில்லை என்று..

குழலியின் பக்கம் தலையை நிமிர்த்தி நீ சமைச்சியா என்றான்..

ஹ்ம்ம் என்று தலையாட்டினால்..

செம டேஸ்ட் என்று அவள் வைத்த நான்கு இட்லிகளை சப்பு கொட்டி உண்டவன், இன்னும் மூன்று இட்லிகளை கேட்டு வாங்கி உண்டான்..

அவன் இவ்வளவு உண்டு இன்று தான் காண்கிறார் பெற்றவர்..

நேரம் ஒன்பதை நெருங்கி இருந்தது, ஆனால் வீட்டின் மூத்த தலைவி மகேஸ்வரிக்கு தான் இன்னும் விடிந்த பாடில்லை..

அவர் தினமும் எழும் நேரம் காலை 10 மணிக்கு அப்பால் தான்..


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

7. கண்கள் நிறைந்த ஓவியமே!!
டாடி என்று கத்தி கொண்டே உள்ளே நுழைந்தான் சூர்யா..

வா டா, எப்படி இருக்க.. உங்க ஈவென்ட் எல்லாம் எப்படி முடிஞ்சுது? எந்த குறையும் இல்லையே என்று கேட்டார்..

சேலத்தில் ஒரு கல்யாணம், சோசியல் மீடியாவில் விளம்பரத்தை கண்டு இவர்களின் நிறுவத்தை தான் அந்த சென்னை மாப்பிள்ளை புக் செய்து இருந்தார்.

சூர்யாவின் குழுவும் நான்கு நாட்கள் அங்கு தங்கி இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்து, திருமணத்தில் எந்த குறையும் இல்லாமல் அவர்கள் வேலையை திருப்தி அளிக்கும் வகையில் முடித்து கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் இங்கு பேசி கொண்டு இருக்க, குழலி அவர்களையே தான் பார்த்து கொண்டு இருந்தால்.. பூரணி பாப்பா அம்மாவின் கவனத்தை தன் புறம் திருப்பும் வகையில் குழலி கன்னத்தை தட்டி தட்டி அழைத்து மழலை மொழியில் ஏதேதோ பேசி கொண்டு இருந்தால்..

அப்போது தான் சூர்யா குழலியை கண்டான்..

சுந்தரம் மகன் பார்வை போகும் திசையை கண்டு, குழலி இங்க வா மா என்று அழைத்தவர்,

அவள் அருகே வந்ததும் இவன் சூர்யா மா என்னோட ரெண்டாவது மகன் என்று அறிமுக படுத்தினார்..

குழலி இதழுக்கும் தெரியாத சிறு புன்முருவலுடன் தலை அசைத்தால்..

சூர்யா இவங்க பொற்குழலி என் நண்பன் பொண்ணு.. இப்போ உன் அண்ணா விஷ்வாவோட மனைவி உனக்கு அண்ணி என்று அறிமுக படுத்தினார்..

அவனுக்குள் பல கேள்விகள் இருந்தாலும், குழலி முன் அதை கேட்க விரும்பாதவன் ஹாய் அண்ணி என்று அவன் சகஜமாக பேசினான்..

உங்கள உங்க அப்பாவ பத்திலாம் எங்க டாட் நிறைய சொல்லி இருக்காரு.. எங்க அப்பா மடில வச்சுதான் உங்களுக்கு மொட்டை போட்டு காது குத்துனாங்கலாம் என்று அவன் தந்தை கூறியதை எல்லாம் கூறி குழலியிடம் சகஜமாக பேசினான்.

அப்போது தான் விஷ்வாவும் மேலே இருந்து கீழே இறங்கி வந்தான்.. இன்று சனி கிழமை என்பதால் அலுவலகம் விடுமுறை.. அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.

சூர்யா இருப்பதை கண்டவன், எப்போ வந்த டா என்றான்..

இப்போதான்..

அண்ணனின் அருகே சென்றவன், என்ன டா திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட உன் அல்டாப்பு ராணிக்கு(மயூரி) என்ன பதில் சொல்ல போற??

அவன் அல்டாப்பு ராணி என்றதை கண்டு கொள்ளாதவன், தெரில டா அவகிட்ட பேசனும்.. என்று விட்டேதியாக பதில் கூறினான்..

சூர்யா போய் குளிச்சிட்டு வா, இன்னைக்கு உன் அண்ணி தான் சமைச்சு இருக்காங்க.. சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றார் சுந்தரம்..

சரிப்பா என்று உள்ளே சென்றவன் பின், சிறிது நேரத்தில் சுந்தரமும் சென்றார் மகனிடம் பேச, தந்தையின் வருகைக்காகவே கட்டிலின் மேல் அமர்ந்து இருந்தான் போலும்.. மகனை கண்டவர் அவன் மனதில் உள்ள கேள்விகள் அனைத்திற்கும் பதில் கொடுத்தார்..

என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க, நீங்க செஞ்சது தப்பு தான் பா என்றான் இளையவன்.

எனக்கு வேற வழி தெரில சூர்யா, குழலிய இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வரணும்னு தோனுச்சு..

சரி விடுங்கப்பா எனக்கும் அந்த அல்டாப்பு ராணி விஷ்வாவ கல்யாணம் பண்ணிக்கறது பிடிக்கல..

ஆனா ஒன்னுப்பா இனி அண்ணா அவன் வாழ்க்கைல எந்த முடிவு எடுத்தாலும் நீங்க தலையிடாதீங்க.. அது அவன் குழலிய விட்டு பிரியுற முடிவா இருந்தாலும் சரி என்றான்.. அவனுக்கு தான் தன் உடன் பிறந்தவனை பற்றி அ முதல் ஃ வரை தெரியுமே.. அதனால் தான் அண்ணன் எடுத்து இருக்கும் முடிவை முன்பே அறிந்தது போல் தந்தையிடம் கூறியிருந்தான்..

என்ன டா சொல்ற என்று சுந்தரம் அதிர்ச்சியுடன் சூர்யாவை பார்க்க, அவன் லைஃப்ப அவன் விருப்பபடி வாழட்டும்.

அப்போ குழலி வாழ்க்கை?

நாம என்ன அவங்கள அப்படியே வா விட்டுட போறோம்.. அவங்க இந்த வீட்டு மகளா இங்கேயே இருக்கட்டும்.. நாம அவங்களுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரலாம் என்றான்.

தந்தை முகம் கலங்குவதை கண்டவன், இதை பற்றி இப்போது பேசி இருக்க கூடாதோ என்று நினைத்தான், அப்பா இது தான் நடக்கும்னு சொல்லல, இது என்னோட யூகம் தான்.

இல்ல டா நீ சொல்றா மாதிரி நடக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கு. விஷ்வா செய்ய கூடியவன்தான்..

விடுங்கப்பா பாத்துக்கலாம். என்று தந்தைக்கு தைரியம் கொடுத்தான்.

சுந்தரமும் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு, அவர் அலுவலகம் புறப்பட தயாரானார்..

பர்னிச்சர் ஷோரூம் வைத்துள்ளார் சுந்தரம், தமிழ் நாட்டில் மட்டும் நான்கு கிளைகள்.. இறக்குமதி பொருட்கள் அல்லாது ஆட்களை வைத்து சொந்தமாக பொருட்களை தயாரிப்பதால், பொருள் தரமானதாகவும் நியாயமான விலையிலும் இருக்கும்..

இவர் பொருட்களுக்கு என்று மார்க்கெட்டில் தனி பெயர் உள்ளது. கல்யாண சீர்வரிசை பர்னிச்சர் வாங்க வேண்டும் என்றால்.. முதலில் மக்களின் மனம் செல்வது V.S.K Furniture Showroom தான். அந்த அளவிற்கு அவரின் கடைகள் பிரபலம்..

அவருக்கு குவியும் லாபத்திற்கும், அவர் பெற்றிருக்கும் நம்பிக்கைக்கும் இன்னும் இரண்டு கடைகள் திறந்தாலும் அமோக வரவேற்பு கிட்டும்.. ஆனால் தோள் கொடுக்க ஆட்கள் இல்லை என்பதால், இருக்கும் வேலைகளை நம்பிக்கையான வேலையாட்களிடம் கொடுத்து விட்டு மேற்பார்வையிடுகிறார் சுந்தரம்..

ஒன்றிற்கு இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்றும், அவர் தொழிலை பார்க்க முடியாமல் திண்டாடுகிறார் மனிதர்.

காலை உணவை இளைய மகனுடன் சேர்ந்து மருமகள் கையால் உண்டுவிட்டு, மருமகள் ஹாட் பாக்ஸில் கட்டி கொடுத்த மதிய உணவையும் எடுத்து கொண்டு ஓட்டுனருடன் அலுவலகம் புறப்பட்டார் சுந்தரம்.

சூர்யா தான் அவன் அண்ணியின் சமையலை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துவிட்டான்.

மணி 11 ஐ தொடும் நேரம் மகேஸ்வரி அறையில் இருந்து மாடர்ன் மங்கையாக வெளியே வந்தார்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும், சிங்கள் ஃபிலீட் சாரீயும் என பருவ வயது மங்கை போல் வெளியே வந்தார்.

அவர் கண்ணில் தான அந்நேரம் குழலி பட வேண்டும்.

குழந்தைக்கு நறுக்கிய பழங்களை ஊட்டி கொண்டு இருந்தால் குழலி..

ச்சீ சனியன் காலைல இதுங்க முகத்துலயா முழிக்கணும், ரெண்டும் அப்பன முழுங்கனதுங்க.. என்று குழலியை பார்த்து பேச, குழந்தையை பற்றி பேசியதும் குழலிக்கு கோவம் வந்தது.. இருந்தும் எதுவும் பேசவில்லை..

மாமனார் போகும் பொழுதே குழலியை அழைத்து பேசினார்.. மகேஸ்வரி ஏதாச்சும் பேசுனா நீ எதுவும் பதில் பேசிக்காதமா.. அவ திருந்தாத ஜென்மம்.. அவளுக்கு சரி சமமா நாம பேசினால் நம்ம மரியாதை தான் கெடும் என்று அறிவுறுத்தி விட்டே சென்றார்.

குழலி மாமனார் சொன்னதன் பொருட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தால்.. மூத்த மகன் இன்னும் வீட்டில் இருப்பதால் மகேஸ்வரி சுதாரித்து கொண்டு அமைதியாக இருந்தார்..

தனியா சிக்கும் போது இருக்குடி உனக்கு என்று மனதில் வன்மத்தை வளர்த்து கொண்டார்.

அவள் மாடி படி ஏற மகேஸ்வரி வெளியே கிளம்பி சென்றார்.. வேறெங்கே லேடீஸ் கிளப் அல்லது பப்பாக இருக்கும்..

குழலி அவர்கள் அறைக்கு செல்ல அங்கே விஷ்வா வெளியே கிளம்பி கொண்டு இருந்தான்.

குழலியை கண்டதும், குழலி நான் வெளிய போறன்.. வீட்ல பத்திரமா இருந்துக்கோ அம்மாகிட்ட எந்த பேச்சும் வச்சுக்காத என்றான்..

சரி என்று தலையாட்டினால்..

குழந்தை விஸ்வாவை கண்டதும் துள்ளி கொண்டு அவனிடம் செல்ல முயல..

விஷ்வா குழந்தையை தூக்க கை நீட்டினான், பூரணியை அவன் பக்கம் விடாமல் தன்னோடு அனைத்து கொண்டால் அந்த கன்னித் தாய்.

விஷ்வா அவளை கேள்வியுடன் நோக்க..

குழந்தை கிட்ட ரொம்ப பழகாதீங்க, விட்டு பிரியும் போது கஷ்ட்டமா இருக்கும்.. உங்களுக்கு இல்ல என் குழந்தைக்கு என்றவள் அங்கிருந்து நகர்ந்தால்..

விஷ்வா பெரிதாக எதையும் அலட்டி கொள்ளவில்லை. தோள்களை குலுக்கி பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான்..

***

Cafe de paris சென்னையில் பிரபலமான காபி ஷாப்.. ஆங்காங்கே ஜோடி ஜோடியாக அமர்ந்து கைகளை தழுவி கால்கலால் பேசி என காதலை வளர்த்து கொண்டிருந்தனர் இன்றைய இளம் தலைமுறையினர்..

தோளில் இரண்டு கயிர்களால் இழுத்து பிடித்த சிகப்பு நிற டாப் மார்பின் பிளவை பட்டவர்த்தனமாக காட்டி கொண்டு இருந்தது, டைட் ஜீன்ஸ் முட்டிக்கு மேல நின்று கொண்டது..

அடர் சிவப்பு நிற உதட்டு சாயம், முடிக்கலை லூஸ் ஹரில் விட்டு இருந்தால்.. அவள் மயூரி.

முகத்தில் இருக்கத்துடன் அடுத்து என்ன என்ற யோசையோடு கை விரல்களை கடித்து கொண்டு அமர்ந்து இருந்தால்

விஷ்வாவின் திருமணத்தை பற்றி அறிந்து கொண்டதால் இந்த இறுக்கம்..

அவளுக்கு எப்படி தெரிந்தது?? கதையின் போக்கில் காண்போம்..

ஹேய் மயூரி என்று எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அழைத்தவன் அவள் எதிர் இருக்கையில் அமர்ந்தான்..

அவன் முகத்தில் தெரிந்த தெளிவு, அவளை குழப்பியது என்ன இவன் எதுவும் நடக்காதது போல இருக்கான்.. எனக்கு கிடைச்ச தகவல் சரி தான என்று அவளே ஒரு நிமிடம் குழம்பி போனால்..

இப்போ நாமளே இவன்கிட்ட கேட்டா உனக்கு எப்படி தெரியும்னு நம்மள குறுக்கு விசாரணை பண்ணுவான்..அப்பறம் நாம அவன் வீட்ல வச்சு இருக்க ஸ்பைய கண்டு பிடிச்சிடுவான்..வேற வழியில்ல மயூரி, அவனே சொல்ற வரைக்கும் அமைதியா இருந்து தான் ஆகணும் என்று பொறுமை காத்தால்..

ஏதாச்சும் ஆர்டர் பண்ணியா??

இல்ல விஷ்வா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தன்..

ஓஹ் என்றவன் வெயிட்டறை அழைத்து அவனுக்கு ஒரு கோல்டு coffee ஆர்டர் செய்தான். உனக்கு ஆர்டர் பண்ணிக்கோ என்றவன் அவள் புறம் மெனுவை நகர்த்தினான்..

அவளுக்கு டிராமிசுவை ஆர்டர் செய்து கொண்டால்..

அப்ரோம் மயூரி எதுக்கு என்ன அவசரமா பார்க்கணும்னு இங்க வர சொன்ன??

பார்க்கணும்னு தோனுச்சு விச்சு..என்றவள் பின் யோசிப்பது போல் பாவனை செய்து, ஹான் விச்சு நீ  நேத்து எங்க போய் இருந்த? நான் கால் பண்ணாலும் அப்ரோம் பேசுறன்னு போன் வச்சுட்ட.. நீ திரும்ப கால் பண்ணவே இல்லையே.. நேத்து ராகுல் கூட சொன்னான் நீ ஆபீஸ் வரலன்னு..என்ன ஆச்சு? எங்க போன என்றால் ஒன்றும் தெரியாதவள் போல்..

என்ன மயூரி என்ன உலவாளிலாம் வச்சு கண்காணிக்குற போல என்று எதார்த்தமாக தான் கேட்டான்.. அதற்கே தடுமாறிவிட்டால் பொய் காதலி..

ஹேய் விச்சு என்ன இப்படி சொல்லிட்ட, நான் ராகுல் கிட்ட சும்மா இன்ஸ்டால பேசிட்டு இருந்தன்.. அப்போதான் ஏன் இன்னைக்கு உன் ஆள் ஆபீஸ் வரலன்னு கேட்டான்..

அப்போ தான் எனக்கே தெரியும்.. நான் அவன்கிட்ட ஏதேதோ சொல்லி சமாளிச்சன் தெரியுமா என்றால்..

விஷ்வா ராகுலிடம் சென்று எதுவும் கேட்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அம்மணி பொய்களை அடுக்கினால்..

அவள் நம்பிக்கையும் பொய்யல்லவே..

நீண்ட மூச்சை விட்டவன், மயூரி லிசன் கேர் ஃபுல்லி எனக்கு நேத்து மேரேஜ் ஆகிடுச்சு..

என்று அவன் இருந்த சூழ்நிலையை விளக்கினான்..

பின் அவன் குழலியிடம் டிவோர்ஸ் பற்றி பேசியதையும் கூறி முடித்தான்..

மயூரியின் பதில்??

நாளை காண்போம்.

தொடரும்..

8. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா அவனுக்கு திருமனம் நடந்த சூழ்நிலையும் அதன் பின் அவன் குழலியிடம் விவாகரத்து பற்றி பேசியதையும் கூறி இருந்தான்..

அவளின் பதிளுக்காக அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க..

கண்ணில் கோர்த்து கொண்ட இன்ஸ்டன்ட் கண்ணீருடன், என்ன விட்டு போய்டுவியா விஷ்வா என்றால் பாவமாக..

உன்ன விட்டு போகணும்னு யோசிச்சு இருந்தா நான் ஏன் குழலிக்கிட்ட விவாகரத்து கேட்க போறன்.. உனக்கு தான் தெரியுமே, எனக்கு கல்யாணத்து மேலயே பெருசா நம்பிக்கை இல்லனு.. அப்படி இருக்கும் போது இது ஒரு பொம்ம கல்யாணம், என்ன பொறுத்த வரைக்கும் நானும் அவளும் ஒரே அறையிலே தங்கி இருக்க ரூம் மட்ஸ் அவ்ளோ தான்..

எனக்கும் அவளுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாது மயூரி, அந்த பொண்ணு ஸ்கூல் கூட போனது இல்ல.. சரி விடு இதுக்கு அப்பறம் இதை பத்தி பேச வேண்டாம்..

இந்த விஷயத்தை நீ பெருசா எடுத்துக்காத.. எல்லாத்தையும் நான் பாத்துக்குறன்..

எங்க அப்பா வேற, அன்னைக்கே எங்களுக்கு நடந்த மேரேஜ்ஜ ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு.. ஒரு நல்ல லாயற பார்த்து டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணனும்..

அவன் இவ்வளவு விளக்கம் கூறியும் அவள் முகம் தெளிவடையவில்லை, எங்கே விஷ்வா கை நழுவி சென்று விடுவானோ என்ற பயம், அவள் தெளிவில்லாத முகத்தை கண்டவன் மனம் சிறு குற்ற உணர்ச்சில் இருந்தது..

அவள் டேபிள் மேல் வைத்து இருந்த கரத்தின் மீது தன் வலகரம் வைத்து ஆறுதலாக அழுத்தினான்..

நான் இவ்ளோ சொன்ன பிறகும் நீ இந்த மாதிரி உம்முனு இருக்கறது, என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையோன்னு தோணுது மயூரி..

ஹேய் விஷ்வா உன்ன நம்பாம நான் வேற யார நம்ப போறன், இருந்தாலும் நான் உயிருக்கு உயிரா காதலிச்ச உனக்கு வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் ஆகிடுச்சுனு நினைக்கும் போது எப்படி வருத்த படாம இருக்க முடியும்? என்ன இருந்தாலும் இப்போ நீ அவ புருஷன் தான என்று மெல்லிய விசும்பல் கொண்டால்..

இட்ஸ் ஓகே, மயூரி ஜஸ்ட் லீவ்ட், நான் சீக்கரம் டிவோர்ஸ்க்கு அரென்ஜ் பன்றன்..

இதற்கு மேல் குழலியை அவன் மனைவி என்று பதிய வைக்க வேண்டாம், நாமே அவன் மனதில் தேவை இல்லாததை வதைப்பது போல் ஆகிவிடும் என்று நினைத்தவள்..  அவன் மீது இருக்கும் காதலால் அவன் கூறிய சமாதானத்தில் கஷ்ட்டபட்டு சரி என்பதாய் தலை அசைத்தால்..

ஆனால் அவளுக்குள் பொற்குழலியை நேரில் காண வேண்டும், விஷவாவின் காதலியாக அவள் முன் விஷ்வாவுடன் இழைய வேண்டும் என்ற அல்ப குணம் இருந்தது..

அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்து கொண்டிருந்தாள்..அவள் அறியவில்லை அவள் நினைப்பது இன்றே நடக்கும் என்று..

பின் சிறிது நேரம் மயூரியுடன் நேரம் செலவிட்டவன், கொஞ்சம் வேலை இருக்கு மயூ கிளம்பறன் என்றவன்  அங்கிருந்து புறப்பட தயாரானான்..

விச்சு என்று அவனை நெருங்கியவள் அவனை அனைக்க வந்தால்.. அவனும் சிறு இடைவெளியோடு அவளை அனைத்து விடுவித்தான்.. ஆனால் அந்த அனைப்பில் அவன் ஒட்டவில்லை. அதை அவன் மனமும் உணரவும் இல்லை..

இப்படி இருப்பவனுக்கு எப்படி மயூரி மேல் காதல் வந்தது..

அவளோ பெரிய பிளாஷ் பேக் எல்லாம் இல்லை.. எல்லாம் வயசு கோளாறு தான்.

மயூரி முதலில் விஷ்வா வேலை செய்யும் நிறுவனத்தில் தான் வேலை செய்து கொண்டு இருந்தால்..விஷ்வா அப்போது டீம் லீடராக இருந்தான்..விஷ்வாவின் டீமிற்கு புதிதாக வந்தவள் தான் மயூரி..

விஷ்வாவின் ஆண்மையான தோற்றத்திலும், அவனின் அறிவு கூர்மையிலும் மயங்கியவள் அவன் பின்புலத்தையும் தெரிந்து கொண்டால்..

அதன் பின் அவனுக்காக அவளை ப்ரத்தியேகமாக அலங்கரித்து கொண்டு தான் அலுவலகம் வருவாள். விஷ்வாவை இம்ப்ரெஸ் செய்வதற்கு வேலைகளை சிறத்தையாக முடித்து அவனிடம் நல்ல பெயர் வாங்கி, விஷ்வாவின் கவனத்தை ஈர்த்தால்..

அதில் ஹாய் பை என்று தொடங்கிய பழக்கம் நட்பில் தொடங்கி காதலில் முடிந்தது.

மயூரி தான் முதலில் காதலை உறைத்தால்.. லவ்ல லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை பிரண்ட்ஸ்ஸா இருக்கலாம் என்று சொன்னவன் பின்பு, காதல் பித்து பிடித்து திரிந்தால் மயூரி.. அவளின் தொடர் காதல் அம்பு தாக்கியதில் அவனும் அவள் காதலுக்கு பச்சை கொடி காட்டினான்..

மற்ற காதலர்களை போல் மீட்டிங் டேட்டிங் என அவர்கள் காதலும் நன்றாகவே சென்றது..எவ்வளவு காதலித்தாலும் விஷ்வா வேலை என்று வந்துவிட்டால் கொஞ்சம் அல்ல ரொம்பவே காரார் பேர்வழி தான்..

மயூரி அவன் காதலை உபயோகித்து கொண்டு வேலைகளில் ஓப்பி அடிக்க, விஷ்வா அனைவர் முன்பிலும் கடுமையாக சாடிவிட்டான்..விஷ்வாவிடம் இருந்து இந்த கோவ முகத்தை எதிர்பார்க்காதவள் அடுத்த நாளே பேப்பர் போட்டுவிட்டால்..

விஷ்வா வந்து கெஞ்சுவான் கொஞ்சுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம் தான்..

வேறு வழியில்லாமல் வேலையை விட்டு நின்றால், அதன் பின் ஆறு மாதம் கழித்து தான் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது..  இப்போது அங்கு தான் டீம் லீடருக்கு சிங் சாங் போட்டு கொண்டு காலத்தை தள்ளுகிறாள்..

இப்படி தான் சென்று கொண்டிருக்கிறது இவர்களின் காதல்.. ஆரம்பத்தில் புதிய காதலர்களுக்கே உண்டான ஆர்வத்துடன் வெளியே செல்வது போனில் நீண்ட நேரம் உரையாடுவது என நேரத்தை செலவாழித்தான் விஷ்வா..

ஆனால் போக போக இவ்வளவு தான இந்த காதல் இதில் அவ்வளவு ஒன்றும் சுவாரஸ்யம் இல்லையே என்று தோன்றியது..

இருந்தும் காதலித்தவலை ஏமாற்ற விரும்பவில்லை, அதனால் அவளையே திருமனம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தான் இப்போது வரை இருக்கிறான்.  காரணம் கல்யாணத்திற்கு
அவனுக்கு இருக்கும் விஷ் லிஸ்டில் டிக் அடிக்க அனைத்து தகுதிகளையும் பெற்று இருந்தால் மயூரி.

அவன் விருப்ப பட்டியலில் இருக்கும் சிலவற்றை நாமும் தெரிந்து கொள்வோம் கதைக்கு உபயோகமாக இருக்கும்..

1. அரையடி கூந்தல்
2. படித்த பட்டதாரி பெண்
3. நுனி நாக்கு ஆங்கிலம்
4. மாடர்ன் மங்கை

இப்படியான பெண்ணை தான் விஷ்வா அவன் வாழ்க்கை துணை பட்டியலில் வைத்துள்ளான்.. இதில் அனைத்திலும் பொருந்தி போனவள் தான் மயூரி.

விஷ்வா என்னையும் EA மால்ல ட்ரோப் பண்ணிடன், எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும், ஹ்ம்ம் வா என்றவன் அவளையும் அழைத்து கொண்டு முன்னே நடந்தான்.

காரில் போனதும் அவனை அனைத்து கொண்டு இதழ் முத்தம் இட நெருங்கியவளை விட்டு விலகினான்.

உள்ளுக்குள் கோவம் கொழுந்து விட்டு எறிந்தது.. இப்போ வேண்டாம் மயூ கொஞ்சம் மைண்ட் சரி இல்ல.. ஆமா மைண்ட் நல்லா இருந்தா மட்டும் உதட்டை பிச்சு திங்கறா மாதிரி முத்தம் கொடுத்துடுவான் பாரு என்று மனதில் கருவி கொண்டால்.

அமைதியான கார் பயணம், விஷ்வா EA மால்லில் வண்டியை நிறுத்தினான்.

விஷ்வா நீயும் என்கூட ஷாப்பிங் வரியா ப்ளீஸ் என்றால் கொஞ்சலாக, என்ன நினைத்தானோ சரி வரன் என்றவன் காரை பார்க் செய்துவிட்டு அவளோடு நடந்தான்..

விஷ்வா சோபாவில் அமர்ந்து கொண்டான் நீ போ மயூரி, பில் பே பண்ணும் போது சொல்லு நான் வரன். இதற்கு தானே அவளும் ஆசைப்பட்டால், ஆர்வமாக உள்ளே சென்றால்..

போனை நோண்டி கொண்டிருந்தவனின் காதில் விழுந்தது அந்த குரல், ஹய்யோ அதலாம் வேண்டாம் சூர்யா எனக்கு அதலாம் போட்டு பழக்கம் இல்லை..

குரல் வந்த திசையில் திரும்பினான் அங்கே பொற்குழலி சூர்யா, சூர்யா கையில் பூரணி அவன் கழுத்தை கட்டி கொண்டு அமர்ந்து இருந்தால்.

சரி வாங்க பர்ஸ்ட் பாப்பாக்கு தேவையானதை வாங்கிடலாம் என்றவன் குழலியை அழைத்து கொண்டு அங்குள்ள பேபி ஹக் கடையினுள் நுழைந்தான்..

இங்கு ஒருவனுக்கு பொறுக்க முடியவில்லை.. அடுத்த நிமிடம் அவர்கள் முன் நின்று இருந்தான்..

இங்க என்ன பன்ற என்றான் குழலியை முறைத்து கொண்டே.. ஹேய் விஷ்வா நீ எங்க இங்க? ஷாப்பிங் வர ஆள் இல்லையே  நீ.. குழலியை பார்த்து கொண்டே கூறினான் மயூரி கூட வந்தன்..

இருவர் முகத்திலும் எந்த மாற்றமும் இல்லை.. ஓஹ் நாங்க பாப்பாக்கு ட்ரெஸ் அப்ரோம் டாய்ஸ்லாம் வாங்க வந்தோம் என்றான் கையில் உள்ள குழந்தையை கொஞ்சி கொண்டே..

அப்படியே அண்ணிக்கும் ட்ரெஸ் எடுக்க வந்தோம் என்றான்.. ஹய்யோ அதலாம் வேண்டாம் சூர்யா என்கிட்ட நிறைய உடுப்பு இருக்கு பாப்பாக்கு மட்டும் வாங்கிக்கலாம்.

அத அப்ரோம் பார்த்துக்கலாம் விஷ்வாவிடம் திரும்பி, ஓகே ணா யூ கன்டினியு என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர முற்பட.

சூர்யாவை நிறுத்தி குழந்தையை அவன் கையில் மாற்றி கொண்டவன்.. வா நானும் வரன் என்றப்படி அவர்களை கடந்து சென்றான்..

சூர்யா உள்ளுக்குள் சிரித்து கொண்டே, வாங்க அண்ணி என்று குழலியையும் கூட்டி சென்றான்..

குழலி விஷ்வா அருகில் சென்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், உங்கள தான் பாப்பாகிட்ட நெருங்காதீங்கனு சொன்னன்ல ஏன் இப்போ குழந்தைய தூக்கி வச்சிட்டு இருக்கீங்க??

நான் ஏன் நெருங்க கூடாது என்றான்.. குரலில் கடுமை எட்டி பார்த்தது.

உங்கள விட்டு பிரியும் போது குழந்தை ஏங்கி போய்டுவா, அது அவளுக்கு தான் கஷ்ட்டம்..

அப்போ என் தம்பி விட்டு பிரிய மாட்டியா என்றான்.. சட்டென்று முகிழ்த்த கோவத்துடன் அவள் ஒன்றும் புரியாமல் இருக்க.. அவளை முறைத்து விட்டு குழந்தையுடன் அங்கிருந்து சென்றான்.

அதன் பின் குழலி அவனிடம் எதுவும் பேசவில்லை..

பாப்பாவிற்கு தேவையான டாய்ஸ், வாக்கர், பெம்பர்ஸ், மசாஜ் ஆயில் சோப் ஷாம்பு என அனைத்தையும் வாங்கி குவித்தான் விஷ்வா..

குழலி அந்த கடையை தான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.. சூர்யா இந்த கடைல எல்லாமே இருக்குமா?? ஹ்ம்ம் இது பேபி ஷாப் அண்ணி குட்டிஸ்க்கு என்ன தேவையோ அது எல்லாம் இங்க இருக்கும்.

எங்க ஊர்லலாம் இந்த மாதிரி கடை எதுவும் இல்ல சூர்யா.. மல்லிகை கடை இருக்கும் துணி எடுக்கணும்னா ஒரு அக்கா வீட்டுக்கு போவோம், அவங்க தான் டவுன்ல இருந்து துணி எடுத்துட்டு வந்து எங்க ஊர்ல வியாபாரம் பண்றாங்க..நாங்க எல்லாம் அவங்க கிட்ட தான் துணி எடுப்போம்.. பட்டு துணிலாம் எங்க ஊர்லயே நெய்யறாங்க கல்யாணத்துக்கு துணிலாம் அங்க போய் எடுத்துப்போம் என்றால்.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டு தான் இருந்தான் விஷ்வா, மனதினுள் அவளை திட்டி கொண்டே..

இதோ அழைத்துவிட்டால் மயூரி..

கால் அட்டன்ட் செய்தவன் முகத்தில் என்றும் இல்லா புன்னகையை படற விட்டு, குழலியை பார்த்து கொண்டே அவன் இருக்கும் இடத்தை கூறி இங்கு வரும்படி கூறினான்..


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

9. கண்கள் நிறைந்த ஓவியமே!!
மயூரி அந்த ஷாப்பினுள் நுழைந்து விஷ்வாவை தேடினால்,

விஷ்வா குழலி சூர்யா என மூவரும் ஒரே இடத்தில் தான் நின்று கொண்டு இருந்தனர்.. குழந்தை விஷ்வாவின் தோளில் உறங்கி கொண்டு இருந்தால்.

மயூரியை கண்ட விஷ்வா, ஹேய் மயூ இங்க இருக்கன் என்று புன்னகை முகமாக கை அசைத்தான்..அவர்களை நெருங்கியவள் சூர்யா குழலியை தான் பார்த்து கொண்டிருந்தாள்.. சூர்யாவை இப்போது தான் பார்க்கிறாள் ஆனால் முன்பே பழகியது போல் ஹாய் சூர்யா என்று அவனுக்கு கை குலுக்க போனவலை ஹாய் என்று கை அசைத்தளோடு அவளை தள்ளி நிறுத்தினான் சூர்யா..

பின் அவனே குழலியை அறிமுக படுத்தினான்.. இவங்க விஷ்வா அண்ணாவோட வைஃப் பொற்குழலி என்று அறிமுக படுத்தினான்..குழலி மென்மையாக சிரிக்க..

அவளை மேல் இருந்து கீழகா அளவிட்டவள் முகத்தில் அவ்வளவு பொறாமை குழலியின் அழகில்..

குழலி நல்ல சிவந்த நிறம், பார்லர் சென்று திருத்தாத புருவங்கள்.. நீள விழிகள், (நீள விழிகள் என்று நான் நிறத்தை குறிப்பிடவில்லை, அவள் கண்கள் நீண்டு அழகாக இருக்கும். உதாரணத்திற்கு கடவுள் கிருஷ்ண பரமாத்மாவின் விழிகளை போல் நீண்டு இருக்கும்.) அவள் கண்களை மட்டும் நாள் முழுவதும் ரசிக்கலாம்.. அவ்வளவு ஈர்ப்பு உடையதாக இருக்கும். பிரமிடு மூக்கு. ஸ்ட்ராபெர்ரி நிற சிவந்த உதடுகள்.. பார்க்கும் போதே அந்த உதடுகளின் மென்மை தெரியும்.. பார்க்கும் பொழுதே ஆசையை தூண்டும் மென்மையான கன்ன கதுப்புகள்..

வலம்புரி சங்கை போல் அழகான கழுத்து வளைவு, செழுமையான தேகம்.. பிட்டத்தை தாண்டிய அடர்ந்த கூந்தல், திருமணத்திற்கு முன்பு வரை எப்போதும் தாவணி தான் கட்டுவால்.. இப்போது சேலை கட்டுகிறாள்.

தேர்ந்தெடுத்த சிற்பியால் செதுக்கப்பட்ட தங்கம சிலை போல் இருப்பாள்..அவ்வளவு அழகு பெண் நம் பொற்குழலி..

அம்மாவின் அழகை உரித்து வைத்து பிறந்தவள் பூரணி பாப்பா..

அவள் பொறாமை குணத்தை உள்ளே அடக்கியவள், ஓஹ் விஷ்வா நீ சொன்னியே அந்த பொண்ணு இவதான என்றால்..

அவள் பேச்சில் தெரிந்த இகழ்ச்சி குழலிக்கு தான் தெரியாமல் போனது.. ஆனால் அருகில் இருந்த சூர்யா அவளை கண்டு கொண்டான்.. இருந்தும் குழலி உடன் இருப்பதால் அமைதியாக இருந்தான்.

விஷ்வாவிற்கும் மயூரியின் மரியாதை இல்லா பேச்சு முகம் சுழிக்க வைத்தது..

Hi I'm mayuri, Vishwa's fiancée. அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை அறிந்து கொண்டே குழலியிடம் தன்னை ஆங்கிலத்தில் அறிமுக படுத்தி கொண்டால்..

பின் நினைவு வந்தவள் போல் ஒரு பாவனை காட்டி, ohh I'm sorry உங்களுக்கு இங்கிலிஷ் தெரியாதுல.. விஷ்வா சொன்னான் நான் தான் மறந்துட்டன்..

அவள் வேண்டும் என்றே தான் செய்கிறாள்.. ஆனால் அது குழலிக்கு தெரிய வேண்டுமே..பின் குழலியிடம் திரும்பி,

என் பேரு மயூரி, நான் விஷ்வாவோட வருங்கால மனைவி, நீங்க விஷ்வா விட்டு போனதும் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்றால்..

மயூரியின் வார்த்தைகள் குழலியை கொஞ்சமும் வருத்தம் கொள்ள வைக்கவில்லை.. அவளும் முடிவு செய்துவிட்டாளே, இனி விஷ்வாவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று..

ஆனாலும், குழலி அவ்வளவு எளிதில் புதிய மனிதர்களுடன் பழக மாட்டாள்.. அவள் தாய் அவர்கள் நல்லவர்கள் பேசுமா என்று அனுமதி வழங்கினால் மட்டுமே அவர்களிடம் பேசுவாள், பழகுவாள்..

இப்போது மயூரியுடனும் பேச தயங்க.. அவள் அமைதியை சதாகமாக எடுத்து கொண்டு.. விஷ்வா உன் அப்பா உனக்கு எப்படி இப்படி ஒரு பொண்ண பார்த்தாரு? கட்டாய கல்யாணமா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று ஏதோ காமெடி பண்ணது போல் அவள் மட்டுமே சிரித்து கொண்டு இருந்தால்.. இரு ஆண்களின் கோவத்தையும் கவனியாது..

விஷ்வாவிற்கும் அவன் தந்தையை பற்றி பேசியதும் கோவம் மூக்கின் நுனியில் வந்து நிற்க, அவன் பேச வாய் திறக்கும் முன் சூர்யா பேசினான்..

எங்க அப்பாவ பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?? உன் காதல் கண்றாவி உரிமை மயிரை எல்லாம் இவனோட நிறுத்திக்க என்று விஷ்வாவை கண்களால் காட்டினான்..

தேவை இல்லாம என் அப்பா என் அண்ணிய பத்தி ஒரு வார்த்தை பேசுன, பேசுற வாய உடைச்சு விட்டுடுவன் என்றான் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பி..

விஷ்வா அவன் தந்தையின் மீது கோவமாக உள்ளதால், தனக்கு பரிந்து பேசுவான் என்ற நினைப்பில் இருந்தவள் விஷ்வாவிடம் தம்பியை பற்றி புகார் அளித்தால்..

விஷ்வா பாருங்க உங்க தம்பியை நான் விளையாட்டுக்கு தான சொன்னன்.. நான் அவருக்கு அண்ணியா வரபோறவன்கர மரியாதை கொஞ்சமும் இல்லாம எப்படி பேசுறாருனு என்றவள் சிணுங்கி கொண்டே விஷ்வா தோளில் சாய போனால்..

அவளை தள்ளி நிறுத்தியவன்.. என் அப்பா பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல மயூரி.. எங்க அப்பாக்கும் எனக்கும் இருக்கறது தனிப்பட்ட பிரச்சனை அத நாங்க எங்களுக்குள்ள முடிச்சுக்குவோம்.. ஆனா அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு நீ எங்க அப்பாவ பத்தி பேசறத எல்லாம் என்னால கேட்க முடியாது..

என் தம்பி சொன்னது தான் உனக்கு நானும் சொல்றன். எனக்கு எங்க அப்பா தான் ஹீரோ என்றான் கோவம் குறையாமல்..

மயூரிக்கு கதிகலங்கியது.. ஹய்யோ இவன் என்ன இப்படி பேசுறான்.. மயூ ஏதாச்சும் பேசி சமாளி டி என்று மனம் எடுத்துறைக்க.. சாரி விஷ்வா நான் சும்மா ஃபன்க்கு தான் அப்படி சொன்னன்.. நீங்க இவ்ளோ சீரியஸ் ஆவிங்கனு எனக்கு தெரியாது என்று பின் வாங்கினால்..

அவள் கேட்ட சாரியை இருவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை..

பின் குழந்தையை கண்டவள், விஷ்வா நீ எதுக்கு அவ குழந்தைய தூக்கி வச்சு இருக்க, நான் ஷாப்பிங் முடிச்சுட்டன் வாங்க பில் பே பண்ண போலாம் என்று உரிமையாக அழைத்தால்.

சூர்யா குழந்தையை வாங்க ஒரு அடி முன்னே எடுத்து வைக்க, அதற்குள் குழலி அவன் அருகே சென்று அவனிடம் எதுவும் பேசாமல் குழந்தையை வாங்கி கொண்டால்..

விஷ்வா மயூரியை தான் முறைத்து கொண்டு இருந்தான்.. பூரணி குழலி கைக்கு மாறியதில்..

பின் மயூரியிடம் பதில் கூறாமல் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க பணம் செலுத்தும் இடத்திற்கு சென்றான்..

அவனோடு மற்ற மூவரும் சென்றனர்.. விஷ்வா பணம் கொடுக்க அவன் பர்ஸில் இருந்து கார்டை எடுக்க.. அதற்குள் குழலி முந்தி கொண்டு நீங்க பணம் கொடுக்க வேண்டாம் நான் கொடுத்து கொள்கிறேன் என்று கூறியவள் அவள் மனி பர்ஸில் இருந்து அவளிடம் இருந்த மொத்த பணம் 1700 ரூபாவை எடுத்து கொடுத்தாள்.. ஊரில் இருந்து வரும் பொழுது அவள் அம்மா கை செலவிற்கு கொடுத்த பணம் தான் இந்த 1700 ரூபாய்.

மயூரி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டால்.. விஷ்வாவின் தோளில் தலையை இடித்து இடித்து சிரித்தால்.. அங்கு நடந்ததை பார்த்து கொண்டிருந்த கேஷ் கவுன்ட்டரில் உள்ள பெண்ணும் குழலியின் அறியாமையை நினைத்து லேசாக சிரித்தால், இருவரையும் பாரபட்சம் இன்றி முறைத்தான் விஷ்வா..

விஷ்வா அது வந்து சாரி, சிரிப்பு வந்துடுச்சு என்று தலையை குனிந்து கொண்டால்..

சூர்யா இந்த விஷயத்தில் தலையிடவில்லை.. அண்ணனின் எதிர்வினையை காண அமைதியாக இருந்தான்..

குழலி, மயூரி ஏன் சிரிக்கிறாள் என்று அறியாமல், சுற்றி இருப்பவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

விஷ்வா குழலியிடம், இந்த 1700 ரூபாய் பத்தாது.. மொத்த காசு 22,532 ரூபாய் என்றான்..

ஆத்தி அம்புட்டு பணமா, என்று வாயில் கை வைத்தால் குழலி..

விஷ்வா அவள் கூறிய பாவனையில் மென்மையாக சிரித்து பின் பணம் கட்டுவதில் கவனம் செலுத்தினான்.

அதற்குள் குழலி இல்ல பாப்பாக்கு இதல்லாம் வேண்டாம்.. வீட்ல இருக்கறதே போதும் என்று மேலும் பேசவர, அதற்குள் விஷ்வா இப்போ நீ அமைதியா இல்ல, வீட்டுக்கு போனதும் எங்க அம்மா ரூம்ல தள்ளி கதவை பூட்டிடுவன் என்று மிறட்டினான்.

குழலியின் நினைவுகல் இன்று காலை டிவியில் பார்த்த  அருணாச்சலம் படத்தின் காட்சிகள் வந்து போனது..அதில் வில்லியாக நடித்த வடிவுக்கரசி அவர்களையும் விஷ்வாவின் அம்மா மகேஸ்வரியும்  ஒப்பிட்டு பார்த்தவள்..

ஹய்யோ வேண்டாம் வேண்டாம் என்று இருக்கும் இடம் மறந்து அலறினால் குழலி, விஷ்வாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது அவன் அம்மாவை நினைத்து குழலி இவ்வளவு பயப்படுவது.. எங்க அம்மா மேல எவ்ளோ பயம், இனிமேல் எங்க அம்மா தான் டி உனக்கு பூச்சாண்டி என்று நினைத்து கொண்டவன், இப்போது அவளை சமாளிக்க தம்பியின் உதவியை நாடினான்..

அவனும் அங்கு நடந்த அலப்பறையை பார்த்து கொண்டு தான் இருந்தான்.. பின் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை அவன் கைக்கு மாற்றி கொண்டவன் வாங்க அண்ணி அங்க போய் வேடிக்கை பார்க்கலாம் என்று அழைத்து சென்றுவிட்டான்.

குழலி அங்கிருந்து சென்றதும், விஷ்வா நீ எதுக்கு அவ குழந்தைக்கு செலவு பன்ற இதல்லாம் நமக்கு தேவையா?? மயூரியின் வாய் அடங்குவேனா என்றது..

இல்லாத பொறுமையை இழுத்து பிடித்தவன், குழலியும் அந்த குழந்தையும் என்னோட பொறுப்பு.. இப்போ இல்ல எங்களுக்கு விவாகரத்து ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் என் பொறுப்பு தான்..ஏன்னா அவ எங்க அப்பாவோட உயிர் நண்பனோட பொண்ணு.. அந்த அக்கறை எனக்கு இருக்கு.

ஏனோ இப்போது விவாகரத்து என்ற சொல்லை சொல்லும் போதே அவன் மனம் உருத்தியது..இருந்தும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் பணம் செலுத்தி விட்டு, பொருட்களை வாங்க காத்திருந்தான்..

அதுக்கு இல்ல விஷ்வா நீ இந்த மாதிரிலாம் அவ குழந்தைக்கு செலவு பண்ணிட்டு இருந்தா, அவளுக்கு உன் பணத்து மேல ஆசை வந்துடும் அப்பறம் எப்படி உன்ன விட்டு விலகி போவா? விவாகரத்து தர சம்மதிக்கலன்னா என்ன பண்றது? நான் நம்ம நல்லதுக்கு தான் சொல்றன் விஷ்வா என்று நயமாக பேசினால்..

எனக்கு எல்லார பத்தியும் தெரியும் மயூரி, என்றவன் பார்வை ஒரு முறை அவளை ஆழ்ந்து நோக்கியது. அதில் உன்னை பற்றியும் எனக்கு தெரியும் என்ற பொருள் அடங்கியே இருந்தது...

ஆம் விஷ்வாவிற்கு மயூரியை பற்றி நன்றாகவே தெரியும்.. அவளுக்கு பணத்தின் மீது எவ்வளவு ஈர்ப்பு என்றும் ஆடம்பர வாழ்க்கை மீது எவ்வளவு ஆர்வம் என்றும் தெரியும்..

ஆனால் அவனை பொறுத்தவரை இதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவன் அலுவலகத்தில் பார்க்கும் பெண்கள், நண்பனின் காதலிகள், அவனுக்கு தெரிந்த பெண் தோழிகள், ஏன் அவன் தாய் முதற்கொண்டு பணத்திற்கு தானே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.. அதனால் மயூரியின் மீது அவனுக்கு எந்த தவறான கருத்துக்களும் இல்லை.

ஆனால் அவன் பார்த்த பெண்களில் இருந்து குழலி முற்றிலும் வேறுபட்டவள் என்று இனி வரும் காலங்களில் குழலி அவனுக்கு உணர்த்தி கொண்டே இருப்பாள்.

தொடரும்...

10. கண்கள் நிறைந்த ஓவியமே !!
விஷ்வா மயூரி செய்த பர்ச்சேசிற்கும் பணத்தை செலுத்திவிட்டு அவளை அங்கிருந்து துரத்தாத குறையாக ஒரு கேப் புக் செய்து அனுப்பி இருந்தான்..

பின் தம்பியும் குழலியும் இருக்கும் இடத்திற்கு வந்தவன், சூர்யாவை குழந்தையுடன் இங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, குழலியை அழைத்து கொண்டு அங்குள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ்சினுள் நுழைந்தான்..

அவளுக்கு பொருத்தமான நிறத்தில் மீடியம் சைஸ்ஸில் உடைகளை தேர்ந்து எடுத்தான்.. அனைத்தும் குர்த்தா செட் பலசோ ஷார்ட் டாப் வகைகளை சேர்ந்தது.. அவள் மீது ஒரு ஒரு ஆடையும் வைத்து பார்க்கும் போது தான் குழலி கேட்டால் இதல்லாம் யாருக்கு என்று?

உனக்கு தான் என்றவன் வேறு எதுவும் பேசாமல்.. மீண்டும் ஆடைகளை அவள் மீது வைத்து பார்த்து கொண்டிருந்தான்..

நான் இந்த உடுப்புலாம் போட மாட்டன் எனக்கு இதல்லாம் வேண்டாம்..

அவளை முறைத்தவன், உன்கிட்ட வேணுமா வேண்டாமான்னு நான் கேக்கல அதனால நான் சொல்ற ட்ரஸ் தான் நீ இனிமேல் போடணும்..

நான் எதுக்கு நீங்க சொல்ற உடுப்ப உடுத்தணும்? உங்களுக்கு உங்க காதலி இருக்காங்கல நீங்க சொல்ற உடுப்ப போட்டு அழகு பார்க்க.. அப்பறம் எதுக்கு என்ன கட்டாயபடுத்துறீங்க என்றால் கோவம் கொண்ட கிளியாக..

அவ இப்போ காதலியா இருக்கலாம் ஆனா இப்போ நீங்க தான மேடம் என்னோட மனைவி அதனால நான் சொல்ற ட்ரெஸ் ஐ மீன் நான் சொல்ற உடுப்ப தான் நீ இனிமேல் உடுத்தனும் என்றான், பேச்சில் குறும்பும் முகத்தில் கடுமையுமாக.

பின் அவளை அழைத்து கொண்டு ஒரு சேல்ஸ் கேர்ள்ளிடம் சென்றவன் இவங்களுக்கு இன்னர் வெர்ஸ் காட்டுங்க என்று சொல்லிவிட்டு அவன் மற்ற உடைகளை காண சென்றுவிட்டான்.

விஷ்வா அவளுக்காக காத்திருந்தான், குழலி கொஞ்சம் நேரத்திலே கையில் ஷாப்பிங் பேகுடன் விஷ்வா இருக்கும் இடத்திற்கு வந்து அந்த பேகை அவனிடம் நீட்டினால், முகத்தை திருப்பி கொண்டு..

அவனுக்கு குழலியை பார்க்க சிரிப்பாக இருந்தது, முகத்தை திருப்பி கொண்டவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் வா போலாம் என்று அவளை கை பிடித்து அழைத்து சென்றான்..

எங்கிருந்து வந்ததோ இவ்வளவு உரிமை?

பின் வாங்கிய ஆடைகளுக்கு பணம் செலுத்திவிட்டு, குழலியையும் சூர்யாவையும் அழைத்து கொண்டு ஃபுட் கோர்ட் சென்றான். குழலியை அவன் அமர்ந்து இருந்த சோபாவில் அவனுக்கு அருகிலே அமர்த்தி கொண்டான்..சூர்யா அண்ணனிடம் தெரியும் வித்யாசங்களை கவனித்து கொண்டே எதிர் இருக்கையில் அமர்ந்தான்.. குழலிக்கும் சேர்த்து விஷ்வாவே ஆர்டர் செய்தான்..

குழலி உணவுகளை உண்ணாமல் தயங்கி கொண்டு இருக்க..

விஷ்வா, என்ன குழலி சாப்பிடு..

இல்ல அது வந்து.. என்று தயங்கினால்..

என்ன ஆச்சு குழலி, சொல்லு..

அது வந்து நான் பாப்பாக்கு பால் குடுக்கிறன்..  இந்த சாப்பாடுலாம் சாப்பிடலாமானு தெரில.. உடம்புக்கு ஏதாச்சும் சூடு புடிச்சுதுனா பாப்பாக்கு வயிறு வலிக்கும் என்று விஷ்வா ஆர்டர் செய்த உணவில் கவனம் செலுத்தினால்..

விஷ்வாவிடம் இதை பற்றி பேசுவதற்கு அவ்வளவு தயக்கம்.. அவனும் அதை கண்டும் காணாமல் இருந்தவன் அவள் சொன்னதில்,

ஓஹ் அப்படியா..என்று யோசித்தவன் கூகிள் ஆணடவரின் துணையோடு,  அவளுக்கு ஆடு மற்றும் மீன் இறைச்சிகளோடு உணவை ஆர்டர் செய்தான்.

உணவு வரவும் விஷ்வாவே குழலிக்கு பரிமாறினான்..பரவால்ல நானே எடுத்து வச்சு சாப்பிடுக்கறேன் என்றவள் பேச்சை காது கொடுத்து கேட்காது அவனே அனைத்தையும் பரிமாறினான்..

பூரணி பாப்பா விஷ்வா மடியில் தான் அமர்ந்து இருந்தால்.. பாப்பாவிற்கு தனியாக பன்னீர் சாலட் ஆர்டர் செய்து இருக்க.. குட்டி பாப்பா பன்னீரை விரும்பி உண்டால்..

சூர்யா அண்ணனின் இந்த மாற்றத்தை லைவ்வாக தந்தைக்கு வீடியோ காலில் காட்டி கொண்டு இருந்தான்..

சுந்தரத்திற்கு திரையில் கண்ட காட்சியில் மனம் நிறைந்து போனது..

குழலி விஷ்வா பூரணி பாப்பா ஒரு காரிலும், சூர்யா அவன் காரிலும் வீடு வந்து சேர்ந்தனர். நேரம் எட்டை தொட்டு இருந்தது.. சுந்தரம் இன்னும் வீடு வரவில்லை..

மகேஸ்வரி அறையில் வெளிச்சம் தெரிய அவன் அம்மா வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டவன், குழலியை அழைத்து கொண்டு மேலே சென்றுவிட்டான்..

பூரணி உறங்கி இருந்தால்.. குழலி அவள் பழைய உடைகளில் ஒன்றை எடுத்து கொண்டு குளியலறை புக, அதற்குள் அவளை வழி மறைத்தவன் குழலி கையில் இருக்கும் உடையை வாங்கி கொண்டு அவன் இன்று வாங்கிய இரவு உடையை கையில் திணித்து இருந்தான்.

எனக்கு இதல்லாம் வேண்டாம் என்று அவள் மறுக்க.. சரி இங்கயே இரு எங்க அம்மாவை அனுப்புறன் என்று திரும்பினான்..ஹய்யோ அதலாம் வேண்டாம் நான் இதையே உடுத்திக்குறன் என்றவள் வேகமாக உள்ளே சென்றுவிட்டால்..

விஷ்வா இதழ்களில் லேசான புன்னகை, இவளே பாப்பா மாதிரி தான் இருக்கா இவளுக்கு ஒரு பாப்பா என்று நினைத்து கொண்டவன் கட்டிலில் உறங்கி கொண்டு இருந்த குழந்தையை கண்டான்..

குழலியும் பூரணி பாப்பாவும் அவனோட பொறுப்பு என்று கருதினான்..

குழலி சிறிது நேரத்திலே அவன் தேர்வு செய்த உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தால்..

அவளுக்கு அந்த இரவு உடை கொஞ்சம் தளர்வாக அதே சமயம்  அவளுக்கு அழகாகவே இருந்தது.

பின் எதுவும் பேசமால் அவனும் பிரெஷ் ஆக சென்றான்.. அதற்குள் குழலி கிழே போர்வையை விரித்து குழந்தையை மெத்தையில் இருந்து தூக்கி வந்து அவள் அருகில் கிடத்தி கொண்டால்..

விஷ்வா அவளை பார்த்து கொண்டே வந்தான்..

குழலி ஏன் நீயும் பாப்பாவும் கீழே படுத்து இருக்கீங்க ac ரூம்ல இப்படி கீழ படுத்தா பாப்பாக்கு சேராது என்றான் உண்மையான அக்கறையுடன்..

எங்க இடம் இது தான்..பாப்பாக்கு குல்லாலாம் போட்டு இருக்கன் ஒன்னும் ஆகாது..

இப்போ என்ன ஆச்சு உனக்கு?

எனக்கு ஒன்னும் இல்ல.. நீங்க தான் காலைல பேசுனத மறந்துட்டு அதுக்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாம நடந்துக்குறீங்க..

என் குழந்தைகிட்ட நெருங்காதீங்க.. என்மேல உங்களுக்கு எந்த அக்கறையும் வேண்டாம்.. என்னையும் பாப்பாவையும் நானே பாத்துக்குவன்..

இனிமேல் எனக்கும் பாப்பாக்கும் இந்த மாதிரி உடுப்பு வாங்கி தர வேலை எல்லாம் வேண்டாம் என்றால் முகத்தில் அரைந்தார் போல்..

அவள் பேச்சில் சூடானவன், இப்போ உனக்கு என்ன பிரச்சனை குழலி? ஏன் இப்படி பேசுறஎன்றான் கோவத்தை மறைத்து கொண்டு??

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. பிரிய போற நாம ஒரே மெத்தைல படுக்குற அளவுக்கு நெருக்கமா இருக்கணும்னு அவசியம் இல்ல என்றால்..

இங்க பாரு குழலி நாம நாளைக்கே பிரிய போறது இல்ல.. மயூரிக்கும் எனக்கும் மேரேஜ் ஆக இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு.. அதுவரைக்கும் நீ என்கூட இந்த ரூம்ல தான் இருக்க போற..

ஒரே ரூம்ல இருந்துகிட்டு இந்த மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லு..

அதுமட்டும் இல்ல..நீயும் பாப்பாவும் என்னோட பொறுப்பு, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுற வரைக்கும் நான் உங்கள பத்திரமா பர்த்துப்பன்..

நான் சொன்னா மாதிரி உனக்கு ஒரு டீச்சர் ஏற்பாடு பண்ணி இருக்கன்..திங்கள் கிழமைல இருந்து அவங்க வருவாங்க..

நீ நல்லா படி, உனக்கு நல்ல வாழ்க்கைய நான் அமைச்சு தரன் என்றான்..

நல்ல வாழ்க்கைய அமைச்சு தரீங்களா புரியல நீங்க என்ன சொல்றிங்கனு??

என்ன சொல்றன்னா.. நல்ல பையனா பார்த்து நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறன் என்றான்..

மூணாவது கல்யாணமா என்றால் கசந்த புன்னகையுடன்.

இங்க பாரு குழலி உனக்கு வயசு 19 தான் ஆகுது, அதுக்குள்ள வாழ்க்கையே முடிஞ்சா மாதிரி விரக்த்தியா பேசாத, உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு என்றான்..

என் வாழ்க்கைல இதுவரைக்கும் எங்க அம்மா தான் எல்லாம் முடிவையும் எடுத்து இருக்காங்க. அவங்களுக்காக என் வாழ்க்கைய ரெண்டு முறை பணயம் வச்சுட்டன்.. இனிமேலும் என் வாழ்க்கைய யார்கிட்டயும் ஒப்படைக்க நான் தயாரா இல்ல..

இனிமேல் என் வாழ்க்கை என் பொண்ணுக்காக மட்டும் தான். யாரையும் நம்ப நான் தயாரா இல்ல..

நீங்க எனக்கு படிப்பு தரன்னு சொல்லி இருக்கீங்க.. எனக்கு அதுவே போதும்.. எனக்குன்னு ஒரு சம்பாதியத்தை அந்த படிப்பு வழியா நான் உருவாக்கிக்கிறன்..

நீங்க சீக்கிரமா விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றால் குரலில் எந்த வருத்தமும் இல்லாது.

சரி குழலி, உன் வாழ்க்கைய இனிமேல் நீயே முடிவு எடு அதுக்கான எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. உனக்கு நல்லது கெட்டத சொல்லி தர நல்ல நண்பனா என்னை ஏத்துகுவியா என்றான்..

உங்களுக்கு தோழியா இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கு என்றால் பட்டென்று??

விஷ்வாவை காய படுத்த அவள் இந்த கேள்வியை கேட்கவில்லை.. அவன் பேசிய பேச்சின் தக்காமாக அவள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை அவளையும் மீறி இந்த கேள்வியை கேட்க வைத்தது..

குழலி கேட்ட கேள்வி அவன் நெஞ்சை சுருக்கென்று தைத்தது..

அவள் கேள்வில் தவறொன்றும் இல்லையே..

அவனுக்கு மனைவியாக இருக்கவே நூறு தகுதிகள் பார்ப்பவன் ஆயிற்றே.. அப்படி இருக்கையில் அவனுக்கு தோழியாக இருக்க ஐம்பது தகுதிகளையாவது பார்க்க மாட்டானா என்ற எண்ணம் அவளுக்கு.

ப்ளீஸ் குழலி நான் பேசுனது உனக்கு கஷ்ட்டமா இருந்து இருக்கும்னு எனக்கு புரியுது.. ஐ அம் சாரி.. என்ன மன்னிச்சுடு..

ஹய்யோ நீங்க போய் என்கிட்ட ஏன் மன்னிப்புலாம் கேக்குறீங்க? என்றால் உண்மையான பதட்டத்துடன்.

சரி அத விடு என்ன உன் நண்பனா ஏத்துக்குவியா என்றான் ஒருவித எதிர்பார்ப்புடன்..

அவனுடைய நட்பு கிடைக்க பல பெண்கள் காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.  அப்படி இருக்கையில், ஏன் இந்த சிறுபெண்ணின் நட்பை எதிர்பார்க்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை..

குழலிக்கு விஷ்வா தன்னிடம் தன் நட்புக்காக இப்படி இறைஞ்சு நிற்பது என்னவோ போல் இருக்க..

சரி நீங்க இனிமேல் என்னோட நல்ல நண்பன் என்று முத்து பற்கள் தெரிய புன்னகைத்து அவன் நீட்டி இருந்த கரங்களுக்குள் தன் கரத்தை புகுத்தி கொண்டால்..

அவனுக்கு எதையோ சாதித்த உணர்வு..கடந்த மாதம் அவன் அலுவலத்தில் நடந்த AGM மீட்டிங்கில்  அவன் தான் பெஸ்ட் பர்ஃபாமர் விருதை வாங்கினான் அப்போது கூட  ஒரு மெல்லிய புன்னகையுடன் கடந்து சென்றான்.. ஆனால் இப்போது எதையோ சாதித்த உணர்வு..

அவள் கையை பிடித்து வேகமாக குலுக்கினான் விஷ்வா.. பின் சரிவா மேல வந்து தூங்கு, பாப்பாக்கு ஆகாது என்றவன் அவள் பதில் கூறும் முன் குழந்தையை தூக்கி கொண்டு மெத்தைக்கு சென்றான்.

ஹய்யோ அதலாம் வேண்டாம் நாங்க கீழயே படுத்துக்குறோம் என்று கூற, அவளை திரும்பி முறைத்தவன் என்மேல நம்பிக்கை இல்லையா என்றான்..

அதுக்காக இல்ல.. என்று அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்க..

சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்து மெத்தையில் விழ வைத்தான் விஷ்வா, அவள் மிரண்டு விழிக்க.. அமைதியா தூங்கு என்றவன் அவர்களுக்கு நடுவில் இருந்த குழந்தையை ரசித்து கொண்டிருந்தான்.

நான் உங்கள எப்படி கூப்பிடுறது என்றால் குழலி..

என்னோட முழு பெயர் தெரியுமா என்றான் அவளிடம்..

ஹம்ம்ஹும் என்றால் தலையாட்டி.

விஷ்வ கர்ணன் என் முழு பெயர். நீ என்ன எப்படி வேணும்னாலும் கூப்பிடு என்றான்..

பேர் சொல்லியா என்றால், அந்த நீண்ட கண்களை விரித்து..

அதில் ஒரு நிமிடம் தொலைந்து தான் போனான்..

பின் சுதாரித்து கொண்டவன், ஆமா கூப்பிடறதுக்கு தான பேரு..

ஹய்யோ வேண்டாம், தப்பு..

நோ.. நீ இனிமேல் என்ன பேர் சொல்லி தான் கூப்பிடனும் என்றான் உத்தரவாக..

அச்சோ நான் எப்படி.. நீங்க என்ன விட எட்டு வருஷம் பெரியவங்க என்றால்..

எட்டு வருஷம் தான் பெரியவன் நான் ஒன்னும் தாத்தா இல்ல என்றான் சட்டென்று முகிழ்த்த சிறு கோவத்துடன்..

பாவம் அவள் தான் முழித்து கொண்டு இருந்தால்..

சரி நான் உங்கள பேர் சொல்லியே கூப்பிடுறன்.. ஆனா இப்போ இல்ல நாளைக்கு..

ஏன் நாளைக்கு தான் நல்ல நாளா என்றான் சிறு சலிப்போடு..

அதலாம் இல்ல நான் நாளைக்கு தான் கூப்பிடுவன் என்றால்.

சரி தூங்கு குட் நைட்.

குட் நைட்??

நல் இரவு..

ஓஹ் தூக்கத்துல நான் கெட்ட கனவுலாம் காணாம நிம்மதியா தூங்கறதுக்கு என்ன வாழ்த்துத்துறிங்களா??

நீ ரொம்ப அறிவாளி என்றான் கிண்டலாக..

ஆமா எங்க அம்மா கூட அப்படி தான் சொல்வாங்க என்றால் வெள்ளந்தியாக..

சிரித்து கொண்டான்..

சரி உங்களுக்கும் குட் நைட்..

சிறிது நேரத்திலே செவ்விதழ்கள் பிளந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தால் குழலி..

அவன் தான் உறக்கம் துளைத்து மனதில் ஏற்பட்ட குழப்பதுடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்..


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

11. கண்கள் நிறைந்த ஓவியமே !!
நேற்று போல் இன்றும் அதிகாலை விடியலிலே உறக்கம் தப்பியது குழலிக்கு..

ஆனால் எழுந்து என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.. உறக்கமும் வரவில்லை. வைகறையில் தான் உறங்கி போனான் விஷ்வா.

இருந்தும் குழலியிடம் அசைவு தெரிந்ததும் எழுந்து கொண்டான்.. என்ன இவ்ளோ சீக்கரம் எந்திரிச்சுட்ட என்றான் மெல்லிய குரலில்..

பூரணி பாப்பா உறங்கி கொண்டு இருக்கிறாலே..

தூக்கம் வரல என்றால் ஹஸ்கி வாய்சில்.

இன்னைக்கு சண்டே குழலி யாரும் இவ்ளோ சீக்கரம் எந்திரிக்க மாட்டாங்க இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு என்றான் அதே சுருதியில்..

குழலி அவனை பாவமாக பார்க்க..

பெருமூச்சு விட்டவன், குழந்தையை தூக்கி சுவற்றோரம் படுக்க வைத்துவிட்டு குழலியின் அருகில் வந்து கவிழ்ந்து படுத்து கொண்டான்..

நீ.. நீங்க ஏன் இங்க வந்து படுத்தீங்க என்றால் வார்த்தை வெளிவராமல்..

ப்ச்.. எனக்கு எந்த ஐடியாவும் இல்ல.. சரி சொல்லு என்ன எப்படி கூப்பிட போற என்றான் கண்களை திறவாமலே..

இரவெல்லாம் இதே யோசனையோடு இருந்து இருப்பான் போல..

குழலியும் அவன் முதலில் சொன்னதை விட்டுவிட்டு, இரண்டாவதாக கேட்ட கேள்வியில் சிரித்து விட்டால்..

இதையே தான் யோசிச்சிட்டு இருந்திங்களா என்றால் கிண்கினியாக சிரித்து..

ஒற்றை கண்ணை மட்டும் திறந்து தலையை உயர்த்தி பார்த்தான்.. ஆனால் எதுவும் பேசவில்லை..

அச்சோ அதிகமா பேசிட்டாமோ அவருக்கு கோவம் வந்துடுச்சோ என்று நினைத்தவள்..

மெதுவாக ஷிவா, ஷிவா என்று அவன் உருண்டு திரண்ட புஜங்களை தொட்டு உளுகினால்..

அவளின் ஷிவா என்ற புதுவிதமான அழைப்பில் உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..

இது என்ன டி ஷிவா? யாரையோ கூப்பிடுறா மாதிரி இருக்கு..

ஏன் உங்களுக்கு பிடிக்கலையா.?அவன் டி சொன்னதை கவனிக்கவில்லை.

அவன் வேண்டும் என்றே ஆமாம் என்று தலை அசைத்தான், கண்களை மூடி கொண்டே..

அப்போ நான் இனிமேல் உங்கள ஷிவானு தான் கூப்பிடுவன் என்று வீம்பு பிடித்தால்..

போடி என்று சொன்னவன் அவள் மூக்கை பிடித்து திருகிவிட்டான்.. ஆஹ் வலிக்குது என்று கொஞ்சம் சத்தம் போட்டு கத்திவிட அந்த பக்கம் பூரணி பாப்பா எழுந்து கொண்டால்..

விஷ்வா சட்டென்று திரும்பி படுத்து குழந்தையை தட்டி கொடுத்தான்.. குழந்தை அப்போதும் அழுகையை நிறுத்தாமல் தாயின் அரவணைப்பை தேடியது..

பாப்பாவை தூக்கி குடுங்க நான் அவளுக்கு பசி ஆத்துறன், அப்போ தான் அவ தூங்குவா என்றால்..

விஷ்வாவும் குழந்தையை தூக்கி குழலியிடம் கொடுத்தான்..

அவள் குழந்தையை தூக்கி கொண்டு கீழ் இறங்க எங்க தூக்கிட்டு போற என்றான் குரல் உயர்த்தி..

பால்கனிக்கு..

அறிவு இருக்கா உனக்கு? வெளில பனியா இருக்கு இப்போ போய் குழந்தைய வெளிய கொண்டு போற என்று கடிந்து கொள்ள..

அப்போ பாப்பாக்கு எங்க வச்சு பசி ஆத்துறது??

ஏன் என்ன பார்த்தா உனக்கு காம கொடூரன் மாதிரி இருக்கா? குழந்தை பால் குடிக்கறத தப்பா பார்ப்பன்னு தோணுதா என்றான்..

ஹய்யோ அப்படிலாம் இல்ல.. அம்மா தான் யார் முன்னாடியும் குழந்தைக்கு பால் தர கூடாதுனு சொன்னாங்க என்றால்..

குழந்தை வேறு ஒரு புறம் அழுது கொண்டிருக்க, அவன் அவளை முறைத்துவிட்டு திரும்பி படுத்து கொண்டான்..

அவளும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் மெத்தையில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டு குழந்தைக்கு பசியாற்றினால்.. விஷ்வா சிரித்து கொண்டே மீண்டும் உறங்கி போனான்..

பொழுது நன்றாக புலர்ந்ததும் குழந்தையை மெத்தையில் கிடத்தி விட்டு, தலையணைகளை குழந்தைக்கு பாதுகாப்பாக அடுக்கி வைத்துவிட்டு அவள் வேலைகளை கவனிக்க சென்றால்.

குளித்து முடித்து வந்தவள் கிழே சென்று சமைக்க தொடங்கினால்.. சூர்யாவும் அதற்குள் எழுந்து வர, குட் மார்னிங் அண்ணி என்றான்.. குட் மார்னிங் சூர்யா என்றவள் சூடாக காபி போட்டு அவன் கையில் கொடுத்தால்..

நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணவா அண்ணி? அதலாம் வேண்டாம் சூர்யா எனக்கு எல்லாமே சுலபமா முடிஞ்சிடும் என்றால்..

என்ன பிரேக் பாஸ்ட் அண்ணி?

பிரேக் பாஸ்ட்? என்றால் புரியாமல்..

காலை உணவு என்றான்..

பூரி உருளை மசாலா..செய்யல்லாம்னு இருக்கன்.. உங்களுக்கு ஏதாச்சும் தனியா வேணுமா??

இன்னைக்கு சண்டே அண்ணி, அதனால அசைவம் மட்டும் தான் சாப்பிடுவன் என்றவன்.. வழக்கமாக இறைச்சி வாங்கும் கடைக்கு அழைத்து தேவையானவற்றை ஆர்டர் செய்து இருந்தான்..

அதன் பின் இருவருமாக பேசி கொண்டே வேலையை பகிர்ந்து செய்தனர்..

சூர்யா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே என்றால் தயங்கி கொண்டே.

இப்படி தயங்குனீங்கனாதான் தப்பா நினைப்பன்..எதுவா இருந்தாலும் கேளுங்க அண்ணி என்றான்..

அத்தைக்கும் மாமாக்கும் எப்பவும் சேராதா? ரெண்டு பேரும் தனி தனி அறைல தங்கராங்க.. மாமா வெளிய போனதும் தான் அத்தை எந்துருச்சு வெளியவே வராங்க என்று கேட்டிருந்தால்..

ஆமா அண்ணி எங்க அம்மா அப்பா அப்படி தான்.. அப்பா மேல எந்த தப்பும் இல்ல..

எனக்கும் அண்ணாக்கும் மூணு வயசு தான் வித்யாசம்.. எனக்கு 5 வயசு இருக்க வரைக்கும் எல்லார் வீடு போல தான் எங்க வீட்லயும் இருந்துச்சு..அம்மா என்ன அண்ணாவலாம் நல்லா பார்த்துகிட்டாங்க.. நாங்க அப்போ எங்க சொந்த ஊர்ல இருந்தோம்..

அப்பா எப்போ எங்கள சென்னை கூட்டிட்டு வந்தாரோ அப்போவே எல்லாம் மாறிடுச்சு.. எங்க அப்பா எங்களுக்காக இந்த வீடு வாங்கி இருந்தாரு..

கிராமத்துல எங்க அம்மா தான் எல்லாம் வேலையும் பார்ப்பாங்க.. எங்க அம்மா எந்த கஷ்ட்டமும் பட கூடாதுனு வேலைக்கு ஆள் வச்சு அவங்கள வசதியா பார்த்துகிட்டாரு..

எங்க அம்மாவும் எங்கள ஸ்கூல்க்கு அனுப்பிட்டு, வீட்ல இருக்க வெறுப்பா இருக்குனு வெளிய போய்டுவாங்க.. அப்போ ஆராமிச்சது தான் இந்த லேடீஸ் கிளப் பப் எல்லாம்..

அப்படினா என்னை சூர்யா அங்க என்ன பண்ணுவாங்க என்றால்..

அவன் போனை எடுத்து சில வீடியோக்களை காட்டினான்.. அதில் பெண்கள் பப்பில் மது கோப்பையுடன் இருக்கும் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இருந்தன..

லேடீஸ் கிளப்னு சொல்லி தேவை இல்லாத ஆடம்பர செலவு, தேவை இல்லாத சாவகாசம் எல்லாம் எங்க அம்மாவை மாத்திடுச்சு..

எங்க அப்பாக்கு தெரிஞ்சு இதை எல்லாம் கண்டிக்கும் போது, அவங்க எல்லை தாண்டி போய்ட்டாங்க.. எங்க அப்பாவையும் மதிக்கறது இல்ல.. எங்களையும் ஒழுங்கா பாத்துக்குறது இல்ல..

எங்க அப்பா தான் தொழிலையும் பார்த்துகிட்டு எங்களையும் வளர்த்தாரு..எங்க அப்பாக்கு உதவியா பரமு அங்கிலும் எங்கள பார்த்துப்பாரு.. நாங்க லீவ் வந்துச்சுனா பரமு அங்கிள் வீட்டுக்கு போயிடுவோம் என்றான்.

டெய்லி சண்டை போட்டா எங்களோட மனசு பாதிக்கும்னு நெனச்சவறு எங்க அம்மாகிட்ட சண்டை போடுறத விட்டுட்டாரு..எங்க அம்மாக்கு பணம் குடுக்குறதையும் நிறுத்திட்டாரு..

பணம் குடுக்குறத நிறுத்துனதும் எங்க அம்மா விவாகரத்து வரைக்கும் போய்ட்டாங்க.. எங்க அப்பா அந்த காலத்து மனுஷன் இல்லையா பசங்களுக்கு அம்மா வேணும்னு நெனச்சவறு அவங்கள விவாகரத்து பண்ணாம எங்க அம்மா கேக்குற பணத்தை கொடுத்தாரு.. இப்போ வரைக்கும் ஒரு தொகைய எங்க அம்மாவோட பேங்க் அக்கௌன்ட்ல போட்டுக்கிட்டு தான் இருக்காரு..

உங்களுக்கு ஒன்னு தெரியுமா அண்ணி, அண்ணா எங்க அம்மாவை தூக்கி போட்டுட்டான்..ஆரம்பத்துல அம்மாவோட பாசத்துக்கு ரொம்ப ஏங்கினான், ஆனா ஒரு கட்டத்துல அவங்கள மதிக்கறதே இல்லை.. ஆனா என்னால அண்ணா மாதிரி எங்க அம்மாவை வெறுக்க முடியல, அவங்களோட பாசத்துக்கு ஏங்கிட்டு  இருக்கன் அண்ணி..

நான் நம்பறன் அண்ணி எங்க அம்மா ஒரு நாள் எல்லாத்தையும் விட்டுட்டு குடும்பம் தான் முக்கியம்னு வருவாங்கனு.. அயிரம் இருந்தால்லும் அவங்க எங்க அம்மால.. என்றவன் கண்கள் சிறிதாக கலங்கி இருந்தது..

ஆனா அம்மாக்கு அப்பா மேல தான் வெறுப்பே தவிர எங்க ரெண்டு பேர் மேலையும் இல்ல.. அப்போ அப்போ எங்க கிட்ட பாசமா பேச வருவாங்க.. அண்ணா தான் அவங்கள கண்டுக்காம போயிடுவான்.. என்னால அப்படி போக முடியாது நான் அவங்க கிட்ட கொஞ்சம் நேரம் பேசுவன் என்றான்.

இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம் என்று நினைத்த குழலி,  சரி விடுங்க சூர்யா உங்க நம்பிக்கை வீண் போகாது நீங்க நெனைச்சா மாதிரி அத்தை ஒரு நாள் மாறுவாங்க என்று அவனுக்கு ஆறுதல் அளித்து  பேச்சை மாற்றி இருந்தால்ல்..

பின் செக்யூரிட்டி சூர்யா ஆர்டர் செய்து இருந்த இறைச்சியை கொண்டு வந்து கொடுத்தார்.. அதில் மட்டன் குருமா செய்து இருந்தால்..

மதியத்திற்கு சிக்கன் பிரியாணி செய்யலாமா என்றால் குழலி.. நீங்க பிரியாணி செய்விங்களா அண்ணி என்றவனின் கண்கள் ஆர்வத்தோடு மின்னியது..

செய்வன் நல்லா இருக்கானு நீங்க சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க என்றால்..

ஓகே டன்..

எனக்கு கடை பிரியாணி சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சு அண்ணி.. கிட்டத்தட்ட எல்லா கடைலயும் பிரியாணி டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கு என்று அவன் ஆதங்க பட்டு கொண்டான்..

குழலி சமைத்து கொண்டிருக்க, விஷ்வா சமையல் அறையினுள் நுழைந்தான், கையில் பூரணி பாப்பா.

ம்மா.. ம்மா... என்ற அழைப்பில் திரும்பினால் குழலி.. ஹயீ குட்டி செல்லம் எழுந்துட்டிங்களா என்று கொஞ்சி கொண்டே காய்கறி அறிந்து கொண்டிருந்த கைகளை கழுவி கொண்டு குழந்தையை அல்லி கொண்டால்..

அம்முமா எப்போ எந்துருச்சிங்க என்றவள் அப்போது தான் குழந்தையை கவனித்தால்.. குளித்து முடித்து பவுடர் போட்டு, நேற்று வாங்கிய உடைகளில் ஒன்றை அழகாக அணிந்து இருந்தால்..

ஷிவா நீங்க தான் பாப்பாவ குளிக்க வச்சீங்களா என்றால் ஆச்சர்யமாக..

ஹ்ம்ம் ஆமா..

அச்சோ நீங்க ஏன் இதல்லாம் செஞ்சிகிட்டு என்ன கூப்பிட்டு இருக்கலாம்ல..

பரவால்ல எனக்கும் பாப்பா கூட டைம் ஸ்பென்ட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. என்று குழந்தையின் கன்னத்தை வலிக்காதவாறு கிள்ளி முத்தமிட்டான்..

நீங்களும் குளிச்சிட்டு வாங்க ஷிவா, பிரேக் பாஸ்ட் தயாராகிடுச்சு என்றால்.. விஷ்வா அவளை புருவம் சுருக்கி பார்க்க..

சூப்பர் அண்ணி நீங்க ஒருதடவ சொல்லி குடுத்தா கற்பூரம் மாதிரி புடிச்சுகிறீங்க என்று குழலிக்கு பாராட்டு பத்திரம் வசித்தான்..

ஆமா சூர்யா தான் கேட்டாரு பிரேக் பாஸ்ட் என்னனு.. அதல கத்துகிட்டன் என்றால்.

ஆமா அண்ணி அது என்ன ஷிவா? அண்ணா பேரு விஷ்வ கர்ணன் தான..

ஆமா அது நான் மட்டும் அவர கூப்பிடுற பேரு.. என்றால் சகஜமாக.. சூர்யா தான் ஓஹ் கதை அப்படி போகுதா என்று தாடியை தேய்த்து கொண்டே அண்ணனை பார்த்து ஒரு மார்க்கமாக சொன்னான்..

போடா என்று தம்பியின் வயிற்றில் குத்திவிட்டு.. நான் குளிச்சிட்டு வரன் குழலி என்று மீண்டும் மேலே சென்றான் விஷ்வா..

குழலி குழந்தைக்கு மட்டும் கல் தோசை வார்த்து அதில் லேசாக மட்டன் குருமா ஊற்றி அதிக அளவில் சுடு நீரை ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட்டால்.

குழந்தை உண்டு முடித்ததும் உணவு செரிக்க சூர்யாவுடன் விளையாடி கொண்டு இருந்தால்..

குழலி மீண்டும் சமையல் வேலையில் கவனமானால்..

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

12. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா மேலே சென்று இருக்க, சுந்தரம் அறையில் இருந்து வெளியே செல்ல தயாராகி வந்தார்..

வாங்க மாமா என்றவள் அவருக்காக கலக்கி வைத்த காஃபியை எடுத்து நீட்டினால்..

சூர்யா, என்னப்பா சண்டே அதுவும் எங்க கிளம்பிட்டிங்க??

குடோன்ல சரக்கு லாரி வந்து இருக்குப்பா, சரக்கு கொண்டு வந்தவருக்கும் நம்ம வொர்க்கர்ஸ்க்கும் ஏதோ பிரச்சனை, கைகலப்பு வரைக்கும் போயிடுச்சி.. அதான் போய் என்னனு பார்க்கலாம்னு கிளம்பறன் என்றார்..

குழலி கொடுத்த காஃபியை அவசர அவசரமாக பருகி கொண்டே, தந்தையின் முகத்தில் உள்ள தீவரத்தை கண்டு பிரச்சனை பெரியது என்று உணர்ந்தவன் நானும் வரன்பா வெயிட் பண்ணுங்க என்றவன் அறைக்கு சென்று உடை மாற்றி வந்தான்..

இருவரும் கிளம்ப தயாராக.. எதுவுமே சாப்பிடாம போறிங்களே என்றால் குழலி.. வந்து சாப்பிடுறன் குழலிமா.. நீ பத்திரமா இரு என்று குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு முன்னே நடந்தார் சுந்தரம்.. சூர்யாவும் அவருடன் நடந்தான் அண்ணியிடம் சொல்லிவிட்டு..

மதியம் பிரியாணி செய்வதற்கு அனைத்தையும் தயார் செய்து இருந்தால் குழலி, நேரத்தை பார்க்க 10 என்று காட்டியது..

சரி இன்னும் நேரம் இருக்கு, கொஞ்சம் நேரம் கழித்து செய்யலாம் என்று திரும்பியவள் முன்பு நின்று இருந்தார் மகேஷ்வரி..

குழலி சுதாரிக்கும் முன் அவள் முகத்தில் காபியை எடுத்து ஊற்றி இருந்தால்.. நல்ல வேலையாக காஃபி மிதமான சூடில் இருந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை.

குழலி கண்களை கசக்கி கொண்டு இருக்க, அவள் முடியை பிடித்து உளுக்கியவர் உனக்கு என் பையன் கேட்குதா?? எவ்ளோ தைரியம் இருந்தா என் பையன கல்யாணம் பண்ணி இருப்ப? என் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு சொத்து சொகத்தோட இந்த வீட்ட அலளாம்னு நெனச்சிட்டு இருக்கியா ஒண்ட வந்த பிடாரி.. என்று பேசி கொண்டே கன்னத்தில் அரைந்து இருந்தார்..

ஒழுங்கு மரியாதையா இந்த வீட்ட விட்டு சொல்லாம கொள்ளாம ஓடி போய்டு இல்ல கொன்னு தோட்டத்துல அடக்கம் பண்ணிடுவன் என்று மிரட்டினார்..

சுற்றி வேலையாட்கள் இருந்தனர் ஆனால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.. என்ன இருந்தாலும் முதலாளி ஆயிற்றே. வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களை வேடிக்கை பார்க்க வைத்தது..

பூரணி பாப்பா அன்னை அடிவாங்குவதை கண்டு வீறிட்டு அழுதால்.

குழந்தையின் சத்தம் அவர்களின் மேல் அறை வரை கேட்டது, விஷ்வா பதறி கொண்டு கிழே இறங்கி வந்தான்..

அதற்குள் ச்சீ சனியனை அழுவாத என்று குழந்தை தலையில் முரட்டு தனமாக கொட்டினால் மகேஷ்வரி.

குழந்தையை அடித்ததும் குழலிக்கு கோவம் வர, என் குழந்தை மேல கைவைக்குற வேலை வச்சுக்காதீங்க என்றால் கோவத்துடன்..

என்னடி எகிறிக்கிட்டு வர, என்று மகேஷ்வரி மீண்டும் அடிக்க கை ஒங்க, அதற்குள் அங்கு விஷ்வா வந்து இருந்தான். அவன் அம்மாவின் கையை பிடித்து வேகமாக உதறிவிட்டவன் குழலியை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான், அவள் முகத்தை தான் பார்த்தான் காபி கறையோடு ஒரு பக்க கன்னத்தில் விரல் அச்சு சிவந்து போய் இருந்தது..

உன்ன அடிச்சாங்களா என்றான்.. கோவத்தை அடக்கி கொண்டு, அவள் பதில் பேசாமல் தலை குனிய உன்கிட்ட தான் கேக்குறன் சொல்லு டி என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.. கண்களை மூடி கொண்டால்..

அவகிட்ட ஏன் கேக்குற விஷ்வா என்கிட்ட கேளு, நான் சொல்றன் எனக்கு ஒன்னும் பயம் இல்ல.. ஆமா நான் அவளை அடிச்சன் தான் இப்போ என்ன அதுக்கு என்றால் திமிரான தோரணையில்..

அழும் குழந்தையை தூக்கி குழலியிடம் கொடுத்து பாப்பாவ சமாதானம் பண்ணு என்றான்..

குழலி பூரணி பாப்பாவை சமாதானம் செய்து கொண்டே சோபாவில் வந்து அமர்ந்தால்.. குழந்தைக்கு பசியாற்ற..

விஷ்வா வேலையாட்களை ஒரு பார்வை பார்க்க இருந்த மூன்று பேரும் தோட்ட வேலையை கவனிக்க வெளியே சென்றனர்..

விஷ்வா தாயிடம் திரும்பி முறைத்தவன், என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல ஹான் நான் தான் அன்னைக்கே சொன்னன்ல உங்களுக்கு குழலிய புடிக்கலனா ஒதுங்கிகோங்கனு..

எவ்ளோ தைரியம் இருந்தா என் பொண்டாட்டி மேல கை வைப்பிங்க என்று உக்கிற மூர்த்தியாக நின்று இருந்தான்..

ஆமா பெரிய பொண்டாட்டி முதல் முதல்ல உனக்கு முந்தி விரிச்சு புள்ள பெத்தா மாதிரி பொண்டாட்டி புள்ளனு உருகுற..

அவளுக்கு நீ ரெண்டாவது புருஷன் நல்லா நியாபகம் வச்சுக்கோ என்று வார்த்தைகளை கேவலமாக பயன் படுத்தினால் மகேஷ்வரி..

அம்மா என்று குரல் உயர்த்தினான் விஷ்வா..

ஏன் கத்துற உண்மைய சொன்னா கோவம் வருதோ, நான் உன் மூஞ்சுக்கு நேரா சொல்லுறன் ஆனா தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாம் முதுகுக்கு பின்னாடி உன்ன அசிங்கமா பேசுவாங்க..

எப்படி உங்கள அசிங்கமா பேசுறாங்களே அந்த மாதிரியா என்றான் நறுக்கென்று..

விஷ்வா என்றால் மகேஷ்வரி, மகனை அடக்கும் விதமாக..

சும்மா காத்தாதீங்க, நீங்க முதல்ல ஒழுங்கா? நீங்க எந்த உரிமைல என் விஷயத்துல தலையிடறீங்க? உங்களுக்கு யார் அந்த உரிமைய கொடுத்தா?

உங்கள நான் அம்மான்னு கூப்படறதுனால ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க.. வேற வழி இல்லாம தான் அப்படி கூப்புட்றன்..

நீங்க ஒரு நல்ல அம்மாவும் கிடையாது, நல்ல மனைவியும் கிடையாது. தேவ இல்லாம என் விஷயத்துல தலையிடாதீங்க..

இனிமேல் என் பொண்டாட்டி மேல உங்க நிழல் கூட பட கூடாது..

ஏன் என் நிழல் உன் பொண்டாட்டி மேல பட்டா என்ன பண்ணுவ என்றால் அவன் கோவத்தை கிளரும் வகையாக?

ஓஹ் அவ்ளோ தைரியமா?? என்றவன், கோணலாக இதழ் வளைத்து எங்க அப்பா உங்களுக்கு தர பணத்தை தர விடாம பண்ணுவன்.. எங்களுக்காக தான் அப்பா உங்கள சகிச்சிக்கிட்டு இருக்காரு.. நாங்களே வேண்டாம்னு சொல்லிட்டா நீங்க இந்த வீட்ல இருக்க முடியாது.. குப்பையை தூங்கி விசுரா மாதிரி தூக்கி வீசிடுவாரு..

அப்பறம் உங்க நிலைமைய யோசிச்சு பாருங்க.. சொந்தகாரன் ஒருத்தன் உங்கள சேர்க்க மாட்டான்..

மகேஷ்வரியின் இருண்ட முகத்தை கண்டவன், மேற்கொண்டு எதுவும் பேசாமல், ஒழுங்கா இருந்துக்கோங்க.. என்று எச்சரித்தான்..

குழலியிடம் சென்றான் விஷ்வா அவள் குழந்தைக்கு பசியாற்றி கொண்டு இருந்தால்.. ஆனால் மகேஷ்வரியின் பேச்சை கேட்டு கொண்டிருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

குழலி என்று மென்மையாக அழைத்தான்.. பார்வையை அவள் முகத்தில் பதித்து..

அவள் நிமிர்ந்து பார்க்க வா மேல போலாம்..

வரன் என்றவள் உடையை சரி செய்து கொண்டு, குழந்தையை தூக்கி கொண்டு அவனுடன் நடந்தால்..

குழந்தையை அவனிடம் தர மறுத்தால்.

போகும் அவர்களையே வன்மத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் மகேஷ்வரி.

அறைக்கு அழைத்து வந்தவன், குழலியிடம் முகம் கழுவிட்டு வா  என்று கூறி, குழந்தையை வாங்கி மெத்தையில் அமர வைத்து விளையாடுவதற்கு பொம்மைகளை எடுத்து கொடுத்தான்.. குழந்தையை கொஞ்சி நெற்றி முத்தம் கொடுத்து விளையாடினான்..

குழலி முகம் கழுவி வெளியே வர, அவளையும் மெத்தையில் அமர வைத்து, ஒரு களிம்பை எடுத்து அவளது சிவந்து இருந்த கனத்தில் போட்டுவிட்டான்..

அவங்க காபி எடுத்து ஊத்துற வரைக்கும் நீ என்ன பண்ணிட்டு இருந்த? ஊத்துங்கனு காமிச்சிட்டு இருந்தியா என்றான்..

இல்ல அவங்க நான் திரும்புனதும் ஊத்திட்டாங்க என்றால்..

களிம்பை மென்மையாக பூசி அவள் பட்டு கன்னத்தில் இருந்து அவன் விரல்களை எடுக்க மனம் இல்லாமல் மென்மையாக தடவி கொண்டே இருந்தான்..

குழலி அதை உணரும் நிலையில் இல்லை.

எங்க அம்மா பேசினத்துக்கு நான் மன்னிப்பு கேக்குறன் குழலி... மன்னிச்சுடு அவங்க பேசுனது ரொம்ப தப்பு என்றான்..

அவன் முகத்தை பார்த்தவள் போதும், மருந்து போட்டது என்று அவன் கையை எடுத்துவிட்டால்..

அவனுக்கு உள்ளுக்குள் ஏமாற்றமாக இருந்தாலும் வெளியே கெத்தாக காட்டி கொண்டு அவள் பஞ்சு கன்னத்தில் இருந்து விரல்களை எடுத்தான்.

நீங்க சொல்லும் போது கூட எனக்கு சில விஷயம் புரியல ஷிவா, ஆனா உங்க அம்மாவோட வார்த்தைகள் நிதர்சனத்த எனக்கு புரிய வச்சிடுச்சு..

உங்க குடும்பம் ரொம்ப மரியாதையான குடும்பம்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க..

நீங்களும் பெரிய படிப்பு எல்லாம் படிச்சி பெரிய எடத்துல இருக்கீங்க.. ஒரு குழந்தையோட இருக்க என்ன நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது உங்களுக்கு எவ்ளோ தலை குனிவா இருக்கும்னு என்னால இப்போ தான் புரிஞ்சிக்க முடியுது.

குழலி போதும் நிறுத்து என்றான்.. அவள் பேச்சை கேட்க சகிக்காதவனாய்.

இல்ல நான் பேசிட்றன்..

அவங்க சொன்னா மாதிரி நீங்க எனக்கு ரெண்டாவது புருஷன் தான? இந்த குழந்தையும் உங்களுக்கு பிறந்த குழந்தை இல்லையே.. உங்களுக்கு என்ன தலையெழுத்து என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு..

வாய மூடுடி என்றவன் அவளை இழுத்து தன் வயிற்றோட கட்டி கொண்டான்..

அவள் ஏதோ பேச வாய் திறக்க வேண்டாம் எதுவும் பேசாத என்று கூறி அவள் தலையை தடவிவிட்டான்..

எங்க அம்மா பேசுனது தப்பு குழலி, நீ என்னடானா அதையே யோசிச்சிட்டு இருக்க?

நீயும் பாப்பாவும் என்னோட பொறுப்பு, அமைதியா கொஞ்சம் நேரம் தூங்கு என்றான்..

தூக்கம் வரல, மதியம் தூங்குற பழக்கம் இல்லை என்றால்.. இவ்வளவும் அவன் அனைப்பில் இருந்து விலகாமல் தான் பேசி கொண்டு இருந்தால். அவனும் அவளை விலக விடவில்லை.

அதலாம் தூக்கம் வரும் தூங்கு என்று அவளை மென்மையாக பிரித்து மெத்தையில் படுக்க வைத்தான்..

அவள் படுத்ததும் பூரணி பாப்பா விளையாடுவதை விட்டு அன்னையிடம் வர அவளையும் அனைத்து தன் மேல் போட்டு கொண்டால் குழலி.

ஒரு மணி நேரம் கழித்து எழுந்தவள் சூர்யா கேட்ட பிரியாணி செய்வதற்காக கிழே செல்ல போனால்..

அப்போது தான் எதிரில் உள்ள கண்ணாடியை பார்க்க உடையில் லேசான காபி கறை இருந்தது, கழுத்து வளைவும் பிசுபிசுப்பாக இருக்க உடையை எடுத்து கொண்டு குளியலறை சென்றவள் குளித்து முடித்து ஒரு குர்த்தா செட் அணிந்து இருந்தால்..

அதற்குள் விஷ்வாவும் பால்கனியில் இருந்து உள்ளே வந்து இருந்தான்..

அந்த உடையில் அவளை ஒரு கணம் ரசித்தவன், அவள் தன் பார்வையை கவனிக்கும் முன் கேட்டு இருந்தான் எங்க போற குழலி..

கீழ சமைக்க போறன் விஷ்வா நீங்களும் வாங்களன் என்றால்.. அவள் பயம் புரிந்தவன் உறங்கி கொண்டு இருந்த குழந்தையை கையில் தூக்கி கொண்டு அவளோடு நடந்தான்..

வேலையால் ஒருவரை அழைத்து அவர்கள் அறையில் உள்ள தொட்டிலை எடுத்து வர கூறினான்..
பின் அந்த தொட்டிலில் குழந்தையை கிடத்தி மெதுவாக ஆட்டிவிட்டு சிணுங்கிய குழந்தையை உறங்க வைத்தான்..

மகேஷ்வரி அறையை பார்க்க, அறை பூட்டி இருந்தது.. புரிந்து கொண்டான் வழக்கம் போல் வெளியே சென்றுவிட்டார் என..

குழலி கிட்சனில் சமைத்து கொண்டிருந்தாள்.. விஷ்வா அங்கு சென்று அவளுடன் பேசி கொண்டே அவள் சமைப்பதை பார்த்து கொண்டு சிறு சிறு உதவிகளை செய்தான்.. இடையிடயே குழந்தையின் மேல் ஒரு கண் வைக்கவும் தவறவில்லை.


 

 

 

 

13. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வெளியே சென்ற சூர்யாவும் சுந்தரமும் வீட்டிற்கு வர நேரம் மூன்றை கடந்தது..

விஷ்வா தந்தையை கண்டு கொள்ளவில்லை.. மகனின் பாரா முகம் சுந்தரதிற்கும் வலிக்க தான் செய்தது.. இருந்தும் நான் உனக்கு நல்லது தான் செய்தேன் என்று நினைத்து கொண்டவர், அமைதியாக மருமகளிடம் பேசினார்..

குழலிமா பசிக்குது என்றார்..

எல்லாம் ரெடியா இருக்கு மாமா நீங்க ஃபரெஷ் ஆகிட்டு வாங்க எடுத்து வைக்கிறேன்..அவரும் எழுந்து அறைக்கு சென்றார்.

விஷ்வாவும் சூர்யாவும் தான் தந்தையை வித்யாசமாக பார்த்தனர்..

ஒரு குழந்தை அன்னையிடம் கேட்குமே அம்மா பசிக்கிது என்று அது போல் தான் இருந்தது சுந்தரம் குழலியிடம் கேட்ட விதம்..

சூர்யாவு அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தான்..

குழலி தான் இரண்டு பேரையும் அமர வைத்து பரிமாறினால்..

நீ சாப்டியா மா??

நானும் அவரும் 1.30 மணிக்கே சாப்பிட்டோம் மாமா..

அங்கு வந்த விஷ்வா குழலி நான் பாப்பாவ கூட்டிட்டு வெளிய போயிட்டு வரன் என்றான்..

அவள் எங்கே என்று கேட்கவில்லை, பாப்பா எதற்கு உங்கள ஏதாச்சும் தொந்தரவு பண்ணுவா என்றால்..

என் பொண்ணு என்ன எந்த தொந்தரவும் பண்ண மாட்டா என்றவன் குழந்தையோடு காரை நோக்கி நடந்தான்..

அவனின் என் பொண்ணு என்ற வார்த்தையில் தான் மூவரும் அதிர்ச்சியாகி இருந்தனர்..மற்ற இருவரும் மகிழ்ச்சியாக இருக்க.. குழலிக்கு தான் அவனின் வார்த்தை அத்துணை இனிமையானதாக இருக்கவில்லை.

அண்ணி இன்னும் கொஞ்சம் பிரியாணி என்ற சூர்யாவின் குரலில் தான், கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினால் குழலி..

வரட்டும் பாத்துக்குறன் என்று மனதினுள் கருவினால்..

அண்ணி பிரியாணி செம டேஸ்ட் என்று வாய் நிறைய பாராட்டினான் விஷ்வா.. மூன்று முறை பிரியாணி வைத்து சாப்பிட்டான்..

ஆமா குழலி பிரியாணி அருமையா இருக்கு.. நான் கடைல வாங்கி சாப்பிட்டா அந்த கிண்ணம் பிரியாணிய முழுசா சாப்பிட முடியாம வச்சுடுவன். நீ சமைச்சத ரெண்டாவது ரவுண்டு போட்டு சாப்பிடுறன் என்று புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார்.

ஆபீஸ் டென்ஷன்னோட வீட்டுக்கு வந்தன்மா நீ சமைச்சத சாப்பிட்டு இருந்த டென்ஷன் எல்லாம் போன இடம் தெரியல.. என்று மாறி மாறி புகழ்ந்து கொண்டு இருந்தனர்..

விஷ்வா ஒரு மணி நேரம் கழித்து வீடு வந்து இருந்தான்..

குழலி அவர்கள் அறையில் துணிகளை மடித்து கொண்டு இருந்தால்..

விஷ்வாவை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டால்..

அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை விஷ்வா.. குழந்தையை கீழே இறக்கிவிட்டவன் குழலி அருகில் பீன் பேகை இழுத்து போட்டு அமர்ந்தான்..

அவள் கையில் இருந்த துணிகளை எடுத்து மெத்தையில் போட்டு, அவள் கையில் அணிந்து இருந்த வளையல்களை கழட்டி வைத்தான்.. பின் அவன் வாங்கி வந்து இருந்த இரண்டு தங்க வளையல்களை GRT பேகில் இருந்து எடுத்து அவள் கைகளுக்கு அணிவித்து விட்டான்.

ஷிவா எதுக்கு இதல்லாம் என்று அவள் அதிர்ச்சியாக கேட்க.. ஷ்ஷு எதுவும் பேசாத என்றவன்.. இது என்னோட கிஃப்ட் அப்படினா பரிசு என்றால்.. ஹ்ம்ம் ஆமா குழலி..

இப்போ எதுக்கு இந்த பரிசு?

நல்லா சமைச்ச கைக்கு தங்க வளையல் தான் போடணும்னு சொல்லுவாங்களே கேள்வி பட்டது இல்ல?? அதுக்கு தான் என்றான்..

ஹய்யோ என்ன ஷிவா.. இதுக்குலாம் யாராச்சும் தங்க வளையல் போடுவாங்களா? என்று அவள் வளையல்களை கழட்ட போக..

அவள் கைகளை பிடித்து கொண்டான்.. இது நான் உனக்கு முதல் முதல்ல வாங்கி குடுத்தது கழட்ட கூடாது என்றான் உரிமைபட்டவனாக..

ஷிவா என்று அவள் சிணுங்கல் கொள்ள.. ப்ளீஸ் குழலி உன் கைக்கு இந்த வளையல் அழகா இருக்கு போட்டுக்கோயன் என்றான்..

கொஞ்சம் யோசித்தவள், சரி ஓகே இப்போ போட்டுக்குறன் ஆனா உங்கள விட்டு போகும் போது திருப்பி குடுத்துடுவன் அப்போ நீங்க வாங்கிக்கணும் சரியா என்றால்..

சடுதியில் முகம் இருக்கியவன்.. அத அப்போ பார்த்துக்கலாம் இப்போ எதுக்கு இந்த பேச்சு..

பூரணி பாப்பா தத்தி தத்தி குழலியிடம் வர, அப்போது தான் பூரணி பாப்பாவை கவனித்தால்..

அவள் கழுத்திலும் ஒரு தங்க செயின், கையில் இரண்டு தங்க வளையல், காலில் தங்க கொலுசு என மின்னினால்..

ஹய்யோ ஷிவா பாப்பாக்கு எதுக்கு தங்கம் வாங்கி போட்டிங்க என்றால் கோவமாக..

இப்போ என்ன பிரச்சனை குழலி உனக்கு எனக்கு புடிச்சு இருக்கு வாங்கி போட்டு அழகு பார்த்தன்..

எங்க வீட்ல பெண் குழந்தையே இல்ல எனக்கு அப்பாக்கு தம்பிக்கு மூணு பேருக்கும் பெண் குழந்தைனா ரொம்ப பிடிக்கும் அதான் அந்த ஆசைய பூரணி பாப்பா மூலம் தீத்துக்குறோம், சும்மா நொய் நொய்னு கேள்வி கேக்காத என்று சிடு சிடுத்தான்..

சரி அத விடுங்க எதுக்கு பூரணிய உங்க குழந்தைனு சொன்னிங்க??

எப்போல இருந்து என் பொண்ணு உங்க பொண்ணா மாறுனா என்றால் கோவத்துடன்..

ஹய்யோ செம சூடா இருக்காளே ஏதாச்சும் சொல்லி சமாளி டா.. என்று யோசித்தான்..

என்ன எத சொல்றன்னு நியாபகம் வரலையா? நான் மாமாக்கு சாப்பாடு பரிமாறிட்டு இருந்தன்ல அப்போ சொன்னிங்களே.. என்று அவள் நினைவு படுத்த..

எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு.. அப்பாக்காக தான இந்த கல்யாணத்தை பண்ணிகிட்டன்.. அப்போ அவரு முன்னாடி நாம சந்தோஷமா இருக்கா மாதிரி நடிக்க வேண்டாமா என்றான்.. வார்த்தைகளில் அத்தனை தடுமாற்றம் விஷ்வாவிற்கு..

ஓஹ் அதுக்காக தான் அப்படி சொன்னிங்களா சரி என்றால்.. தெளிவான முகத்துடன்.. விஷ்வாவை விட குழலி தெளிவாக இருக்கிறாள் இந்த உறவை முறித்து கொள்ள..

ஷிவா இருந்தாலும் பாப்பாக்கு இந்த நகைலாம் வேண்டாமே.. ஏற்கனவே அத்தைக்கு எங்கள பிடிக்காது இதல, இந்த மாதிரி நகைலாம் வாங்கி குடுத்தா அவங்க கோவபடுவாங்க அது மட்டும் இல்ல, அவங்க சொன்னா மாதிரி நான் வசதி வாய்ப்புக்காக இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி ஆகிடும் என்றால்..

இங்க பாரு குழலி, மத்தவங்க பேசுறத நெனச்சு கவலை படாத.. எங்க அம்மாவை எப்பவும் திருத்த முடியாது.. அவங்க பேசுறத காதுல வாங்கிக்காத.. பாப்பா பாரு எவ்ளோ அழகா இருக்கானு அதை மட்டும் ரசிச்சிகோ வேற எதுவும் யோசிக்காத என்றவன் அங்கிருந்து சென்று இருந்தான்..

இதற்கு மேல் எப்படி மறுப்பது என்று குழலிக்கும் தெரியவில்லை..

சரி எப்படி இருந்தாலும் இங்க இருந்து போகும் போது எல்லாத்தையும் திருப்பி கொடுக்க தான போறோம் அதுவரைக்கும் போட்டு கொள்ளட்டும் என்று நினைத்தவள்.. கடவுளே அது வரைக்கும் நகைக்கு எந்த சேதாரமும் ஆக கூடாது, பத்திரமா திருப்பி குடுத்துடனும் என்று வேண்டி கொண்டால்.

பின் தங்கத்தில் மின்னிய பூரணி பாப்பாவை ஆசை தீர ரசித்து கொஞ்சி கொண்டு இருந்தால்.. அழகா இருக்க அம்மு குட்டி என்று கொஞ்சினால்.

கீழே சென்ற குழலி தன் மாமாவிடமும் சூர்யாவிடமும் அவளுக்கும் குழந்தைக்கும் வாங்கிய நகைகளை காட்டி மகிழ்ந்தால். ஆனால் உள்ளுக்குள் சின்ன நெருடல் அவர் நகை வாங்கி கொடுத்ததுக்கு என்னை தவறாக எண்ணி விடுவார்களோ என்று..

ஆனால் அதற்கு மாறாக பாருங்கபா நீங்க சொல்லிட்டு இருந்திங்க ஆனா உங்களுக்கு முன்னாடி அண்ணா முந்திக்கிட்டான் என்று கூறியிருந்தான் சூர்யா.. நான் வாங்கி குடுத்து இருந்தா கூட எனக்கு இவ்ளோ நிறைவா இருந்து இருக்காது சூர்யா, எனக்கு இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று மன நிறைவாக கூறினார் சுந்தரம்..

மகனின் மாற்றத்தில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு.

அந்த நாள் அப்படியே சென்றது..எப்போதும் போல் குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு உறங்கி போயினர்..

மறுநாள் குழலியுடன் சேர்ந்து விஷ்வாவும் விடியலில் எழுந்து இரண்டாம் தளத்தில் உள்ள ஜிம் அறைக்கு சென்று வழக்கம் போல் அவன் உடற்பயிற்சியை தொடர்ந்தான்..

குழலி குழந்தையை தூக்கி கொண்டு கிழே சென்றால்.. ஹாலில் உள்ள தொட்டிலில் கிடத்தி விட்டு வேலைகளை சத்தம் இல்லாமல் செய்து கொண்டு இருந்தால்.

8 மணி போல் அனைவரும் கீழே இறங்கி வந்தனர்.. சுந்தரம், சூர்யா சொந்த தொழில் செய்வதால் லேட்டாக தான் அலுவலகம் செல்வார்கள்..

விஷ்வா அலுவலகம் செல்ல ஃபார்மல் உடையில் தயாராகி கீழே வந்தான்.. காலை உணவை உண்டு முடித்தும் யாருக்காகவோ காத்து கொண்டு இருந்தான் விஷ்வா..

செக்யூரிட்டி வீட்டு வாசல் வரை வந்து அந்த நடுத்தர பெண்மணியை விட்டு சென்றார்..

அவருக்கு மரியாதை தரும் விதமாக விஷ்வா எழுந்து சென்று அவரை வரவேற்றான், வாங்க மேடம் என்று உள்ளே அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து, வேலை செய்யும் பெண்மணியிடம் அவருக்கு குடிக்க ஃபரெஷ் ஜூஸ் கொண்டு வர கூறினான்..

குழலி.. குழலி என்று மேலே அவர்கள் அறையை நோக்கி குரல் கொடுக்க..தோ வரன்ங்க என்றவள் குழந்தையோடு வந்து இருந்தால்..

அதற்குள் சுந்தரம் சூர்யா கூட அங்கு கூடி விட்டனர்..

மரியாதை நிமிர்த்தமாக இவர் என்னோட அப்பா கல்யாண சுந்தரம் இவர் என்னோட தம்பி சூர்யா என்று அறிமுக படுத்தினான்..மகேஷ்வரியும் அங்குதான் இருந்தார் ஆனால் அவரை கண்டு கொள்ளவில்லை விஷ்வா.

இவங்க மிஸ்ஸஸ் விஷ்வ கர்ணன் என்று மனைவியையும் அறிமுகம் செய்தான்..

குழலி முந்தி கொண்டு, ஹய்யோ என் பேரு விஷ்வ கர்ணன் இல்ல.. இவர் பேரு தான் விஷ்வ கர்ணன்.. என் பேரு பொற்குழலி என்றால் அழகாக சிரித்து..

அந்த புதிய பெண்மணி, அவர் உங்கள அவரோட மனைவினு அறிமுக படுத்தினார் பொற்குழலி என்று மென்மையாக எடுத்து கூறினார்..

ஓஹ் அப்படியா என்று அசடு வழிந்தால் குழலி..

பின் விஷ்வா, அனைவரிடமும் இவங்க தேவி.. குழலிக்கு இவங்கள டீச்சரா அப்பாய்ன்ட் பண்ணி இருக்கன்..

குழலி இவங்க தான் இனிமேல் உனக்கு டீச்சர்.. இவங்க சொல்லி குடுக்குறத கவனமா கத்துக்கணும்.. தினம் 4 ஹார்ஸ் உனக்கு கிளாஸ் எடுப்பாங்க என்றான்.. குழலி சரி என்பது போல் தலையை ஆட்டினால்..

பின் அவர்களுக்கான ஸ்டடி ரூமை காட்டினான் விஷ்வா..

மேம் ஒரு டென் மினிட்ஸ் குழலி கிட்ட பேசிட்டு அனுப்புறன் என்று அவளை மேலே அழைத்து சென்றான்..

தேவி டீச்சர் ஸ்டடி ரூமில் காத்திருந்தார்..

குழலியை மேலே அழைத்து சென்றவன், இங்க பாரு குழலி படிப்பு ரொம்ப முக்கியம்.. அதுவும் பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்..

தேவி டீச்சர் உனக்கு எல்லாமே நல்லா சொல்லி தருவாங்க.. நீ அவங்க கிட்ட எல்லாத்தையும் கத்துக்கோ.. உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேளு.. அவங்க சொல்லி குடுக்குற பாடத்துக்கு அப்பாற்பட்ட சந்தேகமா இருந்தாலும் தைரியமா கேளு.. கேள்வி கேட்க பயப்பட கூடாது புரியுதா என்றான்??

ஹ்ம் என்றால்..அவங்க எனக்கு கிளாஸ் எடுக்கும் போது பாப்பாவ யார் பார்த்துக்குவா என்றால்..

வீட்ல வேலை செய்றாங்கள சரசு அக்கா அவங்க பார்த்துப்பாங்க.. நான் ஆல்ரெடி அவங்க கிட்ட பேசிட்டன். அதனால நீ பூரணி பாப்பாவ நெனச்சு ஒர்ரி பண்ணாத படிப்புல கவனம் செலுத்து..

ஒர்ரி?

கவலை.. என்று அர்த்தம் சொன்னான்..

அப்ரோம் இன்னொரு விஷயம் அவங்க உனக்கு சொல்லி குடுக்குற லசன்ல இருந்து நான் உன்ன ஈவினிங் வந்து கேள்வி கேட்பன்.. அத மனசுல வச்சிட்டு படி என்றான்..

லசன்..? பாடம்..

ஹ்ம் என்றால்.. அவள் முகத்தை பார்க்க முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மாணவி போல் இருந்தால்..

என்ன நினைத்தானோ சட்டென்று அவளை அனைத்து கொண்டான்.. விஷ்வாவிற்கு அவன் பழகும் சமூகத்தில் இதெல்லாம் சாதாரண அனைப்பு தான்.. ஆனால் பெண்ணவளுக்கு அவ்வாறு இல்லையே..

சொல்ல போனால் இந்த மாதிரியான அனைப்பை அவள் இப்போது தான் உணர்கிறாள்.. அடி வயிற்றில் ஒரு குறுகுறுப்பு.. வியர்த்து கொட்டியது குழலிக்கு.. வாயில் இருந்து வார்த்தை வரவில்லை தேவர் மகன் படத்தில் ரேவதி சொல்வது காத்து தான் வந்தது..

அவள் நிலை உணராதவன் ஒழுங்கா படி, என்று நெற்றி முட்டி விடுவித்தான்..

குழலி சுயம் பெறவே சற்று நேரம் பிடித்தது.. அவர்கிட்ட இப்படிலாம் பண்ண கூடாதுனு சொல்லு டி என்று மனசாட்சி எடுத்துரைக்க மூளை அதை செயல்படுத்த மறுத்து சண்டி தனம் செய்தது..

விஷ்வா அவள் நிலையை கண்டு கொள்ளாமல் குழலியை கீழே அழைத்து சென்றான். பின் தேவியிடமும் சில விஷயங்களை பேசிவிட்டு..

சரசு கையில் இருந்த பூரணி பாப்பாவை ஆசை தீர கொஞ்சிவிட்டு அலுவலகம் சென்றான் விஷ்வா..

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

14. கண்கள் நிறைந்த ஓவியமே!!
தேவி அவரின் பாடத்தை தொடங்கி இருந்தார்.. "அ" வில் இருந்து தொடங்கி அனைத்து தமிழ் எழுத்துகளையும் சொல்லி கொடுத்தார்.. குழலிக்கு தமிழ் வார்த்தைகள் தப்பும் தவறுமாக எழுத படிக்க தெரியும் என்பதால்.. சில அடிப்படை தேர்வை வைத்து அவள் தமிழை எந்த அளவிற்கு கற்றுள்ளால் என்று தெரிந்து கொண்டார்..

அவளின் படிப்பறிவு சொல்லி கொள்ளும் அளவில் இல்லை என்றாலும், தேவி சொல்லி கொடுப்பதை வேகமாக கற்று கொள்ளும் திறன் அவளிடம் இருந்தது.. தேவி டீச்சர் அந்த விஷயத்தில் குழலியை மெச்சி கொண்டார்..

முதல் நாள் என்பதால் பாதி நேரம் குழலியை பேச விட்டு, அவளை உள்வாங்கி கொண்டார். அவளுக்கு அடிப்படை ஆங்கில வார்த்தைகள் சிலதை சொல்லி கொடுத்தார்.

பின் மதியம் ஆகவும், அவளுக்கு  வீட்டு பாடம் ஒன்றை கொடுத்து நாளைக்கு முடிக்குமாறு கூறி இருந்தார்..

குழலியின் வகுப்பு முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் விஷ்வாவிற்கு இன்றைய நாளை பற்றிய ஃபிட்பேக்கை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தார்.. இதையும் விஷ்வா தான் கூறியிருந்தான்.. அவள் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினான் விஷ்வா.

மாலை வீடு வந்த விஷ்வா, கண்டது என்னவோ நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்து படித்து கொண்டிருக்கும் குழலியை தான்..

பூரணி பாப்பா கையில் சில விளையாட்டு பொருட்களை கொடுத்து தன்னருகே அமர்த்தி கொண்டு அவள் மேலும் ஒரு கண்ணை கடன் கொடுத்து இருந்தால்..

விஷ்வா அவன் அறைக்கு செல்லாமல், பூரணி அருகிலே அமர்ந்து என்ன பண்றிங்க மேடம் என்றான்? ஹாய் ஷிவா குட் ஈவினிங் என்றால், பார்ராஹ் என்று அவளை மெச்சி கொண்டவன் குட் ஈவினிங் குழலி என்றான்..

மேம் கொஞ்சம் ஒர்க் குடுத்தாங்க அத தான் பண்ணிட்டு இருக்கன் என்றவள் நோட்டில் சிறத்தையாக தமிழ் உயிர்மெய் எழுத்துக்களான க,ங,ச,ஞவை புக்கை பார்த்து எழுதி கொண்டு இருந்தால்..

குழலி உன் கையெழுத்து அழகா இருக்கு.. தேன்க்யூ ஷிவா என்றால் சிரித்து கொண்டே..

பின் நினைவு வந்தவனாக அவளுக்கு பேகில் இருந்து ஒரு பார்சலை எடுத்து கொடுத்து, பிரித்து பார்க்கும் படி கூறினான்..

பூரணி பாப்பா விஷ்வாவின் கைகளுக்குள் அடக்கமாக வந்து அமர்ந்து கொண்டால்.. அச்சோ பட்டுக்குட்டி நான் இன்னும் ஃபரஷ் ஆகலையே தங்கம் என்று குழந்தையை அவர்களுக்கு நடுவில் அமர வைத்து கொண்டான்..

குழலி பார்சலை பிரித்து பார்க்க அதனுள் ஒரு புதிய மாடல் ஸ்மார்ட் போன் இருந்தது..

அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க இங்க வந்து ரெண்டு நாள் ஆச்சு ஆனா அம்மாகிட்ட இன்னும் பேசல.. உங்க கிட்ட போன் கேக்கலாம்னு பார்த்தா நீங்க எப்பவும் போன் யூஸ் பண்ணிட்டே இருப்பிங்க அதான் கேக்கல என்றால்..

சரி நான் இப்போ இதல அம்மா கிட்ட பேச முடியுமா என்றால்? அவள் சொல்வதை முழுதாக கேட்டவன், இனிமேல் எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம கேக்கனும் சரியா என்க அவளும் சம்மதமாக தலை அசைத்தால்..

வெயிட் பண்ணு சிம் போட்டுர்கன் ஆக்ட்டிவேட் ஆக 30 மினிட்ஸ் ஆகும் என்றவன்..

அவன் போனில் அவள் அன்னை நம்பரை கேட்டு டயல் செய்து கொடுத்தான்..

அம்மா என்றவள் குரல் கமரி இருந்தது.. குழலிமா என்ற அவள் அன்னையின் குரல் போனை தாண்டியும் வெளியே கேட்டது..

அம்மா எப்படி இருக்க என்ற நல விசாரிப்பில் தொடங்கி இப்போது அவள் கல்வி கற்பதுவரை கூறி முடித்தால்.. இடையில் பூரணி பாப்பாவின் காதிலும் போனை வைத்து அவள் அம்மாவை பேச சொன்னால், குழந்தை பாட்டியின் குரலை மட்டும் உன்னிப்பாக கேட்டது..

அம்மா அவரு எனக்கு புது போன் வாங்கி குடுத்து இருக்காரு நான் தினம் அதல கூப்புட்றன் நீ உன் போன்ல சார்ஜ் போட்டு வச்சுக்கோமா என்றால்..

சரி தங்கம் நீ பார்த்து சூதானமா இரு.. அங்க எல்லாரையும் அனுசரிச்சு இரு. வெல்லன்ன எந்திரிச்சிக்கோ.. சுந்தரம் அண்ணன் பரமு அண்ணன அவங்க மனைவி மக்கள் எல்லாரையும் கேட்டதா சொல்லுமா என்று கூறி ஒரு மணி நேரத்திற்கு பின் போனை வைத்தார்கள் அம்மாவும் பொண்ணும்..

அதற்குள் விஷ்வா மேலே சென்று ஃப்ரஷ் ஆகிவிட்டு வந்து அவள் பேசுவதை கன்னத்தில் கை வைத்து கேட்டு கொண்டிருந்தவன் அவள் போனை வைத்ததும் பெருமூச்சு விட்டான்..

ரொம்ப நேரம் பேசிட்டனா என்று அவனிடமே கேட்டு அசடு வழிந்தால்..

மூக்கை பிடித்து திருகி, சிரித்து கொண்டே இடவலமாக தலை ஆட்டினான் விஷ்வா.. ஏனோ அவளிடம் இப்படி கொஞ்சி விளையாட பிடித்திருக்கிறது..

நேரம் எட்டை நெருங்க சுந்தரம் வீட்டிற்கு வந்து இருந்தார்.. சூர்யா சில நேரங்களில் இரவு வீட்டிற்கு வர நள்ளிரவை நெருங்கும்.. அதை குழலியிடமும் கூறி இருக்க சரி என்று அவனுக்கு தனியாக உணவை ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்து பத்திர படுத்தினால்..

மகேஷ்வரி குழலி சமைத்த உணவை உண்பது இல்லை.. அதனால் அவருக்கு வேலையாட்கள் உணவை எடுத்து வைத்து விடுவர்..

கணவனையும் மாமனாரையும் அமர வைத்து உணவு பரிமாறி அவர்கள் வயிற்றை நிரப்பினால்..

முன்பு எல்லாம் விஷ்வா வெளியில் தான் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவான்..

வேலையாட்கள் கடமைக்கே என சமைக்கும் உணவில் அவன் நா எந்த ருசியையும் உணர்ந்தது இல்லை.. சூர்யாவும் அப்படி தான்..

சுந்தரமிற்கு வெளி உணவு ஆகாது என்பதால் அவர் மட்டும் விதியே என நொந்து கொண்டு வேலையாட்கள் சமைப்பதை உண்டு கொள்வார்..

ஆனால் இப்போது குழலி சமையலுக்கு மூன்று பேருமே அடிமை ஆகிவிட்டனர் என்பது தான் உண்மை..

அவள் அறுசுவையில் சமைப்பதை விட, இப்படி அருகில் இருந்து அன்போடு உபசரித்து பார்த்து பார்த்து கவனிக்கும் விதம் நெஞ்சம் நிறைந்து தான் போகிறது தந்தை மகன்களுக்கு..

விஷ்வா மனதில் ஒரு நிமிடம் மயூரி வந்து சென்றால்.. அவளும் இந்த மாதிரி சமைச்சு பரிமாறுவால என்ற மூளையின் கேள்விக்கு மனம் கிழிப்பா என்று பதில் கொடுத்தது..

மயூரிய நீ குழலி கூட கம்பர் பண்றதே தப்பு என்று மனம் எடுத்துரைக்க.. அதோடு வேறு எதுவும் சிந்திக்காமல் அமைதியாக உண்ண தொடங்கினான் விஷ்வா.

பூரணி பாப்பாவிற்கு 1 இட்லியில் கொஞ்சமாக பருப்புவிட்டு வெளியே அழைத்து சென்று நிலா கதை கூறி ஊட்டி முடித்தால்.

ஏன் பாப்பாக்கு ஒரு இட்லி குடுக்குற இன்னொரு இட்லி வச்சு ஊட்டு என்று சொல்லி கொண்டே அங்கு வந்து இருந்தான் விஷ்வா..

இல்ல ஷிவா நீங்க வர கொஞ்சம் நேரம் முன்னாடி தான் பாப்பாக்கு பழம்லாம் கட் பண்ணி குடுத்தன்..அதான் ஒரு இட்லி அதுவும் இல்லாம அவளுக்கு பசிச்சா நான் பால் குடுத்துடுவன் என்றால்..

சரி என்பதோடு முடித்து கொண்டான் விஷ்வா..

இன்னைக்கு கிளாஸ் எப்படி போச்சு குழலி என்று கேட்டவன் அங்குள்ள கல் இருக்கையில் அமர்ந்து அவளையும் அமர கூறினான்..

நல்லா போச்சு ஷிவா, மேம் நல்லா சொல்லி குடுக்குறாங்க என்றவள் இன்று அவள் கற்று கொண்ட அனைத்தையும் கூறியிருந்தால்..

ஹ்ம்ம் ஓகே, அப்பறம் இனிமேல் டெய்லி ஈவினிங் உனக்கு நடத்துன பாடத்துல இருந்து நான் சில கொஸ்டின்ஸ் கேப்பன், சரியா பதில் சொன்னா உனக்கு சின்ன சின்ன கிஃப்ட்ஸ் தருவன், தப்பா பதில் சொன்னா பனிஷ்மென்ட் தருவன் என்றான்..

பனிஷ்மென்ட்??

தண்டனை..

அச்சோ..

பனிஷ்மென்ட் வேண்டாம்ல அப்போ ஒழுங்கா படி என்றவன் பாப்பாவை தூக்கி கொண்டு உள்ளே சென்றுவிட்டான்..

அன்றைய இரவு அழகாக கழிய, விடியும் விடியல் குழலிக்கு ஆர்வமாக இருந்தது... இன்று கற்க போகும் பாடத்தை நினைத்து...

அவள் ஆர்வதிற்கு குறைவில்லாமல் வகுப்புகள் நடந்தது.. அன்றைய மாலை சுந்தரமும், சூர்யாவும் முன்னதாகவே வீடு வந்து சேர்ந்து இருந்தனர்.. எல்லாம் காரணமாகத்தான்..

குழலி என் நண்பன் பரமா வர போறான் மா என்றவரின் குரலில் அத்தனை உற்சாகம்..

ஓஹ் அதான் சீக்கரம் வந்துட்டீங்களா, சூப்பர் மாமா என்றவள் வருபவருக்காக மாலை சிற்றுண்டியும் இரவு உணவையும் ஸ்பெஷல்லாக செய்து இருந்தால்..

பரமுவும் அவர் மனைவி சுசிலாவும் வந்து சேர்ந்து இருந்தனர், வழக்கமான உபசரிப்புகள் முடிய, குழலி அனைவருக்கும் மாலை சிற்றுண்டி கொண்டு வந்தால்..

அடடே வா மா மருமகளே என்று பரமும் சுசிலாவும் குழலியை அழைத்து அவர்களுக்கு நடுவில் அமர்த்தி கொண்டனர்..

சூர்யா அப்போது தான் பூரணி பாப்பாவை அவன் அறையில் இருந்து அழைத்து கொண்டு வந்தான். அம்மாவை சமைக்க விடாமல் குறும்பு செய்து கொண்டிருந்த பூரணி பாப்பாவை சூர்யா தான் அவன் அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு காட்டி கொண்டு இருந்தான்..

சுசிலா குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி விளையாட்டி காட்டி கொண்டு இருந்தார்.. பின் குழந்தைக்காக வாங்கி வந்த புது துணியும் விளையாட்டு பொருட்களையும் குழலியிடம் கொடுத்துவிட்டு, பாப்பாவை அவர்களிடமே வைத்து இருந்தனர்.

என்ன தான் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாலும், தம்பதிகள் இருவருக்கும் சூர்யாவை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் சங்கடப்பட்டனர்..

சொல்லு பரமா என்ன விஷயம், காரணம் இல்லாம நீ வீடு வரைக்கும் வர மாட்டியே என்றார்..

அவர் மனைவி சுசிலாவை பார்த்தவர்.. எல்லாம் ரஞ்சனி பற்றிய விஷயம் தான்..

கோவெர்மென்ட் வேலை கிடைச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவன்னு உறுதியா இருந்து கஷ்ட்டபட்டு படிச்சு, இப்போ வேலையும் வாங்கிட்டா.. அடுத்து கல்யாணம் தான நாங்க சூர்யாவ பத்தி அவகிட்ட இந்த முறையும் பேசினோம் முடியவே முடியாதுனு அடமா நிக்கறா சுந்தரம் என்ன பன்றதுனு தெரில..இதுக்கு அப்பறம் அவ மனசு மாறும்ன்ற நம்பிக்கையும் எனக்கு இல்ல என்றவர் சொல்லி முடிக்க சூர்யா முகம் இருண்டு போனது..

இப்போ ஒரு நல்ல சம்பந்தம் வந்து இருக்கு.. அவகிட்ட பேசுனோம் கல்யாணம் பண்ணிக்குறனு சொல்றாடா என்று வந்த விஷயத்தை பேசி முடித்தார்..

சுந்தரம் மகனின் முகத்தை பார்த்தார்.. அவரால் இந்த விஷயத்தில் எதுவுமே செய்ய முடியாதே.. அவரும் ஒரு முறை ரஞ்சனியிடம் மகன் அவள் மீது கொண்டுள்ள காதலை பற்றி கூறி மகனுக்காக பேசினார்..

ப்ளீஸ் அங்கிள் என்னால உங்க பையன திருமனம் செய்து கொள்ள முடியாது.. தயவு செய்து என்னை கட்டாய படுத்தாதிர்கள் என்று கூறிவிட்டால்.

சூர்யாவும் அவன் காதலை அவளுக்கு புரிய வைக்க தலை கீழ் நின்று தண்ணீர் குடித்துவிட்டான்.. இருந்தும் மனம் இறங்குவாதக இல்லை ரஞ்சனி..

ஒரு முறை சூர்யா அவளிடம் கட்டாயபடுத்தி, அவன் காதலை மறுப்பதற்கான காரணமும் கேட்டான், அவள் கூறும் காரணம் ஒன்று தான், என்னால் உங்க அம்மா இருக்கும் வீட்டிற்கு மருமகளாக வர முடியாது சூர்யா.. நம்ம பேமிலி ப்ரன்ட்ஸ்ஸா இருக்கருதே உங்க அம்மாவுக்கு பிடிக்கல.. எங்க குடும்பத்தை அவ்வளவு கேவலமா பாக்குறாங்க இதல நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்தா என்ன நிம்மதியா வாழ விட மாட்டாங்க..

ப்ளீஸ் சூர்யா நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு.. என்ன கல்யாணம் பண்ணி குடுக்குற வீட்டுக்கு எங்க அம்மா அப்பா சந்தோஷமா என்ன வந்து பார்த்துட்டு நிம்மதியா திரும்பி போகனும்..ஆனா உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா சத்தியமா அது நடக்காது..

அது மட்டும் இல்ல, எனக்கு நிம்மதியான கல்யாண வாழ்க்கை வேணும்.. உங்க அம்மாகிட்ட அந்த வாழ்க்கை எனக்கு கிடைக்காது என்றால் உறுதியான குரலில்..

ரஞ்சி, நீ சொல்றது சரிதான் நாம  வேணும்னா கல்யாணத்துக்கு அப்பறம் தனியா இருக்கலாம்  எங்க அப்பா நான் சொன்னா புரிஞ்சிக்குவாரு என்றான்.. எப்படியாவது அவள் காதலை பெற்றுவிடும் நோக்கில்..

உங்களுக்கு தெரியாது சூர்யா, சின்ன வயசுல இருந்து நான் தனியா இருந்து ரொம்ப வெறுத்து போய்ட்டன்.. என் ஃபீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க கூட ஆள் இருக்காது.. எப்பவும் தனிமை தான்.. சிங்கள் சைல்ட்கிட்ட கேட்டு பாருங்க, அவங்க வலிய சொல்லுவாங்க..

கல்யாணத்துக்கு அப்பறமும் எனக்கு இந்த தனிமையான வாழ்க்கை வேண்டாம், எனக்கு கூட்டு குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை..

ப்ளீஸ் சூர்யா இதுக்கு அப்பறம் என்ன  கட்டாய படுத்தாதீங்க, என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று உறுதியாக சூர்யாவின் காதலை மறுத்துவிட்டால் ரஞ்சனி..

அவனாலும் அதற்குமேல் எதுவும் செய்ய முடியவில்லை.. இனி விதி படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டான்..

இப்போது அவளின் அம்மா அப்பா அவளுக்கு வரன் பார்த்து வந்து நிற்க, காதல் கொண்ட மனம் உள்ளுக்குள் குமுறியது..

மாமா உங்க பொண்ணுக்கு புடிச்ச மாதிரியே இந்த கல்யாணத்த நடத்துங்க, ரஞ்சனி சந்தோஷம் தான் முக்கியம் என்றான் அவன் வலியை மறைத்து கொண்டு..

அங்குள்ள அனைவருக்கும் அவன் மனம் புரிந்தது.. இருந்தும் ரஞ்சனியின் சம்மதம் தானே முக்கியம் என்று நினைத்தவர்கள், கல்யாண விஷயத்தை பற்றி பேசிவிட்டு புறப்பட தயாராகினர்..

விடுவாளா குழலி வந்தவர்களோடு தன் மாமா மற்றும் மைத்துனரையும் அமர வைத்து சாப்பிட வைத்து விட்டால்.

விஷ்வா அவர்கள் கிளம்பும் நேரம் தான் வீடு வந்து சேர்ந்தனர்.. அவனும் அவர்களை கண்டு சந்தோஷமாக வரவேற்று நலம் விசாரித்தான்.. அவனுக்கு பரமானந்தம் மேல் எந்த கோவமும் இல்லை.. பின் அவர்கள் வந்த காரணம் அறிந்தவன் சூர்யாவின் முகத்தை தான் பார்த்தான்..


 

 

 

 

 

 

 

 

15. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அன்று இரவு போல் விஷ்வாவிடம் சூர்யா ரஞ்சனியை விரும்புவதை பற்றி கேட்டு தெரிந்து கொண்டால் குழலி.

அவங்கள எப்படியாச்சும் சேர்த்து வைக்கலாம்ல என்று குழலி கேட்க? காதல கட்டாய படுத்தி வரவைக்க முடியாது குழலி.. அது தான வரனும்.

ரஞ்சனிக்கு சூர்யாமேல எந்த விருப்பமும் இல்லை.. அப்படி இருந்து இருந்தா அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்க மாட்டா.. விடு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..

சூர்யாவும் அவன் அறையின் பால்கனியில் நின்று யோசித்து கொண்டு இருந்தான், என்னோட காதல் அவளை கொஞ்சம் கூட பாதிக்கல..என்ன வேண்டாம்னு சொன்னவ எனக்கும் வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தான்.. இரண்டு வருடமாக காதலிக்கிறான் அவ்வளவு எளிதில் அவளை மறக்க முடியுமா?

நாட்கள் அழகாக சென்றது ஒரு புறம் ரஞ்சனி வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்..

குழலியும் படிப்பில் கவனம் செலுத்தினால், இதன் இடையில் மயூரி ஒரு புறம் விஷ்வாவை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..

விஷ்வா மயூரியிடம் ஒன்ற முடியாமல் தவித்தான்.. வேலை இருக்கு என்று அவளை தவிர்த்து கொண்டிருந்தான்..

மயூரிக்கு விஷ்வா வீட்டில் நடப்பவை அனைத்தையும் விரல் நுனியில் இருந்தது..அவன் வீட்டில் வைத்து இருக்கும் ஆள் மூலம் தெரிந்து கொள்கிறாள், குழலி படிப்பது முதற்கொண்டு.

சூர்யா முதல் போல் கலகலப்பது இல்லை.. வேலை வேலை என்று வேலையில் மூழ்குகிறான்..ரஞ்சினியை மறப்பதற்கு.

இந்த நிலையில் தான் ரஞ்சனியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைப்பு விடுத்தனர் பரமுவும், சுசிலாவும்.. விஷ்வா வர மாட்டான் என்று நினைத்து இருக்க.. அனைவருக்கும் முன்பு அவன் தயாராகி நின்றான்..

நிச்சயம் பரமானந்தம் வீட்டில் தான் நடந்தது.. ரஞ்சனியின் விரலை பிடித்து மணமகன் மோதிரம் அணிவிக்கையில் இங்கு ஒருவனின் கண்கள் கலங்கி இருந்தது..

இருந்தும் வலிக்க வலிக்க அந்த காட்சியை பார்த்து தன் மனதை இறுக்கி கொள்ள முயன்றான்..

நிச்சயம் நல்ல படியாக முடிய, அங்கிருந்து கிளம்பினான் சூர்யா..

குழலி நீ அப்பாவோட வா, நான் சூர்யா கூட கிளம்பறன் என்றவன் தம்பியின் காரில் அவன் புறப்படும் முன் ஏறி கொண்டான்..

அமைதியான பயணம் இருவருக்குமே வெறுப்பை தர, விஷ்வா சூர்யாவை தான் பார்த்து கொண்டு இருந்தான்..

அவன் பார்வையில் எரிச்சல் கண்டவன் இப்போ எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்க.. நான் ஒன்னும் குழலி இல்ல என்றான் கடுப்பாக..

அவன் எரிச்சல் மண்டிய குரலை கண்டு கொள்ளாமல்..

ரஞ்சனிய தூக்கிடலாமா என்றான்??

தூக்கிட்டு?

கோவில்ல வச்சு தாலிய கட்டி, வீட்டுக்கு கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்து என்று தம்பிக்கு ஐடியா கொடுத்தான், தம்பியின் மனவோட்டாத்தை அறிய வேண்டி..

என்ன ஆன்டி ஹீரோ ஆக சொல்றியா?

ஆனா என்ன தப்பு?

அண்ணன் மாதிரி பேசுடா.. வில்லன் மாதிரி பேசாத..

நீ இப்படி மூஞ்சிய கேவலமா வச்சிக்கிட்டு இருந்தா எனக்கு இப்படி தான் யோசிக்க தோணுது என்றான்..

மென்மையாக சிரித்தான்.. அண்ணன் தம்பி இருவருமே எப்போதும் பாசத்தை வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள்.. ஆனால் ஒருவருக்கொருவர் எப்போதும் விட்டு கொடுக்கவும் மாட்டார்கள்.. இருவருக்குள் இருக்கும் புரிதலும் அதிகம்.

விடு விஷ்வா, நடக்கறது தான் நடக்கும்.. பாத்துக்கலாம் என்றான்..

இப்போ எங்க போற??

நான் பாண்டி வரைக்கும் போறன் நீ வீட்டுக்கு போ..

ஏன் சரக்கடிக்க போறியா?

ஹ்ம்ம் லைட்டா?

செருப்படி வாங்காத ஒழுங்கா வீட்டுக்கு வா..

நீ ஒழுங்கு மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணாத டா குடிகாரா..

ஹேய் நான் அக்கேஷனல் ட்ரின்கர் டா, என்க..

வாயில நல்லா வரும், மூடிக்கோ என்றான்..

இங்க பாரு உனக்கு சரகடிக்கணும்னு தோணுச்சுனா அடி, ஆனா ஒரு பொண்ணு விட்டு போனானுலாம் குடிக்காத.. அப்பறம் இதுவே ஹபிட் ஆகும்..

அவ ஒன்னும் யாரோ ஒரு பொண்ணு இல்ல.. நம்ம பரமு அங்கிள் பொண்ணு.. இன்னைக்கு நிச்சயம் ஆச்சு, அப்பறம் கல்யாணம், குழந்தை, சீமந்தம், காதுக்குத்துனு எவ்ளோவோ இருக்கு..

ஒவ்வொரு விஷயத்துக்கும் குடிச்சிட்டு இருப்பியா? அப்பாவ நெனச்சு பாரு என்றான்..

எப்பா டேய், நான் குடிக்கவே இல்ல தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணாத என்றான் சூர்யா..

பின் இருவருமாக வீடு வந்து சேர்ந்தனர்.. அவர்கள் வந்த இரண்டு மணி நேரம் கழித்து தான் பொற்குழலி குழந்தையோடு மாமனாருடன் வந்து சேர்ந்தால்..

மகேஷ்வரி அறையில் இருந்தே குழலியை கருவி கொண்டு இருந்தால்.. எல்லாரையும் மயக்கி வச்சு இருக்கா.. உனக்கு இருக்கு டி என்று வன்மத்தோடு முனுமுனுத்து கொண்டு, போகும் அவளையே முறைத்து கொண்டு கண்ணயர்ந்தால்.. அப்போதும் கணவனிடம் அனுசரணையாக பேச மனம் வரவில்லை அந்த மனைவிக்கு..

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது, சூர்யா உள்ளுக்குள் புழுங்கி கொண்டு இருந்தான்..

அன்று காலை அனைவரும் சாப்பிட அமர்ந்து இருக்க, என்ன அதிசயமோ அல்லது குழலியை வம்பு வளர்க்க நினைத்த என்னமோ மகேஷ்வரி அன்று நேரமே எழுந்து விட்டார்..

சூர்யா சாப்பிட வராமல் இருக்க, குழலி அறை கதவை தட்டி கொண்டிருந்தாள் அவனை சாப்பிடவருமாறு அழைக்க..

நீண்ட நேரம் தட்டியவளுக்கு, பதில் கொடுக்கும் வகையில் கதவை திறந்தான் சூர்யா..

சாப்பிட வாங்க சூர்யா.. நைட் கூட சாப்பிடாம படுத்திட்டிங்க போல.. ஹாட் பாக்ஸ்ல வச்ச ஃபுட் எல்லாம் அப்படியே இருந்துச்சு காலைல தான் எல்லாத்தையும் எடுத்து கொட்டுனன் என்று பேசி கொண்டு இருந்தால்..

ஏனோ இப்போது அண்ணியின் வள வள பேச்சு எரிச்சலை கொடுக்க.. இல்ல வேண்டாம் அண்ணி அப்பறம் சப்பிட்டுக்குறேன் என்றான்..

நேரத்துக்கு சாப்பிடுங்க சூர்யா.. நைட்ல இருந்து சாப்பிடலனா அல்சர் வருமாம் உங்க அண்ணன் தான் சொன்னாரு என்று அவள் பேசிக்கொண்டே போக..

ஹையோ அண்ணி வேண்டாம்னா விடுங்களன் எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றிங்க? எப்போ பார்த்தாலும் சோறு சோறுன்னு ச்சை, நிம்மதியே இல்ல இந்த வீட்ல.. என்று அவன் மன பாரம் மொத்தத்தையும் வாய் வார்த்தைகளினால் கொட்டி குழலியிடம் காண்பித்துவிட்டான்..

அவளுக்கு தான் சட்டென்று ஒரு மாதிரியாகி போனது. எப்போதும் அண்ணி அண்ணி என்று தன்னிடம் ஒரு சகோதரனை போல் பழகியவன் இன்று இப்படி முகத்தில் அரைந்தார் போல் பேசியதில் கண்கள் கூட கலங்கி போனது குழலிக்கு..

ஹாலில் உள்ள அனைவரும் சூர்யா பேசியதை கேட்டு கொண்டு தான் இருந்தனர்.. சுந்தரதிற்கும் சூர்யா மீது கோவம் வந்து விட்டது, விஷ்வாவும் ஏதோ பேச வர, அதற்குள் அனைவரையும் முந்தி கொண்டு மகேஷ்வரி பேசினால்..

ஹேய் அறிவு கேட்டவளே அவனுக்கு பசிச்சா அவனுக்கு வந்து சாப்பிட தெரியாத.. என்னமோ நீ தான் இத்தனை வருஷமா அவனை சோறு போட்டு வளர்த்தா மாதிரி பேசுற.. நீயே இங்க தண்டனை சோறு தான திங்கற என்று வார்த்தைகளினால் காயப்படுத்த..

மகேஷ்வரி என்று சுந்தரத்தின் குரல் ஓங்கி ஒலித்தது..

அதற்குள் விஷ்வா ஒரு புறம், அவ ஒன்னும் இங்க தண்டசோறு சாப்பிடல, என் பொண்டாட்டியும் என் குழந்தையும் என் காசுல தான் சாப்பிடுறாங்க தேவையில்லாம பேசுற வேல வச்சுக்காதீங்க என்றான்..

குழலி அழுது கொண்டே நின்றாள்.. சூர்யாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.. சாரி அண்ணி என்றான்.

நீ என்ன டா தப்பு பண்ண என் இவகிட்ட போய் சாரி கேக்குற, உன் அப்பாக்கும் அண்ணாக்கும் இல்லாத அக்கறை இவளுக்கு என்ன உன்மேல? உன்னயும் மயக்க தான் இந்த மாதிரிலாம் நாடகம் ஆடுறா என்றால்..

அம்மா என்று சூர்யா கத்த..

சுந்தரம் கோவத்தில் மகேஷ்வரியை அடிக்க பாய, இரு மகன்களும் தடுத்துவிட்டனர்..

அவர் அப்போதும் அடங்காமல், இப்படி எல்லாருக்கும் வக தொகையா ஆக்கி போட்டு அக்கறை இருக்கா மாதிரி நடிச்சு தான் இந்த வீட்டு ஆம்பளைங்கள மயக்கி வச்சு இருக்கா..

குழலியின் அழுகை வெடித்தது.. கதறி கொண்டு இருந்தவளை தன்னருகே இழுத்து கொண்ட விஷ்வா..

குழலி இது என்னோட ஆர்டர்.. இனிமேல் நீ யாரையும் சாப்பிட வாங்க, சாப்பிடுங்கனு சொல்லி கூப்பிட கூடாது.. யார் எப்படி போனாலும் நீ கவலை படாத.. யாருமேலையோ இருக்க கோவம் ஆற்றாமை எல்லாத்தையும் உன்மேல காற்றதுக்கு நீ ஒன்னும் அவங்க அடிமை இல்ல, என்று தம்பியை பார்த்து தான் சொன்னான் விஷ்வா..

தம்பியின் மீது அவ்வளவு கோவம்..

நினைத்தது நடந்த திருப்தியில் மகேஷ்வரி அவர் அறைக்கு சென்றுவிட்டார்.. சுந்தரம் மகனை முறைத்து விட்டு  சென்றார்..

சூர்யா, குழலியிடம் மன்னிப்பு கேட்க வர..

யார் எப்படியோ போகட்டும்.. வா, வந்து எனக்கு டிபன் எடுத்து வை, நீயும் வந்து சாப்பிடு உனக்கும் கிளாஸ்க்கு டைம் ஆகுது.. தேவி மேம் வந்துடுவாங்க என்று பேசி கொண்டே.. சூர்யாவை தவிர்த்துவிட்டு, குழலியை டைனிங் டேபிளில் அமர வைத்து அவளுக்கும் உணவு எடுத்து வைத்தவன், அவனும் உண்டு முடித்தான்..

ஆனால் குழலிக்கு தான் உணவு உள்ளே இறங்கமால் கண்ணில் கண்ணீர் உகுத்து கொண்டு இருந்தது..

இது வேலைக்கு ஆகாது என்று நினைத்த விஷ்வா, நாற்காலியை அவள் புறம் திருப்பி குழலி தட்டில் இருந்த இட்லியை பிட்டு அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அவள் உணவை வாயிலே வைத்து கொண்டிருக்க..சாப்பிடு குழலி, என் சம்பாத்தியத்துல தான் நீயும் குழந்தையும் சாப்பிடுறிங்க.. எதுவும் நினைக்காம சாப்பிடு என்றான்..

உங்க சம்பாதியத்துல சாப்பிட கூட எங்களுக்கு என்ன உரிமை இருக்கு.? இது தற்காலிக உறவுதான.

வாய மூடு டி, சும்மா தேவை இல்லாத விஷயத்தை பேசிகிட்டு..

இப்போ இந்த நிமிஷம் நான் உன் புருஷன் அது நிஜம் தான என்றான்.. அவள் அமைதியாக இருந்தால்.

சொல்லு டி, என்று அதட்ட..

ஹ்ம்ம்..

அப்போ உங்களுக்கு செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு.. இந்த வீட்ல இருக்கவோ சாப்பிடவோ எந்த தயக்கமும் உனக்கு வேண்டாம்..

என்றவன் கொஞ்சம் சிடு சிடுப்பாக, இட்லியை பிட்டு அவள் வாயில் திணித்தான்..

பொறுமையா ஊட்டுங்க.. என்று அவள் சிணுங்கல் கொள்ள..

எனக்கு இப்படி தான் ஊட்ட வரும் என்றவன் அடுத்த அடுத்த இட்லி தூண்டுகளை பொறுமையாக ஊட்டிவிட்டான்.. அவளை முறைத்து கொண்டே.

இங்கே விஷ்வா அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து இருந்தால் மயூரி..


 

 

 

 

 

 

 

 

 

 

 

16. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா குழலியை சமாதானம் செய்து விட்டு, அவள் மனநிலை மாறியதாக தோன்றிய பின் தான் அலுவலகம் செல்ல தயாரானான்..

அண்ணனிடம் சமாதானம் பேச வந்தான் சூர்யா, எதாச்சும் அசிங்கமா திட்டிட போறன் மரியாதையா போய்டு என்று ஒரே வார்த்தையில் ஆருயிர் தம்பியை தள்ளி நிறுத்தி அங்கிருந்து சென்றான் விஷ்வா.

குழலி அவள் வகுப்பிற்கு தயாராகி கீழே வர, அண்ணி என்று அழைத்தவன் குழலியின் முன்பு நின்றான்.

சாரி அண்ணி தெரியாம பேசிட்டன்,
குழலி பரவால்ல, என்மேல தான் தப்பு நான் தான் உங்கள தொந்தரவு பண்ணிட்டன் இனிமேல் அந்த மாதிரி நடக்காது என்றால் தெளிவான குரலில்..

இல்ல அது வந்து என சூர்யா பேசவர..

எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு கொஞ்சம் ரிவிஷன் பண்ணனும் என்றவள் சரசு அக்காவை அழைத்து பூரணி பாப்பாவை அவர்களிடம் கொடுத்து விட்டு ஸ்டடி ரூம் சென்றால்..

***

அலுவலகம் வந்த விஷ்வாவின் முன் வந்து பிரசன்னமாகினால் மயூரி..

முதலில் விஷ்வா புருவம் உயர்த்தினாலும், அவள் கழுத்தில் உள்ள ஐடி காரட்டை கண்டு தெரிந்து கொண்டான் ரிஜாயின் செய்து இருக்கிறாள் என்று..

ஒரு ஸ்நேகமான புன்னகை வீசியவன், சூப்பர் மயூரி அகைன் ரிஜாயின் பண்ணிட்டியா என்றான் நண்பர்களை போல்..

காதலியை கண்ட குதுகலமோ, காதல் பார்வையோ அவன் முகத்தில் இல்லை.. மைக்ரோஸ்கோப் வைத்து தேடினாலும் காண முடியாத ஒன்று.

ஆனாலும் மயூரி அவனுக்கும் சேர்த்தே முகத்தில் காதலை நிறையவிட்டால்.. எப்போது குழலி விஷ்வா வாழ்க்கையில் வந்தாலோ அப்போது இருந்தே அவர்களின் உறவில் இன்னும் தீவரத்தை காட்டினாள்..

விஷ்வா குழலிக்கு நகை வாங்கி கொடுத்தது, அவளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என அனைத்தையும் அறிந்து கொண்டவள் அதற்கு மேல் பொருக்க முடியாமல் இதோ விஷ்வா வேலை செய்யும் அலுவலகத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்து கொண்டால்..

விஷ்வா வீட்டில் நடந்த பிரச்சனையால் இரண்டு மணி நேரம் லேட்டாக வந்து இருந்தான்..

ரிஜாயின் பண்ணியிருக்கியா என்றான்..அவளிடம் கேட்க வேண்டுமே என்று தெரிந்த விஷயத்தை மீண்டும் கேட்டான்..

ஹ்ம்ம் ஆமா விஷ்வா திலீப்போட டீம் என்றால்..

தென் ஓகே ஆல் தே பெஸ்ட் மயூ, பிரேக்ல மீட் பண்ணலாம் என்றவன்  அங்குள்ள யாரையும் கண்டு கொள்ளாமல் அவன் கேபினிற்கு சென்றான் விஷ்வா.. மயூரியினால் வேலை நேரம் என்பதால் அவனை பின் தொடர முடியவில்லை..

உணவு இடைவேளையில் கேஃபி டேறியா சென்ற விஷ்வா பின்னால் சென்றால் மயூரி..அவன் இருகைக்கு எதிரே அமர்ந்தவள், ஏன் விஷ்வா என்ன அவொய்ட் பன்ற? நான் உனக்காக தான் இங்க ரிஜாயின் பண்ணன் தெரியுமா? உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு தான் உன்கிட்ட கூட நான் சொல்லல, ஆனா உனக்கு என்ன பார்த்த சந்தோஷம் கொஞ்சம் கூட இல்ல, என்று இன்ஸ்டன்ட் கண்ணீருடன் விஷ்வாவின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றால்..

விஷ்வாவிற்கு ஏனோ இம்முறை குற்ற உணர்வாக இருந்தது..

ஓவரா இமஜின் பண்ணிக்காத மயூ, வீட்ல ஒரு சின்ன ப்ரோப்லம் அதான் கொஞ்சம் மைண்ட் சரி இல்ல.. அதர்வைஸ் நீ இங்க அகைன் ஜாயின் பண்ணதுல எனக்கு ஹப்பி தான்..

சொல்ல போனா என்னால தான, நீ இந்த கம்பெனில இருந்து ரிசைன் பண்ணிட்டு போன, அந்த கில்ட் எனக்கு இருந்துச்சு.. இப்போ நீ மறுபடியும் இங்க வந்து ஜாயின் பண்ணதுல இப்போ எனக்கு ஓகே என்றான்.. சாதாரணமாக.

அப்பறம் இன்னொரு விஷயம் மயூ, இது ஆபீஸ் நாம இங்க வேலை செய்றோம், அதுக்கு தகுந்தா மாதிரி நடந்துக்கணும், நான் யாருக்கும் காட்சி பொருளா ஆக விரும்பல. நம்மளோட ரிலேஷன்ஷிப் எல்லாம் வெளிய மட்டும் தான்.. என்று கொஞ்சம் பொறுமையாக விளக்கினான் விஷ்வா..

சரி விஷ்வா நான் நீ சொல்றது எனக்கும் புரியுது, ஆனா நீ கொஞ்சம் நாளா என்ன கண்டுக்கவே இல்லையே, நான் கால் பண்ணாலும் எடுக்கவே இல்லையே விஷ்வா, ஏன் என்ன அவொய்ட் பண்ண என்ன பிடிக்கலையா உனக்கு??

அப்படிலாம் இல்ல மயூ, கொஞ்சம் பிஸி.. குழலி படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கா, தம்பி லவ் பண்ண ரஞ்சனிக்கு வேற ஒருத்தர் கூட மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு.. இதல உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல..

என்ன ஆச்சு விஷ்வா எல்லாம் ஓகே தான என்று பொய்யான அக்கறையோடு கேட்க.. ஹ்ம் இப்போ ஓகே..

சரி விடு இந்த டாபிக் இப்போ பேச வேண்டாம், வேற எதாச்சும் பேசுவோம் என்று இலகுவாக பேச்சை மாற்றினான் விஷ்வா..

அப்பறம் விஷ்வா குழலி என்ன பண்றா? அவளுக்கு உங்க வீடு எல்லாம் செட் ஆகிடுச்சா என்று அவன் வாய் மொழியாக குழலியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டால்.. அவன் மனதை படிக்க எண்ணி..

அவளுக்கு என்ன!! குக்கிங், ஸ்டடிஸ், பேபின்னு மேடம் இப்போல்லாம் ரொம்ப பிஸி ஆகிட்டாங்க.. சொல்ல போனா ஒரு நாளைக்கு 24 ஹார்ஸ் பத்தல அவங்களுக்கு என்று வேடிக்கையாக கூறினான்..

ஆனால் மயூரிக்கு தான் அவன் பேச்சில் தெரியும் குதுகலமும் கிண்டலும் கண்டு, உள்ளுக்குள் நெருடலாக இருந்தது..

இத்தனை இலகுவாக குழலியை பற்றி பேசுகிறான் என்றால், அவளுடன் அவ்வளவு நெருக்கமா என்று தோன்றியது..

அவள் விஷ்வா வீட்டில் வைத்து இருக்கும் வேலைக்கார பெண்ணிற்கு அவர்கள் அறைக்குள் நடப்பது எல்லாம் தெரிய வாய்ப்பில்லையே.. அதனால் மயூரிக்கும் விஷ்வா குழலியின் உறவை பற்றியும் தெரியவில்லை.

கண்ணெதிரே ஒருவள், கழுத்தில் மஞ்சள் கையிற்றுடன் உரிமை உள்ள மனைவியாக வளைய வந்தால், எப்பேர்ப்பட்ட ஆணும் சற்று தடுமாற தான் செய்வான் என்று மனசாட்சியும் அவளுக்கு எதிராக எடுத்துறைக்க, மயூரிக்கு சற்று பயம் தொற்றி கொண்டது.

அவளுக்கு விஷ்வாவின் மீதும் அவன் பணத்தின் மீதும் உள்ள மோகம் எப்போதும் போகாது.. அவளுக்கு விஷ்வா வேண்டும்.. எக்காரணத்தை கொண்டும் அழகும் ஆளுமையும் பணமும் நிறைந்த விஷ்வாவை அவள் யாருக்கும் விட்டு கொடுக்க தயாராக இல்லை..

பின் பேசிக்கொண்டே குழலி கொடுத்த மதிய உணவை மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தான் விஷ்வா, மயூரிக்கு கூட ருசி பார்க்க கொடுக்கவில்லை. ஓகே ஈவினிங் பார்க்கலாம் மயூ, என்றவன் அவளிடம் மென்னகை சிந்தி அங்கிருந்து சென்றான்..

இத இப்படியே விட கூடாது மயூ, எதாச்சும் பண்ணு.. எப்படியாச்சும் குழலி பேர இவன்கிட்ட டேமேஜ் பண்ணனும் என்றவள் மூளை வேகமாக சிந்தித்தது..

நினைத்தது போல் ஒரு மட்டமான யோசனையும் கிடைத்தது..

உடனே அவள் அந்த வீட்டில் வேலையும் அவள் விசுவாசிக்கி கால் செய்து சில உத்தரவுகளை பிறப்பித்தால்.. முதலில் அந்த பெண் பயந்தால் பின் அதிக பணம் தருவாதக கூற, மயூரி சொல்படி செய்ய சம்மதித்தால்..

விஷ்வாவிற்கு எப்போதும் அவன் வேலை தான் முதலில், அதன் காரணமாக தான் இந்த 27 வயதிலேயே டீம் மேனேஜராக பதவி உயர்வு பெற்றிருக்கிறான்..வேலை விஷயத்தில் யாருக்காகவும் காம்பரைமைஸ் செய்து கொள்ள மாட்டான்..

விஷ்வாவின் இந்த குணத்தை வைத்து தான் மயூரி காய்களை நகர்த்தி இருக்கிறாள்.

அதற்கு அவள் உபயோகித்து இருக்கும் பகடை காய் ஒன்றும் அறியாத சிறு குழந்தை பூரணி பாப்பா..

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

அன்று மாலை, வேலை முடியவும் மயூரி மீண்டும் விஷ்வாவுடன் கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு புறப்பட்டு சென்றால்..

இரவு, உணவிற்கு அவள் மாமனாரை மட்டும் சாப்பிட அழைத்தால் குழலி.. விஷ்வா அவளை முறைத்து கொண்டிருப்பது அறியாமல்.

இருவருமாக உணவு உண்டு கொண்டிருக்க, சூர்யாவும் சாப்பிட வந்தான்.. யாரும் அவனை கண்டு கொள்ளவில்லை.. அவனிடம் தாவ முயன்ற குழந்தையை குழலி தன் கைகளுக்குள் அடக்கி கொண்டு சூர்யா எடுத்து வைத்த தட்டில் உணவை நிரப்பினால்.

அண்ணி பாப்பாவ என்கிட்ட குடுங்க நான் அப்படியே அவளுக்கு ஊட்டிவிடுறன் என்றவனிடம் வேண்டாம் நீங்க சாப்பிடுங்க என்பதோடு முடித்து கொண்டால் குழலி..

குழலி அவனை தவிர்ப்பது புரியாமல் இருக்க அவன் ஒன்றும் பாலகன் இல்லையே..

திரும்பி அண்ணனை பார்க்க, போனில் குருஞ்செய்தியை தட்டி கொண்டே, சப்பாத்தியை சன்னா கிரேவியோடு தொட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான்..

அமைதியாக உண்டு முடித்தவர்கள், அவர்கள் அறைக்கு சென்றனர்.. குழலி என்றும் போல் அன்று நடத்திய பாடங்களை விஷ்வாவிடம் ஒப்பித்து கொண்டிருந்தாள்..

விஷ்வா அவளுக்கு தேர்வு வைக்கும் விதமாக சில வாக்கியங்களை கொடுத்து எழுத சொன்னான்..

எழுதி முடித்து அவனிடம் காட்ட, சில வாக்கியங்கள் சரியாக எழுதி இருந்தால். சில வாக்கியங்களில் எழுத்து பிழை இருந்தது..

அதில் விஷ்வா கொடுத்த ஒரு வாக்கியம்..

"மன்னன் சோலையில் புகுந்தான் இன்பம் கண்டான்"

ஆனால் குழலி எழுதி இருப்பது..

"மன்னன் சேலையில் புகுந்தான் இன்பம் கண்டான்" என எழுதி இருந்தால்

அதை கண்ட விஷவாவிற்கு தான் ஹய்யோ என்றானது..

ஹேய் இங்க வாடி என்று எழுதி முடித்துவிட்டு குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த குழலியை அழைத்தான்..

அச்சோ நிறைய தப்பா எழுதி இருக்கன் போல இந்த வாத்தி இப்போ என் தலையை வீங்க வைக்க போகுதே என்று அவன் தலையில் கொட்டுவதற்கு முன்பே தலையை பாவமாக தேய்த்து கொண்டு அவன் முன்பு போய் நின்றாள்..

அவளை பார்க்க சிரிப்பாக வந்தது விஷ்வாவிற்கு, இருந்தும் சிரிப்பை அடக்கி கொண்டான்..

என்ன எழுதி வச்சு இருக்க படி என்றான்.. நோட்டை அவளிடம் காட்டி அவள் தவறாக எழுதிய வக்கியத்தை சிகப்பு பேனாவால் வட்டமிட்டு..

அவளும் படித்தால் மன்னன் சோலையில் புகுந்தான் இன்பம் கண்டான் என்று..

இது சோ இல்ல சே.. எத்தன டைம் சொல்றது.. இங்க துணைகாள் வர கூடாது..

எப்போ இந்த விஷயத்தை திருத்திக்க போற என்று தலையில் ஒரு குட்டு வைத்தான்..

ஹய்யோ வலிக்கிது என்று அவள் கத்த..

இது வலிக்குதா பொய் சொல்லாத என்று மீண்டும் வலிக்காதவாரு ஒரு குட்டு வைத்தான்..

அடிக்காத ஷிவா தலைல குட்டினா வளர மாட்டாங்கலாம்.. இன்னும் குள்ளமா போய்டுவாங்கலாம் என்று புது கதை கூறினால்..

இத யார் சொன்னது என்று அவன் முறைத்து கொண்டே கேட்க, நான் தான் சொல்றன்.. நீங்களே யோசிச்சு பாருங்க, தலைல கொட்டிட்டே இருந்தா நான் அப்படியே அமிங்கி போய்ட மாட்டன் என்று அவனையே அவள் கேள்வியால் துளைக்க..

தலையில் கைவைத்து கொண்டான்.. நீ எப்போ இதல்லாம் யோசிச்ச என்றான் சோர்வாக, என் கனவுல இப்படி தான் வந்துச்சு நீங்க என்ன கொட்டி கொட்டி நான் குள்ளமா ஆகிட்டா மாதிரி என்றால்.. கனவுலாம் பலிக்கும் விஷ்வா. இனிமேல் என்ன கொட்டாதீங்க என்றால் மூக்கை சுருக்கி..

அந்த கதைக்கு அப்பறம் வருவோம்.. முதல்ல இப்படி தப்பா எழுத்துனதுக்கு பனிஷ்மென்ட் இருக்கு என்று யோசித்தான்..

ஷிவா ஒரு எழுத்து தான தப்பு ப்ளீஸ் மன்னிச்சு விற்றுங்க என்றால் பாவமாக முகத்தை வைத்து..

குழலி அடி வாங்க போற, ஒரு எழுத்து தப்பா எழுதனதுல அர்த்தமே மாறி இருக்கு.. தமிழ் எழுதும் போதும் படிக்கும் போதும் ரொம்ப கவனம் தேவை என்றான்..

பெருசா ஒன்னும் மாறல சோலைக்கு பதில் சேலைனு போட்டுடன் இதல என்னமோ வாக்யத்தோட அர்த்தமே மாறி போனா மாதிரி பேசறீங்க என்று அவனிடம் எதிர் வாதம் புரிந்தால்..

அர்த்தம் மாறி தான் இருக்கு.. இந்த வாக்கியத்தோட அர்த்தம் என்னனு உனக்கு தெரியலயா என்றான் கடுப்பாக..

வேண்டும் என்றே விளையாடுகிறாளோ என்று தான் தோன்றியது.. அது எப்படி 19 வயது பெண், அதுவும் திருமனம் ஆகி குழந்தை உள்ள பெண்ணிற்கு இந்த வாக்கியத்தின் அர்த்தம் அறியாமல் போகும் என்று நினைத்தான்..

என்ன அர்த்தம் மாருச்சு.. சேலைல புகுந்தா எப்படி இன்பம் காண முடியும்.. நான் தான் தப்பா எழுதிட்டன் அர்த்தம் எதுவும் மாறல என்று கள்ளம் இல்லாமல் கூறி இருந்தால் குழலி..

அவள் எதுவும் பாசங்கு செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்ட விஷ்வா.. அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்..

முதல் முறையாக அவள் கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்..

ஒன்றும் தெரியாத சிறு பெண்ணிற்கு எப்படி குழந்தை என்று யோசித்தான்..

அவன் யோசித்து கொண்டிருப்பதை கண்டு, தனக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று யோசிக்கிறார் போலும் என்று நினைத்தவள்...

தயவு செஞ்சு தோப்பளம் மட்டும் போட வைக்காதிங்க ஷிவா தொடை வலிக்குது, படி ஏறவே முடியல என்ற அவளின் புலம்பளில் தான் சுயம் பெற்றான்..

ஒன்னும் இல்ல போ போய் தூங்கு என்றான்.. ஏதோ சிந்தனையில் மூழ்கி ஹய்யா ஜாலி என்று குழந்தையை போல் குது களித்தவள் பூரணியை தூக்கி கொண்டு உறங்க வைக்க பால்கனி சென்றால்..

விஷ்வா நீண்ட நேரம் யோசனையில் இருந்தவன் பின், சிறிது மனமாற்றத்திற்கு அலுவலக வேலைகளை பார்க்க தொடங்கினான்..

தொடரும்..

 

 

 

 

 

 

17. கண்கள் நிறைந்த ஓவியமே!!
எப்போதும் போல் காலை வேலையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் குழலி..

பூரணி இன்று நல்ல உறக்கத்தில் இருக்கவே, அவர்கள் அறையிலே தலையணையின் உதவியோடு பாதுகப்பாக உறங்கி கொண்டு இருந்தால்.

மயூரி வேலைக்கு வைத்த ஆள் பாக்கியம், அவள் குழலி வேலையில் மும்மரமாக இருப்பதை கண்டு வேகமாக அவர்கள் அறைக்கு சென்றால்..

இரவு விஷ்வா வேலை செய்துவிட்டு லேப்டாப்பை அருகில் இருந்த மேஜைமீதே வைத்துவிட அதை திறந்து அதில் தண்ணீரை ஊற்றி கீழே வைத்துவிட்டால்..

பின் சுற்றி முற்றி பார்த்தவள் திறந்து இருந்த கப்போர்ட்டின் அருகே சென்று அதில் இருந்த சில கோப்புகளை எடுத்து கிழித்து, கசக்கி, கீழே கொட்டி இருந்த தண்ணீரில் நனைத்துவிட்டால்..

இது போதும் என்று நினைத்தவள் உறங்கி கொண்டு இருந்த குழந்தையை பதமாக எழுப்பி குழந்தையை கீழே அமர வைத்துவிட்டு வந்த தடம் தெரியாமல் அங்கிருந்து சென்றால் பாக்கியம்..

திடீர் என்று வந்து பார்ப்பவர்களுக்கு குழந்தை தான் அனைத்தையும் எடுத்து விளையாடி லேப்டாப்பை உடைத்து, கோப்புகளை கிழித்தது போல் தோன்றும்.

அப்படி தான் மேல் தளத்தில் உடற்பயிற்சி முடித்துவிட்டு அறைக்கு வந்த விஷ்வாவிற்கும் தோன்றியது..

அங்குள்ள நிலையை கண்டவனுக்கு, கோவம் கண்மன் தெரியாமல் வந்தது..

பாக்கியம் பூரணி பாப்பாவை லேப்டாப் அருகில் தான் அமரவைத்துவிட்டு சென்றால், ஆனால் பாப்பா விளையாட்டு பொருள் என நினைத்து லேப்டாப் மேல் ஏறி அமர்ந்து கொண்டால்..

கீபட் மேல் அமர்ந்து இருந்தவள், டிஸ்பிளேவை தட்டி கொண்டு இருந்தால்..

வேகமாக சென்றவன், குழந்தையை கீழே இறக்கி லேப்டாப்பை எடுத்து சோதித்து பார்த்தான்..

பிளாக் ஸ்க்ரீன் வந்து, டிஸ்பிளே வீரல் விட்டு இருந்தது.. கீபட் முழுவதும் நீர் சிந்தி இருக்க அவ்வளவு ஆத்திரம் அவனுக்குள், ஆத்திரத்தில் அறிவை இழந்தவன், அவன் கால்களை பிடித்து நின்று கொண்டிருந்த குழந்தையை முதுகில் சுளிர் என்று அடித்து விட்டான்..

அவன் வேகத்தில் நின்று கொண்டிருந்த குழந்தை தடுமாறி கிழே விழுந்தது..

அந்த நேரம் சரியாக வேலையை முடித்துவிட்டு குழந்தையை காண குழலியும் மேலே வந்தால்..

எந்த தாயால் தாங்கி கொள்ள முடியும் தன் குழந்தை அடி வாங்குவதை??

வேகமாக வந்தவள் குழந்தையை தூக்கி சமாதானம் செய்தால்.. முதுகை தடவி கொடுத்து சட்டையை நீக்கி பார்க்க பால்வண்ண முதுகு சிவந்து இருந்தது..

விஷ்வா எதையும் கண்டு கொள்ளவில்லை.. கீழே உள்ள காகிதங்களை எடுத்து பார்த்து தலையில் கை வைத்து கொண்டான்.. அனைத்தும் முக்கியமான கோப்புகள்.

அவன் நிலை உணராமல் குழலி பேசினால்.. என் குழந்தையை ஏன் அடிச்சீங்க? என்றால் விம்மலும் அழுகையுமாக..

ஏன் அடிச்சனா? பாரு டி நல்லா பாரு என் லேப்டாப் எப்படி இருக்குனு பாரு.. இதல்லாம் எவ்ளோ இம்பார்ட்டண்ட் பைல் தெரியுமா எல்லாத்தையும் எப்படி பண்ணி வச்சு இருக்கானு பாரு..

அவ குழந்தை தான அவளுக்கு என்ன தெரியும்? வேணும்னா செஞ்சா? இப்படி போட்டு அடிச்சு இருக்கீங்க?

இதுவரை அவளாகட்டும் அவள் அன்னை முத்தரசி ஆகட்டும் குழந்தையை அடித்ததே இல்லை.. இன்று விஷ்வா இப்படி அடித்து இருக்க தாய்மைக்கே உண்டான கோவம் வந்தது...

ஆமா அவளை அடிக்க கூடாது உன்ன தான் அடிச்சு இருக்கனும்.. எதுக்கு அவளை இங்க தனியா விட்டு போன?

அவ நல்லா தூங்கிட்டு இருந்தா அதான் விட்டு போனன்.. குழந்தை இருக்க வீடுன்னு தெரியுதுல நீங்க ஏன் எல்லாத்தையும் அவ கைக்கு படறா மாதிரி வச்சீங்க என்றால்..

என் வீட்ல என் ரூம்ல எத எங்க வைக்கணும்னு நீ எனக்கு சொல்லி தரியா என்றான்..ச்ச்சை எல்லாம் என் நேரம் வந்து சேர்ந்து இருக்கு பாரு என்று தலையில் அடித்து கொண்டான்..

குழலிக்கு அவன் வார்த்தைகளில் ஒரு மாதிரி ஆகி போனது..

நானா ஒன்னும் உங்க வாழ்க்கைல வரல, உங்க அப்பா தான் உங்கள கல்யாணம் பண்ணி வச்சு என் வாழ்க்கையும் கெடுத்தாரு என்றால்..

ஓஹ் அப்படி என்ன உங்க வாழ்க்கை கெட்டு போச்சு? இந்த வீட்டுக்கு வந்து நீயும் உன் பொண்ணும் நல்லா தான இருக்கிங்க? இல்ல அடிப்படை தேவைக்கு கூட கஷ்ட்டபடுறிங்களா என்றான்..

குழலிக்கு அவன் செய்ததை சொல்லி காட்டுவது போல் தோன்றியது.. இவர்கள் சண்டையில் குழந்தை இன்னும் அழுதது..

இவர்கள் பிரச்சனை யாருக்கும் தெரியவில்லை.. ஆனால் பாக்கியம் மட்டும் அந்த தளத்தில் தரைக்கு மாப் போட்டு கொண்டு உள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகளை கேட்டு கொண்டிருந்தாள்..

ஆமா நீங்க சொன்னா மாதிரி உங்க தயவுல தான் நானும் என் குழந்தையும் இந்த வீட்ல இருக்கோம் எங்களுக்கு வேற போக்கு இடமும் இல்ல..

எங்கள நீங்க பாத்துகுறதால என் குழந்தையை நீங்க அடிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல..

நீங்க ஒன்னும் எங்கள சும்மா பார்த்துக்கல ரெண்டு வருஷம் கழிச்சு எந்த பிரச்சனையும் பண்ணாம நான் உங்கள விட்டு போகணும்னு என்ன இப்போ நல்லா பாத்துக்குறீங்க.. சொல்ல போனா லஞ்சம் மாதிரி..

கடைசியா சொல்றன் என் குழந்தை மேல இனிமேல் கை வைக்காதீங்க.. அந்த உரிமை உங்களுக்கு இல்லை..

அவள் பேச்சில் விஷ்வாவிற்கு கோவம் தான் வந்தது, என்ன பேசுகிறாள் இவள்?? ரெண்டு வருஷம் கழிச்சு என்ன விட்டு போய்டுனு அன்னைக்கு ஒரு நாள் சொன்னன் அதுக்கு அப்பறம் அந்த வார்த்தை நான் சொல்லி இருப்பனா?

இவ எதிர்காலத்துக்கு நல்லதுன்னு தான படிக்க வைக்குறன்.. ஆனால் இவள் என்னை சுயநலவாதி போல் அல்லவா சித்தரித்து பேசுகிறாள்..
அனைத்திற்கும் மேலாக குழந்தை மேல் எந்த உரிமையும் தனக்கு இல்லை என்று கூறிவிட்டாலே.. பூரணி எங்களுக்கு பிறந்த குழந்தையாய் இருந்தாலும் நான் இப்படி தானே அவள் செய்ததிற்கு கோவம் கொண்டு இருப்பேன் என்று மனதுக்குள்ளே கேள்வியும் பதிலுமாக பேசி கொண்டான்.

அவள் பேசி முடித்ததும் அங்கிருந்து சென்று இருந்தால்.. குழந்தை இன்னும் அழுது கொண்டு தான் இருந்தது..

அனைத்தையும் மறந்து இருந்தவனுக்கு குழந்தையின் அழுகை ஏதோ போல் இருக்க, விஷ்வா ஒரு களிம்பை எடுத்து கொண்டு பால்கனி சென்றான்..

குழலி அங்கு குழந்தையை மடியில் கவிழ்த்து போட்டு முதுகில் தேங்காய் எண்ணையை மென்மையாக தடவி கொண்டு இருந்தால்.. அவள் கண்ணிலும் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது..

விஷ்வாவும் அப்போது தான் பூரணி பாப்பாவின் முதுகை கண்டான்.. இன்னும் சிவந்து தான் இருந்தது..மனம் கனத்து போனது, என்ன இருந்தாலும் குழந்தையை இப்படி அடித்து இருக்க கூடாது என்று எண்ணினான்.

விஷ்வா அவளை நெருங்க.. அவள் பேசுவது தெளிவாக கேட்டது.

எல்லாம் உங்க அப்பாவ சொல்லனும்.. உன்ன எனக்கு குடித்துட்டு அவர் செத்து போயிட்டாரு.. அவர் உயிரோட இருந்து இருந்தா இப்படி கண்டவங்க கைல அடிவாங்கி இருப்பியா நீ? இல்ல நான் தான் நீ அடிவாங்குறத பார்த்துகிட்டு ஒன்னும் பண்ண முடியாம இருந்து இருப்பனா என்று அழுது கொண்டே பேசினால்..

கேட்டு கொண்டிருந்த விஷ்வாவிற்கு ஏன் என்றே தெரியாமல் நெஞ்சம் கனத்தது..அதே நேரம் எல்லை இல்லா கோவமும் வந்தது.

எவ்வளவு நேரம் அங்கு நின்றானோ குழந்தை அழுது கொண்டே மீண்டும் உறங்கி விட்டது. குழலியின் மூக்கு உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து சென்றான் விஷ்வா..

குளித்து முடித்து வேகமாக, அலுவலகம் கிளம்பி சென்றான் விஷ்வா, சுந்தரம் மருமகளை எதிர்பார்த்து நிற்க ஐயா குழலி அம்மா மேல இருக்காங்க போய் கூட்டிட்டு வரவா என்றால் வேலை செய்யும் மற்றொரு பெண்.. வேண்டாம் என்றவர் டைனிங் டேபிள் மேல் இருந்த உணவை தட்டில் நிறப்பி உண்டு முடித்து அலுவலகம் கிளம்பி சென்றார்..

அலுவலகம் வந்த விஷ்வாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.. குழந்தையை அடித்துவிட்டதை நினைத்து இப்போதும் அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது..

குழந்தை அவன் காலை பிடித்து சிரித்து கொண்டு நின்றதும்.. இவன் அடித்ததும் கீழே விழுந்த காட்சியும் கண் முன் வந்து போனது...

கண்களை மூடி, இருக்கைகளால் முகத்தை அழுந்த தேய்த்து தலையை கோதி கொண்டான்..

நேரத்தை பார்த்தான்.. குழலிக்கு இது வகுப்பு நேரம் என்று யூகித்தவன், குழந்தையை பார்த்து கொள்ளும் சரசுவிற்கு லேண்ட்லைனில் அழைத்தான்.

அவர் தான் போன் எடுத்தார்.. நான் விஷ்வா பேசுறன் என்றான் எடுத்ததும், சொல்லுங்க தம்பி என்றார்..

குழலி கிளாஸ்க்கு போய்ட்டாங்களா என்றான்?? அவர்களுக்குள் எப்படி இருந்தாலும் மூன்றாம் மனிதரிடம் அவளை பற்றி பேசும் பொழுது மரியாதையாகவே பேசுவான்..

ஆமா தம்பி குழலிமா கிளாஸ்ல இருக்காங்க பூரணி பாப்பா என்கிட்ட இருக்கா என்றார்..

பாப்பா என்ன பன்றா? சாப்பிட்டால? உடம்பு நல்லா இருக்கா?? விளையாடுறால என்றான் அடுக்கடுக்கான கேள்விகளுடன்..

கொஞ்சம் நேரம் முன்னாடி தான் பாப்பா எந்திருச்சா தம்பி.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்னமோ அம்மா வேணும்னு அழுகுறா.. அதான் தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் காக்கா குருவிலாம் கட்டலாம்னு இருக்கன் தம்பி என்னும் போதே பூரணி பாப்பா மீண்டும் சிணுங்கினால்..

இங்கு ஒருவனுக்கு நெஞ்சம் பதைத்தது..சரி நீங்க கொஞ்சம் கவனமா பார்த்துகோங்க நான் இப்போ வரன் என்று போனில் கூறியவன் எப்போதோ கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பி இருந்தான்..

அனைத்தையும் பாக்யத்தின் வாயிலாக கேட்டு தெரிந்து கொண்ட மயூரி உற்சாகமாக விஷ்வாவை காண வர, அவள் எதிரில் வருவது கூட தெரியாமல் வேக வேகமாக சென்றான்..

விஷ்வா.. விஷ்வா.. என்று அழைத்து கொண்டே அவன் பின்னே சென்று அவனை நிறுத்தினால்..

எங்க போற விஷ்வா? உன்ன பார்க்க தான் வந்தன் வாங்க பிரேக் போலாம் என்றால்..

நின்று கூட பதில் சொல்லாதவன், எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு மயூரி ஐ அம் லீவிங் நொவ் என்றவன் வேக வேகமாக அங்கிருந்து சென்றான்..

அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான் விஷ்வா, அவன் வரும் நேரம் குழந்தை தோட்டத்தில் மர நிழலில் விளையாடி கொண்டு இருந்தால் சரசுவின் துணையோடு.

குழந்தை விஷ்வாவை பார்த்ததும் துள்ளி குதித்து உற்சாகத்தோடு அவனிடம் ஓடி வந்தது.

அந்த நிமிடம் விஷ்வாவிற்கு ஒரு மாதிரி தான் ஆகி போனது.. அவன் அடித்தும் குழந்தை எப்போதும் போல் அவனிடம் வருவதை நினைத்து பூரித்து போனான்..

அது தானே குழந்தைகளின் குணம், எதையும் மனதில் வைத்து கொள்ள தெரியாதே..

குழந்தையை ஆசையாக அல்லி கொண்டவன் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து, ஆடை விளக்கி முதுகை கண்டான்.. அவன் அடித்த தடம் எதுவும் இல்லை.. எப்போதும் போல் இருந்தது..

இருந்தும் மழலையிடம் சாரிமா அப்பா சாரி தெரியாம அடிச்சுட்டன் என்று மன்னிப்பு வேண்டியவன், குழந்தையின் பிஞ்சு கரங்களை எடுத்து அவன் முகத்தில் அவனே அடித்து கொண்டான்.. அப்பாவ அடிச்சிடு தங்கம்.. அப்பா மேல தப்பு இருக்கு அடிச்சிடு என்று அவன் பிடித்து இருந்த மழலையின் உள்ளங் கைகளுக்கு முத்தமிட்டு அவன் மன்னிப்பை கேட்டான்..

குழந்தை அதை எதையும் கண்டு கொள்ளவில்லை.. ப்பாஹ் ப்பாஹ் க்கீ க்கீ என்று மரத்தில் இருந்த குருவியை காண்பித்து குதுகளித்தது..

என் பொண்ணு குட்டிக்கு பர்ட்ஸ் வேணுமா என்று அவனும் மழலை மொழியில் கேட்க, பாப்பாவும் புரிந்தது போல் ஆம் என்று தலை அசைத்தால்..

பின் தூரத்தில் நின்று இருந்த சரசுவை அழைத்து வெளியே செல்கிறோம் குழலி கேட்டா சொல்லிடுங்க என்றவன், பாப்பாவை அனைத்தவாரு காரில் ஏற்றி கொண்டு சென்றான்..

அந்த ஏரியாவில் உள்ள பறவைகள் விற்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்..

அங்கு குழந்தைக்கு பிடிக்கும் வகையில் லவ் பர்ட்ஸ் 3 ஜோடிகளை வாங்கி கொண்டான்..

அருகில் இருந்த முயலை பார்த்து குழந்தை கை தட்டி சிரிக்க அதுவும் வேணுமா பாப்பாக்கு என்று கொஞ்சி இரண்டு ஜோடி வெள்ளை முயல் குட்டிகளை வாங்கி கொண்டான்..

பின்பு அந்த கடைக்காரரிடம் எப்படி பராமரிக்க வேண்டும் என்று அனைத்தையும் கேட்டு கொண்டவன் அனைத்தையும் எடுத்து கொண்டு கடையில் வேலை செய்யும் ஒரு பணியாளரை உதவிக்கு அழைத்து கொண்டு வீடு வந்து இருந்தான்..

இங்கே குழலி குழந்தையின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள் கோவத்துடன்..


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

18. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வெகு நேரமாக காத்து கொண்டிருந்த குழலி கேட்டினுள் விஷ்வா கார் நுழைந்ததும் ஓடி சென்றால்..

காரை விட்டு கீழே இறங்கிய விஷ்வாவிடம் சென்றவள் வேகமாக அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டால்..

காரில் இருந்து இறங்கிய கடைகார பையனிடம் பறவைகளுக்கு கூண்டு அமைக்க சரியான இடத்தை காட்டிவிட்டு குழலியை காண சென்றான்..

அவள் அறையில் குழந்தைக்கு மும்மரமாக பாடம் எடுத்து கொண்டு இருந்தால்.. அந்த நேரம் சரியாக விஷ்வாவும் வர, அவள் குழந்தையிடம் பேசியது அனைத்தும் அவன் காதில் விழுந்தது..

பாப்பா அந்த அங்கிள் கூட நீ எங்கையும் போக கூடாது.. அவர் உன்ன காலைல அடிச்சாரு இல்ல..அவர் ஒரு பூச்சாண்டி சரியா? உன்ன கடிச்சு சாப்பிட்ருவாறு. என்று குழந்தைக்கு புரியும் வகையில் மழலையாக கூறி கொண்டு இருந்தால் குழலி..

அவள் குழந்தையிடம் சொன்னதை கேட்டு காண்டான விஷ்வா, நான் அங்கிள்ளா டி அறிவு கெட்டவளே என்று மனதோடு கருவி கொண்டே வந்தவன், அவள் முன் நின்றான்.. அறிவு இருக்கா டி உனக்கு என்ன போய் குழந்தைக்கு அங்கிள்னு சொல்லி குடுக்குற? அப்போ நான் என்ன உனக்கு அண்ணனா என்றான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க..

அவனிடம் பேச விரும்பாதவள் அவனை கடந்து செல்ல முற்பட, அவள் கையை பிடித்து நிறுத்தி இருந்தான்..

பேசிகிட்டு தான இருக்கன்? இப்படி கிளம்பி போனா என்ன அர்த்தம்..

எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் இல்லனு அர்த்தம்..

குழலி என்கிட்ட அடிவாங்காத, நான் ஏற்கனவே உன்மேல செம கோவத்துல இருக்கன்..

ஹ்ம்ம் அடிங்க அடிச்சே கொள்ளுங்க.. எங்கள அடிச்சு போட்டா கேக்க யாரு இருக்கா? எங்க அம்மா ஒரு வாயில்லா பூச்சு அவங்க என்ன உங்கள எதிர்த்து கேள்வியா கேக்க போறாங்க என்று விசும்பினால்..

அவள் விசும்பளில் குழந்தையும் அழுதால்.. விஷ்வா அவளிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டவன்.. சரசுவை அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தான் சமாதானம் செய்து வேடிக்கை காட்டுமாறு கூறி..

கதவை தாழ்ழிட்டு உள்ளே வந்தவன் அவளை முரட்டு தனமாக பிடித்து இழுத்தான்.. அவன் நெஞ்சில் மோதி நின்றவள் அதிர்ந்து பின் விலக நினைக்க.. எங்கே அவன் விட்டால் தானே??

அதே நெருக்கத்தில் வைத்து கொண்டே பேசினான்.. என்னடி வாய் நீளுது?? நானும் சின்ன பொண்ணுனு பொறுத்து போனா ரொம்ப ஓவரா பேசற?

அவன் பேசி கொண்டே போக, அவளால் பதில் பேச முடியவில்லை.. அவனின் திண்ணிய மார்பின் மீது இவள் மோதி நிற்க, அவளுள் முதல் முறையாக வேதியல் மாற்றங்களை உணர்ந்தால்.. அவள் வயதிற்கு வந்த போது அவளுள் தோன்றிய குறுகுறுப்பும் படபடப்பும் ஒன்றாக தோன்றியது.. ஒரு முறை சிலிர்த்து அடங்கினால் குழலி..

விஷ்வா இருக்கும் கோவத்தில் அவனால் குழலியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை..

ப்ளீஸ் விடுங்க, எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசுங்க என்றால் அவஸ்தையாக..

அப்போது தான் அவன் இருக்கும் நிலை அவனும் உணர்ந்தான்..

பின் தன்னை சமன் செய்து கொண்டவன், இங்க பாரு குழலி அந்த லேப்டாப் அப்பறம் என்னோட பைல் ரெண்டும் ரொம்ப முக்கியமான விஷயம்.. எங்க டீம்மோட அடுத்த ப்ராஜெக்ட் அது. அத தான் பாப்பா எடுத்து விளையாடி நாசம் பண்ணிட்டா. அதான் எனக்கு கோவம் வந்து அடிச்சுட்டன்.. நான் வேணும்னு செய்யல கோவத்துல என்னையும் மீறி நடந்துகிட்டன்..

நான் பண்ணது தப்பு தான்.. கொஞ்சம் நிதானமா இருந்து இருக்கனும். ஆனா அதுக்காக நீ என்கிட்ட பாப்பாவ வர விடாம பண்ணுவியா? இது எந்த விதத்துல நியாயம்??

அப்பறம் பால்கனில இருக்கும் போது நீ பேசுனத நான் கேட்டன் என்றவனின் முகம் கோவத்தில் சிவந்து இருந்தது..

இப்போ உன்னோட புருஷன் நான் தான், என் பொண்டாட்டி நீ தான் உன் கடந்த காலத்தை பத்தி நீ இனிமேல் நினைக்கவே கூடாது, என்றான் இறுகிய குரலில்.

அத சொல்ல நீங்க யாரு என்றால் பட்டென்று..

அவளின் கேள்வி அவன் ஆத்திரத்தை தூண்டியது..

நான் உன் புருஷன் டி என்றான் அவளின் இரு முழங்கைகளையும் அழுத்தி பிடித்து..

அவன் பிடியில் வலி கண்டால் குழலி, வலிக்கிது விடுங்க என்னும் பொழுதும் அவளையே பார்த்து கொண்டு இருந்தானே அன்றி அவளை விடவில்லை.

அவள் வலியில் கண் கலங்க அவளை வேகமாக பின்னுக்கு தள்ள, அவள் அருகில் இருந்த மெத்தையில் விழுந்தால்.

அவள் எழுந்து அமர்ந்து வலித்த கையை பார்க்க இரு கைகளும் சிவந்து இருந்தது அவன் கை அச்சோடு..அவனும் அவள் கையை கவனித்தான் தான் ஆனால் கண்டு கொள்ளவில்லை.. அப்படி இருந்தது அவன் கோவம்..

என்ன பேச்சு பேசுறா. நான் யாரா அவளுக்கு என்று மனம் வெம்பினான்..

அவன் கேள்விக்கு பதிலாக கூறினால்.. நீங்க தான் அன்னைக்கு சொன்னிங்க என் கழுத்துல கட்டுன இந்த தாலிக்கு எந்த அர்த்தமும் இல்ல, நமக்குள்ள எந்த உறவும் இல்ல.. நாம ஜஸ்ட் ப்ரன்ட்ஸ் தான்னு, அத மறந்து இருக்க மாட்டிங்கனு நம்பறன் இனிமேல் என்னையும் என் பொண்ணையும் விட்டு தள்ளியே இருங்க என்றால்.

முடியாது என்ன டி பண்ணுவ என்றான்.. அவளால் என்ன பண்ண முடியும்? பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தால்.

அவளை ஆழ்ந்து நோக்கியவன் பின் வேறேதும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

அவள் தான் விஷ்வா சென்ற பின்பும் அழுது கொண்டே இருந்தால். இனி அவனோடு பேசவே கூடாது என்று முடிவெடுத்தவள் அறையை விட்டு வெளியே வந்து குழந்தையை தேடினால்..

பூரணி பாப்பா விஷ்வாவின் தோளில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு இருந்தால்.

குழலி விஷ்வா அருகில் சென்று குழந்தையை கேட்க, அவள் முகத்தை பார்க்காமல் கூறினான், பாப்பா பர்ட்ஸ்ஸ வேடிக்கை பார்க்குறா நீ அப்பறம் வந்து குழந்தையை வாங்கிக்கோ என்றான்..

வேலை செய்யும் ஆட்கள் வேறு அருகில் இருக்க குழலி அமைதியாக அங்கிருந்து சென்றால்.. அவளுக்கும் புரிந்தது விஷ்வா வேண்டும் என்றே செய்கிறான் என்று ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

அடுத்தடுத்து வந்த நாட்களில் விஷ்வா குழலியிடம் பேசவில்லை.. அனைவரின் முன்பும் கடமைக்கே என குழலி பேசினாலும், விஷ்வா அவளை தவிர்த்து விடுவான்.. குழந்தையை மட்டும் விட்டு கொடுப்பதில்லை. தினமும் தூக்கி வைத்து கொஞ்சவான், பூங்கா அழைத்து செல்வான் அவளுக்காக வாங்கிய பறவைகள் முயல்களை காட்டி, குழந்தையின் மகிழ்ச்சியில் அவனும் மகிழ்வான்.

அவன் உதாசினம் குழலியை கோவமுற வைத்தாலும், மனதை கவலை கொள்ளவும் வைத்தது..

ஆரம்பத்தில் விஷ்வாவை கண்டு கொள்ளாமல் இருந்த குழலி, நாளடைவில் அந்த வீட்டில் தனிமையாக உணர்ந்தால்..

எப்போதும் போல் வீட்டு வேலை செய்கிறாள், படிக்கிறாள் குழந்தை உடன் விளையாடுகிறாள் ஆனால் தனிமை கொன்றது. மனதில் வெறுமை குடி கொண்டது.

காரணமே இன்றி அழுகை வேறு வந்தது. யோசித்து பார்த்தால் ஏன் இந்த வெறுமையான மனநிலை என்று..

விஷ்வா என்று பதில் கூறியது ஆழ் மனம்..

இன்னும் தேம்பினால்.

இங்கு வந்ததில் இருந்து அவளையும் அவள் குழந்தையையும் விஷ்வா அக்கறையோடு பார்த்து கொண்டான் என்பதை அவளால் மறுக்க முடியாதே.

அன்று தான் அதிக படியாகத்தான் பேசிவிட்டோமோ என்று நினைத்து வருந்தினால்.

இதற்க்கு மேலும் அவள் பிடிவாதத்தை இழுத்து பிடிக்க முடியாமல், விஷ்வாவிற்கு அழைத்தால்..

ஆனால் அழைப்பை ஏற்றது மயூரி, ஒரு பெண்ணின் குரல் எதிர் முனையில் ஒலிக்க..

ஹலோ என்றால் தயங்கி கொண்டே, ஆனால் மயூரியோ குழலியின் பெயரை திரையில் கண்டதும், போன் பேசுற அளவுக்கு ஆகிடுச்சா என்று தகித்தவள் அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தால், ஹலோ என்ற எஃகு குரலில்.. அவ்வளவு ஆணவம் அவள் குரலில்..

மறு முனையில் குழலி ஹ.. ஹ.. ஹலோ என்று பேச தயங்கியவள் அவர் இல்லையா என்றால் யோசித்து யோசித்து வார்த்தைகளை கோர்த்து..

எவரு என்றால் வேண்டுமென்றே??

அது ஷிவா என்று கூறியவள் பின் திருத்தி கொண்டு விஷ்வா என்றால்..

அதற்கு மேல் பொறுக்க முடியாத மயூரி, லிசன் குழலி நான் மயூரி பேசுறன்..

எதுக்கு இப்போ கால் பண்ண அத சொல்லு என்றால் அதிகாரமாக.. சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளையும் அதில் இருக்க..

இல்ல நான் அவர்கிட்ட பேசனும் என்றால்..

இன்னும் கோவம் உச்சிக்கு ஏறியது மயூரி..நீ எல்லாம் எந்த உரிமைல விஷ்வாவுக்கு கால் பன்ற? என்ன அவ்வளவு ஆகிடுச்சா உனக்கு?? உன்னக்கும் உன் பொண்ணுக்கும் என் விஷ்வா ரொம்ப தான் இடம் கொடுத்து இருக்கான்..

நானும் எல்லாத்தையும் கேள்விப்பட்டன், என் விஷ்வா கூட ரொம்ப உரிமை எடுத்துக்குரியாம்? ரொம்ப ஒட்டி உறவாடுரியாம்?? என்ன இதல்லாம் பண்ணி என் விஷ்வாவ மயக்க பாக்குறியா என்றால்..வார்த்தைக்கு வார்த்தை என் விஷ்வா என்று உரிமை கொண்டாடினால் வேண்டும் என்றே..

ஹய்யோ அதலாம் இல்ல மேடம், நாங்க பேசியே ரொம்ப நாள் ஆகுது. நான் அந்த மாதிரிலாம் நினைக்கல என்றால் பதறி கொண்டு..

ஹ்ம்... அவளின் ஏளன புன்னகையை குழலியால் உணர முடிந்தது..

நீ நெனச்சாலும் என் விஷ்வாவ உன்னால மயக்க முடியாது.. உன் அழகுல மயங்குற ஆளு என் விஷ்வா இல்ல..

ஏன்னா நீ ஒரு செகண்ட் ஹாண்ட்.. உன்னலாம் என் விஷ்வா திரும்பி கூட பார்க்க மாட்டான்..

தெருவுல இருக்க நாய் குட்டிங்க கிட்ட காற்ற பரிவை தான் என் விஷ்வா உன்மேலயும் உன் பொண்ணு மேலயும் காட்டுறான்..

அதையே அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு, விஷ்வா கூட ஒட்டிக்கலாம்னு நெனச்ச, உன்னையும் உன் பொண்ணையும் கொள்ள கூட தயங்க மாட்டேன் என்றால். மயூரியின் குரலே அத்தனை அகோரமாக இருந்தது..

குழலி பயத்தில் போனை கீழே போட்டுவிட்டால்..

குழந்தையை பற்றி கூறியதும் உடல் தானாகவே உதறியது. ஹய்யோ என் குழந்தை என்று பதறியவள், உறங்கி கொண்டு இருந்த குழந்தையிடம் சென்று அனைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள், குழந்தை தூக்கத்தில் சிணுங்குவதையும் உணராமல்.

எனக்கு யார்கூடவும் பேச வேண்டாம், விஷ்வா கூட வேண்டாம் என் பாப்பா மட்டும் போதும்.. மயூரி சொன்ன ஒரு வார்த்தையில் பயந்து அந்த வார்த்தைகள் வெளிவந்தது..

குழந்தையை அனைத்து கொண்டு, நெஞ்சிக்குள் பயத்தோடு உறங்கி போனால் குழலி..

அந்த பக்கம் மயூரி குரூற புன்னகையுடன், குழலி கால் செய்த தடயமே இல்லாமல் கால் ஹிஸ்டரியில் இருந்து அவள் பெயரை அழித்து இருந்தால்..

மயூரி நன்றாக உணர்ந்து கொண்டால்.. அவள் மிரட்டலில் குழலி பயந்து போனதை.. அப்படி ஒரு நிம்மதி குடி கொண்டது அவள் மனம்.

ஹேய் என் போன் வச்சு என்ன பண்ணிட்டு இருக்க என்று விஷ்வாவின் குரல் அவள் அருகில் கேட்கவே.. சற்று தடுமாறியவள் இல்ல சும்மா செல்ஃபி எடுக்கலாம்னு தான் என்று அழகாக சமாளித்தால் மயூரி..

சரி இந்தா நீ கேட்ட பர்கர் என்று அவள் கேட்ட சிக்கன் ஃரைட் பர்கரை அவளிடம் கொடுத்து போனை வாங்கி கொண்டான்..

போனை வாங்கியவன் வாட்ஸ்சப், கால் ஹிஸ்டரி, நார்மல் மெசேஜ் என அனைத்து செயலிகளையும் ஒரு முறை சுற்றி வந்தான், இப்போது மட்டும் அல்ல, குழலியிடம் சண்டையிட்ட நாளில் இருந்து தினமும் இதே பொழப்பு தான். சிறு வெளிச்சம் போன் திரையில் தென்பட்டாலும் குழலி தானோ என்று ஆர்வமாக போனை ஆராய்பவனுக்கு ஏமாற்றுமே மிஞ்சும்.

இந்த பொழப்புக்கு அவளிடம் நேரடியாக பேசிவிடலாமே என்று மனசாட்சி பரிகாசம் செய்தால்.. இல்ல அவ என்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டா அவளே வந்து பேசட்டும் என்று வீம்பாக இருந்து வருகிறான் இன்று வரை.

தொடரும்...

 

19. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அன்று இரவு விஷ்வா வீட்டிற்கு வர நேரம் இரவு 10ஐ தொட்டு இருந்தது.. குழலியும் குழந்தையும் அறையில் உறங்கி கொண்டு இருந்தனர்..

சூர்யா அவன் தந்தையோடு பேசி கொண்டு இருந்தான் வரவேற்பரையில்.. விஷ்வா வருவதை கண்டவன், என்ன டா இவ்ளோ நேரம் என்றான் சூர்யா யூ.எஸ். கிளைன்ட் மீட்டிங் இருந்துச்சு முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சு..

தூங்கலையா என்றவன் டீபாய் மீது இருந்த திருமண பத்திரிகையை கண்டான்.. அவன் பார்வையை புரிந்து கொண்ட சுந்தரம் பொதுவாக கூறினார். பரமுவும் சுசிலாவும் வந்தாங்க ரஞ்சனி கல்யாணத்துக்கு குடும்பத்தோட வரணும்னு அழைச்சிட்டு போனாங்க என்றான்.

சூர்யா முகத்தை தான் கண்டான், விஷ்வா அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

மேலும் தொடர்ந்தார் சுந்தரம் கல்யாணம் அடுத்த மாசம் 3 ஆம் தியதி.

எல்லாம் ஓகே வா சூர்யா என்று கேட்டு கொண்டே தம்பியின் அருகில் அமர்ந்தான்.. நான் சோகமாலாம் இல்ல.. தயவு செஞ்சு ஆறுதல் சொல்றன்னு ஆராமிக்காத..

இப்போதான் இவரு ஆறுதல் சொல்றன் பேர்ல, வாழ்க்கை ஒரு வட்டம் செவ்வகம்னு பேசி முடிச்சாரு என்று கேலியாக கூறனாலும் முகம் கொஞ்சம் வாட்டமாகத்தான் இருந்தது..

சுந்தரம் இளைய மகனை முறைக்க.. நாக்கை துருத்தி சும்மாபா விளையாட்டுக்கு என்றான்..

ஓகே அப்போ ரஞ்சனி கல்யாணத்தல விருந்து சாப்பிட ரெடியா இரு என்றான் விஷ்வா.

விஷ்வா அவன் அறைக்கு சென்றான்..

இங்கு சுந்தரம் நீ எப்போடா உன் அண்ணன் கூட ராசியான?

அதலாம் அடுத்த ரெண்டு நாள்ல சமாதானம் ஆகிட்டான். பேசலனா விட்ருவனா நானு என்றான் சிரிப்போடு.. ஆனா அண்ணி தான் முதல் மாதிரி பேச மாற்றங்க.. அவங்கள எப்படி சமாதானம் பண்றதுனு தெரில.. சரி ஆகிடும் விடு என்றான் சுந்தரம்..

மேலே அறைக்கு வந்த சூர்யா மெத்தையில் உறங்கி கொண்டு இருந்த இரண்டு குழந்தைகளை கண்டான்..

விஷ்வா கண்ணிற்கு குழலி இன்னொரு வளர்ந்த குழந்தையாக தான் தெரிந்தால்.

உடையை கூட மாற்றமல் அவள் அருகில் செல்ல மெல்லிய குறட்டையுடன், பன்னீர் ரோஜா உதடுகளை சிறிதாக திறந்து வைத்து உறங்கி கொண்டு இருந்தால்..

இப்போது அவளுக்கான நேரம் என்று நினைத்தானோ என்னவோ, அவள் பிறை நெற்றியில் முத்தமிட்டவன் மனோதோடு பேசினான் நான் உன்கிட்ட வந்து பேச மாட்டன் டி, உன்மேல ரொம்ப கோவமா இருக்கன்.. புருஷன் நான் கூட இருக்கும் போது நீ செத்து போனவன நினைச்சு அழுதல அதுக்கு நீ என்கிட்ட விளக்கம் குடுத்தே ஆகணும். இனிமேல் அவனை நினைக்க மாட்டன் அவனை பத்தி பேச மாட்டனு எனக்கு நீ ப்ரோமிஸ் பண்ணி குடுக்கணும். அப்போ தான் நான் உன்கிட்ட பேசுவன் என்று தூங்கி கொண்டு இருந்தவளை முறைத்தான்.

அருகில் உறங்கி கொண்டு இருந்த இன்னொரு பூங்கொத்தை பார்த்தான், நீங்க ரெண்டு பேரும் என்னோட சொத்து என்று மென்மையாக கூறி குழலிக்கு மீண்டும் முத்தமிட்டு குழந்தையை அழகாக கொஞ்சி விட்டு குளியல் அறை புகுந்து கொண்டான்..

அவ்வளவும் நேரம் தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்த குழலி கண்ணை திறந்து பார்த்தால்.. அவன் கடைசியாக கூறிய நீங்க ரெண்டு பேரும் என் சொத்து என்று கூறியது அவளுக்கு மனதில் சொல்லோன்னா உணர்வை ஏற்படுத்தியது.

அவன் இருமுறை அவள் நெற்றியில் முத்தமிடும் பொழுதும், அவள் உடல் சிலிர்க்காமல் இருக்க, அவ்வளவு கஷ்ட்டபட்டால்.

இனிமையான மனநிலையில் இருந்தவள் மனம், மயூரி பேசியதை அவள் நினைவுக்கு கொண்டு வர.. வேண்டாம் குழலி இது தப்பு அவருக்கு உங்க மேல இருக்கருது பரிதாபம் மட்டும் தான். அவர் இறக்க குணத்தை நாம தப்பா புரிஞ்சிக்க கூடாது.. நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை உள்ளவ, அவர் மேல எப்படி ஆசை பட முடியும்.. இப்படி நினைக்கறதே அபத்தம் இல்லையா.. மயூரி இன்னைக்கு சொன்னத அவரும் சொல்லி இருக்கறாரே.. செகண்ட் ஹாண்ட் தான நானு என்று ஏதேதோ எண்ணத்தில் உழன்றவள் கண்களை இறுக மூடி கொண்டு தூங்குவது போல் நடித்தால்.

பிரெஷ் ஆகி வந்த விஷ்வா குழலியை தொந்தரவு செய்யாமல் கீழே சென்று, ஹாட் பாக்ஸில் இருந்த உணவை அறை வயிறுக்கு உண்டு முடித்தான்.. குழலி அருகில் இருந்தால் அவளை பரிமாற வைத்து வயிறு முட்ட உண்டு இருப்பானோ என்னவோ.

மீண்டும் அறைக்கு வந்தவன், குழந்தையை சுவற்றோரம் நகர்த்தி படுக்க வைத்தவன், அவன் குழலி அருகில் படுத்து கொண்டு அவள் வலது கையை மென்மையாக பிடித்து கொண்டவன் தூக்கம் வரும் வரை அவளை தான் கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தான். இம்முறை குழலி உண்மையாகவே உறங்கிவிட்டால்.

விஷ்வா தான் உடலில் அலுப்பு இருந்தும் உறக்கம் வராமல் அவன் மனைவியை ரசித்து கொண்டு இருந்தான்..

அடுத்த நாள் காலை, ஆராவரமாக விடிய, குழலி எப்போதும் போல் குழந்தையை கீழே அழைத்து சென்று தொட்டிலில் உறங்க வைத்தால்.

அன்று வார இறுதி நாள் என்பதால் அனைவரும் தாமதமாகவே எழுந்தனர். காலை 10 மணி போல் மயூரி விஷ்வா வீட்டிற்கு வந்து இருந்தால் இன்னும் இரு தினங்களில் அவளின் பிறந்தநாள் வரவிருப்பதால் விஷ்வாவை ஷாப்பிங் அழைத்து செல்ல வந்தால்.. உண்மையில் விஷ்வாவை ஷாப்பிங் அழைத்து செல்ல தான் வந்தாலா என்று கேட்டால் அதுவும் ஒரு காரணம்.

மற்றொரு காரணம் நேற்று தான் பேசியதற்கு குழலியிடம் என்ன மாற்றம் தெரிகிறது என்று காணவே நேரில் வந்து இருந்தால்

இதுவே அவள் விஷ்வா வீட்டிற்கு வருவது முதல் முறை.

விஷ்வா.. விஷ்வா.. என்று அழைத்து கொண்டே வந்தால் மயூரி. சுந்தரம் சோபாவில் தான் அமர்ந்து இருந்தார். சூர்யா காலையிலே கடற்கரை சென்றுவிட்டான். அவனுக்கு சன் ரைஸ் பார்ப்பதில் அலாதி ஆனந்தம். அவன் மன சஞ்சலங்களில் இருந்து விடுபட விடியரற் காலையிலே சென்றுவிட்டான்.

இந்த நேரத்தில் மயூரி விஷ்வாவின் தந்தையை எதிர்பார்க்கவில்லை. ஒரு முறை விஷ்வா அவளிடம் கூறியுள்ளான். அப்பா சாட்டர்டே சண்டேலாம் வீட்லயே இருக்கறது இல்ல. ஓடிக்கிட்டே இருக்காரு என்று. அந்த நம்பிக்கையில் தான் சுந்தரம் இன்று வீட்டில் இருக்க மாட்டார் என்று நினைத்து வந்தால்..

அவரை கண்டதும் மனதில்.. ஹய்யோ நந்தி மாதிரி இவரு வேற விஷ்வா கூட வெளிய போக விடாமன குறுக்க நிப்பாரோ என்று தான் நினைத்தால்.. அதற்கு மாறாக முகத்தில் புன்னகையை தேக்கியவள் வணக்கம் அங்கிள் என்றார்..

சுந்தரம் அவருக்கு மயூரியின் ஜாதகம் முதற்கொண்டு அனைத்தும் தெரியும் என்றாலும், இவள் எதுக்கு இப்போது இங்கே?? இப்பதான் என் பையன் கொஞ்சம் மனசு மாறி வரான் அது பொறுக்கலையா இந்த குரங்குக்கு என்று நினைத்தவர்.. முகத்தில் எதுவும் காட்டாமல்..

யாருமா நீ என்றார்? அவளை பற்றி எதுவும் தெரியாததை போல்..

அது அங்கிள் நான் மயூரி விஷ்வாவோட ஃப்ரன்ட் என்றால்..

ஓஹ் விஷ்வா அவன் ப்ரன்ட்ஸ் யாரையும் வீட்டுக்கு கூப்பிட மாட்டானே? என்றார் கேள்வியுடன்.

அந்த கேள்வியில் முகம் மாறி போனால் மயூரி. அவள் முகம் மாற்றத்தை உணர்ந்தவர்.. சரி விடுமா என்று பாக்கியம் என்றார் சாத்தமாக.. ஐயா என்று வேலைகார பெண்மணியான மயூரி வைத்த ஆள் வந்து நிற்க..

ஒரு காஃபி போட்டு கொண்டு வாமா என்றார்.. தோ ஐயா என்று உள்ளே சென்றவர் அடுத்த பத்து நிமிடத்தில் காஃபி கொண்டு வந்தார்..

அதே நேரம் மகேஷ்வரியும் தூங்கி எழுந்து வர, சோபாவில் அமர்ந்து இருந்த, மாடர்ன் மங்கையான மயூரியை பார்வையாலே எடைப்போட்டு யார் நீ என்றார்.

அவரை கண்டதும் புன்னகை முகமாக எழுந்தவள் குட் மார்னிங் ஆன்ட்டி நான் விஷ்வா பிரண்ட் என்றால் சிரித்த முகமாய்..

ஓஹ் என்பதோடு முடித்து கொண்டார் மகேஷ்வரி.. மகேஷ்வரி வந்ததும் சுந்தரம் அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிட்டார். சுந்தரம் அங்கிருந்து சென்றதும் நிம்மதி மூச்சுவிட்ட மயூரி மகேஷ்வரியிடம் பேச முயன்றால்.

விஷ்வா கூறியிருக்கிறானே.. என் அன்னையும் உன்னை போல் தான் மயூரி என்று.. ஆனால் அவன் எதை நினைத்து கூறினானோ அது அவனுக்கே வெளிச்சம். அதனால் மகேஷ்வரியிடம் பேசி நற்பெயரை பெற நினைத்தால் மயூரி..

முதற் படியாக, ஆன்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்கள ஆன்ட்டினு கூப்பிட எனக்கே சங்கடமா இருக்கு, விஷ்வாக்கு சிஸ்டர் மாதிரி இருக்கீங்க என்று ஒரு கூடை ஐசை எடுத்து மகேஷ்வரி தலையில் வைத்தால் மயூரி..

புகழுக்கு மயங்காத பெண்கள் உண்டா? மகேஷ்வரியும் அவள் பேச்சிற்கு வசியபட்டார் என்பது தான் உண்மை.

மயூரி அவளை பற்றிய அனைத்து விஷயங்களையும் கொஞ்சம் அலட்டலாகவே கூறினால். (அதனால் தானே அவளுக்கு அல்ட்டாப்பு ராணி என்று சூர்யா பெயர் வைத்து உள்ளான்.) பின் விஷ்வாவும் அவளும் காதலிப்பதையும் கூறினால்.

அப்படியா என்று ஆச்சர்யமாக கேட்ட மகேஷ்வரி, அவள் கூற்றில் மகிழ்ந்து தான் போனால்.

அந்நேரம் தானா, குழலி கீழ் இறங்கி வர வேண்டும்.. அவளை பார்த்த மகேஷ்வரி கிளி மாறி இருக்க உன்ன விட்டுட்டு எங்கேயோ இருந்து ஒரு எச்ச இலைய கூட்டிட்டு வந்து இருக்கான் என்று முகத்தை சுழித்தால் மகேஷ்வரி.

மயூரியும் குழலியை கண்டு கொண்டவள் வராத சிரிப்பை வரவழைத்து கொண்டு கொஞ்சம் சத்தமாகவே சிரித்தால்.

குழலி அவர்கள் பேசிய எதையும் கண்டு கொள்ளவில்லை.. சமையல் அறை சென்று குழந்தை சாப்பிட்ட உணவு கிண்ணத்தை கையோடு கழுவி வைத்து, குழந்தை வாய் கையை சுத்த படுத்திவிட்டு மீண்டும் மாடி படி ஏறி சென்றால்.

பாத்தியா இவளுக்கு ஏத்தத்த? என்னவோ இவ தான் வீட்டுக்கு மகாராணி போல, நாம இங்க இருக்கறத கூட கண்டுக்காம போறத.. எல்லாம் இந்த வீட்டு ஆம்பளைங்க குடுக்குற இடம்.. எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா, என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினார்.

இப்போ வீட்ல என் புருஷனும் புள்ளையும் இருக்கறதுனால என்னால எதுவும் பண்ண முடியல, ரெண்டு பேரும் இல்லாம இருந்து இருந்தா இவள உண்டு இல்லனு பண்ணி இருப்பன் என்று பற்களை கடித்தார். பின் கனிவான பார்வையுடன் மயூரி பக்கம் திரும்பியவர், இங்க பாரு மயூரி நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ ஆனா இந்த பிச்சைக்கார கழுதைய துரத்திவிட்டு நீ இந்த வீட்டுக்கு மருமகளா வரனும், என்னோட ஃபுல் சப்போர்ட் எப்பவும் உனக்கு தான் அத நல்லா மனசுல வச்சிக்கோ, என்று தொலைபேசி எண்களை பரிமாறி கொண்டு, குழலியை இந்த வீட்டை விட்டு துறத்துவதற்கு  இருவரும் கூட்டு சேர்ந்தனர்.

கவலைய விடுங்க ஆன்ட்டி, விஷ்வா மனசுல நான் தான் இருக்கன், நான் பாத்துக்குறன் என்று உறுதியாக கூறினால்.. இன்னும் கொஞ்சம் நாட்களில் அவள் நம்பிக்கை ஆட்டம் காண போவதை அறியாமல்.

சரி மேல போ மயூரி, உன் உரிமையை அவ முன்னாடியே விஷ்வாகிட்ட காட்டு.. அப்போ தான் அந்த சொரணை கெட்ட ஜென்மத்துக்கு உரைக்கும் என்று மயூரியை விஷ்வா அறை நோக்கி அனுப்பி வைத்தால் மகேஷ்வரி.

குழலியும் தத்தி நடக்கும் பூரணி பாப்பாவும் பால்கணியில் விளையாடி கொண்டு இருந்தனர். பாப்பா சாப்பிட்ட உணவு செரிப்பதற்காக

மனைவி மகளின் கொஞ்சல் மொழிகளை கேட்டு கொண்டே விஷ்வா குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தான்.

மேலே வந்தால் மயூரி..


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

20. கண்கள் நிறைந்த ஓவியமே!!
மயூரி திறந்து இருந்த விஷ்வாவின் அறையினுள் நுழைந்து இருந்தால். பால்கனி பக்கம் கேட்ட சத்தத்தில் அங்கே செல்ல, அங்கு குழலியும் பூரணி பாப்பாவும் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்.. இவளுக்கு தான் அதை காண அவ்வளவு ஆத்திரம் வந்தது.

குரூற பார்வையுடன் அவர்களை நெருங்கியவள் குழலியை தான் பார்த்து கொண்டிருந்தால் அவள் முகத்தில் உள்ள சிரிப்பை காண காண இவளுக்கு எரிச்சலாக இருந்தது.

என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல என்ற மயூரியின் பக்கவாட்டு குரலில் தான் அவள் புறம் திரும்பினால் குழலி..

குழந்தையுடன் விளையாடும் ஆர்வத்தில் மயூரியை கவனிக்கவில்லை குழலி. அவள் முகத்தில் இருந்த புன்னகை தன்னால் மறைந்தது..

அவள் எதிரே வந்து நின்றாள் மயூரி, என்ன நேத்து பேசுனது எல்லாம் நியாபகம் இருக்கா என்று நக்கலாக கேட்க இம்முறை குழலி பயப்படவில்லை. தைரியமாகவே நின்றாள்.

விஷ்வா இருக்கும் தைரியமோ என்னமோ?

அவளின் தைரியமான பார்வையை காண சகிக்காதவள் அவளை பயமுறுத்த எண்ணி சுவற்றை பிடித்து கொண்டு நின்ற பூரணியை தூக்கினால்..

குழலி ஒரு நிமிடம் பதறி என் குழந்தையை குடு என்று வாங்க முயல, மயூரி அவள் கையில் குழந்தையை தராமல் போக்கு காட்டி ஹேய் பேப் உங்க அம்மா ரொம்ப தைரியமா இருக்காங்க போல, நாம கொஞ்சம் பயம் காட்டலாமா என்றவள் குழந்தையை மேலே தூக்கி போட்டு  பிடித்தால்.. பதறி போனால் குழலி, குழந்தையை கீழே போட்டுவிட்டால் என்ன செய்வது.

ஆனால் பூரணி பாப்பா குதுகலமாக சிரித்து கொண்டு இருந்தால்..

அடுத்த முறை மயூரி குழந்தையை மேலே தூக்கி போட்டு கையில் பிடிக்க, பாப்பா மயூரியின் முகத்தில் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்து இருந்தால்..

குழலி உடனே குழந்தையை வாங்கி கொண்டு, மயூரி முகத்தை பார்க்க.. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஒரே சிரிப்பு விழுந்து விழுந்து சிரித்தால் குழலி.. அன்னை சிரிப்பதை கண்ட குழந்தையும் கொக்கர கொட்டி சிரிக்க, ஆத்திரமடைந்தால் மயூரி.

இதை எதையும் அறியாமல் விஷ்வா இன்னும் குளியல் அறையில் தான் குளித்து கொண்டு இருந்தான்.

முகத்தை அங்கு இருந்த வாஷ் பேஷனில் கழுவியவள், குழலி சற்றும் எதிர்பார்க்காத நேரம் அவளிடம் இருந்த குழந்தையை தொடையில் நறுக்கென கிள்ளி வைத்தால்..

குழந்தை வீறிட்டு அழ, குழலி மயூரியின் கையை வேகமாக எடுத்துவிட்டு கன்னத்தில் ஒரு அரை வைத்தால்..

குழலியின் பிஞ்சு கையால் அடித்தது, அவ்வளவு வீரியம் இல்லை தான்.. ஆனால் அவள் தன்னை அடித்ததை அவமானமாக நினைத்தவள் ஹேய் என்று அவளை மீண்டும் அரைய போக, மயூரி என்று கத்தி இருந்தான் விஷ்வா..

குழந்தை இன்னும் அழுது கொண்டு தான் இருந்தது.

தோளில் இருந்த துண்டை நாற்காலியில் போட்டுவிட்டு மயூரி முன்பு வந்து நின்றான்..

விஷ்வா என்று அழுது பாசங்கு செய்தவள் அவன் தோளில் முகம் புதைந்து அழுதால்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழலி ஒரு புறம் மயூரியை முறைத்து கொண்டே குழந்தையை சமாதானம் செய்தால்..

பின் விஷ்வா மயூரி இருவரையும் ஒரு சேர முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தால்..உள்ளே சென்றவள் குழந்தையை அனைத்து கொஞ்சி சமாதானம் செய்து அழுகையை நிப்பாட்டினால்..

அதற்குள் விஷ்வா மயூரியுடன் உள்ளே வந்து இருந்தான்.. ஏன் குழலி மயூரிய அடிச்ச என்றான் எடுத்ததும்.. கொஞ்சம் கோவம் தான்.. வயதில் சிறியவள் கை நீட்டி அடித்து இருக்கிறாலே, மயூரி என்ன செய்து இருந்தாலும் தன்னிடம் கூறி இருக்கலாமே எதற்கு கை நீட்டி அடிக்க வேண்டும் என்ற கோவம் தான்.

அவ எதுக்கு என் பொண்ண கிள்ளி வச்சா,

ஹேய் குழலி பாப்பா திடீர்னு வாமிட் எடுத்ததுல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டு இருப்பா? அதான் கிள்ளிட்டா அவ பண்ணது தப்பு தான் அதுக்காக உன்னவிட பெரியவள கை நீட்டி அடிப்பியா தப்பு இல்ல..தவறு செய்த குழந்தையை கண்டிக்கும் தாயின் கனிவு மட்டுமே அவனிடம் இருந்தது.

குழலி விஷ்வாவை முறைத்து கொண்டே நின்றாள்..

பாரு விஷ்வா உன்னையே எப்படி முறைக்குறாருனு..

சரி அத விடு, நீ இங்க என்ன பன்ற?? என்கிட்ட சொல்லாம எதுக்கு வீட்டுக்கு வந்த? என்று குழலியை விடுத்து மயூரியிடம் கேள்விகளை தொடுத்தான்..

குழலி முன்பு அவன் கேட்ட கேள்வியில் அவமானமாக உணர்ந்தால்.. இருந்தும் இப்போது இதை பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்தவள், கொஞ்சி கொண்டே, விஷ்வா மறந்துட்டியா? இன்னும் டூ டேஸ்ல என்னோட பர்த்டே, எப்பவும் நீ தான என்ன ஷாப்பிங் கூட்டிட்டு போவ? என்று சிணுங்களோடு கேட்டு அவன் காளர் நெக் டிஷர்ட் பட்டனை திருக, மென்மையாக அவள் கையை எடுத்துவிட்டவன்

சரி மயூரி, நீ வெளிய இரு நான் ரெடி ஆகி வரன் என்றான்.. குழலி என்ன நினைப்பாளோ என்ற எண்ணம் அவன் மனதில் தொற்றி கொண்டது.

உவக், விஷ்வா என்மேல பேட் ஸ்மெல் வருது என்று முகத்தை சுழித்தால் மயூரி, கொஞ்சம் யோசித்தவன் சரி போய் குளிச்சிடு, நான் சரசு அக்காவை மேல அனுப்புறன் அவங்க உன் ட்ரெஸ்ஸ ட்ரயர்ல போட்டு தருவாங்க என்றவன் அவள் குளியல் அறை சென்றதும் கீழே வந்து இருந்தான்.

அவர்களுக்கு முன் குழலி கிழே சென்று இருந்தால்.

சொன்னது போல் சரசு அல்லாது மயூரியின் ஆள் பாக்கியம் மேலே சென்று அவளுக்கு உதவினால்.

விஷ்வா கீழே சென்று குழலியை தேட, அவள் சமையல் அறையில் குழந்தையை இடுப்பில் வைத்து கொண்டு இல்லாத வேலையை எடுத்து செய்து கொண்டிருந்தால். அவளுடன் வேலை செய்யும் பெண் சரசுவும் இருந்தார்.

விஷ்வா சமையல் அறையினுள் வர, சரசு அங்கு இருந்து சென்றுவிட்டார்.

விஷ்வாவிற்கு அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது. குழலியும் அவன் அங்கு இருப்பதை அறிந்து தான் இருந்தால். ஆனால் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

வீட்டிலும் யாரும் இல்லை.

சுந்தரம் அலுவலகம் சென்றுவிட்டார். மகேஷ்வரியும் வழக்கம் போல் தோழிகளுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட்டார்.

குழலி எனக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா என்றான்.. எதுவும் பேசவில்லை அவள், அவன் கேட்ட காஃபியை குழந்தையை இடுப்பில் வைத்து கொண்டே போட்டு முடித்தவள், சமையல் மேடையில் நகர்த்தி வைத்தால்..

அதற்குள் மயூரியும் அங்கு வந்துவிட, எனக்கும் காஃபி வேணும் விஷ்வா என்றால் உரிமை உள்ள மனைவி போல், அவளுக்கு குழலி கையால் காஃபி போட வைத்து அவளை நீ இந்த வீட்டு வேலைக்காரி என்று சொல்லாமல் சொல்ல நினைத்தால்..

ஆனால் விஷ்வா அதற்கு வழி கொடுக்காமல் அவள் பின்னால் வந்த பாக்யத்திடம் மயூரிக்கு காஃபி போட்டு கொடுக்குமாறு பணித்தான்.

பின் அவன் காஃபியை குடித்து விட்டு மேலே சென்றான். மயூரியிடம் இங்கேயே இரு என்ற கட்டளையோடு..

குழலி தோட்டத்திற்கு சென்று விட்டால்.

சிறிது நேரத்திலே விஷ்வா இறங்கி கீழே வர, இருவரும் ஷாப்பிங் மால் கிளம்பி சென்றனர்..

குழலியும் அவர்கள் சென்றதை பார்த்தால் தான், மனதினுள் ஏதோ ஒரு விரக்தி.. அவள் மனதை தனக்கு இந்த வாழ்க்கை நிலையற்றது என பழக்கி வைத்துள்ளால் தான் ஆனால் இன்று விஷ்வாவை வேறு ஒரு பெண்ணுடன் காணும் பொழுது அவளுக்கு என்னவோ போல் ஆகியது.

அதுவும் விஷ்வா நேற்று இரவு கூறிய வார்த்தை நானும் பாப்பாவும் அவர் சொத்துனு சொன்னாரு.. ஆனா இன்னைக்கு என் குழந்தைய கிள்ளி வச்சு இருக்கா அத பத்தி எதுவும் கேட்காம என்கிட்ட வந்து அவர் காதலிக்கு தான சப்போர்ட் பண்ணி பேசினாரு.. அவர் பேச்சு எதுவும் உண்மை இல்லை என்று யோசித்தால்.

ஆனால் இப்போது மயூரியை  காரில் லெப்ட் ரைட் வாங்கி கொண்டு இருக்கும் விஷ்வாவை பற்றி அவள் அறிய வாய்ப்பில்லையே..

சட்டென்று தோன்றிய யோசனையோடு மேலே சென்றவள், ஊரில் இருந்து அவள் எடுத்து வந்த  துணிகளை மட்டும் அவள் பையில் எடுத்து வைத்து கொண்டால். கையில் பண இருப்பை பார்த்தால் அன்று அவள் அம்மா கொடுத்த அதே 1700 ரூபாய் இருந்தது. விஷ்வா தான் அன்று அந்த பணத்தை குழலி கொடுத்த போது வாங்கவில்லையே..

அவளுக்கும் குழந்தைக்கும் விஷ்வா வாங்கி கொடுத்த நகைகளை பொறுப்பாக கழட்டி நகை பெட்டியில் வைத்து அலமாரியில் வைத்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு கிளம்பினால்.

கீழே வரும் போது, சரசு அவள் பெட்டியுடன் செல்வதை பார்த்து சுதாரித்து கொண்டால். அம்மா எங்க போறீங்க? ஐயாலாம் வீட்ல இல்ல.. உங்கள தனியா எங்கையும் அனுப்ப கூடாதுனு பெரிய ஐயா சொல்லியிருக்காரு நானும் வரன்மா இருங்க என்றால்..

நான் எங்க ஊருக்கு போறன் சரசுமா, மாமாகிட்ட நான் சொல்லிக்குறன் நீங்க பயப்படாதீங்க மாமா உங்கள எதுவும் திட்டமாட்டாரு என்றால்..

சரசு வேகமாக சென்று, சுந்தரமிற்கு போனில் அழைக்க அவர் வேலையில் பிஸி, பின் விஷ்வாவிற்கு அழைக்க அவன் மயூரியை திட்டுவதில் பிஸி போனில் யார் என்றே பார்க்காமல் சைடு பட்டனை அழுத்தி சைலன்ட்யில்  போட்டுவிட்டான் விஷ்வா.

அவர்கள் இருப்பது அண்ணா நகர் மெயின் ஏரியா என்பதால் அங்கிருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாப் செல்ல அவ்வளவு கடினமாக இல்லை குழலிக்கு.

அவள் பஸ் ஸ்டாப் வந்தவள் எந்த பஸ் ஏற வேண்டும் எங்கு செல்ல வேண்டும்என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தால்..

ஹேய் குழலி, குழலி என்று பின்னிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்க, யார் என்று திரும்பி பார்த்தால் குழலி..

எதிரே மஞ்சள் நிறத்தில் மாநிறத்திற்கும் சற்று குடுத்தலான நிறைத்தோடு நின்று இருந்தால் ஒரு நங்கை..

சாத்தியமாக குழலிக்கு அவள் எதிரே இருப்பது யார் என்று தெரியவில்லை..

ஆனால் அந்த யுவதியோ, ஹாய் பூரணி குட்டி என்று குழந்தையின் பெயர் முதற்கொண்டு அறிந்து வைத்து, குழந்தையை செல்லம் கொஞ்சினால்.

என்னமா என்ன யாருனு தெரிலயா?? என்ற கேள்வியோடு தன் முத்து பற்கள் தெரிய சிரித்தவள்.. அவளை மேலும் குழப்ப எண்ணாமல் நான் ரஞ்சனி இந்த கதையோட செகண்ட் ஹீரோயின் என்று கையை நீட்டியவள் பின் இடது கண்ணை மூடி நாக்கை கடித்து சாரி அப்படி இன்ட்ரோ ஆக கூடாதுல என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டு..

நான் ரஞ்சனி பரமானந்தம் என்று அவள் தந்தை பெயரையும் சேர்த்து கூறினால்..

விழி விரித்தால் குழலி, அவளின் நீள விழிகளை பார்த்து ரஞ்சனியும் மயங்கி தான் போனால்..

உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு குழலி என்றால். குழலி தான் அவளின் பாராட்டை ரசிக்கும் நிலையில் இல்லையே. இருந்தும் தேங்க்ஸ் என்றால் பொய்யாக சிரித்து. அவள் சிரிப்பில் உயிர்ப்பில்லை என்பதை கண்டு கொண்டால் ரஞ்சனி.

குழலியுடன் இலகுவாக பேசி, அவளையும் பேச வைத்து அருகில் உள்ள
காஃபி ஷாப் அழைத்து சென்றால் ரஞ்சனி.

தொடரும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

21. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ரஞ்சனி குழலியை அழைத்து கொண்டு காஃபி ஷாப் வந்து இருந்தால். அவளை தன்னுடன் வர வைப்பதற்குள் படாத பாடு பட்டு போனால் ரஞ்சனி.. அவள் போனில் உள்ள அவள் குடும்ப புகைப்படம் மற்றும் சுந்தரம் குடும்பத்துடன் அவள் எடுத்து கொண்ட புகைப்படம் என அனைத்தையும் காட்டி அவள் நம்பிக்கையை பெற்று தான் இப்போது அவளுடன் அமர்ந்து இருக்கிறாள்.

சாரி குழலி அன்னைக்கு அம்மா அப்பா உங்க வீட்டுக்கு வரும் போது என்னையும் கூப்பிட்டாங்க.. நான் தான் வர முடியாத சூழ்நிலைல இருந்தன்..

பரவால்ல விடுங்க, இதுல என்ன இருக்கு.. பரமு மாமா சொன்னாரு நீங்க கவெர்மென்ட் ஜாப்ல இருக்கீங்கனு அப்படி இருக்கும் போது எப்படி உங்களால லீவ் எடுக்க முடியும்.. நான் எதுவும் நெனச்சுக்கல என்றால் பொறுமையாக..

ஓகே குழலி அப்பறம் நீங்க வாங்க போங்கலாம் வேண்டாம் ரஞ்சனினு பேர் சொல்லியே கூப்பிடு என்றால்..

அவளும் சம்மதமாக தலை அசைத்த நேரம் வெயிட்டர் ஆர்டர் எடுக்க வந்து இருந்தார்.. அவரிடம் பிரெஷ் ஜூசை ஆர்டர் செய்து அனுப்பி வைத்தவர்கள்.. மீண்டும் பேச தொடங்கினர்..

என்ன எப்படி உங்களுக்கு தெரியும் என்று குழலி அறியா பிள்ளையாக கேட்க.. இதல என்ன இருக்கு உங்க போட்டோ பாப்பா போட்டோ எல்லாம் அப்பா அம்மா காட்டுனாங்க.. பார்த்ததும் உங்க கண்ணும் சிரிப்பும் பச்சக்குனு நெஞ்சுல ஒட்டிக்கிச்சு என்று வார்த்தைகளில் குறும்பை சேர்த்து கூறினால்..

ஓஹ் என்றால்.. வேறேதும் கேட்காமல்.

என்ன ஆச்சு குழலி ஏன் தனியா பஸ் ஸ்டாப் வந்திங்க என்றால்??

குழந்தையை அவர்கள் அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு இருவரும் பேச தொடங்கினர்..

குழலிக்கும் யார் இடமாவது அவள் மனதில் இருப்பதை கூறினால் தேவலாம் போல தான் இருந்தது. இருந்தும் அவள் ரஞ்சனியிடம் எதுவும் கூறவில்லை..

ரஞ்சனிக்கும் அவள் நிலை புரிந்தது.. சரி விடு குழலி நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. அப்பறம் லைப்லாம் எப்படி போது? பாப்பாக்கு ஒன் இயர் ஆகிடுச்சுனு சொன்னாங்க நடக்க ஸ்டார்ட் பண்ணிட்டாளா என்று கேட்டு கொண்டே குழந்தையை தூக்கி அவள் மடியில் வைத்து கொண்டால்..

ஹ்ம்ம் இப்போ தான் ஒன் மன்த்தா நடக்குறா.. இப்போ கொஞ்சம் ஓடவும் ஸ்டார்ட் பண்ணிட்டா என்று குழந்தையை பற்றி கூறும் போது மட்டும் அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை கவனிக்க தவறவில்லை ரஞ்சனி..

அதே நேரம் அவளுக்கு அந்த வீட்டில் ஏதோ பிரச்சனை இருப்பது போலவும் தோன்றியது.. ஆனால் வற்புறுத்தி கேட்கவில்லை.. அதன் பின் பொதுவான விஷயங்களை பற்றி பேசினார்கள்..

அவள் அருகில் இருந்த அவள் இரும்பு பெட்டியை பார்த்துவிட்டு, குழலி உங்க ஊருக்கு கிளம்பிட்டீங்களா என்று கேட்டால்.. அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் ஆம் என தலை அசைக்க..

ஆனா ஏன் தனியா பஸ் ஸ்டாப் வந்து இருக்கீங்க வழி அனுப்ப கூடவா யாருக்கும் அந்த வீட்ல நேரம் இல்லை.

ரஞ்சனிக்கு கல்யாண சுந்தரமை தவிர அந்த வீட்டில் மிச்சமிருக்கும் மூன்று பேர் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லை..

இரு மகன்களும் அன்னையின் மீது பாசம் வைத்துள்ளார்கள் என்று சூர்யாவுடம் சேர்த்து விஷ்வாவையும் அந்த லிஸ்டில் தான் வைத்துள்ளாள்..

குழலியின் தயக்கமும் கள்ள முழியும் அவளுக்கு உண்மையை கூறியது. என்ன குழலி யார்கிட்டயும் சொல்லாம வந்துட்டீயா என்றால்..

அவள் ஆம் என்பதாய் தலை அசைக்க.. பெருமூச்சு விட்டவள், பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை..

காரணம் அவள் அறிந்ததே, பிரச்சனை மகேஷ்வரியால் வந்து இருக்கும் அல்லது மயூரியால் வந்து இருக்கும் என்பது வரை யூகித்து இருந்தால்..

தப்பு குழலி, சுந்தரம் மாமா ரொம்ப வருத்த படுவாரு.. அவர்கிட்ட நீ சொல்லிட்டு வந்து இருக்கனும் என்றால்.

அவள் மூளைக்கும் அது உறைக்காமல் இல்லை. இருந்தும் ஏதோ ஒரு கோவத்தில் கிளம்பி வந்து விட்டால்.

அது அது என்று அவள் குற்ற குறுகுறுப்பில் தயங்க, சரி விடு நீ என்கூட இருக்கறத நான் அவருக்கு சொல்லிடறன் என்று சுந்தரம் அவருக்கு அழைத்தால்..

சரசு, சுந்தரம் விஷ்வா இருவருக்கும் அழைத்து ஓய்ந்து போனால்.. சிறிது நேரத்திலே திரும்ப கூப்பிட்டவர் என்ன ஆச்சு சரஸ்வதி ஏன் இவ்ளோ முறை கால் பண்ணி இருக்க என்க..

ஐயா அது வந்து என்று குழலி தான் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு சென்றதை கூறி முடித்தால்.

எதிர் புறம் இருந்த சுந்தரமிற்கு படபடப்பு தொற்றி கொள்ள, கோவம் முழுவதும் மகன் மீதும் காலையில் வந்த மயூரியின் மீதும் திரும்பியது.

வேகமாக அழைப்பை துண்டித்து சூர்யாவிற்கு அழைத்து அனைத்தையும் கூறினார். விஷ்வா கிட்ட எல்லாத்தையும் சொல்லு சூர்யா, அவன் அந்த மயூரிய கூட்டிட்டு எங்கயாச்சும் போய் இருப்பான் என்று காட்டமாகவே கூறினார்.

சரிப்பா நீங்க வீட்ல இருங்க, நானும் அண்ணாவும் சேர்ந்தே அண்ணிய தேடுறோம். அண்ணியும் பாப்பாவும் எங்க இருந்தாலும் அழைச்சிட்டு வரோம் நீங்க டென்ஷன் ஆகி பிரஷர் ஏத்தீக்காதீங்க என்றான்.

நான் பாத்துக்குறன் டா, நீ நேரத்தை விரயம் பண்ணாம போய் குழலிய தேடு என்று அழைப்பை துண்டித்தார்.

போனை வைத்தவர் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.

சூர்யா விஷ்வாவிற்கு அழைக்க இரண்டாம் முறையில் அழைப்பு ஏற்க்கபட்டது.

டேய் கால் பண்ணா எடுக்க மாட்டியா எத்தன டைம் கால் பண்றது என்று அழைப்பு ஏற்க்கபட்டதும் படபடவென பொரிந்தான்..

ஹேய் ஏன்டா இப்படி கத்துற என்ன ஆச்சுன்னு சொல்லு என்று விஷ்வாவும் சற்று எரிச்சலுடன் கூற,..

ஹான் உன் பொண்டாட்டி குழலி குழந்தைய தூக்கிட்டு வீட்ட விட்டு போய்ட்டாங்க என்றான் பட்டென்று..

முதலில் என்ன உளறுகிறான் என்று நினைத்த விஷ்வா, என்ன சொல்ற தெளிவா சொல்லு என்றான் மனதில் ஏற்பட்ட சிறு அதிர்வுடன்..

கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டு, காலைல நீ மயூரிய கூட்டிட்டு வெளிய போன கொஞ்சம் நேரத்துல குழலி அண்ணியும் பாப்பாவ தூக்கிட்டு வீட்ட விட்டு போய்ட்டாங்கலாம், சரசு அம்மா உனக்கு நிறைய முறை கால் பண்ணி இருக்காங்க நீ எடுக்கல..

அப்பா தான் எனக்கு கால் பண்ணி எல்லாம் விஷயமும் சொன்னாரு என்றான்..

அந்த பக்கம் கேட்டு கொண்டிருந்த விஷ்வாவிற்கு முதலில் கோவம் தான் வந்தது.. பின் தன்னை சமன் செய்து கொண்டவன், இப்போ எங்க இருக்க என்றான் தம்பியிடம்.. வீட்டுக்கு போயிட்டு இருக்கன் இப்போதான் அப்பா போன் பண்ணி எல்லாம் சொன்னாரு.. சோ யூ டர்ன் போட்டு பஸ் ஸ்டாண்ட் போக போறன் என்றான்.. நானும் விஜயா மால்ல தான் இருக்கன் வரன், என்றவன் மயூரியை தேடி சென்று வேல இருக்கு, நீ பார்த்துக்கோ என்று கூறினான்..

மயூரியின் முகத்தை பார்க்க வேண்டுமே, ஏன் விஷ்வா இப்படி பண்றிங்க என்கூட இருக்க பிடிக்கலன்னா நேரா சொல்லுங்க. எதுக்கு இப்படி கூட்டிட்டு வந்து அசிங்க படுத்துறீங்க. என்று அவள் ஒரு பக்கம் பொறிய, கடுப்பாகி போனான் விஷ்வா.

வாய மூடு, மயூரி என்று கத்தியவன்,
வெலட்டில் இருந்த அவன் கார்ட்டை அவளிடம் கொடுத்துவிட்டு, இத வச்சு ஷாப்பிங் பண்ணு, இதுக்கு தான, என்ன கூட்டிட்டு வந்த என்று எரிச்சளோடு கூறி அவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

மயூரி பாக்கியம் அவளுக்கு அழைத்து வீட்டில் நடந்ததை பற்றி தெரிந்து கொண்டால்..துளி அளவும் அவள் வீட்டை விட்டு சென்றதில் சந்தோஷம் இல்லை, காரணம் இப்போது விஷயம் கேள்விப்பட்டு விஷ்வா அவளை விட்டு பதறி கொண்டு சென்றது தான்..குழலி மீது வன்மம் கூடியது.

இதன் இடையில் விஷ்வா பணத்திற்காக தானே என்னை அழைத்து வந்தாய் என்று கூறியதை மயூரி மறந்து விட்டால்.. மறந்துவிட்டாளா அல்லது அந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையா என்பது அவளுக்கே வெளிச்சம்.

விஷ்வா சூர்யாவுடன் சேர்ந்து குழலியை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஆளுக்கு ஒரு புறமாக தேடி கொண்டு இருந்தனர், அப்போது  சூர்யாவிற்கு சுந்தரம் அழைத்து குழலி ரஞ்சனியுடன் காஃபி ஷாபில் இருப்பதாக கூறி ரஞ்சனி அனுப்பிய லொகேஷனை சூர்யாவிற்கும் அனுப்பினார்.

சூர்யா விஷ்வாவிற்கு அழைத்து தந்தை கூறிய அனைத்தையும் கூறினான்.. பின் இருவரும் அந்த காஃபி ஷாப்பினுள் நுழைய, அங்கு மூவரையும் கண்டு கொண்டனர்..

அண்ணன் தம்பி இருவரும் அவர்கள் இருக்கும் டேபிளை நெருங்கினர்.. அதில் குழலி குழந்தையை தூக்கி கொண்டு எழுந்து நிற்க, ரஞ்சனி  விஷ்வாவை கண்டதும் வந்துட்டான் லாம்ப் போஸ்ட் என்று முனுமுனுத்து  எழுந்து நின்றாள். விஷ்வா அவளை கண்டு கொள்ளவில்லை.

விஷ்வாவிற்கு குழலியை கண்டதும் அப்படி ஒரு கோவம் இருந்தும் பொது இடம் கருதி, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

சூர்யாவிற்கு அங்கு ரஞ்சனியை கண்டதும் எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. அவன் ரஞ்சனியை பார்த்து கொண்டிருக்க, ரஞ்சனி அவனை பார்க்காமல் தவிர்த்தால்.. அவள் தன்னை தவிர்ப்பதை உணர்ந்தவன் இன்னும் கோவம் உற்றான்.

விஷ்வா குழலியை நெருங்கியவன், வா போலாம் என்றான்.. அவள் குழதையை அனைத்து கொண்டு, நான் அந்த வீட்டுக்கு வர்ல என்ன எங்க ஊருக்கு பஸ் ஏத்தி விடுங்க என்றால்.

பற்களை கடித்தவன் ரஞ்சனிக்கு கேட்காத வண்ணம், மரியாதையா என்கூட கிளம்பி வா இல்ல பொது இடம்னு கூட பார்க்க மாட்டன் என்றான்.

இடை புகுந்த ரஞ்சனி, விஷ்வா நான் வேணும்னா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு 2 டேஸ் கழிச்சு குழலியையும் பாப்பாவையும் உங்க வீட்டுக்கு அனுப்பவா என்றால்..

இது புருஷன் பொண்டாட்டி விஷயம் நீ எதுக்கு தலையிடுற?? அதுவும் இது எங்க குடும்ப விஷயம் மூணாவது மனுஷி நீ உள்ள வராத. இவ்ளோ நேரம் என் பொண்டாட்டிய பத்திரமா பார்த்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி இப்போ இங்க இருந்து கிளம்பு என்று அவள் மேல் உள்ள கோவத்தை வெளிப்படுத்தினான் விஷ்வா. ஏன் இந்த கோவம் எல்லாம் தப்பியின் காதலை நிராகரித்ததற்கு தான்.

அவன் பேச்சில் தன்னை தள்ளி நிறுத்தியதையும், அவன் கோவத்தையும் பெரிதாக கண்டு கொள்ளாதவள். குழலியிடம், போய்ட்டுவரன் குழலி எதுவா இருந்தாலும் எனக்கும் அப்பாக்கும் கால் பண்ணு. உனக்கு நாங்களும் இருக்கோம் என்று விஷ்வாவை முறைத்து கொண்டே கூறினால்..

விஷ்வா அவளை கண்டு பெரிதாக உச்சு கொட்டியவன்.. போய் தொல என்று வாய்விட்டே கூறினான். போடா லாம்ப் போஸ்ட் என்று வாயினுள் முனுமுனுத்தவள். அவனை இடித்து விட்டு சூர்யா முகத்தையும் பாராமல் அங்கிருந்து சென்றால்.

அண்ணன் தம்பி இருவரும் இப்படி தான் ரஞ்சனியிடம் வம்பு வளர்த்து சண்டை பிடித்து எலியும் பூனையுமாக அடித்து கொள்வார்கள்.

இதில் இந்த இரண்டு வருடமாக தான் சூர்யா ரஞ்சனியிடம் மயங்கியது. அதற்கு முன்னாள் விஷ்வாவை விட சூர்யா தான் அதிகமாக ரஞ்சனியை கேலி செய்து அவளிடம் இருந்து அடிகளை பாரபட்சம் பார்க்காமல் வாங்கி கொள்வான்.

சரி இப்போது விஷ்வா குழலி பிரச்சனைக்கு வருவோம்.

ரஞ்சனியும் சென்றுவிட்டாலே, குழலி விஷ்வாவை பார்க்க பயந்து கொண்டு தலை தாழ்த்தி நின்றாள்.. சூர்யா விஷ்வாவிடம் நீ பேசி கூட்டிட்டு வா, நான் வீட்டுக்கு போறன்.. அப்பா அங்க டென்ஷன்ல இருக்காரு என்று அண்ணனிடம் இருந்து விடை பெற..

சூர்யா ஒரு நிமிடம் என்றவன் குழலி கையில் இருக்கும் பூரணி பாப்பாவை வாங்கி தம்பியம் கொடுத்து, பாப்பாவ பத்திரமா கூட்டிட்டு போ என்று குழந்தைக்கு முத்தம் கொடுத்து விஷ்வா கையில் ஒப்படைத்து அனுப்பினான்..

என் குழந்தை என்று அவள் விஷ்வா பின்னால் செல்ல போக அவங்க வீட்டுக்கு தான் போறாங்க, இரு என்று அவள் கையை முரட்டு தனமாக பற்றினான்.

என்ன விடுங்க நான் பாப்பா கூட போறன் என்று அவள் கையை அவனிடம் இருந்து விடுவித்து கொள்ள போராட, எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க. பிஹேவ் யுவர் செல்ப் குழலி என்றான் பற்களை கடித்து..

சுற்றி முற்றி பார்த்தவள்.. அதன் பின் அமைதியாகி போனால்.

குழலியை இழுத்து கொண்டு போய் பார்க்கிங்கில் உள்ள அவனின் காரினுள் தள்ளியவன், மறுபுறம் வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.. 10 நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தான்.

அவன் கோவத்தின் அளவு கார் சீறி பாயிந்ததில் அறிந்து கொண்டு வரும் அழுகையை அடக்கி கொண்டால்.

வீட்டின்னுள் நுழைந்தவர்களை சுந்தரம் பிடித்து கொண்டார்..

குழந்தை சூர்யா அறையினும் உறங்கி இருந்தாள்.

சுந்தரம், குழலியிடம் இன்னைக்கு காலைல என்ன நடந்துச்சு மறைக்காம சொல்லு என்றார் இறுகிய குரலில்.

அவள் மென்று விழுங்கினால். எதுவும் இல்ல மாமா, அம்மாவ பார்க்கணும் போல தோனுச்சு அதான் உங்ககிட்ட கூட சொல்லாம போய்ட்டன் மன்னிச்சிடுங்க என்றால்..

அவள் மயூரியை பற்றி தன் மாமனாரிடம் கூற விரும்பவில்லை.. எங்கே அவர் விஷ்வா மீது கோவபட்டுவிடுவாரோ என்ற பயம் தான்..

ஏற்கனவே தந்தை மகன் பேசாததிற்கு இந்த திருமனம் தான் காரணம் என்று கொஞ்சம் அறிந்து வைத்து இருந்தால்.. இதில் மயூரி தன்னிடமும் குழந்தையிடமும் நடந்து கொண்டதை கூறினால் பிரச்சனை வேறு விதமாக திரும்பும் என்று பக்குவமாக யோசித்தவள்..

மன்னிச்சிடுங்க மாமா, இனிமேல் இப்படி நடக்காது.. நான் மேல போறன்  என்று கலங்கிய விழிகளை யாருக்கும் காட்டாமல் மேலே படியேறி சென்றால்.

சுந்தரம் பொதுவாக கூறினார். குழலி தான் இந்த வீட்டு மருமக, இதல தேவை இல்லாம யாராச்சும் உள்ள நுழைஞ்சா அப்பறம் நான் பொல்லாதவனா ஆகிடுவன் என்று பின் கை கட்டி கூறியவர் விஷ்வாவை முறைத்து விட்டு உள்ளே சென்றார்.

விஷ்வா தந்தையின் வார்த்தைகள் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

சூர்யாவிடம் திரும்பி பாப்பாவ பார்த்துக்கோ நானே வந்து தூக்கிகுறன் என்று கூறியவன் குழலியை காண மேலே சென்றான்.

மேலே வந்த குழலி கட்டிலில் விழுந்து தலையனயினுள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.


 

 

 

 

 

 

22. கண்கள் நிறைந்த ஓவியமே!!
கோவமாக அறைக்கு வந்த விஷ்வா மெத்தையில் நத்தை போல் சுருண்டு அழுது கொண்டிருந்த குழலியை தான் கண்டான். அவள் அழுவதை கண்டு மனம் கனத்தாலும் கோவமும் வந்தது.

கதவை தாழிட்டு அவள் அருகே சென்றவன் இடுப்பில் கை வைத்து, குழலி எழுந்திரு என்றான்.. அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்து கொண்டால் ஆனால் கண்களையும் திறக்கவில்லை, எழுந்து கொள்ளவும் இல்லை.

பொறுமை இழந்தவன் அவனே அவள் முழங்கையை பிடித்து ஒரே இழுப்பில் தூக்கி நிறுத்தினான். அப்போது தான் கண்களை திறந்து அவனை பார்த்தால் குழலி.

எதுக்கு டி இப்போ அழுதுட்டு இருக்க? நீ பண்ண காரியத்துக்கு எங்க நம்மள திட்ட போறாங்கனு நீயே திட்றதுக்கு முன்னாடி அழுது சீன் போடுடுறியா என்றான்..

குழலி எதுவும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டு அமைதியாக நின்றாள்..

அதில் மேலும் கடுப்பாகியவன், வாய திறந்து பேசு குழலி நீ இப்படி அமைதியா இருக்கறது எனக்கு இன்னும் கோவம் வருது..

சொல்லு எதுக்கு வீட்டை விட்டு போன? என்றான் கோவம் குறையாது.

அவள் வீட்டை விட்டு சென்றுவிட்டால் என்று சூர்யா சொன்னதும் அவன் உள்ளுக்குள் துடித்ததை அவனே அறிவான்..

வெளி உலகம் அறியாதவள் குழந்தையை தூக்கி கொண்டு தனியே எங்கு சென்றால்? கயவர்கள் கையில் மாட்டி கொண்டால் என்ன செய்வது? என்ற பல்வேறு எதிர்மறை எண்ணங்கள் தோன்றிய அவன் மனதை அடக்கவே முடியாது தவித்தான்.

பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு இடமாக தேடும் பொழுதும் அவன் முகத்தில் அமைதி குடிக்கொள்ளவில்லை.

இறுதியில் அவள் ரஞ்சனியுடன் இருக்கிறாள் என்று தெரிந்து அவளை  கண்ட பின் தான் அவன் மூச்சு சீரானது.

எனக்கு இங்க இருக்க பிடிக்கல, என்ன கொண்டு போய் எங்க ஊர்ல விட்டுடுங்க என்றால்.

இங்க இருக்க பிடிக்கலையா? ஏன் என்றான் ஒற்றை கேள்வியாக?

ஏன்வா? என்று கெட்டு கலங்கிய கண்களை துடைத்து கொண்டவள்.. எல்லாரும் என் பொண்ண போட்டு அடிக்கறத என்னால பார்த்துட்டு இருக்க முடியல? அவ என்ன யாரும் இல்லாத அனாதையா அம்மான்னு நான் ஒருத்தி உயிரோடதான் இருக்கன் என்ற போது அவள் கண்கள் தன்னால் கலங்கியது.

அவளுக்கு அப்பாவா நானும் இருக்கண்டி என்று அவனை மீறி வார்த்தைகள் மனதில் எழுந்தன.

என் முன்னாடியே எல்லாரும் போட்டு அடிக்குறிங்க.. அன்னைக்கு உங்க அம்மா என் பொண்ணு தலைல குட்டுனாங்க, நீங்க முதுகுல போட்டு அடிக்குறிங்க, உங்க காதலி என் பொண்ண தொடைல கிள்ளி விடறா.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்?

போதும்டா சாமி எல்லாம் போதும்.. என்று கை எடுத்து கும்பிட்டவள்..
கஷ்ட்டமோ நஷ்ட்டமோ நான் எங்க அம்மா கூடவே இருந்துக்குறன்.

நானும் எங்க அம்மாவும் கூட இதுவரைக்கும் என் பொண்ண அடிச்சது இல்லை.. நீங்க எல்லாரும் அவள அடிக்கும் போது பத்து மாசம் சுமந்து பெத்த வயிறு எல்லாம் கலங்குது.

எங்கள விட்ருங்க என்று கெஞ்சினால்..

விஷ்வாவிற்கு அவளின் தாய்மை கொண்ட மனம் புரிந்தது. அவள் நிலையில் இருந்து யோசித்தான்.

நான் உங்கள கல்யாணம் பண்ண சம்மதிச்சதே, என் பெண்ணுக்காக தான், அவ சந்தோஷமா இருப்பா அவ எதிர்காலம் நல்லா இருக்கும்னு நினைச்சு தான் உங்கள கல்யாணம் பண்ணிக்குட்டன். ஆனா இப்போவே எனக்கு என் பொண்ணோட எதிர்க்கலாம் நல்லா தெரியுது.

அன்னைக்கு அப்படி தான் உங்க காதலி என்ன மிரட்டுறாங்க என்று ஏதோ ஒரு வேகத்தில் வாய் தவறி கூறிவிட்டால்.

விஷ்வாவின் பார்வை கூர்மையாகியது.

சட்டென்று சுதாறித்தவள், அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் என்ன எங்க ஊருல கொண்டு போய் விட்ருங்க என்று மீண்டும் முதலில் இருந்து கூறினால்.

அவள் பேசியதை புறம் தள்ளியவன், மயூரி உன்கிட்ட பேசுனாளா என்றான்?

இல்லை என்று தலையாட்டினால்.

இப்போ என்ன சொல்ல வந்த முழுசா சொல்லு என்றான்.

அவள் சொல்ல கூடாது என்ற முடிவில் அமைதியாக இருக்க..

நீ உண்மைய சொன்னா உன்னையும் பாப்பாவையும் கொண்டு போய் ஊர்ல விடுவன் என்று அவள் மனம் அறிந்து கூற, அப்போதும் அவள் தயங்கி நின்றாள்.

பின் யோசனை வந்தவனாக, அலங்கார மேஜை மேல் இருந்த அவள் தொலைபேசியை எடுத்து சோதிக்க அதில் குழலி விஷ்வாவிற்கு கடைசியாக அழைத்த தியதியை கண்டு நெற்றி சுருக்கினான்.. பின் குழலியை பார்த்து கொண்டே அந்த பதிவை தொடு திரையில் இயக்க, அன்று குழலி பேசியதும் அதற்கு மயூரி அவளை மிரட்டியதும் என அனைத்தையும் தெளிவாக கேட்டான்..

அதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால் அவர்கள் பேசியது தானியங்கி பதிவு மூலம் பதிவாகி இருப்பது குழலிக்கே தெரியாது.

அவள் இன்னும் தொலைபேசி உபயோகிப்பதில் தேர்ச்சி பெறவில்லை.. அம்மாவிற்கு அழைப்பால், வரும் அழைப்புகளை ஏற்பால், குழந்தையை விதவிதமாக புகைப்படம் எடுப்பால். அவ்வளவு தான் தொலைபேசியில் அவள் உபயோகிப்பது..

விஷ்வா அனைத்தையும் கேட்டதில், அவள் திருத்திருவென முழித்து கொண்டு நின்றாள்.. ஆனால் விஷ்வா குழலியை கடிந்து கொள்ளவில்லை.. ஏற்கனவே மன உளைச்சளில் இருப்பவளை மீண்டும் ஏன் என்கிட்ட இத சொல்லல என்று கேட்டு அவளை துன்புறுத்த வேண்டாம் என்று நினைத்தான்.. ஆனால் மயூரியின் இன்னொரு முகத்தை கண்டு நம்ப முடியாமல் தான் நின்றான்.

அவளிற்கு பணத்தின் மீது இருக்கும் ஆசை தன் மீது இருக்கும் மோகம் என அனைத்தையும் அறிந்தவனுக்கு அவளின் இந்த வில்லத்தனமான குணம் கொஞ்சம் புதிது தான்.. அதுவும் அவள் குழந்தையை வைத்து மிரட்டியத்தில் அவன் இன்னும் சூடேறினான்.

அதான் எல்லாம் தெரிஞ்சுடுச்சுல என்ன எப்போ கொண்டு போய் ஊர்ல விடுவீங்க என்றால்..

அதில் சுயம் தெளிந்தவன்.. அவளை பார்த்து கொண்டே கூறினான்.. நான் கேட்கும் போது நீயே எல்லாத்தையும் சொல்லியிருந்தா உன்ன கொண்டு போய் ஊருல விட்ருப்பன், இப்போ நானே தான கண்டு புடிச்சன் அதனால உனக்கு வேற வழியில்ல நீ இங்க என்கூட தான் கடைசி வரைக்கும் இருந்து ஆகணும் என்றான் அவள் கண்களை பார்த்து கொண்டே.

முடியாது நான் எங்க ஊருக்கு போவன் என்று அவள் வீம்பாக கூற..

அவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்கினான்.. அவன் முன்னே அடிகளை எடுத்து வைக்க அவள் பின்னே நகர்ந்தால்.

மந்தகாசமாக சிரித்தவன்.. அவள் இருபுற தோள்களை பிடித்து அவள் பின்னே செல்லாமல் நிறுத்தினான்.

கண்ணீர் வடிந்த கண்ணங்களை  துடைத்துவிட்டு, அழாத கஷ்ட்டமா இருக்கு என்றான்.

உனக்கு சத்தியம் பண்ணி தரன் குழலி இனி பூரணி பாப்பா மேல யாரையும் கைவைக்க விட மாட்டன். நான் அன்னைக்கு அடிச்சதுக்கு மன்னிச்சுடு என்றான்.

என்ன நம்பறியா என்று கேட்டான்.. பொம்மை போல் ஆம் என்று தலையாட்டினாள்.

அப்போ இனிமேல் இந்த வீட்டை விட்டு போகணும்னு நினைக்காதா என்றான்.

அவன் பேச்சிற்கு மகுடிக்கு மயங்கிய பாம்பாக மயங்கி நின்று தலையாட்டினால்..

நேரம் மாலை ஐந்தை தொட்டு இருக்க போய் பிரெஷ் ஆகிட்டு வா வெளியே போலாம்..

எங்கே என்று அவள் கேட்க? மேடம் எங்கன்னு தெரிஞ்சா தான் என்கூட வருவிங்கள என்றான் அதில் உதட்டை சுழித்தவள், குளியலறை புகுந்து கொண்டால்.

பத்து நிமிடத்தில் வெளியே வாந்தவலை தன்னருகே அழைத்து, அவள் கைகளை பிடித்து அவள் கழட்டி வைத்து இருந்த தங்க வளையல்களை அணிவித்தான்.

பின் அவள் புது மஞ்சள் கயிற்றோடு இருந்த வெண் சங்கு கழுத்தை கண்டவன் என்ன நினைத்தானோ சிறிதும் யோசிக்காமல் அவன் கழுத்தில் உருட்டு வடிவில் கனமாக இருந்த சங்கிலியை கழட்டி மெதுவாக மென்மையாக அவள் கண்களை பார்த்து கொண்டே அவளுக்கு அணிவித்து விட்டான், அவளும் அவன் கண்களை தான் பார்த்து கொண்டு இருந்தால்.

அவன் அணிவித்து முடித்ததும், மாய உலகில் இருந்து வெளியே வந்தவள் போல் அவள் கழுத்தில் அணிவித்த சங்கிலியை கண்டு இ.. இ தலாம் வேண்டாம் என்று வார்த்தை வராமல் தயங்கினால் ஆனால் கழட்டவில்லை.. கழட்ட மனம் இல்லை.

ப்ளீஸ் என்றான்..

அதற்கு மேல் வேண்டாம் என்று மறுக்கவில்லை.. முன்பு போல் நான் உங்களை விட்டு சென்றதும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் கூறவில்லை. சொல்ல போனால் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது விஷ்வா இப்போது செய்த செயலால்.

எப்பவும் கழட்ட கூடாது என்ற கட்டளையும் விதித்தான்.

சரி என்றால்.

அவன் மெத்தையில் வைத்த குர்த்தா செட் ஒன்றை எடுத்து அவள் கையில் கொடுத்து இத போட்டுக்கோ என்றான்..

அதற்குள் அவனும் குளியல் அறை சென்று குட்டி குளியல் போட்டு வெளியே வந்தவன்.

குழலி என்று ஏதோ சொல்ல வந்தவன், அவன் முழு நீள டீஷேர்டின் கை பகுதியை முழங்கை வரை ஏற்றி விட்டு கொண்டே அவள் முகம் கண்டான்..

அதற்குள் குழலியும் அவன் கொடுத்த உடை அணிந்து இருந்தால்.
நீண்ட கூந்தளை இருபக்கமும் முடி எடுத்து அழகாக கேட்ச் க்ளிப்பில் அடக்கி இருந்தால்.. அவளின் நீண்ட பட்டு  கூந்தலின் அழகை கண்டு சொக்கி நின்றான்..

அரையடி கூந்தல் மீது அவன் கொண்டு இருந்த ஆசையை இப்போது யாராவது அவன் காதில் ஓதினால் முகம் அஷ்ட்ட கோணலாக மாறும் என்பது திண்ணம்.

எதுவும் பேசாமல் அவளிடம் சென்று கண்ணாடி அருகே நின்றவன், இருவரையும் கண்ணாடியில் ரசித்து நின்றான். குழலி அவன் மார்புவரை மட்டுமே இருந்தால்.. இருந்தும் இருவரும் அழகாகவே இருந்தனர்.

மேஜையினுள் இருந்த வெள்ளி குங்கும சிமிழை எடுத்து அதில் இருந்த குங்குமத்தை குழலியின் உச்சியில் அடர்த்தியாக வைத்து விட்டான்.. குழலி பூரண கும்பமாக நிறைந்தால்..

கண் மூடி நின்றாள்.. குழலிக்கு இந்த உணர்வெல்லாம் புதிதாக இருந்து.. அவள் வயதுக்கே உண்டான ஹார்மோன் பூக்கள் உடலினுள் கொத்து கொத்தாக பூக்க தொடங்கியது.. சிறு பெண்ணவளால் இந்த உணர்வுகளை எல்லாம் தாங்க முடியவில்லை..

விஷ்வா அவளிடம் நடந்து கொள்வது எல்லாம் புதிதாக இருந்தது.. ஆனால் பிடித்தும் இருந்தது.

பின் பக்கவாட்டு நெற்றியில் முத்தமிட்டு சீக்கரம் கிளம்பு என்று கூறிவிட்டு பால்கணியில் போய் நின்று கொண்டான் சுகமான மன நிலையில்..

கண்மூடி மாலை நேர தென்றலை அவன் முன் நெற்றி கேசம் பறக்க அனுபவித்தான்..

அன்று இதே பால்கணியில் குழலியிடம் பிரிந்து விடலாம் என்று கூறியது நினைவில் வந்தது.

முட்டாள் என்று தன்னையே கடிந்து கொண்டவன், குழலி எனக்கானவ என்று மனதோடு கூறி கொண்டான்.


தொடரும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

23. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலியை அழைத்து கொண்டு கீழே வந்தவன், சூர்யாவிடம் பாப்பாவ பார்த்துக்கோ நாங்க வெளிய போறோம் வர நேரமாகும் என்றான்..

நான் அப்பாலாம் இருக்கோம்ல நாங்க பார்த்துக்குறோம். நீங்க பாப்பாவ நினைச்சு கவலை படமா போய்ட்டு வாங்க என்றான் சூர்யா.

விஷ்வா அவனது யமஹா mt 15 பைக் அருகில் சென்று ஸ்டார்ட் செய்ய குழலி அலறிவிட்டால். ஹய்யோ இது என்ன இப்படி இருக்கு நான் எங்க கை பிடிப்பன்? எங்க கால் வைப்பன்? நான் கீழ விழுந்துடுவன். நான் இதல வர மாட்டன் பா..என்று அவனை பேச விடாமல் இவள் மட்டும் புலம்பினால்.

அதலாம் ஒன்னும் ஆகாது குழலி. நான் இருக்கன் வா, பத்திரமா கூட்டிட்டு போறன் என்றான். இல்ல இல்ல எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ் நான் வரல என்று அவள் பிடிவாதமாக கூற, ப்ச் இப்போ என்ன பண்றது என்று நெற்றியை தேய்த்தவன் இரு கார் கீ கொண்டுவரன் என்று உள்ளே சென்றான்.

கார் கீயோடு திரும்பி வந்தவன், உர்றென்று முகத்தை வைத்து கொண்டு, வா போலாம் என்றான் குழலியிடம்..

காரில் ஏறியவள் அவனோடு நெருங்கி அமர்ந்து கொண்டு எனக்கும் உங்க கூட, பைக்ல போகணும்னு ஆசையா தான் இருக்கு. ஆனா அந்த வண்டில உக்கார ரொம்ப பயமா இருக்கு ஷிவா என்றால்.

சரி விடு, என்று மெலிதாக சிரித்து, பயணத்தை தொடங்கினான். இருவரும் சென்றது ஐபக்கோ, குழலி இதுவரை ஐஸ் கிரீம் உண்டதில்லை. அதனால் அவளுக்கு அவனே ஆர்டர் செய்தான்.

குழலி இன்னைக்கு நீ பாப்பாக்கு ஃபீட்  பண்ணாத என்றான் உரிமையாக..

ஏன் ?

நீ ஐஸ் கிரீம் சாப்பிட்டு பாப்பாக்கு ஃபீட் பண்ணா பாப்பாக்கு சலிப்புடிக்கும்..

அப்போ நான் சாப்பிடல வேண்டாம் என்க, ஹேய் ஒன் டே தான குழலி  டேஸ்ட் பண்ணி பாரு என்றான்.

வண்ண வண்ண நிறத்தில் பனிக்கூழை பார்க்கும் போது அவளுக்கும் ஆசையாக இருக்க, சரி என்றால். அவர்கள் ஆர்டர் செய்த பனிகூழ் வர, ரசித்து ருசித்து உண்டால். விஷ்வா பேசுவதை கூட காதில் வாங்காதவள் ஐஸ் கிரீம் உண்பதிலே முழு கவனத்தையும் செலுத்தினால்.

அவள் சப்பு கொட்டி உண்ணும் அழகை அவன் தொலைபேசியில் புகைப்படமாகவும் வீடியோவாகவும் சேமித்து கொண்டான்.

இன்னும் ஒன்னு வேண்டும் என்று ஆரம்பித்தவள் ஐஸ்கிரீம் ஸ்டாக் இல்லை, என்று கூறும் வரை உண்டு முடித்தால்..

பின் விஷ்வா தான் அவளை கொஞ்சம் உருட்டி மிரட்டி அடுத்த இடத்திற்கேய் அழைத்து சென்றான்.

வர வர நீ சொல்ற பேச்சே கேக்க மாற்ற குழலி என்று கடிந்து கொண்டு மீண்டும் பயணத்தை தொடங்கினான்.

இருவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றனர்.

அந்த இரவு பொழுதில், கடற்கரை காற்றில் காலார நடந்தார்கள், குழலி ரொம்ப கூட்டமா இருக்கு தொலைஞ்சு போய்டுவ, என் கை பிடிச்சுக்கோ என்றான். அவளுக்கு அவன் சொன்ன காரணம் சிரிப்பை வர வைத்தாலும், அவளும் அவன் சொல்வதற்கு தான் காத்திருந்தேன் என்பது போல், அவன் கை விரல்களை கோர்த்து கொண்டால்..

அவள் மென்மையான கைகளை கோர்த்து கொண்டவனால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியவில்லை.. அவள் கைகளை கூசி, அழுத்தி, விரல்களோடு இறுக்கி பிடித்து என அவள் மென்மையை இதமான மனதுடன் உள்வாங்கி கொண்டு இருந்தான்.

பௌர்ணமி வெளிச்சத்தில் ஆர்ப்பரிக்கும் கடற்கரை இன்னும் அழகாக இருந்தது.

ஏக குஷியாகி போனவள், தண்ணீரில் இறங்கி ஆட்டம் போட துவங்கினால்..

அவளை ஆழத்திற்கு செல்லாமல் பிடித்து வைப்பதே விஷ்வாவின் வேலையாகி போனது. ஒரு கட்டத்தில் விஷ்வாவையும் தண்ணீரில் இழுத்து அவன் முகத்தில் உப்பு நீரை வாரி இறைத்து என அங்குள்ள சின்ன குழந்தைகளை விட அதிகமாக குறும்பு பண்ணினால்.

விஷ்வாவும் மிரட்டுவது போல் பாவனை காட்டி அவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் சென்றான்..

குழலியை தனியாக தண்ணீரில் நிற்க வைத்து வித விதமாக புகைப்படங்களை எடுத்தான். பின் இருவரும் சேர்ந்து நின்று செல்ஃபிகளையும் எடுத்து கொண்டனர்.

ஷிவா எனக்கு இந்த ஊர் ரொம்ப புடிச்சு இருக்கு, எங்க ஊர்லனா இந்த மாதிரி கடற்கரையே இல்ல தெரியுமா என்றால்.

தூரத்தில் படகு போவதை கண்டவள், ஷிவா எனக்கும் அதல போகனும் என்று அவன் கையை பிடித்து உளுக்கி எடுத்தால்.

இது அவங்க மீன் பிடிக்க, பயன்படுத்துவாங்க, நான் இன்னொரு நாள் உன்ன கப்பல்ல கூட்டிட்டு போறன் குழலி என்றான். சமத்து பொண்ணாக கேட்டு கொண்டால்.

பின் அங்குள்ள சோளம் வாங்கி கொடுக்க விரும்பி உண்டால். விஷ்வா மீன் வேண்டும் என்று அங்குள்ள கடையில் மீன் வறுத்து தருவதை பார்த்து கேட்டால்..

ஹேய் அதலாம் வேண்டாம்.. ஆயில் சுத்தமா இருக்காது. எப்படி செய்வாங்கனு தெரியாது நம்ம வீட்ல நாளைக்கு மீன் சமைக்கலாம் என்றால்.

நாளைக்கு திங்கள் கிழமை விஷ்வா நான் அசைவம் சாப்பிட மாட்டன், மறந்துட்டீங்களா என்றால்.. சரி அடுத்த நாள் என்று அவன் தொடங்க, இல்ல எனக்கு இப்போ மீன் சாப்பிடணும் அதுவும் இந்த மீன் தான் வேணும் என்று அவள் அந்த கடையில் போட்டிருந்த, நாற்காலியில் கைகளை கட்டி அமர்ந்து கொண்டால்.

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவன், அற டம்ப்ளர் ரொம்ப பன்றா என்று இன்ஸ்டன்ட்டாக   தோன்றிய பெயருடன் செல்லமாக கடிந்து கொண்டு, அவளுக்கு வவ்வால் மீன் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

குழலி ரொம்ப அடம் பன்ற டி, என்றான். ஹீஈஈ என்று அவள் அரிசி பற்களை காட்டி இளிக்க.. அதற்கு மேல் அவனால் கோவப்படுவது போல் நடிக்க கூட முடியவில்லை..

சூடாக வந்த மீனை, கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஆறவைத்து அவளுக்கு ஊட்டிவிட்டான். அவளை குழந்தையை போல் பார்த்து கொண்டான்.

அவளும் அவனுக்கு ஊட்டி விட மறுக்காமல் வாங்கி கொண்டான். ஷிவா இன்னொரு மீன் வேணும் என்று அவள் ராகம் பாட, வேண்டாம் குழலி ஐஸ்கிரீம் சோளம் ஜூஸ் மீன் நிறைய சாப்பிட்ட, வயிறு வலிக்கும். அதுவும் நீ வெளில இருக்க ஃபுட்லாம் இப்போ தான் புதுசா சாப்பிடுற.. என்று பொறுமையாக எடுத்து கூற, எனக்கு வேணும் ஷிவா எனக்கு இந்த மீன் புடிச்சிருக்கு என்றால். இதற்கு மேல் என்ன சொன்னாலும் கேக்க மாட்டா என்று உணர்ந்தவன் மீண்டும் ஒரு மீனை எடுத்துவர கூறி அதையும் அவளுக்கு பொறுமையாக ஊட்டி விட்டான்.

பின் அவளை அழைத்து கொண்டு கேம்ஸ் உள்ள பக்கம் சென்றான்.. பலூன் ஷூட் பண்ணலாம் வா.. இரண்டு குண்டுகளை தவற விட்டவள் முகம் வாடி போக, அதை பார்த்தவன் மனம் தாலாது அவளை பின்னிருந்து அனைத்த வாக்கில் நின்று கொண்டு அவள் கழுத்து வளைவில் அவன் தாடை உரச அவளுக்கு சரியாக பலூன் சுடுவதிற்கு உதவினான் என்று கூறினால் அது மிக பெரிய பொய்..

இரண்டு கள்ள பூனைகளும் ஒருவரின் ஒருவர் அருகாமையை ரசித்து கொண்டு இருந்தனர்.. அவனின் அனல் மூச்சு அவளை வேர்க்க வைத்தது..

ஷி.. ஷிவா போதும் தள்ளுங்க என்று அதற்கு மேல் முடியாமல் குழலி திக்கி திணறி கூறிவிட்டால்.

பின் தலையை அழுந்த கோதியவன், விஷ்வா கண்ட்ரோல் டா கண்ட்ரோல் என்று மனதோடு சொல்லி கொண்டு பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்..

இருவருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.. கைகளை மட்டும் கோர்த்து கொண்டு அமைதியாக நடந்தனர். விஷ்வா அவள் முகத்தை பார்க்க குழலி ஏதோ தவறு இழைத்தது போல் அமைதியாக வந்தால்.

குழலி ஏன் எதுவும் பேசாம வர, என்றான் அவள் அமைதியை பொறுக்க முடியாதவனாய்.

ஒன்னும் இல்ல ஷிவா, என்று அவன் முகம் பார்த்து சிரித்தால்.

குழலி, என்கூடவே இருக்கியா? என்றான்..

அவன் கேட்டதில் முழித்தவள் அவனை பார்த்து சிரித்து உங்க கூடவே தான இருக்கன் என்றாள்..

கோர்த்து இருந்த கைகளை அழுத்தமாக பிடித்து, நடையை நிறுத்தியவன்..

அப்படி இல்ல குழலி, எனக்கு இத உன்கிட்ட எப்படி கேக்கறதுனு தெரியல, ஆனா எனக்கு உன்கூடவே இருக்கணும்னு தோணுது. நான் சொன்ன ரெண்டு வருஷம் இல்ல என்னோட வாழ்க்கை முழுசும்  உன்கூட இருக்கணும்னு தோணுது. நாம கணவன் மனைவியா எப்பவும் ஒன்னா இருக்கலாமா என்றான்.

ஷிவா இப்படி கேட்ப்பான் என்று குழலி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் மனதில் விஷ்வாவால் ஏற்பட்ட மாற்றங்களால் குழம்பி தவிக்கிறாள் தான். ஆனால் ஏற்ற இறக்கமான இந்த கல்யாண வாழ்க்கையை ஏற்று கொள்ள அவள் தயாராக இல்லை என்பதே உண்மை.

அவள் மறுப்பாக தலை அசைத்தால்.. இல்ல ஷிவா இந்த வாழ்க்கை நமக்கு எப்பவும் பிரச்சனை தான்.

இந்த வாழ்க்கைல என்னென்ன பிரச்சனை வரும்னு எல்லாம் நாம ஏற்கனவே பேசி இருக்கோம்.

நான் ஒரு உண்மைய சொல்லவா, உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி எல்லாரும் வற்புறுத்தன போது எனக்கு கஷ்ட்டமா இருந்துச்சு, இந்த கல்யாணம் வேண்டாம்னு கத்தி அழனும் போல தான் இருந்துச்சு..

ஆனா நீங்க என் கழுத்துல தாலி கட்டினதும், கல்யாணம் ஆகிடுச்சு இனிமேல் இதான் என் வாழ்க்கை, இந்த வாழ்க்கையாவது எனக்கு நிரந்தரமா குடுங்கன்னு தான் நான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டன்.

நீங்க என்கிட்ட நமக்குள்ள செட் ஆகாதுனு சொன்னிங்க அதுக்கான காரணத்தையும் எடுத்து சொன்னிங்க.. எனக்கு அப்போ கஷ்டம்மா தான் இருந்துச்சு.. யோசிச்சு பார்த்தன் நிதர்சனம் கொஞ்சம் புரிஞ்சிது.

உங்க அம்மா மீதிய புரிய வச்சாங்க. அப்போதான் இது என் தகுதிக்கு மீறி கிடைச்ச வாழக்கைனு உணர்ந்தன். யார் எங்க இருக்கணுமோ அங்க தான் இருக்கனும் ஷிவா.

நான் உங்களுக்கு சரியானவ இல்ல. உங்க அழகு, தகுதி, திறமை, பணம் எல்லாத்துக்கும் மயூரி தான் சரியா இருப்பாங்க.

அவங்கள எனக்கு பிடிக்காது தான் ஆனா, அவங்க தான் உங்களுக்கு சரியான பொருத்தம். அவங்க எடத்துல இருந்து யோசிச்சா அவங்க செய்யறது எல்லாம் சரி தான் ஷிவா..

என்ன பத்தி உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம். நீங்க சொன்னா மாதிரி நான் படிச்சிட்டு இருக்கன். எனக்கு என் பொண்ணு இருக்கா. என் வாழ்க்கைக்கு அவ மட்டும் போதும் என்றால் கலங்கிய விழிகளுடன்.

விஷ்வா எதுவும் பேசவில்லை. கலங்கிய அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கண்களை துடைத்து விட்டான்.

சின்ன பொண்ணுன்னு நினைச்சா எவ்ளோ பேச்சு பேசுறா என்று பெருமூச்சு விட்டான்.

ஆனால் அவன் அன்று பேசியது அவளை எவ்வளவு பாதித்துள்ளது எனவும் விஷ்வா புரிந்து கொண்டான்..

அவள் மனதில் நான் இருக்கிறேன் என்று அவளின் விழிணீரில் உணர்ந்து கொண்டான். ஆனாலும் அவள் காதலை வெளிப்படையாக பெற அதிகம் போராட வேண்டும் என்றும் தெரிந்து கொண்டான்.

இப்போது மேலும் மேலும் பேசி அவளை கட்டாய படுத்த வேண்டாம் என்று நினைத்தான். நான் விவாகரத்து கொடுத்தா தான குழலி என்ன விட்டு போவா.. நான் தான்  அவளுக்கு எப்பவும் விவாகரத்து கொடுக்க போவதில்லையே என்று மனதோடு நினைத்து சிரித்து கொண்டான்.

சரி வா குழலி வீட்டுக்கு போலாம் என்று அழைத்தான். அவளுக்கு தான் நான் பேசியதற்கு இவ்வளவு தானா உன் எதிர்வினை என்பது போல் அவனை உற்று பார்த்தால்..

அவள் எண்ணம் உணர்ந்தவன், இரு கன்னங்களின் உள்பக்கத்தையும் கடித்து கொண்டு வந்த சிரிப்பை அடக்கினான்.

பின் அவள் கையை முன்பு போல் கோர்த்து கொண்டு அவளோடு நடை பயணத்தை தொடர்ந்தான்.

வீட்டிற்கு சென்றவள் வயிற்று வலியில் அவள் ஷிவாவை ஒரு வழி ஆக்கிவிட்டால்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

24. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அமைதியான கார் பயணம், ஏனாம்?? குழலி தூங்கி கொண்டிருந்தாள் அதனால் தான் இந்த அமைதி. காரில் ஏறியதுமே தூக்கம் கண்ணை கட்ட ஷிவா என்று கூறியவள் அடுத்த பத்து நிமிடத்தில் தூங்கி இருந்தால்.. அதன் பின் வழியெல்லாம் விஷ்வா மீது தூங்கி தூங்கி விழுந்தால்..

மௌனமாக சிரித்து கொண்டவன், அவன் புஜம் மீது சாய்த்து இருந்த அவள் தலையில் இடது பக்கமாக சாய்ந்து முத்தம் கொடுத்தான். அவள் உபயோகிக்கும் சீயக்காய் வாசம் அவனை கிரங்கடித்தது.. மீண்டும் அவள் அருகே சென்று தலையினுள் ஆழ்ந்து சுவாசித்தான்..

வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.. குமரி வடிவத்தில் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை எழுப்ப மனமே இல்லை அவனுக்கு..

காரை விட்டு இறங்கி மறுபுறம் வந்தவன், பஞ்சு பொதியை போல் அழகாக கையில் ஏந்தி கொண்டான்.

சுந்தரம் மற்றும் சூர்யா இவர்களுக்காக காத்திருந்தவர்கள், விஷ்வா குழலியை தூக்கி வருவதை கண்டு முதலில் பயந்து அருகே சென்றவர்கள், விஷ்வாவின் கண் அசைவில் புரிந்து கொண்டனர் குழலி உறங்கி கொண்டிருக்கிறாள் என்று.

சுந்தரம் சூர்யா இருவரும் அர்த்தமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். விஷ்வா எதையும் கண்டு கொள்ளவில்லை. குழலியை மேலே தூக்கி சென்றவன் அவளை மெத்தையில் கிடத்தினான்.

தூக்கத்தில் சிணுங்கும் கிள்ளை போல் அவள் விஷ்வாவின் டீஷர்ட் காளரை பிடித்து சிணுங்கினால். அவனும் பூரணி பாப்பாவை தட்டி கொடுப்பது போல் அவன் புறம் திரும்பி படுத்து இருந்தவளை தோளில் தட்டி கொடுத்து, டோடோ டோ.. என்று தாலாட்டு போல் மென்மையாக ராகம் இசைத்து குழலியை தூங்க வைத்தான்..

பிறகு கீழே சென்றவன், இருவரையும் பார்த்து நீங்க சாப்பிட்டீங்களா என்று பொதுவாக கேட்டான்..சூர்யா தான் பதில் கூறினான் சாப்பிட்டோம் டா, இரு பாப்பாவ தூக்கிட்டு வரன் என்று உள்ளே சென்றவன் குழந்தையோடு வெளியே வந்து விஷ்வா கையில் பூரணி பாப்பாவை அழகாக இடம் மாற்றினான்..

தோளில் போட்டு தட்டி கொடுத்து, அவன் உடலை இடம் வலம் அசைத்து சிணுங்கிய குழந்தையை மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டு சென்றான்.

அவர்கள் அறைக்கு வந்தவன் குழந்தையை இருவருக்கும் நடுவில் கிடத்தி கொண்டு குழந்தையின் விரல்களை ஸ்பரிசித்து கொண்டு, குழலியை பார்த்து கொண்டே தூங்கி போனான்..

அவன் தூங்கிய ஒரு மணி நேரத்தில், ஏதோ விசும்பல் சத்தம் கேட்க அருகே திரும்பி பார்த்தான்.. குழலி தான் வயிற்றை பிடித்து அழுது கொண்டிருந்தால்..

பதறி போனவன், என்ன ஆச்சு குழலி ஏன் அழற என்று அவள் அருகே செல்ல முயல, குழந்தை ஆழ்ந்த நித்திரையில் இருந்தால்.. பின் மெதுவாக குழலி அருகில் சென்றவன் குழந்தையை தூக்கி சுவற்றோரம் படுக்க வைத்து தட்டி கொடுத்ததும் மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தால் பூரணி பாப்பா.

விஷ்வா தோளில் சாய்ந்து கொண்டவள் வயிற்றை பிடித்து கொண்டு மௌனமாக அழுதால்.. ஷிவா வயிறு வலிக்குது என்று கண்ணீரில் அவன் புஜங்களை நினைக்க, அவனுக்கு புரிந்தது, சாப்பிட்ட உணவால் வந்த வினை என்று..

அவசரத்திற்கு வாங்கி வைத்த ஈனோவை ஒரு குவளை நீரில்  கலக்கி கொடுக்க, அதை பார்த்து முழித்தவளிடம் இத அப்படியே குடி சரி ஆகிடும் என்றான்..

அவளும் அதை வாங்கி குடித்தால்.. சோர்வுடன் இருக்கிறாள் என்று பார்க்கும் போதே தெரிந்தது..

சிறிது நேரத்தில் கழிவறை சென்று வந்தவளின் வயிறு வலி மட்டுப்பட மீண்டும் அமர்ந்த வாக்கிலே விஷ்வா மீது சாய்ந்து உறங்கி போனால்.

மெதுவாக அவளை தன்னருகே கிடத்தி அவள் வலது கையை தன்மேல் போட்டு கொண்டவன், அவள் இடது கையை அவன் கையினுள் பொத்தி கொண்டு உறங்கி போனான்.

மறுநாள் காலை நேரம் கழித்து தான் எழுந்தால்.. அனைவரும் வேலைக்கு கிளம்பி இருந்தனர். அருகில் குழந்தையை காண அவளும் அன்னையின் கதகதப்பில் முரட்டு தூக்கத்தில் இருந்தால்..

குழலி நேரத்தை பார்க்க ஒன்பதை நெருங்கி கொண்டு இருந்தது.. வேகமாக எழுந்தவள் கழிவறை சென்று காலை கடன்களை முடித்து குளித்து வந்தால்..

விஷ்வாவிற்கு அழைத்தால், ஏன் ஷிவா எழுப்பாம போனீங்க? இவ்ளோ நேரம் தூங்கிட்டன் மாமாலாம் ஆபீஸ் கிளம்பி போயிருப்பாங்க, நீங்க மாமாலாம் சாப்பிட்டீங்களா என்றால்.. அவள் புலம்பலில் சிரித்து கொண்டவன்.. ரிலாக்ஸ் குழலி எல்லாரும் சாப்பிட்டோம், மதியத்துக்கும் லஞ்ச் எடுத்துக்கிட்டோம்.. நீ சாப்பிட்டு பாப்பாக்கு ஊட்டிவிடு, பாப்பா என்ன பன்றா என்றான்..

அவ இன்னும் தூங்கறா ஷிவா, இன்னும் தூங்கறாலா என்றான் ஆச்சர்யமாக? இவ்ளோ நேரம் தூங்குவாளா என்றான் மீண்டும்? ஹ்ம்ம் அவ பக்கத்துல யாராச்சும் படுத்துகிட்டு இருந்தா பன்னிரண்டு மணி வரைக்கும் கூட தூங்குவா என்றால் சிரித்து கொண்டே..

அதுக்காக இவ்ளோ நேரம் தூங்க விடாதடி, அவளை எழுப்பி எதாச்சும் ஊட்டி விடு, அப்பறம் வேணும்னா மறுபடியும் தூங்கட்டும் என்றான்..

அவன் பேசி கொண்டு இருக்கும் போதே, ஹாய் விஷ்வா என்று அழைத்து கொண்டே உள்ளே வந்தால் மயூரி..

அவளின் குரல், எதிர் முனையில் இருந்த குழலிக்கும் கேட்டது..

சரி குழலி நான் அப்பறம் பேசுறன், என்று அவசரமாக அழைப்பை துண்டித்து இருந்தான்.. அப்படி தான் தோன்றியது குழலிக்கு.

ஏதோ மனதில் சொல்ல முடியா வலி, பின் இது தான் நிதர்சனம் இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் என்று நினைத்தவள்..

குழந்தையை இதமாக எழுப்பி, குளிக்க வைத்து கிழே அழைத்து சென்றால்.. பின் குழந்தைக்கு உணவு ஊட்டி முடித்தவள் அவள் வகுப்பிற்கு தயாராகினால்.. குழந்தையை சரசுவிடம் கொடுத்துவிட்டு.

*****

விஷ்வாவை தேடி வந்த மயூரி, வாயெல்லாம் பல்லாக விஷ்வா நாளைக்கு என்னோட பர்த்டே, நீ என்ன பிளான்னு சொல்லவே இல்லையே.. என்ன எங்க அழைச்சிட்டு போக போற என்று பல கனவுகளுடன் கேட்டால்.

விஷ்வாவிற்கு தான் யோசனையாக இருந்தது.. மனதில் இருப்பதை இவளிடம் எப்படி சொல்வது எப்போது சொல்வது? என்று..

பின் ஒரு முடிவு எடுத்தவனாக குழலி என்று வாய் தவறி அழைத்து பின், மயூரி என்று திருத்தி அழைத்தான்..

மயூரியும் அவன் குழலி என்று அழைத்ததை கவனிக்க தான் செய்தால் இருந்தும், அவள் கோவத்தை முகத்தில் காட்டி கொள்ளாமல் இருந்தால்..

மயூரி நீ ஈவினிங் எப்பவும் மீட் பன்ற காஃபி ஷாப்ல வெயிட் பண்ணு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று கூறினான்.. என்ன பேசனும் விஷ்வா? எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லு என்று அவன் என்ன சொல்ல போகிறான் என்று காத்திருக்க முடியாமல் அவனை வற்புறுத்தினால்..

இது ஆபீஸ் மயூரி.. நீ வேற டீம்.. முதல்ல நீ இந்த மாதிரி என் கேபின்க்கு வரவே கூடாது.. என்று கடுப்பாக கூறினான்..

அவன் முகத்தில் எரிச்சல் எட்டி பார்ப்பதை உணர்ந்தவள், இதற்கு மேல் இருந்தால் நிச்சயம் துரத்தி விடுவான் என்று அவளே மரியாதையாக கிளம்ப நினைத்தால்.. ஓகே விஷ்வா பை ஈவினிங் பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினால்.

அந்த பரபரப்பான காஃபி ஷாப்பில் ஜோடி ஜோடியாக அமர்ந்து தங்கள் காதலை வளர்த்து கொண்டு இருந்தனர்..

மயூரியும் விஷ்வாவிற்காக அங்கு தான் காத்து கொண்டிருந்தாள்.. விஷ்வாவும் வெகு நேரம் காக்கா வைக்காமல் மயூரி இருக்கும் இடத்திற்க்கு வந்து இருந்தான்.

பத்து நிமிடம் ஆகி இருந்தது, விஷ்வா எதுவும் பேசவில்லை.. மயூரி தான் வளவளத்து கொண்டிருந்தாள், என்ன விஷ்வா பேசணும்னு வர சொன்ன, ஆனா அமைதியாவே இருக்கியே என்று அவன் மேஜை மேல் வைத்து இருந்த கைகளை பிடித்து கொண்டால், அவள் கைகளை மென்மையாக எடுத்து விட்டவன்..

லெட்ஸ் அஸ் எண்ட் திஸ் ரிலேஷன்ஷிப் மயூரி (let's us end this relationship mayuri) என்றான் நிதானமாக..

மயூரிக்கு அவள் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. விஷ்வா.. விஷ்வா.. என்ன சொல்ற எனக்கு புரியல என்றால் பதட்டத்துடன்..

உன் காதுல நான் சொன்னது சரியா தான் விழுந்துச்சு மயூரி.

ஐ லவ் குழலி.. மை பொற்குழலி என்றான் உள்ளார்ந்து.

வாட் த ஹெல் யூ ஆர் செயிங் (what the hell you're saying) விஷ்வா? என்று கத்தி இருந்தால் மயூரி..

சுற்றி இருந்தவர்கள் அவர்களையே திரும்பி பார்க்க அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை. விஷ்வாவும் அப்படி தான் இருந்தான் எதையும் கண்டு கொள்ளவில்லை..

கத்தி சீன் கிரீயேட் பண்ணாத மயூரி.. உனக்கு நல்லாவே தெரியும் என்ன பத்தி என்றான்..

மிரட்டினானோ.. அவனுக்கே வெளிச்சம்.. ஆனால் அப்படி கூறிய பின் கொஞ்சம் அடங்கி இருந்தால் மயூரி.

என் விஷ்வா இப்படி மாறுனீங்க மூணு மாசத்துக்கு முன்னாடி இதே காஃபி ஷாப்ல எனக்கு வாக்கு குடுத்தீங்களே அந்த குழலியை விவாகரத்து பண்ணிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்குறதா? இப்போ ஏன் என்ன நம்ப வச்சு ஏமாத்துனீங்க என்றால்..

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், நான் உன்ன லவ் பண்ணல மயூரி. லவ்னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க நெனச்சன்.. அந்த வயசுக்கே உண்டான ஆசை, எல்லாரும் லவ் பண்றாங்களே அப்படி அந்த லவ்ல என்ன இருக்கும்னு தெரிஞ்சிக்க நெனச்சன்.

நீ என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணும் போது எனக்கு உன்மேல எந்த எண்ணமும் இல்ல..

எப்படி இருந்தாலும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ண போறோம் அதுக்கு நம்மள லவ் பன்ற பொண்ணு உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சு தான் உன் லவ்க்கு ஓகே சொன்னன்.

ஆனா என் வாழ்க்கைல குழலி வந்த அப்பறம் தான் உண்மையான லவ் எப்படி இருக்கும்னு எனக்கு புரிஞ்சிது..

அவ குழந்தை மேல அவ காற்ற அந்த தூய்மையான அன்பு எனக்கும் வேணும்னு தோணுது மயூரி. அவ இன்னொசென்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. அவளுக்கு குடுக்குற நெத்தி முத்தம் கூட என்ன தடுமாற வைக்குது குழலி..

மீண்டும் பெயரில் தடுமாற்றம்.. அதை அவன் உணரவே இல்லை.

உண்மையில் குழலியின் பெயர் தான் அவன் நினைவில் இருக்கிறது.. பெயர் மட்டும் அல்ல அவள் தான் அவன் உள்ளமெங்கும் வாசம் செய்கிறாள்..

கேட்டு கொண்டிருந்த மயூரியின் மனநிலையை சொல்லவும் வேண்டுமா..குழலியை குத்தி கொள்ளும் அளவு ஆத்திரம் வந்தது.

ஐ திங்க் நாம இந்த ரெண்டு வருஷத்துல ஒரு மூணு நாலு தடவ லிப் கிஸ் பண்ணி இருப்போம் சரிதான? பட் ஒரு டைம் கூட எனக்கு அந்த கிஸ்ல எந்த பீலிங்ஸ்ஸும் வரல, கடமைக்கேனு இருந்துச்சு.

ஓஹ் இதல்லாம் குழலி உன் வாழ்க்கைல வந்த அப்பறம் தான் உனக்கு தெரியுதா? என்றால் குத்தலாக..

மென்மையாக அவன் வீட்டாளின் நினைவில் மூழ்கி எழுந்தவன், நீ சொல்றது தான் உண்மை மயூரி. குழலி வந்த அப்பறம் தான் நான் உன்ன லவ் பண்ணலன்னு உணர்ந்தன்.

எனக்கு என் பொற்குழலியோட லைப் லாங் வாழனும் மயூரி. எனக்கு ஒரு வயசுக்கு அப்பறம்  தாய் பாசம் கிடைச்சது இல்ல. அதுக்காக நான் பெருசா ஏங்கவும் இல்லை, அப்படினு நானே என்ன நம்ப வச்சிட்டு இருந்து இருக்கன்.

ஆனா குழலியை பார்த்த அப்பறம் அவ குழந்தை மேல அவ காற்ற அதே அன்பு சொட்டு விடாம எனக்கும் வேணும்னு தோணுது. எனக்கு அவகிட்ட குழந்தையாவும் இருக்கனும் கணவனாவும் இருக்கனும். இதை எல்லாம் ஏன் அவளிடம் கூறுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை..

முதல் முதலாக மனதில் இருந்து காதலிக்கிறான். அவள் மீது கொண்டுள்ள அன்பை யாரிடமாவது வெளிப்படுத்த தோன்றியது.. 

நான் நம்ம ரெண்டு பேரோட நல்லதுக்கு தான் சொல்றன் மயூரி. நாம பிரிஞ்சிடலாம்..

அவள் அடுத்து என்ன என்று பேய் அரைந்தது போல் யோசித்து கொண்டிருந்தாள்.

அவள் யோசனையை கலைக்கும் விதமாக அடுத்து பேசினான்..

அப்பறம் இன்னொரு விஷயம், என்று அவளை மிரட்டும் பார்வை பார்த்தவன், பொற்குழலியும் பூரணியும் என்னோட சொத்து.. அவங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அது என்ன தாண்டி தான் அவங்களுக்கு போகும்..

சடுதியில் அவன் முகமும் அவன் பேசும் தோணியும் மாறி இருந்தது.

அவளுக்கு புரிந்தது தான் போனில் குழலியை மிரட்டிய விஷயம் விஷ்வா அறிந்து கொண்டான் என்று..

விஷ்வா அது வந்து அன்னைக்கு நான் போன்ல என்று அவள் ஏதோ சமாளிக்கும் விதமாக கூறவர,

நாற்காலியில் வாட்டமாக அமர்ந்தவன், இடது கரத்தை உயர்த்தி லேசாக கண் மூடி ப்ச்.. ப்ச்.. என்று அவளை அலட்சியம் செய்தான். அந்த மனேரிசம் அவ்வளவு ரசனையாக இருந்தது. மயூரி அந்த நிலையிலும் அவனை ரசித்தால்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

25. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா பேச வேண்டிய அனைத்தையும் பேசிவிட்டு அவள் முகத்தை பார்த்தான்..

என்னால உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது விஷ்வா. நான் உன்ன காதலிக்குறன் என்றவள் அழுது கொண்டே அங்கிருந்து வேகமாக சென்றிருந்தால். மனதில் வேறொரு திட்டத்துடன்..

விஷ்வாவிற்கு மயூரியின் கண்ணீர் சிறிதளவும் பாதிக்கவில்லை. பெரு மூச்சை விட்டவன், ஒரு திராமிசுவை ஆர்டர் செய்து சுவைத்து உண்டான்..

குழலிக்கும் வாங்கி செல்லலாமா என்று அவன் மூளை யோசிக்க, நேற்று இரவு அவள் வயிற்று வலியால் அழுதது மன கண்ணில் வந்து போனது.

நாமளே அவளுக்கு வெளிய விக்கிற ஃபுட் வாங்கி குடுத்து கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவன் அவன் உண்ட உணவிற்கு பணம் செலுத்திவிட்டு சென்றான்.

*****

8 மணி போல் வீடு வந்து இருந்தான். குழலியின் முகம் வாட்டமாக இருந்தது.

குழலி பசிக்குது டின்னர் எடுத்து வைக்குறியா என்று கேட்டவன் குளியல் அறையினுள் புகுந்து கொண்டான்.

குழலியும் கீழே சென்று விஷ்வாவிற்கு இரவு உணவை எடுத்து வைத்தால், ட்ராக் பேண்ட் டீஷர்ட் சகிதமாக வந்தவன், குழலி பரிமாறிய உணவை ஆர்வமாக உண்டு கொண்டிருந்தான்.

தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வர, யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தான், சர் நான் மயூரி ஓட ரூம் மேட் பேசுறன் என்று எதிர்முனையில் பிசிரு தட்டும் குரல்.. சலிப்போடு என்ன விஷயம் என்றான்.

சர் அவ கைய கட் பண்ணிக்கிட்டா பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல தான் சேர்த்து இருக்கமன் என்றவள் மருத்துவமனை முகவரியை கூறி விஷ்வாவை வந்து பார்க்குமாறு அழைத்து இருந்தால்..

அவன் கேட்ட செய்தியில் சில நொடி அதிர்ந்து இருந்தாலும் பின் தன்னை சமன்படுத்தி கொண்டு. வரன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து இருந்தான்.

குழலி பாதி சாப்பாட்டில் எழுந்தவனை என்னாச்சு ஷிவா எதாச்சும் பிரச்சனையா என்றால் அவன் பாதட்டமான முகத்தை பார்த்து கொண்டே.

ஒன்னும் இல்ல நான் இப்போ வெளிய போறன், வர நேரமாகும் நீயும் பாப்பாவும் தூங்குங்க என்றவன் மேலே சென்று கார் சாவியை எடுத்து கொண்டு கீழே வந்தான்.. மகேஷ்வரி அன்று அதிசயமாக சீக்கரமே வீடு வந்து சேர்ந்தந்திருக்க.. யோசனையோடு தம்பியின் அறை நோக்கி நகர்ந்தான்.

அறையில் இருந்த சூர்யாவை எழுப்பி அவசரமா வெளிய போறன், குழலியும் பாப்பாவையும் பார்த்துக்கோ என்று கூறிவிட்டே சென்றான். எங்கே தனியா இருக்கும் குழலியிடம் தாய் ஏதாவது வம்பு வளர்ப்பாரோ என்று நினைத்து.

எங்க போற என்று சூர்யா கேட்டதற்கு வந்து சொல்றன் என்று கிளம்பிவிட்டான்.

மருத்துவமனையை அடைந்து இருந்தான் அது சின்ன டே கேர் என்பதால் அவ்வளவு கெடு பிடிகள் இல்லை.

மயூரி மயக்கத்தில் இருந்தால். அவள் அருகே அவள் தோழி வீணா என்ற ஒரு பெண் இருக்க.

சர் என்று அவள் எழுந்து நின்றாள்.. அந்த நேரம் ஒரு மருத்துவரும் செவிலியரும் உள்ளே வர, புதிதாக நின்று இருந்த விஷ்வாவை கண்டு நீங்க பேஷன்ட்க்கு என்ன உறவு என்றார்..

எக்ஸ் பாய் ஃபிரன்ட் என்றான் எந்த தயக்கமும் இல்லாது. சீ மிஸ்டர் உங்களோட தனிப்பட்ட விஷயத்தை பத்தி பேச எனக்கு எந்த உரிமையும் இல்ல, அஸ் அ டாக்டர்ரா இத சொல்ல வேண்டியது என் கடமை.

அவங்க கைல வெட்டு காயம் ரொம்ப ஆழமா பட்டு இருக்கு, ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ அவங்க நரம்புல கட் பண்ணிக்கல அது வரைக்கும் நல்லது. சப்போஸ் நரம்புல கட் பண்ணி இருந்தா இந்நேரம் உயிரோட இருந்து இருக்க மாட்டாங்க. இந்த காயத்துக்கே பிளட் ரொம்ப லாஸ் ஆகிடுச்சு. எக்ஸ்ட்ரா ஒரு யூனிட் பிளட் ஏத்தி இருக்கோம்.

கொஞ்சம் கேர் ஃபுல்லா பார்த்துக்கோங்க என்று கூறி அங்கிருந்து வெளியேறி இருந்தார் மருத்துவ பெண்மணி.

அருகில் இருந்த பெண்ணை பார்த்தான்..

அவனின் பார்வையை உணர்ந்து என்ன ஆச்சுன்னு தெரில சர், நான் என் ஒர்க் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தன் கிட்சேன்ல மயங்கி விழுந்து இருந்தா தரை எல்லாம் ரத்தம் பயந்து போய்ட்டன்.. பக்கத்து ஃப்ளாட்ல இருக்கவங்க கிட்ட உதவி கேட்டு தான் இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணன்.

பின் தயங்கி கொண்டு, எனக்கு நாளைக்கு மார்னிங் ஷிப்ட் சர் நான் போகனும் என்றால். சரி கிளம்புங்க தேங்க்ஸ் என்று அவளுக்கு விடை கொடுத்தான்.

அங்குள்ள இருக்கையில் அமர்ந்து போனை எடுத்து நோண்டி கொண்டு இருந்தான்.

அரைமணி நேரத்தில் மயக்கம் தெளிந்து கண் விழித்தால் மயூரி. இப்போ நீ ஓகேவா என்றான் இருக்கையில் இருந்தபடியே..

பின் அவள் பதிலை எதிர்பார்க்காமல் செவிலி பெண்ணை அழைத்து வந்தான்.

அவள் மயூரியிடம் சில கேள்விகளை கேட்டுவிட்டு அவளை அவள் சொன்னபடி, இருக்கையில் சாய்த்து அமர வைத்தால்.

செவிலியர் சென்றபின்,

விஷ்வா என்று அழுவது போல் முகத்தை வைத்தவள், நீ என்ன விட்டு போக மாட்டதான என்று விசும்பலுடன் கேட்க? ஸ்டாப் க்ரையிங் (stop crying) மயூரி என்றான் அதட்டலாக..

என்ன இவன் இவ்ளோ ரிஸ்க் எடுத்து எல்லாம் பண்ணா கொஞ்சம் கூட அசராம உக்காந்து இருக்கான். என்று உள்ளுக்குள் வெதும்பினால்.

அவளையே பார்த்தவன் என்ன எதுக்கும் அசராம உக்காந்து இருக்கனு பாக்கறியா என்றான்.. அவள் முகத்தை பார்த்தே எண்ணவோட்டத்தை  படித்தது போல்..

என்ன உண்மையா லவ் பன்றியா மயூரி என்றான் அவளையே ஆழ்ந்த பார்வை பார்த்து..

நீ தான் விஷ்வா எனக்கு எல்லாம்.. உன்ன விட்டு என்னால இருக்க முடியாது. ஐ லவ் யூ சோ மச் என்றவள் காதல் வசனங்களை பேச தயாராக..

ஓகே ஜஸ்ட் அ மினிட் என்றவன். அவள் அருகில் சென்று அவள் அமர்ந்து இருந்த மெத்தையில் அவள் தோள் மீது கைப்போட்டு அவனும் அமர்ந்து கொண்டான்..

அவள் செயல் புரியாமல் விழித்தவள்..

ஜஸ்ட் ரிலாக்ஸ் மயூரி என்று அவள் கன்னத்தை தட்டி, அவன் போனை ஆன் செய்தான் அதில் சில வாட்சப் ஸ்க்ரீன் ஷாட்களை (whatsapp screen shot) வரிசை மாறாமல் காட்டினான்..

அதை பார்க்க பார்க்க மயூரிக்கு வேர்த்து கொட்டியது. விஷ்வா ஏளனமாக அவளை பார்த்தான்..

அதில் இருந்த அனைத்து உரையாடல்களும் மயூரி அவள் டீம் மேனேஜர் திலீப்புடன் பேசிய அந்தரங்க உரையாடல்கள்.. அதில் அவர்களின் நிர்வாண புகைப்படங்களும் இடம் பெற்று இருந்தது.. இது பல மாதங்களாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..

வி.. விஷ், வா என்று வார்த்தைகள் டைப் அடித்தது.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

இது நான் இல்லை விஷ்வா என்று அப்பட்டமாக பொய் உறைத்தால்.. அப்படியா என்றான் தாடையை தேய்த்து கொண்டு..

அவள் வேர்த்த முகத்துடன் தலை அசைக்க..

மந்தகாசமாக சிரித்தவன், அவள் கண்ணெதிரே அவள் டீம் மேனேஜர் திலீபன் போனை ஹேக் செய்து காட்டினான்..

வாட்ஸப்பினுள் சென்றவன், அதில் இவர்கள் பக்க உரையாடலுக்கு சென்று இவளின் தொலைபேசி என் இவளின் முகப்பு படம், அவர்கள் பேச தொடங்கிய நாள் என அவள் உண்மையை மறுக்க முடியாத அளவிற்கு அவள் கண்ணெதிரே அனைத்தையும் காட்டினான்.

விஷ்வா அவளை காண தலை குனிந்து அமர்ந்து இருந்தால்.. திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.

மாட்டி கொண்டோமே என்று நினைத்தாலே தவிற, சிறு குற்ற உணர்ச்சியும் அவள் முகத்தில் இல்லை.

லுக் அட் மீ (look at me) மயூரி, இதல்லாம் எனக்கு எப்பவோ தெரியும் ஆனா உங்களோட இந்த கான்வர்சஷன் (conversation) என்ன கொஞ்சமும் பாதிக்கல ஏன்னா என் மனசுல குழலி தான் இருந்தா எப்பவும் இருப்பா..

எனக்கு இதல்லாம் உன்கிட்ட காட்டி, இப்படி பக்கம் பக்கமா பேச கொஞ்சம் கூட பிடிக்கல அதனால தான் ஜஸ்ட் நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சிம்பிள்ளா சொல்லிட்டு போனன்..

இதுக்கு மேலயும் நீ என்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டனு நினைக்குறன்.. உன் வழிய பார்த்துட்டு நீ போ.. என்றான் முடிவாக.

அவன் திரும்பி நடக்க முயல, நான் உன்கிட்ட பேசனும் விஷ்வா என்றால். நீ மட்டும் பேசி முடிச்சுட்டு போனா என்ன அர்த்தம்.. அவள் குரல் தோணியில் ஏதோ ஒரு திமிர், இனி எதையும் சந்திக்க தயார் என்ற ஆணவம்..

அவன் பார்வை அவள் மீது கூர்மையாகியது.

இவ்ளோ நாள் உன்ன லவ் பண்ணன்.. அவன் முறைப்பில், உச்சு கொட்டி.. சரி லவ் பண்ணா மாதிரி நடிச்சன் என்று வாக்கியத்தை திருத்தினால்..

அதுக்கு எனக்கு லாபம் வேண்டாமா என்றால்..

பணம் வேண்டுமா என்றான் எள்ளளாக..

ஹ்ம்ம் அது உன் விருப்பம், குடுக்கலனாலும் கவல இல்ல என்றவள்..

மெத்தையில் இருந்து இறங்கி அவன் அருகே சென்றால்.. அவனை ஒட்டி உரசி நின்றவள் எனக்கு ஒன் டே ஃபுல்லா நீ வேணும் விஷ்வா, திகட்ட திகட்ட வேணும்.. ஐ நீட் யூ பேட்லி என்றால் கிறக்கமாக..

விஷ்வாவிற்கு இப்போது தான் அவள் மீது அருவருப்பு தோன்றியது..

உனக்கு ஒன்னு தெரியுமா அந்த திலீபன் செக்ஸ் சாட் பண்ணும் போது கூட உன்ன நினைச்சு தான் பண்ணுவன், செம கிக்கா இருக்கும்.. என்று அவன் அரைகை டீஷர்ட்டில் தெரிந்த புஜங்களை அவள் மார்போடு அழுத்தினால்..

அவள் கிறங்கிய விழிகளுடன் அவன் முகத்தை ஏறெடுத்து பார்த்தால்.. நீ நினைச்சது எப்பவும் நடக்காது மயூரி.. வேற ஆளா பாரு என்றவன் அவளை உதறி தள்ளினான்.

மீண்டும் அவன் சட்டை காளரை பற்றியவள் ஏன் என்றால்?? விஷ்வா அவளையும் அவள் பற்றி இருந்த கைகளையும் அழுத்தமாக பார்த்தான்.. அதில் தன்னிச்சையாக அவள் கை விஷ்வாவின் மேல் இருந்து இடம் பெயர்ந்தது.

எனக்கு உன்ன பார்க்க அருவருப்பா இருக்கு என்று முகத்திற்கு முன் கூறினான்..

உன்ன நான் அடைஞ்சே தீருவன் விஷ்வா என்றால்.

அதையும் பார்ப்போம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றான் விஷ்வா.

விஷ்வா காரில் பயணித்து கொண்டிருக்க, அவன் எண்ணங்கள் கட்டவிழ்ந்து இருந்தது. மயூரியின் பொய்யான உறவை கண்டறிந்தவனுக்கு எந்த வேதனையும் இல்லை. உண்மையில் அவன் அடிமனம் அவளை விரும்பி இருந்தால் தானே வேதனை படுவதற்கு. இவ்ளோ தானா நீ என்ற நினைப்போடு 10 நிமிடத்தில் அந்த விஷயத்தை கடந்துவிட்டான்.

அவன் எண்ணமெல்லாம் இப்போது பொற்குழலி தான் நிறைந்து இருந்தால். அவள் மீது நான் கொண்டுள்ள காதலை அவளுக்கு எப்படி உணர்த்த என்று யோசித்து கொண்டிருந்தான்.

மென்மையான சிரிப்புடன், பொற்குழலி என அவன் உதடுகள் முனுமுனுத்து கொண்டது..

எப்படி டி என் மனசுக்குள்ள வந்த? ஆட்டி படைக்குற டி, என்று செல்லமாக கடிந்து கொண்டான்.

பொற்குழலியின் நினைப்போடு அவன் இங்கு தவிக்க, மருத்துவமனையில் அடிபட்ட நறியோ அதன் சதி திட்டத்தை துவங்கி இருந்தது..

அவன் சென்ற அடுத்த நொடி வேறொரு திட்டத்தை செயல் படுத்தினால் மயூரி..

*****

வீட்டில் குழலி உறக்கம் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தால்..

யோசனையில் இருந்தவளின் தொலைபேசி, விடாமல் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசையை எழுப்ப உறங்கி கொண்டிருந்த குழந்தையிடம் இருந்து மெதுவாக எழுந்து அவள் போனை எடுத்தால்..

வாட்ஸப்பை திறந்து பார்க்க, கண்கள் அகல விரிந்தது.. பதறிய நெஞ்சை கை வைத்து ஆசுவாச படுத்தி கொள்ள முயன்றால் குழலி..

குறுஞ்செய்தி வந்த எண்ணில் இருந்து இப்போது அழைப்பு வந்தது..நடுக்கத்தோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தால்..

ஹல்லோ என்று கூட சொல்ல முடியவில்லை.. நா உளர்ந்து போனது போல் இருந்தது.

சந்தோஷமா இப்போ சந்தோஷமா உனக்கு.. பாரு என் நிலமையை பாரு உன்னால தான் நான் செத்து பொழச்சு வந்துருக்கன் என்றால் குழலிக்கு அழைத்து இருந்த மயூரி..

ஆம் மயூரி தான் அவளுக்கு அவள் காயப்பட்ட கையை கட்டுடனும், கட்டை அவிழ்த்தும் பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அவளிடம் இருந்த குழலியின் எண்ணிற்கு அனுப்பி வைத்தால்..

அதை கண்டு தான் குழலியும் கலங்கி நின்றாள்..

மயூரியின் வார்த்தைகள் எதுவும் குழலிக்கு புரியவில்லை.

மயூரி பேச பேச குழலி குற்ற உணர்ச்சியில் தவித்தால்.

தொடரும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

26. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலிக்கு அழைத்த மயூரி அவளின் சிறந்த பேச்சால் குழலியை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விஷ்வா மேல் ஒரு வெறுப்பை உருவாக்கி இருந்தால்..

என்.. என்ன ஆச்சுங்க என்று குழலி வார்த்தை வராமல் கேட்க? இன்னும் என்ன ஆகணும் டி? நீ எப்போ எங்க வாழ்க்கைல நுழைஞ்சியோ அப்போவே எல்லாம் நாசமா போச்சு.. என் விஷ்வா என்ன விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆராமுச்சுட்டான்.

நாங்க எப்படி வாழ்ந்தோம் தெரியுமா என்றவளுக்கு, நினைவு வந்தது விஷ்வா குழலியிடம் பொய் உறைத்தது.. அதையே மயூரியும் கூறினால். நாங்க புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்து இருக்கோம்..

அவன் என்கிட்ட எவ்ளோ லவ்வா இருந்தான் தெரியுமா? அப்படி இருந்தவன் இன்னைக்கு வந்து என்கிட்ட சொல்றான், எனக்கு குழலி தான் வேணும்.. அவ கூட தான் கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ போறன்னு..

ஹ்ம்ம்.. என்ன விட சின்ன பொண்ணு, ஒரு குழந்தை பெத்து எடுத்தாலும் இன்னும் கட்டு கலையாம தான இருக்க அதான் உன்கிட்ட விழுந்துட்டான்..

நீயும் அவன் முன்னாடி சும்மா இருந்து இருக்க மாட்டியே, எல்லாம் சுகத்தையும் அனுபவச்சவ, வாட்ட சாட்டமா ஒருத்தனை பார்த்ததும் அவன் முன்னாடி தலுக்கி மினுக்கி இருந்துருப்ப என்று வேண்டும் என்றே கூறினால். 

இதெல்லாம் கூறியதற்கு காரணம் குழலியின் குற்ற உணர்ச்சி துடித்து இனிமேல் விஷ்வாவிடம் தோழியாக கூட பழக கூடாது என்ற எண்ணம் தான்.

மயூரி சொன்னது போல், குற்ற உணர்ச்சி மேலோங்கி தன்னால் தான் விஷ்வா மயூரியை பிரிந்தார் என்று முழுமையாக நம்பினால்..

நல்லா இருப்பியா நீ என்று அவளுக்கு சாபம் கொடுப்பது போல் பேச குழலி பயந்து போனால்.. பெத்தவங்க செய்ற பாவம் எல்லாம் பிள்ளைங்கள தான் சேரும்னு சொல்லுவாங்க.. குழலியை எங்கு அடித்தால் அவள் வழிக்கு வருவாள் என்று தெளிவாக அறிந்து வைத்து இருந்தால் மயூரி. நீ என் வாழ்க்கைய அழிச்ச பாவம் எல்லாம் அவள் சொல்லி முடிப்பதற்குள்.

ஹய்யோ அக்கா ப்ளீஸ் அப்படி மட்டும் சொல்லிடாதீங்க, எனக்கு என் பொண்ணு தான் எல்லாமே. அவள எதுவும் சொல்லிடாதீங்க..

விஷ்வா ஏன் இப்படி நடந்துகிட்டாருனு தெரியல.. அவர உங்க கூட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு என்றால்.

என்ன சொல்ற என்று எதிர்பக்கம் கேள்வி எழுப்பிய மயூரியின் முகத்தில் ஒரு தந்திர புன்னகை, அதை நிச்சயம் குழலி அறிய வாய்ப்பில்லை.. ஆமா அக்கா நான் விஷ்வா கூட உங்கள எப்படியாச்சும் சேர்த்து வைக்குறன் என்றால் உறுதியாக.

மயூரி அமைதியாக சிரித்து கொண்டால்..

அதுவரைக்கும் நீங்க எந்த தப்பான முடிவும் எடுத்துடாதீங்க அக்கா. கூடிய சீக்கரம் நீங்க இந்த வீட்டுக்கு விஷ்வாவோட மனைவியா வருவீங்க என்றவள் வேறேதும் பேசாமல் அழைப்பை துண்டித்து இருந்தால்.

சிறிது நேரத்தில் தன்னை மீட்டு கொண்ட குழலி, மெத்தையில் அமர்ந்து இல்லாத மூளைக்கு வேலை கொடுத்து கொண்டிருந்தாள்..

கோவம் ஒருபக்கம் குற்ற உணர்ச்சி ஒரு பக்கம் என குழம்பிய மன நிலையில் இருந்தால்.

அப்போது தான் விஷ்வா அறைக்குள் நுழைந்தான்.

அவள் இன்னும் தூங்காமல் அமர்ந்து இருப்பதை கண்டவன், தூங்கலையா குழலி என்று கேட்டு கொண்டே அவள் அருகில் வந்தான்..

மெத்தையில் உறங்கி கொண்டிருக்கும் பூ செண்டை கொஞ்சளோடு நோக்கியது அவன் விழிகள்.

சரி பிரெஷ் ஆகிட்டு வரன் என்றவன், அவள் பதிலை எதிர் பார்க்காமல் குளியலறை புகுந்து கொண்டான்.

போகும் போது மேஜை மேல் இருந்த அவள் போனையும் எடுத்து சென்றான்..

அவன் நினைத்தது போல் மயூரி குழலிக்கு அழைத்து இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டவனுக்கு சலிப்பாக இருந்தது..

அறைக்குள் நுழைந்ததும் குழலியின் அழுத விழிகளும், சிவந்த முகமும் எதனால் என்று விஷ்வாவால் யோசிக்க முடிந்தது.

இந்த சில்வண்ட இப்போ எப்படி சமாளிக்கிறது என்று யோசித்து கொண்டே, அவர்கள் பேசிய உரையாடலை எர்பாட் அணிந்து கேட்க தொடங்கினான்.. உரையாடளை முழுதாக கேட்டவனுக்கு பெரிதாக அதிர்ச்சி ஒன்றும் இல்லை.. ஆனால் குழலி மீது கொஞ்சம் கோவம் இருந்தது. வாட்ஸப் சென்று மயூரி அனுப்பிய புகைப்படங்களையும் கண்டான்.

அடுத்து என்ன செய்ய போற என்ற மனசாட்சியின் கேள்விக்கு, வெளிய ஒருத்தி இருக்கால அவ பேசுற பேச்சை எல்லாம் கேட்டுட்டு தூங்க போறன் என்று வேடிக்கையாக பதில் கூறியவனை கண்டு மனசாட்சி தான் தலையில் அடித்து கொண்டது.

குழலி விஷ்வாவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க, அவனும் அவளை வெகு நேரம் காக்க வைக்க விரும்பாமல் வெளியே வந்தான். முகத்தில் எதையும் காட்டி கொள்ளவில்லை.

விஷ்வா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றால்.. இந்தா ஆராமுச்சுட்டாள என்று மனதோடு கூறி கொண்டவன், உறங்கி கொண்டிருக்கும் பூரணி பாப்பாவை கண்டான். குழந்தை கீழே உருலாமல் இருக்க தலையணைகளை பாதுக்காப்பாக வைத்து இருந்தால்.

வா பால்கனி போலாம் என்று வெளியே அழைத்து சென்றான்.

சொல்லு என்ன விஷயம் என்று எதுவும் தெரியாதது போல் விஷ்வா கேட்க..

குழலியும் விஷ்வாவிடம் இருந்து எதையும் மறைக்க விரும்பாதவள் மயூரி அழைத்து பேசியதையும் அவள் தற்கொலை முயற்சி செய்ததையும் பற்றி கூறினால்.. மயூரி பேசிய வேண்டாத வார்த்தைகளை மறந்தும் கூறவில்லை குழலி.

விஷ்வா குழலியின் முக பாவனைகளில் இருந்து அவள் அவனிடம் மறைக்கும் விஷயங்கள் அனைத்தையும் குறித்து கொண்டான்.

ஏன் விஷ்வா இப்படி பண்றிங்க என்று இயலாமையோடு கேட்டால்.. நான் தான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டன்ல உங்க கூட என்னால வாழ முடியாதுனு அப்பறமும் ஏன் இப்படி பண்ணீங்க?

நான் என்ன பண்ணன்? என்று அசராமல் கேட்டு வைத்தான் விஷ்வா..

மயூரி கிட்ட என்ன காதலிக்கிறதா சொல்லி இருக்கீங்க.. அவங்கள வேண்டாம்னு சொல்லியிருக்கீங்க.. இது உங்களுக்கு தப்பா தெரியலையா? ஒரு பொண்ண நம்ப வச்சு ஏமாத்துறீங்களே இது எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா என்றால் ஆற்றாமையோடு..

குழலி இது என்னோட தனிப்பட்ட விஷயம், என் வாழ்க்கைல யார் இருக்கனும் யார் இருக்க கூடாதுனு நான் தான் முடிவு பண்ணனும். அந்த முடிவ தான் நான் இப்போ எடுத்து இருக்கன், நான் உனக்கு நல்ல விதமாவே சொல்றன் இந்த விஷயத்துல நீ தலையிடாத என்றான் பொறுமையாக எடுத்து கூறி.

நான் ஏன் தலையிட கூடாது? நீங்க மயூரி கிட்ட குழலிய விரும்பறன் அவ கூடதான் வாழ போறன்னு சொல்லியிருக்கீங்க அப்போ எப்படி நான் தலையிடாம இருக்க முடியும்?

எனக்கு ஒன்னு மட்டும் சொல்லுங்க, நான் உங்க வாழ்க்கைல வராம இருந்து இருந்தா நீங்க மயூரிய தான கல்யாணம் பண்ணி இருப்பிங்க என்றால்..

விஷ்வா தயங்காமல் கூறினான், நான் சொல்றத பொறுமையா கேளு, நீ என் வாழ்க்கைல வராம இருந்து இருந்தா, மயூரி எனக்கு உண்மையா இருக்குற பட்சத்துல கண்டிப்பா நான் அவள கல்யாணம் பண்ணி இருப்பன்.. ஆனா அவ எனக்கு இப்போ உண்மையா இல்ல.. அவ நல்லவளும் இல்ல குழலி. அவகூட என்னால எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? என்று அவன் பக்க நியாயத்தை கூறினான்..

இதல்லாம் நீங்க மயூரிய விட்டு விலக சொல்ற காரணம் இதல்லாம் உண்மை கிடையாது.. ரெண்டு வருஷமா உங்க கண்ணுக்கு நல்லவங்களா தெரிஞ்சாங்க.. உயிர குடுத்து காதலிச்சு இருக்கீங்க என்க..

நான் உயிர குடுத்து காதலிச்சத நீ பார்த்தியா என்றான் பட்டென்று..

அதான் மயூரி சொன்னாங்களே என்க.

நீ சரியான முட்டாள் டி, உன் மண்டைல மூளையே இல்ல.. களிமண் தான் இருக்கு. யார் என்ன சொன்னாலும் நம்பற. உண்மை எது பொய் எதுன்னு யோசிக்குற பக்குவம் இன்னும் உனக்கு வரல ச்சை என்று தலையில் அடித்து கொண்டான்.

என்ன பத்தி ஒன்னும் நீங்க பேச வேண்டாம். உங்க வாழ்க்கைய பாருங்க..

அன்னைக்கு இதே பால்கனில நின்னு தான் சொன்னிங்க..
நான் மயூரிய காதலிக்குறன், நீ படிக்கல, உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, நீ செகண்ட் ஹாண்ட், என்னோட லைஃப் ஸ்டைல் வேற அப்படி இப்படினு ஒரு லிஸ்ட் போட்டிங்க.. இப்போ மூனே மாசத்துல மயூரிய விட்டு என்ன விரும்பறன்னு சொல்றிங்க இதல எது நிஜம் என்றால்..

நான் உன்ன காதலிக்குறது தான் நிஜம் குழலி என்றான் அவள் கண்களை பார்த்து.

கேலியாக சிரித்தால்.. என்ன உங்களுக்கு மூணு மாசமா தான் தெரியும்.. எனக்காக ரெண்டு வருஷமா காதலிச்ச பொண்ண தூக்கி போட்டுடிங்க, சரி ஓகே நீங்க சொல்றத கேட்டு உங்க காதல் உண்மைனு நம்பி உங்க கூட வாழறன்னு வச்சுக்கோங்க, கொஞ்சம் நாள் கழிச்சு உங்களுக்கு வேற ஒரு பொண்ண புடிச்சு போய் என்னையும் மயூரிய மாதிரி பிடிக்கல நீ எனக்கு உண்மையா இல்லனு சொல்லி தூக்கி போட்டுட்டீங்கன்னா என்ன பண்றது என்றால்..

அதுவரை அவள் பேசிய அனைத்திற்கும் பொறுமையாக பதில் கொடுத்தவன் அவளின் இந்த பேச்சிற்கு அவனையும் மீறி கோவம் வந்தது.. என்ன டி சொன்ன, என்ன சொன்ன திரும்ப சொல்லு என்று அவளிடம் நெருங்கியவன் கையை ஓங்கி இருந்தான்.

பயந்து தான் போனால் குழலி, அவளின் மருண்ட விழி பார்வையை கண்டவன் கையை கீழே இறக்கினான்.

என்ன பார்த்தா பொம்பள பொறுக்கி மாதிரி இருக்கா? ஒரு ஒரு பொண்ணையும் காதலிச்சு ஏமாத்தி என் ஆசைய தீத்துக்குறா மாதிரி இருக்கா என்று கத்தி இருந்தான்..

உனக்கு என்ன தெரியும் என்ன பத்தி? என் கேரக்டர ஜட்ஜ் பண்ண நீ யாரு டி என்றான் பட்டென்று..

நீ யாரு என்ற அவனின் வார்த்தையில் அவளுக்கு தான் ஒரு மாதிரியாகி போனது..

உன்ன நான் காதலிக்குறன்னு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணன் நீ என்ன ரிஜெக்ட் பண்ண, அதுக்கான எல்லாம் ரைட்ஸ்ஸும் உனக்கு இருக்கு. ஏன்னா இது உன் வாழ்க்கை நீ முடிவெடுக்குற..

அதே மாதிரி தான் மயூரி என் வாழ்க்கைக்கு வேண்டாம்னு தோனுச்சு பிரேக்கப் பண்ணன்.. என் வாழ்க்கைல தலையிடவோ என் முடிவ தப்பு சொல்லவோ உனக்கு எந்த உரிமையும் இல்ல..

இதுவரை அவன் பேசிய பேச்சிற்கெல்லாம் பதில் பேச முடியாமல் விக்கித்து நின்றாள் குழலி. அதை எல்லாம் விஷ்வா கண்டுகொள்ளவே இல்லை.

நான் உன்மேல வச்சு இருக்க காதல பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல.. அந்த காதல் உன்ன பாதிக்காத வரைக்கும்.

இனிமேல் என்கிட்ட பேசும் போது வார்த்தைல கவனமா இருக்கனும் இல்ல.. அதுக்கான கான்சீகிவன்ஸ் (consequence) ஃபேஸ் பண்ண தயாரா இருந்துக்கோ என்று கடுமையான குரலில் கூறியவன்.. அவளை சற்றும் கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று படுத்து இருந்தான்.

எவ்வளவு நேரம் நின்று இருந்தாளோ குளிர் காற்றும் கால் வலியும் உறைக்கவே பால்கனி கதவை பூட்டிவிட்டு அறைக்குள் வந்தால். விஷ்வாவின் சீரான மூச்சியில் அவன் உறங்கியதை கண்டு கொண்டால்.. அவனின் தள்ளி நிறுத்தும் பேச்சில் மனம் உடைந்து தான் போனால் குழலி. சாரி விஷ்வா என்று உதடு அசைவில் கூறியவள் அவனை பார்த்து கொண்டே உறங்கி போனால்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

27. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலியும் விஷ்வாவும் பேசி ஒரு வாரதிற்கு மேல் ஆகிவிட்டது. இருவரும் அவர்கள் நிலையில் இருந்து இறங்கி வர விரும்பவில்லை..

விஷ்வா குழலியிடம் அவள் போனை கொடுக்கவில்லை. ஏதாவது அவசர தேவை என்றால் லேண்ட் லைனில் இருந்து பேசிக்கோ என்றுவிட்டான்.. அவளுக்கு அதில் சிறு சுணக்கம் இருந்தாலும் அவர் வாங்கி கொடுத்த போன் அவரு திரும்பி வாங்கிக்கிட்டாரு என்று அவள் மூளை குதர்க்கமாக தான் யோசித்தது.

ஆனால், மயூரியின் தொந்தரவு இல்லாமல் குழலி நிம்மதியாக இருக்கவே இப்படி ஒரு முடிவை எடுத்து இருந்தான்.

பூரணி பாப்பாக்கு 1 வயது முடிந்து மூன்றாம் மாதத்தில் அடி எடுத்து வைத்து இருந்தால்.. சுவற்றை பிடித்து நடந்து இருந்தவள் இப்போது தான் தானாக நடக்க துவங்கி இருக்கிறாள்.

குழலி மகள் நடை பயிலும் அழகில் தன்னை மறந்து ரசித்தால்.. போன் இருந்தா நல்லா இருந்து இருக்கும் பாப்பா முதல் முதல நடக்குறத வீடியோ எடுத்து இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை.

அன்று இரவு குழலியிடம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் குழலி என்றான் விஷ்வா.. பூரணி பாப்பா அந்த அறையை சுற்றி நடந்து கொண்டிருந்தாள்.

சொல்லுங்க என்பது போல் அமைதியாக அவன் முகம் பார்த்தால்..

நாளைக்கு ஈவினிங் ஆபீஸ்ல ஒரு சின்ன கெட் டு கெதர் இருக்கு. நீயும் வரனும் என்றான். நான் எதுக்கு என்றால்?

நீ தான இப்போ என் போண்டா டீன்ற போஸ்டிங்ல இருக்க அதனால நீ தான் என்கூட வரனும் என்றான்..  அந்த போண்டா டீ என்ற வார்த்தையில் அவ்வளவு நக்கல் அடித்தான்.

என்னால வர முடியாது.. நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி இல்ல.. நமக்குள்ள ரூம் மேட் அப்படின்ற உறவு தான் இருக்கு என்றால்.

நட்பு என்ற உறவு இருக்கு என்று சொல்லியிருந்தால் கூட சற்று அமைதியாகி இருப்பான் போலும்.. ரூம் மேட் என்று சொல்லவும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி கொண்டது.

உன்ன எல்லாம் திருத்தவே முடியாது குழலி. நீ வரவே தேவையில்ல உன்ன போய் கூப்பிட்டன் பாரு என்ன சொல்லனும் என்று கத்திவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டான்.

பால்கணியில் நின்று அவன் பைக்கில் வெளியே செல்வதை கண்டால். ஏனோ அவளுக்கு அவன் வைத்து இருக்கும் வண்டியை பார்த்தாலே பயம். பயம் என்பதை விட அதில் பயணம் செய்வதை ஆபத்தாக கருதினால்.

கோவத்தில் செல்கிறான் என புரிந்து கொண்டால். பத்திரமா வீட்டுக்கு வந்துடனும் என மனதில் வேண்டுதலோடு அவனுக்காக காத்திருந்தால்.

நேரம் ஆக ஆக, அவள் முகத்தில் பதட்ட ரேகைகள் படற, குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு, கீழே சென்று லேண்ட் லைனில் இருந்து விஷ்வாவிற்கு அழைத்தால். இரண்டாம் முறை அழைக்கும் போது அழைப்பை ஏற்றான்.

விஷ்வா எங்க இருக்கீங்க? ஏன் இன்னும் வீட்டுக்கு வரல என்றால் அக்கறையோடு. எதுவும் பேசவில்லை போனை வைத்துவிட்டான். மீண்டும் அழைத்தால். போன வை வீட்டுக்கு வரன் என்று கூறி அழைப்பை துண்டித்து இருந்தான்.

அவன் இரவு வீடு திரும்பும் பொழுது மணி 12.47. அதுவரை குழலியும் உறங்கவில்லை.

நீ எதுக்கு முழிச்சிட்டு இருக்க.. தூங்க வேண்டியது தான என்றான். குரலில் எந்த கோவமும் இல்லை.

நீங்க அந்த பைக்ல போனத பார்த்தன், பயமா இருந்துச்சு அதான் முழிச்சிட்டு இருந்தன் என்றால்.

பேசி கொண்டே அறைக்கு வந்து இருந்தனர்..

அந்த பைக்ல போனா என்ன என்றான் புரியாத பாவனையோடு..

அதான் அன்னைக்கே சொன்னன்ல அந்த வண்டிய பார்த்தா பயமா இருக்குனு..

ஓஹ் அப்போ நான் செத்த செய்தி வரத்துக்காக காத்திருந்தியா என்றான்.. விஷ்வா விளையாட்டுக்கு தான் அந்த வார்த்தையை கூறினான்.

குழலி தான் அவன் வார்த்தையில் விக்கித்து நின்றாள். அவளிடம் இருந்து பதில் வராமல் போக விஷ்வா அவளை திரும்பி பார்த்தான்..

கண்ணில் நீருடன் நின்று இருந்தால். அதில் ஜர்க் ஆனவன், என்னடி ஆச்சு என்று குழலி அருகில் சென்று அவள் கண்ணீர் வழிந்த கன்னங்களை துடைத்துவிட்டான்..

போடா எரும மாடு என்று அவன் மார்பில் கை முட்டியால் குத்தி அடித்து கொண்டிருந்தாள். போடா வா என்று அவன் வாய் பிளந்து கேட்க? ஆமாண்டா அப்படி தான் சொல்லுவன் என்ன உன்ன டான்னு சொல்றத்துக்கும் எனக்கு உரிமை இல்லையா என்று அவள் வீஞ்சி கொண்டு நிற்க..

அவனுக்கு நன்றாக புரிந்தது அன்று நான் பேசிய பேச்சுக்கும் சேர்த்து தான் இப்போது சண்டைக்கு நிற்கிறாள் என்று..

அவன் சிரித்து கொண்டே சமாளித்தான். ச்ச ச்ச அப்படிலாம் இல்லடி உன் இஷ்ட்டம் போல என்னவேனாலும் கூப்பிடு எப்படி வேணும்னாலும் கூப்பிடு என்று சரண்டர் ஆகிவிட்டான்.

ஒருவாரமாக பேசாமல் மூஞ்சை தூக்கி வைத்து கொண்டிருந்த இருவரும் இவர்கள் தானா என்று கேட்டால்.. நிச்சயம் இல்லை. இருவருக்குள்ளும் ஈகோ.. யார் முதலில் பேசுவது எப்படி பேசுவது என்று.. இன்று ஒரு சின்ன சந்தர்ப்பம் அவர்கள் பேசுவதற்கு கிடைக்க கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் இரண்டும் பழைய மாதிரி ஒட்டி கொண்டது.

இன்னொரு வாட்டி உரிமை இல்ல, நான் யாரு அப்படி எதாச்சும் சொல்லி பாரு உன் சாப்பாட்டுல பேதி மாத்திரைய கலந்து குடுக்குறன் என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்க, அவள் விரலை மடக்கி பிடித்தவன், பிடித்து இருந்த அவன் விரல் மீது முத்தமிட்டான்.

அதற்கே குழலி ஒரு மாதிரி ஆகிவிட்டால்.. சரி சரி மலை ஏறாத, என்று கூறி அவள் தோள் மீது கை போட்டு கொண்டு பால்கனி அழைத்து சென்றான். அவளும் அவனோடு ஒன்றி தான் நின்று இருந்தால்.

நீண்ட நேரம் வான் நிலவை ரசித்து கொண்டிருந்தான். நிலவை பார்த்தவாறே அவளிடம் கூறினான் சாரி என்று.

எதற்கு இந்த சாரி என்று புரிந்து கொண்டவள், நான் உன்ன மன்னிக்க மாட்டன் ஷிவா என்றால்.

சரி மன்னிக்காத ஆனா என்கிட்ட பேசு என்றான். மென்மையாக சிரித்து கொண்டால். நீ பேசாம மனசு எல்லாம் கஷ்ட்டமா இருக்கு டி. எனக்கும் அப்படி தான் இருந்துச்சு ஆனா உன்மேல எனக்கு செம கோவமா இருந்துச்சு அதான் நான் வந்து பேசல என்றால்.

குழலி உனக்கு இன்னும் புரியலையா டி?

என்ன புரியனும்?

நீ என்ன லவ் பண்றது?

குழலி அவனையே பார்த்தால்..

கொஞ்சம் நேரம் முன்னாடி நான் செத்த என்று அவன் பேச வருவதற்குள் அவன் வாயை தன் பிஞ்சு விரல்களால் அடைத்து இருந்தால்..

ப்ளீஸ் ஷிவா இப்படி பேசாத.. என்னால தாங்க முடியாது. ஏற்கனவே என்னோட முதல் கல்யாண வாழ்க்கைல என் கண் எதிர்க்க ஒரு உயிர் போச்சு அதையே என்னால தாங்க முடியல. இப்போ நெனச்சாலும் என் உடம்பு நடுங்குது.

அந்த வாழ்க்கைல நான் சந்தோஷமா இருந்தனா இல்லையானு எனக்கு தெரில, ஆனா நான் ஏமாந்து இருக்கன் ஷிவா அத கூட நான் கொஞ்சம் நாள் முன்னாடி தான் உணர்ந்தன். நீங்க குடுத்த படிப்பறிவாள தான் என்னால உணர முடிஞ்சுது..

குழலி சொல்வது எதுவும் விஷ்வாவிற்கு புரியவில்லை, இருந்தும் இடையில் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் பேசுவதை மட்டும் தான் கேட்டு கொண்டிருந்தான்.

அவள் மனம் விட்டு பேசட்டும் என்று நினைத்தான்.

நான் ஏமாந்த விஷயத்துல எனக்கே என்ன நினைச்சு கோவமா வந்துச்சு, இவ்ளோ முட்டாளா இருந்து இருக்கேனேனு நினைச்சு..

ஆனா அதல நான் சந்தோஷ படுறன் ஷிவா, அந்த மாதிரி ஏமாத்துகாரனுக்கு என் பொண்ணு பொறக்கலன்னு என்று அவள் விசும்பி விசும்பி அழ, அவள் சொன்ன செய்தியில் விஷ்வா தான் அதிர்ந்து நின்றான்.

குழலி என்று அவள் பக்கம் திரும்பியவன் அவள் தோள்களை பற்ற, அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தவள் அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்தால்.. விஷ்வாவும் அவள் உடனே அமர, குழலி ப்ளீஸ் ரிலாக்ஸ் டி, அமைதியா இரு இப்படி அழாத என்று அவளை தன்னோடு அனைத்து கொண்டான்.

ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல எல்லாம் சரி ஆகிடும் என்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த அவள் முதுகை மென்மையாக வருடி கொடுத்தான்..

நீண்ட நேரம் கழித்து அவள் அழுகை விசும்பலாக மாறி சற்று மட்டு பட்டிருந்தது.. அவள் அழுத மூக்கு சளி எல்லாம் அவன் டீஷர்ட்டில் தான்.. அவளை நிமிர்ந்து பார்க்க அவள் கள்ள முழி முழித்து அவளின் குர்த்தா டாப்பை தூக்கி அவன் சட்டையை துடைத்துவிட்டாள்..

அவன் சிரித்து கொண்டே, விடு டி என்று கூறி, அவள் அருகே சென்று அவள் தோள் மீது கை போட்டு கொண்டான்..

சாரி ஷிவா, நான் என்னமோ பேச நினைச்சு என்னமோ பேசிட்டன் என்றால்..

ஷிவா இனிமேல் நீ எப்பவும் அந்த மாதிரி அபசகுனமா பேச கூடாது சரியா என்றால் குழந்தை போல் மூக்கை சுருக்கி..

அவள் அழுததால் சிவந்து இருந்த மூக்கை பிடித்து திருகியவன்.. சரி பேசமாட்டன் என்றான்.

குழலி, பூரணி பாப்பா அவனோட குழந்தை இல்லனா யாரோட குழந்தை என்றான். சாதாரணமாக தான் கேட்டான்.. ஆனால் குழலி தான் அந்த கேள்வியில் கூனி குறுகி போனால்.

உள்ளுக்குள் வலித்த மனதை சமன் செய்து கொண்டு நான் தப்பான பொண்ணு இல்ல ஷிவா என்றால். கண்ணீர் அவளையும் மீறி வழிந்தது.

ஹே பைத்தியம் நான் என்ன அர்த்தத்துல கேட்டன் நீ என்ன புரிஞ்சிகிட்ட என்று அவள் மீது கோவம் கொண்டவன், மேலும் ஏதோ பேச வாய் திறக்க..

ப்ளீஸ் ஷிவா இத பத்தி பேசவேண்டாம்.. இத இப்படியே விட்ருங்க என்றால்.

அதற்கு மேல் விஷ்வா எதுவும் பேசவில்லை.. அவளை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான்.

விஷ்வா அவள் தன் மீது வைத்துள்ள காதலை புரிய வைத்துவிடலாம் என்று நினைத்து இருக்க, அனைத்தும் வீணாகி போனது அவள் வைத்த ஒப்பாரியில்.

விஷ்வா நீ இன்னும் கொஞ்சம் போராடனும்டா என்று அவனே அவன் நெஞ்சை தடவி தைரியம் கொடுத்து கொண்டான்.

ஷிவா நாம ஃப்ரன்ட்ஸ்னு சொல்ற ஆனா இந்த மாதிரி ஹக் பன்றோம், நீ அப்போ அப்போ என் நெத்தில கிஸ் பண்ற இப்படிலாம் ஃப்ரன்ட்ஸ் பண்ண மாட்டாங்களே  என்றால் அப்பாவியாக..

ஹ்ம்ம் ஆமா அதனால நீ இனிமேல் என் ஃப்ரன்ட் இல்ல கேர்ள் பெஸ்டீ என்றான் கண்ணடித்து, கேர்ள் பெஸ்டீயா அப்படினா என்ன என்று அவள் விழிக்க..

அப்படினா என்று ஒரு மார்க்கமாக இழுத்தவன், எதுவும் கூறாமல் அவளை உல்லாசமாக பார்க்க.. அவன் பார்வையில் அவளுக்கு தான் உடல் எல்லாம் வேர்த்து கொட்டியது, பின் தன்னை சகஜமாக மாற்றி கொண்டவள் சொல்லு டா என்று அவன் டீஷர்ட்டை பிடித்து உளுகினால்..

கேர்ள் பெஸ்டீனா ஃப்ரன்ட்க்கு மேல லவ்வர்க்கு கீழ என்றான்.. அப்போதும் மக்கு பெண்ணவள் புரியாமல் விழிக்க, அவள் பார்வை புரிந்தவன் நமட்டு சிரிப்போடு சொன்னான் போக போக நீயே புரிஞ்சிக்குவ குழலி என்று..

ஹ்ம்ம் என்று நீண்ட மூச்சை விட்டவள் என்னமோ போ ஷிவா, என்று அவன் தோள் மீதே சாய்ந்து கொண்டால்.

என்ன மேடம் இங்கவே தூங்க போறிங்களா, வாங்க உள்ள போலாம் என்றான்.

தூக்கம் வர்ல ஷிவா சும்மா உங்க தோள் மேல சாஞ்சுக்க தோனுச்சு என்றால்..

அவன் போன் திரையில் நேரத்தை பார்க்க குழலி மணி மூணு ஆக போது டி, என்றான்..

ஷிவா என்று சிணுங்கினால், ஓண்டி செல்லம் என்று அவன் கொஞ்சினான்..

லாங் டிரைவ் கூட்டிட்டு போறிங்களா என்று கேட்டாலே பார்க்கலாம்..

அடியே டைம் மூணு ஆகுதுன்னு சொல்றன், லாங் டிரைவ் போலாம்ன்னு சொல்ற, நாளைக்கு ஆபீஸ் இருக்கு டி..

அதான் நாளைக்கு ஏதோ பார்ட்டின்னு சொன்னிங்கள என்றால் அவன் தோளில் சாய்ந்து கொண்டே.

மார்னிங் எப்பவும் போல ஆபீஸ் போனும் டி, மதியம் தான் வீட்டுக்கு வருவன்.

எனக்காக நாளைக்கு லீவு போடுங்களன் என்றால் கொஞ்சலாக.. அவனுக்கு அவள் கேட்ட விதம் உள்ளுக்குள் ஜிவ்வென்று இருந்தது.. அவன் உணர்வை அவளுக்கு புரிய வைக்க நினைத்தானோ என்னவோ!!

அவள் முகத்தை அவன் தோளில் இருந்து நிமிர்த்தியவன், அவள் உச்சம் தலையில் முத்தமிட்டு மூக்கோடு மூக்குறசி சரி நாளைக்கு லீவு போடுறன் என்றான்..

அவன் செயலில் கண் மூடியவள் ஷிவா என்றால், உணர்வுகளை அடக்க முயன்று..

அதற்கு மேல் எல்லை மீராதவன், சரி வா லாங் டிரைவ் போலாம் என்று எழுந்து கொண்டு ஒரு கை நீட்டி அவளையும் எழுந்து கொள்ள அழைத்தான்.

அவளும் அவன் கை பிடித்து எழ, இருவரும் உள்ளே சென்றனர். விஷ்வா குழந்தையை தூக்கி கொண்டு கீழே சென்றவன் தம்பியின் அறை கதவை தான் தட்டினான்..

ஆழ்ந்த நித்திரையில் இருந்தவன், கொட்டாவி விட்டு கொண்டே வந்து கதவை திறக்க, அவனை இடித்து கொண்டே உள்ளே சென்றவன் மெத்தையில் பூரணி பாப்பாவை கிடத்தி தட்டி கொடுத்தான்..

பின் தம்பியிடம் வந்தவன், பாப்பாவ பாத்துக்கோ டா.. குழலி லாங் டிரைவ் கூட்டிட்டு போக சொன்னா, போய்ட்டு வந்துடுறோம் என்க..

சூர்யா அண்ணன் சொல்வதை கேட்டு முழித்தவன் நேரத்தை பார்த்தான் மணி 3.30 am. டேய் அநியாயம் பண்ணாத டா, உன் தம்பி நான் இங்க காதல் தோல்வில இருக்கன் நீ உன் பொண்டாட்டியோட 3.30 க்கு லாங் டிரைவ் போறன்னு சொல்லி வெறுப்பேத்தறியா என்று தலையணையை எடுத்து அவன் மீது வீச.. அதை கேட்ச் பிடித்து அவன் மீதே திரும்ப வீசினான் விஷ்வா.

டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாது, எப்படியும் ரஞ்சனிய தான் கல்யாணம் பண்ணிக்க போற, அதுக்கான பிளான் கூட போட்டு வச்சு இருப்பியே இந்நேரம். எதாச்சும் ஹெல்ப் வேணும்னா கேளு டா, தம்பி உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறன் என்று நக்கலாக கூறினான். அதில் சில நொடிகள் சூர்யாவின் முகத்தில் கள்ள முழிகள் வந்து சென்றது.. அவன் முகத்தில் தெரியும் உணர்வுகளை மனதில் குறித்து கொண்டே அங்கிருந்து சென்றான் விஷ்வா.

குழலி வெளியில் தான் காத்து கொண்டிருந்தாள். அவளிடம் வந்தவன் வா போலாம் என்று அவளை அழைத்து கொண்டு லாங் டிரைவ் சென்றான் தம்பியின் பைக்கில்..

வெளியே அண்ணனிடம் எடக்கு மடக்காக பேசினாலும் உள்ளுக்குள், அவன் குழலியோடு இனக்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ந்து தான் போனான் சூர்யா..

தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

28. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விடியற்காலையில் லாங் டிரைவ் சென்றவர்கள், மெரினா கடற்கரை சென்று சூரிய உதயத்தை கண்டு, காலரா நடந்து விட்டு, கொஞ்சம் நேரம் தண்ணீரில் விளையாடி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்..

முதலில் பைக்கில் பயணம் செய்ய தடுமாறிய குழலி பின் விஷ்வாவின் இடுப்பை கட்டி கொண்டு அவள் பயத்தை துறந்தால். சூர்யாவின் பைக் அவளை அந்த அளவு பயம் கொள்ள வைக்கவில்லை.

சுகமாகவே அந்த பயணத்தை ரசித்தால். குழலி தன்னை கட்டி கொள்வால் என்று எதிர்பாராதவன் இன்பமாக அதிர்ந்து ஒரு நொடி வண்டியை தடம் புரல வைத்தான். அதில் ஷிவா என்று மிரண்டு இன்னும் அவனை அதிகமாக ஒன்றினால் குழலி.. சில்லென்ற விடியற்காலை காற்றும் லேசான பனியும் அந்த பயணத்தை ரசிக்க போதுமானதாக இருந்தது.

அந்த பயணம் முழுவதும் விஷ்வாவின் முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை.

அனைத்தையும் குளியல் அறையில் ஷவரின் அடியில் நின்று நினைத்து பார்த்தவனுக்கு இன்னும் புன்னகை மாறாமல் இருந்தது. பின் வேக வேகமாக குளித்து முடித்து கீழே சென்றவன், குழலிக்கு படிப்பு சொல்லி கொடுக்கும் தேவி டீச்சருக்கு அழைத்து இன்று விடுப்பு கூறிவிட்டான்.. பின் சமைத்து கொண்டிருந்த குழலிக்கு சமையலில் உதவ சென்றான்.

குழலி நைட் புல்லா தூங்காம இருக்க, சரசு அக்காவை சமைக்க சொல்றன் நீ ஓய்வு எடு என்று எவ்வளவு கூறியும் அவள் கேட்பதாக இல்லை.

வேண்டாம் ஷிவா, நான் சமைச்சா மாமாவும் சூர்யாவும் கொஞ்சம் கூட சாப்பிடுறாங்க.. அதான் நானே சமைக்குறன், எனக்கு எந்த அசதியும் இல்லை என்று கூறி சமையலில் இறங்கிவிட்டாள் குழலி.

நீ சமைச்சா நானும் அதிகமா தான் சாப்பிடுறன் அத கவனிக்கலயா நீ என்று அவர்களோடு போட்டிக்கு நின்றான் விஷ்வா. ஹ்ம் தெரியும் தெரியும் என்று பேசி கொண்டே, சமையல் அறை சென்றுவிட்டால்.

விஷ்வா சமையலறை வந்தவன், அங்கு தலையில் உள்ள ஈர துண்டை கூட கழட்டாமல் வேலை செய்து கொண்டிருக்கும் மனைவியை மனதோடு கடிந்து கொண்டு அவள் அருகில் சென்று துண்டை கழட்டிவிட்டான்.. அச்சோ ஷிவா கழட்டாதிங்க, சாப்பாட்டுல முடி உதிர போகுது என்று அவசரமாக கூறினால்..

ஆவியில் வெந்து கொண்டிருக்கும் இட்லி அடுப்பை குறைத்து வைத்துவிட்டு, அவளை இழுத்து கொண்டு மேலே சென்றவன், தலையை நன்றாக துவட்டி, ட்ரய்யரில் அவளின் நீள கூந்தளை உளற வைத்தான். சீயக்காவின் மனம் அவனை கிரங்கடிக்க, அவள் கூந்தளை அல்லி முகத்தில் போட்டு வாசம் பிடித்தான்.

இந்த அரோமா செமையா இருக்கு குழலி என்று தன்னை மறந்து கூறினான். அச்சோ ஷிவா டைம் ஆகுது போங்க என்று அவனை விட்டு விலகி, இருப்பக்கம் முடி எடுத்து கேட்ச் கிளிப்பில் அடக்கியவள் அடிமுடியை சின்ன முடிச்சிட்டால்.

அவள் செய்கையை கண்டவன் அவள் திரும்பி நடக்கும் பொழுது இருபக்கமும் அசைந்து ஆடும் அவள் நீண்ட கூந்தலில் அவன் மனம் விழுந்து போனது.. அழகு குட்டி என்று கொஞ்சி கொண்டவன், மீண்டும் சமையல் அறை சென்றான். அடுப்பில் கொதித்து கொண்டிருந்த உலையில் ஊறவைத்த அரிசியை கழுவி பதமாக போட்டு கொண்டிருந்தாள் குழலி. இந்த முறை உண்மையில் குழலிக்கு சமையலில் உதவி செய்தான்.

தேங்காய் வெட்டி, பொட்டு கடலை மற்றும் இதர பொருட்கள் சேர்த்து சட்னி அரைத்து கொடுத்தான். மதியம் சமைக்க வேண்டிய கூட்டு பதாத்ததிற்கு காய்கறிகள் நறுக்கி கொடுத்தான்.

அவனின் உதவியோடு வேலைகள் சற்று சீக்கரமே முடிய, ஆற வைத்த உணவுகளை லஞ்ச் பாக்ஸில் பேக் (pack) பண்ணி உணவு மேஜையில் வைத்தால்.

அனைத்து வேலைகளையும் 8 மணிக்கே முடிந்து விட, நீ மேல போ குழலி வரன் என்றவன் தம்பியின் திறந்து இருந்த அறையினுள் நுழைந்து பூரணி பாப்பாவை தூக்கி கொண்டு மேலே சென்றான்.

அதற்குள் குழலி தூக்கத்திற்கு சென்று இருந்தால். படுத்ததும் தூங்கற அளவுக்கு உடம்புல அசதிய வச்சிக்கிட்டு, போய் வேலை செய்றா பாரு என்று கடிந்து கொண்டவன் குழந்தையை சுவற்றோரம் படுக்க வைத்துவிட்டு, ஸ்க்ரீனை இழுத்து மூடி விட்டு லைட் ஆப் செய்துவிட்டு குளிரூட்டியை மிதமான அளவில் வைத்து அவனும் உறங்க தொடங்கினான்.

11 மணி போல் எழுந்த குழந்தையை துயில் கலைந்த விஷ்வாவே கவனித்து கொண்டான். குழந்தைக்கு முளைத்த 6 பற்களை கையால் சுத்த படுத்தி குளிக்க வைத்து, பவுடர் போட்டு உடை அணிவித்துவிட்டான். பின் கீழே அழைத்து சென்று உணவை ஊட்டிவிட்டான்.

வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு கிளம்பி விட, மகேஷ்வரி மட்டும் வீட்டில் இருந்தார். அவரோடு மயூரி வைத்த வேலையாலும் இருந்தார்.

மயூரி மகேஷ்வரியிடம் விஷ்வா குழலியை காரணம் காட்டி தன்னை நிராகரித்ததை பற்றி கூறியிருந்தால். அவள் செய்த செயலை மறைத்து. இதில் குழலி மீது இன்னும் வன்மத்தை வளர்த்து கொண்டார் மகேஷ்வரி. மேலும் மயூரி அவளின் தற்கொலை முயற்சியை பற்றியும் தெரிவித்து இருக்க நேரில் சென்று அவளை பார்த்து வந்தவர். தன் மகனுக்காக தற்கொலை முயற்சி செய்து, தன் மகன்மேல் உயிரையே வைத்து இருக்கும் மயூரி தான் இந்த தன் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்று அவர் முடிவில் உறுதியாக இருந்தார்.

இப்போது மயூரி மகேஷ்வரி இருவருக்கும் தூதுவராக இருப்பது இந்த பாக்கியம் என்ற பணிபெண் மட்டுமே. இங்கு நடக்கும் விஷங்களை இன்னும் மயூரிக்கு அச்சு பிழறாமல் தகவல் பரிமாறி கொண்டிருக்கிறாள்.

மகளை அழைத்து கொண்டு மேலே சென்றான் விஷ்வா, அவனுக்கும் தூக்கம் போதவில்லை. சிவந்து இருந்த கண்கள் இன்னும் தூக்கத்திற்கு இரஞ்சியது. வெளியே அவன் தாய் இருப்பதால் குழந்தையை சரசுவிடம் விடவும் மனம் ஒப்பவில்லை. பின் பால்கனி பக்கம் சென்றவன் அவனே குழந்தையை வைத்து விளையாட்டு காட்டி கொண்டு இருந்தான். குழலிக்கு மகள் எழுந்தது கூட தெரியவில்லை நல்ல உறக்கம்.

மதியம் போல் மீண்டும் குழந்தைக்கு உணவை ஊட்டிவிட்டு, அவன் மார்பின் மீது போட்டு தட்டி கொடுக்க பாப்பா நன்றாக உறங்கி இருந்தால் விஷ்வாவும் குதுகலத்தோடு குழந்தையை அவன் அருகில் கிடத்திவிட்டு குழலியை இழுத்து அவன் மார்பின் மேல் போட்டு கொண்டு உறங்கினான்.

மாலை 5 மணி போல் கண்விழித்தால் குழலி, தன்னை அனைத்து கொண்டு உறங்கும் கணவனை பார்த்தவள், பதறவெல்லாம் இல்லை. மென்மையாக சிரித்து அவன் அடர்ந்த மீசையை பிடித்து இழுத்து குறும்பு செய்து கொண்டிருந்தாள்..

அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை. நிலையான முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறாள். ஆனால் அவள் மனதில் விஷ்வ கர்ணன் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறான் என்பது மட்டும் உண்மை. அதே நேரம் மயூரி விஷ்வா என்று வரும் போது, இருவரையும் சேர்த்து வைக்க நினைக்கிறாள். காரணம் அவளுள் ஆரம்பத்தில் விஷ்வா விதைத்த தாழ்வு மனப்பான்மை தான் காரணம்.

நான் விஷ்வாவுக்கு சரியான பொருத்தம் இல்லை, நான் ஏற்கனவே திருமனம் ஆனவள் என்று ஏதேதோ காரணத்தை தேடி அதனுள் ஒளிந்து கொள்ள முயல்கிறாள்.

மறுக்கனம் விஷ்வா அவளிடம் கொஞ்சம் கொஞ்சி பேசினாலும் அவன் பால் சாயும் மனதை தடுக்க முடியாமல் தவிக்கிறாள். எங்கே சென்று முடிய போகிறதோ இவர்களின் உறவு.

தொடர்ந்து குழலி செய்யும் சேட்டையில், தூக்கத்தை கலைந்தவன் அவளை கோழி அமுக்குவது போல் அமுக்கி தன்னோடு அழுத்தி கொண்டு கவிழ்ந்த வாக்கில் படுத்து கொண்டான்.

வலிமையான பூஜங்களுக்குள் அடங்கி போக, அவளுக்கும் பிடித்து இருக்கவே அமைதியாக அவனுள் ஒன்றி போனால்.

மீண்டும் ஒரு மணி நேரம் தூங்கியவர்களை பூரணி பாப்பா தான் கன்னத்திலே சப் சப்பென்று அடித்து எழுப்பிவிட்டால். பின் இருவரும் தூக்கத்தில் இருந்த குழந்தையை கொஞ்சி தீர்த்து மெத்தையை விட்டு எழுந்தனர்.

விஷ்வா நேரத்தை பார்த்தவன், குழலி டைம் ஆகுது, போய் பிரெஷ் ஆகிட்டு வந்து கிளம்பு என்று கூறிவிட்டு அவன் போனை எடுத்து கொண்டு பால்கனி சென்றுவிட்டான். போன் பேச..

குழலிக்கு அவன் பார்ட்டிக்கு கிளம்ப சொல்கிறான் என புரிந்தும், அவனோடு விளையாட எண்ணியவள் மூளை கோக்கு மாக்கான ஐடியாவை கொடுக்க அதை செயல் படுத்த எண்ணினால்.. விஷ்வாவிடம் வாங்கி கட்டி கொள்ள போவது அறியாமல்..

பத்து நிமிடம் கழித்து உள்ளே வந்தான் விஷ்வா, குழலி இன்னும் மெத்தையை விட்டு எந்திரிக்காமல் இருப்பதை கண்டவன், குழலி கிளம்பு டி, டைம் ஆகுது என்று அவசரபடுத்த..

எங்கே என்றால்..

எங்கவா? சொன்னன்ல ஈவ்னிங் பார்ட்டிக்கு போனும்னு.. மறந்துட்டியா?

ஹலோ வெயிட் நான் எப்போ பார்ட்டிக்கு வரேன்னு சொன்னன் என்றாலே..

அவ்வளவு தான் கடுப்பாகி விட்டான். அலமாரியை திறந்து அதில் உள்ள பார்சலை எடுத்து அவளிடம் வீசயவன், இதல பார்ட்டிக்கு உடுத்திக்க சாறி (saree) இருக்கு. உனக்கு இஷ்ட்டம் இருந்தா கிளம்பி வா, இல்லனா வராத.. இதுக்கு மேல உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது என்றவன் குளியல் அறை புகுந்து வேகமாக கதவை அடைத்து சாத்தி இருந்தான்.

அச்சோ ரொம்ப ஓவரா போயிட்டன் போலவே, என்று தன்னையே நொந்து கொண்டவள்.. பாப்பாவை பக்கத்து அறைக்கு தூக்கி சென்று, சுத்த படுத்தி அழைத்து வந்தால்.

குழந்தைக்கும் அதில் இளம் ரோஜா நிறத்தில் உடை இருக்க அதை அணிவித்து விட்டு, அழகு படுத்தி விட்டாள்.. தலையில் ஹேர் கிளிப்போடு குட்டி தேவதை போல் இருந்தால் பூரணி பாப்பா.

அதற்குள் விஷ்வாவும் வெளியே வர, குழந்தைய பார்த்துக்கோங்க ஷிவா நான் ரெடி ஆகிட்டு வரன் என்றவள், அவன் சட்டை அணியாத தேகத்தை பார்க்க வெட்கபட்டு கொண்டு வேகமாக குளியல் அறை புகுந்து கொண்டால்.

அவள் பேசிய எதையும் கண்டு கொள்ளாதவன், குழந்தையை தூக்கி கொண்டு பால்கனி சென்று கதவை மூடி கொண்டான். அவள் குளித்து முடித்து உடை மாற்ற வசதியாக.

குளித்து முடித்து வந்தவள், அவன் கொடுத்த பார்சலை எடுத்தால், குழந்தைக்கு எடுத்தது போல், குழலிக்கும் இளம் ரோஜா நிறத்தில் தான் பார்ட்டி வியர் சாறி ஒன்றை எடுத்து இருந்தான். அவனுக்கும் அதே நிறத்தில் தான் ஃபோர்மல் ஷர்ட் எடுத்து இருந்தான். குழலிக்கு உடைக்கு தகுந்தார் போல் ஃபான்சி மாடல் கல் வைத்த தங்க நகைகளும் இருந்தது.

பெரிதாக உச்சு கொட்டியவள், பால்கனி கதவை தட்டி என்ன ஷிவா இது எதுக்கு கோல்ட் ஜுவல்ஸ் என்றால்.. அவள் பேசுவதை கண்டு கொள்ளாதவன், அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

பின்னாலே சென்றவள், ஷிவா என்று அழைக்க.. வாய மூடிட்டு கிளம்பு டி என்று கத்தியிருந்தான்.

குழந்தை அவனை மிரண்டு போய் பார்க்க.. ஒன்னும் இல்லடா தங்கம் என்று குழந்தை கன்னத்தில் முத்தமிட்டு சமாதானம் செய்து மெத்தையில் அமர வைத்து அவன் கிளம்ப தொடங்கினான். குழலி கலங்கி நிற்பதையும் கண்டு கொள்ளாமல்.

அவனும் அவர்களுக்கு மேட்ச்சாக உடை அணிந்து ஆணழகனாக கிளம்பி நிற்க, குழலியை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான். ஒரு நிமிடம் இமைக்க மறந்து மூச்சைடைத்து நின்றான்.

பின் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவள் கைகளில் இருக்கும் நகைகளை வாங்கி அவனே அவளுக்கு அணிவித்தான். பட்டும் படாமலும் கழுத்தில் உரசும் அவன் கைகளால் சிலிர்த்து அடங்கினால்.
அவனும் அதை உணர்ந்து உதட்டுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டான்.

பின் அவள் அணிந்து இருந்த நான்கு பட்டை பட்டையான தங்க வளையல்களை கழட்டி, புதிதாக வாங்கி இருந்த ஃபன்சி தங்க வளையல்களை அணிவித்து விட்டான்.

அவன் கைகளுக்குள் பொம்மை போல் நின்றாள் குழலி. இதழ் மட்டும் குழந்தை போல் முனுமுனுத்தது சாரி என்று. அதை கண்டு கொள்ளாதவன் குழந்தையை தூக்கி கொண்டு வா போகலாம் என்று அழைத்துவிட்டு முன்னே நடந்தான்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

29. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா குழலி அவர்களின் மகள் என குடும்பமாக பார்ட்டி நடக்கும் கட்டிடத்தினுள் நுழைந்து இருந்தனர். இந்த விழாவிற்காக அவர்களின் அலுவலகம் தான் இன்று இந்த ஏழு நட்சத்திர பார்ட்டி ஹாலை வாடகைக்கு எடுத்து இருந்தனர். குழலி அனைத்தையும் பிரம்மித்து பார்த்தால்.

விஷ்வாவின் மேல் அதிகாரி அவனை குடும்பத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தனிப்பட்ட முறையில் கேட்டு கொண்டார், அதனால் அவனும் குழலியை அழைத்து வந்து இருந்தான்.

ஆனால் விஷ்வாவிற்கு திருமனம் நடந்த செய்தி அலுவலகத்தில் யாருக்கும் தெரியாத ஒன்று.

பொதுவாகவே விஷ்வா அவனது தனிப்பட்ட விஷயத்தை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. இப்போது மட்டும் அல்ல சிறு வயதில் இருந்தே அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவனுக்கு எப்போதும் படிப்பு தான் முதலிடம்.. படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்ததும் வேலைக்கு முதலிடம் கொடுத்தான்.

அவனின் தாயின் மெத்தன போக்கை வைத்து பள்ளியில் அவனுடன் படிக்கும் மாணவர்கள் சிலர் அவன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் அவன் தாயை தவறாக பேச, அதில் கோவம் கொண்டவன் அந்த மாணவர்களை அடித்து மண்டையை உடைத்து பெரிய பிரச்சனையாகிவிட்டது.. அதன் பின் கல்யாண சுந்தரம் தான் வந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசி பெரிய பிரச்சனை ஆகாமல் தடுத்து மன்னிப்பு கேட்டார்.

அன்றில் இருந்து விஷ்வா அவனிற்க்கு நண்பர்கள் என்று யாரையும் அருகில் வைத்து கொள்ளவில்லை. ஏதுவாகினாலும் அவனின் அப்பா மற்றும் தம்பியிடம் முடித்து கொள்வான்.

பார்ட்டியில் இருந்தவர்கள் அனைவரின் கண்ணும், விஷ்வாவோடு அழகு பதுமையாக நடந்து வரும் குழலி மீதும், கொழு கொழுவென விஷ்வா கையில் தவழும் பூரணி பாப்பா மீதும் தான் இருந்தது.

விஷ்வா யாருக்கும் அவன் திருமணத்தை பற்றி கூறிடாவிட்டாலும், இன்று பார்ட்டியில் கலந்து கொண்ட மயூரி இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்தால்.

விஷ்வாவுடன் மான் குட்டி போல் வந்த குழலி அவ்வளவு அழகாக இருந்தால். விஷ்வா அவளை கைவளைவில் வைத்து கொண்டே பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் மேல் அதிகாரியிடம் அழைத்து சென்றவன் என் மனைவி பொற்குழலி என்றும் என் மகள் பூர்ணிமா என்றும் அறிமுக படுத்தினான்.

வணக்கம் அப்பா என்று கையெடுத்து வணக்கம் வைத்தாள் குழலி, அவர் அவளின் அப்பா என்ற அழைப்பில் நெகிழ்ந்து தான் போனார். குழலி இவ்வாறு விளிப்பால் என்று விஷ்வாவும் எதிர்பார்க்கவில்லை. புன்னகை முகம் மாறவில்லை எதிரே இருந்தவருக்கு.

கிட்டத்தட்ட கல்யாண சுந்தரதின் வயதில் இருந்தார் அந்த பெரிய மனிதர்.

பூரணி பாப்பாவை கண்டு, ஹேய் குட்டி வாங்க வாங்க என்று அன்போடு தூக்கி கொண்டார்.

விஷ்வா அவரை குழலியிடம் அறிமுகபடுத்த வர, நீ சும்மா இரு விஷ்வா, நானே என்ன அறிமுக படுத்திக்குறன் என்றவர்.. சற்று தூரத்தில் இருந்த அவர் மனைவியை வினோ என்று அழைத்தார்.

அவர் மனைவி அவர்களை நெருங்க, நான் ஜெயச்சந்திரன் விஷ்வாவோட DGM என்றும் அருகில் உள்ள மனைவியை தோளோடு அனைத்து என் மனைவி வினோதினி என்றும் அன்போடு அறிமுக படுத்தினார். அப்பறம் என் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை எனக்கு ஒரு பெண் குழந்தை என அவர் மனைவியை பார்த்து சிரித்து கொண்டே கூற, அதில் குழலி தான் முழித்து வைத்தால்..

கணவன் மனைவி இருவரும் சிரித்து கொண்டனர், எனக்கு என் மனைவி தான் குழந்தை என்றும் எனக்கு என் கணவன் தான் குழந்தை என்றும் மாறி மாறி மகிழ்ச்சியோடு கூறினர்.

குழலி சங்கடமாக உணர்ந்தால். ஆனால் விஷ்வா எப்போதும் போல்  அவர்களின் காதலை கண்டு வியன்தான்.

குழலி அவரின் மனைவி வினோதினியிடமும் நல்லா இருக்கீங்களா மா என்று அன்போடு விசாரித்தால். அதில் வினோதினிக்கும் குழலியை பிடித்துவிட்டது.

இருவரும் கொஞ்சம் நேரத்திலே ராசியாகி போயினர்.

குழந்தையை ஜெயச்சந்திரன் வினோதினி தம்பதி தான் வைத்து இருந்தனர், குழந்தையும் அவர்களின் கொஞ்சல் மொழியில் அவர்களிடமே ஒட்டி கொண்டது.

விஷ்வா குழலியை அழைத்து கொண்டு, அந்த இடத்தை சுற்றி காண்பித்தான்.

மயூரி வந்ததில் இருந்து விஷ்வாவை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள். உள்ளுக்குள் தகித்தாலும் வெளியே எதையும் காட்டி கொள்ளாமல் திமிர் பார்வையை வீசினால்.

விஷ்வா அவளை கண்டு கொள்ளவே இல்லை. குழலியிடம் மயூரியை நெருங்க விட கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான்.

மயூரி அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்து கொண்டிருக்கும் நேரம், அவளிடம் வந்த சில பேர் ஹேய் மயூ என்ன உனக்கும் விஷ்வாக்கும் பிரேகப் ஆகிடுச்சா? விஷ்வா யாரையோ கூட்டிட்டு வந்து என் பொண்டாட்டி குழந்தைனு அறிமுக படுத்தறாரு.. அப்போ இவ்ளோ நாள் கல்யாணம் ஆன விஷ்வா கூட தான் சுத்திட்டு இருந்தியா என்று எரிந்து கொண்டு இருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் மயூரியை சுற்றி சலசலப்பு ஏற்பட்டது.

கொலை செய்வது போல் ஆத்திரம் மூண்டாலும், அனைத்தையும் பொறுத்து கொண்டவள், அந்த பேச்சிலும் அவளுக்கு ஆதாயத்தை தேடி கொள்ள நினைத்தால்.

அவளை சுற்றி உள்ளவர்களை கண்டால், அதில் பாதி பேர் விஷ்வாவின் அணியினர் தான். முன்பு மயூரி விஷ்வாவின் அணியில் இருந்ததால் இவளுக்கும் பழக்கமே.

அலுப்பாக முகத்தை சுழித்தவள், விஷ்வா அந்த பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்து இருக்கான் என்றால் ஒன்றும் பாதியுமாக.

என்ன சொல்ற மயூ.. என்று சுத்தி இருந்தவர்கள் கதை கேட்கும் ஆர்வத்தில் காதை தீட்டினர்..

ஹான் அந்த பொண்ணுக்கு விஷ்வா ரெண்டாவது புருஷன்னு சொல்றன். அந்த குழந்தை விஷ்வாவோட குழந்தை இல்லனு சொல்றன் என்று அழுத்தி கூறினால்.

அப்படியா என்றனர் மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்..

பின்ன.. விஷ்வா ட்ரைனியா இந்த ஆபீஸ்ல ஜாயின் பண்ணான் இப்போ ஒரு டீம்மோட மேனேஜர் கிட்டத்தட்ட ஏழு வருஷமா இங்க தான் வேலை செய்றான்.. நமக்கு தெரியாம எப்படி அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து இருக்கும்? விஷ்வா இது வரைக்கும் லாங் லீவ் எடுத்து இருக்கானா? இல்லல.. இது அவங்க அப்பா பண்ணி வச்ச கட்டாய கல்யாணம். ஏத்துக்கவும் முடியாம விலகவும் முடியாம இருக்கான். என்கிட்ட வந்து கெஞ்சுனான், நான் அவள விவாகரத்து பண்ணிட்டு வரன், நீ எனக்காக வெயிட் பண்ணுனு..

நான் சொல்லிட்டன் எங்க வீட்ல ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி தர மாட்டாங்கன்னு நான் தான் அவனை பிரேகப் பண்ணிட்டன் என்று கெத்தாக பீட்டர் விட்டால்.

நான் அவன பிரேகப் பண்ணிட்டன்னு தான் கிடைச்சத வச்சு வாழ தொடங்கிட்டான் போல என்று குழலியை பார்த்து கொண்டே கூறினால். அவளை சுற்றி இருந்த கூட்டமும் அவள் பார்வை சென்ற திசையை நோக்க..

அங்கு, விஷ்வா குழலியின் முகத்தில் விழும் கற்றை முடியை ரசனையாக ஒதுக்கி விட்டு கொண்டிருந்தான்.

அந்த கூட்டத்தில் சிலர் மயூரி சொல்வதை நம்பியும் நம்பாமலும் இருந்தனர்.. ஆனால் அவள் கூறியதில் ஒன்றை மட்டும் முழுமையாக நம்பினர்.. அது விஷ்வா குழலிக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறான் என.

இன்னொரு விஷயம் தெரியுமா?? அந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட படிப்பறிவு இல்ல. தமிழ் எழுத படிக்கவே தகிடுத்தத்தம் தான். ஏதோ இப்போ தான் வீட்லயே ஒரு டியூட்டர் ஏற்பாடு பண்ணி படிக்க வைக்குறான் என்று கூடுதல் தகவலையும் கூறினால்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவள், ஆனா என்ன தான் சொல்லு மயூரி, அந்த பொண்ண பார்த்தா ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரி தெரியல, அப்படியே காலேஜ் படிக்குற பொண்ணு மாதிரி சிக்குனு இருக்கா என்றால்..

மயூரி முறைத்த முறைப்பில் அதோடு அந்த பெண் அங்கிருந்து நழுவி இருந்தால்.

மயூரி பரப்பிய இந்த செய்தி அரைமணி நேரத்தில் அந்த பார்ட்டியில் இருந்த பாதி பேரை சென்றடைந்தது.. அதில் சிலர் இதில் என்ன இருக்கு, நல்ல விஷயம் தானே என்று விஷவாவை பாராட்டினாலும், விஷ்வா மீது காழ்புணர்ச்சி கொண்டவர்கள் இந்த விஷயத்தை துருப்பு சீட்டாக உபயோகித்து விஷ்வாவை அவமான படுத்தவும் நினைத்தனர்.

அவனது குழு உறுப்பினர்கள் சில பேர் அவர்களே வந்து விஷ்வாவிடம் பேசி குழலியிடம் அறிமுகம் ஆகி கொண்டனர். மேனேஜரில் மனைவி ஆயிற்றே, விஷ்வா அவர்களிடம் ஒரு எல்லைக்குள் இருந்து பேசினான்.

பெண்களுக்கு பொறாமை தாங்கவில்லை. ஆளுமையாகவும் ஆணழகனாகவும் இருக்கும் விஷ்வா தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் தான்.

*****

குழலி அங்கிருந்த பனிக்கூழை ஆசையுடன் பார்க்க, அவள் பார்வை போகும் திசையை கண்ட விஷ்வாவிற்கு தான் பக்கென்றது.. பின்னே அவள் தான் பனிக்கூழை உண்ண தொடங்கினால் நிறுத்த மாட்டாலே.

ஷிவா ஐஸ்கிரீம் வேண்டும் என்றும் செல்லம் கொஞ்சும் பூனையாக அவனிடம் கொஞ்சி நிற்க, மறுக்க தோன்றுமா கணவனவனுக்கு??

நைட் பாப்பாக்கு ஃபீட் பண்ணாத என்று அவள் காதோடு முத்தமிட்டு ரகசியம் பேசினான். எவ்வளவு நேரம் தான் அவனும் அவனை கட்டுப்படுத்தி கொள்வான்??

அவன் செய்த செயல், அவர்கள் மீது ஒரு கண்ணை வைத்து இருந்த கூட்டத்தின் கண்ணில் தப்பாமல் விழுந்தது..

விஷ்வாவின் குழைவையும், குழலியின் நெளிவையும் கண்டவர்கள் இவர்களா கட்டாய திருமனம் செய்து கொண்டனர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

குழலிக்கு அவள் கேட்டது போல் அவளுக்கு பிடித்த சுவையில் பனிக்கூழை கொண்டு வந்தான்.. அழகான வட்ட வடிவ மேஜையில் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டனர்.. குழலி பனிக்கூழை ரசித்து உண்ண, விஷ்வாவோ பனிகூழ் உண்ணும் பனிசிற்பத்தை கண்கொட்டாமல் ரசித்தான்..

பனிகூழ் உண்ணும் ஆர்வத்தில் மூக்கிலும் உதட்டின் கீழும் ஈஷி கொண்டால் குழலி. அவளையே ரசித்து கொண்டிருந்தவன் தன்னை மறந்து அவள் ஈஷி கொண்ட பனிக்கூழை கையில் எடுத்து நாவில் சுவைத்தான்.. பொற்குழலி தான் அவன் செய்த செயலில் அவளின் நீள விழிகளை விரித்தால்.

கண்ண விரிக்காதடி, கண்ல கிஸ் பண்ணனும் போல இருக்கு என்று அவளை பார்த்து கொண்டே அவனை மறந்து பிதற்றினான்.

சுற்றம் மறந்தான் விஷ்வா.. அவனை சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த விஷ்வா புதிது. அவர்கள் இதுவரை பார்த்த விஷ்வா முற்றிலும் மாறுபட்டவன்..

நண்பராக வேண்டாம், கூட வேலை செய்பவர்கள் என்ற முறையில் கூட எவரையும் அருகே சேர்த்து கொண்டதில்லை. வேலையில் எப்போதும் கண்டிப்பாக இருப்பவன். அவன் சறுக்கிய ஒரே இடம் மயூரி மட்டும் தான்.

விஷ்வா குழலி அவர்களுக்கான உலகத்தில் இருக்க, ஹாய் விஷ்வா என்று அவன் எதிரே வந்து நின்றான் திலீப் மயூரியுடன் தற்போது உறவில் இருப்பவன்.

விஷ்வா அவனை ஒற்றை புருவம் உயர்த்தி எகத்தாளமாக பார்த்தான்..



தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

30. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா குழலியின் எதிரே திலீபன் வந்து நிற்க, அவன் வந்து இருந்த காரணத்தை ஓரளவு யூகித்து தான் இருந்தான் விஷ்வா. குழலியிடம் திரும்பியவன், குழலி அங்க வினோதினி மேம் இருக்காங்க அவங்க உன்ன கொஞ்சம் நேரம் முன்னாடி கூப்பிட்டாங்க போய் அவங்க கூட இரு என்று அனுப்பி வைத்தான். குழலியும் விஷ்வா மீது எந்த சந்தேகமும் கொள்ளாமல் வினோதினியை பார்க்க சென்றால்.

விஷ்வா எதிரே உள்ள திலீபன் மீது கவனத்தை செலுத்தினான். இப்போ உனக்கு என்ன வேண்டும் என்பது போல் விஷ்வாவின் பார்வை இருந்தது.. திலீப்பனுக்கும் விஷ்வாவிற்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் விஷ்வா, மயூரியின் விஷயத்தில் திலீப்பனின் போனை அவன் அனுமதி இல்லாமல் ஹேக் செய்தது தான் அவனுக்கு விஷ்வா மீது தீராதா கோவத்தை ஏற்படுத்தியது. அந்த கோவத்தை தீர்த்து கொள்ள சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தான் திலீப்பன்.

திலீப்பனின் பார்வை முழுவதும் அவனை கடந்து செல்லும் குழலி மீது தான் இருந்தது, வக்கிரமான பார்வை அது. திலீப்பனின் குணம் உணர்ந்து தானே விஷ்வா குழலியை வினோதினியிடம் அனுப்பி வைத்தது.. திலீப்பன் என்று மொத்த கோவத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து அதட்டும் தோணியில் அழைத்தான் விஷ்வா..

விஷ்வாவை கண்டு கோணலாக இதழ் வளைத்தான் திலீப்பன். பரவால்ல விஷ்வா நான் கூட என்னமோன்னு நெனச்சன், ஆனா இந்த மாதிரி ஒரு பொண்ணுக்காக நீ மயூரிய பிரேக்கப் பண்ணது சரிதான். சும்மா நச்சுன்னு தங்க சிலை மாதிரி இருக்கா.. செம ஸ்ட்ரெக்சர் என்று பேசி கொண்டே போக, விஷ்வா அவனை நோக்கி இரண்டடி முன் வைத்தான். ஹேய் கூல் விஷ்வா, என்று எள்ளளாக சிரித்த திலீப்பன்.. எவனோ தூக்கி போட்டத நீ கவ்விகிட்டனு கேள்விபட்டன் உண்மையா என்றான். இப்போது விஷ்வாவின் கோவத்தை பற்றி சொல்லவும் வேண்டுமா?

இருக்கும் இடம் கருதி அமைதி காத்தான். என்ன என்னை அடிச்சு மூஞ்சிய உடைக்கனும் போல இருக்கா என்று இம்முறை திலீப்பன் விஷ்வாவை நோக்கி சென்றான். அவனுக்கு நன்றாகவே தெரியும் இந்த இடத்தில் விஷ்வாவால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று..

உனக்கு போர் அடிச்சுட்டா சொல்லு, நான் அவளை என்று இழுத்தவன் விஷ்வாவின் அக்னி பார்வையை கண்டு சொல்லாமல் சிரித்து சென்றான் அவ்விடத்தை விட்டு..

விஷ்வாவின் முகத்தில் அவ்வளவு கோவம் வெறி.. தன் மனைவியை பற்றி தவறாக பேசியவன் வாயை உடைக்காமல் இருக்கும் இடம் கருதி அமைதியாக இருந்த அவனை நினைத்து அவனே அருவருத்தான். நீ ஒரு கோழை விஷ்வா என்று குழலி மீது காதல் கொண்ட மனம் ஒருபுறம் அவனை எள்ளி நகையாடியது.

அதற்கு மேல் பொறுமை இழந்தவன், டக் இன் செய்து இருந்த ஃபார்மல் சட்டையை வெளியே எடுத்துவிட்டு,  கழுத்து பொத்தானை இரண்டு கழட்டிவிட்டான்.. மணிக்கட்டு வரை இருந்த ஃபுல் ஸ்லீவ் சட்டையின் பொத்தானை அவிழ்த்து முழங்கை வரை ஏற்றிவிட்டு கொண்டே திலீப்பன் இருக்கும் இடத்தை நெருங்கினான்.

இரு பெண்களுடன் வழிந்து கொண்டிருந்த திலீப்பன், தன் தோளை தட்டி யாரோ அழைக்கவே திரும்பி பார்த்தான். அவன் என்னவென்று சுதாரிக்கும் முன்பே அவனின் வாயில் ரத்தம் கொப்பலித்தது. குடித்த சரக்கெல்லாம் ரத்தத்துடன் சேர்ந்து வெளியே வந்தது விஷ்வா அவன் வயிற்றில் குத்திய குத்தால்.

சற்று நேரத்தில் அந்த இடமே கலவரமானது. எல்லாரும் அலறி கூட்டம் கூடிவிட, குழலியும் அங்கு வந்துவிட்டால்.

அங்கு நடக்கும் சண்டையை கண்ட குழலிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. விஷ்வாவின் இந்த அவதாரத்தில் செய்வதரியாது நடுங்கி நின்றாள்.

மயூரி அறை போதையில் இன்னொருவன் தோளில் சாய்ந்து கொண்டு நிற்க முடியாமல் நின்றாள்.

அங்கு திலீப்பன் எதிர்த்து நிற்க வழி கொடுக்காமல் விஷ்வா அடித்து கொண்டே இருந்தான். திலீப்பனும் மதுவின் போதையில் இருக்க, விஷ்வாவின் அடியை தாக்கு பிடிக்க முடியவில்லை.

இதற்கு மேல் இருந்தால் எங்கு விபரிதம் நடந்து விடுமோ என்று எண்ணியவர்கள் விஷ்வாவை தடுக்கும் விதமாக பிடிக்க செல்ல, அவனின் வேகத்திற்கு அங்குள்ளவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

குழலி அவள் பயத்தை மறைத்து கொண்டு, விஷ்வாவை நோக்கி ஓடினால்..

ஷிவா.. ஷிவா என்று அவன் பக்கவாட்டில் நின்று அவன் புஜங்களை பிடித்து இழுத்தால்.. விஷ்வாவின் கோவத்தில் அவன் உடல் இறுகி போய் இருந்தது, புஜங்கள் இரண்டும் மேலும் திரண்டு நின்று வலிமை கூடி இருந்தது. முழங்கையில் நரம்புகள் முறுக்கேரி அவன் கோவத்தின் அளவை பறைசாற்றியது.

அதற்கு மேல் பொறுக்க முடியாத குழலி விஷ்வா என்று கத்தி, அவள் ஒட்டு மொத்த சக்தியையும் கூட்டி, அந்த வலிமையான ஆண் மகனின்  சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அரைந்து இருந்தால் அனைவரின் முன்பும். ஆற்றாமை தாங்க முடியாமல் கேட்டால் அவனை பார்த்து கேட்டால் பொறுக்கியா டா நீ..  கோவத்துடன் அழுத விழிகளுடன் கத்தினால்.

குழலி என்னவென்று சுதாரிக்கும் முன், அவள் தாடையை பிடித்து தன்னருகே இழுத்தவன் உதட்டில் நீண்டதொரு முத்தத்தை வழங்கினான். அங்குள்ள மற்றவர்களுக்கு தான் அது முத்தமாக தெரிந்தது. உதடும் உதடும் இணைவதால் மட்டும் அது முத்தமாகிவிடாதே.. விஷ்வாவின் அந்த ஆதிக்கத்தில் இருந்தது கோவம் கோவம் கோவம் மட்டுமே..

நிச்சயம் அது குழலி அடித்ததால் வந்த கோவம் அல்ல.. தன் உயிரானவலை இன்னொருவன் வக்கிரமாக பேசிவிட்டானே என்ற கோவம், கோவம் என்பதை விட வெறி என்றே கூறலாம்.

அவன் கோவத்தை போக்கி கொள்ள ஒரே வழி பொற்குழலி தான் என்று நினைத்தான் போலும், அவளை பற்றி சிறிதும் சிந்திக்காமல் அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறான்.. ஒரு கட்டத்தில் தன்னை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் இதழை விட்டு பிரிந்து, மூடி இருந்த அவள் கண்களில் இருந்து வழியும் நீரை துடைத்துவிட்டு அவள் பிறை நெற்றியில் முத்தமிட்டான்..

சுற்றி இருந்தவர்கள் தான் விஷ்வாவின் செயலில் அதிர்ந்து நின்றனர். சிறிது நேரத்திற்கு முன் இறையை வேட்டையாடும் சிறுத்தை போல் பாய்ந்தவன் இப்போது மான் குட்டி போல் இருக்கும் இந்த சிறு பெண்ணிடம் அடங்கி நிற்கிறானே என்ற அதிர்ச்சி தான்.

விஷ்வா குழலியை தோள் வளைவில் வைத்து கொண்டு அனைவரையும் பார்த்து கூறினான். என் குழலி, என் பொண்டாட்டி பொற்குழலி என்று கத்தியிருந்தான்..

என் பொண்டாட்டிக்கு இது ரெண்டாவது கல்யாணம் தான், இதல உங்க யாருக்காவது ஏதாவது பிரச்சனை இருக்கா?

நீங்க எல்லாம் முதல்ல ஒழுங்கா? கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே பலபேர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டு குழந்தைய அழிச்சிட்டு இன்னொரு இளிச்சவாயனுக்கு போய் கழுத்தை நீற்ற உங்க யாருக்கும் என் பொற்குழலிய பத்தி பேச எந்த தகுதியும் இல்லை என்றான். அங்கு இருந்த மாடர்ன் மங்கைகளின் முகம் எல்லாம் கருத்து போனது.

விஷ்வாவும் கவனித்து கொண்டு தானே இருந்தான், இலைமறை காய்மறையாக அனைவரும் விஷ்வா குழலியை பற்றி பேசியதை.. அதுவும் குழலியை பற்றி இழிவாக பேசியதை.

குழலி கண்களில் நீருடன் விஷ்வாவின் கைவளைவில் நின்று கொண்டு அவனை தான் தன் நீள விழிகளால் உள்வாங்கி கொண்டு இருந்தால். அவள் எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

பூரணி பாப்பாவை வைத்து இருந்த ஜெயச்சந்திரன் பிரச்சனை இது தான் என்று ஓரளவு யூகித்து இருந்தார். விஷ்வாவிடம் நெருங்கியவர், ரிலாக்ஸ் விஷ்வா இவங்க எல்லாம் இன்னும் 60'ஸ் 70'ஸ்லயே இருக்காங்க, தோற்றம் தான் மாடர்ன்னா இருக்கு ஆனா சிந்தனைல இன்னும் பழமை வாதியா தான் இருக்காங்க. இவங்கள யார் வந்தாலும் திருத்த முடியாது ஃப்ரீயா விடு விஷ்வா, உங்க ரெண்டு பேருக்கானா புரிதல் தான் முக்கியம் இவங்க பேசுனதை விடு. குறைக்குற நாய் குறைச்சிட்டே தான் இருக்கும் என்றார்.

குழலியை பார்த்து, விஷ்வாவ எப்பவும் விற்றாதமா, கொஞ்சம் முரடன் தான். ஆனா ரொம்ப நல்ல பையன்.. எனக்கு தெரிஞ்சு அவன் அடங்கி போற ஒரே இடம் நீ தான் என்றார். குழலி விஷ்வாவை தான் பார்த்தால்.

அவள் பார்வையை கண்டு கொள்ளாதவன் தன்னிடம் வர, தவித்து கொண்டிருந்த குழந்தையை வாங்கி கன்னத்தில் முத்தமிட்டான்.

கிளம்புறன் சார், என்றவன் மனைவி மகளுடன் அந்த இடத்தை விட்டு சென்றான்.

அமைதியான கார் பயணம்..

மணி இரவு பத்தை தொட்டு இருந்தது. பூரணி பாப்பா நன்றாக உறங்கி இருந்தால்.

குழலி விஷ்வாவை தான் பார்த்து கொண்டு வந்தால்.. அவள் நீள விழி பார்வையை தற்போது ரசிக்கும் நிலையில் இல்லை விஷ்வா, எரிச்சல் நிறைந்த குரலில் இப்போ என்ன வேணும் உனக்கு என்றான் அடிகுரலில்..

நான் தான் சொன்னனே விஷ்வா நமக்குள்ள செட் ஆகாதுன்னு எதுக்காக இதல்லாம்? உங்க கூட என்னால என் வாழ்க்கைய வாழ முடியாது விஷ்வா என்றால் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல்.

Will you please just shut your bloody mouth? என்று கத்தி இருந்தான் விஷ்வா.. அவனுக்கு வந்த கோவத்தில் பூரணி பாப்பா உறங்குவதையும் மறந்து இருந்தான்.

அவன் கத்தியதில், பூரணி பாப்பா பயந்து அழுதால்.. குழலிக்கு விஷ்வா மீது இன்னும் கோவம் பொங்கியது.. இப்போது இந்த பேச்சு வேண்டாம் என்று எண்ணியவள், குழந்தையை சமாதானம் செய்ய முனைந்தால்..

குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்து எழுந்ததால், அழுகையை நிறுத்தாமல் சிணுங்கி சிணுங்கி வீறிட்டு அழுதால்..

காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, குழலியிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டவன் அந்த சாலையில் குழந்தையுடன் இறங்கி நின்றான்.

ஓண்டிமா.. ஓண்டி செல்லம் என்று கிள்ளை மொழியில் பிள்ளையை கொஞ்சி மேலே தூக்கி சிரிப்பு காட்டி, குழந்தையின் அழுகையை கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தினான் விஷ்வா.

காரில் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருந்தால் குழலி.. அவள் பார்ப்பதை அவனும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் பிள்ளையை கொஞ்சி சமாதானம் செய்வதில் தான் முனைப்பாக இருந்தான்.. இது பிள்ளைக்கான நேரம் போலும்..

சிலு சிலுவென்று வீசிய குளுமையான காற்றில் பூரணி பாப்பா மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தால்.

மேலும் குழந்தையை வைத்து கொண்டு இங்கும் அங்கும் அந்த ஆளில்லா சாலையில் நடந்தவன், குழலி இருக்கும் பக்கம் கார் கதவை மெதுவாக திறந்து குழந்தையை  அலுங்காமல் அவள் மடியில் வாகாக கிடத்தினான். அவனை முறைத்து கொண்டே மடியில் இருந்த குழந்தையை தட்டி கொடுத்தால் குழலி.

விஷ்வா மறுபுறம் வந்து ஏறிக்கொள்ள, கார் மிதமான வேகத்தில் அவர்கள் வீடு நோக்கி புறப்பட்டது.

இருவரின் எண்ணமும், எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு சென்று பேசி கொள்ளலாம் என இருந்தது.


 

 

 

 

 

 

 

 

31. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அந்த தேக்கு மர கட்டிலில், ஐந்து பேர் தாராளமாக படுக்க கூடிய இடத்தில் மல்லிகை பூ செண்டாக, பஞ்சு தலையணைகளின் பாதுகாப்போடு உறங்கி கொண்டிருந்தாள் குழலி மற்றும் விஷ்வாவின் ஒற்றை மகளரசி.

குழலியும் விஷ்வாவும் பால்கனியில் தான் எதிர் எதிரே நின்று முறைத்து கொண்டு இருந்தனர். உடை கூட மாற்றவில்லை.

குழலிக்கு விஷ்வாவை பார்க்க பார்க்க கோவம் தான் வந்தது.. அவனது தோற்றத்தை கண்டு. ரௌடி போல் அல்லவா நின்று கொண்டிருக்கிறான்.

கார்ல என்னடி சொன்ன என்றான் கோவம் குறையாத குரலில்..

அடிவயிற்றில் இருந்து மூச்சை எடுத்து வெளியே விட்டவள், இப்போது அந்த பேச்சு வேண்டாம் என்று எண்ணி.. நீங்க எதுக்கு பார்ட்டில அப்படி நடந்துகிட்டீங்க விஷ்வா?

அவளது மரியாதையான பேச்சும் விஷ்வா என்ற அழைப்பும் அவனை தள்ளி நிறுத்தியது போல் உணர்ந்தான்.

அது உனக்கு தேவை இல்லாத விஷயம் குழலி. எனக்கு தேவையான விஷயம் தான், ஏன்னா பிரச்சனை என்ன பத்தியது. நான் சொல்லவா என்ன நடந்து இருக்கும்னு நீங்க அடிச்சவன் என்ன பத்தி ஏதாவது தப்பா பேசி இருப்பான் உங்களுக்கு கோவம் வந்து இருக்கும், அடிச்சு இருக்கீங்க.. ஆனா ஏன் அவன மட்டும் அடிச்சீங்க அந்த பார்ட்டில பொண்ணுங்க கூட இப்படி தான் பேசுனாங்க அவங்களையும் அடிக்க வேண்டியது தான?

அவனுக்கு புரிந்தது அங்குள்ளவர்களின் பேச்சு அவளை மனம் உடைய வைத்திருக்கிறது என..
அவன் கோவத்தை விடுத்து அவளை சமாதானம் செய்ய முனைந்தான்.. குழலி ப்ளீஸ் ரிலாக்ஸ் என்றான்.

என்னால ரிலாக்ஸ் ஆக முடியாது விஷ்வா. நாம சேர்ந்து வாழ்ந்தா இந்த வாழ்க்கை இப்படி தான் இருக்கும். நீங்க எல்லார்கிட்டயும் போய் சண்டை போடணும், உங்களுக்கும் நிம்மதி இருக்காது எனக்கும் நிம்மதி இருக்காது.

நீங்க அன்னைக்கு சொன்னிங்கள விவாகரத்து விஷயம் அதை ஏற்பாடு பண்ணுங்க என்று அசறாமல் கூறினால்.

உனக்கு என்ன பைத்திமாடி? உன் மனசு நிலையாவே இருக்காதா? குரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவிட்டே இருக்குமா என்றான்?

இங்க பாரு குழலி அந்த பார்ட்டில என்ன பிடிக்காதவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் என்மேல இருக்க பொறாமைல அப்படி பேசி இருக்கலாம்.. நம்மள பத்தி பேசுறவங்க யாரும் முதல்ல ஒழுங்கு இல்ல டி..

இதல்லாம் மறந்துடு. நாம நமக்கான வாழ்க்கைய வாழலாம். என் மனசு முழுக்க நீயும் நம்ம பாப்பாவும் தான் நிறைஞ்சு இருக்கீங்க குழலி. நான் எப்படி சொன்னா நீ புரிஞ்சிக்குவ என்றான் தவிப்பாக.

இல்ல விஷ்வா எனக்கு இந்த வாழ்க்கை பயத்தை தான் குடுக்குது. எனக்கு நீங்க வேண்டாம் என்றால் அழுது கொண்டே.

ஹேய் என்று கத்தியிருந்தான் விஷ்வா.. சின்ன பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லி புரியவச்சிட்டு இருக்கன்.. திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிட்டு இருக்க என்றவன் அங்கு அழகிற்காக வைத்து இருந்த பூ தொட்டியின் மீது முஷ்டியை மடக்கி குத்தி தன் கோவத்தை காட்டினான். அந்த தொட்டி கீழே விழுந்து உடைந்து சிதறியது.

அதில் பயந்து போன குழலி உடல் அதிர்ந்து, தன் கண்களை மூடி,  காதுகளையும் இரு கைகள் கொண்டு இறுக மூடிக் கொண்டால்.

விஷ்வா அவளை கண்டு கொள்ளவில்லை. தன்னை சற்று ஆசுவாச படுத்த முயன்றவன்.. அவளுக்கு முதுகு காட்டி இருள் சூழ்ந்த வானை வெறித்து நின்றான். சிறிது நேரத்தில் தலையை அழுந்த கோதி கொண்டு தன்னை சமன் படுத்தி கொண்டான். ஒரு முடிவு எடுத்தவனாக குழலி பக்கம் திரும்பினான்.

அவள் அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் சென்றவன், குழலி என்று அழைத்தான். அவள் நிமிறாமல் இருக்க, அவள் தாடையை பிடித்து முரட்டு தனமாக நிமிர்த்தியவன் அவள் வலது கையை எடுத்து அவன் தலையில் வைத்தான்.

நீ என்ன காதலிக்கலையா குழலி என்றான்.. அவன் கேள்வியில் அவள் விக்கித்து அவனை பார்க்க.. என்மேல சத்தியம் பண்ணி உண்மைய மட்டும் சொல்லு என்று அவள் கையை அழுத்தி பிடித்தான்.

எப்படி சொல்வால் அவள், திருமனம் முடிந்த அன்றே இவன் தான் என் கணவன் என்று உள்ளுற பதித்து கொண்டவள், அவன் பிரிந்து விடலாம் எனக்கு உனக்கும் ஒத்து வராது என்று சொன்ன பின், அவள் மனம் பட்ட வேதனையை அவள் மட்டும் தானே, அறிவால்.

அப்போது வேண்டுமானால் அது தாலி கட்டிய கடமைக்கு வந்த உரிமை உணர்வு எனலாம். ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் அவன் குழலியிடம் நடந்து கொண்டவிடம், அதைவிட பூரணியை பார்த்து கொண்ட விதம் என அனைத்திலும் அவன் பக்கம் சாய்ந்து போன மனதை எப்படி தன் பக்கம் இழுப்பது என தெரியாமல் தவித்த கணங்கள் எவ்வளவோ..

அவளுக்கு, தந்தை முகம் கூட புகைப்படத்தில் பார்த்து தானே நியாபகம்.. அப்படி இருக்கையில் அவள் அவளுடைய தந்தை பாசத்தை எங்கு உணர்ந்திருக்க போகிறாள்.. அவள் தாய், ஜெகதீசன் மகள் மீது கொண்டுள்ள பாசத்தை பற்றி கூறியிருக்கிறாள்.. அதை கேட்கும் போது அப்பா உயிரோட இருந்து இருந்தா எவ்ளோ நல்லா இருந்து இருக்கும் என்று சிறுபிள்ளை போல் கண்கலங்குவால்..

இப்போது ஒரு ஆணின் அன்பு எப்படி இருக்கும் என விஷ்வாவின் மூலம் முழுமையாக உணர்ந்த பின் அவனிடம் மயங்கி நிற்கிறாள் என்று தான் கூற வேண்டும்.

அனைத்தையும் விட, இன்றைய நிகழ்ச்சியில் எவ்வளவு அழகாக என்னை அவன் கைவளைவில் கொண்டு வந்து கூறினான், என் பொற்குழலி என் மனைவி என்று.. என் மகளையும் எங்கும் விட்டு கொடுக்கவில்லையே.

இப்படி பட்டவன் மீது எப்படி காதல் இல்லாமல் இருக்கும்?? நொடிக்கு நொடி அவன் மீது இருக்கும் பித்து தெளியாமல் அல்லவா இருக்கிறாள்.. அவள் மனதில் அவனை பற்றிய இன்ப நினைவுகளுடன் மூழ்கி இருக்கும் தருணம்..

வேண்டாத குப்பை போல், அவள் மூளை அன்று அவள் மயூரிக்கு கொடுத்த வாக்கை நினைவு படுத்த, அவள் காதல் கொண்ட மனம் எடுத்து கூறியது. அவளாம் ஒரு ஆளா குழலி? அவ மனசுல உண்மையா விஷ்வா இல்ல.. இன்னைக்கு பார்ட்டில பார்க்கல போதைல நிக்க முடியாம  இன்னொருத்தன கட்டிபுடிச்சிட்டு நின்னத, விஷ்வாவ இப்படி ஒருத்தி  கிட்ட தான் விட்டுக்கொடுக்க போறியா என்று அவள் மனம் கேள்வி எழுப்ப.

இல்ல நிச்சயம் இல்ல.. என் விஷ்வா என் விஷ்வா எனக்கானவன். அவனை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டன், என் விஷ்வாக்கு அந்த மயூரி வேண்டாம் என்று உறுதியாக முடிவெடுத்தால்.

இனி யார் என்ன கூறினாலும் விஷ்வாவை விட்டு பிரியும் முடிவை எடுக்க கூடாது என்று உறுதியாக நின்றாள்.

தன் பதிலுக்காக தன்னையே பார்த்து கொண்டிருக்கும் விஷ்வாவை நிமிர்ந்து பார்த்தால்.

அவன் தலைமீது இருந்து தன் கைகளை எடுத்து கொண்டவள் அவனை தாவி அனைத்து கொண்டால்..

அவனோ கடுப்பாகி, இந்த கட்டிப்பிடிக்குற வேலை எல்லாம் வேண்டாம்.. உன் மனசுல என்மேல காதல் இருக்கா இல்லையானு சத்தியம் பண்ணி உண்மைய மட்டும் சொல்லு என்றான்..

அவனை நிமிர்ந்து பார்த்து தன் நீள விழிகளால் முறைத்தவள், எதுவும் பேசாமல் அவன் உதடுகளை தன் வச படுத்தி கொண்டால்.

இன்பமாக அதிர்ந்து நின்றான் விஷ்வா.. அதற்கு பின் சும்மா இருக்க அவன் முனிவன் இல்லையே, அவள் வெற்று இடையில் கரம் கொடுத்து தன்னோடு மேலும் ஒன்ற வைத்தான். அவன் கைகள் அவள் உடலில் எல்லை மீறி பயணிக்க குழலிக்கு தேகம் சிலிர்த்தது..

விஷ்வா அவன் வலது கையை அவளின் அடிவயிற்றினுள் கொண்டு செல்ல, பெண்மை விழித்து கொண்டது குழலிக்கு.

அவனை விட்டு பிரிய முயன்றால்.. அவன் விட்டால் தானே, அவளை மேலும் தன்னோடு ஒன்ற வைத்து அவள் முந்தாணியை கீழே சரியவிட்டான். சில்லென்ற காற்று அவள் முன்னழகில் பட நிலமையின் தீவிரம் உணர்ந்தால் குழலி.

அவனை விட்டு வலுகட்டாயமாக பிரிந்தால் குழலி.. ரவிக்கையின் இரு கொக்கிகள் வேறு கழண்டு இருந்தது. சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றாள். இப்படியா அவர்கிட்ட மயங்கி நிப்ப என்று மனதோடு தலையில் கொட்டு வைத்து கொண்டால். அவள் மாறாப்பு சேலையை மீண்டும் மேலே எடுத்து உடுத்தி கொள்ளும் பொழுது விஷ்வாவின் தகிக்கும் மூச்சு காற்று பின்னிருந்து அவள் கழுத்து வளைவில் இறங்கியது.

விஷ்வா முன்பே அறிந்து தான் இருந்தான்.. குழலி அவன் மீது கொண்டிருக்கும் காதலை.. இருந்தும் அவன் இப்போது ஒரு முடிவு எடுத்து இருக்க அதனால் அவளின் காதலை அவள் வாய் மொழியாக கேட்டு உறுதி செய்து கொள்ள நினைத்தான்.. ஆனால் குழலி அவளின் ஒற்றை முத்தத்தில் விஷ்வாவிற்கு தன் காதலை சொல்லாமல் சொல்லியிருக்க.. விஷ்வாவும் அதை உணர்ந்து கொண்டான். இப்போது அவள் விலகள் மீண்டும் அவளின் வாய் மொழி காதல் வார்த்தைக்கு உந்தி தள்ள.. அவளிடம் நெருங்கியவன் அவளை பின்னிருந்து அனைத்து கொண்டே தன் பக்கம் திருப்பினான்..

முகம் சிவந்து, தலை குனிந்து இருந்தவளை தன் விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தினான்.

அவன் கண்களை காண முடியாமல் தவித்தால் குழலி. அவள் தவிப்பை ரசித்தான் கலா ரசிகனவன்..

மந்தகாசமாக சிரித்து கொண்டவன், நான் கேட்டதுக்கு பதில் சொல்லு குழலி என்றான்.

அவனை முறைத்து பார்த்தவள் எல்லாமே வாய திறந்து சொன்னா தான் உங்களுக்கு புரியுமா என்றால் முகத்தில் வெக்கமும் மெல்லிய கோவமும் இழையோட, எவ்வளவு முயன்றும் அவளால் அவள் கன்ன கதுப்புகள் சிவப்பதை தடுக்க முடியவில்லை.. வளர்பிறை நிலவு ஒளியில் டால் அடித்தால் குழலி.

ஆப்பிள் போல் அவள் கன்னத்தை கடித்து வைத்தான் விஷ்வா. அவனையும் மீறி அதை செய்து இருந்தான். தன்னிலை இழந்து கொண்டிருக்கிறான் ஆணவன்.

விஷ்வா என்று வலித்த கன்னத்தை தேய்த்து கொண்டால். முகம் பூரித்து இருந்தது, உதட்டில் மட்டும் அல்ல அவள் கண்களிளும் அழகான சிரிப்பு..

அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான். நான் உன் வாய் வார்த்தையா கேட்க நினைக்கறன் குழலி ப்ளீஸ் பதில் சொல்லு.. உன் மனசுல நான் இருக்கனா? நீ என்ன காதலிக்குறியா என்றான் மீண்டும்..

அதற்கு மேல் அவனை தவிக்க வைக்க நினைக்காதவள், அவனை கட்டி கொண்டு, அவன் இட மார்பில் ஒலிக்கும் இதய துடிப்பின் ஓசையை கேட்டு கொண்டே அவள் காதலை கணவனிடம் கூறினால், என் மனசுல எப்பவோ நீங்க வந்துட்டீங்க ஷிவா. நான் உங்கள காதலிக்குறன். ரொம்ப நாளாவே காதலிக்குறன். எனக்கு நீங்க வேணும் விஷ்வா என்கூட கடைசி வரைக்கும் இருப்பிங்கள என்றால்? ஒட்டு மொத்த ஏக்கத்தையும் காதலையும் அவள் வார்த்தையில் திரட்டி?


 

 

 

 

 

 

 

 

 

 

32. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி விஷ்வாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டே அந்த மோன இரவில் அவள் மனதில் உள்ள காதலை தன் கணவனிடம் வெட்கத்துடன் கூறி கொண்டிருந்தாள்.

குழலியின் காதலை அவள் வாய் மொழி கேட்ட பிறகு இறக்கை இல்லாமல் பறந்தான் விஷ்வா, அவளை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க வைத்து மீண்டும் அவள் ரோஜா இதழ்களில் கல்லுண்ட வண்டாக சொக்கி நின்றான். மென்மையாக தொடங்கிய இதழ் முத்தம் கொஞ்சம் வன்மைக்கு மாற, மெல்லிடையால் தாங்க முடியாமல் விஷ்வாவின் சட்டையை இறுக பற்றி கசக்க துவங்கினால். அவள் செய்கை ஒவ்வொன்றும் அவனை அவள் மீது போதை கொள்ள வைத்தது..

அவள் மூச்சுக்கு ஏங்குவதை உணர்ந்த விஷ்வா அவள் இதழ் கொய்வதை விட்டு, அவள் கன்னம், மூக்கு, அவனுக்கு மிகவும் பிடித்த அந்த நீள விழிகள் என அவள் முகம் முழுவதும் அழுத்தமான அச்சாரத்தை பதித்தான்.

விஷ்வா என்றால் காற்றாகி போன குரலில், அவளும் அவனின் ஸ்பரிசத்தில் மயங்கி தான் நின்றாள். இவை எல்லாம் குழலி முதல் முதலாக அனுபவிக்கும் உணர்வுகள்.

அவன் வேகத்தை ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாதவள், அவன் கைகளில் மோக மயக்கத்தில் சரிந்தால்.

அவளை இடை வளைத்து தாங்கியவன் அவள் முகம் பார்த்து கூறினான்.. நம்ம வாழ்க்கைய தொடங்கலாம் குழலி என்று. அவளிடம் சம்மதம் கேட்கவில்லை. முடிவு செய்துவிட்டு கூறினான்.

பேந்த பேந்த விழித்தால் குழலி. அவளையும் மீறி உடல் நடுங்கியது. அவள் பயத்தை புரிந்து கொண்டவன் அவளை தோளோடு அனைத்து கொண்டு கஷ்ட்டபடுத்த மாட்டன் டி நம்பு என்றான் மந்தகாச புன்னகையுடன்.

ஷிவா இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே, இப்போ தான என் மனசுல இருக்க காதலையே உங்க கிட்ட சொல்லி இருக்கன் என்று தட்டு தடுமாறி கூறினால்.

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், பக்கவாட்டில் இருந்தவளை தனக்கு எதிரே கொண்டு வந்து நிறுத்தி, வெளிப்படையா ஒரு விஷயம் சொல்லனும்னா எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல குழலி. நீ எப்போ எப்படி மாறுவன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.

உன் மனசுல இவ்ளோ காதலை வச்சிக்கிட்டு அன்னைக்கு அந்த மயூரி கூட என்ன சேர்த்து வைக்குறன்னு வாக்கு குடுக்குற, இப்போ நாம பிரிஞ்சிடலாம்னு சொல்ற, விவாகரத்து கேக்குற, நீ எப்போ எப்படி மாறுவியோன்னு தினமும்  என்னால யோசிச்சிட்டு இருக்க முடியாது குழலி. நாம நம்ம வாழ்க்கைய தொடங்கலாம். என்னோட காதலை நீ இன்னும் அதிகமா புரிஞ்சிக்குவ என்று நீளமாக பேசி முடித்தவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

நான் இனிமேல் உங்கள விட்டு போகணும்னு நினைக்க மாட்டன் விஷ்வா என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறினால். அவனிடம் இருந்து பட்டென்று பதில் வந்தது. சத்தியமா உன்மேல எனக்கு நம்பிக்கை இல்லடி என்று.

அதில் அவனை பொய் கோபம் கொண்டு முறைத்தவள், ப்ளீஸ் என்றால்.. இப்போ உனக்கு என்ன பிரச்சனை என்றான்.. என்னை பிடித்திருக்கிறது காதலிக்கிறாள் பிறகு ஏன் இந்த தயக்கம் என்று புரியவில்லை..

அவள் சொல்ல முடியாமல் தவித்தால்.

என்ன ஆச்சுமா சொல்லு என்றான்.. ஆதூரமாக அவள் முகம் நிமிர்த்தி நெற்றி முத்தம் கொடுத்தான்.

கண்களை இறுக மூடி கொண்டவல், எப்படி உணர்கிறாள் என்றே கூற முடியவில்லை.

ந..நம. நம்மக்கு  பூரணி பாப்பா மட்டும் போதும் என்றால்.

விஷ்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை, அவள் முகத்தை தான் பார்த்தான்.

ஏதோ புரிவது போல் இருக்க.. சொல்ல வந்தத முழுசா சொல்லு குழலி என்றான்..

நாம புருஷன் பொண்டாட்டியா வாழ தொடங்கினா உங்களோட அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையா தான் இருக்கும்.. ஆனா எனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் பூரணி பாப்பா மட்டும் போதும் என்றால்.

ஏன் என்றான் அவன் உணர்வுகளை மறைத்து ஒற்றை கேள்வியாக..

எனக்கு பயமா இருக்கு..

பொறுமை இழந்தவன் உன் மனசுல இருக்கறது என்னனு சொல்லு டி என்றான் பற்களை கடித்து கொண்டு..

கொஞ்சம் பயந்து தான் போனால் குழலி, அவள் எடுத்து இருக்கும் முடிவும் சாதாரண விஷயம் அல்லவே.

எனக்கு பயமா இருக்கு ஷிவா, நமக்கு இன்னொரு குழந்தை பிறந்தா உங்களுக்கு பூரணி மேல இருக்க அன்பு கொறஞ்சிடுமோன்னு, என்ன இருந்தாலும் அது உங்க ரத்தம் உங்க குழந்தை ஆனா பூரணி அப்படியில்லையே என்றால் கலங்கிய விழிகளுடன். உங்க அன்பு எனக்கும் பூரணிக்கும் மட்டும் வேணும். இன்னொரு குழந்தைக்கு அத பங்கு போட நான் விரும்பல என்றால் லேசான விசும்பளுடன்..

விஷ்வாவிற்கு அவள் மனநிலை நன்றாகவே புரிந்தது. அவள் மேல் கோவப்பட முடியவில்லை. ஆனால் மனதோரம் லேசான வலியும் இருந்தது. தன் உயிரானவள் தன் குழந்தையை சுமக்க விரும்பாததை எண்ணி, அதற்கும் மேல் இவ்வளவு தான் என்மேல் நீ வைத்த நம்பிக்கையா என்று கேட்க தோன்றியது .

அவளுக்கு பேசி புரிய வைக்க நினைத்தான். குழலிமா என்று அவளை அனைத்து கொண்டு உச்சி முகர்ந்து முத்தமிட்டான். வழக்கம் போல் அவளது சீயக்காய் வாசத்தை இந்த சூழ்நிலையிலும் ஆழ்ந்து சுவாசித்து அவனுள் நிரம்ப வைத்து கொண்டான்.

என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையாடி என்றான்.

இது உங்க சம்மந்தம் பட்ட விஷயம் மட்டும் இல்ல விஷ்வா, இந்த குடும்பத்துல இருக்க எல்லாரும் சம்பந்தப்பட்டது. இப்போ வேணும்னா எல்லாரும் பூரணி மேல பாசமா அவள தூக்கி வச்சு கொஞ்சி கொண்டாடலாம்.. ஆனா நாளைக்கு  உங்க குழந்தை என் வயித்துல வந்தா பூரணிய எல்லாரும் ஒதுக்கிடுவாங்க விஷ்வா. அத என்னால தாங்க முடியாது என்று நடக்காத ஒன்றை கற்பனை செய்து அழுது கொண்டிருந்தால் குழலி.

விஷ்வாவிற்கு எப்படி அவளை சமாதானம் செய்வது எப்படி அவளுக்கு நம்பிக்கை கொடுப்பது என்று தெரியவில்லை..

எனக்கு எப்பவும் பூரணி தான் டி முதல் குழந்தை, எனக்கு அப்பாங்குற உணர்வை குடுத்தவ என் பூரணி பாப்பா தான் இன்னொரு குழந்தை வந்தா அவமேல இருக்க என் அன்பு கொறஞ்சிடும்னு நீ சொல்ற இந்த விஷயம் தான் அபத்தமா இருக்கு என்றான்.

உனக்கு என் உயிர சுமக்கணும்னு ஆசை இல்லையா டி.. நான் அந்த மாதிரி யோசிச்சது இல்ல விஷ்வா என்று உடனடியாக பதில் கொடுத்தால். கொஞ்சம் வலி தான் இருந்தும் தாங்கி கொண்டான்.

ஆனா எனக்கு ஆசையா இருக்கு குழலி. நீ என் குழந்தைய சுமக்கணும், ஒரு ஒரு மாசமும் உன் வயிறு வளரும் போது உன்னோட மாற்றங்கள நான் பார்க்கணும். குழந்தை சுமக்கும் போது பெண்கள்லாம் அந்த நேரத்துக்கே உரிய பூரிப்போடு அழகா இருப்பாங்கலாம் அதலாம் நான் உன்கிட்ட பார்க்கணும். நிறை மாசமா இருக்கும் போது உன்னோட இந்த குட்டி வயிறு பெருசா மாறி இருக்கும். அந்த வயித்தோடு நீ அசைஞ்சு நடந்து வர அழக எல்லாம் நான் பார்க்கணும் குழலி என்றான் இப்போதே அந்த நினைவுகளில் சிலாகித்து.

ஆனால் குழலி முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவள் முடிவில் உறுதியாக நின்றாள்.

அவனுக்கு தான் ஏமாற்றமாக இருந்தது. தன் ஆசைகளையும் உணர்வுகளையும் வெளிப்படையாக கூறியும் அவளுக்கு புரியவில்லையே என்று நினைத்து.

குழலி என்றான் மீண்டும்..

நமக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் விஷ்வா பூரணி மட்டும் போதும் என்று அவள் பிடித்த பிடியில் நின்றாள்.

என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையாடி என்றான் மீண்டும்.. இந்த விஷயம் என்ன ரொம்ப பயமுறுத்துது விஷ்வா என்று வாய் பொத்தி அழுதால்.

அவளை பார்க்கவும் பாவமாக தான் இருந்தது. சிறு பெண்ணவள் வயது 20 வது தான் ஆகிறது. விஷ்வாவும் இன்றே இணைந்து அடுத்த மாதமே குழந்தை வேண்டும் என்று நினைக்கவில்லை. அவளோடு வாழ்ந்த கனவு வாழ்க்கையில் கூட நான்கு வருடம் கழித்தே குழந்தை பெற்று கொண்டான்.

நாட்கள் இருக்கிறது புரிய வைத்து கொள்ளலாம் என்று நினைத்தான். அனைத்திற்கும் மேல் அவன் காதலை நம்பினான்.. என்னோடு வாழும் வாழ்க்கையில் என் காதலால் அவளுக்கே என் குழந்தையை வயிற்றில் சுமக்க வேண்டும் என்ற ஆசை வரும் என்று நம்பிக்கை கொண்டான்.. அதே நேரம் அவள் முடிவில் ஆண்டுகள் கடந்தும் அவள் உறுதியாக நின்றாள் அவள் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் விதத்தில் அவன் ஆசையை துறக்க நினைத்தான். பூரணி பாப்பா ஒருவள் போதும் என் மொத்த அன்பையும் கொட்டி கொடுக்க என்று நினைத்தான். இவ்வளவு யோசித்தவனின் மனதில் அவள் மீது சிறு வருத்தம் ஏற்படாமலும் இல்லை. இருந்தும் அதை மறைத்து கொண்டு..

சரி விடு குழலி உன் விருப்பம் தான் என்னோட விருப்பமும் என்றான்.

அவள் அப்போதும் அடங்காமல் அப்போ எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க, "எந்த சூழ்நிலையிலும் இன்னொரு குழந்தை பெத்துக்க சொல்லி என்ன கட்டாயப்படுத்த மாட்டனு"..

இந்த முறை அவன் பொறுமை பொங்கல் சாப்பிட போய் விட்டது போலும்..

ஹேய் அதான் உன் விருப்பம்னு சொல்றன்ல அப்பறம் என்ன டி பிரச்சனை உனக்கு என்றான்.

சத்தியம் பண்ணுங்க ப்ளீஸ் என்றால்.

சரி நம்மளையே அறியாம நமக்கு குழந்தை உருவாகிடுச்சுன்னா என்ன பண்ணுவ என்றான். அவளிடம் மௌனம் மட்டுமே அவள் இப்படி யோசிக்கவே இல்லை. மொனமாக இருந்தவள் கணவனின் பார்வை தன்னையே துளைப்பதை உணர்ந்து. அந்த வார்த்தையை யோசிக்காமல் கூறினால்.

அந்த குழந்தை வேண்டாம்னு க.. கலைச்சு.. கலைச்சுடுவன் என்று..

ஆண்மகனாக அந்த நிமிடம் அடிவாங்கினான்.

ஆனால் அடுத்த நிமிடமே அவன் காதல் கொண்ட மனம் கூறியது. அவள் அப்படி செய்ய மாட்டாள் என்று.

சத்தியம் பண்ணி குடுங்க ஷிவா என்றால்.. தன் வலது கையை அவன்முன் நீட்டி..

அவளுக்காக அவளுக்காக மட்டுமே சத்தியம் செய்து கொடுத்தான்.

நான் உன்ன குழந்தை பெத்து குடுன்னு சொல்ல மாட்டன் குழலி என்றான்.

அவன் சத்தியம் செய்து கொடுத்ததில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அவளின் முகத்திலும் அது பிரதிப்பலித்தது.

தேங்க்ஸ் ஷிவா, தேங்க்யு சோ மச் ஷிவா என்று மீண்டும் மீண்டும் சொல்லி அவனை தாவி அனைத்து கொண்டால். கண்கள் கூட கலங்கியது அவளுக்கு. எல்லாம் ஒரு வித பயம் தான் காரணம்.

உங்கள கஷ்ட்டபடுத்திர்கன்னு புரியுது என்ன மன்னிச்சிடுங்க.. எனக்கு வேற வழி தெரியல என்றால்..

சரி ஃப்ரியா விடு எதையும் ரொம்ப யோசிக்காத என்று கூறி உள்ளே செல்ல முனைந்தான்.

அவன் கையை பிடித்து நிறுத்தியவள்.. முகம் நிலம் பார்க்க நின்று ந..ம், நம்ம வாழ்க்கையை தொடங்கலாமா என்றால்.. கேட்டு முடிப்பதற்குள் பெண்ணவள் குப்பென்று சிவந்து போனால்.

விஷ்வா இருக்கும் மனநிலையில் எதையும் ரசிக்கும் நிலையில் இல்லை..

இப்போ வேண்டாம் குழலி.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று கூறி, மென்மையாக அவன் கையை அவளிடம் இருந்து விடுவித்து கொண்டு உள்ளே சென்றான்.

குழலிக்கு தான் என்னமோ போல் ஆகி கண்கள் கரித்து கொண்டு வந்தது.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

33. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வெய்யோன், தன் பொற் கதிர்களால், பூமி காதலியை அழகாக அரவணைத்து கொள்ள, குழலி சமையல் அறையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். இரவு உறங்க நேரமானதில் காலை எழுவதும் தாமதமாகி போனது. விஷ்வாவிற்கு இன்று விடுமுறை என்றாலும் அவளின் மாமனாரும் மைத்துணனும் பணிக்கு செல்ல வேண்டுமே அதனால் தான்  இப்போது இந்த ஆரவாரம்..

சரசு அக்கா மாமாக்கு மோர் சிலுப்பி வச்சு இருக்கன் அத இந்த ஜூஸ் டம்ளர்ல பேக் பண்ணி வச்சுடுங்கலன் என்று ஒரு பக்கம் சரசுவிடமும் வேலையை கூறி கொண்டிருந்தாள். அதற்குள் குழந்தையை தூக்கி கொண்டு விஷ்வா கீழே வந்து இருந்தான்.

குழலி பாப்பா எந்திரிச்சுட்டா.. உன்ன தான் கேட்டு அழரா என்று சொல்லி கொண்டே உறக்கம் கலையாத விழிகளுடன் குழந்தையை பத்திரமாக தூக்கி கொண்டு குழலியிடம் வந்தான்.

வேலையை சரசுவிடம் ஒப்படைத்து விட்டு, குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்தாள் குழலி. விஷ்வா சோபாவில் தூக்க விழிகளோடு அமர்ந்து கொண்டான்.  குழந்தைக்கு குப்பியில் இருந்த பாலை கொடுத்து குடிக்க வைத்தவள் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்தாள் குழலி.

குட் மார்னிங் விஷ்வா.. குட் மார்னிங் அண்ணி, என்று சொல்லி கொண்டே அவர்களிடம் வந்தான் சூர்யா, குட் மார்னிங் டா என்று விஷ்வாவும், குட் மார்னிங் சூர்யா என்று குழலியும் கூறினால்.. முதல் போல் சூர்யாவிடம் பேசுவது இல்லை என்றாலும்.. குழலி அவனிடம் ஒதுக்கம் காட்டுவதும் இல்லை.. அதுவே சூர்யாவிற்கும் நிம்மதியாக இருந்தது.

சுந்தரமும் அப்போது தான் அவரது நடைப்பயிற்சியை முடித்து விட்டு உள்ளே வந்தார். நேராக அவரது அறைக்கு சென்று முகம் கை கால்களை சுத்த படுத்தி கொண்டு வரவேற்பரையில் வந்து அமர்ந்து கொண்டார்.

குழலியும் அதற்குள் மிச்சம் இருந்த சமையல் வேலைகளை முடித்துவிட்டு மாமனாருக்கு தேநீர் எடுத்து வந்து கொடுத்தால்..

விஷ்வா குழலியை தான் பார்த்து கொண்டிருந்தான், சட்டென்று மூளையில் உகித்த யோசனையோடு, தந்தையை கண்டான். எப்படி அவரிடம் நேராக பேசுவது என்று தயங்கியவன் குழலியிடம் இருந்தே தொடங்கினான்.

குழலி வேலைக்கு போறியா என்றான் சாதாரணமாக.. அங்குள்ள மூவரும் அவனை விசித்திரமாக பார்க்க..

விளையாடறீங்களா ஷிவா? நீங்க குடுத்த அடிப்படை கல்வியை தவிற என்கிட்ட என்ன இருக்கு நான் வேலைக்கு போக என்று கேட்டு பொய்யாக முறைத்தால்..

அவளை போலவே அவளது பேச்சும் இப்போது எல்லாம் புது பொளிவாக மிளிர்ந்தது.. விஷ்வாவிடம் பேசும் போது மட்டும் அவளுக்கு எப்போதும் தயக்கம் இருந்தது இல்லை. அவனிடம் அவ்வளவு உரிமை எடுத்து கொள்வாள்.

அந்த அடிப்படை கல்வி போதும் நீ வேலைக்கு போக, வீட்லயே இருந்தா குழந்தை வீட்டு வேலைனு அப்படியே ஒரு கூட்டுக்குள்ள அடைஞ்சுக்குவ அதனால வேலைக்கு போ.. எல்லாரோடவும் பழகு, வேலை அனுபவத்தை கத்துக்கோ.. நீ படிச்ச படிப்பை எப்படி வேலைல உபயோக படுத்தலாம்னு யோசிச்சு வேலை செய் என்றான்.

அவன் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டவள், எனக்கும் நீங்க எல்லாரும் வேலைக்கு போறத பார்த்து ஆசையா தான் இருக்கு ஷிவா, நானும் வேலைக்கு போகனும் சம்பாதிக்கணும்னு ஆனா நீங்க தான சொல்லி இருக்கீங்க வேலைக்கு போகணும்னா ஒரு டிகிரியாச்சும் பண்ணி இருக்கணும்னு. அதான் நான் இத பத்தி உங்ககிட்ட பேசல என்றால் வருத்தமான குரலில்..

தாராளமாக மூச்சை இழுத்து விட்டவன்.. நீ மத்தவங்க கிட்ட வேலை செய்யதான் டிகிரி வேணும்னு சொன்னன் என்றவன், அவன் தந்தையை ஆழ்ந்து பார்த்து கொண்டே, உன் மாமனார் அலுவலகத்துல வேலை செய்ய எந்த டிகிரியும் தேவை இல்லை என்றான் அமர்த்தலான குரலில்.

வாரேவா.. என்று கை தட்டிய சூர்யா எனக்கு கூட இப்படி தோணாம போய்டுச்சே என்றான்..

கல்யாண சுந்தரமிற்கு சொல்லவே வேண்டாம்.. இரு மகன்களை பெற்றும் தனது தொழிலை எடுத்து நடத்தவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு எப்போதும் உண்டு.

அப்படி வருந்தியவருக்கு, ஒரு விடிவு காலமாக தெரிந்தால் குழலி. இந்த யோசனை ஏன் எனக்கு தோன்றவில்லை என்று எண்ணவும் தவரவில்லை சுந்தரம்.

குழலி மாமனாரையே பார்த்தால் அவருக்கு இதில் விருப்பமா என்ற எண்ணத்தோடு.

குழலி எப்போ அலுவலகம் வர, என்று அவர் நேரடியாக கேட்க, குழலிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

இடை புகுந்த விஷ்வா, குழலி நீயும் எங்கள மாதிரி அறக்க பறக்க காலைலயே அலுவலகம் போக வேண்டாம்..

அரைனால் நீ அலுவலகம் போனா, போதும் அதுவும் குழந்தையும் கூட கூட்டிட்டு போ, அங்க குழந்தையை பார்த்துக்க ஆளு இருக்காங்க.. உன்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா கத்துக்கோ என்றான்.

சுந்தரமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. குழலி நான் சொல்ல வேண்டியது எல்லாம் உன் புருஷனே சொல்லிட்டான். நான் சொல்ல எதுவும் இல்லை.. நீ அலுவலகம் வந்து எல்லாத்தையும் கத்துக்கோமா, எனக்கு அப்பறம் என் தொழிலை நீ தான் எடுத்து நடத்தணும். நான் உனக்கு எல்லாம் சொல்லி தரன் என்றார்.

மாமா உங்க தொழிலை எடுத்து நடத்த முடியுமான்னு எனக்கு தெரில. உங்களுக்கு இருக்க அனுபவம் வேற மாமா. ஆனா கண்டிப்பா நான் உங்களுக்கு உதவியா இருப்பன் என்று தன்னடக்கத்தோடு கூறினால்.

விஷ்வா சும்மா இல்லாமல், குழலி உன் மாமாகிட்ட சம்பளத்தை எல்லாம் முன்னாடியே பேசிக்கோ.. சம்பளம் கட்டுப்படி ஆகலனா நாம வேற வேலை பார்க்கலாம் என்று குறும்பு கொப்பலித்த குரலில் கூற, ஷிவா என்று பல்லை கடித்தால் குழலி.

சுந்தரம், அது இனிமேல் உன் அலுவலகம்மா, உனக்கு என்ன வேணுமோ அத நீ எடுத்துக்கோ என்றார். ஹய்யோ மாமா அந்த சலுகை எல்லாம் வேண்டாம். நீங்க என்ன மாதிரி அனுபவம் இல்லாம வேலைக்கு வரவங்களுக்கு என்ன சம்பளம் குடுப்பிங்களோ அதல பாதி எனக்கு குடுங்க. நான் அரைனால் தான வேலைக்கு வரன் என்றால்.

சரிம்மா அதலாம் அப்பறம் பார்த்துக்கலாம். நீ எப்போல இருந்து அலுவலகம் வர என்றார் சுந்தரம்.

விஷ்வா தான் பதில் கூறினான். குழலி ரெடியா இரு மதியம் நானே உன்ன அலுவலகம் கூட்டிட்டு போறன்.. முதல் நாள்ள அதனால நானே உனக்கு எல்லாம் அறிமுகபடுத்தி வைக்குறன் என்றான் பகுமானமாக.

குழலி சங்கடமாக அவள் மாமனாரை பார்க்க சரிம்மா, நீ உன் புருஷன் கூட மதியம் போல அலுவலகம் வா.. எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு நான் தயாராகுறன் என்றவர் உள்ளே சென்றார்.

அந்த பெரிய மனிதர் முகத்தில்  அப்பட்டமான வருத்தம் தெரிந்தது. விஷ்வாவிற்கும் அது தெரியாமல் இல்லை.

விஷ்வா அறைக்கு செல்ல, குழலியும் அவன் பின்னே சென்றால். குழந்தை சூர்யாவுடன் பொருந்தி கொண்டால்.

அறைக்கு சென்றதும் அவன் கையை பிடித்து நிறுத்தியவள், ஏன் ஷிவா இப்படி பண்றிங்க என்றால். அவன் ஒன்றும் புரியாமல் எப்படி என்க?

சலிப்பாக அவனை பார்த்தவள்.. மாமாகிட்ட ஏன் இப்படி பேசாம இருக்கீங்க? அவர் மேல அப்படி என்ன கோவம்? என்ன கல்யாணம் பண்ணி வச்ச கோவம் தான? ஆனா நீங்க என்கூட சேர்ந்து வாழவே தயாரா இருக்கும் போது அவர்கிட்ட ஏன் இப்படி பாரா முகம் காற்றிங்க?

இது அப்பா பையனுக்குள்ள இருக்க விஷயம் நீ வராத என்றான். அவளுக்கு அவன் பேசிய கொஞ்சம் முகம் வாடினாலும் அடுத்த கணம் தன்னை மீட்டு கொண்டவள், உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை வர காரணமே நான் தான அதனால தான் நான் கேக்குறன் என்றால்.

மாமாகிட்ட பேசுங்க ஷிவா ப்ளீஸ் என்று அவனோடு நெருங்கி நின்றவள் அவன் மீசை முடியை பிடித்து இழுத்து விளையாடி கொண்டிருந்தாள்.

அவள் இவ்வளவு அருகில் நெருங்கி நிற்க, அவன் உணர்வுகள் ஆர்ப்பரித்து நின்றது. அவள் அதை உணரும் முன்பே வேகமாக அவளை விட்டு விலகியவன் சற்று தடுமாற்றத்துடன் எங்க அப்பாகிட்ட எனக்கு பேச தெரியும் போடி என்று கூறி குளியலறை புகுந்து கொண்டான்.

அவனுக்கு தான் தந்தை மீது இப்போது எந்த கோவமும் இல்லையே. குழலியை விரும்ப தொடங்கியவுடன் தந்தை மீது இருந்த கோவம் சென்ற இடம் தெரியவில்லை. சொல்ல போனால் குழலியை அவன் வாழ்வில் இணைத்ததிற்கு தந்தைக்கு மனதோடு நன்றி கூட கூறியிருக்கிறான்.. இருந்தும் தந்தையிடம் அன்று அவ்வளவு கடுமையாக பேசிவிட்டு இப்போது சென்று மன்னிப்பு கேட்டு இலகுவாக பேச சங்கடமாக உணர்கிறான் விஷ்வா.

கீழே அவரின் வாடிய முகத்தை கண்டவன் சாரிப்பா என்று மனதோடு கூறி கொண்டு, சீக்கிரம் தந்தையோடு மனம்விட்டு பேச வேண்டும் என்ற முடிவையும் எடுத்து கொண்டான்.

அரைமணி நேரம் கழித்து இடையில் டவளோடு வெளியே வந்தவனை பார்த்ததும் குழலிக்கு உடல் வியர்க்க தொடங்கி விட்டது. வேக மூச்சுக்களை எடுத்து கொண்டவள் மேலும் அவனை பார்க்க சக்தி இல்லாமல் பால்கனில் சென்று நின்று கொண்டால்.

அவள் உணர்வுகளை கவனிக்காதவன் உடை அணிந்து தயாராகி அவளை அழைக்க சென்றான்.

குழலி அப்போது தான் தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து, சுற்று சூழலை ரசிக்க தொடங்கினால். சில்லென்ற வலிய கரம் ஒன்று அவள் சூடான இடையில் ஊர மூச்சு விடவும் மறந்து சிலை போல் நின்றாள் குழலி. சிறு சிறு முத்தங்களை அவளின் கழுத்து வளைவில் கொடுத்து, அவள் காது மடலை லேசாக கவ்வி கொண்டான்.

அதற்கு மேல் முடியாதவள், ஷிவா என்றால் காற்றாகி போன குரலில்.

அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டே கீழ போலாமா என்றான் குழைந்த குரலில்.. அவளிடம் இருந்து பதில் வராமல் போக அவள் இடுப்பை குயவனாக மாறி குழைத்து கொண்டிருந்தவனின் கை சற்று மேலேயேறி செய்த வேலையில் விஷ்வா என்று அவன் பெயரை உதிர்த்து உருகி நின்றாள்.

அவளை தன் பக்கம் திருப்பியவன், அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு, மென்மையாக அனைத்து அவள் மீது இருந்து வரும் கஸ்தூரி மஞ்சளின் வாசனையை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தான்.

ஷிவா என்றால் அந்த மோன நிலையை கலைக்கும் வகையில்..

சொல்லு டி..

என்மேல கோவமா என்றால்.

எதனால் இந்த கேள்வியை கேட்கிறாள் என்று புரிந்தவன்.. கோவம் இல்லடி கொஞ்சம் வருத்தம் தான்.. என்ன நம்பலையேன்ற வருத்தம் வேற ஒன்னும் இல்ல விடு என்றான்.

அவன் அனைப்பில் இருந்து கொண்டே அவன் முகம் பார்த்தவள் ப்ளீஸ் ஷிவா இப்படி சொல்லாத. என் அம்மாக்கு அப்பறம் நான் நம்பற ஒருத்தர் நீங்க மட்டும் தான். எனக்கு தெரியும் நான் இந்த விஷயத்துல சுயநலமா தான் யோசிச்சு இருக்கன் ஆனா எனக்கு வேற வழி தெரியல ஷிவா.. என்று கண்கலங்கினால்.

ஹேய் விடு குழலி. என்னால உன்ன புரிஞ்சிக்க முடியுது. எனக்கு நீயும் நம்ம பாப்பாவும் போதும் என்று உணர்ந்து கூறினான்.

இவ்ளோ நல்லவனா இருக்காத ஷிவா, என்னோட முடிவுக்கு என்ன திட்டு, என்மேல கோவ படு, அடி ஏதாச்சும் பண்ணு. எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு என்று கண்கலங்கினால்.

அவள் மேலும் அழுகும் முன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி இதழ் கொய்து கொண்டான். நீண்ட நெடிய முத்தம்.


 

 

 

 

34. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா சொன்னது போல், குழலியை தந்தையின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றான். அவனுக்கு அந்த அலுவலகமும் அங்கு வேலை செய்யும் ஆட்களும் பரிட்சயம் என்பதால் எப்போதும் போல் சென்று இருந்தான். மூன்று தளங்களை கொண்ட அடுக்கு மாடி கட்டிடம்.

தரை தளத்தில் சோஃபா மற்றும் சில மின்னணு சாதனங்களும் முதல் தளத்தில் கட்டில் மற்றும் உணவு மேஜை என பல வகைகளிலும், இரண்டாம் தளத்தில் மரத்தினால் ஆனா பூஜை அறை, ஸ்டடி டேபிள், மர நாற்காளி என இதர பொருட்கள் இருந்தன.. மூன்றாம் தளத்தில் கல்யாண சுந்தரம் அறை இருந்தது. அது போக இன்னும் ஒரு பொதுவான அறை இருந்தது. அந்த அறையில் அக்கௌன்ட்ஸ் பர்ச்சஸ் என இதர துறை வேலையாட்கள் ஒன்றாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.

இந்த கட்டிடத்தை தள்ளி சற்று ஒதுக்கு புறமாக இவர்களின் தொழிர்சாலை உள்ளது. அங்கு தான் கை தேர்ந்த ஆச்சாரிகளை வைத்து மர பொருட்களை தரமானதாகவும் தனித்து தெரியும் வடிவத்திலும் வடிவமைகின்றனர்.

விஷ்வா குழலியுடன் கை கோர்த்து வர, குட்டி பாப்பா அவர்கள் கை பிடித்து தத்தி தத்தி நடந்து வந்தால். அவள் நடை வேகத்திற்கு இருவரும் நடந்து வந்தனர். அனைவரும் விஷ்வாவிற்கு வணக்கம் வைக்க, சிறு புன்னகையோடு அதை ஏற்று கொண்டான்.

மின் தூக்கியின் மூலம் மூவரும் மூன்றாம் தளத்தை அடைந்தனர். சுந்தரம் மருமகளை வரவேற்கும் விதமாக அவரே வந்தார். குழந்தையை தூக்கி கொண்டவர் வா மா என்று குழலியை அவரது அறைக்கு அழைத்து சென்றார். விசாலமான அறை தான். மகனை கண்டு கொண்டார் இல்லை சுந்தரம்.

சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசி கொண்டு இருந்தவர், பின் ஒரு வேலையாலை அழைத்து அனைவரையும் மேலே வர கூறி இருந்தார்..

சிறிது நேரத்தில் அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியரில் இருந்து, அனைத்து வேலையாட்களும் கூடி இருந்தனர். அனைவருக்கும் குழலியை அறிமுகம் செய்து வைத்தார். என் நண்பனின் மகள், எங்க வீட்டின் மூத்த மருமகள் எங்க வீட்டு மகாலக்ஷ்மி என்ற புகழாரத்தோடு அறிமுக படுத்தியவர், எனக்கு அப்பறம் என் மருமகள் தான் இந்த தொழிலை நடத்துவாங்க, நீங்க எல்லாரும் எனக்கு என்ன மரியாதை குடுக்குறிங்களோ அதே மரியாதைய என் மருமகளுக்கும் குடுக்கணும் என்று மேலும் சிலவற்றை பேசி அவரது உறையை ரத்தின சுருக்கமாக முடித்து கொண்டார்.

குழலி புன்னகை முகமாக இருக்க, அங்கிருந்த அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றனர்.

குழலிக்காக அங்கே தனியாக ஒரு அறை ஏற்பாடு செய்யபட்டிருந்தது. மாமா எனக்கு எதுக்கு தனி கேபின்.. நான் உங்க கூடவே இருக்கன். நீங்களே எனக்கு எல்லாம் சொல்லி குடுங்க என்று அவள் விவரம் புரியாமல் கேட்க, விஷ்வா அவளை தீயாக முறைத்து நின்றான்.

சுந்தரம் மகனின் முறைப்பில் மென்னகை புரிந்து, உனக்கு தனியறை அவசியம் மா என்பதோடு முடித்து கொண்டார்.. அதன் பின் சில பட்டியல் புத்தகங்களை கையில் எடுத்தவர். குழலி இந்த புத்தகத்துல  மர வகைகள் அப்பறம், தனித்துவமான வடிவமைப்பு, வடிவமைப்புக்கு ஏத்த விலை பட்டியல் அதோட ப்ரெத்தியக பெயர் எல்லாம் இருக்கு. இதல்லாம் நீ தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம், இதல ஏதாச்சும் சந்தேகம் இருந்தா உன் புருஷன் கிட்ட கேளு. அவருக்கு எல்லாம் தெரியும் என்று அந்த புத்தகத்தை குழலி கையில் கொடுத்தார் சுந்தரம்.

கையில் இருந்த குழந்தையை தந்தையிடம் கொடுத்துவிட்டு, குழலியை அழைத்து கொண்டு அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றான் விஷ்வா.

இந்த தனிமைக்காக தான் கத்திருந்தேன் என்பது போல், அந்த அறையில் நுழைந்ததும்.. அவளை இழுத்து அவன் கைவளைவுக்குல் கொண்டு வந்தவன், அவளின் செங்குறுத்து காது மடலை லேசாக கடித்தான்.. அந்த கூச்சத்தில் கண் மூடி நின்றவள் ஷிவா இது வீடு இல்லை என்று கண்கள் மூடி ஏகாந்த மனநிலையில் கூறினால்.. ஆனால்  அவனை விட்டு விலகவில்லை குழலி. அவன் அவள் சொன்னதை கண்டு கொள்ளாமல், நீ தனியா அலுவலகம் வர போறது இல்லை. உன்கூட நம்ம பாப்பாவும் வருவா, அவளுக்கு பால் நியாபகம் வந்து அழுதா என்ன பண்ணுவ என்று அவள் அட்சய பாத்திரங்களில் ஒன்றை லாவகமாக பற்றி கொண்டு விஷ்வா கிறக்கமான குரலில் கேள்வி கேட்க. குழலி மிரண்டு விட்டாள், ஷிவா என்ன பண்றிங்க என்று அவனை விட்டு தள்ளி சென்று அவன் முகத்தை பார்த்து கோவமாக கேட்க வேண்டிய கேள்வியை சிவந்த முகத்துடன் நாணம் பூசி அவன் முகம் பார்க்க முடியாமல் கேட்டால்..

விலகிய அவளை, தன்னருகே மீண்டும் இழுத்து கொண்டவன், அவள் முகம் நிமிர்த்தி அவன் சுட்டு விரலால் அவள் சிவந்த முகத்தை ரசித்து கொண்டே கோடிழுத்தான், என்ன ரொம்ப டெம்ப்ட் பண்ற டி என்றான் ஆழ்ந்த குரலில்..

அவன் மார்போடு இடித்து கண் மூடி நின்றாள் குழலி. எதை பற்றியும் யோசிக்காதவன் அவள் ரோஜா உதடுகளை குல்கன்தாக சுவைத்து மென்று தின்றான்.

அவனுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தன் உதடுகளை அவன் வசம் ஒப்படைத்தவள் புதிதாக பல் முளைத்த குழந்தை போல் அவன் உதடுகளை அழகாக கடித்தால். அதில் பித்தேரியவன் முத்தத்தில் வன்மையை கூட்டினான்.
சிறிது நேரத்திலே அவள் மூச்சுக்கு ஏங்கி அவனை விலக்க முயல, அவள் நிலை உணர்ந்து அவனே விலகினான். இருவரும் மாரத்தான் ஓடியது போல் மூச்சு வாங்கி கொண்டிருந்தனர்.

குழலி மூச்சு வாங்கி கொண்டே, ஷி.. ஷ்வ்.. ஷிவா நீ, நீ ரொம்ப மோ..சம் டா என்று நெஞ்சில் கை வைத்து பெரிய பெரிய மூச்சுக்களை உள் இழுத்து வெளிவிட்டு அவனை பற்றி அவனிடமே புகார் கூறினால் அரிவை அவள்.

மீண்டும் அவளை இழுத்து இறுக, அனைத்து கொண்டு அவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் விஷ்வா.. அவன் உணர்வுகளை ஆர்ப்பரிக்க வைப்பதும் அவளே அவனை கட்டுக்குள் கொண்டு வருவதும் அவளே.

நீண்ட நேர அனைப்பிற்கு பின் அவளிடம் இருந்து விலகியவன்,  தந்தை கொடுத்த பட்டியல் புத்தகத்தை எடுத்து சோபாவில் அமர்ந்தான் பின் அதில் உள்ள மர வகைகளை விளக்க தொடங்கினான்.
சிறு சிறு துண்டுகளாக சில மர வகைகளை வேலையாளிடம் கொண்டு வர கூறி, அதை குழலியிடம் கொடுத்து அதன் தன்மையை விளக்கினான்.

பின் விலை பட்டியலை பற்றி தெளிவாக கூறினான். மரம் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறோம், அதை தகுந்த பொருளாக வடிவமைக்க வேலையாளுக்கு எவ்வளவு கூலி கொடுக்கிறோம்.. அதன் விற்பனை விலை என்ன என்று அதையும் விளக்கினான்.

இடையிடயே சொல்லி கொடுப்பது புரிகிறதா என்று கேட்டு தெரிந்து கொண்டான்.

அவன் சொல்லி கொடுத்த மர வகைகளின் பெயரை திரும்ப சொல்லுமாறு கேட்டு அவளை சோதித்து பார்த்தான். குழலி அனைத்தையும் சரியாக சொல்ல மனதோடு மெச்சி கொள்ளாமல் வாய்விட்டு பாராட்டு பத்திரம் வாசித்து அவளை ஊக்க படுத்தும் விதமாக சில முத்திகளையும் அவளுக்கு கொடுத்தான். பொய்யாக முறைத்தவளை கண்டு கொள்ளாது, அந்த அறையில் இருந்த கணினி முன் அமர வைத்து, கணினியை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயங்களை கற்று கொடுத்தான்.

முதலில் திணறி தான் போனால் குழலி, சுட்டியை (mouse) கூட ஒழுங்காக பிடித்து உபயோகிக்க தெரியவில்லை என்பதே உண்மை.
அவளை மேலும் திணற வைக்காமல், பெயிண்ட் என்ற பயன்பாட்டு மென்பொருளை திறந்து அதில் அவளுக்கு சில வடிவங்களை வரைந்து காண்பித்து அதில் வண்ணங்களை நிறப்புவது எப்படி என சொல்லி கொடுத்தான். இந்த பயிற்சியால் அவளுக்கு சுட்டியை உபயோகிக்க எளிதாக இருந்தது.

அதன் பின் எழுத்து உரை கருவியை (text tool) எடுத்து அவள் பெயரை டைப் செய்து காட்டினான். அதில் எழுதுகளில் வேறுபாடு (font style) காட்டி, அதற்கும் வண்ணங்களை நிறப்பி பல்வேறு வடிவமைப்புகளை காட்டினான். அவளுக்கு ஆர்வத்தை கூட்டும் வகையில் கணினி பயிற்சியை பயிற்றுவித்து, அதில் வெற்றியும் கண்டான் விஷ்வா.

விஷ்வா நினைத்தது போல் குழலி அவர்கள் பெயரையும் பூரணி பெயரையும் விஷ்வா சொல்லி கொடுத்த முறையில் டைப் செய்து, அதில் அவளுக்கு தோன்றிய மாற்றங்களை கொண்டு வந்தால். இதே போல் விஷ்வா சொல்லி கொடுத்த அனைத்தையும் ஆர்வத்துடன் கற்று கொண்டால். அவள் ஆர்வத்தை தூண்டும் வகையில் எளிமையாக அதே நேரத்தில் புரியும்படி சொல்லி கொடுத்தான் விஷ்வா.

இடையில் குழந்தையை சென்று கண்டு வந்தால். தாத்தாவிடம் பல கதைகளை கேட்டுவிட்டு உறங்கி போனால் பூரணி பாப்பா.

இடையிடயே மனைவியை கொஞ்சி தீர்க்கவும் மறக்கவில்லை விஷ்வா. அவன் கற்பித்த பாடத்தை செய்து பார்க்கும் பொழுது, சந்தேகம் எழ மீண்டும் விஷ்வாவை நாடினால் குழலி..

ஷிவா இந்த டூல் எப்படி யூஸ் பண்றது இன்னொரு வாட்டி சொல்லி குடுங்க மறந்து போய்டுச்சு என்று அவள் மாணவியாக சந்தேகம் கேட்க, அவன் குழலியை மனைவியாக பாவித்து, அவன் உதட்டை விரலால் தொட்டு காட்டினான்..

முதலில் புரியாதவள் பின் அவன் எண்ணம் புரிந்து பொய் கோபம் காண்பித்து செல்லமாக சிணுங்கல் கொண்டு ஆசை இருந்தும் போடா என்று கூறி சிவந்த முகத்தை கணினியினுல் புதைக்க முயன்றால் பெண்ணவள்.

அவள் மறுத்தால் விட கூடிய ஆளா அவன். அதற்கும் சேர்த்து வட்டி போட்டு வட்டி குட்டி போட்டுடுச்சு என்று பொய் கணக்கை காட்டி அவள் முத்தங்களை குரு தட்சணையாக பெற்று கொண்டு அவள் கேட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்தான்.

அவளும் லேசு பட்டவள், இல்லையே.. அவன் தொடுகையில் மயங்கி மக்கு மாணவியாக மாறி போனவள் மீண்டும் மீண்டும் அவனிடம் சந்தேகங்களை கேட்டு கொண்டிருந்தாள்.

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டவன், எந்த குறையும் வைக்காமல் அவள் தேவைகளை பூர்த்தி செய்தான்.

எப்படியோ ஒரு வழியாக இருவரும் மாலை வீடு திரும்பி இருந்தனர். அவர்கள் காதல் விளையாட்டு எல்லை மீறி போனாலும் தொழிலை கற்று கொள்வதில் எந்த பின்னடைவும் இல்லை..

அடுத்த நாள் குழலியையும் மகளையும் அழைத்து கொண்டு ஷாப்பிங் சென்றான். இன்னும் ஒரு வாரத்தில் ரஞ்சனியின் திருமனம் வருகிறதே, அதற்காக தான் இந்த ஷாப்பிங். அவளுக்கு பிடித்த அதே நேரத்தில் அவளின் சந்தன நிறத்திற்கு ஏற்றார் போல் லிலாக் நிறத்தில் ஒரு புடவையை தேர்வு செய்தான் விஷ்வா.

குழலி அவனை முறைத்து கொண்டு நிற்க, அவன் அவளின் இந்த முறைப்புக்கான காரணம் தெரியாமல் நின்றான்.

கல்யாணம் எனக்கா இல்ல ரஞ்சனிக்கா? எனக்கு எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியான புடவை என்றால், அந்த சேலையின் விலையை கண்டு..

உனக்கு இந்த சாறி (saree) புடிச்சு இருக்கா இல்லையா என்றான். புடிச்சு இருக்கு அதுக்காக என்று அவள் மேலும் பேச வர, அவன் அதை கண்டு கொள்ளாமல் அந்த சேலையை பில் செய்ய அனுப்பிவிட்டான்.

அவன் குழந்தையை தூக்கி கொண்டு முன்னே செல்ல, ஷிவா என்று அழைத்து கொண்டே அவன் பின்னே நடந்தால் குழலி..

திரும்பியவன் அவள் காதருகே குனிந்து, ஓவரா பேசுன ட்ரையல் ரூம் கூட்டிட்டு போய் ரேப் பண்ணிடுவன் வித்யாசமான மிரட்டல் விடுத்தான்.

அவன் சொன்ன விதத்தில், சிறிதாக வாய் பிளந்து நின்றாள் குழலி.

 

 

 

 

 

 

 

 

 

35. கண்கள் நிறைந்த ஓவியமே!!
Surya Prakash
Weds
Ranjani

என்று பூக்களால் நிறைந்த பெயர் பலகையை தாங்கி, அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம், சொந்தங்களுக்கும் சுற்றத்தாருக்கும் சிறு குழப்பம் இருக்க தான் செய்தது.. மணமகன் மாறியதை பற்றி.. இருந்தும் பெரிய இடத்தில் இதல்லாம் சகஜமப்பா என்று அவர்களே கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விட்டு, தாம்பூலத்திற்கு பதிலாக மாப்பிள்ளை மாறி போன, பின்னணியை அதி தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்தனர்.

சூர்யா ஐயர் கூறும் மந்திரங்களை சிரத்தையாக உச்சரித்து கொண்டு இருந்தான். அதற்கு மாறாக அவன் அருகில் மணமகளாக அமந்துள்ள ரஞ்சனியின் முகம் மருந்திர்க்கும் புன்னகையின்றி, கோவத்தில் சிவந்து இருந்தது.

ஓய்  கிட்டன் சிரிடி என்று, சும்மா இருந்தவளை வம்புக்கு இழுக்க..   மூடிட்டு வேலைய பாரு என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னதில், சூர்யா யாரும் பார்க்கா வண்ணம் அவளை இடுப்பில் கிள்ளி வைத்தான்..

அவளிடம் இருந்து எந்த எதிர்வினைவும் இல்லாமல் இருக்க, அவளை திரும்பி பார்த்தான். கண்கள் கலங்கி ஒற்றை விழி நீர் வெளியே வர காத்திருந்தது.

சாரி என்று மெதுவாக அவளிடம் முனுமுனுத்தான். அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை. ரஞ்சனி கண்கலங்குவதை கண்ட குழலி, குழந்தையை விஷ்வாவிடம் கொடுத்துவிட்டு, அவள் அருகே சென்று முகத்தை துடைப்பது போல், கண்ணீரை துடைத்து விட்டு அக்கா அழாதீங்க என்று ஆறுதல் கூறினால். ரஞ்சனி எதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் இருக்கும் மனநிலை அப்படி.

மகேஷ்வரி கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தால்.. அவர் முகத்தில் கடுகு போட்டால் பொரிந்து விடும் அவ்வளவு கோவத்தில் இருந்தார்.

அவரை தவிர, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர். ரஞ்சனியின் பெற்றோர் பரமுவும் சுசிலாவும் ரஞ்சனியை நினைத்து வருந்தினர், அவர்கள் கலக்கம் உணர்ந்த விஷ்வாவும் அவன் தந்தையும் ஆறுதலாக இருந்தனர்.

ஐயர் கெட்டி மேளம், கெட்டி மேளம் என்று குரல் கொடுக்க.. சுந்தரம் தாலி எடுத்து கொடுத்தார் மகனின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு.

மகிழ்ச்சியாக மங்கள நாணை வாங்கிய சூர்யா, ரஞ்சனி மேல் உள்ள காதலை கண்களில் காட்டி, லவ் யூ கிட்டன் என்று அவள் காதோரம் சொல்லி கொண்டே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். அதில் ரஞ்சனி அவன் முகத்தை பார்த்தால். இருவரின் கண்களும் சில நொடிகள் சந்தித்து கொண்டது. தாலி கட்டி முடித்தவன் அவள் முகத்தை அவனின் இரு கைகளிலும் ஏந்தி அழகாக கன்னத்தில் முத்தம் வைத்தான். அந்த தருணம் அழகான கேண்டிட் புகைப்படமாக மாறியது.. சுற்றி இருந்தவர்கள் தான் வெட்கப்பட்டு போயினர்.

ரஞ்சனியின் பெற்றோருக்கு கூட அந்த கணம் ஒரு இதமான மனநிலை தோன்றியது.

குழலி விஷ்வாவை பார்த்தால். என்ன டி என்று அவன் ஒரு புருவம் உயர்த்தி கேட்க, என் கழுத்துல தாலி கட்டும் போது உங்க மூஞ்சி எப்படி இருந்ததுனு யோசிச்சி பார்த்தன் என்றால்.

அவளை செல்லமாக முறைத்தவன், நீயும் உர்ருனு தாண்டி மூஞ்ச வச்சுட்டு இருந்த, அத இப்போ நினைச்சா கூட எனக்கு குமட்டுது என்று வாந்தி எடுப்பது போல் பாவனை செய்தான்.. அவன் கையை நன்றாக திருகி விட்டாள்.. ஹேய் வலிக்கிது டி என்று அவன் மெதுவான குரலில் சொல்ல.. போடா என்கிட்ட இனிமேல் பேசாத என்று முறுக்கி கொண்டால்.

சும்மா சொன்னன் டி, நீ எதுக்கு நம்ம பர்ஸ்ட் மேரேஜ்ஜ நினைக்குற.. நமக்கு செகண்ட் டைம் நடந்த மேரேஜ்ஜ நினைச்சு பாரு டி என்றான்..

அவள் அவன் முகத்தை பார்க்க, ஒற்றை கண் சிமிட்டி எனக்கு தெரியும் அந்த மொமண்ட்ட நீ நம்ம கல்யாணமா தான் நினைச்சனு, உன் தாலிய விட நான் உன் கழுத்துல போட்ட செயின்க்கு நீ எவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறனு நான் பார்த்து இருக்கன் என்றான்.. இருக்கும் இடம் மறந்து அவள் கழுத்தை அலங்கரித்து இருந்த அந்த தங்க சங்கிலியை அவன் கைகள் மயிலிறகை போல் வருடி சென்றது.

குழலியின் முகம், சொல்ல முடியா உணர்வில் இருந்தது. பின் அவளது கையில் சிறு அழுத்தம் கொடுத்து அவளை நடப்பிற்கு கொண்டு வந்தான் விஷ்வா.

அடுத்தடுத்த நிகழ்வுகள் சுபாமாக முடிய, மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர். சூர்யா ரஞ்சனி தனி காரில் வந்தனர்.

ரஞ்சனி கண் மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தால்.. தூங்கவில்லை. சூர்யாவிற்கு எப்படி பேச்சை தொடங்குவது என தெரியவில்லை. ரஞ்சி என்றான் ஆழ்ந்த குரலில்.. அவளிடம் பதில் இல்லை.

காரை சாலை ஓரம் நிறுத்தியவன், மெதுவாக அவள் கரத்தை எடுத்து அவன் கரங்களுக்குள் பொத்தி கொண்டான்.

அவள் சூர்யாவை நிர்மலமான பார்வையுடன் ஏறிட்டால். ப்ளீஸ் டி இப்படி பார்க்காத.. என்னைக்கா இருந்தாலும் நீ என்ன புரிஞ்சிகிட்டு என்கூட சந்தோஷமா வாழ்வ, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.. இந்த மொமண்ட்ட ஏத்துக்கோ டி, இதுக்கு அப்பறம் வர, சம்பிரதாயத்துல முகத்தை சந்தோஷமா வச்சு கலந்துக்கோ கிட்டன்.. அத்தை மாமாக்கும் நீ இப்படி எதையோ இழந்தா மாதிரி இருக்க முகம் பார்க்க கஷ்ட்டமா இருக்கும் புரிஞ்சிக்கோ கிட்டன் என்றான் மென்மையாக.

அவள் கையை அவனிடம் இருந்து எடுத்து கொண்டவள், வீட்டுக்கு போங்க என்றால்.

ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டவன், இவ்வளவு நேரம் நான் பேசுனத பொறுமையா கேட்டதே பெரிய விஷயம் என்று நினைத்து கொண்டு காரை கிளப்பினான்.

அவர்களுக்கு முன் அனைவரும் வீட்டிற்கு வந்து இருந்தனர். சேர்ந்து வந்த தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்க குழலி தயாராக நின்றாள்.

இருவக்கும் ஆரத்தி எடுத்து முடித்து, வலது கால் எடுத்து வைத்து உள்ளே செல்லுமாறு சொல்லி சென்றால்.

அனைவரும் கூடத்தில் அமர்ந்து இருக்க, மகேஷ்வரி அங்கு இல்லை.. எப்போதும் போல் அவர் அறையில் அடைந்து கொண்டார்.

சுசிலா அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று குழலிக்கு சொல்லி கொடுக்க, மூத்த மருமகளாக அவள் பொறுப்பை உணர்ந்து அவர் சொல்லி கொடுத்தது போல் அனைத்தையும் செய்தால்.

பூஜை அறைக்கு, புதுமண தம்பதிகளை அழைத்து சென்றவள், இடுப்பளவு உள்ள குத்து விளக்கை ஏற்றி இறைவனை வணங்க கூறினால்.

பின் அவர்களுக்கு தயாராக இருந்த பால் பழத்தை கொடுத்து பகிர்ந்து கொள்ள கூறினால். அனைத்தும் முடிய, எனக்கு ரொம்ப அசதியா இருக்கு குழலி நான் ரெஸ்ட் எடுக்கணும் என்றால் ரஞ்சனி. சரி வாங்க அக்கா என்று சூர்யாவின் அறைக்கு அழைத்து சென்று ஓய்வெடுக்க கூறினால்.

சுசிலா சுந்தரமிடம் பேச தொடங்கினார்.. அண்ணா ரஞ்சனி மனசு மாற கொஞ்சம் நாள் ஆகும், அதுவரைக்கும் இப்படி தான் யார்கிட்டயும் ஒட்டாம இருப்பா.. என்று தயங்கி தயங்கி பேச, என்ன சுசிலா ஏதோ முன்ன பின்ன தெரியாத பொண்ண பத்தி பேசுறா மாதிரி பேசுற.. ரஞ்சனி பத்தி எனக்கு தெரியாதா நான் தூக்கி வளர்த்த பொண்ணு.. அவ நிலமைல யாரா இருந்தாலும் இப்படி தான் இருப்பாங்க. நான் பார்த்துக்குறன் என்றார்.

உண்மைய சொன்னா எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு என் ரெண்டு நண்பர்களோடு பொண்ணுங்களும் என் வீட்டுக்கே மருமகளா வந்துட்டாங்க. மனசு நிறைஞ்சு இருக்குமா என்றார்.

சுசிலா சுந்தரம் வார்த்தையில் மகிழ்ச்சியாக உணர்ந்தார்.

பின் சூர்யாவிடம், மாப்பிளை அவ கொஞ்சம் கோவப்படுவா எங்களுக்காக பொறுத்து போங்க என்று கூற வர, அவ இப்போ என்னோட மனைவி அத்தை என்மேல கோவப்பட அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் உங்க பொண்ண பத்திரமா பார்த்துக்குறன் கவல படாதீங்க என்றான். மேலும் அவன் மாமனார் மாமியாரை இலகுவாக்க அவர்கள் நடுவில் அமர்ந்து கலகலத்து பேசி, அவர்களையும் பேச வைத்து இறுக்கமான சூழ்நிலையை அழகாக மாற்றினான்.

குழலிக்கு அவளின் அம்மா நியாபகம் வந்து விட்டது, பரமு மகளின்   திருமணத்திற்கு முத்தரசியை தம்பதி சகிதமாக நேரில் சென்று அழைத்தார். ஆனால் அந்த ஊரில் மழை செய்த சதியால் நிலசரிவு ஏற்பட்டுள்ளது, வாகனங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்படவே அவரால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.. பரமுவிற்கு அழைத்து நிலைமையை கூற, முதலில் வருத்தபட்டவர் பின்பு சரிம்மா நிலமை சரியானதும் நான் வண்டி அனுப்புறன் நீ இங்க வாமா, இப்போ பத்திரமா இரு என்று சொல்லி வைத்தார்.

குழலியும் அன்னைக்கு அழைத்து ஓய்ந்து போனால்.. நினைக்கும் நேரத்தில் அவள் அம்மாவிடம் பேச முடியவில்லை.. சிக்னல் பிரச்சனை. நேற்று இரவு பேசினால்.. ஆயிரம் பத்திரம் சொல்லி அழுகையோடு போனை அனைத்தால். அவள் அம்மாவை பார்த்து ஐந்து மாதங்கள் ஆனதால் இந்த திருமண விழாவில் அன்னையை பார்த்து விடலாம் என்று நினைத்து கனவு கண்டவளுக்கு ஏமாற்றமாகி போனது..

விஷ்வா குழலியின் முக வாட்டம் எதனால் என்று புரிந்து கொண்டு அவளை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் செய்தான்.

அவளை அவள் ஊரிற்கு அழைத்து செல்கிறேன் என்றும் வாக்குறுதி கொடுத்தான். அதன் பின்பே குழலி சகஜ நிலைக்கு திரும்பினால்.

இப்போது, சூர்யா அவனின் மாமனார் மாமியாரின் மனம் உணர்ந்து ஆறுதலாக பேசுவதில், அவளின் மனம் அன்று விஷ்வா அவள் அம்மாவிடம் கடுமையாக பேசியதை நினைத்து பார்த்தது. அதில் அவள் கண்கள் முனுக்கென்று கண்ணீரை உகுத்தது. அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டவள் மேலே அவர்கள் அறைக்கு சென்றால்.

மனைவியின் மீது ஒரு கண்ணை கடன் கொடுத்தவன் கண்ணில் தப்பாமல் விழுந்தது அவளின் முகம் மாறுதல்களும், கண்ணீரும்.. அவள் அம்மாவை தேடுகிறாள் என்பது வரை புரிந்து கொண்டான். குழந்தையை அவன் அப்பாவின் அருகில் அமர வைத்துவிட்டு மனைவியை காண மேலே சென்றான்.

மேலே வந்து கதவை தாழிட்டவன், அலமாரியில் வேறு உடையை தேடி கொண்டிருந்தவளை பின்னிருந்து அனைத்து கொண்டான்..

ஏண்டி அழுத என்று கேட்டு கொண்டே அவள் கன்னத்தை ஈரமாக்கினான் விஷ்வா.

ப்ளீஸ் விடுங்க விஷ்வா என்று அவன் கைக்குள் இருந்து வெளியேவர முயன்றால்.. அவளின் விஷ்வா என்ற அழைப்பே அவள் சகஜமாக இல்லை என்பதை உணர்த்தியது..

அவளை தன் பக்கம் திருப்பி, அவன் முகம் பார்க்க வைத்து கேட்டான்.. என்ன டி அம்மா நியாபகம் வந்துடுச்சா? அதான் நான் கூட்டிட்டு போறன்னு சொன்னல அப்பறமும் ஏன் இப்படி அப்போ அப்போ சோர்ந்து போற என்றான்..

அவன் கையை தட்டிவிட்டு, அவனை விட்டு விலகினால். அவளின் இந்த உதாசினத்தில் விஷ்வாவிற்கும் கோவம் வந்துவிட்டது.. ஹேய் உங்க அம்மா வர முடியாம போனதுக்கு என்மேல ஏண்டி கோச்சுக்குற என்றான் கடுப்பான குரலில்..

நான் அதுக்காக அழல, கீழ பார்த்திங்கள சூர்யாவை, உங்க தம்பி தான.. மாமனார் மாமியார் மனசு கஷ்ட்டபப்டுறாங்கனு எவ்ளோ ஆறுதலா பேசுனாரு..

ஆனா நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கு நீங்க எங்க அம்மாகிட்ட எப்படி நடந்துகிட்டிங்கனு உங்களுக்கு நினைவு இருக்கா.. என் அம்மா உங்க கிட்ட பேச வந்த அப்போ அவங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துகிட்டிங்க..

இப்போ நினைச்சு பார்த்தாலும் எனக்கு கஷ்ட்டமா இருக்கு அழுகையா வருது என்றால்.. கலங்கிய கண்களை துடைத்து கொண்டே..

விஷ்வாவிற்கு அவ்வளவு கோவம் வந்தது.. அவன் குணத்தை அவன் தம்பியுடன் ஒப்பிட்டு பேசியதில்..

36. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி காரணத்தை சொல்லி முடித்தும், விஷ்வாவிடம் இருந்து பதில் வராமல் போக அவன் முகத்தை கண்டால்.. அவளை தான் முறைத்து கொண்டு நின்று இருந்தான் விஷ்வா..

அவள் பேசியது அவளுக்கு தவறாக தோன்றவில்லை.. கோவமாகவே நின்று கொண்டிருந்தான்.

என் தம்பி ரஞ்சனிய ரெண்டு வருஷமா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுவும் இல்லாம நாங்க ரெண்டு பேரும் எங்க சின்ன வயசுல பரமு மாமா வீட்ல தான் அதிகமா இருந்து இருக்கோம்.

நம்ம கல்யாணம் எந்த சூழ்நிலைல நடந்துச்சுனு உனக்கும் தெரியும் தான? அன்னைக்கு காலைல உங்க ஊருக்கு வந்த அப்பறம் தான் எனக்கும் உனக்கும் கல்யாணம்னு எங்க அப்பா சொல்றாரு.. என்னோட மனநிலை எப்படி இருந்து இருக்கும்னு நீ நினைக்குற?

எனக்கு உங்க அம்மா மேல தான் கோவம் வந்துச்சு, அவங்க தான் ஏதோ எங்க அப்பாவ பிரைன் வாஷ் பண்ணி, பொண்ண வசதியான இடத்துல கட்டி கொடுக்க இந்த மாதிரி அவசர கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கறதா தோணுச்சு என்றான்.. அவள் மனநிலையை பற்றி யோசிக்காமல்..

எங்க அம்மா ஒன்னும் அப்படிப்பட்டவங்க இல்ல.. நாங்க யார் பணத்துக்கும் இதுவரைக்கும் ஆசைப்பட்டதும் இல்ல என்றால். கோவம் கொண்ட விழிகளோடு..

விஷ்வாவிற்கு தான் எங்காவது சென்று முட்டி கொள்ளலாமா என்று இருந்தது..

ஏன் டி நான் சொன்ன எல்லாம் விஷயத்தையும் விட்டுட்ட.. உங்க அம்மாவ பத்தி சொன்ன விஷயம் மட்டும் தான் உன் காதுல விழுந்துச்சா என்றான்.. கோவத்தை மறைத்த குரலில்..

குழலிக்கும் அவன் நியாயமான காரணங்கள் புரிந்து தான் இருந்தது.. இருந்தும் அன்னையை தேடும் குழந்தையாக காரணத்தை தேடி தேடி அவன் மீது குற்றம் கண்டாள்.

அதுக்காக அவங்க வயசுக்கு கூட, மரியாதை இல்லாம பேசுவீங்களா? சரி அது போகட்டும், என்கிட்ட சகஜமா பேச தொடங்குன பிறகு கூட அவங்க கிட்ட நீங்க பேசுனதுக்கு ஒரு மன்னிப்பு கேட்கல.. ஏன் நமக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகப்போது, இப்போ வரைக்கும் எங்க அம்மாகிட்ட எத்தனை முறை பேசி இருப்பீங்க சொல்லுங்க..

நான் தினமும் அவங்ககிட்ட போன் பேசும் போது நீங்களும் என்கூட தான இருப்பிங்க.. ஒரு நாளாச்சும் நீங்களே அவங்ககிட்ட பேசி இருக்கீங்களா? ரெண்டு முறை நானே உங்கள வற்புறுத்தி அவங்க கிட்ட பேச வச்சு இருக்கன்.

எங்க அம்மா ஒன்னும் வசதியானவங்க இல்லையே.. அதான் உங்களுக்கு எங்க அம்மாவ கண்டா இளப்பமா இருக்கு போல.. என்று கண்ணை கசக்கினாள்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கே தெரியவில்லை.. விஷ்வா ஒரு வட்டத்துக்குள் இருப்பவன்.. ஒருவரிடம் அவன் சகஜமாக பேச வேண்டும் என்றால் அவர்களுடன் அவனுக்கு ஒரு பிணைப்பு ஏற்பட வேண்டும். அவன் குழலியின் அன்னை என்று இல்லை.. அவன் அலுவலகத்தில் இருப்பவரிடமும் ஒரு இடைவெளியை கடைபிடிக்கிறானே.. நட்பு வட்டமும் சொல்லி கொள்ளும் அளவு இல்லை. இது தானே அவன் குணம்.

அவன் குழலியிடமும் இதையே கூறினான். என் குணம் இதான் குழலி, ஆறு மாசமா என்கூட இருக்கியே உன்னால இத கூட புரிஞ்சிக்க முடியலையா? எங்க அப்பா மேலையும் நான் கோவமாதான இருந்தன். இப்போ அவர் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல தான். ஆனா நான் இன்னும் அவர்கிட்ட பேசல அது உனக்கும் தெரியும் தான.. அவர்கிட்ட பேச எனக்கு எந்த ஈகோவும் இல்ல, ஆனா அன்னைக்கு நான் அவர ரொம்ப கஷ்டப்படுத்திட்டன்.. அந்த குற்ற உணர்ச்சி இன்னும் அவர்கிட்ட என்ன பேச விடாம தடுக்குது. அதே குற்ற உணர்ச்சி தான் அத்தை கிட்டயும் என்ன பேசவிடல என்றான்.

அவன் இவ்வளவு விளக்கம் கொடுத்தும்.. குழலி முகம் கனியாமல் தான் இருந்தாள். அதில் விஷ்வாவிற்கு இன்னும் கோவம் தான் வந்தது.

இங்க பாரு குழலி, நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ.. இனிமேல் என்ன என் தம்பி கூடன்னு இல்ல வேற யார்கூடவும் கம்பேர் பண்ற வேலை வச்சுக்காத.. நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டன் என்று கடுமையாக எச்சரித்தான்.

நான் உங்கள, சூர்யா கூட கம்பேர் பண்ணல.. நீங்க என் அம்மாகிட்ட நடந்துகிட்ட விதத்தை தான் சொல்ல நினைச்சன்.. அத நீங்க தப்பா புரிஞ்சிகிட்டிங்க. என்று அவள் மேலும் ஏதோ பேசவர.. அவன் அவளை உதாசீனப்படுத்திவிட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

எவ்வளவு நேரம் அதே இடத்தில் நின்றாளோ.. பின் விசேஷ வீட்டில் தான் மட்டும் இப்படி தனியாக இருப்பது நல்லதில்லை என்று உணர்ந்தவள், கையில் கிடைத்த உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.

விஷ்வா, வரவேற்பறையில் தந்தையின் அருகே அமர்ந்து இருந்தான்.

ப்பா.. சாரிப்பா என்றான் அவன் தவறை உணர்ந்து.. மென்மையாக சிரித்தவர், மௌனமாகினார்.. மீண்டும் அப்பா என்றான் விஷ்வா, உனக்கும் சூர்யாக்கும் நான் எப்பவும் கெடுதல் நினைக்க மாட்டன் விஷ்வா. குழலி உன் வாழ்க்கைல வந்தா நீ சந்தோஷமா இருப்பன்னு எனக்கு தெரியும், அதான் உன் விருப்பத்தை மதிக்காம உனக்கு குழலிய கல்யாணம் பண்ணி வச்சன்.

மயூரி உன் அம்மா மாதிரி டா, அவ உன் வாழ்க்கைல வந்து இன்னொரு கல்யாண சுந்தரமா நீ மாறிட கூடாது விஷ்வா. என் பையனோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம் என்றார் கலங்கிய விழிகளோடு.. இத்தனை மாதங்கள் கழித்து மகன் தன்னை புரிந்து கொண்டு பேசியதில் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் தந்தையானவர்.

தந்தையின் கலங்கிய விழிகளை கண்டவன், தாவி அனைத்து கொண்டு அப்பா சாரிப்பா சாரி என்று அவனும் இவ்வளவு நாள் அவரிடம் பேசாமல் இருந்த வருத்தத்தையும், அவரை எவ்வளவு தேடினான் என்பதையும் அவனின் அனைப்பில் உணர வைத்தான்.

டேய் ரொம்ப இருக்காத டா, வயசான உடம்பு என்று சிரித்து கொண்டே கூற, போங்கப்பா, உங்களுக்கு என்ன வயசாகிடுச்சு.. என்று தந்தையின் மடியில் படுத்து கொண்டு செல்லம் கொஞ்சினான் 27 வயது ஆண் மகன்.

பூரணி பாப்பா, விஷ்வாவின் வயிற்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு குதித்து கொண்டு இருந்தாள்.

அங்கே வந்த சூர்யா, ஹ்ம்ம் அப்பாவும் பையனும் ஒன்னு கூடிட்டிங்க.. இனி என்ன டீல்ல விட்ருவீங்கள என்றான் குறும்பான குரலில்..

போடா பொறாமை பிடிச்சவனே, இந்த ஆறு மாசமும் நீ தான என் அப்பாகிட்ட ஒட்டிக்கிட்டு இருந்த, இப்போ தான் நாங்க சமாதானம் ஆகி இருக்கோம் உனக்கு அது பொறுக்கலையா என்று பொங்கினான் விஷ்வா.

மேலும், தந்தையிடம் அப்பா ஒன்னு கவனிச்சிங்களா??

 என்னபா என்று அவரும் ஆர்வமுடன் கேட்க.. நாம இத்தன மாசமா பேசாம இருந்தோம் ஆனா இந்த எரும மாடு நம்மள சேர்த்து வைக்க ஒரு முயற்ச்சி கூட பண்ணல பா இவன் என்று தந்தையிடம் புகார் சொல்ல..

அட ஆமா விஷ்வா என்று அவரும் பெரிய மகனுக்கு ஏற்றது போல் தாளம் தட்டினார்.

ஆமா இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு போன புருஷன் பொண்டாட்டி பாரு இவங்களுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ணி சேர்த்து வைக்க. போங்க டா வெட்கம் கெட்டவங்களா.. என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டான்.

அப்பா பாருங்கப்பா அவன் உங்களையும் டா சொல்லிட்டு போறான், விடுங்க அவனை அடிச்சு உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வைக்குறன் என்று வீறு கொண்டு எழுந்தான்.

அவர், சிரித்து கொண்டே விடு விஷ்வா.. இன்னைக்கு தான் கல்யாணம் ஆகி இருக்கு. இனி தினமும் அவனை ரஞ்சனி வெளுத்து வாங்குவா.. நாம பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டு அத பார்த்து சிரிக்கலாம் என்று மகனுடன் உடன்படிக்கைக்கு வந்தார்.

அவனும் அவர் தோளில் கை போட்டு கொண்டு, அப்பா டா என்று நெஞ்சை நிமிர்த்தி சிரிக்க..

சுந்தரம் மகனை குறு குறுவென்று பார்த்து நீ அப்பாவ டா சொல்லலியே என்று கேட்க.. ச்ச ச்ச இல்லப்பா.. என்ன என்ன உங்க சின்ன பையன் மாதிரி நினைச்சுட்டிங்களா? இது நண்பேன்டால வர டா ப்பா என்று கள்ள முழி முழித்தான். அதிலே மகனின் குறும்பை உணர்ந்தவர் உன்ன என்று அவன் தோளில் அடித்து சாய்ந்து கொண்டார்.

இருவருக்குமே மனநிறைவாக இருந்தது.

அவர்களையே பார்த்து கொண்டு உள்ளே வந்தனர், பரமு மற்றும் சுசிலா. தந்தை மகன் இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர் என பார்த்ததும் தெரிந்து கொண்டனர்..

எங்க மாமா போனீங்க? என்று விஷ்வா அக்கறையாக கேட்டான்.. ரஞ்சனியோட முக்கியமான பொருள் எல்லாம் எடுத்துட்டு வர போய் இருந்தோம் பா என்றவர், விஷ்வா அருகில் அமர்ந்து கொண்டார்.

அப்போது தான் குழலியும் சமையல் அறையில் இருந்து அவர்களுக்கு மாலை சிற்றுண்டி எடுத்து வந்தாள்..  

தந்தை மகன் கொஞ்சி கொண்டிருக்கும் போதே, அவள் சமையல் அறையினுள் நுழைந்து விட்டாள். இருவரின் சம்பாஷனைகளையும் கேட்டு கொண்டு தான் வேலையை தொடர்ந்தாள்..

அவளுக்கும் மனதில் இருந்த பாரம் குறைந்தார் போல் இருந்தது. விஷ்வா அவன் தந்தையுடன் பேசியதை நினைத்து.

குழலி விஷ்வாவிடம் பேச முயற்சி செய்ய, அவன் குழலி முகத்தை கூட பார்க்கவில்லை. முகம் சோர்ந்தவள், அவன் கவனத்தை ஈர்க்க இனிப்பை தேடும் எறும்பாக அவனையே சுற்றி சுற்றி வந்தாள். சுசிலா இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவர்.

சூர்யா அறைக்கு சென்று, மகளை எழுப்பி மற்ற அறைக்கு அழைத்து சென்றார். இரவு சடங்கிற்கு தயார் செய்ய..

போகும் போது குழலியிடம், குழலி விஷ்வாவ கூட்டிட்டு போய் அந்த அறைய அலங்காரம் பண்ணுமா என்றார்.

அதில் குதுகளித்தவள், விஷ்வாவை தேட, அவன் கண்டும் காணாமல் அமர்ந்து இருந்தான்.

அவனிடம் சென்றவள், ஷிவா அத்தை நம்மள அந்த ரூம்ம டெகரேட் பண்ண சொன்னாங்க என்றால்.

அவள் முகத்தை கூட பார்க்காமல், சூர்யாவின் அறை நோக்கி நடந்தான்.

குழலி அவனிடம் பேச முயற்சி செய்தும் அவன் பாரமுகமாவே இருந்தான்.

அமைதியாக அங்கு இருந்த வண்ண மலர்களை கொண்டு அறையை அலங்கரிக்க தொடங்கினர்..

குழலிக்கு அவனின் ஒதுக்கத்தில் கண்கள் கூட கலங்கிவிட்டது. ஷிவா சாரி, ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க என்று அவன் முன்னே போய் நின்றாள். சீன் கிரியேட் பண்ணாத ஒழுங்கா போய்டு என்றான்.

புசுபுசு என்று கோபம் கொண்டவள், நான் சீன் கிரியேட் பண்றனாடா, எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ.. ஏதோ ஒரு வருத்தத்துல அப்படி சொல்லிட்டன். அதான் சாரி சொல்றன்ல..

அவன் அப்போதும் அவளை கடந்து போக முற்பட, அவனை இழுத்து அனைத்தவள்.. அணில் போல் அவன் உதடுகளை கொய்ய தொடகினாள்.

விஷ்வா இந்த அதிரடியை குழலியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து அவளிடம் இருந்து விலக முயல, எங்கே அந்த முயல் குட்டி விட்டாள் தானே, அவன் தலை முடி கேசத்தை இறுக பற்றி அவனை தன்னிடம் இருந்து விலகாமல் பார்த்து கொண்டாள்..

உரிமைபட்டவள் இப்படி இழுத்து அனைத்து முத்தம் கொடுத்தாள்.. ஆண்மகன் அவனால் எவ்வளவு தான் அவனை கட்டுப்படுத்தி கொள்ள முடியும் அவனும் அவளுடன் கிறங்கி நின்றான். அவன் கைகளை எடுத்து அவள் இடுப்பை பற்றி கொள்ள செய்தாள் விஷ்வ கர்ணனின் பொற்குழலி.

உண்மையில் அந்த நிமிடம் விஷ்வாவிற்கு அவ்வளவு போதையாக இருந்தது. எல்லா ஆண்களுக்குமே இந்த ஆசை இருக்குமே மனைவியவள் எந்த தூண்டுதலும் இல்லாமல் தன்னை நாட வேண்டும் என்று. அது தானே இப்போது விஷ்வாவிற்கும் நடந்து கொண்டு இருக்கிறது.

முத்தத்தை தொடங்கியது குழலி என்றாலும் இப்போது முத்த கலை பயிற்றுவிப்பது விஷ்வாவின் முறையானது. அவளின் சிற்றிடை வதைப்பட்டு போனது விஷ்வாவின் கையில்..

ஆர்ப்பரிக்கும் உணர்வை இருவராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சூர்யா டேய் அண்ணா என்று நெஞ்சை பிடித்து கொண்டான்.

பதறி அடித்து விலகினால் குழலி. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல்.. சிவந்த முகத்தை நிலம் பார்க்க செய்து, அங்கிருந்து சமையல் அறையினுள் புகுந்து கொண்டாள்.

பெரிய பெரிய மூச்சுக்களை வேக வேகமாக இழுத்து விட்டாள், தன்னை நிலை படுத்தி கொள்ளவே அவளுக்கு நேரம் தேவைப்பட்டது.

அங்கு சூர்யா அண்ணனிடம், எல்லாம் எனக்கு எனக்குனு சொல்லிட்டு நீ அனுபவச்சிட்டு இருக்கியா டா பாவி மகனே என்று அவன் வயிற்றை செல்லமாக குத்தினான்.

விஷ்வா அவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன், அதான் கரடி மாதிரி வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டியே கரடி கரடி என்று மீண்டும் திட்டிவிட்டு வெளியே சென்றான்.

பெருமூச்சு விட்ட சூர்யா, இன்னைக்கு எனக்கு என்ன விதிச்சு இருக்கோ என்று அவன் மனையாளை நினைத்து, எந்த அதிகப்படியான ஆசையும் வளர்த்து கொள்ளவில்லை.

 

 

37. கண்கள் நிறைந்த ஓவியமே!!
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு அவர்கள் அறையினுள் நுழைந்தனர் சூர்யா மற்றும் ரஞ்சனி.

மேஜை மேல் இளம் சூட்டில் இருந்த பால் செம்பை எடுத்து, மற்றொரு குவலையில் ஊற்றி ரஞ்சனியிடம் கொடுத்தான் சூர்யா..

அவள் பால் குவலையை வங்காமல்.. கைகளை கட்டி அவனை தான் ஆழ்ந்த பார்வை பார்த்து கொண்டிருந்தாள்..

சந்தன நிற சேலையில் அரக்கு நிற பார்டர் வைத்து நேர்த்தியாக சேலை கட்டிருந்தால் ரஞ்சனி. அவள் சூடி இருந்த மல்லிகை பூ அவள் முன்புறம் அழகாக சரசமாடியது. அழகான குண்டு கன்னம், வலது கன்னத்தில் இருக்கும் மச்சம், குட்டி உதடு, கோவப்படும் போது சிவக்கும் எடுப்பான மூக்கு என அவள் அழகில் தடுமாறி அவளையே பார்த்து கொண்டிருந்தான் சூர்யா.

அவன் பார்வையில் எறிச்சலானவள்.. ஹ்ம்ம் நினைச்சத சாதிச்சு, இப்போ முதல் இரவு வரைக்கும் தயாராகி வந்துட்டீங்க.. அப்பறம் என்ன என்கூட படுத்து புள்ளை பெத்துக்கணுமா என்றால் எள்ளல் பார்வையுடன்..

அதுவரை மோன நிலையில் இருந்தவன், ரஞ்சனியின் குரலில் போதை தெளிந்தான்..

கையில் இருந்த பால் குவலையை  மேஜை மேல் வைத்தவன், அவளை நெருங்கி இவ்ளோ சீக்கரம் புள்ள பெத்துக்க என்ன அவசரம் பொண்டாட்டி.. ஒரு வருஷம் நமக்கான நேரத்தை யாருக்கும் விட்டு கொடுக்காம நாம என்ஜாய் பண்ணலாம்..

அதுக்கப்பறம் என்ன மாதிரி ஒரு ஆம்பள பிள்ளை உன்ன மாதிரி ஒரு பொம்பள பிள்ளைய பெத்துக்கலாம் என்று அசால்ட்டாக கூறி, அவள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான் சூர்யா.

டேய் பொறுக்கி நாயே விடு டா.. என்று அவள் கத்தி கூச்சல் போட்டால்.. அவனின் மொத்த உடல் எடையும் அவள் மீது தான் இருந்தது.. அவன் ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்தான். பின் அவளின் மார்பு சேலையை மேல் ஏற்றி அவளின் அங்கத்தில் கடித்து வைத்தான். அவள் வலியில் ஆஹ்ஹ் என்று கத்த அவளின் இதழை இதழ் கொண்டு மூடினான்.

இவ்வளவு நேரமும் அவளிடம் இருந்த தைரியம், சூர்யாவின் செயலில் காணாமல் போனது. இவன் இப்படியே என் அனுமதி இல்லாமல் என்னை எடுத்து கொள்வானோ என்று பயந்து போனால்.

பின் முழுபலம் கொண்டு அவனை தள்ளிவிட்டவள், மெத்தையில் இருந்து துள்ளி எழுந்தால். பயத்தில் கண்களில் கண்ணீர் உகுத்து கொண்டது.. அவள் தலையில் சூடிய மலர்கள் மெத்தையில் உதிர்ந்து இருந்தது.. தலைமுடிகள் கலைந்து, நெற்றியில் இருந்த குங்குமம் அழிந்து.. புடவை மாறாப்பு வேறு இடம் மாறி அவளின் ஒரு பக்க அழகை எடுத்து காட்டியது..

எதிர்ப்புறம் சூர்யா, இன்னும் மெத்தையில் தான் படுத்து இருந்தான்.. ஒரு கையை தலைக்கு கொடுத்து அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவனின் பட்டு வேட்டியும் அவிழ்ந்து தான் இருந்தது.

மெதுவாக மெத்தையில் இருந்து எழுந்தவன், அவிழ்ந்த வேட்டியை அவள் முன்பே கட்டினான். அவள் முகம் திருப்பியதையும் கண்டு கொள்ளாமல்..

அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகளை, பாவையவளால் படிக்க முடியவில்லை.

அவள் தாடையை பற்றி சுவற்றில் சாய்த்தவன் கூறினான்.. சில்லிதனமா என்ன தூண்டிவிட்டு நான் உன்மேல கோவப்படணும்னு நினைக்காத.

நான் உன்ன ரொம்ப ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்கன் ரஞ்சனி. உன்ன எப்பவும் என்ன விட்டு பிரியவிட மாட்டன். உண்மைய சொல்லனும்னா நான் உன்மேல கொலவெறில இருக்கன். நான் உன்ன காதலிக்குறன்னு தெரிஞ்சும் இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு அவன் கூட கல்யாணம் வரைக்கும் போய் இருக்கல.. என்றவனின் கை ரஞ்சனியின் தாடையை வலிக்க பற்றியது.

வி,.டு..விடு.. என்று கஷ்ட்டபட்டு முனகினால் ரஞ்சனி. அப்பவும் ஆத்திரம் தீராதவன், அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது படர்ந்து ஆடை களைந்தான்..

அவள் அழுவதை கண்டவனின் காதல் மனம் பொறுக்காது, அவளின் கலைந்த அரைகுறை ஆடையுடனே விளக்கை அனைத்துவிட்டு அவளை கட்டி கொண்டு உறங்கினான். அவளையும் மீறி அழுகையில் அவள் உடல் குலுங்கியது.

சூர்யாவின் இந்த முகத்தை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.. அவனின் இந்த குணத்தில் விக்கித்து போனால் .

அவளின் நினைவுகள், திருமணத்திற்கு முன்தினம் நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தது. நாம் மொத்தமாக என்ன நடந்தது என்று பார்த்துவிடலாம்.

திருமணத்தின் இரு குடும்பத்தாரும்,  முந்தைய நாள் மாலை போல் மண்டபத்திற்கு வந்து இருந்தனர். ரிசப்ஷன் மாப்பிள்ளையின் சொந்த ஊரான கோயம்புத்தூரில் வைக்க முடிவு செய்து இருந்ததால், சென்னையில் திருமண ஏற்பாடுகள் மட்டும் நடந்தது.

மணப்பெண்னுக்கே உரிய உணர்வுகளுடன், ரஞ்சனி அவள் அறையில் தோழிகளுடன் இருந்தாள்.
கல்யாண சுந்தரமும், அவரது மகன்கள் மற்றும் மருமகளுடன் அன்று மாலையே திருமண மண்டபத்திற்கு வந்து இருந்தார்.

மணமகன் ஷங்கர் அவனின் அறையில், நண்பர்கள் கூட்டத்தோடு இருந்தான். ஷங்கர் புகழ்பெற்ற கல்லூரியில், பேராசிரியறாக பணி புரிகிறான். ஆனால் அவன் செய்யும் வேலை ஆசிரியர் என்ற உன்னதமான பணிக்கே அசிங்கம்.

மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு, அவர்களுக்கு போதை பொருளை யாருக்கும் தெரியாமல் விநியோகம் செய்கிறான்.. இதில் பெண் பிள்ளைகளும் அடக்கம்.

பரமானந்தம் பெண்ணை கட்டி கொடுக்கும் மாப்பிளையை பற்றி விசாரிக்கும் பொழுது இவை எல்லாம் அவருக்கு எப்படி தெரியாமல் போனதோ.. அவரையும் குறை கூறுவதற்கு இல்லை. இவனின் இந்த ஒழுக்க கேடானா செயல் இதுவரை வெளிவந்தது இல்லை.

ஆனால் இவன் தான் ரஞ்சனிக்கு பார்திருக்கும் மாப்பிள்ளை என்று அறிந்தவுடன், சூர்யா அவனை பற்றி விசாரிக்க துவங்கினான். அவ்வளவு சீக்கரம் அவன் காதலை தூக்கி கொடுத்திட மாட்டானே.

மேலோட்டமாக அவனுக்கு கிடைத்த தகவல், அவனின் பெயர் ஊர், பழக்க வழக்கம் அவ்வளவு தான் பெரிதாக குறை காண எதுவும் இல்லை..

ஹய்யோ எதலையும் சிக்க மாற்றானே என்று புலம்பியவன், அவனின் போலீஸ் நண்பனின் மூலம் அவன் எண்ணை ட்ராக் செய்ய கூறினான்.

அவன் நினைத்தது என்னவென்றால்.. ஏதாவது எக்ஸ் லவர், ஒன் நைட் ஸ்டாண்ட் அது போல் ஏதாவது சிக்கும் அதை வைத்து இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று தான் அவன் எண்ணை ட்ராக் செய்ய கூறினான்..

ஆனால், இப்படி ஒரு விடயம் சிக்கும் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை.. நண்பனின் மூலம் அனைத்தையும் அறிந்தவனுக்கு, பரமானந்தம் மேல் அவ்வளவு கோவம் வந்தது என்ன விசாரிச்சாரு இவரு என்று தான் கடிந்து கொள்ள தோன்றியது.

ஆனால் இவன் இந்த விடயத்தை  ரஞ்சனி திருமணத்தின் இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிந்து கொண்டான். ஆனால் அவன் அதை அப்போது யாரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்த விரும்பவில்லை.. காரணம் ரஞ்சனி தான். இந்த திருமனம் நின்றாலும் அவள் தான் சூர்யாவை திருமனம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டாளே, அதனால் திருமண ஏற்பாடுகள் எப்போதும் போல் நடக்கட்டும்.. திருமணத்திற்கு முந்தைய நாள் அந்த கயவனின் முகத்திரையை கிழித்து போலீஸ்ஸில் ஒப்படைக்கலாம்..

பரமு மாமா, சுசிலா அத்தை ரஞ்சனியை அப்படியே விட்டுட மாட்டார்கள். கண்டிப்பா எனக்கு தான் ரஞ்சனியை திருமனம் செய்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்பினான்.. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவ என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலனா அப்போ இருக்கு அவளுக்கு என்று மனதில் தோன்றிய சினத்தோடு பல திட்டங்களையும் செயல் படுத்த நினைத்து இருந்தான்.

திருமண ஏற்பாடுகள் நடப்பதால், இப்போது போதை பொருள் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி இருந்தான் ஷங்கர்.

அந்த ஷங்கர இப்போவே கைது பண்ணலாம் என்று சூர்யாவின் போலீஸ் நண்பன் கூற.. எனக்கு திருமனம் நின்று, ரஞ்சனியை கரம் பிடித்தால் போதும்.. திருமனம் நிற்பதற்கு எனக்கு இந்த ஆதாரமே போதும், மேற்கொண்டு ஏதேனும் ஆதாரம் தேவைப்பட்டால் நீயே உன் காவல் துறை உதவியுடன் கண்டுபிடித்து கொள் என்று அவனின் போலீஸ் நண்பனிடம் கூறிவிட்டான்.

அந்த இருவது நாளும் ஷங்கர் அவனுக்கே தெரியாமல் அவன் போலீஸ் கண்கானிப்பில் தான் இருந்தான்.

மண்டபத்திற்கு போகும் முன், வீட்டில் உள்ள அனைவரையும், கூடத்தில் ஒன்று கூட வைத்தான் சூர்யா. அவன் தாய் உட்பட.. விஷ்வாவிடம் அனைத்தையும் முன்பே கூறியிருந்ததால் எதற்கு இந்த கூட்டம் என்பதை அறிந்து இருந்தான். இருந்தும் அவனே அனைத்தையும் கூற பொறுமை காத்தான்.

சூர்யா, விஷயத்தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் போட்டு உடைக்க.. அனைவருக்கும் அதிர்ச்சி என்றாலும், ரஞ்சனியின் வாழ்வு முன்பே காப்பாற்ற படுவதை நினைத்து சிறு நிம்மதியும் தோன்றியது.. அவர்கள் நிம்மதி மூச்சு விடுவதற்குள் மகேஷ்வரி அவரின் வாயை திறந்தார்.

சூர்யா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டன், ஏற்கனவே உன் அண்ணனும் உன் அப்பாவும் சேர்ந்து ஒரு விளங்காதவள இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க இதல இன்னொருத்தி வேறயா? என்று மகேஷ்வரி ஆத்திரபட..

அம்மா.. என்று கத்தியிருந்தான் விஷ்வா, அவன் அடுத்து பேசுவதற்குள் குழலி அவன் கையை பிடித்து அமைதி படுத்த முயன்றால்.. அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னால், வேண்டாம் ஷிவா.. வீட்ல ஒரு நல்லது நடக்கும் போது இந்த மாதிரி சண்டை வேண்டாம் என்றால்..

விஷ்வா அவள் பேசுவதை காதில் வாங்காமல், உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லிட்டன் என் பொண்டாட்டிய பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..

நீங்க முதல்ல ஒழுங்கா இருங்க, அதுக்கு அப்பறம் அடுத்த வீட்டு பொண்ண குறை சொல்லுங்க என்றான் விஷ்வா..

நல்லா மயக்கி வச்சு இருக்கா என்று உதட்டளவில் முனகினாள் மகேஷ்வரி. விஷ்வா அதற்கும் பதில் கொடுக்க வர, குழலி அவன் கையை அழுத்தமாக பற்றினாள். இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று.

இங்க பாரு நான் உன்கிட்ட பேசல, என் சின்ன மகன்கிட்ட பேசுறன், அவன் என் பேச்சை கேட்பான் என்றவர்.

சூர்யா அந்த பொண்ணு உனக்கு வேண்டாம் டா.. அம்மா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்குறன் என்றார்..

ப்ளீஸ் மா, புரிஞ்சிகோங்க நான் ரஞ்சனிய ரெண்டு வருஷமா லவ் பண்றன்.. என்னால அவள யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுமா..

உங்க முதல் பையன் கல்யாணத்தை தான் உங்களால பார்க்க முடியல, என்னோட கல்யாணத்தை நீங்க பார்க்கணும்மா, உங்களுக்கு எப்படின்னு தெரியல ஆனா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், என் கல்யாணத்துக்கு வந்து எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்கமா.. ரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு.. கண்டிப்பா உங்களுக்கு அவள பிடிக்கும் என்றான்.

மகன் இவ்வளவு கெஞ்சிய போதும், தாய் அவளுக்கு மனம் இறங்கவில்லை.. முகத்தை திருப்பி கொண்டு தான் நின்றார்.

அம்மா என்று மீண்டும் சூர்யா பேசவர, அவனின் பேச்சு அவருக்கு எரிச்சலாக தான் இருந்தது.. பொறுத்து பார்த்த சுந்தரம் சூர்யா, மண்டபத்துக்கு போக நேரமாகுது வரியா போலாமா சூர்யா என்றார் அழுத்தமான குரலில்..

கணவனை முறைத்த மகேஷ்வரி, இப்படி தான் பசங்கள அவங்க இஷ்டத்துக்கு விட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி என்ன அவங்களுக்கு வில்லியா ஆகிட்டீங்க.. ஒருத்தன் என்ன பார்த்தாலே விரோதிய பார்க்குறா மாதிரி பாக்குறான்.. இவன் ஒருத்தன் தான் என்மேல கொஞ்சமாச்சும் பாசமா இருக்கான்.. கல்யாணம் ஆனா இவனும் அவன் அண்ணன் மாதிரி தான் மாறா போறான், அது வரைக்கும் என்மேல பாசமா இருந்துட்டு போறான்.. அது பொறுக்கலயா உங்களுக்கு என்று மூக்கை உறிஞ்சினார்..

பல வாதங்களுக்கு பின் சூர்யா தான் எப்படியோ பேசி அவன் அம்மாவை திருமணத்திற்கு வர சம்மதிக்க வைத்தான்.

அனைவரும் மண்டபத்திற்கு வந்து இறங்கினர்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

38. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+
18+ episode, பிடிக்காதவர்கள் கடந்து விடவும்..

*****

சூர்யா திட்டமிட்டது போல், சரியான நேரத்திற்கு காவல் அதிகாரிகள் மண்டபத்தினுள் நுழைந்தனர்.. நாளை தான் திருமனம் என்பதால் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர்.. காக்கி உடையில் வந்த அதிகாரிகளை பார்த்த இரு வீட்டாரின் பெற்றோர்களும்  முதலில் அதிர்ந்து தான் போயினர்..

அதற்குள் ஷங்கரை ஒரு காவல் அதிகாரி இழுத்து கொண்டு வர, அவன் அவர் பிடியில் திமிறி கொண்டு இருந்தான்..

சுந்தரம் நண்பனிற்கு துணையாக அவர் அருகில் சென்று, அவர் பார்த்து இருக்கும் மாப்பிள்ளையின் உண்மை முகத்தை பற்றி கூறினார்.. அதே நேரம் காவல் அதிகாரிகளும் உண்மையை கூற, உத்தமனை பெற்ற பெற்றோர்கள் அதிர்ந்து தான் போயினர்..

ரஞ்சனிக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.. அவளுக்கு இதை எப்படி எடுத்து கொள்வது என்றே தெரியவில்லை..

வந்த அதிகாரிகள் வேறு எந்த விளக்கமும் கொடுக்காமல், ஷங்கரை ஜீப்பில் அழைத்து சென்றனர்.. இனி இந்த திருமனம் நடக்காது என்று பரமானந்தம் உறுதியாக கூறிவிட்டார்.. அதன் பின் மாப்பிள்ளையின் சொந்தம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய தொடங்கினர்..

சுசிலா நடந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.. அதுவரை அதிர்ச்சில் இருந்த ரஞ்சனி அவள் அம்மாவின் நிலை கண்டு பதறிப் போனால் .. அம்மா அம்மா என்று அழுது கொண்டே கன்னத்தை தட்டினால். விஷ்வாவும் சூர்யாவும் நிலமையை கையில் எடுத்து கொண்டனர். வேகமாக சுசிலாவை மருத்துவமனை கொண்டு சென்றனர்.. மகேஷ்வரியை தவிர அனைவரும் மருத்துவமனை சென்றனர்..

சுசிலாவை உள்ளே மருத்துவர்கள் பரிசோதித்து கொண்டு இருந்தனர்.. வெளியில் அனைவரும் பதட்டமாக  இருந்தனர்.. ரஞ்சனி தந்தையின்  தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்..

சூர்யாவிற்க்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.. நாம் முன்பே இதைப்பற்றி இவர்களிடம் கூறி இருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

மருத்துவர் வெளியே வர, சூர்யா அவரிடம் சென்றான். மருத்துவர் பயப்படும் படி ஒன்றும் இல்லை  bp அதிகமானதால் வந்த மயக்கம் தான்  என்று கூறினார்.. அம்மாவை போய் பார்க்கலாமா டாக்டர் என்றால் ரஞ்சனி, மயக்கம் தெளிஞ்சிட்டாங்க போய் அமைதியா பார்த்துட்டு வாங்க, அப்பறம் அவங்கள ஸ்ட்ரெஸ் இல்லாம பார்த்துக்கோங்க, என்று பொதுவான அறிவுரைகளை கூறி மருத்துவர் அங்கிருந்து சென்றார்..

அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு ரஞ்சனி உள்ளே சென்றாள் .. மற்றவர்களும் கூட அவள் பின்னே சென்றனர். மகளை இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தார் சுசிலா.. உனக்கு நாங்க சரியா விசாரிக்காமல் இப்படிப்பட்ட ஒரு பையன பார்த்துட்டோமே ரஞ்சி என்று மகளை பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் அழுதார்.

அம்மா அழாதீங்க ப்ளீஸ், அதான் தப்பா எதுவும் நடக்கலையே , கல்யாணம் நின்னுடுச்சே. அதை நினச்சு சந்தோஷபடுங்கமா என்றால்.
நான் முழுசா சந்தோஷப்படனும்னா நீ சூர்யாவை அதே முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணிக்கனும் ரஞ்சி உன் கல்யாணத்துல தான் என்னோட முழு சந்தோஷமும் இருக்கு.. அம்மாக்காக இத செய்வியா  என்றார் சோர்ந்த முகத்தோடு..

சூர்யாவே இதை எதிர்பார்க்கவில்லை.. சுசிலா அத்தை இந்த நிலையில் இருக்கும்போது நான் எப்படி ரஞ்சனியை திருமனம் செய்து கொள்ள கேட்பது என்று யோசித்து கொண்டு இருந்தான்.. அவன் மனம் மகிழ்ச்சியுற்றாலும், இப்போது ரஞ்சனியின் பதிலுக்காக சுசிலாவை போல் அவனும் எதிர்பார்த்து நின்றான்..

ரஞ்சனி இதை முன்பே எதிர்பார்த்து இருந்தால் போலும் அவள் முகத்தில் அப்படி ஒன்றும் திகைப்பில்லை..

அவள் பதில் சொல்லவும் இல்லை தடுமாறி நின்றாள்.. சுசீலா மகளின் கையில் அழுத்தம் கொடுத்தார்..

சரிம்மா உங்களுக்கு அது தான் சந்தோஷம்னா நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்குறன்.

மகளின் பதிலில், பாதி நோய் தீர்ந்தது போல் உணர்ந்தார் சுசிலா.. இதற்குமேல் என்ன வேண்டும்.. அடுத்த 2 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சுசிலா.

திருமண வேலைகள் படு தீவிரமாக நடுந்தது.. சூர்யா முன்பே தாலி வாங்கி இருந்ததால் அதை தந்தையிடன் கொடுத்து பெண் வீட்டாரிடம் கொடுக்க சொன்னான்.

விடிந்தால் திருமனம் என்ற நிலையில் ரஞ்சனி மட்டும் அவள் அறையில் உறக்கம் வராமல் அமர்ந்து  இருந்தால்.. அன்னைக்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டால்  தான், ஆனால் இப்போது யோசித்து கொண்டிருக்கிறாள், தன்னால் அந்த குடும்பத்தில் மகேஷ்வரியை சகித்து கொண்டு வாழ முடியுமா என்று.. ஏதேதோ எண்ணங்களில் சுழன்றவள் தன்னையும் மீறி உறங்கிப் போனால்.

நல் முகூர்த்தத்தில், சூர்யா மற்றும் ரஞ்சனியின் திருமனம் அழகாக நடந்து முடிந்தது.

அனைத்தையும் நினைத்து பார்த்த ரஞ்சனிக்கு அப்போது தான் தன்னை மலை பாம்பு போல், அவனுள் சுழற்றி கொண்டு உறங்கும் சூர்யாவின் நினைவு வந்தது.. அவன் முகத்தை பார்த்தாள்.. தன்னை இக்கட்டில் நிற்க வைத்து திருமனம் செய்து கொண்டது அவளுக்கு நினைவு வர, அவன் பிடியில் இருக்கவே மனம் கசந்தது. முயன்று அவன் கைவளைவுக்குள் இருந்து வெளியே வந்தால். அவள் கதக்கதப்பு இல்லாததை அவள் விலகிய சிறு கனத்தில் உணர்ந்தவன் அவள் அருகில் ஊர்ந்து சென்று மீண்டும் அவனுக்குள் அவளை புதைத்து கொண்டான்.

விஷ்வா ❤️ குழலி..

அறைக்கு வந்த குழலி, விஷ்வாவின் முகத்தை பார்க்க தயங்கி கொண்டே அந்த அறை முழுவதும் சுற்றி வந்தாள்.. அவள் கொடுத்த ஒற்றை முத்தத்தில் பித்தாகியவன், அவளின் அவஸ்த்தையை தான் ரசித்து கொண்டு இருந்தான். பூரணி பாப்பா இன்று பகல் பொழுது தூங்காமல் இருந்ததால், இப்போது முரட்டு தூக்கத்தில் இருக்கிறாள். இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவள் குழந்தையின் அருகில் சென்று படுத்து கொண்டு போர்வையை தலை முதல் கால்வரை போர்த்தி கொண்டால்..

அதுவரை அவளையே பார்த்து கொண்டிருந்தவன், இறுதியாக அவள் செய்ததை பார்த்து அட்டகாசமாக சிரித்தான்.

போர்வைக்குள் இருந்த குழலி, அச்சோ என்று கண்களை இறுக்கி மூடிக்கொண்டு கைகளால் முகத்தை மறைத்து கொண்டாள்.

அதற்குள் விஷ்வா, அவளின் நிலை அறியாமல் அவனின் உஷ்ண மூச்சை குழலி கழுத்தில் படுமாறு பின்னிருந்து அவளை இறுக அனைத்து கொண்டான்.

அனைத்தவனின் கைகள் அவள் உடலில் எல்லை மீற, பெண்ணவளால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளை வாகாக தன் பக்கம் திருப்பியவன், போர்வையை தூக்கி எரிந்தான் . அவள் முகத்தை பார்க்க, பாவையவள் உணர்வு குவியலாய் இருந்தால்.

குழலி உன்ன எடுத்துக்கட்டுமா டி என்று மனைவியின் சம்மதம் வேண்டி நிற்க, விழி திறந்தவள் அவனை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டு அவள் சம்மதத்தை தெரிவித்தால்.

இனி என்ன வேண்டும், பூவினும் மென்மையாக அவளை கையாண்டான்.. சிறு பெண்ணல்லவா, பயந்து விட கூடாது என்பதால்..

நெற்றியில் தொடங்கிய முத்தம் இதழில் இளைப்பாரி கழுத்தினுள் தஞ்சமடைந்து நின்றது.

அவன் செயல்களை ஊக்குவிப்பது போல் அவனின் கேசத்தில் கை நுழைத்து அவள் உணர்வுகளை வெளிப்படுத்தினால்.

எப்போது ஆடை துறந்தனர் என்று இருவரும் அறியார்.

பாப்பாக்கு வேணும் என்ற அவளின் வார்த்தைகள் யாவும் காற்றில் பறந்தன.

முத்தமிட்டு கொண்டே கீழே வந்தவனின் கண்கள் விரிந்தது. பெண்ணவளின் பேர் அதிசயத்தை கண்டு.. அந்த விடிவெள்ளி இரவு வெளிச்சத்தில் எச்சில் ஊற ரசித்து கொண்டு இருந்தான் அவள் அழகை.

அவன் பார்வையில், ஷிவா ப்ளீஸ் அப்படி பார்க்காதீங்க என்றால்.. பார்த்துட்டு மட்டும் இருக்காதீங்கனு சொல்றியா என்றவனின் கேள்விக்கு அவள் பதில் கூறும் முன்..

அவன் செய்த செயலில், அவளிடம் இருந்து அதிக படியான சத்தம் வந்தது. தலையை தூக்கி அவளை பார்த்தவன் பாப்பா தூங்குறா கத்தாத டி என்றான் உறுமளாக..

என்ன வேலை பாக்குறீங்க நீங்க என்றவளின் வார்த்தையில் கிஞ்சத்திற்கும் கோவம் இல்லை.. செல்ல சிணுங்களும் மோகம் நிறைந்த சிரிப்பும் தான் இருந்தது..

அவள் உணர்வுகளின் பிடியில் துள்ளி துடிக்க, விஷ்வா அவளின் மேகலைகளில் அழுத்தத்தை கூட்டினான்.. அவள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அவனின் தோள் பட்டையில் தான் அவளின் நக கீரல்கள் அதிகமாக இருந்தது.

அவளை இறுதியாக துடித்து வெடிக்க வைத்தவன் எதையும் மிச்சம் வைக்காமல் உதட்டை துடைத்து கொண்டு மேலே வந்தான்..

அவள் அந்த கிறக்க நிலையிலும் அவனிடம் மூச்சு வாங்கி கொண்டே வினவினால். ஏன் ஷிவா இப்படி பண்ணீங்க என்று??

ஹ்ம்ம் நீயும் எனக்கு பண்ணணும்ல என்று ஒற்றை கண் அடித்து அவள் உதட்டை வருடிவிட.. ஷிவா என்று சிணுங்கி அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.. நோ ஷிவா எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று அவள் மறுக்க.. அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அவளை வற்புறுத்தவில்லை..

சரி விடு, என்றவன் அவளை கட்டிக்கொண்டு மேலும் பல வித்தைகளை அவளிடம் நடத்தினான் வித்தகனாக..

அவன் செய்யும், செயல்களில் அவன் மீது இன்னும் காதல் கூடி போனது குழலிக்கு. அவளை மகாராணியாக உணர வைத்த தருணங்கள் அவையெல்லாம்..

இறுதி கட்டத்திற்கு செல்லும் நேரத்தில், அவளுள் புக முயன்றும் முடியாமல் போனது.. யோசனையாக நெற்றி சுருக்கினான். பின் எதை பற்றியும் யோசிக்காமல்.. மெது மெதுவாக அவளை ஆட்கொண்டான்..

வலிக்குதுஉஉஉஉ.. என்றவளின் வார்த்தைகள் அவனின் தொண்டை குழிக்குள்  இறங்கியது. ஒன்னும் இல்ல அவ்ளோதான் என்று அவளுக்கு சமாதான வார்த்தைகளை கூறி, அவளின் தலையை கோதி கொடுத்து கூடலிலும் தாயாக மாறி பொற் குழலியை தாங்கினான், விஷ்வ கர்ணன்.

அவளோடு சரசமாடி முடித்தவன், அவள் மேல் விழாமல் அவளை அள்ளி அவன்மேல் போட்டு கொண்டு மூச்சு வாங்கினான்..

ரொம்ப வலிச்சுதா என்றான் இறங்கிய குரலில், ஹ்ம்ம் ஸ்டார்டிங்ல வலிச்சுது. அதுக்கு அப்பறம் என்றான்? குறும்பாக.. அந்த ஃபீல் எனக்கு சொல்ல தெரியல ஷிவா. பறக்குறா மாதிரி இருந்துச்சு. இப்போ தான்  நான் என்ன முழுமையா உணர்கிறேன் என்றால். கண்கலங்க.

ஷிவா நான் ஒன்னு சொன்னா நீங்க நம்புவீங்களானு தெரில, ஆனா சொல்லணும்.. சிறு இடைவெளிக்கு பின், "எனக்கு இது தான் முதல் முறை" என்றால் தழுதழுத்த குரலில்..

அவளை மேலும் தன்னோடு புதைத்து கொண்டவன், தெரியும் டி.. எனக்கு ஃபீல் ஆச்சு என்றான் சாதாரணமாக. எதையும் திங்க் பண்ணாத குழலி. அவளுக்கு என்ன சமாதானம் கூறியும் அவள் கண் கலங்குவதை தடுக்க முடியவில்லை..

அவன் கீழே தூக்கி போட்ட அவனது ட்ராக் பேண்டை எடுத்து அணிந்து கொண்டவன், அவளை போர்வையோடு சுருட்டி கொண்டு பால்கனி அழைத்து சென்றான். அங்கே உள்ள சோஃபாவில் அவன் அமர்ந்து கொண்டு, அவளை தன் மேல் அமர்த்தி கொண்டான்..

என்னாச்சு என் கண்ணம்மாக்கு? ஏன் இப்போ கண்கலங்குறாங்க என்றான் குழந்தையிடன் பேசுவது போல்.. எனக்கு உங்ககிட்ட என்னோட கடந்த கால வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கணும் என்றால் சிறு குரலில்.

மென்மையாக சிரித்தவன், எனக்கு உன்னோட பாஸ்ட்ட தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்லடி, என்னோட ப்ரெசன்ட்லயும் ஃபியுச்சர்லயும் மட்டும் நீ என்கூட இருந்தா போதும் என்றான். அப்போதும் அவள் எனக்கு உங்ககிட்ட சொல்லணும் ஷிவா என்றால்.

அவள் மனம் புரிந்து கொண்டான், அவள் மனதில் அழுத்தி கொண்டிருக்கும் அவள் கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்டாள் தான் அவள் மனம் அமைதி அடையும் என்பதை புரிந்து கொண்டவன் அவளை தன் வெற்று மார்போடு சாய்த்து கொண்டு, அவள் வாழ்க்கையில் நடந்ததை கேட்க துவங்கினான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

39. கண்கள் நிறைந்த ஓவியமே!!
பதினேழு வயதின் முடிவில் இருந்தால் பொற்குழலி.. அந்த வயதிற்கே உரிதான குழந்தை முகமும் குண்டு கன்னமும், அடர்ந்த கூந்தளை இரட்டை ஜடையிட்டு, மல்லிகை மலரை இருபுறமும் சூடி, பாவாடை சட்டையில் வளம் வரும் நாட்கள் அவை.. கொஞ்சமும் குழந்தை முகமும் குழந்தை மனமும் மாறாது இருந்தால்.

குழலி இப்போது இருப்பதை விட, அவளின் பருவ வயதில் பேரழகியாக இருந்தாள். அந்த நீள வழிகளுக்கு அஞ்சனம் தீட்டாமலே, ஆளை மயக்கும் சக்தி படைத்தவை.

திங்கள் தோறும், ஈசனை வழிப்பட கோவிலுக்கு செல்வாள். திக்கற்றோருக்கு தெய்வம் தான் துணை என்பது போல் அவளுக்கும் அவளது அன்னைக்கும் அந்த ஈசனே துணை..

உலகம் அறியா பிள்ளையை நினைத்து எப்போதுமே முத்தரசியின் மனதில் ஒரு கலக்கம் உண்டாகும். சூது வாது தெரியாத இவளை எப்படி கரை சேர்ப்பது என்று.

அன்று பிரதோஷ காலம் என்பதால், முத்தரசி மகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு வந்தாள். கூட்டம் சற்று கலைந்ததும் மகளை அழைத்து கொண்டு இறைவனை கணக்குளிர கண்டு, மனமுருகி வேண்டி வந்தாள் முத்தரசி.

குழலி சிறு பெண்ணிற்கே உண்டான குணத்துடன், அன்னையிடம் செல்லம்  கொஞ்சி பேசி கொண்டிருந்தாள். அவள் இரட்டை பின்னலில் ஒரு புறம் மட்டும் மல்லிகை பூவை சரமாக சரிய விட்டு இருந்தாள். அந்த பச்சையும், அரக்கு நிறமும் கலந்த பாவாடை சட்டை குழலியை தேவலோக கன்னியாக காட்டியது அந்த ஒருவனுக்கு.

அந்த ஒருவன் கார்த்திக், தாய் சுமதியுடன் வந்து இருந்தான், .. 27ன் தொடக்கத்தில் இருப்பவன். இரண்டு வருடமாக அவன் அன்னை அவனுக்கு திருமண வரன் பார்த்து கொண்டிருக்கிறார். ஒரு வரனும் குதிர்ந்து வரவில்லை.. குடும்ப ஜோசியர் ஒருவர் சோமமங்கலம்  சென்று ஈசனை வழிப்பட்டு வர கூறியிருந்தார்.. அதனால் தான் ஊட்டியில் இருந்து இந்த கோவிலுக்கு வருகை தந்தனர் தாயும் மகனும்.

ஊட்டியில் சொந்தமாக தேயிலை தோட்டம் இருக்கிறது. வசதிக்கு எந்த குறையும் இல்லை. ஒற்றை மகன், மிகுந்த செல்லம்.. கணவன் ஒரு விபத்தில் இறந்துவிட, மகனுக்காகவே இன்று வரை வாழ்ந்து வருகிறார் சுமதி. மகன் என்ன கேட்டாலும், இல்லை என்று சொல்லாத உன்னத தாய்..

மகனுக்கு இருக்கும் இரு குறையில் ஒன்றை மட்டும் அறிந்தவர்.. அதிலும் அந்த குறை  திருமனம் செய்து வைத்தாள் சரியாகிவிடும் என்று முழுமையாக நம்பியது தான் குழலியின் வாழ்க்கை மாறியதற்கு காரணம்.

மகனின் ரசனை பார்வை போகும் இடத்தை கண்டவர், அவரும் குழலியின் அழகில் சில கணம் இமைக்க மறந்துதான் நின்றார். எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காத மகன் அந்த பெண்ணை இமைக்க மறந்து பார்ப்பதை கண்டு அப்போதே அவள் தான் என் வீட்டு மருமகள் என்று உறுதி எடுத்து கொண்டார்.

மகன் நிலையை கண்டும் காணாதவருமாக அங்கிருந்து அழைத்து சென்றார். அடுத்த நாள் அவர்கள் வீட்டு வரவேற்பறையில் குழலியை பற்றிய முழு விவரமும் கூறி கொண்டு இருந்தார் தரணி என்ற நபர். அவன் அவர்களின் PA, வருடக்கணக்கில் அவர்களிடம் வேலை செய்பவர். அவர்களின் நம்பிக்கைகுரிய நபர்.

நேற்று மாலையே தரணியிடம் குழலியை பற்றி விசாரிக்க கூறி இருந்தார். அவளுக்கே தெரியாமல் அவளை எடுத்த புகைப்படத்தை அனுப்பி.

முத்தரசியின் வாழ்க்கை தொடங்கி, அவர் அந்த ஊரிற்கு வந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் கூறியிருந்தார் தரணி. கேட்டவருக்கு அவர்கள் வசதியில்லா நிலையை நினைத்து சிறு சுணக்கம் தோன்றினாலும் மகன் அந்த பெண்ணை ரசனையோடு பார்த்தது நினைவு வர, அவருக்கு தோன்றிய சிறு சஞ்சலமும் மறைந்து போனது.

அன்று மாலையே, சோமமங்கலம்  சென்றார் கார்த்திக்கின் அன்னை சுமதி. அந்த விலை உயர்ந்த கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. குழலி முத்தரசி தைத்து கொடுத்த ரவிக்கைகளுக்கு கொக்கி கட்டி கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டின் வெளியே வந்து நிற்கும் காரை கண்டவர்கள் வந்து இருப்பது யார் என்று காண வெளியே வருவதற்குள், சுமதி சிரித்த முகமாக வாசலில் நின்று முத்தரசிக்கு வணக்கம் வைத்தார்.

மரியாதையின் நிமித்தம், பதில் வணக்கம் வைத்த முத்தரசியின் முகத்தில் குழப்பம் மட்டுமே எஞ்சி இருந்தது. அவர் குழப்பத்திற்கு பதிலாக நான் சுமதி, ஊட்டில இருந்து வரன்.. மீதி விஷயங்களை உள்ள போய் உக்கார்ந்து பேசலாமா என்றார்.

என்ன சொல்வது என்று தெரியாமல், சிறு தயக்கத்துடன் உள்ளே அழைத்தார் முத்தரசி. நாற்காலியில் அமர வைத்துவிட்டு, வந்தவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார். வீட்டையே சுற்றி பார்த்து கொண்டு இருந்தார் சுமதி. பின் தண்ணீரை குடித்துவிட்டு அவர் பேச்சை மெதுவாக தொடங்கினார். குழலி தரையில் அமர்ந்து விட்ட வேலையை தொடர்ந்து இருந்தாள்.. அவளை ஒரு கண்ணால் பார்த்து கொண்டே பேசினார்.

என் பேரு சுமதி, எனக்கு கார்த்திக்னு ஒரு பையன்.. என் வீட்டுகாரர் ஒரு விபத்துல தவறிட்டாரு.. அப்போதுல இருந்து என் பையனுக்காக தான் வாழுறன்.. வசதி வாய்ப்புக்கு எந்த குறையும் இல்லை. எஸ்டேட்ல சொந்தமா தேயிலை தோட்டம் இருக்கு. அதுல வர வருமானமே தாராளமா இருக்கும்.

இதெல்லாம் எதற்கு என்னிடம் சொல்ல வேண்டும் என்பது போல் முத்தரசி பார்த்து கொண்டு இருந்தார். அவரின் பார்வையை புரிந்த முத்தரசி பேச்சை தொடர்ந்தார்.

என் பையனுக்கு 27 வயசு இப்போதான் தொடங்கி இருக்கு. பொண்ணு பார்த்துட்டு இருக்கோம் அவன் எந்த பெண் மீதும் பெருசா ஈடுபாடு காட்டல.. ஆனா நேத்து நாங்க உங்க ஊரு கோவிலுக்கு வந்து இருக்கும் போது உங்க பொண்ணை பார்த்தோம். என் பையனுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.. அதான் உங்கள தேடி வந்தன், உங்க பொண்ணு குழலிக்கும் என் பையன் கார்த்திக்கும் கல்யாணம் பேசலாம்னு..

அவர் பேசுவதை கேட்டு கொண்டிருந்த முத்தரசிக்கு சற்று அதிர்ச்சி தான்.. குழலியின் கைகள் கூட செய்து கொண்டிருந்த வேலையை இரு நொடி நிறுத்தியது.

முத்தரசி தான் பதட்டமாக இருந்தார். அவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மகளை பார்த்தார் அவர் பார்க்கும் நேரம் குழலியும் தாயை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

மனசுல என்ன இருந்தாலும் தயங்காம சொல்லுங்க முத்தரசி என்றார் சுமதி, அவர் பெயர் சொல்லி கூப்பிட்டத்தில் புருவம் நெருக்கி பார்த்தார் முத்தரசி.. மென்னகை புரிந்த சுமதி உங்கள பத்தி எல்லாம் விசாரிச்சுட்டு தான் வந்தன் முத்தரசி.. நீங்க இந்த ஊருக்கு வந்ததுல இருந்து, உங்க உழைப்பால இவ்ளோ தூரம் வந்து இருக்கீங்க.. நீங்களும் என்னை போலவே உங்க மகளுக்காகவே வாழ்ந்து இருக்கீங்க.. எல்லாம் தெரியும் என்று கூறி முத்தரசியை சற்று இலகுவாக்கினார்.

பின் முத்தரசி அவர் தயக்கம் விடுத்து பேச தொடங்கினார். இல்ல அவ சின்ன பொண்ணு.. இப்போ அவளுக்கு கல்யாணம் பண்றத பத்தி நான் இன்னும் யோசிக்கல, ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சு வச்சிருக்கன் என்று நாசுக்காக இந்த சம்மந்தத்தை தர்வித்தார்.

அவரின் விருப்பமின்மையை கூறவும், சற்று கோவம் வர தான் செய்தது சுமதிக்கு. இவ்வளவு வசதி வாய்ப்பு படைத்த நான் தேடி வந்து கேட்டும்.. பெண் கொடுக்க மறுக்கிறாளே என்று.. இருந்தும் இப்போது வீரியம் பெரிதல்ல காரியமே பெரிது என்று யோசித்தவர் மீண்டும் நயமாக பேசினார்..

அவர் மகனின் படிப்பை பற்றி பேசினார்.. அவர் மகன் மிகவும் அமைதியான குணம் பூமி ஆதிராமல் நடப்பவன் மென்மையான குணம் படைத்தவன் என்று மகனை வாயார புகழ்ந்து கொண்டிருந்தார்.. பேசி பேசியே முத்தரசியை யோசிக்க வைத்தார். அவர் பேச்சில் முத்தரசியும் சற்று இலகி, இந்த திருமணத்தை பற்றி யோசித்தால்  என்ன என்று தோன்றியது.

பின் சுமதி, நீங்க இப்போவே சம்மதம் சொல்ல வேண்டாம், எங்க ஊருக்கு வாங்க, வந்து வீட்டை பாருங்க அக்கம் பக்கத்துல விசாரிங்க.. அப்பறம் உங்க பொண்ண என் பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க என்று கூறினார் சுமதி.

இதற்குமேல் முத்தரசிக்கும் மறுக்க வாய்ப்பில்லாமல் சரி உங்க ஊரிற்கு வருகிறேன் என்றார்.

ஹ்ம்ம் ரொம்ப சந்தோஷம் முத்தரசி நாளைக்கே நீங்க வீட்டுக்கு வரனும்.. நான் நாளைக்கு வண்டி அனுப்புறன் அதலயே வந்துடுங்க என்று கூறிவிட்டு தரையில் அமர்ந்து அவர்களையே பார்த்து கொண்டிருந்த குழலியின் தலையையும் அன்பாக வருடி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார் சுமதி..

அவர் சென்றது தான் தாமதம்.. குழலி அன்னையிடம் கேள்வி கனைகளை தொடுக்க தொடங்கிவிட்டால். அவளை தான் பெண் கேட்டு வந்து இருக்கிறார்கள் என்பது வரை புரிந்து வைத்து இருந்தாள் குழலி. அவளை பொறுத்த வரை திருமனம் என்றால் பிறந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்க்கு செல்வது. தாயை பிரிய வேண்டும் என்ற எண்ணமே அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று  மறுத்தால் பின் மகளை ஏதேதோ சொல்லி அந்த பேச்சை மாற்றி சமாதானம் செய்து வைத்தார் முத்தரசி.

சொன்னது போல், மறுநாளே வண்டியை அனுப்பி வைத்தார் சுமதி, அவரும் மகளை வீட்டிலேயே இரு அம்மா வரவரைக்கும் எங்கேயும் விளையாட போக வேண்டாம் என்று கூறிவிட்டு ஊட்டி நோக்கி புறப்பட்டார்.

அவர்கள் வீட்டை அடைந்ததும், வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் சுமதி. நல்ல பெரிய வீடு. வீட்டை சுற்றி பார்த்து கொண்டே வந்தார் முத்தரசி.. பின் அறையில் இருக்கும் மகனை அழைத்து நெருங்கிய சொந்தம் என்று அவனுக்கு மட்டும் கூறி முத்தரசியிடம் அறிமுகம் செய்து வைத்தார் சுமதி. கார்த்திக் அன்று குழலியை மட்டும் தான் பார்த்தான் உடன் இருந்த அவள் தாயை கவனிக்கவில்லை.

சுமதி சொன்னது போல், லட்சமாக இருந்தான் கார்த்திக். வணக்கம் ஆண்ட்டி என்று கூறினான் மென்மையிலும் மென்மையாக.. பின் வேலையால் கொண்டு வந்த தேநீரை மட்டும் அருந்தினார் முத்தரசி.. எவ்வளவு கூறியும் மதிய உணவை உண்ண மறுத்துவிட்டார்.

பின் கார்த்திக்கிடம் சிறிது நேரம் பேசினார். கார்த்திக்கின் மென்மையான பேச்சும் மரியாதையான குணமும் அவரை இந்த திருமணத்தை பற்றி யோசிக்க வைத்தது.

பின் சுமதி அவரை அழைத்து கொண்டு வீட்டை சுற்றி காட்டினார். பின் அவர்களின் எஸ்டேட்டிற்கு அழைத்து சென்று அங்கே அவர்களுக்கு சொந்தமான இடத்தை சுற்றி காட்டி பேசி கொண்டு இருந்தார்.

பின் முத்தரசிக்கு தேவையான தனிமை கொடுத்தார். யாரிடமாவது சென்று விசாரிக்கட்டும் என்று.. முத்தரசியும் கிடைத்த தனிமையில் அங்குள்ள வேலையாட்களிடம் சுமதி அவர்களின் குடும்பம் மற்றும் கார்த்திக்கை பற்றி விசாரித்தார். விசாரித்தவரை அனைவரும் தாய் மகன் இருவரையும் புகழ்ந்து தள்ளினர். அவர்கள் கூறுவதில் எந்த பொய்யும் இல்லை, அனைத்தும் உண்மை என்பதை தெரிந்து கொண்டார் முத்தரசி.

பின் அங்கிருந்து மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டனர் முத்தரசியும் சுமதியும்..

சுமதி அவரின் பதிளுக்காக எதிரே இருந்த முத்தரசியை எதிர்பார்போடு பார்க்க.. அவர் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல்  நல்ல வாக்கை கூறியிருந்தார் முத்தரசி.

எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்.. ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வாங்க மிச்சம் விஷயம் பேசலாம் என்றார்.

ரொம்ப சந்தோஷம் முத்து என்றார் உரிமையாக அவர் கைபிடித்து கொண்டு.. இன்னும் ரெண்டு நாள்ல ஒரு முகுர்த்தம் வருது அன்னைக்கே நானும் என் பையனும் சொந்தகாரங்களோடு உங்க வீட்டுக்கு வறோம்.. பொண்ணு பார்த்துட்டு கையோட நிச்சயம் பண்ணிக்கலாம் என்று கூறினார் சுமதி.

இவ்ளோ சீக்கரம் நிச்சயம்மா? நான் என் பொண்ணுக்கு என்று அவர் தயங்க..

முத்து உன் பொண்ணுக்கு உன்னால முடிஞ்சத செய், இது கூட உன் மனதிருப்திகாக தான் சொல்றன்..
குழலி இனிமேல் எங்க வீட்டு மருமக.. அவளுக்கு இன்னொரு அம்மாவா இருந்து எல்லாம் செய்ய வேண்டியது என் கடமை என்றார் சுமதி.. பெற்றவளுக்கு மனம் குளிர்ந்து போனது. தாயை போல் தாங்கும் மாமியார் கிடைத்தால் யாருக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது.

அதன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு, மகனை அழைத்தார் உன் அத்தை புறப்படுறாங்க கார்த்திக் அதான் உன்னை அழைச்சன் என்றார். தாயை வித்யாசமாக பார்த்தான் கார்த்திக்.. இருந்தும் முகத்தில் எதுவும் காட்டி கொள்ளாமல் மென்மையாக சிரித்து முத்தரசியை வழி அனுப்பி வைத்தான்.

முத்தரசி சென்றதும் தான் அன்னையிடம் வினவினான். அம்மா யார் இவங்க நம்ம சொந்தத்துல இவங்கள பார்த்ததே இல்லையே என்று தாயின் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு கேள்வியை எழுப்பி lனான்..

மகனின் கேள்விக்கு, சுமதி அனைத்தையும் கூறி முடிக்க.. அவன் முகத்தில் சிறு அதிர்ச்சி வந்து குடி கொண்டது.. அம்மா யார கேட்டு இந்த கல்யாணம் முடிவு பண்ணீங்க?? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் உடனே இந்த பேச்சை நிறுத்துங்க என்று தாயின் தலையில் பெரிய இடியை இறக்கினான் கார்த்திக்.

 

 

 

 

 

 

 

 

 

 

40. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அன்றைய முகுர்த்த நாளில் குழலி மற்றும் கார்த்திக்கின் நிச்சயதார்த்த விழா சுமதியின் நெருங்கிய சொந்தத்துடனும், முத்தரசி பக்கம் அண்டை வீட்டு நட்புகள் மற்றும் ஊர் பெரியவர்களின் முன்னிலையிலும் நல்ல முறையில் நடந்து முடிந்தது. இரண்டு அன்னைமார்களுக்கும் மனம் நிறைந்து போனது. இன்னும் ஒரு மாதத்தில் திருமனம் என்று பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. மணமாக போகும் இருவரும் பொம்மை போல் தான் நின்று கொண்டு இருந்தனர்.

அன்று கார்த்திக் அன்னையிடம் இந்த திருமணத்தை நிறுத்துமாறு கூறி இருக்கையில்.. சுமதி கொஞ்சம் அதிர்ந்து தான் போனார், பின் மகன் புறம் இருந்து யோசித்து பார்க்க, அவனின் மனநிலை புரிந்தது. இருந்தும் உனக்கு கல்யாணம் ஆனா சரியாகிடும் கார்த்திக் அம்மாவ நம்பு என்றார். அம்மா எனக்கு இன்னும் சரி ஆகல. எனக்கு இன்னும் சில பிரச்சனைகள் இருக்கு ஏன் அத புரிஞ்சிக்க மாற்றிங்க.. எல்லாத்தையும் விட அந்த சின்ன பொண்ணுக்கு என்ன தலையெழுத்து என்ன மாதிரி ஒரு மனநலம் பாதிக்கபட்டவன கல்யாணம் பண்ணிக்கணும்னு என்றான் ஆற்றாமையாக..

கார்த்திக் அப்படி சொல்லாத பா, அன்னைக்கு நீ அந்த பொண்ண கோவில்ல பார்த்த பார்வைய வச்சுதான் உனக்கும் அந்த பொண்ண புடிச்சு இருக்குனு அம்மா இந்த கல்யாணத்தை பேசி முடிச்சன் என்றார்..

விரக்தியாக சிரித்தான் கார்த்திக்.. குட்டி தேவதை மாதிரி இருக்க அந்த பொண்ண எல்லாருக்குமே பிடிக்கும்மா.. ஒரு ரோஜா பூ அழகா இருந்தா நாம ரசிச்சு பார்ப்போமே அது போல தான் நானும் அந்த பொண்ண பார்த்தன்.. நீங்க நினைக்குறா மாதிரி கல்யாணம் பண்ணிக்குற எண்ணத்துல நான் அந்த பொண்ண பார்க்கல மா என்றான், குரலில் உள்ள வலியை அவன் மறைக்க முயன்றும் அவன் தாய் கண்டு கொண்டார்.

கார்த்திக் என்று அவன் அன்னையின் குரலும் கலங்கி தான் வந்தது.. வேண்டாம்மா ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்க வேண்டாம். எனக்கு இருக்க மனநோய் சரி ஆகாது என்றான்.

ஆம் கார்த்திக்கிற்கு இருப்பது மனநோய் தான், தந்தையின் மீது அலாதி அன்பு கொண்ட கார்த்திக் அவனின் ஒன்பது வயதில் தந்தையை இழந்தவுடன் அவன் மனம் அதை ஏற்க மறுத்தது. கணவனின் இழப்பில் இருந்த சுமதியும் அவரின் தூக்கம் தான் பெரிது என இருந்து, மகனை கவனிக்க தவறிவிட்டார்.. அதில் அவன் தனிமையை உணர்ந்து தன்னை ஒரு வட்டதுக்குள் சுருக்கி கொள்ள முயன்றான். அவனிடம் எந்த மாற்றங்களும் பெரிதாக தெரியவில்லை.. நண்பர்களுடன் இருக்கும் போதும், தன்னை சுற்றி ஆட்கள் இருக்கும் போதும் எல்லாரையும் போல இருப்பவன் தனித்து விடும் பொழுது அவனிற்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றும்..

பள்ளி கல்லூரி வரை இயல்பாக இருந்தவன், படித்து முடித்து வேலைக்கு சென்றான்.. சுமதி நம்ம பிசினஸ் பார்த்துக்கோ, எஸ்டேட் பார்த்துக்கோ என்று எவ்வளவு எடுத்து கூறியும் கேட்டான் இல்லை..

அன்னையின் விருப்பத்தையும் மீறி, சென்னையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். பள்ளி கல்லூரியில் கிடைத்த நண்பர்கள் போல் யாரும் அவனுக்கு அங்கு அமையவில்லை.. கூட இருப்பவர்கள் அனைவரும் அவன் முன்னே நன்றாக பேசிவிட்டு, அவன் பின்னே அவனை பற்றி கேலி கிண்டல் செய்வதும்.. அவன் வேலையில் குறை கூறுவதுமாக இருந்தனர்.. இதெல்லாம் சாதாரணமாக அனைவரும் கடந்து வரும் பாதை தான். எங்கு சென்றாலும் இந்த மாதிரியான ஆட்கள் இருக்க தானே செய்கிறார்கள்.

ஆனால் கார்த்திகிற்கு இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது  என்று தெரியவில்லை.. தாழ்வு மனப்பான்மை அவனிடம் குடி கொண்டது. தனிமையில் உழன்றான், சில நேரம் சிறு பிள்ளை போல் அழுவான். இரவில் உறக்கம் வராமல் தவிப்பான். ஆறுதல் அளிக்க ஆள் இல்லாமல் அனைவரிடம் இருந்தும் ஒதுங்க துவங்கினான். தற்கொலை எண்ணங்கள் அவனை ஆட்கொண்டது.

இறுதியாக மனநல மருத்துவரை அணுகினான்.. அவன் பிரச்சனைகளை தெளிவாக விளக்கினான். புரிந்து கொண்டார் மருத்துவர்.. அவனுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.. அனைவரிடமும் இயல்பாக பழக கூறினார். இப்போது தங்கி இருக்கும் இடத்தை பற்றி விசாரித்தார். அவன் குடும்ப பின்னணியை பற்றி தெரிந்து கொண்டதில்.. முடிந்தால் சொந்த ஊருக்கு சென்று வர கூறினார்..

மருத்துவரின் ஆலோசனை படி, ஊட்டிக்கு சென்று இருந்தான் கார்த்திக். மகனை கண்ட சுமதி சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். நாட்கள் அழகாக சென்றது. ஊட்டிக்கு வந்த மகனை திரும்பவும் சென்னை செல்ல அனுமதிக்கவில்லை சுமதி. அவனுக்கும் முதல் போல் சென்னை செல்ல விருப்பம் இல்லை. அதனால் தாயுடனே இருந்து அங்கிருக்கும் அவர்கள் தொழிலை கவனித்து கொண்டான்.

மீண்டும் தனிமையை உணர்ந்தவன், மருத்துவர் சொன்னது போல் அவனின் நண்பர்களுடன் பேச முயன்றான்.. அவன் பள்ளி கல்லூரி தோழர்களை தொடர்பு கொள்ளும் போது, அனைவரும் அவரவர் வேலை மற்றும் குடும்பங்களில் பிஸியாகி இருந்தனர். யாரும் ஆர்வத்துடன் பேச முனையவில்லை. இந்த நிலையில் தான் அவன் அன்னை திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலத்தை துவங்கினார். அப்போது அவனின் வயது 23 தான்.

அவனிற்கு இருக்கும் பிரச்சனையால் அவன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. புகைப்படத்தில் காட்டும் பெண்ணை எல்லாம் வேண்டாம் என்று மறுத்தான். ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த சுமதி என்னவென்று சற்று அழுத்தம் கொடுத்து கேட்க.. அவனுக்கு இருக்கும் மனநோயை பற்றி விளக்கினான்.

இடிந்து தான் போனார் சுமதி.

பின் தன்னை சற்று தேற்றி கொண்டு, கலங்கி இருந்த மகனுக்கு ஆறுதல் அளித்து சென்னையில் மகன் பார்த்த மருத்துவரை காண சென்றார்.

அவரும் கார்த்திக்கின் பிரச்சனையை சற்று தெளிவாக விளக்கினார். மீண்டும் ஊட்டி வந்தனர்.

நாட்கள் செல்ல செல்ல கார்த்திக்கின் நிலை மோசமாகியது.. தற்கொலை எண்ணங்கள் அதிகமாகியது.. இரவில் தூக்கம் வராமல் அவதியுற்றான்.. அதன் விளைவு மயக்கம் தூக்கமின்மை என எப்போதும் உடல் சோர்ந்து காணப்பட்டான்.. சில நேரத்தில் அதித கோவமும் வரும்..

மகனின் உடல்நிலை மோசமாகுவதை உணர்ந்த சுமதி மீண்டும் சென்னையில் அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவனுக்கு இருக்கும் மனநோயயை பற்றி யாரிடமும் மூச்சுவிடவில்லை சுமதி.. மகனின் வாழ்க்கை ஆயிற்றே.. இப்போது இந்த நோயை அறிந்தால், நாளை மகன் குணமானாலும், அவன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகுமே.. மேலும், அவனுக்கு பெண் தர மறுத்துவிட்டாள் என்ன செய்வது என்ற எதிர்கால சிந்தனை தான். அதனால் மகனை சென்னையில் உள்ள மருத்துவ மனைக்கே.. அழைத்து சென்றார்.

அங்கேயே அட்மிட் செய்யப்பட்டான் கார்த்திக்.. முதலில் மாத்திரை கொடுத்து நன்கு உறங்க வைத்தனர்.. ஒருவாரத்திற்கு மேல் கார்த்திக்கால் அங்கு இருக்க முடியவில்லை.. மீண்டும் அன்னையோடு வீடு வந்து சேர்ந்தான். ஏறாத கோவில் இல்லை. அப்படி சென்ற ஒரு கோவிலில் தான் ஒரு சித்தர் அருள் வாக்கு கொடுத்தார்.. உடல் நோய்க்கு தான் மருந்து.. மன நோய்க்கு மருந்து இல்லை. உன் பிணி உன்னை விட்டு விரைவில் விலகும் என்று.

அவர் கொடுத்த நம்பிக்கையிலே வீடு வந்து சேர்ந்தனர்.. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். PA தரணியின் பொறுப்பில் விட்ட வேலையை மீண்டும் எடுத்து செய்ய தொடங்கினார் சுமதி. கார்த்திக்கும் முன்பு போல் அல்லாது அன்னைக்கு அவனால் முடிந்த வேலைகளை செய்தான்.

மகனை தனிமையில் இருந்து வெளிக்கொண்டு வர சுமதி எடுத்த முடிவு தான் கல்யாணம்.. மூன்று வருடங்களாக பெண் தேடுகிறார், ஆனால் கார்த்திக்கிற்கு தான் எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை என்பதை விட அவனுக்கு எந்த பெண்ணின் மீதும் இளமைக்கே உண்டான உணர்வுகள் தோன்றவில்லை.. அதை அவன் பெரிது படுத்திக் கொள்ளவும் இல்லை..

இத்தனை வருடங்களில், எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவனின் பார்வை, அன்று குழலி மீது ரசனையாக படிந்தது.. அதையே மகனின் விருப்பமாக எண்ணிய சுமதி குழலியை தனது வீட்டு மருமகளாக பேசி முடித்துவிட்டார்.

மகன் குழலி மீது விருப்பம் இல்லை என்று எவ்வளவு மன்றாடியும் சுமதி கேட்ப்பதாக இல்லை.. திருமனம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினார்.

*****

குழலியை பற்றி சொல்லவும் வேண்டுமா? அவளுக்கு அனைத்துமே அவள் தாய் முத்தரசி தானே.. அவர் கொஞ்சம் அழுது கண்ணீர் சிந்த காரிகையவள் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால்.

இதோ இன்னும் ஒரு வராத்தில் திருமனம் என்ற நிலையில் தம்பதிகளாக மாற போகும் இருவருக்கும் முகத்தில் கல்யாண கலை சிறிதும் இல்லை.

குழலிக்கு அவள் அன்னையை விட்டு பிரிய போகும் துயரம் என்றால்.. கார்த்திகிற்கு தன்னால் ஒரு சிறுபெண்ணின் வாழ்வு கேள்விக்குறி ஆக போகிறதே என்ற ஆற்றாமை. இதில் அவனின் இயலாமை வெளிப்பட.. மீண்டும் அவனது தாழ்வு மனப்பான்மை தலை தூக்கியது.

நாட்கள் யாருக்கும் பாகுபாடு இன்றி வேகமாக சென்றது. திருமண நாளும் வந்தது.. ஒரே மகனின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு ஆடம்பரமாக செய்தார் சுமதி. திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் குழலிக்கு அமைந்த வாழ்வை நினைத்து கொஞ்சம் பொறாமை தான்..

திருமனம் நல்ல முறையில் நடந்தேறியது.. முறையாக மாப்பிளை வீட்டிற்கு அழைத்து செல்லபட்டாள் குழலி.. அன்னையை பிரிய அவ்வளவு அழுகை வந்தது. அவளுக்கு ஆறுதல் அளிக்க முன்வரவில்லை அவளது கணவன்.

சுமதி தான் சமாதானம் செய்து தங்களுடன் அழைத்து வந்தார். அன்று இரவே முதல் இரவிற்கு தயார் செய்யப்பட்டால் குழலி. ஏன் எதற்கு என்று ஒன்றும் புரியாமல் அவர்கள் செய்த எளிமையான அலங்காரத்திற்கு பொம்மையாக நின்றாள் குழலி.

சுமதி மருமகளிடம் மறைமுகமாக தலையணை மந்திரங்களை கூறினால். குழலிக்கு நேரடியாக சொன்னாலே ஒன்றும் புரியாது.. இதில் அவர் மறைமுகமாக சில தாம்பத்ய ரகசியங்களை கூற.. அனைத்தும் புரிந்தது போல் சரி என்று தலையை ஆட்டி கொண்டாள்..

வேறொன்றும் இல்லை.. எல்லாம் அவள் அன்னை முத்தரசியின் அறிவுரை தான்.. உன் மாமியார் வீட்டில் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாமல் சரி என்று கேட்டு கொள்ள வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன் எடுத்த பாடத்தின் விளைவு.. அன்னை இல்லாமல் தவித்து நின்றவளை சுமதி அரவணைத்து கொண்டார். பின் நல்ல நேரத்தில் அங்குள்ள பெண்களிடம் குழலியை மகனின் அறைக்கு அழைத்து செல்ல கூறினார்.

*****

இளம் சூட்டில் சுண்ட காய்ச்சிய பாலை வெள்ளி செம்பில், எடுத்து கொண்டு உள்ளே சென்றால் குழலி. அவள் உள்ளே வந்ததும் எழுந்து நின்றவன்.. கதவு தாழ் போடாமல் வெறுமென மூடி இருப்பதை கண்டு தாழிட்டு வந்தான். குழலி பால் செம்பை நீட்ட, வாங்கி வைத்தான் குடிக்கவில்லை. குழந்தை முகம் மாறாத குமறியவளை விழி அகலாமல் கண்டான்.

எதுவும் பேச தோன்றவில்லை.. அவளை தோழியாக கூட ஏற்க தோன்றவில்லை. கடமைக்காக சில உரையாடல்கள்.. பின் அவனே தூங்கலாம் என்றான்.. இருவரும் ஒரே கட்டிலில் உறங்கினர்..

கார்த்திக்கிற்கு உறக்கம் வரவில்லை.. குழலி உறங்கும் போதே அவள் உடைகளை லேசாக கலைத்து, குங்கும பொட்டை அலைத்து விட்டு, பூக்களை உதிர்த்து விட்டான்.. விடியும் நேரத்தில் கார்த்திக் உறங்கி இருக்க..  குழலி அப்போது தான் எழுந்தாள்.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவள் குளிப்பதற்காக உடையை தேடினால்.. அவள் பொருட்கள் அனைத்தும் கீழே இருப்பது நினைவுவர.. குழலி கீழே இறங்கி சென்றால். திருமணத்திற்கு வந்த கூட்டம் கொஞ்சம் குறைந்து வெகு சிலரே அங்கு இருந்தனர்.. அவர்கள் குழலியை பார்த்து மென்மையாக கடிந்து கொண்டனர்.. அங்கு வந்த சுமதிக்கு மருமகளின் கோலம் அனைத்தையும் விளக்கியிருக்க, மகனின் வாழ்க்கையை பற்றிய பாரம் குறைந்து போனது.. அவசரமாக கடவுளுக்கு நன்றி உறைத்தவர்.. அங்குள்ள யாரையும் கண்டு கொள்ளாமல்.. மருமகளை பெற்ற பெண்ணை போல் தாங்கினார்.

அடுத்தடுத்து வந்த நாட்களில், மறுவீடு.. கார்த்திக்கின் உறவினர் வீட்டு பக்கம் கல்யாண விருந்து என நாட்கள் சென்றது.. முதல் போல் அல்லாது கார்த்திக் குழலி சிறிது பேச தொடங்கினர்.. அதை நட்ப்பு என்று கூட எடுத்து கொள்ள முடியாது. அனைத்தும் அத்தியாவசிய உறையாடல்கள். திருமனம் முடிந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்து இருந்தது.

அன்று கார்த்திக் குழலியை கருத்தரிப்பு மையத்திற்கு அழைத்து சென்றான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

41. கண்கள் நிறைந்த ஓவியமே!!
திருமனம் முடிந்த இரண்டு மாதத்தில், சுமதி குழலியிடம் குழந்தையை பற்றி பேச தொடங்கினாள்.. குழந்தைலாம் தள்ளி போடாத குழலி. உன் புருஷன் சொன்னாலும் நீ தான் எடுத்து சொல்லி புரியவைக்கணும்..

எனக்கு அப்பறம் என் பையனுக்கு நீயும் அவன் வாரிசும் தான் துணை. அவனை நீ நல்லா பார்த்துக்கணும் அவனை எப்பவும் தனிமையில் விட கூடாது என்று அர்த்தமாக கூறியிருந்தார். அனைத்தும் புரிந்தது போல் சரி சரி என்று தலையட்டினால் குழலி. இவர்கள் பேசிய அனைத்தையும் கார்த்திக் கேட்டு கொண்டு தான் இருந்தான்.

அப்போது தான் அவர்கள் புதிதாக தொடங்கிய தொழிலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பொறுப்பாளர் ஒருவர் சுமதிக்கு அழைத்து தகவல் கூறினார். அதன் காரணமாக உடனே கோயம்புத்தூர் செல்ல வேண்டிய கட்டாயம்.. புதிதாக திருமனம் ஆனா மகனிற்கு பணிச்சுமையை கொடுக்க விரும்பாத சுமதி அவரே கோயம்புத்தூர் பயணப்பட்டார். புதிதாக திருமனம் முடிந்த தம்பதிகளும் தனிமையை தான அதிகம் விரும்புவார்கள் என்று அவர்களுக்காகவும் யோசித்தார்.

இரு தினங்கள் கழிந்த நிலையில், குழலியிடம் அன்னை பேசியதை பற்றி வினவினான்.. அவளும் அவன் கேட்டதை எழுத்து பிழையில்லாமல் கூறினாள். உனக்கு குழந்தை மேல ஆசை இருக்கா என்றான்.. ஹ்ம்ம் எனக்கும் குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும் என்றால் அவன் கேட்கும் நோக்கம் புரியாது. அதோடு பேச்சை முடித்து கொண்டான் கார்த்திக்..

அன்று இரவு குழலியோடு உறவில் ஈடுப்பட முயன்றான் கார்த்திக்.. ஆனால் அவனுக்கு அவள் மீது எந்த ஒரு உணர்ச்சியும் ஏற்படவில்லை. அரைநிர்வாணமாக அவள் எதிரே வந்து நின்று அவளின் ஆடை கலைய முற்பட்டவனை கண்டு அலறி துடித்தால் பெண்ணவள்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. ஏன் இந்த அலறல் என்று.. ஏற்கனவே அவனது உணர்ச்சிகள் ஏழாத நிலையில் குழப்பதிலும் கோவத்திலும் இருந்தவன் இப்போது குழலியின் செய்கை கண்டு வெறிபிடித்தவன் போல் மாறினான்.. கையிற்கு கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். குழலி அந்த அறையை விட்டு வெளியே போக முடியாத நிலையில் சுவற்றோடு ஒடுங்கி போனாள்..

ஒரு கட்டத்தில் அவனே கொஞ்சம் நிதானத்திற்கு வந்து, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெத்தையில் உறங்கி போனான். அடுத்த நாள் அவளிடம் மன்னிப்பு கேட்டான் அவன் இரவு நடந்து கொண்டதிற்கு..

சுமதி குழலிக்கு போனில் அழைக்கும் பொழுது எல்லாம் என்ன செய்கிறாய், என்று கேட்பார்.. அவள் அப்போது என்ன செய்து கொண்டிருப்பாளோ அதை அப்படியே கூறுவாள்.. ஒரு நாளும் கார்த்திக் உடன் இருக்கிறேன், அவருடன் பேசி கொண்டு இருக்கிறேன் என்று கூறியது இல்லை. அதில் முளைத்த சிறு கோவத்துடன் நீ தனியா அவன் தனியா இருக்கவா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சன்.. போ போய் என் மகன் கூட நேரத்தை செலவழி, அவனை புரிஞ்சு நடந்துக்கோ என்பார்.

அவள் அத்தை சொன்னதற்காக கார்த்திக்கிடம் பேச செல்வாள்.. அவன் எதுவும் பேச மாட்டான் இப்போது எல்லாம் அவனின் மனம் நீ ஒரு ஆம்பளையே இல்ல.. நீ ஆண்மை அற்றவன் என்று அவனுக்கு எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்தது..

குழலியிடம் அவர்கள் வாழ்க்கையை பற்றி பேச நினைத்தான். கார்த்திக் குழலியை அன்று மாலை பூங்காவிற்கு அழைத்து சென்றான்.. சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தனர். அவள் பேசுவதை கேட்டான். சொல்ல போனாள் அவள் குழந்தை தனம் மாறாத பேச்சை இப்போது தான் கேட்கிறான்.. அவனுக்கு சிறு சந்தேகம் எட்டி பார்த்தது. அதை உறுதி செய்து கொள்ளவே அந்த கேள்வியை கேட்டான். குழலி உனக்கு குழந்தை பெத்துகிறது எப்படினு தெரியுமா என்றான்..

ஹ்ம்ம் தெரியுமே என்றால்..

எப்படி?

கல்யாணம் ஆனா கொஞ்சம் மாசத்துல குழந்தை வந்துடும் என்று வெள்ளந்தியாக சிரித்தாள்.. அவள் முகத்தில் சிறு நாண பூக்கள் கூட இல்லை..

கார்த்திக்கிற்கு ஒன்று மட்டும் புரிந்தது.. இவள் கணவன் மனைவி உறவை பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்று. அவன் மனசாட்சி மீண்டும் எட்டி பார்த்தது ஹ்ம்ம் உன் குறைய மறைக்க இந்த மாதிரி ஒன்னும் தெரியாத பொண்ணு தான் சரியான ஆளு என்று..

அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.. அடுத்தடுத்த நாட்களில், புதுமண தம்பதிகளிடம் இயல்பாக கேட்கபடும் கேள்வி ஏதாச்சும் விசேஷம் இருக்காம என்று குழலியிடம் அதிகம் கேட்கப்பட்டது. அவள் திருத்திருவென முழிப்பதை கண்டு எதிரில் உள்ளவர்கள் சிரித்து கொண்டே பேச்சை மாற்றி விடுவார்கள்..

கார்த்திக்கிடம் கூட சில நண்பர்கள் மச்சான் ஏதாவது குட் நியூஸ் உண்டா என்று பொதுவாக கேட்பார்கள்.. அவனுக்கு அந்த கேள்வியை எதிர் கொள்ளும் பொழுது, தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.. ஒரு முடிவு எடுத்தவனாக அன்று குழலியை கருத்தரிப்பு மையத்திற்கு அழைத்து சென்றான்.. பணத்தை வாரி இறைத்தான்.. மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்தனர், அனைத்து சோதனைகளும் குழலிக்கு எடுக்கப்பட்டது.. குழலி எதற்கு என்று ஒன்றும் புரியாமல் இருந்தவள் கார்த்திக்கிடம் தனது சந்தேகங்களை கேட்டால்.. கல்யாணம் ஆகிடுச்சுல குழந்தை வேண்டாம் என்றான்..

ஓஹ் இப்படித்தான் கல்யாணம் ஆன எல்லாருக்கும் குழந்தை பிறக்குமா என்றால்.. அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தாலும், ஊரார் அவனை ஆண்மை அற்றவன் என்று சொல்வதற்கு முன்பு இந்த செயலை செய்து முடிக்க நினைத்தான்..

அடுத்த இரு தினங்களில் ivf முறைப்படி குழலிக்கு வேறொரு ஆணின் விந்தன்னுவாள் அவள் வயிற்றில் கரு தங்க வைக்கப்பட்டது. அன்று ஒரு நாள் முழுவதும் அங்கு ஓய்வெடுத்து விட்டு மறுநாள் குழலியை வீட்டிற்கு அழைத்து வந்தான் கார்த்திக்.

வேலை செய்யும் பெண்ணிடம் குழலியை கவனமாக பார்த்துக் கொள்ள கூறினான். நாட்கள் சென்றது, சுமதி வீடு வந்து சேர்ந்து இருந்தார். மருமகளின் முகத்தில் தெரிந்த புது பொலிவு, அவளின் சுறுசுறுப்பு இல்லா மந்த நிலை என அனைத்தையும் குறித்து கொண்டவர், அவளிடம் இறுதியாக வீட்டிற்கு எப்போது தூரம் ஆனாய் என்று கேட்டார் அவளும் சரியான நாளை சொல்லி பயந்து போனாள்.. அத்தை எனக்கு இவ்ளோ நாள் தீட்டு வராம இருந்ததே இல்லை.. இது தான் முதல் முறை பயமா இருக்கு எதாச்சும் பிரச்சனையா என்று அச்சதுடன் கேட்க, மண்டு மண்டு செல்லமாக கடிந்து கொண்டவர் எல்லாம் நல்ல விஷயம் தான் உன் வயித்துல என் பேரன் இருக்கான் என்றால். அவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை..

அவர்கள் பேச்சை கேட்டு கொண்டே வந்த, கார்த்திக் மேலும் பேச்சை வளர்க்க விடாமல் அம்மாவிடம் நலம் விசாரித்து விட்டு, அவனுக்கும் அந்த சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவ மனை அழைத்து சென்றான். எதிர்பார்த்தது போல் குழலி கருத்தரித்து இருந்தாள். கார்த்திக்கிற்கு எந்த மகிழ்ச்சியான உணர்வும் இல்லை.. குழலி மகிழ்ச்சியாக இருந்தாள் ஆனால் அவள் தாய்மையை உணரவில்லை..

அன்னைக்காக இன்னிப்பை வாங்கி கொண்டு, வீடு வந்து சேர்ந்தனர். சுமதியிடம் விஷயத்தை கூற, வயதையும் மறைந்து துள்ளி குதித்தார்.. இப்போது யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தார். முத்தரசியிடம் மட்டும் விஷயம் பகிரபட்டது. மகளுக்கு பிடித்த அனைத்து பலகாரத்தையும் வீட்டிலேயே சமைத்து கொண்டு வந்தார்.. அன்று மாலை வரை அங்கேயே இருந்து மகளுடன் நேரத்தை செலவழித்தார்.. மகளை எங்கள் வீட்டிற்கு கொஞ்சம் நாட்கள் அழைத்து செல்லவா என்று சுமதியிடம் அனுமதி கேட்க, நாசுக்காக மறுத்துவிட்டார். கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தாலும் இப்போது மகள் இன்னொரு வீட்டு மருமகள் என்று புரிந்து கொண்டு அங்கிருந்து சென்றார் முத்தரசி.

கார்த்திக்கின் நிலை மோசமாகியது.. அவன் செய்த தவறை உணர்ந்து இருந்தான். மனம் ஒரு நிலையில் இல்லை.. அவன் இயலாமை, குறை என அனைத்தையும் சுட்டி காட்டியது அவன் மனம். ஒரு முறை தற்கொலை முயற்சியும் செய்ய துணிந்து விட்டான். போன் அழைப்பு வந்து அவனை தடுத்து இருந்தது.

குழலி ஐந்து மாத கருவை சுமந்து கொண்டிருக்கும் போது, சுமதி உற்றார் உறவினர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு வரப்போகும் வாரிசை பற்றி கூறியிருந்தார்..

நாட்கள் சென்றது.. கார்த்திக் ஒரு முடிவு எடுத்தவனாக அவன் செயல்கள், அவன் மனநிலை, குழலியுடன் வாழ முடியாத அவனின் இயலாமை, குழலியின் செயற்கை கருத்தரித்தல் என அனைத்தையும் வீடியோ காணொளியாக தனது போனில் பதிவு செய்து கொண்டான்.

அன்று மாலை குழலியை அழைத்து கொண்டு ஒரு மலை உச்சிக்கு சென்றான் கார்த்திக். எப்போதும் சுற்றுலா பயணிகள் வரும் இடம் தான் அது. அன்றும் அவனை சுற்றி சில சுற்றுல்லா பயணிகள் இருந்தனர்.. குழலியிடம் உண்மை அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்டு அவன் உயிரை துறக்க தான் இங்கு அழைத்து வந்தான்.. அதனால் தன் அன்னைக்கு மட்டும் அவன் சேமித்து வைத்த வீடியோ காணொளியை அனுப்பி வைத்துவிட்டு, அந்த இடத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த குழலியின் கைகளை பிடித்து அவன் முகத்தில் வைத்து மன்னிச்சுடு குழலி, முடிஞ்சா என்ன மன்னிச்சுடு, நான் உனக்கு செஞ்சது பெரிய பாவம்.. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் குழலி. உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்கோ என்று அனைத்தையும் மனதில் தான் கூறி கொண்டு இருந்தான் அந்த பைத்தியக்காரன்.

குழலிக்கு கார்த்திக்கின் செயல்கள் ஒன்றும் புரியவில்லை.. அதே நேரம் எதையும் பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை.. சில சமயங்களில் கார்த்திக் இது போல் வேறுபட்ட மனநிலையில் அவளிடம் நடந்து கொள்வது வழக்கம் என்பதால், அவள்  அப்படியே விட்டு விட்டாள். அவளின் முதிர்ச்சி அவ்வளவு தான்..

கண்களின் சொரிந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் துடைத்து கொண்டு, அங்குள்ள சுற்றுல்லா பயணிகள் அருகில் அவளை அமர வைத்துவிட்டு, அந்த மலையின் விளிம்பை நோக்கி நடந்தான். குழலி மீண்டும் அந்த இடத்தை சுற்றி பார்க்க துவங்கினாள்.. அவளால் தவறாக எதையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை..

எதற்ச்சையாக கார்த்திக் சென்ற இடத்தை திரும்பி பார்த்தாள். அவன் விளிம்பை நோக்கி செல்வது புரிய என்னங்க என்று கத்தி அவனிடம் செல்ல முயன்றால்.. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவள் கத்தியதில் அவள் பார்வை சென்ற இடத்தை திரும்பி பார்க்க அங்கு கார்த்திக் குழலியை பார்த்து கொண்டே கிழே விழுந்து இருந்தான். அவன் பார்வையில் இருந்தது முழுவதும் குற்றவுணர்ச்சியே.. சில நொடிகளில் அனைத்தும் நடந்து முடிந்து இருந்தது. குழலி செய்வது அறியாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்று இருந்தாள்..

அருகில் உள்ளவர்கள் அவள் நிலையை கண்டு, அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தனர்.. நிலமையை கையில் எடுத்த ஒருவர் அவள் போனை வாங்கி சுமதிக்கு அழைத்து தகவல் கூறினார்.

அங்கு அவர் நிலை குழலியை விட மோசமாகியிருந்தது..

கார்த்திக் இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது.. அவன் உடல் இன்னும் கிடைக்கவில்லை..  தீவிரமாக தேடி கொண்டு இருக்கின்றனர் போலீஸ் துறையினர்..

முத்தரசி கேட்ட செய்தியை நம்ப முடியாமல் மகளை காண வந்தார்.. குழலி ஏதோ ஒரு அறையில் மூலையில் சுருண்டு கிடந்தால். அவள் கருவுற்று இருப்பதால் நேரம் தவறாமல் அந்த வீட்டு வேலையாட்கள் அவளை உண்ண வைத்துவிடுவர். மகளின் நிலை கண்ட முத்தரசி மார்பிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அழுதார். அந்த நிலையிலும் குழலி அன்னையை சமாதானம் செய்ய முயன்றால் ஆனால் முடியவில்லை.. பின் ஓரளவு தன்னை தேற்றி கொண்டவர் சுமதியை காண சென்றார். அவர் அறைக்குள் முடங்கி இருந்தார்.

மறுநாள் சுமதிக்கு மகனின் உடல் கிடைத்துவிட்டது என செய்திவர, கதறி கொண்டே மருத்துவமனை சென்றார். பிணங்கள் உள்ள அறைக்கு சென்றார். அது தன் மகன் தான் என்று உறுதி செய்தபின் உடலை கையெழுத்திட்டு வாங்கி கொண்டார்..

இறந்து நான்கு நாட்கள் ஆகியதால் அன்றே அனைத்தும் முடித்து அவனது உடலை இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். குழலிக்கு இந்த இறப்பு எல்லாம் புதிதாகவே இருந்தது..

முத்தரசி இதுவரை மகளை எந்த இறப்பு வீட்டிற்கும் அழைத்து சென்றதில்லை. முதன் முதலில் இந்த இறப்பு வீட்டை பார்க்கிறாள். அதுவும் அவளுக்கு தாலி கட்டிய கணவனின் இழப்பு.. வந்திருக்கும் சில பிரகஸ்வதிகள் குழலியை திருமனம் செய்த நேரம் சரியில்லை, அவள் கரு உண்டான நேரம் சரியில்லை என்று புறணி பேசி கொண்டு இருந்தனர்.

அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தனர் தாய் மகள் இருவரும்..

நாட்கள் வாரங்களாக சென்றது.. முத்தரசி மகளுடன் அந்த வீட்டில் தான் இருந்தார். இனி மகளின் நிலை என்ன என எண்ணும் போதே மூச்சு முட்டியது...

இதற்க்கிடையில், சுமதி மகன் அனுப்பிய காணொளியை கண்டுவிட்டார்.. அதை கண்டவரின் மனநிலை என்ன என்று அவரால் உணர முடியவில்லை.. தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தார்.. அதே நேரம் குழலி மீதும் கோவம் வந்தது. அவள் தன் மகனை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்றும், என் மகனுக்கு சரியான மனைவியாக அவள் நடந்து கொள்ளவில்லை என்றும் நினைத்தார். இப்போது வரை அவள் குழலியிடம் ஒரு ஒதுக்கத்தை காட்டி கொண்டு தான் இருக்கிறார். இந்த காணொளியை கண்டதும் குழலி மீது இன்னும் கோவம் மூண்டது.

கார்த்திக்கின் காரியத்தன்று சிறுபெண் என்றும் பாராமல் குழலிக்கு சம்பிரதாயம் என்ற பெயரில் செய்தவை தான் கொடுமையின் உச்சம்.. முத்தரசி என் மகளுக்கு இதெல்லாம் வேண்டாம் என்று எவ்வளவு கெஞ்சியும் அவள் பேச்சை யாரும் அங்கு கண்டு கொண்டதாக தெரியவில்லை.. அனைவரும் சுமதியின் சொந்தங்கள்.. சுமதியின் தூண்டுதளினால் தான் இந்த அவலங்கள் நடக்கிறது என அறியாமல், முத்தரசி சுமதியிடமே சென்று என் மகளுக்கு நடக்கும் கொடுமைய நிறுத்த சொல்லுங்க சம்மந்தி அவ சின்ன பொண்ணு.. பயந்துடுவா.. உங்க மகன் குழந்தைய சுமக்குறவள இப்படி கஷ்ட்டபடுத்தாதீங்க என்று கெஞ்சியும் சுமதியின் மனம் இறங்கவில்லை..

மெட்டியை கழற்றுகிறேன் என முரட்டு தனமாக பிடித்து இழுத்து அவள் விரலில் ரத்தம் வர வைத்து இருந்தனர்.. வளையலை உடைத்து கையை புண்ணாக்கி.. ஒப்பாரி பாடலை பாடி சிறுபெண்ணனை பயம் கொள்ள வைத்தனர்.. காட்டு விலங்குகளிடம் தனித்து விடப்பட்ட சிறு பிள்ளையாக அன்னையை தேடியது அந்த மழலை முகம் மாறாத பிள்ளை.. ஒரு கட்டத்தில் மயங்கி சரிந்தாள் குழலி.

அதற்குமேல் தாங்க முடியாத முத்தரசி அனைவரையும் தள்ளிவிட்டு மகளை வாரி அனைத்து கொண்டார். அவள் நிலை கண்டு துடித்து போனார். அனைவரையும் சபிக்க தோன்றிய மனதை கடினப்பட்டு அடக்கி கொண்டார்.

சுமதியை பார்த்து கேட்டார்.. என் பொண்ண இந்த நிலமைல நிறுத்த தான் என் வீட்டு படியேறி வந்திங்களா என்றார்.

அந்த ஒரு நிமிடம் சுமதிக்கு அவரை சாட்டையால் அடித்ததை போன்ற உணர்வு. முத்தரசியை அழைத்து கொண்டு ஒரு அறைக்கு சென்றவர் அவரிடம் அந்த காணொளியை காட்டி, தன் மகனின் உடல்நிலையை பற்றி முழுதாக சொல்லி மன்னிப்பு கேட்டார்..

முத்தரசிக்கு நெஞ்சம் பொறுக்கவில்லை.. இருந்தும் அவர் சுமதியை ஒரு வார்த்தை பேசவில்லை.. பிள்ளையயை வாரி கொடுத்துவிட்டு தன்னிடம் மன்னிப்பு வேண்டி நிற்பவரிடம் என்ன பேச முடியும் அவரால்..

என் மகள நான் இங்க இருந்து கூட்டிட்டு போய்டுறன்.. இனிமேல் அவ வாழ்க்கைல தலையிடாதீங்க என்று கூறிவிட்டார். சுமதிக்கும் இது தான் தேவை என்பது போல் அமைதியாக இருந்தார். யாரோ ஒருவனின் குழந்தையை சுமதியால் அவள் வீட்டு வாரிசாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

முத்தரசி சிறிது நேரத்தில் குழலியை அங்கிருந்து அழைத்து சென்றார்.. மகளிடம் எந்த உண்மையையும் கூறவில்லை. மகளின் முகத்தை காணவே குற்ற உணர்ச்சியாக இருந்தது..

நாட்கள் சென்றது.. முத்தரசி மகளை நன்றாகவே பார்த்து கொண்டார். ஆனால் உள்ளுக்குள் மகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மலையளவு துக்கம் உள்ளது.. எந்த இன்பத்தையும் அனுபவிக்காமல் குழலி பெண் மகவை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தால். குழந்தைக்கு பூர்ணிமா என பெயர் சூட்டினால். குழந்தையின்  வரவாள் தாய் மகள் இருவரும் நடந்த துயர சம்பவத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர்..

இதற்க்கிடையில் தான் கணவனின் நண்பர்களை சந்தித்தது.. அவர்கள் கேட்டதின் பொருட்டு குழலி வாழ்க்கையை பற்றி கூறியது அனைத்தும். அவரே எதிர்பார்க்காத ஒன்று சுந்தரம் தன் மகனுக்கு குழலியை திருமனம் செய்து வைக்க கேட்டது தான்.

தன் கடந்த காலத்தை விஷ்வாவிடம் கூறி முடித்தால் குழலி..

 

42. கண்கள் நிறைந்த ஓவியமே!!
தன் கடந்த காலத்தை பற்றி அவளது பார்வையில் அனைத்தையும் கூறினாள் குழலி. கேட்டு கொண்டிருந்த விஷ்வாவிற்கு நெஞ்சம் பொறுக்கவில்லை.. அனைவரின் மீதும் கோவம் வந்தது. அதுவும் சுமதி மற்றும் முத்தரசி மீது அதித கோவம், அதை காட்ட தான் வழியில்லாமல் முஷ்டியை இறுக மூடி தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வர முயல்கிறான். எப்படி ஒரு சின்ன பொண்ணுக்கு இவ்ளோ அநியாயம் செய்ய மனம் வந்தது.. பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற வாசகம் சரிதானோ என்று தோன்றியது.

பின் அவன் உணர்வுகளை கிடப்பில் போட்டுவிட்டு விசும்பி கொண்டு இருந்த குழலியை தேற்ற முயன்றான். அவனின் ஆறுதல் வார்த்தைகள் எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை.. பழைய நினைவுகளில் ஆழ மூழ்கிவிட்டாள்..

இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவன், அவள் கவனத்தை தன் மீது திருப்பும் பொருட்டு, அவள் முகத்தை நிமிர்த்தி கழுத்தை கடித்தான்.. விஷ்வாவிற்கு அவளது இதழ் முத்தம் பிடிக்கும் என்றால், குழலிக்கு அவளின் கழுத்து வளைவில் கடிப்பது நிரம்ப பிடிக்கும்.

விஷ்வா கழுத்தில் கடித்து முத்தமிட்டதில், கூச்சத்தில் அவள் விசும்பல் சுவிட்ச் போட்டார் போல் நின்றது. மீண்டும் அவளை நிமிர்த்தி அழுத விழிகளை துடைத்து விட்டவன், இப்போ நீ விஷ்வ கர்ணனோட பொண்டாட்டி மட்டும் தான் பொற் குழலி..

உனக்கு நடந்தது கல்யாணமே இல்லை.. மைனர் பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அந்த கல்யாணத்த ரெஜிஸ்டர் கூட பண்ண முடியாது. அது சட்டப்படி குற்றம்.

தலை தாழ்ந்து இருந்தவளின் கண்ணீர் முத்துக்கள் அவன் பிடித்து இருந்த கைகளில் விழுந்தது.

என்ன பாருடி என்றான் ஆழ்ந்த குரலில்.. உண்மையில் அந்த குளிர்ந்த இரவில் அவனின் ஆழ்ந்த குரல், குழலிக்கு இருக்கும் நிலை மறந்து அடிவயிற்றில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னங்கள் ரெண்டும் சிவந்து போனது..

விஷ்வா அவள் மாற்றத்தை உணராமல், அழுததாள் முகம் சிவந்துள்ளது என்றே நினைத்தான்.

அவன் முகம் நோக்கியவளை, நெற்றி முட்டியவன் சிறிது நேரம் அவனுக்கு பிடித்த இதழில் இளைப்பாறினான்.. இந்த முறை குழலி அவன் முத்தத்தில் ஒன்றி அவனுக்கு இணையாக ஈடு கொடுத்தாள்.. உள்ளுக்குள் இன்பமாக அதிர்ந்தான் விஷ்வா.

நீண்ட நெடிய முத்தத்திற்கு பின் இருவரும் பிரிந்து இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி கொண்டனர். அமைதியான ஏகாந்த நிலை.. குழலியின் அழுகை முற்றிலும் நின்று இருந்தது.

நீ பழைய நினைவுல இருந்து மீண்டு வரனும் குழலி.. கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்ததா நெனச்சிக்கோ.. உனக்கு அந்த கல்யாணத்துல கிடைச்ச பெரிய பொக்கிஷம் நம்ம பூரணி பாப்பா..

உன்ன நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு குழலி. அந்த கல்யாணம், அதனால நீ அனுபவிச்ச கொடுமைகள்னு எல்லாத்தையும் நீ வெறுத்த.. ஆனா உன் அனுமதி இல்லாம உன்ன ஏமாத்தி உன் மூலமா வந்த குழந்தைய நீ வெறுக்கவே இல்லை.. உன் இடத்துல வேற பொண்ணு இருந்தா பூரணி பாப்பாக்கு இவ்ளோ பாசம் கொட்டி, அரவணைச்சு இருப்பாங்களானு தெரில குழலி..

பெண்களுக்கு தாய்மை உணர்வை கடவுள் இயற்கைலயே குடுத்து இருக்கார் என்று அவன் மனைவியை நினைத்து மெய்சிலிர்த்தான்.. உன்ன மாதிரி இருக்க பெண்களுக்கு நடுவுல எங்க அம்மா மாதிரியும் சில பேர் இருக்க தான் செய்றாங்க என்று தன்னை மீறி கூறியிருந்தான் விஷ்வா..

அப்படி சொல்லும் போதே, அவன் கண்களில் சிறு வலி தோன்றி மறைந்ததை குழலியும் கண்டு கொண்டாள்.. அத்தை சீக்கரம் மாறிடுவாங்க விஷ்வா என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

இனி அவங்க மாறுனா என்ன மாறலனா என்ன குழலி.. நாங்க சின்ன வயசுல ஏங்கும் போது எங்களுக்கு அந்த அன்பும், அரவணைப்பும் எதுவும் கிடைக்கல.. இப்போ ரெண்டு பேரும் தோளுக்கு மேல வளர்ந்து பொண்டாட்டி குடும்பம்னு இருக்கோம் இப்போ எதுக்கு அவங்க பாசம்.. காலம் தாழ்த்தி கிடைக்குற நீதி மட்டும் இல்ல சரியான நேரத்துல கிடைக்காதா அன்பும் கூட அர்த்தமற்றது தான் குழலி..

குழலிக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் திரு திருத்தால். அவள் முழியை பார்த்து சிரித்தவன்.. இன்னும் அவனுள் அவனவளை புதைத்து கொண்டான்.

வெற்று மேனியில் போர்வையை சுற்றி கொண்டு, கழுத்தில் அவன் கட்டிய தாலியும், அவனது செயின்னையும் மட்டும் அணிந்து இருந்தாள்.. காதில் குடி கொண்டிருந்த குடை ஜிமிக்கி சரசமாட தொந்தரவாக இருப்பது போல் உணர்ந்தவன் அவசரமாக கழட்டி வைத்தான்..

கையில் அணிந்து இருந்த தங்க வளையல்களும், காலில் அணிந்திருந்த கொலுசும் பூரணி பாப்பா எழுந்து விட கூடாது என்று கழட்டி வைத்து இருந்தான். அந்த நேரம்.

அவள் கூந்தலில் இருந்து வரும் சீயக்காய் மணத்தை ஆழ்ந்து சுவாசித்து கொண்டே, குழலி நான் ஒன்னு கேக்கவா என்றான்..

கேளுங்க..

உனக்கு கணவன் மனைவி உறவை பத்தி எப்படி தெரிஞ்சிது என்றான்?

அதுவா என்று இழுத்தவள்.. வெட்கத்துடன் கூறினாள்.

அன்னைக்கு நீங்க தமிழ் வாக்கியம் எழுத சொல்லி சொன்னிங்கள.. நான் கூட "மன்னன் சேலையில் புகுந்தான் இன்பம் கண்டான்னு" தப்பா எழுதுனனே என்றால்..

ஹ்ம்ம் ஆமா என்று தலை அசைத்தான் சிரித்து கொண்டே..

நீங்க என்கிட்ட திரும்ப திரும்ப அந்த விஷயத்தை பத்தி அழுத்தி சொல்லும்போது எனக்கு உருத்தலா இருந்துச்சு.. அதான் மறுநாள் தேவி டீச்சர்கிட்ட இதை பத்தி கேட்டன்.. அவங்களும் என்ன வித்யாசமா பார்த்தாங்க.. நீ எப்படி குழந்தை பெத்துகிட்டனு அவங்க சும்மா விளையாட்டா கேட்டாங்க.. நான் அமைதியா இருந்தன்.

அப்பறம் அவங்க என்ன நினைச்சாங்கனு தெரியல.. சயின்ஸ் புக் எடுத்து சில பாடங்கள விளக்கமா சொல்லி குடுத்தாங்க.. எனக்கு பாதி புரிஞ்சும் பாதி புரியாமலும் இருந்துச்சு. அதே நேரம் எனக்குள்ள சில உணர்வுகளும் வந்துச்சு.. அத எப்படி சொல்றதுன்னு தெரில.. அப்பறம் நான் கூகிள் சர்ச் பண்ணன். கெட்ட கெட்ட படம் வீடியோலாம் வந்துச்சு.. ரொம்ப பயந்துட்டன்.. கைல இருந்த போனே கீழ விழுந்துடுச்சி பயத்துல.. அதுக்கு அப்பறம் அந்த மாதிரி எதுவும் சர்ச் பண்ணல.. எப்போ எனக்கு தெரியணுமோ தெரியட்டும்னு விட்டுட்டன்.

அப்பறம் தான் எனக்கு சோதனை காலம் அதிகமா ஆச்சு ஷிவா, நீங்க கிட்ட வரும் போது கிஸ் பண்ணும் போதுலாம் எனக்கு ரொம்ப அவஸ்தையா இருக்கும். அந்த ஃபீலிங்ஸ்ஸ என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியாது. என்று அவள் உணர்வுகளை எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள்.. அவள் அவஸ்தை புரிந்து கொண்டான்..

மேலும், அவள் பேச்சு அவனுக்கு போதையூட்ட, மந்தகாசமாக சிரித்து கொண்டே அவளை இன்னும் இறுக்கி அனைத்தான்.

அவள் காதோரம் குனிந்தவன் இதழ்களால் செவி மடல்களை உரசி கொண்டே கேட்டான்.. குழலி இன்னொரு ரவுண்டு போலாமா டி?? நீ கஷ்ட்டப்பட கூடாதுனு ஃபர்ஸ்ட் ரவுண்டு என்ன கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு ரொம்ப பொறுமையா பண்ணன்.. ஆனா எனக்கு அதல திருப்தியே இல்ல. உன்ன அப்படியே பிச்சு திங்கணும் போல இருக்கு டி என்று நாக்கை சப்பு கொட்டினான்.  அதுவும் இங்க என்று அவன் சென்சார் பகுதியை சுட்டி காட்டி ஏதோ சொல்ல..  குழலிக்கு தான் கூச்சம் பிடிங்கி தின்றது.

ஷிவா என்ன டா இப்படிலாம் பேசுற என்று அவள் சிணுங்கல் கொள்ள, அவள் வெட்கத்தை ரசித்து கொண்டே கூறினான். உன்கிட்ட இப்படி பேச நான் ஏண்டி தயங்கணும்.. பொண்டாட்டி கிட்டலாம் ஒழுக்கத்த கடைபிடிச்சு நான் என்ன போறன்? என்று மீசையை நீவி விட்டு கொண்டே அவளை பார்த்து ஒற்றை புருவத்தை மட்டும் அழகாக ஏற்றி இறக்கினான்..

அந்த மெனரிசத்தில் குழலி மயங்கி தான் போனாள்.. அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க, குழலி அவன் மீசையை பிடித்து தன்னருகே இழுத்து அவன் இதழ்களை கடித்து விட்டால்..

சொல்லுடி பிச்சு திங்கவா என்று மீண்டும் அவன் தாபமாக கேட்க..

இம்முறை குழலி.. நான் உங்களுக்கானவ ஷிவா.. உங்களுக்கு என்ன தோணுதோ பண்ணுங்க என்றால்.. அவன் ஏதோ கூறவர அவள் பிஞ்சு விரல்களால் அவன் இதழை மூடியவள், நீங்க என்ன எப்பவும் கஷ்ட்டப்படுத்த மாட்டிங்க ஷிவா எனக்கு தெரியும் என்றால் கன்னம் சிவந்து..

அதில் கர்வம் கொண்டவன், அவள் விரல்களை எடுத்து விட்டு வாயை இப்படி மூட கூடாது டி என்று கூறி எப்படி வாய் மூட வேண்டும் என்று செய்முறை விளக்கமாய் அவன் உதட்டின் வழியே கற்பித்து கொண்டிருந்தான்..

பின் சிறிது நேரத்தில் அவளை தூக்கி அப்படியே சோஃபா மீது அமரவைத்து விட்டு, உள்ளே சென்றான். திரும்ப வரும் போது மெத்தை போன்று இருக்கும் ஒரு ராஜாயியும் ஒரு தலையணையும் எடுத்து கீழே விரித்தான்..

பால்கனியில் இருந்த பச்சை நிற திரைசீலையை கீழே இறக்கி விட்டான். விஷ்வா செய்வதையே நாணத்தோடு பார்த்து கொண்டிருந்தவளை அப்படியே கைகளில் ஏந்தி கொண்டுவன்..

மெத்தையில் படுக்க வைத்து அவனும் அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் புகுந்து கொண்டான். சொன்னது போல் போர்வைக்குள் அவளை பிச்சு தின்று கொண்டிருந்தான். குழலியின் மென்மையான தேகத்தில் கரைந்து போனான் விஷ்வா. அவளுக்கு வலிக்கும் போதெல்லாம் நக கீரல்களை பரிசாக பெற்றான்.

சொன்னது போல் அவளை கொஞ்சம் வன்மையாகவே எடுத்து கொண்டான். அவள் முகம் பார்த்து வலி உணர்ந்த நேரம் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து, வலிச்சா சொல்லு டி என்பான்..

எனக்கு இந்த பெயின் புடிச்சு இருக்கு ஷிவா, என்று மூச்சு வாங்கி கொண்டே கூறுவாள்.. அப்படி கூறுகையில் அவனிடம் இன்னும் வேகம் கூடும்.. விஷ்வா உச்சத்தில் குழலி என்று உறுமவும், குழலி துடித்து வெடிக்கவும் சரியாக இருந்தது.

மூச்சிரைக்க அவளை கட்டி கொண்டு அவள் மேல் விழுந்தான் விஷ்வா.. குழலி சொர்க்கம் டி நீ என்றான் ஆழ்ந்து அனுபவித்து. நாணத்தில் அவளுக்கு வகாக இருந்த தோள் பட்டையில் அழுத்தமாக அவள் பற்த்தடம் பதித்தால் . நாய் குட்டி குறும்புடன் கடிப்பது போல், அதை சுகமாக ஏற்று கொண்டு பதிலுக்கு அவளை கழுத்து வளைவில் கடித்து வம்பயர் போல் உறிஞ்சினான் விஷ்வா. ஷிவா என்று முனகியவளை அப்படியே இடப்பக்கம் சரிந்து அவன் மேல் போட்டு கொண்டான்.

ஏதேதோ கதைகள் பேசிய குழலி, விஷ்வா மீதே உறங்கி போனாள்.. அவள் கூந்தலில் வாசம் பிடித்து கொண்டே விஷ்வாவும் உறங்கினான்..

அன்று அந்த வீட்டில் நேரம் ஒன்பதை கடந்தும் யாருக்கும் விடியவில்லை போலும்.. நேரம் கழித்தே ஒருவர் பின் ஒருவராக எழுந்து வந்தனர். புதுமண தம்பதிகள் இன்னும் அறையை விட்டு வெளிவரவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

43. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி வேலையாட்களின் உதவியோடு காலை உணவை சமைத்து கொண்டிருந்தாள். சுந்தரம் மட்டுமே எழுந்து இருந்தார். விஷ்வா குழந்தையை தூக்கி கொண்டு கீழே வந்தவன் தந்தையிடம் பூரணி பாப்பாவை கொடுத்துவிட்டு, குழலியை காண சமையல் அறையினுள் நுழைந்துவிட்டான்.

விஷ்வாவை கண்டதும் வேலையால் இருவரும் அங்கிருந்து நகர்ந்து விட, மிக்ஸியில் சட்னி அரைத்து கொண்டிருந்த குழலி விஷ்வா உள் நுழைந்ததை கவனிக்கவில்லை.. திருட்டு பூனையாக மெதுவாக வந்து குழலியை பின்னிருந்து அனைக்க, அலறிவிட்டால் குழலி.. பயத்தில் மிக்ஸி முடியில் இருந்து கை எடுத்து விட, தேங்காய் சட்னி இருவரின் மேலும் அபிஷேகமானது.

எல்லாம் ஓரிரு நொடியில் நடந்துவிட, விஷ்வா ஹேய் என்ன ஆச்சு என்று பதறிவிட்டான். சுந்தரம் குழந்தையை தூக்கி கொண்டு அங்கே வரவும், குழலி  கணவனை முறைக்கவும் சரியாக இருந்தது.. விஷ்வாவின் கள்ளத்தனமான முழியில் என்ன நடந்திருக்கும் என ஓரளவு யூகித்து கொண்டார் சுந்தரம். பின் அவர்களை மேலும் சங்கட படுத்த விரும்பாதவர் அங்கிருந்து குழந்தையுடன் தோட்டத்திற்கு நகர்ந்துத்துவிட்டார்.

ஹய்யோ.. ஏன் விஷ்வா இப்படி பண்றிங்க என்று சலித்து கொண்டு கீழே சிதறி இருந்த சட்னியை சுத்தம் செய்தாள் குழலி. ச்சை எல்லாம் சொதப்பிடுச்சு என்று முனுமுனுத்து கொண்டவன் குழலியிடம் இருந்து அந்த துணியை வாங்கி அவன் சுத்தம் செய்ய முயன்றான்.

கணவனை முறைத்துவிட்டு ஒன்னும் வேண்டாம், தயவு செஞ்சு போங்க.. நானே சுத்தம் பண்ணிக்குறன் என்று கடுகடுத்தாள்.. உனக்கு என்ன டி அவ்ளோ பயம்?? என்ன தவற யார் வந்து உன்மேல கைவைக்க போறா? என்று பேசி கொண்டு இருக்க அதற்குள் ஒரு வேலையால் அங்கு வந்து, நீங்க குடுங்கமா நான் கிளீன் பண்றன் என்று குழலியை அங்கிருந்து அனுப்பி வைத்தார்..

குழலியின் கழுத்து, உடை, கை என எல்லா இடத்திலும் சட்னி சிந்தி இருந்தது. கணவனை செல்லமாக வசைப்பாடி கொண்டே குளியல் அறையினுள் நுழைந்து கதவை மூட போக, வேகமாக உள்ளே வந்தவன், அவளுடன் குளியல் அறையில் புகுந்து கொண்டு கதவை சாத்தியிருந்தான்.

குழலி கோவப்பட்டு முறைக்கிறேன் என்ற பெயரில் சிவந்த கன்னத்துடன் பொய்யாக முறைத்து கொண்டிருந்தாள். அவளின் வெட்க சிரிப்பில் கன்னங்கள் கூட லேசான வலி கண்டது. விஷ்வா மந்தகாசமாக சிரித்து கொண்டு அவளை நெருங்க.. அவள் தலை தாழ்த்தி பின்னே நகர்ந்தால்.. இப்போ எதுக்கு நீங்க உள்ள வந்திங்க என்று இறங்கிய குரலில் கேட்க..

அதில் அவன் இதழ் இன்னும் விரிந்தது.. அதற்கு மேல் பின்னே செல்ல இடமில்லாமல் சுவற்றுடன் ஒட்டி நின்றாள்.. அவனின் தகிக்கும் மூச்சு காற்று அவள் கழுத்தில் பட, என்மேலயும் சட்னி எல்லாம் சிந்தியிருக்கு பாரு.. வா பிரெஷ்ஷா ஒரு குளியல் போடலாம் என்று அவன் சாதாரணமாக கூற.. ஷி.. ஷிவா.. நீ.. நீங்க ரொம்ப.. ஓவ..ரா.. போறீங்க.. என்றால் திக்கி திணறி.. நான் என்ன டி ஓவரா போறன் என்று அவள் காதருகே குனிந்து கேட்க, பெண்ணவளுக்கு அதுவும் அவஸ்தையாகி போனது..

ஹய்யோ போங்க அங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு, என்று திக்கி திணறி கூறி அவனிடம் இருந்து விடுபட முயன்றால்.. விடாகண்டன் விட்டால்தானே ..

திணற, திணற குழலியை ஷவரில் நிறுத்தி அவளோடு அவனும் நின்று இறுக்கி அனைத்து கொண்டான்.. அவன் முன்னவன் அவளை முட்டி நிற்க.. ஹய்யோ ஷிவா என்று கூச்சத்தில் கண்கள் மூடி நெளிந்து கொண்டிருந்தாள்.. அதற்கு மேல் முடியாதவன் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்தி கொண்டான்.. அதபின் அங்கு ஒலித்தவை எல்லாம் சுக முனகல் மட்டுமே..

இரண்டு மணி நேரம் கழித்து சிவந்த இதழுடன் வெளியே வந்தாள் குழலி.

சொல்ல முடியா உணர்வில் இருந்தாள் குழலி.. பின் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள், வேக வேகமாக அலமாரியில் இருந்து லூசான முழு நீள கை சுடிதாரும் அதற்கு இணையாக பலசோ பேண்ட்டும் அணிந்து கொண்டாள்..

சிறிது நேரத்தில் வெளியே வந்த விஷ்வா அவள் உடையை கண்டு முகம் சுழித்தான்.. என்னடி இது தலையணைக்கு உரை மாட்டுனா மாதிரி நிக்கற? ஓஹ் நான் ஈஸியா உன் சுடிதார் குள்ள நுழையறுத்துக்காக தன் இந்த ட்ரெஸ் போட்டுற்கியா என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் செயலில் இறங்க முயன்றவனை.. கழுத்தில் மாலையாக போட்டு இருந்த துண்டை பிடித்து இழுத்து,

மனுஷனாடா நீ.. காம கொடூரனே.. காஞ்ச மாடு மாதிரி மேல பாயுற? இதல நீ என் ட்ரெஸ்குள்ள நுழைய நான் இந்த ட்ரெஸ் போட்டு இருக்கனா? நினைப்பு தான் என்று முகத்தை சுழித்தாள் குழலி.

அவள் பேசுவதை ஆசையோடு பார்த்து கொண்டு இருந்தான் விஷ்வா. பின் அவ கையை பிடித்து இழுத்து பின்புறமாக அனைத்தவாக்கில் நின்றவன், ரொம்ப கஷ்ட்ட படுத்திட்டனா என்றான் மென்மையாக.. அவன் அக்கறை அவளுக்கு இதமான மனநிலையை கொடுத்தது.. அவளிடம் பதில் வராமல் போக, சொல்லு டி என்றான் மேலும் இறுக்கி..

கஷ்ட்டம்லாம் இல்ல ஆனா, நேரம் காலம் இல்லாம இப்படி பண்றது ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.. கீழ எல்லாரும் இருக்காங்க.. நாம மேல வந்து இரண்டு மணி நேரம் ஆகுது.. இப்போ எனக்கு கீழ போகவே கூச்சம்மா இருக்கு ஷிவா என்று அவன் பக்கமாக திரும்பி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அப்போ போக வேண்டாம் இங்கயே இருப்போம் என்றவனை முறைக்க முயன்று தோற்று போனாள் காரிகையவள்..

ஹேய் இங்கயே இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு சொன்னன் டி என்றான், இதழ்களுக்கிடையில் துளிர்ந்த புன்னகையை மறைத்து கொண்டு.. பாரு நான் கூட நல்ல பையனா தான் இருக்கன் நீ தான் எப்பவும் அதே நினப்போட இருக்க என்று அவன் பற்றி இருந்த அவள் இடையில் அழுத்தம் கொடுத்தான்.

முயல் குட்டி போல், அவன் கைவளைவுக்குள் இருந்து துள்ளி வெளிவந்தவள்.. இதுக்கு மேல நான் இங்க இருக்க மாட்டன், நீங்க அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகுறீங்க நான் கீழ போறன் என்று விஷ்வாவிடம் இருந்து தப்பித்து வெளியேறினால்  குழலி..

சூர்யா.. ரஞ்சனி..

ரஞ்சனியால் திரும்பி கூட படுக்க முடியாத அளவிற்கு, சூர்யா அவளை கட்டி அனைத்து இருந்தான்.. நான் என்ன ஓடிடவா போறன், எதுக்கு இப்படி போட்டு புடிச்சு வச்சு இருக்கான்.. மூச்சுகூட விட முடியல.. என்று மனதின்னுள்ளே கணவனை அரச்சித்து கொண்டு இருந்தாள் ரஞ்சனி..

அவள் மார்பின் மீது சுகவசியாக படுத்து இருந்தவன்.. அவள் அவனை அர்ச்சித்தது டெலிபத்தி வழியாக அவன் மூளையை சென்றிருந்ததோ  என்னவோ.. தலையை தூக்கி மனைவியின் முகம் கண்டான்.

நான் திட்டுனது கேட்டுடுச்சா என்று வாய் விட்டே புலம்பினாள்..

அப்போ என்ன திட்டியிருக்க என்று அவன் கட்டிலில் எழுந்து அமர்ந்து முறைப்புடன் கேட்க..

அவளும் கூடவே எழுந்து அமர்ந்தால்.. பயப்படாத ரஞ்சி, இவன் ஒரு ஊசி பட்டாசு தைரியமா பேசு என்று மூளை சொல்ல..

மனமோ வேண்டாம் ரஞ்சி தனியா இருக்கோம். இவன் ஏதாவது எக்கு தப்பா பண்ணிட போறான் என்று எச்சரித்தது..

அவளை ரசித்து கொண்டே, அவள் கழுத்தை அலங்கரித்து, மார்பில் இறங்கி வயிற்றில் குடிகொண்டிருந்த  தாலிகயிற்றை கையில் எடுத்து.. அந்த தங்க தாலியில் முத்தமிட்டு இருந்தான் சூர்யா.

"என்னோட முதல் சம்பாதியத்துல உனக்காக வாங்குன தாலி" என்றான், அந்த தாலியில் இருந்து கண் அகட்டாமல்.. ரஞ்சனிக்கு தான் சூர்யாவின் கூற்று அதிர்ச்சியளித்தது.. இவன் என்னை இவ்வளவு காதலிக்குறான? தொண்டை குழியில் எச்சில் கூட்டி விழுங்கினாள்  ரஞ்சனி. அவன் காதலிப்பது தெரியும் ஆனால் இந்தளவு காதலிப்பது இப்போது தான் உணர்கிறாள். அவள் சிலை போல் அமர்ந்து இருக்க.. அவளை அப்படியே தூக்கி மடி மீது அமர்த்தி கொண்டான் சூர்யா. சிந்தை கலைந்து சுயம் பெற்றவள் இப்போது தான் அவள் இருக்கும் நிலை. உணர்ந்தாள், இரவு சூர்யா செய்த அமளி துமளியில் சேலை எங்கோ பறந்து இருந்தது.. வெறும் ரவிக்கை மற்றும் பாவாடையுடன் அவன் மடியில் அமர்ந்து இருக்கிறாள்.

அவனும் அவளுக்கு குறையில்லாமல்.. வெட்டி சட்டையின்றி இடுப்பில் பாக்ஸர் மட்டுமே அணிந்திருந்தான்.

அச்சோ விடுங்க, விடுங்கனு சொல்றன்ல.. என்று அவன் பிடியில் இருந்து துள்ளி கொண்டு இருந்தாள் ரஞ்சனி.. அவள் ஒரு பக்க முன்னழகை வன்மையாக கையாண்டவன் அமைதியா இரு என்றான்.. சற்று முன் அவன் முகத்தில் குடி கொண்டிருந்த மென்மை எங்கு சென்றது?

அவன் செய்த செயலில் வலியோடு கூடிய அதிர்ச்சி அவள் முகத்தில்.. கண் கூட கொஞ்சம் கலங்கி வந்தது.

எனக்கு இந்த நிமிஷம் உன்மேல காதலும் இருக்கு கோவமும் இருக்கு என்றவனை புரியாமல் பார்த்தாள் ரஞ்சனி..

கோவம் எதற்காக என்று?

அந்த பொறம்போக்கு கூட கொஞ்சி கொஞ்சி போன் பேசியிருக்கல நீ என்றான் பற்களை கடித்து கொண்டு..

அவள் கண்கள் விரிந்தது.. உங்க கான்வெர்சஷன ஒன்னும் தேடி தேடி போய் கேட்கல.. நாங்க அவனோட போதை மருந்து பத்தி காண்டாக்ட்ஸ் தேடும் போது உங்க ஆடியோஸ்ஸும் என் கண்ல சிக்கி தொலைஞ்சுது.. அத கேட்டதுல இருந்து பைத்தியகாரன் மாதிரி சுத்திட்டு இருந்தன் தெரியுமா..

நான் இங்க உனக்காக போராடிகிட்டு இருந்தா, நீ அந்த நேரம் அவன்கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தல? என்று அவனுள் அடங்கியிருந்த அவள் உடலில் வன்மையை கூட்ட, வலிக்கிது என்றால் தழுதழுத்த குரலில்.. எனக்கும் இப்படி தான் டி வலிச்சுது. அவன் உன் போன் எடுக்கலனா மேடம் உரிமையா சண்டை போடுறீங்களோ?? என்று ஒரு ஒரு விஷயமும் நியாபகம் வர சொல்லி சொல்லி அவளை துன்புருத்தினான்...

அவனுக்குள் இப்படி ஒரு குணம் இருப்பதை இப்போது தான் அறிகிறாள் ரஞ்சனி. முதன் முறை அவள் வாழ்க்கையை நினைத்து பயம் வந்தது.

ரஞ்சனி அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.. அவளின் பார்வையை காண முடியாதவன் அவளை கீழே பிடித்து தள்ளியிருந்தான். என் காதல நீ கடைசி வரைக்கும் உணரவே இல்லல? என்ற போது அவன் கண்களும் லேசான ஈரத்தில் பளபளத்தது..

வெளிய எல்லார் முன்னாடியும் தான் நாம அன்பான புருஷன் பொண்டாட்டி.. ஆனா நம்ம வாழ்க்கை நாலு செவத்துக்குள்ள இப்படி தான் இருக்கும்.

எனக்கு எப்போ உன்மேல இருக்க கோவம் போதோ அப்போ நான் உன்ன எடுத்துப்பன்.. உன் சம்மதம் எனக்கு தேவையே இல்லை. என்றவன் குளியல் அறைக்குள் புகுந்து இருந்தான்..

ரஞ்சனியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. நான் என்ன தப்பு செஞ்சன் எதுக்காக என்கிட்ட இப்படி நடந்துக்குறான். எனக்கு இவன்மேல காதல் வரல அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நிச்சயம் ஆன பிறகு தனக்கு பார்த்து இருக்க மாப்பிளை கிட்ட உரிமையோடு பழகுறது தப்பா? அப்படி என்ன நாங்க ரொமான்ஸ் பண்ணத கேட்டாரு? போன்ல முத்தம் குடுத்தது தப்பா? என்று யோசித்து யோசித்து தலைவலி கண்டாள் ரஞ்சனி. ஒரு கட்டத்தில் தலையை பிடித்து கொண்டு அமந்துவிட்டாள்.

அவள் என்னவென்று உணரும் முன் அவளை கைகளில் ஏந்தி கொண்ட சூர்யா குளியல் அறையில் நிற்க வைத்து ஷவரை திறந்துவிட்டான்.

அவன் முகத்தை கூட பார்க்கவில்லை ரஞ்சனி. பார்க்க பிடிக்கவில்லை. அவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட்டான்.. மிக மிக மென்மையாக.. இவ்வளவு நேரம் அவளை வார்த்தையால் வதைத்தது இவன் தானா? அவன் கொடுத்த முத்தம் பாவையவளை சந்தேகம் கொள்ள வைத்தது..

அவளுக்கு வலித்தால்.. அவனுக்கும் வலிக்குமே.. என்ன காதலோ?

 

 

 

44. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சூர்யா ரஞ்சனியோடு அவனின் மாமனார் வீட்டிற்கு விருந்திற்க்கு சென்று இருந்தான். பரமு சுசிலா தம்பதி விஷ்வா மற்றும் குழலியையும் விருந்திற்கு அழைத்து தான் இருந்தனர். இப்போ என் தம்பி தான் புது மாப்பிளை அவனை நல்லா கவனிங்க மாமா நாங்க இன்னொரு நாள் வரோம் என்று தம்பிக்கு தனிமை கொடுக்கும் நோக்கத்தில் கூறினான்.

ஆனால் குழலியோ, நாமலும் போய் இருக்கலாம்ல ஷிவா மாமா அத்தை தான் கூப்பிட்டாங்களே என்றால். அவங்க தனியா போயிட்டு வரட்டும் குழலி. இப்போ தான மேரேஜ் ஆகியிருக்கு. அவங்களுக்கான நேரம் இது. நாம இன்னொரு நாள் போயிட்டு வரலாம் என்றான்.

தாராளமாக மூச்சை இழுத்து விட்டவள் சரி ஓகே என்றால்.. ஏன் டி இவ்ளோ சலிச்சுக்குற? ஹ்ம்ம் அங்க போய் ஆடுறது ஓடுறது நீந்துரது எல்லாத்தையும் ஒரு புடி புடிக்கலாம்னு நினைச்சன் என்றால் சோறு மிஸ்ஸான சோகத்தில், அடியே என்னமோ இதல்லாம் சாப்பிடாத மாதிரியே ஃபீல் பண்ற அப்போ அப்போ இதெல்லாம் நீயே சமைக்குறயே டி..

போங்க ஷிவா, எனக்கு என் சமையல் போர் அடிக்குது யாராச்சும் சமைச்சா நல்லா சாப்பிடுவன்.. அதுவும் எங்க அம்மா சமையல நான் ரொம்ப மிஸ் பண்றன் ஷிவா என்றால். இன்னும் டூ வீக்ஸ் வெயிட் பண்ணு டி நாம உங்க ஊருக்கு போலாம்.

ஏன் டூ வீக்ஸ்? ஹேய் அங்க இப்போ நிலமையும் சரி இல்ல.. சரியாகவே எப்படியும் அஞ்சு ஆறு நாள் ஆகும். எனக்கும் ஒரு ப்ராஜெக்ட் டெட்லைன் இருக்கு அத முடிச்சுட்டு போயிட்டு வரலாம்.

சரி ஓகே, என்றால் சமத்து பெண்ணாக.. அப்பா எங்க என்றான்? அவரு பாப்பாவ தூக்கிட்டு பரமு மாமா வீட்டுக்கு காலைலயே போய்ட்டாரு.

பின், வேலை செய்யும் சரசு என்ற பெண்ணை அழைத்து மதியம் அவர்களுக்கு சமைக்க வேண்டாம் என்று கூறியிருந்தான்.

ஏன் ஷிவா? வெளிய போலாம் போய் ரெடியாகு நான் ஒரு ஆபீஸ் கால் பேசிட்டு வரன் என்று போனை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றான். குழலி தயாராகி நிற்க, விஷ்வாவும் அடுத்த பத்து நிமிடத்தில் தயாராகினான்..

இருவரும் கிளம்பி ஒரு செட்டிநாடு உணவகத்திற்கு சென்றனர்.. அங்கு கறி விருந்து என்னும் உணவு முறையை தேர்வு செய்து பஃபே முறையில் உண்டனர்.. குழலிக்கு
கண்கள் விரிந்தது.. எனக்காகவா என்றால். அவள் கேள்விக்கு பதில் கூறாமல், அவள் முகத்தில் மோதிய கற்றை மூடியை காதருகே ஒதுக்கி விட்டு கொண்டே பேசினான்.

குழலி எதாச்சும் உனக்கு வேணும் இல்ல எதாச்சும் ஆசைப்பட்டனா வாய திறந்து உரிமையா கேளு டி.. இது ஒரு சின்ன விஷயம் இத என்கிட்ட கேட்க கூட தயங்குறியா என்றான்.. அப்படிலாம் இல்ல ஷிவா. இதல்லாம் ஒரு விஷயமானு தோணுச்சு அதான் கேட்க தோணல என்றால். செல்லமாக முறைத்தான் மனைவியை.. ஆசைல என்ன சின்ன ஆசை பெரிய ஆசை எத ஆசைபட்டாலும் செய்யணும் என்றான்.

அப்படியா என்றால் எதையோ செய்ய துணிந்து..

அவனும் அதை உணராமல் ஆமாம் என்க..

அவன் தாடையை பற்றி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் இருக்கும் இடம் மறந்து.

கண்கள் விரித்தான் விஷ்வா.. பின் இருக்கும் இடம் உணர்ந்து, அவள் காதருகே குனிந்து மேடம் ரொம்ப தேறிட்டிங்க என்றான். உங்களுக்கு பிடிக்கலையா என்றால் கண்களில் எதிர்பார்போடு.. எனக்கு இதான் புடிச்சு இருக்குனு சொன்னா நம்புவியா என்றான். அவன் கையோடு கைகோர்த்து கொண்டு அவர்களுக்கான நேரத்தை அழகாக செலவிட்டனர்.

சூர்யா.. ரஞ்சனி..

விருந்திற்க்கு வந்த மகள் மருமகனை எந்த குறையுமின்றி பார்த்து கொண்டனர் ரஞ்சனியின் பெற்றோர்.. சூர்யா தான் அவர்களின் புதுவித கவனிப்பில் சங்கடமாக உணர்ந்தான். என்ன அத்தை இது நான் சின்ன வயசுல வளர்ந்த வீடு அந்த உரிமையோடு வரலாம்னு பார்த்தா நீங்க இப்படி மரியாதை குடுத்து என்ன வாசளோடு அனுப்பி வச்சுடுவீங்க போலருக்கே.. அச்சோ மாப்பிளை என்று சுசிலா பதற பார்த்திங்களா எப்பவும் சூர்யான்னு உரிமையா கூப்புடுவீங்க இப்போ மாப்பிள்ளைன்னு தள்ளி வச்சு கூப்புடுறீங்க. சரி சொல்லுங்க உங்களுக்கு நான் மாப்பிளையா இருக்கணுமா இல்ல மகனா இருக்கணுமா என்றான்..

மகனா இருக்கணும் சூர்யா என்றார் சுசிலா.. அப்போ இந்த மாதிரி மரியாதை குடுத்து என்ன ஒதுக்கி வைக்காதீங்க அத்தை.

ஹ்ம்ம் இப்படி பேசி பேசி தான் டா, இவங்க ரெண்டு பேரையும் மயக்கி வச்சு இருக்க என்று சொல்லி கொண்டே பூரணி பாப்பாவை தூக்கி கொண்டு அந்த இடத்திற்கு வந்தார் சுந்தரம்.

நான் மனசுல நினச்சத அப்படியே சொல்றிங்க மாமா என்று அதையும் மனதில் தான் நினைத்து கொண்டாள் ரஞ்சனி.

சரி சூர்யா நீ போய் ரஞ்சனி ரூம்ல ரெஸ்ட் எடு இல்லனா ரஞ்சனிகிட்ட பேசிட்டு இரு. லஞ்ச் ரெடி ஆனதும் நான் உன்ன கூப்பிடுறன் என்றார் சுசிலா.

ரஞ்சனி வேறு வழியில்லாமல் அவள் அறைக்கு சூர்யாவை அழைத்து சென்றால். காலையில் கொடுத்த முத்தத்திற்கு பிறகு ரஞ்சனி அவனிடம் தனியாக இருக்கவே பயம் கொண்டாள்.

அறைக்கு வந்தது தான் தாமதம், அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து இறுக்கி அனைத்து கொண்டான்.

அவனிடம் இருந்து விலக முயன்றால் பெண்ணவள். அதற்கு சூர்யா விட வேண்டுமே. அனைப்பில் இருந்த படியே கூறினாள் "என்மேல உள்ள உங்க கோவம் குறையுற வரைக்கும் என்கிட்ட இருந்து தள்ளியிருக்கலாம்ல" ஏன் இப்படி என் விருப்பம் இல்லாம இப்படி நடந்துக்குறீங்க என்றால்..

அவள் வார்த்தை அவனுக்கு மட்டுப்பட்டிருந்த கோவத்தை கிளர்த்து விட.. அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்து கேட்டான் "ஏன் இன்னும் உன் மனசுல அந்த ஷங்கர்  தான் இருக்கானா என்று?" உள்ளுக்குள் துடித்து தான் போனாள் ரஞ்சனி. ஆனால் வெளியே அவனை நிர்மலமான முகத்துடன் பார்த்தாள்..

அவள் பார்வையை கண்டு கொள்ளாதவன் அவளை மெத்தையில் தள்ளிவிட்டு அந்த அறையில் இருந்த பால்கனியில் சென்று நின்று கொண்டான்..

சுவற்றை இரண்டு முறை குத்தி கொண்டான், அவன் காதல் மனைவியை காயப்படுத்தியதற்கு..

உன் ரஞ்சிய பத்தி உனக்கு தெரியாதா டா? நீயே அவள இப்படி பேசலாமா.. நீ சொன்ன வார்த்தை அவள எவ்ளோ கஷ்ட்டப்படுத்தி இருக்கும்னு யோசிக்கலயா என்று அவன் மனசாட்சியே அவனை கேள்வி எழுப்பியது..

அவ எப்படி என்ன அவள விட்டு தள்ளியிருக்க சொல்லலாம்? என் காதல் அவளுக்கு புரியலையா? என்னால தள்ளியிருந்துனா அவள காதலிக்க முடியாது.

என் காதல போதுமான வரைக்கும் ரெண்டு வருஷமா வாயால சொல்லி புரியவச்சுட்டன்.. ஆனா அத அவ புரிஞ்சிக்கல.. புரிஞ்சிக்காம தான எவனையோ கட்டிக்க கல்யாணம் வரைக்கும் போனா என்று மீண்டும் வீம்பு பிடித்து நின்றான்.

அவ உங்க அம்மாக்கு பயந்து தான, உன் காதல் வேண்டாம்னு சொன்னா?

ஏன் எங்க அம்மா தான் ஊர்லயே மோசமான மாமியாரா? ஊர்ல அவங்கள விட மோசமான மாமியார் கூட இருக்காங்களே?? அப்போ கூட நான் சொன்னனே உனக்காக நான் எங்க அம்மாவையும் விட்டு வரன் தனி குடுத்தணும் போகலாம்னு பாவி கேட்டால அவ??

என்ன துடிக்க வச்சாளே.. அன்னைக்கு இனொருத்தன் கைல சிரிச்சிகிட்டே இவ மோதிரம் போட்டதும் அவன் பதிலுக்கு இவளுக்கு மோதிரம் போட்டதும் என் மண்டைக்குள்ள நினைக்கும் போதுலாம் எனக்கு வெறியேறுது.. அவன் இவ இடுப்புல கைப்போட்டு நின்னது.. இவ அவன் மாருல சாஞ்சிக்கிட்டு போட்டோக்கு போஸ் குடுத்தது ச்சீ என்று அருவருத்தான்.. அந்த நினைவே அவனுக்கு கண்ணில் நீர் கோர்க்க வைத்தது.

உண்மையில் சூர்யா சென்சிடிவ்வான குணம் கொண்டவன்.. அவன் ஏங்கிய ஒரு விஷயம் என்றால் அது அவன் தாயின் அன்பு மட்டுமே. அது கிடைக்காத பட்சத்தில் ஏமாந்து போனவன் பருவ வயதை எட்டும் போது அதை தன் வருங்கால துணையிடம் பெற்று கொள்ள வேண்டும் என முடிவு செய்து இருந்தான்.. கல்லூரி காலங்களிலும் சரி சொந்தமாக தொழில் தொடங்கிய போதும் சரி காதல் சொல்லி அவனுக்கு ப்ரொபோஸ் செய்த பெண்கள் ஏராளமானோர் உண்டு.. ஆனால் அவனுக்கு எந்த பெண்ணின் மீதும் காதல் உணர்வுகள் வரவில்லை என்பதே உண்மை.

ரஞ்சனியிடம் கூட சிறுவயதில் இருந்து பழகி இருக்கிறான்.. விடுமுறை நாட்களில் விஷ்வா சூர்யா இருவரும் பரமு வீட்டில் தான் இருப்பர்.. சிறு வயதில் இருந்து மூன்று பேரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.. அவளின் பருவ வயதில் கூட சூர்யாவிற்கு எந்தவித ஈர்ப்பும் ரஞ்சனி  மேல் ஏற்படவில்லை.. ஏன் விஷ்வாவை விட சூர்யா தான் அதிக அளவு ரஞ்சனியை கேலி கிண்டல் செய்து அழ வைப்பான்.

அப்போ ரஞ்சனி மீது எப்போது காதல் வந்தது??

சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருந்த காலம் அது.. முதலில் வங்கியில் கடன் வாங்கவே முயற்சித்து இருந்தான்..

ரஞ்சனிக்கும் அப்போது தான் வங்கியில் வேலை கிடைத்து இருந்தது. அதனால் அவள் வேலை பார்க்கும் வங்கியில் கடன் வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.  முந்தைய நாள் இரவே ரஞ்சனியை அழைத்து நாளை வங்கிக்கு செல்லும் போது என்னையும் வீட்டிற்கு வந்து அழைத்து செல் என்று கூறியிருந்தான். அதன் பொருட்டு ரஞ்சனி அன்று காலை வீட்டிற்கு வர..

வீட்டில் யாரும் இல்லை. வழக்கம் போல் அலுவலகம் கிளம்பி இருந்தனர். சூர்யாவிற்கு காய்ச்சலால் உடல் கொதித்து கொண்டிருந்தது.. மகேஷ்வரி மட்டும் அவர் அறையில் உறங்கி கொண்டு இருந்தார். மகனுக்கு காய்ச்சல் என்ற விஷயம் தெரியாது.. தெரிந்தாலும் மருத்துவருக்கு அழைத்து கூறிவிட்டு விட்ட உறக்கத்தை தொடர்ந்து இருப்பார் என்பது வேறு கதை..

ரஞ்சனி தான் பதறி போனாள்.. அவனை எழுப்பி பிரஷ் செய்ய வைத்து, ஈர துணியால் முகம் துடைத்து விட்டு மருத்துவமனைக்கு ஆட்டோ பிடித்து அழைத்து சென்றால். அவனுக்கு செவிலியர் ஊசி போடும் போது ரஞ்சனி அவன் வலி உணர்ந்து கண்ணை இறுக மூடி கொண்டாள்.

பின் மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை வாங்கி கொண்டு மீண்டும் வீடு வந்து இருந்தனர்.

அன்று அவள் வங்கிக்கு விடுப்பு எடுத்து கொண்டு, சூர்யாவை குழந்தை போல் பார்த்து கொண்டாள்.. காய்ச்சலால் சாப்பிட மறுத்தவனை  அதட்டி உருட்டி அவள் பக்குவமாக செய்த அரிசி கஞ்சியையும் பருப்பு துவையலையும் ஊட்டி விட்டால். உடல் சூடு அதிகமாகும் போது ஈர துணியை நெனைத்து நெற்றியில் பத்து போட்டு விட்டால். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை காய்ச்சல் குறைந்து விட்டதா என்று நெற்றியை தொட்டு பார்த்து தாயை போல் கவனித்து கொண்டாள். சூர்யா காய்ச்சலின் வீரியத்தில் உறக்கத்தில் இருந்தாலும் அவளின் இந்த அக்கறையை உள்வாங்கி கொண்டு தான் இருந்தான்.

மதியத்திற்கு மேல் அவள் முகம் வாடி இருந்தது. அந்த காய்ச்சலிலும் அதை கவனித்தவன் என்னவென்று கேட்க ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டால். மாலை வரை இருந்து சுந்தரம் வீட்டிற்கு வந்ததும் சூர்யாவின் காய்ச்சலை பற்றி கூறிவிட்டே அங்கிருந்து சென்றால்.

அந்த நாளுக்கு பிறகு சூர்யா அவளிடம் நெருங்கி பழக முயன்றான்.. ஆனால் ரஞ்சனி அவனிடம் ஒரு ஒதுக்கத்தை காட்டினாள். ஏன் இந்த ஒதுக்கம் என்று அறியாதவன் மனதினுள் புழுங்கினான். இந்த இடைவெளியில் அவன் ரஞ்சனியின் மீது காதலில் விழுந்தான். அவளிடம் தன் மனதில் இருப்பதை கூறி ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தவன் வரன் டி கிட்டன் என்று அவனுக்குள்ளே கூறி  கொண்டு, மறுநாளே ரோஜா பூங்கொத்தோடு அட்டகாசமாக அவள் முன் நின்றான்.. அவளுக்கு அவன் தோற்றமும் முகத்தில் இழையோடிய புது உற்சாகமும் கண்டு ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தும் அவனே கூறட்டும் என்று காத்திருந்தாள்..

சூர்யா அந்த கடற்கரையில் கொஞ்சமும் வெட்கப்படாமல் முட்டி போட்டு கையில் ரோஜா பூங்கொத்தை நீட்டி ஐ லவ் யூ ரஞ்சனி என்று கூறி ப்ரொபோஸ் செய்தான்..

45. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சூர்யாவே நிகழ்வு மேலாண்மை (event management) தொழிலை தானே துவங்க உள்ளான். அவன் காதலிக்கும் பெண்ணிடம் எப்படி அவ்வளவு சாதாரணமாக காதலை கூறிவிடுவான்..

கோவளம் கடற்கரையில் சிதறிய ரோஜா மலர்களுக்கு நடுவே அவளை அழைத்து வந்திருந்தான்.. எங்கிருந்தோ வந்த சில குழந்தைகள் கையில் வண்ண வண்ண ரோஜா பூக்களை ஏந்தி கொண்டு சூர்யாவை சுற்றி நின்று கொண்டார்கள். ரஞ்சனிக்கு குழந்தைகள் என்றால் நிரம்பவே பிடிக்கும் அதனால் தான் இந்த ஏற்பாடு.. அந்த குழந்தைகளோடு சேர்ந்து சூர்யாவும் அவன் கையில் உள்ள ரோஜா பூங்கொத்தை ரஞ்சனியிடம் நீட்டி ஐ லவ் யூ ரஞ்சி.. என்று அழகான புன்னகையுடன் தன் மனதில் இருந்து காதலை கூறியிருந்தான்.

அவன் கூறும் நேரம் நண்பர்களின் உதவியோடு அழகான சிகப்பு ஹாரட் பலூன்கள் வான் நோக்கி பறந்தது. அவர்களை சுற்றி அவனின் நண்பர்கள் குழுவும் சூழ்ந்து கொண்டு உற்சாக கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர்.

ரஞ்சனிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனின் நண்பர்களின் முன்பு அவனை அவமானபடுத்த விரும்பாதவள் சூர்யா கொடுத்த பூங்கொத்தை சிறு புன்னகையுடன் பெற்று கொண்டாள். சூர்யாவும் அவளோடு எழுந்து நின்றான்.

பின் சுற்றியுள்ள குழந்தைகளிடம் இருந்து பூக்களை கொண்டாள் ரஞ்சனி, அந்த குழந்தைகளும் அவளை குனிய சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டது. அனைத்தும் சூர்யாவின் ஏற்பாடு என்பது புரிய அவளும் குழந்தைகளுக்கு கன்னம் நிறைய முத்தம் கொடுத்து பாதுகாப்பாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் படி சூர்யாவிடம் கூறினாள்.

அவனின் நண்பர்கள் அந்த பொறுப்பை ஏற்று கொண்டு, சூர்யாவிற்கு விடை பெற்று அங்கிருந்து சென்றனர்..

சூர்யா அவள் கைகளை மெதுவாக கோர்த்து கொண்டு அங்கிருந்து கடற்கரை நோக்கி நடந்தான். ரஞ்சனி அவள் கையை விடுவித்து கொள்ளவே முயன்றால். என்னடி ஆச்சு என்றான் அவள் செய்வதை கண்டு..

சூர்யா நீ ப்ரொபோஸ் பண்ணுவன்னு எனக்கு தெரியாது அதுவும் இப்படி உன் ஃப்ரன்ட்ஸ் லாம் அழைச்சிட்டு வந்து இப்படி ப்ரொபோஸ் பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கல.. அவங்க முன்னாடி உன்ன அவமான படுத்த கூடாதுனு நினைச்சி தான் நீ கொடுத்த பூங்கொத்தை உன் காதலை ஏத்துக்குற விதமாக வாங்குனன்.

அதுவரை புன்னகை முகமாக கேட்டு கொண்டிருந்தவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது.

சாரி சூர்யா என்னால உன்ன லவ் பண்ண முடியாது. நீ என் ஃப்ரன்ட் மட்டும் தான். காதல் உணர்வு எப்பவும் உங்க மேல வராது, இனிமேல் நாம நட்ப்பா கூட பேச வேண்டாம் பழக வேண்டாம் என்று கூறி அவன் மனதை உடைத்து இருந்தாள் ரஞ்சனி.

அவள் அவனை விட்டு விலகி முன்னே நடக்க, அவள் முன்னே சென்று பாதையை மறைத்து நின்று காரணம் கேட்டான், அவன் காதலை மறுத்ததற்கு. நீ என் ஃப்ரன்ட் என்று முடித்து கொண்டாள்.. சூர்யா இதை எதிர்பார்க்கவில்லை. அவளின் காரணத்தையும் நம்பவில்லை. அவனும் ஏதேதோ கூறினான் அவன் காதலை புரிய வைக்க முயற்சித்தான் ரஞ்சனி எதையும் ஏற்கவில்லை.

இப்படி தான் இரண்டு வருடங்கள் சென்றது. சூர்யா ரஞ்சனியை காதல் பார்வை பார்ப்பதும் அவள் அவனிடம் இருந்து விலகுவதும் என இருந்தனர். இரு குடும்பத்திற்கும் சூர்யா ரஞ்சனியை காதலிப்பது தெரிந்தது. சூர்யாவிற்காக விஷ்வா முதற்கொண்டு அனைவரும் அவளிடம் பேசினார்கள்.. ஆனால் ரஞ்சனி எதற்கும் மனம் இறங்கவில்லை.. இறுதியில் சூர்யாவே அதிரடியாக அவளை தனிமையில் சந்தித்து மிரட்டி கேட்கும் போது, எனக்கு உன் அம்மா பிடிக்கல அதனால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது என்றால். அவள் சொல்லும் காரணம் சிறு பிள்ளை தனமாக தோன்றியது சூர்யாவிற்கு. அதனால் மீண்டும் அவளிடம் அவன் மனதை புரிய வைக்கும் நோக்கத்தோடு பேசவர, ரஞ்சனி மகேஷ்வரியால் வரும் பிரச்சனைகளை கூறி எனக்கு என் மேரேஜ் லைப் நிம்மதியா இருக்கணும் ப்ளீஸ் என்ன விற்று என்று சூர்யாவிடம் கேட்டாள். (அவர்கள் உரையாடலை முழுமையாக படிக்க எபிசொட் நம்பர் 14ஐ பார்க்கவும்) அதன் பின் சூர்யா அவளை கண்டுகொள்ளவில்லை. ரஞ்சனிக்கு வேறு மாப்பிளை பார்த்தனர்.

அனைத்தையும் நினைத்து பார்த்தான் சூர்யா.. ரஞ்சனி மனதில் அவன் மட்டுமே இருப்பதாக அவனுக்கு தோன்றியது. அந்த நினைவே அவனுக்கு தெவிட்டாத தேன் சுவையாக இனித்தது. அதே மனநிலையோடு உள்ளே வந்தான் ரஞ்சனி அங்கு இல்லை..

அவளை தேடிக் கொண்டு வெளியே சென்றான்.. சமையல் அறையில் அவள் அம்மாவிற்கு உதவி கொண்டிருந்தாள்.

சுசிலா தயங்கி தயங்கி கேட்டார்.. ரஞ்சி நீ சந்தோஷமா இருக்கியாமா? எனக்கு என்ன நான் சந்தோஷமா தான் இருக்கன் என்று விட்டேத்தியாக பதில் கூறினாள் ரஞ்சனி.. அதுல்ல ரஞ்சி என்று மேலும் தயங்கியவர்.. மாப்பிளை நேத்து உன்கிட்ட என்று அவர் மென்று முழுங்க..

ரஞ்சனிக்கு அவர் எதை பற்றி கேட்க வருகிறார் என புரிந்தது. சுற்றி வளைத்து அவர்கள் முதல் இரவை பற்றி கேட்க வருகிறார். ரஞ்சனிக்கு நேற்று இரவு சூர்யா நடந்து கொண்டது நினைவு வர மொத்த கோவத்தையும் தாய் மீது காட்டி விட்டாள் .

இப்போ என்னமா நான் ஃபர்ஸ்ட் நைட்ல சந்தோஷமா இருந்தனானு தெரியனுமா?

ரொம்ப சந்தோஷமா இருந்தன்.. உன் மருமகன் என்ன பூ போல உள்ளங்கைல வச்சு தாங்கு தாங்குனு தாங்குனாரு என்றால் எரிந்து விழுந்த குரலில்.

ஏன் ரஞ்சிமா இப்படி கோவப்படுற என்றார் சுசிலா மகளை சமாதானம் செய்யும் நோக்கத்தோடு.. தயவு செஞ்சு எனக்கு ஆறுதல் சொல்றன்னு என்ன இன்னும் கஷ்ட்டப்படுத்தாதீங்க மா.. என்ன இப்படியே விடுங்க. எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சுட்டிங்க அதோட உங்க பாரம் குறைஞ்சு போச்சுல விட்ருங்க. இனிமேல் கஷ்ட்டமோ நஷ்ட்டமோ என் வாழ்க்கைய நான் பாத்துக்குறன்.. எதுக்காகவும் கண்ண கசக்கிக்கிட்டு உங்க வீட்டுக்கு வர மாட்டன் என்று செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து சென்றால் ரஞ்சனி.

சூர்யா அங்கு நின்று அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான். ரஞ்சனி மீது அப்படி ஒரு கோவம், அவன் அத்தை என்று அழைத்து கொண்டே கிட்சனுள் நுழைந்தான். அவர் ரஞ்சனி பேசி சென்றதால் கலங்கிய விழிகளை அவசரமாக துடைத்து கொண்டு, சிரித்த முகமாக வா சூர்யா என்று அவனுக்காக தயார் செய்த ஜூசை அவன் கையில் கொடுத்தார்.

மென்மையாக சிரித்து கொண்டு, என் பொண்டாட்டி பேசிட்டு போன பேச்சுக்கு இந்த ஜூஸ் இப்போ உங்களுக்கு தான் தேவை என்று கட்டாய படுத்தி அவரையே அந்த பழச்சாறை குடிக்க வைத்தான் சூர்யா.

பாரு சூர்யா எப்படி பேசிட்டு போறா, இவ எங்களுக்கு பாரமா இருக்கான்னு கல்யாணம் பண்ணி வச்சோம்மா.. கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் குழந்தை இல்லாம இருந்தோம். எத்தன கோவிலுக்கு போய் தவமா தவிமிருந்து எங்களுக்கு கிடைச்சா தெரியுமா? இவளுக்காக தான நாங்க இருக்கோம். எங்கள புரிஞ்சிக்காம எப்படி பேசிட்டு போறா பாரு.. மாமா காதல விழுந்தா அவர் உடைஞ்சு போய்டுவாரு என்று கண்கலங்கினார்.

விடுங்க அத்தை அவ என்மேல இருக்க கோவத்துல அப்படி பேசிட்டா.. அவ எதிர்பார்க்காத என்னென்னமோ அன்னைக்கு நடந்துடுச்சு. அவ இந்த வாழ்க்கைய ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும் அத்தை. என்று பக்குவமாக எடுத்து கூறினான் சூர்யா. பின் சுசிலாவை சமாதானம் செய்தவன், அவர் சமைக்க அவனும் உதவி செய்தான். நீ போ சூர்யா நான் பாத்துக்குறன் என்று எவ்வளவு கூறியும் கேட்காமல், உரிமையாக அவருக்கு வேலைகளை செய்து கொடுத்தான்.

அறைக்குள் வந்த சூர்யா கண்டது என்னவோ, மெத்தையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் ரஞ்சனியை தான். அத்தை கிட்ட இப்படி தான் பேசுவியா என்றான் எடுத்ததும்..

அதில் அவளுக்கு கோவம் வந்துவிட, அவங்க முதல்ல எனக்கு அம்மா அப்பறம் தான் உனக்கு அத்தை எங்க அம்மா கிட்ட எப்படி பேசணும்னு நீ எனக்கு சொல்லி தராத என்றால் பட்டென்று.

அவளின் ஒருமையான பேச்சில், கோவம் கொண்டவன் நான் ஒன்னும் முதல் மாதிரி உனக்கு ஃப்ரன்ட் இல்ல.. இப்போ உன்ன தொட்டு தாலி கட்டியிருக்க புருஷன் மரியாதையா பேசு.. இல்ல புருஷனுக்கான உரிமையை எடுத்து உனக்கு நியாபகபடுத்த வேண்டியதா இருக்கும் என்றான் வார்த்தைகளை கடித்து துப்பி.

ஆமா இந்த மரியாதை ஒன்னு தான் குறைச்சல்.. என்னமோ எல்லாரும் பேசி முடிச்சி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி பேசுற, எல்லாரையும் இக்கட்டான சூழ்நிலைல நிக்க வச்சு தான என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட.. எல்லாம் உன் பிளான் தான?

அவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க.. அதில் அவள் சந்தேகம் ஊர்ஜிதமானது.

உண்மைய சொல்லு அந்த ஷங்கர் கெட்டவன்னு உனக்கு முன்னாடியே தெரியும் தான? வேணும்னு தான அப்போவே உண்மைய சொல்லாம கல்யாணத்துக்கு முந்தன நாள் உண்மைய சொன்ன என்றால்..

ஆமா டி இப்போ என்ன அதுக்கு? அவன் பண்ற இல்லீகள் வேலைய முன்னாடியே நான் கண்டு பிடிச்சுட்டன்.. அப்போ எல்லாருக்கும் உண்மைய சொல்லி இருந்தா கல்யாணம் நின்னு இருக்குமே தவிர நீ என்ன அப்பவும் கல்யாணம் பண்ணி இருக்க மாட்ட.. அதான் கல்யாணத்துக்கு முந்தன நாள் அவனை பத்தின எல்லாம் உண்மையும் தெரியும் படி செஞ்சன் என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

ச்சீ.. நீ ஒரு ஏமாத்துக்காரன், நல்லவனே இல்ல.. நல்லவனா இருந்து இருந்தா அவன் கெட்டவனு முன்னாடியே சொல்லியிருக்கணும்.. கடைசி நிமிஷத்துல சொல்லி எங்க அம்மாவ ஹாஸ்பிடல்ல படுக்க வச்சு உன் காரியத்தை சாதிச்சுகிட்ட சுயநலவாதி நீ என்றால்.

அவள் சொன்ன அடுத்த நொடி அவள் தலைமுடியை கொத்தாக பற்றி இருந்தான் சூர்யா.

நான் ஏமாத்துகாறனா டி சொல்லு நான் ஏமாத்துகாறனா? உனக்கு பார்த்தாங்களே மாப்பிளை அவன் தான் டி உன் குடும்பத்தையே ஏமாத்தி உன்ன கல்யாணம் பண்ண நினைச்சான். அவனோட இன்னொரு பிசினஸ் என்ன தெரியுமா யாரும் இல்லாத பொண்ணுங்கள லவ்னு சொல்லி ஏமாத்தி ரெட் லைட் ஏரியாக்கு அனுப்பறது.. விசாரணைல  ஒரு ஒரு விஷயமா வெளிய வருதாம் என் ஃப்ரன்ட் போன் பண்ணி சொன்னான். அவன் கோவத்தோடு அடிக்குரலில் கர்ஜித்தான்.. அப்போதும் அவள் தலைமுடியை விட்டான் இல்லை..

வலிக்குது விடு, ப்ளீஸ் விடு என்று அவன் கையில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயன்றால் ரஞ்சனி. அவளை உதறி தள்ளினான்.

உனக்கும் அந்த ஏமாத்துறவன தான புடிச்சு இருந்துது. பல்ல இளிச்சுக்கிட்டு நிச்சயம் ஆனதும் அவன் பின்னாடி சுத்தனியே, உன்னலாம் அப்படியே சீரழஞ்சி போனு விட்ருக்கணும் டி..

உண்மையா காதலிச்சு உன்ன எப்படியாச்சும் கல்யாணம் பண்ணிக்கணும்னு கடைசி வரைக்கும் போராடி உன்ன கல்யாணம் பண்ணன் பாரு என்ன சொல்லணும் என்று தலையில் அடித்து கொண்டான் சூர்யா..

அவன் ஷங்கரை பற்றி கூறிய புது தகவல் அதிர்ச்சி அளித்தாலும், மீண்டும் அவன் அந்த கயவனோடு இணைத்து பேசுவது அருவருப்பை  தோற்றிவித்தது.

உண்மையா காதலிச்சானா? உண்மையா காதலிச்சவன் இப்படி தான் கட்டின பொண்டாட்டியோட கடந்த காலத்தை பத்தி பேசி பேசி துன்புறுத்துவாங்களா? என்று மனதோடு கேட்டு கொண்டவள் அவன் கோவத்தை சற்றும் மதிக்காது அங்கிருந்து சென்றால்..

இவர்களின் மறுவீட்டு விருந்து இப்படி தான் சண்டையும் சச்சரவுமாக முடிந்தது.

அன்று இரவே வீடு வந்து சேர்ந்தனர் சூர்யா ரஞ்சனி.. அவர்களுடனே சுந்தரமும் பூரணி பாப்பாவுடன் வந்திருந்தார்.

விஷ்வா குழந்தையை வாங்கி கொண்டான்.. தந்தை கைக்கு மாறியதும் உற்சாக குரல் எழுப்பி அப்பா அப்பா என்று விஷ்வாவின் கன்னத்தை எச்சில் செய்து கொண்டிருந்தாள் பூரணி.. காலையில் இருந்து அப்பாவை காணாத ஏக்கம்.. நீ தூங்க வேண்டியது தான விஷ்வா குழந்தையை நான் என்கூடவே வச்சிக்கிட்டு இருப்பனே என்றார். பரவால்ல பா, காலைல இருந்து பாப்பாவ பார்க்காம இருந்தது எனக்கும் ஒரு மாதிரி இருந்துச்சு என்றான்.

குழலி தூங்கிட்டாள என்றார். ஹ்ம்ம் ஆமாப்பா இப்போ தான் தூங்கினா என்று கூறியவன் எல்லாருக்கும் குட் நைட் சொல்லி அங்கிருந்து புறப்பட்டான்.

நேற்று போல் இன்றும் ரஞ்சனியின் மேல் ஆடை விலக்கி அவளை தன் கைவளைவுக்குள் வைத்து கொண்டு உறங்கி போனான் சூர்யா. ரஞ்சனியை பற்றி சிறிதும் கவலை கொள்ளாது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

46. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலிக்கு புதிதாக கிடைத்த ரஞ்சனியின் நட்பில் குதுகலமாக உணர்ந்தால்.. தேவி டீச்சர் அவளுக்கு அடிப்படை கல்வியை கற்று கொடுத்து அவளை நன்றாகவே மெருகூட்டி இருந்தார். இனி அவளுக்கு என் உதவி தேவப்படாது என்று கூறி அவரின் வகுப்புகளையும் முடித்து கொண்டார். வகுப்பின் கடைசி தினத்தன்று கற்று கொடுத்த குரு காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டாள் குழலி.

போகும் போது விஷ்வாவிடம் அடிப்படை தேவைக்கு ஏதேனும் ஒரு கோர்ஸ் சேர்த்து விட கூறியிருந்தார். விஷ்வாவும் அதை பற்றி யோசித்து வைத்து இருக்கிறான் தான்.. இப்போது தந்தையின் அலுவலகத்திற்கு செல்வதால் அதை கிடப்பில் போட்டான் விஷ்வா.

குழலி முதல் போல் அல்லாது இப்போது மிகவும் பிஸியாகி இருந்தாள். மாமனாரின் அலுவலகத்தில் வேலைக்கு செல்வதால். காலை சமையல் அறையில் அவளுக்கு முன்பு அங்கு ரஞ்சனி நின்று இருப்பாள், முதல் நாள் ரஞ்சனியை கண்டதும் ரஞ்சு அக்கா என்று உற்சாகமாக அழைத்து கொண்டு வந்தாள்..

குட் மார்னிங் குழலி என்று அவளும் அவளுக்குள் இருக்கும் வருத்தங்களை மறந்து குழலியோடு அன்பாக பழகினால்.. ரஞ்சு அக்கா ரஞ்சு அக்கா என்று அவளிடம் செல்லம் கொஞ்சுபவளை அக்கா வேண்டாம் ரஞ்சுனே கூப்பிடு என்று சொல்லி பார்த்து அலுத்துவிட்டால் ரஞ்சனி. இருவருக்குள்ளும் இப்போது நல்ல நட்பு உருவாகி உள்ளது. ரஞ்சனி தினமும் காலையில் எழுந்து கிட்சனிற்கு வந்து வேலையை துவங்கிவிடுவாள். குழலி அளவுக்கு சமைக்க தெரியாது என்றாலும் ஓரளவுற்கு பக்குவமாக சமைப்பால்..

இதனிடையில் மயூரியின் வேலையாள் பாக்கியத்திற்கு அங்கு வேலை அவ்வளவாக இல்லை.. முன்பெல்லாம் குழலி மட்டும் இருந்ததால் அவளுக்கு உதவி செய்யவும் மற்ற வேலைகளை செய்யவும் இரு வேலையாட்கள் இருந்தனர்.. இப்போது அந்த வீட்டின் இரு மருமகள்களுமே முக்கால் வாசி வேலைகளை முடித்து விடுவதால் இரு வேலையாட்கள் எதற்கு என்று யோசித்தால் குழலி.

அது மட்டுமின்றி பாக்கியம் வேலையே செய்யாமல், வீட்டு உறுப்பினர்கள் பார்க்கும் போது மட்டும் வேலை செய்வது போல் நடித்து கொண்டிருப்பதாக குழலிக்கு தோன்றியது. அதுவும் உண்மை தான் அவளின் பிரதான வேலை மயூரி மற்றும் மகேஷ்வரிக்கு விசுவாசமாக இருப்பதே. அவளை அழைத்து வேலைகளை சொல்லும் போது மட்டுமே அவள் அந்த வேலைகளை முனகி கொண்டே செய்வாள். அதுவும் குழலி மீது படியும் அவளது பார்வை அத்துனை இளக்காரமானதாக இருக்கும். 

ஒரு ஜோடி நேரம் காலம் பார்க்காமல் காதலில் உருகி கொஞ்சு கொண்டு இருக்கிறது என்றால் மற்றொரு ஜோடி முகத்தை திருப்பி கொண்டு ஏட்டிக்கு போட்டியாக ஏதேனும் செய்து கொண்டிருக்கும்.

சூர்யாவை பழி வாங்க வேண்டும் என்று எண்ணி, என் புருஷனுக்கு நான் தான் சமைப்பன் என்று வம்படியாக சமைத்து கொடுத்தாள். தோசையை கருக வைத்து, அவருக்காக நான் சட்னி அறைக்கிறேன் என கூறி உப்பையும் காரத்தையும் கொட்டி அவனை கதிகலங்க வைத்தால் ரஞ்சனி. அவள் வேண்டுமென்றே செய்கிறாள் என புரிந்தவன் மற்றவர்கள் முன்பு எதையும் காட்டி கொள்ளாமல் அவன் தட்டில் உள்ளதை காலி செய்வான். அப்போது எல்லாம் ரஞ்சனி முகத்தில் அவ்வளவு திருப்தியை காணுவான் சூர்யா.

ரஞ்சி என்னோட சாக்ஸ் காணும் கொஞ்சம் தேடி குடுடி என்று அனைவரின் முன்பும் மனைவியை பதமாக உள்ளே அழைத்து, அவளுக்கு சுகமான தண்டனைகளை கொடுப்பான். அவள் சட்னியில் கொட்டிய காரத்தை அவளையும் ருசிக்க வைப்பான். இப்போது எல்லாம் கணவன் முத்தமிடும் போது அவனிடம் இருந்து திமிருவதும் இல்லை, விலக முற்படுவதும் இல்லை. அவன் முத்தத்தில் கரைகிறாள் என்றே சொல்ல வேண்டும்.

தினமும் அலுவலகம் செல்லும் முன்பு அவன் கொடுக்கும் இந்த முத்தத்திற்கு பழகி இருந்தாள் ரஞ்சனி. அவனுக்கும் காலையில் மனைவியிடம் சரசமாடாமல் சென்றால் அன்றைய நாளில் எதையோ இழந்தது போல் தோன்றும்.. அன்று காலை இழந்ததை மாலை வந்து பெற்று கொண்டாள் தான் நிம்மதியாக மூச்சு விடுவான்.

இப்போது சூர்யாவிடம் குத்தல் பேச்சுக்கள் இல்லையா என்று கேட்டாள் அதல்லாம் எப்போதும் போல் உண்டு தான். ஆனால் உள்ளுக்குள் வலித்தாலும் ரஞ்சனி அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் போது மட்டுமே சூர்யாவிற்கு மண்டையில் உரைக்கும் அவன் பேசியதின் வீரியம்.

விஷ்வா.. குழலி..

காலை பரபரப்பாக அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்தான் விஷ்வா.. குழலி மதியம் போல் தான் அவளின் வேலைக்கு செல்வாள்  என்பதால், விஷ்வாவை கொஞ்சி கொண்டு இருந்தாள். ஷிவா இன்னைக்கு லீவு போடன் என்று செல்லம் கொஞ்சும் கிளியாக அவன் மூக்கை கடிக்க.

அவன் அதில் மயங்காமல். போடி வேலை இருக்கு என்றான்.

மூக்கை சுருக்கி முறைத்தால் குழலி. அதில் மோகம் கொண்டவன், கன்னத்தை வட்டமாக ஆப்பிள் போல் கடித்து வைத்தான். ஆர்ஹா வலிக்குது டா, அச்சோ பாப்பாக்கு வலிக்குதா என்று சொன்னவன் அந்த இடத்தில் மென்மையாக முத்தமிட்டு மீண்டும் அவன் அலுவலகம் கிளம்புவதில் கவனம் செலுத்தினான்.  குழலி அதே இடத்தில் நின்று அவனை முறைத்து கொண்டு இருக்க புரிஞ்சிக்கோ டி நிறைய வேலை இருக்கு லீவுலாம் போட முடியாது. அப்போதும் அப்படியே நின்று இருந்தாள்.

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், சரி ஈவினிங் நீயும் பாப்பாவும் ரெடியா இருங்க வெளிய போலாம் என்றான்.. ஹையா ஜாலி எங்க போறோம் என்று குழந்தை போல் குதுகளித்தால்.. உனக்கு எங்க போகணும்னு தோணுதோ சொல்லு அங்க போலாம் என்றான். Ecr ல லாங் டிரைவ் போலாமா என்றால்.. ஹ்ம்ம் போலாம் என்று கூறி குழலியின் இதழில் நீண்ட முத்த கவிதையை எழுதி விட்டு அலுவலகம் புறப்பட்டான் விஷ்வா..

மாலை போல் விஷ்வா குழலி பூரணி மூவரும் வெளியே கிளம்பி செல்லும் நேரம், மகேஸ்வரி நடு ஹாலில் மயங்கி விழுந்து இருந்தார். ஹய்யோ அத்தை என்ன ஆச்சு என்று குழலி தான் பதறி கொண்டு முன்னே சென்றால். அவள் குரல் கேட்ட பின்பே விஷ்வா என்ன ஆச்சு என்று அவள் பின்னே சென்றான். மகேஷ்வரியின் உடல் அனலாக கொதித்தது..

அறையில் இருந்த சுந்தரம் கூட வெளியே வந்து பார்த்து பதறி தான் போனார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் எழவில்லை. விஷ்வா அவன் அம்மாவை கையில் ஏந்தி கொண்டு காரை நோக்கி சென்று பின் சீட்டில் படுக்க வைத்தான். சுந்தரம் மனைவி அருகில் அமர்ந்து கொள்ள, குழலி குழந்தையுடன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். விஷ்வாவின் கையில் கார் அந்த தார் சாலையில் வேகமாக சென்றது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மகேஷ்வரி. மருத்துவர்கள் மயக்கம் தெளிய ஊசி போட்டு, சலைன் போட்டுவிட்டனர். ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பபட்டது. மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு டைபாய்டு காய்ச்சல் என்று கூறினார். இன்னைக்கு நைட் ஹாஸ்பிடல்லயே இருக்கட்டும் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் என்று கூறி சென்றார் மருத்துவர்.

சூர்யா ரஞ்சனியின் வேலை முடியும் நேரம் அவளுக்காக காத்திருந்து அவளை அழைத்து கொண்டு ஊர் சுற்றிவிட்டு தான் வீட்டிற்கு வருவான்.

சூர்யாவிற்க்கு அழைத்து விஷயத்தை கூறினான். அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனைக்கு ரஞ்சனியுடன் வந்து இருந்தான் சூர்யா.

உறக்கத்தில் இருந்த மகேஷ்வரியை அனைவரும் சென்று பார்த்தனர். அரவம் கேட்டு எழுந்தவள் அனைவரையும் கண்டு முகம் சுளித்தார்.. இப்போ எதுக்கு எல்லாரும் வந்து இப்படி சுத்தி நின்னு பாக்குறீங்க.. நான் என்ன செத்தா போய்ட்டன் என்று எரிந்து விழுந்தார். உனக்கு வாய் மட்டும் அடங்கவே அடங்காது டி என்று சுந்தரம் மகேஷ்வரியிடம் குரல் உயர்த்த. மகேஸ்வரி நிலமை சரியில்லாததால் வாய் மூடி கொண்டார்.

விஷ்வா எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள். சூர்யா தான் அவன் அம்மாவின் கை பிடித்து கொண்டு, நலம் விசாரித்தான் அம்மா இப்போ ஓகே வா உங்களுக்கு? உடம்பு எதாச்சும் பண்ணுதா என்று அக்கறையாக கேட்டான்.. நான் நல்லா தான் இருக்கன் சூர்யா. நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. இங்க நர்ஸ் இருப்பாங்கள அவங்க என்ன பார்த்துப்பாங்க என்றால். உறவின் அருமை இன்னும் புரியவில்லை.

இரு மருமகள்களும் அமைதியாகவே நின்றனர். நலம் விசாரிக்கிறேன் என்ற பெயரில் தானாக சென்று வாங்கி கட்டிக்கொள்ள விரும்பவில்லை. விஷ்வா அவன் அப்பாவிடம் அப்பா நானும் குழலியும் கிளம்பறோம். அவ பாப்பா வச்சு இருக்கா ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டாம் குழந்தைக்கு எதாச்சும் இன்ஃபக்ஷன் ஆகிடும் என்றான்.

ஆமப்பா நீங்க வீட்டுக்கு போங்க நான் நைட் இங்க இருக்கன் என்றார் சுந்தரம். வேண்டாம்பா நீங்க வீட்டுக்கு போங்க நான் இங்க இருக்கன் என்றான் சூர்யா. சுந்தரம் மறுத்து பேசவர, மாமா சூர்யாவே இங்க இருக்கட்டும் நீங்க சாப்பிட்டு டேப்லெட் போடணும்ல, நீங்க வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க மாமா என்று கூறினாள் ரஞ்சனி. சூர்யா ரஞ்சனியை பார்க்க அவள் அவன் பார்வையை தவிர்த்தாள். விஷ்வா குழலியும் அதையே சொல்ல சூர்யாவை தவிர அனைவரும் சென்றனர்.

அனைவரும் முன்னே செல்ல.. வாசல் தாண்டி சென்றவன் ரஞ்சனியை கைபிடித்து நிறுத்தினான், அவள் அதிர்ந்து முன்னே சென்றவர்களை பார்க்க, அவர்கள் இவளை கண்டு கொள்ளவில்லை. என்ன டி நான் இங்க இருக்கன்னு சொன்னதும் முகத்துல அவளோ சந்தோஷம் என்று பிடித்திருந்த கைக்கு அழுத்தம் கொடுத்து பற்களை கடித்தான்..

ஆமா நீ இல்லாம இன்னைக்கு நிம்மதியா தூங்க போறன் என்றால் அவளும் வீம்பாக.. ஓஹ் அப்படியா என்றவன் சடுதியில் அவளை பக்கத்தில் காலியாக இருந்த அறைக்குள் தள்ளி சென்றவன், இதழ் முத்தத்தில் துவங்கி, அவள் உடலில் கைகள் எல்லை மீறி அவள் திமிருவதையும் பொருட்படுத்தாமல் குட்டி ரேப் ஒன்றை நடத்திவிட்டான்.

பின் அவளிடம் இருந்து விலகி, போ நைட்டு ஃபுல்லா இதையே நெனச்சிட்டு தூங்கு என்றவன் இறுதியாக நெற்றி முத்தம் கொடுத்து அவளை வெளியே அழைத்து வந்தான். அவள் ஏதோ ஒரு உணர்வில் தத்தளிக்க அவள் முகம் கண்டு திருப்தியுற்றவன், அவனே அவளை அழைத்து கொண்டு விஷ்வா காரில் ஏற்றிவிட்டான்.

மறுநாள் காலை மகேஷ்வரி டிஸ்சார்ஜ் செய்யபட்டார். மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவரை கையோடு அழைத்து வந்துவிட்டனர் மகேஷ்வரியை பார்த்துக் கொள்ள.. வரவேற்பரையில் அமர்ந்து சத்தமாக பேசி கொண்டு இருந்தார். ரெண்டு மருமகள் இருக்காளுங்கனு தான் பேரு. ஒருத்தியும் நான் பார்த்துக்குறன்னு வாய திறக்கல. நான் பெத்த என் புள்ளைங்க மட்டும் வேணும். அவ அம்மா வேண்டாம் என்று ஏதேதோ பேசினார்.

சுந்தரம் தான் வாயை அடக்கினார்.. குழலி கை குழந்தைய வச்சு இருக்கா அவ எப்படி உன்ன பார்த்துக்க முடியும்? டைபாய்டு காய்ச்சல் உன்கிட்ட இருந்து குழந்தைக்கு போச்சுன்னா என்ன பண்றது..

அப்பறம் ரஞ்சனி இப்போ தான் கல்யாணத்துக்கு நிறைய லீவ் எடுத்தா.. சும்மா சும்மாலாம் லீவு எடுக்க முடியாது. உனக்கு அதையும் மீறி எதாச்சும் தேவனா என்கிட்ட சொல்லு. தேவல்லாமா பேசி வாங்கி கட்டிக்காத என்றார் சுந்தரம்.

அப்பா ஏன்பா இப்படி கத்தரிங்க? அம்மாக்கே உடம்பு சரியில்ல இந்த டைம்ல அவங்கள நாம தான் அன்பா பார்த்துக்கணும் என்றான் சூர்யா.

மகேஷ்வரி அவர் அறையில் ஓய்வெடுத்து கொண்டு இருந்தார். அவருக்கு தேவையான எளிமையான அதே நேரம் சத்தான உணவை குழலி சமைத்து கொடுத்தாள். விஷ்வா குழலியிடம் சொல்லி கொண்டு அலுவலகம் புறப்பட்டு சென்றான்.

சூர்யா குளித்துவிட்டு அறையில் படுத்து கொண்டு இருந்தான். ரஞ்சனியின் அரவம் கேட்க அவளை ஒரே இழுப்பாக அவனுள் இழுத்து கொண்டு அவள் மேல் படர்ந்தான்.. என்னடி நைட் நல்லா தூங்கனியா என்றான்.

ஹ்ம்ம் நிம்மதியா தூங்கனன் என்றால். ஆனால் சிவந்து இருந்த அவள் கண்கள் வேறு கதை கூறியது அவனிற்கு.. உண்மை என்னவென்றால் நேற்று சூர்யாவின் அனைப்பும் அவன் கதக்கதப்பும் இல்லாமல் தூக்கம் தொலைந்து மெத்தையில் புரண்டு கொண்டு இருந்தாள் என்பதே உண்மை. ஆனால் அதை அவனிடம் காட்டி கொள்ளாமல் கெத்தாக இருக்கிறாலாம்.

ஆனா நேத்து நைட்டு நீ இல்லாம எனக்கு தூக்கம் வரலடி என்று அவள் அணிந்து இருந்த சுடிதார் டாப்பை கழட்டி விட்டு அவள் மார்பின் கதகதப்பு வேண்டி அப்படியே அவள் மேல் தலை சாய்த்து கொண்டான்..

அச்சோ சூர்யா நான் ஆபீஸ் போகணும் எந்திரிங்க என்றால்.. கொஞ்சம் நேரம் அமைதியா இரு டி. செம டயர்டா இருக்கன் சீக்கரம் தூங்கிடுவன்.. நான் தூங்கனதும் நீ ஆபீஸ் போ..

சொன்னது போல் சிறிது நேரத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான். அவன் படுத்து இருந்த விதம் அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்த அவனை இன்னும் அவளோடு இறுக்கி கொண்டு அவன் தலையினுள் முத்தம் கொடுத்தாள் ரஞ்சனி. பின் மெதுவாக அவனை தலையணையில் படுக்க வைத்துவிட்டு அவள் வங்கிக்கு சென்றால்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

47. கண்கள் நிறைந்த ஓவியமே!!
மகேஷ்வரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்து கொண்டிருந்தது. அவரின் வேலைகள் அனைத்தும் ரஞ்சனி மற்றும் குழலி தான் பார்த்து கொண்டனர்.

தாதி பெண்ணவளை பணம் கொடுக்கிறோம் என்ற ஆணவத்தில் அளவிற்கு அதிகமாக வேலை வாங்கி சிடு சிடுத்து பேச என்னால் இவரை பார்த்து கொள்ள முடியாது என்று வந்த இரண்டாம் நாளே மகேஷ்வரிக்கு கும்பிடு போட்டு கிளம்பிவிட்டால். சூர்யா சுந்தரம் அடுத்த தாதிக்கு ஏற்பாடு செய்வதாக சொல்ல, வேண்டாம் மாமா நான் அத்தைய பார்த்துகுறன் என்று முன் வந்தாள் ரஞ்சனி.

நீ எப்படிமா பாத்துக்குவ நீ வேலைக்கு போகணும்ல என்றார் அக்கறையாக.. நான் காலையும் மாலையும் பாத்துக்குறன் மாமா, குழலி அவங்களுக்கு சமைச்சு மட்டும் குடுக்கட்டும். மதியம் பாக்கியம் அக்கா பார்த்துக்கட்டும் என்றால்.

அப்போதும் சுந்தரம் தயங்கி நிற்க, சூர்யா தான் அப்பா அதான் ரஞ்சனி சொல்றால, ரெண்டு நாள் முயற்சி பண்ணி பார்க்கட்டும் அவளால முடியலன்னா  வேற நர்ஸ் அரேன்ஜ் பண்ணலாம் என்றான். அதன் பின் சுந்தரமும் மறுக்கவில்லை.

மகேஷ்வரி பெரிதாக எதையும் அலட்டி கொள்ளவில்லை. ரஞ்சனி அன்று சமையல் அறையில் சமைத்து கொண்டிருக்கும் போது, குழலி நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நீ அத்தைக்கு சத்தானதை சமைச்சு மட்டும் குடு. நான் இல்லாத அப்போ சரசு இல்லனா பாக்கியம் இவங்கள வச்சு பார்த்துக்கோ.. நீ அவங்ககிட்ட போய் எல்லாம் வேலையும் செஞ்சிட்டு பாப்பாகிட்ட போகாத. பாப்பாக்கு காய்ச்சல் வந்துட போகுது. சின்ன குழந்தைங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மி அதான் சொல்றன் புரியுதா என்றால் குழந்தை மேல் உள்ள அக்கறையில். சரிக்கா நான் கவனமா இருக்கன் என்றால் குழலி.

மருந்தின் உபயத்தாலும் குழலியின் சத்தான உணவினாலும் அவரின் உடல்நிலை ஒரு வாரத்தில் நன்றாகவே முன்னேற்றம் கண்டது.

அதன் பின் ரஞ்சனி தான் மாமியாரை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டாள். மகேஷ்வரிக்கு குளிக்க உதவி செய்வது, கை கால் வலிக்கும் பொழுது இதமாக எண்ணை மசாஜ் செய்து கால்களை அழுத்தி கொடுப்பது என அனைத்தையும் முகம் சுழிக்காமல் செய்தால் ரஞ்சனி.
அவள் செய்யும் பணிவிடைகளை இது உன் கடமை செய்து தான் ஆக வேண்டும் என்பது போல் ஆணவம் குறையாத திருப்தியோடு ஏற்று கொண்டார் மகேஷ்வரி.

அன்று மாலை ரஞ்சனி மகேஷ்வரி அறையில் துணிகளை மடித்து கொண்டு இருந்தாள். எல்லாம் வேலையும் நீயே வந்து செய்ற இந்த வீட்டோடு மூத்த மருமகனு ஒரு போஸ்டிங்ல வீட்டையே வலம் வராளே அவ என்ன பண்றா..

ரஞ்சனிக்கு சலிப்பாக இருந்தது. அவளுக்கு மாமியாரின் குணம் நன்றாகவே புரிந்தது. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லி மருமகள் இருவரையும் அவருக்கு கீழ் கொண்டு வந்து சக்கையாக பிழிய நினைக்கிறார். அப்படி தான் ரஞ்சனியை செய்து கொண்டிருக்கிறார்.

அவ கை குழந்தைய வச்சிக்கிட்டு உங்கள வந்து எப்படி பாத்துக்க முடியும்.. உங்க காய்ச்சல் அவ மூலமா குழந்தைக்கு பரவாதா?? அதான் நானே அத்தைய பாத்துக்குறன் நீ அவங்களுக்கு சமைச்சு மட்டும் குடுன்னு சொன்னன் என்று சற்று விரைப்பாகவே பதில் கொடுத்தாள் ரஞ்சனி.

ஆமா நோய் வந்து படுக்கைல விழுந்து கெடக்குறன் பாரு.. அந்த குட்டி சாத்தானுக்கு காய்ச்சல் பரவமுமாம். ஏற்கனவே ஆத்தாள மாதிரி அப்பனை முழுங்கிடுச்சு, அது வளர்ந்து வரத்துக்குள்ள இந்த வீட்ல எத்தனை பேர முழுங்க போதோ என்று சிறு குழந்தை என்றும் பாராமல் வார்த்தைகளை கொடூரமாக பயன்படுத்தினால் மகேஷ்வரி.

ச்சீ நீங்கல்லாம் ஒரு பெரிய மனுஷியா.. நீங்கல்லாம் கடைசி வரைக்கும் திருந்த மாட்டிங்க. என்று மடித்து கொண்டிருந்த துணியை அப்படியே போட்டுவிட்டு. மகேஷ்வரி அழைப்பதையும் பொருட்படுத்தாமல் அவர் அறையில் வெளிவந்து அவள் அறைக்கு சென்றால் ரஞ்சனி.

இது ஒன்று போதுமே.. ரஞ்சனி வைத்த சிறு புள்ளிக்கு மகன் வந்ததும் ரோடு போட..

****

குழலி அவள் அறையில் குழந்தையுடன் தரையில் யானை சவாரி செய்து விளையாடி கொண்டிருந்தாள்.. குட்டி மகளவல் முளைத்த ஆறு அரிசி பற்கள் தெரிய வாய் திறந்து அழகா சிரித்து கொண்டிருந்தாள்.

அப்போது குழலியின் தொலைபேசி  அதன் இருப்பை காட்ட குழந்தையை, லாவகமாக அவள் முதுகில் இருந்து கீழே இறக்கி விட்டவள் போனை எடுத்து பார்த்தாள்.. அவள் அன்னை தான் அழைத்து இருந்தார்..

ஹயீ அம்மா என்று, அவளும் அவள் அன்னையின் அழைப்பில் கண்கள் பளிச்சிட அழைப்பை ஏற்றால்.

சொல்லு மா.. என்ன அதிசயமா நீயே என்ன கூப்பிட்டு இருக்க? முத்தரசிக்கு என் நியாபகம் கூட இருக்கா என்று கேட்டாள் குழலி.. அவள் குரலில் குறும்பை தாண்டிய ஏக்கம் அதிகமாகவே தெரிந்தது.

உன்ன மறந்தா தானடி நினைக்கிறதுக்கு. எனக்குன்னு இருக்க ஒரு சொந்தம் நீயும் பூரணியும் மட்டும் தான என்றார் எதிப்புறம் இருந்த முத்தரசி.

அம்மா ஏன் இப்படி சொல்ற?? இப்போ நமக்கு நிறைய சொந்தம் கிடைச்சு இருக்காங்க.. நாம பழைய மாதிரி யாரும் இல்லாதவங்க இல்ல என்றால். சரி டி பெரிய மனுஷி. நான் எதுக்காக போன் பண்ணணு கேளு என்றார் முத்தரசி.
திடீர் என்று ஒலித்த தாயின் உற்சாக குரலில் உள்ள உற்சாகம் அவளையும் தொற்றி கொள்ள. சொல்லும்மா ஏன் திடிர்னு கால் பண்ணி இருக்க? உன் குரல் வர சந்தோஷமா வேற இருக்கு என்றால் குழலி.

பின்ன எட்டு மாசம் கழிச்சு என் பொண்ண பார்க்க போறனே அந்த சந்தோஷம் தான் என்றார்..

கேட்ட குழலியால் நம்பவே முடியவில்லை.. என்னமா சொல்ற என்றால் திகைப்புடன். ஆமா மா, பரமு அண்ணன் தான் போன் பண்ணாரு நாளைக்கு வண்டி அனுப்புறன் நீ கிளம்பி ரெடியா இருமானு சொன்னாரு குழலி. நான் கூட வரனும், வந்து உன்ன ரஞ்சனி எல்லாரையும் பார்க்கணும்னு நெனச்சேன். அண்ணாவே வண்டி அனுப்புறன்னு சொன்னாரு. நானே பஸ்ல வரன்னு சொன்னாலும் கேட்க மாற்றாரு.. சுசிலா அண்ணியும் போனை வாங்கி ஏன் நாங்க வண்டி அனுப்புனா அதல வர மாட்டியானு கோச்சுக்கிட்டாங்க. அதான் நானும் சரி அண்ணி நீங்க அனுப்புற வண்டிலயே வரன்னு சொல்லிட்டன் என்று அனைத்தையும் மகளிடம் மறைக்காமல் கூறியிருந்தார் அன்னையானவர்.

குழலி அவள் அம்மா சொன்ன எதையும் முழுதாக கேட்கவில்லை.. அவள் அம்மா இன்னும் இரண்டு தினங்களில் தன்னை காண வர போகிறார் என்ற செய்தியில் சொல்ல முடியா மகிழ்ச்சியில் இருந்தாள்.

பின்னே தாயின் கைய்குள்ளவே இருந்தவள், எட்டு மாதங்களாக அன்னை மடி கிடைக்காமல் ஏங்கி அல்லவா இருக்கிறாள். அவை அனைத்திற்கும் தற்காலிக முற்று புள்ளி கிடைக்க போகுதே அதான் இந்த மகிழ்ச்சி.

பின் இருவரும் ஒரு வழியாக பேசி முடித்தனர், இடையில் பூரணி பாப்பாவையும் அம்மம்மா கிட்ட பேசுங்க குட்டிமா என்று குழந்தை காதில் போனை வைத்து மழலை மொழியில் பேச வைத்தால் குழலி.

சரிமா நீ பத்திரமா இரு, நாளைக்கு வண்டி ஏறும் போது கால் பண்றன் என்று கூறி அழைப்பை துண்டித்தால் குழலி.

அவ்வளவு மகிழ்ச்சி குழலி முகத்தில். குழந்தையிடம் குட்டிமா இன்னும் ரெண்டு நாள்ல அம்மம்மா வர போறாங்க என்று கூறி குழந்தையை தூக்கி சுற்றினால். தாயின் மகிழ்ச்சி குழந்தையும் ஒட்டி கொள்ள, அழகாக சிரித்து மகிழ்ந்தாள் பூரணி பாப்பா.

இரு அப்பாக்கு கால் பண்ணலாம் என்று கூறி, விஷ்வாவிற்கு அழைத்தால் ஆனால் அழைப்பு ஏற்கபடவில்லை.. மீண்டும் இருமுறை அழைத்தால். அப்போதும் அழைப்பு ஏற்கபடவில்லை.

***

மணி இரவு எட்டை நெருங்க, அப்போது தான் சூர்யா வீட்டிற்கு வந்து இருந்தான். சுந்தரம் சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார். வேலை முடித்து வந்தவன்  தந்தை இருப்பதை கண்டு வரவேற்பரையில் அமர்ந்து அவருடன் பேசி கொண்டு இருந்தான்.

மகனின் பேச்சு குரல் கேட்டதும், வெளியே வந்த மகேஷ்வரி.. இங்க பாரு டா சூர்யா எனக்கு இன்னும் உடம்பு முழுசா குணம் ஆகல, இப்பவும் உடம்பு அசதியா தான் இருக்கு. எனக்கு வேற ஒரு நல்ல நர்ஸ்ஸா ஏற்பாடு பண்ணு என்று கோவகுரலில் கூறினார்.

ஏன்மா என்ன ஆச்சு அதான் ரஞ்சனியும் குழலி அண்ணியும் உங்கள பார்த்துக்குறாங்களே என்றான். நல்லா பார்த்துக்குட்டாங்க போ. தோ மணி எட்டு ஆகி போச்சு இன்னும் உன் பொண்டாட்டி எனக்கு சோறு போடல.. உங்க எல்லார் முன்னாடியும் நல்லவ மாதிரி நான் பாத்துக்குறன்னு சொல்லிட்டு ஒரு ஒரு வேலையும் செய்யறதுக்கு முகத்தை அப்படி காட்றாளுங்க..

சாய்ங்காலம் என்ன அந்த பேச்சு பேசிட்டு போறா.. என்ன பார்த்து நீங்கல்லாம் ஒரு பெரிய மனுஷியானு ச்சீனு சொல்றா நான் என்ன நாயா என்ன பார்த்து எப்படி அவ ச்சீன்னு சொல்லலாம்..

என்று கண்ணை கசக்க.. சூர்யாவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.. அவன் தந்தையின் முகத்தை காண. அவர் வாயோடு முனுமுனுத்தார் நடிக்குறா நம்பாத என்று. சூர்யா ஏதோ பேச வாய் திறக்க..

ஏன் நான் பேசுனத மட்டும் சொல்றிங்க? நீங்க பேசுன கேவலமான வார்த்தையும் சேர்த்து சொல்லுங்க என்ற ரஞ்சனியின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலித்தது.

சூர்யா ரஞ்சனியிடம் என்ன ஆச்சு ரஞ்சி என்றான்? உங்க அம்மாவுக்கு வாய் சரியில்ல என்றால் வெறுப்பான குரலில். கொஞ்சம் மரியாதை குடுத்து பேசுறியா அவங்க என்னோட அம்மா உனக்கு அத்தை என்றான் அழுத்தமாக. மரியாதை அவங்க நடந்துக்குற முறைல தானா வரனும்.. பொறுமை இழந்தவன், ஹேய் என்ன ஆச்சுன்னு சொல்லு டி என்றான் கொஞ்சம் குரல் உயர்த்தி. உங்க அம்மாகிட்டயே கேட்டுக்கோங்க என்றவள் சூர்யாவையும் மகேஷ்வரியையும் ஒன்றாக முறைத்துவிட்டு அங்கிருந்து சமையலறை சென்றால்.

சூர்யா தனக்காக மனைவியிடம் சண்டை போடுவான் என்று மகேஷ்வரி நினைத்து கொண்டிருக்க.. இப்படி சப்பென்று ஆகி போனதில் அவருக்கு ஏமாற்றமே.

மறுபுறம், சூர்யா என்ன ஆச்சுமா என்று அவன் அம்மாவை பார்க்க, எல்லாம் உங்கள சொல்லணும் தராதறம் தெரியாத இதுங்கள எல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கணவனை சாடிவிட்டு அவள் அறைக்குள் புகுந்து கொண்டார். பின்னே அவர் பேசியதை அவரால் சொல்ல முடியாதே. வீட்டில் உள்ள அனைவரும் பொங்கி விடுவார்களே, அதனால் அங்கிருந்த சுந்தரத்திடம் அவர் கடுப்பை காட்டிவிட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் ஒரு தட்டில் நான்கு இட்லியும், ஒரு கிண்ணத்தில் சட்னி ஒரு கிண்ணத்தில் சாம்பார் என எடுத்து வந்து சூர்யா கையில் திணித்து உங்க அம்மாகிட்ட குடுத்துடுங்க என்று கூறினாள் ரஞ்சனி. அவள் கடமையில் இருந்து அவள் எப்போதும் தவறியது இல்லை. பின் அவள் மாமனாரிடம் மாமா வாங்க சாப்பிடலாம் என்று அக்கறையோடு அழைத்தாள்.

அப்போது தான் குழலியும் மேலே இருந்து குழந்தையோடு துள்ளி குதித்து கொண்டு வேகமாக வந்தாள். மாமா மாமா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பரமு மாமா அம்மாவ கூட்டிட்டு வர நாளைக்கு வண்டி அனுப்ப போறாராம் நாளைக்கு மறுநாள் அம்மா இங்க வந்துடுவாங்கலாம் என்று துள்ளளோடு கூறினாள் குழலி.

அவள் குரலில் இருந்த மகிழ்ச்சி அவரையும் ஒட்டி கொள்ள, ஆமாமா என்கிட்டயும் சொன்னான். நானே இத உன்கிட்ட சொல்லலாம்னு நினச்சேன் ஆனா நீ கீழயே வரல என்று அவரும் மருமகளின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டார்.

என்ன குழலி மாமாகிட்ட மட்டும் தான் எல்லாத்தையும் சொல்லுவியா என்கிட்டலாம் சொல்ல மாட்டியா என்ற ரஞ்சனியிடம் உங்ககிட்ட சொல்லாமலா அக்கா என்றவள் அவளிடமும் அவள் அன்னை வரும் விஷயத்தை பகிர்ந்தாள்.. அன்னைக்கு உணவு கொடுத்துவிட்டு வெளியே வந்த சூர்யாவின் காதிலும் குழலியின் உற்சாக குரல் கேட்டது.. சூப்பர் அண்ணி. எப்போ வராங்க அத்தை என்று கேட்டு கொண்டே அவர்களின் பேச்சில் கலந்து கொண்டான் சூர்யா.

 

 

48. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+
18+ episode பிடிக்காதவர்கள் கடந்துவிடவும்


விஷ்வாவின் குழு ப்ராஜெக்ட்டை முடிக்க இன்னும் இரு தினங்களே இருக்க அலுவலக வேலை அவனை முழுதாக சுருட்டி கொண்டது.

வேலையின் இடையே சைலண்டில் இருந்த மொபைலை எடுத்தவன் அப்போது தான் குழலியிடம் இருந்து வந்த அழைப்பை கண்டான். உடனடியாக அவளுக்கு அழைத்தவன், குழலி இன்னைக்கு வர லேட் ஆகும் டி.. வேலை இருக்கு என்றான் அவசரமாக. எவ்ளோ நேரம் ஆகும் ஷிவா? தெரில நீ சாப்பிட்டு தூங்கு. நான் வர வரைக்கும் முழிச்சிட்டு இருக்காதா என்க. அவள் குரல் சோர்ந்து ஒலித்தது சரி என. என்ன டி குரல் சொங்கி போச்சு.. உங்கள மிஸ் பண்றன் ஷிவா என்றால் ஆழ்ந்த குரலில்..

அவளின் ஆழ்ந்த குரலும் அந்த வார்த்தையும் அவனுக்கு வேலையின் நடுவே குடித்த காஃபி போல் அவ்வளவு புத்துணர்வாக இருந்தது. போனில் மொச்சு மொச்சு என்று இச்சுக்களை வைத்தவன், முடிஞ்ச அளவுக்கு சீக்கரம் வந்துடுறன் டி செல்ல குட்டி என்று கொஞ்சினான்.

மறுபுறம் இருந்தவள் அவனின் முத்தத்தை வாங்கி கொண்டு கன்னம் சூடாகி நின்றாள்.

பாப்பா என்ன பண்றா?? இப்போ தான் சாப்பிட்டா விளையாடிட்டு இருக்கா என்றால். சரி ஓகே பை வீட்டுக்கு வந்து பேசுறன் என்று அழைப்பை துண்டித்து இருந்தான் விஷ்வா.

இரவு பத்து மணி போல் தான் வீடு வந்து இருந்தான் விஷ்வா..

மெதுவாக அறைக்கதவை திறந்தவன், கண்டது என்னவோ சோபாவில் முழித்து கொண்டு அமர்ந்து இருக்கும் குழலியை தான்.

விஷ்வாவை கண்டதும், கண்கள் மின்ன ஓடி போய் அவனை தாவி அனைத்து கொண்டாள். மனைவியை அனைப்பில் இருத்தி கொண்டே, அவன் இடப்புற தோளில் மாட்டியிருந்த லேப்டாப் பேகை கழட்டி வைத்தான்.

குழலின் முகம் கண்டதும் அவனிடம் இருந்த சோர்வு பறந்து போய், இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டி கொண்டது.. அவளை அப்படியே தூக்கி இரு சுற்று சுற்றி கீழே இறக்கிவிட்டான் விஷ்வா.

அவன் போனில் கொடுத்த முத்தத்தை, அவள் இப்போது அவனுக்கு நேரில் கொடுத்து திணற வைத்தாள். இனிமேல் லேட்டா வராதீங்க ஷிவா. உங்கள ரொம்ப மிஸ் பண்ணன் தெரியுமா என்று செல்ல சிணுங்கல் கொண்டாள் குழலி.

ஆனா நான் லேட்டா வந்ததுனால தான நீ எனக்கு இவ்ளோ முத்தம் கொடுத்த என்று கூறியவன், மெத்தையில் உறங்கி கொண்டு இருந்த குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு, குழலியின் பதிலை எதிர்பார்க்காமல் அவளை அப்படியே குளியல் அறைக்குள் தூக்கி சென்றான்.

என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திங்க ஷிவா? கணவனின் பார்வையில் விடையை தெரிந்து கொண்டே கேட்டவள் அங்கிருந்து ஓட பார்த்தாள்.

அவள் செயலை முன்பே சுதாரித்தவன் போல், அவள் சேலை முந்தாணியை பிடித்து இழுத்தவன், அதை அவன் கையில் சுருட்டி கொண்டு அவளை அப்படியே பின்னால் இழுத்தான்.

நான் ஏன் உன்ன இங்க தூக்கிட்டு வந்தன்னு தெரியாம தான் இங்க இருந்து ஓட பார்த்தியா என்று குரலில் கேலியை மறைத்து கொண்டு கேட்க. ஷிவா நான் ஈவ்னிங் தான் குளிச்சன் என்று சின்ன குரலில் கூறினாள்.

பரவால்ல என்கூட இன்னொரு வாட்டி குளி என்றவன் அவர்களுக்கு மேல் இருந்த ஷவரை திறந்து விட்டான், குளிர்ந்த நீர் பூத்தூரளாக அவர்கள் மீது விழ, குழலியின் உடல் அந்த சில்லென்ற நீருக்கு சிலிர்த்து அடங்கியது. சிங்காரியின் சிவந்த முகத்தை ரசித்து கொண்டே, அவன் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்டி ஆடை கலைத்தான் விஷ்வா.

சட்டென்று முகிழ்த்த நாணத்தோடு முகத்தை மூடி கொண்டாள் காதல் கண்ணாட்டி. வாய் விட்டே சிரித்தான் விஷ்வா.. என்ன டி என்ன ஏதோ புதுசா பாக்குறா மாதிரி முகத்தை மூடிக்கிட்டு திரும்பிகிட்ட என்று அவளை பின்னிருந்து அனைத்தவன் அவளின் துகில் உரிக்கும் துச்சாதனனாய் மாறி போனான் விஷ்வா.

மனைவியின் சிணுங்கல்களை ரசித்து கொண்டே அவளை தன்னோடு இறுக்கி கொண்டான். அவளின் கந்தரத்தில் குட்டி குட்டி முத்தங்களை வைத்து கொண்டே அவளை உணர்வுகளில் துடிக்க வைத்தான் விஷ்வா. என்ன பாரு டி என்று அவள் காதோரம் கிசுகிசுத்தவன் அவள் திரும்புவதற்கு சற்றும் அவகாசம் கொடுக்காமல் அவளை முன்னே திருப்பி அவளின் பால் நிலவில் அமுதை பருக முயன்று ஏமாந்து போனான். பசியோடு கீழ் இறங்கியவன் ஏமாந்து போய், அவளின் முகத்தை பார்த்து கொண்டே எனக்கில்லையாடி என்று கேட்டான்.. பாவமாக அவன் கேட்ட விதத்தில் குழலிக்கு அவனை அப்படியே அல்லி  கொஞ்ச தோன்றியது..

பாப்பா இப்போ தான் தூங்குனா ஷிவா என்று அவள் உதடு கடித்து சொன்ன விதத்தில் புரிந்து கொண்டான் எல்லாம் அவன் மகளரசியின் வேலை என்று.

பசிக்குது என்று சிணுங்கி கொண்டே, கண் முன் முழு விருந்தாக இருந்த குழலியை முழுதாக சாப்பிட தொடங்கினான் விஷ்வா.

நீயும் கடிச்சு வை குழலி.

இங்க புடிச்சுக்கோ. என்று அவன் இட்ட கட்டளைகளில் குழலிக்கு தான் மூச்சு முட்டியது.

சில விஷயங்களை குழலியை செய்ய வைப்பதற்குள் அவன் பாடு திண்டாட்டமாகி போனது.

நீருக்கடியில் இருவரும் கொண்ட கலவியில் அந்த குளியலறை வெட்கபட்டு போனது. குழலியால் நிற்க முடியாமல் தள்ளாடுகையில் அவளை தூக்கி அவன் இடுப்பில் அமர்த்தி கொண்டான் விஷ்வா.

குழலி என்று அவன் உச்சம் எய்துகையில் ஒலிக்கும் அவளின் பெயர் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

முழுதாக இரண்டு மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தான் விஷ்வா, ஷிவா டவள் குடுங்க என்று மெல்லிய குரலில் அவள் கேட்க.. அப்படியே வா டி என்றான்.

ப்ளீஸ் ஷிவா, டவல் கொடுங்க என்று கதவின் பின் ஒளிந்து கொண்டு  கூட்டினுள் இருந்து எட்டி பார்க்கும் குருவி போல் தலையை மட்டும் வெளியே நீட்டி கெஞ்சி கேட்டாள் குழலி. நானும் உன்ன மாதிரி தான டி இருக்கன், நான் என்ன இப்படியா வெட்கப்படுறன்.. சொல்ல போனா எனக்கு உன் முன்னாடி இப்படி நிக்க தான் புடிச்சு இருக்கு என்று அவன் கிளுகிளுப்பாக பேச. வாய மூடுங்க ஷிவா என்று கன்னம் சிவக்க கூறியவள் அவன் கையில் உள்ள டவளை பிடுங்கி கொண்டு குளியல் அறை கதவை சாற்றி கொண்டாள். சிறிது நேரத்திற்கு முன் இருவரும் கலவி புரிந்த வெவ்வேறு கோணங்கள் நினைவில் வந்து போக இதயம் இன்பமாக அதிர்ந்தது.

விஷ்வா மெத்தையில் அமர்ந்து பூரணி பாப்பாவை கொஞ்சி கொண்டு இருந்தான். குழலி அதற்குள் கைக்கு கிடைத்த இரவு உடை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள், விஷ்வாவிடம் வந்தாள். தூங்கற குழந்தையை கொஞ்ச கூடாது ஷிவா என்று அவள் சொல்ல.. எனக்கு அதலலாம் நம்பிக்கை இல்லை குழலி என்றான்.

பின் குழந்தையின் பாதத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து மனைவியிடம் சென்றான். நேரம் இரவு 12. சரி வாங்க சாப்பிடலாம் என்றால் குழலி. அவள் கையில் உள்ள டவளை வாங்கி தலையை நன்றாக துவட்டிவிட்டவன்.. ட்ரயரை எடுத்து கொண்டு அவளை பால்கனி அழைத்து சென்று அவளின் நீள கூந்தளை ஈரப்பதம் இல்லாமல் நன்றாக உலர்த்திவிட்டான்.

பின் பால்கனி டீபாய் மீது ஹாட் பாக்ஸில் உள்ள சப்பாத்தி மற்றும் வைட் குருமாவை எடுத்து வைத்து பரிமாறினால். குழலியையும் இரண்டாம் முறை உண்ண வைத்தான்.

சாப்பிட்டு முடித்தவர்கள், பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு பால்கனியிலே சிறிது நேரம் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். குழலி விஷ்வா மடி மீது அவன் முகத்தை பார்த்தவாரு அமர்ந்து இருந்தாள். அவளின் மெல்லிடையை சுற்றி வளைத்து இருந்தான் விஷ்வா.

இன்னைக்கு எவ்ளோ வொர்க் தெரியுமா குழலி? ரொம்ப பிரஷர்ரா இருந்துச்சு. நம்ம லவ் மேக் பண்ண அப்பறம் தான் எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம பிளசன்ட்டா ஃபீல் பண்றன் என்று கண்கள் மூடி சிலாகித்து கூறினான் விஷ்வா. குழலியின் இதழில் வெட்க புன்னகை. மேலும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் கணவனவன்.

கால் வலிக்குதா என்று கேட்டவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவளை அந்த ஒற்றை சோஃபாவில் அமர வைத்து விட்டு அவன் தரையில் அமர்ந்து குழலியின் கால்களை மென்மையாக பிடித்துவிட்டான். குழலிக்கு அவன் கூடல் கொண்ட விதத்தில் உண்மையில் கால் வலித்தது தான். இருந்தும் அவள் வலியை காட்டி கொள்ளவில்லை. தன் உணர்வு புரிந்து செயல்படும் கணவனின் மீது மேலும் காதல் கூடி போனது.

ஷிவா உங்ககிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டன் என்றால் நியாபகம் வந்தவளாக..

சொல்லு டி என்றான்.

நாளைக்கு அம்மா வராங்க ஷிவா என்றால் முகத்தில் ஒட்டி கொண்ட புதுவித மகிழ்ச்சியோடு..

அத்தையா? நாம தான போறதா பிளான் பண்ணோம் என்றான்.

ஹ்ம்ம் ஆமா ஆனா, பரமு மாமா தான் இன்னைக்கு வண்டி அனுப்பறாராம், நாளைக்கு நைட் அம்மா இங்க வந்துடுவாங்க என்றால்.

சூப்பர் டி, அம்மா வந்த பிறகு புருஷன மறந்துடாத என்றான் குறும்பாக.

அப்பறம் இன்னொரு விஷயம் ஷிவா.. என்று தயங்கி தயங்கி பேசினால் குழலி..

பாதத்தை லேசாக கிள்ளியவன் என்னடி என்கிட்ட தயங்குற சொல்லு என்றான்.

அ. அது.. அம்மாவ இங்க ஒரு மாசம் தங்க வச்சுக்கலாமா விஷ்வா? எனக்கு எங்க அம்மா கூட கொஞ்சம் நாள் இருக்கணும்னு ஆசையா இருக்கு என்றால்..

விஷ்வா அவளை தீ விழி விழித்தான். அதில் அவளுக்கு என்னமோ போல் ஆகியது.. தலையை தாழ்த்தி கொண்டாள் அவன் பார்வையை சந்திக்க திராணியற்று.. இப்படி கேட்டு இருக்க கூடாதோ என்பது வரை யோசித்தால்.

அவள் தாடை பிடித்து நிமிர்த்தியவன் அவன் முகத்தை பார்க்க வைத்தான். இத என்கிட்ட கேட்க ஏன் குழலி இவ்ளோ தயங்குற? நீ இந்த மாதிரி தயங்கும் போது தான் நீ என்ன தள்ளி வைக்குறா மாதிரி இருக்கு குழலி. என் பொண்டாட்டிக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு அத நீ முழுசா எடுத்துக்கணும்னு நினைக்கிறன். ஆனா நீ என்கிட்ட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட தயங்குற டி என்றான்.

சரி சாரி ஷிவா என்று கன்னம் பிடித்து கொஞ்சி புருஷனை சமாதானம் செய்தால் குழலி, சமாதானம் ஆக சில முத்தங்களை பரிசாக பெற்று அவளுடன் சமாதான உடன்படிக்கைக்கு வந்தான் விஷ்வா.

இது உன் வீடு குழலி, அத்தைய ஒரு மாசம் இல்ல.. காலம் பூரா கூட இங்கயே தங்க வச்சுக்கலாம். நான் அத்தை கிட்ட பேசுறன் என்றான்.. குழலிக்கு அவள் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையே இல்லை..

இல்லை விஷ்வா அது வேண்டாம் இப்போதைக்கு ஒரு மாசம் மட்டும் என்கூட இருக்கட்டும் அதுவே போதும்.. ஃபியுச்சர்ல வேணும்னா அவங்கள நம்ம கூட தங்க வச்சுக்கலாம் என்றால் அவளின் மாமியாரின் குணத்தை நினைத்து.

ஆனா ஷிவா அத்தை எதாச்சும் சொல்வாங்களா? என் அம்மா இங்க ஒரு மாசம் தங்குனா என்றால்.. சிறு தவிப்போடு..

குழலியின் மறுப்பு எதனால் என்று விஷ்வாவிற்கு இப்போது புரிந்தது.. அதனால் அவள் முடிவுக்கே சம்மதித்தான் இப்போது. ஆனால் வருங்காலத்தில் அவன் மாமியாரை அவர்கள் வீட்டிற்கே அழைத்து வந்து தங்களோடு இருத்தி கொள்ளவே முடிவு செய்துள்ளான்.

இப்போது அவளின் கேள்விக்கு, அம்மாவ நான் பார்த்துக்குறன் அத்தைய இங்க எவ்ளோ நாள் வேணும்னாலும் தங்க வச்சுக்கலாம் என்றான்..

நடக்க போகும் சம்பவம் தெரியாமல்..

ரொம்ப சந்தோஷம் ஷிவா என்று சடுதியில் அவனோடு கீழே இறங்கி அவன் மடியில் சரிந்தாள் குழலி. தன் மீது பூ குவியலாக விழுந்த மனைவியோடு அப்படியே தரையில் சாய்ந்தான் விஷ்வா.. பிறகென்ன நிலவு மகள் நாணி மேகத்தினுள் நுழையும் அளவிற்கு ஒரு கூடலை அரங்கேற்றினான் விஷ்வா. கணவனின் ஆசையை புரிந்து அல்லி அல்லி கொடுத்தாள் மணவாட்டி அவள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

49. கண்கள் நிறைந்த ஓவியமே!!
இரவு நடந்த கூடலில், காலையில் தாமதமாக தான் எழுந்தனர் கணவன் மனைவி இருவரும், விஷ்வா இழுத்து போர்த்தி கொண்டு தூங்க, குழலி  மெதுவாக கண் திறந்தால். அவளுக்கு வலபுரம் உறங்கி கொண்டிருந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்து எழ முயன்றவளால் எழ முடியவில்லை. விஷ்வா தான் அவளை மீண்டும் பிடித்து மெத்தையில் சரித்து இருந்தான்.

ஷிவா டைம் ஆகிடுச்சு என்று நேரத்தை பார்த்து மெலிதான குரலில் கூறினாள். எனக்கு ஒரு டர்ட்டி கிஸ் குடுத்துட்டு போ என்றான். அச்சோ ஷிவா போங்க, காலைலயே வம்பு பண்ணிக்கிட்டு என்று அவள் கணவனின் கைகளில் இருந்து விடுபட்டு எழ முயன்றால். இம்முறையும் பரிதாபமாக தோற்று போனாள் குழலி. கேட்டத குடுத்தாதான் எந்திரிக்க முடியும் என்றான் கண்களை திறவாமலே.. பாப்பாவ விட ரொம்ப பண்றிங்க ஷிவா என்றால். ஐ க்நொவ் உதட்டில் சிரிப்பை மறைத்து கொண்டு கூறினான். அதற்கு மேல் கணவனிடம் மல்லுக்கட்ட முடியாமல் அவன் கேட்ட முத்தத்தை குடுத்து நிமிர்ந்தால்.

என்னடி இது உதட்டுல ஈ உக்காந்துட்டு போனா மாதிரி ஒத்தி எடுக்குற, நான் உனக்கு இப்படியா முத்தம் குடுக்க சொல்லி குடுத்தன் என்று அவன் விஷமமாக கேட்க, அச்சோ காலைல ஏன் இப்படி படுத்தி எடுக்குறீங்க அவள் சலித்து கொண்டாள்.. ஓஹ் அப்போ எனக்கு முத்தம் குடுக்க உனக்கு புடிக்கல அப்படி தான?? சரி போ இவ்ளோ சலிச்சிக்கிட்டு ஒன்னும் நீ எனக்கு முத்தம் குடுக்க வேண்டாம் என்று அவளை கண்டு கொள்ளாமல் எழுந்து குளியலறையில் புகுந்து கொண்டான் விஷ்வா. உள்ளே சென்றவன் முகத்தில் ஒரு கள்ள புன்னகை ஒட்டி கொண்டது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவன் நினைத்தது நடக்க போகிறதே.

அவன் மனம் ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று எண்ணி முடிப்பதற்குள் குளியல் அறை கதவு தட்டப்பட்டது.. உல்லாசமாக சிரித்தவன், தோ வரன் டி பொண்டாட்டி என்று சிடு சிடுப்பாக முகத்தை மாற்றி கொண்டு கதவை திறந்தான். வெளியே குழலி அவனை முறைத்து கொண்டு நின்று இருந்தாள்.

என்ன டி என்று அவனும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு கேட்க, அவனை இடித்து கொண்டு குளியலறை உள்ளே புகுந்து கொண்டு கதவை மூடி கொண்டாள். எதுக்கு இங்க வந்த? நான் குளிக்கணும் வெளிய போடி என்றான் வேண்டுமென்றே.. அவள் எதுவும் பேசாமல் அவனின் இறுகிய தோள்களில் அவளின் கைகளை மாலையாக போட்டு கொண்டு அவன் கேட்ட முத்தத்தை வஞ்சனை இன்றி கொடுக்க துவங்கினாள்..

குழலி அவன் உயரத்திற்கு எக்கி முத்தம் கொடுக்க சிரமம் கொள்ள, நான் இருக்கும் போது நீ கஷ்ட்ட படலாமா என்று எண்ணியவன் அவளை மேலோடு தூக்கி கொண்டான்.

பின், அங்கு இங்கு என அவளை சீண்டி, அவள் உணர்வுகளை தூண்டி விட்டவன், காலை நேர உடற்பயிற்சியை குழலியுடன் குளியல் அறையினுள் செய்து முடித்தான்.

உனக்கு சலிக்கவே சலிக்காத ஷிவா என்று அவள் குலுங்கி கொண்டே அவன் தோள் மீது சரிய.. சலிக்க மாட்டிக்குதே டி என்று பல்லை கடித்து கொண்டு அவள் பெயர் உச்சரித்து உச்சம் எய்தினான் விஷ்வா.

அவளை தூக்கி வைத்து கொண்டே சில நிமிடம் நின்றவன், பின் ஷவரை திறந்து விட்டு இருவரும் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தனர். குழலி தான் சோர்ந்து இருந்தாளே தவிர, விஷ்வா ஊக்க மருந்து ஏற்றியது போல் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தான். நீ ரெஸ்ட் எடு டி நான் கீழ போறன் என்று சொன்னாலும் கேட்காமல் ஆடை அணிந்து கொண்டு கீழே வந்தாள். குழந்தையை விஷ்வா தூக்கி கொண்டான், பூரணி பாப்பா இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தாள்.

தந்தையின் அறையில் குழந்தையை கிடத்திவிட்டு உணவு மேஜைக்கு வந்தான் விஷ்வா, இன்றைய சமையல் ரஞ்சனியின் கைபக்குவத்தில் தயாராகி இருந்தது.

குழலியின் வீங்கிய உதடும் கன்றிய தோள் பட்டை காயமும் அவளின் தாமதத்திற்கான காரணத்தை சொல்லாமல் சொல்லியது வனிதை அவளுக்கு. குழலியை சீண்டும் விதமாக என்ன ஆச்சு குழலி கை இப்படி சிவந்து இருக்கு என்று அவளின் முழங்கையை பார்த்து கேட்டாள் ரஞ்சனி.. அப்போது தான் குழலியும் அவள் கையை பார்த்தாள், விஷ்வாவின் வன்மையான பிடியில் கை கொஞ்சம் சிவந்து தான் போய் இருந்தது.

அ.. அது அக்கா எதாச்சும் பூச்சி கடிச்சு இருக்கும்னு நினைக்குறன் என்று திக்கி திணறி சமாளித்தால் குழலி.. அப்படியா என்று விஷமமாக சிரித்தவள்.. அவளை அங்கிருந்த விருந்தாளிகளின் அறைக்கு அழைத்து சென்று கண்ணாடியின் முன் நிறுத்தினாள், இப்போது தான் குழலி அவளை கண்ணாடியில் முழுதாக பார்க்கிறாள். விஷ்வா கூட அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் குழலியை முழுதாக கவனிக்க தவறினான்.

குழலி ரஞ்சனியை தயக்கம் கொண்டு பார்க்க.. ரொம்ப பெரிய பூச்சு கடிச்சிடுச்சு போல என்று கூறி நமட்டு சிரிப்பு சிரித்தாள் ரஞ்சனி. சரிவிடு கடிச்ச பூச்சியை கொஞ்சம் யார் கண்ணுக்கும் தெரியாத இடத்துல கடிக்க சொல்லு என்று விஷமமாக கூறி அவளை தனியாக விட்டு வெளியே சென்றால் ரஞ்சனி.

ஷிவ்வ்வாவாவாவா என்று அழுத்தமாக சிணுங்கி, அவள் உடலில் உள்ள சிவந்த இடங்களையும் பற்த்தடங்களையும் முடிந்த அளவுக்கு அவள் சேலையை கொண்டு மறைத்து இருந்தாள்.

அதற்குள் குழலி என்று வெளியே அவள் கணவன் அவளை அழைத்து இருந்தான், வேறெதற்கு அவள் கையால் உணவு பரிமாற தான்.. கணவனை பொய் கோபத்தோடு நெருங்கியவள் முனகி கொண்டே சுட சுட இட்லியை எடுத்து அவன் தட்டில் பரிமாறினாள்.. என்னடி என்று அவள் சேலை விலகிய இடுப்பை மென்மையாக கிள்ளி வவிட்டான். அதில் துள்ளி எழுந்தவள், ஷிவா நாம ஹால்ல இருக்கோம், கொஞ்சம் சும்மா இருங்க என்றால் கெஞ்சளாக.. அதற்க்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் சமத்து பிள்ளையாக சாப்பிட்டு முடித்தான் விஷ்வா.

பின் குழந்தையை கொஞ்சிவிட்டு, மனைவியிடம் சொல்லி கொண்டு அலுவலகம் புறப்பட்டான்.

சூர்யா.. ரஞ்சனி..

வழக்கம் போல் இருவரும் எலியும் பூனையுமாக தான், அறைக்குள் சுற்றி வந்தனர்.

நேற்று இரவே ரஞ்சனியிடம் அவன் அம்மா பேசியதை கேட்டு தெரிந்து கொண்டான்.

ச்சை ஏன்தான் அவங்க இப்படி இருக்காங்களோன்னு தெரில டி, அடுத்தவங்க மனச புரிஞ்சிக்க மாற்றங்க. குழந்தைய போய் இப்படி சொல்லிட்டாங்களே என்று மிகவும் வேதனை பட்டான் சூர்யா.

அதான் அப்போவே சொன்னனே உங்க அம்மாவுக்கு வாய் சரியில்லன்னு அதான் இப்படி பேசிட்டு இருக்காங்க என்றால் ரஞ்சனி.

சரி விடு டி, வயசாகிடுச்சு ஏதோ பேசிட்டு போறாங்க கண்டுக்காம விட்ரல்லாம் என்று சொல்ல.

அடுத்தவங்கள இந்த மாதிரி பேசும் போது மட்டும் உங்க அம்மாவுக்கு வயசாகிடுமா?? லோ ஹிப்ல சாறி கட்டிக்கிட்டு ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டு ஹேர் கலரிங் பண்ணிக்கிட்டு லேடீஸ் கிளப், பப்க்கு போகும் போதுலாம் உங்க அம்மாவுக்கு வயசாகாதா என்று நறுக்கென்று கேட்டுவிட்டால் ரஞ்சனி.

ரஞ்சனி என்றான் அழுத்தமான குரலில்.. அவன் பார்வையில் தடுமாறி நின்றாள் சில நொடிகள்.

நீயும் ஒரு பொண்ணு தான, அவங்க டிரஸ் பண்றத இப்படி கீழ் தரமா கமெண்ட் பண்ற.. பெண்ணுக்கு பெண் தான் எதிரி போல என்றவன்.. இங்கப்பாரு, அவங்க எப்படி இருந்தாலும் எங்க அம்மா. நீ இந்த மாதிரி அவங்கள இன்னொரு முறை பேசுனா நான் சும்மா இருக்க மாட்டன் என்றான்.

ஆமா உண்மைய சொன்னா கோவம் வரதான செய்யும்.. என்று வாயோடு முனகி கொண்டாள். அவள் கையை பிடித்து இழுத்தவன் எதுவா இருந்தாலும் வாய திறந்து சொல்லு டி, இந்த முனகுற வேலை எல்லாம் வேண்டாம் என்றான். அவன் பிடி அவளுக்கு வலித்த போதிலும், ஒன்னும் இல்ல உங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு சொன்னன் என்று கேலியாக கூறியிருந்தால்.

அவள் பேச்சு அவனை கோவமுற செய்ய, அறிவை இழந்தவன் அவள் சுடிதார் துப்பட்டாவை கீழே சரியவிட்டு, மேலாடையை விளக்கி அவளின் வாய் பொத்தி, வலது மார்பின் மேல் பகுதியில் அழுத்தமாக கடித்து வைத்தான். அவன் செய்த செயலில் ஆசையும் இல்லை, காமமும் இல்லை.. கோவம்.. கோவம்.. கோவம் மட்டுமே..

ரஞ்சனி துடித்துவிட்டால் அவளால் கத்தவும் முடியவில்லை, அவன் பிடியில் இருந்து விலகவும் முடியவில்லை. வலியில் கண்களில் இருந்து கண்ணீர் கரை புரண்டது.. அவள் வலியில் துடிப்பதை உணர்ந்து தான் அவளை விட்டான் சூர்யா.

சூர்யா என்றால் அவன் கடித்த இடத்தை அழுந்த பற்றி கொண்டு. வலி உயிர் போனது. அவனிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர் பார்க்காதவள் அவனை வெறுப்பாக பார்த்தாள்.

அவள் அழுது கொண்டே குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள, சூர்யா தலையில் அடித்து கொண்டான். உண்மையில் கோவத்தில் தான் செய்துவிட்டான். இப்போது அவன் செய்த செயலுக்காக வருந்தவும் செய்கிறான். ஆனால் அவளிடம் எப்படி பேசி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

கதவை தட்டினான், ரஞ்சனி ப்ளீஸ் கதவை திறடி கோவத்துல பண்ணிட்டன் சாரி டி என்றான். அவள் கதவை திறக்கவில்லை.

கண்ணாடியில் அவள் மேலாடையை சற்று கீழே இறக்கி பார்த்தாள், வட்டமாக அவனின் பற்த்தடம் பட்டு, சிவந்து கன்றி போய் இருந்தது. வாம்பையர் படத்தில் தான் இந்த மாதிரியான பற்தடங்களை பார்த்து இருக்கிறாள்.. இப்போது அவள் உடலில் இப்படி காட்சியை கண்டவள் மனம் நடுங்கியது. சூர்யா கன்னத்தில் அரைந்து இருந்தாள் கூட தாங்கி இருப்பாள் போலும். ஆனால் இந்த செயல் அவளுக்கு மனதாலும் உடலாலும் மிகவும் வலித்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்தவள், அவள் எதிரே இருப்பவனை துளியும் மதிக்காது, துப்பட்டாவை தோளில் போட்டு கொண்டு, அவளின் கைப்பையை எடுத்து கொண்டு கிளம்ப முயன்றால்.

சூர்யா கையில் களிம்புடன் அவள் எதிரே வழி மறைத்து நின்றான். சாரி டி ப்ளீஸ். என்மேல தான் தப்பு கோவத்துல பண்ணிட்டன். இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டன் என்று அவளை நெருங்கினான். காயப்பட்ட இடத்தில் களிம்பை பூசுவதற்கு. அவன் அவளின் அருகில் வரும்போதே இரண்டடி பின்னால் நகர்ந்தால். அவள் விலகளில் வலி கண்டு நின்றான் சூர்யா. அவன் முகத்தை கூட பார்க்காது அங்கிருந்து சென்றால் ரஞ்சனி.

குழலி விஷ்வாவிடம் கேட்டது போல், அவள் மாமனாரிடமும் அவள் அம்மா அந்த வீட்டில் ஒரு மாதம் தங்க அனுமதி கேட்டாள்.. அவரும் மருமகளை மென்மையாக கடிந்து கொண்டார் என்ன குழலிமா இதல்லாம் என்கிட்ட கேட்டுகிட்டு.. இது உன் வீடு. உன் அம்மா எனக்கு தங்கச்சி, முத்தரசி இங்க தங்க நீ யாரையும் கேட்க வேண்டாம் என்றார். குழலிக்கு மனம் நிறைந்து போனது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

50. கண்கள் நிறைந்த ஓவியமே!!
 

சூர்யா அலுவலகம்..

கண்ணை மூடினால், ரஞ்சனியின் அழுத முகமே நினைவில் வந்து போனது சூர்யாவிற்கு. அதுவும் அவள் மார்பை பிடித்து கொண்டு தன் பெயரை சொல்லி அழுதது, இப்போதும் அதை நினைத்தால் இதயத்தில் கணம் கூடியது.

என் ரஞ்சிய எவ்ளோ லவ் பண்ணி, போராடி கல்யாணம் பண்ணன்.. ஆனா நான் இப்போ தினம் தினம் அவள அழ வச்சிட்டு கஷ்ட்டபடுத்திட்டு இருக்கனே.. அவளும் நான் பேசுற பேச்சை எல்லாம் பொறுத்துக்கிட்டு அமைதியா போறாளே. முதல்ல அவ இப்படி பொறுத்து போற ஆளா? இல்லையே. நான் எது பண்ணாலும் எது பேசினாலும் பதிலுக்கு பதில் பேசி என் பொறுமைய சோதிப்பாலே என் ராட்சசி என்று அவன் மனைவியின் பழைய குணங்களை நினைத்து மறுகினான்.

உன் பழைய ரஞ்சியா தான், அவ காலைல துடுக்கு தனமா உன்கிட்ட பேசுனா, அதுக்கு தான் நீ அவள வலிக்க வச்சு துடிக்க வச்சுட்டியே, என்று சரியான நேரத்தில் அவன் மனசாட்சி ஆஜர் ஆகியது, தலையில் கைவைத்து கொண்டான் சூர்யா.

அவ அம்மாவ பத்தி பேசினா அதான் கொஞ்சம் கோவப்பட்டுட்டன் என்று அவன் செய்த செயலுக்கு அவன் மனசாட்சியிடம் நியாயம் பேசினான். அவ உங்க அம்மாவ பத்தி சரியா தான சொன்னா என்று மனசாட்சி பதில் கேள்வி எழுப்பியது..

அவ சரியா சொன்னான்னு நான் அவ பேசுறதுக்கு ஒருமுறை அமைதியா போனா.. ஒவ்வொரு முறையும் அவ இப்படி தான் பேசுவா. அப்பறம் என் அம்மாவ அவ மதிக்கவே மாட்டா. அம்மா, புள்ள நாங்க எப்படி வேணும்னாலும் போறோம்.. ஆனா மருமகளா அவ எங்க அம்மாக்கு குடுக்க வேண்டிய மரியாதைய குடுத்தே ஆகணும். அதான் என் விருப்பம் என்றான்.

இப்போ என்ன பண்றது என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் உள்ளே வந்தான் சூர்யாவின் நண்பன் ப்ரித்வி.

டேய் மச்சான் ஒரு சீமந்த விழாக்கு, கிளைண்ட் வந்து இருக்காங்க டா. ஆனா அவங்க சொன்ன டேட்ல நாம பாண்டிச்சேரில ஒரு மேரேஜ்க்கு கமிட் பண்ணி இருக்கோம். நம்ம குரூப் எல்லாரும் ரெண்டு நாள் முன்னாடியே பாண்டி கிளம்பிடுவோம்.

நாம மூணு மாசம் முன்னாடி வெங்கடாஜலம்ன்னு ஒரு MLA வீட்டுக்கு மேரேஜ் ஈவென்ட் பண்ணி குடுத்தோம்ல, அவங்க ரெஃபர் பண்ணி இந்த கிளைண்ட் நம்ம கிட்ட வந்து இருக்காங்க டா.. என்று மூச்சு விடாமல் பேசி கொண்டு இருந்தான்  ப்ரித்வி.

சிறிது நேரம் கழித்தே உணர்ந்தான் நண்பனின் கவனம் இங்கு இல்லையென்று. டேய் மச்சான் என்று ப்ரித்வி சூர்யாவின் தோள் தொட்டு உளுக்கினான்.

ஹான்.. என்ன டா, எப்போ வந்த என்று அப்போது தான் நண்பன் வந்ததை கவனித்தது போல் அவனிடம் கேள்வி எழுப்பினான் சூர்யா.

சரியா போச்சு போ, நீ என்ன இவ்ளோ நேரம் போதைல இருந்தியா.. உசுர குடுத்து கதை சொல்லிட்டு இருந்தா நீ ஏதோ ஒரு உலகத்துல இருந்து இருக்க. என்ன மச்சான் தங்கச்சி கூட டூயட்டா என்று கேலியாக கேட்டான்..

ஆமா இப்போ அது ஒன்னு தான் குறச்சல் என்று மனதோடு சொல்லி கொண்டவன், ஒன்னும் இல்ல மச்சான். நீ இங்க வேலைய பார்த்துக்கோ. எனக்கு வேற வேலை இருக்கு நான் கிளம்பறன் என்றான்.

ஹ்ம்ம் சரிங்க புது மாப்பிள்ளை என்று நண்பனை கேலி செய்து அனுப்பினான் ப்ரித்வி.

ரஞ்சனியை கண்டாள் தான், மனம் அமைதியாகும் என்று உணர்ந்தவன் அவளை காண அவள் வேலை செய்யும் வங்கிக்கு கிளம்பினான். அவளை அழைத்து கொண்டு லன்ச் சாப்பிட வெளியே செல்லலாம் என்று முடிவு செய்து இருந்தான்.

ரஞ்சனி வேலை செய்யும் வங்கி..

ரஞ்சனி காலையில் சூர்யாவுடன் நடந்த பிரச்சனையில் மதிய உணவை கொண்டு வரவில்லை.. உணவு இடைவேளையின் போதே அவளுக்கு நினைவு வந்தது மதிய உணவை மறந்து வந்தது.

அன்றென பார்த்து அவளுடன் வேலை செய்யும் இன்னொரு தோழியும் உணவை கொண்டு வரவில்லை. என்ன ரஞ்சி நீயும் லன்ச் கொண்டு வரலயா? என்றால் தோழி பார்வதி,  ஆமா பாரு. மறந்துட்டன் என்றால். அப்படியா அப்போ வெளிய போய் சாப்பிடலாமா.. வேண்டாம் டி நேரம் ஆகிடும். மேனேஜர் எதாச்சும் சொல்வாரு.

அட வாடி, அவர்கிட்ட சொல்லிட்டே போகலாம் என்று ரஞ்சனியை வம்படியாக அழைத்து சென்றால் அவள் தோழி பார்வதி. அதற்குள் அவர்கள் வெளியே செல்வது இன்னும் இரண்டு பேருக்கு தெரிய, ஹேய் நாங்களும் வரோம்பா எல்லாரும் ஒன்னா வெளிய சாப்பிடலாம் என்றனர்

அப்போ நீங்க கொண்டு வந்த லன்ச் என்று ரஞ்சனி கேட்க, இன்னைக்கு ஒரு நாள் வீட்டு சாப்பாட்டுக்கு லீவு நாம ஹோட்டல் போலாம் என்றனர் மூவரும். அதில் ஹரி என்பவனும் இருந்தான். அவன் அந்த வங்கியில் தங்க நகை கடன் வழங்கும் பிரிவில் வேலை செய்பவன். அவன் ரஞ்சனி மீது பித்து கொண்டு அலையும் கிறுக்கன்.. வேலைக்கு சேர்ந்த புதிதில் அவளிடம் காதலை சொல்லி ப்ரொபோஸ் செய்தான்.

ரஞ்சனி நாசுக்காக மறுத்துவிட்டால். எனக்கு காதலில் நம்பிக்கை இல்லையென்று. அவனும் அதன் பின் அவளை தொந்தரவு செய்யவில்லை. அதன் பின் பார்க்கும் பொழுது ஹாய் பை என்ற அளவில் பேசி கொள்வர். இன்று வரை அப்படி தான் செல்கிறது.

நால்வரும் மேனேஜரிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்.

ரஞ்சனியின் போனிற்கு சூர்யாவிடம் இருந்து தொடர் அழைப்புகள் வர, அவன் மீது உள்ள கோவத்தில் அதை அட்டென்ட் செய்யவில்லை. போனை சைலன்ட்டில் வைத்து விட்டால். 

நால்வரும் வெளியே வர, அங்கு சூர்யா அவனின் பைகின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான். ரஞ்சனி அவனை பார்க்கவில்லை. அவள் தோழி தான் சூர்யாவை அடையாளம் கண்டு ரஞ்சனியிடம் கூறினாள்.

சூர்யா கண்ணாடி கதவை திறக்கும் போதே ரஞ்சனியை கண்டு கொண்டான். அவள் கையில் உள்ள போனையும் கண்டான். அப்போ வேணும்னு தான் என் கால் அட்டென்ட் பண்ணலயா என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி கொண்டது.

ரஞ்சனியுடன் வந்த இன்னொரு பெண்ணும் கூட சூர்யாவை அடையாளம் கண்டு, ஹேய் ரஞ்சு உன் ஹஸ்பண்ட் டி என்று அவளிடம் சொல்ல. ரஞ்சனிக்கு தான் அவனை காண வெறுப்பாக இருந்தது.

அவளின் பார்வை சூர்யா மீது வெறுப்பாக படிவதை கண்டு கொண்டான் உடன் இருந்த ஹரி. பேசி கொண்டே சூர்யா இருக்கும் இடம் வந்தனர்.

ரஞ்சனி பேசுவதற்கு முன், அவள் தோழிகள் பேசினர்.. ஹாய் சார் என்று தங்களை அறிமுக படுத்தி கொண்டனர். பெண் தோழிகள் இருவரும். அதில் ஹரி வேண்டா வெறுப்பாக அவனை அறிமுகம் செய்து கொண்டான்.

பார்வதி, என்ன சார் உங்க வைஃப் கூட லன்ச் சாப்பிடலாம்னு வந்திங்களா என்றால்.

ஆமா சிஸ்டர், அவங்க இன்னைக்கு லன்ச் மறந்துட்டாங்க அதான், அவங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம்ன்னு நானும் வந்தன். ரஞ்சனி எதுவும் வாய் திறக்கவில்லை. சூர்யாவின் பதில் பார்வதியிடம் இருந்தாலும் பார்வை என்னவோ அவன் மனைவி மேல் தான் இருந்தது.

அப்படியா சார், நாங்களும் ரஞ்சி கூட இன்னைக்கு வெளிய போய் சாப்பிடலாம்ன்னு பிளான் பண்ணோம் என்றார்கள்.

அப்படியா என்று ரஞ்சனியை பார்த்தான் சூர்யா. ரஞ்சனி இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என்று பேச தொடங்கினால். சூர்யா நான் என் ஃப்ரன்ட்ஸ்ஸோட லன்ச் போறன். நீங்க வீட்டுக்கு போங்க என்றால். அவனின் முகம் அதில் ஒரு நொடி மாறி போனது. ரஞ்சனி எதையும் கண்டு கொள்ளவில்லை. ஹரி என்பவன் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

சூர்யா ரஞ்சனியின் வார்த்தையை கேட்க்காது, சற்று தள்ளியிருந்த அவள் தோழிகளிடம் சென்று, ஹாய் கைஸ், உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லனா நானும் உங்க கூட லன்ச்ல ஜாயின் பண்ணிக்கலாமா என்றான் அவனின் மோகன சிரிப்போடு.. ரஞ்சனி பதில் பேச வருவதற்குள் அவளின் தோழிகள், கண்டிப்பா வாங்க சார், எங்க ரஞ்சிய பத்தி உங்ககிட்ட நிறைய விஷயம் சொல்லணும் என்று குறும்பாக கூறி சூர்யாவையும் அவர்களோடு அழைத்து சென்றார்கள். ரஞ்சனி வேறு வழியில்லாமல் அவர்களுடன் சென்றால்.

அவர்கள் வங்கிக்கு அருகில் உள்ள தென்மனம் என்ற உயர்தர உணவகத்திற்கு தான் சென்று இருந்தனர். இன்னைக்கு என்னோட ட்ரீட் சோ என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க என்று பொதுவாக கூறியிருந்தான் சூர்யா. ஹரிக்கு தான் அங்கு இருக்க கடுப்பாக இருந்தது. அவனிற்கு சூர்யாவை பிடிக்கவே இல்லை.

சூர்யாவிற்கும் அந்த ஹரி என்பவனை கண்டதில் இருந்து பிடிக்கவில்லை தான். ஏதோ அவனிடம் தவறு இருப்பதாக தோன்றியது. சரி அவன் மேல ஒரு கண்ணு வைப்போம் என்று மனதில் நினைத்து கொண்டு, ஆர்டர் செய்து வந்த உணவில் கவனம் செலுத்தினான்.

ரஞ்சனிக்கு பார்த்து பார்த்து அவனே பரிமாறினான். ஓஹ் என்று தோழிகள் இருவரும் அவனை சிறு கேலி செய்தனர். நானே சாப்பிட்டுக்குறன் சூர்யா என்றால். ஏன் பொண்டாட்டி நான் உனக்கு பரிமாற கூடாதா என்றான் கண்களில் காதலை நிறைத்து.

அதில் ரஞ்சனி பார்த்த பார்வை அவனை தலை குனிய செய்தது. இப்படி பேசுபவன் தானே காலையில் அவளை வலியில் துடிக்க வைத்தான்.

அதன் பின் அவன் எதுவும் பேசாமல் உணவு உண்டான்.. ரஞ்சனியின் தோழிகள் தான், எங்க ரஞ்சி அப்படி, எங்க ரஞ்சி இப்படி என்று அவள் வேலையில் இருக்கும் நேர்த்தி, அவள் தொண்டு நிறுவனத்திற்கு செய்யும் உதவிகள் என அவளின் நற்குணத்தை பற்றி கூறியிருந்தனர், ரஞ்சனியின் முறைப்பயும் மீறி.. இவை எல்லாம் சூர்யாவிற்கு ஏற்கனவே தெரியும் என்றாலும்.. புதிதாக கேட்ப்பது போல் ஆர்வமாக கேட்டான்.

அனைவரும் திருப்தியாக உண்டு முடித்து கைகழுவ சென்றனர். ரஞ்சனி முன்னே செல்ல அவனுக்காக காத்திருந்த சூர்யாவும் பின்னே சென்றான். அவள் பின்னிருந்து உடல் ஒட்டாமல் அனைத்த வாக்கில் நின்று, சாரி டி என்றான் காதில் ரகசியமாக கூறியப்படி, அவள் கையோடு சேர்த்து அவன் கையையும் ஒன்றாக கழுவி கொண்டு அவளை தன்புறம் திருப்பி அவள் முகம் பார்த்து மீண்டும் சாரி டி என்றான்.

அவள் கண்கள் கலங்கிவிட்டது. நீ என் ஃப்ரன்டாவே இருந்து இருக்கலாம் சூர்யா என்றால் ஒற்றை வாக்கியமாக. மீண்டும், நமக்குள்ள கணவன் மனைவி உறவு எப்பவும் சரி வராது என்றவள் தாடையில் இருந்த அவன் கையை எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றால். கண்களில் கோர்த்து கொண்ட கண்ணீரை வெளிவர விடாமல்.

ரஞ்சனி சொன்ன வார்த்தையில், சூர்யாவின் காதல் கொண்ட மனம் வெகுவாக அடிவாங்கியது.

பின் சாப்பிட்ட உணவிற்கு சூர்யா பணத்தை செலுத்திவிட்டு, அனைவருடனும் அங்கிருந்து சென்றான்.

வெளியில் வந்து அனைவரிடமும் சொல்லி கொண்டு புறப்பட்டான். ரஞ்சனி அவனை கண்டு கொள்ளவில்லை. சூர்யா முகம் கருத்து இருப்பதில் ஏனோ ஹரிக்கு குஷியாக இருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

51. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அன்று இரவும் விஷ்வா நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான். குழந்தை உறங்கி கொண்டு இருக்க, குழலி சோஃபாவில் அமர்ந்து அவளது கணவனிற்காக காத்து கொண்டிருந்தாள். முகமெல்லாம் சோர்வாக இருந்தது.

விஷ்வா உள்ளே வர எப்போதும் போல் அவள் முகத்தில் மகிழ்ச்சியே. அவன் வந்ததும் அவளை அனைத்து கொண்டவன் கொஞ்சம் நேரம் அப்படியே நின்றான். குளிக்கலாமா என்று காதில் கிசுகிசுப்பாக கேட்க, நோ ஷிவா வீட்டுக்கு தூரம் என்றால். எப்போ என்றான் அவளின் அடிவயிற்றில் கை வைத்து மென்மையாக வருடி கொடுத்தவாரே. மதியம் தான், ஆபீஸ்ல இருந்தப்போ என்றால். இன்னும் டேஸ் இருக்குன்னு கொஞ்சம் அஜாகரதையா இருந்துட்டன். அப்பறம் நாப்கின் இல்லாம ரொம்ப கஷ்ட்டமா போகிடுச்சு, கூட வொர்க் பண்ற நிம்மி மேடம் தான் தந்தாங்க என்றால்.

மென்சுரல் கப் யூஸ் பண்ணுன்னு சொன்னா கேட்க மாற்ற என்று கடிந்து கொண்டான். சரி விடுங்க நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, நான் டின்னர் எடுத்து வைக்குறன். ஹ்ம்ம் பால்கனில எடுத்து வை பேசிட்டே சாப்பிடலாம் என்றான். சிரித்து கொண்டு சரியென்றால்.

விஷ்வா குளித்து முடித்து வெளியேவர அவனுக்கான இரவு உணவுகளை எடுத்து வைத்தாள் வாயில் வந்த பாடலை மாற்றி பாடி கொண்டு..

என் அம்மா வருவாக
ஒரு முத்தம் கொடுப்பாக
என்ன கொஞ்சி கொஞ்சியே அள்ளி ரசிப்பாக என்று பாடி கொண்டு இருக்க..

விஷ்வா சிரித்து கொண்டே, என்ன டி பாட்டை உனக்கு ஏத்த வெர்ஷன்ல மாத்தி பாடிட்டு இருக்க. ஆமா நாளைக்கு இந்நேரம்லாம் எங்க அம்மா என்கூட இருப்பாங்கள.. நானும் அவங்களும் கொஞ்சிக்கிட்டு தான் இருப்போம் என்றால்.

நீ பண்ற அலப்பறைய பார்த்தா உன் அம்மா வந்ததும் என்ன யாருன்னு கேட்ப போல இருக்கே. அவனை பொய்யாக முறைத்தவள் நான் அப்படிலாம் ஒன்னும் கேட்க மாட்டன் என்றால்.

ஷிவா அப்பறம் இன்னொரு விஷயம், அம்மா வந்ததும் நான் அவங்க கூட தூங்கவா என்றால்.. நெஞ்சே வெடித்து விட்டது விஷ்வாவிற்கு. என்ன டி அசராம குண்ட தூக்கி போடுற என்று நெஞ்சில் கைவைத்து கொண்டு கேட்டான். ப்ளீஸ் ஷிவா எங்க அம்மா கூட தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. அவங்க எனக்கு கதைலாம் சொல்லி தூங்க வைப்பாங்க தெரியுமா? நான் இவ்ளோ நாள் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணன். அந்த ஏக்கத்தை எல்லாம் இந்த ஒரு மாசம் அவங்க கூட இருந்து போக்கிக்கணும்னு ஆசைப்படுறன் என்றால். இப்படி சொன்ன பிறகு அவனால் என்ன சொல்ல முடியும்?? அவள் ஆசையை நிறைவேற்றுவதற்கு தானே அவன் இருக்கிறான்.

சரி டி அம்மா கூடவே தூங்கு. ஆனா தூங்கறதுக்கு ஒன் ஹார் முன்னாடி நீயும் பாப்பாவும் என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு தான் போகணும். அப்போ தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும் என்றான்.

ஓகே டீல்.

விஷ்வா பேசிக்கொண்டே அவளுக்கும் உணவை ஊட்டி கொண்டு இருந்தான்.. அப்பறம் ஷிவா நாளைக்கு சீக்கிரம் வரிங்களா என்றால். சீக்கரம்னா எப்போ? ஹ்ம்ம் ஒரு மூணு மணி போல வாங்களன்.. அவளை பொய்யாக முறைத்தவன், விளையாடாத குழலி. எனக்கு எவ்ளோ வேலை இருக்குன்னு உனக்கே தெரியும்ல.? அப்பறம் எப்படி சீக்கரம் வர முடியும்? அதுவும் நாளைக்கு தான் என் ப்ராஜெக்ட் முடியுது, அதுவும் இந்த கிளைண்ட் கூட கொஞ்சம் தலைவலியா இருக்கு. லாஸ்ட் மினிட்ல கூட சேன்ஜஸ் சொல்வாரு சோ அஸ் அ மேனேஜர்ரா நான் இருந்தே ஆகணும் என்றான்.

அவள் முகம் வாடி போனது, எனக்காக இது கூட பண்ண மாட்டிங்களா என்றால் அவன் நிலை புரியாமல்.

ஹேய் புரிஞ்சிக்கோ டி.

ஒன்னும் வேண்டாம் போங்க..

எனக்காக ஒரு லீவு தான் போட மாற்றிங்கன்னு பார்த்தா பெர்மிஷன் எடுத்து சீக்கரம் கூட வர மாற்றிங்க. எங்க அம்மா வர நேரம் நீங்களும் வீட்ல இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும். ஆனா உங்களுக்கு உங்க வேலை தான் முக்கியம் என்று அழ தொடங்கிவிட்டால்.

பொதுவாக குழலி இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிக்கும் ஆள் இல்லை. நிலமையை எடுத்து சொன்னால் புரிந்து கொள்பவளே.. ஆனால் இந்த திடீர் கோபம் அழுகை அவளின் மாதவிடாயால் ஏற்பட்ட மூட் ஸ்விங் தான் காரணம்..

விஷ்வாவிற்கும் அது புரியாமல் இல்லை. கடவுளே மாசத்துல வர 27 நாளும் நான் சமாளிச்சுகுறன் இந்த 3 நாள மட்டும் எனக்காக நீ சமாளிக்க கூடாதா? என்னால முடியல என்று மனதோடு நொந்து கொண்டான்.

விஷ்வா சாப்பிட்டு முடித்து இருக்க, எழுந்து சென்று கை கழுவி வந்து பாத்திரங்களை எடுத்து கொண்டு போய் சமையல் அறையில் வைத்து விட்டு மீண்டும் மேலே வந்தான். குழலி அதே நிலையில் அமர்ந்து இருக்க அவளின் கீழே அமர்ந்து அவள் கால்களை எடுத்து அவன் மடியில் வைத்து கொண்டான். அவளை பார்த்து கொண்டே, தொடையில் தொடங்கி பாதம் வரை மென்மையாக கால்களை பிடித்துவிட்டான்.

இந்த மாதிரியான நேரத்தில், அவளுக்கு தொடை, முட்டி கால், இடுப்பு எல்லாம் வலி எடுக்கும். மாதம் மாதம் அவனிடம் தானே வந்து புலம்புவால், முட்டி உலையுது ஷிவா, தொடை வலிக்குது ஷிவா என்று. அவனும் அப்போதெல்லாம் இப்படி தான் கால்களை மென்மையிலும் மென்மையாக பிடித்து விடுவான் இடுப்பு வலிக்கு அவளால் பொறுக்க கூடிய அளவில் சுடு தண்ணீர் ஊற்றி விட்டு, தைலம் தேய்த்து விடுவான். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் பொற் குழலிக்கு தாயாக மாறி போவான் விஷ்வா.

இப்போதும் அவள் கால்களை இதமாக பிடித்துவிட்டவன் அவளின் கால் விரல்களை தடவி சொடக்கு எடுத்துவிட்டான். அவனின் செயல்கள் குழலிக்கு அத்துனை இதமாக இருந்தது.  கண்மூடி வலி மறந்தால். நல்லா இருக்கு விஷ்வா என்று உதட்டில் குடி கொண்ட மென் புன்னகையோடு கூறினாள். விஷ்வா உள்ளுக்குள் சிரித்து கொண்டான். இறுதியாக அவன் மடியில் இருந்த அவள் கால் விரல்களுக்கு குட்டி குட்டி முத்தம் வைத்து முடித்தான். அவன் எழுந்து அவளை கையில் தூக்கி கொண்டவன் மெத்தைக்கு சென்று மெதுவாக படுக்க வைத்து, அவனும் அவள் அருகில் படுத்து கொண்டான்.

இவ்வளவு நேரமும் அவனிடம் கோவப்பட்டு சண்டை போட்டது இவள் தான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். விஷ்வாவை கட்டி கொண்டு அவன் மார்பில் துயில் கொண்டு இருந்தாள்.

இன்று தன் அம்மாவை காண போகிறோம் என்ற நினைவே, குழலிக்கு புத்துணர்வை கொடுக்க, விடியலிலே எழுந்து கொண்டாள். விஷ்வா நல்ல உறக்கத்தில் இருந்தான்.

வேகமாக எழுந்து சுடுநீரில் குளித்து முடித்து, சமைக்க துவங்கினாள். கையோடு எடுத்து வந்த போனை எடுத்து அவள் அம்மாவிற்கு அழைத்து எங்க இருக்கீங்க மா? எப்போ வருவீங்க என அனைத்தையும் கேட்டு கொண்டாள். மாலை நான்கு மணி போல் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று ஓட்டுநரிடம் கேட்டு தகவல் கூறியிருந்தார் முத்தரசி. சரிம்மா பத்திரமா வாங்க என்று பேசிவிட்டு வைத்தாள்.

அப்போது தான் ரஞ்சனி எழுந்து வந்தாள்.. என்ன குழலி நைட்டு தூங்கனியா இல்லையா? என்று கேலியாக கேட்டாள். தூங்கிட்டன்கா ஆனா காலைல சீக்கரம் எந்திரிச்சுட்டன் என்றால். ஹ்ம்ம் எட்டு மணிக்கே மதியம் லன்ச்சும் செஞ்சு வச்சுட்டியே அதலயே தெரியுது என்றால் ரஞ்சனி.

சுந்தரம் வாக்கிங் முடித்துவிட்டு உள்ளே வர, அவருக்கு சூடாக தேனீரை கொடுத்தாள் குழலி. இன்று குழலி மற்றும் சுந்தரம் அலுவலகம் செல்லவில்லை முத்தரசி வருவதாள்.

மற்ற அனைவரும் அலுவலகம் புறப்பட்டு இருந்தனர். நடக்கும் அனைத்தையும் மகேஷ்வரி பார்த்து கொண்டு தான் இருந்தார். முத்தரசி வருகையை நினைத்து கடுப்புடன் அமர்ந்து இருந்தார். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற திட்டமும் தீட்டி கொண்டார்.

மாலை போல், முத்தரசி வீட்டிற்கு வந்து இருந்தார். அம்மா என்று அழைத்து கொண்டே குழலி தாயை தாவி அனைத்து கொண்டாள். அவரும் மகளுக்கு இணையாக கண்ணீர் சிந்தி மகளை கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார். வாசலிலே இருவரும் பாச மழை பொழிந்து கொண்டிருக்க, ரெண்டு பேரும் உள்ள வந்து எவ்ளோ வேணும்னாலும் கொஞ்சிக்கோங்க,  உள்ள வாங்க என்று புன்னகையோடு அழைத்தார் சுந்தரம்.

அண்ணா எப்படி இருக்கீங்க என்று முத்தரசி அவரிடமும் நலம் விசாரித்தார். நல்லா இருக்கன்மா, பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா என்றார். அதெல்லாம் டிரைவர் தம்பி சூதானமா கொண்டு வந்து விட்டுட்டார்னா. உள்ளே சரசுவிடம் இருந்த பூரணி பாப்பா தத்தி தத்தி நடந்து வந்து அம்மம்மா அம்மம்மா என்று மழலை மொழியில்  சிரிப்புடன் அழைத்தால்.

ஏன் செல்ல குட்டி அம்மம்மாவ தெரியுதா உங்களுக்கு. என் தங்க புள்ள நல்லா வளந்துட்டீங்களே என்று பேத்தியிடம் கிள்ளை மொழியில் கொஞ்சி தூக்கி கொண்டார். அதன் பின் மகளை கூட கண்டு கொள்ளாமல் பேத்தியை தூக்கி கொண்டு சுந்தரம் பின்னாலே சென்றுவிட்டார் முத்தரசி.

குழலி அவள் அன்னைக்கு தங்கும் அறையை காட்டி அதில் அவரின் பயண பையை எடுத்து கொண்டு போய் வைத்தார். முத்தரசியும் அந்த அறையில் உள்ள குளியலறையில் குளித்துவிட்டு புத்துணர்வாக இருந்தார்.

குழலி நான் மகேஷ்வரி அண்ணிய போய் பார்த்துட்டு வரன்மா என்றார். குழலி தயங்கி நின்றாள். அம்மா அவங்க ஒரு மாதிரிமா, பட்டுனு எதாச்சும் சொல்லிடுவாங்க நீ போகாதமா என்றால். எங்கே அவள் மாமியார் அன்னையை ஏதேனும் சங்கடப்படும் அளவிற்கு பேசிவிடுவார்களோ என நினைத்து கலங்கினால்.

அப்படிலாம் சொல்லாத குழலி. உன்னவிட எனக்கு அவங்கள நல்லா தெரியும் அவங்க பட்டு பட்டுன்னு பேசற ஆளு தான்.. ஆனா நல்ல குணம் டி. நான் பார்த்துக்குறன் என்றார்.

வேகமாக அவள் மாமனாரிடம் வந்தவள் மாமா அம்மா அத்தைய பார்க்க போறாங்களாம் நீங்களும் கூட போங்க மாமா, அத்தை எதாச்சும் கோவப்பட்டுட்டா சங்கடமா போய்டும் என்றால் இறைஞ்சுதலாக.

முத்தரசி மகேஷ்வரியை பார்க்க சென்றார். அண்ணி நல்லா இருக்கியலா? நான் முத்தரசி என்ன நினைவு இருக்குங்களா உங்களுக்கு என்று அவரே பேச தொடங்கினார். அதற்குள் சுந்தரமும் அறைக்குள் வந்து இருந்தார்.

மேலுக்கு முடியலன்னு குழலி சொன்னா இப்போ பரவால்லய்யா அண்ணி என்று பாசமாக விசாரித்தார்.

நீ வந்து பார்க்கலன்னு தான் நான் இங்க தவம் கிடந்தன் பாரு என்று முத்தரசி காதில் விழும் அளவிற்கு முனகி கொண்டார். ஆனால் முத்தரசி அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவர் மேலும் சில வார்த்தைகள் நல்லவிதமாக பேசினார். அதன்பின் சுந்தரம் தான் வலுக்கட்டாயமாக அங்கிருந்து முத்தரசியை அழைத்து வந்தார்.

குழலி அவள் அம்மாவிற்காக பார்த்து பார்த்து செய்த மாலை சிற்றுண்டியை எடுத்து வந்தாள். மூவரும் சோஃபாவில் அமர்ந்து இத்தனை நாள் பேச தவறிய கதைகளை பேசி கொண்டு இருந்தார்கள்.

மாப்பிளை எப்ப வருவாரு குழலி? அவர் சாதாரணமாக தான் விசாரித்தார், குழலிக்கு தான் அது சங்கடமாக தோன்றியது. அவர்கள் ஊரில் எல்லாம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தாள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் இருந்து வந்த விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பார்கள். அதையே தான் தன் கணவன் வீட்டிலும் எதிர்பார்த்தாள். கணவன் வீட்டில் எதிர்பார்த்தாள் என்பதை விட தன் கணவனிடம் எதிர்பார்த்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

விஷ்வாவிற்கு அலுவலகத்தில் அவசர வேலை இல்லை என்றால் நிச்சயம் விடுப்பு எடுத்து குழலியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருப்பான்.

மாலை போல் விஷ்வாவிற்கு கால் செய்தால் குழலி, இரண்டு முறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை விஷ்வா, மூன்றாம் முறை அழைக்கும் போது, அவனை பேசவிடாமல் குழலியே பேசினால். ஷிவா அம்மா வந்து இருக்காங்க. உங்கள கேட்டாங்க ஒரு வார்த்தை அவங்க கிட்ட பேசுங்களன் என்றால்.

குழலி என்று அழுத்தமாக அழைத்தான் விஷ்வா. நான் என்ன வீட்டுக்கு வராம எங்கயாச்சும் ஓடியா போய்ட போறன்? ஆபீஸ் டைம்ல கால் பண்ணி ஏன் இப்படி அலப்பறை பண்ணிட்டு இருக்க? எனக்கு வேலை இருக்கு டி போனை வை, நான் நைட் வீட்டுக்கு வந்து அத்தைகிட்ட பொறுமையா பேசுறன் என்றான்.

ஆமா லீவு போடுங்கனு சொன்னாலும் போடாதீங்க, சீக்கரம் வாங்கனு சொன்னாலும் வராதீங்க.. கால் பண்ணாலும் எரிஞ்சு விழுங்க. எங்க அம்மானா உங்களுக்கு எப்பவும் இளக்காரம்  தான் என்றவள் விசும்ப துவங்கி விட்டாள். எதிர்முனையில் இருந்த விஷ்வாவிற்கு தான் ஹய்யோ என்றானது, தலையை பிடித்து கொண்டான். ஆனால் அவள் மேல் கோவப்படவில்லை. அவள் மனநிலையை புரிந்து கொள்ள முயன்றான். சரி அத்தை கிட்ட போன் குடு பேசுறன் என்றான்..

ஒன்னும் தேவயில்லை.. அதலாம் உங்களுக்கா தோணனும். நான் இவ்ளோ சொன்ன அப்பறம் நீங்க பேச வேண்டாம் என்று பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டால்.

விஷ்வா யாரிடமும் இவ்வளவு இறங்கி சென்றது இல்லை. இவள் ஒருத்தியிடம் மட்டுமே, இவ்வளவு பேசுகிறான். அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கிறான். கோவித்து கொண்டாள் சமாதானம் செய்ய எந்த எல்லைக்கும் செல்கிறான். அவனை புரிந்து கொள்ளாமல் அவனை வாட்டி எடுக்கிறாள் அவனின் காதல் ராட்சசி.

அதன்பின் விஷ்வாவே, வேலையை ஒதுக்கி வைத்து விட்டு குழலிக்கு இருமுறை அழைத்தான்.. அழைப்பை ஏற்கவே இல்லை குழலி. மூன்றாம் முறை அழைக்கும் போது விஷ்வா நம்பர் பிளாக் செய்யப்பட்டு இருந்தது.

இவ மூட் ஸ்விங்ல தீய வைக்க.. என்று கடுப்பானவன் அவன் வேலையை பார்க்க துவங்கிவிட்டான்.

 

 

 

 

 

 

52. கண்கள் நிறைந்த ஓவியமே!!
இரவு எப்போதும் போல் நேரம் கழித்தே வந்தான் விஷ்வா.. அவனின் வேலை அப்படி. அவர்கள் ப்ராஜெக்ட் செய்யும் கிளைண்ட் இன்னும் கொஞ்சம் வசதிகளை அதில் சேர்க்க சொல்லி அதற்கான கால அவகாசத்தையும் கொடுத்துள்ளார்கள். இனி ப்ராஜெக்ட்டை முடிக்க நேரம் இருக்கிறது, நிதானமாக செய்வோம் என்று கொஞ்ச ஆசுவாசம் கொண்டான் விஷ்வா. வேலையில் இருந்த பிசியில் குழலியின் கோவத்தை மறந்து போய் இருந்தான்.  நேரத்தை பார்த்தான் வழக்கத்தை விட இன்று கூடுதல் நேரம் ஆகி இருந்தது. இவள சமாளிக்கணுமே என்று மென் புன்னகை உதிர்த்து கொண்டான் இதழ் கடையோரம். வீட்டிற்கு கிளம்பி கொண்டே போனில் மனைவிக்கு அழைப்பு விடுத்தவன், புரிந்து கொண்டான் இன்னும் தன் எண்ணை பிளாக் செய்து வைத்து இருக்கிறாள் என.. ரொம்ப பண்றா என்ற நினைப்போடு.. அவன் கேபினை விட்டு வெளியே வர, அவன் எதிரில் வந்து நின்றாள் மயூரி.

அவளை பார்த்தும் கண்டு கொள்ளாமல் அவளை கடந்து சென்றான். மயூரி வேறொரு டீம். அவளுக்கும் விஷ்வாவிற்கும் வேலை நிமித்தமாக கூட எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.

மயூரி அவன் பின்னால் சென்று கொண்டே அவனை அழைத்தால். விஷ்வா ப்ளீஸ் உனக்காக தான் நான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கன். உன்கூட கொஞ்சம் பேசணும் என்றால். எனக்கு உன்கிட்ட பேச எந்த காரணமும் இல்லை மயூரி. டோன்ட் டிஸ்டர்ப் மீ. ப்ளீஸ் விஷ்வா என்று பின்னால் கெஞ்சி கொண்டு வந்தவளை பொருட்டாக கூட மதிக்காதவன், வேகமாக பார்க்கிங் சென்று அவன் காரில் ஏறி சென்றான். இரவு நேரம் என்பதால் அந்த அளவிற்கு ஒன்றும் ட்ராபிக் இல்லை. அதனால் நாற்பது நிமிடத்தில் வீட்டை அடைந்து இருந்தான். அவன் வீட்டை அடையும் போது நேரம் 11ஐ தாண்டி இருந்தது.

அவன் அறைக்கு சென்றான் அங்கு குழலி இல்லை. அவனுக்கான உணவு மட்டும் ஹாட் பாக்ஸில் இருந்தது. முகத்தை சுழித்து பெரிதாக உச்சு வைத்தவன் குளித்துவிட்டு, குழலியை தேடி சென்றான். கீழே அவள் அன்னையுடன் தான் இருக்கிறாள் என தெரிந்து கொண்டவன், அறைக்கதவில் கை வைக்க, உள்பக்கம் தாழிட்டு இருந்தது. அவளை பார்க்க முடியாமல் தவித்து தான் போனான் விஷ்வா. குழந்தையின் நினைவும் சேர்ந்து ஒட்டி கொண்டது. தினமும் அந்த ரோஜா மொட்டை கொஞ்சி விட்டு தான் உறங்குவான். மூன்று நாட்களாக அவன் நிலை இது தான். நேரம் சென்று வருகையில் குழந்தை உறங்கி இருப்பாள். குழந்தையுடன் நேரம் செலவழித்தே வெகு நாட்கள் ஆகியது போல் தோன்றியது.. பின் உறங்குபவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணியவன் மேலே சென்று அவனுக்கு வைத்து இருந்த உணவை எடுத்து சாப்பிட்டான்.

எப்போதும் குழலியை மடியில் அமர்த்தி கொண்டு அவளுக்கும் உணவை ஊட்டிவிட்டு தான் சாப்பிடுவான். இப்போது அவள் இல்லாமல் சுவையான ஆப்பமும் சன்னா கிரேவியும் கூட பாகற்காயாய் கசந்து போனது. குட்டி மனைவியின் மேல் சிறு கோவமும் முளைத்தது. பின் எப்படியோ உண்டு முடித்து, சாப்பிட்ட உணவு பாத்திரங்களை எடுத்து கொண்டு போய் கீழே வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை அவள் இருக்கும் அறையை ஏக்க பார்வை பார்த்துவிட்டு மேலே வந்தான்.

அவளின் அனைப்பு இல்லாமல், கலைத்த உடம்பிற்கு உறக்கம் வர மறுத்தது. பின் உடற்பயிற்சி செய்து வெகுநாட்கள் ஆகியதால் அந்த வீட்டில் வேறொரு அறையில் இருந்த ஜிம் அறைக்கு சென்று அந்த இரவில் உடற்பயிற்சி செய்தான். வியர்வை ஆறாக வழிந்தது உடலில். பின் அறைக்கு வந்து மீண்டும் உறங்க முயன்று வெகு நேரம் கழித்து உறங்கி போனான்.

இங்கு விஷ்வா, குழலியின் நினைவில் தவித்து கொண்டிருக்க, குழலி அவள் அன்னையின் அருகில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தாள்.

முத்தரசி முன்னிரவில், அவள் தன்னோடு படுக்க வரும் போதே தடுத்து இருந்தார். குழலி உன் அறைல போய் தூங்கு என்று, அவள் தான் நான் உங்க கூட தான் தூங்குவன் என் புருஷன் கிட்டயும் பெர்மிஷன்லாம் வாங்கிட்டன் என்று அடம் பிடித்து அன்னையோடு உறங்கிவிட்டால். விஷ்வா வரும் நேரம் எழுந்து கொள்ளலாம் என்று தான் நினைத்து இருந்தாள், ஆனால் அன்னையோடு பேசி கொண்டு இருந்தவள் அவருக்கு முன்பாகவே உறங்கிவிட்டால். விஷ்வாவை மறந்து.

*****

எப்போதும் போல் காலை விடியலிலே எழுந்து கொண்டாள் குழலி, அவளுடன் முத்தரசியும் எழுந்து கொண்டார் அம்மா நீங்க தூங்குங்க நான் பார்த்துகுறன் என்று சொல்லியும் கேட்காமல் அவரும் மகளுடன் எழுந்து கொண்டார்.

அடுத்தடுத்து அடுக்களைக்குள் நுழைந்தவர்கள் காலை பூரி பொங்கல் வடை என தொடங்கி மதிய சாப்பாடும் செய்ய தொடங்கினர். மதிய உணவை செய்ய துவங்கும் போதே இரு வேலையாட்களும் வந்து விட்டனர்.

அம்மா நீங்க சாப்பிடுங்க, டைம் ஆகுது நீங்க சூரணம் (நாட்டு மருந்து) வேற சாப்பிடணும்ல என்றால். நான் அப்பறம் சாப்பிடுறன் குழலி என்று மறுத்தவரை கட்டாய படுத்தி சாப்பிட சொன்னால் குழலி. தட்டில் நான்கு இட்லி சட்னி சாம்பாருடன் வடை வைத்து, உணவு மேஜையில் சாப்பிட வைத்தால்.

இடையிடையே அன்னை சாப்பிடுவதையும் திருப்தியாக பார்த்து கொண்டாள்.

எல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்க, அங்கே வந்து இருந்தார் மகேஷ்வரி. அரை தூக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தவரின் காதில் தாய் மகளின் குரல் கேட்கவே வெளியே எழுந்து வந்தார். நேரத்தை பார்த்தார் எட்டை நெருங்கி கொண்டு இருந்தது.

கணவன் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.

உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த முத்தரசியை காண காண கோவம் எல்லை மீறியது. ஏற்கனவே குழலி இந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் தன்னை இந்த வீட்டில் மதிப்பது இல்லை என உணர்ந்தவள், இப்போது அவள் அம்மாவும் வந்து சேர்ந்து இருப்பது அவ்வளவு கோவத்தை உண்டு பண்ணியது.

சாப்பிட்டு கொண்டிருந்த முத்தரசி அருகில் வந்தவர், மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து அவர் முகத்தில்  ஊற்றினார்.. என்ன நீயும் இந்த வீட்ல வந்து டேரா போட வந்துட்டியா என்று நாவென்னும் நாக்கை சுழற்ற, அதற்குள் குழலி அங்கு வந்து இருந்தாள். கோவப்படாமல் அத்தை என்று ஏதோ பேச வந்தாள்.

ஹேய் ச்சீ வாய மூடு யாருக்கு யாரு டி அத்தை? ஏற்கனவே ஒருத்தன் கூட புள்ளைய பெத்துட்டு அவன கொன்னு போட்டுட்டு இங்க வந்து இருக்க.. இங்க வந்து யார் உயிர எடுக்க போற? உனக்கு துணையா இப்போ உன் ஆத்தாகாரியயும் கூட்டிட்டு வந்துட்டியா?

முத்தரசிக்கு அவள் மகள் வாங்கும் பேச்சு அவ்வளவு வலித்தது. எந்த தவறும் செய்யாமல் அறியா வயதில் அவளுக்கு நடந்த திருமணத்தால் எவ்வளவு பழி சொற்களை வாங்குகிறாள் என்று மனம் குமுறினார். நான் தானே அதற்கு காரணம் என்று எண்ணாமாலும் இல்லை. அவர் சிந்தனையை கலைத்தது மகேஷ்வரியின் குரல்..

நீ முதல்ல போ, கொஞ்சம் நாள் கழிச்சு உன் பின்னாடி நானும் அங்க வந்து உக்காந்துகுறன். அங்க ஒன்னுக்கு மூணு இளிச்சவாயங்கன் இருக்கானுங்கன்னு சொல்லி குடுத்து அனுப்புனியா உன் பொண்ணுக்கு..

நல்ல கைகாரி தான் உன் பொண்ணு. பாரு வந்த கொஞ்சம் நாள்ளயே வீட்ல இருக்கவங்க எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு, இப்போ என் புருஷன் ஆபீஸ் வரைக்கும் போய் ராஜியம் பண்றா..

சும்மாவா பின்ன.. ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணி இருக்காளே யார எப்படி மயக்கணும்னு சொல்லியா தரணும் என்று மருமகள் என்றும் பாராமல் கொச்சையாக பேசினார் மகேஷ்வரி.

ஹய்யோ அண்ணி என் பொண்ண பத்தி தப்பா பேசாதீங்க, அவ நீங்க நினைக்கிறா மாதிரி இல்ல. அவ இன்னும் விவரம் தெரியாத சின்ன பொண்ணு தான் என்றார் முத்தரசி.

ஓஹ் அவளுக்கு விவரம் தெரியலனு தான் இப்போ நீ வந்து இருக்கியா? உன் பொண்ணு இடத்தை நிரப்பி எல்லாரையும் மயக்கி கைக்குள்ள போட்டுக்க போறல என்று அவரிடமும் பாய்ந்தார் மகேஷ்வரி. வேலையாட்கள் முன்பு, அவரின் தகாத வார்த்தையில் கூனி குறுகி நின்றார் முத்தரசி.

அவள் அம்மாவை இழிவாக பேசியதை குழலியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. உங்க புத்தி ஏன் இப்படி சாக்கடை மாதிரி இருக்கு? இந்த மயக்கற பழக்கம் எல்லாம் எங்க அம்மாவுக்கு இல்ல. ஆள மயக்குற பழக்கம் எல்லாம் உங்களுக்கு தான் இருக்கும் போல அதான் சரியா பேசுறீங்க என்று குழலியும் பதிலுக்கு பேசினால். அவள் சொன்ன கடைசி வார்த்தையை மட்டும் கேட்டு கொண்டே அறையில் இருந்து  வெளியே வந்தான் சூர்யா.

குழலி அவன் அம்மாவை பற்றி பேசியதை பொறுத்து கொள்ள முடியாமல், அண்ணி என்று கர்ஜித்தான்.

அவள் சூர்யாவிடம் நடந்ததை கூற வர, போதும் நிறுத்துங்க.. உங்கள வாய் இல்லாத பூச்சின்னு நினச்சன் ஆனா நீங்க இவ்ளோ மட்டமா பேசுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல. இல்ல சூர்யா உங்க அம்மா தான் என்று அவள் மறுத்து பேச வர, என்கிட்ட பேசாதீங்க  என்றவன் அவன் அண்ணனை அழைத்து வர மாடி படி ஏறினான்.

அதற்கு மேல் குழலி அங்க நிற்க விரும்பாமல், அவள் அம்மாவை அழைத்து கொண்டு சமையல் அறையினுள் நுழைந்தால். மகேஷ்வரியும் அவள் பின்னால் சென்றால். பிரச்சனையை பெரிதாக்க விரும்பி.

ஹேய் இங்க பாரு, ஒழுங்கு மரியாதையா வீட்ட விட்டு அப்படியே ஓடி போய்டு. உன்ன தல முழுகுனா தான் இந்த வீடு என் கண்ட்ரோல்க்கு வரும்.

அண்ணி இப்படி சொல்லாதீங்க அண்ணி, என் பொண்ண இந்த வீட்ல வாழ விடுங்க என்றார் முத்தரசி.

அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா என்று அவள் அம்மாவை அடக்கினால் குழலி. இன்னொருவரிடம் அவள் அம்மா கெஞ்சுவதை அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

மகேஷ்வரியிடம் திரும்பியவள், தயவு செஞ்சு இங்க இருந்து போய்டுங்க உங்ககிட்ட பேசவே எனக்கு பிடிக்கல.

இது என் வீடு டி, என்னையே போக சொல்றியா என்று கொதித்தவர், குழலி என்னவென்று சுதாரிக்கும் முன் அருகில் சூடாக இருந்த வானலியில் உள்ள எண்ணையை அவள் மீது தட்டி விட்டு இருந்தார்.

குழலி வலியில் துடித்து அலறிவிட்டால்.. எண்ணை அவள் காலில் கொட்டியது. அவள் சத்தத்தை விட அதிகமாக அலறினால் மகேஷ்வரி, குழலி மீது கொட்டிய  எண்ணை மகேஷ்வரி மீதும் கொஞ்சம் சிந்தியது.

அந்த வலியிலும் சூழ்நிலையை தனக்கு சதாகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தார். ஒரு நிமிடம் சுற்றி இருந்த வேலையாட்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பாக்கியம் மட்டும் மகேஷ்வரி பேசும் விழி மொழியை புரிந்து கொண்டாள்.

முத்தரசி மகள் அனுபவிக்கும் வலியை கண்டு துடித்து போனார்.

மேலே விஷ்வாவின் அறையில், சூர்யா குழலி பேசியதை சொல்லி கொண்டு இருந்தான் (அவன் இறுதியாக என்ன வார்த்தை கேட்டானோ அதை மட்டுமே கூறினான்). அந்த நேரம் தான் அவன் அம்மா அலறும் சத்தம் கேட்டது. இருவரும் அடித்து பதறி கீழே ஓடி வந்தனர்.

கீழே அவர்களின் கவனத்தை ஈர்த்தது என்னவோ மகேஷ்வரி தான், காலை தூக்கி உதறி கொண்டு இருந்தாள் மகன்களுக்கு தெரியும்படி. அவர் கால் எண்ணை பட்டு சிவந்து இருந்தது. மகேஷ்வரியின் அலறல் சத்தத்தில், குளித்து முடித்த ரஞ்சனியும் வேகமாக வெளியே வந்தாள்.

விஷ்வா என்னடி பண்ணி வச்சு இருக்க என்று குழலியை பார்த்து கேட்டான், அதற்குள் பாக்கியம் என்ற வேலையாள், ஐயா குழலி பாப்பா தான், பெரிய அம்மா பேசிட்டு இருக்கும் போதே சூடான எண்ணை பாத்திரத்தை அம்மா மேல தட்டிவிட்டுட்டாங்க என்று மகேஷ்வரியின் கண் அசைவுப்படி, குழலியின் மீது அபாண்டமான பழியை சுமத்தினாள் .

இல்லங்க என்று குழலி மறுத்து பேச வருவதற்குள், பளார் என ஒரு அரையை குழலியின் கன்னத்தில் இறக்கி இருந்தான் விஷ்வா.

மகேஷ்வரி ஊற்றிய எண்ணையால் அவள் கால் வலியில் அவதிப்பட  இப்போது விஷ்வா அடித்ததில் நிற்க முடியாமல் கீழே விழ போனாள். குழலியை அவள் அம்மாவும் ரஞ்சனியும் தான் வந்து தாங்கி கொண்டனர்.

என் பொண்ணு எதுவும் பண்ணலப்பா அவளை அடிக்காதீங்க தம்பி என்று முத்தரசி அழுது கொண்டே மகளை தன் பின்னே மறைத்து கொண்டு விஷ்வாவிடம் கெஞ்சினார். அவனுக்கே அந்த காட்சியை பார்க்கும் போது அடிமனம் வலித்தது.

குழலிக்கு அனைவர் முன்னிலும் அடித்தது அவமானமாக இருந்தது. அழுது கொண்டே இருந்தாள்.

அறிவு இருக்கா விஷ்வா, ஒரு சின்ன பொண்ண போட்டு இப்படி அடிக்குற என்று நண்பன் என்ற முறையில் கடிந்து கொண்டாள் ரஞ்சனி.

உன் வேலைய பாரு ரஞ்சி என்றான், விஷ்வா. அதன்பின் ரஞ்சனி அவனை முறைத்து விட்டு குழலியை தோளோடு அனைத்து கொண்டாள். அவளுக்கும் குழலி காலில் எண்ணை ஊற்றி இருப்பது தெரியாது.

விஷ்வா சென்று காரை எடுத்து வர, சூர்யா அவன் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை புறப்பட்டான். உடன் பாக்கியமும் சென்றால்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

53. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ரஞ்சனி குழலியை கூட்டி சென்று ஹாலில் உள்ள சோஃபாவில் அமர வைத்தால். குழலியால் நடக்க முடியவில்லை வலி உயிர் போனது. வேலையால் சரஸ்வதி தான் ரஞ்சனியிடம் கூறினாள். குழலி பாப்பாக்கு கால்ல எண்ணை ஊத்தி இருக்கு என்று. அப்போது தான் ரஞ்சனி குழலியின் சேலையை மேலே தூக்கி பார்த்தாள். சிறு பெண்ணின் இரு கால்களிலும் எண்ணை பட்டு கொப்பளம் போட்டு இருந்தது. மகேஷ்வரிக்கு உடனடியாக முதல் உதவி செய்ததால் அவருக்கு கொப்பளம் எதுவும் ஏற்படவில்லை. சிவந்து மட்டுமே இருந்தது.

குழலியின் காலை பார்த்த ரஞ்சனி, அச்சோ குழலி என்ன டி இப்படி ஆகியிருக்கு? முத்தரசி வாய் பொத்தி அழுதார் குழலியின் காலை பார்த்து, என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று கூட யாருக்கும் தெரியவில்லை. வா குழலி ஹாஸ்பிடல் போலாம்.. எனக்கு பயமா இருக்கு என்றால் ரஞ்சனி. வேண்டாம்க்கா என்று குழலி மறுக்க, அடிச்சனா பாரு. கால் எப்படி இருக்குனு பாரு ஒழுங்கா ஹாஸ்பிடல் வா என்றால், முத்தரசியும் மகளை மருத்துவமனை அழைக்க குழலி சம்மதித்தால்.

வீட்டில் இன்னொரு கார் இருந்தது தான். ஆனால் அதில் போக விரும்பாதவள், கேபை புக் செய்தால். அது சற்று நேரத்தில் வந்துவிட, குழலியை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றனர். உறங்கி கொண்டு இருந்த குழந்தையை சரசுவின் பொறுப்பில் விட்டு சென்றனர்.

மருத்துவமனையில் குழலிக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டு, முதலுதவி செய்யப்பட்டது. த்ரீ டேஸ்க்கு கால் ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம். வலி தெரியாம இருக்க டேப்லெட்ஸ் எழுதியிருக்கன். இந்த ஆயின்மென்ட்ட காயம் ஆறுற வரைக்கும் டெய்லி 2 டைம்ஸ் போடுங்க என்று கூறி அனுப்பி வைத்தார் மருத்துவர்.

ரஞ்சனி, அவள் அம்மா வீட்டிற்கு கேப் புக் செய்தால்.. அதை குழலியிடம் சொல்ல அக்கா பாப்பா என்றால். உன்ன அம்மா வீட்ல விட்டுட்டு நான் போய் பாப்பாவை கூட்டிட்டு வரன். அதோடு குழலி அமைதியாகிவிட்டாள்.

முத்தரசியின் கண்கள் கலங்கியே இருந்தது. மனதெல்லாம் மீண்டும் மகளின் வாழ்வில் தவறான முடிவை எடுத்து விட்டோமோ என்று குமுறியது.

பரமுவிற்கு அழைத்து விஷயத்தை கூறினாள் ரஞ்சனி அங்கு வந்து கொண்டிருப்பதாக. நானே முத்தரசிய பார்க்க வரணும்னு நினைச்சன் ரஞ்சி. நீங்களே வரீங்க வாங்க வாங்க என்று போனை வைத்தார்.

ரஞ்சனியின் வீட்டின் முன்பு கார் நிற்க, மெதுவாக இறங்கி வந்தாள் குழலி. வாசலில் வந்து நின்ற பரமுவும் சுசிலாவும் மூவரின் முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்று யூகித்தனர், என்ன ஆச்சுமா என்று கேட்டார் பரமு..

அப்பா உள்ள போலாம் வாங்க என்று அழைத்து சென்றால் ரஞ்சனி. குழலியின் காலை பார்த்த இருவரும் பதறி தான் போனார்கள்.

குழலியை சோஃபாவில் அமர வைத்து மூன்று பேருக்கும் ஜூஸ் கொண்டு வந்தார் சுசிலா. அழுது கொண்டிருந்த முத்தரசியையும் குழலியையும் கட்டாய படுத்தி குடிக்க வைத்தார் பரமு. என்னாச்சு ரஞ்சி? குழலி கால் ஏன் இப்படி இருக்கு என்று சுசிலா கேட்க, ரஞ்சனி முத்தரசியிடம் அத்தை என்ன ஆச்சு சொல்லுங்க. முத்தரசி அழுது கொண்டே காலையில் நடந்த அனைத்தையும் கூறினார். கேட்ட மூவருக்குமே அவ்வளவு கோவம்.

ச்சீ என்ன ஆளுங்க அந்த மகேஷ்வரி இப்படியும் ஒரு மனுஷி இருப்பாங்களா என்று கொதித்து எழுந்தார் சுசிலா. பரமுவிற்கும் அதே எண்ணம் தான். சுந்தரம் எங்க போனான் வீட்ல இல்லையா என்றார் பரமு. சுந்தரம் இருந்து இருந்தாள் பிரச்சனை இவ்வளவு தூரம் பெருசாகி இருக்காதே என்ற எண்ணத்தில் கேட்டார்.

சரக்கு லாரி வந்து இருக்குன்னு விடியறதுக்கு முன்னாடியே மாமா கிளம்பி போய்ட்டாரு, என்று தேம்பி கொண்டே சொன்னால் குழலி.

நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கு குழலி என்றார் பரமு. அவள் அம்மாவை பார்த்தாள் இன்னும் அழுது கொண்டு தான் இருந்தார். அம்மா நீ ஊருக்கு போய்டுமா என்றால் மனமே இல்லாமல். அவள் அம்மாவை ஒரு மாதம் தன்னோடு இருத்தி கொண்டு ஆசை தீர ஊர் சுற்றி அவரோடு செல்லம் கொஞ்ச வேண்டும் என்று நினைத்த குழலி தான் இப்போது அவள் அன்னையை ஊருக்கு போக சொல்கிறாள்.

குழலி என்ன பேசுற நீ? முத்தரசிக்கு சுந்தரம் மட்டும் அண்ணன் இல்லை, நானும் அவளுக்கு அண்ணன் தான். நான் தான் முத்தரசிய சென்னைக்கு அழைச்சன், நீயும் ரஞ்சியும் அங்க இருக்கருதுனால தான் அவ சுந்தரம் வீட்டுக்கு வந்தா இல்லனா அவ இங்க தான் இருந்து இருப்பா. இன்னைக்கு இந்த பிரச்சனை வந்தும் இருக்காது என்று வருந்தினார் பரமு.

வேண்டாம் மாமா, அம்மா ஊருக்கு போட்டும், என்ன எப்படி இருந்தாலும் மாமா அழைச்சிட்டு போய்டுவாரு. நான் அங்க அம்மா இங்கன்னு இருக்கறது நல்லா இருக்காது. மறுபடியும் எங்க அம்மா அந்த வீட்டுக்கு வந்து அசிங்கப்பட வேண்டாம் என்றால் தழுத்தழுத்த குரலில்.

முத்தரசிக்கும் மகள் சொல்வதே சரியென தோன்ற, அண்ணா குழலி சொல்றது தான் சரி நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பரம், இன்னொரு நாள் வரன் என்றார். தாயும் மகளும் இவ்வளவு உறுதியாக இருக்க அவர்கள் இருவராலும் ஒன்றும் பேச முடியவில்லை. சரிம்மா நான் ஏற்பாடு பண்றன் என்றார். அண்ணா பஸ்லயே போய்க்குறன் என்றவரை இம்முறை சுசிலா அதட்டினார். ஏன் முத்து கூட்டிட்டு வந்த எங்களுக்கு கொண்டு போய் பத்திரமா விட தெரியாத.. கார்ல போறதா இருந்தா ஊருக்கு போ, இல்லனா எத்தனை நாள் ஆனாலும் இங்கயே தங்கிடு என்றார் சுசிலா. அதன் பின் எப்படி மறுத்து பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி போனார் முத்தரசி. மாலை போல் ஊருக்கு செல்ல கார் வரும் என்று ஓட்டுநரிடம் பேசிவிட்டு தகவலை கூறினார் பரமு.

இருவரையும் கட்டாய படுத்தி சாப்பிட வைத்தனர். அவர்களுடன் ரஞ்சனியும் அமர்ந்து சாப்பிட்டால். குழலி முத்தரசி இருவரையும் ஓய்வு எடுக்க கூறினார் சுசிலா. குழலிக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ரஞ்சனியிடம் குழந்தையை பார்க்கனும்கா என்றால், நான் போய் அழைச்சிட்டு வரன் குழலி என்று மீண்டும் அவளின் புகுந்த வீட்டிற்கு கிளம்பினால்.

பரமு, சுந்தரமிற்கு அழைத்து வேலை முடிந்ததும் இங்கு வருமாறு கூறியிருந்தார். சரிடா இன்னும் கொஞ்சம் நேரத்துல வேலை முடிஞ்சிடும் வரன் என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

ரஞ்சனி வீட்டிற்கு வர, அங்கு அழுத குழந்தையை தூக்கி வைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தான் விஷ்வா. அவர்களும் அப்போது தான் வீட்டிற்கு வந்து இருந்தனர் போலும். மகேஷ்வரி ஹாலில் தான் அமர்ந்து இருந்தார்.

சூர்யா அவன் அம்மா பக்கத்தில் அமர்ந்து இருந்தான். உள்ளே வந்த ரஞ்சனியிடம் எங்க போன ரஞ்சி? குழலி எங்க நாங்க வரும் போது பாப்பா அழுதுட்டு இருந்தா. குழந்தைய விட்டு எங்க போனா என்று விஷ்வா கேள்விகளை தொடுத்தான். அவனிடம் இருந்து குழந்தையை மட்டும் வாங்கி கொண்டாள். பதில் கூறவில்லை. ரஞ்சி உன்கிட்ட தான் கேக்குறன் எங்க போனா குழலி? முத்தரசி அத்தையும் காணுமே என்றான்.

மருத்துவமனையில் இருந்து வந்ததும் அவன் கண்கள் மனைவியை தான் தேடியது. அவளை அடித்துவிட்ட குற்ற குறுகுறுப்பும் மனதோடு சேர்ந்து கொள்ள அவளை பார்க்க வேண்டும் என்று தவித்து கொண்டிருந்தான். அவள் தெரியாம தான் எண்ணை கொட்டியிருப்பா, அவ பேச வந்ததை கூட கேட்காம அவசரபட்டு கைநீட்டிட்டோம் என்று அவனையே திட்டி கொண்டான். மருத்துவமனையில் இருந்து எப்போது வீட்டிற்கு வந்து அவள் முகத்தை பார்ப்போம் என்று இருந்தது.

வீட்டிற்கு வந்தவனிற்கு, குழலியின் வாசம் இல்லா வீடே வரவேற்றது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்க அந்த இடத்திற்கு சென்றான். முத்தரசி தங்கியிருந்த அறையில் தான் சரசு குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து கொண்டிருந்தார். குழந்தை பாலை குடிக்காமல் தாயை தேடி அழ துவங்கிவிட்டது. விஷ்வா குழந்தையை வெளியே தூக்கி வந்து சமாதானம் செய்து கொண்டிருந்தான். சரசுவிடம் குழலியும் அவள் அம்மாவும் எங்கே என்றான். மனம் ஏதோ அடித்து கொண்டது. ரஞ்சனி பாப்பா கூட தான் ரெண்டு பேரும் போனாங்க ஐயா ஆனா எங்கன்னு தெரில என்றால் சரசு. ரஞ்சனி தான் யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தால்.

எங்க போனா, என்று மனம் நெருடலாக இருந்தது. அவளுக்கு போனில் அழைத்தான். அழைப்பு சத்தம் அறைக்குள் இருந்து கேட்டது. போன் கூட எடுத்துட்டு போகல என்று புலம்பினான்.

மகேஷ்வரிக்கு மகன் கையில் இருந்த குழந்தையை பார்க்கவும் எரிச்சலாக இருந்தது.

அந்த நேரம் தான் ரஞ்சனி உள்ளே வந்து குழந்தையை அவள் கையில் மாற்றி கொண்டாள்.

விஷ்வா மீண்டும் ரஞ்சனியிடம் குழலி எங்க ரஞ்சி உன்கூட தான அவ வந்தா இப்போ நீ மட்டும் வர? அவங்க ரெண்டு பேரும் எங்க என்று கத்தியிருந்தான்.

சூர்யாவும், ரஞ்சனி அண்ணியும் அத்தையும் எங்க? விஷ்வா கேக்குறான்ல பதில் சொல்லு என்று அதட்டினான்.

சொல்ல முடியாது என்ன பண்ணுவீங்க? உங்க அண்ணன மாதிரி அடிக்க போறிங்களா??

ரஞ்சனி எங்க ரெண்டு பேருக்குள்ள வராத என்றான் விஷ்வா. மிஸ்டர் விஷ்வா நீங்க தான் இப்போ புருஷன் பொண்டாட்டி பேசிட்டு இருக்கும் போது நடுவுல வரீங்க.

நீ என்ன பத்தி பேசாத.

நீ பண்ணத தான சொன்னன்.. நான் என்ன பொய்யா சொன்னன்?

இவள் இப்படி தான் பதிலுக்கு பதில் பேசுவாள் என்று விஷ்வா அமைதியாகி போனான்.

அதற்குள் மகேஷ்வரி, பார்த்தியா சூர்யா.. என்ன பேச்சு பேசுறான்னு. அம்மா அப்போவே சொன்னன் கேட்டியா இவ வேண்டாம்னு, இப்போ பாரு எல்லாரையும் எப்படி மட்டு மரியாதை இல்லாம பேசுறான்னு என்று தன் இளைய மகனை தூண்டி விட்டு கொண்டிருந்தார் மகேஷ்வரி. சூர்யா அவன் அன்னை பேச்சிற்கு செவி மடுக்கவில்லை.

அதற்குள் விஷ்வா முந்தி கொண்டான், கொஞ்சம் வாய மூடுங்க மா.. இப்போ தான் ரஞ்சனி இந்த வீட்டு மருமக, ஆனா சின்ன வயசுல இருந்து அவ என்னோட ஃப்ரன்ட் அந்த உரிமைல தான் அவ என்கிட்ட பேசுறா. எல்லாரையும் தூண்டிவிட்டு பிரச்சனைய உண்டு பண்ணி அதல குளிர் காயாதிங்க. உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு உங்க மேல ஒரு இரக்கம் இருக்கு அதை அட்வான்டேஜ்ஜா எடுத்துக்காதீங்க என்று சுல்லேன்று எரிந்து விழுந்தான்.

அதில் அவன் குழலியை பார்க்க முடியாத ஆதங்கமே அதிக அளவு இருந்தது.

ரஞ்சனி அவள் மாமாவிற்கு அழைத்து வீட்டிற்கு வர கூறினாள். பரமு அங்க வர சொல்லியிருந்தானேமா என்று மருமகளின் கேள்விக்கு பதில் கொடுக்க.. நீங்க இங்க வாங்க மாமா. அதுக்கு அப்பறம் நாம சேர்ந்து அங்க போலாம் என்றான். ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டவர் வரன்மா என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

அதற்குள் குழந்தைக்கு இட்லியோடு லேசாக சாம்பார் ஊற்றி ஊட்டிவிட்டாள் ரஞ்சனி.

விஷ்வாவிற்கு ரஞ்சனி போனில் பேசியதில் புரிந்து போனது குழலியும் அவள் அம்மாவும் பரமு மாமா வீட்டில் இருக்கிறார்கள் என்று. சிறு கோவமும் முளைத்தது என்ன பழக்கம் இது சண்டை வந்ததும் அடுத்த வீட்டில் போய் இருப்பது என. சரி அப்பா வரட்டும் அவர் வந்ததும் அவரோடு அங்கு செல்லலாம் என முடிவு செய்து இருந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சுந்தரம் வீட்டிற்கு வந்து இருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

54. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சுந்தரம் வேகமாக வீட்டிற்குள் வந்து இருந்தார். வீட்டில் இருப்போர் அனைவரும் அங்கு தான் இருந்தனர். ரஞ்சனிக்கு தன் மாமனார் இப்படி என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பதட்டத்தோடு வருவதை கண்டு வருத்தமாக இருந்தது.

என்ன ஆச்சு ரஞ்சனி, ஏன் இங்க வர சொன்ன? பரமுவும் போன் பண்ணி அங்க வர சொன்னான்.. நீங்க யாரும் வேலைக்கு போகலையா என மகன் மருமகளிடம் கேட்டார்...

மாமா ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க. என்றவள் சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் அவருக்கும் அது தேவையாக இருக்க, வாங்கி குடித்தவர் அப்போது தான்  குழலியும் முத்தரசியும் அங்கு இல்லாததை கண்டார். குழலியும் முத்தரசியும் எங்க போனாங்க என்று பொதுவாக கேட்டார்.

மாமா, குழலியும் அரசி அத்தையும் எங்க அப்பா வீட்ல இருக்காங்க. உங்க பெரிய மகன் விஷ்வா குழலிய அடிச்சிட்டாரு என்று பட்டென்று பிரச்சனையை போட்டு உடைத்தால். அவர் விஷ்வாவை பார்க்க. அவனால் எதுவும் பேச முடியவில்லை..

ஏன் என் பையன முறைக்கிறிங்க.. நீங்க கூட்டிட்டு வந்திங்களே அந்த தரித்திரம் புடிச்சவ என்று சொல்லும் போதே, விஷ்வா அம்மா என்று குரல் உயர்த்தி இருந்தான்.. என்ன அடக்க நினைக்காத விஷ்வா என்று மகனிடம் கத்திவிட்டு மகேஷ்வரி தன் காலை கணவனிடம் காட்டினார் பாருங்க, நல்லா பாருங்க உங்க மூத்த மருமக என் மேல சூடான எண்ணைய கொட்டி வச்சு இருக்கா.. கால் எப்படி சிவந்து போய் இருக்குன்னு நல்லா பாருங்க. கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தோம் என்றால் அங்குள்ள யாரையும் பேசவிடாமல்.

எண்ணைய என் மருமக உன் கால்ல ஊத்தனாலா என்றார் நம்பாத பார்வையோடு.

ஆமாம் என்றால் மகேஷ்வரி சற்று தடுமாறி.

நீ வேணும்னா அவமேல சூடான எண்ணைய ஊத்தியிருப்பன்னு சொல்லு நம்பறன்.
ஆனா குழலி அப்படி செஞ்சு இருக்க மாட்டா.. ஈ எறும்புக்கு கூட, கெடுதல் நினைக்காதவ குழலி என்று மகள் போல் நினைக்கும் மருமகள் மீதுள்ள நம்பிக்கையில் கூறினார் சுந்தரம்.

விஷ்வா எதுவும் பேசமுடியாமல் நின்றான் தன் அப்பா குழலி மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை நினைத்து.

விஷ்வா குழலி மீது நம்பிக்கை வைக்காமல் இல்லை. குழலி தெரியாமல் எண்ணையை தட்டிவிட்டு இருப்பாள் என்று தான் அப்போதும் நினைத்தான். அந்த நேரத்தில் அவன் அம்மா சிவந்த காலுடன் வலியில் துடித்ததும், இவளின் கவனமின்மை தானே இதற்கு காரணம் என்று மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டி கொண்டு இருந்த தாய் பாசம் குழலின் கன்னத்தை அந்த நேரம் பதம் பார்க்க வைத்தது..

ரஞ்சனி என்ன நடந்துச்சுன்னு நீ சொல்லுமா என்றார் சுந்தரம்..

நான் சொல்லல மாமா, இந்த வீட்ல வாழ வந்த மருமகங்க சொல்றத விட வேலை செய்றவங்க சொல்றத தான எல்லாரும் நம்பறாங்க. அதனால அவங்களே சொல்லட்டும் என்று வேலையால் சரஸ்வதியை  அழைத்தாள் ரஞ்சனி.

நான் என் ரெண்டு மருமகள்களையும் நம்புவன் ரஞ்சனி. விஷ்வா சூர்யா எப்படியோ அதே மாதிரி தான் நீங்களும் எனக்கு.

பரவால்ல மாமா உங்க ரெண்டு பசங்களும், நான் சொன்னா நம்ப மாட்டாங்க என்றவள் அங்கு வந்து இருந்த சரஸ்வதியிடம் நடந்ததை எந்த ஒளிவு மறைவும் இல்லாம சொல்லுங்க அக்கா என்றால்.

அந்த வேலையாள் சரஸ்வதி முதலில் மகேஸ்வரியை பார்த்து தயங்கியவள் பின், தைரியத்தை வரவழைத்து கொண்டு காலையில் நடந்த அனைத்தையும் கூறினாள்.

கேட்டு கொண்டிருந்த விஷ்வா துடித்துவிட்டான், அவர் சொல்லிய உண்மையில்.. அம்மா தான் குழலி கால்ல எண்ணைய ஊத்துனாங்களா என்றான், கேட்கும் போதே அவன் குரல் தடுமாறியது.

ஆமாம் என்று தலையாட்டினார் சரஸ்வதி.

ஒருபுறம் சூர்யாவிற்கும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஏன் இப்படி அவசரப்பட்டோம்?? என்னால தான அண்ணா அண்ணிய அடிச்சுட்டான் என்று நொந்து போனான்.

அது மட்டும் இல்ல தம்பி.. அன்னைக்கு உங்கள தேடி ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்தாங்கள, அவங்க மூலமா வேலைக்கு வந்தவ தான் பாக்கியம். இங்க நடக்குற எல்லாம் விஷயத்தையும் இந்த பாக்கியம் அவங்களுக்கு போன்ல சொல்லிடுவா.

ஒரு நாள் அவ தோட்டத்துல இருந்து போன் பேசும் போது நான் கேட்டன், அன்னைக்கு ஒரு நாள் பூரணி பாப்பா லேப்டாப் உடைச்சுட்டா, பைல் எல்லாம் கிழிச்சுட்டான்னு நீங்க அடிச்சீங்கள? என்று அவர் கேட்கும் போதே விஷ்வாவிற்கு குழந்தையை அடித்த நிகழ்வு நினைவில் வந்து வேதனையை இன்னும் அதிகரிக்க செய்தது..

அது பாப்பா செய்யல தம்பி. உங்க அறைல யாரும் இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டு, தூங்குற குழந்தைய எழுப்பிவிட்ட இந்த பாக்கியம் தான் கீழ தண்ணி ஊத்திட்டு லேப்டாப்ப ஒடச்சிட்டு பைல் எல்லாத்தையும் கிழிச்சிட்டு குழந்தை கைல குடித்துட்டு கீழ வந்து இருக்கா. உங்களுக்கும் குழலி பாப்பாக்கும் சண்டை வரணும்னு மயூரி செய்ய சொன்னதை இவ செஞ்சுட்டா தம்பி.

இதெல்லாம் பாக்கியம் போன்ல பேசும் போது நான் கேட்டன் என்று அனைத்தையும் கூறி முடித்தார் சரஸ்வதி.

கேட்டு கொண்டிருந்த விஷ்வா அந்த பாக்கியத்தை அடிக்கவே சென்று விட்டான்.

பாக்கியம் பயந்து போய் மகேஷ்வரி இருக்கும் சோஃபா பின்னால் போய் நின்று கொண்டாள். அம்மா காப்பாத்துங்க என்று.

ரஞ்சனி தான் வந்து விஷ்வாவை தடுத்து இருந்தாள். கொஞ்சம் அடங்குறியா? எல்லாத்துலயும் உனக்கு அவசரம் தான். பொறுமையா என்ன ஆச்சு ஏதாச்சுன்னு விசாரிக்குற பழக்கமே இல்ல என்று விஷ்வாவை திட்டினாள். சூர்யாவும் வந்து விஷ்வாவை மேலும் முன்னேறாமல் பிடித்து கொண்டான்.

மல மாடு மாதிரி இருக்க உன்ன என்னால தடுக்க கூட முடியல என்று விஷ்வாவை இதான் சாக்கென்று மல மாடு என்று  திட்டினாள்.. அவன் இருக்கும் கோவத்தில் ரஞ்சனி சொன்னது கருத்தில் பதியவில்லை.

விஷ்வா போதும் நிறுத்து என்று சுந்தரம் மகனை அடக்கி இருந்தார். யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவியா உன் புத்தி எங்க போச்சு? உன் பொண்டாட்டி மேல உனக்கு நம்பிக்கை இல்ல என்றார்.

அப்பா நான் நம்பாமலாம் இல்ல. அந்த சூழ்நிலை என்ன கைநீட்ட வச்சுடுச்சு என்றான் கோவத்துடன்.

இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. குழலிய உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு நான் பெரிய தப்பு பண்ணிட்டன்.

ரஞ்சனி அந்த நேரத்திலும் கவுன்ட்டர் கொடுத்தாள்.

நீங்க உங்க ரெண்டு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதுக்கு பதில் நீங்க முதல்ல ஒரு நல்ல ஆண்ட்டியா பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாம் மாமா. வீட்டுக்கு வாழ வந்த நாங்க நிம்மதியா இருந்து இருப்போம் என்று நைசாக அனைவரின் கவனத்தையும் மகேஷ்வரி பக்கம் திருப்பினார். அனைத்திற்கும் காரணமானவர் அவர் தானே என்று.

இந்த மூதேவிய என்னைக்கு இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்தனோ அன்னைக்கு புடிச்சுது எனக்கு தரித்தரம் என்று தலையில் அடித்து கொண்டார் சுந்தரம்.

வீட்ல பெரிய மனுஷியா தான் நடந்துக்குறது இல்ல. நல்லா வாழற பிள்ளைங்களையும் பிரிச்சு விடுறியே நீயெல்லாம் ஒரு அம்மாவா?

முத்தரசிய பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு? ஜெகதீசன் இறக்கும் போது அவளுக்கு வயசு 24 லோ 25 ன்ஜோ தான். அவ நினைச்சு இருந்தா வேற கல்யாணம் பண்ணி இருக்கலாம். அவங்க வீட்லயும் அவளை கூட்டிட்டு போய், கைல இருந்த குழந்தைய கொன்னுட்டு அவளுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க.. ஆனா அவ குழந்தைக்காக அவ அம்மா அப்பா எல்லாரையும் தூக்கி போட்டுட்டு யாருக்கும் தெரியாம வீட்ட விட்டு எங்கேயோ கஷ்ட்டபட்டு குழந்தைய வளர்த்து இருக்கா. அவ அம்மா. அந்த குழந்தைய கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டா.. நீயெல்லாம் ஒரு அம்மாவா? அம்மான்ற வார்த்தைய கூட சொல்ல உனக்கு தகுதி இல்ல.. பூமிக்கு பாரமா இன்னும் எதுக்கு இருக்க என்றார் ஆரோஷாமாக..

மகேஷ்வரிக்கு கணவனின் பேச்சு அவமானமாக இருந்தது.

கள்ளம் கபடம் இல்லாத பொண்ணு குழலி. அவள பத்தி உனக்கு என்ன தெரியும்? வார்த்தைக்கு வார்த்தை அவளை தரித்திரம், ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தான்னு சொல்ற? அவ வாழ்க்கைல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா உனக்கு?

சின்ன பொண்ணு, 17 வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கைனா என்னனு தெரியாத வயசுல வாழ்க்கைய இழந்துட்டு வந்தது தெரியுமா? என்று குழலி வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கூறினார் சுந்தரம்.

விஷ்வாவை தவிர, கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். மகேஷ்வரிக்கு கூட ஒரு மாதிரி தான் இருந்தது சுந்தரம் குழலியை பற்றி கூறியது.

சூர்யாவிற்கும் ரஞ்சனிக்கும் கூட என்ன சொல்வது என்று தெரியவில்லை.. இந்த சிறுவயதில் எவ்வளவு கஷ்ட்டங்களை அனுபவித்து இருக்கிறாள் என்று அந்த சிறு பெண்ணிற்காக கவலை கொண்டனர்.

விஷ்வா அதற்கு மேல் பொறுக்க முடியாமல், என் பொண்டாட்டிய பார்த்து யாரும் பாவப்பட வேண்டாம். அவளுக்கு எல்லாமுமா நான் இருக்கன் என்றான் விஷ்வா.

சொன்னதோடு மட்டுமல்லாமல், குழந்தையை ரஞ்சனியிடம் இருந்து வாங்கி கொண்டு, கார் சாவியை எடுத்து கொண்டு வாசல் நோக்கி சென்றான்.

நில்லு விஷ்வா, எங்க போற நீ?

என் பொண்டாட்டிய பார்க்க போறன் என்றான்..

நீ இனிமேல் என் மருமகள நெருங்கவே கூடாது. குழலி கொஞ்ச நாளுக்கு பரமு வீட்லயே இருக்கட்டும். உங்க தொல்ல இல்லாம நிம்மதியா இருப்பா என் மருமக. அவருக்கு அவ்வளவு கோவம் விஷ்வா, குழலியை அடித்து விட்டான் என்று தெரிந்ததும்.

அத சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல. அவ என் பொண்டாட்டி. இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை நீங்க தலையிடாதீங்க என்று கோவமாக கூறினான் விஷ்வா.

ரஞ்சனி சும்மா இல்லாமல், பாருங்க மாமா காலைல கூட இப்படிதான் பேசுனான்.. ஏன் விஷ்வா குழலிய அடிச்சன்னு நான் பொறுமையா தான் மாமா கேட்டன் அதுக்கும் இப்படி தான் பதில் சொன்னான். எங்களுக்குள்ள வராதன்னு என்று அவள் மாமாவிடம் போட்டு கொடுத்தாள்.

சூர்யா அந்த நிலையிலும் அவனின் பழைய ரஞ்சனியை கண்டு ரசித்தான். அவன் காதலித்த ரஞ்சனியும் இப்படித்தான் சீரியஸ்ஸாக பேசி கொண்டிருக்கும் போது ஏதாவது பேசி காமெடி ஆக்கிவிடுவாள் அந்த விவாதத்தை. இப்போதும் அவள் அப்படியே நடந்து கொள்ள அவளை ரசித்து பார்த்தான் சூர்யா.

விஷ்வா ரஞ்சனி போட்டு கொடுத்ததில் கடுப்பாகியவன், நடையை நிப்பாட்டி, குழந்தை கையில் இருந்த பால் புட்டியை வாங்கி அவள் மேல் குறி பார்த்து எரிந்தான். அந்த பால் புட்டி அவள் மேல் படும் முன் சூர்யா வந்து அதை லாவகமாக கேட்ச் பிடித்தான்.

பாருங்க மாமா உங்க முன்னாடியே என்ன அடிக்க வரான் என்று மாமனாரிடம் மீண்டும் புகார் செய்ய, இந்த முறை விஷ்வா டேய் அந்த கொசுவ வாய மூடு சொல்லு இல்ல அவ்ளோ தான் என்று நிற்காமல் சென்றான்.

சுந்தரம் அவன் காதில் விழும் அளவிற்கு சொன்னார். விடுமா அங்க போனா மட்டும் இவனால என்ன பண்ண முடியும், என் மருமக குழலி இவன் மூஞ்ச கூட பார்க்க மாட்டா.. செவத்துல அடிச்ச பந்து மாதிரி போன வேகத்துல திரும்பி வருவான் பாரு என்றார் நக்கலாக.

நடையை நிப்பாட்டி தந்தையை முறைத்துவிட்டு சென்றான் விஷ்வா.

 

55. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா குழந்தையை மடியில் அமர்த்தி கொண்டு லாவகமாக காரை ஒட்டி கொண்டு இருந்தான். மனம் கனத்து இருந்தது. நான் எப்படி அவ வலிய உணராம போனன். அவ என்கிட்ட அந்த வலியிலும் பேச வந்தாளே நான் தான அவ பேச வந்தத கூட கேட்க பொறுமை இல்லாம அடிச்சுட்டன்.. எல்லாத்தையும் பார்த்த அத்தை எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பாங்க என ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்து வருந்தினான்.

எப்படியோ வாகனத்தை ஓட்டி, பரமுவின் வீடு வந்து இருந்தான் விஷ்வா. குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். காரில் வரும் போதே பூரணி பாப்பா தூங்கி இருந்தாள்.

வாப்பா விஷ்வா என்று வரவேற்றார் பரமு, மாமா குழலிய பார்க்கணும் என்றான் எடுத்தவுடன், அவன் முகத்தில் தெரிந்த தவிப்பை கண்டு எதுவும் பேசாமல் குழலி இருக்கும் அறையை காட்டினார்.

குழந்தையோடு உள்ளே செல்ல எத்தனித்தவன். அங்கு அவன் அத்தையின் குரல் கேட்க்கவும் உள்ளே போலாமா வேண்டாமா என சில கணம் அங்கேயே நின்றான். உள்ளே மகளின் கைபிடித்து பேசி கொண்டு இருந்தார் முத்தரசி, அம்மா உன் வாழ்க்கைல மறுபடியும் அவசர பட்டுட்டன் குழலி. சுந்தரம் அண்ணா பேச்சை நம்பி உன்ன கல்யாணம் பண்ணி குடுத்துட்டன். நான் யோசிச்சு இருக்கணும். என்று மீண்டும் அதையே சொல்லி அழுதார்.

உன் அப்பா இருந்து இருந்தா உனக்கு இந்த நிலமை வர விட்டு இருக்க மாட்டாரு. அவர் உயிரோட இருக்கும் போது உன்ன அவர் கைய்க்குள்ளயே வச்சு வளர்த்தாரு.. அப்போவே சொல்வாரு என் பொண்ண உள்ளங்கைல வச்சு தாங்குறவனுக்கு தான் கல்யாணம் பண்ணி குடுப்பன்னு.. அவர் இருந்து இருந்தா உன் வாழ்க்கை இப்படி அல்லோல பட்டு இருக்காது. எல்லாம் என் அவசர புத்தியால் தான் என்று மீண்டும் வாய் பொத்தி அழுதார்.

அம்மா ப்ளீஸ் மா, என்று குழலி பேச வாய் திறக்க.. அம்மாவ மன்னிச்சுடு குழலி. உன்ன விஷ்வா தம்பி இதுக்கு முன்னாடியும் இப்படி அடிச்சு இருக்காரா அந்த என்று பெற்றவள் மனம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டி கேட்டது. இல்லமா அவர் என்ன நல்லா தான் பார்த்துக்குவாரு என்று குழலி சொன்னாலும் அவர் நம்பவில்லை. நான் கஷ்ட்டபடுவன்னு நினைச்சு பொய் சொல்லாத குழலி எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லு.

குழலிக்கு என்ன சொல்வது, எப்படி அம்மாவை சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.

அம்மா என்ன நினைச்சு கவலை படாத நான் இங்க நல்லா தான் இருக்கன். அத்தைய தவிர  எல்லாரும் என்ன நல்லா பார்த்துப்பாங்க. அத்தை கூட சில நேரம் தான் திட்டுவாங்க. மிச்சம் நேரம் அமைதியா தான் இருப்பாங்க. அதுவும் என்ன திட்னது அவருக்கோ இல்ல மாமாக்கோ தெரிஞ்சுதுனா அத்தை கிட்ட சண்டைக்கு கூட போவாங்க. ஏன் குழலிய அப்படி சொன்னிங்கன்னு கேட்டு.. அவ்ளோ பாசம் அங்க இருக்க எல்லாருக்கும் என்மேல என்றால்.

மகளின் பேச்சு சர்க்கரை பாகை போல் இனிப்பாக இருந்தாலும், காலையில் அவர் கண்ட காட்சி மகள் சொல்வதை நம்ப மறுத்தது என்பதே உண்மை.

அனைத்தையும் அறைக்கு வெளியில் இருந்து கேட்டு கொண்டு இருந்தான் விஷ்வா.

அவன் செய்த தவறை நன்றாக உணர்ந்து கொண்டான். அவர் இடத்தில் இருந்து பார்க்கும் போது யாராக இருந்தாலும் இப்படி தான் மனம் தவிக்கும் என்று புரிந்து கொண்டான்.

அதற்கு மேல் அங்கு நிற்காமல் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். உள்ளே வந்த விஷ்வாவை கண்ட முத்தரசி கண்களை துடைத்து கொண்டு வெளியே செல்ல முற்பட்டார்.

அத்த என்றான்..

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். நீங்க பேசுனத எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தன். உங்க பயம் நியாயமானது தான் ஆனா அவசியம் இல்லாதது. நான் அவ்ளோ கெட்டவன் இல்ல அத்தை. காலைல என்னையும் மீறி வந்த கோவத்துல குழலிய அடிச்சுட்டன். எனக்கு எல்லாமே என் பொண்டாட்டி குழலி தான். இருந்தாலும் சாரி அத்த என்ன மன்னிச்சுடுங்க உங்க பொண்ண அடிச்சதுக்கு என்றான் உண்மையில் மனம் வருந்தி.

குழலி மெத்தையில் கால் நீட்டி அமர்ந்து விஷ்வா பேசுவதை கேட்டு கொண்டு தான் இருந்தாள். முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளி காட்டவில்லை.

விஷ்வா இப்படி மன்னிப்பு கேட்டதும், பதறிய முத்தரசி ஹய்யோ தம்பி ஏன் பெரிய பெரிய வார்த்தைலாம் பேசிகிட்டு, ஏதோ மனசு ரொம்ப பாரமா இருந்துச்சு குழலிகிட்ட பேசிட்டன்.

எனக்கு என் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும் தம்பி, அவ இந்த வயசுல பட கூடாத கஷ்ட்டத்தை எல்லாம் பட்டுட்டா. அதுக்கு நானும் ஒரு காரணம். காலைல நீங்க என்ன ஏதுன்னு விசாரிக்காம அவள அடிச்சதும் மனசு ரொம்ப கஷ்ட்டமா போய்டுதுச்சு. இப்போ உங்க பேச்சுல நீங்க என் பொண்ணு மேல எவ்ளோ பாசம் வச்சு இருக்கீங்கன்னு புரிஞ்சிகிட்டன் நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் தம்பி என்றார் முத்தரசி. மகளின் பேச்சு தராத நிம்மதி மருகனின் பேச்சு கொடுத்தது என்பதே உண்மை.

நீங்க பேசிட்டு இருங்க தம்பி, நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரன் என்றவர்  இருவருக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றார்.

விஷ்வா குழலியை பார்த்தான், அவள் அவன் முகத்தை பார்க்காமல் இரு கைகளையும் கோர்த்து கொண்டு, தலையை தாழ்த்தி அமர்ந்து இருந்தாள்.

மெதுவாக அவள் அருகே சென்றவன், அவள் மேல் உரசி கொண்டே அவளை தாண்டி குழந்தையை மெத்தையில் படுக்க வைத்தான்.

குழலி குழந்தையிடம் செல்ல போக, அவள் கையை பிடித்து அவளை நகர விடாமல், அவள் முகத்தை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவள்  கன்னத்தில் இன்னும் அவனின் கைத்தடம் தெரிந்தது. அந்த இடத்தை மென்மையாக வருடி விட்டான் அதற்கே அவளின் முகம் வலியில் சுணங்கியது.

சாரி.. சாரி டி என்று பதறி கையை எடுத்து கொண்டான். உண்மையில் அவள் காலை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை.. பார்த்தாள் கண்ணீர் விட்டு விடுவான். பெண்ணின் கால் பிடித்து காதல் செய்பவர்களில் விஷ்வாவும் ஒருவன். அவளின் மலர் பாதங்களில் முத்தம் வைக்காமல் அவனின் கூடல் முற்று பெற்றது இல்லை..

திருமணமான இந்த எட்டு மாதங்களில் அவளின் பிஞ்சு  விரல்களுக்கு மொத்தம் பத்து முறையேனும் மிஞ்சியை மாற்றி இருப்பான்.

பெடிகியூர் செய்யாமலே குழலியின் விரல்கள் அழகான வடிவம் பெற்று அவளின் பால் வண்ண நிறத்திற்கு ஏற்ப பொலிவுடன் இருக்கும்.

விஷ்வா ரசித்து ரசித்து மோக முத்தாடிய கமல பாதங்களை இப்போது பார்க்க தைரியமின்றி இருக்கிறான்.

அவளை இழுத்து அவனின் மார்போடு அனைத்து கொண்டான். கோவத்துல கை நீட்டிட்டன் டி, இந்த ஒரு முறை உன் புருஷன மன்னிச்சுடன் ப்ளீஸ்.. குழலி எதுவும் பேசவில்லை.. அவன் அனைப்பில் இருந்து விலகவும் முற்படவில்லை.

நீண்ட நேரம் அவளை தன் அனைப்புக்குள்ளே வைத்து இருந்தான் விஷ்வா. அவள் அவனை அனைக்கவில்லை. அதையும் உணர்ந்து தான் இருந்தான்.

சாரி டி என்றான் மீண்டும்.. அவளின் கண்ணீர் அவள் சாய்ந்து இருந்த அவனின் மார்பை சுட்டது.

பதறி போனவன் அவளை விட்டு விலகி அமர்ந்தான். குழலி அழாத டி, என்மேல தான தப்பு என்ன அடி திட்டு என்ன வேணும்னாலும் பண்ணு இப்படி அழாத டி என்றான்.

எங்க அம்மா முன்னாடி எதுக்கு என்ன அடிச்சீங்க? எங்க அம்மா என்ன எவ்ளோ நாள் கழிச்சு பார்க்க வந்து இருக்காங்க? அவங்க முன்னாடி என்ன அடிச்சு, bஎன்ன ரொம்ப நல்லா நடத்துனீங்க..

அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தான்.

உங்களுக்கு தெரியாது விஷ்வா, என் முதல் கல்யாண வாழ்க்கைல எல்லாம் முடிஞ்சு நான் வீட்டுக்கு வந்ததும், எங்க அம்மா எனக்கு ஆறுதலா இருந்தாலும் அவங்க மனசுக்குள்ள வேதனை இருந்துச்சு. என் வாழ்க்கைய நினைச்சு.

உங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் எங்க அம்மா மட்டும் தான். அவங்க மனசுல இருக்க குற்ற உணர்ச்சி போகணும், என் வாழ்க்கைய நினைச்சு அவங்க கஷ்ட்டப்படமா சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சன்..

அவங்கள ஒரு மாசம் என்கூட தங்க கேட்டதுக்கு இதுவும் ஒரு காரணம், நான் சந்தோஷமா வாழ்ந்தா அவங்களும் மனசு நிம்மதியோடு ஊருக்கு போவாங்கன்னு நினைச்சன். என் ஆசை எதுவும் நிறைவேறல.

எனக்கு உங்கள பார்க்கவே பிடிக்கல விஷ்வா போய்டுங்க இங்க இருந்து என்றால் அழுது கொண்டே.. குழலி ப்ளீஸ் இப்படி பேசாத, அத்த நம்ம கூடவே இருக்கட்டும், நாம சந்தோஷமா வாழறத அத்தை நிச்சயம் பார்ப்பாங்க.

எதுக்கு அவங்கள இன்னும் அசிங்க படுத்தறுதுக்கா என்றால் திடீர் என முளைத்த கோவத்துடன். போதும் எங்க அம்மா என்ன பார்க்க வந்து அந்த வீட்ல வாங்க கூடாத பேச்சை எல்லாம் வாங்கி அவமான பட்டு நின்னாங்க. இனிமேல் எப்பவும் எங்க அம்மா அந்த வீட்டுக்கு வர மாட்டாங்க. எல்லார்கிட்டயும் அசிங்கமான பேச்சு வாங்கணும்னு எங்க அம்மாக்கு ஒன்னும் தலையெழுத்து இல்லை.

தயவு செஞ்சு நீங்க இங்க இருந்து போங்க என்றால் மீண்டும்.

இவ்வளவு நேரமும் விஷ்வா அடித்ததை பற்றி பேசினால், அவளின் அம்மா அவமான பட்டதை பொதுவாக சொன்னால்.. ஒரு வார்த்தையும் அவள் மாமியார் மகேஷ்வரி பேசிய பேச்சை வாய் திறந்து கூறவில்லை.

அதை விஷ்வாவும் உணர்ந்து அவளிடம் கேட்டான், குழலி ரஞ்சனியும் சரசு அக்காவும் நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க டி.. நீ ஏன் இப்போ கூட எங்க அம்மா உன்னையும் உன் அம்மாவையும் பேசுனத சொல்லி சண்ட போடல என்றான்..

அவள் சொன்ன பதில் அவனின் மனதை சுருக்கென தைத்தது.

ஏன்னா இது எனக்கு ரெண்டாவது கல்யாணம் தான? யார் என்ன எவ்ளோ அசிங்கமா பேசினாலும் நான் பொறுத்துக்கிட்டு தான் போகணும், தப்பே செய்யலன்னா கூட புருஷன் அடிச்சா வாங்கிக்கணும். அதான் என் தலையெழுத்து என்றால்.

உடைந்து போனான் விஷ்வா.. தவறு செய்துவிட்டேன் தான் அதற்காக என்னை கொடுமைக்காரன் போல் அல்லவா சித்தரிக்கிறாள். அப்போ இவ்வளவு நாள் அவள் மீது நான் காட்டிய அன்பை புரிந்து கொள்ளவில்லையா என அவன் மனம் கேள்வி எழுப்பியது.

காயப்பட்ட மனசு இப்படி தான் நினைக்கும். அவ இப்போ கோவத்துல பேசுறத எல்லாம் ஆழமா சிந்திக்காத என்று அவனின் ஆழ்மனம் சரியான அறிவுரையை கூறியது.

அவள் கோவத்தில் இருக்கும் போது மேலும் மேலும் பேசி அவளின் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாதவன் அங்கிருந்து செல்ல முயன்றான்.

அவள் கால்களை பார்க்க வேண்டாம் என்று நினைத்தவனால் அதை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

அவள் கால்களை பார்த்த நொடி துடித்துவிட்டான். மீண்டும் சாரி சாரி என்று மன்னிப்பு வேண்டினான். கண் கலங்கியவனின் கண்ணீர் துளி அவளின் கால்களுக்கு மருந்தாக மாறியது.. அவன் கண்ணீர் சிந்தியதில் பெண்ணுள்ளம் விஷ்வா மீது கொண்ட கோவத்தை மறந்து அவனிடம் தஞ்சம் புக முயல, கொஞ்சம் ரோஷத்துடன் இருந்த இன்னொரு மனமோ அவளின் கால்களை அவனிடம் இருந்து இழுத்து கொண்டு அவனை தள்ளி வைக்க முற்பட்டது. விஷ்வா அவளிடம் இரஞ்சுதலான பார்வையை பார்த்து, அவளின் கால்களை மீண்டும் மென்மையாக பற்றி தன் கைக்குள் வைத்து கொண்டான்..

கொப்பளம் போட்டு இருந்த கால்கள் பார்க்கவே கொஞ்சம் விகாரமாக தான் இருந்தது. அதை எதையும் கண்டு கொள்ளாதவன் குனிந்து அவள் கால்களுக்கு, அவனின் அடர்ந்த மீசை முடி உரசாமல் முத்தமிட்டான்.

நிமிர்ந்து பார்க்கயில் குழலி அவனை முறைத்து கொண்டு இருந்தாள். சீக்கிரம் சமாதானம் ஆகிடு குழலி உன் புருஷன் பாவம் என்று கூறி அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.

வெளியே சுந்தரம், சூர்யா, ரஞ்சனி என மூவரும் அமர்ந்து இருந்தனர்.. வட்ட மேஜை மாநாடு போல் படு தீவிரமாக எதையோ விவாதித்து கொண்டு இருந்தனர் மற்றவர்களிடம்.

சூர்யா வெளியே வந்த விஷ்வாவை பாவமாக பார்க்க, ரஞ்சனியோ அவனை நக்கலாக பார்த்தாள்.

எனக்கு ஏதோ ஏல்ட்ரைய கூட்டி இருக்கா இந்த மீன் திருடி என்று மனதில் நினைத்து கொண்டே அவர்களை நோக்கி சென்றான் விஷ்வா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

56. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ஆமா மாமா நீங்க சொன்ன இந்த ஐடியா தான் சரியாவரும் என்று விஷ்வாவை பார்த்து கொஞ்சம் சத்தமாகவே கூறினாள் ரஞ்சனி.

பரமு நீ என்ன டா சொல்ற? என்று நண்பனையும் அவர்களின் திட்டத்திற்குள் சேர்த்து கொண்டார் சுந்தரம்.

விஷ்வா அங்கு வந்து நிற்க பாவம் அவனை தான் அங்கு யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

சுசிலாவும், முத்தரசியும் ஊர் கதை பேசி கொண்டு இருந்தனர்.

வெகு நேரம் கழித்து ரஞ்சனி, ஹேய் விஷ்வா நீ எப்போ வந்த? அப்பறம் உன் பொண்டாட்டிய சமாதானம் பண்ணிட்டியா என்று கேட்டவள், சரி அது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை.. நீ வா இங்க வந்து உக்காரு என்று அவள் பக்கத்தில் உள்ள இருக்கையை காட்டினாள்.

அதற்குள் குழலி அவள் அறையில் இருந்து மெதுவாக எழுந்து நடந்து வந்தாள். விஷ்வா பதறி கொண்டு அவளிடம் செல்ல போக, அதற்குள் ரஞ்சனி அவனை தாண்டி ஓடி சென்றால்.

குழலி ஏன் டி வெளிய வந்த? என்ன கூப்பிட்டு இருந்தா நான் வந்து இருப்பன்ல என்று கேட்டது விஷ்வா இல்லை ரஞ்சனி தான்.

அதில் கண்டான விஷ்வா ரஞ்சனியை முறைத்து கொண்டு இருந்தான்.. அவனை கண்டு கொள்ளாதவள் குழலியை பொறுமையாக நடக்க வைத்து கூட்டி சென்றால். ஹேய் ரஞ்சி நகரு என் பொண்டாட்டி நடக்க வேண்டாம் அவள நான் தூக்கிட்டு போறன் என்க, அதற்குள் குழலி என்ன யாரும் தூக்க வேண்டாம் அக்கா நான் உங்க கூட நடந்து வரன் என்றால்.

அதில் விஷ்வாவை வெறுப்பேற்ற வாய் பொத்தி சிரித்தாள் ரஞ்சனி.. அம்மா ஸ்டோவ்ல எதாச்சும் மறந்து வச்சுட்டியா இங்க வரைக்கும் கருகுற வாடை வருது என்று விஷ்வாவை பார்த்து கொண்டே கூறினாள். அவள் தன்னை தான் கேலி செய்கிறாள் என்று உணர்ந்தவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதற்குள் ரஞ்சனி குழலியை இருக்கையில் அமர வைத்து இருந்தாள். அவளின் ஒரு புறம் ரஞ்சனி அமர்ந்து கொண்டாள், மறுபுறம் விஷ்வா அமர போக பின்னால் வந்த சுந்தரம் அவனை அந்த புறம் நகர்த்தி விட்டு குழலியின் அருகில் அமர்ந்து கொண்டார்.

சூர்யா ரஞ்சனி அடிக்கும் லூட்டியை பார்த்து கொண்டு இருந்தாலும், அவனும் பாவமாக விஷ்வாவுடன் தான் நின்று கொண்டு இருந்தான்.

விஷ்வாவின் நிலை பாவமாக இருந்தது முத்தரசிக்கு.. அவர் ஏதோ பேச வாய் திறக்க, என்ன அத்தை நீங்க நின்னுட்டு இருக்கீங்க வாங்க வந்து உக்காருங்க என்று குழலியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து முத்தரசி அமர இடம் தந்தாள் ரஞ்சனி.

விஷ்வா மற்றும் சூர்யாவை சுற்றி அனைவரும் அமர்ந்து இருந்தனர். இருவரும் தவறு செய்த பிள்ளைகள் போல நடுவில் நின்று இருந்தனர். காலையில் அவசரத்திற்கு அணிந்து இருந்த டீஷர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் சகிதமாக.. விஷ்வா ரஞ்சனியை தான் முறைத்து கொண்டு நின்றான் அதற்கு மாறாக சூர்யா புன்னகை முகமாக பார்த்து கொண்டு இருந்தான் அவன் மனைவியை..

அவனின் குறுகுறு பார்வையை உணர்ந்த ரஞ்சனி, வெட்கம் கெட்டவன் என உதட்டு அசைவில் முனுமுனுத்தாள். அவள் உதட்டசைவை வைத்து அவள் முனகிய வார்த்தையை தெளிவாக கண்டு கொண்ட சூர்யா, உன்மேல காதல்ல விழுந்த நாள்ல இருந்து இப்படி தாண்டி சூடு சொரணை இல்லமா இருக்கன் என்று மனதில் நினைத்தான்.

அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாதவர்கள் அவர்களுக்குள் தீவிரமாக பேசி கொண்டு இருந்தனர் வீட்டில் இருப்போர்கள். அரசி, பரமு சொன்னான்மா.. நீ ஊருக்கு போறத பத்தி என்றார். ஆமா அண்ணா சாய்ங்காலம் ஊருக்கு கிளம்புறன் என்றார். ஏன்மா அவசர படுற? மகேஷ்வரி பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறன் டா இங்கயே இருமா.

அத்தை என்ன சொல்றிங்க ஊருக்கு போறிங்களா என்று அதிர்ச்சியாக கேட்டான் விஷ்வா? ஏன் அத்தை ஊருக்கு போறீங்க? என்மேல உள்ள கோவத்துல தான் கிளம்பி போறிங்களா? நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டனே என்று உண்மையில் வருந்தி பேசினான் விஷ்வா.

நானும் உங்ககிட்ட சொல்லிட்டன். எங்க அம்மா உங்க வீட்டுக்கு வந்து அவமான பட வேண்டாம்ன்னு. நான் தான் எங்க அம்மாவ கிளம்ப சொன்னன் என்று கோவமாக பதில் கொடுத்தாள் குழலி.

பிரச்சனைய பெருசு பண்ணாத குழலி, நமக்குள்ள இருக்க பிரச்சனை சரி ஆகிடும். அத்தைய இங்கவே இருக்க சொல்லு என்றான். முடியாது எங்க அம்மா ஊருக்கு போறது தான் என் முடிவு. நீங்க என் முடிவ எதிர்த்து நின்னா நானும் எங்க அம்மா கூட என் குழந்தைய தூக்கிட்டு போறன் என்றால்.

குழலி பேசியதில் விஷ்வாவிற்கு கோவம் வந்து விட்டது. அவளை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றான். செல்வதற்கு முன் பூரணி உனக்கு மட்டும் இல்ல எனக்கும் குழந்தை தான் என்று அழுத்தமாக கூறிவிட்டு நகர்ந்தான்.

சூர்யா குழலி அருகே வந்தவன், கிழே ஒரு காலை மடக்கி முட்டி போட்டு அமர்ந்து சாரி அண்ணி என்றான் அவளின் காலை பார்த்து கொண்டே.

குழலி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அண்ணி ப்ளீஸ் என்று அவள் கையை பிடித்து கெஞ்சினான். அருகில் இருந்த ரஞ்சனி குழலியிடம், குழலி விஷ்வாவ கூட கொஞ்சம் நாள் கழிச்சு போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுடு ஆனா, இந்த ரக்கூன்ன மட்டும் மன்னிக்காத, இவன் சரியான அம்மா கோந்து என்று சத்தமாகவே கூறினாள்.

சூர்யா, குழலியிடம் ப்ளீஸ் அண்ணி அவ பேச்சை கேட்டு என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக என்ன பனிஷ்மென்ட் வேணும்னாலும் குடுங்க நான் செய்றன் என்று வாயை விட்டு விட்டான்.

குழலி அதலாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்ல வாய் எடுக்க.. சும்மா இரு குழலி நான் என்ன பனிஷ்மென்ட் குடுக்குறதுன்னு யோசிக்குறன், ஆடு அதுவா வந்து சிக்கி இருக்கு.. இன்னைக்கு கைமா பண்ணாம விட கூடாது என்று வில்லத்தனமாக கைகளை தேய்த்தாள்.

சுசிலாவும் பரமுவும் அவள் பேசியதை கேட்டு அதட்ட, சூர்யா அவர்களை கண் அசைவிலே தடுத்துவிட்டான் வேண்டாம் என்பதாய்.

ரஞ்சனி யாரையும் கண்டு கொள்ளாமல், குழலியிடம் இவனை ஐட்டம் சாங்க்கு டான்ஸ் ஆட சொல்வோமா என்று காதில் ரகசியமாக கேட்க.. பச்சை புள்ள குழலி வாயில் கை வைத்து கொண்டாள். வேண்டாம் என்பதாய், அப்போ இது தான் பனிஷ்மென்ட் செய்ய சொல்லு என்று ரஞ்சனி குழலி காதை கடிக்க, வேண்டாம் ரஞ்சு அக்கா எல்லாரும் இருக்காங்க என்று தயங்கினால்..

சொல்லு டி என்று ரஞ்சு குழலியை மிரட்ட, உங்க வைஃப் சொல்ற பனிஷ்மென்ட்ட செய்ங்க என்று ரஞ்சனியை கோர்த்துவிட்டால் குழலி. சூர்யா ரஞ்சனியை பார்க்க, ரஞ்சனி குழலியை முறைத்து கொண்டு இருந்தாள்.

சூர்யாவின் பார்வையை உணர்ந்தவள் ஐட்டம் சாங்க்கு டான்ஸ் ஆடு என்று அசால்ட்டாக கூறினாள், சுற்றி இருந்தவர்களால் இந்த பொண்ண என்ன பண்றது என்று நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

சூர்யா முதலில் ஜர்க் ஆனாலும், நான் ஐட்டம் சாங்க்கு டான்ஸ் ஆடுனா அண்ணி என்கிட்ட பேசுவாங்களா என்றான் பாவமாக? அது நீ முகத்துல எக்ஸ்பிரஷன்னோட வளைஞ்சு நெளிஞ்சு ஆடுறது பொறுத்து இருக்கு என்றால் ரஞ்சனி.

சரி பாட்ட போடு என்ற சூர்யா எழுந்து நின்றான், சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது தெரியாமல் இரு போடுறன் என்று வெகு நேரமாக அவள் போனில் உள்ள ஸ்பாட்டிஃபை செயலியில் இருந்து ஒரு பாடலை தேர்வு செய்து ஒலிக்க செய்தாள்.


ஐ பீகாநேரீ சோகரீ
ஸங்தரே கீ டோகரீ
கர தோ சுடவாயா
அப க்யா சுடாஏகீ நௌகரீ

என்ற பாடல் வரிகள் இசையோடு ஒலிக்க, அனைவரும் தலையில் கைவைத்து கொண்டனர்..

முத்தரசிக்கு அந்த பாடல் தெரியாததால் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தார்.

சூர்யா பாடலை கேட்டு, ரஞ்சனியை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்..

என்ன பாக்குற? இந்த பாட்டுல வரா மாதிரி இடுப்ப வளைச்சு நல்லா ஆடு. அப்போ தான் குழலி பேசுவா என்று கொளுத்தி போட்டாள்.

இது ஃபிமேல் வர்ஷன் சோ என்கூட நீயும் வந்து ஆடு என்றவன், அவள் என்னவென்று சுதாரிக்கும் முன், அவள் கையை பிடித்து அவன் அருகே நிறுத்தி கொண்டு, இடுப்பில் கை வைத்து ஓடி கொண்டு இருந்த பாடலுக்கு நெளிவு சுளிவோடு ஆடினான் சுற்றம் மறந்து.

அவன் திடீர் செயலில் திகைத்தவள், பின் அவனின் தொடுகையில் தொண்டை குழியில் எச்சில் கூட்டி விழுங்கி சூர்யா கையில் குழைந்து நின்றாள். அனைவரும் நமட்டு சிரிப்புடன் அவர்கள் வேலையை காண சென்று விட்டனர். காலில் காயம்பட்ட குழலி கூட முடியாத நிலையிலும் அங்கிருந்து அவள் அறைக்கு ஓடிவிட்டாள்..

ஸங்க மேங் ஹமே பீ லே ஜா
யே தோ சோரீ பே
ஹை ஸீநா ஜோரீ

கபீ லகே மோநாலிஸா
கபீ கபீ லகே லோலிதா
ஔர கபீ ஜைஸே காதங்பரீ

ஹாய மேரீ பரம பரம
பரம பரம பரம ஸுங்தரீ
ஹாய மேரீ பரம பரம
பரம பரம பரம ஸுங்தரீ

ஸர ஸே பைர தலக
பேதஹாசா ஹுஸ்ந ஸே பரீ
ஹாய மேரீ பரம பரம
பரம பரம பரம ஸுங்தரீ

பைரோங் மேங் பாயல கீ படீ ஸே
பாங்த கே மைங் நா ரஹநே வாலீ
மைங் அல்ஹட ப்ரவாஹ கே ஜைஸீ ஹூங்
பரதேஸோங் தக பஹநே வாலீ

என்று ஓடி கொண்டு இருந்த பாடலுக்கு ஏற்ப அவளை ஆட்டுவித்து இருந்தான் சூர்யா..

(மை மைண்ட் வாய்ஸ்: காமெடி எபிசோட கூட கிளுகிளுப்பு எபிசோடா மாத்த இவனால தான் முடியும்)

வெளியே சென்ற விஷ்வா மீண்டும் வீட்டிற்குள் வந்தான். அவன் கண்ணில் தவறாமல் விழுந்தனர் நடு ஹாலில் நின்று பாடலோடு சேர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த விஷ்வா மற்றும் ரஞ்சனி. அவ்வளவு தான் கடுப்பாகி விட்டான் விஷ்வா.. ஏன்டா என்ன என் பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சு விட்டுட்டு நீ மட்டும் அந்த மீன் திருடி கிட்ட ரொமான்ஸ் பண்றியா என்று வயிறு எரிந்தவன், அவன் பின்னால் சென்று ஆடி கொண்டிருந்தவனின் சட்டையை கொத்தாக பிடித்து, விட்டான் வயிற்றில் ஒரு குத்து.

சூர்யாவின் அலறளில் தான், ரஞ்சனி மாயலோகத்தில் இருந்து வெளிவந்தால்.. வயிற்றை பிடித்து கொண்டு கீழே குனிந்து கத்தி கொண்டு இருந்தான் சூர்யா.

ஏன்டா நாயே எதுக்கு டா இப்படி குத்துன என்று மரியாதை காற்றில் பறக்க வலியில் கத்தினான் சூர்யா.

சூர்யா வலியில் கத்துவதையும் பொருட்படுத்தாமல், ரஞ்சனி அங்கிருந்து செல்ல. போகும் அவளை பார்த்தவன் கிட்டன் போகாத டி என்று கத்தினான், திரும்பி பார்த்த அவன் மனைவி த்தூ என்று காரி துப்பிவிட்டு சென்று விட்டாள்.

இப்போ சந்தோஷமா டா என்று சூர்யா கடுப்பாக.. அவனுக்கு மேல் கடுப்பில் இருந்தான் விஷ்வா..

என்ன என் பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சு விட்டுட்டு நீ மட்டும் இந்த மீன் திருடி கிட்ட ரொமான்ஸ் பண்ணுவியா? ஒழுங்கா என் பொண்டாட்டி கிட்ட சேர்த்து வை. இல்ல உன் வாழ்க்கைல எந்த நல்லதும் நடக்காது என்று பொங்கினான் விஷ்வா.

ஆமா இப்போ மட்டும் எல்லாம் நடக்குது பாரு.. என்று முனகியவன். நான் சொல்ற ஐடியாவ ஃபால்லொவ் பண்ணு. அண்ணிய எந்திரிச்சு நிக்க சொல்லி சாஷ்டிட்டாங்கமா கால்ல விழுந்துடு என்றான்.

வேகமாக அறைக்கு சென்றான் விஷ்வா.. சூர்யா சொன்னதை செயல் படுத்தும் நோக்கத்தோடு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

57. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி அவள் அறையில் அன்னை மடியில் படுத்து கொண்டு இருந்தாள். அம்மா என்மேல கோவமா? நான் உன்ன போக சொல்றன்னு என்று கேட்டாள்.

எனக்கு எந்த வருத்தமும் இல்ல குழலிமா, எனக்கு உன்ன பார்த்ததே சந்தோஷம்.. நீ விஷ்வா தம்பி கூட சண்டை போடாதமா, எனக்கு கூட முதல்ல விஷ்வா தம்பி மேல வருத்தம் இருந்துச்சு. ஆனா அவர்கிட்ட பேசுனதுக்கு அப்பறம் அவர் உன்மேல வச்சு இருக்க அன்பை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது குழலி.

அம்மா நம்மள பத்தி மட்டும் பேசு, அவர பத்தி பேசாத என்றால் விருட்டென எழுந்து. அவள் எழுந்த வேகத்தில் ஆர்ஹ்ஹா என வலியில் அலறிவிட்டால்.

அந்த நேரம் தான் விஷ்வா குழலியின் அறைக்கு மன்னிப்பு கேட்க வந்தான். அவள் சத்தம் கேட்டு பதறியவன் வேகமாக அறைக்குள் ஓடி வந்தான். குழலி என்னடி ஆச்சு என்றவனின் பார்வை அவள் வலியில் முகம் சுணங்குவதை கண்டு அவள் காலில் உள்ள காயத்திற்கு சென்றது.

வலிக்குதா குழலி என்றவன் அவள் காலை தொட்டுப் பார்த்து அவன் கையில் ஏந்தினான். விடுங்க என்று கோவமாக கத்தி தன் காலை அவன் கையில் இருந்து இழுத்து கொண்டாள். ஏய் பார்த்து டி வலிக்க போது என்று அவன் அக்கறையாக சொல்ல, ரொம்ப நடிக்காதீங்க என்றால் முகத்தை திருப்பி கொண்டு, நான் என்ன டி நடிக்குறன்? என் அக்கறை உனக்கு நடிப்பா தெரியுதா என்றான் குரலில் எந்த உணர்வையும் காட்டாமல்.

எனக்கு இப்போ உங்ககிட்ட ஆர்கியூ பண்ண பிடிக்கல. எனக்கு எங்க அம்மா கூட தனியா இருக்கணும்.

குழலி என்ன பழக்கம் இது?? மாப்பிள்ளை கிட்ட எடுத்துதெரிஞ்சு பேசிக்கிட்டு இருக்க.. இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது. அவர் உன்கிட்ட தான் பேச வந்திருக்காரு ஒழுங்கா அவர்கிட்ட நல்ல விதமா பேசு. நான் அப்புறமா வந்து உன் கிட்ட பேசுறேன் என்றவர் வெளியே செல்ல கிளம்பினார்.

அத்தை நீங்க எங்கயும் போக வேண்டாம் இங்கயே இருங்க. அவளுக்கு இப்போ நீங்க தான் தேவை. என்றவன் அவர் பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளியே சென்று விட்டான்.

முத்தரசி மகளிடம் என்ன குழலிமா இப்படி நடந்துக்கிற என்று சங்கடப்பட்டார். விடுமா அவர் பண்ணது தப்புன்னு அப்பதான் அவருக்கு புரியும். அதுல்ல குழலி என்று அவர் மேலும் ஏதோ பேச வர, அவர் என்ன அத்தனை பேர் முன்னாடி அடிக்கும் போது எனக்கு எவ்ளோ அவமானமா இருந்துச்சு தெரியுமா? என்னால அத மறக்க முடியலமா என்றால் கண்கள் கலங்கி.

முத்தரசியும் இப்போது என்ன பேசினாலும் மகள் கேட்க மாட்டாள் என்று எண்ணி, பிறகு பேசி கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

மாலை நேரம் ஆக, முத்தரசி ஊருக்கு கிளம்ப தயார் ஆகினார். அவர் அறையில் அவர் பேகை எடுத்து வைத்து கொண்டு இருந்தார். ரஞ்சனி வரும் போதே அவரின் பயண பையை எடுத்து வந்து விட்டாள்.

அதில் உள்ள இரண்டு விதமான உடைகளை எடுத்தவர், ரஞ்சனி மற்றும் சூர்யாவிடம் கொடுத்தார். இருவரும் அதை மகிழ்ச்சியோடு பெற்று கொண்டு அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். நல்லா இருங்க தங்கம்ங்களா என்று மனதார வாழ்த்தினார்.

பின் விஷ்வாவிடம் சென்றவர் அவனுக்கும் ஒரு உடையை கொடுத்தார். எனக்கும் என் பொண்டாட்டிகூட சேர்த்து குடுங்க அத்தை என்றவன், குழலி அருகில் சென்று நின்று அவளோடு சேர்ந்து அவன் மாமியார் கொடுத்த உடைகளை பெற்று கொண்டு, காலில்  விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். குழலியை கிழே குனியவிடவில்லை.

சிறிது நேரத்தில், அவர் ஊருக்கு கிளம்ப வண்டி வந்து நின்றது. அனைவரிடமும் சொல்லி கொண்டு புறப்பட தயாரானார். மகளை கட்டி அனைத்து உச்சி முகர்ந்தார் முத்தரசி. விஷ்வா தம்பிகிட்ட சமாதானமா பேசு குழலி. சண்டை போடாத என்றார். அன்னைக்காக சரி என்னும் விதமாய் தலையை ஆட்டினாள்.

விஷ்வா அவர் காரில் ஏறியதும், சாரி அத்தை என்னால தான நீங்க சீக்கிரம் போறீங்க, மன்னிச்சிடுங்க என்றான். அதலாம் இல்ல தம்பி. மனசு வெசன படாதீங்க. நீங்களும் குழலியும் சந்தோஷமா இருந்தாளே எனக்கு போதும்பா என்றார்.

நான் மறுபடியும் சொல்றன் அத்தை உங்க பொண்ணு தான் என் வாழ்க்கை. அவ இல்லமா நான் இல்ல என்று முடித்து கொண்டான். மனநிம்மதியுடன் அவரின் ஊருக்கு புறப்பட்டார் முத்தரசி.

குழலி அவள் அம்மா சென்றதும், கண்ணீரோடு உள்ளே சென்றுவிட்டாள். விஷ்வாவிற்கு புரிந்தது, இப்போது அவளிடம் சென்று சமாதானம் செய்தால் மொத்த ஆதங்கத்தையும் கோவமாக மாற்றி தன்மேல் காட்டிவிடுவாள் என்று. இருந்தும் அவள் அழுகையை தாங்காதவன் அவள் அருகில் சென்றான். அவன் பின்னே அனைவரும் உள்ளே வந்தனர்.

குழலி அழாத டி, அம்மா ஊருக்கு தான போய் இருக்காங்க.. தோணும் போது நாம போய் அவங்கள பார்க்கலாம், இல்லனா அவங்கள இங்க வர சொல்வோம் என்று எதையும் யோசிக்காமல்  கூறிவிட்டான்.

விருட்டென நிமிர்ந்தவள், ஏன் இன்னொரு முறை அவங்க முன்னாடி என்ன அடிச்சு, எங்க அம்மா மனச கஷ்ட்டபடுத்தவா என்றால்..

விஷ்வா சிறிது நேர அமைதிக்கு பின், தப்பு பண்ணிட்டன் தான், அதுக்காக தான் உன்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கன்.

உங்கள யாரும் வந்து கெஞ்ச சொல்லல என்றால் பட்டென்று. விஷ்வாவிற்கு அவளின் பேச்சு கோவத்தை கொடுத்தாலும் பொறுத்து கொண்டான். அவள் அம்மா ஊருக்கு சென்றதில் கோவமாக உள்ளால் என புரிந்து.

சுந்தரம், விஷ்வா இப்போ எதுவும் பேசாத வா வீட்டுக்கு போலாம் என்று மகனை அழைத்தார். அவனுக்கும் இன்னொருவர் வீட்டில் இருந்து அவர்கள் பிரச்சனையை பகிரங்க படுத்தி பேசுவதை விரும்பாமல், தந்தை பேச்சை கேட்டு எழுந்து நின்றான், கிளம்புவதற்கு ஆயித்தமாகி. நீங்க போங்கப்பா நான் குழலிய பொறுமையா கூட்டிட்டு வரன் என்று கூறியவன், சோஃபாவில் அமர்ந்து இருந்த அவன் குட்டி மனைவியை பார்த்தான் போகலாம் என்பதாய்.

குழலி இங்க தான் இருக்க போறா.. நாம தான் வீட்டுக்கு போறோம் என்றார் சுந்தரம், அதுவரை அவனிடம் இருந்த பொறுமை காற்றில் பறந்தது. அப்பா எங்க விஷயத்துல நீங்க எப்படி முடிவெடுக்கலாம்? சின்னதா இருக்க பிரச்சனைய நீங்களே எங்கள பிரிச்சு பெருசு பண்ணாதீங்க என்று, அவன் தந்தையிடம் எரிந்து விழுந்தான்.

மாமா ஒன்னும் இந்த முடிவு எடுக்கல நான் தான் எடுத்தன் என்றால் குழலி. அவ்வளவு கோவம் வந்தது விஷ்வாவிற்கு. ஏன் என்றான் அழுத்தமான குரலில்

நான் கொஞ்சம் நாள் அந்த வீட்டுக்கு வரல.. இங்க இருந்துட்டு வரன். நீங்க எல்லாரும் கிளம்புங்க என்றால் எங்கோ பார்த்து கொண்டு.

என்கிட்ட சொல்லமா கொள்ளாம இங்க வந்த பாரு, அப்போவே உன்ன ஒன்னு வச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்கணும்டி, அத பண்ணாம வந்து கெஞ்சிட்டு இருந்தன்ல என்ன சொல்லணும் என்றான் சட்டென்று முளைத்த கோவத்தோடு..

பரமுவும் சுந்தரமும் விஷ்வா என்று குரல் உயர்த்த அதற்குள் குழலியே பேசினால். ஏன் அடிக்காம விட்டிங்க அடிக்க வேண்டியது தான? என்ன அடிச்சா கூட கேட்க ஆள் இல்லாத அனாதை தான நானு என்று அவளும் அழுக..

அவள் சொல்லியதில் பற்களை கடித்தான் விஷ்வா. என்ன பேச்சு பேசுறா, புருஷன் என்கிட்டயே அனாதைன்னு சொல்றா. என்ன திமிரு இவளுக்கு என்று வந்த கோவத்தை முகத்தில் காட்டி கொண்டு நின்றான்.

ஏன் குழலி இப்படி பேசுற? ரஞ்சனி எனக்கு எப்படியோ அப்படி தான் எனக்கு நீயும் என்றார் பரமு. சுசிலா குழலி அருகில் வந்து அழ கூடாது குழலி என்று கண்களை துடைத்துவிட்டார்.

விஷ்வா, அவ கால் சரியாகும் வரைக்கும் அவ இங்க இருக்கட்டும். அங்க வந்தாலும் சும்மா இருக்க மாட்டா, வேலை செய்ய தொடங்கிடுவா.. அவ ஒருவாரம் ஓய்வு எடுக்கட்டும், ஹாஸ்பிடல்ல டாக்டரும் அதான் சொன்னாங்களாம்.

தந்தை சொல்வது அனைத்தும் காதில் விழுந்தாலும், கண்கள் என்னவோ குழலியை தான் பார்த்து கொண்டு இருந்தது. அவன் பார்வையை உணர்ந்தும் அவனை ஏறெடுத்து பார்க்கவில்லை குழலி.

எதுவும் பேசாமல் அங்கு இருந்து சென்றுவிட்டான் விஷ்வா. பின் விஷ்வா ரஞ்சனி சுந்தரம் அனைவரும் குழலியிடம் சொல்லி கொண்டு புறப்பட்டனர்..

ரஞ்சனி போகும் போது, அந்த விஷ்வாவ பேசுனத நினைச்சு ஃபீல் பண்ணாத குழலி. அவன் இன்னும் ரெண்டு நாள்ள மறுபடியும் வந்து உன் கால்ல விழுவான் பாரு என்று கூறி குழலியின் கன்னம் கிள்ளி கொஞ்சிவிட்டு அங்கிருந்து சென்றால்.

அதன் பின், குழலி குழந்தையுடன் நேரத்தை செலவழித்து கொண்டு அங்கேயே இருந்தாள். அன்னையை போல் பார்த்து கொண்டார் சுசிலா.

கால் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வந்தது. சுந்தரம் ரஞ்சனி அவ்வப்போது குழலிக்கு அழைத்து நலம் விசாரித்து கொண்டார். விஷ்வாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

அங்கு சுந்தரம் வீட்டில், விஷ்வா வீட்டிற்கு வர பிடிக்காமல் அலுவலகமே கதி என வேலையில் மூழ்கி இருந்தான். இடையில் மீண்டும் ஒரு முறை மயூரி விஷ்வாவிடம் பேச முனைய, ஏற்கனவே மனைவி உடன் இல்லாத கோவத்தில் இருந்தவன் அன்று சரசு வேறு லேப்டாபை உடைத்து குழந்தை மேல் பழியை போட சொன்னது மயூரிதான் என சொன்னது நினைவுக்கு வர, அவ்வளவு தான் அனைவரின் முன்பும் கத்திவிட்டான்.

அறிவில்ல உனக்கு? எதுக்கு சும்மா வந்து என்ன தொல்லை பண்ணிட்டு இருக்க? உனக்கும் எனக்கும் வேலை விஷயமா கூட எந்த சம்பந்தமும் இல்லை. எதுக்கு என் பின்னாடி அலைஞ்சிட்டு இருக்க? என்ன இன்னும் எவனும் கிடைக்கலையா என்று கேஃபிடேரியாவில் நின்று கத்தினான். அவன் கத்தியதில் சுற்றி இருந்த அனைவரின் முன்பும் அவமானமாக உணர்ந்தால் மயூரி. விழிநீரை துடைத்து கொண்டு விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் கேட்ட மன்னிபிலும், அவள் விழியில் இருந்து வந்த நீரிலும் பொய்யில்லை என உணர்ந்தவனுக்கு, கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.. இருந்தும் அந்த எண்ணத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பரவால்ல இருக்கட்டும் அப்போ தான் இன்னொரு முறை என்கிட்ட பேச முயற்சி பண்ண மாட்டா என்ற எண்ணத்தோடு அங்கிருந்து சென்றான் மதிய உணவை உண்ணாமல்.

சூர்யா ரஞ்சனி, இருவரும் தாமரை இலை மேல் உள்ள தண்ணீர் போல் தான் இருக்கின்றனர் ஒட்டியும் ஓட்டாமலும். அவன் கேள்வி கேட்டாள்  பதில் கூறுவாள் அதுவும் யாரேனும் இருந்தாள் மட்டுமே. அவர்கள் அறைக்குள் அதுவும் இல்லை. சூர்யா எவ்வளவு இறங்கி போய் கெஞ்சியும் ரஞ்சனி அவனை கண்டு கொள்ளவில்லை, அன்று அவன் முரட்டு தனமாக நடந்து கொண்டதின் விளைவு.

உறங்கும் போது கூட, அவன் ஸ்பரிசத்தை தவிர்கிறாள். அவளை கட்டாய படுத்தி அனைத்து கொண்டாள் அவன் காயப்படும் அளவு ஏதேனும் பேசிவிடுகிறாள். இப்போது எல்லாம் மனதை உடைக்கும் வார்த்தைகள் ரஞ்சனி உடையதாகி போனது.

ஒருவாரம் ஆகி போன நிலையில் குழலியின் கால்கள் நன்றாகவே குணமாகி இருந்தது. ஆனால் வீட்டிற்கு போகாமல் பரமு வீட்டில் தான் இருந்தாள். குழந்தையை சுசிலாவிடம் விட்டுட்டு, அவள் மாமனார் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்தாள். இதை அறிந்த விஷ்வா பொங்கிவிட்டான். சும்மாவே குதிப்பான் இப்போது சொல்லவா வேண்டும்??

இருக்கும் அனைத்து வேலைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு, மதியம் விடுப்பு எடுத்து கொண்டு குழலியை காண அவன் அப்பாவின் அலுவலகம் சென்றான் ஒரு முடிவோடு.

 

 

 

 

 

 

 

 

58. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வேகமாக அவன் அப்பாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தான் விஷ்வா, எதிரே வந்தவர்கள் அவனுக்கு வணக்கம் வைக்க, சிறு தலையசைப்புடன் ஏற்று கொண்டான். மகன் வந்ததை அறிந்தே இருந்தார் சுந்தரம்.

நேராக குழலியின் கேபின் தான் சென்றான். வேகமாக உள்ளே வந்தவன் அவள் நிமிர்ந்து பார்க்கும் முன் கதவை லாக் செய்து, நான்கே எட்டில் அவளை நெருங்கியவன், குழலியை எழுப்பி என்னடி நெனச்சிட்டு இருக்க? கால் தான் இப்போ சரி ஆகிடுச்சுல வீட்டுக்கு வர என்ன கேடு வந்துச்சு உனக்கு? இன்னும் எத்தனை நாள் இன்னொருத்தவங்க வீட்ல இருப்ப?  இன்னும் என்ன எவ்ளோ அசிங்கப்படுத்துவ என்றான் கோவத்தோடு.. விஷ்வாவிற்கு அவள் தன்னை விட்டு இன்னொருவர் வீட்டில் இருப்பது அவ்வளவு அசிங்கமாக இருந்தது. என்ன கோவம் இருந்தாலும் தன்னுடனே இருந்து காட்டியிருக்கலாமே, அதை விட்டு அவர்கள் பிரச்சனையை அனைவருக்கும் தெரியும் படி செய்கிறாளே என்ற கோவம், அனைத்தையும் விட, நான் தினம் தினம் இவள் நினைவில் தவித்து கொண்டு இருக்கிறேன்.. ஆனால் இவளால் என்னை விட்டு பிரிந்து இருக்க முடிகிறதே என்ற கோவமும் சேர்ந்து கொண்டது. இன்னொரு புறம் அவளின் இந்த விலகல் ஆடவனை பயம் கொள்ள வைத்தது என்பதே உண்மை.

குழலி அவன் பேசியதற்கு எதுவும் பதில் கொடுக்காமல் அமைதியாக இருக்க, உன்கிட்ட தான் டி பேசிட்டு இருக்கன் என்று பற்களை கடித்தான்.

குழலி அதற்குமேல் பிரச்சனையை வளர்க்க விரும்பாமல் சாய்ங்காலம் வந்து கூட்டிட்டு போங்க நானும் பாப்பாவும் ரெடியா இருக்கோம் என்றால். இப்போது கூட நான் வந்து அழைத்ததால் தானே வருகிறாள். அதுவும் வேண்டா வெறுப்பாக வருவது போல் அல்லவா வருகிறாள் என்று நினைத்து கொண்டவன், நானா உன்ன வீட்டை விட்டு போக சொன்னன்? இல்ல என்கிட்ட சொல்லிட்டு நீ வீட்ட விட்டு போனியா இல்லல? நான் வர மாட்டன். எப்படி போனியோ அப்படியே வா என்றான் கோவம் குறையாத குரலில்.

சரி என்பதோடு முடித்து கொண்டாள். அவனுக்கு தான் தலை வலித்தது. அங்குள்ள சோஃபாவில் அமர்ந்து தலையை பிடித்து கொண்டான். இந்த ஒருவாரமாக உறக்கம் துளைத்து வேலை வேலை என அலுவலகத்தில் தான் அவனின் பொழுதுகளை கழித்தான்.

குழலிக்கு விஷ்வா மீது இருந்த கோவம் எல்லாம் இரண்டு நாட்களில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டத்து.. அடுத்தடுத்த நாட்களில் இருந்து கணவன் எப்போது வந்து தன்னை அழைத்து செல்வான் என்று, விஷ்வாவின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.

அவள் மாமனாரிடம் விஷ்வாவை பற்றி தினமும் கேட்டு கொண்டு தான் இருந்தாள். மாமா அவர் என்ன பண்றாரு? சாப்பிட்டாரா? வீட்டுக்கு வந்துட்டாரா என்பாள்..

இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிந்தால், ஏன் இன்னும் வரல? போன் பண்ணி கூப்பிடுங்க மாமா என்பாள்..

இப்போது விஷ்வா தலையை பிடித்து அமர்ந்து இருக்க, அவன் அருகே சென்று என்ன ஆச்சுங்க? தலைவலிக்குதா? காஃபி கொண்டு வர சொல்லவா என்று அக்கறையாக கேட்டாள். வாய மூடு எல்லாத்துக்கும் காரணமே நீ தான் என்றவன் தலையை அழுந்த பிடித்து கொண்டான்.. அதிக டென்ஷனில் ஒற்றை தலைவலி அவனை பாடாய் படுத்தியது.

குழலிக்கு புரிந்தது, தலைவலியில் அவதிப்படுகிறான் என, அவனுக்கு காஃபி எடுத்து வர, கதவை திறந்து கொண்டு வெளியே சென்றால். விஷ்வாவிற்கு இன்னும் கோவம் கூடியது. தன்னோடு இருக்காமல், தான் திட்டியதில் கோவப்பட்டு வெளியே செல்கிறான் என நினைத்தான்.

காஃபி மிஷின் அங்கே இருக்க, அதை விடுத்து அங்குள்ள இண்டக்ஷன் ஸ்டோவில் அவளே பாலை கொதிக்க வைத்து, இனிப்பு கம்மியாக காஃபி பொடி அதிகமாக சேர்த்து காஃபி போட்டாள். இப்படி இருந்தாள் தான் விஷ்வாவிற்கு பிடிக்கும் என்பதை  நன்கறிவால் குழலி.

விஷ்வாவிற்கு தினமும் காஃபி டீ குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை. எப்போதாவது தோன்றினாள் குடிப்பான் அல்லது தலைவலித்தால் குடிப்பான். அவன் ஒரு மழைகாலத்தில் கூறியிருக்கிறான். இந்த முறையில் காஃபி குடிக்க பிடிக்கும் என்று. ஆகவே அவனுக்கு பிடித்த முறையில் காஃபி போட்டு எடுத்து கொண்டவள் அவள் அறைக்கு சென்று அவனிடம் நீட்டினாள். காஃபியின் மனம் நாசியில் ஏற, நிமிர்ந்து பார்த்து எதுவும் பேசாமல் குழலியிடம் இருந்து காஃபி கப்பை வாங்கி கொண்டான். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து கொண்டு அதன் மணத்தை நுகர்ந்தான்.

சிறிது நேரத்தில் காஃபி குடித்து முடித்தான். அவள் ட்ராவர்ரில் இருந்து தலைவலி தைலத்தை எடுத்து வந்து அவன் எதிரே நின்று தலையின் இரு பக்கவாட்டிலும் சிறிதாக தடவி அழுந்த தேய்த்தாள். அவள் செயலுக்கு எந்த எதிர்வினையும் காட்டாது அமைதியாக இருந்தான் விஷ்வா. அவனுக்கு இப்போது தலைவலி போனால் போதும் என்று இருந்தது. சிறிது நேரத்தில் இதமான மசாஜ்ஜோடு தைலம் தேய்த்து முடித்து இருந்தாள் குழலி. தலைவலி நன்றாகவே மட்டுபட்டு இருந்தது. மீண்டும் அவள் அங்கிருந்து நகர முயல, அவளை நகரவிடாது இடையோடு கட்டி கொண்டவன் அவளை இழுத்து அருகில் அமர்த்தி கொண்டு, அவன் சற்று சாய்வாக அமர்ந்து அவள் தோளில் ஒருக்களித்து படுத்து கொண்டான்.

ஒருவாரம் அவனுக்கு போக்கு காட்டிய உறக்கம், இப்போது அவன் மனைவியின் அரவணைப்பில் அவனோடு சுகமாக ஒன்றி கொண்டது. அவனின் பாரத்தை குழலியால் தாங்க முடியவில்லை தான் இருந்தும் கணவனின் துயில் கலையா வண்ணம் அவனுக்கு வாகாக அமர்ந்து விஷ்வாவை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தினால்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்தே குழலியின் மேல் இருந்து எழுந்தான் விஷ்வா, தலைவலி போன இடம் தெரியவில்லை, தூங்கி எழுந்ததில் புத்துணர்வாக இருந்தான். குழலியின் ஒரு பக்கம் தோள் அதித வலி கண்டது. அதை விஷ்வாவிடம் காட்டி கொள்ளவில்லை. அவள் வலியை மறைத்தால் அவனுக்கு தெரியாமல் போகுமா?

எழ போனவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டவன்.. அவன் இவ்வளவு நேரமும் சாய்ந்து உறங்கி கொண்டு இருந்த வலப்பக்க தோளை மென்மையாக பிடித்து விட்டு முத்தம் வைத்தான். கண் மூடி அமர்ந்து இருந்தாள் குழலி.

சிறிது நேரத்தில் போதும் என்று எழ போனவளை எழ விடாமல், அவளை அருகில் அமர வைத்து இரு கால்களையும் தூக்கி மடியில் வைத்து கொண்டான். காயங்கள் முழுதாக மாறி, சில வடுக்கள் மட்டுமே இருந்தது. எப்போதும் போல் குனிந்து மீசை மூடி உரச முத்தமிட்டு நிமிர்ந்தான். நீண்ட நாள் கழித்து கணவனின் தீண்டளில் சிலிர்த்து அடங்கினால். உணர்வுகளை அடக்க கால் விரல்களை மடக்கி கொண்டாள்.

உள்ளுக்குள் சிரித்து கொண்டவன், மடக்கிய பிஞ்சு விரல்களை ஒவ்வொன்றாக எடுத்து விட்டு, இதமாக பிடித்து சொடக்கு எடுத்துவிட்டான்.

குழலி போதும் விடுங்க என்று அங்கே இருந்து எழுந்து கொண்டாள், அதன் பின் விஷ்வாவும் அவளை வற்புறுத்தாமல் அமைதியாக இருந்தான்.

எப்போ வேலை முடியும்? குரலில் எந்த நெளிவு சுளிவும் இல்லை.

இன்னும் ஒரு மணி நேரம், ஆகும்.

சரி என்றவன் தந்தையின் அறைக்கு எழுந்து சென்றான். என்ன டா என் மருமகள சமாதானம் பண்ணிட்டியா என்றான். ஹ்ம்ம் என்றான் ஒட்டுதல் இன்றி. தந்தை மீது கோவம். குழலி ஒருவாரம் அவனை விட்டு பிரிந்து இருப்பதற்கு அவர் தான் காரணம் என்று.

அதை புரிந்து கொண்டவர். மகனிடம் விஷ்வா, எனக்கு குழலியா நீயான்னு வந்தா, நான் குழலி பக்கம் தான் நிப்பன். இப்போ இல்ல எப்பவுமே இது தான் என் முடிவு. இன்னொரு முறை அவளை கஷ்ட்டபடுத்தாத என்பதோடு முடித்து கொண்டார் சுந்தரம்.

தன் தந்தை, தன் மனைவி மீது வைத்து இருக்கும் பாசத்தை நினைத்து உள்ளம் பூரித்தாலும், இவரு கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும் போல, இனி ஒரு முறை பிரச்சனை வந்தா எனக்கும் அவளுக்கும் டிவோர்ஸ் வாங்கி குடுத்துட்டு தான் அடுத்த வேலை பார்ப்பாரு என்று நினைத்து கொண்டான்.

எந்த நேரத்தில் இந்த சிந்தனையை கொண்டானோ?? எதிர்காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க போவது தெரியாமல் தந்தையை முறைத்து கொண்டு இருந்தான்.

அவர் விஷ்வாவின் பார்வையை கண்டு கொள்ளவே இல்லை.

விஷ்வா அறையைவிட்டு சென்றதும், வீட்டிற்கு தான் போய்விட்டான் என்று நினைத்தால் குழலி.

மாமனாரிடம் சொல்லி கொண்டு புறப்படலாம் என சுந்தரம் அறைக்கு வந்தவள் அங்குள்ள விஷ்வாவை கண்டு இன்பமாக அதிர்ந்தால். அவளை கண்டு கொள்ளாதவன் போல், கிளம்பறோம் பா என்று அவன் தந்தையிடம் கூறி வெளியே சென்றான்.

மாமா நானும் அவர் கூட புறப்படுறன் மாமா, பரமு அப்பா வீட்டுக்கு போய்ட்டு அங்க இருந்து பாப்பா கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வரன் மாமா என்று சொல்லும் போதே முகத்தில் சந்தோஷ ரேகைகள்.. சரிமா பத்திரமா வாங்க என்பதோடு முடித்து கொண்டார்.

அமைதியான கார் பயணம், அவளை மதியம் வந்து திட்டியதோடு சரி, அதற்கு பின் அவள் அருகாமையில் இருந்தானே அன்றி அவளிடம் எதுவும் பேசவில்லை. அவள் மீது கோவமாக இருக்கிறானாம்.

பரமு வீட்டிற்கு சென்று, கையோடு குழந்தையை தூக்கி கொண்டு இப்போது அவன் வீட்டிற்கு மனைவியோடு சென்று கொண்டிருக்கிறான்.

குழலி வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல்.. நீ தனியா வா, நான் உன்ன கூட்டிட்டு வர மாட்டன்னு சொன்னிங்க. இப்போ நீங்களே பரமு அப்பா வீட்டுக்கு வந்து அழைச்சிட்டு வரீங்க என்று கேட்க, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி கொண்டது.

ஓரமா வண்டிய நிறுத்துறன் இறங்கி கேப் புடிச்சு வீட்டுக்கு வரியா என்றான் கடுப்பாக.

இப்போ எதுக்கு நீங்க கோவப்படுறீங்க. நீங்க பண்ணதுக்கு நான் தான் கோவப்படணும் என்றால்.

அன்னைக்கு நான் அடிச்சதுக்கு, நீ என்கூடவே இருந்து என்ன எவ்ளோ வேணும்னாலும் பனிஷ் பண்ணியிருக்கலாம். ஆனா நீ என்ன விட்டு ஒரு வாரம் இன்னொருத்தவங்க வீட்ல போய் இருந்து இருக்க. இதுக்கு என்ன அர்த்தம் என்ன விட்டு உன்னால இருக்க முடியும் அதான? நான் தான் பைத்தியகாரன் மாதிரி உன்ன நினைச்சிட்டு இருக்கன். உனக்கு என் நினைப்பே இல்ல. இன்னைக்கு நான் வந்து கூப்பிடலனா இன்னும் அங்கவே தான் உக்காந்துட்டு இருந்து இருப்பள?

அவனின் கேள்விக்கு குழலியிடம் பதில் இல்லை. உண்மையில் விஷ்வா வந்து அழைக்காமல் அந்த வீட்டிற்கு செல்ல கூடாது என்ற முடிவில் தான் இருந்தாள். ஆனால் அவனை பிரிந்து இருந்த இந்த ஒருவார காலம் நிம்மதியாக இருந்தாளா என்று கேட்டாள் நிச்சயம் இல்லை. அவளும் அவனின் அருகாமைக்கு வெகுவாக ஏங்கினால். இருந்தும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

59. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. விஷ்வாவும் குழலியும் இன்னும் முறுக்கி கொண்டு தான் இருக்கின்றனர். குழலி சென்று எவ்வளவோ பேசிவிட்டால் மலை இறங்குவதாக இல்லை விஷ்வா. சரி உங்களுக்கு எப்போ பேசணும்னு தோணுதோ அப்போ பேசுங்க என்று குழலி சொல்லிவிட, அதற்கும் பிடித்து கொண்டான். ஓஹ் அப்போ நான் பேசலனா உனக்கு பரவால்லல, ஹ்ம்ம் உனக்கு பரவால்ல தான், அதனால தான என்ன விட்டு ஒரு வாரம் பிரிஞ்சு இருந்த என்று அங்க சுத்தி இங்க சுத்தி அவள் அவனை விட்டு பிரிந்த ஒரு வாரத்திலே வந்து நின்றான்..

நொந்து போனாள் காரிகையவள். இவன எப்படி வழிக்கு கொண்டு வரது என்று யோசித்தவள், அன்று இரவு குழந்தையை நேரமாகவே தூங்க வைத்துவிட்டு. அவனுக்காக கொஞ்சம் சிறத்தை எடுத்து அலங்கரித்து கொண்டாள். லாவெண்டர் நிற ஜார்ஜெட் சேலையை சிங்கிள் ஃப்லீட் வைத்து கட்டி, பின் இடுப்பு வளைவாக தெரியும் அளவிற்கு அழகாக கட்டி இருந்தாள். நீண்ட கருமேக கூந்தலை விரித்து விட்டு பின்னழகை மறைக்காதவாறு, முன்பக்க வல மார்பில் சரியவிட்டு இருந்தாள்.

குழலி வீட்டிற்கு வந்த பிறகும், அவளிடம் பேச விருப்பம் இல்லாமல் நேரம் கழித்தே வீட்டிற்கு வருகிறான் விஷ்வா. நேரம் 9 ஐ நெருங்க, இன்னும் விஷ்வா வந்த பாடில்லை. அவனுக்கு அழைக்கலாம் என போனை எடுக்க, கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.

விஷ்வா தான் வந்து இருந்தான், அவனை கண்டதும் அவள் முகத்தில் மின்னல் வெட்டி சென்றது. வேகமாக சென்று அனைத்து கொண்டாள். விஷ்வாவின் வியர்வை கலந்த பர்ஃப்யும் வாசத்தில் மயங்கி நின்றாள் குழலி. எப்போதும் விஷ்வா வரும் நேரத்தில் ஃபரஷ்ஷாக தான் இருப்பாள் குழலி. ஆனால் இந்த விரிந்த கூந்தல் சிங்கிள் ஃப்லீட் சேலை எல்லாம் புதிதாக இன்று தான் முளைத்து இருக்கிறது.

அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க, முகம் நிமிர்த்திய குழலி கொஞ்சம் எக்கி அவன் மூக்கோடு மூக்குரசி நின்றாள். என்ன டி இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க என்று அவனும் கிறக்கமாக தான் கேட்டான். ஆமா நீங்க என்மேல கோவமா இருக்கீங்கள அதான் உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்கள சமாதானம் பண்ணலாம்ன்னு களத்துல இறங்கிட்டன் என்று அவன் கைவளைவில் நெளிந்து சிவந்த கன்னத்தை மறைத்து கொண்டு சொன்னால்.

அவளை தள்ளி நிறுத்தியவன், ஓஹ் அப்போ என்னோட கோவம் எல்லாம் உன்கூட படுத்து எந்திரிச்சா சரியா போய்டும்ல? அவ்ளோ தான் என் ஃபீலிங்ஸ்க்கு மரியாதை, அப்படி தான என்றான்.

செந்துரமாக செம்மை பூசியவளின் முகம் மாறி போனது, அவன் முகம் நிமிர்ந்து பார்த்தாள். விஷ்வா சாதாரணமாக இருப்பது போல் தான் தோன்றியது. இவர் தான் கொஞ்சம் நேரம் முன்னாடி அப்படி பேசியதா என்பது வரை யோசித்து விட்டால்.

என் ஃபீலிங்ஸ்க்கு மரியாதையே இல்லல.?

சின்ன விஷயத்துக்கு ஏன் விஷ்வா இவ்ளோ ரியாக்ட் பண்றிங்க?

எதுடி சின்ன விஷயம்? என்ன விட்டுட்டு போய் இன்னொருத்தவங்க வீட்ல இருந்தியே அது சின்ன விஷயமா? சரி உன்ன பொறுத்த வரைக்கும் அது சின்ன விஷயமாவே இருந்துட்டு போகட்டும். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணன் தெரியுமா என்று கேள்வியாக நிறுத்தி அவன் முகம் பார்த்தான்.. இப்போதாவது அந்த வார்த்தையை சொல்ல மாட்டாள என்று..

நானும் தான் ஷிவா உங்கள ரொம்ப மிஸ் பண்ணன் என்றால் கலங்கிய கண்களோடு.

என்ன மிஸ் பண்ணி இருப்ப? என்கூட படுக்க முடியலயேன்னு என்ன மிஸ் பண்ணி இருப்ப சரிதான? அவன் எதிர்பார்த்த வார்த்தை வராததில் மீண்டும் கடுப்பாகி வார்த்தையை விட்டான்.

குழலி அழுது கொண்டே நின்றாள். சிறிது நேரத்திற்கு முன்பு அவனுக்காக பார்த்து பார்த்து அலங்காரம் செய்தது நினைவில் வர, அவளை நினைத்து அவளுக்கே அசிங்கமாக இருந்தது.

இப்படி பேசும் விஷ்வா அவளுக்கு மிக மிக புதிது.

அவள் அழுவதை காண சகிக்காதவன் குளியல் அறை புகுந்து கொண்டான். அவன் மனதும் அங்கு நிலையாக இல்லை. ஏன் டா அப்படி பேசுன என்று அவன் மனமே அவனிடம் நியாயம் கேட்க, பின்ன நான் இனிமேல் உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டன் விஷ்வான்னு ஒரு வார்த்தை வாயில இருந்து வரல, நான் எதிர்பாக்குற விஷயமே அவளுக்கு தெரியல. அந்த அளவுக்கு என்ன புரிஞ்சு வச்சுருக்கா என்று கடுப்பாக புலம்பினான்.

இன்னொரு மனமோ செம அழகா இருந்தாள குழலி என்று அவள் அழகை நினைத்து சிலாகிக்க. ஹ்ம் ஆமா செமயா இருந்தா, அந்த கண்ணு சான்சே இல்ல என்று அவள் மேல் உள்ள கோவம் மறந்து விஷ்வா பிதற்றி கொண்டு இருந்தான்.

இங்கு குழலி வேறு உடைக்கு மாறி, அவனுக்கு இரவு உணவை பால்கனி டீபாய் மீது எடுத்து வைத்துவிட்டு, அவள் குழந்தை அருகே வந்து படுத்து கொண்டாள். அவளின் ஒரு சொட்டு கண்ணீர் அவள் தலையணையை நனைத்தது.

வெகுநேரம் கழித்து வெளியே வந்த விஷ்வா, கண்டது என்னவோ மெத்தையில் சுருண்டு படுத்து இருக்கும் அவன் குட்டி மனைவியை தான். உடை மாற்றி இருந்தாள். கொஞ்சம் நேரம் முன்பு அவள் சொன்னது அவன் நினைவிற்கு வந்தது " நீங்க என்மேல கோவமா இருக்கீங்கள அதான் உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்கள சமாதானம் பண்ணலாம்ன்னு களத்துல இறங்கிட்டன் " என்று அவள் மனதில் உள்ளதை அப்படியே கூறியது அவனுக்கு நினைவு வர, மனம் என்னவோ போல் ஆகிவிட்டது.

தலையை கோதி கொண்டவன் அவர்கள் பிரச்சனைக்கு இன்றே முடிவை கொண்டு வரும் எண்ணத்தோடு குழலியை நெருங்கினான்.

பாதி தூக்கத்தில் இருந்தவளை அப்படியே கைகளில் ஏந்தி கொண்டு பால்கனி பக்கம் சென்றான். குழலி அவன் கைகளுக்கு மாறும் போதே முழித்துக் கொண்டவள், அவன் முகத்தைக் கண்டு எங்க கூட்டிட்டு போறீங்க விடுங்க என்ன, விடுங்கன்னு சொல்றேன்ல விடுங்க என்று கூறி அவன் வெற்று மார்பில் அடித்து கால்களை உதறி அவளின் எதிர்ப்பை காட்டினாள்.

சும்மா வாடி ரொம்ப பண்ணாத, என்று சின்ன அதட்டலோடு பால்கனியில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு அவளை எப்போதும் போல் அவன் மீது அமர வைத்து கொண்டான்.

குழலி அவன் மீது இருந்து துள்ளி எழபார்க்க, என்னடி உன் பிரச்சனை எதுக்கு சும்மா சும்மா துள்ளிக்கிட்டு இருக்க..

விடுங்க விஷ்வா நீங்களும் எல்லார மாதிரி தான், அடிச்சாலும் புடிச்சாலும் பொண்டாட்டி உங்க கூடவே அடிமை மாதிரி இருக்கணும்னு நினைக்கிற சாதாரணமான மனுஷன். என் மனச புரிஞ்சுக்கிட்டிங்களா நீங்க? அன்னைக்கு எங்க அம்மா முன்னாடி வீட்ல வேலை செய்றவங்க முன்னாடி என்ன அடிச்சீங்க, எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சு தெரியுமா??

அதுவும் உங்க அம்மாக்கு என்ன நீங்க அடிக்கணும்னு ஆசை.. அவங்க பையன் நீங்க அதை அப்படியே நிறைவேத்தி வெச்சிட்டீங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை, நான் கோவப்பட்டு உங்க வீட்டை விட்டு போய் இருக்க கூடாது. நீங்க அடிச்ச போதும் கூட நான் உங்க கூடவே இருந்து இருக்கணும் அதானே. சரி உங்களோட மனசு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு இனிமே நீங்க என்ன அடிங்க கொள்ளுங்க என்னமோ பண்ணுங்க. நான் கோவமும் பட மாட்டன் இந்த வீட்டை விட்டுட்டு போகவும் மாட்டன் போதுமா என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

விஷ்வா தவித்து போய் விட்டான், ஹேய் என்னடி இப்படி எல்லாம் பேசுற? நான் அந்த மாதிரியாடி? நீ இல்லாம என்னால இருக்க முடியல குழலி. அந்த ஒரு வாரம் நான் பைத்தியக்காரன் மாதிரி சுத்துனன் தெரியுமா.. வீட்டுக்கு வர பிடிக்காம ஃபுல்லா ஆபீஸ்லயே தான் இருந்தேன். அனாதை மாதிரி ஃபீல் பண்ணன் உனக்கு தெரியுமா?

குழலி விஷ்வாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளை இழுத்து மார்பில் சாய்த்துக் கொண்டான் விஷ்வா.

சரி எப்படியோ ரெண்டு நாள்ல வந்துருவான்னு நானும் பல்ல கடிச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா நீ ஒரு வாரம் ஆகியும் வரவே இல்ல. அப்ப என்ன அர்த்தம் உனக்கு என் நியாபகமே இல்லன்னு தானே அர்த்தம் என்று அவனும் கோபப்பட்டான்.

என்ன சொன்ன சொல்லு.. என்ன சொன்ன நீ அடிமை மாதிரி என் கூடவே இருக்கணும்னு நான் நினைக்கிறேன் அப்படி தான சொன்ன.. நான் உன்னை அடிமையா நினைக்கிறனா? சொல்லுடி என்று அவன் மார்பில் புதைந்து இருந்த முகத்தை நிமிர்த்தி கேட்டவன், அவள் இல்லை என்று தலையாட்டியதும் மீண்டும் அவளை தன் மார்போடு புதைத்து கொண்டான்.

நான் உனக்கு அடிமையாகி ரொம்ப நாள் ஆச்சு டி, அதுதான் உனக்கு புரியல.

நீ வந்த அன்னைக்கு நான் கோவமா இருக்கன்ணு உனக்கு நல்லா தெரியும், அப்பவே நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் நான் இனிமேல் உங்களை விட்டு போக மாட்டேன் விஷ்வா அப்படின்னு. சொல்லி இருந்தேனா இந்த பிரச்சனை அப்பவே முடிஞ்சு இருக்கும் ஆனால் இப்போ வரைக்கும் அந்த மாதிரி ஒரு வார்த்தை உன் வாயிலருந்து வரவே இல்ல.

எனக்கே தெரியல குழலி என்ன விட எட்டு வருஷம் சின்ன பொண்ணு நீ..  உன்கிட்ட நான் ஏன் இவ்ளோ எதிர்பார்க்கிறன்னு. என்னோட சுயத்தையே உன்கிட்ட இழந்துட்டு இருக்கன் டி. நிஜமா பயமா இருக்கு குழலி, நமக்குள்ள பெரிய பிரச்சனை ஏதாச்சும் வந்து நீ என்ன விட்டு பிரிஞ்சு போய்டுவியோன்னு பயமா இருக்கு.  

அவன் அப்படி சொன்னதும் மார்பில் சாய்ந்து இருந்த குழலி மீண்டும் விஷ்வா முகத்தை பார்த்தால். அவளை மீண்டும் தன் மார்போடு அனைத்துக் கொள்ள முயல, அவனிடமிருந்து திமிறி, எதுக்கு உங்க முகத்தை பார்க்க விட மாற்றிங்க சும்மா சும்மா மார்ல போட்டு சாச்சுக்கிட்டே இருக்கீங்க என்றால்.

எனக்கு உன்கிட்ட பேசணும் குழலி, ஆனா உன் கண்ண பாத்து பேச முடியல டி புரிஞ்சுக்கோ. அவன் சொன்ன விதம் அவள் அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது.

உன்ன கோபப்பட வேணான்னு என்னைக்காச்சும் சொல்லி இருக்கேனாடி? நம்ம விஷயத்துல என்ன விட நீ தான அதிகமா கோவப்படுற. இப்ப வரைக்கும் உன்னோட கோவத்தை கூட நான் ரசிச்சிட்டு தான் இருக்கேன்.

நான் சொல்றது எல்லாம் ஒரே விஷயம் தான் என் மேல கோபப்படு திட்டு அடி எல்லாத்துக்கும் உனக்கு உரிமை இருக்கு ஆனா எல்லாத்தையும் என் கூடவே இருந்து பண்ணு. ஒரு வாரம் என்ன தவிக்கவிட்டியே அந்த மாதிரி இனிமேல் பண்ணாத.

இப்போ இவன் என்ன திட்டறானா இல்ல காதல் மொழி பேசி உருக வைக்கிறானா என்று குழலிக்கே மண்டை குழம்பி போனது.

உங்க கூட இருந்து எப்படி கோவப்படுறது, அப்படியே கோவப்பட்டாலும் தோ,  இப்ப என்ன மடியில தூக்கி உட்கார வச்சு கொஞ்சி கொஞ்சி பேசறீங்களே.. இதே மாதிரி தான் அப்பவும் பேசி என்ன  கோவப்பட விடாம பண்ணிடுவீங்க என்றால் மூக்கை சுருக்கி முறைத்து கொண்டு.

சிறு பிள்ளைத்தனமாக அவள் சொன்ன விதத்தில் விஷ்வாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. என் செல்ல குட்டி டி நீ. என்ன பண்ணாலும் கியூட்டா இருக்க.. என்று அவள் கன்னத்தில் முத்தம் வைக்க வர, அவள் தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். என்னடி என்று சலிப்பாக இழுத்தான் விஷ்வா, முத்தம் கொடுக்க விடாமல் போக்கு காட்டுகிறாளே என்ற கடுப்பு.

கொஞ் கொஞ்சம் நேரம் முன்னாடி என்ன எப்படி பேசிட்டீங்க?? உங்க உங்க கூட என்று அந்த வார்த்தையை சொல்ல முடியாமல் அழுதாள் குழலி.

நான் அந்த மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு உங்க முன்னாடி நின்னதும், உங்களுக்கு என்ன தப்பா நினைக்க தோணிடுச்சுல, என்.. என்ன கால் கேர்ள் மாதிரி தான நினைச்சீங்க என்று அவள் அழுது கொண்டே மனதில் உள்ளதை கேட்டு முடித்தால்.

குழலி அப்படி கேட்டதற்கு தண்டனையாக, அவள் அதரங்கள் விஷ்வாவால் சின்னா பின்னமாக்கப்பட்டது. வலிக்கிதுஉஉஉ என்ற அவளின் முனகல் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல். உதட்டை விழுங்கி கொண்டான் விஷ்வா.

 

 

 

 

60. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குளிர்ந்த தென்றல் காற்றில், மேனி நடுங்கினால் குழலி, அவளிர்க்கு கதகதப்பாக தன் உடல் சூட்டை கொடுத்தவன், அவள் உதட்டிற்கு தண்டனை வழங்குவதை மட்டும் நிறுத்தவில்லை.

இதற்கு மேல் விட்டால், தன் உதட்டை மென்று தின்றுவிடுவான் என நினைத்தவள், அவன் மார்பில் பூனை குட்டி போல் புரண்டி விட்டு, அவனுக்கு வலியை கூட்டினாள், அந்த பாறை தேகத்திற்க்கா வலிக்கும், சுகமாக ஏற்று கொண்டான். இன்னும் அவனிடம் முத்த வேகம் கூடியதே தவிர குறையவில்லை.

பின் மெதுவாக அவன் கேசத்தினுள் அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை நுழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தலையை கோதி அவனை கட்டுக்குள் கொண்டு முயற்சித்தால். முயற்சிக்கு பலனாக,

சில நொடிகளில் சப்.. என்ற சத்தத்துடன் கொய்து கொண்டிருந்த அவள் இதழை விட்டான் விஷ்வா. அப்போதும் நிறுத்தாது, அவனின் இரு கைகளிலும் அவள் முகத்தை ஏந்தி, அவள் உதட்டில் குட்டி குட்டி முத்தங்களை வைத்து சிலிர்க்க வைத்தான். குழலியின் உதடுகள் நன்றாக சிவந்து மறுத்து போய்விட்டது.

சாரி நீ அப்படி பேசுனது கோவம் வந்துடுச்சு என்றான். அவனை முறைத்து கொண்டு இருந்தாள் குழலி. அவன் ஒற்றை கண்ணடித்து புருவத்தை ஏற்றி இறக்கி மந்தகாசமாக சிரிக்க, அதில் விழுந்து விட்டாள் அவனின் மனையால்.

விஷ்வா அவளை இடையோடு தூக்கி கொண்டு, எழுந்து போய் பால்கனி சுவற்றில் அவள் முதுகை மட்டும் சாய்த்தான், அவளின் கால்கள் விஷ்வாவின் முதுகை சுற்றி கொண்டு வளைத்து இருந்தது.

குழலி.. என்று கிறக்கமாக அழைத்தான் விஷ்வா.

ஹ்ம்ம் என்றவள்.. கணவனின் மார்புக்குள் சுருண்டு கண் சொக்கி இருந்தாள்.

இந்த பொசிஷன் உனக்கு ஓகே வா டி என்று அவள் காதில் ரகசியம் போல் எச்சில் முத்தம் வைத்து கேட்க..

ச்சீ போடா எனக்கு வெட்கமா இருக்கு என்று அவன் மார்புக்குள் இன்னும் புதைய முற்பட்டால் குழலி.

அவளின் சிணுங்கல் மொழியையே சம்மதமாக எடுத்து கொண்டவன், அவளை முழுவதுமாக தனக்குள் புதைத்து கொண்டான். அவளும் விஷ்வாவின் வலிமையான தோள்களை கட்டி கொண்டு ஊஞ்சல் ஆடி கொண்டு இருந்தாள். இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் எய்தி ஒருவர் தோளில் ஒருவர் கவிழ்ந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் இருவரும் பால்கனியிலே படுத்து உறங்கினர், விஷ்வா வெறும் தரையில் படுத்துத்திருந்தான், அவன் மீது துயில் கொண்டிருந்தாள் குழலி. பின் இரவில் கண் விழித்த குழலி, விஷ்வாவை எழுப்பி பசிக்குதா டா.. என்று குழந்தை போல் சிணுங்கினால்..

ஆடையை சரி செய்து கொண்டவர்கள், விஷ்வா ஹாட் பாக்ஸில் இருந்த ஆப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயாவை எடுத்து குழலிக்கு மெது மெதுவாக ஊட்டி விட்டான். அவள் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்க, ஒரு புறம் அவள் வாய் கணவன் ஊட்டிய உணவை மென்று கொண்டு இருந்தது. பாதி உறக்கத்தில் உண்டு முடித்தால் குழலி. மெதுவாக அவளுக்கு வாய் துடைத்துவிட்டு, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வைத்தான். குழந்தை போல் பார்த்து கொண்டான் மனைவியை. இத்தனை நாள் பிரிவிக்கும் சேர்த்து உறங்கி கொண்டு இருந்தவளை கொஞ்சினான்.

அவனுக்கும் பயங்கர பசி தான் இருந்தும் குழலிக்கு ஊட்டிவிட்டு தான் அவன் சாப்பிட துவங்கினான்.

பின் விஷ்வா சாப்பிட்டு முடித்து, குழலியை தூக்கி கொண்டு மெத்ததைக்கு சென்றான். இம்முறை விஷ்வா நடுவில் படுத்து கொண்டான். ஒரு புறம் அவனின் குட்டி இளவரசி. மறுபுறம் அவனின் மகாராணி என சுகமாக துயில் கொண்டான்.

சூர்யா.. ரஞ்சனி..

ரஞ்சனியின் போனிற்கு குறுஞ்செய்தி வரும் சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்க, அரை தூக்கத்தில் இருந்த இருவரும் எழுந்து கொண்டனர், சூர்யா போனை எடுத்து என்னவென்று பார்க்க என் போன எதுக்கு நீ எடுக்குற என்று கேட்டுக்கொண்டே ரஞ்சனி அவன் கையில் இருந்த போனை வெடுக்கென பிடுங்கினால்.

சூர்யா முறைப்பதை கூட கண்டு கொள்ளாமல், ஹரியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் தாயை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாக கூறி ரஞ்சனியிடம் ஒரு தொகையை கடனாக வாங்கி இருந்தான். அதை தான் இப்போது அவளுக்கு மறு பரிவர்த்தனை செய்து நன்றி கூறி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

ரஞ்சனியிடம் மட்டுமின்றி அலுவலகத்தில் இன்னும் இரண்டு நபர்களிடமும் பணம் வாங்கி இருந்தான் ஹரி.

ரஞ்சனியும் அவன் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பி இருந்தாள். நன்றி, இப்போ அம்மா எப்படி இருக்காங்க என பொதுவாக விசாரித்தால், அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த சூர்யா யாருக்கு டி இந்த டைம்ல மெசேஜ் பண்ற.

அவனை வெறுப்பேற்றும் பொருட்டு கூறினாள். ஹ்ம்ம் என் எக்ஸ் பாய் ஃப்ரன்ட் ஷங்கர்க்கு என்றால், சும்மாவே சூர்யா கொஞ்சம் கோளாறு புடிச்ச ஆளு, இப்படி சொன்னதும் சும்மா இருப்பானா.. வந்த கோவத்தில் ரஞ்சனியின் சாம்சங் s25 போன் கிழே சிதறி உடைந்து கிடந்தது. வடிவேலு பாணியில் சல்லி சல்லியா நொறுக்கிட்டானே டி என்று அந்த நிலையிலும் அவள் மனம் கவுண்டர் கொடுத்தது. ஆனால் ரஞ்சனி முகம் கோவத்தில் சிவந்து விட்டது. அவ்வளவு தான் அவள் உள்ளே பதுங்கி இருந்த ராவடி ரங்கம்மா வெளியே வந்து விட்டால்.

ஏன்டா நாயே, அறிவிருக்கா உனக்கு? சோத்துல உப்பு போட்டு தான திங்குற? எதுக்கு டா ஏன் போனை உடைச்ச? உன் அம்மா வீட்டு காசுல வாங்குன போணுன்னு நினைச்சியா? நான் உழைச்சு கஷ்ட்டப்பட்டு வாங்குன போன் டா..

சின்ன கேப் கிடைத்தாலும், அவளின் மாமியார் மகேஷ்வரியை இழுத்து டேமேஜ் செய்து விடுவதில் ரஞ்சனி பலே கில்லாடி . அப்படி என்ன அந்த புண்ணியவதி மேல் காண்டோ? அதையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்.

ஹேய் வார்த்தைய பார்த்து பேசு அரைஞ்சுடுவன் பார்த்துக்க.. யார்கிட்ட இந்த டைம்ல மெசேஜ் பண்ணிட்டு இருக்கன்னு கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல வேண்டியது தான? அத விட்டுட்டு எதுக்கு கண்ட பொ***ங்க பேரை எல்லாம் சொல்லிட்டு இருக்க என்று இலவசமாக நான்கு கெட்ட வார்த்தைகளையும் சேர்த்து கொண்டதில் ரஞ்சனி இன்னும் காண்டாகி போனாள்.

ச்சீ எதுக்கு டா வீடுன்ற வீட்ல கெட்ட வார்த்தை பேசிகிட்டு இருக்க அறிவுள்ள என்று மீண்டும் கத்தியவள்.

நான் யாருக்கு எப்போ மெசேஜ் பண்ணா உனக்கு என்ன? ஏன் உனக்கு எல்லாம் நைட்ல போன் வராத இல்ல மெசேஜ் வராதா? அப்படி வந்தா நீ தான் பேசாம இருப்பியா?

மூணு நாள் முன்னாடி கூட, அந்த ஸ்ருதிகிட்ட இருந்து போன் வந்துச்சே, நீ கூட சொல்லு ஸ்ருத்தின்னு 32 பல்லையும் காட்டிகிட்டு ஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு அவகிட்ட போய் தனியா பேசுனியே நான் எதாச்சும் உன்ன கேட்டனா?

அன்று அவன் போனில் சிரித்து கொண்டே பேசியது போல், இப்போது ராகம் இழுத்து அவனை போலவே பேசி காட்டினால் ரஞ்சனி.

உன் விஷயத்துல நான் தலையிடலல அதே மாதிரி என் விஷயத்தலையும் நீயும் தலையிடாத.

கடுப்பாகிய சூர்யா, ஹேய் அறிவு கெட்ட முண்டம் என் வொர்க்கும் உன் வொர்க்கும் ஒன்னா டி? நான் ஃப்ரன்ட்ஸ்சோட சேர்ந்து வோன்னா பிசினஸ் பண்ணிட்டு இருக்கன்.. எனக்கு அன்டைம்ல மெசேஜ் கால் வரர்து எல்லாம் யூசுவல், நீ 10 to 6 ஜாப் தான பார்க்குற? அதுவும் கவெர்ன்மென்ட் ஜாப், உன்னையும் என்னையும் கம்பர் பண்ணிட்டு இருக்க. மூளை இருக்கா இல்ல உன் மூளைய முட்டி கால்ல வச்சிட்டு சுத்திட்டு இருக்கியா என்று அவனும் பதிலடி கொடுக்க.

ஆமா நல்லா பண்ற பிஸ்னஸ்ஸு என்று ராகம் இழுத்தவள். ஒரு காம்ப்லெஸ்ல பத்துக்கு பத்து ரூமை எடுத்துட்டு நாலு சார்ரு நாலு டேபிள் போட்டு அத ஆபீஸ்ன்னு வேற சொல்லிக்கிட்டு, வெளிய நாங்க பிசினஸ் பன்றோம்ன்னு சொல்ல வேண்டியது உனக்கு கூஜா தூக்க நாலு எடுபுடி வேற என்று அவன் செய்யும் தொழிலை கேலி செய்து பேச, எவ்வளவு முயன்றும் கட்டு படுத்த முடியாமல், தலையில் பட்டென்று ஒரு அடியை இழுத்து வைத்தான் சூர்யா.

தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது ரஞ்சனிக்கு, அப்போது தான் அவன் முகத்தை பார்த்தாள். கண்கள் சிவந்து, உதடு கடித்து நின்று இருந்தான். மலங்க மலங்க விழித்தவளிடம் விரல் நீட்டி எச்சரித்தான், என்ன பத்தி பேசுறதுக்கு மட்டும் தான் உனக்கு உரிமை இருக்கு, நான் செய்ற வேலைய பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல.

அவள் அவனையே பார்த்து கொண்டு இருக்க, என் வேலை எனக்கு எவ்ளோ புடிக்கும்ன்னு தெரிஞ்சும் அத கேவலமா பேசுறல, ச்சீ போடி என்று வெறுப்பாக கூறிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான் சூர்யா.

தவறாக பேசிவிட்டோம் என்று காலம் கடந்து வருந்தினால் ரஞ்சனி. யார் தான் பொறுத்து கொள்வர் செய்யும் தொழிலை மட்டம் தட்டி கேலி பேசினால்.. அதுவும் சூர்யா ஆசைப்பட்டு துவங்கிய தொழில் இது. ரஞ்சனியும் இதை நன்கு அறிவால், மனைவியே இப்படி அவன் செய்யும் தொழிலை கேலி செய்து பேச சூர்யாவிற்கு கோவம் வந்து விட்டது.

இத்தனைகும் சூர்யாவின் தொழில் ஆரம்பத்தில் மந்தம் தட்டினாலும், இப்போது நல்ல லாபத்தை தான் கொழிக்கிறது.

ச்சை வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்து இருக்கலாம். இப்போ பாரு இவ்ளோ நாள் கெத்தா இருந்துட்டு இப்போ போய் நான் அவன் கிட்ட சாரி கேக்கணும் என்று ரஞ்சனி ஒரு பக்கம் தனியாக புலம்பினால். என்னது சாரி கேட்க போறியா? இதல்லாம் அசிங்கம் ரஞ்சி, அப்படியே விற்று அவனே மறுபடியும் வந்து பேசுவான், நீ மறுபடியும் கெத்த மெண்டைன் பண்ணு, நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி ஐடியா கொடுத்தது.

நோ, நோ, எனக்கே ஒரு மாதிரி இருக்கு நான் போய் சாரி கேக்குறன், என்றவள் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல, ஹால் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தான் சூர்யா. இல்லை இல்லை டிவி சேனல்களை மாற்றி கொண்டு இருந்தான். அவன் கையில் உள்ள ரிமோட்டிற்கு வாய் இருந்தாள் கதறியிருக்கும்.

அவளின் கிட்டன் என்ற செல்ல பெயரிர்க்கு ஏற்றவாறு, குளிருக்கு இதமாக போர்வையை தலையில் முக்காடு போல் போட்டு கொண்டு, சூர்யா அருகில் வந்து நல்ல பெண்ணாக அமர்ந்து கொண்டாள்.

அவளை கண்டு கொள்ளவே இல்லை கோவக்காரா கணவனவன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

61. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ரஞ்சனி மெல்லமாக சூர்யா அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அவன் கண்டு கொள்ளவே இல்லை. டிவி சேனல்களை மாற்றி கொண்டே இருந்தான்.

சூர்யா என்று ராகம் இழுத்தாள்..

ஒழுங்கா போய்டு அடிச்சுடுவன்.

சரி ஒரு வாட்டி அடிச்சிக்கோ என்று அவள் முதுகை திருப்பி காட்டினால். ச்சீ பேஹ் என்று கூறிவிட்டு, மீண்டும் டிவி சேனலை மாற்ற துவங்கினான்.

இந்தா டா, இவ்ளோ நாள் நான் பேசலன்னு பேசு ரஞ்சி பேசு கிட்டன்னு என் பின்னாடியே சுத்தி வந்துட்டு இப்போ நானே வந்து சாரி கேட்டதும் ஓவரா சீன் போடுற, உனக்கு 5 மினிட்ஸ் தான் டைம் ஒழுங்கா என் சாரிய அக்சப்ட் பண்ணிட்டு என்கிட்ட பேசுற, இல்ல அப்பறம் நான் எப்பவும் பேச மாட்டன்.

அவன் அப்போதும் அமைதியாகவே இருந்தான். பத்து நிமிடம் கழிந்துவிட்டது. பொசு பொசுவென்று மூச்சு வாங்கியவள்.. அவன்  முகத்தை திருப்பி, சரி இனிமேல் உன் பிசினஸ் பத்தி எதுவும் பேச மாட்டன். உன்ன பத்தி மட்டும் கழுவி ஊத்துறன் பேசுடா என்று சீரியஸ்ஸாக சொல்ல, மூச்சு வாங்க அவளை முறைத்து இருந்தான் சூர்யா.

எங்கயாச்சும் புருஷன்னு ஒரு மரியாதை இருக்கா டி? ஏட்டிக்கு போட்டி பேசுற.. இல்லனா ராங்கி மாதிரி எதையாச்சும் பண்ணி வைக்குற. என்று வெளியே கூறினாலும், அவனின் உள்மனது மனைவியின் சேட்டைகளை ரசிக்கவே செய்தது.

எல்லாம் தெரிஞ்சு தான டா கல்யாணம் பண்ண அப்பறம் எதுக்கு இப்படி சலிச்சுக்குற? அதான்.. அதான் நான் பண்ண பெரிய தப்பு என்று கேலியாக கூற, ரஞ்சனி ஒரு மாதிரி ஆகிவிட்டால். கல்யாணம் முடிந்த இத்தனை மாதங்களில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இப்படி ஒரு வார்த்தை அவன் வாயில் இருந்து வந்ததில்லை. இப்போது சூர்யா இப்படி சொல்லிவிட கொஞ்சம் மனம் சுணங்கி போனது என்னவோ உண்மை தான்.

இருந்தும் அடுத்த நொடி, சரி டா அவ்ளோ சலிச்சிக்கிட்டுலாம் என்கூட வாழ வேண்டாம். டிவோர்ஸ் குடுக்குறன் யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ என்றால். மீண்டும் கோவம் வந்துவிட, அவள் பக்கம் நன்றாக திரும்பி, தொடையை பிடித்து திருகி விட்டான், ஆர்ஹா என்று அவள் வலியில் கத்த இன்னொரு கையால் வாயை மூடி கொண்டான்.

ரஞ்சனி அடித்தால் கூட பொறுத்து கொள்வால்.. ஆனால் கிள்ளினால் வலி தாங்க மாட்டாள் துடித்து விடுவாள். ஒரு கட்டத்தில் அவள் வலியை பொறுத்து கொண்டு, அவள் வாய்க்கு எட்டிய அவனின் கையை பிடித்து கடித்துவிட்டால். சூர்யா வலியில் அவள் தொடையில் இருந்து கையை எடுத்துவிட, ரஞ்சனி விடுவதாக இல்லை. இன்னும் ஆழமாக கடித்தால். சூர்யா வலி தாங்க முடியாமல் கத்திவிட்டான்.

அவன் சத்தத்தில் கதவை திறந்த சுந்தரம், என்ன பண்றாங்க என்று பார்த்தவர் தலையில் அடித்து கொண்டார். கல்யாணம் பண்ணி வச்சா ப்ளே ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடிட்டு இருக்குங்க என்று நொந்து கொண்டு மீண்டும் கதவை மூடிவிட்டு சென்றார்.

சூர்யாவின் கை, கன்றி போய்விட்டது. கண்டிப்பாக அந்த காயம் தழும்பாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாயி நாயி எப்படி கடிச்சு வச்சு இருக்கு பாரு. அண்ணி டின்னற்க்கு பாயா தான செஞ்சாங்க அந்த எலும்ப போய் கடிக்க வேண்டியது தான எதுக்கு டி என் கைய இப்படி கடிச்சி வச்சுருக்க.? அவன் கோவமாக கத்தி கொண்டு இருக்க.

அவள் முகத்தை சிலுப்பி கொண்டு நீ எதுக்கு டா என்ன கிள்ளுன? எனக்கு தான் கிள்ளனா பிடிக்காதுன்னு தெரியும்ல என்று அவளும் சண்டைக்கு நிற்க, ச்சீ போடி உன்கிட்ட மனுஷன் பேசுவானா என்று முகத்தை திருப்பி கொண்டான்.

நாளைக்கு போய் ஒரு டிடி போடணும் என்று சொல்லி கொண்டான்.

"ஹ்ம்ம் போடு, போடு நல்லா போடு எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும்" என்று அவள் கூற..

சும்மா இரு டி மிட் நைட்ல நீ பேசுறது எல்லாம் எனக்கு டபுள் டபுள்ளா கேட்குது என்று கேலியாக கூறினான்.

சிறிது நேரத்திற்கு பிறகே, அவள் சொன்ன வார்த்தையும் அவன் புரிந்து கொண்ட விதத்தையும் நினைத்து தலையில் அடித்து கொண்டவள். எப்பவும் காஜி மூடோட தான் சுத்திட்டு இருப்பியா டா அவள் முகத்தை சுழித்தால்.

ஏண்டி பேச மாட்ட? கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆகியும் உன்ன சும்மா விட்டு வச்சு இருக்கன்ல, நீ இப்படி தான் பேசிவ.

என்ன மீறி உன்னால ஒன்னும் பண்ண முடியாது டா என்றால் குரலில் அவ்வளவு ஏகத்தாளம்.. அப்படியா என்றவன் நொடி பொழுதில் அந்த சோஃபாவில் அவளை சாய்த்து, அவள் மீது படர்ந்து அவன் வலது கையை அவளின் அடிவயிற்றில் இறக்கினான். சூர்யா என்று அதிர்ச்சியில் கத்தினால். அவனின் புருவத்தை ஏற்றி இறக்கி, என் கைய இன்னும் கொஞ்சம் கீழ இறக்கவா என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் மெதுவாக கைகளை நகர்த்த ப்ளீஸ் வேண்டாம் என்றவளின் குரல் நடுங்கி வெளி வந்தது.

என்ன நினைத்தானோ அவள் மீது இருந்து எழுந்து கொண்டு, பழைய நிலையில் வந்து அமர்ந்தான்.

ரஞ்சனிக்கு கோவமாக வர, அவனை முறைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டால். சூர்யா கண்டும் காணாமலும் இருந்தாலும் கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டோமோ என்று ஒரு மனம் எண்ணாமல் இல்லை.

சரி விடு நம்ம பொண்டாட்டி தான பார்த்துக்கலாம் என்று விட்டுவிட்டான்.

ரஞ்சனி அறைக்குள், ஒரு விதமான உணர்வில் தவித்து கொண்டு இருந்தாள். அவள் அடி வயிற்றில் இன்னும் பட்டாம் பூச்சுக்கள் குறுகுறுத்து கொண்டு இருந்தது. கண்களை இருக்க மூடி, உதட்டை கடித்து கொண்டு போர்வையை தலை வரை போர்த்தி படுத்து இருந்தாள்.

இனிமேல் இவன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கணும் என்று மனதினுள் சொல்லி கொண்டாள்.

உள்ளே வந்த சூர்யா, அவள் படுத்திருப்பதை கண்டு நமட்டு சிரிப்பு சிரித்தான். பின் விளக்கை அனைத்துவிட்டு வந்து ரஞ்சனி அருகில் ஓட்டி படுக்க, அவளோ அவன் அறியாதவாரு கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு தள்ளி படுத்தால்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன், அவளை குண்டு கட்டாக தூக்கி அவன் மேல் போட்டு கொண்டு, அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் நுழைந்து, என்ன டி என்றான்?

இனிமேல் கண்ட இடத்துல கை வச்ச கொன்னுடுவன் டா என்று மிரட்டினால். ஹாஹாஹா என்று இடைவிடாமல் சிரித்தவன், ஏண்டி எதாச்சும் ஆகிடுச்சா என்று அவள் அவஸ்த்தையை புரிந்தவனாக அவள் அடிவயிற்றில் மிருதுவாக தடவி கொண்டே கேட்டான்.

ச்சீ கை எடுடா பக்கி என்றவள், அவன் மீது இருந்து கீழே சரிந்தால். அடுத்த நிமிடம் சூர்யா அவள் மேல் வந்தான். டேய் என்ன டா உன்கிட்ட தொல்லையா போச்சு.. நீ கோச்சுக்கிட்டே இரு என்கிட்ட பேசவே வேண்டாம் போ, என்று அவனை தள்ளிவிட முயல, சூர்யா அசைந்தான் இல்லை. அவனை தள்ள முயன்ற அவளுக்கு தான் மூச்சு வாங்கியது.

அவளை ரசித்து கொண்டே, அவளின் முகத்தில் கோடு இழுத்தவன், தப்பு பண்ணலாமா என்றான் புது காதலன் போல், அட பக்கி நாம புருஷன் பொண்டாட்டி டா நாம பண்ணா அது தப்பு இல்லை.. சூர்யாவின் கண்கள் விரிந்தது. ஹேய் ரஞ்சி அப்போ உனக்கு ஓகே வா? நம்ம லைப் ஸ்டார்ட் பண்ணலாமா என்று கண்களில் ஸ்டார் மின்ன கேட்டான்..

நோ.. நோ.. நீ தப்பா சொன்னத நான் திருத்தி சொன்னன். உன்கூட லைப் ஸ்டார்ட் பண்ற ஐடியால நான் இப்போ இல்லை.

அப்போ வேற என்ன ஐடியால இருக்க என்றான் கடுப்பான குரலில்.. ஆசை காட்டி மோசம் செய்தது போல் இருந்தது அவள் பேசும் பேச்சு.

ஹ்ம்ம் ஷங்கர் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகட்டும் அப்பறம் பார்த்துக்கலாம் என்றால். ரஞ்சி சத்தியமா நான் உன்ன கொன்னுடுவன் டி என்றான் பற்களை கடித்து கொண்டு உருமி..

ஹ்ம்ம் எரியுதா இப்போ எரியுதா?? என் கழுத்துல தாலி கட்டிட்டு, உன் பொண்டாட்டி ஆன அப்பறம் கூட நீ அந்த நாய் கூட தான என்ன சேர்த்து வச்சு பேசுன அப்போ எனக்கு எப்படி இருந்து இருக்கும். என் மனநிலைய கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம, என்ன எவ்ளோ பேச்சு பேசுன?

சத்தியமா அதல்லாம் நான் மறக்கவே மாட்டன். இப்போ அவன் பேர சொன்னதுக்கே இவ்ளோ பொங்குறல இரு, நீ என்ன  கொஞ்சிக்கிட்டு, பீக் போகும் போது அவன் பேர சொல்றன் என்று அவள் முடிக்கவில்லை, அருகில் இருந்த நைட் லாம்ப் கிழே விழுந்து உடைந்து இருந்தது.

விருட்டென எழுந்தவன், அவளை எழ விடாமல், மெத்தையிலே கழுத்தை நெறிக்க தொடங்கினான். பேசுவியா டி, இன்னொரு முறை இப்படி பேசுவியா? என்ன சொன்ன நான் உன்கூட பண்ணும் போது அந்த பொ**கு பாஸ்***ட் பேர சொல்லுவியா?? சொல்லி பாரு அன்னைக்கு தான் நீ உயிரோட இருக்க கடைசி நாள் என்றான்.

அவள் நிலை அவன் கருத்தில் பதியவில்லை. கோவம் கண்ணை மறைத்து இருந்தது. அவன் கையில் நகங்களால் கீறி அவன் கையை அடித்து தன் நிலையை உணர்த்தினால் ரஞ்சனி.

அப்போது தான் அவள் கழுத்தை விட்டான், சூர்யா.. இருந்தும் அவன் கோவம் குறையவில்லை. கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் போட்டு உடைத்தான்.

ரஞ்சனி ஒரு புறம், கழுத்தை நீவி கொண்டு பேச முடியாமல் தவித்தால். பால்கனி பக்கம் போய் நின்றவன், மீண்டும் உள்ளே வந்து அவன் மறைத்து வைத்து இருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து, ஓபன் செய்து வாயில் சரித்து கொண்டான்.

ரஞ்சனி அவனை முறைத்து பார்க்க, எதாச்சும் பேசுன, செருப்பால அடிப்பன், ஒழுங்கா வாய மூடிட்டு தூங்கிடு என்றான்.

அவன் பேசிய விதம் அவளுக்கு தன்மானத்தை சீண்டி விட, கண்களை துடைத்து கொண்டு அவள் போர்வை மட்டும் தலையனையை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டால்.

போடி போ, இனிமேல் இந்த ரூம்குள்ள வராத.. ச்சை எனக்கு போயும் போயும் உன்மேல தான அந்த எழவு எடுத்த லவ் வந்து தொலைக்கணும் என்று தலையில் அடித்து கொண்டான்.

அவன் பேசிய வார்த்தைகள் அவள் காதில் நன்றாகவே விழுந்தது. அழுது கொண்டே ஹாலில் உள்ள சோஃபாவில் தூங்கிவிட்டால்.

நன்றாக குடித்து இருந்தவன் வெளியே எட்டி பார்க்க, அவன் மனைவி உறங்கி கொண்டு இருந்தாள். பெருமூச்சு விட்டவன் அவள் அருகே சென்று, பஞ்சு பொதி போல் தூக்கி வந்து விட்டான் அவர்கள் அறைக்கு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

62. கண்கள் நிறைந்த ஓவியமே!!
நள்ளிரவு போல் உறக்கம் தப்பி விழித்தால் ரஞ்சனி, ஏதோ கனமான பாறை மீது உறங்கி கொண்டிருப்பது போல் தோன்ற, கொஞ்சம் அசௌகர்யமாக உணர்ந்தாள். சூர்யாவின் ஆண்மை வாசம் நாசியில் ஏற, அப்போது தான் அவன் மார்பில் இருந்து தலையை நிமிர்த்தி சூர்யாவின் முகம் கண்டாள்.

அழுகையாக வந்தது, அவன் மார்பின் மீதே கண்ணீர் சிந்தினால். சூர்யா உறங்கவில்லை முழித்து கொண்டு தான் இருந்தான். அவள் அழுவதை உணர்ந்து அவளை இன்னும் இறுக்கி கொண்டவன் முதுகை லேசாக வருடி கொடுத்தான். அவன் முழித்து இருப்பதை உணர்ந்தவள் அவன் மேல் இருந்து கீழே இறங்கி படுத்தால்.

அடுத்த கணம் இரும்பை ஈர்க்கும் காந்தம் போல் அவளோடு ஒன்றி கொண்டான்.

அவளின் கழுத்து வளைவில் ஏதோ போல் உணர்ந்தாள், கையை வைத்து தொட்டு பார்க்க, பிசு பிசுவென இருந்தது. பண்றதையும் பண்ணிட்டு ஆயின்மென்ட் போட்டு இருக்கான் பாரு, சைக்கோ என்று திட்டி கொண்டு இருந்தாலும் கண்ணில் நீர் வழிந்தது.

உன்மேல இன்னும் கோவமா தான் இருக்கன், அதனால அழுது இன்னும் கோவத்தை கிளப்பாத அமைதியா தூங்கு என்றான்.

கோவமா இருக்கியா நீ பண்ணதுக்கு நான் தான் டா கோவப்படணும்.. என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல, இஷ்ட்டத்துக்கு பேசுற, கழுத்த நெறிக்குற, ரூம்ல இருக்கறத எல்லாம் போட்டு உடைக்குற பைத்தியமா நீ என்று கோவமாக பேச வேண்டிய அனைத்தையும் பொறுமையாக பேசினால். அவ்வளவு தொண்டை வலி பேச முடியவில்லை. இருந்தும் மனம் தாங்காமல் பேசினால். குரல் வேறு மாறி இருந்தது.

அவனுக்கே கஷ்ட்டமாகி போனது அவள் குரலை கேட்டு.

உன்மேல பைத்தியமா இருக்கன் டி.. உன்ன பைத்தியம் போல காதலிக்கிறன். இத மட்டும் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ.

இப்போ எதுவும் பேச வேண்டாம் அமைதியா தூங்கு என்றவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டான்.

அவள் அருகே படுத்தால் கோவப்படுவாள் சண்டையிடுவால், அவளுக்கு இப்போது ஓய்வு தேவை என்று எண்ணியவன் திரும்பி படுத்து கொண்டான்.

மறுநாள் விடியலில் நேற்று நடந்த கலவரம் எதுவும் இல்லாமல் அறையே சுத்தமாக இருந்தது. சூர்யா தான் சுத்தம் செய்து இருந்தான் ரஞ்சனியின் தூக்கம் கலையா வண்ணம்.

தூக்கம் கலைந்து எழுந்தவள் சூர்யாவிடம் எதுவும் பேசாமல் அவள் வேலைகளை செய்ய தொடங்கினால். வெளியே சென்று குழலிக்கு உதவி செய்தால், அக்கா உங்க குரலுக்கு என்ன ஆச்சு ஏன் தொண்டை கட்டி இருக்கு குழலி எதார்த்தமாக கேட்க? தெரில திடீர்னு இப்படி ஆகிடுச்சு என்று சமாளித்தால். சூர்யா விஷ்வா சுந்தரம் அனைவரும் அங்கு தான் இருந்தனர்.

மகேஷ்வரி மட்டும் அறையில் இருந்தார். மகேஷ்வரியும் முதல் போல் அல்லாது அன்றைய பிரச்சனைக்கு பிறகு அமைதியாகவே வீட்டில் வலம் வருகிறார். மருமகள்களை கண்டாலும் ஜாடை பேச்சு எதுவும் பேசுவதில்லை.

சரிக்கா நான் உங்களுக்கு மிளகு நிறைய போட்டு சூப் பண்ணி தரன், அது குடிங்க சீக்கரம் சரி ஆகிடும் என்றால்.

விஷ்வா வெளியே இருந்து, குழலி அவ சூப்லாம் குடிக்க மாட்டா.. சரக்கு தான் குடிப்பா. இல்ல ரஞ்சி என்று விஷ்வா அவளை வெறுப்பேற்ற? உள்ளே இருந்து சில்வர் டம்பளர் ஒன்று அவன் மீது பறந்து வந்து விழுந்தது. சூர்யா அண்ணனை பார்த்து வாய் பொத்தி சிரித்தான்.

ஏன் ரஞ்சி இப்படி பண்ற என்று மருமகளை கடிந்து கொண்டார் சுந்தரம்.. அதில் ரஞ்சி முகம் வாட, டம்பளர்ல அடிச்சா அவனுக்கு எப்படி உரைக்கும் கரண்டி தட்டுன்னு எதாச்சும் எடுத்து அடிமா என்றார்.

என் செல்ல மாமா என்று அவரை காற்றோடு கொஞ்சியவள், உள்ளே சென்று ஒரு கரண்டியை கொண்டு வந்தாள்.. விஷ்வா டேய் இந்த மீன் திருடிய பாரு டா என்று சூர்யாவிடம் புகார் வாசிக்க, அவனோ வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியது தான பாரு இப்போ என்மேல இருக்க மொத்த காண்டையும் உன்மேல இறக்குவா என்றான்.

விஷ்வா, சோஃபாவில் இருந்து மறுபுறம் எகிறி குதித்து வீட்டை சுற்றி வந்தான். இருவரும் சின்ன பிள்ளைகள் போல் விளையாடி கொண்டு இருந்தனர்.

நான் சரக்கு அடிப்பனாடா ஹ்ம்ம் சொல்லு நான் சரக்கு அடிப்பனா? நீயும் உன் தம்பியும் தான்டா குடிகாரனுங்க மாதிரி கண்ணு மண்ணு தெரியாம குடிப்பிங்க.. குடிகார கபோதிங்களா.. என்று அவர்கள் மானத்தை வாங்கினால் ரஞ்சனி.

பத்த வச்சுட்டியே பரட்ட, என்றவன் அங்கே இருந்த குழலியை கண்டான். அவன் மனைவிக்கு தான் நாயகனுக்கு மது பழக்கம் இருப்பதே தெரியாதே.

ரஞ்சனி குழலியை பார்த்தாள். உனக்கு இவன் குடிக்கறது தெரியாதா என்றால். குழலி இல்லை என்னும் விதமாக பாவம் போல் தலையாட்டினால். இதற்கு மேல் இங்கே இருந்தாள் நம் தலை உருளும் என்று எண்ணிய சுந்தரம் அலுவலகம் புறப்பட உள்ளே சென்றுவிட்டார்.

சூர்யாவிற்கு கண்ணை காட்டினான் விஷ்வா, ரஞ்சனி வாயை அடக்குமாறு.. நடக்குற விஷயமா அது என்று எண்ணியவன். இருந்தும் பேசினான்.

விடு கிட்டன் பொழச்சு போட்டும் என்று கூறினான். தான் சொன்னால் ரஞ்சி கேட்ப்பால் அனைவரின் முன்பும் அசிங்க படுத்த மாட்டாள் என்று எண்ணி, ரஞ்சனி கீழே கிடந்த டம்பளர்ரை தூக்கி அடித்தால் அவன் மேல். அதோடு வாயை மூடி கொண்டவன் எதிரே உள்ள சோஃபாவில் அமர்ந்து கொண்டு, விஷ்வா குழலியிடம் மாட்டி கொள்வதை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான்

இவன்லாம் குடிச்சா, கண்டதையும் உளறிக்கிட்டு இருப்பான். மனசுல இருக்கறது எல்லாம் வெளிய வரும். உனக்கு எதாச்சும் தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா இவன் குடிச்சு இருக்கும் போது விஷயத்தை கேளு எல்லாத்தையும் சொல்லிடுவான் என்று விஷ்வாவை பற்றி அனைத்தையும் கூறினாள். சிகரெட் கூட புடிப்பான்.. கஞ்சா பழக்கமும் இருக்கு தான என்று ரஞ்சனி மேலும் கொளுத்தி போட..

அடியே மீன் திருடி, எங்க ரெண்டு பேருக்குள்ள சண்ட வர வைக்க பாக்குறியா என்று அவள் அருகே சென்று அவள் கையை பிடித்து கொண்டு தலையில் நங்கு நங்கு என்று கொட்டினான் விஷ்வா.

குழலி கலங்கிய கண்களுடன் விஷ்வாவை பார்க்க, ஹேய் இவ சொல்றத எல்லாம் நம்பாத டி.. இவ ஒரு ஃப்ராடு நம்மள பிரிக்க பார்க்குறா என்றான். அப்போ உங்களுக்கு எந்த கெட்ட  பழக்கமும் இல்ல தான என்று எதிர்பார்போடு கேட்டவளை பார்க்க அவனுக்கும் ஒரு மாதிரி ஆக தான் இருந்தது இருந்தும் பொய் சொல்ல விரும்பாதவன் லைட்டா குடிப்பன் டி எப்பவாச்சும் என்று உண்மையை கூறினான்.

குழலி முகம் வாடிவிட்டது.

உன்ன போடி என்றவன் ரஞ்சனி முதுகுலயே மொத்திவிட்டு மேலே ஓடினான் அவன் மனைவியை காண.. அறையில் பூரணி பாப்பா எழுந்துவிட்டிருந்தால். குழந்தை இப்போது நன்றாக நடக்க துவங்கி விட்டதால், அவள் கை எட்டும் தூரம் குழந்தைக்கு ஆபத்து தரும் எந்த பொருளையும் வைப்பது இல்லை விஷ்வா.

குழலி ஏதாவது தவறுதலாக வைத்து விட்டாலும், பாரபட்சம் இன்றி அவளுக்கும் திட்டுக்கள் கிடைக்கும் விஷ்வாவிடம் இருந்து. ஏனென்றால் பூரணி எதை கண்டாலும் எடுத்து வாயில் போட்டு கொள்கிறாள்.

குழந்தை எழுந்ததை கண்ட, குழலி செல்ல குட்டி எழுந்துட்டிங்களா? ஏன் அம்மாவை கூப்பிடல? கண்ணு குட்டி போல அம்மாவ கூப்புடுவிங்களே ஏன் கூப்பிடல என்று கிள்ளை மொழியில் குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தாள்.

விஷ்வா உள்ளே வர, குழந்தை ப்பா ப்பா என்று தகப்பனிடம் தாவியது. பட்டு குட்டி எந்திரிச்சிட்டிங்கல்லா? என்று குழந்தையை தூக்கி சுற்றினான்.

குழலி அமைதியாக நிற்க, எதுவா இருந்தாலும் கேளு டி, மனசுலயே வச்சிட்டு இருக்காதா.

நான் என்ன கேப்பன்னு உங்களுக்கு தெரியாதா உதட்டை சுழித்தாள்..

எப்பவாச்சும் லைட்டா ட்ரிங்க் பண்ணுவன் டி.. ரஞ்சனி சொல்ற அளவுக்கு மொடா குடிகாரன்லாம் இல்ல. உன் புருஷன் எவ்ளோ டீசென்ட் ஃபெல்லொன்னு உனக்கு தெரியாதா என்றான் அவள் இடை இறுக்கி அவளை தன் நெஞ்சோடு முட்ட வைத்து..

ஹ்ம்ம் ரொம்ப நல்லா தெரியும் என்று அவளும் ஒரு மார்க்கமாக சொல்ல. அப்பறம் என்ன டி என்றவன் குரலில் தாபம் வழிந்து அவளை முத்தமிட நெருங்கினான். என்ன வச்சிக்கிட்டு என்ன வேலை பாக்குறிங்க ரெண்டு பேரும் என்று நினைத்தாளோ என்னவோ பூரணி பாப்பா தந்தையின் முகத்தை தட்டி தட்டி கவனத்தை அவள் புறம் திருப்பி கொண்டாள்.

அப்பா உனக்கு தான் செல்ல குட்டி உம்மா குடுக்க வந்தன், உன் அம்மா தான் என்னனமோ பண்ணி என்ன மயக்குறா என்று குழந்தையிடம் குற்ற பத்திரிகை வாசித்து பால்கனிக்கு அழைத்து சென்றான். குழலியும் பின்னால் சென்றால். கடைசியா எப்போ குடிச்சீங்க விஷ்வா?

ஹ்ம்ம் யோசித்தவன், நம்ம ஆபீஸ் பார்ட்டி அட்டென்ட் பண்ணோம்ல அப்போ தான். சரி ஓகே இனிமேல் சோசியல் ட்ரிங்க்ஸ் கூட இருக்க கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறினாள் குழலி. அவள் சந்தோஷம் தானே அவனுக்கு முக்கியம். சரிங்க பொண்டாட்டி என்று குறும்பாக கூறினான்.

அதே மாதிரி ஸ்மோக் பண்ணவும் கூடாது.. ஹேய் அது டென்ஷன்னா இருக்கும் போது அப்போ அப்போ பண்ணுவன் டி. என்ன டென்ஷன் உங்களுக்கு? அதான் நைட் வரும் போதே வொர்க் பிரஷர்டின்னு சொல்லி ஒரு நாள் தவறாம என்ன பிச்சு திங்கறீங்கள அப்பறம் என்ன?

ஆமா நான் மட்டும் தான் காரணம் பாருபிச்சு திங்க, நான் வந்ததும் ஓடி வந்து கட்டி புடிச்சு என்ன உசுப்பேத்தி விட்டுட்டு இப்போ என்ன மட்டும் குறை சொல்ற? பாரு நல்லா பாரு என்று அவன் டிஷர்ட்டை விளக்கி அவன் மார்பை காட்டினான். அங்கே குழலி ஏற்படுத்திய காயங்கள் பல இருந்தன. எல்லாத்தையும் என்கூட போட்டி போட்டு செஞ்சிட்டு இப்போ என்ன மட்டும் கொற சொல்ற.. என்று பேசி பேசியே அவளை சிவக்க வைத்தான்.

சரி அத விடு, நேத்து மூணாவது ரவுண்டு நீ தான கூப்பிட்ட, நான் டயர்ட்டா இருக்குடின்னு சொன்னதுக்கு நீ என்ன பண்ணன்ணு நியாபகம் இருக்கா என்று கேட்டான்..

அவ்வளவு தான் குழலி முகம் குப்பேன்று சிவந்துவிட்டது, சொல்ல கூடிய காரியத்தையா அவள் செய்தால்? இப்போது எல்லாம் விஷ்வாவிற்கு இணையாக அவளும் அவனுடன் சரசமாடுகிறாள், அவளை அந்த அளவிற்கு அவனோடு இயல்பாக்கி இருந்தான் விஷ்வா. அதற்கு மேல் அவனை பேச விடாமல் வாயில் கைவைத்து மூடி, ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க என்று கெஞ்சினால்.

சரி அப்போ ஒரு முத்தம் குடு அப்போ தான் நீ செஞ்ச எதுவும் சொல்ல மாட்டன். அவனை முறைத்து பார்த்தாள் அவனவள்..

குடு டி, என்று மந்தகாசமாக சிரித்து. குழந்தையை கீழே இறக்கி விட்டு இருந்தான். அவள் முத்தத்தை பெறுவதற்கு தயாராகி.

குழலி அவன் அருகே வந்து, டிஷர்ட்டை விளக்கி அவள் காயம் செய்த இடங்களில் ஈர முத்தங்களை வைத்தால். அவன் அவளிடம் கண் மூடி மயங்கி நின்ற நேரம், அவள் முத்தங்களை முடித்து உள்ளே செல்ல போனாள்.. அவள் கைகளை பிடித்து நிறுத்தினான். குழலி திரும்பி பார்க்க இனிமேல் ஸ்மோக் பண்ண மாட்டன் டி.. உனக்காக. அந்த நேரம் அவன் கண்களில் காதல் மட்டுமே கொட்டி கிடந்தது.

குழலிக்கு அவ்வளவு மகிழ்ச்சி, வேகமாக வந்து அவனை அனைத்து கொண்டு, அவன் கேட்காமலே முத்தங்களை கொடுத்தாள்.

இங்கு சூர்யா ரஞ்சனியின் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்து இருந்தான்.

 

 

 

 

 

 

63. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ஷிவா இன்னைக்கு லீவு போடுறிங்களா என்று கொஞ்சினால் குழலி..

எதுக்கு லீவு மதியம் நீ ஆபீஸ் போக போற.. நான் மட்டும் வீட்ல இருந்து என்ன பண்றது? வேணும்னா நீயும் லீவு போடு நான் லீவு போடுறன்.

நோ எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னைக்கு ஆபீஸ் போகணும், வேணும்னா நீங்களும் என்கூட ஆபீஸ் வாங்களன் என்றால்.

அங்க வந்து நான் என்ன பண்றது?

எனக்கு கொஞ்சம் சந்தேகம்லாம் இருக்கு. Erp சாஃப்ட்வேர்ல, அதல தான் இன்வொய்ஸ் ரெடி பண்ணி கஷ்ட்டமர்க்கு அனுப்பனும் அப்பறம் சாம்பிள் எல்லாம் அப்லோட் பண்ணனுமாம். வந்து சொல்லி குடுங்களன் என்றால் கொஞ்சி கொண்டே..

டவுட் கிளியர் பண்ணனுமா? என்று கேட்கும் போதே குரலில் அவ்வளவு குறும்பு எட்டி பார்த்தது விஷ்வாவிற்கு.

நீங்க கேக்குற விதமே சரியில்லை என்று அவனை முறைத்தால் குழலி.

குழலியை பின்னோடு கட்டி கொண்டவன், உனக்கு நியாபகம் இருக்கா குழலி. ஃபர்ஸ்ட் டே நீ ஆபீஸ் போகும் போது நான் வந்து உனக்கு எல்லாமே சொல்லி குடுத்தனே என்று சொல்லும் போதே அன்றைய நாளில் கன்னம் சிவந்தால் குழலி. ஆனா அன்னைக்கு நாம லவ் தான் பண்ணோம், சோ எதையும் டீப்பா அனுபவிக்கல.

அவன் கையில் இருந்து விலகியவள், நீங்க லீவே போட வேண்டாம். ஆபீஸ் போங்க என்று அவனை பிடித்து தள்ளினால்.

போடி, சும்மா இருந்தவன உசுப்பேத்தி விட்டுட்ட நான் இப்போ லீவு போடுற மைண்ட் செட்டுக்கு வந்துட்டன் என்று கூறியவன், பாப்பா சாப்பிட்டாலா டி? என்றான் மனைவியிடம்.. ஹ்ம்ம் நீங்க குளிச்சிட்டு இருக்கும் போது தான் ஊட்டிவிட்டன். சரி இரு வரன் என்றவன் குழந்தையை தூக்கி கொண்டு தந்தையிடம் சென்றவன், அப்பா பாப்பாவ நீங்க ஆபீஸ் கூட்டிட்டு போங்க.. குழலிய கூட்டிட்டு நான் மதியமா ஆபீஸ் வரன் என்றான்.

சரி ஓகே, பொறுமையா வாங்க என்றார் மகனின் மனம் புரிந்தவறாக. பூரணி பாப்பாவும் தாத்தாவோடு சேர்ந்து கொண்டு வெளியே செல்வதில் உற்சாகமாகினால்.

நாலு கால் பாய்ச்சலில் மேலே சென்றவன், குழலியோடு அவன் பொழுதுகளை இன்பமாக கழித்தான்.

*****

இங்கு சூர்யா, ரஞ்சனியின் பின்னே சுற்றி கொண்டு இருந்தான். பேசு டி சாரி டி என்று..

உனக்கு வெட்கமா இல்ல.. நைட்டு அவ்ளோ பேச்சு பேசிட்டு இப்போ வந்து கெஞ்சிட்டு இருக்க என்று காரி துப்பினாலும், துப்பனா தொடச்சுக்குவன் என்ற ரேஞ்சில் அவள் பின்னேயே அவளின் துப்பட்டாவை பிடித்து கொண்டு சுற்றினான்.

இப்போ நான் என்ன பண்ணா என்கிட்ட பேசுவ கிட்டன் என்று பொறுமை இழந்தான்..

இடுப்பில் கை வைத்து சூர்யாவை பார்த்தவள், அன்னைக்கு விஷ்வாக்கு ஒரு ஐடியா குடுத்துயே அத இப்போ என்கிட்ட எக்சிகியுட் பண்ணு.

என்ன ஐடியா என்று யோசித்தான்.. எத சொல்றா இவ?

என்னனு தெரிலயா?

அதான் எங்க வீட்ல இருக்கும் போது விஷ்வாகிட்ட சொன்னியே சாஷ்ட்டாங்கமா குழலி கால்ல விழுந்துடுன்னு..

கொஞ்சம் ஜர்க் ஆனவன், உனக்கு எப்படி நான் பேசுனது தெரியும்..

காதை தேய்த்து கொண்டே கூறினாள்.. ஒட்டு கேட்டன் என்று.

என்ன சும்மா கேள்வி கேக்குற?? இப்போ கால்ல விழுவியா மாட்டியா என்று மெத்தையில் அமர்ந்து கொண்டு கால் மேல் போட்டு காலை ஆட்டி கொண்டு இருந்தாள் ஆட்டியவள்.

அவளை முறைத்து பார்த்தவன் எல்லாம் என் நேரம் டி என்று காலில் விழ செல்ல.. ஹேய் வெயிட் வெயிட் என்ன கால்ல விழ ரெடி ஆகிட்டியா என்று கேட்டாள்..

வேற வழி என்று சலிப்பாக கூறினான். ஹய்யோடா அவ்ளோ சலிச்சுக்கிட்டுலாம் என் கால்ல விழ வேண்டாம் போ போ, என்று சொல்லி நகர பார்க்க.. ஹய்யோ என் செல்ல குட்டி உன் கால்ல விழ நான் சலிச்சுப்பனா டி, பெண்ணின் காலில் தான் சொர்க்கமே இருக்குன்னு யாரோ சொல்லி கேள்வி பட்டு இருக்கன்.. அதே மாதிரி என் சொர்க்கமே உன் கால்ல தான் டி இருக்கு என்று கூறி அவள் காலில் விழ சென்றான். அவனை கேவலமாக பார்த்தாள் ரஞ்சனி. சூர்யா அதை கண்டு கொள்ளாமல் அவள் காலில் விழ செல்ல.

ரஞ்சனி, அட இருடா.. ஒரு பொசிஷன்க்கு வந்து நிக்கறன் என்று கட்டிலில் இருந்து எழுந்து நின்றவள் கையில் போனை எடுத்து கொண்டாள். ஹ்ம்ம் ஸ்டார்ட் கால்ல விழு என்று கிழக்கு திசை வேறு பார்த்து நின்று கொண்டாள்.

சூர்யா அவள் சொன்னது போல், அவள் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தான். அது அப்படியே சூர்யாவின் கை பேசியில் புகைப்படமாக மாறியது.. அவனுக்கே தெரியாமல். ரஞ்சனியின் போனை தான் உடைத்து விட்டானே. அதனால் அவன் போனை எடுத்து அதில் அவனுக்கு தெரியாமல் புகைப்படத்தை எடுத்து கொண்டு அதை லாக் செய்து வைத்து கொண்டாள்.

காலில் விழுந்தவன் சும்மா இல்லாமல், அவளின் குட்டி குட்டி பெடிக்கியூர் செய்த விரல்களுக்கு முத்தத்தை கொடுக்க ரஞ்சனிக்கு தான் உணர்வுகள் மேல் எழுந்தது.

தன்னை சமாளித்து கொண்டவள், ஹேய் போதும் எழுடா. இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேப்ப நீ..

எழுந்து நின்றவன், நான் பாய்யோடு சேர்த்து உன்னையும் கேப்பன் டி என்றான் கண்ணடித்து..

ராங்கிகாரிக்கு, முகம் சிவந்துவிட்டது. அவள் அங்கிருந்து நகர முயல, அவள் கைபிடித்து நிறுத்தியவன் கிட்டன் என்றான் உருகி வழியும் குரலில், அவன் குரல் மாற்றமே அவளுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது.

ஹ்ம்ம் என்றால் கஷ்ட்டப்பட்டு குரலை சாதாரணமாக வரவைத்து.

நாம நம்ம லைப் ஸ்டார்ட் பண்ணலாமா டி? எனக்கு ஆசையா இருக்கு என்றான்.. அவன் கண்களில் அவ்வளவு ஆசை மற்றும் எதிர்பார்ப்பு.

அவள் தயங்கி நின்றாள். ஏன் தயங்குகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை ஏதோ ஒன்று தடுக்கிறது.

அவள் தயக்கம் அவனுக்கு வலித்தது. எதுவும் பேசவில்லை. அவளை அனைத்து கொண்டு நெற்றி முத்தம் கொடுத்தான். சரி இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று அவளுக்கான நேரத்தை கொடுத்து கண்ணியம் காக்க நினைத்தான்.

அவன் அவளை விட்டு பிரிய, அவன் சட்டையை பிடித்து நிறுத்தினால், என்ன எதுக்கு சூர்யா இவ்ளோ லவ் பண்ற? நான் உனக்கு ஒழுங்கான பொண்டாட்டியா கூட நடந்துக்கல, உன்கிட்ட சண்டை போடுறன். நேத்து கூட வேற ஒருத்தன பத்தி பேசி உன்ன கஷ்ட்டப்படுத்துனன்..
உன்ன தவிர நான் வேற ஆம்பளைய பத்தி பேசுனா பைத்தியம் புடிச்சா மாதிரி கோவப்படுற. ஆனா உன் கோவத்துலயும் உன் காதல் தான் சூர்யா எனக்கு தெரியுது..

இப்போ என் கால்ல விழ சொல்றன் கொஞ்சம் கூட தயங்காம விழற. இப்போ கூட உன் ஆசைய மறைக்காம என்கிட்ட கேட்ட, லைப் ஸ்டார்ட் பண்ணலாமான்னு நான்  அதுக்கு கூட சம்மதிக்கலயே. ஆனா நீ இப்பவும் என்மேல கோவப்படாம எனக்கு தேவையான டைம் குடுக்குற. உனக்கு என்ன டா பிரச்சனை?

என்ன ஏண்டா இவ்ளோ லவ் பண்ற? நான் உனக்கு அப்படி எதுவும் பண்ணலயே என்றால்.

அவள் கன்னம் வழிந்த ஒரு துளி கண்ணீரை துடைத்து விட்டவன், நீ எப்போ என் மனசுக்குள்ள வந்தியோ அப்போவே நீ தான் டி எனக்கு எல்லாமே.. உன்மேல கோவம் இருந்துச்சு தான். என் லவ்வ கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாற்றாலேன்னு. கூடவே மாமா பார்த்த அந்த ஷங்கர் b***h அவன நீ கல்யாணம் பண்ணி இருந்தா உன் வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்ன்னு ஒரு பயமும் இருந்துச்சு. அதெல்லாம் சேர்ந்து தான் கல்யாணம் ஆன புதுசுல உன்மேல கோவப்பட்டுடன் டி.

உன்மேல நம்பிக்கை இல்லமா இல்ல. என் லவ் நீ தான் உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

நான் ஒன்னு கேக்கவா?

கேளு டி.

ஒருவேளை எனக்கு அந்த ஷங்கர் கூட மேரேஜ் ஆகி கொஞ்சம் வருஷம் கழிச்சு அவன் கெட்டவன்னு உண்மை தெரிஞ்சு இருந்தா என்ன பண்ணி இருப்ப சூர்யா.

இவ்ளோலாம் யோசிக்காத கிட்டன். அவன் உத்தம புத்திரன் ஏன் அந்த ஸ்ரீ ராம சந்திரன் மாதிரி நல்லவனாவே இருந்தாலும் அவன உன் கழுத்துல தாலி கட்ட விட்ருக்க மாட்டன் டி. ஏன்னா இந்த கிட்டன் எனக்கு மட்டும் தான் என்றிருந்தான்.

அவள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். ஆனா நீ அவன் கெட்டவன்னு தெரிஞ்சதுனால தான் எனக்கு அவன் கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி என்ன கல்யாணம் பண்ணிகிட்டன்னு நெனச்சன்.. என்று அதிர்ச்சி குறையாமல் திக்கி திணறி கூறி முடித்தால்.

அது "பிளான் ஏ " கிட்டன், மத்தவங்களோட கண் துடைப்புகாக தான். "பிளான் பி " உன்ன தூக்கிட்டு போய் கல்யாணம் பண்றது தான் என்று கண்ணடித்தான்.

எனக்கு ஹீரோவ விட வில்லன் தான் டி புடிக்கும். காதலிச்ச பொண்ண எங்க இருந்தாலும் நல்லாயிருன்னு வாழ்த்துற அளவுக்கு நான் நல்லவன் இல்ல டி. எனிதிங் இஸ் ஃபர் இன் லவ் அண்ட் வார் (anything is fair in love and war) என்று வில்லத்தனமாக சிரித்தான்.

அவன் காதலில் பெண்ணவளுக்கு உள்ளுக்குள் குளிர்ந்தாலும், அவனின் இத்தகைய காதலை பார்க்கும் போது கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

அவளது அதிர்ச்சி கலந்த முகத்தை பார்த்தவன். சில் கிட்டன். வா டைம் ஆகுது ஆபீஸ் கிளம்பலாம் என்று கையோடு அழைத்து சென்றான். ரஞ்சனியை அவள் வேலை செய்யும் வங்கியில் இறக்கி விட்டவன், வண்டியை யூடர்ன் போட்டு அவன் அலுவலகத்திற்கு சென்றான்.

இங்கு சரியான நேரத்திற்கு குழலியும் விஷ்வாவும் சுந்தரம் அலுவலகம் சென்றனர். குழலி அலுவலகம் வந்ததும் மகளை அவள் கேபினிற்கு அழைத்து வந்து, குழந்தைக்காக கொண்டு வந்த உணவை கொஞ்சி கொஞ்சி ஊட்டிவிட்டாள். அன்றைய பொழுதும் விஷ்வா குழலிக்கு ஒரு வித உற்சாகத்துடனே சென்றது.

நாட்கள் இரு ஜோடிகளுக்கும் அழகாக சென்றது. விஷ்வா குழலி எப்போதும் ஒட்டி கொண்டு இருந்தனர். அவர்களின் இரவு மோக தீயால் பற்றி எரிந்தது.

சூர்யா ரஞ்சனி அவர்களின் வாழ்க்கையை இன்னும் துவங்கவில்லை என்றாலும், காதல் பைத்தியம் பிடித்தவன் அவ்வப்போது அவளை மயக்கி மெயின் கோர்ஸ் இல்லாமல் ஸ்டார்டர்ஸ் மட்டும் சாப்பிட்டு கொள்வான்.

இதுக்கு இவன் எல்லாத்தையும் பண்ணி இருக்கலாம் என்று அவளுக்கு தோன்ற வைத்து விடுவான் சூர்யா.

விஷ்வா அவன் அலுவலக ப்ராஜெக்டை நன்முறையில் முடித்துவிட்டு, ஒரு மாதம் விடுமுறை எடுத்து கொண்டான். ஏதாவது அவசர வேலை என்றால் வீட்டில் இருந்தே சப்போர்ட் செய்வதாக கூறி விட்டான் மேலிடத்தில்.

அடுத்த நாள் காலையே வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி கொண்டு மனைவி மகளை கடத்தி சென்று விட்டான். வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று. குழலியை தவிர, அவள் விஷ்வாவிடம் காரில் செல்லும் போது கேட்டு கேட்டு சலித்துவிட்டாள். போடா நீ சொல்லவே வேண்டாம் என்றவள் அவன் மார்பிலே உறங்கிவிட, விமான நிலையம் வந்த பின்பு தான் அவளுக்கு தெரிந்தது விஷ்வா அவளை அவள் ஊரிற்கு அழைத்து செல்கிறான் என.

மகிழ்ச்சியில் துள்ளி குதித்தால் குழலி. விமான நிலையம் என்றும் பாராமல், குழந்தையோடு நின்று கொண்டிருந்த விஷ்வாவை தாவி அனைத்து கொண்டு, கன்னத்தில் முத்த மாரி பொழிந்தால்.

அவளின் திடீர் செயலில் திக்கு முக்கு ஆடி போனான் விஷ்வா. அவளின் முகத்தில் இந்த மகிழ்ச்சியை பார்க்க தானே அவனவள் எவ்வளவு கேட்டும் எதுவும் சொல்லாமல் அழைத்து வந்தான்.

இருவரும் விமானத்தில் கோயம்புத்தூர் வந்து இருந்தனர். அங்கிருந்து வாடகை காரை ஒரு மாதத்திற்கு விஷ்வா புக் செய்து இருக்க அடுத்த 6 மணி நேரத்தில் விஷ்வா குழலியின் வீட்டை அடைந்து இருந்தான். அவர்கள் வருவது அவள் அம்மாவிற்கு கூட தெரியாது. விஷ்வா தான் கூற வேண்டாம் என்று சொல்லிவிட்டான். மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டி.

அவர்களை பார்த்த முத்தரசி, அவர் வயதையும் மறந்து துள்ளி குதித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

64. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+
கொஞ்சம் 18 + பிடிக்காதவர்கள் கடந்து விடவும்


வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் யாரென பார்த்த முத்தரசி, உள்ளிருந்து இறங்கிய மகள் மருமகன் மற்றும் பேத்தியை பார்த்ததும் அவர் வயதை மறந்து உற்சாகமாக ஓடி வந்தார்.

குழலிமா என்றவர் மகளை அனைத்து கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தார். பின் விஷ்வாவிடம் திரும்பி வாங்க தம்பி வாங்க என்று மரியாதையாக உள்ளே அழைத்து சென்றவர் அவனிடம் இருந்து குழந்தையையும் வாங்கி கொண்டார்.

அவர்களின் திடீர் வருகையில் கொஞ்சம் பரபரப்பாக இருந்தார். என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அவருக்கு.

தாயின் நிலை உணர்ந்த குழலி அம்மா நீ அவர்கிட்ட பேசிட்டு இரு நான் காஃபி போட்டு கொண்டுவரன் என்று அடுக்களை சென்றால். அச்சோ வேண்டாம் குழலிமா நீ ஓய்வெடு, அவ்ளோ தூரம் பயணம் பண்ணி வந்துருக்க நான் உனக்கு காபி தண்ணி கொண்டு வரன் என்று வலுக்கட்டாயமாக மகளை அமர வைத்துவிட்டு இருவது நிமிடத்தில் அவர்களுக்கு காஃபியும் சிற்றுண்டியாக சுட சுட வெங்காய போண்டாவையும் கொண்டு வந்து கொடுத்தார்.

எதுக்கு அத்தை இதெல்லாம் செஞ்சிகிட்டு? நம்ம வீட்டுக்கு நான் வந்து இருக்கன் என்ன விருந்தாளியா பார்க்காதீங்க என்று உரிமையாக பேசினான்.

குழலிக்கு அவன் வார்த்தைகாளை கேட்டதும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இதை தானே அவள் அவன் கணவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். மாப்பிளை முறுக்கு காட்டாமல், எங்க அம்மா கிட்ட அவர் உரிமையா பேசணும், மகன் மாதிரி பார்த்துக்கணும் என்று.

இன்று அவளுக்காக அல்லாமல் உள்மனதில் இருந்து விஷ்வா, முத்தரசியிடம் மகன் போல் உரிமையாக பேசுவது அவளுக்கு பிடித்து இருந்தது.

பின் அனைவரின் நல விசாரிப்புகள் முடிந்ததும், அந்த வீட்டில் இருந்த ஒற்றை படுக்கையறையை சுத்தம் செய்ய சென்றார் முத்தரசி. குழலி நீ போய் அத்தைக்கு ஹெல்ப் பண்ணு நான் பாப்பாவ வச்சுக்குறன் என்றவன் குழலியிடம் இருந்து குழந்தையை மாற்றி கொண்டான் அவன் கைகளுக்கு.

குழலி அந்த அறைக்கு சென்று, அம்மா நீ போமா, நான் கிளீன் பண்றன் என்றவள், பல பேச்சு வார்த்தைகளுக்கு பின் அன்னையை வெளியே அனுப்பி அந்த அறையை சுத்தம் செய்தால்.

இங்க இருக்கும் போதுலாம் நான் வேல செய்யலன்னு சொல்லி திட்டுவாங்க.. இப்போ நானே வேலை செய்றன்னு சொன்னாலும் என்ன எந்த வேலையும் செய்ய விட மாற்றங்க என்று புலம்பி கொண்டே, அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் குழலி.

சின்ன அறை, பத்துக்கு பத்தை விட சிறியதாக இருக்கும். அரை மணி  நேரத்தில் அந்த அறையை விஷ்வாவிற்கு பிடித்தது போல் மாற்றியிருந்தால் குழலி.

அங்குள்ள இரும்பு கட்டிலில் கண்டிப்பாக இருவரும் உறங்க போவது இல்லை. சத்தம் போட்டு அவர்கள் நிலையை காட்டி கொடுத்து விடுமே.

கண்டிப்பா ஷிவா என்ன விட்டு இருக்க மாட்டாரு, என்று நினைத்து கொண்டவள் கன்னத்தில் ஏற்படும் குறுகுறுப்பை மறைக்க உதட்டை கடித்து கொண்டாள்.

பின் வேக வேகமாக அந்த அறையை கூட்டி பெருக்கி பழைய பொருட்களை ஒதுக்கி அந்த அறையில் இன்னும் கொஞ்சம் இட வசதியை ஏற்படுத்தி இருந்தாள்.

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு விஷ்வாவை உள்ளே அழைத்தாள். உள்ளே வந்தவனின் பார்வை அந்த இரும்பு கட்டிலிர்க்கு செல்ல, குழலி நாம கீழ போர்வைய விரிச்சு அதல படுத்துக்கலாம் டி என்றான் ஆழ்ந்த குரலில். நமட்டு சிரிப்பு சிரித்தவள் எனக்கு தெரியும் நீங்க இப்படி தான் சொல்விங்கன்னு என்றால்.

பின் கதவை லேசாக மூடி விட்டு, அவளை கதவு பக்கம் உள்ள சுவற்றில் சாய்த்து, இதழ் கொய்ய துவங்கினான். மேல் உதடு கீழ் உதடு என இம்சித்தவன் அவளின் நாவையும் விட்டு வைக்கவில்லை. உயிர் துஞ்சும் முத்தமதை கொடுத்து அவளை துவள வைத்தான். முத்தத்தோடு நிறுத்தி கொள்ளலாம் என நினைத்து தான் தாரம் அவளை நெருங்கினான். ஆனால் அது முடியாமல் போக, மனைவியிடம் ரகசியம் பேசினான் குழலி ஒரு குயிக் லன்ச் சாப்பிடலாமா என்று..

நீள விழிகளை விரித்தால் குழலி. நோ ஷிவா எதுவா இருந்தாலும் நைட் பார்த்துக்கலாம். இப்போ அம்மா இருக்காங்க இது ரொம்ப சின்ன ரூம் சத்தம் கேக்கும் என்றாள்.

அதலாம் கேக்காது டி ப்ளீஸ் கோப்பரேட் பண்ணு டி என்றான்.. அடடா உங்க கிட்ட வம்பா போச்சு போங்க ஷிவா என்று மன்னவன் பிடியில் இருந்து நழுவ பார்க்க, அவளை நகரவிடாமல் தடுத்தவன் குழலி ப்ளீஸ் டி என்று கூறி, அவனை போல் அடங்காமல் வளர்ந்து நிற்கும் அவன் உடன் பிறந்தவனை அவள் கைகளில் உணர்த்தினான். குழலி ஹய்யோ என்று முகத்தை மூடி கொண்டாள்.. அவளின் வெட்கமும் சிணுங்களும் அவன் உணர்வுகளுக்கு இன்னும் ஜதி கூட்டியது.. அவளின் கார் மேக கூந்தலுக்குள் விரல்களை நுழைத்தவன், ப்ளீஸ் டி என்று கிறக்கமாக கெஞ்சி உதட்டில் முத்தம் வைத்தான். கசகசன்னு இருக்கன் ஷிவா என்று அவளின் வேர்த்த தேகத்தை காட்டினால்.

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

என்று பாட்டாக பாடி அவள் கேள்விக்கு பதில் கூறினான் விஷ்வா.

கணவனை அதற்க்கு மேல் கெஞ்ச விடாமல்.. அவனுக்கு அவசர விருந்தாக மாறினால் மனைவியானவள். கதவை தாழிட்டு வந்தவன், அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து, அவளை தன் மீது அமர்த்தி கொண்டு, அவளின் கை வளையல்கள் மற்றும் கால் கொலுசுகளை கழட்டி வைத்தான்.

அவன் அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, குழலியை அவன் கைப்பாவையாக ஆட்டுவித்தான். புதிய நிலையில் முதலில் தடுமாறிய குழலி, பின் விஷ்வா கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு சொல்லி கொடுக்க அது போல் செய்தால். பாடத்திலும் சரி, இல்லறத்திலும் சரி அவனே அவளுக்கு முதல் ஆசான். முழுதாக உடை கலையாமல் கொண்ட அவசர கூடலில், அவளின் சொக்கி நிற்கும் முன்னழகு அவனுக்கு இலைமறை காய் மறையாக தாகம் தீர்த்தது.

இருவது நிமிடம் கழித்து தான் இருவருக்கும் , அனைத்தும் திவ்யமாக முடிந்தது. குழலி அவனின் நான்கு பொத்தான்ங்கள் கழட்டி விடப்பட்ட அவன் வெற்று மார்பை கட்டி கொண்டு, கழுத்து வளைவில் மூச்சு வாங்க சாய்ந்து கொண்டாள்.

உங்களுக்கு ஹாப்பியா என்று கண் மூடி கொண்டே அவன் காதோரம் கிசுகிசுத்தால் வதனியவள், நீ என் சொர்க்கம் டி என்றான் அவளின் கேள்விக்கு ஒற்றை பதிலாக. இன்னும் அவனை இறுக்கி கொண்டாள்.

அவன் கழுத்து வளைவை கிறக்கமாக கடித்து வைத்தால்.. அவனும் கைகளுக்கு வேலை கொடுத்து அவளின் மோக கடியில் மயங்கினான்.

சரி போய் குளிச்சிட்டு வாங்க, ரொம்ப நேரம் கதவு மூடியே இருந்தா சங்கடமா இருக்கும் என்றவள் அவன் மீது இருந்து எழுந்து நின்றாள், அவழ்ந்து இருந்த அவளின் ரவிக்கை கொக்கிகளை போட்டு கொண்டே..

அவளை மீண்டும் தன் பக்கம் இழுத்தான் விஷ்வா, குழலி அவனை மிரண்டு போய் பார்க்க.. அதில் உல்லாசமாக சிரித்த விஷ்வா அவளுக்கு நெற்றில் முத்தம் வைத்து அவன் அவிழ்த்த அவளின் கை வளையல்களை போட்டுவிட்டு, கீழே முட்டி கால் இட்டு அவளின் வாழை தண்டு கால்களுக்கு கொலுசை மாட்டிவிட்டு, கால்களில் முத்தம் வைத்தான்.

அவனின் கூடல் எப்போதும் முழுமையடையும் இடம் அவளின் கால்கள் தான்.

சரி கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு நான் குளிச்சிட்டு வரன் என்றவன் வெளியே உள்ள குளியல் அறைக்கு சென்றான்.

அவர்கள் வீட்டு குளியல் அறை அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது.. சுத்தமாக இருக்கும் தான் ஆனால் வசதி? தண்ணீர் கிணற்றில் இருந்து எடுக்க வேண்டும், என்று வேகமாக வெளியே வந்தாள் குழலி. விஷ்வாவிற்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து எல்லாம் பழக்கம் இல்லையே அதனால் அவனுக்கு உதவ வேண்டி.

சிமெண்ட் ஓடினாள் ஆனா குளியல் அறை. அதன் பக்கத்திலே கழிவறையும் தனியாக தடுத்து இருந்தது..

ஐந்து மூங்கில்களை கொண்டு செய்யப்பட்ட, அலுமினிய தகட்டினால் ஆன கதவு. குளியல் அறை ப்லீசிங் பவுடர் போட்டு சுத்தமாக கழுவியே இருந்தது.

விஷ்வா அங்குள்ள வாளியை கொண்டு வந்து கிணற்றடியில் வைத்து கயிறு கட்டிய வாளியை கிணற்றுக்குள் இறக்கினான்.

அதற்குள் குழலி அங்கு வந்துவிட, ஷிவா தள்ளுங்க நான் தண்ணிய எடுத்துதரன் என்றால்.

அதலாம் வேண்டாம் டி, நான் பார்த்துக்குறன் நீ போ. அச்சோ விஷ்வா நான் சொல்றத கேளுங்க என்றால். தெரியாத வேலையை செய்து கஷ்ட்டபடுகிறானே என்ற தவிப்பு அவளுக்கு.

நகரு டி, என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இருப்பக்க இடையில் கை கொடுத்து தூக்கி அவளை தள்ளி நிற்க வைத்தான் விஷ்வா, பின் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வாலியில் நிரப்பி வைத்தான். அங்கு காலியாக இருந்த இன்னும் இரண்டு மூன்று வாலிகளையும் சேர்த்து நிரப்பி வைத்தான். ஷிவா உங்களுக்கு கிணத்துல இருந்து தண்ணி எடுக்க தெரியுமா என்று குழந்தை போல் கேட்டவளை, பொய்யாக முறைத்தவன் இது என்ன அவ்ளோ பெரிய கம்ப சூத்திரம்மா டி.. ஹீஈ என்று அசடு வழிந்தால் குழலி.

இருந்தும் நீங்க இதல்லாம் செஞ்சு கஷ்ட்டபட வேண்டாம் ஷிவா, நீங்க எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க உங்கள சௌகரியமா பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு என்றவளை இடுப்பில் கை வைத்து முறைத்தான்.

என்ன ஷிவா எதாச்சும் தப்பா சொல்லிட்டனா என்று அப்பாவியாக கேட்டவளை பார்த்து எப்படி முகத்தில் கோவத்தை கொண்டு வருவது.

குழலி நான் கெஸ்ட் இல்லை. இதுவும் நம்ம வீடு தான். நீ நீயா இரு. என்ன ரொம்ப கவனிக்காத. கவனிக்க வேண்டிய விஷயத்துல மட்டும் வஞ்சனை இல்லாம கவனி டி என்று கண் சிமிட்டி கூறினான் விஷ்வா.

போங்க ஷிவா, என்று கன்னம் சிவந்தால் விஷ்வாவின் மனைவி.

விஷ்வா துண்டை எடுத்து கொண்டு குளிக்க சென்றான். பத்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தான்.

மனைவிக்கும் தண்ணீரை எடுத்து உள்ளே வைத்தான் குளிப்பதற்காக. குளிச்சிட்டு இரு நான் உனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வரன் என்று கூறி விஷ்வா அவர்களுக்கான அறைக்கு சென்று உடை மாற்றி, பின் குழலிக்கும் உடை எடுத்து வந்து அந்த அலுமினிய கதவின் மேல் போட்டான்..

பூரணி பாப்பா, அவள் அம்மம்மாவோடு ஐக்கியமாகி விட்டால். பாட்டி கொடுத்த கைமுறுக்கை அரிசி பற்களில் கடித்து கொண்டே சமையல் அறையில் அம்மம்மாவின் இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தாள்.

குழலியும் குளித்துவிட்டு உள்ளே வர, அதற்குள் முத்தரசி சாப்பாடு சாம்பார் உருளை மசால் அப்பளம், இனிப்புக்காக பாயசம் என செய்து இருந்தார்.

அவன் மாமியாரின் கை பக்குவத்தில், இரவு உணவை நன்றாக சாப்பிட்டான். விஷ்வா எப்போதும் இரவில் அரிசி உணவை எடுத்து கொள்ள மாட்டான். அதுவும் இது வெள்ளை அரிசி கூட இல்லை. சிகப்பு அரிசி தான். சாப்பிடவும் சிரமப்பட்டான்.. அருகில் இருந்த குழலி காதில் ரகசியமாக கிசுகிசுத்தான். குழலி, ஹெவியா சாப்புடுறன் டி, நைட் நல்லா வொர்க் அவுட் பண்ணனும் என்று, அவன் கூறுவதின் அர்த்தம் புரிந்தவள், வெட்க சிரிப்பை மறைக்க இரு கன்னத்தையும் பற்களுக்குள் அடக்கி  கொண்டு அவள் அன்னையை கண்டாள். அவர் குழந்தைக்கு சோறு ஓட்டுவதில் பிசியாகி இருந்தார்.

விஷ்வாவவும் அவன் மாமியாரை கண்டவன், குழலியின் இடுப்பை கிள்ளிவிட்டு அவன் ஒன்றும் தெரியாதது போல் சாப்பிட துவங்கினான்.

 

 

 

 

65. கண்கள் நிறைந்த ஓவியமே!!
விஷ்வா குழலி இருவரும் சோம மங்களம் வந்து ஒரு வாரம் முடிந்து இருந்தது, விஷ்வா அந்த வீட்டில் சில வசதிகளை செய்து கொடுத்து இருந்தான்.

வந்த இரண்டாம் நாளே குழலியை அழைத்து கொண்டு ஊட்டிக்கு வந்து இருந்தான் விஷ்வா.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினான். அந்த ஊரில் சமையல் எரிவாயு வசதி இல்லாததால், இண்டக்ஷன் ஸ்டோவ் ஒன்றை வாங்கினான். அவன் அத்தை விறகு அடுப்பில் சமைப்பதை பார்த்து இந்த முடிவு.

ஒரு ஸ்மார்ட் போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், இப்போது அவர்கள் தங்கியிருக்கும் அறையில் பெரிய கட்டில் போட வசதியில்லாததால், ஒருவர் மட்டும் தாராளமாக படுக்க கூடிய தேக்கு மர கட்டில், மெத்தை போர்வை வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் வாங்கி குவித்தான் விஷ்வா.

குழலி தான் சங்கடமாக உணர்ந்தால். எப்படியும் வீட்டிற்கு சென்றால் மாமியாரை சமாளிக்க வேண்டும், அவரோடு சேர்த்து மனைவியையும் சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்தவன் இப்போது பொருட்களை வாங்குவதில் மட்டும் கவனத்தை செலுத்தினான்.

அவன் அத்தைக்கு, வீட்டில் உடுத்தி கொள்ள வெளியே சென்றால் உடுத்தி கொள்ள என தரமான சேலைகளை வாங்கினான். மாமியாருக்கே வாங்கும் போது மனைவி மகளுக்கு வாங்காமல் விட்டு விடுவானா? அவர்களுக்கும் அழகான ஆடைகளை தேர்வு செய்தான்.

அனைத்தையும் முடித்து வீடு வருவதற்கே இரவு ஆகிவிட்டது. குழலி முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தாள். ஏனோ அவளுக்கு விஷ்வா இதையெல்லாம் செய்வதில் விருப்பம் இல்லை.. தன்மானம் தடுத்தது. வாங்கிய அனைத்து பொருட்களும் நாளை காலையே வீட்டில் டெலிவரி செய்யப்படும் என கடை முதலாளி கூறியிருக்க, அவரின் தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.

முத்தரசி இருவருக்கும் வகை தொகையாக சமைத்து வைத்து இருந்தார்.

சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க சென்று இருந்தனர். நீங்கள் இங்கு இருக்கும் வரை பூரணி பாப்பாவை நானே வைத்து கொள்கிறேன் என முத்தரசி அன்பாக கேட்க, விஷ்வாவும் சரி என்றான்.

அறைக்கு வந்ததும், மனைவியின் வாசம் தேடி சென்றான் விஷ்வா. குழலி அப்போதும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருக்க, முகத்தை நிமிர்த்தி என்ன டி என்றான் கடுப்பான குரலில், அவன் ஆசையாக அவளை நாடும் பொழுது அவள் உணர்வுகளை காட்டாமல் இருந்தாள் கோவம் வரதானே செய்யும்.

உங்களுக்கு தெரியும் நான் ஏன் கோவமா இருக்கன்னு..

பெரிய மூச்சை எடுத்து, அவள் வாசத்தை அவனுள் நிறைத்து கொண்டவன்.. எனக்கு தோணுச்சு செஞ்சன். விஷ்வா கூறியதை தவறாக புரிந்து கொண்டவள், ஓஹ் உங்களுக்கு இங்க எந்த வசதியும் இல்லமா இருக்க கஷ்ட்டமா இருக்கா அதான் உங்க வசதிக்கு ஏத்தா மாதிரி எல்லாத்தையும் வாங்கனீங்களா என்றால்..

விஷ்வாவிற்கு மலைப்பாக இருந்தது, இவ எப்போ தான் என்ன ஒழுங்கா புரிஞ்சிக்க போறா? இவ மூளை ஏன் இப்படி குதர்க்காமவே யோசிக்குது என்று நினைத்தான்.

அவன் முக மாற்றத்தை கண்டு கொள்ளாமல், இதுக்கு தான் சொன்னன், ஒரு வாரம் இருந்துட்டு போலாம்ன்னு.. நீங்க தான் எனக்காக இங்க ஒரு மாசம் தங்கறீங்க. பாருங்க இங்க எந்த வசதியும் இல்லாம உங்களால இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல. இப்போ இவ்ளோ காச வேஸ்ட்டா செலவு பண்ணியிருக்கீங்க என்று பேசி முடித்தால் குழலி.

இவகிட்ட பேசி ஒரு பயனும் இல்லை என்று நினைத்தவன், எப்பவும் போல் தரையில் பாயை விரித்து, அதன் மேல் ஒரு ராஜாயியை விரித்து படுத்து கொண்டான். அவளை பொருட்டாகவும் மதிக்கவில்லை விஷ்வா.

விளக்கை அனைத்துவிட்டு, விஷ்வா அருகில் வந்து அவன் மார்பின் மீது தலை வைத்து கொண்டாள் குழலி.

சிறிது நேரம் கழித்து இப்போ எதுக்கு கோவப்படுறீங்க? நான் என்ன தப்பா கேட்டுட்டன்? அவள் அப்போதும் அவனை புரிந்து கொள்ளவில்லை.

நீ எதுவும் தப்பா கேக்கல சரியா ஒழுங்கா போய் தூங்கு என்ன தொல்லை பண்ணாத. அவன் அத்தை வெளியே உறங்குவதை கருத்தில் கொண்டு பொறுமையாகவே பேசினான்.

எங்க வீட்டுக்கு நீங்க இதெல்லாம் வாங்கி கொடுக்குறது எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு ஷிவா, இதெல்லாம் வேண்டாமே என்றால்.

ஓஹ் உங்க வீடு, சரி நான் யாரு உனக்கு என்றான்?

அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டாள் அவளை தலையணையில் படுக்க வைத்து அவள் பக்கம் திரும்பியவன், அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தியவன் சொல்லுங்க மேடம் நான் யாரு உங்களுக்கு?

இது என்ன கேள்வி? எனக்கும் பாப்பாக்கும் எல்லாமே நீங்க தான என்றால், அவள் வார்த்தை உள்ளுக்குள் மழை சாரலாக குளிர்ந்தாலும், வெளியே முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தவன் இந்த கம்பி கற்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் என்று அவன் முறைக்க, அவன் அடர்ந்த மீசையை பற்றி வலிக்கும் அளவிற்கு இழுத்தவள் நான் கம்பி கற்றனடா சொல்லு நான் கம்பி கற்றனா? உனக்கு தெரியாது எனக்கும் பாப்பாக்கும் எல்லாமே நீதான்னு தெரிஞ்சும் இப்படி பேசுற என்று அவளும் விஷ்வாவுடன் சண்டைக்கு நின்றாள்..

அவள் கையை தட்டிவிட்டவன், எனக்கு ஒரு ஆசை இருக்கு குழலி, என்ன நல்லா புரிஞ்சிக்கணும், எல்லார விடவும் நீதான் என்ன நல்லா புரிஞ்சிக்கணும்ன்னு ஆனா அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு எனக்கு நல்லா தெரிஞ்சி போச்சு..

ஏன் ஷிவா இப்படி சொல்றிங்க?

ஒன்னும் இல்ல அமைதியா தூங்கு.

எல்லாத்தையும் நானே உனக்கு சொல்லி என்ன புரிய வைக்க முடியாது. அந்த மாதிரி சொல்லி தான் நீ என்ன புரிஞ்சிக்கணும்னா நீ என்ன கடைசி வரைக்கும் புரிஞ்சிக்கவே வேண்டாம். ஃப்ரீயா விடு.. என்று கூறிவிட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டான்.

ஷிவா என்று அவன் டீஷர்டை பிடித்து இழுத்தாள் குழலி.

டையர்டா இருக்கு, என்ன தூங்க விடு குழலி என்று திரும்பாமல் பதில் கொடுத்தான்.

அப்போ இன்னைக்கு உங்களுக்கு எதுவும் வேண்டாமா என்று கொஞ்சம் மேல் எழுந்து அவன் காது நுனியை அவளின் கார்ன் பற்களால் கடித்து அவன் கோவத்தை போக்க நினைத்தால். உண்மையில் விஷ்வாவிற்கு மனைவியின் புரிதல் இன்மையில் உணர்வுகள் எழ மறுத்தது.

தொல்லை பண்ணாத குழலி தூங்கு என்றான் சற்று குரல் உயர்த்தி.

ரொம்ப பண்றிங்க என்றவள் அத்தோடு, வாயை மூடி கொண்டு படுத்துவிட்டால்.

நடு இரவில், விஷ்வாவின் இறுகிய அனைப்பில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தாள் குழலியவள்.

சூர்யா.. ரஞ்சனி..

மூன்று நாள் பயணத்திற்கு ட்ரோலியில் உடைகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தான் சூர்யா. முகத்தை உரென்று வைத்து கொண்டு அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள் ரஞ்சனி.

கிட்டன், என்னோட பர்ஃப்யும் தீர்ந்து போச்சு, கப்போர்ட்ல புதுசு இருக்கு எடுத்துக்குடன் என்றவன், துணிகளை மடித்து அடுக்குவதில் கவனம் செலுத்தினான். கடுப்பான ரஞ்சி அவன் கேட்ட பர்ஃப்யுமை எடுத்து அவன் முதுகில் அடித்தால், ஆர்ஹா ஏண்டி தூக்கி அடிக்குற.. அச்சோ பார்க்கல சூர்யா. நீ கேட்ச் புடிச்சு இருப்பன்னு நினைச்சன் என்றால் தோள்களை குலுக்கி.

அவள் அருகே, சென்று பின்னிருந்து அனைத்து கொண்டவன்.. கோச்சுக்காத டி பொண்டாட்டி. Vip வீட்டு மேரேஜ் நான் போய் தான் ஆகணும். மூணு நாள் ட்ரிப் தான் கண்ண மூடி திறக்கறதுக்குள்ள இந்த மூணு நாள் போய்டும் என்றான்.

அவள் உடனே கண்களை அழுத்தி மூடி திறந்து, எங்க மூணு நாள் முடியல? என்றால்..

அவளை பொய்யாக முறைத்தவன்,  இதல்லாம் figure of speech டி. போடா எனக்கு கடுப்பா இருக்கு. என்ன தனியா விட்டு, நீ மட்டும் மூணு நாள் ஜாலியா உன் ஃப்ரன்ட்ஸ் கூட சுத்த போறல என்றால். வேலை விஷயம் டி போய் தான ஆகணும். என்ன புரிஞ்சிக்க மாட்டியா என்றான் கொஞ்சும் குரலில், உடனே நெஞ்சை நாக்காத போய் தொலை என்றால் உதட்டை கோணி கொண்டு. நான் எங்க டி நெஞ்ச நக்குனன் நீ தான் எல்லாத்துக்கும் 144 போட்டு இருக்கியே என்றான்..

கன்னம் வலிக்க சிவந்து போனவள், உனக்கு வேற பேச்சே இருக்காதா டா எப்போ பாரு இந்த மூட்லயே சுத்திட்டு இருக்க என்று அவள் வெட்கத்தை மறைக்க அவன் மீதே பழி சுமத்தினால்.

என்ன பண்றது? என் நிலமை அப்படி.. பேச மட்டும் தான முடியுது என்று அவளை ஏக்க பார்வை பார்த்தான்.

ரஞ்சனிக்கே அவன் நிலை கொஞ்சம் பாவமாக இருக்க, அவன் எதிர்பாரா நேரம் அவன் கருப்பு நிற, ஆர்ம் கட் பனியனை இழுத்து அவனோடு இதழ் கோர்த்து கொண்டாள்.

அதிர்ச்சியில் விரிந்த கண்கள் விரிந்ததாகவே இருந்தது சூர்யாவிற்கு.

முத்தமிட்டு கொண்டே அவன் நிலையை உள்ளுக்குள் ரசித்தவள். அவன் கைகளை எடுத்து அவள் இடையை பற்றி கொள்ள வைத்தால் சூர்யாவின் கிட்டன்.

இதுக்கு மேல் என்ன வேண்டும் சூர்யாவிற்கு?? அவள் முத்தத்தை தானதாக்கி கொண்டவன், இதழ் முத்தத்திலும் கை ஜாலத்திலும் அவளை திக்கு முக்காடா வைத்தான்.

அவன் செயலில் கிறங்கியவள், முல்லை கொடியாக அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவளை அப்படியே கைகளில் ஏந்தி மெத்தையில் கிடத்தி கணவனாக அவள் உடலில் முன்னேறினான்.

அவனின் அடுத்தடுத்த செயலில் பதறியவள், சூர்யா நோ என்று அவனை தடுக்க முயன்றால். தடுத்தால் அடங்கும் நிலையிலா அவன் இருக்கிக்கிறான். மேலும் மேலும் முன்னேறியவன் பெண்ணவளின் மேலாடை நீக்கி, அவளின் இடையை கசக்க சூர்யா என்று கத்தியவள் பலம் கொண்டு அவனை தள்ளி விட்டால்

அதில் அவன் முகம் விழுந்து விட்டது. கோவம் எட்டி பார்க்க, நீயே தான டி என்கிட்ட வந்த, இப்போ நான் அடுத்த கட்டத்துக்கு போனா தள்ளிவிடற என்று கத்திவிட்டு போடி என்று அறையின் ஜன்னல் பக்கம் போய் நின்று கொண்டான். உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர, அவ்வளவு போராடினான் சூர்யா.

ரஞ்சனிக்கும் அவன் நிலை பாவமாக இருக்க, அவன் தூக்கி வீசிய மேல் சட்டையை கூட அணியாமல் நைட் பேண்ட் மற்றும் பெட்டிகோட் மட்டும் அணிந்து கொண்டு இருந்தவள் அவன் பின்னே இருந்து கட்டி கொண்டாள்.

கடுப்பாகி விட்டான், அவசரகாரன்.. ஹேய் போடி ஒழுங்கா வாங்கி கட்டிக்காத.. என்று சுல்லேன்று எரிந்து விழ, அவனை விட்டு பிரியாது நின்றவள் அவன் முதுகில் தன் மூக்கு நுனியை உரசி. எனக்கு பீரியட்ஸ் டா, அதான் உன்ன விலக்கி விட்டன். ப்ளீஸ் கோச்சுக்காதா. எனக்கு கஷ்ட்டமா இருக்கு என்றால்.

ஹய்யோ வென்று ஆனது சூர்யாவிற்கு. அவளை இழுத்து முன்புறம் கொண்டு வந்தவன், நெற்றியை விரல்களால் தேய்த்து கொண்டே சாரி டி, நான் கொஞ்சம் கண்ட்ரோல்ல இருந்து இருக்கணும்..

போடா என்று வீஞ்சி கொண்டவள், பாவம் ரொம்ப ஃபீல் பண்றியேன்னு முத்தம் கொடுத்தா என்னையே திட்றல என்று அவன் மார்பில் லேசாக கடித்தால்.

சரி சாரி டி..

உனக்கு பீரியட்ஸ் இல்லனா உன்ன எனக்கு தந்து இருப்பியா கிட்டன்?

அவன் தோள் மீது கைகளை மாலையாக போட்டு கொண்டவள், நீ ஊருக்கு போய்ட்டு வந்ததும் நம்ம லைப் ஸ்டார்ட் பண்ணலாம் சூர்யா. எனக்கும் இதுக்கு மேல உன்ன விட்டு இருக்க முடியும்னு தோணல கூறினாள் அவன் கண்களை பார்த்து கொண்டே.

இதுக்கு மேல் என்ன வேண்டும், சந்தோஷத்தில் அவளை தூக்கி சுற்றினான் சூர்யா.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

66. கண்கள் நிறைந்த ஓவியமே!!
மெல்ல இருள் விலகி,
பகலவன் தனது சுடருடன் மேகங்களை விட்டு  வெளியே வரும் நேரத்தில், அந்த இதமான காலை சூழளுக்கு பறவைகளின் கானம் ரம்மியமாக இசைக்க, மரங்களும், இலைகளும் தென்றலின் தாலாட்டில் சுகமான குளிர்ந்த காற்றை வீசியது..

மலை மகளின் அந்த ஊர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்க, வளர்ந்து வரும் பணக்காரர்களுக்கு கூட குளிரூட்டி அவசியமற்று போனது.

ராஜாயின் ஓரத்தில் பெண்ணுடலை தீண்டாமல் ஆதரவற்று கிடந்தது பொற் குழலியின் பொன் வளையல்களுடன் சேர்ந்த கண்ணாடி  வளையல்களும், கால் கொலுசும்..

இரவு அவ்வளவு வீராப்பாக குழலியிடம் முறுக்கி கொண்டு உறங்கியவன் நடு இரவில் உறங்கி கொண்டு இருந்தவளிடம் சிலுமிஷம் பல செய்து அவளை ருசித்து விட்டே உறங்கினான். அவளிடம் அடிக்ட் ஆகிவிட்டான் விஷ்வா.

காலை நேர விடியலில், மன்னவனின் மார்பில் துயில் கொண்டிருந்த பொற் குழலி, இடையில் ஊரும் கணவனின் கையில், குயவனிடம் குழையும் மட்பாண்டமாக அரை தூக்கத்தில் அவன் தொடுதலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து கொண்டிருந்தாள்.

மார்பில் இருந்தவளை, மஞ்சத்தில் கிடத்தி அவளின் கழுத்து வளைவில் அவள் வாசம் இழுத்தவன், குட்டி குட்டி முத்தங்களை வைத்து, மீசை முடியால் சீண்டி பெண்ணவளை செல்ல இம்சைகள் செய்து தன் உணர்வை அவளுக்கும் கடத்தினான்.

ஷிவா என்றவளின் ஒற்றை முனகல் போதுமாக இருந்தது, அவன் முறுக்கேறி அவளுடன் முயங்கள் கொள்ள.

அவன் செய்த, மன்மத லீலையில் அவளின் தூக்கம் பறந்து போக, காலை நேரத்து ஹார்மோன்ஸ் எல்லாம் விழித்து கொண்டு அவளும் மன்னவனுக்கு ஈடாக சரசமாட தொடங்கினால்.

உணர்வுகள் கொந்தலிக்கும் போது இருவரின் மோக கானங்களை கட்டுப்படுத்துவதே பெரும்பாடாகி போனது இருவருக்கும். இருந்தும் திருட்டு மாங்காவிற்கு ருசி அதிகம் என்பது போல், இருவருக்கும் இந்த ரகசியம் போலான கூடலில் அலாதி இன்பம் கிடைத்தது.

முயங்கள் முடித்து அவள் மேல் விழுந்த பாட்டுடை தலைவனை, தலை கோதி கொடுத்து ஆசுவாச படுத்தினால் தலைவி அவள். ரொம்ப கனக்குறனா என்று அக்கறையாக கேட்டதோடு மட்டுமல்லாமல், அவள் மேல் இருந்து விலக போனவனை விலக விடாமல் அவள் மேலேயே இருத்தி கொண்டாள் குழலி பெண்ணவள். எனக்கு இது புடிச்சு இருக்கு இப்படியே இருங்க என்றால்..

நீண்ட நேரம் கழித்து அவள் மேல் இருந்து விலகி வல பக்கம் படுத்தவன் அவள் அங்க லாவண்யங்களை தான் ரசித்து கொண்டு இருந்தான்.

எதுக்கு இப்படி பாக்குறீங்க என்றவளின் முகம் காலை கதிரவனை போல் மாறி இருந்தது..

உன் இரட்டை நிலாக்கள்
பால் நிலவாய் ஒளிர்வதை காண
என் இரு கண்கள் போதவில்லையடி
என் போதை பெண்ணே!!

என்று கவி பாடினான் விஷ்வா..

ஹய்யோ போங்க ஷிவா, என்றவள் தாவி சென்று அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.

பொழுது நன்றாக புலர, குழலி எழுந்து கொண்டாள் இருவரும் மாறி மாறி சென்று குளித்து விட்டு வந்தவர்கள், உறங்கி கொண்டு இருந்த பூரணி பாப்பாவை கொஞ்சி கொஞ்சியே எழுப்பி விட்டனர், முல்லை பூ கண்களை விரித்து சிரித்து கொண்டே எழுந்தால் அவர்களின் ஒற்றை மகளரசி. எழுந்ததும் விஷ்வாவிடம் தான் சென்றால் பூரணி பாப்பா..

ப்பா ப்பா என்று அழைத்து செல்லம் கொஞ்சியவள் விஷ்வாவின் இரு பக்க கன்னத்தையும் கடித்து முத்தம் வைத்து கொஞ்சினால்..

ப்பா, பாப்பா.. பாப்பா.. என்று அவனிடம் முத்தம் வாங்க குட்டியின் இரு பிஞ்சு கன்னத்தையும் மாற்றி மாற்றி காட்டியது.

கணக்கு பார்க்காமல் அவன் ஆசை தீர மென்முத்தம் வைத்தவன், குழந்தையை தோள் மீது தூக்கி வைத்து கொண்டு வெளியே அழைத்து வந்தான்.

அப்பா ஈஈஈ என்று முளைத்த ஆறு பச்சரிசி பற்களை தந்தையிடம் காட்டி, பல்லை சுத்தம் செய்ய கூறினாள்.

அப்போது முத்தரசி அங்கு வந்து நிற்க, அத்தை பக்கத்துல குளம் எதாச்சும் இருக்கா குளிக்குறா மாதிரி என்றான் இருக்குப்பா என்று சொல்லி கொண்டிருக்கும் போதே நேற்று அவன் வாங்கிய பொருட்கள் எல்லாம் வண்டியில் வந்து இறங்கியது.

விஷ்வா, வாங்க இந்த வீடு தான் என்று கூறி கொண்டே அவர்களிடம் சென்றான். முத்தரசி மகளிடம் என்னவென்று கேட்க, உன் மருமகன் நீ கஷ்ட்டப்பட கூடாதுனு வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கி இருக்காரு என்ற குரலில் அவள் கணவனை நினைத்து அத்துனை பெருமிதம். நேற்று இருந்த மனசுணக்கம் இப்போது இல்லை. நேற்று விஷ்வா தாம்பத்தியத்தின் போது கொடுத்த விளக்கத்தில் அவள் சங்கடங்கள் யாவும் எங்கோ சென்று விட்டது.

அவள் அம்மா எதுக்கு குழலிமா இதெல்லாம் என்று மகளை போலவே சங்கடமாக உணர, அங்கு இருந்து வந்த விஷ்வா.. என் அத்தை எனக்கு கொடுத்த பொக்கிஷத்துக்கு இதெல்லாம் ஈடாகாது என்று சிறு புன்னகையோடு கூறி, குழலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே சென்றான், எந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்று கூற.

இரு பெண்களுக்கும் அவன் கூற்று புரியவே சற்று நேரம் பிடித்தது. முதலில் புரிந்து கொண்ட முத்தரசி விஷ்வா குழலி மீது வைத்திருக்கும் அன்பை கண்டு தாயாக உள்ளம் நிறைந்து போனார்.

மகளின் வாழ்வை பற்றி இனி எந்த பயமும் இல்லை அவருக்கு. மகளை அன்பாக அனைத்து கொண்டவர் விஷ்வா தம்பி உன்மேல ரொம்ப அன்பு வச்சு இருக்காரு குழலிமா, எப்பவும் அவர் மனசு கோணாம நடந்துக்கணும் புரியுதா என்று அன்னையாக அறிவுரை கூறினார்.

சிரித்து கொண்டே தலையாட்டினால் குழலி..

இன்னும் சிறிது காலத்தில் அவன் மனதை உடைத்து, அவனிடம் இருந்து வெறுப்பை மட்டுமே சம்பாதிக்க போவது தெரியாமல்.

*****

சூர்யா, அவன் வேலை விஷயமாக ஊரிற்கு சென்று, இரு நாட்கள் ஆகி இருந்தது அடுத்த நாள் அவன் வீட்டிற்கு வந்து விடுவாத கூறியிருந்தான்.

இப்போது எல்லாம் ரஞ்சனிக்கு எப்போதும் சூர்யாவின் நினைவு தான். சில நேரங்களில் தனியாக சிரித்து தோழிகளின் கேலி பேச்சுக்கு கன்டன்ட் கொடுக்கிறாள். சூர்யா அவளிடம் எல்லை மீறும் தருணங்களை நினைத்து பார்க்கும் போது அவளின் கன்னங்கள் தன்னால் சிவந்து போகும். சூர்யாவின் வரவிற்காக காத்து கொண்டிருந்தாள் பெண்ணவள். நொடிகள் எல்லாம் யுகங்களாக மாறியது. இரு நாள் பிரிவிற்கே பசலை நோய் கொண்ட தலைவி போல் மாறி போனாள்.

அப்போது, நகையை திருப்ப வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணத்தை கட்டிவிட்டு நகையை கையோடு வாங்கி செல்ல காத்திருந்தார்.

ஹரி தான் தங்க நகை கடன்கள் வழங்கும் பிரிவில் வேலை செய்கிறான்.

அவன் அந்த வாடிக்கையாளரிடம் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து வாங்கி கொண்டு, அவரது கடன் அட்டையை ரஞ்சனியிடம் கொடுத்தான். அவரது தங்க நகையை லாக்கரில் இருந்து எடுத்து கொடுக்குமாறு கூறி, அந்த வாடிக்கையாளர் அமர்ந்து இருக்கும் இடத்தை கை நீட்டி அடையாளம் காட்டினான்.. வேலையின் மும்மரத்தில் இருந்த ரஞ்சனி அடையாளம் காட்டியவரை சரியாக கவனிக்கவில்லை.

பார்க்க வேண்டுமே என்று அவசரத்தில் ஹரி காட்டிய இடத்தை பார்த்து சரி என்று தலையாட்டினால்.

அரைமணி நேரம் கழித்து வாடிக்கையாளர்களின் வேலையை முடித்து, கடன் அட்டையை எடுத்து கொண்டு வாடிக்கையாளரின் நகையை லாக்கரில் இருந்து எடுத்து வந்தால்.

அட்டையை பார்த்து அவரின் பெயரை கூப்பிட்டால், ஸ்ரீநிவாசன் என்று.. அவரும் ரஞ்சனியின் பிரிவிற்கு வந்து நின்றார்.

நகை எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு, இதல கையெழுத்து போட்டுடுங்க என்றால்.

கள்ள முழியை மறைத்து கொண்டு, வேக வேகமாக நகையை கண்கள் விரிய பார்த்தவன், ரஞ்சனி கொடுத்த நோட்டு புத்தகத்தில் கையெழுத்து இட்டு சென்றான்.

மதிய சாப்பாடு இடைவேளையில் அனைவரும் சென்றுவிட, ரஞ்சனி அப்போது தான் அந்த நோட்டு புத்தகத்தில் உள்ள ஸ்ரீ நிவாசன் என்பவனின் கையெழுத்தை பார்த்தாள். நெஞ்சம் எல்லாம் படபடவென அடித்து கொண்டது. வேகமாக அந்த கடன் அட்டையை தேடினால் அதில் இருந்த கையெழுத்தும் நோட்டு புத்தகத்தில் உள்ள கையெழுத்துக்கும் அத்தனை வித்யாசம்.

சாப்பிட்டு கொண்டிருந்த ஹரியை தேடி ஓடினால், யாருக்கும் சந்தேகம் வராதபடி சகஜமாக முகத்தை வைத்து கொண்டவள் ஹரியிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ் வாங்க என்று அழைத்தாள்.

இதுவே முதல் முறை ரஞ்சனி ஹரியிடம் இப்படி வந்து பேசுவது.. உள்ளுக்குள் இன்பமாக அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல், மீதம் இருந்த சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு, கை கழுவி விட்டு அவளுடன் சென்றான்.

யாரும் இல்லாத இடத்தில் வந்து நின்றவர்கள், ஹரி ஹரி நான் நகைய வேற ஒருத்தர்கிட்ட மாத்தி குடுத்துட்டன் ஹரி பயமா இருக்கு என்று படபடப்பாக பேசினால்.

ரஞ்சனி நீங்க எத பத்தி சொல்றிங்க பொறுமையா சொல்லுங்க என்றான், ஹய்யோ நீங்க என்கிட்ட ஸ்ரீநிவாசன் கடன் அட்டையை கொடுத்து நகைய அவர்கிட்ட குடுக்க சொன்னிங்கள நான் வேற ஒருத்தர் கிட்ட நகைய மாத்தி குடுத்துட்டன் அவன் பேரும் ஸ்ரீ நிவாசன் தான். அவன் அந்த நகைய எடுத்துட்டு போய்ட்டான் ஹரி என்றால் சொல்லும் போதே பயத்தில் வேர்த்து விட்டது ரஞ்சனிக்கு.

என்ன சொல்றிங்க ரஞ்சனி. நீங்க பிஸியா இருக்கறத பார்த்துட்டு அந்த நகைய திருப்ப வந்த ஸ்ரீ நிவாசன், என்கிட்ட வந்து சார் அந்த மேடம் பிஸியா இருக்காங்க நான் மதியம் சாப்பாட்டு நேரம் முடிஞ்சதும் நகைய வாங்கிட்டு போறன்னு சொல்லிட்டு போனாரே என்றான் ஹரி.

எனக்கு அவர் போனது தெரியாது ஹரி, நான் வேற ஒரு ஸ்ரீ நிவாசன் கிட்ட நகைய குடுத்து அனுப்பிட்டன் எனக்கு பயமா இருக்கு என்று அழுதே விட்டாள் ரஞ்சனி.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரஞ்சனியிடம் நன்மதிப்பை பெற்று அவளிடம் நெருங்க முயன்றான் ஹரி. சரி கொஞ்சம் அமைதியா இருங்க. அந்த ஸ்ரீ நிவாசனோட அட்ரஸ்ஸ சிஸ்டம்ல இருந்து எடுங்க. அவன தேடி போலாம் என்றான்.

அந்த ஸ்ரீ நிவாசன் என்பவனின் பாஸ் புக் பணம் செலுத்துமிடத்தில் இருப்பதை கண்டு கொண்டவர்கள் அதில் உள்ள முகவரிக்கு செல்ல தயாராகினர்.

அதற்குள் நகையை மீட்க வந்த உண்மையான ஸ்ரீ நிவாசன் ரஞ்சனியிடம் வந்து மேடம் நகைய எடுத்து வச்சிட்டீங்களா என்று கேட்க, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அதற்குள் ஹரி அங்கு வந்து, சார் மேனேஜர் ஹாஃப் டே லீவு, அவர் சைன் பண்ணாதான் நகை உங்ககிட்ட குடுக்க முடியும் என்று கூறினான்.

கடுப்பாகி விட்டார் அந்த வாடிக்கையாளர், என்ன சார் உங்க கிட்ட ரோதனையா போச்சு, எங்க நகைய எங்க கிட்ட குடுக்க இவ்ளோ ரூல்ஸ் போட்றிங்க, என்று கூச்சல் போட, சார் இது கோவெர்மென்ட் பேங்க் இது தான் இங்க ப்ரோசிஜர் எல்லாம் பேங்க்லயும் இப்படி தான். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. நாளைக்கு உங்க நகைய வந்து வாங்கிக்கோங்க என்று தன்மையாக கூறினான் ஹரி.

அதற்கு மேல் அந்த வாடிக்கையாளறால் எதுவும் பேச முடியவில்லை.. திட்டி கொண்டே வெளியே சென்றுவிட்டார்.

முதலில் அரை நாள் விடுப்பு எடுத்து முன்னே சென்றான் ஹரி. அதன் பின் ரஞ்சனியும் தலைவலி என்று கிளம்பிவிட்டால். யாருக்கும் சந்தேகிக்க தோன்றவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

67. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ஹரி பேருந்து நிலையத்தில் ரஞ்சனிக்காக காத்து கொண்டிருக்க, அவள் வேகமாக நடந்து வந்தாள். பின் எதை பற்றியும் யோசிக்காமல் ஹரியின் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, அந்த ஸ்ரீ நிவாசன் வீட்டிற்கு சென்றனர்.

கூகிள் மேப் மூலம் எந்த சிறமும் இல்லாமல் அவன் வீட்டை விரைவாகவே அடைந்து இருந்தனர்.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற ஹரி பின்னே ரஞ்சனியும் சென்றால்.

இவர்கள் வரவை இவ்வளவு சீக்கரம் எதிர்பாராதவன் அதிர்ந்து நின்றது எல்லாம் சில நொடிகள் தான் அதன் பின்பு, என்ன சார் வேணும் என்று ஹரியை பார்த்து தைரியமாகவே கேட்டான், நீ எடுத்துட்டு வந்த நகை எங்க டா என்றான்.

நான் எந்த நகையும் எடுத்துட்டு வரல என்று தயங்காமல் பொய் கூற, அடுத்த நொடி அவன் கன்னம் காந்தியது ஹரி அடித்த அடியில், திருட்டு புருஷனை அடித்ததும் கோவம் வந்துவிட்டது அவன் மனையாளுக்கு, என்ன சார் வீட்டுக்குள்ள வந்து தகராறு பண்றிங்களா என்று வெட வெடவென இருந்த மினி வெர்ஷன் சொர்ணாக்கா எகிறி கொண்டு முன்னே வர, ஹேய் உன் புருஷன் பேங்க் நகைய திருடிட்டு வந்து இருக்கான், அவனுக்கு திருட்டு தப்புன்னு புத்திமதி சொல்லமா நகைய திருப்பி கேட்க வந்த எங்க மேலையே பாஞ்சிக்கிட்டு வரியா என்ற ரஞ்சனி அவள் கன்னத்தில் விட்ட அரையில் அந்த மினி சொர்ணாக்காவிற்கு சில நொடிகள் காது அடைத்து கொண்டது.

இப்படியே பேசி வாய் சண்டை கை சண்டையாக மாற, ஹரி மற்றும் அந்த ஸ்ரீநிவாசனுக்கு சண்டை முத்தி போனது, இருவரும் அவர்கள் குடியிருப்பு விதியில் வந்து சண்டையிட்டு கொள்ள மதிய வேளையில் சில நல்லுலங்கள் மட்டும் நின்று சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. தடுக்க முன்வராமல்.

ஒரு கட்டத்திற்கு மேல், ரஞ்சனி ஹரியை பிடித்து தடுத்து நிறுத்தி விடு ஹரி இதுக்கு மேல இவனை போலீஸ்ல புடிச்சு குடுக்கலாம், இவன் நம்ம பேங்க்கு வந்து என்கிட்ட நகைய வாங்குன எல்லா ஆதாரமும் இருக்கு. கேப் புக் பண்ணியிருக்கன் வந்ததும் இவனை கூட்டிகிட்டு போலீஸ் ஸ்டேஷன் போலாம், எங்க அப்பா மாமாக்கு தெரியாத போலீஸ் இல்லை. என்று கயவனை மிரட்டும் நோக்கில் ரஞ்சனி பேச, புருஷன் பொண்டாட்டி இருவரும் சற்று பயந்து தான் போயினர்.

அவர்கள் நினைத்தது என்னவென்றால் தவறு அவர்கள் புறம் உள்ளதால் அவர்கள் அவ்வளவு சீக்கிரம் காவல் நிலையத்தை அணுக மாட்டார்கள் அதற்குள் நாம் இந்த ஊரை விட்டு சென்று வேறு ஊரில் தலைமறைவு ஆகிவிடலாம் என்று நினைத்து இருந்தனர்.

வண்டியில் புறப்படும் போது ரஞ்சனி கூட ஹரியிடம் இதையே கூறியிருந்தால் காவல் நிலையத்தை அணுகலாம் என்று, வேண்டாம் ரஞ்சி உனக்கு அது ஒரு பிளாக் மார்க் ஆகிடும், சஸ்பென்ட் கூட பண்ணுவாங்க. எதிர்காலத்துல உனக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமோஷன் கூட இதால டிலே ஆகும், நான் பாத்துக்குறன் நீ ஃப்ரீயா விடு என்றான்.

ரஞ்சனி ஆசை பட்டு வாங்கிய அரசு உத்தியோகம் அதனால் அவ்வளவு சீக்கிரம் அவளுக்கு அவ பெயர் எடுக்க விருப்பம் இல்லை. அதனால் தான் ஹரியின் பேச்சை கேட்டு காவல் நிலையம் செல்லாமல் ஸ்ரீநிவாசன் வீட்டிற்கு வந்தாள்.

ரஞ்சனி நினைத்தது போல், இருவரும் சற்று பயந்து போயினர். இருவரும் ஒன்றும் வழி வழியாக வந்த கொள்ளையர் கூட்டம் இல்லையே. எதற்கும் அஞ்சாமல் இருக்க. சாதாரண நடுத்தர வர்கத்தினர். நகை விக்கும் விலைக்கு அதன் மேல் ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டனர்.

சுதாரித்த ஸ்ரீ நிவாசன், வேண்டாம்மா நான் குடுத்துடுறன் என்று உள்ளே சென்றவன் வீட்டிற்குள் சென்று நகை பையை கொண்டு வந்தான்.

கையோடு கொண்டு வந்த தங்க நகை கடன் அட்டையை வைத்து அனைத்தையும் சரி பார்த்தான் ஹரி. மொத்தம் பத்து சவரன் நகை அதில் ஒரு ஒற்றை ஜிமிக்கி இல்லாமல் இருக்க அவனை மீண்டும் அடித்து விசாரித்ததில் கை செலவிற்கு காசு இல்லை என்று வரும் வழியில் அந்த ஜிமிக்கியை சேட்டு கடையில் விற்று விட்டதாக கூறினான்.

மீண்டும் அவனை அடிக்க போன ஹரியை ரஞ்சனி கையை பிடித்து தடுத்து இருந்தாள், அவளின் தொடுதலுக்காகவே, மீண்டும் மீண்டும் ஹரி அவனை அடிக்க சென்றானோ என்னவோ.

பின் அவனிடம் இருந்த ரசீதை வாங்கி கொண்டு அவனையும் அழைத்து கொண்டு அந்த சேட்டு கடைக்கு சென்று அந்த நகையை மீட்டனர். நகையை மீட்க்க ரஞ்சனியே பணத்தை கொடுத்தாள் அவளது சேமிப்பில் இருந்து. ஹரி அவனிடம் இருந்து பணத்தை வாங்க முயல வேண்டாம் ஹரி, விடு அவங்க அந்த பணத்தை வச்சிக்கட்டும். ஏதோ ஆசப்பட்டுடாங்க, அவர் ரொம்ப அடி வாங்கிட்டாரு எப்படியும் வேலைக்கு போக ஒரு வாரம் ஆகும் குடும்ப செலவுக்கு வச்சிக்கட்டும் என்று அவர்கள் மேல் இறக்கப்பட்டு விட்டுவிட்டால்.

எப்படியோ ஒரு வழியாக அனைத்து நகைகளையும் பத்திரமாக மீட்டு கொண்டனர்.

ஹரியின் உடை எல்லாம் கிழிந்து இருந்தது. மீண்டும் வீட்டிற்கு திரும்பி செல்கையில் சாலையில் உள்ள சேற்று நீரை இருவர் மேலும் வாரி இறைத்தது அவர்களை தாண்டி வேகமாக சென்ற கார் ஒன்று. ஹரியின் வசை மொழிகள் எல்லாம் காற்றை கிழித்து கொண்டு சென்ற அந்த கார் காரனுக்கு கேட்க வாய்ப்பில்லை. யார் கண்டது அந்த காரை ஓட்டுவது ருத்ரனாக கூட இருக்கலாம்.

சேற்றில் குளித்த ரஞ்சனி முகம் சுழிக்க, ஹரி இதை பயன்படுத்தி கொள்ள நினைத்தான்.. அச்சோ என்ன விட உங்கமேல தான் அதிகமா சேறுபட்டு இருக்கு. ரஞ்சனி பக்கத்துல தான் எங்க வீடு வா அங்க வந்து வாஷ் பண்ணிக்கோங்க என்றான் தந்திர விழிகளை மறைத்து.

வேண்டாம் ஹரி, நான் பாத்துக்குறன் நான் கேப் எதாச்சும் பிடிச்சு வீட்டுக்கு போறன், நீங்க எனக்கு இவ்ளோ உதவி பண்ணதே ரொம்ப பெருசு என்று அவன் அழைப்பை மறுத்தாள்.

ஹேய் என்ன ரஞ்சனி, என்மேல நம்பிக்கை இல்லையா ஏன் தயங்குறிங்க?  எங்க வீட்ல எங்க அம்மாவும் இருக்காங்க. நீங்க எங்க அம்மாவ பார்த்தது இல்ல தான வாங்க நான் உங்கள அவங்களுக்கு இன்ட்றோ குடுக்குறன் என்று நல்லவன் போல் பேச..

இவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கான் எப்படி அவொய்ட் பண்றது, அதுவும் அவங்க அம்மாக்கு வேற உடம்பு சரியில்லைன்னு சொல்லியிருக்கான். சரி போய் பார்த்துட்டு சீக்கரம் வீட்டுக்கு போய்டலாம் என்று நினைத்தவள் அவளுக்கு நடக்க போகும் விபரிதத்தை அறியாமல் அந்த குள்ள நரியுடன் அவன் வீடு நோக்கி சென்றால்.

போகும் வழியில் சில பழங்களை வாங்கி கொண்டாள் உடல் நலம் சரியில்லாத அவன் அன்னைக்காக, ஹரி வேண்டாம் என்று சொன்னதையும் பொருட்படுத்தாமல்.

ஹரியின் வீட்டிற்கு வந்து இருந்தாள், நேராக அவன் தாய் தங்கியிருக்கும் அறைக்கு தான் அழைத்து சென்றான். அம்மா இவங்க என்கூட வேலை செய்றவங்க பேர் ரஞ்சனி, உங்கள பார்க்கதான் வந்து இருக்காங்க. அது மட்டும் இல்லமா உங்கள ஹாஸ்பிடல் சேர்க்க பணத்துக்கு தவிச்ச போது இவங்க தான் உதவி பாண்ணாங்க என்று மேலும் ஹரி ரஞ்சனியை பற்றி சொல்ல, சங்கடமாக உணர்ந்த ரஞ்சி ப்ளீஸ் ஹரி, இதல்லாம் சொல்ல வேண்டாம் என்றவள் அவன் அம்மாவுடன் பேசி கொண்டு இருக்க, ஹரி வேகமாக குளியல் அறையினுள் நுழைந்தான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் ரஞ்சனியிடம் நீங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டுவாங்க ரஞ்சனி என்று அனுப்பி வைத்தான்..

அவன் அம்மாவின் அறையில் இருக்கும் குளியல் அறை தானே என்ற நம்பிக்கையில் உள்ளே சென்று அவள் ஆடைகளை கழட்டி, அவளையும் அவள் ஆடைகளையும் சுத்தம் செய்து கொண்டிருந்தால். அங்கு ஹரியின் போன் கேமரா அவள் நிலையை படம்பிடித்து கொண்டிருப்பதை அறியாமல்.

ஈர உடையை அவள் துப்பட்டாவை கொண்டு மறைத்து வெளியே வந்தாள் ரஞ்சனி. அதற்குள் ஹரி அவளுக்கு காஃபி கொண்டு வர, அவன் அம்மாவிடம் பேசி கொண்டே குடித்து முடித்தால் ரஞ்சனி.

சிறிது நேரத்தில் அந்த இடத்தையே கலகலப்பாக்கி இருந்தாள் ரஞ்சனி. அவள் இருக்கும் இடம் எப்பவும் இப்படி தானே. சரிங்க ஆண்ட்டி எனக்கு நேரம் ஆகுது. வீட்ல தேடுவாங்க நான் இன்னொரு நாள் வரன் என்றவள் இருவரிடமும் சொல்லி கொண்டு புறப்பட்டால்.

ஹரி அவளை வீட்டில் கொண்டு விடுவதற்காக தயாராகி நின்றான். அவளோ வேண்டாம் ஹரி நான் கேப் புக் பண்ணிட்டன் வெளில தான் டிரைவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு நான் கிளம்பறன் என்றவள் இருவரிடமும் விடை பெற்று சென்றுவிட்டால்.

ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா ஹரி, இந்த மாதிரி ஒரு பொண்ண தான் உனக்கு கட்டி வைக்கணும்னு ஆசை என்று அவன் அம்மா வெள்ளேந்தியாக பேசினார். மகனின் தந்திர விழிகள் ஒரு நிமிடம் மின்னி மறைந்ததை கவனிக்க தவறி.

அடுத்த நாள் காலையே நகையின் உரிமையாளர், ஸ்ரீ நிவாசன் வந்து நின்றார். அவரின் நகைகள் அனைத்தையும் கவனமாக அவரிடம் ஒப்படைத்தாள் ரஞ்சனி, அவரிடம் நோட்டு புத்தகத்தில் கையெழுத்தை வாங்கி கொண்டு அந்த நகை கடன் அட்டையை கிழித்து குப்பையில் போட்டாள் ரஞ்சனி.

இப்போது தான் அவளுக்கு மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் தோன்றியது. நகையை உரியவரிடம் ஒப்படைக்கும் வரை அவள் அவளாக இல்லை என்பதே உண்மை. இரவு உறங்கும் போது கூட நகை பையை அவளுடனே வைத்து கொண்டாள். இனி இப்படி ஒரு தவறை எப்போதும் செய்ய கூடாது, கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இது எனக்கு ஒரு நல்ல பாடம் என்று நினைத்து கொண்டாள்.

ஹரிக்கு வேலை நேரத்திலே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் ரஞ்சனி தேங்க்ஸ் என்று.

சின்ன ஸ்மைலி எமோஜியை போட்டு இட்ஸ் ஓகே என்று பதில் அனுப்பி இருந்தான் ஹரி.

மாலை வீட்டிற்கு செல்ல வெளியே வந்த ரஞ்சனியின் முன் பிரசன்னம் ஆகியிருந்தான் சூர்யா.

கணவனை பார்த்த மகிழ்ச்சியில் முயல் குட்டி போல் துல்லி குதித்து ஓடினால் ரஞ்சனி.

சூர்யா என்று தாவி அனைத்து கொண்டு உன்ன ரொம்ப மிஸ் பண்ணன் டா என்றால் அந்த பிரதான சாலையில் நின்று கொண்டு.

ஹரியின் விழிகள் அவர்களின் நெருக்கத்தை வஞ்சத்துடன் பார்த்து கொண்டு சென்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

68. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சூர்யாவை பார்த்த ரஞ்சனி, உற்சாகத்தோடு கணவனை நெருங்கி இருப்பது போதும் இடம் என்ற எண்ணம் இல்லாமல் தாவி அனைத்து முத்தமிட்டாள்.

இன்பமாக அதிர்ந்தவன் முகம் மாலை சூர்யனுக்கு இணையாக கொஞ்சம் சிவந்து தான் போனது. அவன் கிட்டனிடம் இந்த கண்மூடித்தனமான காதலுக்காக தானே காத்திருந்தான்.

லவ் யூ கிட்டன் என்று அவனும் மென்மையாக அனைத்து கொண்டான். அதன் பின் அவளை தன் வண்டியில் ஏற்றி கொண்டு சென்றான். இருவரும் வீட்டிற்கு செல்லாமல் ஊர் சுற்ற கிளம்பிவிட்டனர். கங்கோத்ரி சென்று இருவரும் பானி பூரி சாப்பிடும் போட்டி வைத்து கொண்டு கடை உரிமையாளருக்கு அன்றைய நாளின் லாபத்தை கூட்டினர்.

பின் அங்கிருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர். ரஞ்சியின் கையை எடுத்து அவன் வயிற்றை சுற்றி கொண்டவன்..

கிட்டன் பூ வச்சுக்குறியா டி என்றான்..

ஹ்ம்ம் மல்லி பூ மொட்டா இருந்தா வச்சுக்குறன்.

சாலையோரம் பார்த்து கொண்டே சென்றான், பூ வியாபாரம் செய்பவர்களிடம் மலர்ந்த மல்லிகையே இருக்க முகம் வாடி போனான் சூர்யா.

சிறுபிள்ளை தனமான அவனின் முக வாட்டம் கண்டவள், அவன் வயிற்றை கட்டி கொண்டு எக்கி காதில் முத்தம் வைத்தால் விசரம் இல்லாது. கிட்டன் வண்டி ஓட்டிட்டு இருக்கன் டி என்றான் வெட்க சிரிப்போடு..

பின் கோயம்பேடு பூ மார்க்கெட் சென்றவன், வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தான்.. அவனை குறும்பாக கண்டவள் ஏன் சூர்யா ரெண்டு முழம் பூக்காக என்ன கோயம்பேடு பூ மார்க்கெட் கூட்டிட்டு வந்து இருக்க இது உனக்கே ஓவரா இல்லை என்றால் கிண்டலாக..

மேரேஜ் ஆகி பர்ஸ்ட் டைம் என்கிட்ட கேட்டு இருக்க இது கூட செய்ய மாட்டனா என்றவன் அவள் கைவிரல்களை கோர்த்து கொண்டே உள்ளே அழைத்து சென்றான்.

அங்கு அவள் கேட்டது போல் இருந்த மல்லிகை மொட்டுக்களை மூன்று முழம் வாங்கி அவள் கையில் கொடுத்து வைத்துக் கொள்ள கூறினான். 

பின் இரவு உணவை நல்ல ஹோட்டலில் முடித்து கொண்டு வீடு வர நேரம் ஒன்பதை தொட்டு இருந்தது.

இன்னைக்கு நைட் ஓகே தான என்றான், தன்னோடு நடந்து வந்தவளின் காதோரம் கிசுகிசுத்து..

முதலில் அவன் முகம் பார்த்து முழித்தவள், அவன் எதை கேட்கிறான் என்று புரிந்ததும் சிவந்து போனாள் ரஞ்சனி.

முகத்தை அவனுக்கு காட்டாமல் வேக வேகமாக உள்ளே சென்றால். அங்கு மகேஷ்வரி சோஃபாவில் அமர்ந்து கொண்டு வலி பொறுக்க முடியாமல் அனத்தி கொண்டு இருந்தாள்.

அத்தை என்ன ஆச்சு என்று ரஞ்சனி மாமியார் அருகில் வர, ஒன்னும் இல்ல போடி அங்க என்று எரிந்து விழுந்தாள் மகேஷ்வரி.

அவள் மாமனாரின் அறைக்கு செல்ல, புரிந்து கொண்டாள் அவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று குழலி ஊரிற்கு சென்றதில் இருந்து அவருக்கு அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருக்க அவர் இப்போது எல்லாம் நேரம் கழித்தே வீட்டிற்கு வருகிறார்.

அதற்குள் சூர்யாவும் உள்ளே வந்து அவன் அம்மாவிடம் என்ன ஆச்சுமா என்றான். சைடு முதுகு வலிக்குது சூர்யா, யூரின் போகவே முடியல, வாமிட் வந்துட்டே இருக்கு என்று உடல் உபாதைகளை பட்டியலிட்டால் மகேஷ்வரி.

வாங்கமா ஹாஸ்பிடல் போலாம் என்று உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்ல தயாரானான். ரஞ்சி கார் கீ கொண்டுவா என்றவன் மகேஷ்வரியை அழைத்து கொண்டு வெளியே சென்றான்.

ரஞ்சனியும் காரில் ஏறி கொண்டு மருத்துவமனை சென்றால். போகும் வழியிலே மாமனாருக்கு அழைத்து தகவலை கூறிவிட்டாள் ரஞ்சனி.

மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு வலது புறம் உள்ள கிட்னி முழுவதும் செயல் இழந்து விட்டது, அதை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

அப்போது சுந்தரமும் அங்கு வந்து விட, விடயம் கேள்விப்பட்ட அவரும்  கலங்கி தான் போனார். என்ன தான் வேண்டாத மனைவியாக இருந்தாலும் பிணியுற்று இருக்கும் போது, இது உன் வினை என்று ஒதுக்கம் காட்டவில்லை.

ரஞ்சனியை பார்த்து கொள்ள கூறிவிட்டு, இருவரும் மருத்துவரை காண சென்றனர். அவர்களை வரவேற்று அமர வைத்தவர் மகேஷ்வரியின் நிலையை கூறினார்.

மகேஷ்வரி மெடிக்கல் ஹிஸ்டரியை படித்து தெரிந்து கொண்டவர், அவர்களிடம், மகேஷ்வரியின் முறையற்ற உணவும் மது பழக்கமும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறியிருந்தார்.

டாக்டர் சர்ஜரிக்கு அப்பறம் அவங்களால பழையபடி இருக்க முடியுமா சூர்யா கேட்டு இருந்தான்.

ஹெல்த்தி லைப் ஸ்டைல் மூலம் கண்டிப்பா அவங்களால எந்த பிரச்சனையும் இல்லாம வாழ முடியும் என்றார் மருத்துவர். சரி ஆபரேஷன்க்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர் என்று கூறியிருந்தனர்.

அந்த இரவு அப்படியே கழிய, இரவு நேரத்தில் விஷ்வாவிடம் எதுவும் கூற வேண்டாம் என நினைத்தவர்கள், மறுநாள் முற்பகல் போல் விஷ்வாவிற்கு அழைத்து மகேஷ்வரியின் நிலை தெரிவித்து இருந்தனர்.

விஷ்வா.. பொற் குழலி..

விஷ்வா மனைவியோடு நேரம் காலம் இல்லாமல் கொஞ்சி கொண்டு இருக்க. குழலி தான் அவனின் செல்ல இம்சையில் நொந்து போனாள். பகல் பொழுதுகளில் கணவனின் கைகளில் சிக்காமல் கவனமுடன் அவள் அம்மாவிடமும் குழந்தையிடமும் நேரத்தை செலவழிப்பவள், இரவு நேரத்தில் வேடன் கையில் சிக்கிய மான் குட்டியாக விஷ்வாவிடம் சிக்கி கொள்வால்.

அன்று விஷ்வா அந்த ஊரின் மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று அவன் அத்தை வீட்டிற்கு வரும் மின்சார கட்டணத்தை மாதம் மாதம் செயலியின் மூலம் அவன் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். வேலைகள் கொஞ்சம் தாமதம் ஆனாலும் நேர்த்தியாக முடித்துவிட்டே வீடு திரும்பினான். அப்போது தான் விஷ்வாவிற்கு சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது காரில் கனெக்ட் செய்த ப்ளூடூத் வழியாக பேசியவன், எதிர் முனையில் சூர்யா அவன் அம்மாவின் உடல் நிலை பற்றி கூறியதில் மிகவும் வருந்தினான்.

சரி நான் நைட் வரன் என்று அழைப்பை துண்டித்தவன், வேகமாக வீட்டிற்கு சென்றான்.

குழலி என்று மனைவியை அழைத்து கொண்டே தான் உள்ளே நுழைந்தான்.

கணவனின் குரல் கேட்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தாள் குழலி, தன்னை கொஞ்சம் சமன் செய்து கொண்டவன், குழலி நான் இப்போ சென்னை கிளம்புறன் போய்ட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறன் நீ பாப்பா கூட இங்க பத்திரமா இரு என்றான். அதே நேரம் முத்தரசியும் வந்தார்.

ஏன் நீங்க மட்டும் போறீங்க என்ன ஆச்சு என்றால் பதட்டமாக, பதறாத டி, ஆபீஸ்ல ஒரு முக்கியமான வேலை நான் போய் ஆகணும் என்றான் உண்மையை மறைத்து.

இங்கு வந்து பத்து நாட்களே ஆன நிலையில் மனைவியை அழைத்து செல்ல விரும்பவில்லை விஷ்வா, இன்னும் கொஞ்சம் நாட்கள் அவள் அம்மாவுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அதுமட்டுமின்றி அங்கு வந்தாலும் மருத்துவமனை வீடு என அலைவால், குழந்தையை பார்த்து கொள்ளவும் சிரமமாக இருக்குமே என அனைத்தையும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருந்தான் விஷ்வா.

நானும் வரன் என்றவளை மறுத்துவிட்டான், வேண்டாம் டி நானே ஒன் வீக் கழிச்சு இங்க வரன். ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் நாள் இங்க இருந்துட்டு போலாம். நீ எதுக்கு பாப்பாவ வச்சிக்கிட்டு அலையனும். என்று புரிய வைக்க முயன்றான். இதில் முத்தரசியும் மருமகன் பக்கம் தான் நின்றார். அவரிடமும் உண்மையை கூறவில்லையே.

மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டாள் குழலி. அவளை சமாதானம் செய்யும் நிலையில் விஷ்வா இல்லை. இப்போது கிளம்பினால் தான் மாலை ஏழு மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் செல்ல முடியும். சென்னை செல்ல கிளம்பி கொண்டிருந்தவனிடம் வம்பு வளர்க்க தொடங்கினால் அவனின் குட்டி மனைவி.

உங்களுக்கு எப்பவும் வேலை தான் முக்கியம், நான் முக்கியமே இல்லை என்று கண்ணை கசக்கினால் குழலி.

குழலி போகும் போது யாராச்சும் இப்படி அழுது கண்ண கசக்கிட்டு வழி அனுப்புவாங்களா என்றான் அவள் கண் கலங்குவதை பொறுக்க முடியாமல்.

என்கிட்ட பேசாதீங்க என்றால் முகத்தை தூக்கி வைத்து கொண்டு, நேரத்தை பார்த்தான் அவன் கணக்கு படி இன்னும் அரைமணி நேரம் இருந்தது வீட்டில் இருந்து புறப்பட, அதற்குள் அவளை தூக்கி வைத்து கொண்டவன் அவளின் இதழ் தேனை சொட்டு விடாமல் அருந்தி விட்டு அவளை கொஞ்சம் சமாதானம் செய்து விட்டு வெளியே அழைத்து வந்தான்.

பின் கூடத்தில் நண்டு போல் இங்குமங்கும் ஓடி கொண்டிருந்த அவன் செல்வ மகளை வாரி அனைத்து கொஞ்சிவிட்டு அவன் அத்தையிடமும் கூறிவிட்டு காரில் கோயம்பத்தூர் புறப்பட்டான்.

விமானம் ஏறியவன், நள்ளிரவு போல் மருத்துவமனைக்கு வந்தான். நேராக சென்று அவன் அம்மாவை பார்த்தான். சூர்யா மற்றும் கல்யாண சுந்தரம் இருந்தனர். ரஞ்சனி யாரும் இல்லா வீட்டில் இருக்க பயம் கொண்டவள் அவள் அம்மா வீட்டில் இருந்து கொண்டாள்.

பரமுவும் சுசிலாவும் வந்து மகேஷ்வரியை பார்த்துவிட்டு சென்றனர். சுசிலா மகேஷ்வரிக்கு சத்தான உணவை சமைத்து கொடுத்துவிடுவாள்.

நாளை அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

சுந்தரம் அந்த நிலையிலும் குழலி மற்றும் முத்தரசியை பற்றி நலம் விசாரித்தார். நல்லா இருக்காங்கப்பா நான் அவங்ககிட்ட உண்மைய சொல்லல.. ஆபீஸ்ல முக்கியமான வேலைன்னு சொல்லிட்டு வந்தன் என்றான்.

ஹ்ம்ம் சரியாதான் செஞ்சு இருக்க என்றார் சுந்தரமும். சூர்யாவிற்கும் அதுவே சரியேனப்பட்டது.

அடுத்த நாள் காலையில் இருந்து மகேஷ்வரிக்கு எந்த உணவும் கொடுக்காமல், அவள் உடல்நிலையை கவனித்து கொண்டு இருந்தனர்.

மதியம் போல் அறுவை சிகிச்சை தொடங்கி நல்ல விதமாக முடித்து இருந்தனர் மருத்துவர்கள்.

அன்றில் இருந்து ஒருவாரம் மருத்துவ மனையில் தான் இருந்தார் மகேஷ்வரி.

மகேஷ்வரியின் குண நலன்களில் அவ்வளவு மாற்றம் இருந்தது. யாரிடமும் எடுத்தறிந்து பேசுவதில்லை. கணவனிடம் மன்னிப்பு வேண்டினால். மகன்களிடம் மன்னிப்பு கேட்க குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவளின் குணத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டது இரு மகன்கள் தானே, தாய் பாசத்திற்கு ஏங்கும் போது நிற்கதியாக தவிக்கவிட்டு தன் சந்தோஷம் தான் முக்கியம் என இருந்தாறே. அந்த குற்ற உணர்ச்சி தான். இரு மகன்களுக்கும் அவரின் நிலை புரிந்து தான் இருந்தது. சூர்யா விடுங்கமா நீங்க எப்படி இருந்தாலும் என் அம்மா தான் என்று எப்பவும் போல் தாயின் மீது கொண்ட பாசத்தால் அவன் அம்மாவின் குற்ற உணர்ச்சியை புரிந்து கொண்டு சமாதானமாக பேசினான். விஷ்வா கூட பட்டும் படாமலும் அவன் அன்னையிடம் பேசினான். அவனுக்கு சூர்யாவை போல் அவன் அம்மாவிடம் எளிதில் ஒட்டி கொள்ள முடியவில்லை என்பதே காரணம்.

ஒருவாரம் சென்ற பின் மகேஷ்வரியை வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தனர்.

மருத்துவமனையில் இருக்கும் போது மகளை வேலைக்கு அனுப்பிவிட்டு சுசிலா சுந்தரம் விஷ்வா என மாறி மாறி மகேஷ்வரியை பார்த்து கொண்டனர்.

இப்போது டிஸ்சார்ஜ் செய்து இருக்க,  ஒரு செவிலியரை மகேஷ்வரியை பார்த்து கொள்ள வேலைக்கு சேர்த்து இருந்தனர். வீட்டில் இருக்கும் நேரம் ரஞ்சனி மகேஷ்வரியை பார்த்து கொண்டாள்.

இது எதையும் அறியாத குழலி ஒரு புறம் விஷ்வாவிடம் சண்டை வளர்த்து கொண்டிருக்க, மறுபுறம் சூர்யா மட்டும் அல்லாது அவனின் வீட்டில் உள்ள அனைவரின் எண்ணிற்கும் ரஞ்சனியின் அரை நிர்வாண வீடியோ வந்து இருந்தது.

சூர்யா அவளை அடித்து அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்பி இருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

69. கண்கள் நிறைந்த ஓவியமே!!
பகலவனின் அன்றைய முதல் ஒளி கதிர் பூமி பெண்ணவளுக்கு வாழ்த்து செய்தியாக வர, உற்சாகத்துடன் தன்னகத்தே உள்ள ஜீவ ராசிகளை தென்றல் காற்றோடு அழகாக அரவணைத்தாள்.. இடைவிடாது சுழலும் சுந்தரியவள்.

சமையல் அறையில் சரசுவின் உதவியோடு ரஞ்சனி வேகமாக சுழன்று கொண்டு இருந்தாள்.

சத்தான உணவுகளை அவள் மாமியாருக்கு சமைத்து முடித்தவள், மாமனார் மற்றும் கணவனுக்கு மதிய உணவை பேக் செய்து வைத்தால். விஷ்வா வீட்டில் இருப்பதால் அவனுக்கு ஹாட் பாக்ஸில் உணவை எடுத்து வைத்து விட்டாள்.

வேலைகள் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தாலும், ரஞ்சனியின் முகம் மட்டும் தெளிவில்லாமல் இருந்தது. நேற்று இரவு நடந்ததை அவள் மூளை தன்னால் நினைவூட்டியது.

நேற்று இரவு சூர்யா அவன் அன்னையின் அறையில் பேசி கொண்டு இருக்க, அப்போது ரஞ்சனியின் தொலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்து இருந்தது, அவள் என்ன என்று திறந்து பார்க்க, அன்று அவள் ஹரியின் வீட்டில் ஆடையை சுத்தம் செய்யும் பொழுது ஆடை கலைந்த வீடியோ அது. அவளுக்கு அது நன்றாக நினைவில் இருந்தது. அடுத்ததாக ஒரு குறுஞ்செய்தி வந்து இருந்தது.

அதில் ஒரு வீட்டின் விலாசம் இருந்தது இந்த விலாசத்திற்கு நாளை காலை 11மணிக்கு சரியாக வர வேண்டும் அப்படி இல்லையெனில் இந்த வீடியோ உன் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரபடும் என்று மிரட்டி இருந்தது.

முதலில் பெண்ணிற்கே உரிய பயம் மனதில் வந்து சென்றாலும், யாரு இந்த பன்னாடை என்று யோசித்து கொண்டிருந்தாள்.

அந்த நேரம் தான் சூர்யா அறைக்குள் நுழைந்தான், அவனுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்று நினைத்தவள், வேக வேகமாக அந்த புது எண் குறுஞ்செய்தியை மட்டும் வாட்சப்பில் மறைத்து வைத்தால். அதற்குள் சூர்யா வந்து அவளை பின்னிருந்து அனைத்து கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து குட்டி குட்டி முத்தங்களை வைத்து பேச தொடங்கினான்.

கிட்டன் என்று கிறக்கமாக அழைத்தான் சூர்யா, அவன் அழைப்பின் மாற்றத்திலே அவன் நிலை உணர்ந்தவளுக்கு நிச்சயமாக புரிந்தது. இன்று அவனின் ஆசைக்கு இணங்க முடியாது என.

கோவமா டி, இவ்ளோ நாள் உன்ன சரியா கண்டுக்கலன்னு..

இல்ல சூர்யா என்னால உங்கள புரிஞ்சிக்க முடிஞ்சிது. வீட்ல அத்தைக்கு இப்படி இருக்கும் போது எப்படி உங்களால என்கூட நேரம் செலவழிக்க முடியும்.

அன்னைக்கு ரெண்டு பேரும் எவ்ளோ ஆசையா இருந்தோம் நம்ம லைப் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு ஆனா அதுக்குள்ள என்னென்னமோ ஆகிடுச்சு. என்று மோகமாக பேசிக்கொண்டே அவள் காது கடித்து செல்ல இம்சைகளை செய்தான்.

அவளை தன் புறம் திருப்பியவன், அவள் சுதாரிக்கும் முன் இதழை சிறை பிடித்தான். ஆனால் பாவம் ரஞ்சனியால் தான் அவனோடு ஒன்ற முடியவில்லை. அவள் மனம் முழுதும் தெரியாத எண்ணில் இருந்து வந்த அவளின் வீடியோவில் நிலைத்து இருந்தது.

சூர்யாவின் மார்பில் கைவைத்து தள்ளி நிறுத்தியவள், ப்ளீஸ் சூர்யா இன்னைக்கு வேண்டாம்.

ஏனோ இம்முறை அவனுக்கு கொஞ்சம் கோவமும் வந்துவிட ஏன் என்றான், கொஞ்சம் அசதியா இருக்கு. இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ப்ளீஸ் என்றால்.

அவனுக்கு கடுப்பாக இருந்தது. ச்சை எல்லாம் என் தலையெழுத்து என்னோட ஒரு ஆசை கூட உன்கிட்ட நிறைவேற மாட்டிக்கிது என்று தலையில் அடித்து கொண்டான். அதில் ரஞ்சனிக்கு ஒரு மாதிரி ஆகிவிட தன் மனநிலையை மாற்றி கொண்டு அவன் அருகே வந்து சாரி சூர்யா என்று அவனை கட்டி அனைத்து கொண்டாள்.

அவளை விலக்கிவிட்டவன் சரி விடு இன்னைக்கு எதுவும் வேண்டாம் போய் தூங்கு என்று கூறிவிட்டு அவன் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான்.

நீண்ட நேரம் கழித்து உள்ளே வரும் போது ரஞ்சனி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள்.

****

அனைத்தையும் நினைத்து பார்த்த  ரஞ்சனிக்கு மலைப்பாக இருந்தது. ஹரி தான் செய்து இருக்கிறான் என உறுதியாக நம்பினால். இவனை போய் நல்லவன்னு நினைச்சோமே என்று தோன்றியது.

என்மேல தான் தப்பு அன்னைக்கு அவன் செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லிட்டு அவனை தவிர்த்து இருக்கணும். அவன்கிட்ட ஃப்ரன்ட்ஷிப் வச்சு இருக்க கூடாது என்று நினைத்தால்.

ஆம் உண்மை தான், ஹரி செய்த உதவிக்கு பின், ரஞ்சனி அவனை நல்ல நண்பனாக ஏற்று கொண்டு பழகினால்.

வீட்டில் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லாதது வரை கூறியிருந்தால். சில நேரம் ஹரி உணவு கொண்டு வராத நேரத்தில் அவனோடு தன் உணவை பகிர்ந்து கொள்வால்.

இப்போது அவனின் உண்மை சுயருபம் கண்டு கொதித்து போனால்.

வீட்டில் யாரிடமும் எதையும் கூறவில்லை. தனியாகவே இதை பார்த்து கொள்ளலாம் என்று முட்டாள் தனமான முடிவை எடுத்தால் ரஞ்சனி.

எப்போதும் அலுவலகம் கிளம்புவது   போல் கிளம்பினால். அவள் தினசரி வேலைகளை சரியாக செய்து கொண்டு இருந்தாலும், அவள் சிந்தை இங்கு இல்லாததை சூர்யா  கவனித்து கொண்டு தான் இருந்தான்.

கையில் வாட்சை அணிந்து கொண்டே, ரஞ்சி ஏன் ஒரு மாதிரி இருக்க எதாச்சும் பிரச்சனையா என்றான்.

சட்டென்று சுதாரித்து கொண்டவள், முகத்தை மாற்றி கொண்டு அதலாம் ஒன்னும் இல்ல சூர்யா. எப்பவும் போல தான் இருக்கன், என்று சமாளித்தால். சரி வா நான் உன்ன ட்ரோப் பண்ணிட்டு கிளம்பறன் என்று தயாராகி நின்றான். அ..து அது.. வந்து என்று தயங்கியவள் இல்ல சூர்யா நீ போ, நான் இன்னைக்கு லேட்டா போலாம்னு இருக்கன்.

அவளை கூர்ந்து பார்த்தவன் ஏன் என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா  என்று அவளை நெருங்கினான்.

ஹய்யோ ப்ளீஸ் ஏன் இப்படி எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுட்டு இருக்க? ஆபீஸ்க்கு லேட்டா போனா கூட உன்கிட்ட காரணம் சொல்லனுமா? என்று தேவையில்லாமல் சூர்யா மீது எரிந்து விழுந்தாள்.

அவளை ஒரு நிமிடம் நிதானமாக பார்த்தவன் எதுவும் பேசாமல் அவன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

*****

ரஞ்சனி ஆட்டோகாக காத்து கொண்டிருந்தாள் அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை கை காட்டி நிறுத்தி செல்ல வேண்டிய இடத்தை கூறி அந்த ஆட்டோவில் ஏறி இருந்தாள்.

கூகிள் மாப்பில் செல்லும் வழியை சரி பார்த்து கொண்டு இருந்தாள் ரஞ்சனி.

சிறிது நேரத்தில் ஆட்டோ ஒரு இடத்தில் நிற்க, அண்ணா இங்க இல்ல இன்னும் கொஞ்சம் தூரம் போகணும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மீண்டும் வண்டியை எடுத்தவன் ஒரு வீட்டின் திறந்து இருந்த கேட்டிற்குள் நுழைந்து இருந்தான்.

ரஞ்சனிக்கு ஏதோ தவறாக பட அவள் கைப்பக்குள் இருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுப்பதற்குள் சுதாரித்த அந்த ஆட்டோ காரன் அவள் கைப்பயை வாங்கி தூக்கி எரிந்தான்.

என்னடி ஓவரா துள்ளர என்று அவளை பலவீன படுத்த கன்னத்தில் அரைந்து இருந்தான் அந்த ஆட்டோ ஓட்டுநர். அவளை தர தரவென உள்ளே இழுத்து சென்றவன் அவளை கீழே தள்ளி கதவை சாத்தி இருந்தான்.

அவன் காக்கி சட்டையை உருவி எரிந்து அவள் முன் நின்றான்.

பொறுக்கி நாயே யாரு டா நீ? எதுக்கு டா என்ன இங்க கூட்டிட்டு வந்த என்று கேட்க.

பரவால்ல நான் கூட நெனச்சன் வருவியோ மாட்டியோன்னு வந்துட்ட என்றான். அவளுக்கு ஏதோ புரிவது போல் இருக்க..

நீதான் நேத்து எனக்கு அந்த வீடியோவ அனுப்பிச்சியா என்றால்.

சாட்சாத் அது நானே தான்.

அந்த வீடியோ எப்படி உனக்கு கிடைச்சுது அது ஹரி வீட்டோட பாத்ரூம் தான என்றால் சந்தேகமாக.

ஆமா யாரு இல்லன்னு சொன்னா?

நான் அந்த ஹரியோட ஃப்ரன்ட். போனவாரம் மீட் பண்ணும் போது உன்ன பத்தி பேசி சோகம் தாங்காம குடிச்சான், அப்போ தான் போதைல உளறுனான் பாத்ரூம்ல கேமரா வச்சு உன்ன வீடியோ எடுத்தத, அந்த வீடியோ வச்சு அவன் ஆசையா காதலிச்ச உன்ன அடைய முடியுமான்னு யோசிச்சு இருக்கான்.

ஆனா அவனுக்குள்ள இருக்க பயம் அவனை அடுத்த ஸ்டேப்க்கு போகவிடல. ஆனா அந்த அரலுசு பையன் உன்ன உண்மையா தான் காதலிச்சு இருக்கான் போல, அவ்ளோ போதைல கூட அந்த வீடியோவ எனக்கு காட்டுன்னு சொல்லியும் காட்டல..

நான் சும்மா இருப்பனா அதான் அவனுக்கு போதை ஏறுற அளவுக்கு ஊத்தி குடுத்து அவனை மாட்டையாக்குனன்.

அவன் போன் எடுத்து லாக் ஓபன் பண்ணி உன் வீடியோ பார்த்தன், ஹப்பா என்ன ஸ்ட்ரக்சர் டி நீ? வீடியோல பார்க்கும் போதே எனக்கு அப்படி இருந்துச்சு, என்ன ஆனாலும் பரவால்ல உன்ன அனுபவச்சிடணும்னு தான் பிளான் பண்ணி தூக்குனன்.

நீ யார்கிட்டயாவது சொல்லி அந்த அட்ரஸ்க்கு வர வச்சனா அதான் உனக்கு ஃபேக் அட்ரஸ் குடுத்து நானே ஆட்டோ டிரைவரா மாறி உன்ன இங்க தூக்கிட்டு வந்தன்.

கவலை படாத நான் மட்டும் உன்ன அனுபவிக்க போறது இல்ல, இன்னும் ரெண்டு பேர் வருவானுங்க.. என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டது.. சொல்லல என்று கோணல் சிரிப்பை சிரித்து கொண்டு அந்த மிருகம் சென்று கதவை திறக்க அவனை போல் இன்னொரு மிருகம் நின்று கொண்டு இருந்தது.

ரஞ்சனிக்கு இருவரையும் பார்க்க பயமாக இருந்தது. இங்கு ஹரி தான் இருப்பான் அவனை நாமே பார்த்து கொள்ளலாம் என்று தைரியமாக வந்தவளுக்கு இங்கு நடப்பதை பார்த்து ஈர கொலை நடுங்கியது. சூர்யாவிடம் விஷயத்தை கூறாதது எவ்வளவு பெரிய தவறு என புரிந்தது.

டேய் அவன் எங்க டா என்று முதலாமானவன் வந்தவனிடம் இன்னொருவனை பற்றி கேட்க, வந்துட்டு இருக்கான் டா, நம்மள ஸ்டார்ட் பண்ண சொன்னான். அவன் நடுவுல வந்து சேர்ந்துக்குறான என்று ரஞ்சனியை பார்த்து கொண்டே கூற அவளுக்கு தான் அவர்கள் பேச்சு அருவருப்பாக இருந்தது.

மச்சான் வீடியோல விட நேர்ல பார்க்க செம பீஸ்ஸா இருக்காடா, ஒரு வாட்டியோட நம்ம ஆசை அடங்காது. ஆமா டா அதுக்கு தான், இவளை செய்றத வீடியோ எடுத்து வச்சிக்கிட்டு தோணும் போதுலாம் கூப்பிட்டுக்கலாம்.. இப்போ மாதிரி அப்பவும் வந்து தான ஆகணும். இல்லனா அந்த வீடியோ எல்லாம் சமூக வலைத்தளத்தளையும் பரவும்ன்னு நாம சொல்லி ரஞ்சனி மேடம்க்கு தெரியனுமா.. என்று சிரித்து கொண்டே மிரட்டினான்.

டேய் மணி இதுக்கு மேல தாங்க முடியாது டா, என்று அவசர பட்டவன் ரஞ்சனியை நெருங்கி அவள் துப்பட்டாவை உருவி போட்டான். இன்னொருவன் அவள் மேலாடை மேல் கை வைத்து கிழித்து எரிந்தான்.

 

 

 

 

 

70. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அந்த இரு மிருகங்களும் ரஞ்சனியிடம் தவறாக நடந்து கொள்ள முயல, அப்போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. டேய் அந்த மூர்த்தி அதுக்குள்ள வந்துட்டான் போல போய் கதவை திற அதுக்குள்ள நான் இவள உறிச்ச கோழியா மாத்தி வைக்குறன் என்றவன் பல்லை இளித்து கொண்டு ரஞ்சனியிடம் நெருங்கினான்.

ரஞ்சனி மேலே உள்ளாடையும் இடுப்பில் சுடிதார் பேண்ட் மட்டுமே  இருந்தது தன் மானம் காக்க இரு கைகளையும் குறுக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள். எவ்வளவு தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கற்பிற்கு ஒரு கலங்கம் ஏற்படும் போது தடுமாறுவது உண்மை தானே, அந்த நிலையில் தான் ரஞ்சனியும் இருந்தாள். அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதற்குள் மணி என்பவன் கதவை திறக்க முன்னிருந்தவர்களை கண்டு, கொஞ்சம் பின் வாங்கினான். வந்திருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை அவனுக்கு. இருந்தும் இப்படி ஒரு சூழலில் வந்தவர்களை கண்டு மிரண்டவன் அவன் வாய் திறப்பதற்குள் சூர்யா அவன் முகத்தில் விட்ட குத்தில் வாயில் ரத்தம் கொப்பளித்தது, அவன் சுதாரிப்பதற்குள் விஷ்வா அவன் கன்னத்தில் விட்ட அறையில் கன்னம் கிழிந்து ஒரு பல் தெறித்து விழுந்தது.

இன்னொருவன் உள்ளிருந்து வருவதற்குள் விஷ்வாவும் சூர்யாவும் மணி என்பவனை சுயநினைவு இல்லாத அளவிற்கு அடித்து போட்டுவிட்டனர்.

சூர்யாவை கண்ட ரஞ்சனி சொல்ல முடியாத உணர்வில் தவித்தால். சூர்யா என்று அவள் உதடுகள் விம்மியது. எதிரே வந்தவனை சூர்யா வயிற்றில் குத்துவிட்டு கிழே சரித்தான், அதற்குள் விஷ்வா முன்பு அடித்தவனை இழுத்து கொண்டு போய் ஒரு அறையில் அடைத்து விட்டு வர, இன்னும் சூர்யாவின் வெறி அடங்காமல் கையில் கிடைத்தவனை புரட்டி எடுத்து கொண்டிருந்தான்.

விஷ்வா அவனை இழுத்து டேய் ரஞ்சிய போய் பாரு நான் இவனை பார்த்துக்குறன் என்றவன் சூர்யாவை திசை திருப்பி இருந்தான்.

சட்டையை கழட்டி கொண்டே ரஞ்சனியை நெருங்கியவன், அவளை ஒரே தூக்காக தூக்கி நிறுத்தி அவன் சட்டையை அணிவித்துவிட்டான். அவளிடமும் அவன் முகம் கனியவில்லை. அவள் கன்னத்தை அப்போது தான் கவனித்தான்.. அவள் கன்னத்தை மென்மையாக வருடி.. யார் உன்ன அடிச்சது என்றான்.. விஷ்வா கையில் அடிவாங்கி கொண்டிருப்பவனை காட்டினால் ரஞ்சனி. இருக்கும் மொத்த கோவத்தையும் தேக்கி கொண்டு அவனை நெருங்க, சூர்யா என்று மெல்லிய குரலில் அழைத்தாள் ரஞ்சனி..

உன்மேல கொலவெறில இருக்கன் எதுவும் பேசாத, என்று எச்சரித்தான்.

அவள் அழுகை வெடிக்க, சூர்யா கண்டு கொண்டான் இல்லை. அதற்குள் விஷ்வாவை நெருங்கியவன், அடிவாங்கி கொண்டிருந்தவனின் வலது கையை முருங்ககாய் உடைப்பது போல் உடைத்து இருந்தான்.. அவனின் கோவத்தில் ரஞ்சனி தான் கழுகிடம் சிக்கிய கோழி குஞ்சு போல் நடுங்கி கொண்டு இருந்தாள்.

அதற்குள் அவர்களின் மூன்றாவது நண்பன் மூர்த்தி என்பவன் வந்தான், அங்கு அடிப்பட்டு வலியில் துடித்து கொண்டிருக்கும் நண்பனை கண்டு, வந்த வழியே ஓட நினைக்க அதற்குள் விஷ்வா அவனை பிடிக்க சென்றான்.  அவன் அங்குள்ள மோட்டார் அறைக்குள் புகுந்து கொண்டு கதவை உள்பக்கம் தாழ் போட்டு கொண்டு போனில் உள்ள ரஞ்சனியின் வீடியோவை ஏற்கனவே சேமித்து வைத்து இருந்த அவளின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிற்கு அனுப்பினான். அடுத்து அவன் அனைத்து சோசியல் மீடியாவிலும் அந்த வீடியோவை பகிர நினைக்க,  கதவை உடைத்து கொண்டு அண்ணன் தம்பி இருவரும் புயல் என உள்ளே நுழைந்தனர்.

மூர்த்தி என்பவன் போனை சுவற்றில்  அடித்து உடைத்து இருந்தான். அவன் செய்த செயலை அறியாதவர்கள்  அவனையும் அடித்து தொங்கவிட்டனர். சூர்யா அவன் நண்பன் நந்தனை அழைத்து டேய் என்ன நீயும் சினிமால வர போலீஸ் மாதிரி எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பறம் தான் வருவியா என்று நண்பனிடம் கத்தி கொண்டு இருந்தான். வந்துட்டோம் டா என்று பதில் கொடுத்தவன் சொன்னது போல் ஜீப்பை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினான். 

ரஞ்சனி சூர்யாவின் காருக்குள் இருக்க, அண்ணன் தம்பி இருவரும் அந்த மூன்று கயவர்களையும் நந்தனிடம் ஒப்படைத்தனர்.

ரஞ்சனி பேர் இதல வர கூடாது என்று சூர்யா சொல்ல, இதல்லாம் நீ சொல்லனுமா டா, நான் பார்த்துக்குறன்.. ஆல்ரெடி எங்க ஆளுங்க இந்த மூணு பேர் வீட்டுக்கும் போய் இவங்க லேப்டாப் டேப் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டாங்க.. வேற எதலையாச்சும் வீடியோ காப்பி பண்ணி வச்சு இருக்காங்களான்னு செக் பண்ண, இவனுங்க குடும்பமே இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கு. நீ ஃபிரீயா விடு இந்த விஷயத்தை நான் பாத்துக்குறன் என்றான்.

அதற்குள் விஷ்வா போன் பேசிவிட்டு வர, ஹாய் அண்ணா என்று நீண்டநாள் கழித்து பார்த்த விஷ்வாவிடமும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு சென்றான் நந்தன்.

இருவரும் காரில் ஏறினர், விஷ்வா காரை ஓட்ட சூர்யா முன் சீட்டில் அமர்ந்து கொண்டான். ரஞ்சனி பின் சீட்டில் இருந்தாள். சூர்யாவின் சட்டையை தான் அணிந்திருந்தாள், விஷ்வா ஒரு பிரபல கடையின் முன்பு வண்டியை நிறுத்தினான். சூர்யா புரிந்து கொண்டு உள்ளே சென்று ரஞ்சனிக்கு வேறு உடை வாங்கி வந்து கொடுக்க, ஆண்கள் இருவரும் வெளியே நின்று கொண்டனர் அவள் உடைமாற்ற வேண்டி.

சிறிது நேரத்தில் ரஞ்சனி கார் ஜன்னலை தட்டி இருவரையும் அழைத்தாள். மீண்டும் அமைதியான கார் பயணம் அதில் ரஞ்சனியின் விசும்பல் சத்தம் மட்டும் கேட்க, பொறுத்து பொறுத்து பார்த்த விஷ்வா காரை சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்தான்.

ஹேய் இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க? பண்றது எல்லாம் அவசர குடுக்க வேலை.. இதல அழுகை வேற வருதா உனக்கு என்று அவளிடம் எரிந்து விழுந்தது சூர்யா இல்லை விஷ்வா தான்.

ரஞ்சனியால் எதுவும் பேச முடியவில்லை.

அப்படியே மனசுல ஜான்சி ராணின்னு நினைப்பு. யார்கிட்டயும் எதுவும் சொல்லாம தனியா வந்து இருக்க.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா என்ன பண்றது. மனசுல கொஞ்சம் ஆச்சும் பயம் இருக்கா என்று பொறிந்து தள்ளினான் விஷ்வா.

உனக்கு பயமோ இல்லையோ ரஞ்சி நாங்க பயந்துட்டோம். டிராபிக்ல மாட்டிகிட்டு இங்க வர வரைக்கும் எங்க உயிரு எங்ககிட்ட இல்ல. நாங்க வர கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் என்ன நடந்து இருக்கும்ன்னு எங்களால நினைச்சு கூட பார்க்க முடியல என்றான் உண்மையான பயத்துடன்.

இங்க பாரு ரஞ்சி, இப்போ தான் நீ எங்க வீட்டு மருமக.. எல்லாத்துக்கும் முன்னாடி நீ நான் சூர்யா எல்லாம் ஃப்ரன்ட்ஸ் டி, அது உனக்கு மறந்து போச்சா.. உன் காலேஜ்ல ஒரு சீனியர் லவ் டார்ச்சர் பண்ணான்னு என்னையும் இவனையும் கூட்டிட்டு போனியே எல்லாத்தையும் மறந்துட்டியா? உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் எங்கள தான கூட்டிட்டு போவ, இப்போ என்ன ஆச்சு உனக்கு?

ரஞ்சனி எதுவும் பேசாமல் தலை குனிந்து அழுது கொண்டிருந்தாள்.. அதற்கு மேல் விஷ்வாவினால் அவளை கடிந்து கொள்ளவும் முடியவில்லை.

சூர்யா விஷ்வா பேசுவதை மட்டும் தான் கேட்டு கொண்டிருந்தான். ரஞ்சனி பக்கம் திரும்பவே இல்லை.

விஷ்வா காரில் இருந்து இறங்கி, ஒரு ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தான். ரஞ்சனிக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் பேமிலி பேக்கை வாங்கி வந்து அவளோடு பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அவளுக்கு ஸ்பூனில் எடுத்து கொஞ்சம் ஊட்டிவிட்டான்.

முன் சீட்டில் இருந்த சூர்யா அவன் அண்ணனை வெறியாக முறைத்தான், விஷ்வா எதையும் கண்டு கொள்ளவில்லை.

நீங்க எப்படி சரியான நேரத்துக்கு அங்க வந்திங்க என்றால் இருவரையும் பார்த்து.

அதல்லாம் நீ உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ ரஞ்சி, எனக்கு பிலைட்க்கு டைம் ஆகுது வீட்டுக்கு போய்ட்டு பிரெஷ்ஷா ஒரு குளியல போட்டுட்டு என் பொண்டாட்டிய பார்க்க போகணும்.

அவகிட்ட ஒழுங்கா பேசியே பத்து நாள் ஆச்சு, என்று அவன் மனைவியின் நினைவில் உழன்றான்.

மூவரும் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

ரஞ்சனியின் அம்மா அப்பா கல்யாண சுந்தரம் மகேஷ்வரி என வீட்டு உறுப்பினர்கள் மட்டும் கூடத்தில் இருந்தனர். வந்ததும் சூர்யாவை பிடித்து கொண்டார் மகேஷ்வரி. டேய் என்ன ஆச்சு டா உங்க மூணு பேருக்கும் மாத்தி மாத்தி போன் பண்ணோம் யாருமே எடுக்கல எங்க போனீங்க நீங்க என்று பேசி கொண்டே போனார்..

மா.. என்ன ஆச்சு ஏன் இப்படி எமோஷனல் ஆகுறீங்க என்றான் சூர்யா.. என்ன ஆச்சா? இங்க பாரு, இந்த வீடியோவ என்று கையில் இருந்த போனை அவனிடம் நீட்டினார்.

அப்போது தான் அந்த வீடியோவை கண்டான் சூர்யா. விஷ்வா சூர்யா அவர்கள் போனை எடுத்து பார்க்க அவர்களது வாட்ஸப்பிலும் ரஞ்சனியின் அரைநிர்வாண வீடியோ வந்து இருந்தது.

சூர்யாவின் பார்வை ரஞ்சனியை சுட்டது. ஒன்னும் இல்லமா ஃபேக் வீடியோ டெலீட் பண்ணிட்டு போய் வேலைய பாருங்க என்றவன் சொன்னதோடு மட்டுமில்லாமல் அனைவரிடமும் இருந்த போனை வாங்கி டெலீட் செய்து இருந்தான். அதில் விஷ்வா சுந்தரம் பரமு என அப்போதே வீடியோவை டெலீட் செய்து இருக்க, மகேஷ்வரி மற்றும் சுசிலாவிடம் இருப்பது மட்டும் சூர்யாவால் டெலீட் செய்யப்பட்டது.

சூர்யா ரஞ்சனியை யாரிடமும் பேசவிடாமல் அறைக்கு அழைத்து வந்துவிட்டான்.

சிறிது நேரத்தில் சூர்யாவிற்கு அவன் நண்பன் நந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்ற சூர்யாவிற்கு பிரச்சனையின் தொடக்கம் எங்கே என புரிந்தது. இப்போ அந்த ஹரி ஸ்டேஷன்ல தான் இருக்கானா என்று கேட்டவனின் குரலில் அவனை கொள்ளும் வெறி அப்பட்டமாக தெரிந்தது.

ரஞ்சனிக்கு ஹரியின் பெயர் கேட்டதும் அனைத்தும் சூர்யாவிற்கு தெரிந்துவிட்டது என புரிந்து கொண்டாள்.

எதிர்ப்புறம் இருந்த நந்தன் சூர்யாவின் கோவத்தை உணர்ந்து டேய் எப்பா, ஆல்ரெடி நீயும் உங்க அண்ணனும் சேர்ந்து மூணு பேரையும் பொறட்டி எடுத்துடிங்க, அதுக்கே நாங்க பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்னு தான் சமாளிக்கணும், இவனையாச்சும் விட்டு வைங்க.. நான் இவனை என் பாணில கவனிச்சுக்குறன் இனிமேல் தங்கச்சி பக்கம் வரமாட்டான் என்று கூறியும் சூர்யாவிற்கு கோவம் தீரவில்லை.

மச்சான் ப்ளீஸ் டா புரிஞ்சிக்கோ, அரரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கோம் அவனுக்கு எதாச்சும் ஆச்சுன்னா பதில் சொல்ல வேண்டியது நான் தான் என்று அவன் நிலையை எடுத்து கூற, சூர்யா கொஞ்சம் சமாதானம் அடைந்து என்னமோ பண்ணு என்று போனை அணைத்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

71. கண்கள் நிறைந்த ஓவியமே!!
போன் பேசி முடித்தவன், குறையாத கோவத்தோடு அறையில் இருந்து வெளியே செல்ல முயல, ரஞ்சனி வேகமாக சென்று சூர்யாவை பின்னிருந்து அனைத்து கொண்டாள்.

சூர்யா ப்ளீஸ் பேசு டா, என்கிட்ட நீ இன்னும் ஒரு வார்த்தை கூட பேசல கஷ்ட்டமா இருக்கு என்றால்.

அவன் உடலில் அழுந்த பற்றியிருந்த அவள் கையை எடுத்துவிட்டு, என்ன கொஞ்சம் தனியா விடு ரஞ்சி.. உன்ன பார்த்தாளே எனக்கு கோவம் தான் வருது. தேவல்லாம எதாச்சும் வார்த்தைய விட்டு கைநீட்டிட போறன்.

ரஞ்சனி அழுது கொண்டே நிற்க, சூர்யா அவளை கண்டு கொள்ளாமல் அறையை விட்டு வெளியே சென்றான்.

கூடத்தில் யாரும் இல்லாது இருக்க, ஒரு பெருமூச்சை விட்டவன்.. விஷ்வா அறைக்கு சென்றான்.. கதவு திறந்தே இருக்க விஷ்வா என்று அழைத்து கொண்டே உள்ளே சென்றான்.

வாடா, என்று தம்பியை அழைத்தவன் கொஞ்சம் உடைகளை பேக் செய்து கொண்டிருந்தான்.

என்ன டா கிளம்பிட்டியா என்று கேட்டு கொண்டே மெத்தையில் அமர்ந்தான்..

ஹ்ம்ம் ஆமா டா, இதுக்கு மேல இங்க இருந்தன் உன் அண்ணன நீ உசுரோட பார்க்க முடியாது என்றான் விளையாட்டாக..

சரி சொல்லு நீ ஏதோ சொல்ல வந்து இருக்க போல..

ஹ்ம்ம் ஆமா டா என்று ரஞ்சனி வங்கியில் நகையை மாற்றி கொடுத்தது அதற்கு ஹரி உதவியது அப்போது ரஞ்சனி அவர்கள் வீட்டிற்கு சென்றது, ஹரி செய்த கேவலமான செயல் என அனைத்தையும் கூறினான்..

கவனமாக கேட்டு கொண்டான் விஷ்வா.

ரஞ்சி சொன்னாளா எல்லாத்தையும்?

அவகிட்ட நான் இன்னும் பேசவே இல்ல.. அவ மூஞ்ச பார்த்தா கோவம் தான் வருது அதான் இங்க வந்தன்.

டேய் லூசு நடந்த பிரச்சனைக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம் அவமேல எதுக்கு கோவப்படுற? அவளே பயந்து போய் இருக்கா.. பொண்டாட்டிக்கு ஆறுதல் சொல்லாம கோவப்பட்டுட்டு இருக்க என்று விஷ்வா தம்பியை கடிந்து கொண்டான்.

வாய மூடு விஷ்வா? நீங்க இல்லாத அப்போ இதெல்லாம் நடந்துச்சு சூர்யா.. இப்போ இந்த மாதிரி ஒருத்தன் மிரட்டுறான் அப்படின்னு சொன்னா வாயில இருக்க முத்தா கொட்ட போகுது.. எல்லாத்தளையும் அவசரம் முந்திரி கொட்ட மாதிரி எதாச்சும் பண்ணிட்டு இப்போ வந்து சாரி சொல்ல வேண்டியது.

நேத்து நான் மட்டும் அவ வாட்சப்ப பார்க்காம இருந்து இருந்தா என்ன ஆகியிருக்கும் யோசிச்சு பாரு.. அதுவும் மேடம் என்ன பார்த்ததும் வேக வேகமா அந்த ச்சாட்ட ஹைட் பண்ணாங்க தெரியுமா? என்று அந்த நினைவில் மூழ்கினான்..

*****

நேற்று ரஞ்சனி வந்த குறிஞ்செய்தியில் கவனத்தை செலுத்தி கொண்டிருக்கும் போதே, சூர்யா அறைக்குள் வந்துவிட்டான். அவளின் தெளிவில்லாத முகத்தை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்க அப்போது தான் ரஞ்சனி வேக வேகமாக அந்த ச்சாட்டை மறைக்க முயன்றால். அதற்குள் சூர்யா அவளை பின்னிருந்து அனைத்து இருந்தான்.. சந்தேகம் தோன்றியது அவனுக்கு ஆனால் ரஞ்சனி மறைக்க முயன்றதை அவளிடம் கேட்ப்பது வீண் என்று நினைத்தவன், அப்போது அவளிடம் அவர்கள் கூடலை பற்றி பேசினான் அவள் எண்ணத்தை திசை திருப்ப.. அவள் முடியாது என்றதும் கோவப்படுவது போல் காட்டி கொண்டு அறைக்கு வெளியே சென்றான்.

அவன் திரும்பி வருகையில், ரஞ்சனி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. அவள் போனை எடுத்து அந்த குறுஞ்செய்தியை கண்டவனுக்கு கை முஷ்ட்டி இறுகியது அவ்வளவு ஆத்திரம்.. அதிலும் ரஞ்சனியின் அந்த காணொளியை காணும் போது, அவ்வளவு வலி கண்டான். அவள் மனநிலையை எண்ணி.. அவன் மனைவி மீதும் கோவம் கொண்டான், அவனிடம் மறைத்ததற்காக மட்டுமே..

அவனின் ஆறாம் விரலை துணைக்கு அழைத்து கொண்டு கோவத்தோடு வெளியே சென்றான், அப்போது தான் தோட்டத்தில் நின்று கொண்டு மனைவியோடு ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த விஷ்வாவை பார்த்தான். சிகரெட் புகையின் வாசத்தில் திரும்பி பார்க்க அங்கு சூர்யா நின்று கொண்டிருந்தான்..

அவன் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என உணர்ந்த விஷ்வா, லைனில் இருந்த குழலியிடம், அப்பறம் பேசுறன் டி என்றவன் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் போனை கட் செய்து இருந்தான்.

சூர்யாவிடம் வந்தவன் என்ன ஆச்சு என்றான் ஒற்றை கேள்வியாக.. முதலில் விஷ்வாவிடம் சொல்ல தயங்கியவன் அவனின் முறைப்பில் ரஞ்சனிக்கு அவள் போனில் வந்த மிரட்டல் பற்றியும் பின் அவள் தன்னிடம் மறைப்பதை பற்றியும் கூறினான்.

அனைத்தையும் கேட்ட விஷ்வாவிற்கும் கோவம் வந்தது. சரி ஃபிரீயா விடு.. நீயும் எதுவும் தெரிஞ்சா மாதிரி கட்டிக்காத..

அந்த நம்பர ஹேக் பண்றியா என்றான் சூர்யா..

இந்த மாதிரி பண்றவன் யாரும் அவனோட நம்பர்ல இருந்து பண்ண மாட்டான். புது நம்பர் தான் யூஸ் பண்ணுவான். அதல பெருசா எந்த தகவலும் கிடைக்காது

ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான்..

சரி நாளைக்கு காலைல ரஞ்சனி போன்ல இருந்து உன் போன்க்கு லைவ் லொகேஷன் ஷேர் பண்ணிக்கோ. பண்ணிட்டு அவ போன்ல இருந்து டெலீட் பண்ணிடு, நாம அத ட்ராக் பண்ணி அந்த இடத்துக்கு போலாம் என்றான்.

ஹ்ம்ம் நானும் அத தான் யோசிச்சன். என் ஃப்ரன்ட் நந்தன் கிட்டயும் ஒரு வார்த்தை சொல்றன்..

ஹ்ம்ம் பெட்டெர்.. நீ ரஞ்சிகிட்ட எதையும் கேட்காத.. இப்போ போய் தூங்கு என்று சூர்யாவை அனுப்பி வைத்தான்.

அன்றைய இரவு அப்படியே கழிய.. மறுநாள் காலை சூர்யா ரஞ்சனி சமையல் அறையில் இருக்கும் போதே அவள் போனில் இருந்து அவன் போனிர்க்கும் விஷ்வா போனிர்க்கும் அவளின் லைவ் லொகேஷனை ஷேர் செய்து கொண்டான்.

கடைசியாக ரஞ்சனியிடமும் கேட்டான்.. எதாச்சும் பிரச்சனையா என்று.. இறுதி நிமிடத்திலாவது தன்னிடம் அவள் பிரச்சனையை கூறிவிட மாட்டாளா என்று ஆனால் அப்போதும் அவள் கூறாமல் இருந்தது தான் சூர்யாவிற்கு அவ்வளவு கோவம் வந்தது.

சூர்யா விஷ்வா இருவரும் ரஞ்சனி ஆட்டோவில் ஏறும்வரை மறைந்து இருந்தனர், அதன் பின் அவளை ஃபால்லொ செய்து, வழியில் போக்கு வரத்து நெரிசலில் மாட்டி எப்படியோ அவள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

*****

சரிவிடு நடந்து முடிஞ்சத பத்தி பேசி, அவகிட்ட கோவப்படாத.. அவ பயந்து போய் இருப்பா அவகிட்ட ஆறுதலா பேசு என்றான் மீண்டும்.

அதற்குள் விஷ்வாவும் அவனது சின்ன ட்ரோலியை பேக் செய்து இருந்தான். ட்ரோலி முழுவதும் பூரணி பாப்பா உடைகள் தான்.

ஏன்டா இங்க இருந்து போகும் போதே பாப்பாக்கு ட்ரெஸ் எடுத்துட்டு போனல இப்போ மறுபடியும் எடுத்து போற?

அத ஏன் கேக்குற பாப்பு குட்டிக்கு அங்க ஒரே குஷி தான் தண்ணில விளையாடுறது மண்ல விளையாடுறதுன்னு.. என் பொண்ணு பண்ற அட்டகாசத்துக்கு அவளுக்கு ஒரு நாளைக்கு 4 இல்ல 5 ட்ரெஸ் தேவைப்படுது. நைட்ல ஹாட் வாட்டர் வச்சு குளிக்க வச்சுட்டு தான் தூங்க வைப்பாங்க. சொல்லும் போதே அவன் இதழ்களில் புன்னகை.. ரொம்ப சேட்டை பண்றா என்று அவள் மகளின் நினைவில் மூழ்கினான்.

சரி வா, நானும் ஏர்போர்ட் வரன் என்று சூர்யா எழுந்தான். நானே போய்டுவன் டா நீ ரெஸ்ட் எடு என்றான். எனக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் வேணும் வா போலாம் என்று விஷ்வாவோடு ஏர்போர்ட் கிளம்பி சென்றான்.

*****

இங்கு ரஞ்சனிக்கு ஹரியின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. முதலில் புதிய எண்ணில் இருந்து அழைப்புவரவே தயங்கியவள்.. மீண்டும் இருமுறை அழைப்பு வரவும் போனை அட்டென்ட் செய்து ஹலோ என்றால்.

ரஞ்சனி நான் ஹரியோட அம்மா பேசுறன்மா.. என்றவரின் குரலே கூறியது அவர் அழுது இருப்பதை.

ரஞ்சனிக்கு அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. சொ.. சொல்லுங்க ஆன்ட்டி என்றால்.

என் பையன் பண்ண கேவலமான செயலுக்கு நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறன் மா. இந்த ஒருமுறை அவனை மன்னிச்சு விட சொல்லுமா..

ஒரே பையன்.. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அவன் வாழ்க்கை போய்டுமா. என்ன பார்த்துக்கவும் அவன் மட்டும் தான்மா இருக்கான் என்று அழுது கரைந்தார்.

உங்க பையன் பண்ணது ரொம்ப தப்பு ஆன்ட்டி.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு என் நிலமை வந்தா நீங்க இப்படி தான் பேசுவீங்களா என்றால்.. ரஞ்சனியின் இந்த கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

அவர் மேலும் ஏதோ பேச வர, ப்ளீஸ் ஆன்ட்டி எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் புருஷன் தான் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்து இருக்காரு. அவர்கிட்ட இத பத்தி என்னால பேச முடியாது என்றவள். நான் போன் வச்சுடுறன் ஆன்ட்டி இனிமேல் இது விஷயமா எனக்கு கால் பண்ணாதீங்க என்று கூறி அழைப்பை துண்டித்து இருந்தாள்.

அழைப்பை துண்டித்தவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அப்படி பேசிவிட்டாலே தவிர, உண்மையில் அவள் அந்த வயதானவருக்காக இரக்கம் கொண்டாள். உடல்நிலை சரியில்லாத அவரை பார்த்து கொள்ள யாரும் இல்லையே. இப்படி அழுகிறாரே என்று.

சூர்யாவிடம் இதை பற்றி பேச வேண்டும் என்ற தவறான முடிவை எடுத்து அவள் வாழ்க்கையில் அவளே சிக்கலை ஏற்படுத்தி கொள்ள வழிவகுத்தால்.

*****

சூர்யா விஷ்வாவை விமான நிலையத்தில் விட்டு வீடு வந்து இருந்தான்.. ரஞ்சனி அவர்கள் அறையில் உறக்கம் வராமல் ஏதேதோ எண்ணங்களில் உழன்று கொண்டிருக்க அப்போது தான் சூர்யா உள்ளே வந்தான்.

அலமாரியில் இருந்து டவளை எடுத்து கொண்டு குளியலறை சென்று குளித்து வந்தான்.

குளித்து வந்ததும் ரஞ்சனி அவனிடம் சென்று, சூர்யா டின்னர் எடுத்து வைக்கவா என்று பவ்யமாக கேட்டாள்.

அவள் முகத்தை பார்த்தவன் என்ன நினைத்தானோ.. ஹ்ம்ம் என்றான். அவன் கோவம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது.

அவள் சூர்யாவிற்கு பார்த்து பார்த்து பரிமாறினால்.

சாப்டியா என்றான்.

சாப்பிட்டன் என்பது போல் தலையாட்டினால்..

அவளை முறைத்து விட்டு, இன்னொரு வாட்டி சாப்பிடு என்று அவளுக்கும் உணவை எடுத்து வைத்தான். அவள் சாப்பிடவில்லை என்பதை அறிந்து.

ரஞ்சனிக்கு அவனின் இந்த அக்கறை நிரம்பவும் பிடித்து இருந்தது. மனநிறைவோடு உண்டால்.

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு.. அறைக்குள் வந்தனர்..

ரஞ்சனி தான் தயங்கி தயங்கி பேச்சை துவங்கினால்.

சூர்யா..

அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அது.. அது வந்து அந்த ஹரிய மட்டும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ரிலீஸ் பண்ண சொல்றிங்களா என்றால்..

இறங்கி இருந்த கோவம் மீண்டும் உச்சானிக்கு ஏறியது அவனுக்கு.. கையை இறுக்கி கொண்டு வார்த்தையில் சாடினான்.

ஏன் அவன்மேல எதாச்சும் உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கா??

அவள் புரியல என்க..

ம*று புரியல.. எல்லாம் பிரச்சனைக்கும் காரணமே அவன் தான்.. நீ அவன ரிலீஸ் பண்ண சொல்ற..

தெரியாம தான் கேக்குறன்.. அப்போ அவன் பாத்ரூம்ல கேமரா வச்சு இருக்கான்னு தெரிஞ்சு தான் நீ அவுத்து போட்டுட்டு நின்னியா?

உனக்கு அந்த வீடியோ அனுப்பி மிரட்டி இருக்கான்.. அப்போ கண்டிப்பா உன் சந்தேகம் ஹரி மேல தான் இருந்து இருக்கும். அவன் அங்க இருப்பான்னு தெரிஞ்சு தான போய் இருக்க..

அங்க போய் அவன் என்ன சொன்னாலும் செஞ்சு இருப்பள என்று ஒரு மாதிரியாக கேட்டான் சூர்யா.

அவனை வெறுப்பான பார்வை பார்த்தாள் ரஞ்சனி.

 

 

 

 

 

 

72. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வெறுப்பான பார்வையை அவன் மீது வீசியவள்..

என்ன சொல்ல வர முழுசா சொல்லு.. நான் எல்லாத்துக்கும் துணிஞ்சு அங்க போய் இருக்கன். அந்த ஹரி மேல எனக்கு ஆசை இருக்கு. அதனால அவன் கூட போய் படுத்து இருப்பன்னு சொல்றியா..

கேட்கும் அவள் குரலில் அவ்வளவு கோவம்..

கோவத்தில் இதே அர்த்தத்தை உடைய வார்த்தைகளை தான் சூர்யாவும் கூறினான்.. ஆனால் அவன் சொல்லும் போது வலிக்காத வார்த்தை ரஞ்சனி திரும்ப அவனிடம் அதே வார்த்தையை கேட்கும் போது அவ்வளவு வலியையும் கோவத்தையும் கொடுத்தது.

அப்போது தான் அவன் வார்த்தையின் வீரியத்தை அவனே உணர்ந்தான்.

ரஞ்சி சாரி டி, கோவத்துல என்று அவன் பேசவர..

கலங்கிய விழிகளால் அவள் பார்த்த பார்வை சூர்யாவை தடுமாற வைத்தது.

நீ என்ன உண்மையா தான் லவ் பண்ணியா சூர்யா? எனக்கு சந்தேகமா இருக்கு.

கல்யாணம் ஆனதுல இருந்து இப்போ வரைக்கும் என்ன இன்னொருத்தன் கூட இணைச்சு பேசிட்டு இருக்க..

உனக்கு அந்த மாதிரி பேச எப்படி இருக்குன்னு தெரில.. ஆனா கேட்குற எனக்கு உடம்பு எல்லாம் பத்திக்கிட்டு எரியுது.

உன்கூட என் வாழ்க்கைய தொடங்குறதுக்கு எனக்குள்ள ஒரு தயக்கம் இருந்துச்சு.. அது என்னன்னு எனக்கு சரியா புரியல. ஆனா இப்போ புரியுது இவ்ளோ சந்தேகபடுறவன் கூட எப்படி என் வாழ்க்கைய தொடங்குறதுன்னு தான் நான் தயங்கி இருக்கன்.

உனக்கு ஒரு கவுன்சிலிங் தேவை டா.. ச்சீ என்று அவனை பார்த்து அருவருத்தால் ரஞ்சனி.

ரஞ்சி சத்தியமா நான் கோவத்துல தான் டி பேசுனன்.. நான் எப்பவும் உன்ன சந்தேகப்பட்டதே இல்லை.

அவன் பேசும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை ரஞ்சனி.

சூர்யாவின் வார்த்தைகளில் முழுதாக உடைந்து போனால்.

அவள் பேகை எடுத்து அவள் உடைகளை எடுத்து வைக்க துவங்கினால்.. எங்க டி போற, என்று அவள் கையை பிடித்து உடை எடுத்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தினான் சூர்யா.

ச்சீ தொடாத என்று அவன் கையை  உதறிவிட்டாள்.

ரஞ்சி, ப்ளீஸ் டி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். எங்கயும் போகாத.. உன்ன என்ன விட்டு போகவும் நான் அனுமதிக்க மாட்டன் என்று அவள் கையை அழுந்த பற்றியிருந்தான் சூர்யா.

கைய விடு சூர்யா.. என்று அவன் பிடியில் இருந்து தன் கையை விடுவித்து கொள்ள போராடினால்..

அவளை இறுக்கி அனைத்து கொண்டான் சூர்யா. ப்ளீஸ் டி கிட்டன் கோவத்துல பேசிட்டன். நான் எப்பவும் உன்ன சந்தேக பட்டது இல்லடி, உனக்கு தெரியாதா. என்ன விட்டு போகாத டி என்று அவளை அனைத்து கொண்டு கெஞ்சினான்.

அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

எனக்கு தெரியும் டி, அவன் வீட்ல இருந்து யாராச்சும் உன்கிட்ட கால் பண்ணி கெஞ்சு இருப்பாங்க அதனால தான் நீ இரக்கப்பட்டு  என்கிட்ட கேட்டு இருக்க அந்த ஹரிய மட்டும் ரிலீஸ் பண்ண சொல்லி..

ஆனா வேண்டாம் கிட்டன், நான் உன் அளவுக்கு நல்லவன் இல்ல டி.. அவனால தான் நீ இன்னைக்கு இவ்ளோ கஷ்ட்டப்பட்ட. உனக்கு இன்னைக்கு எதாச்சும் ஆகி இருந்தா நான் என்ன பண்ணியிருப்பன் டி? நான் உன் கற்புக்கு சொல்லல டி.. உன் உயிருக்கு சொல்றன்.. அந்த நாய்ங்களோடு மோட்டிவ் என்ன தெரியுமா? உன்ன சீரழச்சிட்டு, உன்ன வச்சு ப்ரா.. பிராஸ் அந்த வார்த்தையை கூட சொல்ல முடியவில்லை கணவன் அவனால்.

சூர்யாவால் முழுதாக சொல்ல முடியாத வார்த்தையை புரிந்து கொண்ட ரஞ்சனிக்கு உடல் அதிர்ந்தது.. அதை உணர்ந்தவன் அவளை இன்னும் அவனுள் இறுக்கி கொண்டான்.

விடு கிட்டன் இனிமேல் எந்த பிரச்சனையும் வராது. அந்த மூணு நாய்ங்கள என் வெறி தீர அடிச்சுட்டன். அதல அந்த ஹரி பா***ட் அவன் மட்டும் தப்பிச்சுட்டான்.

நான் அவன்மேல கொலவெறில இருக்கும் போது நீ வந்து அவன மட்டும் ரிலீஸ் பண்ண சொன்னதும் எனக்கு கோவம் வந்துடுச்சு கிட்டன். அதான் அந்த கோவத்தை உன்மேல காட்டிட்டன் டி என்றான்.

அவளுக்கு அப்போதும் அவன் மேல் உள்ள கோவம் குறையவே இல்லை. சூர்யா இவ்வளவு தூரம் விளக்கி கூறியதும் அவன் அவசரபட்டு கோவத்தில் விட்ட வார்த்தைகள் தான் அவை என்பதை புரிந்து கொண்டாள். அது மட்டுமின்றி அவன் பக்கம் இருந்து யோசித்து கணவனின் நியாயமான கோவத்தையும் புரிந்து. கொண்டாள்.

ஆனாலும் அவன் மனைவி என்னை எப்படி அந்த மாதிரி ஒருவனுடன் இணைத்து பேசலாம்?? திருமனம் ஆன நாளில் இருந்து இப்படி தானே கோவப்பட்டு வார்த்தையை விடுகிறான்.. அப்படி என்ன கண் மண் தெரியாத கோவம் என்று உள்ளுக்குள் பொறுமியவள் அவனை தள்ளி நிறுத்தி எனக்கு எங்க அம்மா வீட்டுக்கு போகணும் சூர்யா என்றால்.

நான் இவ்ளோ சொல்றன் இப்போ கூட நீ என்ன புரிஞ்சிக்கலயா ரஞ்சி என்றான் கோவமும் ஆற்றாமையும்  கலந்த குரலில்..

ரஞ்சனி சூர்யா பேசுவதை காதில் வாங்காமல், துணிகளை பேகில் அடுக்கி கொண்டு இருந்தாள்.

அதில் வெகுண்டு எழுந்தவன், அவளை தன் பக்கம் திருப்பி கன்னத்தில் ஒரு அரை வைத்தான். ரஞ்சனி கன்னத்தை பிடித்து கொண்டு சூர்யாவை முறைத்து நிற்க, அவளை இழுத்து அனைத்து கொண்டான் சூர்யா.

அவளும் அவன் அனைப்புக்குள் தான் நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தை ஏந்தி அவன் அடித்த கன்னத்தில் முத்தம் கொடுத்தவன், அவள் மெத்தையில் வைத்து இருந்த பேகை கிழே தள்ளிவிட்டு அவளோடு படுக்கையில் சரிந்தான்.. அவன் பக்கம் உள்ள சுவிட்ச் மூலம் அறையின் விளக்குகளை அனைத்தவன், அவளையும் இறுக அனைத்து கொண்டு கண் மூடி உறங்கினான்.

*****

விஷ்வா.. குழலி..

நள்ளிரவு வேளையில் விஷ்வா அவன் மாமியார் வீட்டிற்கு வந்து இருந்தான். வாசலிலே காத்து கொண்டிருந்தாள் குழலி. விஷ்வா ஒருவாரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான் ஆனால் அவன் வருவதற்கு பத்து நாட்கள் ஆகியிருந்த நிலையில் குழலி அவன் மேல் கோவமாக இருக்கிறாள்.

மதியம் போல் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான் இரவு வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று. அவளும் அதை பார்த்துவிட்டால் தான் ஆனால் எந்த பதிலும் அனுப்பவில்லை.

இந்த பத்து நாட்களாக குழலி விஷ்வாவிற்கு ஊடலும் காதலுமாக தான் இருந்தது.. கோவித்து கொண்டிருந்தவளை சில சமயம் போனிலே குடும்பம் நடத்தி சமாதானம் செய்யும் திறமை எல்லாம் விஷ்வாவிற்கு மட்டுமே உண்டு.. சில நேரம் குழலிக்கு அழைத்தாலும் அவள் அழைப்பை ஏற்கமாட்டாள். மாமியாருக்கு அழைத்து அவரிடம் பேசிவிட்டு குழந்தையை கொஞ்சி கொள்வான். அப்போதும் குழலியின் தரிசனம் அவனிற்கு கிடைக்காது.

வர வர ரொம்ப பிடிவாதம் ஆகிடுச்சு. குழந்தையை விட மோசமா நடந்துக்குறா என்று மனதோடு குறைப்பட்டு கொண்டான்.

கார் சத்தம் கேட்டவுடன், விஷ்வாவை நோக்கி வந்தாள் குழலி.

காரை விட்டு இறங்கி உற்சாக விழிகளுடன் பார்த்தவன் அவளை கட்டி அனைத்து கன்னத்தில் முத்தமிட்டு இருந்தான். அவளுக்கும் இத்தனை நாள் பார்க்காது இருந்த ஏக்கத்தில் அவன் மீது இருந்த கோவம் மறந்து அனைத்து கொண்டு, மிஸ் யூ ஷிவா என்றால். மிஸ் யூ டூ டி என்று இன்னும் இன்னும் இச்சுக்களை வைத்து வீட்டிற்குள் சென்றனர் இருவரும்.

கூடத்தில் படுத்து கொண்டு இருந்த முத்தரசியும் அவனின் குட்டி சீமாட்டியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

அவனுக்கு இரவு உடைகளை எடுத்து வைத்தவள், விஷ்வாவிற்கு சூடாக தோசை வார்த்து அவனுக்கு பிடித்த பூண்டு சட்னியை எடுத்து வந்தாள்

யம்மி.. என்று அவள் கையில் உள்ள உணவை கண்டு சப்பு கொட்டியவன் மனைவியை மடியில் அமர்த்தி கொண்டு, அவளுக்கு ஊட்டிவிட்டு அவனும் உண்டு முடித்தான்.

கார் ஓட்டி கொண்டு வந்த அலைச்சளில் அவள் மார்போடு புதைந்து உறங்கி போனான் விஷ்வா. குழலி அவன் தலை கோதி கொடுத்து நெற்றி முத்தம் வைத்து அவளும் உறங்கி போனாள். அவனின் அருகாமையே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

விஷ்வாவிற்கு இருக்கும் உடல் அசதியில் விடிந்தும் எந்திரிக்கவில்லை. குழலியும் உறங்கும் கணவனை ரசித்து விட்டு அவள் வேலைகளை பார்க்க சென்று விட்டால்.

கூடத்தில் உறங்கி கொண்டு இருந்த குழந்தையை குழலி தான் விஷ்வா அருகில் மீண்டும் தட்டி உறங்க வைத்தால். பத்து மணி போல் எழுந்தால் பூரணி பாப்பா.. மொச்சை விழிகளை சிமிட்டி சிமிட்டி கண்ணை கசக்கி எதிரே உள்ள அவள் அப்பாவை பார்த்தாள். உற்சாகம் போங்க சிரித்து கொண்டு ப்பா ப்பா என்று கன்னத்தை தட்டி, முடியை பிடித்து இழுத்து விஷ்வாவை எழுப்ப முயன்றால்.

குழந்தைக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிணுங்கிய விஷ்வா பட்டு குட்டி கொஞ்சம் நேரம் மா என்று  தவழ்ந்து சென்று குட்டி கால்களை பெரிய மனுஷி போல் நீட்டியிருந்த குழந்தையின் காலில் லேசாக தலை வைத்து கொண்டான், மேலும் உற்சாகம் பொங்கியது குட்டி இளவரசிக்கு. தலையையும் விஷ்வாவின் பூஜங்களையும் தன் பிஞ்சு கைகளால் தட்டி தந்தையை உறங்க வைக்க முயன்றால், பின் தாடி நிறைந்த தந்தையின் கன்னத்தில் எச்சில் முத்தம் வைத்து சிரித்தது குட்டி பாப்பா.

இதற்கு மேல் விஷ்வாவிற்கு எங்கனம் உறக்கம் வரும், குழந்தை மடியில் இருந்து, தலையணையில் சரிந்தவன் குழந்தையும் தூக்கி அவனின் தட்டை வயிற்றில் அமர்த்தி கொண்டு செல்லம் கொஞ்சினான்.

செல்ல குட்டி அப்பாவ ரொம்ப மிஸ் பண்ணிங்களா? என்று கிள்ளை மொழியில் பேசி கொஞ்சி கொண்டு இருந்தான்.. குழந்தையும் தந்தையின் பேச்சு புரிந்தது போல் மழலை மொழியில் தன் வார்த்தையை புரியவைக்க போட்டி போட்டு கொண்டு பேசியது.

தன் பால் பற்கள் பதிய விஷ்வாவின் கன்னத்தை அழகாக கடித்து வைத்தது. சுகமாக ஏற்று கொண்டான் விஷ்வா.

ப்பா ப்பா ப்ரு ப்ரு என்று குட்டி உதட்டை மடக்கி வண்டியில் ஊர் சுற்ற அழைத்தாள் குட்டி பாப்பா..

காலைலயே என் தங்கத்துக்கு ப்ரு போணுமா என்று மூக்கொடு மூக்கு உரசி கொஞ்சியவன், குழந்தையோடு எழுந்து வெளியே வந்து முளைத்த ஆறு அரிசி பற்களை விரலால் சுத்தம் செய்தான்.

அதற்குள் குழலியும் வந்துவிட, அம்மாவ ப்ரு கூட்டிட்டு போலாமா என்றான் குழந்தையிடம்.. குட்டியோ னானா.. பாப்பா ப்பா என்று அன்னையை டீலில் விட்டுவிட்டது. ஹாஹாஹா வாய் விட்டு சிரித்தான் விஷ்வா, குழலி இருவரையும் பொய்யாக முறைப்பதை கண்டு கொள்ளாமல்.

குழலியிடம் நானும் என் பொண்ணும் ஊர் சுத்த போறோம்.. பாப்பாக்கு பால் மட்டும் எடுத்திட்டு வா என்றான்.. நானும் வருவன் என்று குழலி அடம் பிடித்து நிற்க, என் பொண்ணு பெர்மிஷன் குடுத்தா தாராளமா நீயும் எங்க கூட வரலாம்..

டேய் விஷ்வா, என்று கொஞ்சம் மிரட்ட.. பாருமா அம்மா திட்றா என்று குழந்தையிடம் பொய்யாக சிணுங்கி விஷ்வா முகத்தை மூடி கொள்ள.. குழந்தையோ விஷ்வாவின் கழுத்தை கட்டி கொண்டு ஆறுதல் அளித்தது அன்னை திட்டியதற்காக. குழலி இருவரையும் வாயில் கைவைத்து பார்த்தாள் என்றால் இவர்கள் செய்யும் அலப்பறையை முத்தரசி சமையல் அறை ஜன்னலில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மதிய உணவை சமைத்து கொண்டே.

பின் குழந்தையின் காலி வயிற்றில் பசும் பாலை நிறைத்து முகத்தை தூக்கி வைத்து கொண்டு நிற்கும் மனைவியை டீலில் விட்டு தந்தையும் மகளும் மட்டும் காரில் ஊர் சுற்ற கிளம்பிவிட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

73. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+
18+ episode பிடிக்காதவர்கள் கடந்து விடவும்

மகளோடு வெளியே சென்ற விஷ்வா தனி உலகத்தில் இருந்தான். பூரணி பாப்பாவை பற்றி சொல்லவே வேண்டாம். தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு, ஸ்ட்டியரிங்கில் கையை வைத்து அவளே காரை ஓட்டுவது போல் அவ்வளவு மகிழ்ச்சியாக ஆஹ் ஊஹ் என்று உற்சாக குரல் எழுப்பி தன் மகிழ்ச்சியை தந்தைக்கு வெளிப்படுத்தினால்.

குட்டி இளவரசியின் மகிழ்ச்சியில்  காரை இன்னும் கொஞ்சம் வேகமெடுத்து, காரில் பூரணி பாப்பா விரும்பி கேட்க்கும் கார்ட்டூன் பாடல்களை ஒலிக்கவிட்டு, குழந்தையோடு சேர்ந்து விஷ்வாவும் பேசி அவன் மகளின் மழலை மொழியை ரசித்து கொண்டிருந்தான்.

இடையில் காரை நிறுத்தி, இளநீர் வாங்கி குடித்து, குழந்தைக்கும் அழகாக புகட்டிவிட்டான் விஷ்வா.

வழியில் கடை விரித்து இருந்தார் ஒரு வியாபாரி. அங்கே காரை நிறுத்தியவன் பூரணி பாப்பா ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்தான்.

அவரிடம் உள்ள அனைத்து பொருட்களும் கைவினை பொருட்கள், அதே நேரத்தில் தரமானதாகவும் இருந்தது. மண் சொப்புக்கள், மர குதிரைகள், பனை ஓலை கொண்டு செய்த தனித்துவமான பொருட்கள் என அனைத்தும் கண்ணை கவரும் வகையில் இருந்தது.

மீண்டும் கார் பயணத்தை தொடர்ந்தவர்கள், பாப்பாவிற்கு பசிக்காதவாறு இடையிடையே காரை நிறுத்தி அவித்த வேர்க்கடலை, சோளம் பழங்கள் என அனைத்தையும் வாங்கி ஊட்டிவிட்டு குழந்தையின் குட்டி தொப்பையை நிறைத்து கொண்டே இருந்தான். மதியம் ஆகி இருந்தது தந்தை மகள் வெளியே வந்து. குழந்தையின் உறக்க விழிகளை கண்டவன் அச்சோ என் பொண்ணு குட்டிக்கு தூக்கம் வந்துடுச்சா என்று கொஞ்சியவன், பேபி கேரியரை அவன் இடுப்பில் மாட்டி கொண்டு, குழந்தையை தன் மார்போடு கட்டி கொண்டு அழகாக உறங்க வைத்து, மெதுவாக காரை செலுத்தி இருவரும் வீடு வந்து சேர்ந்து இருந்தனர்.

இங்கே குழலி தான் கணவனை மனதோடு கடிந்து கொண்டிருந்தாள் அவளை மட்டும் வீட்டில் விட்டு சென்றதற்கு. வரட்டும் ரெண்டு பேரையும் கவனிச்சுக்குறன் என்று சொல்லும் போதே விஷ்வாவின் கார் சத்தம் கேட்டது.

உறங்கி இருந்த பூரணி பாப்பாவை மலர் குவியலை போல் தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்து வந்தான் விஷ்வா.

அவர்கள் அறைக்கு வந்தவன், பாப்பாவை பதமாக மெத்தையில் படுக்க வைத்து தட்டி கொடுத்தான் உறக்கம் கலையாமல் இருக்க, சுற்றி தலையணைகளை வைத்து பாப்பா கீழே விழாதபடி பாதுகாத்தான். பின் இவ்வளவு நேரமும் மகள் செய்த குறும்பை நினைத்து பார்த்தவன் இதழில் மென் புன்னகை உதிர்த்து குட்டி பாப்பாவின் நெற்றியில் மென் முத்தம் வைத்து திரும்பினான்..

எதிரே அவனை உக்கரமாக முறைத்து கொண்டு நின்றாள் குழலி. உண்மையில் கொஞ்சம் ஜர்க் ஆகி தான் போனான் விஷ்வா.

குழலி என்று அவன் ஏதோ பேசவர, அதற்குள் அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டால் விஷ்வாவின் குட்டி மனைவி. அவளை சமாதானம் செய்யும் வித்தை தெரியாதவனா விஷ்வா?? உடைகளை எடுத்து கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தான்.

அவனுக்கான உணவு வகை தொகையாக சமைத்து வைத்து இருந்தனர் தாயும் மகளும். திண்ணையில் அமர்ந்து கூடை பிண்ணி கொண்டு இருந்தார் முத்தரசி.

அத்தை சாப்பிட்டாங்களா குழலி..

சாப்பிட்டாங்க..

நீ சாப்டியா?

----

சொல்லு டி என்று வெளியே எட்டி பார்த்தவன், அவன் மனைவியை தூக்கி மடியில் அமர்த்தி கொண்டான்.

விடுங்க.. விடுங்கன்னு சொல்றன்ல..
நீங்க என்ன பண்ணாலும் சமாதானம் ஆகவே மாட்டன், பத்து நாள் என்ன பார்க்காம இருந்துட்டு இப்போ இங்க வந்ததும் என்ன கூட கண்டுக்காம உங்க பொண்ணோட ஊர் சுத்த போயிட்டீங்கல என்று கூறும் போது அவள் கண்கள் லேசாக கலங்கியிருந்தது..

அதுவரை அவன் மனைவியின் கோவத்தை உள்ளுக்குள் ரசித்து கொண்டிருந்தவன் இப்போது அவள் கண்கலங்கவும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான்.

ஹேய் என்ன ஆச்சு டி? குழந்தை கிட்ட போய் போட்டி போட்டுட்டு இருக்க என்று மென்மையாக கடிந்து கொண்டவன் பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்து கொள்ள முயன்றான் குழலியை சமாதானம் செய்ய.. அவனை எழ விடாமல் செய்தவள் சாப்பிடுங்க என்றால். நீ இப்படி கண்கலங்குனா என்னால எப்படி சாப்பிட முடியும்.

சரி நான் அழல சாப்பிடுங்க என்று மீண்டும் கூறிய போதும் விஷ்வா அவள் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான்..

ப்ச்.. என்று உச்சு வச்சு.. சாப்பாட்டில் இன்னும் கொஞ்சம் மீன் குழம்பை ஊற்றி, அதோடு வருத்த மீன் தூண்டுகளை எடுத்து வைத்து விஷ்வாவிற்கு அவளே ஊட்டிவிட்டால்.

அழகாக வாய் திறந்து வாங்கி கொண்டான் விஷ்வா. குழலி உதட்டை சுழித்து கொள்ள, இங்க பாரு டி அன்பா ஊட்டி விட்டா தான் நான் சாப்பிடுவன் இப்படி உதட்டை சுழிச்சிக்கிட்டு ஊட்டிவிட்டா எனக்கு சாப்பாடே வேண்டாம் போ என்று அவன் கொஞ்சம் வீம்பு பண்ண, ரொம்ப பண்ணாதீங்க ஒழுங்கா சாப்பிடுங்க என்று அவனுக்கு திருப்தியாக ஊட்டிவிட்டால் குழலி.

அவள் விஷ்வா மடியில் இருந்து எழ முயல, அவளை எழ விடாமல் இடையை பிடித்து கொண்டவன், பாப்பாவ ரொம்ப மிஸ் பண்ணன் டி, அதுவும் காலைல நான் அவ மடில படுத்ததும் என்ன எவ்ளோ அழகா தட்டி கொடுத்தா தெரியுமா? எனக்கு ரொம்ப எக்ஸைட்டடா இருந்துச்சு, அப்பறம் நான் கேக்காமலே முத்தம் குடுத்தா.. அப்போ தான் எனக்கு புரிஞ்சிது பாப்பாவும் என்ன ரொம்ப மிஸ் பண்ணியிருக்கானு. அதான் அவ கூட வைப் பண்ண கிளம்பிட்டன் என்று குழந்தையின் செய்கைகளை சிலாகித்து கூறினான்.

விஷ்வா குழந்தையின் மீது கொண்ட அன்பில் குழலிக்கு நூறு சதவிதம் மகிழ்ச்சி தான் இருந்தும், இன்று காலையில் தந்தையும் மகளும் அவளை தவிர்த்துவிட்டு ஊர் சுற்ற போனதில் கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்த்தது. மகள் ஆனாலும் விஷ்வா எப்போதும் அவளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற எண்ணம். கணவனிற்கு அவளே முதல் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் போலும், அவளை சொல்லியும் குற்றம் இல்லை, இதுவரை விஷ்வாவும் அப்படி தானே குழலியை உணர வைத்தான்.

விஷ்வா மீது கொண்ட கோவம் எப்போதோ கொள்ளை புறம் சென்று இருக்க, அவனை கெஞ்ச விடும் நோக்கத்தில் அவன் மடியை விட்டு எழுந்து, அவளை ஏக்க பார்வை பார்க்கும். விஷ்வாவை கண்டு கொள்ளாமல் உண்ட பாத்திரங்களை எடுத்து வைக்க சென்றால்.

அவள் வெளியே வர குழலியை அப்படியே தூக்கி கொண்டு போய் காரில் இறக்கி விட்டான் விஷ்வா..

ஹய்யோ எங்க அம்மா பாக்குறாங்க ஏன் இப்படி பண்றிங்க என்றவள் பேச்சை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.

முத்தரசி நம்மட்டு சிரிப்புடன் கண்டும் காணாமலும் அவர் வேலையை தொடர,

அத்தை பாப்பாவ பார்த்துகோங்க நாங்க கிளம்புறோம் என்று கூறிவிட்டு குழலி பெண்ணை காரில் கடத்தி கொண்டு சென்றுவிட்டான் விஷ்வா.

இப்போ எங்க கூட்டிட்டு போறீங்க என்ற மனைவியின் கேள்விக்கு வாய் திறக்கவே இல்லை விஷ்வா. ஒரு மணி நேரத்தில் ஊரின் எல்லையை தாண்டி இருந்தவன், அங்குள்ள குடில் வகை ரெஸ்டாரண்ட்டினுள் நுழைந்தான். தங்கும் வசதிகளுடன் செயற்கை நீருற்றுடன் அழகாக இருந்தது அந்த இடம்.

ஆன்லைனில் அறை புக் செய்து இருப்பான் போலும், அங்கு போய் அவன் விவரத்தை கூறியதும் மரியாதையுடன் அறையின் சாவியை எடுத்து நீட்டினால் அந்த பெண்.

வெளியே குடில் போல் இருந்தாலும், உள்ளே நவீன வசதியுடன் இருந்தது அந்த அறை. குழலி அந்த அறையை தான் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள். அவ்வளவு அழகாக இருந்தது அந்த அறை.

குழலி அறையை ரசித்து கொண்டிருக்க விஷ்வா, அவன் மனைவியை ரசித்து கொண்டிருந்தான், ஏதோ அவஸ்த்தையாக உணர்ந்தவள்.. விஷ்வாவை திரும்பி பார்த்தாள் அவனின் பிச்சு தின்னும் பார்வையில் வியர்த்து போனவள்..

இப்போ எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க என்று உள்ளுக்குள் தோன்றிய குறுகுறுப்பை மறைத்து கொண்டு கேட்டாள்.

இந்த பத்து நாளா என்கிட்ட போட்ட சண்டைக்கு என்னன்ன தண்டனை தரலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கன் என்று அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கொண்டே கூற குழலிக்கு உள்ளுக்குள் பிரளயமே உண்டானது.. பின்னே அவள் இந்த பத்து நாட்களாக அப்படி அல்லவா அவனை படுத்தி எடுத்து விட்டால்.

அ.. அது நீங்க ஒரு வாரம்ன்னு சொல்லிட்டு பத்து நாள் கழிச்சு வந்திங்கள அதான் என்று அவள் திக்கி திணறி கூற. அப்படியா என்று அவளை நெருங்கி இருந்தான்.. அவன் எண்ணம் புரிந்தவள் அவன் கையில் அகப்படாமல் அந்த அறையை சுற்றி ஓடினால். ஒழுங்கா நில்லுடி நானே உன்ன புடிச்சன்னா நீ எதிர்பார்க்காத எல்லாம் நடக்கும் என்று கூறி கொண்டே அவளிடம் சடுகுடு ஆடி கொண்டிருந்தான் விஷ்வா. கட்டிலை சுற்றி ஓடி அவனுக்கு போக்கு காட்டி கொண்டிருந்தவளை ஒரே தாவில் தாவி அவள் முந்தியை பிடித்து இழுத்து இருந்தான் விஷ்வா.

அதில் குத்தி இருந்த பின் எங்கோ சென்று விழ, குழலியின் சேலை விஷ்வாவிடம் சிக்கி கொண்டது.. ஒரு வினாடியில் துச்சாதனனாக மாறி போனான் விஷ்வா.

குழலி மஞ்சள் நிற ரவிக்கை மற்றும் பாவாடையுடன் நிற்க.. மூச்சடைத்து போனான் விஷ்வா. எத்தன டைம் பார்த்தாலும் பித்து பிடிக்க வைக்குறாளே என்று முனகி கொண்டவன்.. குழலி இப்போ ஓடுடி என்று கெஞ்சலான குரலில் கூற, அவன் எதற்காக அப்படி கூறுகிறான் என்று புரிந்து கொண்டவள் உள்ளங்கால் வரை சிவந்து போனாள்.

குழலி இப்போது ஓடவும் முடியாமல், அவன் எதிரே நிற்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

மெதுவாக அவளை நெருங்கியவன், அவள் வெற்றிடையில் கை கொடுத்து, அவனை நோக்கி இழுத்து..

அவள் எப்போதும் மயங்கும் கழுத்து வளைவு முத்த போரை அரங்கேற்றி இருந்தான் விஷ்வா..

பத்து நாட்கள் விருந்துண்ணாத ஏக்கமோ அல்லது மஞ்சள் வண்ண சேலையில் தோகை மயிலாக காட்சி அளிக்கும் அவள் மீது கொண்ட தாபமோ ஏதோ ஒன்று அவனை அவளிடத்தில் வன்மையாக மாற்றியது.

அவன் வேகத்தில் மறுண்டவளை தடுக்காத பொறுத்துக்கோ டி என்று கூறி, அவளுள் இன்னும் மூழ்கினான்.

நின்ற நிலையிலே அவளை ஆதாரித்து சொக்க வைத்தான் விஷ்வா..

அவனின் வன்மையையும் ரசித்து அவனுள் இரண்டர கலந்தால் குழலி.

சுவற்றில் சாய்ந்து இருந்தவளின் முதுகில் அவனின் வன்மையான பிடிகளும் பற்த்தடங்களும் கண்டு இன்னும் போதை ஏறியது ஆடவன் அவனுக்கு..

பெண்ணவளை கைகளில் அள்ளி கொண்டு, மெத்தையில் அவளோடு சேர்ந்து விழுந்து வெண்பஞ்சு நிலவிற்கு முத்தமழை பொழிந்தான்..

பத்து நாள் உண்ணாத, யாசகனை போல் அவள் உடலை அசைவமாக உண்டான்.

பெண்ணவளோ அவன் தீண்டளுக்கு அவன் பெயரை அழைத்து தொண்டை வற்றி போனாள்..

இடை சுழிக்கு வந்தவன், இடைவெளி இல்லா காமம் கொள்ள
உந்தன் இலைமறை இடை ஒன்றே
போதுமடி குழலி பெண்ணே!!

என்று கவி பாடி, கீழே வந்தவன் பெண்மை ஏட்டில் நாவை கொண்டு சுக கவிதைகளை எழுதி பெண்ணவளை திணறடித்து நீரில்லா மீனை போல் துடிக்க வைத்தான்.

அந்த அறை எங்கும் அவர்களின் மோக காணங்களே ஒலித்தது..

அவளோடு முயங்கள் முடித்து, முயல் குட்டிகளோடு விளையாடி கொண்டிருந்தான் விஷ்வா.

குழலி இன்னும் சொற்கபுரியில் இருந்து வெளிவராமல், கண்கள் மூடி மூச்சு வாங்கி கொண்டிருந்தாள்.. அவளை கள்ளமாக பார்த்து சிரித்தவன் அடுத்த ரவுண்டு நீ தான் பேபி ஸ்டார்ட் பண்ணனும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ என்றான்.

பட்டென்று கண்ணை திறந்தவள், ஷிவா என்று சிணுங்கினால்.. இதுவரை அவளாக வந்து அவனோடு இழைந்தது இல்லை. அதிக பட்சமாக முத்தம் கொடுப்பாள். விஷ்வா சொல்வதை செய்வாள். அதில் பெரிதாக சலித்து கொண்டாலும், திருத்திருவென விழிக்கும் அவளை கட்டாய படுத்தவும் மனம் வராது விஷ்வாவிற்கு.

இன்று அவளின் ஆட்சி நடந்தே ஆக வேண்டும் அதுவும் ஆதி முதல் அந்தம் வரை அவளே அந்தரக சேவை செய்ய வேண்டும் என்று விரும்பியவன், இப்போது அவளிடம் தன் விருப்பத்தை கூறியிருந்தான்.

அவள் அப்போதும் தயங்கி நிற்க, என்னடி என்றான் கொஞ்சம் கடுப்பாக.. புது பெண் போல் எப்போதும் அவள் வெட்கப்படுவதை ரசிப்பவன் தான் விஷ்வா.. ஆனால் இந்த வெட்கத்தால் தானே அவள் முன்வர மறுக்கிறாள் என யோசிக்கும் போது இப்போது அவளை கடிந்து கொள்கிறான்.. கணவனாக அவனுடைய ஆசைகளை அவளிடம் தானே கேட்க முடியும்.

அவன் எவ்வளவு கேட்டும் வெட்கப்பட்டே அவனது சில கோரிக்கைகளை மறுத்தவள்.. அடுத்தடுத்த ஆட்டங்களில் அவனையே கொஞ்சி கெஞ்சி ஆசையை தூண்டி அவனையே அவளுள் சரசமாட வைத்தால்.

 

74. கண்கள் நிறைந்த ஓவியமே!!
நேற்று இரவு முழுவதும் காதல் கிளிகள் கொஞ்சி கூடி மகிழ்ந்து அந்த  இரவை மோகம் பற்ற வைத்து இதோ இப்போது குளியல் அறையிலும் ஒன்றுகொன்று முட்டி மோதி கொண்டிருக்கின்றனர்.

குழலி அச்சோ ஷிவா டைம் ஆகுது, நாம நேத்து மதியம் இங்க வந்தோம்.. இப்போ மதியமே தாண்டிடுச்சி வீட்டுக்கு போலாம், பாப்பா நம்ம ரெண்டு பேரையும் தேடுவா என்று குழலி ஒரு புறம் மூச்சு வாங்க பேசி கொண்டிருந்தாள். அவ்ளோ தான் முடிஞ்சிது இரு என்றவன் அவளை விடுவது போல் இல்லை.

அவன் முயங்களில் மும்மரமாக இருந்தான். குழலி அவன் இழுத்த இழுப்பிற்கு சென்று அவன் கைப்பாவையாக மாறி இருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து தான் இருவரும் வெளியே வந்தனர். குழலி துவண்ட கொடியாக இருந்தாள். விஷ்வாவிற்கே அவளை பார்க்க பாவமாக இருக்க சாரி டி என்று அவளை அனைத்து கொண்டான்.

எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் ஷிவா டூ ஹார்ஸ் கழிச்சு என்ன எழுப்புங்க என்று அசதியாக கூறி உறங்கி விட்டால்.. விஷ்வா அவனையே கடிந்து கொண்டான் காம பிசாசா டா நீ அவளை என்ன பண்ணி வச்சுருக்க பாரு என்று அவன் மனசாட்சி அவனை காரி துப்ப, பின் எதுவும் பேசாமல் அவன் உடையை மாற்றி கொண்டு அறை கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றான். அவன் காரில் உள்ள அவர்களுக்கான உடையை எடுத்து கொண்டு மீண்டும் அறைக்கு வந்து உணவுகளை ஆர்டர் செய்தான்..

மாலை போல் தான் கண் விழித்தால் குழலி. எழுந்தவளின் முகத்தை பார்க்க முடியாமல் குழலி இந்த ட்ரெஸ் போட்டுக்கோ உடைகளை எடுத்து வைத்து விட்டு அவள் உடை மாற்றி வந்ததும் சாப்பிட அழைத்தான்.

கணவனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவள், ஏன் ஷிவா ஒரு மாதிரி இருக்கீங்க என்மேல எதாச்சும் கோவமா என்றால்..

தட்டில் உள்ள உணவை அளந்து கொண்டிருந்தவன், உன்ன ரொம்ப கஷ்ட்டபடுத்திட்டன்ல சாரி டி என்றான் உண்மையாகவே வருந்தி..

அச்சோ என் அழகு ஷிவா, என்று கொஞ்சி கொண்டவள் எழுந்து வந்து அவன் மடிமேல் அமர்ந்து கொண்டாள். நிஜமா எனக்கு ஹப்பியா தான் இருந்துச்சு, நீங்க இல்லாத இந்த பத்து நாள் சரியா தூங்கல சரியா சாப்பிடல அதான் ரொம்ப வீக்கா இருந்தா மாதிரி இருந்துச்சு.. இதல நீங்க பண்ண அலப்பறைல சீக்கரம் சோர்ந்துட்டன் என்று வெட்கியவள்..

ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருந்தன் ஷிவா என்று பேசி பேசியே அவன் மன துயரம் போக்கினால் குழலி. சரி ஒன் வீக் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டன் நல்லா ரெஸ்ட் எடு என்று பெரிய மனது பண்ணி அவனே அவளுக்கு ஓய்வு கொடுக்க.. அவளோ ரெஸ்ட் குடுக்குற ஆளப்பாரு, எப்படியும் நைட் குழலின்னு என்கிட்ட தான வருவீங்க என்று அவனை கேலி செய்தால். விஷ்வாவை பற்றி முழுதாக அறியாமல். விஷ்வா எதுவும் பதில் கூறவில்லை, அமைதியான சிரிப்பை மட்டும் அவளுக்கு கொடுத்து தட்டில் இருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட்டு அவனும் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பினர்.

வண்டியில் போகும் போது தான் கேட்டாள். ஷிவா எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணிங்களா.. எப்போ ட்ரெஸ் எடுத்து வச்சீங்க என்றால்.. இதல்லாம் நான் சென்னைல இருந்து எடுத்து வந்த ட்ரெஸ் டி, அங்க இருந்து கிளம்பும் போதே இந்த ஹோட்டல் புக் பண்ணிட்டன். அத்தை கிட்டயும் குழலிய அழைச்சிக்கிட்டு வெளிய போறன்னு சொல்லிட்டன்.

நீங்க செம ஷிவா, என்று கார் ஓட்டி கொண்டு இருந்த அவன் பூஜைங்களுக்குள் கை நுழைத்து அவனை கட்டி கொண்டாள்.

இருவரும் பேசி கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்..

*****

சூர்யா.. ரஞ்சனி..

காலை விடியலில் சுகமாக துயில் கொண்டிருந்த சூர்யா கண்களை திறவாமல் மெத்தையில் கையை நீட்டி அவன் கிட்டனை தேடினான். அவள் தான் அவன் கைகளுக்குள் அகப்படவில்லை. கிட்டன் என்று கண்ணை திறவாமல் அழைத்தான். பின் மெதுவாக எழுந்து அமர்ந்து எங்க போனா இவ என்று கண்ணை கசக்கி கொண்டு போனில் நேரத்தை பார்க்க 8.36 am என்று காட்டியது.

பின் தலையை உளுக்கி கொண்டு குளியல் அறை சென்று காலை கடன்ங்களை முடித்து வெளியே வந்தான். சோஃபாவில் சுந்தரம் அமர்ந்து செய்தி தாளை புரட்டி கொண்டு இருக்க. சரசு என்ற வேலையால் வந்து சூர்யாவிற்கு காஃபி கொடுத்து சென்றால்.

ரஞ்சனி எங்கே என்றான் அவரிடம்.. குழலி ஊரிற்கு சென்றதில் இருந்து  ரஞ்சனி தானே பொறுப்புடன் சமையல் வேலைகளை பார்த்து கொண்டாள்.

சரசுவை நீ போமா என்று அனுப்பி வைத்தார் சுந்தரம்.

மகனை ஆழ்ந்து பார்த்தவர்.. ரஞ்சனி அவங்க வீட்ல இருக்கா என்றார்.

என்ன சொல்றிங்க.. என்று புரியா பார்வை பார்த்தான்..

என்ன டா புரியல. பொண்டாட்டி வீட்டை விட்டு போனது கூட உனக்கு தெரியாதா அந்த அளவுல குடும்பம் நடத்துறீங்க ரெண்டு பேரும் என்று மகனை திட்டி கொண்டே அங்கே வந்தார் மகேஷ்வரி.

இப்போது எல்லாம் வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் இணக்கமாகி வருகிறார். எல்லாம் நோய் வாயப்பட்டு மருத்துவமனையில் இருந்ததாள் வந்த மாற்றம்.. குடும்பத்தார் காட்டிய அன்பு அவரின் குண நலன்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தது. இப்போது எல்லாம் பப் லேடீஸ் கிளப் என எங்கும் செல்வதில்லை.

அதற்காக மகேஷ்வரி முழுவதுமாக மாறிவிட்டாரா என்று கேட்டாள் நிச்சயம் இல்லை. அவ்வப்போது அவரின் சுறுசுறு குணம் எட்டி பார்க்க தான் செய்கிறது. ஆனால் யாரும் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. அவரிடம் வந்துள்ள நல்ல மாற்றங்களை கருத்தில் கொண்டு அவரின் கோவத்தை ஓரம் கட்டி விடுகின்றனர்.

சுந்தரம் கூட மனைவியின் மாற்றத்தில் மகிழ்ச்சியாகவே வலம் வருகிறார். இழந்த நாட்களை மீட்க முடியாது தான் அதற்காக வாழ்கின்ற நாட்களில் பழைய விஷயங்களை சொல்லி காட்டி மனைவியை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க விரும்பவில்லை. அவ்வப்போது அவரின் வார்த்தைகள் எல்லை மீறும் போது மட்டும் சத்தம் போடுவார்.. முனகி கொண்டே கணவனின் குரலுக்கு அடங்கி போவார் மகேஷ்வரி. சில விஷயங்களில் அவரை மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டனர் வீட்டில் உள்ளோர்கள்.

இப்போது கூட மகனை வசைப்பாடுவது போல் வந்தவர்.. பேச்சை நைசாக மாற்றி ரஞ்சனியிடம் திரும்பி விட்டார். என்ன டா அந்த ராங்கிகாரி உன்ன மதிக்கறதே இல்லையா? உன்கிட்ட சொல்லாம கொள்ளாம அவங்க அப்பா வீட்டுக்கு கிளம்பி போய் இருக்கா.

சூர்யா பதில் பேசுவதற்கு முன், நான் அப்பவே சொன்னன் கேட்டியா இந்த பொண்ணு உனக்கு வேண்டாம்ன்னு இப்போ பாரு புருஷன்ங்கற மட்டு மரியாதை இல்லாம நடந்துக்குறா..

எல்லாம் இவர சொல்லணும், என்று பக்கத்தில் இருந்த கணவன் பக்கம் இப்போது திரும்பி விட்டார்.

என் ரெண்டு புள்ளைங்களுக்கும் இவரு நண்பன் பொண்ணுங்கள  கட்டி வச்சு இருக்காரு. அப்பறம் எப்படி மதிப்பாளுங்க..

அம்மா அப்படிலாம் இல்லாம என்று சூர்யா பதில் சொல்ல வர, நீ சும்மா இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது.

உன் பொண்டாட்டி ராங்கிகாரியாச்சும் நான் உடம்பு சரியில்லாத நேரம் என்ன ஏதுன்னு வந்து பார்த்தா..

ஆனா அந்த பாப்பா மூஞ்சய வச்சுட்டு இருப்பாளே அந்த குழலி, என் புள்ளைய கூட்டிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போனவ தான் இன்னும் ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு என்ன விசாரிக்கல என்று கண் கலங்கினார்.

மனதில் இருந்த சின்ன ஆதங்கம், பிணியுற்று மருத்துவமனையில் இருந்த போதும் கூட மூத்த மருமகள் வந்து பார்க்கவில்லையே என்ன ஏது என்று விசாரிக்கவில்லையே என்ற சிறு வருத்தம் இன்று மகனிடமும் கணவரிடமும் கோவமாகவும் ஆதங்கமாகவும் வெளிப்பட்டது.

அதை தான் மாமியாருக்கே உரிய தோரணையில் கோவமாக காட்டி கொண்டிருக்கிறார் மகேஷ்வரி. சூர்யாவிடம் தொங்கியவர் ரஞ்சனி, அவரின் கணவர் இப்போது குழலி என முடித்து வைத்தார்.

சூர்யாவால் அங்கிருந்து எழுந்து போகவும் முடியவில்லை. அவன் நினைவு எல்லாம் இப்போது ரஞ்சனியிடமே இருந்தது. இரவு அவ்வளவு கூறியும் காலையில் சென்று விட்டாலே என்று கோவமும் ஒரு புறம் வந்தது.. ஆனால் இம்முறை அவசரத்தில் வார்த்தை விட வேண்டாம் என்று எண்ணியவன், புலம்பி கொண்டு இருந்த அவன் அம்மாவிடம்..

ம்மா.. குழலி அண்ணிக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லாத விஷயமே தெரியாது. விஷ்வா அவங்ககிட்ட எதுவும் சொல்லல.. அதான் உங்கள வந்து பார்க்கல என்று உண்மையை எடுத்து கூறினான்.

ம்க்கும்.. என்று அப்போதும் மனம் கனியாதவர் மோவாயை தோளில் இடித்து கொண்டார்.

சரிம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறன் என்று அங்கிருந்து எழ முயல.. டேய் நீ இப்போ ஏன் இவ்ளோ அவசரமா கிளம்புறன்னு தெரியும் சொன்னா கேளு, அந்த ராங்கிகாரி தான வீட்ட விட்டு போனா அவளே இறங்கி வரட்டும் நீ அவ வீட்டுக்கு போய் அவகிட்ட கெஞ்சிக்கிட்டு நிக்காத என்று சராசரி மாமியாராக மகனுக்கு அறிவுரை கூற..

கடுப்பாகி விட்டான் சூர்யா.. ம்மா என் பொண்டாட்டிக்கு ரஞ்சனின்னு அழகான பேரு வச்சு இருக்காங்க என் அத்தையும் மாமாவும்.. அவ ஒன்னும் ராங்கிகாரி இல்லை  இனிமேல் அப்படி சொல்லாதீங்க என்றவன் அவர் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டான்.

என் புள்ளைய எப்படி மாத்தி வச்சுருக்கான்னு பாத்திங்களா.. நீங்களும் தான் இருந்திங்களே.. கல்யாணம் ஆனா ரெண்டாவது வாரமே என்ன உங்க அம்மாகிட்ட இடி வாங்க விட்டுட்டு இந்த ஊருக்கு கிளம்பி வந்துட்டீங்க என்று கணவனை நேரடியாக தாக்க.. முழி பிதுங்கியவர் எழுந்து அறைக்குள் சென்று விட்டார் அலுவலகம் கிளம்ப..

வீட்டு வேலை செய்யும் சரசு அப்போது வெளியே வர, இந்தா டி சரசு இங்கவா என்று அந்த பெண்ணை அழைத்தார்.

அம்மா என்று அந்த பெண் பவ்யமாக வந்து நிற்க, இங்க ஒருத்தி உடம்பு முடியாதவ வந்து உக்காந்து இருக்கன்னு நினைப்பு இருக்கா உனக்கு.. காலைல வாழை தண்டு சூப்பு காய்கறி சூப்பு இல்ல ஃப்ரூட் சாலட்ன்னு எதையும் குடுக்காம நீ பாட்டுக்கு ஜம்பமா இங்கயும் அங்கேயும் போய்ட்டு வந்துட்டு இருக்க என்று அந்த வேலையாளிடமும் வம்பு வளர்த்தார் மகேஷ்வரி..

அம்மா அதுவந்து நீங்க இப்போ என்ன சாப்புடுறீங்கன்னு கேட்க தான்மா வந்தன் என்று பதில் கூற.. ஹ்ம்ம் பொழைக்க தெரிஞ்சவ தான் நீ என்று உதட்டை கோணி கூறியவர் எனக்கு இப்போ பாதம் பால் கொண்டுவா என்று அவருக்கு வேண்டியதை கூறி அனுப்பி வைத்தார் மகேஷ்வரி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

75. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வேக வேகமாக கிளம்பிய சூர்யா கூடத்தில் அவன் அம்மா புலம்பி கொண்டிருப்பதை கூட, கண்டு கொள்ளாமல் காரை எடுத்து கொண்டு ரஞ்சனி வீட்டிற்கு சென்றான்.

ரஞ்சனி வீடு..

வரவேற்பரையில் உள்ள சோஃபாவில் அமர்ந்து கொண்டு எங்கேயோ வெறித்து கொண்டிருந்தாள் ரஞ்சனி. சூர்யாவை விட்டு வந்தது சரியா? அவன் அவ்வளவு மன்னிப்பு கேட்டும் நான் அங்கிருந்து வந்து விட்டேனே என் மீது கோவமா இருப்பானா? சின்ன பிரட்சனைய பெருசு பண்றனா என்று ஏதேதோ சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தாள் ரஞ்சனி.

காலையில் 7 மணிக்கு எல்லாம் அவள் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால். அவள் அம்மா சுசிலா மகள் வந்திருக்கும் கோலம் கண்டு பதறிதான் போனார். பின்னே தூங்கி எழுந்தவள் நேற்று பேக் செய்த துணி பையை மட்டும் எடுத்து கொண்டு தலை ஒரு கோலம், நலுங்கிய உடை ஒரு கோலம் என வந்து நின்றாள் எந்த தாய்க்கு தான் பயம் வராது..

அவளை பார்த்ததும் ரஞ்சி என்ன ஆச்சுமா என்று பதறி போய் கேட்க.. அவள் அம்மாவின் பதட்டத்தை கண்டதும் தான் அவள் செய்கையின் முட்டாள் தனத்தை உணர்ந்தால். பின் சமாளித்து தான் ஆக வேண்டும் என்று நினைத்தவள் ஒன்னும் இல்லமா.. எனக்கும் சூர்யாக்கும் கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டண்டிங் அதான் இங்க வந்து இருக்கன். என்று சொல்லியவள் வேகமாக அவள் அறைக்கு சென்றுவிட்டால்.

பின் அவள் அம்மா அப்பா எவ்வளவு கேட்டும் பதில் கூறவில்லை. சரி அவளே சொல்வால் என மகளுக்கு தனிமை கொடுத்து விட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்றனர். பரமு சுந்தரதிற்கு அழைத்து ரஞ்சனி இங்கு வந்திருப்பதை கூற, நானே உனக்கு போன் பண்ணனும்ன்னு நினைச்சன் டா.. அதுக்குள்ள இங்க மகி ஒரு அலப்பறைய கூட்டிட்டு இருந்தா அந்த விஷயத்துல மறந்துட்டன்..

ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கும் தெரில.. காலைல நான் எழுந்து வந்ததும், நான் எங்க வீட்டுக்கு போறன் மாமா கொஞ்சம் நாள் எங்க அம்மா அப்பா கூட இருக்கன்னு சொன்னா.. மகி கூட என்ன ஏதுன்னு விசாரிச்சா எதுவும் சொல்லல.. அப்பறம் நான் தான் சரி போய்ட்டு வாமான்னு அனுப்பினன்.. ரெண்டு பேருக்கும் அந்த வீடியோவ வச்சு தான் ஏதாவது பிரச்சனை வந்து இருக்கும்.

இந்த சூர்யா ஏதாவது வார்த்தைய விட்ருப்பான் என்று மகனை அறிந்தது போல் கூறினார்.

பேரன் பேத்திய பார்த்துகிட்டு கடைசி காலத்தை சந்தோஷமா வாழலாம்ன்னு பார்த்தா.. இந்த ரெண்டு பசங்களுக்கும் பஞ்சாயத்து பண்ணியே என் காலம் முடிஞ்சிடும் போல என்று சுந்தரம் பெரிதாக சலித்து கொண்டார். அந்த பக்கம் பரமுவின் முகத்திலும் சுந்தரம் சொன்னதை ஆமோதிப்பது போல் சிறு புன்னகை தோன்றி மறைந்தது.

நீ கவலை படாத டா, சூர்யா அங்க தான் கிளம்பி வந்து இருக்கான்.. அவன் ரஞ்சனி கைல கால்ல விழுந்தாவது சமாதானம் பண்ணிடுவான் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, சூர்யாவின் கார் சத்தம் கேட்க, சரிடா மாப்பிளை வந்துட்டாரு.. நான் அப்பறம் பேசுறன் என்று போனை வைக்க போனவரை, அவனுக்கு ரொம்ப இடம் குடுக்காத டா.. தப்பு அவன் மேல தான் இருக்கும் என்று சொன்னார் மகனை பெற்றவர்.. உனக்கு என் மாப்பிளைய கொறை சொல்லலன்னா தூக்கம் வராதே என்று கடிந்து கொண்டு போனை வைத்தார் பரமு.. 

வெளியே வந்த சுசிலா எந்த வருத்தத்தையும் முகத்தில் காட்டாமல், சூர்யாவை எப்போதும் போல் வரவேற்று உபசரித்தார்.

பரமும் அவர் அறையில் இருந்து வெளியே வந்தவர் சூர்யாவிடம் கொஞ்சம் நேரம் பேசி கொண்டு இருந்தார். சூர்யாவின் கார் சத்தம் கேட்டதும் ரஞ்சனி உள்ளே எழுந்து சென்றுவிட்டாள்.

ரஞ்சனி எங்க மாமா என்று மனைவியை பற்றி கேட்க, உள்ளதான்ப்பா இருக்கா..

கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டண்டிங் மாமா அதான் இங்க வந்து இருக்கா என்று கணவன் மனைவி இருவரும் சொல்லி வைத்தது போல் ஒரே பதிலை கொடுக்க.. பரமுவும் சுசிலாவும் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர். ஏனோ அவர்களுக்கு இப்போது மனம் அமைதி அடைந்தது. அவர்களும் சராசரி பெற்றோர்கள் தானே, மகளின் வாழ்க்கை மேல் அவர்களுக்கு அக்கறை இல்லாமல் போகுமா?

நான் ரஞ்சிய பார்த்துட்டு வரன் அத்தை என்றவன் அவர் கொடுத்த காஃபியை கொதிக்க கொதிக்க இருக்கும் போதே அவசர அவசரமாக குடித்துவிட்டு வெந்து போன நாக்கை ஊதி கொண்டே அவன் மனைவியின் அறையை நோக்கி நடந்தான்.

நல்ல வேளை ரஞ்சனி அறைக்கதவை தழிடவில்லை. அதற்கு அவன் அத்தை மாமாவிற்கு மனதிலே நன்றி கூறிவிட்டு உள்ளே சென்று அறையை  தாழிட்டு கொண்டான்.

அவள் ஸ்டடி டேபிள் முன் அமர்ந்து இருக்க.. சூர்யா கீழே முட்டி போட்டு அவள் அருகில் அமர்ந்து அவள் மடிமேல் உள்ள கையை பிடித்து கொண்டான்.

இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சூர்யாவும் அமைதியாகவே இருந்தான். அவனை பார்க்கும் பொழுது பள்ளியில் தவறு செய்து விட்டு வகுப்பு ஆசிரியர் அருகில் முட்டி போட்டு இருக்கும் 90'ஸ் கிட் போல் இருந்தான்.

நான் நேத்து அவ்ளோ சொன்னனே கொஞ்சம் கூட நீ புரிஞ்சிக்கலயா? ஏன் கிட்டன் இங்க வந்த?

ப்ளீஸ் என்கூட நம்ம வீட்டுக்கு வாடி என்றான்..

வேண்டாம் சூர்யா நமக்குள்ள இந்த பிரேக் வேணும்.. எனக்கு கொஞ்சம் நாள் தனியா இருக்கணும். நம்ம மேரேஜ் எதிர்பாராம நடந்துடுச்சி, நானும் நீ ஆரம்பத்துல பேசுன பேச்சை எல்லாம் கோவத்துல பேசுறன்னு பொறுத்துகுட்டன்..

ஆனா அதுக்கு அப்பறம் இந்த இடைப்பட்ட நாள்ள உனக்கு என்மேல இருக்க கோவம் எல்லாம் போய்டுச்சு அத என்னால உணர முடிஞ்சிது.. எனக்கும் உன்மேல ஃபீல் வந்துச்சு, இனிமேல் நீ தான் எனக்கு எல்லாம் உன்கூட லைப் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு நினைச்சன் ஆனா எதிர்பாராத விதமா என்னோட கவன குறைவால நான் என் வேலைல தப்பு பண்ணிட்டன்.

அங்க தொடங்குன பிரட்சனை, என் வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு பாடத்தை கத்து குடுத்துடுச்சு.

உன்கிட்ட நான் உண்மைய சொல்லாதது தப்பு தான், காரணம் ஹரி தான் இப்படி பண்ணி இருப்பான். அவனை நானே சமாளிச்சுடலாம்ன்னு ஒரு அசட்டு தைரியத்துல தான் உன்கிட்ட சொல்லல. மத்தபடி நேத்து நீ சொன்னியே அவன் இஷ்ட்டத்துக்கு வளஞ்சு கொடுக்க நான் அங்க போல என்று சொல்லும் போதே குரல் தழு தழுத்தது ரஞ்சனிக்கு.

நீ கோவத்துல பேசுனாலும் என்னால அத மறக்க முடியல சூர்யா. ஒரு ஒரு முறையும் நான் உன்ன நெருங்கும் போதுலாம் நீ உன் வார்த்தையாள என்ன மறுபடியும் உன்கிட்ட இருந்து தள்ளி வைக்குற.

நான் உன் பொண்டாட்டி தான? என்ன எப்படி இன்னொருத்தன் கூட இணைச்சு பேச உன்னால முடியுது?

நீ கோவத்துல பேசுனாலும் என்னால அந்த வார்த்தைய தாங்கிக்க முடியல. எனக்கு கொஞ்ச நாள் தனியா இருக்கணும் சூர்யா. ப்ளீஸ் இனிமேல் இங்க வராத.. எனக்கு எப்போ தோணுதோ அப்போ நான் வரன். என்று அவள் முடிவை உறுதியாக கூறிவிட்டால்.

அவளையே பார்த்து கொண்டிருந்த சூர்யா.. நான் கோவத்துல பேசுன வார்த்தைய புடிச்சுகிட்டு என்ன நல்லா வச்சு செய்ற கிட்டன்..

நான் உன்ன எவ்ளோ லவ் பண்றன்னு தெரிஞ்சிகிட்டும், என்ன இப்படி தவிக்கவிடுறல்ல. சரி டி இனிமேல் நான் உன்ன தொல்ல பண்ண மாட்டன் உன்ன பார்க்கவும் வர மாட்டன் போதுமா.

என் தொல்ல இல்லமா சந்தோஷமா இரு.. என்றவன் அவளளை விட்டு எழுந்து நின்றான்.. இறுதியாக அவள் முகத்தை கண்ணின் வழியே மனதில் நிரப்பி கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

வெளியே இருந்த அவன் மாமா அத்தையிடம், ரஞ்சனி கொஞ்சம் நாள் இங்க இருக்கட்டும் அத்தை நானே அவள வந்து கூட்டிட்டு போறன். அது வரைக்கும் அவகிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்டு கஷ்ட்ட படுத்தாதீங்க.. தப்பு என்மேல தான். என்று அவள் பெற்றோரிடம் கூட அவளை விட்டு கொடுக்காமல் பேசிவிட்டு, இறுதியாக ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

அனைத்தையும் உள்ளிருந்து கேட்டு கொண்டிருந்த ரஞ்சனிக்கு மனபாரம் கூடியது.

இருந்தும் இந்த இடைவெளி நிச்சயம் வேண்டும் என்று அவளுக்கு தோன்றவே கணவன் பக்கம் சாயும் மனதை அடக்கி கொண்டாள்.


நாட்கள் அதன் போக்கில் சென்றது.. ஒரு மாதம் ஆனா நிலையில் விஷ்வாவும் குழலியும் அங்கிருந்து புறப்பட தயாராகினர்.. குழலி வழக்கம் போல் அன்னையை விட்டு செல்லும் போது அழுது கொண்டிருந்தாள்.

முத்தரசி தான் மகளை கடிந்து கொண்டார் என்ன குழலி இது சின்ன புள்ள மாதிரி கண்ல தண்ணிய வச்சிட்டு இருக்க.. உனக்காக தான தம்பி ஊர்ல இருக்க எல்லா வேலையும் விட்டு ஒரு மாசம் இங்க வந்து தங்குனாரு. இப்போ மறுபடியும் அவர்கூட ஊருக்கு போகும் போது இப்படி அழுதா தம்பி மனசு சங்கட படாது என்று மகளை கொஞ்சம் கடிந்து கொண்டு, பேத்தியை ஆசை தீர கொஞ்சிவிட்டு விஷ்வாவுடன் வழி அனுப்பி வைத்தார்.

அவருக்கு மட்டும் மகளை விட்டு பிரியும் துயரம் இல்லாமல் போய்விடுமா? அவருக்கு இருக்கும் வருத்தத்தை உள்ளேயே வைத்து கொண்டார். எங்கே தானும் அழுதாள் மகள் இன்னும் வீம்பு பண்ணுவளோ என்று.

விஷ்வாவும் அவன் மாமியாரிடம் ஆயிரம் பத்திரம் கூறி, எதுவா இருந்தாலும் போன் பண்ணுங்க அத்தை என்று கூறிவிட்டு மனைவி மகளை அழைத்து கொண்டு புறப்பட்டான்.

அழுது கொண்டே வரும் மனைவியை சமதானம் செய்யும் வழி தெரியாமல், குழலிமா அழாத டி கஷ்ட்டமா இருக்கு என்று ஒரு வார்த்தை தான் கூறினான்.

அவளுக்குள் இருக்கும் ஆதங்கத்தை அவனிடம் கோவமாக காட்டிவிட்டால்.

என் நிலமைல இருந்து பாருங்க.. அப்போதான் உங்களுக்கு என் கஷ்ட்டம் புரியும்.. உங்களுக்கு என்ன உங்க வீட்டுக்கு போனதும் அப்பா தம்பி வேலைன்னு ஜாலியா இருப்பிங்க. நான் தான எங்க அம்மாவ பிரிஞ்சு இருக்கன். இதோட எங்க அம்மாவ எப்போ பார்ப்பனோ? என்று இன்னும் தேம்பி தேம்பி அழுதாள்.

அத்தைய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம் டி என்றான்..

ஏன் மறுபடியும் உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மாகிட்ட அசிங்க படணுமா? அதுக்கு நான் எங்க அம்மாவ பார்க்காமலே இருந்துக்குறன்..

குழலி முடிஞ்சு போன விஷயத்தை பத்தி பேசி பிரச்சனை பண்ணாத..

நான் உள்ளத தான சொன்னன் என்று அவள் வாய் பேச..

தயவு செஞ்சு அமைதியாவா.. அழரையேன்னு மனசு கேட்காம சமாதானம் பண்ண வந்தா நீ என்கிட்டயே சண்டைக்கு நிக்குற. இப்போ என்ன உனக்கு அழணுமா நல்லா அழு நான் எதுவும் கேட்கல என்று கோவத்தில் கூறிவிட்டு வண்டியின் வேகத்தை அதிக படுத்தினான்.

குழந்தை பயப்படுறா ஸ்லோவா போங்க என்று குழலி அவன் வண்டி ஓட்டும் வேகத்தில் பயந்தவள், விஷ்வாவிடம் குழந்தையை காரணம் காட்டி கூறியிருந்தால்.

அதன் பின் விஷ்வா பொறுமையாகவே சென்றான்..

இருவரும் இரவு 7 மணி போல் சென்னை விமான நிலையம் வந்து இருந்தனர். வரும் வழியிலே குழலியிடம் அவன் அன்னையின் உடல் நிலை, ரஞ்சனி ஆபத்தில் சிக்கியது என அவன் பத்து நாள் சென்னை சென்ற உண்மையான காரணத்தை கூறியிருந்தான்.. 

ஏன் ஷிவா என்கிட்ட உண்மைய மறச்சிங்க.. என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல நானும் அப்போவே உங்ககூட வந்து இருப்பனே என்று கூறியவளுக்கு..

ஒரு முறைப்பயே பதிலாக கொடுத்தான்.. அதற்கு மேல் குழலி வாய் திறக்கவில்லை. எப்படி வாய் திறப்பாள்.. அவள் பேசிய பேச்சு அப்படி அல்லவா..

 

76. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வீட்டு வாசலில் கார் வந்து நிற்க, குழலி உறங்கி கொண்டிருந்த குழந்தையுடன் கீழே இறங்கினால். விஷ்வா குழந்தையை தன் கைக்குள் மாற்றி கொண்டவன் முன்னே நடந்தான் அவனை தொடர்ந்து குழலி சென்றால். வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலையாள் வந்து காரில் உள்ள அவர்களின் பயண பைகளை எடுத்து கொண்டு போய் கூடத்தில் வைத்தார்.

மாமா நல்லா இதுக்கீங்களா என்று மாமனாரிடம் நலம் விசாரித்தால் குழலி.

நல்லா இருக்கன்மா, அரசி நல்லா இருக்கலா? என்று அவர் தங்கையை விசாரித்தார் சுந்தரம். நல்லா இருக்காங்க மாமா, உங்கள கேட்டதா சொல்ல சொன்னாங்க என்று பேசி கொண்டிருந்தவள்..

பின் தயங்கி கொண்டு, மாமா அத்தை எப்படி இருக்காங்க? அவங்களுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததே எனக்கு தெரியாது மாமா. இப்போ தான் கார்ல வரும் போது அவரு சொன்னாரு என்று உண்மையை கூறினாள்.

அதலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல குழலி. நாங்க தான் இத்தனை பேர் கூட இருந்து பார்த்துகிட்டோம்ல அப்பறம் என்ன.. நீ எதுவும் சங்கடப்படாத என்று மருமகளின் தயக்கம் போக்க முயன்றார்.

விஷ்வா உறங்கி கொண்டிருந்த ரோஜா பூங்கொத்தை கையில் வைத்து ரசித்து கொண்டே தன் அப்பாவும் மனைவியும் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்.
சரிங்க மாமா நான் அத்தைய போய் பார்த்துட்டு வரன் என்று மகேஷ்வரி தங்கியிருந்த அறைக்கு செல்ல..

குழலி என்று போகும் மருமகளை அழைத்தவர், உன் அத்தை இப்போ என் ரூம்ல தங்கியிருக்காமா என்றார்.

குழலி சிரித்து கொண்டே அவள் மாமனாரின் அறைக்கு சென்றால். விஷ்வாவும் மனைவியோடு சென்றான். சூர்யா மூலம் அவன் அம்மாவின் மனமாற்றம் தெரிந்து கொண்டான் தான்.. இருந்தும், குழலியை அவன் அம்மாவிடம் தனியாக அனுப்ப மனம் இன்றி அவனும் சென்றான்.

அப்போது தான் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து இருந்தார் மகேஷ்வரி. அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆனா நிலையில், இப்போது ஓரளவுக்கு தேறி வந்துள்ளார்.

குழலியை பார்த்தவர் சென்று மெத்தையில் அமர்ந்து கொண்டு, வாமா இப்போதான் மாமியாரை பாக்கணும்ன்னு தோணியிருக்கு போல? என்று நக்கல் தோணியில் கேட்டார் மகேஷ்வரி.

ஹய்யோ அப்படிலாம் இல்ல அத்தை எனக்கு இப்போ தான் உங்களுக்கு உடம்பு சரியில்லாத விஷயம் தெரியும் என்று அவசரமாக பதில் கூறினாள் குழலி. விஷ்வா குழலியோடு இருப்பதனால் வேறு எதுவும் வம்பு பேச்சு வைத்து கொள்ளாமல்..

என்னமோ போ.. என்று சலித்து கொண்டார்.

குழலி அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, அத்தை இப்போ சாப்பிட்டீங்களா மாத்திரை போட்டிங்களா என்றால்..

ஹ்ம்ம் எல்லாம் ஆச்சு?

ஊர்ல உன் அம்மா எப்படி இருக்கா?

நல்லா இருக்காங்க அத்தை.

ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லு என்க..

குழலி பேந்த பேந்த விழித்து சரி என்று மட்டும் தலையை ஆட்டினாள்.

குழந்தை தூங்கறால என்று கேட்க.. ஆமா அத்தை மாமா வச்சிக்கிட்டு இருக்காரு..

இப்போ உங்களுக்கு எதாச்சும் உதவி செய்யட்டுமா அத்தை..

ஹ்ம்ம் இந்த கால் ரொம்ப வலிக்கிது தைலம் தேச்சுவிட்டா நல்லா இருக்கும் என்று காலை தூக்கி கஷ்ட்டப்பட்டு கட்டிலில் வைத்தார் மகேஷ்வரி.

ஹான் சரிங்க, அத்தை என்றவள் அவர் கையில் உள்ள தைலத்தை வாங்கி பதமாக தேய்த்துவிட்டு, விரலுக்கும் சொடக்கு எடுத்து விட்டால். விஷ்வா அதற்கு மேல் அங்கு நிற்காமல் அறையை விட்டு வெளியேற, இதற்கு தான் காத்திருந்தேன் என்பது போல்..

கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிடுச்சா?

குழலி ஏன் இந்த திடீர் கேள்வி என்று புரியாமல் பார்க்க..

சொல்லு என்றார் அழுத்தமாக..

அடுத்த மாசம் வந்தா ஒரு வருஷம் ஆக போது அத்தை. அப்பறம் ஏன் இன்னும் குழந்தை தங்காம இருக்கு?

அந்த ராங்கி காரி தான் கல்யாணம் ஆகியும் இன்னும் என் பையன தள்ளி வச்சு இருக்கா? உங்களுக்கு என்ன நீங்க ரெண்டு பேரும் ஒன்னு மண்ணா தான இருக்கீங்க? குழந்தை பெத்துக்க என்ன?

தள்ளி போட்டு இருக்கீங்களா என்று மீண்டும் கேள்வி கேட்டார் மகேஷ்வரி.

குழலிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. விஷ்வாவிடம் அவள் எடுத்த முடிவை தைரியமாக கூறிவிட்டாள் ஆனால் மாமியாரிடம் அப்படி கூற முடியுமா? என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அது வந்து அத்தை.. இப்போ வேண்டாம்ன்னு அவர் தான் சொன்னாரு என்று விஷ்வா மேல் பழி போட்டாள். அவன் அப்படி தான் சொல்வான் நீ தான் அவனை சரிகட்டி குழந்தைய வைத்துல வாங்கணும்.. இந்த சாமாத்தியம் கூட உனக்கு இல்லையா என்று கடுகடுக்க..

அவளுக்கு முகம் வெளிரி போனது, இன்று வரை குழந்தை உருவாக கூடாது என்று பாதுகாப்பாக இணைகிறார்களே.

பின் மகேஷ்வரி சொல்வதற்கு எல்லாம் சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டாள்.

நேரம் ஆவதை உணர்ந்து விஷ்வா வந்து அழைத்தான். குழலி பாப்பா சிணுங்கிறா வா என்று.. அவள் மாமியாரின் முகம் பார்க்க போ என்று அனுப்பி வைத்தார்.

குழலி அந்த அறையிலே கைகளை கழுவி கொண்டு விஷ்வாவோடு மேலே சென்றால்.

அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்டவன், என்ன ஆச்சு ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு??

அது வந்து, அத்தை.. என்று இழுத்தவள்.. குழந்தையை மெத்தையில் பாதுகாப்பாக படுக்க வைத்து விட்டு, அவளை அழைத்து கொண்டு பால்கனி சென்றான்.

சொல்லு அம்மா என்ன சொன்னாங்க?

எப்போ குழந்தை பெத்துக்க போறிங்கன்னு கேட்டாங்க..

விஷ்வா இதை எதிர்பார்க்கவில்லை போலும்..

நீ என்ன சொன்ன?

நீங்க தான் இப்போ குழந்தை பெத்துக்க வேண்டாம்ன்னு சொன்னிங்கன்னு பொய் சொல்லிட்டன் என்றால்.

சிறு குழந்தை போல் அவள் அவனிடம் உண்மையை கூற அவளை அள்ளி அனைத்து கொண்டான் விஷ்வா.

முகத்தை மட்டும் சீரியஸ்சாக வைத்து கொண்டு ஏண்டி பொய் சொன்ன என்க?

இல்ல அவங்க உங்க அம்மால, உங்கள திட்ட மாட்டாங்க.. ஆனா நான் என் முடிவ சொன்னா அவங்க என்ன திட்டுவாங்களே..

சரி வா என்று அவளை எப்போதும் போல் மடியில் அமர்த்தி கொண்டு அவன் சோஃபாவில் அமர்ந்தான். உன் முடிவுல இன்னும் நீ உறுதியா தான் இருக்கியா?

குழலி அவனை வெறுமையான பார்வை பார்த்தாள்..

சொல்லு டி..

நீங்க இப்படி கேக்குறது எனக்கு கஷ்ட்டமா இருக்கு. நான் தான் அன்னைக்கே முடிவா சொல்லிட்டனே, அப்பறமும் ஏன் இப்படியே கேக்குறீங்க?

நமக்கு பூரணி மட்டும் போதும் இன்னொரு பாப்பா வேண்டாம் என்றால்..

விஷ்வாவிற்கு அவள் பேசுவது வருத்தமாக இருந்தாலும், வெளியே எதுவும் காட்டி கொள்ளவில்லை.

நானும் சராசரி ஆம்பள தான எனக்கும் குழந்தை மேல ஆசை இருக்காதா டி?

அப்போ பூரணிய உங்க குழந்தைன்னு சொல்றிங்களே அதலாம் பொய்யா?

ஏண்டி இப்படி கேட்டு என்ன இம்சை பண்ற?

பூரணி எப்பவும் என் பொண்ணு தான்.. உனக்கு சொன்னா புரியாது டி, நீ ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது உன் வயிறு வளரத பார்க்கணும், நம்ம பாப்பா அசையறத பார்க்கணும், உனக்கு வளைகாப்பு பண்ணனும், குழந்தை பிறக்கும் போது நான் முதல்ல குழந்தைய கைல வாங்கணும் இந்த ஆசைலாம் எனக்கு இருக்கு டி என்று அவன் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படையாக கூறினான்.

அனைத்தையும் கேட்டவள், மௌன சாமியாராக மாறி இருந்தாள். அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூட கூறவில்லை.

அவள் முகத்தை பார்த்தவனுக்கு, இவ மனசு மாறவே மாறாதா என்று தோன்றியது.

சரி விடு, பசிக்குதா டின்னர் கொண்டு வரவா? என்று பேச்சை மாற்றினான்.

இல்ல பசிக்கல.. வயிறு திம்மின்னு தான் இருக்கு. வரும் போது மூவரும் a2bயில் இரவு உணவை உண்டு விட்டு தான் வந்தனர்.

சரி போய் தூங்கு.. நான் வெளிய போய்ட்டு வரன்..

எங்க போறீங்க?

சும்மா ஒரு டிரைவ்..

நானும் வரன் என்று அவள் எழுந்து நிற்க..

எனக்கு தனியா போகணும் குழலி.. ப்ளீஸ்.

முதல் முறை அவளை தவிர்கிறான் விஷ்வா.. இதயத்தில் சுருக்கென்ற வலி தைத்தது.

அவள் முகம் மாறி விழி கலங்கி நிற்பதையும் கண்டு கொள்ளாமல், கார் சாவியை எடுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்..

இன்று முழுவதும் பயணம் செய்ததில், விஷ்வாவிற்கு இருக்கும் உடல் அசதியில் நன்றாக படுத்து உறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வீடு வந்து சேர்ந்தான்.

ஏனோ இப்போது குழலி மேல் இருக்கும் ஆதங்கத்தில் படுத்தாலும் உறக்கம் வராது என வெளியே கிளம்பி விட்டான்.

இங்கு குழலிக்கும் உறக்கம் எட்டா கனியாகி போனது, விஷ்வாக்கு நான் குழந்தை பெத்து குடுக்கலனா அவர் என்ன வெறுத்துடுவாரா? என்ன விட்டு வேற பொண்ணுகிட்ட குழந்தை பெத்துக்குவார என அவளின் கற்பனை குதிரைகள் தறி கெட்டு சென்றது.

ஏதேதோ எண்ணங்களில் உழன்றவள், அமர்ந்த வாக்கில் பால்கனி சோஃபாவில் உறங்கி போனாள்..

நடு ஜாமத்தில் தான் வீடு வந்து சேர்ந்தான் விஷ்வா, அறைக்கு வந்தவன் குழலியை தேட, அவள் மெத்தையில் இல்லை. பின் பால்கனி சென்று பார்க்க அங்கு தான் கால்களை கைகளால் கட்டி கொண்டு உறங்கி போய் இருந்தாள்.

இவள.. என்று கடிந்து கொண்டவன், உறங்கும் மனைவியை கைகளில் அள்ளி கொண்டு மெத்தையில் மெதுவாக படுக்க வைத்தான். பின் விஷ்வாவும் இரவு உடைக்கு மாறி வந்து அவள் அருகில் படுத்து கொள்ள..

தூக்கத்தில் அவன் வாசம் உணர்ந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து அவனை அனைத்து கொண்டாள்.

சிரிப்பாக வந்தது விஷ்வாவிற்கு, அவனும் அவளை அனைத்து கொண்டான். வெளியே சென்று வந்ததில் அவன் மனம் இலகுவாகி இருந்தது.

குழலி தூக்கத்தில் உளறி கொண்டிருந்தாள்.. ஷிவா, என்ன விட்டு போய்டுவியா வேற பொண்ண கல்யாணம் பண்ணிப்பியா என்று விசித்து கொண்டே கேட்க, ம்க்கும் உன் ஒருத்திய வச்சே என்னால சமாளிக்க முடியல இதல இன்னொன்னு வேறயா? பாடி தாங்காது டி என்று வேடிக்கையாக கூறினான்..

இருந்தும் அவனின் சிறு ஒதுக்கம் அவளை எந்த அளவு பாதித்து இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான்.

இனி அவளிடம் குழந்தையை பற்றி பேசக்கூடாது என்று முடிவில் இருந்தான். வீட்டில் உள்ளவர்களிடமும் நேரம் பார்த்து குழலியின் முடிவை அவன் முடிவு போல் திரித்து கூற வேண்டும் என்று நினைத்து கொண்டான்..

 

 

 

 

 

 

 

 

 

77. கண்கள் நிறைந்த ஓவியமே!!
மறுநாள் விடியலில் எழுந்த குழலி, விஷ்வாவின் அனைப்பில் இருப்பதை  அறிந்து அவளை இன்னும் அவனுள் புதைத்து கொண்டாள்.

அவனும் அவளை இறுக்கி கொண்டு நெற்றி முத்தமிட்டான். நீங்க முழிச்சிட்டு தான் இருக்கீங்களா, நீ கட்டி புடிச்சதுல தூக்கம் போச்சு என்று கண்களை மூடி கொண்டே பதில் கூறினான். அவன் உதட்டில் மென்முத்தம் கொடுத்தவள், அவன் அணிந்து இருந்த டீஷர்ட்டை விளக்கி கழுத்தில் அவன் வாசம் பிடித்தால்.

என்ன டி என்று கேட்டு அவளை இன்னும் தன்னுள் இறுக்கி கொண்டு அவள் இடைவளைத்தான்.

சாரி ஷிவா..

நேத்து விஷயத்த பத்தி பேச வேண்டாம் ப்ளீஸ் டி..

அவளும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவன் அனைப்பில் கட்டுண்டு இருந்தாள். பின் நேரமாவதை உணர்ந்து, விஷ்வாவை விட்டு எழுந்தாள்..

என்ன டி அப்படியே போற, மாமாவை கொஞ்சம் கவனிச்சிட்டு போறது என்று அவன் கிறக்கமாக அவன் கையை பிடித்து இழுக்க, அவன் மீதே முல்லை கொடியாய் விழுந்தாள் குழலி.

அவன் மாமா என்று கூறியதில் முகம் சிவந்தவள், என்ன மாமான்னு சொல்றிங்க என்று வெட்கத்தோடு அவன் முகம் பார்க்க.. சும்மா தான் டி. நல்லா இல்லையா?

உங்களுக்கு தான் கிராமத்து பாஷை எல்லாம் பிடிக்காதே..

கல்யாணம் ஆன ரெண்டாவது நாள் உங்களுக்கு வர போற மனைவி எப்படில்லாம் இருக்கணும்ன்னு ஒரு பட்டியல் போட்டிங்களே மறந்துட்டிங்களா என்று கிண்டலாக கேட்டாள்.

என் செல்ல குட்டி இன்னும் நீ அதலாம் மறக்கலயா டி என்று கொஞ்சி கொண்டே அசடு வழிந்தான் விஷ்வா. மறக்க கூடிய விஷயமா அதலாம் என்று அவளும் உதட்டை சுழித்தாள்..

ச்செரி ச்செரி.. மன்னிச்சு மன்னிச்சு என்று அவளிடம் சரண்டர் ஆகிவிட்டான் விஷ்வா.

வா டி, கொஞ்சம் நேரம் என்று அவளை கொஞ்சளுடன் அழைக்க.. முடியாது போங்க.. நீங்க கொஞ்சம் நேரம்ன்னு சொல்லி ஒரு மணி நேரம் ஆக்கிடுவிங்க..
எதுவா இருந்தாலும் நைட் பார்த்துக்கலாம் நீங்க இப்போ ஆபீஸ் கிளம்பி போங்க.. என்று அவனிடம் இருந்து தப்பிக்க முயல..

ம்ஹும்.. ம்ஹும்.. ம்ஹும்.. என்று செல்ல சிணுங்கல் கொண்டவன், உனக்கு ஒன் வீக் ரெஸ்ட் குடுத்து தள்ளி நின்னன்ல எனக்கு பாவம் பார்க்க மாட்டியா டி? என்று அவன் பாவமாக கேட்க..

நான் உங்ககிட்ட ரெஸ்ட் கேட்கவே இல்ல.. நீங்களே தான ரெஸ்ட் குடுத்தீங்க.. அது உங்க தப்பு போங்க என்று அவள் முறுக்கி கொண்டு சொல்ல. போடி ரொம்ப பண்ற என்று அவனும் பெட்டில் கவிழ்ந்து படுத்து தலையணைக்குள் முகத்தை புதைத்து கொண்டான். அவனை பார்க்க குழலிக்கும் பாவமாக இருக்க..

அவன் முதுகின் மேல் ஏறி படுத்தவள்.. அவன் காதை கொஞ்சம் சாய்ந்து கடித்து பாப்பா தூங்கறா இப்போ எப்படி என்று அவளின் சம்மதத்தை மறைமுகமாக கூற.. அவளை ஒரே தள்ளாக கீழே தள்ளி, உனக்கு ஓகே வா என்றான் கண்கள் மின்ன..

ஹ்ம்ம் என்று அவள் மேலும் கீழும் தலையை வெட்கத்தோடு ஆட்டினால்.. அவளை அப்படியே தூக்கி கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் விஷ்வா.

அதன் பின் அங்கு கேட்டவை எல்லாம் குழலியின் சிணுங்களும் விஷ்வாவின் உறுமலும் தான்..

காலை 4.30 மணிக்கு குளியல் அறையினுள் சென்றவர்கள் 6 மணிக்கு தான் வெளியே வந்தனர்.

விஷ்வா இப்போதெல்லாம் அவன் உடற்பயிற்சியை மனைவியோடு முடித்து கொள்கிறான்.

விஷ்வாவே அவளை வெளியே தூக்கி வந்து, நான் தான் ஆடை அணிவிப்பேன் என்று அடம் பிடித்து பொல்லாத சிலுமிஷங்களை எல்லாம் செய்தான்.. ஹேய் இங்க ஒரு மச்சம் ரிலீஸ் ஆகியிருக்கு டி என்றவன் எச்சில் ஒழுக பார்த்த இடம் எழுத்தில் அடங்காதவை..

இந்த இடத்துல இந்த மச்சம் செமயா இருக்கு டி என்று கூறி அவளையும் புதுசாக ரிலீஸ் ஆனா மச்சத்தையும் சிவக்க வைத்தே அவளை விட்டான்.

விஷ்வாவிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று நெஞ்சம் படபடக்க அறையை விட்டு வெளியே வந்தாள் குழலி. வர வர இவன் சேட்டை ரொம்ப அதிகமாகிட்டே போது என்று சிரித்து கொண்டே அவன் செய்தவைகளை நினைத்து பார்த்தவளின் முகம் காலை கதிரவனுக்கு இணையாக சிவந்து போனது..

பின் எப்படியோ தன்னை சமன் படுத்தி கொண்டவள், சமையலறை சென்று காலை மற்றும் மதிய உணவுகளை சரசுவின் உதவியோடு செய்து முடித்தால்.

அவள் மாமாவிற்கு சத்து மாவு கஞ்சியை கொடுத்தவள், அருகில் இருந்த அவள் மாமியாரிடம் அத்தை காலைல என்ன சாப்புடுறீங்க என்று கேட்டாள். எனக்கும் சத்து கஞ்சியே குடுத்துடு என்றார். அவருக்கும் அதையே கொடுத்தாள் குழலி.

குழலி நீ இன்னைக்கு ஆபீஸ் வருவ தானமா என்று கேட்க, வருவன் மாமா என்றால் புன்னகை முகமாக..

ஏங்க இவ உண்மையாவே வந்து அங்க வேலை பாக்குறாலா என்று சந்தேகமாக கேட்டாள் மகேஷ்வரி.

ஏன் அதல உனக்கு என்ன சந்தேகம்?

இல்ல இவ பெருசா எதுவும் படிக்கலையே அதான் கேட்டன்..

அவளுக்கு என் பிசினஸ்ஸ பார்த்துக்குற அளவுக்கு போதுமான கல்வி அறிவு இருக்கு.. அதுமட்டும் இல்லாம குழலி அவ புத்திய தீட்டிக்குற அளவுக்கு புதுசு புதுசா கத்துக்குறா, நிறைய புத்தகங்கள படிக்குறா. தெரியாத விஷயத்தை விஷ்வாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறா..

இப்போல்லாம் ஆபீஸ்ல என் மருமகளுக்கு தெரியாம எந்த விஷயமும் நடக்குறது இல்ல. எல்லா டிபார்ட்மென்ட்லயும் பொதுவா என்ன நடக்குதுன்னு தேடி தேடி கத்துக்குறா..

மத்தவங்க மாதிரி உடம்பு நோகாம வீட்ல உக்காந்து அடுத்தவங்க மேல குறை கண்டு பிடிக்குற பழக்கம் என் ரெண்டு மருமகங்களுக்கும் கிடையாது என்று மனைவியின் மட்டம் தட்டும் பேச்சிற்கும் ஒரு கொட்டு வைத்தார் சுந்தரம்..

என்ன செய்வது, சிலரின் பிறவி குணத்தை மாற்ற முடியாது போலும், அவர்களையும் மீறி வெளிவந்து விடுகிறது மகேஷ்வரி போல்.

விஷ்வாவும் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு தான் வந்தான். அவன் அப்பா பதில் கொடுத்த பின் அவன் அம்மா பேச்சிற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

சூர்யாவும் வெளியே வந்தான்.. ஏனோ தானோவென இருந்தான். ரஞ்சனி அவனை விட்டு சென்று பத்து நாட்கள் ஆனா நிலையில் அவனை வீட்டில் உள்ளோர்களால் பார்க்க முடியவில்லை. எப்போதும் முகத்தில் ஒரு டன் சோகம் அப்பியிருக்கும்..

விஷ்வா அவனிடம் நைட் எப்போ டா வந்த என்று கேட்க.. வேலை இருந்துச்சு முடிச்சிட்டு வர, லேட் ஆகிடுச்சு என்றான்.

இப்போது எல்லாம் வீட்டிற்கு தாமதமாக தான் வருகிறான். அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவன் ஈவினிங் நானும் குழலியும் ரஞ்சனி வீட்டுக்கு போறோம்  வரியா?

ஏன்?

அரசி அத்தை பலகாரம்லாம் செஞ்சு குடுத்துவிட்டு இருக்காங்க அதலாம் ரஞ்சனி வீட்டுக்கும் குடுத்துட்டு அவளையும் பார்த்துட்டு வரலாம்ன்னு தான்..

நீண்ட மூச்சை விட்டவன்.. நான் வர்ல நீங்க போய்ட்டு வாங்க என்றான்..

ஏன் வர்ல? வாடா ஜாலியா போய்ட்டு வரலாம் என்க..

எங்கோ வெறித்து கொண்டே சொன்னான், என்ன பார்க்க வராதன்னு சொல்லியிருக்கா. என்ன பார்க்க கூட புடிக்கல போல..

அவன் சொல்லிய விதம் விஷ்வாவிற்கும் கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. அவன் தோளில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தவன் எல்லாம் சரி ஆகிடும் விடு..

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, குழலி மற்றும் விஷ்வாவின் குட்டி இளவரசி படிகளில் மெது மெதுவாக பிஞ்சு பாதங்களை வைத்து கொலுசொலி வீடேங்கும் ஒலிக்க அழகாக நடந்து வந்தாள். விஷ்வா மகளின் கொலுசொலி கேட்டு திரும்பி பார்க்க பதறி தான் போனான். இதுவே முதல் முறை குழந்தை இப்படி படியிறங்கி வருவது.

வேகமாக ஓடியவன், தந்தை தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டு குலுங்கி சிரித்த குழந்தையை கையில் அள்ளி கொண்டான்.

பாப்பா இப்படி தனியா வர கூடாது என்று மென்மையாக கடிந்து கொண்டே கீழே அழைத்து வந்தான்.  எங்கே குழந்தை படியில் உருண்டு விழுந்து விடுமோ என்று அங்குள்ள அனைவரும் பயந்து தான் போயினர்.

ஆள் ஆளுக்கு குழந்தையை தூக்கி கொண்டு மென்மையாக கூறினர் மேல படில தனியா நடந்து வர கூடாது என்று.. சொன்னால் கேட்க கூடிய வயதா குழந்தைக்கு? எதை செய்யாதே என்கிறோமோ அதை தானே செய்து விட்டு வந்து மலங்க மலங்க விழிப்பார்கள்..

பின் குழலியிடம் இனி பாப்பாவை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கும் சேர்த்தே சொல்லி கொண்டான்.

மகேஷ்வரி இது தான் சமையம் என்று நினைத்தவர், விஷ்வா நீ இந்த குழந்தைக்காக இவ்வளவு துடிக்கறது எல்லாம் நல்லா தான் இருக்கு.. நீங்க எப்போ உங்களுக்குன்னு ஒரு குழந்தைய பெத்துக்க போறீங்க என்று கேட்டு விட்டார்..

விஷ்வாவிற்கு அவன் அம்மாவின் பேச்சு முகம் சுழிக்க வைத்தது.. அம்மா இது என்ன பேச்சு இந்த குழந்தை அந்த குழந்தைன்னு..

பூரணி என்னோட குழந்தை புரியுதா.. அப்பறம் எங்க வாழ்க்கைக்கு பூரணி மட்டும் போதும். இன்னொரு குழந்தை எங்களுக்கு வேண்டாம். என்று பட்டென்று சொல்லிவிட்டான்.

என்ன பேசுற விஷ்வா உன் ரத்தத்துல வரதுதான் உன் குழந்தை இந்த வீட்டு வாரிசு, மூத்த மகனா பொறுப்பா நடந்துக்கோ என்று மகேஷ்வரி கூற..

விஷ்வாவிற்கு கோவம் தான் வந்தது அவன் அம்மாவின் பேச்சு..

பொறுப்ப பத்தி நீங்க பேசுறீங்க பார்த்திங்களா அது தான் எனக்கு வேடிக்கையா இருக்கு.. இத்தன வருஷமா பிள்ளைங்க என்ன பண்றாங்க? நல்லா இருக்காங்களான்னு கூட ஒழுங்கா பார்த்துக்கல.. ஏதோ இந்த இருவது நாளா உடம்பு சரியில்லாம இருக்கவே வீட்லயே இருக்கீங்க.. இல்லன்னா நீங்க இந்த நேரத்துக்கு எந்த பப்ல இருப்பிங்களோ என்று விஷ்வா இதழ் வளைத்து கூற.

விஷ்வா என்று முதல் முறையாக மனைவிக்காக குரல் உயர்த்தினார் சுந்தரம்..

ஆயிரம் இருந்தாலும் அவ என் மனைவி, உங்க ரெண்டு பேரையும் பெத்தவ அத உன்னால மறுக்க முடியாது தான?

விஷ்வா அமைதியாக நிற்க.. ஒழுங்கா அவளுக்கு குடுக்க வேண்டிய மரியாதைய குடு.. அவ கேட்டதுல அப்படி எந்த தப்பும் இருக்கா மாதிரி எனக்கு தோணல, கல்யாணம் ஆனா பசங்க கிட்ட இருந்து பெத்தவங்க எதிர்பார்க்குறத தான் நாங்களும் எதிர்பார்க்குறோம்..

விஷ்வா அவன் அப்பாவிடம்.. இங்க பாருங்கப்பா.. இது என்னோட தனிப்பட்ட விஷயம் இதல யார் தலையிடறதும் எனக்கு பிடிக்கல. எனக்கு என் பொண்ணு பூரணி மட்டும் போதும்.
உங்க பசங்க ரத்தத்துல இருந்து தான் குழந்தை வேணும்னா.. நான் மட்டும் உங்களுக்கு பையன் இல்ல. சூர்யாவும் உங்க பையன் தான? அவன் குழந்தை பெத்து குடுப்பான் ரெண்டு பேரும் வச்சு கொஞ்சுங்க..

நான் என் பொண்டாட்டி குழந்தைய கூட்டிகிட்டு தனியா போறன் என்று முடிவாக கூறி முடித்தான்.

டேய் ஏன்டா அவசரபட்டு வார்த்தைய விடுற என்றான் சூர்யா.. கடுப்பா இருக்கு டா விடு.. என்று எதிரே இருந்த சூர்யாவை தாண்டி வெளியே சென்றான்.

சுந்தரம் இந்த மாதிரி ஒரு பதிலை மகனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. குழலிக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. தன்னால் தானே விஷ்வா அவருக்கு ஆசை இருந்தும் அவர் அப்பா அம்மாவிடம் இப்படி பேசினார் என்று.

மகேஷ்வரிக்கு ஒரு புறம் மகன் பேசியது ரணமாக வலித்தது. அவரது பொறுப்பின்மையால் பெத்த மகன்களிடம் இன்னும் எவ்வளவு பேச்சு வாங்க வேண்டுமோ என்று நினைத்தார்.

அந்த காலை பொழுது இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாறி சென்றது..

மாலை விஷ்வா குழலி இருவரும் ரஞ்சனி வீட்டிற்கு சென்றனர். காலை வீட்டில் நடந்த பிரச்சனையை பற்றி இருவரும் பேசி கொள்ளவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

78. கண்கள் நிறைந்த ஓவியமே!!
மாலை அலுவலகம் முடிந்து வந்த விஷ்வா, குழலி மற்றும் பூரணியை அழைத்து கொண்டு ரஞ்சனி வீட்டிற்கு சென்றான்.. அங்கு நல விசாரிப்புகள் முடிய, முத்தரசி கொடுத்துவிட்ட பலகாரங்களை சுசிலாவிடம் கொடுத்துவிட்டு பேசி கொண்டிருந்தார்கள்.

ரஞ்சனியும் அங்கு தான் இருந்தாள். அவளுக்கு சூர்யா வராதது ஏமாற்றமாக இருந்தது. நீ தான இங்க வரவேண்டாம்ன்னு சொன்ன.. அதான் சூர்யா வரல என்று அவளின் மனசாட்சி சரியான நேரத்திற்கு நினைவு படுத்த.. அதுக்குன்னு வராமலே இருந்துடுவானா.. கெஞ்சி சமாதானம் படுத்தணும்ன்னு தெரியாது என்று மனதோடு சூர்யாவை திட்டி கொண்டிருந்தாள்.. 

பூரணி பாப்பா ரஞ்சனி மடியில் ஏறி குதித்து விளையாடி கொண்டிருக்க ரஞ்சனியின் நினைவு முழுவதும் சூர்யாவிடமே.

பின் குழலி பாப்பாவை சுசிலாவிடம் கொடுத்து விட்டு ரஞ்சனியை அழைத்து கொண்டு அவள் அறைக்கு சென்றால்..

ரஞ்சி அக்கா நீங்க வீட்ல இல்லாம எனக்கு போர் அடிக்குது ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க. சூர்யா மேல கோவம் இருந்தா அவர் கூட பேசாதீங்க, வீட்டுக்கு வந்துடுங்க என்று குழலி பேசி கொண்டிருக்க.

அப்போது விஷ்வா அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.

ரஞ்சி நீ எப்போ வீட்டுக்கு வர? ரஞ்சனி விஷ்வாவை முறைக்க.. இங்க பாரு இந்த முறைக்குற வேலை எல்லாம் சூர்யாவோட நிப்பாட்டிக்கோ என்கிட்ட முறைச்சிக்கிட்டு நின்ன ஒன்னு வைப்பன் மண்டைல.. உன்ன காப்பாத்த இப்போ சூர்யா கூட இல்ல பாத்துக்கோ.

ஏன்டா வீடு தேடி வந்து என்கிட்ட சண்டை போடுற என்று அவள் கத்த..

விஷ்வா அங்குள்ள பீன் பேகில் வசதியாக அமர்ந்து கொண்டான்.

எவ்ளோ தைரியம் இருந்தா என் தம்பிய இனிமேல் என்ன பார்க்க வராதன்னு சொல்லியிருப்ப, மீன் திருடி என்று கையில் கிடைத்த ஒரு டைரியை தூக்கி அவள் மீது வீச, அதில் இருந்த சில புகைப்படங்கள் கீழே விழுந்தது.

ரஞ்சனி அதை எடுக்க முயல அதற்குள் விஷ்வா அதை எடுத்து இருந்தான். எல்லாம் சூர்யாவின் சிறு வயது புகைப்படங்கள் தான். இந்த பத்து நாட்களாக சூர்யாவின் புகைப்படத்தோடு தான் குடும்பம் நடத்துகிறாள் ரஞ்சனி.

அவன்மேல கோவமா இருக்கன்னு சொன்ன, இது என்ன என்றான்..

கண்கலங்கி நின்றாள் ரஞ்சனி, கணவனை பிரிந்து இருந்த சோகம் கண்ணீராக வெளி வந்தது.

குழலி பதறி போய் அக்கா அழாதீங்க என்று சமாதானம் செய்ய முயல, குழலி நீ போய் அங்க உக்காரு  என்றான் விஷ்வா. ஷிவா அதுவந்து.. இவ அழரான்னு பாவம் பார்க்காத சரியான ஃப்ராடு இவ, என்று ரஞ்சனியை வேண்டும் என்றே திட்ட.

அதில் பழைய ரஞ்சனி வெளியே வந்தாள்.. நானா டா ஃப்ராடு? நீ தான் டா ஃப்ராடு.. வரும் போது என் சூர்யாவ கூட்டிட்டு வரத்துக்கு உனக்கு என்ன கேடு? என்று அவள் பழைய ஃபார்முக்கு வந்து திட்டினால். விஷ்வாவிற்கு தான் தெரியுமே.. ரஞ்சனி அழுது கொண்டிருக்கும் போது அவளிடம் அழாதே என்று சமாதானம் செய்தால், இன்னும் அதிகமாக அழுவாள். அதே நேரம் அவளை சீண்டி விட்டால், அழுகையை மறந்து அவர்களிடம் மல்லுக்கு நிற்பால் அதனால் தானே இப்படி பேசியது.

அவன இவ்ளோ தேடுறல அப்பறம் ஏன் இந்த வெட்டி பிடிவாதம்? அவன்கிட்ட போய் பேச வேண்டியது தான?

உனக்கு தெரியாது விஷ்வா.. அவன் எவ்ளோ மோசமா என்கிட்ட பேசுனான் தெரியுமா? எனக்கு அந்த நிமிஷம் என் சூர்யாவா என்ன இப்படி பேசுனதுன்னு தோணுச்சு.

நீண்ட மூச்சை எடுத்து கொண்டவன், அவளை மெத்தையில் அமர வைத்து, அவனும் அவள் உடன் அமர்ந்து கொண்டு தோள் மீது கை போட்டு கொண்டு பேசினான்..

உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்க பிரச்சனைல நான் தலையிடல.. ஆனா எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும்.

சூர்யா உன்ன ரொம்ப லவ் பண்றான் டி.. உன்மேல ஓவர் பொஸ்ஸஸிவ், நீ அவன் லவ்வ ரிஜெக்ட் பண்ண போது, அவன் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணான் தெரியுமா. என்று விஷ்வா சொல்லும் போது, ரஞ்சனியின் உடல் தன்னால் நடுங்கியது.. அவள் உள்ளம் சூர்யா என்று அவன் பெயரை மட்டுமே உள்ளுக்குள் கூப்பாடு போட்டது. ரிலாக்ஸ் ரஞ்சி என்று அவள் கண்களில் இருந்து வரும் நீரை துடைத்துவிட்டான்.

அன்னைக்கு நான் மட்டும் சரியான நேரத்துக்கு அவன் ரூம் போலனா சூர்யா இன்னைக்கு இல்ல ரஞ்சி.. அந்த பைத்தியகாரன் உன்ன அவ்ளோ லவ் பண்றான்.

அப்பறம் நான் தான் அவனுக்கு பூமர் அங்கிள் மாதிரி அட்வைஸ் பண்ணி அவனை பழைய நிலமைக்கு மாத்துனன். உன் நிச்சய விழால கூட அவன் அவனா இல்ல. பாதிலயே போய்ட்டான்.

புரிஞ்சிக்கோ ரஞ்சி, அவன் அம்மா அப்பா நான் இல்லாம கூட இருப்பான் ஆனா நீ இல்லாம சத்தியமா அவன் இருக்க மாட்டான்.

அவன் உன்கிட்ட இன்னொரு அம்மாவ தேடுறான். அவன் கோவத்துல கூட உன்மேல இருக்க லவ் தான் தெரியும். நீ அவன்கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்க கூடாதுன்னு நினைக்குறான். நீ அவனுக்கு தான் முன்னுரிமை குடுக்கணும்ன்னு நினைக்குறான்.

வீட்டுக்கு வந்து அவன் மூஞ்சிய பாரு அப்பறம் நீயே அவன்மேல பாவப்பட்டு பேசிடுவ என்று விஷ்வா சீரியஸ்சாக சொல்ல, அவர்கள் பேசுவதை பீன் பேக்கில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த குழலி, விஷ்வா இறுதியாக சொன்னதில் சிரித்து விட்டால். விஷ்வா அவளை பொய்யாக முறைக்க..

ஆமா ரஞ்சி அக்கா வீட்டுக்கு வந்து சூர்யா முகத்தை பாருங்க செம காமெடியா இருக்கு என்று இன்னும் சிரித்தாள்.

பின், ரஞ்சனியிடம் விளையாட்டுக்கு சொல்லல ரஞ்சி, உண்மையாவே அவன் ஏதோ பறிகொடுத்தது போல தான் இருக்கான். நைட் எப்போ வீட்டுக்கு வரான்னே தெரியல. என்று தம்பியை நினைத்து உண்மையாக வருத்தம் கொண்டான்.

கண்களை துடைத்து கொண்டவள், எனக்கு சூர்யாவ பார்க்கணும் விஷ்வா.

சரி அப்போ கிளம்பி எங்ககூட வீட்டுக்கு வா..

இல்ல எனக்கு இப்போவே பார்க்கணும், இப்போ அவன் ஆபீஸ்ல தான இருப்பான் நான் அங்க போறன் என்றவள், விஷ்வாவின் பதிலை எதிர்பார்க்காமல் அவளது கைப்பையை மட்டும் எடுத்து கொண்டு வேகமாக வெளியே சென்றால். ஹேய் மீன் திருடி வெயிட் பண்ணு கேப் புக் பண்றன் என்று விஷ்வா கூற.. வேண்டாம் நான் ஆட்டோ புடிச்சி போய்குறன் என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றால்.

பரமு சுசிலா கூடத்தில் பூரணி பாப்பாவோடு விளையாடி கொண்டிருக்க.. அவர்களிடம் அம்மா நான் சூர்யா ஆபீஸ் போறன் என்று தகவலாக கூறிவிட்டு வேகமாக சென்றால்.

அவர்களின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா.. இருவரும் விஷ்வாவை பார்க்க, நான் எதுவும் பண்ணல மாமா அவ ஆல்ரெடி தனிமைல சூர்யா நினைச்சி ஏங்கி இருக்கா.. நான் கொஞ்சம் பேசுனதும் அவ மனசு மொத்தமா அவ புருஷன் பக்கம் சாஞ்சிடுச்சு என்று சிரித்து கொண்டே கூறினான்.

பின் விஷ்வா குழலி பாப்பா என மூவரும் அங்கேயே இரவு உணவை முடித்து கொண்டு வீடு செல்ல தயாராகினர்.

இங்கு சூர்யாவின் அலுவலகம் வந்த ரஞ்சி, எதிரே வந்த அவன் நண்பர்களின் நல விசாரிப்புக்கு பதில் கூறிவிட்டு, சூர்யா எங்கே என்று அவர்களிடம் கேட்டு கொண்டு அவர்கள் சொன்ன அவன் கேபினிற்கு சென்றால்.

சூர்யா அவன் சீட்டில் தலையை பின்னே சாய்த்து கொண்டு கண் மூடி அமர்ந்து இருந்தான்.. கதவு திறக்கும் சத்தம் கேட்டு.. டேய் சும்மா சும்மா தொல்லை பண்ணாத டா.. எந்த சந்தேகமா இருந்தாலும் நாளைக்கு கேட்டுக்கோ என்று வந்தது யார் என்றே பாராமல் பேசினான் சூர்யா.

நல்லா இருக்கு டா நீ பிசினஸ் பண்ற லட்சணம், இப்படி தான் டவுட் கேட்டு வரவங்ககிட்ட பொறுப்பு இல்லாம பதில் சொல்லுவியா என்று கேட்டு கொண்டே அவனை நெருங்கி வந்தாள் சூர்யாவின் கிட்டன்.

அவளை பார்த்ததும் எழுந்து நின்றவன், தன்னவள் தன் முன் நிற்பது கனவா அல்லது நிஜமா என தெரியாமல். கிட்டன் என்று அவன் காற்றுக்கும் நோகாமல் அழைக்க, உன் கிட்டன் தான் டா, என்றவள் அவனை இழுத்து பக்கவாட்டில் நிறுத்தி அவனின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்த சூர்யா, தன்னை கொஞ்சம் சுதாரித்து கொண்டு ஃபார்முக்கு வந்து விட்டான். எதுக்கு டி இங்க வந்த என்று முறைத்து கொண்டு கேட்க, ஹான் என்ன பார்க்காம ஒருத்தர் தேவதாஸ் மாதிரி சுத்திக்கிட்டு இருக்காராம்.. தேவதாச நான் இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. அதான் உன்ன பார்த்துட்டு போலாம்ன்னு வந்தன் என்று அவள் நக்கல் செய்தால்.

இங்க யாரும் நீ இல்லாம தேவதாஸ் மாதிரி சுத்திக்கிட்டு இல்ல.. சொல்ல போனா உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தன் என்று கூற.

அதுவரை அவன் சாரில் இடவலமாக ஆடி கொண்டு இருந்தவள், அவனின் எகத்தாள பேச்சில், கொழுப்பு குறையுதாடா உனக்கு.. இப்பவும் இறங்கி வராம இருக்க? என்ன நானே உன்ன தேடி வந்துட்டன்னு திமிரு காற்றியா என்று அவள் கை எட்டும் தூரத்தில் இருந்த அவனின் தட்டை வயிற்றில் குத்து குத்து என்று குத்தினால்.

ஹேய்.. ஹேய்.. வயித்துல அடிக்கறன்னு கீழ இறக்கி அடிச்சுடாத டி. எனக்கு இன்னும் ஒருதடவை கூட பர்ஸ்ட் நைட் நடக்கல என்று ரஞ்சனியின் கையை பிடித்து கொண்டு கூற.

எப்பவும் உனக்கு அதே நினைப்பு தான் டா.. என்று அவன் சட்டையை இழுத்து அவன் வயிற்றை இறுக்கி கட்டி கொண்டாள்.

பின் அவனை நிமிர்ந்து பார்த்தவள், நீ
என்ன உண்மையா தான் லவ் பண்ணியா டா? என்று அவள் சந்தேகத்தை கேட்க..

ஏண்டி இப்படி ஒரு கேள்வி கேக்குற??

அவன் அவன் லவ் பண்ற பொண்ணு கோச்சிக்கிட்டு இருந்தாலே என்னென்னமோ பண்ணி சமாதானம் பண்றாங்க. ஆனா நீ என்ன லவ் பண்ணி கல்யாணம்  பண்ணிக்கிட்ட, நான் கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய் பத்து நாள் ஆச்சு.. வந்து என்ன சமாதானம் பண்ணியா நீ?

நீ தான டி சொன்ன, என்ன பார்க்க வராதன்னு..

நான் சொன்னா அப்படியே விட்ருவியா? திரும்ப வர மாட்டியா என்று எழுந்து நின்று அவன் சட்டையை பிடித்து கேட்டாள் ரஞ்சனி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

79. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ரஞ்சனி சூர்யாவின் சட்டையை பிடித்து கேள்வி கேட்டாள்.. நான் என்ன பார்க்க வராதன்னு சொன்னா அப்படியே விட்ருவியா..

இந்த ஒரு விஷயத்துலயாச்சும் உன் பேச்சை கேட்டு, கொஞ்சம் நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னு நினைச்சன் டி என்று அவன் சிரிக்காமல் கூற, அவளின் ஹீல்ஸ் அணிந்த காலால் அவன் இடது காலை ஓங்கி மிதித்தாள், ஷூ அணிந்தும் வலியில் துடித்தான் சூர்யா. அவன் வலியில் துடிப்பதை கண்டு அசரவில்லை ரஞ்சனி. அடிப்பாவி புருஷங்காரன் இங்க வலில துடிக்குறன்.. நீ கை கட்டி வேடிக்கை பாக்குறியா என்று அவளை இழுத்து கையை பின்னுக்கு வளைத்து கழுத்தை கடித்து வைத்தான்.

அம்மாவ நீ இங்க புடிச்சு தான் தூக்குவியா என்பது போல், இப்படி தான் எனக்கு நீ தண்டனை குடுப்பியா என்பது போல் இருந்தது அவள் பார்வை.

கிட்டன்.. என்றான் கிறக்கமாக.. அவளும் அதே கிறக்க நிலையில் தான் இருந்தாள் போலும்.. ஹ்ம்ம் என்றால் நடுங்கிய மோன குரலில்.

ரொம்ப காஞ்சி போய் இருக்கன் டி, இதுக்கு மேல என்ன காயப்போடாத டி என்றான்.. கெஞ்சல் அல்லாத தாப குரலில் அவன் சொன்ன விதம் ரஞ்சனியின் உடல் ஹார்மோன்களை அதிகமாக தூண்டிவிட்டது.

அவன் புறம் திரும்பி, அவன் இதழை சிறை செய்தால் ரஞ்சனி. நீண்ட நெடிய முத்தம். ரசித்து அனுபவித்து கொடுத்தாள். அவள் முத்தத்தில் ஒன்றிய சூர்யா அவளை அப்படியே தூக்கி அவனின் டேபிள் மீது அமர வைத்து அவள் கால்களால் அவன் இடுப்பை சுற்றி கொள்ள வைத்தான்.

மேல் உதடு கீழ் உதடு என முத்த சண்டையிட்டவர்களின் உதடுகள் மறுத்து போயின. கைகள் ஒருப்பக்கம் இருவரின் உடலிலும் எல்லை மீற. முப்பது நிமிடத்திற்கு பின் சப் என்ற சத்தத்துடன் இருவரும் பிரிந்தனர்.. இருவரின் உதடுகளும் வீங்கி தலை கலைந்து, உடைகள் நலுங்கி இருந்தது.

சூர்யாவின் கை இன்னும் அவளின் உடை விலகிய வெற்று தேகத்தில் தான் இருந்தது. ரஞ்சனி அவன் தோளில் கைப்போட்டு கொண்டு வீட்டுக்கு போலாமா? என்னாலயும் இதுக்கு மேல முடியாது டா. எனக்கு நீ இன்னைக்கே வேணும் என்றால்.

ரஞ்சனி இப்படி சொன்ன பின், அவன் பொறுமை காத்திடுவானா.. அவளை அப்படியே கைகளில் ஏந்தி கொண்டு சென்றான். பிரித்திஷ் மற்றும் இன்னும் சில ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்தனர். மற்றவர்கள் கிளம்பி விட்டனர். அப்போது தான் நேரத்தை பார்த்தனர் இருவரும் 10 ஐ நெருங்கி கொண்டு இருந்தது.

இன்று இரவு 12 மணி போல், ஒரு காதல் ஜோடியின் பிறந்தநாள் விழா பார்ட்டி உள்ளது. அதில் அந்த காதலன் அவனின் காதலிக்கு ப்ரொபோஸ் செய்து கொடுக்கும் அனைத்து பரிசு பொருட்களும் இவர்களின் யோசனையே, கொஞ்சம் வசதியான இடம் என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு மட்டும் பிரதானமாக அனுமதி வாங்கி அங்கே இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கே தான் இப்போது கிளம்பி கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இவர்களின் ஸ்டாஃப் கொஞ்சம் பேர் அங்கு சென்று விட்டதனர்.
அவர்களை ஆஹ் என்று பார்த்து கொண்டிருந்த பிரித்திஷை கூட கண்டு கொள்ளாமல் அவர்கள் உலகத்தில் இருந்தனர் இருவரும்.

சூர்யா நானே நடந்து வரன் இறக்கி விடு என்றவளை கண்டு கொள்ளாமல், மின்தூக்கியை விடுத்து மூன்று மாடி அவளை தூக்கி கொண்டே இறங்கினான் சூர்யா.

ரஞ்சனியும் அவன் கழுத்தை சுற்றி வளைத்து கொண்டு அவர்களுக்கான நேரத்தை அனுபவித்தனர்.

கார் பார்க்கிங் வந்தவன், ரஞ்சனியை அழகா காரினுள் இறக்கிவிட்டு வலது புறம் சுற்றி வந்து காரை எடுத்தான்.

கிட்டன் எனக்கு ஒரு ஆசை இருக்கு டி, அவன் கைவளைவுக்குள் இருந்தவள்..

என்ன ஆசை?

காருக்குள்ள லவ் மேக் பண்ணனும் டி,

அவள் அமைதியாக இருக்க..

பதில் சொல்லு டி..

ஹ்ம்ம் பண்ணலாம் பண்ணலாம் என்றவளின் முகம் முகம் சிவந்து போனது, இன்னும் அவன் மார்புக்குள் புதைந்து கொண்டாள். வாகனத்தை செலுத்தி கொண்டு அவளை இன்னும் இறுக்கி கொண்டான்.

நாளைக்கு பண்ணலாமா என்றான் சூர்யா..

இப்போ பண்ணலாமா என்றால் ரஞ்சனி..

இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல.. ரஞ்சனி நாக்கை கடித்து கொண்டாள்.

மந்தகாசமாக சிரித்தவன், இன்னைக்கு வேண்டாம் டி.. நம்மளோட பர்ஸ்ட் லவ் மேக் நம்மளோட ரூம்ல தான் இருக்கணும். என்னோட எல்லா உணர்வுகளையும் அந்த ரூம் பார்த்து இருக்கு. நம்மளோட ரூம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் சோ நம்ம லைஃப அங்க தான் தொடங்கணும் என்றான்.

டபுள் ஓகே என்றால்..

காரில் இருவரும் அவர்கள் இல்லறத்தை பற்றி பல கனவுகளுடன் பேசி கொண்டு வந்தனர்.

வாகனத்தை வேகமாக செலுத்தி கொண்டு இருந்தான் சூர்யா, அவ்வளவு அவசரம். ரஞ்சி கையை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் காரில் பாட்டை போட்டுவிட, அதுவோ அவர்களுக்கு ஏற்றார் போல் இருந்தது.


நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள பக்கென்று சிரித்து விட்டனர்.. ரஞ்சனி இது சரி வராது என்று பாட்டை மாற்ற போக, சூர்யா அவள் கை பிடித்து தடுத்து விட்டான்..


நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு
இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு

இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு

கிள்ளவா உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

சூர்யா ரஞ்சனியை பார்க்க.. அவள் வெட்க சிரிப்போடு அவன் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தாள்.

வரவா வந்து தொடவா
உன் ஆடைக்கு விடுதலை தரவா

அவசரம் கூடாது
அனுமதி தரும் வரையில்
பொதுவா நான் சொன்ன
நீ சொன்ன படி கேட்கும் காது

இது போன்ற விசயத்தில்
உன் பேச்சி உதவாது

இருவரும் பாடல் வரிகளின் ஆழமான அர்த்தத்தை உள்வாங்கி கொண்டு இருந்தர்.

மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் துடிக்கையில் வெடிக்கையில்
முத்தங்கள் தருவாயா

போதுமா அது போதுமா
ஆசை தீருமா அம்மா மாமா


மாமா என் மாமா
இந்த நிலவை ஊதி அணைப்போமா

காணாத உன் கோலம்
கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால்
என் வெட்கம் துடைத்துவிடுவாயா

அங்கத்தில் வெட்கங்கள்
எங்கெங்கு சொல்வாயா

தேன் எங்கெங்கு உண்டு என்று
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல்
பேரின்பம் வாராதுதான்

இன்பமா பேரின்பமா
அது வேண்டுமா வாமா மாமா

அதற்கு மேல் முடியாமல் பாட்டை அனைத்து விட்டால் ரஞ்சி.. அவள் உணர்வு புரிந்தவன் குனிந்து அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டில் அனைவரும் உறங்கி இருக்க, சூர்யாவிடம் உள்ள சாவியை கொண்டு திறந்து உள்ளே வந்தனர்.

கிட்டன் லைட்டா டின்னர் எடுத்து வை டி குளிச்சிட்டு வரன் என்றவன் டவளை எடுத்து கொண்டு குளியல் அறை சென்றான்.

ரஞ்சி கிட்சனில் தோசை வார்த்து கொண்டிருக்க.. ஜில்லென்ற கை இடையிலும் சூடான மூச்சு காற்று கழுத்திலும் படர்ந்தது.

குட்டி குட்டி முத்தங்களை அவள் கழுத்தில் வைத்து அவன் உணர்வுகளுக்கு அவளை நொறுக்கு தீனியாக எடுத்து கொண்டிருந்தான், நானும் குளிச்சிட்டு வரன் நீ தோசை சுட்டு முடிச்சிட்டு நம்ம ரூம்க்கு எடுத்துட்டு வந்துடு என்று அவனிடம் இருந்து அறைக்குள் ஓடி வந்துவிட்டால் பூனை குட்டியின் பெயர் கொண்டவள்.

ரஞ்சனி குளித்து முடித்து, குட்டி ஜீன்ஸ் டவுசறும், டிஷேர்ட்டும் அணிந்து வெளியே வந்தாள்.. அவளின் வாழை தண்டு கால்களில் வழுக்கி விழுந்தான் சூர்யா.

அனைத்தும் தாராளமாக இருக்கும் பெண்ணவளின் அங்க வனப்புகளில் மூச்சைடைத்து போனான் சூர்யா.

அவனையும் மீறி கிட்டன் என்று அவளை நெருங்க, இப்போது துவங்கினால் விட மாட்டான் என்று அறிந்தவள் அருகே நெருங்கியவனிடம் பசிக்குது டா என்று அவளின் குட்டி வைத்தை தடவி காட்ட, நீண்ட மூச்சு எடுத்து கொண்டவன் வா சாப்பிடலாம் என்று இருவரும் சாப்பிட துவங்கினர்.

நிறைய சாப்பிடாத டி அப்பறம் தூக்கம் வந்துடும்.. பசிக்குதே என்று அவள் உதடு பிதுக்கி கூற, இப்போ கொஞ்சமா சாப்டுக்கோ. பிரிட்ஜ்ல நட்ஸ் இருக்கு கொண்டு வரன் நடுவுல பசிச்சா நட்ஸ் சாப்பிடலாம்..

இருவரும் உண்டு முடித்தனர். சூர்யா சாப்பிட்ட தட்டுக்களை கொண்டு போய் கழுவி வைத்தான், பிரிட்ஜ்ஜில் உள்ள பாலை எடுத்து கொதிக்க வைத்தான். அதே போல் நட்ஸ் வகைகளையும் எடுத்து வைத்து கொண்டு, கொதித்த பாலை இளம் சூட்டில் ஆறவைத்து அனைத்தையும் எடுத்து கொண்டு உள்ளே சென்றான்.

என்ன டா நீ பால் கொண்டுவர என்று சிரித்து கொண்டே கேட்க? யார் கொண்டு வந்தா என்ன குடி.. உன்ன சரியாவே சாப்பிட விடல என்று உண்மையாக வருந்தி அவளுக்கு பாலை புகட்டினான்.

அவளும் மறுக்காமல் பாதி பாலை குடித்துவிட்டு மிச்சத்தை சூர்யாவிடம் கொடுக்க, அவளின் பால் மீசையை அவன் உதட்டால் துடைத்துவிட்டு, மிச்சம் இருந்த பாலை குடித்துவிட்டு அவளை நெருங்கினான்.

கிட்டன் ஓகே தான உனக்கு என்று இறுதியாக அவள் சம்மதத்தை கேட்க..

அவள் சம்மதத்தை அவள் இதழ் முத்தம் மூலம் உணர்த்தி கொண்டிருந்தாள் ரஞ்சனி. அவனை எக்கி எக்கி முத்தம் கொண்டிருந்தவளை அழகாக தூக்கி இடுப்பில் வைத்து கொண்டான் சூர்யா.

எப்போது பெட்டில் வந்து உருண்டார்கள் என தெரியவில்லை.. இருவரின் மேலாடையும் தரையில் கிடக்க. ரஞ்சனி மட்டும் பள பளவென மின்னும் அங்கத்தை சூர்யாவின் மேனி கொண்டு மறைத்து இருந்தாள்.

அந்த நேரம் சூர்யாவின் போன் விடாது அழைக்க.. முதல் இரண்டு முறை கண்டு கொள்ளாதவர்கள். மூன்றாம் முறை அடிக்கும் போது கடுப்பான ரஞ்சனி எடுத்து பேசு டா என்றால்.

சூர்யா கடுப்போடு போனை எடுத்து காதில் வைக்க, எதிர்ப்புறம் பிரித்திஷ் தான் அழைத்து இருந்தான்.

என்ன டா என்று கடுப்போடு கேட்க..

டேய் மச்சான் அந்த கப்பில்ஸ் பர் (pair) ரிங் உன்கிட்ட தான் டா இருக்கு என்க.. சூர்யா தலையில் கைவைத்து கொண்டான்.

அது ஆபீஸ் ட்ரால இருக்கு டா. மச்சான் கோச்சிக்காம எடுத்துட்டு வந்து குடுத்துடுடா.. இங்க அவன் அவன் கேர்ள் ஃப்ரன்ட் கேக் கட் பண்ண ரெடி ஆகிட்டு இருக்காங்க. அவன் ப்ரொபோஸ் பண்ண ரிங் வேணும் என்று எதிர் முனையில் கூற. அங்குள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டான் சூர்யா..

ரஞ்சனியின் முகபார்த்தான்.. கஷ்ட்டமாக இருந்தது. அங்க யாராச்சும் ஃப்ரீயா இருக்காங்களா. எல்லாரும் பிஸிடா சாரி என்றான் பிரித்திஷ்.

கப்பில்ஸ் பார்ட்டி தான என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே சென்றனர் அதனால் அந்தந்த ஆட்கள் அந்தந்த வேலையில் பிஸியாகி இருந்தனர்.

சரி நான் வரன் என்று அழைப்பை துண்டித்தான்.

இதுவரை போனில் பேசியதை ரஞ்சனியும் கேட்டு கொண்டு தான் இருந்தாள். அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் முகம் மட்டும் ஏமாற்றத்தில் மூழ்கி இருந்தது.

சாரி கிட்டன், போய்ட்டு சீக்கிரம் வந்துடுறன் ப்ளீஸ் வெயிட் பண்ணு டி என்றவன் வேக வேகமாக அவளை விட்டு பிரிந்து வேறு உடைக்கு மாறி அவன் கார் கீ எடுத்து கொண்டு வெளியே செல்ல முயல, என்ன நினைத்தானோ மீண்டும் அவளிடம் வந்து முன் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு சாரி என்றான்.

சரி ஓகே, பத்திரமா போய்ட்டு வா என்று சூர்யாவை அனுப்பி வைத்தால்.

அவன் போனதும் வேறு உடைக்கு மாறியவளின் கண்கள் கலங்கியே விட்டது. ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்குது என்ற கேள்வியோடு படுத்ததும் உறங்கி போனாள் கிட்டன்.

 

 

 

 

 

80. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சூர்யா அவன் வேலையை முடித்து கொண்டு இரண்டு மணி போல் வீட்டிற்கு வந்தான். அறைக்கதவை கூட தாழிடாமல் உறங்கி கொண்டு இருந்தாள் ரஞ்சனி.

சூர்யா உள்ளே வந்து கதவை தாழிட்டு, மெத்தையில் உறங்கும் ரஞ்சனியை ஏக்க பார்வை பார்த்தான். பின் மெத்தையில் அவள் அருகே படுத்து கொண்டு கிட்டன் என்று மென்மையாக அழைத்து காதில் முத்தமிட்டான். அவள் விழித்து கொண்டு தான் இருந்தாள். ஆனால் முதலில் ஆர்ப்பரித்த உணர்வுகள் எதுவும் அவளுக்கு இப்போது இல்லை. சூர்யா மீது கொஞ்சம் கோவம் அதனால் தூக்க கலக்கத்தில் கூறுவது போல் தூக்கம் வருது சூர்யா ப்ளீஸ் என்றால்.

நீ தூங்கல, என்மேல கோவமா இருக்கன்னு தெரியும் சாரி டி.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அவன் பக்கம் திரும்பி ஆமா எனக்கு உன்மேல கோவமா தான் இருக்கு. நமக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்ற வெறுமை, இன்னைக்கு உன்னால தான் தடங்கல் ஆச்சுன்னு கோவம்.. இத இப்படியே விடு காலைல சரியாகிடும்..

என்னால ஆனா தப்ப நானே சரி பண்றன் டி என்று கழுத்து வளைவில் முத்தமிட்டு கொண்டே அவளின் குட்டி டீஷெர்ட்க்குள் கை நுழைத்தான்.

அவன் கையை எடுத்து வெளியே போட்டவள், மூடிட்டு தூங்கு தேவைல்லாம எதாச்சும் பண்ணி வாங்கிக்கட்டிக்காத என்று சீரியஸ்சாக சொல்லிவிட்டு அவனை அனைத்து கொண்டவள் சிறிது நேரத்திலே உறங்கி போனால்.

அவளை பார்த்து கொண்டிருந்தவன், இத்தனை நாட்கள் கிடைக்காத அவள் அருகாமை இன்று கிடைத்துள்ளது அதுவே போதும் என நினைத்து தூங்கி போனான்.

காலையில் எப்போதும் போல் அழகான விடியலாக இருந்தது அந்த இல்லத்தில். குழலியும் ரஞ்சனியும் எப்போதும் போல் அரட்டை அடித்து கொண்டே வேலைகளை பகிர்ந்து செய்து கொண்டிருந்தனர்.

இருவரும் சமையல் வேலையில் இருப்பதால் சரசுவிற்கு அங்கு வேலையில்லாமல் போக, வீட்டை சுத்தம் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தார்.

ரஞ்சி அக்கா உங்களுக்கு தெரியுமா? அத்தை என்கிட்ட நல்லா பேசுனாங்க. என்ன திட்டவே இல்ல என்றால்.

ஹ்ம்ம் நானும் பார்த்துட்டு தான் இருக்கன் அவங்ககிட்ட கொஞ்சம் மாற்றம் தெரியுது.

அவங்க இப்படியே இருந்தா நல்லா இருக்கும்ல..

ரொம்ப கனவு காணாத குழலி. அவங்க அவ்ளோ சீக்கரம் மாற கூடிய ஆளு இல்ல. இப்போ உடம்பு சரியில்லன்னு அமைதியா இருக்காங்க.

அச்சோ அப்படி சொல்லாதீங்க கா, அவங்க மாற்றத்துல  மாமா எவ்ளோ சந்தோஷமா இருக்காரு தெரியுமா? அத்தை இப்படியே இருக்கணும். அப்போ தான் வீட்ல இருக்கவங்களும் அவங்கள நினைச்சு ஃபீல் பண்ண மாட்டாங்க..

அவங்கள நினைச்சு யார் ஃபீல் பண்றா வீனா போன என் புருஷன் மட்டும் தான் ஃபீல் பண்ணுவான். மாமா விஷ்வாலாம் எப்படியாச்சும் போன்னு விட்டுட்டாங்க.

ஆனா எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு..

ஏன்கா?

நான் மாமாக்கு ஒரு ஆன்ட்டிய பாத்து வச்சிருந்தன்.

புரியல என்ன சொல்றிங்க? ஆன்ட்டியா?

நீ ஒரு டியுப் லைட் டி.. உனக்கு எல்லாத்தையும் விம் போட்டு விளக்கணும்.

சரி சரி சொல்லுங்க.. என்று குழலி ஆர்வம் காட்டினால்.

எங்க பேங்க்ல ஒரு மேம் வொர்க் பண்றாங்க, ஏஜ் எப்படியும் 45 ப்ளஸ் இருக்கும். ஹஸ்பண்ட் இல்ல இறந்துட்டாங்க.. பசங்களும் வெளிநாட்ல செட்டில் ஆகிட்டாங்க.. நானும் நம்ம மாமியார் சரியில்லையே, மாமாக்கு அத்தைக்கும் டிவோர்ஸ் வாங்கி குடுத்துட்டு மாமாக்கு அந்த ஆன்ட்டிய கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினைச்சன்.

கடைசில பார்த்தா இவங்க திருந்திட்டன்னு சொல்றாங்க.

நினைச்சு பாரு அவங்க மட்டும் நமக்கு மாமியார இருந்தா எப்படியிருக்கும் தெரியுமா? சிரிச்ச முகம் அவங்களுக்கு.. சத்தமா கூட பேச மாட்டாங்க. ரொம்ப நல்லவங்க என்று ரஞ்சனி கூற, குழலி அப்படியாக்கா என்று கண்கள் மின்ன கேட்டு கொண்டிருந்தாள்.

குழலி ஏதோ ஒரு ஆர்வத்தில் அந்த ஆன்ட்டி பேர் என்னக்கா என்க.. அவங்க பேரு ஷெண்பகம் டி..

பேரு கூட சூப்பரா இருக்குக்கா.. எனக்கு ஷெண்பக பூ ரொம்ப பிடிக்கும் என்றது அந்த வளர்ந்த குழந்தை.

கல்யாண சுந்தரம் ஷெண்பகம் பேர் பொருத்தம் நல்லா இருக்குல்ல என்று ரஞ்சனி கேட்க..

மாமா பேரு தான் ரொம்ப நீளமா இருக்கு.

அப்போ கல்யாணம் ஷெண்பகம் இது ஓகே வா?

வேண்டாம்க்கா இது என்னவோ ஷெண்பகம் ஆன்ட்டிக்கு கல்யாணம்ன்றா மாதிரி இருக்கு..

சுந்தரம் ஷெண்பகம் இது எப்படி இருக்கு என்று குழலி கேட்க..

ஹ்ம்ம் ஓகே வா தான் இருக்கு..

ஷெண்பகம் ஆன்ட்டி பேருக்கு முன்னாடி நம்ம மாமா பேரு கொஞ்சம் டம்மியா தான் இருக்கு என்றால் ரஞ்சனி.

அதுக்கு என்ன பண்றது. இது தான அவர் பேரு..

மாமாக்கு வேற பேர் வைக்கலாம் என்றால் ரஞ்சனி.

அந்த மாதிரி வைப்பாங்களாக்கா?

ஹ்ம்ம் வைப்பாங்க.. இத பத்தி நாம மாமா கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம் என்றால்..

பண்ணுவீங்க டி, பண்ணுவீங்க என்று பின்னால் இருந்து ஒரு காட்டு குரல் கேட்க இருவரும் பட்டென்று திரும்பினர்..

மொத்த பேரும் அங்கு தான் இருந்தனர்.. மகேஷ்வரி ரஞ்சனியை உக்கிரமாக முறைத்து கொண்டு நிற்க .

சூர்யா இடுப்பில் ஒரு கை கட்டி வலது கையால் முகத்தை மூடி நொந்து கொண்டிருந்தான்.

விஷ்வாவும் சுந்தரமும் இரு பெண்களையும் பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.

குழலி வாய் டைப் அடிக்க அ.. அத். அத்தை என்று பேசவே வாய் குளறியது.

ரஞ்சனி எப்போதும் போல் கெத்தாகவே நின்று கொண்டிருந்தாள்.

மகேஷ்வரியை தவிர அனைவரும் பெண்கள் இருவரின் உரையாடலையும் விளையாட்டாகவே எடுத்து கொண்டனர். மகேஷ்வரிக்கு தான் ரஞ்சனியின் துடுக்கு தனமான பேச்சு கோவத்தை உண்டு பண்ணியது.

டேய் சூர்யா, பார்த்தியா உன் பொண்டாட்டிய குடும்பத்தை எப்படி கலைச்சு விட பாக்குறான்னு? அன்னைக்கு சண்டைல கூட சொன்னா நியாபகம் இருக்கா.? மாமா நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணி இருக்கலாம்ன்னு.. மனசுல அவ்ளோ வன்மம் வச்சு இருக்கா என்மேல.

சுந்தரம் தான் பேசினார், மகேஷ்வரி ரஞ்சி எப்பவும் இப்படி தான் விளையாட்டா பேசுவா இதல்லாம் பெருசா எடுத்துக்காத.

எது என்ன டிவோர்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்குறது விளையாட்டா? மாமியாருன்ற மட்டு மரியாதை இருக்கா? இப்படி தான் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசுவால?

சூர்யா என்ன டா பார்த்துட்டு இருக்க? உன் பொண்டாட்டி பேசுன எதுவும் கேட்க மாட்டியா என்று அருகில் இருந்த மகனை முறைக்க.

ரஞ்சி நீ பேசுனது தப்பு தான ஒரு சாரி சொல்லன் என்று தன்மையாக கூற, அவனை வெறியாக முறைத்தால் ரஞ்சனி.

பார்த்தியா உன்னையே எப்படி முறைக்குறான்னு.. இவ இந்த குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டா என்று மகேஷ்வரி சொல்ல.

பிரச்சனையை முடிக்க நினைத்த சூர்யா, அம்மா ரஞ்சனி பேசுனதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறன்.. அப்பறம் இன்னொரு விஷயம் உங்களுக்கு அவளை பிடிக்கலன்னா சொல்லிடுங்க நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு தனியா போய்டுறன் என்றான்.

என்ன டா ஆளாளுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க.. உங்கள ஒரு வார்த்தை எதுவும் சொல்ல கூடாதா? உடனே தனியா போறன்னு நிக்கிறீங்க.. நேத்து இவன் சொன்னான் இப்போ நீ சொல்ற.

நீங்க பெரியவங்களா இருந்து கண்டிக்க எல்லா உரிமையும் இருக்கு.. ஆனா எப்பவும் நீங்க அவள இவ இந்த குடும்பத்துக்கு சரிபட்டு வர மாட்டா, குடும்பத்த கலைக்குறான்னு சொல்றதுலாம் எனக்கு பிடிக்கல.

வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்ககிட்ட நீங்களும் கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கோங்க. தப்பு செஞ்சா அன்பா எடுத்து சொல்லுங்க கேட்டுப்பாங்க.. அத விட்டு சும்மா தொட்டதுக்குலாம் குத்தம் கண்டு பிடிச்சா தினம் சண்டை தான் ஆகும். அப்பறம் ஆளாளுக்கு ஒரு ஒரு மூலைல இருப்பாங்க..

நான் இனி வாயே திறக்கல பா.. குடுக்குறத தின்னுட்டு ஓரமா உக்காந்துக்குறன் என்று மூக்கை உறிஞ்சினார் மகேஷ்வரி.

சுந்தரம் , அதற்கு மேல் பேச்சை வளரவிட வேண்டாம் என்று நினைத்தவர் மகி எதுக்கு ரொம்ப நேரம் நின்னுட்டு இருக்க போய் ரெஸ்ட் எடு என அனுப்பி வைத்தார்.

ரஞ்சனி விஷ்வா பக்கம் வந்தவள், டேய் என் கைய கொஞ்சம் கிள்ளன் என்றால்..

இது தான் சாக்கு என்று ஏன் எதற்கு என்று எதுவும் கேட்காமல் நறுக்கென்று கிள்ளி விட்டான் விஷ்வா.. ஆர்ஹா என்று அலறிவிட்டால் ரஞ்சனி. பன்னி இப்படியா கிள்ளுவ என்று விஷ்வாவை பதிலுக்கு கிள்ளிவிட்டால். சூர்யா அவர்களை பார்த்து தலையில் அடித்து கொண்டு சென்றுவிட்டான்.

பின் குழலி அவள் மாமாவிடம் சென்று சாரி மாமா நாங்க அப்படி பேசுனதுக்கு என்று மன்னிப்பு கேட்க,

டேய் பாரு டா.. உன் பொண்டாட்டிய எப்படி போய் ஸ்கோர் பண்றான்னு என்று விஷ்வாவிடம் கூற, அவனும் அவள் சொன்ன விதத்தில் சிரித்து விட்டான்.. போ நீயும் போய் எங்க அப்பாகிட்ட நல்ல பேர் வாங்கிக்கோ.

தோ போறன் என்று வேகமாக சென்று அவளும் குழலி அருகில் நின்று சாரி மாமா என்றால் பவ்யமாக..

இருவரையும் பார்த்த சுந்தரம், மென்மையாக சிரித்து நீங்க ரெண்டு பேரும் விளையாட்டுக்கு தான் அப்படி பேசுனிங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா மகேஷ்வரி இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க அவளுக்கு நீங்க பேசுனது கஷ்ட்டமா தான இருக்கும். அவ திருந்தி வரும் போது அவளுக்கு நாம ஆதரவா இருந்து தோள் குடுக்கணும், மேலும் மேலும் நாம கஷ்ட்டப்படுத்த கூடாது என்று பொறுமையாக அவர்கள் மேல் உள்ள தவறை சுட்டி காட்டினார். வீட்ல வேலை செய்றவங்க எல்லாம் இருக்காங்க அவங்க நீங்க பேசுறத கேட்டா எப்படி அவளை மதிப்பாங்க? இந்த வீட்டோட மரியாதை உங்க ரெண்டு பேர் கைல தான் இருக்கு.

சாரி மாமா, இனிமேல் அத்தைய கஷ்ட்டபடுத்துறா மாதிரி நாங்க பேச மாட்டோம். இனிமேல் பொறுப்பா இருக்கோம் என்றால் ரஞ்சனி.

சரி இதோட இந்த விஷயத்தை விடுங்க.. என்றுவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

அவர் பேசுவதை கேட்டு கொண்டிருந்த மகேஷ்வரிக்கு கணவனின் ஆதரவான பேச்சு கொஞ்சம் நிம்மதி அளித்தது.

அறைக்கு வந்த ரஞ்சனியை, அவள் என்னவென்று சுதாரிக்கும் முன் அனைத்து முத்தமிட்டு இருந்தான் சூர்யா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

81. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+
18+ episode பிடிக்காதவர்கள் கடந்து விடவும்

உள்ளே வந்த ரஞ்சனி சூர்யாவின் கைகளுக்குள் துள்ளி கொண்டு இருக்க, டேய் விடு டா, ரத்த காட்டேரி மாதிரி என் கழுத்த போட்டு உரியுற விடுடா என்று அவன் செயலின் கூச்சம் தாங்காமல் அவன் கைகளுக்குள் நெளிந்து கொண்டு இருந்தாள். வாய் தான் அவனை விடு என்றதே தவிர ரஞ்சனியின் உடல் அவனுக்கு வாகாக வளைந்து கொடுத்தது.

கொஞ்சம் வன்மையாக கடித்து விட்டு, அவளை விட்டு பிரிந்து நின்றான் சூர்யா.. ஆனாலும் அவன் கைகள் அவன் கிட்டனின் இடைவளைத்து நின்றது.

ஏண்டி விஷ்வாவ கிள்ள சொன்ன என்றான் அவள் முகத்தை பார்த்து கொண்டே..

பின்ன உங்க அம்மாகிட்ட நீ எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுனியா அதான் எனக்கு ஷாக் ஆகிடுச்சு? நீ பேசுனது கனவா இல்ல நிஜமான்னு தெரிஞ்சிக்க தான் விஷ்வாவ கிள்ள சொன்னன் என்று தலையை ஆட்டி ஆட்டி அவள் கூறும் விதத்தை ரசித்தவன் அவள் இடையில் அழுத்தத்தை கூட்டி அவளை நெளிய வைத்தான்.

உனக்கு ரொம்ப கொழுப்பு கூடி போச்சு டி.. அதான் இப்படி ஓவரா வாய் பேசிட்டு இருக்க என்று அவள் உதட்டை பிடித்து இழுத்தான்.. அவளின் பிங்க் நிற உதட்டில் மயக்கம் கொண்டவன் அவளை முத்தமிட நெருங்க இரு உதடுகளுக்கும் இடையில் கை வைத்தவள் எனக்கு டைம் ஆகுது கிளம்பனும்.

நான் கொண்டு போய் விடுறன் என்றவன், அவள் கையை விளக்கி விட்டு முத்தமிட்டு கொண்டிருந்தான். சூர்யா என்ற அவளின் முனகல் எல்லாம் அவனின் உணர்வுகளை கிளர்ச்சியுற செய்வதாய்.

பின் ஒரு வழியாக அவனை விட்டு பிரிந்து, போடா என் லிப்ஸ் எப்படி ஆகிடுச்சு பாரு என்று கண்ணாடி முன் நின்று பார்த்தாள், நேற்றில் இருந்து அவன் செய்யும் அக்கப்போரில் அவளின் கீழ் உதடு கொஞ்சம் வீங்கினார் போல் காணப்பட்டது.

அப்போதும் அவளை விடாமல் பின்னிருந்து அனைத்தவன் லீவு போடு டி.. அவளுக்கும் அவனை பார்க்க பாவமாக தான் இருந்தது. இருந்தும் இன்று கொஞ்சம் முக்கிய வேலைகள் உள்ளதால் அவளால் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை. நோ சூர்யா வேலை இருக்கு என்று வங்கிக்கு கிளம்ப தயாராகி நின்றாள். அவள் இல்லாது அவன் மட்டும் வீட்டில் இருந்து என்ன செய்ய போறான். சூர்யாவும் அலுவலகம் கிளம்பினான்.

வழக்கம் போல் அவளை வங்கியில் இறக்கி விட்டு, சூர்யா அலுவலகம் சென்றான்.

மதியம் ஆகிய நிலையில் அரைனால் விடுப்பு எடுத்து கொண்டு வங்கியில் இருந்து கிளம்பினால் ரஞ்சனி. நேராக கோயம்பேடு பூ மார்க்கெட் சென்றவள், வேண்டிய பூக்களை வாங்கி கொண்டாள்.

பின் கேப் பிடித்து வீட்டிற்கு வந்தாள், மகேஷ்வரி அவர் அறையில் உறங்கி கொண்டு இருந்தார். மற்றவர்கள் எல்லாம் அலுவலகம் சென்றிருக்க ரஞ்சனி குஷியாகி போனாள்.

வேக வேகமாக செய்ய வேண்டிய வேலைகளை துவங்கினால். மெத்தை விரிப்பை மாற்றி, அறையை சுத்தம் செய்து, வாங்கிய பூக்களை யூடியூப் காணொளிகளை பார்த்து அந்த அறையை அழகாக அலங்கரித்தால்.

அவள் உடுத்தி கொள்ள, லிலாக் நிற மெல்லிய புடவையும் அதற்கு மாறுபட்டு இருக்கும் ரவிக்கையும் தேர்ந்தெடுத்து வைத்தால்.

சூர்யாவிற்கும் அவள் சேலை நிறத்தில் ஒரு சாட்டின் நிற ஷெர்ட் எடுத்தால் பின் ஃபார்மல் பேண்ட் எடுக்க போனவளின் கை பின் வாங்கி, இல்ல இதுதான் ஈஸியா இருக்கும் என்று வெட்கத்தில் உதடு கடித்தவள் வெள்ளை வேட்டியை எடுத்து கொண்டாள்.

உறங்கி கொண்டிருந்த மகேஷ்வரி தண்ணீர் குடிக்க வெளியே வந்தார், அப்போது சூர்யாவின் அறைக்கதவு உள்பக்கம் தாழிட்டு இருப்பதை பார்த்தவர்.. சூர்யா தான் வீட்டிற்கு வந்திருக்கிறான் என நினைத்து சூடாக காஃபி போட்டு எடுத்து கொண்டு கதவை தட்டினார்.

இந்த நேரத்துல யாரு என்று சங்கடமாக நெளிந்தவள் கதவை கொஞ்சம் மட்டும் திறந்து வெளியே வந்தாள் ரஞ்சனி.

காஃபியை கண்டதும் எனக்கா அத்த தேங்க்ஸ் என்று அவளே மகேஷ்வரியிடம் இருந்து வாங்கி கொண்டு ஒரு மிடரு வைத்தால்.

ரொம்ப கொழுப்பு டி உனக்கு, எப்படி தான் என் பையன் உன்கிட்ட குடும்பம் நடத்துறானோ என்று முறைக்க..

அவள் எங்கே அதையெல்லாம் காதில் வாங்கினால்.. செய்த வேலைக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் காஃபியை ரசித்து குடித்து கொண்டிருந்தாள்.

ஆமா என்ன ரூம் வித்யாசமா இருக்கு? பூ வாசனை எல்லாம் வருது?

ஆத்தி கண்டு புடிச்சிட்டாங்களே.. அது வந்து இப்போ நான் என்ன சொல்றது என்று யோசித்து கொண்டிருந்தவளை விளக்கி விட்டு, அத்தை என்று அவள் பதறி தடுப்பதற்குள் மகேஷ்வரியே கதவை திறந்து பார்த்தார்.

ரஞ்சனி அவள் அத்தையை சங்கடமாக பார்க்க.. மகேஷ்வரி மென்மையாக சிரித்தார்.

அத்த என்று அவள் அசடு வழிந்து, அது வந்து இப்போ தான் என்று அவள் மென்று முழுங்கினால்.

சரியான ராங்கிகாரி டி நீ என்று செல்லமாக தலையில் கொட்டி விட்டு, அங்கிருந்து சென்றார்.

அறைக்கு வந்த மகேஷ்வரி கணவனுக்கு அழைத்து இன்னைக்கு நாம எல்லாரும் உங்க ஃப்ரன்ட் வீட்ல தங்கிக்கலாம் என்றார்.

சுந்தரமிற்கு தான் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. பின் திடீரென அழைத்து நாம எல்லாரும் உங்க ஃப்ரன்ட் வீட்ல தங்கிக்கலாம்ன்னு சொன்னா அவர் மட்டும் என்ன நினைப்பார்.

அவர் ஏன் எதுக்கு என்று கேள்விகளை தொடுக்க.. உங்க ராங்கிகாரி மருமக கல்யாணமாகி இத்தனை மாசம்மாயும் இன்னும் என் பையன் கூட வாழல.. அவளுக்கே இன்னைக்கு தான் புத்தி வந்துருக்கு என் மகன் கூட சேர்ந்து வாழனும்ன்னு அதான் அவங்களுக்கு தேவையான தனிமைய குடுத்துட்டு நாம ரெண்டு நாளைக்கு உங்க நண்பன் வீட்ல போய் தங்கியிருப்போம் என்று பட்டும் படாமலும் விஷயத்தை எடுத்து கூறினார்.

சுந்தரமிற்கு மகேஷ்வரியின் இந்த குணத்தில் அகம் மகிழ்ந்து போனார். பின் மனைவி கூறிய அனைத்திற்கும் சரி சரி என தலையாட்டி விஷ்வாவிற்கும் அழைத்து இன்று பரமு வீட்டில் தங்க போகும் விஷயத்தையும் காரணத்தையும் கூறினார்.

விஷ்வா குழலியை அழைத்து கூறினான். அப்படியா சூப்பர்ங்க. ஆனா நமக்கு ட்ரெஸ்? நீ இப்போ வீட்டுக்கு போய் தேவையானதை எடுத்துக்கிட்டு அப்படியே அம்மாவையும் கூட்டிட்டு பரமு மாமா வீட்டுக்கு போய்டுங்க.. நானும் அப்பாவும் வேலை முடிஞ்சதும் வரோம்..

குழலி வீட்டிற்கு வந்தவள் அவர்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு, மாமியாரை அழைத்து கொண்டு அவள் வந்த காரிலே பரமு வீட்டிற்கு சென்று விட்டால். அவர்களுக்கு முன்பே விஷயம் பகிரப்பட்டதால். வந்தவர்களை இன்முகமாக வரவேற்றனர்.

குழலி ரஞ்சனிக்கு குறுஞ்செய்தி அனுப்பினால். நாங்க யாரும் ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு வரமாட்டோம். வேலையாட்கள் உட்பட..

எந்த சங்கடமும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை துவங்க எங்கள் வாழ்த்துக்கள் என்று.

குழலியின் குறுஞ்செய்தியை பார்த்த ரஞ்சனிக்கு ஹய்யோ என்று இருந்தது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த காஜி பையன் கிட்ட தனியா விட்டு போய்ட்டாங்களே என்று அவள் மனம் யோசிக்காமலும் இல்லை.

பின் குளித்து முடித்து வந்தவள் அவளுக்கு எடுத்து வைத்த சேலையை கட்டி, ஈர கூந்தளை ட்ரையர் போட்டு உலர வைத்து. மிதமான ஒப்பனையில் மிளிர்ந்தால்.

பின் சூர்யாவிற்கு அழைத்து எங்க இருக்க என்றால்?

வந்துட்டு இருக்கன் கிட்டன்.. என்ன கால் பண்ணியிருக்க சாப்பிட எதாச்சும் வேணுமா?

கடுப்பானவள் சோத்து மூட்டையாடா நானு?

பின்ன இல்லையா என்றான் சிரித்து கொண்டே..

சரி ஓகே வரும் போது ரெட் வல்வேட் கேக், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன், ரச குல்லா இதல்லாம் வாங்கிட்டு வா.

இவ்ளோத்தையும் ஒன்னா சாப்பிட போறியா?

போறியா இல்ல போறோம்.. சொன்னத வாங்கிட்டு வாடா என்று போனை வைத்தால்.

நேரம் ஆக ஆக உடம்பெல்லாம் ஜிவ்வென்று இருந்தது ரஞ்சனிக்கு.

சூர்யா வீட்டிற்குள் வர, பாடல் சத்தமாக ஒலித்தது..

உறையாமல் செய்த அங்கங்கள்…
நெஞ்சை முட்டி கொள்ளும்…
குறையாமல் செய்த பாகங்கள்…
கொஞ்சி குலவ சொல்லும்…

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்…
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்…

ஒரு கால் முளைத்த வானவில்லை…
சாலையோரம் கண்டேன்…
நடமாடும் அந்த பூவனத்தில்…
சாரல் வீச கண்டேன்...

பனி தூவலாக புன்னைகைக்கும்…
பறவை ஒன்றை கண்டேன்…
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்…

தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஜர்க் ஆகி போனான் சூர்யா பையன்..  வீட்டை சுற்றி கண்களை சுழட்டியவன் கண்ணில் பட்டாள் அவன் தேவதை.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, மெல்லிய சேலை அவள் உடலை கண்ணாடி போல் காட்டியது. சூர்யாவை கண்டதும் டிவி ரிமோட்டை சோஃபாவில் வைத்து விட்டு, எழுந்து நின்று கையை மேல் தூக்கி இடுப்பை வளைத்து சோம்பல் முறித்த விதத்தில் சூர்யா வாய் பிளந்து நின்றான்.

கிட்டன் செமையா இருக்க டி, என்று கையில் உள்ள பேக்கரி பொருட்களை அப்படியே போட்டுவிட்டு மனைவியை கையில் அள்ளி கொண்டான்.

அவன் கைகளுக்குள் இருந்தவள் அவன் தலை முதல் உதடு வரை கோடிழுத்து மோகன புன்னகை வீச மயங்கி நின்றான் சூர்யா.

அவன் உதட்டை கடித்து முத்தமிட்டு மயக்கம் தெளிய வைத்தால்.

இறக்கி விடு சூர்யா ப்ளீஸ் என்று கெஞ்சினால். அதன் பின்பே சுற்றம் உணர்ந்தவன்.. என்ன டி நடுவீட்ல ஐட்டம் சாங் போட்டு கேட்டுட்டு இருக்க.. வீட்ல இருக்கவங்க எல்லாம் எங்க?

நான் சொல்றன் போய் குளிச்சிட்டு வா என்று அவர்கள் அறைக்கு அழைத்து செல்லாமல் கெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்று பாத்ரூமில் தள்ளினால். குளித்து வந்தவனுக்கு அவள் எடுத்து வைத்த உடை கண்ணில் பட, எடுத்து அணிந்து கொண்டான்.

அதற்குள் வெளியே அவள் இரவு உணவை எடுத்து வைத்து இருந்தாள், கிட்டன் என்ன டி நீ பண்றது எல்லாம் வித்யாசமா இருக்கு?
அதல்லாம் அப்படி தான் வா என்று அவனை அமர வைத்து அவன் மேல் அவள் அமர்ந்து கொண்டு உணவை உண்டனர். சூர்யாவிற்கு தான் அவஸ்தையாகி போனது.

பின் சாப்பிட்டு முடித்தவர்கள் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து கொண்டிருக்க, இரு சூர்யா வரன் என்றவள் எழுந்து சென்றதும் அனைத்து விளக்குகளும் அணைந்தது. ரஞ்சி என்று அவன் பதறி அழைக்க அவன் பின்னிருந்தவள் வெள்ளை துணியால் அவன் கண்களை கட்டினால்.

கிட்டன் என்ன விளையாட்டு இது, கரண்ட் இல்ல டி எங்கயாச்சும் இடிச்சுக்க போற.

உதட்டில் முத்தமிட்டு, அவனை அமைதி படுத்தியவள். சூர்யாவை அவர்கள் அறைக்கு அழைத்து சென்றால்..

கொஞ்சம் நேரத்தில் அவனை விட்டு பிரிந்தாள், கிட்டன் என்று பதறி அழைத்து கொண்டே அவன் கண்கட்டை அவிழ்த்தான்.

அந்த அறை மஞ்சள் ஒளி வெளிச்சத்தில் ரம்மியமாக இருந்தது..

ரஞ்சனி அங்கு இடுப்பை வளைத்து நின்று மெழுகுவர்த்திகளை ஏற்றி கொண்டிருந்தாள். மையம் கொள்ள வைக்கும் மெழுகுவர்த்தியின் நறுமனம் அறையெங்கும் வீச, அப்போது தான் அவர்கள் அறை அலங்காரத்தை பார்த்தான்..

மனைவியை பின்னிருந்து அனைத்து கொண்டவன், சத்தியமா நான் எதிர்பார்க்கல டி.. என்று கூறி கழுத்து முதுகு என முத்தம் வைத்தே பெண்ணவளை சிவக்க வைத்தான்.

அவளும் அவனுக்கு இணையாக ஈடுகொடுத்து முத்தம் வைத்தால்.

இம்முறை கவனமாக இருவரின் போனையும் சைலன்ட்டில் போட்டு விட்டான் சூர்யா.

இளம் சூட்டில் இருந்த பாலை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

என்னால இதுக்கு மேல முடியல டி என்றவன், கணவனாக அவள் மீது உரிமை எடுத்து கொண்டான்.

இங்கு யார் ஆண் யார் பெண் என்று தெரியாத அளவிற்கு கட்டிலில் அவர்கள் கத்து வைத்து இருந்த மொத்த வித்தையும் இறக்கினார்கள்..

பெண்மைக்கே உண்டான கூச்சம் ரஞ்சனியை ஆட்கொண்ட போதும், சூர்யா அவள் மறைத்த பொக்கிஷங்களில் வீணை மீட்டி சுருதி கூட்டினான்.

அவள் முகம் கண்டு, அவள் பிடித்தம் அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக பெண்மை பூவை துடிக்க வைத்தான்.

முதல் கூடலில் வலியில் முகம் சுணங்கியவளை குழந்தை போல் தாங்கி கொண்டான்.

உச்சம் எய்தி அவள் மேல் விழுந்தவனுக்கு ஆயிரம் முத்தம் கொடுத்து தாங்கி கொண்டாள் அவன் மனையால்..

அடுத்தடுத்த கூடலில், அவள் ஆசையாக கேட்ட இனிப்புகளுக்கு வேலை வைத்து அவளை உண்டான். இந்த ஜாமுன விடு இது ரொம்ப சாஃப்ட்டா இருக்கு டி என்று எதை கூறினானோ.

ரஞ்சி கொஞ்சம் வேகம் கூட்டவா டி பத்தல.
அவன் உணர்வுகளை புரிந்து கொண்டவள், சம்மதமாக அவனுக்கு முத்தம் கொடுத்தாள்..

சூர்யா என்ற அவளின் கதறல் எல்லாம் அவன் காதலின் ஆழத்தை காட்டியது.

காலை ஏழு மணி போல் தான் இருவரும் தங்களை மறந்து உறங்கி போயினர்..

நங்கை அவள் வெற்றுடலில் சூர்யா அணிவித்த தாலி மட்டுமே இருக்க. கணவனின் வாயில் விரல் வைத்து கொண்டே உறங்கி இருந்தாள் கிட்டன் குட்டி.

 

 

 

 

 

82. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சூர்யா மற்றும் ரஞ்சனி இரண்டு நாட்களும் அவர்களுக்கான உலகில் இருந்தனர். சமைப்பதற்கு கூட நேரம் இல்லாதவர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

கிட்டன் லவ் யு டி என்று சோஃபாவில் அமர்ந்து இருந்தவனின், மார்பில் சாய்ந்து கொண்டிருந்தவள் காதில் முத்தமிட்டு கூறினான். கூசுது டா என்று அவள் நெளிந்து கொண்டே சிணுங்கல் கொள்ள, நைட் உனக்கு எல்லாம் ஓகே வா டி? ஹாப்பியா இருந்தியா?

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்..

என்ன டி?? சூர்யா பாவமாக கேட்டான்..

ஹாப்பியா இல்லாம தான் உன் பேர மூச்சுக்கு முந்நூறு முறை முனகுனனா என்று அவன் ஆர்ம் கட் பனியனை பிடித்து இழுத்தாள்.

அவள் நெற்றி முட்டியவன்.. கேட்டு தெரிஞ்சிக்கணும்ன்னு தோணுச்சு டி அழகாக சிரித்து கூறினான்.

அவன் தன் உணர்வுகளுக்கு எவ்வளவு மதிபலிக்கிறான் என புரிந்து கொண்டவள், அவன் பனியன் மறைக்காத மார்பை அழகாக கவ்வி கொண்டாள்.

நீ ஏன் டா என்ன இவ்ளோ லவ் பண்ற?

எனக்கே தெரில டி, ஏன் இந்த பூனை குட்டிய எனக்கு இவ்ளோ புடிச்சுதுன்னு? மூக்கை பிடித்து ஆட்டினான்.

சூர்யா நாளைக்கு ஈவினிங் எல்லாரும் வந்துடுவாங்க டா.. வரட்டும் டி அதல உனக்கு என்ன பிரச்சனை?

புரியாம பேசாத டா.. நான் நேத்து எல்லாத்தையும் சீக்கிரேட்டா பிளான் பண்ணி பண்ணன் டா, கடைசில அத்தை வந்து பார்த்துட்டு அவங்க எல்லார்கிட்டயும் சொல்லி இப்படி பிளான் பண்ணி நம்மள தனியா விட்டு போய்ட்டாங்க.

இப்போ நாளைக்கு எல்லாரையும் ஃபேஸ் பண்ணவே ஒரு மாதிரி சங்கடமா இருக்கு.. முகத்தை சுருக்கி அவள் சொல்லும் விதத்தை இதழில் தோன்றிய புன்னகை மாறாது பார்த்து கொண்டிருந்தான்.

அவங்க எல்லாரும் இந்த ஸ்டேஜ் தாண்டி தான் வந்து இருப்பாங்க. நீ நார்மலா இரு..

ஹ்ம்ம்.. நாம நாளைக்கு ஆபீஸ் முடிஞ்சு ஒன்னா வரலாம்.. உன்கூட இருந்தா தான் யாரும் எதுவும் கிண்டல் பண்ண மாட்டாங்க.

இதெல்லாம் என்ஜாய் பண்ணுடி, அவங்க கிண்டல் பண்ணும் போது உனக்கு வெட்கம் வரும் இந்த ஆப்பிள் சீக்ஸ் அழகா சிவந்து போகும்.. அதலாம் நல்லா இருக்கும்.

போடா நான் தான் எல்லாரையும் கிண்டல் பண்ணுவன் என்ன யாரும் கிண்டல் பண்ண கூடாது.. சிறுகுழந்தை போல் கொஞ்சினால்.

சரி அத விடு, ரொம்ப நேரமா பேசிகிட்டு இருக்கோம், நீ அப்போ ஒரு பொசிஷன் சொன்னியே அத இப்போ ட்ரை பண்ணலாமா?

ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று ஆர்வமாக தலையாட்ட அவளை அப்படியே தோளில் தூக்கி போட்டு கொண்டு மாடி படி ஏறி சென்றான். சூர்யா நம்ம ரூம் கீழ இருக்கு டா.

இந்த பொசிஷன்க்கு அந்த இடம் தான் டி சரியா இருக்கும் என்றவன் அதற்கு மேல் அவளை பேச விடாமல் இடையில் கடித்து வைத்தான்.

அந்த இரண்டு நாட்களும் விதவிதமாக கூடி மகிழ்ந்து, அவர்களுக்கான உலகில் வாழ்ந்தனர் கணவன் மனைவி இருவரும்.

பரமு வீட்டில் இருந்து அனைவரும் அன்று மாலை வீடு வந்து இருந்தனர், சூர்யா ரஞ்சனி வீட்டிலே இல்லை.. ரஞ்சனிக்கு அனைவர் முகத்திலும் விழிக்க கூச்சமாக இருக்க சூர்யா எவ்வளவு கூறியும் கேட்காமல், அன்று மதியம் அவள் வங்கிக்கு கிளம்பிவிட்டால். அரை நாள் வேலை செய்ய.. அவள் சென்றதும் சூர்யாவும் அவன் அலுவலகம் சென்றான்.
இரவு நேரம் கழித்தே வீடு வந்தனர்.  வீட்டில் உள்ளவர்கள் பெரிதாக அவர்களை கண்டு கொள்ளவில்லை.
அதுவே ரஞ்சனிக்கு நிம்மதியாக இருந்தது.

இரு ஜோடிகளுக்கும் நாட்கள் ஊடல் கூடல் என அழகாக செல்ல, நாளைய தினம் விஷ்வா மற்றும் குழலிக்கு முதல் திருமண நாள்.

விஷ்வா எப்போதும் போல் சாதாரணமாகவே இருந்தான். குழலி தான் நாளைய தினத்திற்காக ஒருவாரமாக காத்திருந்தாள் அவள் சம்பாதித்த பணத்தில் விஷ்வாவிற்கு வாங்கிய பரிசு பொருளை கொடுக்க.

குழலி டிரைவ் போலாமா டி? குழந்தையின் கையில் பப்பு கடைந்து விளையாட்டை விளையாடி கொண்டே கேட்டான். என்ன திடீர்ன்னு?

சும்மா தான் டி.. நாளைக்கு நம்ம பர்ஸ்ட் வெட்டிங் டே.. ஜால்யா போய்ட்டு வரலாம்..

நாம நைட் டிரைவ் போனா வீட்டுக்கு வர விடிஞ்சிடும்.. அப்பறம் அந்த அசதில அப்படியே தூங்கிடுவோமே..

அதனால என்ன நாளைக்கு சாட்டர்டே தான??

நாளைக்கு காலைல கோவிலுக்கு போகணும்ங்க..

ஹேய் விளையாடாத.. நாளைக்கு வேற பிளான் இருக்கு. நீ நான் சூர்யா ரஞ்சி எல்லாரும் ரிசார்ட் போறோம்.

என்கிட்ட சொல்லவே இல்ல.. ஈவினிங் தான் பிளான் பண்ணோம்.. வாட்ஸப் குரூப் பாரு..

வாட்சப் குரூப்பில் உள்ள குறுஞ்செய்திகளை படித்ததும், முகம் கோணியது குழலிக்கு.. 11கிளாக் வீட்ல இருந்து கிளம்பனும்ன்னு டிஸைட் பண்ணியிருக்கீங்க.

சரி ஓகே காலைல எழுந்து கோவிலுக்கு போய்ட்டு வரலாம்..

அப்போ நாளைக்கு நீ நான் வெஜ் சாப்பிட மாட்டியா குழலி. கோவிலுக்கு போறோம்ல அப்பறம் எப்படி சாப்பிடுவன்?? நீங்களும் சாப்பிட கூடாது ஓகே வா?

குழலி உன் விஷயத்துல மட்டும் நீ முடிவெடு எனக்கும் சேர்த்து நீ முடிவெடுக்காத, விஷ்வா அப்படி கூறியதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட..

நாளைக்கு நம்ம வெட்டிங் டே, கோவிலுக்கு போறோம் அதான் சொன்னன் மத்த நாள்ள நான் எதாச்சும் சொல்லியிருக்கனா..

உன்கூட தொல்லையா போச்சு குழலி.. ஒரு என்ஜாய்மன்ட்டே இல்ல உன்கூட. எப்போ பாரு கோவிலு குளம்ன்ற.. நேத்து கிட்ட வந்தா விரதம்ன்ற. இதல நீ பண்றது இல்லாம என்னையும் உன்கூட சேர்த்துக்குற.. வர வர எனக்கு கடுப்பா இருக்கு. என்றவன் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

குழலிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி பேசுறாரு.. இது என்ன புதுசா எப்பவும் கோவிலுக்கு போகும் போது நான்வெஜ் சாப்பிட மாட்டோம் தான.

என்கூட வாழவே வெறுப்பா இருக்கா மாதிரி பேசிட்டு போறாரு.

இனிமேல் அவருக்கு தொந்தரவு குடுக்க கூடாது என்று முடிவெடுத்து கொண்டாள். இந்த சிறு வாக்கு வாதத்திற்கே குழலிக்கு அவள் வாழ்க்கையை நினைத்து பயம் வந்தது.

குழந்தை வந்து அவள் காலை கட்டி கொள்ளவே நினைவு கலைந்தால் குழலி. பின் அனைத்தையும் மறந்து பூரணி பாப்பாவை தூக்கி நெஞ்சோடு அனைத்து கொண்டு உறங்க வைத்து அவளும் உறங்கி போனாள்.

வெகுநேரம் கழித்தே உள்ளே வந்தான் விஷ்வா. அவனுக்கே தெரியவில்லை ஏன் அவகிட்ட அப்படி பேசினோம் என்று, தலையை கோதி கொண்டவன் விளக்கை அனைத்துவிட்டு குழலியை அனைத்து கொண்டு உறங்கி போனான்.

தூக்கத்தில் இருந்தவளை முத்தம் வைத்தே எழுப்பினான் விஷ்வா. அவள் உதட்டில் கொடுத்த முத்தம் அவள் தூக்கத்தை மொத்தமும் விரட்டியது..

அவள் நீள விழிகளை விரித்து பார்க்க.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பொற் குழலி என்றான்.

அவனை தாவி அனைத்து கொண்டவள், என்கிட்ட எதாச்சும் பிடிக்கலன்னா வெளிப்படையா சொல்லுங்க.. நான் என்ன மாத்திக்குறன். என்ன வெறுத்துடாதீங்க ப்ளீஸ்.. கண்கள் கூட கலங்கி விட்டது பெண்ணவளுக்கு.

ஏதோ ஒரு கோவத்துல அப்படி பேசிட்டன் சாரி. உன்மேல எந்த தப்பும் இல்ல நான் தான் தேவையில்லாம பேசிட்டன் மன்னிச்சுடு டி என்றான்.

அவனை அனைத்து கொண்டே இருந்தாள் அவன் பேசியதற்கு எதுவும் பதில் கூறவில்லை.

குழலி கோவமா டி..

இல்ல..

அப்போ பேசு.. எனக்கு இப்படியே இருக்கணும் போல இருக்குங்க. சிரித்து கொண்டவன் உச்சம் தலையில் முத்தமிட்டான்.

பின் அவனை விட்டு பிரிந்து, கட்டில் ட்ராவை திறந்து அதில் இருந்து ஒரு நகை பெட்டியை எடுத்தால்..

அதில் ஒரு தங்க மோதிரம் இருந்தது.. அதை எடுத்து அவன் மோதிர விரலில் போட்டு விட்டால். உங்களுக்காக வாங்குனன் பிடிச்சு இருக்கா?

அந்த மோதிரத்தில் பொற் குழலி என அவள் பெயர் பதித்து இருந்தது. அதில் முத்தமிட்டவன் சூப்பரா இருக்கு டி.

எப்போ வாங்குன?

நேத்து ஈவினிங்..

ரிங்லாம் போட்டு ரொம்ப நாள் ஆச்சு.. செமயா இருக்கு.

அவனும் அலமாரியில் இருந்து ஒரு பரிசு பொருளை எடுத்து கொடுத்தான் அதில் அழகாக இருந்தது ஒரு ஜோடி தங்க ஜிமிக்கி கம்மல்..

நீ கட்ற சாரீஸ்க்கு இந்த ஜிமிக்கி  உனக்கு அழகா இருக்கும் டி..

தேங்க்ஸ் ஷிவா ரொம்ப அழகா இருக்கு. நாளைக்கு புது சாரீ கட்டி போட்டு காட்டவா??

சரி என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

மறுநாள் அழகான விடியலில்.. குழலி அதிகாலையிலே எழுந்து குளித்து முடித்து குழந்தையை எழுப்பி குளிக்க வைத்து கோவிலுக்கு கிளப்பினால்.

விஷ்வாவை தொந்தரவு செய்யவில்லை. தாய் மகள் இருவரும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து கொண்டு, சக்தி திருமகனை மனமுருகி வேண்டி கொண்டாள், விஷ்வாவோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என. நல்ல தரிசனம் கோவிலில். பூரணி பாப்பாவை வெளியே அழைத்து வந்ததும் படு உற்சாகமாகினால்.. கோவிலில் கொடுத்த வெண்பொங்கல் பிரசாதத்தை பிரகாரத்தில் அமர்ந்து குழந்தைக்கு ஊட்டி விட்டு குட்டி தொப்பையை நிரப்பி விட்டால் குழலி.

வீட்டுக்கு போலாமா பாப்பா என்று குழந்தையிடம் கொஞ்சி கேட்க, னானா.. னானா.. என்று வேகமாக தலையாட்டி குழலியை கோவிலில் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க வைத்தால்.

அங்குள்ள அடுத்த குழந்தைகளுடன் அண்ணா அக்கா என்று அவர்களுடன் ஓடி ஆடி விளையாடினால் பூரணி. என்ன தான் நாம் குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவழித்தாலும்,  குழந்தைகள் அவர்கள் வயதை உடைய மற்ற குழந்தைகளுடன் விளையாடவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதே போல் தான் பூரணி பாப்பாவும்..

கோவில் பிரகாரத்தில் ஓடி பிடித்து விளையாடி கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவளுடன் விளையாடிய குழந்தைகள் அவர்கள் அம்மா அப்பாவோடு வீட்டிற்கு செல்லவும் தான் பூரணி பாப்பாவும் வீட்டிற்கு வர சம்மதித்தால்.

அதிகாலையே எழுந்ததாளும், கோவிலில் போட்ட ஆட்டத்தினாலும் ஆட்டோவில் வரும் போதே, உறக்கத்தில் கண் சொருகினால். உறங்கும் குழந்தையை நெஞ்சோடு அனைத்து கொண்டாள் குழலி.

எட்டு மணிக்கு எல்லாம் வந்து விட்டால்.. விஷ்வா அப்போது தான் உடற்பயிற்சி முடித்து விட்டு அறைக்குள் வந்து இருந்தான்.

எங்க போன டி? காலைல இருந்து கண்லயே படல..

கோவிலுக்கு போய்யிருந்தன்ங்க. என்று குழந்தையை மெத்தையில் படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தால்.

நீ மட்டுமா?

ஹ்ம்ம்..

குளிச்சிட்டு வந்து பிரசாதம் எடுத்துக்கோங்க என்றால்.

நைட் நான் பேசுனதுக்கு இன்னும் கோவமா இருக்கியா என்றான் அவள் கைகளை பிடித்து கொண்டு.

இல்லையே.. ஏன் இப்படி கேக்குறீங்க?

என்ன விட்டு நீ மட்டும் கோவிலுக்கு போய்யிருக்க? நம்மளோட வெட்டிங் டே நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான போகணும்..

உங்கள இனி எந்த விஷயத்துக்கும் கட்டாய படுத்த கூடாதுனு தோணுச்சு அதான் பாப்பா கூட போய்ட்டு வந்துட்டன் என்றால் மனதில் எதுவும் வைத்து கொள்ளாமல்.

அவன் முகம் ஒரு மாதிரி இருக்க..

அதை மாற்றும் விதமாக ஜிமிக்கி நல்லா இருக்காங்க? என்று அவளின் காது மடலை அவனிடம் திருப்பி ஜிமிக்கியை ஆட்டி காட்டினால்.

அவன் வாங்கி கொடுத்த ஜிமிக்கி அவள் முகத்திற்கு அவ்வளவு அழகாக இருக்க.. சூப்பரா இருக்கு என்றான்.

மென்மையாக சிரித்து தேங்க்ஸ் என்றால்.

சரிங்க நீங்க குளிச்சிட்டு வாங்க நான் கீழ போறன்.. என்றவள் கீழே சென்றுவிட்டாள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

83. கண்கள் நிறைந்த ஓவியமே!!
இரு ஜோடிகளும் பத்து மணிக்கு எல்லாம் தயாராகி இருந்தனர் ரிசார்ட் போவதற்கு..

குழலி அழகான சேலையில் தயாராகி, உறங்கி கொண்டிருந்த குழந்தையையும் தூக்கி கொண்டு  கூடத்தில் வந்து காத்து கொண்டிருந்தாள் மற்றவர்கள் வருகைக்காக.

இன்று சுந்தரம் மனைவியை அழைத்து கொண்டு அலுவலகம் சென்றுவிட்டார். மகேஷ்வரிக்கும் வீட்டில் யாரும் இல்லாமல் தான் மட்டும் இருப்பதற்கு கணவனோடு அலுவலகம் செல்லலாம் என முடிவு செய்து கிளம்பிவிட்டார்.

அறையில் இருந்து சூர்யா ரஞ்சனி கிளம்பி வெளியே வர, அங்கு அமர்ந்து இருந்த குலியை கண்டு ஹேய் நீ இன்னும் கிளம்பலயா என்று கேட்டு கொண்டே வந்தாள் ரஞ்சனி.

அவளை பொய்யாக முறைத்தவள் அக்கா நான் கிளம்பி ரெடியா தான் இருக்கன்.. உங்களுக்காக தான் வெயிட் பண்றன் என்றால்..

ரஞ்சனி தலையை சொரிந்து கொண்டு டேய் கோவிலுக்குன்னா நான் வர்ல நீயே உன் அண்ணா அண்ணி கூட போய்ட்டு வா, என்று சொல்ல..

லூசு ரிசார்ட்க்கு தான் டி பிளான் பண்ணியிருக்கோம் என்றான் சூர்யா.. அப்போ ஏன் இவ சில்க் சாரீ கட்டி தலைல பூலாம் வச்சு இருக்கா?

குழலியும் அவர்கள் உடையை கவனித்தால்.. ரஞ்சனி முட்டிக்கு கீழ் வரை உள்ள ஜீன்ஸ்ஸும் சூர்யா ஹவாய் ஷர்ட்டும் அதற்கு தகுந்தார் போல் முக்கால் பேண்ட்டும் அணிந்து இருந்தான்.

அதே நேரம் விஷ்வா மேலிருந்து வர, அவனும் சூர்யா போல் ஹவாய் காம்போவில் உடை அணிந்து சட்டையின் முன் இரண்டு பட்டன்களை கழட்டி விட்டு அதில் சன் கிளாஸை மாட்டியிருந்தான்.

விஷ்வா எடுத்து கொடுத்த சாரீ என்பதால் குழலி இன்று முழுவதும் இதை கட்டி கொள்ளலாம் என முடிவு செய்தால்.. அதனால் அவள் வேறு உடையை தேர்வு செய்யவில்லை. கோவிலுக்கு கட்டி சென்ற பட்டு சேலையுடன் ரிசார்ட் புறப்பட தயாராகினால்.

விஷ்வா அங்கு வந்து போவோமா என்று கேட்க? குழலியை கண்டவன் நீ இன்னும் கிளம்பலையா என்று ரஞ்சியை போல் கேட்டான்.

நான் இதே ட்ரஸ்ல வரங்க..

சரி ஓகே, பேக்ல வேற ட்ரஸ் எடுத்து வச்சுருக்கியா அங்க போய் சேன்ஞ் பண்ணிக்கலாம்..

இல்ல பாப்பாக்கு மட்டும் தான் எடுத்து வச்சுருக்கன்..

அவளை வெறியாக முறைத்தவன், ஹேய் நாம பீச் ரிசார்ட் போறோம் டி அங்க இப்படி பட்டு புடவை கட்டிக்கிட்டு வந்தா எப்படி என்ஜாய் பண்ணுவ? அங்க கேம்ஸ் இருக்கும், ஸ்விம் பண்ணுவோம், பீச்ல இறங்குவோம் அதுக்கு ஏத்தா மாதிரி ட்ரஸ் போட்டுட்டு வா என்று அவளை மேலே அனுப்பி வைத்தான்.

முகம் சுணங்கிய குழலி சரி இருங்க வரன் என்றவள், உடை மாற்ற மேலே சென்றால்.. அவள் படியேறும் போது விஷ்வா பேசியது அவள் காதில் விழுந்தது. சென்னைக்கு வந்து ஒன் இயர் ஆக போது இன்னும் எந்த இடத்துக்கு எப்படி ட்ரஸ் பண்ணிட்டு போகணும்ன்னு தெரில..

விஷ்வா வேடிக்கையாக தான் சொன்னான்.. ஆனால் குழலிக்கு அந்த வார்த்தையில் ஏதோ போல் ஆனது. பின் எதையும் அதிகமாக யோசிக்காமல் அவர்கள் அறைக்கு சென்றால்.

இளம் மஞ்சள் நிறத்தில் காட்டன் டாப்பும், ப்ளூ ஜீன்ஸ்ஸும் அணிந்தவள், காதில் உள்ள ஜிமிக்கியை கழட்டி வைத்து  ஸ்டட் அணிந்து கொண்டாள். ஒரு கையில் ஸ்மார்ட் வாட்ச், மற்றொரு கையில் எதுவும் அணியவில்லை.

முகத்தை கழுவி வந்தவள், சன் ஸ்க்ரீன் மட்டும் பூசி கொண்டு, அடர்ந்த இமைகளுக்கு மஸ்கார இட்டு, பிங்க் நிற உதடுகளுக்கு பேபி லிப்ஸ் லிப் பால்ம் மட்டும் இட்டால்.

தலையில் சூடியிருந்த முல்லை மலரை எடுத்துவிட்டு, பின்னழகை தாண்டிய நீள கூந்தளை மொத்தமாக மெஸ்ஸி பன்னில் அடக்கினால். கழுத்திலும் முன் நெற்றி பக்கமும் துண்டு முடிகளை எடுத்து விட்டு, பார்பி கேர்ள் போல் தயாராகி வெளியே வந்தாள்.

கீழே இறங்கி வந்த குழலியை வாய் பிளந்து பார்த்தான் விஷ்வா, கியூட் டால் என்று மனதோடு கொஞ்சி கொண்டான்.

ஹேய் சூப்பர் குழலி, செமயா இருக்க என்றால் ரஞ்சனி.. பின் பொதுவாக சரி வாங்க கிளம்பலாம் டைம் ஆகிடுச்சு என்று சூர்யாவோடு முன்னே சென்றால்.

குழந்தையை விஷ்வா கையில் இருந்து வாங்கி கொண்டு முன்னே நடந்தாள் குழலி.

அவளோடு சேர்ந்து நடந்த விஷ்வா, குழலி இந்த ட்ரஸ்ல செமயா இருக்க டி..

பெரிதாக எந்த ரியாக்ஷனும் முகத்தில் காட்டி கொள்ளாதவள், சென்னைக்கு வந்த ஒன் இயர்ல இப்போ தான்  ரிசார்ட்க்கு போறன், அதான் அங்க எப்படி ட்ரஸ் பண்ணி போகணும்னு எனக்கு தெரியல.

நாக்கை கடித்து கொண்டான் விஷ்வா, ஹேய் அது சும்மா சொன்னன் டி. ஹர்ட் ஆகியிருந்தா சாரி..

அவனுக்கு ஒரு புன்னகையை கொடுத்து விட்டு காரின் முன் சீட்டில் ஏறி கொண்டாள். விஷ்வா தான் டிரைவ் செய்கிறான்..

வழியெல்லாம் காரில் போட்ட பாடலில் ரஞ்சனி பின் சீட்டில் அமர்ந்து கொண்டே டான்ஸ் ஆடினால். குழலிக்கு கம்பெனி கொடுக்க குழந்தை உறக்கம் கலைந்து எழுந்து விட, மகளோடு சேர்ந்து விளையாடி கொண்டு வந்தாள் குழலி.

சூர்யா ரஞ்சனியோடு ஆடலும் பாடலுமாக வைப் பண்ணி கொண்டிருந்தான்..

விஷ்வா ரோட்டில் ஒரு கண்ணும், மனைவி மீது ஒரு கண்ணும் வைத்து கொண்டிருந்தான்.

ஈசிர் பக்கம் உள்ள ஒரு ரிசார்ட் தான் புக் செய்து இருந்தனர். ஒரு மணி நேரத்தில் அங்கு சென்றிருந்தனர்.

போனதும், அவர்களுக்கான அறையில் கொண்டு வந்த பேகை வைத்து விட்டு.. வெல்கம் ட்ரிங்க்ஸ் தொடங்கி, டெசர்ட் ஐஸ்கிரீம் என லைட்டாக சாப்பிட்டனர்.

பின் அவுட் டோர் கேம்ஸ் விளையாட, ஷட்டில்காக் எடுத்து கொண்டு விஷ்வா சூர்யா சென்று விட, ரஞ்சனியும் அவர்களுடன் சப்ஸ்டியூட்டாக சென்றுவிட்டால். குழலி அவர்கள் விளையாடும் இடத்தில் குழந்தையை வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

ஒரு கட்டத்தில் பூரணி பாப்பா,  விஷ்வா சூர்யா விளையாடுவதை கை தட்டி உற்சாகம் செய்தவள், தந்தையிடம் சென்று தன்னையும் தூக்கி வைத்து கொண்டு ஆடுமாறு கூறினாள், விஷ்வா குட்டி பெண்ணை தூக்கி மேலே போட்டு பிடித்தவன் அப்பா கூட விளையாட வரிங்களா என்று கொஞ்சி, இன்னைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து சித்தப்பாவ தோக்கடிச்சிடலாம் என்று குழந்தையை தூக்கி வைத்து கொண்டு உற்சாகமாக விளையாடினான்.

அடுத்து ரஞ்சனி விஷ்வா ஆட விஷ்வாவே ஜெயித்தான். ரஞ்சனியின் உயரத்திற்கு அவளால் எக்கி அடிக்க முடியவில்லை.

விஷ்வா குழலியை அழைத்தான் விளையாடுவதற்கு அவள் மறுத்துவிட்டால்.

பின் நால்வரும் நீச்சல் குளத்தில், கால் நனைத்து கொண்டிருந்தனர். குழந்தை தண்ணீரை கண்டதும் இறக்கி விட சொல்லி அழுது அடம் பிடிக்க குழலி முதுகில் ஒரு அடி வைத்தால் என்ன பழக்கம் இது சொல்ற பேச்சு கேக்காதது.. என்று கண்டிக்க,

விஷ்வா தான் கடிந்து கொண்டான் பாப்பாக்கு என்ன தெரியும் டி, இப்படி போட்டு அடிக்குற என்று குழந்தையை வாங்கி ஆடை விளக்கி முதுகை பார்த்தான். முதுகு எப்போதும் போல் இருக்கவே குழலியை முறைத்து விட்டு பூரணி பாப்பாவை சமாதானம் செய்தான்.

அதன் பின் அவன் காலில் பாப்பாவை நிற்க வைத்து, அவன் கைகளில் பிடித்து கொண்டு கொஞ்சம் நேரம் விளையாட்டு காட்டினான்.

சிறிது நேரத்தில் ப்பா ப்பா ண்ணி ண்ணி என்று தண்ணீரை காட்டி தண்ணீருக்குள் இறங்க வேண்டும் என அடம் செய்ய..

குழந்தை கொஞ்சல் மொழியில் கேட்கும் போது அவனால் மறுக்க முடியவில்லை..
பின் விஷ்வா குளத்தில் இறங்கி, அங்குள்ள பேபி ஸ்விம் டியூபில் அமர வைத்து குழந்தையை கவனமாக பிடித்து கொண்டு அவனும் விளையாடினான்.. சூர்யா ரஞ்சனியும் தந்தை மகளோடு சேர்ந்து நீச்சல் குளத்தில் இறங்கி அலப்பறை செய்தனர். குழலி வேறு உடை கொண்டு வராததால் அவள் நீரில் இறங்க மறுத்துவிட்டால்..

அதன் பின் இன்னும் கொஞ்சம் நேரம் என்று அடம் பிடித்த குழந்தையை கொஞ்சி கொஞ்சியே தண்ணீரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்..

நால்வரும் அவர்கள் அறைக்கு சென்று குளித்து விட்டு வேறு உடைக்கு மாறினர், குழலியை தவிர.. பின் மதிய உணவை பஃபே முறையில் உண்ண கிளம்பினர்.

குழலி சைவ உணவை உண்ண, மற்ற மூவரும் அசைவ உணவை வெளுத்து கட்டினர். ரஞ்சனியும் சூர்யாவும் போட்டி வைத்து கொண்டு உண்ண.. குழலி அவர்கள் செய்யும் அலப்பறையில் சிரித்து கொண்டிருந்தாள். குழந்தைக்கு அங்குள்ள சாம்பார் சாதத்தை ஊட்டி விட்டால்..

சாப்பிட்டு முடித்து கடற்கரை சென்று கொஞ்ச நேரம் விளையாடி கொண்டிருந்தனர்..

பின் கடற்கரையில் உள்ள குடில் அமைப்புள்ள நிழற்குடையில் அமர்ந்து கொண்டு வெட்டி கதை பேச தொடங்கினர்..

ஹேய் மீன் திருடி நல்லா என்ஜாய் பண்ணியா என்று கேட்க, அப்போது குழலி எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அது என்ன மீன் திருடி? ஏன் அந்த பேர் வச்சீங்க என்று கேட்டாள்..

விஷ்வாவும் சூர்யாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.. ரஞ்சனியை வெறுப்பேற்ற..

ஒரு கட்டத்தில் விஷ்வா அமைதியாகிவிட.. சூர்யா இன்னும் சிரித்து கொண்டிருந்தான்.

காண்டான ரஞ்சி, சூர்யாவின் தொடையை பிடித்து நறுக்கென்று கிள்ளிவிட்டால்.. ஆர்ஹா என்று அவன் அலற, என்ன என்றால் கோவை சரளா பாணியில்..

அவன் விஷ்வாவை பாவமாக பார்க்க.. ஏண்டா இப்படி சிரிக்குற?

உன் பொண்டாட்டிய நீயே இப்படி கிண்டல் பண்ணலாமா என்று விஷ்வா அப்பாவியாக கேட்க??

ஏண்டா என்பது போல் விஷ்வாவை பார்த்தான் சூர்யா..

திரும்பி ரஞ்சனியை பார்க்க.. சிரிக்குறியா நீ?? நைட்டு கிட்டன் மட்டன்ன்னு சொல்லிட்டு என்கிட்ட வந்த உன்ன கொன்னுடுவன் என்று மிரட்ட..

உடனே சூர்யா, ஹய்யோ செல்ல குட்டி நோ டார்லிங் நான் பாவம்ல என்று கொஞ்சி கெஞ்சி மனைவியிடம் சரண்டர் ஆகிவிட்டான்.

குழலி சொல்லுங்க ப்ளீஸ் ஏன் மீன் திருடின்னு பேர் வச்சீங்க என்றால்..

விஷ்வா கூறினான் அந்த பெயருக்குண்டான வரலாறை..

சிறு வயதில் விஷ்வா சூர்யா ரஞ்சனி மூவரும் ஒன்றாகவே சுற்றுவார்கள். விஷ்வா சூர்யா கூட பரமு வீட்டில் தான் அதிகமாக இருப்பார்கள். விஷ்வா மற்றும் சூர்யா சைக்கிள் வைத்து ஊரை சுற்றி வர.. ரஞ்சனியும் அவர்களில் யாராவது ஒருவரின் சைக்கிளில் ஏறி கொண்டு அவர்களோடே சுற்றுவால்..

அப்படி தான் ஒரு முறை, வீட்டில் மீன் தொட்டி வளர்க்கலாம் என்று ஆசை கொண்டவர்கள் விஷ்வா சூர்யா அவர்கள் கையில் உள்ள பணத்தை எடுத்து கொண்டு பெட் ஷாப் சென்றனர்.

அங்கு மீன் தொட்டி அதில் வளர்க்க கோல்டு பிஷ் டேங்க் கிளீனர் என வாங்கி கொண்டிருந்தனர்.. அப்போது  கீழ் தொட்டியில் உள்ள ஏன்ஜல் பிஷ்ஷை பார்த்த சூர்யா ஹேய் இது வாங்கலாம் டா.. சூப்பரா இருக்கு என்று கண்கள் மின்ன விஷ்வாவிடம் கூற.. ஹேய் காசு இல்ல டா, இன்னொரு நாள் வந்து வாங்கிக்கலாம் என்றான்..

முகம் வாடி போனது சிறுவயது சூர்யாவிற்கு.. வாங்கிய மீன்களும் அவனுக்கு பிடித்து விட.. எதையும் திருப்பி கொடுக்க மனம் இல்லாமல் சரி நாளை வந்து இதை வாங்கி கொள்ளலாம் என நினைத்து வாங்கிய பொருட்களையும் மீனையும் எடுத்து கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது ரஞ்சனி விஷ்வா சூர்யாவிடம் வாங்க வாங்க சீக்கரம் இங்க இருந்து போகலாம் என்று அவசரபடுத்த..

விஷ்வா ஏன் பாப்பா? ச்சூ ச்சூ வருதா என்று கேட்க. இல்ல இல்ல வாங்க போலாம் என்று கொஞ்சம் தூரம் ஓடி சென்று ஒரு இடத்தில் நின்று கொண்டு அவர்களை அழைத்தாள். இருவரும் என்னமோ ஏதோ என்று அவளிடம் சென்று நிற்க.. ரஞ்சனி அவளது குட்டி பேகை காட்டினால்.. அதில் சூர்யா ஆசைப்பட்டு கேட்ட ஏஞ்சல் மீன் தண்ணீர் இல்லாமல் துடித்து கொண்டிருந்தது..

விஷ்வா அடிப்பாவி என்று அதிர்ந்து துரிதமாக அதை எடுத்து மற்ற மீன்கள் உள்ள தண்ணீரில் போட்டான். உயிர் பிழைத்து கொண்டது அந்த ஏஞ்சல் மீன். சூர்யாவிற்கு அந்த மீனை பார்த்ததும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ரஞ்சனிக்கு கன்னத்தில் மித்தமிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

அதன் பின் இப்படி எல்லாம் திருட கூடாது என்று விஷ்வா அவளை கண்டித்தது எல்லாம் கிளை கதை..

அன்றில் இருந்து விஷ்வா அவளை எப்போதும் மீன் திருடி என்றே அழைப்பான்.

ரஞ்சி நீ மீன் திருடி இல்ல பூனை குட்டி, என்று சூர்யா கூற.. குட்டி ரஞ்சி அவனை புரியாமல் பார்த்தாள்.. ஆமா பூனை தான் மீனை திருடும் அதனால நீ பூனை குட்டி. கிட்டன் என்று அவளுக்கு அப்போதே பேர் வைத்தான் சூர்யா.

இது தான் மீன் திருடி பெயரின் வரலாறு.

விஷ்வா கூறி முடிக்க, சூர்யாவும் ரஞ்சனியும்  அந்த நிகழ்வை நினைத்து சிரித்து கொண்டு இருந்தனர்.

அக்கா நீங்க அப்போவே அப்படியா? சூர்யாகாக மீன்லாம் திருடி குடுத்து இருக்கீங்க.. என்று கலைத்தால்.

மீன் திருடி.. என்று மீண்டும் அந்த பெயரை சொல்லி பார்த்தாள்.

ஹேய் நானாச்சும் பரவால்ல இந்த விஷ்வா என்ன தெரியுமா பண்ணான்  5th படிக்கும் போதே அவன் தமிழ் மிஸ்க்கு லவ் லெட்டர் குடுத்தான் என்று பட்டென்று கூறி விட.. குழலி விஷ்வாவை பார்த்து விழி விரித்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

84. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ரஞ்சனி விஷ்வாவின் பப்பி லவ்வை பற்றி சொன்னதும் குழலி கண்கள் விரித்து விஷ்வாவை பார்த்தாள்..

ஹேய் மானத்த வாங்காத டி, என்று கையில் உள்ள வாட்டர் பாட்டலை தூக்கி அடிக்க.. டேய் நீ மட்டும் என் கிட்டன் மானத்தை வாங்கினல, இப்போ என் கிட்டன் உன்ன பத்தி குழலி கிட்ட சொல்வா.

கிட்டன் நீ சொல்லு டி என்றான் சூர்யா..

விஷ்வா அப்போ 5th படிச்சிட்டு இருந்தான்.. அன்னைக்கு தமிழ் எக்ஸாம், அந்த மிஸ் பேரு என்ன டா என்று ரஞ்சி விஷ்வாவிடம் கேட்க.. சொல்ல மாட்டன் போடி என்றான்..

சூர்யா உனக்கு நியாபகம் இருக்கா?

இரு.. இரு.. சொல்றன் என்று யோசித்தவன் ஹான் அவங்க பேரு அமலா என்றான்..

கடுப்பான விஷ்வா, டேய் அவங்க பேரு ஷேமலா என்றான்..

பார்த்தியா குழலி இப்போ கூட அந்த மிஸ் பேர தப்பா சொன்னதும் எவ்ளோ கோவம் வருதுன்னு..

ஹ்ம்ம் ஆமாக்கா அவ்ளோ லவ்.. நீங்க சொல்லுங்க என்று விஷ்வாவை முறைத்து கொண்டே கதை கேட்டாள்..

ஆஹான் அன்னைக்கு தமிழ் எக்ஸாம், இவன் அந்த அன்சர் ஷீட்ல அவங்களுக்கு லவ் லெட்டர் எழுதி வச்சிருக்கான்.

ஹய்யோ அப்பறம்??

அப்பறம் என்ன?

அடுத்த நாள், அவன் எழுதுனத பார்த்த மிஸ்.. விஷ்வாவ அடி வெளுத்துட்டாங்க என்று சிரித்தாள்..

சூர்யாவும் ரஞ்சனியும் பயங்கரமாக சிரிக்க.. அந்த நினைவில் மூழ்கிய விஷ்வாவிற்கு கூட லேசாக இதழ் வளைந்தது.

ஆமா டீச்சர்க்கு லவ் லெட்டர் எழுதுனா அடிக்க தான செய்வாங்க என்றால் குழலி..

அட நீ வேற குழலி அந்த மிஸ் இவன் லவ் லெட்டர் குடுத்ததுக்கு அடிக்கல.. என்று கூறி இன்னும் வெடித்து சிரித்தனர் ரஞ்சனியும் சூர்யாவும்..

டேய் போதும் நிறுத்துங்க ஓவரா போறீங்க.. என்றான் விஷ்வா.

ஆர்வம் தாங்காத குழலி வேற எதுக்குக்கா அடிச்சாங்க..

லவ் லெட்டர தப்பு தப்பா எழுதியிருக்கான். அவங்க வேற தமிழ் ஆர்வலரா இவன் அந்த மிஸ்ஸ இம்ப்ரஸ் பண்ண தமிழ்ல லவ் லெட்டர் எழுதுறன்னு சொல்லி தப்பு தப்பா எழுதி அந்த மிஸ் இவன வெளுத்து வாங்கி ஒரே கூத்தா போச்சு என்று சிரித்தனர். குழலிக்கும் சிரிப்பு வந்துவிட அவளும் அடக்க முடியாமல் சிரித்தாள்.

அப்.. பறம்.. அப்பறம் என்ன ஆச்சு என்று சிரிப்பின் ஊடே குழலி கேட்க..

சிரிப்பை அடக்கிய ரஞ்சனி மிச்ச கதையை கூறினாள்.. அப்பறம் என்ன அந்த மிஸ் இவனுக்கு தமிழ் ஸ்பெஷல் கிளாஸ்லாம் வச்சு ஒழுங்கா படிக்க வச்சாங்க.. இவனும் அந்த மிஸ் மேல உள்ள லவ்ல நல்லா படிச்சு அடுத்த எக்ஸாம்ல 90க்கு மேல ஸ்கோர் பண்ணான்.

அதுக்கு அப்பறம் வந்த பேரன்ட்ஸ் மீட்டிங்ல ஷேம்லா மிஸ் சுந்தரம் மாமாகிட்ட எல்லாத்தையும் சொல்லி, கூடவே அவங்க கல்யாண இன்விடேஷன்னும் வச்சு கண்டிப்பா குடும்பத்தோட வந்துடனும்ன்னு சொன்னாங்க..

மாமாவும் கூப்பிட்ட மரியாதைக்கு என்ன சூர்யாவ விஷ்வாவ எல்லாம் கூட்டிட்டு கல்யாணத்துக்கு கூட்டிட்டு போனாரு..

அங்க தான் ஹைலேட்டே என்று இன்னும் சிரித்தாள் ரஞ்சனி. இப்போது விஷ்வாவும் அவளோடு சேர்ந்து சிரிக்க..

குழலி என்ன ஆச்சுக்கா.. சொல்லுங்க.

ரிசப்ஷன் மேடைல நாங்க எல்லாம் கிஃப்ட் குடுக்க போனோம், அந்த ஷேம்லா மிஸ் அவங்க பார்ட்னர் கூட நின்னுட்டு இருந்தாங்க.. விஷ்வா அந்த மிஸ் கைய புடிச்சு மிஸ் இனிமேல் நீங்க ஸ்கூல்க்கு வர மாட்டிங்களா? உங்கள நான் ரொம்ப மிஸ் பண்ணுவன்.. ஐ லவ் யு மிஸ் என்று அந்த மிஸ் கைய புடிச்சுகிட்டு ஒரே அழுகை.

அப்பறம் அந்த மிஸ் மேடைலயே நின்னு விஷ்வாவ சமாதானம் பண்ணி, ஐ லவ் யூ டூ செல்லம் என்று கொஞ்சி பக்கத்துல இருந்த அவங்க பார்ட்னர்க்கு இவன் பண்ண எல்லாம் வேலையும் ஒன்னு ஒன்னா விளக்கம் குடுத்தாங்க.

அதுக்கு அப்பறம் அந்த மிஸ் அவங்க புருஷன் ஊருக்கே போய் செட்டில் ஆகிட்டாங்க. என்று கூறி முடித்தால் ரஞ்சனி. அங்கே அப்படி ஒரு சிரிப்பலை..

குழலி சிரித்து கொண்டே கூறினாள்.. எனக்கு உங்க மூணு பேரையும் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதே நேரம் கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. எங்க அப்பா மட்டும் இறக்காமல் இருந்து இருந்தா.. நானும் உங்க கூடவே இருந்து இருப்பன்ல என்று கண் கலங்கினால்.

விஷ்வா அவள் கண் கலங்குவதை பொறுக்காதவனாய் அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அண்ணி இப்போ ஏன் அழறீங்க.. இப்பவும் நாம எல்லாரும் ஒன்னா தான இருக்கோம்.

ஒன்னா தான் இருக்கோம் ஆனா உங்ககிட்ட நீங்க இருக்கா மாதிரி கிளோஸ்சா இருக்க முடியல.. என்ன இருந்தாலும் நீங்க சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருந்தவங்கள..

ஹேய் குழலி பர்ஸ்ட் நீ என்ன ரஞ்சி அக்கான்னு கூப்பிடுறத நிறுத்து அப்போ தான் நீ எங்க கூட நெருங்க முடியும்.. நாம உறவுகளை தாண்டி நல்ல ஃப்ரன்ட்ஸ்சா இருக்கலாம். அப்போ தான் நமக்குள்ள எந்த ஈகோவும் இருக்காது.

ஹேய் சூர்யா இனிமேல் நீ குழலிய பேர் சொல்லியே கூப்பிடு.. அவ நம்மகிட்ட இருந்து ஃப்ரன்ட்ஷிப்ப தான் எதிர்பார்க்குறா. இனிமேல் நாம நாலு பேரும் நல்ல ஃப்ரன்ட்ஸ் அப்பறம் தான் நமக்குள்ள இருக்க உறவு ஓகே என்று ரஞ்சனி கேட்க.. மிச்சம் மூவரும் டன் என்று ரஞ்சனி நீட்டிய கையில் அடித்து சத்தியம் செய்தனர்.

அன்றைய மாலை அவர்களை சுற்றி இருந்தது சந்தோஷம்.. சந்தோஷம்.. சந்தோஷம்.. மட்டுமே.

கதிரவன் மறைந்து நிலவு பண்ணவள் இரவை ஆட்சிபுரிய வர, ரஞ்சனி குழலியை அழைத்து கொண்டு அவள் அறைக்கு சென்றால். அங்கே அவளை குளியலறையில் தள்ளி குளித்து வர கூறினாள்.. பூரணி பாப்பா விஷ்வாவிடம் இருக்க.. அவனுக்கும் அங்கே அதே நிலை தான்..

குழலி குளித்து விட்டு வெளியே வர,  அவளிடம் ஒரு வெள்ளை கற்கள் வைத்த லாவண்டர் நிற புடவையை கொடுத்தாள். ஏதோ பண்றிங்க.. என்று சந்தேகமாக கூற. ஆமா உன்ன வச்சு படம் பண்ண போறோம் போமா அங்கிட்டு என்று அவள் உடை மாற்ற உதவி புரிந்தால் ரஞ்சனி. ஹய்யோ ரஞ்சி நானே மாத்திக்குறன் நீ வெளிய இரு என்க, பார்ராஹ் ஹ்ம்ம் என்று அவள் இடையை கிள்ளிவிட்டு வெளியே சென்றால் ரஞ்சனி.

சிறிது நேரத்தில் அந்த லாவண்டர் நிற சேலையில் தேவதை என கதவை திறந்தால் குழலி.

ஹேய் செமயா இருக்க டி.. நீ ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. செம ஸ்ட்ரக்சர் உனக்கு என்று அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கூற, ஹய்யோ ரஞ்சி நீ பொண்ணு.. ஏன் இப்படி பாக்குற குழலி வெட்கப்பட்டு போனாள்..

சரி சரி வா.. என்று குழலியை கண்ணாடி முன் அமர வைத்து லேசான ஒப்பனையில் குழலி பெண்ணவளை ஜொலிக்க வைத்தால்.

ரஞ்சனியும் வேறு உடைக்கு மாறி, தயாராகினால்..

அதே நேரம் அங்கு விஷ்வா மற்றும் சூர்யாவும் தயாராகி வந்தனர்..

அந்த ரிசார்ட்டில் உள்ள ஒரு சிறிய பார்ட்டி ஹாலில் சூர்யா விஷ்வாவையும் ரஞ்சனி குழலியையும் அழைத்து வந்தனர்.. விஷ்வாவும் குழலிக்கு மேட்ச்சாக லைட் கலரில் கோட் சூட் அணிந்து இருந்தான். பூரணி பாப்பா சூர்யா கையில் அப்பா அம்மா உடைக்கு ஏற்ற வகையில் குட்டி கவுன் அணிந்து இருந்தாள்.

அங்கே முத்தரசி, சுந்தரம் மகேஷ்வரி.. பரமு சுசிலா.. மற்றும் சுந்தரம் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என வருகை தந்து இருந்தனர்..

சூர்யா தான் அண்ணனுக்காக இந்த சிறிய பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான்.

குழலி அன்னையை பார்த்ததும் அம்மா என்று கட்டி கொண்டாள். மகளுக்காக இத்தனை உறவுகள் இருப்பதும், அவளை பொக்கிஷமாக தாங்குவதையும் பார்த்து பூரித்து போனார் முத்தரசி.

விஷ்வாவும் குழலியோடு வந்து நின்று மாமியாரை நலம் விசாரித்தான். எப்போ வந்திங்க அத்தை.. இன்னைக்கு எல்லாமே எங்களுக்கு சர்ப்ரைஸ் தான் அதல நீங்க வந்தது இன்னும் சர்ப்ரைஸ் என்று அவன் அத்தையின் வரவில் மகிழ்ந்தவனாக பேசி கொண்டிருந்தான்.

பின் அவர்களுக்காக அனைவரும் காத்திருப்பதை உணர்ந்த முத்தரசி இருவரையும் அனுப்பி வைத்தார்.

இருவரையும் அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிற்க வைத்தனர். பின் வந்திருந்தவர்கள் பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்தி விட்டு சென்றனர்.

குழலி மேடையில் இருந்தே அவள் அன்னையை தேட அவள் கண்ட காட்சியில் கண்கள் விரிந்தது.. விஷ்வாவும் மனைவியின் பார்வை சென்ற இடத்தை பின்தொடற, அங்கு அவன் அம்மாவும் அவன் அத்தை முத்தரசியும் பேசி கொண்டு இருந்தனர். மென்மையாக சிரித்து குழலியின் இடையை யாரும் பார்க்காதவாறு கிள்ளி விட்டான்.

சுயம் தெளிந்து, கூச்சம் கொண்டவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது அவள் அம்மாவும் மாமியாரும் சிரித்து பேசி கொண்டிருப்பதை நினைத்து.

உண்மையில் அங்கு மகேஷ்வரி முத்தரசியிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார். அன்று அவர் செய்த தவறுக்காக.. அண்ணி நீங்க என்கிட்ட இப்படி உரிமையோடு பேசுறதே போதும்.. மன்னிப்பு எல்லாம் கேட்டு என்ன சங்கட படுத்தாதீங்க.. என் பொண்ணு குழலிய மட்டும் நல்லா பார்த்துக்கோங்க என்று அந்த நேரத்திலும் மகளுக்காகவே பேசினார் முத்தரசி.

கண்டிப்பா அரசி, நான் குழலிய நல்லா பார்த்துக்குறன். நீ வீட்டுக்கு வந்து தங்கிட்டு தான் போகணும் என்று அன்பு கட்டளையிட. அண்ணி தப்பா எடுத்துக்காதீங்க. நான் வேலை செய்ற வயல்ல அறுவடை பண்ற நேரம் நான் நைட்டு புறப்படணும்.. அங்க வேலை எல்லாம் முடிஞ்சதும் உங்க விருப்பபடி நான் வந்து தங்கறன் அண்ணி என்று அவர் நிலையை மென்மையாக எடுத்து கூறினார். மகேஷ்வரி கொஞ்சம் முகம் சுருக்கினாலும் சரி அங்க வேலை முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கு வரனும் புரியுதா என்று அன்பு கட்டளையிட்டார். கண்டிப்பா வரன் அண்ணி.

பின் அந்த இரவு விருந்து நல்ல முறையில் முடிய, விஷ்வா குழலி எதிர்பார்க்காத இந்த நிகழ்வில் மகிழ்ச்சியாக இருந்தனர்.

முத்தரசி குழலியிடம், அவர் கிளம்புவதை பற்றி கூற.. அவளும் இருந்து விட்டு போகவே கூறினாள்.. பின் ஊரில் உள்ள வேலையை பற்றி கூறி மகளை சமாதானம் செய்து பேத்தியை கொஞ்சி விட்டு விஷ்வா ஏற்பாடு செய்து இருந்த காரில் சென்றார்.

பின் விஷ்வா குழலிக்கு அந்த ரிசார்ட்டில் ஒரு அறையை புக் செய்து இருந்தனர் சூர்யா மற்றும் ரஞ்சனி.

அதை பற்றி அவர்களிடமும் கூறி,  அவர்களை கிண்டல் செய்து வெட்கத்தில் நெளிய வைத்தனர்.
இன்னைக்கு பாப்பா எங்க கூட இருக்கட்டும் என்று கூறி பூரணி குட்டியையும் அவர்களோடு அழைத்து சென்று விட்டனர்.

விஷ்வா மற்றும் குழலி அவர்களுக்கான அறைக்குள் நுழைய விஷ்வா வாவ் என்று கண்கள் விரித்தான் என்றால் குழலி ஹய்யோ என்று சிவந்து போனாள்..

அவர்கள் அறை முதலிரவு அறை போல் மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவன் அருகில் வெட்கத்தில் சிவந்து நின்ற குழலியை பார்க்க. அவள் சிங்கிள் ஃபிலீட் வைத்து கட்டிய முந்தாணியை திருகி கொண்டு நின்றிருந்தால்..

பின் கதவடைத்து விட்டு வந்தவன் அவனது மேல் கோட்டை கழட்டி விட்டு குழலியை கைகளில் ஏந்தி கொண்டான்.

அவளை மெத்தையில் கிடத்தி, அவனும் அவள் அருகில் படுத்து கொண்டு நமக்கு இந்த மாதிரி ஒரு செட்டப்ல பர்ஸ்ட் நைட் நடக்கவே இல்ல டி என்று கூறி கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

பின் ஆடை விலகிய பால் கட்டி அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பிடித்த விதத்தில் எடுத்து கொண்டான்.

அன்றைய இரவு அவர்களின் அழகான தாம்பத்தியத்திற்கு பரிசாக விஷ்வாவின் குட்டி உயிர் குழலியின் வயிற்றுக்குள் பத்திரமாக சேர்க்கப்பட்டது.. ஆனால் அவர்கள் இருந்த மோன நிலையில் இருவருமே அதை அறியாமல் போயினர்.

அதன் பின்னான நாட்களில் விஷ்வா மற்றும் குழலியின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் அழகாக சென்றது..

அந்த நாள் வரும் வரை..

??

 

 

 

 

 

 

 

 

 

85. கண்கள் நிறைந்த ஓவியமே!! 18+
18+ episode பிடிக்காதவர்கள் கடந்து விடவும்



குழலி வேக வேகமாக சமையலை முடித்து ரஞ்சி கிட்சன் கிளீன் பண்ணிடுறியா? சரசு அக்கா மிச்ச வேலைய பார்த்துப்பாங்க.. நான் போய் ஷிவாவ எழுப்பனும் என்று அவள் முந்தியில் ஈர கைகளை துடைத்து கொண்டே கேட்டாள்.

இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தவள், அவன் என்ன ஸ்கூல் பாயா டெய்லி அவன எழுப்பி விட? அலாரம் வச்சு எந்திரிக்க மாட்டானா?? வேண்டும் என்றே வம்பிழுத்தால் ரஞ்சனி..

ஹேய் அலாரம் வச்சா பாப்பா எந்திரிச்சிடுவா அதான் என்றால் சமாளிப்பாக..

சரிங்க மேடம் போங்க.. போய் உங்க ஷிவாவ எழுப்பி, 10 மணி ஆபீஸ்க்கு 7 மணிக்கே குளிக்க வைங்க என்றால்  கல்மிஷமாக..

குழலி கொஞ்சம் பதறி, அ.. அதலாம் இல்ல ரஞ்சி அவர எழுப்பி மட்டும் தான் விடுவன் என்றால்..

சரி சரி.. போ போய் சீக்கிரம் எழுப்பி விடு, நேரம் ஆகுது பாரு.. நீ டெய்லி ஏழு மணிக்கு எழுப்பி விட்டும் இப்போல்லாம் சூர்யா அவசர அவசரமா தான் வேலைக்கு கிளம்பறான்.. போ போ இன்னைக்காச்சும் அவன சீக்கிரம் கிளப்பி விடு என்று ரஞ்சனி சிரித்து கொண்டே குழலியை அனுப்பினால்..

உனக்கு என்னமோ தெரிஞ்சு இருக்கு, அதான் இப்படி கிண்டல் பண்ற உன்ன அப்பறம் பார்த்துக்குறன் போடி என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டால்.

மேலே சென்ற குழலி உறங்கி கொண்டிருந்த விஷ்வாவை எழுப்ப.. இன்னைக்கு நீ 10 நிமிஷம் லேட் என்றான் கண்களை திறக்காமல்.. அவள் அவனை பொய்யாக முறைக்க..

அவளை இழுத்து அனைத்து கொண்டவன் போர்வைக்குள் தன்னவளை சுற்றி கொண்டு மலை பாம்பாக அவளை வளைத்து கொண்டு சேலை விலகிய மார்பில் கடித்து வைத்தான்.

குழந்தை உறங்குவந்தால் அவளால் கத்த முடியாமல் விஷ்வாவை முறைத்து வைத்தால்.. முறைக்கும் கண்களுக்கு இச்சு வைத்தவன் அவளை அப்படியே கைகளில் ஏந்தி கொண்டு குளியலறை தூக்கி சென்று கதவடைத்து கொண்டான்.

ஷிவா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கிறோம்ல அது இந்த ரஞ்சி கண்டு பிடிச்சுட்டா டா.. இன்னைக்கு என்ன கிண்டல் பண்ணா என்று சிணுங்களாக பிரஷ் பண்ணி கொண்டிருக்கும் விஷ்வா மார்பில் சாய்ந்து கொண்டு அவள் கூற..

பல் தேய்த்து முடித்தவன் அவ கடக்குறா மீன் திருடி, அவ சொல்றத கண்டுக்காத என்று ஷவரின் அடியில் மனைவியோடு நின்று குளிர்ந்த நீரில் சூடான தேகத்தில் இருந்து ஆடை கலைந்தனர்..

நைட் ஏண்டி சீக்கரம் தூங்கிட்ட என்று கேட்டு கொண்டே அவள் ரவிக்கையின் கொக்கிகளை கழட்ட, முயல் குட்டிகள் இரண்டு இறுக்கி பிடித்த ஆடைக்குள் இருந்து துள்ளி வெளிவந்தன..

அவள் கூறிய பதிலை கவனிக்காதவன்.. எத்தன டைம் சொல்றது இவ்ளோ டைட்டா போடாதன்னு.. பாவம் டி என் கொழுந்தாயாளுங்க பாரு எப்போ நான் விடுதலை குடுப்பன்னு காத்திட்டு இருந்து இருக்காங்க.. என்று மனைவியின் அங்க லாவண்யங்களுக்காக கவலை பட்டு கொண்டான்.

நீ ரொம்ப மோசம் போடா, என்றவள் அவனோடு ஒன்றி கொள்ள..

பின் அடுத்தடுத்த வேலைகளில் அவளை இதே போல் சிவக்க வைத்து அவனுக்கு வேண்டியதை எடுத்து கொண்டான்..

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

என்று பாடிவனை வாய் பொத்தினால்..

என்னடி என்று அவன் உதட்டை அழுத்திய உள்ளங்கையில் முத்தமிட்டு இருபுருவம் தூக்கி வினவ. நீருக்கடியில் அவன் சிலுமிஷங்களில் சொக்கியவள் ப்ளீஸ் ஷிவா பாடாத என்னமோ மாதிரி இருக்கு என்று வெட்கினால்..

நிஜமா டி, தினம் காலைல உன்கூட இப்படி முழுசா இருந்துட்டு, கண்ல எல்லாத்தையும் நிரப்பிகிட்டு ஆபீஸ் போனாதான் அன்னைக்கு நாள் நல்லா இருக்கு டி என்று அவளிடம் இன்னும் கொஞ்சம் அந்தரங்கம் பேச..

அதற்கு மேல் அவனை பேச விடாமல் அவளே முன் வந்து அவனோடு இழைந்தால்.. இல்லையென்றால் பேசி பேசியே குழலி பெண்ணை உச்சம் எய்த வைப்பானே.

நான் வெளிய போறன் விஷ்வா மிச்சத்தை நைட் பார்த்துக்கலாம் என்று மூச்சு வாங்க நின்றவனிடம் கூறிவிட்டு வேக வேகமாக வெளியே வந்து உடை மாற்றி கொண்டாள்.

பின் விஷ்வா வருவதற்குள், அவனுக்கு உடைகளை எடுத்து வைத்து இருந்தாள். விஷ்வா வெளியே வர அவனுக்கு தலை துவட்டி விட்டு, அணிவித்த சட்டைக்கு பட்டன் போட்டு கொண்டிருந்தாள்.. தினமும் ஆறடியில் வளர்ந்த குழந்தையை அவள் தான் அலுவலகம் கிளப்பி விடுகிறாள்..

அவளது பிங்க் உதடுகளில் பித்தானவன், கடித்து முத்தம் கொடுத்தான்.

ஐந்து நிமிடம் கழித்து அவளை விட்டவன், குழலி இன்னைக்கு கிளைண்ட் மீட்டிங் இருக்கு டி, வர லேட் ஆகும் அன்ட் டின்னர் அவங்க கூடவே முடிச்சுடுவன்

நீ எனக்கு வெயிட் பண்ணாத சாப்பிட்டு தூங்கு.

ஹ்ம்ம் ஓகே ஷிவா, முடிஞ்ச அளவுக்கு சீக்கரம் வாங்க..

ட்ரை பண்றன் டி, டக்கின் செய்து முடித்தவன்.. ஃபுல் ஸ்லீவை முட்டி வரை மடித்து விட்டு கொண்டிருந்தான்.. அவனது இறுகிய பூஜங்களுக்குள் கை நுழைத்து முத்தமிட்டவள் அவனை கொஞ்சம் நேரம் அனைத்து கொண்டு அமைதியாக நின்றாள்.

பின் குழந்தை எழுந்து அமர்ந்து ப்பா, டாடா என்று விஷ்வாவை அழைக்க குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டு குழலியோடு கீழ் இறங்கி வந்தான்.

அன்றைய நாள் இனிதே துவங்கியது. விஷ்வா குழந்தையை கொஞ்சி விட்டு அலுவலகம் சென்றான்.

மதியம் வரை வேலையில் மூழ்கி இருந்தான்.. கதவை தட்டும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த விஷ்வா எதிரில் இருந்தவளை கண்டு எரிச்சல் உற்றான்.

இருந்தும் அலுவலக நேரம் என்பதால் என்ன விஷயம் எதுக்கு இங்க வந்துருக்கீங்க?

ப்ளீஸ் விஷ்வா எனக்கு உன் உதவி தேவை.. எனக்கு ஹெல்ப் பண்ணு என்றவள் கண்ணனில் நீருடன் கை கூப்பி அவன் முன் மண்டியிட்டால்.

அவள் செயலில் அதிர்ந்தவன்.. ஹேய் மயூரி என்ன பண்ற? ஆர் யூ மேட் என்று திட்டி கொண்டே அவள் முன் வந்து அவளை எழ சொன்னான்.. அப்போதும் அவன் அவளை தொட விரும்பவில்லை.

அவள் எழ முடியாமல் வயிற்றில் ஒரு கையை வைத்து கொண்டு கஷ்ட்டப்பட.. விஷ்வாவின் புருவம் சுருங்கியது.. அப்போது தான் அவளின் மேடிட்ட வயிற்றை கண்டான்.
பின் என்ன நினைத்தானோ அவனே அவளை பொறுமையாக கை பிடித்து எழ வைத்தான்.

பின் இருக்கும் வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு மயூரியுடன் கஃபிடேரியா சென்றான்.

இருவருக்கும் ஜூஸ் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு மயூரி பேசுவதற்காக காத்திருந்தான்.

உங்க டீம்ல இருந்த வருணும் நானும் சிக்ஸ் மன்த்தா லவ் பண்றோம், 3  மன்த்ஸ் முன்னாடி அவர் ஆன்சைட் போனாரு. திரும்பி வர ஒன் இயர் ஆகும்னு சொல்லிட்டு போனாரு.

ஹேய் வெயிட். டேட்டா லீக்கான கேஸ்ல இப்போ ஜெயில்ல இருக்கானே அந்த வருண் பத்தி பேசிட்டு இருக்கியா என்றான்..

கண்ணீரோடு தலையசைத்தால் ஆம் என்பதாய்.

ஓஹ் காட்..

அவர் எந்த டேட்டாவும் லீக் பண்ணல விஷ்வா ப்ளீஸ் நான் சொல்றத நம்பு..

பிரான்ஸ்ல இருக்கவன், வருண் தான் எல்லாத்தையும் காம்படிட்டர் கம்பெனிக்கு அனுப்பிருக்கான்னு. ப்ரூஃப்வோட மெயில் அனுப்பியிருக்கான்.

இந்த நியூஸ் வரும் போது, அவன்மேல விசாரணை மட்டும் தான் நடந்துட்டு இருந்துச்சு.. சஸ்பென்ட் பண்ணிட்டு இந்தியாக்கு அனுப்பிடுவாங்கன்னு நெனச்சன்.. பட் நான் ஒன் மன்த் லீவ் முடிச்சிட்டு வரும் போது தான் ஜெய் சார் சொன்னாரு. வருண ஜெயில்ல போட்டுர்காங்கன்னு.

ப்ளீஸ் விஷ்வா எப்படியாச்சும் வருண காப்பாத்து, வயித்துல பிள்ளைய வச்சிக்கிட்டு ரொம்ப பயமா இருக்கு. நீயும் ஜெய் சாரும் நெனச்சா வருண்க்கு ஹெல்ப் பண்ண முடியும்.. நான் உன்கிட்ட பேசுனத எல்லாம் மனசுல வச்சிக்கிட்டு என்ன இதல பழி வாங்கிடாத.. அவர் தான் எனக்கு எல்லாமே என்னோட குறை நிறைகளை அப்படியே ஏத்துக்கிட்டு எனக்கு உண்மையான காதல குடுத்தாரு. எனக்கு அவர் வேணும் விஷ்வா. எப்படியாச்சும் எனக்கு அவர மீட்டு குடு. ப்ளீஸ் என்று கெஞ்சினால்.

ஸ்டாப் இட் மயூரி. நாம எல்லாம் அவன் கம்பெனில வேலை பாக்குறோம்.. எண்ட ஆஃப் த டே, எல்லாம் எவிடென்ஸ்ஸும் வருண்க்கு அகைன்ஸ்ட்டா இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு என் சைட்ல இருந்து என்ன பண்ண முடியும்ன்னு பாக்குறன். அவன் மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சா கண்டிப்பா நான் அவன இதல இருந்து வெளிய கொண்டுவரன்.

மயூரி அழுது கொண்டே நன்றி கூறினாள். பிற்பகல் நேரம் என்பதால் கஃபிடேரியாவில் அவ்வளவு கூட்டம் இல்லை.. இருந்த சில ஆட்கள் இவர்களை பார்த்து கொண்டே போக.. மயூரி ஸ்டாப் க்ரையிங் என்று அழுத்தமாக கூறினான். உன் வயித்துல ஒரு குழந்தை இருக்கு நீ சும்மா சும்மா இப்படி அழுதா, அது பேபி ஹெல்த்க்கு நல்லது இல்ல. தைரியமா இரு நான் பாத்துக்குறன் என்று கூறியவன் அவனுக்கு நேரமாவதை உணர்ந்து அவளிடம் கூறிவிட்டு எழுந்து சென்றான்.

அதன் பின் அவன் வேலையில் மூழ்கி போக.. இரவு ஏழு மணி போல் கிளைண்ட் மீட்டிங்கிற்கு தயாராகி சென்றான்.

அது ஒரு செவன் ஸ்டார் ஹோட்டல்.. விஷ்வா அங்கு சென்ற ஐந்து நிமிடத்தில் அவன் சந்திக்கவிருக்கும் கிளைண்ட் வந்து இருந்தனர்..

விஷ்வாவின் ஆளுமையான பேச்சும், நுனி நாக்கு ஆங்கிலத்தில் அவன் கொடுத்த விளக்கமும் அவர்களுக்கு திருப்தியாக இருக்க அவர்கள் இந்த ப்ராஜெக்ட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதி தந்தனர்.

பின் அவர்கள் இந்த சந்திப்பை சிறிய காக்டெயில் பார்ட்டியோடு துவங்க..

விஷ்வா குழலிக்கு பிடிக்காது என்று மென்மையாக மறுத்தான்..

ஹேய் கமான் மேன், ஜஸ்ட் ஒன் ஷாட் என்று அவனை கட்டாயப்படுத்த அவனால் அந்த சூழ்நிலையில் மறுக்க முடியவில்லை..

சரி குழலிய சமாளிச்சுக்கலாம் என்று ஒன் ஷாட் என தொடங்கியவன் மூன்றில் முடித்து கொண்டான். ஆனால் விஷ்வா தெளிவாகவே இருந்தான்.

அதன் பின் அவர்களிடம் விடை பெற்று அவன் காரை எடுத்து கொண்டு வீடு நோக்கி புறப்பட்டான்.. நேரம் 10ஐ தாண்டியிருந்தது. சிக்னளில் வாகனம் நிற்க, பக்கத்தில் இருந்த டூவீலரில் ஒரு ஜோடியை கண்டான். அந்த பெண் நிறை மாதமாக இருந்தாள்.

கை நிறைய வளையல்களுடன், வயிற்றில் ஒரு கையும் அவன் கணவன் மீது ஒரு கையும் வைத்திருந்தாள். அதை பார்த்தவனுக்கு அந்த இடத்தில் அவனையும் குழலியையும் பொருத்தி பார்க்க தோன்றியது. உதடுகள் அழகாக வளைந்தது விஷ்வாவிற்கு. ராட்சசி ஒத்துக்க மாற்றாளே என்ற எண்ணம் தோன்ற தலையை உளுக்கி கொண்டான்.

கிறீன் சிக்னல் விழ காரை ஸ்டார்ட் செய்தான்..

அடுத்து மயூரியின் மேடிட்ட வயிறு விஷ்வாவின் நினைவில் வந்து போனது..  இன்று அவனிடம் பேசியதை பற்றி நினைத்து பார்த்தவனுக்கு, அன்று மருத்துவமனையில் அவள் பேசிய பேச்சு நினைவில் வந்து போனது.  அவள் கண்ணில் தன்னை அடைய வேண்டும் என்ற வெறியை பார்த்தானே.. அப்படி பட்டவளை வருண் மீது கொண்ட காதல் எவ்வளவு அழகாக மாற்றியுள்ளது. காதலுக்கு தான் எவ்வளவு சக்தி என்று நினைத்து மயூரின் இன்றைய மாற்றங்களை நினைத்து அகம் மகிழ்ந்து போனான்.

அதே நேரம் குழலி மீது கொண்ட காதலால் அவனிடம் தோன்றிய மாற்றங்களையும் நினைத்து சிலாகித்தான். மனம் முழுதும் அவன் மனைவியே..

கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு போதை ஏற துவங்க எப்படியோ வீடு வந்து சேர்ந்தான்.

மேலே அவர்கள் அறைக்கு வந்தவன், கதவை மெதுவாக மூடி விட்டு, மனைவி மகள் உறங்கி கொண்டிருப்பதை கண்டு அமைதியாக படுத்து விட நினைத்தான்.

போதையில் தள்ளாடியவன் லேப்டாப் பேகை சோஃபாவில் வைத்து விட்டு, உடை கூட மாற்றாமல் குழலி அருகில் படுத்து கொண்டான்..

சிறிது நேரத்திலே, உறக்கம் தப்பிய குழலி விழித்து கொண்டாள் விஷ்வாவின் கரங்கள் அவள் உடலில் எல்லை மீறியதில், மதுவின் அதிகப்படியான போதை அவன் மனைவியை நாடவைக்க.. தூக்கத்தில் இருந்தவளை சிலுமிஷம் செய்து எழுப்பி விட்டான்..

விழித்து கொண்ட குழலி முதலில் எதுவும் உணரவில்லை.. பின் விஷ்வா மீது இருந்து வந்த மது வாடை அவளுக்கு அசௌகர்யமாக இருக்க.. குடிச்சிருக்கியா விஷ்வா??

கண்களை சுருக்கி இரு விரல்களை லேசாக விரித்து காட்டி லைட்டா என்றான்.

கண்ணே கலங்கி விட்டது குழலிக்கு. அன்னைக்கு குடிக்க மாட்டன்னு சொன்னல இப்போ ஏன்டா குடிச்ச என்று அவன் மார்பில் அடித்து சண்டையிட.. குழந்தை லேசாக சிணுங்கியது..

ஹேய் பாப்.. பாப்பா எழுந்து.. என்று போதையில் பிதற்ற.

ஒழுங்கா போய்டு என்று அவனை விளக்கி விட்டவள் குழந்தை பக்கம் திரும்பி மெதுவாக தட்டி கொடுத்தாள்.

விஷ்வா அப்போதும் சும்மா இல்லாமல் பின்னிருந்து அவளை அனைத்து கொண்டு கன்னம் முதுகு என முத்தமிட்டு கொண்டிருந்தான்..

அவனை விளக்கி விட்டு பால்கனி சென்றால் குழலி.. இரும்பை ஈர்க்கும் காந்தம் போல் விஷ்வாவும் அவள் பின்னே சென்றான்.

அழுது கொண்டிருந்தவளிடம் சாரி டி, நான் வேணாம்ன்னு தான் சொன்னன்.. அவன்ங்க தான் கேக்காம கம்பில் பண்ணாங்க சாரி டி ப்ளீஸ் இந்த ஒரு வாட்டி மன்னிச்சு என்று அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான்..

அப்போதும் குழலி முறுக்கி கொண்டு நிற்க, சரி உன் கோவம் போக நான் வேணும்னா சிட்டப் பண்ணவா என்று அவள் பதில் பேசும் முன் போதையில் தள்ளாடிய படி தோப்புக்கரணம் போட துவங்கினான்..

அதில் அவன் தள்ளாட குழலி, வேகமாக அவன் அருகில் சென்று பிடித்து கொண்டாள்..

குடித்து விட்டு வந்து குழந்தை போல் அலப்பறை செய்து தன்னை சமாதானம் செய்யும் கணவன் மீது கோவத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை..

சரி விடுங்க என்று அவள் பெரிய மனசு பண்ணி விட.. அந்த ஆறடி குழந்தை வேறெதர்கோ அடிப்போட்டது.. அதை புரிந்து கொண்டவள் அடி வாங்குவிங்க ஒழுங்கா போங்க என்று அவள் மீண்டும் உள்ளே செல்ல போக.. ப்ளீஸ் டி இப்போ நீ எனக்கு வேணும் பாரு இவன் அடங்கவே மாற்றான் என்று அவளுக்கு அவன் குறிப்பால் உணர்த்த..

ஹய்யோ வென்றானது குழலிக்கு..

விஷ்வா நீ குடிச்சுருக்க என்று அவள் மறுக்க, சரி இன்னைக்கு எல்லாம் நீயே பண்ணு.. நான் அமைதியா இருக்கன் என்றான்.. முடியாது போடா என்று அவள் மறுக்க.. ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சியே அவளிடம் காரியம் சாதித்தான் விஷ்வா.

அவன் நினைத்தது போல், குழலி அவன் மீது ஆட்சி செய்து கொண்டிருக்க.. போதையில் இருந்தவனுக்கு மயூரியுடன் நடந்த உரையாடல்கள் ஒன்றும் பதியுமாக நினைவில் நிழலாடியது, ம..யூரி  நா.. ன்.. பா..த்து.க்கு.. என்று உளறினான்..

அவன் பேச்சு சரியா புரியாதவள் அவள் காதை அவன் பக்கம் கொண்டு போக.. மயூரி என்றவளின் பெயர் சரியாக விழுந்தது அவள் காதில்..

துடித்து போனாள் குழலி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

86. கண்கள் நிறைந்த ஓவியமே!!
இரவின் குளிர் காற்று மெதுவாக வீசியது, மேகங்கள் மறைத்த நிலவு மகளின் முகம் மங்களான ஒளி வீசிய நேரம்.. இங்கு குழலியின் முகமும் வெறுமையில் இருந்தது.. வீசுகின்ற தென்றல் காற்று அவள் தலை கோதி, கண்ணீரை துடைத்து விடுவதாய்.

எவ்வளவு நேரம் தன் மீதே கழிவிறக்கம் கொண்டு அழுது கொண்டிருக்கிறாளோ.. வற்றாத சுனையாக அவளின் நீள விழிகள் இரண்டும் கண்ணீரை சொரிந்து கொண்டே இருந்தது..

போர்வை போர்த்தி உறங்கி கொண்டிருந்த விஷ்வாவை பார்க்க பார்க்க.. அவர்கள் கூடல் கொண்ட நேரம் இன்னொரு பெண்ணின் பெயரை சொன்னது மட்டுமே அவள் நினைவில் வந்து போனது..

அப்போதும் விடாமல், அவனை உளுக்கியவள் ஷிவா.. ஷிவா.. இப்போ என்ன சொன்ன சொல்லு.. சொல்லுடா என்று அவனை உளுக்கியும் பலன் இல்லை.. போதையில் அவனையும் மீறி உறங்கி போனான்.

அனைத்தையும் நினைத்து பார்த்தாள்.. பால்கனியின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தவள். அரைகுறையாக இருந்த ஆடையை சரி செய்து கொண்டு உள்ளே சென்றால்.

நள்ளிரவு 2 மணி.. விஷ்வா வந்ததில் இருந்து உறக்கம் இல்லை. இதற்கு மேல் அழ தெம்பில்லை என்று நினைத்தால் போலும், குளியல் அறை சென்று ஒரு மூச்சாக அழுது தீர்த்தவள்.. குளித்து முடித்து வெளியே வந்தவள் ஈர கூந்தலை துவட்ட கூட தோன்றாமல், மெத்தையில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

முடிவே செய்துவிட்டால். இனி விஷ்வா வாழ்க்கையில் தானும் தன் மகளும் இல்லை என்று.

விஷ்வா நமக்கு வேண்டாம் பாப்பா, அம்மாக்கு துரோகம் செஞ்சிட்டாரு என்று குழந்தையிடம் மௌன பாஷை பேசினால்.

நேரம் சென்று கொண்டே இருக்க.. பொம்மைக்கு உயிர் வந்தது போல், எழுந்து கீழே சென்றால்.

எப்போதும் அந்த வீட்டில் சமையல் வேலையை மட்டும் செய்பவள், இன்று அந்த பெரிய வீட்டை சுற்றி பெருக்கி வாசல் தெளித்து கோலம் போட்டு முடித்தால்.

பூஜை செய்ய தோன்றவில்லை. அதனால் பூஜை அறையை கண்டு கொள்ளவில்லை. வீட்டின்னுள்ளும் பெருக்கி வீட்டை துடைத்து விட்டால்.

நேரம் 5.30ஐ நெருங்க, உடலில் எந்த அலுப்பும் இல்லாமல் சமையல் வேலையை துவங்கினால்.

ரஞ்சனி எழுந்து வரும் நேரம் பாதி வேலையை முடித்து இருந்தாள்..  குட் மார்னிங் குழலி என்று சிரித்து கொண்டே கூறியவள், அன்றலர்ந்த மலராக குழலி முன் தோன்றினால்.. தன் சோகம் தன்னோடு போகட்டும் என்று நினைத்தவள், குட் மார்னிங் ரஞ்சி என்றால் சிரித்த முகமாக..

சீக்கரம் எழுந்துட்டியா குழலி?? பாதி வேலைய முடிச்சுருக்க.

ஆமா தூக்கம் வர்ல. அதான் வேலை பார்க்கலாம்ன்னு எழுந்து வந்தன்.

அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவள்.. அவன் எப்படி உன்ன விட்டான் என்றால் சிரிப்போடு..

ரஞ்சனியின் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் சிறு புன்னகையை கொடுத்து விட்டு வேலையை தொடர்ந்தால்.

நீ போ ரஞ்சி, பெருசா எந்த வேலையும் இல்ல.. நானே முடிச்சுடுறன்.

அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் ரஞ்சனி, பின் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி.. எதாச்சும் பிரச்சனையா குழலி? நீ உன்ன சாதாரணமா காட்டி கிட்டாலும் உன் முகம் ஏதோ போல இருக்கு.
எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.

அப்படிலாம் எதுவும் இல்ல ரஞ்சி.. நீ தான் அதிகப்படியா யோசிக்குற.. நான் நல்லா தான் இருக்கன்..

ரஞ்சனி அவளை இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருந்தாள், கத்திரிக்கா முத்தனா கடை தெருவுக்கு வந்து தான ஆகணும் அப்போ பார்த்துக்குறன் உன்ன என்றுவிட்டு அங்கிருந்து சென்றால்.

வேலைகளை பொறுமையாக செய்து நேரத்தை நெட்டி தள்ளி கொண்டிருந்தாள்.

மேலே கண் விழித்த விஷ்வா, தலையை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.. தலை வின் வின்னென்று வலித்தது போலும், தலையை அழுந்த பற்றி கொண்டான். பின் தான் இருக்கும் நிலை கண்டவனுக்கு அப்போது தான் இரவு நடந்தது ஒன்றும் பாதியுமாக நினைவு வந்தது.

குழலியிடம் கெஞ்சி கூடலுக்கு சம்மதிக்க வைத்தது வரை இங்கோன்றும் அங்கொன்றுமாய் நினைவு வர அதன் பின், அவன் உடலில் இருக்கும் அரைகுறை ஆடையை வைத்தே இப்படி தான் நடந்து இருக்கும் என்று அவனே ஒரு முடிவுக்கு வந்தான்..

போர்வையை சுற்றி கொண்டு உள்ளே சென்றவன், போனில் நேரத்தை பார்க்க.. 9ஐ நெருங்கி கொண்டு இருந்தது.. ஹய்யோ டைம் ஆகிடுச்சு, இந்த குழலி என்ன பண்றா இன்னும் மேல வராம? என்று புலம்பி கொண்டே குளியலறை சென்று பல் துளக்கி, குளித்து வந்தான். குழலி இல்லாமல் குளிப்பதற்கே கடுப்பாக இருந்தது. நைட் கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ? என்று யோசித்து கொண்டே அலுவலகம் கிளம்ப தயாராகினான். குழந்தையை தனியாக விட்டு போக மனமில்லாமல் அறைக்கு வெளியே சென்று குழலி.. குழலி.. சத்தமாக அழைத்தான்..

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது, அவன் முன் வந்து நிற்க.. மேல வா பாப்பா தனியா இருக்கா.. குழந்தை தனியாக இருக்கிறாள் என்பது இரண்டாம் காரணம் தான்.. அவளை அழைத்தற்கு முதல் காரணம் காலையில் இருந்து அவளை பார்க்கவில்லையே.

குழலி மேலே வந்து குழந்தை அருகில் செல்ல முயல, பின்னிருந்து அனைத்தவன், முதல்ல நீ எனக்கு தான் அப்பறம் தான் பாப்பாக்கு. என்று அவளை இடுப்போடு தூக்கி சுற்றி மொச்சு மொச்சு என்று முத்தம் வைத்தான்.

அவன் கைகளில் இருப்பதையே அருவருப்பாக உணர்ந்தவள்.. விடுங்க விஷ்வா என்று கத்தியிருந்தால். அவள் போட்ட சத்தத்தில் குழந்தை எழுந்து அழ துவங்கிவிட்டாள்.

வேகமாக அவளை கீழே இறக்கி விட்டவன்.. அவள் முகத்தை தான் பார்த்தான். குழலி குழந்தையை தூக்கி கொண்டு கீழே சென்று விட்டால்.

போகும் அவள் முதுகை வெறித்தவன். ஏன் ஒரு மாதிரி இருக்கா? நேத்து நான் குடிச்சிட்டு வந்ததுக்கு இன்னும் கோவம் போகலையா? நேத்து நைட் நான் சமாதானம் பண்ணனே.. அதுக்கு அப்பறம் தான எங்களுக்குள்ள எல்லாம் நடந்துச்சு என்று யோசித்து தலையை பிடித்து கொண்டான். இந்த பொண்டாட்டிங்கள சமாதானம் பண்றது ரொம்ப கஷ்ட்டமா இருக்கே.. என்று புலம்பி கொண்டே கீழே சென்றான்.

உணவு மேஜையில் அமர, குழலி வந்து இட்லிகளை அவன் தட்டில் பரிமாறினால். அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தவன்..

சாரி டி, இனிமேல் குடிக்க மாட்டன்.. நேத்து சிட்டுவேஷன் அப்படி டி.. அதான் குடிச்சிட்டன். தான் மது அருந்தியது தான் அவள் கோவத்திற்கு காரணம் என்று நினைத்தவன் அவளுக்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான்.

சாப்பிட்டு கிளம்புங்க. உங்களுக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆகுது என்பதோடு முடித்து கொண்டு, குழந்தையோடு மேலே சென்றுவிட்டால்.

வேக வேகமாக தட்டில் இருந்த உணவுகளை காலி செய்தவன், மீண்டும் மேலே சென்றான் அதற்குள் பூரணி பாப்பா குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியிருந்தால்.

செல்ல குட்டி என்று வந்தவன் குழந்தையை குழலியிடம் இருந்து வாங்கி கொஞ்சி கொண்டு இருந்தான்.

பாருமா அம்மா என்கிட்ட பேச மாற்றா.. அம்மாவ அப்பாகிட்ட பேச சொல்லு தங்கம் என்று குழந்தையை தூது அனுப்ப முயல குழலி கண்டு கொண்டாள் இல்லை..

அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவளை சீண்டி கொண்டிருந்தான்.. அவள் எழுந்து செல்ல முயல, சரி எனக்கு ஆபீஸ் டைம் ஆகுது நான் கிளம்பறன் டி பாப்பாவ பார்த்துக்கோ.. ஈவினிங் சமாதானம் ஆகிடுடி செல்லம் உன் புருஷன் பாவம் இல்ல. நீ இவ்ளோ கோவப்பட்டா பாடி தாங்காது டி என்று கூறியவன் அவள் இதழில் இரண்டு நிமிடம் முத்தம் வைத்து விட்டு விலகினான்.

அவன் முத்தத்திற்கும் அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.. அப்போது தான் விஷ்வாவிற்கு ஏதோ போல் தோன்றியது.

பின் லேப்டாப் பேகை எடுத்து கொண்டு, அவள் முகத்தை மனதில் நிரப்பி கொண்டு அலுவலகம் சென்றான்.

அலுவலகம் சென்று வேலையில் மூழ்கியவனுக்கு, வருணின் நினைவு வர, ஜெயச்சந்திரன் கேபின் சென்று ஃப்ரான்ஸ்ஸில் இருந்து வந்த வருண் சம்மதபட்ட ஆதாரங்களை எல்லாம் வாங்கி கொண்டான்.

அவனையும் cc வைத்து வந்த அனைத்து மெயில்களையும் மீண்டும் ஒரு முறை படித்தான்..

ஃப்ரான்ஸ்ஸில் வருண் வேலை செய்த டீம்மில் உள்ள மேனேஜருக்கு அழைத்து சில விவரங்களை கேட்க.. சரியான பதில் இல்லை அவரிடம்.

வருண் உபயோகித்த லேப்டாப்பை அவனுக்கு கனெக்ட் செய்ய கூறி உதவி கேட்டாலும் அந்த மேனேஜரிடம் இருந்து திமிரான பதில்களே வந்தது.

அவர்கள் வேலை செய்யும் தலைமையிடம் ஃப்ரான்ஸ் தான். அதனால் இந்தியாவில் இருப்பவர்களை அவர்கள் மதிப்பதே இல்லை. வேலை சம்மதம்பட்ட ஏதாவது தகவல் கேட்டாள் கூட பதில்கள் அவ்வளவு சீக்கரம் கிடைக்காது. மெயில் அனுப்பி கொண்டே இருந்தாள் தான் கேட்ட தகவல் கிடைக்கும். அங்குள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்படி தான் என்ற நிலையில் விஷ்வாவால் இங்கிருந்தே அவன் நினைப்பதை செய்ய முடியவில்லை.

அதன் பின் கிடைத்த தகவல்களை வைத்து ஏதேனும் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்த்தான், சொல்லி கொள்ளும் அளவு அவனுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. வருணின் லேப்டாப் மற்றும் cctv ஃபுடேஜ் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.

பின் ஜெயச்சந்திரனிடம் இதை பற்றி கலந்தாலோசித்தான், அவருக்கும் விஷ்வா வைக்கும் நியாயமான காரணங்கள் புரியவே செய்தது. இங்கு வேலை செய்யும் ஒருவன் எப்படி அந்த நாட்டில் உள்ள நிறுவனத்துடன் தொடர்பு வைத்து டேட்டா ஷேர் செய்ய முடியும்..

அது மட்டுமின்றி வருண் இங்கிருந்து சென்றே மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தது. அங்கு அவனுக்கு ட்ரைனிங் பீரியட் முடியவே  ஒரு மாதம் ஆகியிருக்கும் என விஷ்வாவின் சந்தேகங்களை வரிசையாக கூறினான்.

சரி இப்போ என்ன பண்ணலாம் விஷ்வா?

நம்ம சைட்ல இருந்து ஒருத்தர் அங்க போகணும்.. அதுக்கு அப்ரூவல் வாங்கி குடுங்க சார்.. மத்த விஷயம் நான் பார்த்துக்குறன் என்றான்.

சரி நான் இத பத்தி பேசுறன் விஷ்வா.

*****

இங்கு குழலி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அவள் கடந்த காலத்தில் இருந்து இப்போது அவள் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் யோசித்து கொண்டிருந்தாள்.

அவளையும் மீறி கண்கள் கலங்கியது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நினைத்தால்..

மனபாரமாக இருக்க அவள் அன்னைக்கு அழைத்து பேசினால். அம்மாவின் குரல் கேட்டதும் ஏதோ ஒரு புத்துணர்வு கிட்டியது போல் உணர்ந்தாள்.

சிறிது நேரத்தில் விஷ்வா அழைத்திருக்க.. அழைப்பை ஏற்கவில்லை குழலி.

கோவமா இருக்கியா டி? என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்..

போனின் லாக் ஸ்க்ரீனில் இருந்து படித்து கொண்டவள். போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு அவள் வேலைகளை தொடர்ந்தால்.

குழலியை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன், இன்று சரியான நேரத்திற்கு வீட்டிற்கு சென்றுவிட்டான்.

குழலி அவள் அறையில் இருக்க.. விஷ்வா வந்தது தெரிந்தும் கண்டு கொள்ளவில்லை.

குழலி வெளிய போலாமா டி? அவளிடம் உள்ள இறுக்கம் கொஞ்சம் தளரும் என நினைத்து கேட்டான்.

நான் வர்ல..

சரி வா நம்ம ஃபேவரட் ப்ளேஸ் பால்கனி போலாம்.. உற்சாகமாக அழைத்தான்.

நான் வர்ல.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் கடுப்பாகி விட்டான். ஹேய் எதுக்கு டி இப்படி ஓவரா பண்ணிட்டு இருக்க? கிளைண்ட் மீட்டிங், ஆபீஸ் பார்ட்டிலாம் போனா ட்ரிங்க் பண்ற சிட்டுவேஷன் வர தான் செய்யும்.. என் வொர்க் கல்ச்சர் அப்படி.

நான் என்ன தினமும் குடிச்சிட்டு வரன்னா? அக்கேஷனலா தான ட்ரிங்க் பண்றன் இதுக்கு எதுக்கு இவ்ளோ சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்க.. நானும் காலைல இருந்து உன் பின்னாடி கெஞ்சிட்டு இருக்கன். மதியம் எத்தன கால் பண்ணன் எவ்ளோ மெசேஜ் பண்ணன் கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணியா?

நீ பண்றது எல்லாம் எனக்கு கோவம் வருது குழலி. சின்ன விஷயத்த பெருசு பண்ணிட்டு இருக்க என்று கத்தி கொண்டிருந்தான்..

அவள் அப்போதும் அமைதியாக இருக்க.. பதில் பேசுடி. நாய் மாதிரி கத்திட்டு இருக்க என்ன பார்த்தா உனக்கு பைத்தியகாரன் மாதிரி இருக்கா? என்று பற்களை கடித்தான்.


என்ன கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ். என்றால்

மனுஷியா டி நீ.. ராட்சசி. உனக்கு இவ்ளோ திமிரு ஆகாது என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருந்தான்.

குழலி குழந்தையோடு விளையாடி விட்டு, பின் கீழே சென்று அனைவரிடமும் பேசி கொண்டிருந்தாள். பின் உணவு உண்ண விஷ்வாவை வந்து அழைத்தாள். எதுவும் பேசாமல் முன்னே நடந்தான்.

இரவு உணவை அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர், அதன்பின் தோட்டத்தில் கொஞ்சம் நேரம் நடை பயின்றவன். மேலே அறைக்கு வந்தான். அங்கு குழலி குழந்தையை நடுவில் படுக்க வைத்து விட்டு அவள் சுற்றோரம் படுத்து கொண்டாள். அதை கண்ட விஷ்வாவிற்கு அப்படி ஒரு கோவம் வந்தது.

பின் அவனும் வந்து குழந்தையின் மறுபுறம் படுத்து கொண்டான்.

நாட்கள் செல்ல, விஷ்வா ஒன்றை புரிந்து கொண்டான்.. குழலியின் இந்த கோவம் நான் குடித்துவிட்டு வந்ததால் அல்ல. அவள் மனதில் வேறெதோ இருக்கிறது என உறுதியாக நம்பினான். அதை அவளிடமும் வாய் விட்டு கேட்க.. குழலி வாய் திறக்கவில்லை.

அவளின் இந்த பிடிவாதம் அவனுக்கு அதிக கோவத்தை கொடுக்க.. அதன்பின் அவனும் அவளிடம் பேசவில்லை.

இப்படியே தான் சென்றது இவர்கள் நாட்கள். கேட்ட கேள்விக்கு பதில் கூறுவதோடு குழலி நிறுத்தி கொண்டாள். விஷ்வாவை அவளிடம் நெருங்க விடவில்லை.

அன்று குழலி மதியம் போல் அலுவலகம் சென்று கொண்டிருக்க அந்த காஃபி ஷாப்பில் இருந்து வெளிவந்தனர் விஷ்வாவும் மயூரியும்..

விஷ்வா அவள் கையை பிடித்து கொண்டு வெளிவர, மயூரி அவளின் ஆறு மாத வயிற்றில் கை வைத்து கொண்டு விஷ்வாவின் கைவளைவில் பொறுமையாக நடந்து வந்தாள்..

அனைத்தையும் தாண்டி.. விஷ்வாவின் அலமாரியில் கிடைத்தது அந்த விவாகரத்து பத்திரம்.. அதில் தெளிவாக இருந்தது குழலியின் பெயர். அதில் விஷ்வாவும் கையெழுத்திட்டு இருந்தான்.

87. கண்கள் நிறைந்த ஓவியமே!!
அன்றைய தினம் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தவனின் முகம் அவ்வளவு சோர்வாக இருந்தது. பின் குழலி அவனிடம் பேசி மூன்று வாரங்கள் ஆகிவிட்டதே.. ஆரம்பத்தில் அவனும் எப்போ பேசுறியோ பேசு, பேசலனா போடி என்று இருந்தவனுக்கு நாட்கள் செல்ல செல்ல அப்படியிருக்க முடியவில்லை. சொல்ல முடியாத வேதனையை உணர்ந்தான்.

ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனைவியின் யோசனையில் மூழ்கி இருந்தவனை கலைத்தது வெளியே நிலவிய பதட்டமான சூழ்நிலை..

என்ன ஏதேன்று வெளியில் சென்று பார்த்தவனுக்கு, மயூரி மயங்கி விழுந்த காட்சியே கண்ணில் பட்டது. கொஞ்சம் பதறியவன், அருகே சென்று அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றான். அவள் மாதந்திர பரிசோதனைக்கு வரும் மருத்துவமனை தான் போலும், பெண் மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு..

விஷ்வாவிடம் நீங்கள் அந்த பெண்ணிற்கு என்ன உறவு என்று கேட்டார். ஃப்ரன்ட் டாக்டர்.

பைன், அவங்க ஹெல்த் கண்டிஷன பத்தி யார்கிட்டயாச்சும் சொல்லியே ஆகணும்.. என் கேபின் வாங்க என்று கூறிவிட்டு மருத்துவர் முன்னெ செல்ல, விஷ்வா அவரை பின் தொடர்ந்தான்.

உக்காருங்க மிஸ்டர்.. விஷ்வா மேம்.

எஸ் விஷ்வா. மயூரி க்கு இப்போ 6த் மன்த் ஸ்டார்ட் ஆகியிருக்கு.

அவங்க ப்ளசண்டாவோட நிலை சரியா இல்லை.. கர்பப்பையை விட்டு பிரிஞ்சி இருக்கு.. இத நாங்க Placental Abruption சொல்லுவோம்..

இத நான் அவங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டன். உங்க பேபியோட கண்டிஷன் இப்படி இருக்கு இது உங்களுக்கு நல்லது இல்ல பெட்டர் பேபிய அபார்ட் பண்ணிடுங்கன்னு. பட் அந்த அவங்க அதுக்கு அப்பறம் செக்கப் வரவே இல்ல. லாஸ்ட் மன்த் வந்தாங்க, இடுப்பு ரொம்ப வலிக்கிது ப்ளீட் ஆகுதுன்னு சொன்னாங்க. செக் பண்ணிட்டு டேப்லட்ஸ் குடுத்து மன்த்லி செக்கப்க்கு வர சொன்னன்.

இப்போ அவங்கள செக் பண்ணி பார்த்ததுல அவங்க bp லெவல் நார்மலா இல்ல. ஆல்ரெடி இருக்க பிரச்சனைல இப்போ இதுவும், இப்படியே போனா பிரசவத்துல ரெண்டு உயிரையும் காப்பாத்த முடியாது. என்க விஷ்வா பதறி தான் போனான்.

இப்போ இதுக்கு என்ன வழி டாக்டர் என்றான் உள்ளுக்குள் தோன்றிய பதட்டத்தை மறைத்து கொண்டு..

நல்லா ரெஸ்ட் எடுக்கணும், பிபியை கண்ட்ரோல்க்கு கொண்டு வரனும். அதுக்கு அவங்க சந்தோஷமான மனநிலைல இருக்கணும். ஹெல்த்தி ஃபுட் குடுங்க. நான் குடுக்குற டேப்லெட்ஸ சரியான நேரத்துக்கு எடுத்துக்க சொல்லுங்க. நல்லதே நடக்கும் என்று மருத்துவர் முடித்து கொண்டார்.

வெளியே வந்த விஷ்வாவிற்கு தலை சுற்றியது. ஹய்யோ இவள வச்சிக்கிட்டு என்ன பண்றது என்று யோசித்தான் பின் கண் விழித்து இருந்தவளை அழைத்து கொண்டு வெளியே வந்தான். இருவரும் ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்து இருந்தனர். மருத்துவர் கூறிய அனைத்தையும் விஷ்வா மயூரியிடம் கூறினான்.

வருண் திரும்பி வரும் போது நீ உயிரோட இருக்க வேண்டாமா ஏன் இப்படி பண்ற? உனக்குள்ள ஒரு குழந்தை இருக்கு. Bp அதிகமா இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க. இப்படி இருந்தா குழந்தை பிறக்கும் போது ரொம்ப சிக்கல் ஆகிடும்.

நான் செத்துடுவன் அதான? என் வருண் முகத்தை பார்த்துட்டு செத்து போறன்..

இப்படி சொல்பவளிடம் என்ன பேச முடியும்.. லிசன் மயூரி.

வருண உன்கிட்ட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. இன்னும் 2 வீக்ஸ்ல நான் ஃப்ரான்ஸ் போறன்.. எல்லா ப்ரோப்லமும் சால்வ் ஆகும்ன்னு நம்பு என்றான்.

மயூரி மௌனமாக இருந்தாள். இப்போ எங்க தங்கியிருக்க?

ஹாஸ்டல்ல..

ஒன்னு பண்ணு நீ ரூம் வெகேட் பண்ணிட்டு எங்க வீட்டுக்கு வா.. உன்ன சுத்தி ஆளுங்க இருந்தா உனக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும். வருண் வர எப்படியும் ஒன் மன்த் ஆகும் அதுவரைக்கும் அங்க இரு என்றான்.

வேண்டாம் விஷ்வா என்று மறுத்தவளை அதட்டி உருட்டி சம்மதிக்க வைத்தான். பின் இருவரும் வெளியே வர மயூரியின் இடுப்பு வலியால் நடக்க முடியாமல் மெதுவாக வலியில் முகம் சுழித்து நடந்து வந்தாள்.

அதை கண்டவன் அவள் கைகளை பிடித்து கொண்டு மெதுவாக நடந்து வந்தான். மயூரி அவள் வயிற்றில் கை வைத்து வலியை பொறுத்து கொண்டாள். இந்த காட்சியை தான் காரில் சென்ற குழலி கண்டாள்.

துடித்து தான் போனாள் குழலி, கணவனை முன்னாள் காதலியுடன் அப்படி ஒரு நிலையில் பார்ப்பதற்க்கு. மயூரி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு விஷ்வா தான் அப்பா என முடிவே செய்துவிட்டால்.

*****

காரில் சென்று கொண்டிருந்த குழலிக்கு, கண்ணீர் வரவில்லை. எங்கேயோ வெறித்து கொண்டு இருந்தாள்.. அவள் சிந்தனை பின்னோக்கி சென்றது.

அவள் அலுவலக கோப்பு ஒன்றை அலமாரியில் தேடி கொண்டிருக்க, கோப்பு கிடைக்காத கடுப்பில் அலமாரியில் உள்ள அனைத்தையும் கீழே தள்ளி ஒவ்வொன்றையும் பிரித்து பார்த்து எடுத்து வைத்தால். கோப்புகளுக்கு நடுவே கிடைத்தது ஒரு பத்திரம். பார்த்ததும் என்னவென்று புரியாதவள் பிரித்து படித்ததும் புரிந்து கொண்டாள் விவாகரத்து பத்திரம் என்று..

அதில் தெளிவாக இருந்தது பொற் குழலி விஷ்வ கர்ணன் என்று.

பிடிப்பில்லாத கொடியாக கீழே சரிந்தாள். கையை தரையில் அடித்து கொண்டு அழுதாள்.

என் வாழ்க்கை அவ்ளோ தானா? எல்லாம் போச்சா? எதுக்கு என்ன இப்படி ஏமாத்தணும்? என்று முட்டி காலில் முகம் புதைத்து எவ்வளவு நேரம் அழுததாளோ.. பின் அலுவலகத்திற்கு நேரமாவதை உணர்ந்து அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, விவாகரத்து பத்திரத்தை மட்டும் அவள் எடுத்து வைத்து கொண்டாள்.

குழந்தையை அழைத்து கொண்டு அலுவலகம் புறப்பட்டவள் கண்ணில் தான் இப்போது விஷ்வ கர்ணனும் மயூரியும் தென்பட்டனர்.

இறுகி போய்யிருந்தாள்.

மாலை அலுவலகம் முடித்து வீடு வந்தவளின் கண்ணில் பட்டாள்.. கூடத்தில் அமர்ந்து பழ கலவைகளை உண்டு கொண்டிருந்த மயூரியும் ரஞ்சனியும்.. ஃபுல்லா சாப்பிட்டு முடி என்று கூறிவிட்டு எதிர் சோஃபாவில் அமர்ந்து டிவியை உயிற்பித்து கொண்டிருந்தான் விஷ்வா.

ரஞ்சனி ஏதேதோ பேசி மயூரியை சிரிக்க வைக்க முயன்று கொண்டிருந்தாள். மயூரி அனைத்தையும் கேட்டு கொண்டாள்.

விஷ்வா மயூரியின் ஹாஸ்டல் சென்று அங்கிருந்து வெகேட் செய்து  மதியமே அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

முதலில் அவன் எடுத்து இருக்கும் முடிவை குழலியிடம் தெரிவிக்க அவளை அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை. பின் சலித்து கொண்டு தந்தைக்கு அழைத்து மயூரியின் நிலையும் அவன் முடிவையும் கூறினான்.

வீட்டிற்கு வந்ததும் மயூரியை கெஸ்ட் ரூமில் ஓய்வெடுக்க கூறிவிட்டு அவனை கேள்வியாக பார்த்த தாயிடமும் அனைத்தையும் கூறினான்.

அன்று ரஞ்சனி சீக்கிரமாகவே வீடு வந்திருக்க.. மயூரியை கண்டு ஸ்னேகமாக சிரித்து விட்டு, அவள் உள்ளே சென்றதும் என்ன விஷ்வா உன் எக்ஸ கூட்டிட்டு வந்துருக்க என்று கேலியாக கேட்க.. லூசு என்று அவள் தலையில் தட்டி நிலமையை விளக்கினான். இதுக்கு மேல முடியல டி.. எல்லார்கிட்டயும் இதையே சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டன்.. சூர்யா கேட்டா நீயே சொல்லிடு என்று கூறி அவள் அருகில் அமர்ந்து கொண்டு போன் நோண்டினான்.

குழலிகிட்ட சொன்னியா?

அவ போன் எடுக்கல வீட்டுக்கு வந்ததும் சொல்லணும்..

எனக்கு உன் வாழ்க்கைய நினைச்சா பயமா இருக்கு விஷ்வா..

போனை அனைத்துவிட்டு அவள் முகம் பார்த்தான்..

ஏன்? என் வாழ்க்கைக்கு என்ன?

உனக்கும் குழலிக்கும் என்ன பிரச்சனைனு எங்களுக்கு தெரியாது.. ஆனா ஏதோ பிரச்சனைனு மட்டும் புரியுது. அவ முகமே சரியில்லை. எப்பவும் எதையோ யோசிச்சிட்டு இருக்கா. அவளை பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு.

நீ இந்த நிலமைல மயூரிய கூட்டிட்டு வந்துருக்க என்று விஷ்வாவின் வாழ்க்கையை நினைத்து வருந்தினாள்.

நான் நல்லது நினைச்சு தான் இந்த விஷயத்தை பண்றன் ரஞ்சி. என்மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை..

ஏதோ சின்ன நட்பாச அடுத்தவன் பிள்ளைய நல்லா பார்த்துகிட்டா என் பிள்ளை நல்லா இருக்கும்ன்னு.. உன் பிள்ளைக்கு என்ன டா? தேவதை மாறி வளருவா? பூரணி குட்டிக்கு நாம எல்லாம் இருக்கோம். நீ அவளை பத்தி திங்க் பண்ணாம அடுத்த குட்டிய ரிலீஸ் பண்ணு நாங்க பாத்துக்குறோம் என்றான்.

அதுக்குள்ளாம் வாய்ப்பே இல்ல டி.. என்று சொல்லும் போதே அவன்  முகத்தில் ஒரு விரக்தி சிரிப்பு.

ஏன்?

அவனிடம் மௌனம் மட்டுமே.. சொல்ல விருப்பம் இல்லனா வேண்டாம்.

அவளுக்கு பயம்.. எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தா நான் பூரணிய ஒதுக்கிடுவன்னு, அதனால நமக்கு இன்னொரு பேபி வேண்டாம்ன்னு சொல்லிட்டா..

இது என்ன டா முட்டாள் தனமா இருக்கு? குழலியா இப்படி? நீ அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணியா?

எவ்ளோ சொல்லிட்டன் நோ யூஸ்.. சரி விடு பார்த்துக்கலாம், இத பத்தி யார்கிட்டயும் பேசாத முக்கியமா குழலி கிட்ட..

ரஞ்சனியும் தலையை ஆட்டி கொண்டாள்.

இப்போது மூவரையும் பார்த்த குழலி எதுவும் பேசாமல் குழந்தையோடு மேலே சென்றுவிட்டாள். பெரிதாக அவள் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை.. இப்படி ஒரு சூழ்நிலை வரும் என முன்பே கற்பனை செய்து இருந்தாளோ என்னவோ..

பின்னோடு வந்த விஷ்வா.. மயூரியை அழைத்து வந்ததற்கான காரணத்தை கூற வர அதற்குள் அவள் செய்யும் செயலில் ஒன்றும் புரியாது நின்றான்..

குழலி அவள் உடைகளையும் குழந்தை உடைகளைகளையும் ஒரு பயண பையில் அடுக்கி கொண்டிருந்தாள்..

அவளிடம் சென்றவன் என்ன பண்ற குழலி? என்றான் அவளை பார்த்து கொண்டே. அவள் பதில் பேசவே இல்லை.

குழந்தையை கொஞ்சி கொண்டே தூக்கியவன் வெளியே செல்ல முயல, என் குழந்தைய எங்க கூட்டிட்டு போறீங்க என்றால்?

அவள் கேள்விக்கு பதில் கூறாமல் ஏதாவது பேசுன குழந்தை முன்னாடியே அரைஞ்சுடுவான் ஒழுங்கா வாய மூடிட்டு இரு வரன், என்று எச்சரித்தவன் குழந்தையை தூக்கி கொண்டு போய் ரஞ்சனியிடம் ஒப்படைத்தான் பார்த்து கொள்ளுமாறு கூறி.

மேலே வந்தவன், குழலியை முரட்டு தனமாக அவன் புறம் இழுத்து என்ன பிரச்சனை உனக்கு?

நானும் என் குழந்தையும் வீட்டை விட்டு போறோம்..

உன் குழந்தையா? அந்த வார்த்தையை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஆமா அவ என் குழந்தைதான பூரணி ஒன்னும் உங்க குழந்தை இல்லையே? உங்க குழந்தை தான் உங்க ஆருயிர் காதலி வைத்துல வளருதே என்றவளின் கன்னம் காந்தியது விஷ்வா விட்ட அறையில்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

88. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வலித்த கன்னத்தை பிடித்து கொண்டு விஷ்வாவை முறைத்து கொண்டிருந்தாள் குழலி. எதுக்கு இப்போ என்ன அடிச்சீங்க? உங்க உண்மை முகம் தெரிஞ்சிடுச்சுன்னு என்ன அடிச்சி உங்க தப்ப மறைக்க பாக்குறீங்களா?

குழலி வாய மூடு.. உனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு போல.. அதான் இப்படி கண்டதையும் பேசி என்கிட்ட அடிவாங்கிட்டு இருக்க..

மயூரிக்கு என்று அவன் ஆரம்பிக்க, வந்ததே கோவம் அவளுக்கு அருகில் இருந்த செராமிக் பூ சாடியை தூக்கி போட்டு உடைத்தால்.

ஹேய் என்னடி பண்ற? பைத்தியம்..

ஆமா நான் பைத்தியம் தான்.. உங்கள மனசார விரும்பனன்ல நான் பைத்தியம் தான் என்றவள் அவர்கள் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் தூக்கி போட்டு உடைத்தால்.

விஷ்வாவிற்கு கோவம் வந்தது.. ஏன் இவ இப்படி நடந்துக்குறான்னு யோசிக்க கூட முடியவில்லை.

விஷ்வா அவளை கட்டுப்படுத்த அருகில் செல்ல இன்னும் ஆக்ரோஷாமாக கத்தினால்.

ரஞ்சனியும் மகேஷ்வரியும் விஷ்வாவின் அறைக்கதவை தட்டினர். விஷ்வா குழலியை இழுத்து கொண்டு போய் குளியல் அறையில் தள்ளி லாக் செய்துவிட்டு, கதவை திறந்தான் என்ன டா சத்தம் என்று மகேஷ்வரி உள்ளே எட்டி பார்க்க முயல.

ஒன்னும் இல்லமா ப்ளீஸ் கீழ போங்க.. முடியாத உடம்பை வச்சிக்கிட்டு ஏன் மேல ஏறி வரீங்க என்றவன் ரஞ்சனியிடம் மேல யாரும் வராதீங்க என்று அனுப்பி வைத்தான்..

போகும் போது, விஷ்வாவிடம் நான் குழலி கிட்ட பேசவா? எனக்கு உன்ன நெனச்சா கஷ்ட்டமா இருக்கு டா..

நான் பாத்துக்குறன் நீ போ என்று அனுப்பினான்.

அவர்கள் சென்றதும் கதவடைத்து வந்தவன். குளியல் அறையில் அழுது கொண்டிருந்த அவளை இழுத்து வந்து மீண்டும் ஒரு அறைவிட்டான்.

என்னடி நெனச்சிட்டு இருக்க உன் இஷ்ட்ட ம**க்கு எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைச்சிட்டு இருக்க பைத்தியமா நீ? என்ன பிரச்சனைனே சொல்லாம இவ்ளோ நாள் என்ன சாவடிச்சிட்டு இருக்க.. உன்ன வச்சிக்கிட்டு முடியல டி என்னால. டார்ச்சர் பண்ற..

ஓஹ் நான் டார்ச்சர் பண்றனு தான் உங்க முன்னாள் காதலிக்கிட்டயே போய்ட்டீங்களா என்றால் அழுது கொண்டே.. அவளை இயலாமையோடு பார்த்தான்.

அவள் திமிருவதையும் பொருட்படுத்தாமல் அவளை இறுக அனைத்து கொண்டவன், ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளு ப்ளீஸ்.. அதுக்கு அப்பறம் பேசு என்றான்.

அவனை விட்டு பிரிந்து நின்றாள்..  இதுவரைக்கும் உங்க பேச்சை கேட்டு முட்டாள் ஆனது பத்தாதா?

அவன் எவ்வளவு முயன்றும் குழலி அவன் பேசுவதை கேட்பதாக இல்லை. அறையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். விஷ்வா மெத்தையில் அமர்ந்து கொண்டான். மௌனம் மட்டுமே அங்கே நீடித்தது.

மயூரி இங்க இருக்கறது பிடிக்கல அதான, சரி நான் கொண்டு போய் அவளை ஹாஸ்டல்லயே விட்டுட்டு வரன் என்று எழுந்து நின்றான்..

ஹய்யோ எனக்காக எதுக்கு நீங்க உங்க உறவை ரகசியமா வெளிய தொடரனும்? அதான் பகிரங்கமா வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டீங்களே.. உங்களுக்கு இனிமேலும் தொல்லை குடுக்க கூடாதுன்னு தான் நானும் என் பொண்ணும் கிளம்பறோம்ன்னு சொல்லிட்டோமே.

நீங்க தாராளமா அவளை இந்த ரூம்க்கே கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துங்க. ஆனா எங்கள விட்ருங்க நாங்க போயிடுறோம்.

எனக்கும் என் குழந்தைக்கும் உங்க நிழல் வேண்டாம்.

குழலி ரொம்ப வார்த்தைய விடுற டி, என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.

உங்களுக்கு நான் மாடர்ன்னா இல்ல, படுக்கைல உங்க விருப்பபடி நடந்துக்க மாற்றன், குழந்தையும் பெத்துதர மாட்டன்னு சொல்லிட்டன் இதல்லாம் தான நீங்க அவள தேடி போக காரணம்?? என்று கேட்டு அவன் முகம் பார்த்தாள்.

அவனுக்கு மனசே விட்டு போச்சி.. என்ன ரொம்ப அசிங்க படுத்துற டி என்றான் உடைந்த குரலில்..

குழலிக்கு அவன் நிலை புரியவில்லை. மீண்டும் பேசினால்.

இப்போதான் உங்க குழந்தை உங்களுக்கு கிடைக்க போகுதே அப்பறம் எதுக்கு என்னையும் பிடிச்சிட்டு இருக்கீங்க.. ஒரே நேரத்துல ரெண்டு பேர் வேணுமா உங்களுக்கு என்று கேட்டது தான் தாமதம்.. அவள் இரு கன்னங்களையும் மாறி மாறி அடித்து சிவக்க வைத்து கழுத்தை பிடித்து இறுக்கினான் இதுக்குமேல ஒரு வார்த்தை பேசாத டி கொன்னுடுவன், அவள் கழுத்தின் பிடி இறுக, கண்கள் மேலே சொறுகியது, ச்சீ என்று அவளை உதறி தள்ளினான். நிலை தடுமாறினால் குழலி ஆனால் விழவில்லை.. இரும்பல் கொஞ்சம் மட்டுபட, அவள் எடுத்து வைத்த பேகை எடுத்து கொண்டு வெளியே செல்ல முயன்றால்.

இந்த முறை விஷ்வா தடுக்கவில்லை. அவனும் அவள் பின்னால் சென்றான்.

இப்போது வீட்டில் அனைவரும் வந்து இருந்தனர்.

அவள் மாமா அருகில் சென்றால்.. அவள் சிவந்த முகத்தையும் கன்றி போன கன்னத்தையும் பார்த்து பின்னே வந்த விஷ்வாவை அடிக்க கை ஓங்கி கொண்டு போனார். ரஞ்சனியும் சூர்யாவும் தடுத்து விட்டனர்.

என்ன டா பண்ணி வச்சுருக்க? எப்படி நீ அவமேல கை வைக்கலாம்?? ஆம்பளன்ற திமிரா?

அப்பா அவ என்ன பேச்சு பேசுனா தெரியுமா?

என்ன வேணும்னாலும் பேசியிருக்கட்டும் அதுக்காக பொம்பள பிள்ளை மேல கை வைப்பியா?

உனக்கு குழலிய கல்யாணம் பண்ணி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டன்.. நான் கொஞ்சம் யோசிச்சு இருக்கணும்..

கொஞ்சம் அமைதியா இருங்க.. என்ன ஏதுன்னு விசாரிப்போம் எல்லார் முன்னாடியும் தோளுக்கு மேல வளந்த பிள்ளைய அடிக்க போறிங்களே என்று மகேஷ்வரி மகனுக்காக பேச..

உன் பையன் மட்டும் வீட்டுக்கு வாழ வந்த பொண்ண இப்படி போட்டு அடிக்கலாமா? எப்படி சைக்கோ மாதிரி நடந்துகிட்டு இருக்கான் பாரு..

அவனை சைக்கோ என்று சொன்னதில் விஷ்வாவிற்கு ஒருமாதிரியாகி போனது..

நான் சைக்கோவா என்று அவனையே கேட்டு கொண்டான். கலங்கிய விழிகளை மறைத்து கொண்டான்.. ஆனால் ரஞ்சனி கண்ணில் அவன் கலங்கும் விழிகள் பட்டு விட்டதே. அவனுக்கு ஆதரவாக நின்றாள்.

குழலி மேல் அவ்வளவு கோவம் வந்தது.

சுந்தரம் மட்டுமே குழலி பக்கம் நின்றார்.. மற்ற அனைவரும் விஷ்வாவிற்காக நின்றனர்.

மாமா என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம்.. நான் என் குழந்தையோட எங்க ஊருக்கு போறன். என்ன விட்ருங்க என்றால்.

குழலி அவசரப்படாத.. பொறுமையா இரு பேசலாம் என்றார் சுந்தரம்.

பேச எதுவும் இல்ல மாமா, எல்லாம் முடிஞ்சிடுச்சு. உங்க பையன் நான் வேண்டாம்ன்னு எப்போவோ முடிவெடுத்துட்டாரு. கட்டாயப்படுத்தி யாரையும் யார் கூடவும் வாழ வைக்க முடியாது. என்றால் கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டு.

இந்த குடும்பத்தோட வாரிசு மயூரி வயித்துல வளருது. இனிமேல் அவ தான் உங்க மருமக. அவளுக்கு சரியான அங்கீகாரத்தை குடுங்க என்றால்.

மயூரிக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது, தள்ளாடியவளை ரஞ்சனி தான் பிடித்து சோஃபாவில் அமர வைத்தால்.

குழலியின் இந்த பதிலை சுந்தரம் முதற்கொண்டு அங்கிருக்கும் யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் சூர்யா ரஞ்சனி இருவருக்கும் கேட்கவே வேண்டாம் அவள் அபாண்டமாக விஷ்வா மேல் சுமத்திய பழியை ஏற்று கொள்ளவே முடியவில்லை..

இதுவரை விஷ்வா மயூரியை வீட்டுக்கு அழைத்து வந்ததால் மட்டுமே குழலி பிரச்சனை பண்ணுகிறாள் என நினைத்த குடும்பத்தினர்.. இப்போது அவள் விஷ்வா மீது சுமத்திய பழியில் தான் அவளின் தவறான புரிதலை கண்டு கொண்டனர்.

அதுவும் ரஞ்சனி வீஞ்சி கொண்டு வந்தாள்.. ஹேய் லூசா டி நீ? மூளைய கழட்டி வச்சிட்டு சுத்தரயா?

சுந்தரம் குழலியிடம் விளக்கினார்.. குழலிமா நான் சொல்றத கேளு என்று மயூரி வருண் காதல், அவன் வெளிநாட்டில் மாட்டி கொண்டது, மயூரி பிரசவத்தில் இருக்கும் சிக்கல் என அனைத்தையும் கூறினார். மயூரியும் கஷ்ட்டப்பட்டு எழுந்து வந்து சுந்தரம் கூறியதை விளக்கமாக கூறினால். குழலி அவளை கண்டு கொள்ளவே இல்லை.

மாமா விஷ்வா ஏன் இப்படி ஒரு காரணத்தை சொல்லி மயூரிய இங்க கூட்டிட்டு வந்தாருன்னு தெரில.. ஆனா உங்க பையன் மனசுல இவ தான் இருக்கா. இது உங்க பையன் குழந்தை தான் என்றால்.

விஷ்வா குழலியை வெறுத்தே விட்டான்.. இதுவரை நம்பினான் உண்மை தெரியாமல் பேசுகிறாள் உண்மை தெரிந்தால் தன்னை நம்புவாள் என்று நினைத்தான்.. ஆனால் சம்மந்தபட்டவளே உண்மையை எடுத்து கூறியும் அவள் நம்ப தயாராக இல்லாத போது அவள் மீது அவன் கொண்ட காதல் சுக்கள் நூறாகி போனது.

ரஞ்சனி அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல், குழலி உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்காத.. ரொம்ப அவசரப்படுற பொறுமையா இரு ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்.

சூர்யாவும் பேசினான் என் அண்ணா உன்ன ரொம்ப லவ் பண்றான் குழலி அவன எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தாத என்றான்.

எத வச்சு நீ இப்படி பேசுற? இந்த பொண்ண இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தத வச்சும் அவ வயித்துல குழந்தை உள்ள குழந்தைய வச்சும் என் பையன் மேல பழி போடுறியா என்றார் மகேஷ்வரி.

அவள் அமைதியாக இருக்க..

அத்தை கேக்குறாங்கள வாய திறந்து பதில் சொல்லு டி என்றால் ரஞ்சனி..

அதற்கு மேல் பொறுக்க முடியாதவள் மேலே அவர்கள் அறைக்கு ஓடி சென்றவள் கையோடு கொண்டு வந்தாள் விஷ்வா கையெழுத்திட்ட விவாகரத்து பத்திரத்தை.

இந்தாங்க இது உங்க பையன் எனக்காக வாங்கி வச்சுருக்க விவாகரத்து பத்திரம்.. என்று மகேஷ்வரியிடம் நீட்டினால். ரஞ்சனியும் அதை வாங்கி படித்தால்.

சுந்தரம் மகனை பார்த்தார்.. அவன் வாழ்க்கையை அவனே சிக்கலாக்கி வைத்து கொண்டது போல் தோன்றியது.

விஷ்வா பதில் சொல்லு.. ஏதோ மிஸ்அண்டர்ஸ்டண்டிங் தான இது? சுந்தரம் கேட்க..

சொன்னா மட்டும் அவ நம்பிட போறால? இனிமேல் அவ நம்பிக்கை எனக்கு வேண்டாம். உங்களுக்கு என்ன விட உங்க மருமக தான முக்கியம் அவ பேச்சை கேட்டு ஆடுங்க என்றான்.

அங்கிள் அது.. அது.. குழலிய கல்யாணம் பண்ண புதுசுல ரெடி பண்ண டிவோர்ஸ் பேப்பர்ஸ், அத கூட விஷ்வா பண்ணல நான் தான் பண்ணன்.. ஆரம்பத்துல விஷ்வாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. அத எனக்கு சாதகமா யூஸ் பண்ணிகிட்டு நான் தான் என் கண் முன்னாடியே விஷ்வாவ சைன் பண்ண வச்சன் என்று உண்மையை குற்ற உணர்வோடு கூறினாள்.

மயூரி இந்த நிலையில் இருக்கும் போது யாராலும் அவளை கடிந்து கொள்ள கூட முடியவில்லை.

இப்போ உன் சந்தேகத்துக்கு விளக்கம் கிடைச்சுதா, என்றால் ரஞ்சனி.

அப்போதும் அவள் முகம் கனியவில்லை.

ரஞ்சனி போதும் இதுக்கு மேல யாரும் எதுவும் பேசவேண்டாம்.

சொடக்கிட்டு அவளை தன் முகம் பார்க்க வைத்தவன்.. நீ என்கூட வாழ்ந்து கிழிச்சது எல்லாம் போதும் என்றவன் ரஞ்சனி கையில் உள்ள டிவோர்ஸ் பேப்பரை வாங்கி அவளிடம் நீட்டி சைன் பண்ணு என்றான்.

குழலி அவனையே பார்த்து கொண்டிருக்க.. சைன் பண்ணுடி என்று பற்களை கடித்தான்..

விஷ்வா அவசரப்படாத என்று அனைவரும் கூறினர்.. யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை அவன். இது என் வாழ்க்கை என்ற ஒற்றை வாக்கியத்தில் அனைவரின் வாயையும் மூட வைத்தான்.

குழலியும் அவளிடம் இருந்த டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்தாள்.

ஒருமுறை அந்த பேப்பரை வாங்கி சரி பார்த்து கொண்டவன். உங்க நண்பனோட பொண்ண டிவோர்ஸ் கிடைக்குற வரைக்கும் இங்கயே இருக்க சொல்லுங்க. கோர்ட்ல ஹியரிங் கால் வரும் போது போகணும். மூணு மாசத்துல டிவோர்ஸ் கிடைச்சுடும் அப்போ மொத்தமா இங்க இருந்து போகட்டும் என்றவன், அங்கிருந்த யார் பேச்சையும் கேட்காமல் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

தப்பு பண்ணிட்ட குழலி என்றார் சுந்தரம்.

மாமா..

அவன் மனசுல நீ மட்டும் தான் இருக்க. ஏதோ ஒரு தவறான புரிதல்ல உன் வாழ்க்கையே அழிச்சுகிட்ட. அவன் பிடிவாதத்தை பத்தி உனக்கு தெரியாது என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

குழலி அங்கவே நிற்க, ரஞ்சனி அவள் அறைக்கு சென்று உறங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி வந்து அவள் கையில் கொடுத்தாள்..

குழலி ஏதோ ஒரு நியாபகத்தில் மாடியில் உள்ள அவர்கள் அறைக்கு செல்ல முயல..

எங்க போற குழலி?

மேல என்று அவர்கள் அறையை பார்த்தாள்..

அவன் வேண்டாம்ன்னு டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டல அப்பறம் எதுக்கு அவன் ரூம்க்கு போற என்றவள்..

அந்த கூடத்தில் உள்ள இன்னொரு அறையை அவள் தங்குவதற்க்கு கொடுத்தாள்.

நெஞ்சிக்குள் ஏதோ ஒரு வலி கண்டாள் குழலி.

இங்கயே தங்கிக்கோ.. விஷ்வாக்கு இப்போ தனிமை தேவை அவன் முன்னாடி போய் நிக்காத என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டால்.

குழலி மட்டும் தனியாக நின்றிருந்தால்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

89. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வீட்டில் குழலிக்கும் விஷ்வாவிற்கும் பிரச்சனைகள் முடிந்து ஒருவாரம் ஆகியிருந்தது.

குழலி அவள் அறையில் அகதியை போல் இருந்தாள். அவளிடம் யாரும் பேசுவது இல்லை. சுந்தரம் வேலைக்கார பெண் சரசு மட்டுமே பேசுகிறார்கள்.

மற்ற நேரங்களில் எல்லாம் குழந்தையோடு நேரத்தை செலவழித்து அவள் மனதை திசை திருப்ப முயற்ச்சிக்கிறாள்.

அன்று பிரச்சனையின் போது விஷ்வா முகத்தை பார்த்தது. அதன் பின் அவன் முகத்தை பார்ப்பதே இல்லை. அந்த பிரச்சனை நடந்த மறுநாள் இரவு குழலியை அனைவருடனும் சாப்பிட அழைத்து வந்தார் சுந்தரம். போனை நோண்டி கொண்டிருந்த விஷ்வா அவள் அரவம் கேட்டதும் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டான்.

விஷ்வா சென்றதும் ரஞ்சனி மற்றும் சூர்யா மூன்று பேருக்கான உணவை  தட்டில் எடுத்து கொண்டு விஷ்வா அறைக்குள் நுழைந்தனர்.

நீங்க எதுக்கு இங்க வந்திங்க? என்று முறைத்தவனை கண்டு கொள்ளாமல் சூர்யாவும் ரஞ்சனியும் அவன் இருபக்கமும் அமர்ந்து கொண்டு அவனை சாப்பிட வைத்தனர்.

நீங்க அவகூட எப்பவும் போல பேசுங்க.. எனக்காக அவள ஒதுக்கி வைக்க வேண்டாம் என்றான்.

எனக்கு நீ தான் முக்கியம் விஷ்வா. உனக்கு அப்பறம் தான் அவ. இதுவரைக்கும் உன்னோட பாதியா தான் அவள பார்த்தன்.. அவ எப்போ உன்ன தூக்கி எறிஞ்சாளோ அப்போவே அவ எங்களுக்கு வேண்டாம் என்றால் ரஞ்சி.

உனக்கு இந்த சீரியஸ் டயலாக் எல்லாம் செட் ஆகல ரஞ்சி எப்பவும் லூசு மாதிரி எதாச்சும் பேசுவியே அப்படியே பேசு என்றான் விஷ்வா.

அவனை முறைத்தவள் திமிரு டா உனக்கு, என்று அவன் புஜத்தில் கிள்ளி விட்டு அவனுக்கு ஒரு வாய் சாப்பாட்டையும் ஊட்டிவிட்டால்.

நீ என்ன முடிவு பண்ணியிருக்க என்றான் சூர்யா..

புதுசா சொல்றதுக்கு எதுவும் இல்ல டிவோர்ஸ் தான்.

கொஞ்சம் நாள் வெயிட் பண்ணு விஷ்வா அவசரப்படாத. கோவத்துல எடுக்குற முடிவு எப்பவும் சரிவராது.

விஷ்வா அமைதியாக இருக்க.. இன்னொரு வாய் சாப்பாட்டையும் ஊட்டிவிட்டால் ரஞ்சி. அவளை முறைத்து கொண்டே சாப்பாட்டை மென்று விழுங்கினான் விஷ்வா.

குழலிக்கு உன்மேல ஓவர் லவ்.. அதான் சின்ன விஷயத்தை ரொம்ப பெருசு பண்ணி சண்டை போட்டுட்டா..

எந்த உறவா இருந்தாலும் நம்பிக்கை ரொம்ப முக்கியம் அது இல்லனா அந்த உறவு என்னைக்காவது ஒரு நாள் அது நம்மள விட்டு போய்டும். இப்போ அந்த ஸ்டேஜ்ல வந்து நிக்குது எங்க உறவு.

வருத்தம் இல்லன்னு பொய் சொல்ல மாட்டன், அவள விட்டு பிரியறது எனக்கு கஷ்ட்டமான விஷயம் தான்.. போக போக சரியாகிடும் என்றான்.

சூர்யா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? அவளுக்காக இவன் எவ்ளோ இறங்கி போய்யிருக்கான் தெரியுமா.. அவனே இப்போ வெறுத்து போய் பேசுறான்னா விஷ்வா அந்த அளவுக்கு உடைஞ்சு போய் இருக்கான்.

கிட்டன் அவங்கள சேர்த்து வைக்க முயற்சி பண்ணு அப்படியில்லனா வாய மூடிட்டு அமைதியா இரு. அதை விட்டுட்டு அவன ஏத்தி விடாத என்று மனைவியை கண்டித்தான் சூர்யா.

உனக்கு தெரியாது சூர்யா.. அந்த குழலி நம்ம விஷ்வாக்கு குழந்தை பெத்து தரமாட்டன்னு சொல்லியிருக்கா..

ரஞ்சி என்று அதட்டினான் விஷ்வா.

சாரி டா ஒரு வேகத்துல சொல்லிட்டன். அன்னைக்கு நான் அப்செட்டா இருந்தன் அதான் உங்கிட்ட சொன்னன்.. அதுக்காக நீ இந்த விஷயத்தை பகிரங்க படுத்தணும்னு அவசியம் இல்லை என்று மூஞ்சியை காட்டி விட, ரஞ்சி அழுது விட்டால்.

அவள் அழுவதை கண்டவன், சாரி டி ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு அதான் அப்போ அப்போ கோவப்பட்டுட்ரன்..

என்ன பிரச்சனை சொல்லி தொலைங்க, எத மறைக்குறிங்க ரெண்டு பேரும் என்றான் சூர்யா.

விஷ்வா குழந்தை விஷயத்தில் குழலியின் முடிவை பற்றி கூறினான். அதான் அன்னைக்கு அம்மாகிட்ட அப்படி பேசுனியா என்றான்.

ஹ்ம்ம்..

ரஞ்சி இது அவங்க பர்சனல் விடு, இனிமேல் இத பத்தி பேசவேண்டாம் என்று அவன் கிட்டனை சமாதானம் செய்தான்.

அப்போதும் அவள் முகம் தெளியவில்லை. சூர்யா கோவம் வந்தாள் வார்த்தையை விட்டு திட்டி விடுவான், ஆனால் விஷ்வா எப்போதும் ரஞ்சியை திட்ட மாட்டான் கோவம் வந்தாள் கூட முடிந்த அளவு பொறுமையாக அவள் தப்பை உணர்த்துவான். அப்படியே திட்டினாலும் அதில் அக்கறையும் கிண்டலும் தான் அதிகமாக இருக்கும். இன்று அவன் சுல்லேன்று எரிந்து விழ ரஞ்சனிக்கு அழுகை வந்துவிட்டது.

சரி அழாத கொஞ்சம் மூட் ஸ்விங்..

உனக்கு என்ன டா மூட் ஸ்விங்?

பசங்களுக்கும் மூட் ஸ்விங் வரும் டி..

ரஞ்சினி உதட்டை சுழித்து கொள்ள..

ஹேய் நானே இப்போ சூப் பாய்யா சுத்திட்டு இருக்கன் டி.. நீங்க தான் என்ன சமாதானம் பண்ணனும் அத விட்டுட்டு என்ன உன்ன சமாதானம் பண்ண வைக்குற..

எங்கயாச்சும் வெகேஷன் போலாமா? இப்போ ஐடியா இல்ல ரஞ்சி.

முதல்ல வருண் ப்ரோப்லம சரி பண்ணனும்.

ஆமா டா அவ ப்ரோப்லம முடிச்சி அனுப்பு அப்ப தான் உன் லைப் நல்லா இருக்கும். மகராசி எப்போ வந்தாலோ அப்போ ஆரமுச்சுது வீட்ல சண்டை என்று ரஞ்சனி சலித்து கொள்ள..

நான் அவள பாரமா நினைச்சி வருண வெளிய கொண்டு வரணும்னு நினைக்குல. அவ வயித்துல ஒரு குழந்தை இருக்கு. மயூரி எப்பவும் அழுதுட்டு இருந்தா அவ வயித்துல உள்ள குழந்தைக்கு நல்லது இல்ல. டாக்டர் அவ bp ரெய்ஸ்சானா அவ ப்ரெக்னன்சி ரொம்ப கஷ்ட்டமா ஆகிடும்ன்னு சொல்லியிருக்காங்க.

ரஞ்சி உனக்கு மயூரிய பிடிக்கலனா கூட, அவ இங்க இருக்க வரைக்கும் அவள கொஞ்சம் கேர் பண்ணிக்கோ அவ வயித்துல இருக்க பாப்பாகாக என்றான். சரசு அக்காகிட்டயும் சொல்லி பார்த்துக்க சொல்லு.

வருண் வந்ததும் அவள நல்லபடியா அவன்கிட்ட ஒப்படைக்கணும் என்றான்.

சரி நான் பார்த்துக்குறன்..

சாரி டி, திட்னதுக்கு.

உன் சாரி அக்ஸப்ட் பண்ணனும்னா ஐஸ்கிரீம் வாங்கி தா..

விஷ்வா வேண்டாம் டா, இவளுக்கு இப்போதான் கோல்ட் சரியாகி இருக்கு.. நைட்ல ஐஸ்கிரீம் சாப்பிட்டா தலை வலி வந்துடும் என்று விஷ்வாவின் ஐஸ்கிரீம் வாங்கி தரும் முடிவை மாற்றிவிட்டான் சூர்யா.

பின் மூவரும் கொஞ்சம் நேரம் அரட்டை அடித்துவிட்டு, சூர்யா ரஞ்சி அவர்கள் அறைக்கு சென்றனர்.

நாட்கள் இவ்வாரே சென்றது.. அன்று ஒரு நாள் மயூரி விஷ்வாவிடம் என்னால தான் இவ்ளோ பிரச்சனையும் நான் இங்க இருந்து போய்டுறன் விஷ்வா என்று கூறினாள்.

நான் உனக்காக இங்க கூட்டிட்டு வரல மயூரி. எந்த தப்பும் செய்யாத உன் குழந்தைக்காக தான் உன்ன எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தன். எதையும் பெருசா திங்க் பண்ணாத. மனச அமைதியா வச்சிக்கோ என்றவன். அவளிடம் சாப்டியா என்றான்..

இப்போ தான் பால் குடிச்சன்.. இனிமேல் தான் சாப்பிடணும் விஷ்வா.

வா வந்து சாப்பிடு என்று அவளையும் அன்று காலை அவனோடு அமர வைத்து சாப்பிட வைத்தான். ரஞ்சனி தான் பரிமாறினால். சூர்யாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

அப்போது குழந்தையோடு வெளியே வந்த குழலிக்கு அவர்கள் நால்வரையும் பார்க்கும் போது அழுகையாக வந்தது. பின் கலங்கிய விழிகளை துடைத்து கொண்டு கிட்சன் சென்றால், அங்கு குழந்தைக்கு தேவையான உணவை எடுத்து கொண்டு தோட்டத்தில் வேடிக்கை காட்டி ஊட்டிவிட்டால்.

எனக்கும் விஷ்வாக்கும் தான சண்டை.. ரஞ்சியும் சூர்யாவும் ஏன் என்கூட பேச மாற்றாங்க என்று மனம் வெம்பினால்.

அன்று மாலை ரஞ்சனி தனியாக இருக்கும் போது கேட்டும் விட்டால்.. ஏன் ரஞ்சி என்கூட பேச மாற்ற? என்கூட பழைய மாதிரி பேசு என்றால்.

விஷ்வாவ கல்யாணம் பண்ணிட்டு வந்ததுனால தான் எனக்கு உன்ன தெரியும் குழலி. அவன் இல்லனா நான் உன்ன சந்திச்சு கூட இருக்க மாட்டன்.

என் ஃப்ரன்ட் மேல பழி போட்டு அவன வேண்டாம்ன்னு சொன்ன உன் உறவும் எனக்கு வேண்டாம் என்றால் ரஞ்சனி.

முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் டிவோர்ஸ் வாங்கிட்டு போய்டு.. நாங்க விஷ்வாக்கு ஏத்த பொண்ணா.. அவன புரிஞ்சிகிட்ட பொண்ணா, அவனுக்காக எது வேணும்னாலும் செய்ற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறோம் என்றால் குழலியை வெறுப்பேற்றும் நோக்கத்தோடு.

குழலிக்கு ரஞ்சனி பேசுவது நெஞ்சில் நெருப்பை அள்ளி விசுவது போல் இருந்தது. என்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்துற ரஞ்சி.

நீ விஷ்வா கஷ்ட்டப்படுத்தினத விட கம்மி தான்.
அழுது கொண்டே அறைக்குள் சென்று விட்டால்.

குழலியை ஒதுக்கி வைத்தார்களே அன்றி பூரணி பாப்பாவை அந்த வீட்டில் யாரும் ஒதுக்கவில்லை. அவள் எப்போதும் போல் குட்டி இளவரசியாகவே அந்த வீட்டில் வளம் வந்தால்.

விஷ்வா கூட ரஞ்சனி அல்லது சூர்யாவிடம் கூறி பூரணி பாப்பாவை அவன் அறைக்கு வரவைத்து கொஞ்சி கொள்வதை வழக்கமாக வைத்து கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில் விஷ்வா ஃபிரான்ஸ் சென்று இருந்தான். குழலிக்கு மட்டும் அது தெரியாமல் போனது..

ஆரம்பத்தில் வீம்பாக இருந்த குழலியால் நாட்கள் செல்ல செல்ல அப்படியிருக்க முடியவில்லை. அவனிடம் பேசவில்லை என்றாலும் எங்கிருந்தாலும் அவனை தேடி யாருக்கும் தெரியாமல் கண்களில் நிரப்பி கொள்பவளால் கடந்த நான்கு நாட்களாக அதுவும் முடியாமல். போனது.

எப்போதும் அறைக்குள் இருப்பவள் அன்று நாள் முழுவதும் கூடத்திலே இருந்தாள் விஷ்வாவை பார்க்க, ஆனால் கடைசி வரைக்கும் அவளுக்கு விஷ்வா தரிசனம் கிடைக்கவே இல்லை.

அலுவலகம் சென்றவளால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதற்கு மேல் முடியாதவள் அவள் மாமாவை தேடி சென்றால்.

அறைகக்தவை தட்டி விட்டு உள்ளே செல்ல, வாமா உக்காரு என்று இருக்கையை காட்டினார். தாத்தாவின் அறையில் பூரணி ஓடி ஓடி விளையாடி கலைத்து, இப்போது அங்குள்ள குட்டி சாரில் அமர்ந்து புத்தகத்தில் க்ரயான்ஸ் வைத்து கிறுக்கி கொண்டு இருக்கிறாள்.

குழந்தை பார்த்து கொண்டிருந்தவள் பின் சுந்தரமிடம், மாமா.. அது.. அவரு, அவர நேத்து ஃபுல்லா வீட்ல காணுமே எங்க போய்ட்டாரு என்றால் திக்கி திணறி.

யார கேக்குற குழலி? தெரிந்து கொண்டே தான் கேட்டார்..

விஷ்வாவ தான் மாமா என்றால் மென்று முழுங்கி..

நீ எதுக்கு மா அவன பத்தி கேக்குற? அவன் எப்படி போனா உனக்கு என்ன?

அவள் மாமாவிடம் இருந்து இப்படி ஒரு எதிர் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்..

மாமா.. நான் அவர பத்தி தெரிஞ்சிக்க கூடாதா?

உனக்கும் அவனுக்கும் டிவோர்ஸ் ஆக போதுமா.. ரஞ்சனி அவனுக்கு தீவிரமா பொண்ணு பார்த்துட்டு இருக்கா.. இந்த நேரத்துல நீ இப்படி கேட்டா நான் எப்படி எடுத்துக்குறது.

அவள் அழுது கொண்டு இருக்க..

சரி சொல்லு விஷ்வா மேல இப்போ நம்பிக்கை வந்துடுச்சா? எனக்கு அத பத்திலாம் தெரியல மாமா.. ஆனா எனக்கு அவர பார்க்கணும் போல இருக்கு என்றால் மூக்கை உறிஞ்சு கொண்டு.

அவன் ஃபிரான்ஸ் போய் நாலு நாள் ஆகுது குழலி எப்போ வேலை முடிஞ்சு வருவான்னு தெரியாது.

என்கிட்டயும் இப்போல்லாம் அவன் சரியா பேசுறது இல்ல. அவனோட பேச்சு எல்லாம் சூர்யா ரஞ்சனியோட முடிஞ்சு போயிடுது..

எல்லாம் என்னால தான் மாமா.. என்று தேம்பி தேம்பி அழுதாள்.

 

 

 

 

 

 

 

 

90. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ஃபிரான்சில் உள்ள தலைமை நிறுவனத்திற்கு சென்ற விஷ்வா, அவர்கள் உதவி மூலம் சிறையில் இருந்த வருணை சந்தித்தான். அவனிடம் கேட்க வேண்டிய அனைத்து சந்தேகங்களையும் கேட்டு கொண்டான்.

துரிதமாக செயல்பட்டாலும் அங்குள்ளவர்கள் அவனுக்கு ஒத்துழைக்க வேண்டுமே.. டெட் ஸ்லோவாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

இருந்தும் விஷ்வா, அங்கு நல்ல நட்புறவை வளர்த்து கொண்டு, தன் பேச்சு திறமையால் அவனுக்கு வேண்டிய தகவல்களை பெற்று கொண்டான்.

முதலில் வருணின் மடிக்கணினியை வாங்கியவன் அவனது ஹக்கிங் மூலம், சில தகவல்களை பெற்றான்

வருணின் மடிக்கணினியில் இருந்த இன்னொரு லாகின் ஹிஸ்டரி அனைத்தும் டெலீட் செய்யப்பட்டிருக்க.. விஷ்வா கம்பெனி சர்வர் ரூம் செல்லும் அனுமதி பெற்று வருணின் மடிக்கணினியினுள் நுழைந்த இன்னொரு லாகின் id யை குறித்து கொண்டான். டேட்டா திருடப்பட்ட நேரத்தையும் குறித்து கொண்டான். அந்த நேரம் வருண் எங்கிருந்தான் என்பதை சிசிடிவி மூலம் காண, அப்போது அவன் அவனோடு இடத்தில் தான் இருந்தான். அந்த  சிசிடிவி காட்சிகளை அவன் போனிற்கு மாற்றி மடிக்கணினியில் ஓட விட்டான்.

மக்கில் உள்ள மின்ட் டீயை மிடரு விழுங்கி கொண்டே, திரையில் ஓடிய காட்சிகளை கவனமாக பார்த்தான்.

அப்போது அவன் ஸ்டிக் நோட்டில் குறித்து கொண்ட நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பு, வருண் பக்கத்தில் உள்ள ஒரு பெண் அவனிடம் பேச்சு கொடுக்கிறாள்.

வருண் அந்த பெண்ணை தவிர்த்து விட்டு வேலை செய்ய முனையும் போதும், அவள் தொடர்ந்து பேச்சு கொடுக்கிறாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் வருணின் மடிக்கணினியில் இருந்து டேட்டாகள் இன்னொரு ip அட்ரசிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கண்டு கொண்டான் விஷ்வா.

அங்குள்ள HR டிபார்ட்மென்டடை அணுகியவன், அவனிடம் உள்ள ஆதாரங்களை காண்பித்து அவன் சந்தேகம்  கொள்ளும் அந்த பெண்ணை பற்றியும் கூறினான்.

அவள் பெயர் ஜூலி அவளை கூப்பிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

நடந்தது இது தான்.. இவர்களின் போட்டி கம்பெனி அவர்களுக்கு தேவையான ரகசியங்களை அந்த பெண்ணின் மூலம் எடுத்து தருமாறு அணுகி உள்ளனர். மாட்டினால் வேலை போய்விடுமோ என்று பயந்த அந்த பெண், இந்தியாவில் இருந்து ஒருவன் புதிதாக வேலைக்கு வந்துள்ளான். அவனும் நீங்க சொன்ன செயல் திட்டத்தில் தான் வேலை செய்கிறான். நான் அவனின் கவனத்தை திசை திருப்பும் போது நீங்கள் அவனின் மடிக்கணினியில் இருந்து தேவையான தகவல்களை எடுத்து கொள்ளுங்கள் என சாதுர்யமாக வருணை சிக்க வைத்து அவளுக்கு தேவையான பணத்தை பேரம் பேசி வாங்கி உள்ளாள்.

முதலில் தவறை ஒப்பு கொள்ள மறுத்தவள், விஷ்வா அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி அவள் கண் முன்னே அவள் போனில் அழித்த தகவல்களை திரும்ப பெற்றான்.. அதில் ஜூலி அவர்களின் போட்டி கம்பெனியுடன் தொடர்பு வைத்துள்ளதை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருந்தான்.

அங்குள்ளவர்கள் அவனின்  திறமையை கண்டு வியந்து தான் போயினர்.. வந்த அரைநாளில் அமர்ந்த இடத்தில் இருந்து அனைத்தையும் கண்டுபிடித்த அவனின் திறமைக்கு ரசிகர்கள் ஆகிபோயினர்.

அதிலும் அவனின் கம்பிரமான  தோற்றமும், டஸ்கி நிறமும், முறுக்கு மீசையும் அவனை அத்தனை வசிகரமாக காட்டியது.

அதன்பின் வருணை உடனடியாக சிறையில் இருந்து விடுவித்து, அந்த பெண்ணின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஃபிஸியலாக பிரச்சனையின் ஆதி முதல் அந்தம் வரை விவரித்து ஒரு மெயில் போட்டான். அதில் முக்கியமான ஆட்கள் அனைவருக்கும் cc வைத்து, பாதிக்கப்பட்ட வருணிற்கு, இத்தனை நாட்கள் தவறு செய்யாமல் சிறையில் இருந்ததாலும், அவரின் மன உளைச்சளுக்காகவும், அவரின் கண்ணிய இழபிற்காகவும் சரியான நஷ்ட்ட ஈடு தர வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தான்.

விஷ்வா அஃபிஸியலாக மெயில் அனுப்பிய பின், அவன் கோரிக்கையை நிராகரிக்க முடியாதே. அவன் கேட்ட விஷயங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

வருண் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டான்.

வெளியே வந்த வருண் அவன் வெளியே வர காரணமான விஷ்வாவை கட்டி கொண்டு நன்றி கூறினான்.

இது என் கடமை வருண், என்பதோடு முடித்து கொண்டான் விஷ்வா.

பின் வந்த வேலை சுபமாக முடிந்ததில், விஷ்வா வருண் அனைவரிடமும் சொல்லி கொண்டு மறுநாள் அங்கிருந்து புறப்பட்டனர்.

விஷ்வா இல்லம்..

சென்னை வந்து இறங்கியதும், மயூரியை பற்றி கூறினான். அவள் தன்னிடம் உதவி கேட்டது அவளின் ப்ரெக்னன்சி காம்ப்ளிகேஷன் இப்போது அவள் தன் வீட்டில் இருப்பது என அனைத்தையும் கூற, வருண் உடனே மயூரியை பார்க்க வேண்டும் என துடித்தவன் விஷ்வா வீட்டிற்கு வந்து இருந்தான்.

விஷ்வா வீட்டில் காலை நேரம் என்பதால் அனைவரும் இருந்தனர்.

விஷ்வாவோடு வருணும் சேர்ந்து உள்ளே வர, சாப்பிட்டு கொண்டிருந்த மயூரி அவளை நோக்கி வந்து கொண்டிருந்த வருணை கண்டு, காண்பது கனவா நினைவா என தெரியாமல் விழித்தால். அவளின் கண்ணில் கோர்த்து கொண்ட நீர் வருணின் உருவத்தை மங்களாக காட்ட.. கண்ணை அழுந்த துடைத்து கொண்டவள் வரு என அழைத்து கொண்டே அவள் இருக்கும் நிலை மறந்து ஓடினால்.

அனைவரும் அந்த காட்சியை கண்டனர். குழலி உட்பட.. அவளுக்கு உண்மை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ரஞ்சனியிடம் பேசி கொண்டிருந்த விஷ்வாவை கண்டாள் அவன் தலை முடி கூட அவள் புறம் திரும்பவில்லை.

பூரணி பாப்பா மட்டும் பாஹ் ப்பாஹ் என்று உற்சாக குரல் எழுப்பி விஷ்வாவை அழத்தால். குழலி அவளை கீழே இறக்கி விட, குடு குடுவென ஓடி சென்று விஷ்வாவின் கால்களை கட்டி கொண்டாள். அவளை கைகளில் அள்ளி கொண்டவன் அப்பா குளிச்சிட்டு வரன் தங்கம் என்று கொஞ்சல் மொழியில் கூறி ரஞ்சனியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு மேலே சென்றான்.

குழலி தேம்பி தேம்பி அழுதாள்.. விஷ்வா அவளை கண்டு கொள்ளாமல் சென்றது அவ்வளவு வலித்தது அவளுக்கு.

வருணை கட்டியணைத்து கொண்டிருந்த மயூரி கூட, குழலியின் அழுகையில் விலகி நின்று அவளிடம் பேச சென்றால்..

குழலி, எனக்கு உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றால்..

குழலி அமைதியாக நிற்க, மயூரி அவளை அவர்கள் அறைக்கு அழைத்து சென்று பேசினால்.. இந்த குழந்தை என் வருவோடது குழலி.. நீ என்ன நம்பலனாலும் பரவால்ல விஷ்வாவ நம்பு.. இதுவரைக்கும் விஷ்வா எந்த ஒரு கெட்ட எண்ணத்தளையும் என்ன தொட்டது இல்ல. நான் தான் அவன் கூட இருக்கும் போது போர்ஸ் பண்ணி என்ன கிஸ் பண்ண வச்சிருக்கன். பின் உணர்ச்சி இல்லாமல் சிரித்தவள் அத கிஸ்ன்னு கூட சொல்ல முடியாது. நான் அவனோட பணம், அழகு அவன் ஆண்மைக்காக தான் அவன் கூட இருந்தன். ஆபீஸ்ல விஷ்வாவோட ஆளுன்னு சொல்லும் போதே எனக்கு அவ்ளோ பெருமையா இருக்கும். அவன அடைய நினைச்சது எல்லாம் உண்மை தான்.

எல்லாம் எனக்காக ஒரு உண்மையான லவ் கிடைக்குற வரைக்கும் தான்.. என் மனசுல கெட்ட எண்ணங்கள் இருந்துச்சு எப்போ நான் என் வருவ சந்திச்சனோ அப்போவே அவர் காதல் என்ன கொஞ்சம் கொஞ்சமா மாத்திடுச்சு குழலி.

விஷ்வா சொல்லியிருக்கான் நானும் அவனும் லிவிங்ல இருந்ததா உன்கிட்ட பொய் சொல்லியிருக்கன்னு.. அது பொய் தான் குழலி. அவனுக்கு ஆரம்பத்துல உன்கூட பொருந்த முடியல, என்ன ஏமாத்திட்டதா வேற ஒரு குற்ற உணர்ச்சில இருந்தான்.. அத நான் எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டு தான் உடனே உங்க ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஏற்பாடு பண்ணன். என் கண் முன்னாடியே விஷ்வாவ அதல கையெழுத்தும் போட வச்சன்.

மயூரி சொல்வதை கேட்டு அழுது கொண்டிருந்தாளே தவிற ஒரு வார்த்தை பேசவில்லை குழலி

நான் விஷ்வா கூட மட்டும் பழகல,  திலீப்னு ஒருத்தன் கூடவும் பழகுனன்.. நான் செஞ்சத எல்லாம் நினைச்சு பார்த்தா எனக்கே என்ன நினைச்சு அசிங்கமா இருக்கு குழலி. பழசை பத்தி இதுக்கு மேல பேச விரும்பல குழலி. நான் பேசுறத என் குழந்தையும் கேட்கும்.. என் குழந்தைக்கு நான் நல்ல அம்மாவா இருக்க விரும்பறன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்குறன். விஷ்வா ரொம்ப நல்லவன். உன்ன ரொம்ப லவ் பண்றான். எப்பவும் உனக்கு துரோகம் நினைச்சது இல்ல.

எனக்கு போக்கிடம் இல்லாம தான் உங்க வீட்டுக்கு வந்தன். இனி என்னால உங்க வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வராது..முடிஞ்சா என்ன மன்னிச்சுடு குழலி என்று விட்டு மயூரி அங்கிருந்து சென்றால். குழலி தரையில் மடிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.. சாரி விஷ்வா நீங்க சொல்லவரத நான் கேட்டு இருக்கணும் என்று தேம்பி தேம்பி அழுதாள்.

குழலி வெளியே வரும் நேரம், மயூரியும் வருணும் அனைவரிடமும் புறப்படுவதாக சொல்லி கொண்டிருந்தனர், அவள் அறைக்கு சென்று அவள் கொண்டு வந்த உடைமைகளை எடுத்து வந்தாள். வருண் அதை தன் கைக்கு மாற்றி கொண்டு விஷ்வாவை அனைத்து விடைபெற்றான்.. மயூரியும் விஷ்வாவிற்கு நன்றி தெரிவித்து விட்டு வருணோடு சென்றால்.

குழலி விஷ்வா அருகில் வந்து அவன் கையை தொட, அவள் கையை பொறுமையாக எடுத்து விட்டவன்.. அடுத்த வாரம் புதன் கிழமை கோர்ட் போனும் ரெடியா இரு என்றான்..

இருக்கும் இடம் மறந்து அவனை அனைத்து கொண்டவள், ஷிவா எனக்கு டிவோர்ஸ் வேண்டாம் ப்ளீஸ்.. நான் பேசுனது எல்லாம் தப்பு தான் என்று அவன் டீஷர்ட்டை பிடித்து கொண்டு அழுதாள்.. அவன் ஜடம் போல் நின்றான்..

குழலி வேகமாக அவள் மாமாவிடம் சென்று, மாமா.. மாமா.. நான் பேசுனது எல்லாம் தப்பு தான் அவர்கிட்ட சொல்லுங்க.. எனக்கு டிவோர்ஸ் குடுக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க நான் இனிமேல் அவர் மேல சந்தேகபட மாட்டன் என்று அழுது கொண்டே கெஞ்சினால்.

மகனின் குணம் அறிந்தவர், வேண்டாம் குழலிமா.. அவன் முடிவுல இருந்து அவன் மாறமாட்டான்.

நான் சொல்றத கேளு உனக்கு விஷ்வா கூட டிவோர்ஸ் ஆனாலும், எப்பவும் நீ என் நண்பன் பொண்ணு தான். உனக்கான தனி பாசம் என் மனசுல இருக்கும். அவன விட்டுடு குழலிமா..

மாமா.. என்ன சொல்ல வரீங்க?

உனக்கு நான் வேற ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரன். விஷ்வாவ விட்டுடு என்றார். விஷ்வாவின் முகத்தை பார்த்து கொண்டே.. அவர் எதிர்பார்த்த எந்த உணர்ச்சியும் விஷ்வா முகத்தில் தென்படவில்லை.

மாமா.. என்று கத்தியிருந்தால் குழலி.. அம்மாவின் குரலில் பயந்த பூரணி பாப்பா ரஞ்சனியின் தோளில் புதைந்து கொண்டாள்.

பின் குழலியின் சத்தமான குரலில், அவள் பக்கம் திரும்பினார் சுந்தரம்.

யாருக்கும் தொல்ல குடுக்காம என் அம்மா என் குழந்தைன்னு நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தன், நீங்க தான் வந்து எங்க அம்மாகிட்ட என்னென்னமோ பேசி என்ன உங்க பையனுக்கு கட்டி வச்சீங்க.. இப்போ நீங்களே என்ன வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி தரன்னு சொல்றிங்க..

நான் உணர்வுள்ள ஒரு மனுஷிதான, என்ன ஏன் இப்படி கஷ்ட்டப்படுத்துறிங்க.. என்று கீழே அமர்ந்து அழுதாள்.

விஷ்வா அங்கிருந்து செல்ல முயல வேக வேகமாக எழுந்து அவன் வழி மறித்து நின்றாள்.

விஷ்வா ப்ளீஸ் என்ன வெறுத்துடாதீங்க.. இந்த ஒரு முறை என்ன மன்னிச்சிடுங்க என்று அழுதவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவன் வழியில் இருந்து அவளை தள்ளி நிறுத்திவிட்டு அவன் அறைக்கு சென்றான்.

91. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி எவ்வளவு கெஞ்சியும் விஷ்வா மனம் இறங்கி வரவில்லை. அவன் பிடியில் உறுதியாக நின்றான். ரஞ்சனிக்கு கூட தவறை உணர்ந்த குழலி மீது இரக்கம் தோன்றியது. ஆனால் விஷ்வா கண்டு கொள்ளவில்லை. வீட்டில் உள்ள அனைவரும் குழலிக்காக விஷ்வாவிடம் பேசினர். எதற்கும் பிடி கொடுக்கவில்லை விஷ்வா.

அன்று புதன் கிழமை, குழலியை  மனுதாக்கள் செய்ய ஒரு வழக்கறிஞரிடம் அழைத்து சென்று கொண்டிருக்கிறான்.

போகும் வழியில் காரை நிறுத்த சொன்னால் குழலி.

எதாச்சும் வேணுமா?

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

பேச என்ன இருக்கு? ஒன்னும் இல்லை என்றவன் காரை எடுக்க செல்ல.

ஒரு வருஷம் உங்ககூட வாழ்ந்து இருக்கன், அதுக்கு மரியாதை குடுத்தாச்சும் நான் பேசுறத கேளுங்க.. குழலி கெஞ்சவில்லை குரல் தழு தழுக்கவில்லை. திடமாக கூறினாள்.

அவளின் நீள விழிகளில் என்ன கண்டானோ, அவள் பேசுவதற்காக காத்திருந்தான்.

என்ன விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்க போறிங்களா விஷ்வா?

அது உனக்கு தேவையில்லாதது.

ரஞ்சனி சொன்னாங்க. உங்களுக்கு வேற கல்யாணம் பண்ண போறதா?

உனக்கு என்ன பேசணுமோ அத மட்டும் பேசு, என்ன கேள்வி கேக்காத.

டிவோர்ஸ் வேண்டாம் விஷ்வா?

ஏன்?

குழலி அமைதியாக இருந்தாள்..

டிவோர்ஸ் ஆனதும் இப்போ வாழுற சுகபோக வாழ்க்கை பறிப்போய்டும்னு பயமா இருக்கா?

இந்த கேள்வி குழலியை பார்த்து கேட்பது எவ்வளவு அபத்தமானது என்று விஷ்வாவிற்கே தெரியும்..

பொதுவாகவே விஷ்வா அதிக செலவாளி, காசை தண்ணீர் போல் செலவழிப்பவன், ஒரு பொருள் ஆசைப்பட்டால் வாங்கி விடுவான். அந்த பொருள் உண்மையில் நமக்கு தேவையா, என்றெல்லாம் யோசிக்க மாட்டான். அந்த மாதிரி அவன் வாங்கி குவித்த பொருட்கள், இப்போது அவன் அறையில் சும்மா இருப்பது ஏராளம்.

ஆனால் குழலி அப்படியில்லை. ஒரு பொருளை வாங்கும் முன் அதன் தேவை உணர்ந்தே வாங்குவாள். பணத்தையும் உணவையும் எப்போதும் விரயம் செய்ய மாட்டாள். சிக்கனமாக செலவழிப்பால். அவள் வளர்ந்த சூழல் அப்படி. விஷ்வா அவளை ஷாப்பிங் அழைத்து சென்றாலும் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பாளே அன்றி பேராசை பட்டு எதையும் வாங்க மாட்டாள். விஷ்வா உடைகள் எடுத்து தந்தாலும், என்கிட்ட இன்னும் போடாத ட்ரஸ்சே நிறைய இருக்கு ஷிவா. இன்னும் எதுக்கு புது துணி? இருக்கறத பர்ஸ்ட் போட்டு முடிக்குறன் என்று வேடிக்கையாக பேசி மறுத்துவிடுவாள். விஷ்வாவின் பணத்தில் எப்போதும் அவள் பேராசைப்பட்டு ஆடம்பரமாக வாழ நினைத்தது இல்லை. இப்போதும் அவள் மாமனார் அலுவலகத்தில் அவள் வேலை பார்ப்பதற்க்கு மாத சம்பளமாக 15000 ரூபாய் அவள் பெற்று கொள்கிறாள். விஷ்வா தான் பேசி வாங்கி கொடுத்தான்.

எனக்கு அப்பறம் இந்த பொறுப்பு எல்லாம் உனக்கு தான் வந்து சேரும் குழலிமா அதுக்கு தான் நான் உனக்கு பயிற்சி குடுக்குறன். ஆனா நீ சாதாரண தொழிலாளி மாதிரி சம்பளம் கேக்குறியே? இது உன் ஆபீஸ் உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ என்று லாக்கர் கீ, கம்பனி டெபிட் கார்ட் முதற் கொண்டு குழலியின் பக்கம் வைத்தார். அனைத்தையும் மறுத்தவள் சம்பள பணத்தை மட்டும் பெற்று கொண்டாள்.

அந்த பணத்தில் 7000 ரூபாய் அவளின் செலவிற்கு வைத்து கொண்டு மிச்ச பணத்தை அவள் அம்மாவின் கூட்டுறவு வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவாள். இன்று வரை இப்படி தான் நடக்கிறது.

அவளின் இந்த குணமே விஷ்வாவின் மனதில் குழலியை பற்றி முதன் முதலில் ஆழ பதிந்து அவளுக்கான தனி இடத்தை பிடித்து தந்தது.

ஆனால் இப்போது அவன் இப்படி பேச காரணம் அவள் மீது உள்ள கோவம் மட்டுமே.

தன்னை நம்பவில்லையே. நான் சொல்ல வருவதை கூட கேட்கவில்லையே, வீட்டில் உள்ள அனைவரின் முன்பும் தன்னை நம்பாமல் என்னை விட்டு பிரிந்து செல்ல முயன்றாலே என்ற கோவம் மட்டுமே அவன் மனம் முழுதும் பரவி இருந்தது. ஒரு வருடம் தன்னோடு வாழ்ந்தும் என் மீது நம்பிக்கை இல்லை ஒரு புரிதல் இல்லையே என்ற வருத்தம் மலையளவு அவன் மனதில் மண்டியிருக்கிறது.

நான் எப்பவும் சுகப்போக வாழ்க்கை வாழனும்னு ஆசைப்பட்டது இல்லை விஷ்வா. என்றவளின் பதிலில் தான் சிந்தை கலைந்தான் விஷ்வா.

இப்போ என்ன வேணும் உனக்கு? அத மட்டும் சொல்லு, தேவையில்லாம பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காத.

விஷ்வாவின் இந்த சுடு சொற்கள் எல்லாம் குழலிக்கு மிக மிக புதிது.

திருமனம் ஆனா புதிதில் கூட இவ்வளவு கடுமையை அவளிடம் காண்பித்தது இல்லை விஷ்வா.

எனக்கு விவாகரத்து ஆனதும் எங்க வீட்டுக்கு போனா எங்க அம்மா உடைஞ்சு போய்டுவாங்க. அவங்க பாவம், ஏற்கனவே ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டாங்க. இதுக்கு மேலயும் நான் அவங்களுக்கு கஷ்ட்டத்தை குடுக்க விரும்பல.

ஓஹ் உங்க அம்மாக்காக இந்த விவாகரத்து வேண்டான்னு சொல்ற அப்படி தான?

என்றவனின் கேள்வியில் அவ்வளவு கோவம், அவள் ஆமாம் என்று சொன்னால் கன்னத்தை பழுக்க வைக்கும் நோக்கத்தில் தான் இருந்தான்.

அவள் அமைதியை கண்டு சொல்லுடி என்று பல்லை கடித்தான்.

அவள் எதுவும் பேசாமல் அவனது கையை எடுத்து, அவளின் சேலையை விளக்கி வெற்று வயிற்றில் வைத்தால்.

நம்ம பாப்பா உள்ள இருக்கு என்றால்.

விஷ்வா என்ன உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. சில நொடிகள் கழித்து,
எப்போ அபார்ட் பண்ண போற என்றான் அவள் முகத்தை பார்த்து கொண்டே..

விஷ்வா.. அவள் குரல் நடுங்கியது..

உனக்கு தான் எனக்கு குழந்தை பெத்து கொடுக்க விருப்பம் இல்லையே. அன்னைக்கு நான் உன்கிட்ட கேட்டன் நியாபகம் இருக்கா? நம்மளையும் மீறி உன் வயித்துல என் குழந்தை உண்டாச்சுனா என்ன பண்ணுவன்னு..

நீ சொன்ன பதில் நியாபகம் இருக்கா இல்லை நினைவு படுத்தணுமா??

ப்ளீஸ் அத பத்தி பேசாதீங்க.. என் தப்பை நான் உணர்ந்துட்டன். இது நம்ம காதலுக்கு கிடைச்ச பரிசு. நாம இந்த குழந்தைய சந்தோஷமா பெத்துக்கலாம்.

நம்ம காதல் இல்ல.. என் காதல் மட்டும் தான்.

நீ ஒரு சுயநலவாதி குழலி, இவ்ளோ நாள் குழந்தை வேண்டாம்ன்னு சொன்ன.. இப்போ நான் டிவோர்ஸ் கேட்டதும் குழந்தைய காரணம் காட்டி டிவோர்ஸ் பண்ணாதீங்கன்னு சொல்ற. இந்த குழந்தைய உன் சுயநலதுக்காக பெத்துக்க நினைக்கிற.

இல்ல விஷ்வா நிஜமா.. என்று பேச வந்தவளை அவளின் ஓங்கிய குரலால் வாய் மூட வைத்தான்.

பேசாதடி.. இப்போ மட்டும் நான் உன்கிட்ட டிவோர்ஸ் கேக்கலனா, எனக்கு தெரியாம நீ இந்த குழந்தைய அழிச்சு இருப்ப இல்ல, அப்படி சொன்னவ தான நீ? செஞ்சிருக்க மாட்டியா என்ன?

அவன் எப்படி அறிவான், குழந்தை உண்டான செய்தி அறிந்த போது அவள் கொண்ட மகிழ்ச்சியை. பூரணி வயிற்றில் உருவான போது அவள் ஒன்றும் அறியாத சிறு பெண். தாய்மையை கூட உணர முடியாத அளவுக்கு பக்குவம் இல்லாதவள். அவளை ஏமாற்றி அவள் கருவில் உதிர்த்தவள் தான் பூரணி பாப்பா.

அந்த குழந்தையை கூட இன்றளவும் அவள் வெறுத்தது இல்லை. சொல்ல போனாள் அவள் மகளுக்காக தான் அவள் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று மறுத்தால். எங்கே  இன்னொரு குழந்தை பிறந்தால் பூரணியை ஒதுக்கி வெறுத்து விடுவார்களோ என்ற பயம். அவள் பயத்திற்கு அவள் வாழ்ந்த சூழலும் ஒரு காரணம்.

அப்படி இருக்கையில் இப்போது அவள் வயிற்றில் உருவான முத்து, முழுக்க முழுக்க அவர்கள் காதலின் வெளிப்பாடு.. கருவுற்றிருப்பதை அறிந்த அன்றைய தினம் எத்தனை முறை அவள் வயிற்றை தடவி கொடுத்து இருப்பாள். முழுதாக அவள் தாய்மையை உணர்ந்த தருணம் அல்லவா? விஷ்வாவிற்கும் அவளுக்கும் இருக்கும் பிரச்சனை கூட மறந்து, விஷ்வா நம்ம பாப்பா என்று ஆனந்த கண்ணீரோடு எத்தனை முறை மனதுக்குள் அவனோடு பேசியிருப்பால்.

அவளா குழந்தையை அழிக்க நினைத்து இருப்பாள்? விஷ்வா அவளுக்கு விவாகரத்தே வழங்கி இருந்தாலும், அவள் வயிற்றில் உள்ள குழந்தையை பெற்று வளர்த்து இருப்பாள். தாயன்பு சுயநலம் இல்லாதது அல்லவா..

அவள் கருவுற்று இருப்பதை இதமான மன நிலையில் கூறி, அவன் மார்பில் சாய்ந்து மன்னிப்பு கேட்டு, முத்த மழை பொழிந்து எல்லா பிரச்சனைகளையும் முடித்து கொள்ள நினைத்தவள், அன்றைய காலை பொழுது அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவன் முன் பிரசன்னமாகியவன் அட்வகேட்ட பார்க்கணும் வா போலாம் என்று கையோடு அழைத்து வந்து இப்போது இந்த பேச்சு பேசி கொண்டிருக்கிறான்.

பின் ஒரு முடிவு எடுத்தவனாக, டிவோர்ஸ் வேண்டாம். எனக்கு குழந்தைய மட்டும் பெத்து குடு. உன் விஷயத்துல நான் தலையிட மாட்டன். என் விஷயத்துலயும் நீ தலையிடாத. குழந்தைக்கு என்ன தேவையோ எல்லாத்தையும் நான் பார்த்துக்கறன்.

என் குழந்தைக்காக மட்டும் தான் இந்த முடிவு என்றான் அவள் முகத்தை பார்த்து.

அவள் எதுவும் பேசவில்லை. கையை கட்டி எதிரே இருந்த சாலையை வெறித்து கொண்டிருந்தாள். அதன் பின் காரை எடுத்தவன்.. சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் வண்டியை நிறுத்தினான்.

உள்ளே அழைத்து சென்றவன், மகப்பேறு மருத்துவரை காண காத்து கொண்டிருந்தான்.

அவர்களை ஒரு செவிலியர் வந்து அழைக்க உள்ளே சென்றனர்.

மருத்துவர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை கூறினால் குழலி. பின் அவளை ஸ்கேன் செய்ய அழைத்து சென்றனர். வயிற்றில் ஜெல்லை தடவி அவர்களின் குட்டி உயிரை அந்த திரையில் பார்த்தனர். குழலி முகத்தில் அவ்வளவு புன்னகை. விஷ்வாவின் முகத்தை பார்த்தாள். இவ்வளவு நேரமும் கோவத்தில் கத்தி கொண்டிருந்தவனா இவன் என்பது போல் தான் இருந்தது.. திரையில் தெரிந்த அவர்களின் ஒரு இன்ச் குழந்தையை கண்கள் மின்ன பார்த்து கொண்டிருந்தான்.

பின் வயிற்றில் உள்ள ஜெல்லை துடைத்து கொண்டு உடையை சரி செய்து கொண்டு வெளியே வந்தாள் குழலி.

65 நாள் குழந்தை, ஆரோக்கியமா இருக்கு என்று கூறிய மருத்துவர் சில பொதுவான அறிவுரைகளையும் கூறி விட்டமின் டேப்லட்களை எழுதி கொடுத்தார்.

அனைத்தையும் வாங்கி கொண்டு காரில் ஏறினர். முதலில் இருந்த இறுக்கம் இப்போது இருவரிடமும் இல்லை. இருவரும் அவரவர் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

வரும் வழியில் பழங்கள், நட்ஸ் ஹெல்த் ட்ரிங்க் பவுடர் என அனைத்தையும் வாங்கி குவித்தான்.

குழலி அவன் வாங்கிய பொருட்களை பார்த்து எதுவும் கூறவில்லை.

பழைய குழலியாக இருந்தாள் அவன் வாங்கி குவித்த பொருட்களை கண்டு ஏங்க இவ்ளோ வாங்கி இருக்கீங்க? பழம்லாம் கொஞ்சம் கொஞ்சமா வாங்கியிருக்கலாம்ல? காலி ஆகும் போது வாங்கிக்கலாம் என்று சொல்லியிருப்பால்.

ஆனால் இப்போது.. அவன் குழந்தைக்கு அவன் வாங்குகிறான். என்ற மனநிலையில் அமைதியாக இருந்து கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

92. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் கண்டு மற்றவர்கள் குழம்பி போயினர்.. பின் போகும் போது இருந்த விஷ்வாவின் முகத்துக்கும் இப்போது அவன் முகத்தில் தெரியும் சந்தோஷத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே.

கையில் உள்ள பொருட்களை கண்டு குழம்பி போயினர். டேய் விஷ்வா என்ன டா இவ்ளோ சந்தோஷமா வர? ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டிங்களா என்றால் ரஞ்சனி.

நீ சித்தியாக போற டி என்று அவள் மண்டையில் கொட்டினான் விஷ்வா.

முதலில் புரியாதவள் பின் புரிந்து, சந்தோஷத்தில் துள்ளி குதித்தால் ஹேய் நிஜமாவாடா என்று கேட்டு அவனுக்கு வாழ்த்து கூறியவள், ஒற்றை சோஃபாவில் அமர்ந்து இருந்த குழலியிடமும் சென்று அவளை கட்டியனைத்து வாழ்த்து கூறினாள். பின் வயிற்றில் கைவைத்து குழந்தையிடம் பேசினால். பப்பு குட்டி என்று ஏதேதோ கதைகள் பேசி குழந்தையை கொஞ்சினால்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம், சுந்தரமிற்கு இனி விவாகரத்து என்ற பேச்சிற்கு இடமில்லை என்று நிம்மதி அடைந்தார். மகேஷ்வரிக்கும் அதே எண்ணம் தான். சூர்யா அவன் அண்ணனை அனைத்து கொண்டு வாழ்த்து கூறினான்.

ஒன்றும் புரியாத பூரணி பாப்பா, அருகில் இருந்த பழ வகைகளை கையில் எடுத்து உண்ண செல்ல..  குழலி அந்த பழத்தை வாங்கி வைத்து விட்டு குழந்தையை தூக்கி மடியில் வைத்து கொண்டாள்.

குழலி, பாப்பாவ இப்படி சட்டு சட்டுன்னு தூக்காத என்று மகேஷ்வரி அதட்டினார். குழலி தலையை மட்டும் ஆட்டி கொண்டாள்.

அனைவரின் வாழ்த்துக்களையும் சந்தோஷமாக ஏற்று கொண்டனர் தம்பதியினர்.

மூத்த தம்பதியினர் இருவருக்கும் வீட்டிற்கு வாரிசு வர போற சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மகேஷ்வரி முத்தரசிக்கு அழைத்து விஷயத்தை கூறினார். அதன் பின் பரமு சுசிலாவிடமும் விஷயம் பகிரப்பட்டது.

குழலி அனைவருக்காகவும் முகத்தில் புன்னகையை தவழவிட்டாள்.. இத்தனை நாட்கள் யாரும் என்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இப்போது குழந்தைக்காக எவ்வளவு அக்கறையான அறிவுரைகள் நினைக்கும் போதே கண்கலங்கியது.

அதுவும் ரஞ்சி மீது அவளுக்கு அவ்வளவு கோவம் வந்தது. ஆனால் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

எனக்கு தூக்கம் வருது தூங்க போறன் என்று பொதுவாக கூறினாள்.

ஆமா ஆமா நல்லா ரெஸ்ட் எடுக்கணும் வா நான் உன்ன அழைச்சிட்டு போறன் என்றவள் மேலே உள்ள விஷ்வா அறைக்கு அழைத்து செல்ல முயல, குழலியின் கால்கள் நகர மறுத்தது. இல்ல நான் கீழ இருக்க அறையிலேயே இருக்கன் என்றால்.

ஏன் என்றால் ரஞ்சனி?

எனக்கு மாடி ஏறி இறங்க கஷ்ட்டமா இருக்கும்..

அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினால்.. குழலி இப்போ பாப்பா வந்துருக்கு இது தான் சரியான சமயம் நீ விஷ்வா கூட சேர, அடம் பண்ணாத விஷ்வா அறைலயே தங்கிக்கோ என்றால்.

கோவம் வந்து விட்டது குழலிக்கு.. எல்லாம் முடிவையும் நீங்க தான் எடுப்பிங்களா? அன்னைக்கு நீங்க தான் என்ன கீழ இருக்க அறைல தங்க வச்சீங்க.. இப்போ நீங்களே என்ன அவர் அறைக்கு போக சொல்றிங்க. இந்த குழந்தைக்காக தான் அவரும் என்ன விவாகரத்து பண்ணாம கூட்டிட்டு வந்தாரு. இப்போ நீங்களும் இந்த குழந்தைய காரணம் காட்டி அவர்கூட சமாதானம் ஆக சொல்றிங்க. என்னோட உணர்வ புரிஞ்சிக்க யாரும் இல்லல..

குழலி சத்தமாக தான் பேசினால், அனைவரும் அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தனர். அன்னைக்கு என்னவோ சொன்னிங்க இனிமேல் நீயும் எங்க கேங்ல ஒருத்தி நாம எப்பவும் ஒன்னா இருப்போம்ன்னு.. ஆனா உங்க ஃப்ரன்ட் கூட நான் சண்டை போட்டதும் என்ன தனியா தான தவிக்கவிட்டிங்க. என்மேல தப்பே இருந்தாலும் எனக்கு புத்தி சொல்லியிருக்கணும். உண்மையான ஃப்ரன்ட்னா அப்படி தான் இருப்பாங்க.

மயூரிகிட்ட எல்லாம் நீங்க நல்லா பேசுனீங்க அவகூட தோட்டத்துல வாக்கிங் போனீங்க.. கார்ட்ஸ் விளையாடுனீங்க. என்ன தனியா தான விட்டுட்டீங்க. ஏன்னா நான் அவ்ளோ கெட்டவ..

என்ன இருந்தாலும் நான் நடுவுல வந்தவ தான?

எனக்கு இதுவரைக்கும் ஃப்ரன்ட்ஸ்லாம் யாரும் இல்ல. இனிமேலும் எனக்கு யாரும் வேண்டாம் என்று அழுது கொண்டே அவள் மகளுடன் அவள் தங்கியிருந்த அறைக்குள் சென்று விட்டாள் குழலி.

ரஞ்சனிக்கு அவள் செய்த தவறு புரிந்தது. அவள் பாவமாக விஷ்வாவை பார்க்க.. நான் அன்னைக்கே சொன்னன்ல எனக்காக அவகிட்ட பேசாம இருக்காத அவகிட்ட எப்பவும் போல பேசுன்னு கேட்டியா?

எனக்கு அதலாம் தெரியாது, அவ கூட என்ன சேர்த்துவை என்றால் ரஞ்சனி..

அவ உங்கமேல செம கோவத்துல இருக்கா.. கொஞ்ச நாள் போகட்டும் அவ கோவம் தனிஞ்சதும் போய் பேசு என்றான்.

விஷ்வா குழலி தங்கியிருக்கும் அறைக்கு சென்றான்..

பூரணி பாப்பாவை பக்கத்தில் படுக்க வைத்து கொண்டு உறங்க முயன்றால்.. குழலிக்கு தூக்கம் கண்ணை சொறுகியது. ஆனால் பூரணி பாப்பா கொட்ட கொட்ட விழித்து கொண்டு அம்மாவிடம் காக்கா கதை சொல்லு என்று அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள்.

விஷ்வாவை கண்டதும் அப்பாஹ் என்று அவனிடம் தாவிவிட்டால். குழலி கண் மூடி படுத்து கொண்டு தான் இருந்தால்.

குட்டியை கைகளில் அள்ளி கொண்டவன் குழலி எந்திரி, மார்னிங் போட வேண்டிய டேப்லெட் போடு என்றான்.

எதுவும் பேசாமல் அவன் கொடுத்த மாத்திரைகளை விழுங்கினால்.. உடனே படுக்காத கொஞ்சம் நேரம் வாக் பண்ணு.

நடக்க வெளியே சென்றால். அவள் பின்னே விஷ்வாவும் சென்றான்.

மாமா ஆபீஸ் போலயா? நீ விஷ்வா கூட போனதுல இருந்து மனசே சரியில்லமா அதான் எல்லாரும் வீட்லயே இருந்துட்டோம். மதியம் தான் கிளம்பனும்.

நாளைல இருந்து நான் வரன் மாமா, என்று குழலி சொல்ல.

அப்பா அவ இனி ஆபீஸ் வர மாட்டா. அவ வீட்லயே ரெஸ்ட் எடுக்கட்டும் என்றான் விஷ்வா.

இல்ல நான் ஆபீஸ் போறன், எனக்கு முடியாத போது நான் வீட்ல இருந்துகுறன்.

உன் வயித்துல குழந்தை இருக்கு.. டாக்டர் 3 மன்த்ஸ் வரைக்கும் கேர் ஃபுல்லா இருக்க சொன்னாங்கள மறந்துட்டியா? 5 மன்த்ஸ் முடியட்டும் அதுக்கு அப்பறம் நீ வேலைக்கு போறத பத்தி டிசைட் பண்ணலாம் என்று அவன் அந்த பேச்சை முடித்துவிட..

அதன் பின் குழலி எதுவும் பேசவில்லை. தோட்டத்தில் நடக்க சென்றுவிட்டாள். விஷ்வாவும் அவள் பின்னால் சென்றான் அவன் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருக்க.. குழலியும் பூரணி பாப்பாவும் கதை பேசி கொண்டே நடந்தனர்.

குழலி வெயில் அதிகமாகுது வா உள்ள போலாம் என்று மீண்டும் உள்ளே அழைத்து சென்றான்..

அவன் சொல்வதை எல்லாம் அப்படியே செய்பவளை பார்த்த விஷ்வாவிற்கு வித்யாசமாக இருந்தது. விஷ்வா பூரணியை தூக்கி கொண்டு குழலியை கண்டான். அவள் உள்ளே சென்றுவிட்டால்.

இரண்டு நாட்களில் முத்தரசி வந்து இருந்தார்.

குழலிக்கு அவள் அம்மாவை கண்டதும் தனியாக தவித்த கானகத்தில் ஒரு துணை கிடைத்து போல் மகிழ்ந்து போனாள்..

அம்மா அம்மா என்று முத்தரசியை அனைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் கண்ணீர் உகுத்தால்..

அம்மா என்கூட கொஞ்சம் நாள் இரு உடனே போகாத, என்று வந்ததும் அம்மாவிடம் கோரிக்கை விடுத்தால்.

சரிடா தங்கம் அம்மா உன்கூட இருக்கன்..

அடுத்த கேள்வி எத்தன நாள் இருப்ப?

பத்து நாள் இருக்கன்.

முகம் வாடி விட்டது.

அரசி.. புள்ளை ஆசை படுற வரைக்கும் அவகூட இரு என்றார் மகேஷ்வரி. அவர் தயங்க குழலி பேசி பேசியே சம்மதிக்க வைத்தால்.

முத்தரசி செய்து கொண்டு வந்த பலகாரங்களை ரசித்து உண்டால் குழலி, அவளுக்கு பெரிதாக கர்பகால பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. சில நேரங்களில் தலை சுற்றல், சில பொருட்களின் வாசனை மட்டும் குமட்டல் உணர்வை கொடுக்கும்.

விஷ்வா அவளிடம் பேசுவது இல்லை என்றாலும், அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவள் எங்கு இருப்பாளோ அவனும் அங்கேயே தான் இருப்பான்.

கணவனுடன் இருக்கும் பனிப்போரை அன்னைக்கு தெரியாமல் மறைக்க முயன்றால்.. தாய் அறியாத சூலா? வந்த இரண்டாம் நாளே கண்டு கொண்டார் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை ஆனால் அதில் அவர் தலையிட விரும்பவில்லை. மகளுக்கு மட்டும் மறைமுக அறிவுரையை கூறுவார்.

ஒருவாரம் மகளை அவள் அசைக்காக தன்னோடு உறங்க வைத்து கொண்டவர் அடுத்த வாரத்தில் இருந்து, பூரணியை மட்டும் தன்னோடு இருத்தி கொண்டு குழலியை அவர்களின் அறைக்கு துறத்தி விட்டார். திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான் குழலிக்கு. அவள் அம்மாவிடம் உண்மையை கூறவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தவித்தால்.

அம்மா டாக்டர் மாடிப்படி ஏற கூடாதுனு சொன்னாங்கமா என்று மருத்துவர் மீது பழி போட, அவங்க அப்படி தான் சொல்வாங்க.. நீ பூச் பூச்ன்னு இருக்காதா குழலி.. பூரணி வயித்துல இருக்கும் போது எவ்ளோ வேலை செஞ்ச.. இப்போ இந்த படியேறதுக்கு இப்படி சொல்ற.. போ போய் தம்பி கூட இரு என்று கண்டிப்பாக கூற.. குழலி வேறு வழியின்றி, விஷ்வா அறை வாசல் முன்பு நின்றாள்.

நீண்ட மூச்சை எடுத்து கொண்டு அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றால்.

ஒரு வருட காலமாக அவள் இருந்த அறை தான்.. ஆனால் இப்போது அவளால் உரிமையோடு அந்த அறைக்குள் போக முடியவில்லை.

விஷ்வா விவாகரத்து வரை சென்றது அவள் மனதில் வடுவாக இருக்கிறது. இந்த குழந்தைக்காக தான் தன்னை ஏற்று கொண்டார். இந்த குழந்தை இல்லை என்றால் எனக்கு அவர் நிச்சயம் விவாகரத்து கொடுத்து இருப்பார் என்ற எண்ணம் அவளை விஷ்வாவிடம் இருந்து தள்ளி நிற்க வைக்கிறது.

கால்கள் அறையை நோக்கி நடந்தாலும் சில வினாடிகளில் அவளுக்குள் இவ்வளவு எண்ணங்கள் தோன்றி மறைந்தது. விஷ்வா பால்கனி சோஃபாவில் அமர்ந்து இருக்க குழலி அவன் முன் நின்றிருந்தால்.

மேடம்க்கு இப்போதான் இந்த அறைக்கு வர வழி தெரிஞ்சுதா என்றான்..

அவன் குரலில் இருப்பது உற்சாகமா? கோவமா?

அம்மா இங்க இருந்து போற வரைக்கும் நான் இந்த ரூம்ல தங்கிக்குறன்.. உங்கள தொந்தரவு பண்ண மாட்டன் என்றால்.

விஷ்வா முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம். அவள் மனம் மாறி வந்திருக்கிறாள் என நினைத்தான் போலும்..

அவள் அருகில் சென்றவன்.. நீ பண்ண வேலைக்கு எல்லாம் கோவப்பட வேண்டியது நான் தான் டி.. ஆனா நீ தான் என்ன பார்த்து மூஞ்சிய திருப்பிகிட்டு போற.

குழலி தரையை பார்த்து கொண்டிருந்தாள். அவள் முகத்தை நிமிர்த்தியவன் நீண்ட நாள் கழித்து அவள் அருகாமையில் கிறங்கி அவனை மறந்து முத்தமிட துவங்கினான்.

அவன் கைகளில் குழையாமல் பொம்மை போல் நின்றாள் குழலி. கண்கள் மட்டும் கலங்கிவிட்டது.

அவள் உதட்டில் உவர்ப்பு சுவையை உணர்ந்தவன் முத்தமிட்டு கொண்டே கண் திறந்து அவளை பார்த்தான். மொத்த உணர்வுகளும் வடிந்து குழலியை விட்டு பிரிந்து நின்றான்.

என்ன டி?

----

பிடிக்கலையா?

----

வழக்கம் போல் சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவளை தன் மீது அமர்த்தி கொள்ள முயன்றான்.

அவள் இசைந்து கொடுக்கவில்லை.

என்ன பிரச்சனை சொல்லு..

என்ன நெருங்காதீங்க. என்னால பழைய மாதிரி உங்ககூட வாழ முடியாது.

அவனுக்கு உள்ளுக்குள் பதறியது.

 

 

 

 

 

 

 

93. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி மெத்தையில் உறங்கி கொண்டிருக்க, விஷ்வா சோஃபாவில் படுத்து கொண்டிருந்தான். தூக்கம் தான் அவன் கண்களுக்கு எட்டாக்கனியாகி போனது.

சிறிது நேரம் முன் அவர்களுக்குள் நடந்த உரையாடலை நினைத்து பார்த்தான்.

அழுது கொண்டிருந்த குழலியை நெருங்கி அவள் கண்களை துடைக்க  முயன்றான்..

இரண்டடி பின்னால் சென்றால் பெண்ணவள்.

குழலி நீ தான் இப்பவும் பிரச்சனைய பெருசு பண்ற..

ஆமா நான் தான் பிரச்சனை பண்றன்.. எல்லாம் தப்பும் நான் தான் பண்றன். நீங்க எல்லா விஷயத்துலயும் ரொம்ப சரியா இருக்கீங்க.

இந்த மாதிரி சண்டை போடுறதுக்கு தான் இப்போ மேல வந்தியா டி.? அதுக்கு நீ கீழவே உங்க அம்மா கூட இருந்து இருக்கலாம். வா நானே அத்தைகிட்ட எதாச்சும் சொல்லி உன்ன விட்டுட்டு வரன் என்று கைகளை பிடித்து இழுத்தான். அவன் கைகளை உதறிவிட்டவள்.

நான் பேசுனாலே உங்களுக்கு பிரச்சனை பண்றா மாதிரி தான் இருக்கும். ஏன்னா நான் தான் இப்போ வேண்டாதவளா ஆகிட்டன்ல?

கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு. என்ன விட்ருங்க.. உங்க வாழ்க்கைல நான் இனி தலையிட மாட்டன். உங்க குழந்தைய நான் பத்திரமா பெத்து குடுத்துடுறன் என்றவள் அங்கிருந்து செல்ல முயல..

அவள் கைபிடித்து நிறுத்தியவன், அது என்ன டி என் குழந்தைன்னு சொல்ற? எனக்கு மட்டும் தான் குழந்தையா? உனக்கு இல்லையா? அன்னைக்கு பெரிய இவ மாதிரி பேசுன நம்ம காதலோட பரிசு அது இதுன்னு..

உங்க மனசுல நான் இந்த குழந்தைய காரணமா வச்சு உங்ககூட சேர்ந்துகிட்டன் அப்படின்ற எண்ணம் தான இருக்கு? 

அவன் அமைதியாக இருந்தான்.

அவன் கையை உதறிவிட்டவள் போய் மெத்தையில் படுத்து கொண்டாள். சிறிது நேரத்தில் விஷ்வாவும் அவள் அருகில் உறங்கவர.. நீங்க மேல படுக்கருதா இருந்தா நான் கீழ படுத்துக்குறன் என்று அவள் கட்டிலில் இருந்து இறங்க முயல.. தலையணை எடுத்து சோஃபாவில் தூக்கி எறிந்தவன் அவளை முறைத்து கொண்டே படுத்துவிட்டான்.

குழலி உறங்கிவிட்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் இருவரும் இப்படி தான் வளம் வந்தனர்.

முத்தரசியிடம் நடந்த பிரச்சனையை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. அவரும் கணவன் மனைவிக்குள் வரும் சாதாரண பிரச்சனை தான் என எண்ணி மகளுக்கு மட்டும் அறிவுரை வழங்கினார் குடும்பம் என்றால் அப்படி தான் இருக்கும் அனுசரித்து செல் என்று.

குழலிக்கு மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் முத்தரசி ஊருக்கு சென்று இருந்தார்.

அன்று குழலி எப்போதும் போல் கீழ் உள்ள அறையில் வந்து தங்கி கொள்ள.. விஷ்வா அந்த அறைக்கு வந்து அவளை அவர்கள் அறைக்கு தூக்கி சென்றான்.

ரஞ்சனி தலையில் அடித்து கொண்டாள் இதுங்களுக்கு வேற வேலை இல்லை என்று.

பூரணி பாப்பா மெத்தையில் உறங்கி கொண்டிருந்தாள். அவளை எப்போது கடத்தி வந்தானோ?

எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்திங்க? நான் அம்மா இருக்க வரைக்கும் தான் இங்க இருப்பன்னு சொன்னன்ல..

ஷூ வாய மூடு.. எனக்கு என் குழந்தை கிட்ட நெருக்கமா இருக்கணும். என்னோட ப்ரசென்ச நான் என் குழந்தைக்கு உணர்த்திகிட்டே இருக்கணும்.. நீ ஒரு மூலைல நான் ஒரு மூலைலன்னு இருந்தா என் குழந்தை எப்படி என்கூட நெருங்குவான்?

அப்படி சொன்னால் தான் குழலி தன்னோடு இருப்பாள் என்று அவன் கூற, அவள் மனதிலோ ஓஹ் குழந்தைக்காகவா என்று வெறுமையான எண்ணம் தோன்றியது.

அதன் பின் விஷ்வா நினைத்தது போல் குழலி அமைதியாக இருந்து கொண்டாள்.

குழந்தைக்காக என்று தூக்கி வந்துவிட்டு குழந்தையை கொஞ்சாமல் இருந்தாள் தவறாகி விடுமே.. குழந்தையை கொஞ்சும் சாக்கில் மனைவியின் இடையை செல்ல இம்சைகள் செய்தான்.

அவளின் இடை சுழியில் முத்தமிட்டு அவள் உணர்வுகளை தூண்ட முயன்றான்.. அவளும் எவ்வளவு நேரம் தான் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்வால். பொறுத்து பொறுத்து பார்த்து அவன் சேட்டைகளை தாங்க முடியாமல் அப்படி சொல்லி விட்டால்.

குழந்தை அங்க இருக்காது.. அடிவயித்துல இருக்கும் என்று அவள் சொல்லிவிட.. ஓஹ் அப்படியா என்று இன்னும் குஷியாகி போனவன், தேங்க்ஸ் பொண்டாட்டி என்று அவள் சேலையை இன்னும் இறக்கி அவன் முத்தங்களை எங்கெங்கோ கொடுத்தான்.

குழலிக்கு தான் ஹய்யோ வென்றானது இதுக்கு முதல்லயே பரவால்ல.. ச்சை வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க வேண்டியது தான என்று அவளே அவளை திட்டி கொண்டாள்.

ஒரு கட்டத்தில் விஷ்வா இதமாக அவள் மணி வயிற்றை வருடி கொடுக்க, குழலி தன்னை அறியாமல் உறங்கி போனாள்.

இதற்கு தான் காத்திருந்தேன் என்பது போல் அவள் இதழில் மென் முத்தமிட்டு லவ் யூ டி பொண்டாட்டி என்றான்.

பின் குழலி அருகிலே படுத்து கொண்டு மனைவி மகள் என இருவரையும் ஒன்றாக அனைத்து கொண்டு உறங்கி போனான்.

குழந்தை அன்று மேஜை மேல் இருந்த பாதம் பருப்பை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். குழலிக்கு தான் கஷ்ட்டமாக இருந்தது இருந்தும், குழந்தையிடம் இருந்து அதை வாங்கி வைத்துவிட்டு வா அம்மா உனக்கு மம் மம் தரன் என்று குழந்தைக்கு பால் காய்ச்சு கொடுத்தாள்.

பின் அவள் மாமாவிடம் சென்று மாமா, எனக்கு கொஞ்சம் நட்ஸ் வாங்கிட்டு வரிங்களா என்றால்..

இதுக்கு ஏன்மா இப்படி தயங்குற..  எதுவா இருந்தாலும் உரிமையா கேளுமா என்றார்.

அன்று இரவு சொன்னது போல், சுந்தரம் அளவுக்கு மீறி அவள் கேட்ட நட்ஸ் வகைகளை வாங்கி வந்து கொடுத்தார்.

நான் வாங்கிட்டு வந்தது எல்லாம் தீர்ந்துந்துடுச்சா குழலி சொல்ல வேண்டியது தான வரும் போது வாங்கிட்டு வந்துருப்பனே என்றான்.

அவள் எதுவும் பேசாமல் அனைத்தையும் எடுத்து வைத்தால். இப்போது எல்லாம் இப்படி தான் எதை கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்வது இல்லை. சில நேரம் அவனையும் மீறி கத்தி விடுகிறான்.

விஷ்வா அவர்கள் அறைக்கு சென்று, அவன் வாங்கி வைத்த நட்ஸ் வகைகளை பரிசோதிக்க எல்லாம் அப்படியே இருந்தது.

ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. குழலி என்று சத்தமாக அழைக்க எதற்கு அழைக்கிறான் என அறிந்தவள் போல், அவள் மாமாவிடம் குழந்தையை விட்டு சென்றால்.

அவள் விஷ்வா முன் வந்து நிற்க, நான் வாங்கி வச்சது எல்லாம் பாதிக்கு மேல அப்படியே தான் இருக்கு அப்பறம் எதுக்கு அப்பாகிட்ட வாங்கிட்டு வர சொன்ன?

அப்படியே வேணும்னாலும் என்கிட்டயே கேக்க வேண்டியது தான?

நான் கேட்டது என் வயித்துல இருக்க பாப்பாக்கு இல்ல, என் பொண்ணுக்கு என்றால் அழுத்தமாக.. அவனுக்கு அவள் சொல்ல வருவது புரியவில்லை. லூசா நீ குழந்தை கேட்டா இதலையே எடுத்து குடுக்க வேண்டியது தான?

உங்க காசுல எனக்கும் என் பொண்ணுக்கும் எதுவும் வேண்டாம்.

நானே ஒரு பைத்தியகாரி நாளைக்கே எதாச்சும் தப்பு பண்ணுவன் இல்லனா உங்கள தப்பா புரிஞ்சிகிட்டு சண்டை போடுவன்.. இப்போ உங்க காசுல நான் சுகபோகமா வாழ்ந்துட்டா, நீங்க என்ன விவாகரத்து பண்ண அப்பறம் இந்த ஆடம்பர வாழ்க்கை இல்லாம நாங்க தான கஷ்ட்டப்படணும்.

விஷ்வாவிற்கு சுறு சுறுவென கோவம் வந்து விட.. அடிக்க கையே ஓங்கி விட்டான்.

அவ்வளவு கோவம் அவளின் பைத்தியகாரத்தனமான பேச்சில்..

என்ன டார்ச்சர் பண்றதுக்காகவே பொறந்து இருக்கியா டி? தலையில் அடித்து கொண்டான் விஷ்வா எனக்கு நிம்மதியே இல்ல டி உன்கிட்ட. என்று வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி தீர்த்தவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் காரை எடுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை விஷ்வா. பூரணி பாப்பா தாத்தா பாட்டியோடு உறங்கிவிட, குழலி அறையில் தனியாக இருந்தாள். நினைவெல்லாம் விஷ்வாவே நிரம்பி இருந்தான். காலை பொழுதும் விடிந்து விட விஷ்வா இன்னும் வீட்டிற்கு வரவில்லை.

கீழே இறங்கி வந்தாள் குழலி. தலையில் கட்டோடு சோஃபாவில் அமர்ந்து ரஞ்சனி குடுத்த காஃபியை குடித்து கொண்டிருந்தான். சுந்தரம் மகேஷ்வரி எல்லாம் அவனை சுற்றி அமர்ந்து விசாரித்து கொண்டிருந்தனர்.

ஷிவா என்று வேகமாக அவன் அருகில் ஓடி வந்தவள்.. அப்போது தான் அவனின் வலது காலை பார்த்தாள் முட்டியில் இருந்து பாதம் வரை கட்டு போட்டு இருப்பதை.. கதறி விட்டாள் விஷ்வா என்ன ஆச்சு என்று.. அனைவரும் இருப்பதாளோ அல்லது அவள் அழுகையை காண முடியாதாளோ.. ஒன்னும் இல்ல சின்ன அடி தான் அழாத என்றான்.

ஹாலில் யார் இருப்பதையும் கவனிக்கவில்லை அவன் மார்பில் புதைந்து கொண்டு அழுதாள். சாரி சாரி விஷ்வா என்னால தான என்று ஓயாமல் வாய் முனுமுனுக்க.. குழலி வாய மூடு நாம ஹால்ல இருக்கோம் என்றான் அழுத்தமாக.

ரஞ்சனிக்கும் சூர்யாவிற்கும் புரிந்தது அவர்களுக்குள் இன்னும் எதுவும் சரியாகவில்லை என்று. இருந்தும் அவர்கள் விஷயத்தில் தலையிடவில்லை.

மகேஷ்வரிக்கு குழலி மேல் கோவமாக வந்தது. அவள் பேசியதை கேட்டு, இவளால் தான் என் மகனுக்கு இப்போ அக்சிடன்ட் ஆகியிருக்கு என்று.. இருந்தும் குழலியை எதுவும் கடிந்து கொள்ள முடியாத நிலை..

அவள் தவறே செய்து இருந்தாலும், அவளை ஒரு வார்த்தை கூறிவிட்டால் விஷ்வா சும்மா இருக்க மாட்டானே.. அதனால் மகேஷ்வரி அமைதியாகவே இருந்தாள்.

எப்போதும் மருமகளுக்கு ஆதரவாக இருக்கும் சுந்தரமிற்கு கூட இப்போது குழலி மீது சிறு கோவம் எட்டிப்பார்த்தது.

இங்கு இருந்து குழலியின் அழுகையை சமாளிக்க முடியாதவன், அறைக்கு செல்ல முயன்றான் ஆனால் உடைந்த காலை வைத்து கொண்டு அவனால் மாடி படியும் ஏற முடியாதே அதனால், கீழே இருந்த அறையில் தங்கி கொண்டான்.

குழலியும் அவன் பின்னே சென்றால். ஷிவா சாரி.. என்னால தான இப்படி ஆச்சு என்று மீண்டும் அழுகை. ஒன்னும் இல்ல குழலி ப்ளீஸ் இப்படி அழுது என்ன இரிடேட் பண்ணாத.. எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவை. தனியா விடு என்றான்.

அவள் அப்போதும் தேம்பி அழுது கொண்டே இருந்தாள்.

விஷ்வா அவளை கண்டு கொள்ளாமல் படுத்ததும் உறங்கிவிட்டான். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ ரஞ்சனி அறைகதவை தட்டி விட்டு கையில்  ஜூஸ்சோடு உள்ளே வந்தாள்.

அழுது கொண்டிருந்த குழலியை பார்த்து நீ ப்ரெக்னன்ட்டா இருக்க குழலி இந்த மாதிரி அழாத என்றவள் கையில் இருந்த ஜூசை அவளிடம் நீட்டி குடிக்க வைத்தால்..

ஜூசை வங்காமல், ரஞ்சி.. ரஞ்சி என்னால தான் விஷ்வாக்கு இப்படி ஆகிடுச்சு என்று தேம்பி அழுதாள்.

ரஞ்சனி அவளை வெளியே அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்தினால்.

நைட் ரெண்டு மணிக்கு ஹாஸ்பிடல்ல இருந்து சூர்யாக்கு கால் வந்துச்சு இந்த மாதிரி உங்க பிரதர்க்கு அக்சிடன்ட்னு, வீட்ல இருக்க யார்கிட்டயும் சொல்லாம நானும் சூர்யாவும் தான் போனோம் மயக்கத்துல இருந்தான்.

கிண்டிகிட்ட அக்சிடன்ட் ஆகியிருக்கு. ரோட்ல வேடிக்கை பார்த்தவங்கள ஒருத்தர் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணியிருக்காங்க. விஷ்வாக்கு கொஞ்சம் நினைவு திரும்பனதும் அவன்கிட்ட கேட்டு எங்களுக்கு இன்பார்ம் பண்ணாங்க.

டாக்டர் 2 டேஸ் ஹாஸ்பிடல்ல இருந்தே ஆகணும்னு சொன்னாங்க.. அவன் தான் நீ ரொம்ப பயந்துடுவன்னு உடனே டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி வீட்டுக்கு வந்தான்.

விஷ்வா உன்ன அன்னைக்கு லாயர பார்க்க கூட்டிட்டு போல குழலி.. உன் மிஸ்ட் பீரியட் அவனுக்கு தெரிஞ்சு இருக்கு அதான் கைனோ கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கி உன்ன செக்கப்க்கு கூட்டிட்டு போனான்.

ரஞ்சி நான் ரொம்ப ரொம்ப தப்பு பண்றன் அவர் மனச ரொம்ப கஷ்ட்டப்படுத்துறன். அவருக்கும் அவர் என்மேல வச்சு இருக்க காதலுக்கும் நான் தகுதியானவ இல்ல ரஞ்சி. நான் அவர விட்டு போய்டுறன் என்று ஒரே அழுகை.

நீ எங்க போனாலும் அந்த பைத்தியகாரனும் உன் பின்னாடி வந்துடுவான் டி.. எங்களுக்கே அவன நினைச்சு ஆச்சர்யமா இருக்கு விஷ்வாவா இப்படின்னு..

அவன் யார்கிட்டயும் இவ்ளோ இறங்கி போனது இல்ல.. உன்கிட்ட தான் நீ என்ன பண்ணாலும் அவனே வரான். அவன புரிஞ்சு நடந்துக்கோ குழலி என்றால்.

அன்ட் சாரி குழலி விஷ்வாகாக நான் உன்ன தள்ளி வச்சிருக்க கூடாது.

பரவால்ல என் விஷ்வாக்காக தான என்கிட்ட கோச்சுக்கிட்டிங்க என்று சொன்னாளே பார்க்கலாம் வாயில் கைவைத்து கொண்டாள் ரஞ்சனி.

அவள் அதிர்ச்சியை கண்டு கொள்ளாதவள் நான் அவர்கிட்ட போறன்க்கா என்று உள்ளே சென்றுவிட்டாள் குழலி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

94. கண்கள் நிறைந்த ஓவியமே!!
உள்ளே சென்ற குழலி, உறங்கி கொண்டிருந்த விஷ்வா அருகில் சென்று அவனை கட்டிக்கொண்டு படுத்துவிட்டால்.

அவன் நெற்றியில் உள்ள காயத்தை மென்மையாக வருடியவள் அவளையும் மீறி அழுது விட்டால்..

அழமா என் பக்கத்துல படுக்குறதா இருந்தா படு இல்லனா எந்திரிச்சு போ என்று அவன் கண்ணை மூடி கொண்டே கூற.. ஷிவா என்று மீண்டும் அவனை இறுக்கி கொண்டு அழுது தீர்த்தாள்..

குழலி.. அவனின் அழுத்தமான அழைப்புக்கு கூட அவளின் அழுகையை நிறுத்தவில்லை.

இப்போ என்ன நான் செத்தா போய்ட்டன், எதுக்கு டி இப்படி அழற? என்று கத்தியிருந்தான்.

சுவிட்ச் போட்டார் போல் அழுகை நின்றது குழலிக்கு.

அழுது வீங்கிய முகத்துடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள். இழுத்து அனைத்து கொண்டான் பெண்ணவளை, அழாத டி.. கொஞ்சம் நேரம் தூங்கு என்று அவள் முதுகை வருடி கொடுத்து உறங்க வைத்து அவனும் உறங்கி போனான்..

உறங்கியவர்கள் காலை பதினோரு மணி போல் தான் எழுந்தனர்.. விஷ்வாவின் அசைவில் தான் கண் விழித்தால் குழலி..

என்னாச்சு ஷிவா எங்கயாச்சும் வலிக்குதா என்று பதட்டமாகினால்.

வயித்துல பாப்பா இருக்கு டி, இப்படி எல்லாத்துக்கும் ஓவர் எமோஷன் ஆகாத.

ஹ்ம்ம் சரிங்க என்றால்..

அவளை ஒரு மாதிரி பார்த்தவன்.. சூர்யா கிட்ட கேட்டு ரோலிங் ச்சார் வாங்கிட்டுவா..

எதுக்குங்க?

போய் வாங்கிட்டு வா என்று மீண்டும் கூற..

குழலி அங்கிருந்து சூர்யா அறைக்கு சென்றால்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் சூர்யா குழலியோடு ரோலிங் சாரை நகற்றி கொண்டு வந்தான்.

சூர்யா விஷ்வாவை பிடித்து கொண்டு ச்சாரில் அமர வைத்தான்.

அது விஷ்வாவிற்கு ஓரளவு வசதியாகவே இருந்தது.

எல்லாம் ஓகே வா விஷ்வா?

ஹ்ம்ம் இப்போ ஓகே.

பின் விஷ்வாவை பாத்ரூம் அழைத்து சென்று விட்டு, அவன் தேவைகளை முடித்த பின் மீண்டும் சென்று அழைத்து வந்தான்.

அவ்ளோ மோசமாலாம் இல்ல டா, ஐ கேன் மேனேஜ் என்றான்.

மூடு.. இந்த வெட்டி கவுரவம்லாம் என்கிட்ட காட்டாத என்று திட்டிவிட்டு சென்றான் சூர்யா.

சிறிது நேரத்தில் மீண்டும் வந்தவன் சுடுநீர் கொண்டு வந்து டவல் பாத் கொடுக்க ஆயத்தமாகினான்.

குழலி கொஞ்சம் நேரம் வெளிய இரு என்க.. குடு சூர்யா நான் பண்றன் என்று முன்வந்தால்.

நீயே பண்ணு சூர்யா என்று விஷ்வா சொல்லிவிட.. குழலி அங்கிருந்து வெளியே சென்றால்.

டவல் பாத் முடித்து வேறு ஆடைக்கு மாறியிருந்தான் விஷ்வா. வசதியாக இடுப்பில் வேட்டி அணிந்திருந்தான்.

குழலி விஷ்வாவிற்கு சாப்பிட மதிய உணவு எடுத்து வந்தால்.

நீ சாப்டியா?

அப்பறம் சாப்பிடுறன்.. இப்போ பசிக்கல.

அவள் கையில் உள்ள உணவு தட்டை வாங்கி கொண்டவன் போ உனக்கும் சாப்பாடு எடுத்துட்டு வா.. சேர்ந்து சாப்பிடலாம்.

அவள் மறுக்கவர போய் எடுத்துட்டு வா.. ஒரு விஷயத்தை ரெண்டு தடவை சொன்னா தான் செய்வியா?

குழலி அவளுக்கும் மதிய உணவை எடுத்து வந்தால்.

நான் உங்களுக்கு ஊட்டிவிடவா?

எனக்கு கைல எதுவும் அடிப்படல.

அதன் பின் இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்..

பாப்பா எங்க?

மாமா ஆபீஸ்க்கு கூட்டிட்டு போய்ட்டாரு..

நீ இல்லாம இருப்பாளா?

இருப்பா.. என்கூட ஆபீஸ் வந்தாலும் மாமா கேபின்ல தான் முழு நேரமும் இருப்பா.

சரி..

தட்டை எடுத்து கொண்டு போய் கிட்சனில் வைத்தவள்.. மீண்டும் வந்து விஷ்வா அருகில் அமர்ந்து கொண்டாள். காய்ச்சல் கண்ட குழந்தை தாயின் கதக்கதப்பு தேடுவது போல் இங்கு குழலியும் விஷ்வாவின் அருகிலேயே இருந்தாள்.

டேப்லெட் எடுத்து போடு குழலி டைம் ஆகுது பாரு.

அமைதியாக மாத்திரைகளை விழுங்கினால்.

மீண்டும் வந்து அவன் மார்போடு சாய்ந்து கொள்ள, விஷ்வாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

சிறிது நேரத்தில் அவள் விசும்பும் சத்தம் கேட்க..

குழலி இன்னொரு வாட்டி கண்ணு கலங்குச்சு பளார்ன்னு ஒன்னு வைப்பன் டி..

எதுக்கு என்ன திட்டிட்டே இருக்கீங்க? எனக்கு எவ்ளோ கஷ்ட்டமா இருக்கு தெரியுமா உங்களுக்கு இப்படி ஆனது.

என்னால தான இப்படி ஆச்சு சாரி ஷிவா.

அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.

மன்னிச்சிடுங்க இனிமேல் நான் உங்ககிட்ட பேசாம இருக்க மாட்டன், சண்டை போட மாட்டன். என்று அவன் மார்பில் மீண்டும் புதைந்து கொண்டாள்.

எவ்ளோ சொன்னாலும் இப்படியே அழுதுட்டு இருக்காளே என்ற அலுப்பு தோன்றியது விஷ்வாவிற்கு.

நீ இப்படி அழுதா உள்ள இருக்க பாப்பாவும் அழும் டி, அந்த வார்த்தையில் அவள் அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டது.

இப்போ நான் இந்த விஷயத்தை பத்தி பேசுறது சரியா தப்பான்னு எனக்கு தெரில ஷிவா, ஆனா இத உங்ககிட்ட சொல்லணும்ன்னு எனக்கு தோணுது என்றவள் நீண்ட அமைதிக்கு பின் பேச துவங்கினால்.

அன்னைக்கு நைட் நீங்க குடிச்சிட்டு வந்திங்கள, அப்போ நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருந்தோம்.. உங்களோட பீக்ல நீங்க மயூரியோட பேர சொன்னிங்க.. என்றவளின் குரல் தழு தழுத்தது..

விஷ்வா அவள் சொன்ன செய்தியில் அதிர்ந்து போய் குழலியை விளக்கி அவள் முகம் பார்த்தான்.

அப்போ என்னோட மனநிலைய யோசிச்சு பாருங்க ஷிவா.

இது அவனுக்கு மிக மிக புதிய செய்தி. அவன் நினைவடுக்கில் கூட இப்படி ஒரு விஷயம் நடந்ததாக நினைவில் இல்லையே.

அவனுக்கே அவனை நினைத்து அவ்வளவு கோவம் வந்தது. நிச்சயமாக அவனுக்கு தெரியும் மயூரியை நினைத்து அவள் பெயரை உச்சரித்து இருக்க மாட்டான் என்று. அப்படி நினைக்கும் போதே அவனுக்கு குமட்டி கொண்டு வருகிறதே.

அன்று தானே அவள் தன்னிடம் வந்து வருணை பற்றி பேசியது எல்லாம்.. நான் அன்றைய தினத்தின் நினைவில் தான் அப்படி உளறியிருக்க வேண்டும் என்று சரியான காரணத்தையும் கண்டறிந்தான்.

என்ன காரணத்தை நான் தேடி தேடி கண்டு பிடிச்சாலும் அந்த நேரத்துல என் குழலி எவ்ளோ தவிச்சு இருப்பா.?? என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

குழலி இங்க பாரு டி என்று அவள் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி அவன் முகம் பார்க்க வைத்தான்.

ப்ரோமிஸ் டி.. மன்னிச்சுடு நான் இன்டென்ஷனலா அந்த மாதிரி சொல்லியிருக்க மாட்டன்.. அன்னைக்கு மதியம் தான் அவ என்கிட்ட வருண பத்தி பேசுனா.. நைட் கிளைண்ட் மீட்டிங் முடிச்சிட்டு வரும் போது கூட, அவ வருண காதலிச்சதுக்கு அப்பறம் எவ்ளோ மாறியிருக்கா அவளுக்காக இல்லனாலும் அந்த குழந்தைக்காக வருண்க்கு ஹெல்ப் பண்ணனும்னு நெனச்சிட்டு வந்தன் டி..

நாம எத அதிகமா திங்க் பன்றோமோ அது தான் டி நமக்கு கனவா வரும்..

நானும் அப்படி தான் டி போதைல மயூரி பேர சொல்லியிருப்பன்.

எனக்கு அப்போ அதலாம் தெரியாதே ஷிவா, நீங்க அந்த மாதிரி சொன்னதும் என் மனசு கோவம், விரக்தி இயலாமைன்னு எல்லா உணர்வுலயும் தத்தளிச்சது..

கல்யாணம் ஆனா புதுசுல நீங்க சொன்னிங்க எனக்கும் உனக்கும் செட் ஆகாது, நான் வேற பொண்ண லவ் பண்றன் அவகூட லிவிங்ல இருந்தன்னு சொன்னிங்க.. அப்பறம் நம்ம வெட்டிங் டே அன்னைக்கு நீங்க ரஞ்சிகிட்ட சொல்லிட்டு இருந்திங்கள எனக்கு ஒழுங்கா ட்ரஸ் பண்ண தெரிலன்னு.. எனக்கு அதெல்லாம் நியாபகம் வந்துச்சு அதான் உங்களுக்கு இப்போல்லாம் என்ன பிடிக்காம போய்டுச்சு உங்க மனசுல மயூரி வந்துட்டான்னு நினைச்சன்.. என்று சொல்லும் போதே அழுதுவிட்டால்.

என்மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா டி, நான் உன்மேல வச்சுருக்க காதல ஒரு முறை கூட நினைச்சு பார்க்கலயா?

என்மனசுல எப்பவும் நீ தான் டி இருப்ப.. இதல்லாம் நான் சொல்லாமலே உனக்கு புரியனும் குழலி.

இப்போ புரிஞ்சிகிட்டன் ஷிவா..

என்ன புரிஞ்சிகிட்ட?

உங்க மனசுல எப்பவும் நான் தான் இருப்பன்னு..

உன்னலாம் நம்ப முடியாது டி..

நம்புங்க ஷிவா.. ஐ லவ் யூ, ஐ லவ் யூ சோ மச் என்னால உங்கள விட்டு இருக்க முடியாது.

அப்பறம் அன்னைக்கு எப்படி சொன்னிங்க? என்ன டிவோர்ஸ் பண்ண போறன்னு.. எனக்கு எவ்ளோ கஷ்ட்டமா இருந்துச்சு தெரியுமா?

அப்பறம் என்ன சொன்னிங்க நான் உங்கள விட்டு போனா சுகபோக வாழ்வு போய்டும்ன்னு தான் நான் டிவோர்ஸ் வேணான்னு சொல்றன்னு சொன்னிங்கள?  அப்பறம் சொன்னிங்களே வயித்துல இருக்க பாப்பாவ வச்சு நான் உங்ககூட சேர நினைக்குறன்னு.. எப்படி உங்களால அப்படி சொல்ல முடிஞ்சுது?? நான் சுயநலவாதியா டா? சொல்லு நான் சுயநலவாதியா என்று அவன் டீஷர்ட்டில் திமிறி தெரிந்த புஜங்களை நறுக்கு நறுக்கென்று கிள்ளிவிட்டால். ஆஹ் வலிக்குது டி ராட்சசி. என்று அவளை இழுத்து அனைத்து கொண்டான். இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை..

பாப்பாகாக தான் என்ன ஏத்துக்குட்டிங்கன்னு நினைச்சன் ஷிவா.. உன் கூறுகெட்ட மூளை அப்படி தான் யோசிக்கும்ன்னு எனக்கு தெரியும் டி..

நான் அப்படி யோசிக்க நீங்க தான் காரணம். நீங்க தான் உங்க வார்த்தையாள என்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்துனீங்க..

உன்ன விட அதிகமா இல்ல டி..

குழலி விஷ்வாவை பாவமாக பார்த்தாள்.

அன்னைக்கு என்னென்ன பேச்சு பேசுன நீ?

நீ மாடர்ன்னா இல்ல, பெட்ல செட்டிஸ்ஃபை பண்ணல, குழந்தை பெத்து கொடுக்க சம்மதிக்கலன்னு நான் மயூரிய தேடி போனனா?

அப்பவே உன் வாய உடைச்சு இருக்கணும் என்றவனின் முகத்தில் திடீர் கோவம் வந்து ஒட்டிக்கொண்டது.

சாரி ஷிவா என்று அவள் தவறு செய்த குழந்தையாக தலை குனிந்தால்.

நான் பார்த்து வளர்ந்தவங்க, என்ன சுத்தி இருந்தவங்க எல்லாமே அல்ட்ரா மாடல் கேர்ள்ஸ் தான் டி.. அதனால  எனக்கு லைப் பார்ட்னரா வரபோற பொண்ணும் ஒரு மாடர்ன் கேர்ள்ளா  தான் இருப்பா அப்படின்னு நெனச்சிட்டு இருந்தன்.. திடிர்னு பக்கா விலேஜ்ல இருந்த உன்ன என் அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு.. நான் சத்தியமா என் கல்யாணத்தை அந்த சூழ்நிலைல ஒரு கிராமத்து பொண்ணு கூட எதிர்பார்க்கல டி..

இதெல்லாம் எப்படி எதிர்பார்க்கலயோ அதே மாதிரி தான் உன்கிட்ட நான் விழுவனும் எதிர் பார்க்கல..

அப்பறம் உன்ன மாதிரி யாராலயும் என்ன பெட்ல செட்டிஸ்ஃபை பண்ண முடியாது குழலி. உனக்கு புரியலையா டி நீ என்னோட ஹெவன் டி.. நான் பொய் சொல்ல விரும்பல, நான் உன்கிட்ட எதிர்பார்க்குறத நீ செய்யாத அப்போ எனக்கு கொஞ்சம் கடுப்பா தான் இருக்கும்.. ஆனா அது எனக்கு பெரிய விஷயம் இல்ல என்றான்.

சாரி விஷ்வா எனக்கு கொஞ்சம் ஷையா இருக்கும் அந்த நேரத்துல அதான் என்று அவன் முகம் பார்க்காமல் மார்பினுள் புதைந்தால்..

எனக்கு தெரியும் டி, உனக்கு அந்த விஷயம் பிடிக்கலனா நான் உன்ன கேட்டுருக்க கூட மாட்டன். உன் வெட்கம் தான் தடுக்குது அதனால தான் எனக்கும் அந்த டைம்ல கொஞ்சம் கோவம் வந்துடுது.

நமக்குள்ள என்ன குழலி வெட்கம்? என்னோட ஆசைய நான் உன்கிட்ட தான கேட்க முடியும்? இதல்லாம் உன்கிட்ட மட்டும் தான் டி எனக்கு தோணும் என்று அவனையே பார்த்து கொண்டிருந்த அவளின் பிறை நூதலில் முத்தமிட்டான்.

குழந்தை விஷயத்துல நீயே என்ன முழுசா நம்பி எனக்கு குழந்தை பெத்து குடுக்கணும்னு நினைச்சன் டி.. உன்ன கட்டாய படுத்தி குழந்தை பெத்து குடுக்க சொல்றதுல எனக்கு விருப்பம் இல்ல டி..

நீ ப்ரெக்னன்டா இருக்கன்னு உன் மிஸ்ட் பீரியட்ல தெரிஞ்சிக்குட்டன்.. அதான் உன்ன பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக நினைச்சன்..  அப்போ தான் நீயே பாப்பாவ பத்தி சொன்ன.. உன் மனசு மாறுனதுல எனக்கு சந்தோஷம் தான்.. ஆனா எனக்காக நீ இந்த குழந்தைய பெத்துக்க நினைக்க கூடாது. உன்னோட விருப்பமும் முக்கியம்ன்னு தோணுச்சு. அதான் உன்ன கஷ்ட்டபடுத்துறா மாதிரி பேசி உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைச்சன்.

உன் கண்ல நம்ம குழந்தை மேல இருந்த அன்பை புரிஞ்சிகிட்டன். அப்பறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு..

இப்போ வெளிப்படையாவே கேக்குறன்.. இப்போ நம்புறியா நமக்கு எத்தனை பாப்பா வந்தாலும் பூரணி தான் என்னோட முதல் குழந்தைன்னு..

விஷ்வாவை இறுக கட்டி கொண்டவள், நம்பறன் ஷிவா.. சாரி மன்னிச்சுடு..

நான் உன்ன புரிஞ்சிக்காம ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டன்.. எனக்கு இந்த ப்ரெக்னன்சி டைம்ல நிறைய சாப்பிடணும்னு ஆசையா இருந்துச்சு தெரியுமா? ஆனா நீ அன்னைக்கு அப்படி சொன்னல என் குழந்தைக்காக மட்டும் தான் உன்ன ஏத்துக்குறன் சுகப்போக வாழ்க்கைக்கு ஆசைப்படுறன்னு அதான் உன்கிட்ட எனக்கு எதுவும் கேட்க தோணல.. பூரணிய கூட நீ வாங்கிட்டு வந்த எதையும் சாப்பிடவிடல என்று அவள் கோவப்பட்டதற்கான காரணத்தை கூறினாள்.

உன் மூளை இப்படி கிறுக்கு தனமா யோசிக்கலனா தான் ஆச்சர்யம் டி..

என்னால தான் உனக்கு இப்படி ஆகிடுச்சு சாரி ஷிவா..

விடு டி ஆகணும்னு இருக்கு.. இதுக்குலாம் ஃபீல் பண்ணாத.

நானும் சாரி டி, அன்னைக்கு சண்டைல உன்ன அடிச்சதுக்கு என்று அவள் கன்னம் வருடி முத்தமிட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

95. கண்கள் நிறைந்த ஓவியமே!!
சூர்யா எனக்கு பைக் ஓட்ட கத்து தாடா என்று ஞாயிறு காலை பாவமாக வந்து நின்ற தன் மனைவியை கண்டு ஏக்க பெருமூச்சு விட்டான் சூர்யா?

இப்போ எதுக்கு வாயிலயே காத்து அடிக்குற?

இன்னைக்கு எத்தனாவது நாள்?

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள் மூன்று என்று விரலை காட்டினால்.

மூடிட்டு ரெஸ்ட் எடு டி..

காலைலயே மூட் ஏத்திட்டு.. டார்ச்சர் பண்ண வேண்டியது.

இப்போ எதுக்கு டா இப்படி சலிச்சுக்குற..

நானே இங்க காஞ்சி போய் இருக்கன் இதல நீவேற, குட்டி குட்டி ட்ரஸ்ஸ போட்டுட்டு வந்து என்ன வெறுப்பேத்திட்டு இருக்க.. என்று அவளின் குட்டி ஜீன் டவுசரயும் இடுப்புக்கு மேல் நின்று இருந்த டீஷர்டயும் பார்த்து பொறாமை பட்டான்..

பின் பாவமாக முகத்தை வைத்து கொண்டு, முடியல டி.. புரிஞ்சிக்கோ என்று சொன்னவனை பார்த்து அவளுக்கும் பாவமாக தான் இருந்தது.

குப்புற படுத்து இருந்தவனின் முதுகில் குரங்கு குட்டி போல் ஏறி படுத்து கொண்டாள் அவனின் கிட்டன்..

அம்மாஹ்ஹ் என்று கத்தியவன் மூச்சு முட்டி போனான் அவளின் திடீர் செய்கையில்.

என்னடா 52 கிலோவ உன்னால தாங்க முடியாதா?? நீ எல்லாம் ஒரு மணி நேரம் என்ன தான் ஜிம் அடிக்கிறியோ என்று அவள் சலித்து கொள்ள..

அவளை முதுகில் சுமந்து இருந்தவன்?? அடியே 52 கிலோவா நீ? எத்தன வருஷத்துக்கு முன்னாடி டி?? போய் வெயிட் செக் பண்ணி பாரு 62 கிலோ இருப்ப என்றான்.

ஓஹ் அப்போ என்ன குண்டா இருக்கன்னு சொல்றியா?

குண்டாலாம் இல்ல டி.. ரெண்டு தலகாணியும் இதுவும் மட்டும் தான் எக்ஸ்ட்ரா வெயிட் போட்டு இருக்கு என்று அவன் சுட்டி காட்டிய இடத்தில் அவள் தான் நெளிந்து போனாள்.

டேய் காம கொடூரா.. என்ன பீரியட்ஸ் அப்போ கூட விட மாட்டியா டா என்று அவள் வெட்க சிரிப்பில் வலித்த கன்னத்தை பொறுத்து கொண்டு கேட்க..

சும்மா இரு கிட்டன் நீ பேசுறது எல்லாம் எனக்கு இஸ்க்கு இஸ்க்குன்னு கேக்குது என்று ஏடாக்கூடமாக பேச.. அவன் மேல் இருந்து உருண்டு மெத்தையில் சரிந்து படுத்தால் ரஞ்சனி.

என் செல்ல குட்டி என்று கணவனை கொஞ்சியவள், நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணவா என்று ஹஸ்கி குரலில் அவன் காதில் கிசுகிசுத்தால்.
அவள் கேட்ட விதத்திலே முருக்கேறியவன் வேண்டாம் என்றா சொல்ல போகிறான்..

அவள் இதழில் அவன் ஆசை மொத்தத்தையும்வன்மையாக காட்டி  அவன் சம்மதத்தை கூறினான்..

ப்ளீஸ் டி முடியல ஏதாச்சும் பண்ணு என்று அவளிடம் சரணடைந்து விட்டான் சூர்யா..

அதன் பின் அங்கு கேட்டவை எல்லாம் சூர்யாவின் தாப குரலே.. சுக வேதனையில் முனக வைத்தவளை இழுத்து அனைத்து கொண்டவன், முகமெங்கும் முத்தமிட்டான்.

கிட்டன் நான் ஒன் இயர் கழிச்சு பாப்பா பெத்துக்கலாம்ன்னு சொன்னதுல உனக்கு ஏதாச்சும் வருத்தமா டி?

ரஞ்சனி அவனை பொய்யாக முறைக்க..

அதை கண்டு கொள்ளாதவன், இந்த ஒன் இயர் நமக்கே நமக்காகன்னு நாம சந்தோஷமா வாழனும் டி..

லூசு நான் பாப்பாவ பத்திலாம் எந்த பிளான்னும் பண்ணல டா.. பாப்பா எப்போ வருதோ வரட்டும்ன்னு தான் இருந்தன்.

நீ ஒன் இயர் கழிச்சு பெத்துக்கலாம்ன்னு சொன்ன எனக்கும் நீ சொன்ன ரீசன் ஓகே வா இருந்துச்சு, சோ ஓகே சொல்லிட்டன் என்று தோள்களை குலுக்கினால்.

குழலிக்கு பேபி பொறந்ததும்.. ஹனி மூன் ப்ளான் பண்ணியிருக்கன் என்று அவள் உதட்டை வருடினான்.

டேய் அடுத்த ஆட்டத்துக்கு அடி போடுறியா நீ என்று அவன் கையைத்தட்டி விட்டால் ரஞ்சனி.

இல்லடி கிட்டன் சும்மா என்று அவள் உதட்டை வருடி கொடுத்தான்.

லவ் யூ கிட்டன்..

லவ் யூ டூ என்று அவள் உறக்க கலக்கத்தில் மெதுவாக பிதற்றினால்.. பேசி கொண்டிருக்கும் போதே அவள் விழிகள் உறக்கத்தில் சொறுகியது..

அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை இறுக்கி அனைத்து கொண்டான் சூர்யா.

*****

விஷ்வ கர்ணன்.. பொற் குழலி..

அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தவனின் முன்பு மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள் குழலி.

இந்த மாதிரி மூஞ்சிய வச்சிட்டு இருந்தா அப்பறம் எனக்கு இன்னோரு கால் உடைஞ்சிடும் டி என்று அவன் விளையாட்டாக சொல்ல..

அவனை போட்டு அடித்து முடியை பிடித்து இழுத்து ரகளை செய்துவிட்டால் குழலி. அடியே என்ன டி புது புது பழக்கமா கத்துக்கிட்டு வர?? எங்க இருந்து டி கத்துகிட்ட புருஷன அடிக்கிறதுக்கு எல்லாம்? கலைந்து இருந்த தலையை ஒரு கையால் சரி செய்து கொண்டே அவன் கேட்க..

குழலி அழுது கொண்டு இருந்தாள்.. ஹய்யோ இத காரணமா வச்சே என்ன இன்னைக்கு லீவு போட வச்சுடுவாளே.. மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக பேசிவிட்டான்.

குழலி அவனை கண்களில் வழிந்த நீரோடு முறைத்து விட்டு பால்கனியில் போய் அமர்ந்து கொண்டாள்.

ஹ்ம்ம் ரெடியா இருந்துக்கோ விஷ்வா.. இன்னைக்கு உன்ன செய்ய போறா என்று நினைத்து கொண்டு பால்கனி சென்றான்.

அதாவது என்ன பிரச்சனைனா..

விஷ்வாவிற்கு கால் பூரண குணம் அடைந்து இரு வாரங்கள் ஆகிறது. அடுத்த நாளில் இருந்து அவன் அலுவலகம் புறப்பட தயாராகி நிற்க.. அதான் மன்த் என்ட் வந்துடுச்சில.. நெக்ஸ்ட் மன்த்ல இருந்து வேலைக்கு போங்க விஷ்வா என்று கெஞ்சி கொஞ்சி அவனை சம்மதிக்க வைத்தால்..

அவள் கொஞ்சலில் மயங்கியவன் சரி என்று மீண்டும் வீட்டில் இருந்தே வேலையை துவங்கினான்.

குழலி சொன்னது போல் முதல் தியதியில் வேலைக்கு கிளம்ப, விஷ்வா மயக்கமா வருது என்று அவன் மேலேயே தள்ளாடி விழ.. ஹேய் ஹேய் என்று அவளை கைதாங்களாக பிடித்து கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான்.. குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு கீழே சென்று லெமன் ஜூஸ் போட்டு கொண்டு வந்தான். அவ்வளவு பதறி விட்டான் விஷ்வா..

விஷ்வா என்கூடவே இருக்கியா.. மயக்கமா இருக்கு டா என்று சோர்வாக பேச.. உண்மை என்று நம்பியவன் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை பார்த்து கொண்டு அவளிடமும் நேரம் செலவிட்டான்.

அடுத்த நாள் அலுவலகம் கிளம்ப.. வராத வாந்தியை வர வைத்து, அன்றும் அவனை வீட்டில் இருந்தே வேலை செய்ய வைத்தான்.

அதற்கு அடுத்த நாள், மீண்டும் மயக்கம் வருவது போல் தள்ளாடி அவன் மேல் விழ, கைகளை கட்டி கொண்டு அவளை தான் உற்று பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.

ரொம்ப நேரம் ஆகியும் அவன் பதராமல் இருப்பதை கண்டவள் ஒற்றை கண் திறந்து விஷ்வாவை பார்க்க அவளை தான் முறைத்து கொண்டிருந்தான்.

அவள் மீண்டும் அவன் மீது சாய, ச்சீ கேவலமா நடிக்காத டி என்று அவளை பிடித்து தள்ளி நிறுத்தினான்.

அவள் கள்ள முழியில் நின்று கொண்டிருந்தாள்.. ஏன் டி இப்படி பண்ற?

விஷ்வா என்று சிணுங்கி கொண்டே அவன் சட்டை காலரை பிடித்து திருகினால்..

என்ன?

எனக்கு உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு.. என்ன விட்டு எங்கையும் போகாதீங்க என்கூடவே இருங்க என்று அவனை கட்டி கொண்டாள்.

உள்ளுக்குள் உற்சாகமாக இருந்தாலும்.. என்ன ஆச்சு டி உனக்கு?? ஸ்கூல் கிட் மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்க? உன் பழக்கம் தான் வயித்துல இருக்க பாப்பாக்கும் வர போகுது பாரு என்று செல்லமாக கடிந்து கொண்டான்.

உங்களுக்கு என்ன தெரியும் பொண்ணுங்களோட ஃபீலிங்ஸ் பத்தி? கர்பவதியா இருக்க எல்லா பொண்ணுங்களும் அவங்க புருஷன் கூடவே இருக்கணும்ன்னு  நினைப்பாங்க அத தான் நானும் நினைச்சன்.. அதுவும் நீங்க ரெண்டு மாசம் என்கூடவே இருந்துட்டிங்களா மறுபடியும் உங்கள வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்ட்டமா இருக்கு என்று மூக்கை சுருக்கினால்.

அந்த மூக்கை பிடித்து திருகியவன்.. நீ இப்படியே என்ன வேலைக்கு போக விடாம உன்கூடவே வச்சுக்கிட்டா புவாக்கு என்ன பண்றது என்றான் இரு கன்னத்தையும் மென்மையாக கிள்ளி..

அதான் மாமா தொழில் வச்சு இருக்காரே அத பார்த்துக்கோங்க..

அவளை முறைத்தவன் என்ன எங்க அப்பா ப்ளான் போட்டு குடுத்தாரா?

மாமாவ குறை சொல்லாதீங்க.. மாமா எவ்ளோ ஸ்வீட் தெரியுமா? என்று அவள் மாமனாரை புகழ..

விஷ்வாவிற்கு பொஸ்ஸசிவ்னஸ் தலை தூக்கியது.. ஏன் அப்போ நான்லாம் ஸ்வீட் இல்லையா என்று முறைக்க..

அவரு எனக்கு அப்பா டா..

அப்போ நானு?

நீ தான் எனக்கு எல்லாமே.. என்று அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் சொன்ன வார்த்தை விஷ்வாவிற்கு இறக்கை இன்றி பறக்கும் உணர்வை தந்தது.

என்னனமோ பேசி அவனை அன்றில் இருந்து இன்னும் இரண்டு நாட்கள் அதிகமாக விடுமுறை எடுக்க வைத்தால்.

அவனும் புலம்பி கொண்டே வழக்கம் போல் வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை செய்தான்.

இன்று மீண்டும் அவன் வேலைக்கு கிளம்ப.. கர்பவதி அவள் முகம் வாடிவிட்டது. அதுவும் அவன் சொன்ன வார்த்தை வேறு அவளுக்கு அழுகையை வர வைக்க.. பால்கனி சென்று அமர்ந்து விட்டால்.

பால்கனியில் அவள் இருகால்களையும் சோஃபா மேல் எடுத்து வைத்து கொண்டு கைகளால் முட்டி கால்களை கட்டி கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

என்ன விஷ்வா உன் நிலமை இப்படி ஆகிடுச்சு என்று அவன் மனசாட்சி அவனை கேட்காமல் இல்லை.

ஹேய் அழுமூஞ்சு ஏண்டி இப்படி அழுவுற?

அவள் கண்டு கொள்ளாமல் இருக்க.. குழலி புரிஞ்சிக்கோ டி சும்மா லீவுலாம் போட முடியாது. நான் இதுக்கு முன்னாடி இவ்ளோ லீவுலாம்  எடுத்தது இல்ல அது உனக்கே தெரியும் தான? 

அவன் சமாதானம் செய்தும் அவள் அழுது கொண்டு இருக்க.. குழலி ரொம்ப பண்ற டி..

ஏன் அப்படி சொன்னிங்க??

எதை கேட்கிறாள் என புரிந்து கொண்டவன், சும்மா விளையாட்டுக்கு தான் டி சொன்னன்..

உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.. என்று மீண்டும் அழுதாள்..

சரி டி எனக்கு டைம் ஆகுது நான் கிளம்பறன் ஈவினிங் வந்து பேசலாம் என்று அவன் அவசரமாக சொல்ல..

அவள் முகம் மீண்டும் வாடிவிட்டது. விஷ்வா ப்ளீஸ் என்று அவள் பேசவர..

குழலி everything has a limit. (எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு)

சும்மா லீவு போடு லீவு போடுன்னு சொல்லிட்டு இருக்க.. உன் அப்பனா அங்க கம்பெனி வச்சு நடத்திட்டு இருக்கான் என்று கோவத்தில் கத்திவிட..

வந்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு நின்றாள்.

ச்ச என்று காலை உதறி கொண்டு வெளியே சென்றவன்.. ஒரு நிமிடத்தில் மீண்டும் உள்ளே வந்து அனைத்து கொண்டான் சாரி டி சாரி ப்ளீஸ் கோச்சுக்காத.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டன் என்று அவன் கெஞ்ச.. அவள் அழுகை நிற்கவே இல்லை.

சாரி டி ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டே.. அவளை மெத்தைக்கு அழைத்து சென்றவன்.. இனிதான இல்லறத்தில் அவளை சமாதானம் செய்தான்.

அவன் வெற்று மார்பில் தலை வைத்து இருந்தவள், நாளைல இருந்து நான் ஆபீஸ்க்கு போறன் ஷிவா..

வேண்டாம் டி..

எனக்கு வீட்ல தனியா இருந்து பைத்தியம் பிடிக்குது.. இன்னும் ரெண்டு வாரத்துல எனக்கு ஆறாவது மாசம் தொடங்க போகுது.. இனி பயப்பட ஒன்னும் இல்ல நான் நாளைல இருந்து ஆபீஸ் போக தான் போறன் என்று அவள் உறுதியாக சொல்லிவிட அதற்கு மேல் விஷ்வாவால் எதுவும் பேச முடியவில்லை.

சரி போ.. ஆனா ரொம்ப பத்திரமா இருக்கணும் என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

96. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலி விஷ்வாவிடம் கூறியது போல் அலுவலகம் செல்ல துவங்கியிருந்தால். ஆறாம் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தவளுக்கு இப்போது தான் கருவுற்றிக்கும் வயிறு வெளியே தெரிந்தது.

குழலி வயிற்றை பிடித்து கொண்டு நடக்கும் அன்ன நடை விஷ்வாவிற்கு அவ்வளவு பிடித்தம்.

இதில் பூரணி பாப்பா வேறு அவள் அம்மாவின் வயிற்றை தொட்டு பார்த்து குழந்தை அசைவை கண்டு குதுகளிப்பால்.

இப்போது எல்லாம் மழலை மொழியில் வார்த்தைகளை கோர்த்து அழகாக பேசுகிறாள் பூரணி.. அவளின் சுட்டி தனத்தில் குழலி தான் சீக்கிரம் டயர்ட் ஆகிவிடுகிறாள். அதனால் இப்போது எல்லாம் பூரணி  பாப்பாவை பார்த்து கொள்ளும் பொறுப்பை விஷ்வா ஏற்று கொண்டான்..

விஷ்வாவிற்கு இருக்கும் ஒரே பயம், இந்த வயிற்றை சுமந்து கொண்டு அவள் அலுவலகம் செல்வது தான். ஏனென்றால் குழலிக்கு சில நேரங்களில் தலை சுற்றல் இருக்கும். அதை எதையும் கண்டு கொள்ளாமல் தினமும் அலுவலகம் செல்கிறாள்.

விஷ்வாவிற்கு தோணும் போது எல்லாம், குழலியை அலுவலகத்தில் வந்து பார்த்து செல்வான்.

கூடவே இருந்தாள் கூட இவ்வளவு மகிழ்ந்து இருப்பாளா என்று தெரியாது, அவனின் திடீர் வருகையில் துள்ளி குதிக்காத குறை தான் குழலிக்கு.

தினமும் இரவு அவளின் மணி வயிற்றிக்கு தந்தையும் மகளும் சேர்ந்து எண்ணை மசாஜ் செய்வர்..

அம்மா பாப்பு எபுஜி வயித்துள்ள போச்சு என்ற குட்டி மகளின் அதிகப்படியான கேள்விக்கு பதில் சொல்லாமல் விழிப்பர் குழலியும் விஷ்வாவும்..

ச்சொல்லுமா..

அது அம்மா பாப்பாவ முழுங்கிட்டாமா என்று விஷ்வா தான் ஏதாவது சொல்லி சமாளிப்பான்.

பேட் மம்மி.. என்று உதட்டை பிதுக்கும் பூரணி பாப்பா சூல் கொண்டிருக்கும் அன்னையின் வயிற்றில் பிஞ்சு உதட்டால் முத்தமிடுவாள்.

அக்காவின் அன்பு முத்தத்தை உணர்ந்தது போல் உள்ளிருக்கும் குட்டி குழந்தையும் தன் அசைவை காட்டும்.

அன்று நள்ளிரவு வரை தூக்கம் வராதவள், உறங்கி கொண்டிருந்த விஷ்வாவை முத்தமிட்டு எழுப்பி கொண்டிருந்தாள்.

அவளின் ஈர முத்தத்தில், உறக்கம் கலைந்தவன் என்னமா தூக்கம் வர்லயா என்று கேட்க..

பால்கனி போலாமா என்றால்..

விழி பிதுங்கியவன்..

ஆல்ரெடி மூணு ரவுண்டு போயாச்சு.. இதுக்குமேல சரக்கு இல்லடி, பாடி தாங்காது என்றான் பாவமாக..

எனக்கு வேணும் என்று குமரி வடிவில் இருந்து கொண்டு குழந்தையாக கெஞ்சி அடம் பிடித்தவளை இன்னும்  பிடித்து போனது ஆணவனுக்கு..

அவளை கைகளில் ஏந்தி கொண்டவன், பால்கனி சோஃபாவில் அமரவைத்து, அவளின் பிஞ்சு பாதங்களில் இருந்த மிஞ்சியில் இருந்து அவனின் முத்த அட்சாரத்தை துவங்கினான்..

கர்பகால ஹார்மோன்ங்களின் வேலையாள் உணர்ச்சி குவியலாக இருந்தாள் குழலி..

அவளை புரிந்து கொண்டவன் வாழை தண்டு கால்களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவன் பெயரை பிதற்ற வைத்தான் விஷ்வா.

அவள் விரல்கள் அவன் தலை கோதி கொடுக்க, விஷ்வா இன்னும் ஆர்வமானான்.. அவன் வேகத்தில் துடித்து அடங்கினால் குழலி.

மூச்சு வாங்கி கொண்டிருந்தவள், விஷ்வாவை இழுத்து அனைத்து முகமெங்கும் வேக முத்தமிட்டு அவள் உணர்வுகளை அவனுக்கு கடத்தினால்.

கொஞ்சம் நேரம் பால்கனியிலே அமர்ந்து இருந்தனர் இருவரும்.. விஷ்வா மார்பில் தான் சுருண்டு கிடந்தாள் குழலி..

பால்கனி திரை சீலைகளை விளக்கி விட்டு, குளிர் நிலவின் தென்றல் காற்றை அனுபவித்து கொண்டிருந்தனர்.

ஷிவா எனக்கு இப்போல்லாம் இது மாதிரி அடிக்கடி தோணுது டா.. எனக்கு எதாச்சும் பிரச்சனையா இருக்குமோ என்று பாவமாக கேட்ட மனைவியை மீண்டும் அள்ளிக்கொள்ள தோன்றியது..

உன் வயித்துல பாப்பா இருக்குமா, உன் உடம்புல இருக்கு ஹார்மோன்ஸ்லாம் இப்போ எக்கு தப்பா வேலை செய்யும்..

உனக்கு என்கூட இருக்கணும்னு தோணும், நல்ல டேஸ்ட்டி ஃபுட் சாப்பிடணும்னு தோணும், காரணமே இல்லாம அழ தோணும், சின்ன விஷயத்துக்கு கூட கோவம் வரும். இதல்லாம் ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது நடக்குற பொதுவான விஷயம்.

இதல பிரச்சனைலாம் எதுவும் இல்ல.. எனக்கு இந்த குழலிய ரொம்ப புடிச்சு இருக்கு.. முன்னாடி இருந்த குழலி அவளுக்கே என்கூட சேரணும்னு தோணுச்சுனாலும் வெட்கப்பட்டுகிட்டு என்கிட்ட கேட்க மாட்டா.. நானே அவள எடுத்துக்கணும்னு நினைப்பா.

ஆனா இப்போ இருக்க குழலி என்ன ரேப் பண்ண கூட தயங்க மாட்டா..  எந்த நேரமா இருந்தாலும் என்ன கூப்பிட்டு அவளுக்கு வேண்டியத கேப்பா என்று உல்லாசமாக கூறினான்.

ச்சீ போடா.. என்று வெட்கத்தில் சிவந்து அவன் மார்பினுள் புதைந்து கணவனின் ஆண் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தால்.

குழலி சிக்ஸ்த் மன்த் முடிய போகுது, அடுத்த மாசம் வளைகாப்பு வச்சுக்கலாமா?

ஏன் ஷிவா இவ்ளோ சீக்கரம்?

ஒன்பதாவது மாசம் உனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கும் டி. வயிறு இன்னும் பெருசாகிடும். சீக்கரம் பண்ணிட்டா ரெஸ்ட் எடுக்கலாம்ல.. நான் ப்ரெக்னன்சி போட்டோ ஷூட் வேற ப்ளான் பண்ணியிருக்கன்..

சரி உங்க விருப்பப்படி செய்ங்க.. 

குழலிக்கு நீண்ட நேரமாகியும் உறக்கம் வராமல் இருக்க..

அவள் உடல் சூடு பொறுக்கும் வரை வெந்நீர் ஊற்றி குளிக்க வைத்தான். அந்த வெந்நீர் குளியல் அவ்வளவு இதமாக இருந்தது குழலிக்கு.

அதன் பின் மெத்தைக்கு வந்த சில நிமிடங்களிலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றால் குழலி.

உதட்டில் மென்முத்தம் வைத்தவன், புன்னகை முகமாக உறங்கி போனான்.

அடுத்த நாளே வீட்டில் உள்ளவர்களிடம் பேசி ஏழாம் மாதம் வளைகாப்பை உறுதி செய்தான்.

சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தை புக் செய்து இருந்தான் விஷ்வா.

ஷிவா ரொம்ப செலவு பண்ணாதீங்க சிம்பிளா பண்ணுங்க என்றவளை முறைத்து தள்ளினான் விஷ்வா.

வளைகாப்பு அன்னைக்கு பொறுப்பா வந்து, அந்த மேடைல உக்கார வேண்டியது மட்டும் தான் உன் வேலை.. எத பத்தியும் நீ பேச கூடாது சரியா? ஆள் காட்டி விரல்களை அவள் இதழ்கள் மேல் வைத்தான்.

இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என புரிந்து கொண்டவள் அமைதியாகிவிட்டால்..

வீட்டிலே ஈவென்ட் ஆர்கனைசர் இருக்க, வசதியாகி போனது விஷ்வாவிற்கு மண்டபத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினான்.

பத்திரிகை அடித்து, உற்றார் உறவினர்களில் இருந்து அலுவலக நண்பர்கள் வரை அனைவருக்கும் கொடுத்து அழைத்தான்.

முத்தரசியை வழக்கம் போல் காரில் அழைத்து வந்துவிட்டான் விஷ்வா.

அம்மம்மாவை பார்த்ததும் அவரோடவே இருந்து கொண்டாள் பூரணி..

என்னால என் பொண்ணு வளைகாப்புக்கு நீங்க எதிர்பாக்குற அளவுக்கு எதுவும் செய்ய முடியல, இந்த பணத்தை மட்டும் வாங்கிக்கோங்க அண்ணா என்று சுந்தரமிடம் சிறு தொகையை கொடுக்க..

அட நீவேற அரசி, நானே என் மருமக வளைகாப்ப சீரும் சிறப்புமாக எடுத்து நடத்த ஆசைப்பட்டன், ஒத்த ரூபா கூட வாங்கல இந்த பையன்.. என் பொண்டாட்டிக்கு என் காசுல தான் எல்லாம் செய்வன்னு சொல்லிட்டான் என்று சுந்தரம் வருந்த..

ஆமா அத்தை ஈவென்ட் ஆர்கனனைஸ் பண்ற எனக்கே பணம் குடுக்க வந்தான்.. அதல எனக்கும் அவனுக்கும் பிரச்சனையே ஆகிடுச்சு என்று சூர்யா ஒருபுறம் கூறினான்.

முத்தரசியிடமும் அதே பதில் தான்  என் மனைவிக்கு எல்லாம் நான் தான் செய்வேன் என்று உரிமையாக  கூறிவிட்டான்.

முத்தரசி அவர் வைத்து இருந்த தொகையில், ரஞ்சனியை அழைத்து கொண்டு நகை வாங்க சென்றார். அதில் ரஞ்சனிக்கும் அவள் மறுக்க மறுக்க ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தார்.

நாட்கள் மகிழ்ச்சியாக செல்ல, வளைகாப்பு தினமும் அழகாக விடிந்தது.

அசைந்தாடும் தேரை போல் அழகாக நடந்து வந்தாள் குழலி. உடலை உறுத்தாத பச்சை வண்ண காஞ்சி பட்டில் கொஞ்சமே கொஞ்சம் உடல் பூசி அழகாக ஜோலித்தால் குழலி.

அந்த பட்டு புடவையும் மணி வயிற்றில் இருந்த ஒட்டியாணமும் அவள் சூல் தாங்கிய வயிற்றை இன்னும் கொஞ்சம் எடுப்பாக காட்ட அழகா இருந்தாள் குழலி.

விஷ்வாவிற்கு அவன் மனைவி மேல் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. குழலிக்கு தங்கமும் வைரமும் இழைத்து பூசியிருந்தான்.

பூரணி பாப்பாவும் விஷ்வாவும் சேர்ந்து தான் குழலிக்கு முதல் நலுங்கை வைத்தனர். இதிலும் என் மனைவி என் உரிமை என்று விஷ்வா கூறிவிட.. ரொம்ப ஓவரா போறடா என்பதோடு முடித்து கொண்டனர் வீட்டில் உள்ளவர்கள்..

நலுங்கு வைத்து முடித்தவன், நான்கு மரகத பச்சை தங்க வளையல்களை அவள் கைகளில் அணிவித்து, இரண்டு வைர வளையல்களை பூரணி பாப்பா கை பிடித்து அணிவித்து விட்டான். கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் குழலியின் முகத்தை இருக்கைகளிலும் ஏந்தி கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனின் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்திருக்க, அவன் கொடுத்த முத்தத்தில் அனைவரும் ஒன்றாக உற்சாக குரல் எழுப்பி விஷ்வாவை வெட்கப்பட வைத்தனர்.

பின் விஷ்வாவும் அந்த திவான் போன்ற இருக்கையில் அமர்ந்து கொள்ள பூரணி பாப்பா அவர்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டாள்..

விஷ்வாவிற்கும் சேர்த்து நலுங்கு வைத்து விழாவை சிறப்பித்தனர் பெரியவர்கள்.

ரஞ்சனியும் குழலி விஷ்வாவிற்கு நலுங்கு வைத்து விட்டு, சூர்யாவை தேடி ஓடினால்..

சூர்யா அங்கு யாரிடமோ பேசி கொண்டிருக்க, மூச்சு வாங்க அவன் முன் வந்து நின்றாள் ரஞ்சனி.

அவளை கண்டதும், பேசி கொண்டிருந்தவரிடம் புன்னகைகைத்து விட்டு மனைவியிடம் வந்தான்..

என்ன கிட்டன் ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடிவர? என்று கேட்டு கொண்டே வேர்த்து இருந்த அவள் முன் நெற்றியை அவனின் கர்ச்சீஃபால் ஒத்தி எடுத்தான்..

சூர்யா, குழலிக்கு வளைகாப்பு பண்றத பார்த்து எனக்கும் ஆசை வந்துடுச்சு டா.. எனக்கும் பாப்பா வேணும் என்றால் சிவந்த கன்னங்களுடன்..

அவளின் வெட்கத்தை ரசித்தவன், என் கிட்டன் ஆசைய நிறைவேத்துறத விட எனக்கு என்ன முக்கியமான வேலை இருக்க போகுது.. இனி எந்த ஃபிளவர்ஸும் வேண்டாம்.. நாம பாப்பா பெத்துக்கலாம் என்றான் சூர்யா.

இருக்கும் இடம் மறந்து சில நொடியில் அவனை அனைத்து விடுவித்தால் ரஞ்சனி.

சரி வா விழா நடக்குற இடத்துக்கு போலாம் என்று அவள் கைபிடித்து அழைத்து சென்றான் சூர்யா.

குழலி எந்த சோர்வும் இல்லாமல் உற்சாகமாக இருந்தாள். விஷ்வா தான் அவளை பார்த்து பார்த்து கவனித்து கொள்கிறானே.. அவள் முகம் கொஞ்சம் மாறினாலும் முடியலையா மா, என்று தாயாக தாங்கி கொள்கிறான். அவளுக்கு பிடித்த உணவுகளை மட்டும் ஊட்டி விட்டு, வெது வெதுப்பான நீரை பருக கொடுத்தான். சாப்பாட்டுல நெய் கொஞ்சம் அதிகமா இருக்கு டி, இப்போ இருக்க அசதிக்கு நீ நடக்க கூட மாட்ட அதான் சுடுதண்ணி.

ரொம்ப பண்றிங்க என்று உதட்டை சுழித்து கொண்டு வெது வெதுப்பான நீரை குடித்தால்.

வளைகாப்பு நிகழ்ச்சி அனைவரின் ஆசிர்வாதத்திலும் நல்ல முறையில் முடிந்தது.

ஆலம் கரைத்து திருஷ்டி கழித்து தம்பதியினரை உள்ளே அழைத்து கொண்டனர்.

விஷ்வா குழலி அறை..

அவள் நகைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கழட்டி வைத்தான் விஷ்வா, நீண்ட கூந்தலில் உள்ள பூ அலங்காரத்தை அவளுக்கு நோகாதப்படி கழட்டி, ஆடை கலைந்து குளியல் அறை அழைத்து சென்றவன் சுடுநீரில் குளிக்க வைத்து, உடுத்தி கொள்ள நைட்டியை மட்டும் கொடுத்தான்.

அசதியில் இருந்தவள் படுத்ததும் விஷ்வாவின் கைவளைவில் உறங்கி போனாள்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

97. கண்கள் நிறைந்த ஓவியமே!!
வளைகாப்பு முடிந்த இரு தினத்தில் புறப்படுகிறேன் என நின்ற முத்தரசியை முறைத்து வைத்தனர் வீட்டில் இருந்த அனைவரும்..

முத்தரசி உன் பொண்ணு மேல உன்னக்கு அக்கறையே இல்லையா? வாயும் வயிறுமா உள்ள பொண்ண விட்டுட்டு ஊருக்கு போறன்னு சொல்ற.

வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு அண்ணி என்று, பெண் கொடுத்த வீட்டில் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பது என அவர் தயங்க..

நீ இங்கேயே இருந்துரு அரசி.. நாங்க எல்லாம் இங்க இருக்கும் போது நீ மட்டும் ஏன் அங்க தனியா கஷ்ட்டப்படுற?

இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல உனக்கு இன்னொரு பேத்தியோ இல்ல பேரனோ பொறக்க போறான், இங்கயே இருந்து குழந்தைய பார்த்து கொஞ்சி நேரத்த செலவிடு..

உன் அண்ணாவும் வேலை வேலைன்னு அந்த ஆபீஸ்லயே இருக்காரு.. பாத்தாதக்கு குழலியையும் கூட்டிட்டு போறாரு. அவருக்கு அப்பறம் குழலி தான் அவர் தொழில பாத்துக்க போறாளாம்.. இப்படி எல்லாரும் வேலைக்கு போயிடுறாங்க நான் மட்டும் தனியா  இருக்கன். நீ என்கூட இருந்தா எனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் முத்து. இங்கயே இருந்தரன் என்று அவர் அனைத்து காரணங்களையும் அடுக்க..

வீட்டில் இருந்தவர்களுக்கும் அதுவே சரி எனப்பட்டது. குழலிக்கு சொல்லவும் வேண்டுமா?

ஆமாம்மா.. எவ்ளோ நாள் தான் நீ தனியா இருப்ப? எனக்காக நீ ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்ட. உன்ன என்கூடவே வச்சு பார்த்துக்கணும்னு ஆசையா இருக்கு. ப்ளீஸ் மா என்கூடவே இருமா என்று கெஞ்சினால் குழலி.

அவர் இன்னமும் தயங்கி கொண்டு இருக்க, விஷ்வா சூர்யா ரஞ்சனி என அனைவரும் பேசி பேசி அவர் மனதை மாற்றி மகளோடு நிரந்தரமாக தங்க சம்மதிக்க வைத்தனர்.

குழலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பூரணி பாப்பா அம்மம்மா விடமே ஒட்டி கொண்டாள்.

விஷ்வா ஏற்கனவே முடிவு செய்தது போல், குழலி மற்றும் பூரணியை அழைத்து கொண்டு ப்ரெக்னன்சி போட்டோ ஷூட் செய்தான்.

பிங்க் அன்ட் வொய்ட் காம்பினேஷனில் குட்டி பிராக், அதே நிறத்தில் குட்டி ஷூ, மொத்த சில்க்கி முடியையும் தூக்கி உச்சியில் குடுமி போட்டு விட்டு, குட்டி குட்டி பிங்க் நிற கிளிப்க்ளை தலையில் வைத்து குழந்தையை அழகாக தயாராகினான் விஷ்வா.

குழலிக்கும் பிங்க் நிறத்தில் கையில்லா ப்ரெக்னன்சி அம்ரல்லா கவுனை வாங்கி இருந்தான்.

ஷிவா இது என்ன கையில்லாம இருக்கு என்று அவள் முகத்தை சுழிக்க.. ப்ளீஸ் டி உனக்கு இது அழகா இருக்கும் போட்டுக்கோ என்று அவளை கொஞ்சி கொஞ்சி அந்த உடையை அணிய வைத்தான். அவனும் அவர்களுக்கு மேட்ச்சாக பிங்க் ஷர்ட் வொய்ட் பேண்ட் என அட்டகாசமாக தயாராகி அவர்களை அவுட் டோர் போட்டோ ஷூட் செய்ய அழைத்து சென்றான்..

குழந்தையை தரையில் அமர வைத்துவிட்டு இருவரும் மெய் மறந்து பார்த்து கொள்வதும், குழந்தையும் விஷ்வாவும் ஒரே நேரத்தில் குழலிக்கு முத்தமிடுதுவது, வயிற்றில் உள்ள குழந்தைக்கு முத்தம் கொடுப்பதும்,  பேசுவதும் என போட்டோக்களை எடுத்தனர் அந்த புகைப்பட கலைஞர்கள்..

எந்த ஒரு செயற்கை உணர்வுகளும் இன்றி அனைத்தும் தத்ருபமாக இயற்கையாக இருந்தது அவர்களின் முக பாவனங்கள்.

பூரணி பாப்பாவை சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், விஷ்வா மகளை அழகாக கையாண்டான்.

அருகில் உள்ள கடற்கரைக்கும் சென்று கொஞ்சம் போட்டோக்களை எடுத்தனர். வீட்டில் இருந்தே உணவு, பழ கலவைகள் என கொண்டு வந்து விட்டதால் நேரத்திற்கு சாப்பிட்டு முடித்தனர்.

மாலை போல் வீடு வந்து சேர்ந்தவர்கள் அசதியில் குளித்துவிட்டு உறங்கி போயினர்.

விஷ்வாவின் அரவணைப்பிலும் அன்பிலும் குழலியின் கர்பகலாம் அழகாக சென்றது..

வீட்டில் உள்ள அனைவரும் அவளை தாங்கினர். ரஞ்சனி வங்கியில் விடுமுறை எடுத்து கொண்டு குழலியோடு நேரம் செலவிட்ட நாட்கள் எல்லாம் உண்டு.

குழலிக்கு இப்போது ஒன்பதாம் மாதம் துவங்கியிருக்க.. அவளை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டார் சுந்தரம். மாமா இன்னும் கொஞ்சம் நாள் வரன் என்றவளை வீட்டில் உள்ள அனைவரும் கர்பவதி என்றும் பாராமல் திட்டி தீர்க்க.. அவள் பாவமாக விஷ்வாவை துணைக்கு அழைத்தாள்.

எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் போனை நோண்டி கொண்டிருந்தான் விஷ்வா.

மனைவியை தனிமையில் விடாமல், விஷ்வாவும் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்ய துவங்கினான்.

இந்த ஒன்பதாவது மாதம் விஷ்வாவிற்கு சோதனை காலமாக மாறியது என்று சொன்னால் மிகையாகாது.

முன்பெல்லாம், நடு ராத்திரியில் உறங்கி கொண்டிருக்கும் விஷ்வாவை எழுப்பி கூடலுக்கு அழைப்பவள் இப்போது எல்லாம் பசிக்குது விஷ்வா பிரியாணி வாங்கி தா என்று அட்டகாசம் செய்கிறாள்..

அவன் போனில் நேரத்தை பார்க்க மணி இரண்டு என காட்டும்.. மனைவியை பாவமாக பார்ப்பான் விஷ்வா.

நான் உனக்கு ஆம்ப்லேட் போட்டு தரட்டுமா? நாளைக்கு காலைல உனக்கு வீட்லயே பிரியாணி செஞ்சு தரன் என்று உடன்படுக்கைக்கு வருபவனை முறைத்து வைப்பால்.

ஆராமுச்சுட்டா இனி பிரியாணி சாப்பிடாம தூங்க மாட்டா என்று பாதி தூக்கத்தில் கொட்டாவி விட்டு கொண்டே புலம்புவான்..

இப்போது எல்லாம் இது அடிக்கடி நடப்பவை தான்.. அதனால் விஷ்வாவிற்கு பழக்கமாகி விட்டது.

மிட் நைட்ல யாராச்சும் இவ்ளோ ஹெவியா சாப்பிடுவாங்களா என்று கேட்டாள்..
உனக்கு என்மேல பாசமே இல்ல, எனக்காக ஒரு பிரியாணி கூட வாங்கி தர மாற்ற என்று அழுதுவிடுவாள்..

ஹேய் ப்ளீஸ் டி, அழாத இரு ஆர்டர் பண்றன் என்று போனை எடுப்பவனிடம்..

மீண்டும் விஷ்வ்வ்வ்வா என்று ராகம் இழுப்பால்..

இப்போ என்ன டி? என்று சலித்து கொள்வான்..

போ நீ இவ்ளோ சலிச்சுகிட்டுலாம்  எனக்கு பிரியாணி வாங்கி தர வேண்டாம். வயித்துல இருக்க புள்ள பட்னியாவே இருக்கட்டும் என்று வேகமாக படுத்து கொள்வால்..

ஹேய் பொறுமையா படு டி, என் இப்படி வேகமா படுக்குற என்று கத்தினால் கண்டு கொள்ளவே மாட்டாள்..

சரிவா வெளிய போய் பிரியாணி சாப்பிட்டு வரலாம் என்று அழைத்தாள், பல்லை காட்டி கொண்டு மீண்டும் எழுந்து அமர்வால்.. அவள் ராகம் இழுத்தது இதற்கு தானே..

பூரணி பாப்பா, அவள் அம்மம்மாவோடு உறங்கி கொண்டிருக்க.. அந்த நள்ளிரவிலும் பரபரப்பாக காட்சியளித்த சென்னை மாநகரை காரில் வளம் வந்தனர்.. பிரியாணி உண்டு முடித்ததும் வீட்டிற்கு வண்டியை செலுத்தியவனை கொஞ்சி கெஞ்சி லாங் ட்ரைவ் அழைத்து வந்து விட்டாள்.

பின் நன்றாக சுற்றி திறிந்தவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எழுவதற்கு முன் வீடு வந்து சேர்ந்தனர். இல்லையென்றால் அவர்களிடம் யார் திட்டுவாங்குவது.

அன்று மதியம் விஷ்வா மடிக்கணியில் வேலை செய்து கொண்டிருக்க..

ஆர்ஹா அம்மா என்று கத்திவிட்டால் குழலி..

டைப் செய்து கொண்டிருந்த மெயிலை அப்படியே போட்டுவிட்டு அவளிடம் பதட்டத்தோடு ஓடி வந்தவன்.. குழலி என்ன ஆச்சு டி வலிக்குதா? எங்க வலிக்குது இரு நான் அம்மாவ கூட்டிட்டு வரன் என்று அவள் முக பாவனைகளை கவனிக்காமல் அவனே வலியில் துடிப்பது போல் கேள்விகளை கேட்க..

குழலி அவனை விட்டு எழுந்து கொஞ்சம் இடுப்பை வளைத்து ஒரு நடன ஸ்டெப்பை போட்டாள்..

நடிச்சியா என்று கேட்டவனின் முகத்தில் அவ்வளவு கோவம்..

அதை புரிந்து கொள்ளாதவள்.. கண்ணடித்து சிரிக்க..

பட்டென்று வைத்தான் ஒரு அடி அவள் கன்னத்தில், குழலிக்கு அந்த அடி வலிக்கவில்லை என்றாலும்.. விஷ்வா அடிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..

அழுதுவிட்டால்..

என்ன பார்த்தா பைத்தியகாரன் மாதிரி இருக்கா உனக்கு? என் எமோஷன்ஸ் கூட விளையாடிட்டு இருக்க.. என்ன சொல்லணும் நீ கீ குடுத்த பொம்மை மாதிரி ஆடிட்டு இருக்கன்ல அதான் உன் இஷ்ட்டத்துக்கு பண்ணிட்டு இருக்க என்று கத்திவிட்டான்.

நீ.. நீங்க டென்ஷனா இருந்தா மாதிரி இருந்துச்சு அதான் உங்கள ரிலாக்ஸ் பண்ண அப்படி பண்ணன்..

விஷ்வாவிடம் எவ்வளவு கிறுக்கு தனமாக நடந்து கொள்வாளோ அதே அளவு அவன் மீது பயமும் உண்டு.

இப்போதும் அது போல் மருண்டு விழிக்க, அவன் கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு லேப்டாப்பை எடுத்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

குழலி விஷ்வாவின் கோவத்தில் தான் தன் தவறை உணர்ந்தால். கீழே சென்றவல் சோஃபாவில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் விஷ்வாவின் அருகில் அமர்ந்து கொண்டாள். விஷ்வா லேப்டாப்பில் பிஸியாக இருந்தான்.. விஷ்வா என்று அவள் அழைக்க அவன் கண்டு கொள்ளவே இல்லை.

குழலி அவன் புஜங்களுக்குள் தன் கைகளை கோர்த்து கொள்ள..

ஒழுங்கா எந்திரிச்சி போய்டு, வாங்கி கட்டிக்காத என்றான்.. அவள் அப்போதும் அவனை விடாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

விஷ்வா அதன்பின் எதுவும் பேசாமல் அவன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.

அதான் அடிச்சிட்டாருல அப்பறம் எதுக்கு என்கிட்ட பேசாம இருக்காரு என்று மனதோடு புலம்பி கொண்டு உண்ட மயக்கத்தில் அவன் தோளில் சாய்ந்த வாக்கில் உறங்கி போனால்.

அவளின் மெலிதான குறட்டையில், அவன் இதழ்கள் விரிந்தது. அவள் உச்சியில் முத்தமிட்டவன் இப்போல்லாம் ஓவர் அட்டகாசம் பண்றா என்று நினைத்து கொண்டு, உறங்கும் பனி சிற்பத்தை கைகளில் அள்ளி கொண்டு அவர்கள் அறைக்கு சென்று படுக்க வைத்தான்.

அடித்த கன்னத்தில் மென்முத்தம் வைத்தான்.. வீரியம் இல்லா அரையை தான் கொடுத்தான், இருந்தும் அடித்துவிட்ட குற்ற உணர்வு நெஞ்சிக்குள் இருக்க தான் செய்தது.

அவசரமில்லா வேலையை கிடப்பில் போட்டவன் அவளை அனைத்து கொண்டு படுத்து விட்டான்.

அவனை சமாதானம் செய்ய அவள் செய்யும் கிறுக்கு தனமாக விஷயங்கள் பிடித்துவிட அடுத்த நாள் வரை இல்லாத கோவத்தை இழுத்து பிடித்து வைத்திருந்தான் விஷ்வா.

மீண்டும் குழலி ஆர்ஹா என்று கத்த..

அவள் முகத்தை பார்க்காமல் உஷ்ண மூச்சை விட்டவன், இன்னொரு டைம் இப்படி விளையாடுன அடிவாங்குவ டி என்று கத்திவிட்டு வேலையை பார்த்து கொண்டிருந்தான்.

இழுத்து இழுத்து மூச்சு விட்டவள், இந்த முறை பலமாக கத்திவிட.. அப்போது தான் அவள் முகத்தை பார்த்தான்..

முகமெல்லாம் வேர்த்து, வயிற்றில் கைவைத்து கொண்டு வலியால் துடித்து கொண்டிருந்தாள் குழலி.

குழலி என்று அருகில் வந்தவன், அவள் வலி உணர்ந்து அவளை கைகளில் அள்ளி கொண்டு கீழே வந்தான்..

குழலியின் பிரசவ தியதி நெருங்குவதால் எப்போதும் வீட்டில் ஆட்கள் இருந்து கொண்டே தான் இருந்தனர்..

குழலி வலியில் துடித்து கொண்டிருப்பதை கண்டு துரிதமாக செயல்பட்ட சூர்யா காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

மகேஷ்வரி முத்தரசி பூரணி பாப்பா என வீட்டில் இருந்தவர்களும் மருத்துவமனை கிளம்பி விட்டனர்.

பூரணி பாப்பா வலியில் துடித்து கொண்டிருந்த அவள் அம்மாவை கண்டு அவளும் அழுதாள்.

சுந்தரம் ரஞ்சனி மற்றும் அவள் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனைவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

98. கண்கள் நிறைந்த ஓவியமே!!
குழலிக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் இரண்டாம் குழந்தைக்கும் அறுவை சிகிச்சை செய்வது தான் நல்லது என முன்பே மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இருந்தும் குழலி இப்போது வலியில் துடித்து கொண்டிருக்க விஷ்வாவும் அந்த நிமிடம் கலங்கி போனான்..

இவ்வளவு சீக்கரம் குழந்தைக்கு ஆசைப்பட்டு இருக்க கூடாதோ என்று யோசித்து கலங்கியவன் மருத்துவரிடம் சென்று எங்களுக்கு இந்த ஒரு குழந்தை போதும், குழலிக்கு பேமிலி பிளானிங் செய்து விடுங்கள் என கூறினான். மருத்துவர் அவனை கண்டு சிரித்துவிட்டு சரியென்றார்.

பின் அவளை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.. அதன் படி விஷ்வாவிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, குழலியை ஆபரேஷன் தியேட்டர் அழைத்து சென்றனர்.

அடுத்த அரைமணி நேரத்தில் விஷ்வ கர்ணன் மற்றும் பொற் குழலியின் மகன் ஆர்ப்பாட்டத்தோடு வெளியே வந்தான்..

குழந்தையின் அழுகை சத்தத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்..

விஷ்வாவிற்கு குழந்தையின் வரவு மகிழ்ச்சியாக இருந்தாலும், வலியில் துடித்த மனைவியின் முகம் மனக்கண்ணில் வந்து போனது..

குழந்தையை கொண்டு வந்த செவிலி பெண்ணிடம், குழந்தையை வாங்காமல் என் குழலி எப்படி இருக்கா என்றான்..

அவங்க நல்லா இருக்காங்க சார், முழிச்சிட்டு தான் இருக்காங்க.. இன்னும் ஒன் ஹவர்ல வார்டுக்கு மாத்திடுவாங்க குழந்தைய வாங்கிக்கோங்க சார் என்றால்.

குழலியின் நிலை தெரிந்த பின்னே  நிம்மதி மூச்சு விட்டான் விஷ்வா.

பின் குழந்தையை வாங்கி கொண்டவன், தன்னையே உரித்து வைத்து இருக்கும் நகலை கண்டு பூரித்து போனான்..

ரஞ்சனி வந்து குழந்தையை ஆசையாக பார்க்க அவள் கைக்கு மாற்றி வைத்தான் விஷ்வா.. அதன் பின் அனைவரின் கைகளிலும் வளம் வந்தான் குழலி விஷ்வாவின் தவ புதல்வன்.

ப்பாஹ் தம்பிய என்குட்ட குதுங்க என்று பூரணி பாப்பா அவள் மடியில் குழந்தையை வைக்க சொல்லி ஆர்ப்பாட்டம் செய்ய அவள் குட்டி மடியிலும் குழந்தையை வைத்தனர்.

குழலியை அறைக்கு மாற்றி இருந்தனர்.. விஷ்வா அவள் கையை விடவே இல்லை. ரொம்ப பயந்துட்டன் டி, அவள் வயிற்றை மென்மையாக தொட கூட பயந்தான் எங்கே வலித்து விடுமோ என்று..

வலிக்குதா? இல்ல ஷிவா மறுத்து போய் இருக்கு எந்த உணர்வும் தெரியல.. நாளைக்கு தான் வலி தெரியும்..

டோன்ட் வொரி பேபி, நான் பெயின் கில்லர் குடுக்க சொல்றன்.. பெயின் இருக்காது என்றான்..

எனக்கு இதல்லாம் பழக்கம் தான் ஷிவா..

பூரணி பாப்பா கவர்ன்மன்ட் ஹாஸ்பிடல்ல தான் பொறந்தா, அங்க அனஸ்தீசியா குடுக்கறதோடு சரி, வலி இல்லாம இருக்க எந்த மருந்தும் மாத்திரையும் குடுக்க மாட்டாங்க. தாங்கிக்க தான் வேணும்.

என்னனு தெரில.. கொஞ்சம் நேரம் முன்னாடி ஆபரேஷன் தியேட்டர்ல படுத்துட்டு இருக்கும் போது பழசு எல்லாம் நியாபகம் வந்துடுச்சு.. பூரணி வயித்துல இருக்கும் போது துணைக்கு கூட யாரும் இல்லாம அம்மாவும் நானும் ரொம்ப கஷ்ட்டப்பட்டோம்.. எப்படியோ அவளை பெத்து எடுத்துட்டன் என்று கண்கலங்கினால்..

குழலி இப்போ தான் பாப்பா பொறந்து இருக்கு, இப்படி அழாத டி எனக்கு பயமா இருக்கு.

இனிமேல் உனக்கும் நம்ம குழந்தைங்களுக்கும் எந்த கஷ்ட்டமும் வராது டி.. உங்க மூணு பேரையும் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க தான நான் இருக்கன்..

சிரித்து கொண்டே அவன் சொல்வதை அமோதித்தால்.

அதற்குள் வெளியே இருந்து கதவு தட்டும் சத்தம் கேட்டது..

குழலியை அறைக்கு மாற்றியதும், குழந்தையோடு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டவன் தான் அதன்பின் யாரையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரமாக மனைவியோடு கொஞ்சி கொண்டிருக்கிறான்..

எல்லாரும் நம்மல கேலி பண்ண போறாங்க, கதவ திறங்க ஷிவா என்று சிணுங்கி கொண்டே கூறினாள்..

அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன், வெளியே கதவில்   தாளம் தட்டி கொண்டிருந்த ரஞ்சனியை வெறியாக முறைத்தான்.

டேய் யெப்பா இப்பவாச்சும் கதவ திறந்தியே.. நீ அடுத்த பிள்ளைக்கு ரெடி பண்ணிட்டு தான் கதவ திறப்பன்னு நினைச்சன் என்று அவள் போற போக்கில் சொல்லிவிட்டு போக, விஷ்வாவிற்கு தான் அவள் மண்டை மேல் கொட்ட வேண்டும் போல் இருந்தது.

உறங்கி கொண்டிருந்த குழந்தையை ரசித்து கொண்டிருந்தவர்கள் அதன் பின் குழலியிடமும் அவள் உடல் நலனை விசாரித்தனர்.

குழலி ஐந்து நாட்கள் மருத்துவ மனையில் இருந்தாள். யாரையும் அருகே சேர்க்காமல் விஷ்வாவே குழலியை பார்த்து கொண்டான்.

வீட்டிற்கு அழைத்து வந்த பின்பும் அவனே தான் குழலியை பார்த்து கொண்டான். அவன் மாமியாரிடம் பத்திய உணவுகளை மட்டும்  சமைத்து தர கூறி வாங்கி கொண்டான்..

ஆனால் அதை குழலியை உண்ண வைப்பதற்கு தான் படாத பாடு படுவான். அவளுக்காக அவனும் அந்த பத்திய உணவை தான் உண்டான்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு அமுத்துட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்க.. குழலிக்கு தூக்கம் பற்றா குறையாகி போனது..

அவள் நிலை புரிந்தவன், அவளை எழுப்பாமலே உறங்கி கொண்டிருக்கும் மனைவியின் அருகில் குழந்தையை வாகாக படுக்க வைத்து, குழந்தை மலர் காம்பை பற்றும் படி செய்வான்..

குழந்தை பால் குடிக்கும் அழகை அவ்வளவு ரசிப்பான் விஷ்வா, மாதுளை பிஞ்சு ஈர்களால் கொட்ட கொட்ட விழித்து கொண்டு அன்னையின் அமுது குடிக்கும் அவன் மகன் பேரழகனாக தெரிந்தான்.

குழலிக்கு அடித்து போட்டார் போல் தூக்கம்.. தந்தை மகன் செய்யும் சேட்டை எதுவும் தெரியவில்லை.

21 ஆம் நாள் ஐயரை வரவைத்து புண்ணியதானம் செய்து தீட்டு கழித்து கொண்டனர்.. இதில் எல்லாம் விஷ்வாவிற்கு பெரிதாக விருப்பம் இல்லை. என் பொண்டாட்டியும் புள்ளையும் உங்களுக்கு தீட்டா என்று திடீர் நாத்திங்கனாக பேச, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவனை ஆஃப் செய்தனர்.

இதெல்லாம் காலம் காலமாக செய்யும் சடங்கு ஓரமா போடா என்று அவனை ஒதுக்கி வைத்து விட்டனர்..

அன்றே குழந்தைக்கு பெயரையும் தேர்ந்தெடுத்து கொண்டனர்..

ஒரு நன்நாளில் நெருங்கிய உறவுகளையும் நண்பர்களையும் மட்டும் அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தினர்.

குழந்தையை தொட்டிலில் இட்டு, இளஞ்செழியன் என பெயர் சூட்டினர்..

வந்த பெருசுகளில் சில பேர் ரஞ்சனியிடமும் மறைமுகமா கேட்கிறேன் என்ற பெயரில்.. என்னமா விசேஷம் எதுவும் இருக்கா என்று கேட்க..

அது புரியாதவள்.. இப்போதான ஆன்ட்டி பாப்பாக்கு பேர் வச்சு முடிச்சோம், ஒன் இயர் கழிச்சு பர்த்டே வைப்போம் அவ்ளோ தான் ஆன்ட்டி என்றால்.

எதிரில் உள்ள அந்த அம்மா அவளை ஒரு நிமிடம் உற்று பார்த்துவிட்டு சென்று விட்டார்..

விழா நல்லபடியாக முடிய, முத்தரசி குழந்தைக்கு உடல் வலி போக சுடுதண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி விட்டார்.

குழந்தை பிறந்து மூன்று மாதம் முடிந்த நிலையில்.. இப்போது அனைவரின் முகமும் பார்க்க துவங்கினான் இளஞ்செழியன்..

அன்று காலை கூடத்தில் ரஞ்சனி அவள் மாமியாருடன் சிலிர்த்து கொண்டு சண்டைக்கு நின்று இருந்தாள்..

வழக்கம் போல் சூர்யாவிடம் பாருடா இவள மாமியாருன்ற மட்டு மரியாதை இல்லாம எப்படி பேசுறான்னு..

ஊர்ல இல்லாத பொண்ணுன்னு இவள போய் கட்டிட்டு வந்த பாரு என்று மகேஷ்வரி மருமகள் மேல் உள்ள கோவத்தை மகனிடம் காட்டி கொண்டு இருந்தார்..

அப்போது தான் அவனும் உறக்கம் கலைந்து எழுந்து வந்தான்..

குழலி அவள் அம்மாவிடம் என்ன பிரச்சனைமா என்று கேட்க எனக்கும் தெரில குழலி.. நான் வெளிய இருந்து இப்போ தான் உள்ள வந்தன்..

என்ன ஆச்சுமா? ஏன் இப்படி கத்திட்டு இருக்கீங்க? என்று விஷ்வா தான் கேட்டான்..

சூர்யா ரஞ்சனியிடம் என்ன பிரச்சனை என்று கேட்க..

நீ ஏன் இன்னும் புள்ளை உண்டாகமா இருக்க? எதாச்சும் குறையா இருக்க போகுது போய் ஹாஸ்பிடல் பாருன்னு சொல்றாங்க..

சூர்யா அவன் அம்மாவை ஏன்மா என்பது போல் பார்க்க..

ஏய் நான் கேட்டத மட்டும் சொல்லு, நீயே இல்லாத எல்லாம் கற்பனை பண்ணி சொல்லாத..

நீங்க கேட்டதுக்கு இது தான் அர்த்தம் என்றால் ரஞ்சனி.

நான் நல்லவிதமா தான் டா கேட்டன்.. நாள் எதாச்சும் தள்ளி போய் இருக்காமான்னு கேட்டன்.. இல்லனு சொன்னா..

இல்லன்னு சொன்னன்ல அதோட விட வேண்டியது தான? எதுக்கு என்ன ஹாஸ்பிடல் போக சொன்னிங்க?

இதல என்ன தப்பு இருக்கு? கடைசியா வீட்டுக்கு தூரம் ஆகி ரெண்டு மாசம் ஆகுதுன்னு சொன்னா அதான் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணுமானு சொன்னன் நான் நல்ல எண்ணத்துல தான சொன்னன்..
நல்லது சொன்னா கூட எல்லாருக்கும் தப்பா தான் தெரியும்..
இந்த வீட்ல நான் எதுவும் பேச கூடாதுனா சொல்லிடுங்க.. நான் எங்கயாச்சும் முதியோர் இல்லத்துல போய் சேர்ந்துக்குறன் என்று குரல் தழு தழுத்தவர் அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

சுந்தரம் காலையிலே அலுவலகம் சென்று விட்டதால், நடக்கும் பிரச்சனையை அறியாது போனார்.

சூர்யாவிற்க்கு புரிந்தது, அவன் அம்மா மேல் தவறு இல்லை என, அருகில் நின்று இருந்த ரஞ்சனியை முறைத்து விட்டு அவன் அம்மாவை சமாதானம் செய்ய சென்றான்.

ரஞ்சனி சூர்யாவை முறைத்து விட்டு அவர்கள் அறைக்கு சென்று விட்டால்.

ம்மாஹ் என்று அழைத்து கொண்டு உள்ளே சென்றான் சூர்யா.. மகனிடமும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் பேசினார்.

சாரி மா, ரஞ்சனி மேல தான் தப்பு என்னன்னு தெரில இந்த ஒரு வாரமா என்கிட்டயும் இப்படி தான் எரிஞ்சு எரிஞ்சு விழறா..

சின்ன பொண்ணு தான விடுங்கமா என்று அம்மாவை சமாதானம் செய்ய முயற்சித்து கொண்டிருந்தான்..

உன் ராங்கி பொண்டாட்டி மாசமா தான் டா இருக்கா.. இப்போல்லாம் சின்ன வேலை செஞ்சாலும் சோர்ந்து போறா அத வச்சு தான் நான் கேட்டன்.. அவளும் ரெண்டு மாசமா தல முழுகளன்னு சொன்னா, சரி போய் ஹாஸ்பிடல்ல செக் பண்ணுனு சொன்னா அந்த குதி குதிக்கிறா..

இனி யார் பொல்லாப்பும் எனக்கு வேண்டாம் நீ போய் உன் வேலைய பாரு.

அவன் அம்மா சொன்ன விஷயம் அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், அவர் வருத்தப்படுவது கஷ்ட்டமாக இருந்தது. ரஞ்சனி பேசினால் தான்  அம்மா சமாதானம் ஆகுவார் என புரிந்தவன், உடனடியாக ஆன்லைனில் ப்ரெக்னன்சி கிட் ஒன்றை ஆர்டர் செய்து இருந்தான்.. அது கைக்கு கிடைத்ததும் அதை எடுத்து கொண்டு உள்ளே செல்ல, அங்கு ரஞ்சனி வங்கிக்கு கிளம்பி கொண்டு இருந்தாள்.

கிட்டன் என்று அழைத்து கொண்டே உள்ளே சென்றான்..

ரஞ்சனி சூர்யாவை திரும்பி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

மீண்டும் கிட்டன் என்று அவளை பின்னிருந்து அனைத்து கொண்டு கழுத்து வளைவில் முத்தமிட்டு கொண்டிருந்தான்.

விடு.. விடு டா..

என்ன டி..

உங்க அம்மா எனக்கு குறை இருக்கா மாதிரி பேசுனாங்கன்னு சொல்றன் நீ ஒரு வார்த்தை எனக்காக பேசுனியா? ஏன்மா அப்படி சொல்றிங்கன்னு கேட்டியா? உனக்கு நான் முக்கியமே இல்ல.. போ என்கிட்ட பேசாத என்று கோவமாக பேசி கொண்டிருந்தவள் அழுது விட்டால்..

அவளை எப்படி சமதானம் செய்வது என தெரியாதவன் அவள் கையில் ப்ரெக்னன்சி கிட்டை திணித்து அவளை குளியல் அறையில் தள்ளியிருந்தான்..

ரஞ்சனி அவளை புரியாமல் பார்க்க.. போய் செக் பண்ணிட்டுவா டி என்றான்..

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் ஒரு வேலை இருக்குமோ என்று யோசித்தால். ஏனென்றால் இதற்கு முன்பும் நாட்கள் தள்ளி போய் சோதனை செய்து பார்த்ததில் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் தான் இந்த முறை பரிசோதிக்காமல் விட்டு விட்டால்..

 

99. கண்கள் நிறைந்த ஓவியமே!!
ப்ரெக்னன்சியை கிட் மூலம் உறுதி செய்தவள், கண்ணில் வழியும் கண்ணீரோடு சூர்யாவை அனைத்து கொண்டாள்..

என்ன ஆச்சு டி? ஏன் அழற என்று பதறியவன் அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டான்..

ரஞ்சனி அவள் கையில் உள்ள கிட்டை சூர்யாவிடம் காட்டினாள்.. அதில் அழகாக பளிச்சென மின்னியது இரட்டை கோடுகள்..

டூ லைன்ஸ் வந்தா பாசிட்டிவ் தான டி என்று அவன் புரியாமல் கேட்க..

சிரித்து கொண்டே ஆம் என்று தலையாட்டினால்.

கடுப்பானவன் அப்பறம் எதுக்கு டி அழற லூசு என்று திட்டினான்..

போடா உனக்கு சொன்னா புரியாது என்று மீண்டும் அவனை கட்டி கொண்டாள்..

சிறிது நேரம் அவள் அனைப்பில் இருந்தவன், மெதுவாக பேச்சை துவங்கினான்.

கிட்டன் நீ அம்மாகிட்ட பேசுனது சரியா டி? அவங்க உன்கிட்ட என்ன அர்த்தத்துல பேசுனாங்கனு கூட ஒழுங்கா புரிஞ்சிக்காம அவங்கள நீ மரியாதை இல்லாம பேசலாமா?

அவங்க தான் என்கிட்ட சொன்னாங்க.. நீ ப்ரெக்னன்ட்டா இருக்கன்னு. அத தான் அவங்க உன்கிட்டயும் சொன்னாங்க.. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணுனு.

ரஞ்சனிக்கும் அவள் மேல் உள்ள தவறு புரிந்தது.

பின் சூர்யாவை விட்டு விலகியவள், அவள் அத்தையின் அறைக்கு சென்றால்.

மகேஷ்வரியும், முத்தரசியும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது உள்ளே வந்த ரஞ்சி அத்தை சாரி என்று தலையை கீழே குனிந்து கொண்டு கூறினாள்.. எதுக்குமா நீ என்கிட்டலாம் சாரி கேக்குற? நான்லாம் உங்களுக்கு ஒரு ஆளா என்று மகேஷ்வரி எகத்தாளமாக பேச..

அதான் சாரி சொல்றன்ல ஏன் இப்படி பேசுறீங்க என்று உரிமையாக மாமியார் தோளில் சாய்ந்து கொண்டு அழுதுவிட்டால். முத்தரசியும் அங்கு இருக்க, அண்ணி பிள்ளை அழுவுது விடுங்க அண்ணி, நம்ம பசங்க தான நம்ம மேல இருக்க உரிமைல பேசியிருக்கும்..

ரஞ்சனியின் சூடான கண்ணீர் மகேஷ்வரி தோள் நனைக்க, இப்போ எதுக்கு டி பண்றத எல்லாம் பண்ணிட்டு வந்து இப்படி அழுதுட்டு இருக்க?? சிடு சிடுப்பாக கேட்டாலும் அவள் குரலில் இருந்தது அக்கறையே.

உங்களுக்கு தெரியாது அத்தை. கொஞ்சம் நாளா என்கிட்ட எல்லாரும் விசேஷம் இல்லையா? குழந்தை இல்லையா? தள்ளி போட்டு இருக்கீங்களா? இந்த கோவிலுக்கு போ, ஒரு வாட்டி ஹாஸ்பிடல் போய் செக் பண்ணுனு சொல்லிட்டு இருக்காங்க..

என்கூட வேலை பாக்குற ஒரு லேடி நேத்து என்ன ரொம்ப கஷ்ட்டப்படுத்துறா மாதிரி பேசிட்டாங்க. அவங்க வேலைல ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாங்க. அத நான் அவங்ககிட்ட பொறுமையா தான் எடுத்து சொன்னன், ஆனா அவங்கள விட ஜூனியர் நான் அவங்க தப்ப கண்டு பிடிச்சு சொன்னதும் அவங்க அத பர்சனல்லா எடுத்துகிட்டாங்க போல, மதியம் எல்லாரும் சாப்பிடும் போது எனக்கு இன்னும் குழந்தை இல்லன்னு சொல்லி ஒரு மாதிரி பேசிட்டாங்க..

நாங்க தள்ளி போட்டுருக்கோம்னு பொறுக்க முடியாம சொன்னன்.. இப்போ எல்லாம் குறை இருந்தாலும் அத மறைச்சு இப்படி தான் தள்ளி போட்டுருக்கோம்னு சொல்றாங்க என் சொந்தகார பொண்ணும் பத்து வருஷம் முன்னாடி அப்படி தான் சொன்னா இன்னும் குழந்தை இல்ல அப்படின்னு சொன்னாங்க.. கடைசில இந்த ஹாஸ்பிடல் போ, ரொம்ப கைராசியான டாக்டர்ன்னு சொல்லிட்டு போனாங்க, எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு.

அதான் நீங்களும் காலைலயே குழந்தைய பத்தி பேசுனதும் எனக்கு கோவம் வந்துடுச்சு நீங்க சொல்ல வந்தத கூட புரிஞ்சிக்காம பேசிட்டன் மன்னிச்சிடுங்க என்று உண்மையில் வருந்தி மன்னிப்பு கேட்டாள்.

மகேஷ்வரிக்கு ரஞ்சனி சொன்ன அந்த பெண் மேல் அவ்வளவு கோவம் வந்தது.. எப்படி என் மருமகளை அப்படி பேசலாம் என்று..

அவளை நல்லா நாக்க புடுங்குறா மாதிரி கேள்வி கேட்காம இங்க வந்து கண்ண கசக்கிட்டு இருக்க.. நீ எல்லாம் வீட்ல புலி வெளில எலி என்று மருமகளின் தலையில் கொட்டினார்.

ரஞ்சனி பாவமாக தலையை தேய்த்து கொண்டாள். வேலை செய்ற எடத்துல எல்லாம் அப்படி பேச முடியாது.. டெய்லி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கணும் அதுவும் இல்லாம அவங்க என்ன விட பெரியவங்க அவங்க கிட்ட எப்படி கோவமா பேசறது என்றுவளை வெறியாக முறைத்தார் மகேஷ்வரி.

அப்போ நான் பெரியவ இல்லையா டி? என்ன மட்டும் எதிர்த்து பேசுற..

நீங்க என் அத்தை அப்படி பேசுவன், நாமலாம் ஒன்னுக்குள்ள ஒன்னு இல்லையா? என்று மகேஷ்வரிக்கு ஐஸ் வைத்து எப்படியோ அவரை சமதானம் செய்து ராசியாகிவிட்டனர்.

உன்மேல எனக்கு எந்த கோவமும் இல்ல டி.. நீ என்ன வில்லியா பாக்குறத நிறுத்து என்றார்.

அவர்களின் சம்பாஷனைகள் அனைத்தையும் வெளியில் இருந்து கேட்டு கொண்டிருந்த சூர்யா உள்ளே வந்திருந்தான்.

ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டிங்களா என்று கேட்டவன் அவன் மனைவியோடு நெருக்கமாக நின்று கொண்டு சொன்னான் நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் பாட்டி ஆக போறீங்க என்று..

நிஜமாவா ரஞ்சி என்று மகேஷ்வரி கேட்க, அதற்குள் முத்தரசி வெளியே சென்று இனிப்பை எடுத்து வந்து கொடுத்தார்.

அதன் பின் அனைவருக்கும் விஷயம் பகிரப்பட.. வீட்டில் மீண்டும் ஒரு சந்தோஷ பேரலை..

அன்று வங்கிக்கு தாமதமாக சென்றவள், அனைவருக்கும் இனிப்பை வழங்கி அவள் கருவுற்று இருப்பதை தெரிவித்தால். அதில் ரஞ்சனியை மனம் வருந்தும் படி பேசியவருக்கு ஒரு பாக்ஸ் முழுவதும் இனிப்பை கொடுத்து நல்லா சாப்பிடுங்க மேம், என்று நக்கலாக கூறிவிட்டு சென்றால்..

காலையில் சூர்யா வங்கி முன்பு நின்று கொண்டு உன்கிட்ட பேசுன லேடிய காட்டு என்று அடம் பிடித்து நின்றவனை அடக்கி அனுப்புவதற்குள் ரஞ்சனி ஒரு வழியாகிவிட்டால்.

சூர்யா அவனை யாராவது ஏதாவது சொன்னால் கூட போய்த்தொல என்று விட்டுவிடும் ரகம்.. ஆனால் அவன் கிட்டனை யாராவது கொஞ்சம் மனம் கஷ்ட்டப்படும் அளவு பேசிவிட்டாலும் யார் என்னவென்று எல்லாம் பார்க்க மாட்டானே அந்த பயம் தான் ரஞ்சனிக்கு.

நாட்கள் அழகாக செல்ல, ரஞ்சனி மூன்று மாதம் வரை அவள் அம்மா வீட்டில் தான் இருந்தாள்.

அவர்களுக்கும் ரஞ்சனி ஒற்றை கருவேப்பிலை கொத்தாயிற்றே..  ஆசைகள் இருக்கும் அல்லவா மகளை அவர்களுடன் வைத்து கவனித்து கொள்ள வேண்டும் என்று..

சூர்யா தான் தவித்து போனான் இந்த மூன்று மாதங்களில்..

நீங்கள் நினைப்பது போல் மனைவியை பிரிந்ததற்காக அல்ல.. அவளை சேராமல் இருந்ததற்காக..

அவன் தான் ரஞ்சனியுடன் சேர்ந்து மூன்று மாதம் அவன் மாமியார் வீட்டில் போய் இருந்து கொண்டானே..

அவன் கவலை எல்லாம் மருத்துவர் மூன்று மாதம் வரை கவனமாக இருக்க வேண்டும், கணவன் மனைவி சேராமல் இருப்பது நல்லது என்று கூறிய அறிவுரையால் தான்.

மீனிற்கு அலையும் பூனையாக, சூர்யா இப்போது பூனை குட்டியாக ரஞ்சனி என்னும் மீனை எப்போது லபக் என்று கவ்வி கொள்ளலாம் என அலைந்து கொண்டிருக்கிறது.

சூர்யா நாம ஒரு பெரிய வீடு கட்டி அதல எங்க அம்மா அப்பா உங்க அம்மா குழலியோட அம்மா எல்லாரும் ஒன்னா இருக்கலாமா டா? எங்க அம்மா அப்பாவும் பாவம்ல அவங்களுக்கும் என்ன விட்டா யாரும் இல்லையே என்றால்.

இன்று மாலை தான் மூன்று மாதம் கழித்து மாமியார் வீட்டிற்கு வந்திருந்தால்..

வாயும் வயிறுமாக இருக்கும் மகளை அனுப்பவே மனம் இல்லை.. இருந்தும் நிதர்சனம் உணர்ந்து மகளை சூர்யாவோடு அனுப்பி வைத்தனர் பரமு மற்றும் சுசிலா தம்பதியினர்.

அவர்கள் கண்ணில் உள்ள ஏக்கத்தை கண்டு கொண்டவளுக்கு, அந்த நேரம் நாம பையன்னா பொறந்து இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.. அதனால் தான் இப்போது சூர்யாவிடம் அவள் ஆசையை கூறினாள்.. அவளை பற்றி அறியாதவனா அவள் கணவன் சரி டி கண்டிப்பா உன் ஆசைப்படி பண்ணிடலாம்..

இந்த வீட்லயே கூட அவங்கள கூப்பிடலாம் ஆனா அத்தை மாமா வரமாட்டாங்க..

ஹ்ம்ம் ஆமா.

எல்லாரும் சேர்ந்து வீடு கட்டலாம், அப்போ தான் யாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது..

சரிங்க பொண்டாட்டி அப்படியே செஞ்சிடலாம் என்றவன் அவளை அனைத்து கொண்டு உறங்கினான்.

நாட்கள் இறக்கை இன்றி பறக்க ரஞ்சனி வாந்தி மயக்கம் என சோர்ந்து போனாள்.. எது சாப்பிட்டாலும் குமட்டி கொண்டு வாந்தியெடுக்கும் அவன் கிட்டனை பார்த்து சோர்ந்து போவான் சூர்யா..

இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்து கொள்வதால், அவளுக்கு உடல் சூடும் அதிகமாகி போனது..

ஐந்து மாதத்தில் இருந்த ரஞ்சனி,  அவள் உடல்நிலையை காரணம் காட்டி மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டாள் தக்க மருத்துவ சான்றிதழ்களுடன்..

வீட்டில் உள்ள மூன்று பெண்களும் அவளை தாங்கி கொண்டனர்.. சுசிலாவும் ஒருவாரம் சுந்தரம் வீட்டில் வந்து தங்கியிருந்து மகளை பார்த்து கொண்டார்..

உடல் இளைத்து இருந்தாள் ரஞ்சனி. சூர்யா தான் மசக்கையால் அவதிப்படும் மனைவியை கண்டு துடித்து போவான்.. கோவத்தில் பிள்ளையை கூட கடிந்து கொள்வான்.. ரஞ்சனி தான் அந்த நேரம் அவனை திட்டுவால். எதுக்குடா பிள்ளைய திட்ற ப்ரெக்னன்சினா அப்படி தான் இருக்கும் என்று புரிய வைப்பால்.

பூரணி பாப்பா, ரஞ்சனியின் சோர்வுற்ற முகத்தை கண்டு சித்தி நான் டான்ஸ் ஆடுறன் சிரிக்கிறீங்களா என்று அன்னையை போல் சேட்டை செய்வாள்.

இளஞ்செழியனுக்கு இப்போது ஒன்பதாம் மாதம் நடந்து கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக சோஃபா கட்டில் சுவரு என அனைத்தையும் பிடித்து மெல்ல மெல்ல நடைப்பயின்று கொண்டிருந்தான்.

ரஞ்சனிக்கு பூரணியும் செழியனும் தான் பொழுது போக்கே.. அவர்கள் செய்யும் அட்டகாசங்களை நினைத்து நினைத்து சிரிப்பால். இரவு சூர்யா வந்ததும் அனைத்தையும் கூறி சிரிப்பால்.

ஏழாம் மாதத்தில் குழந்தையின் அசைவு தெரியாமல் போக, வீட்டில் உள்ள அனைவரும் பதறி கொண்டு மருத்துவமனை சென்றனர்..

குழந்தை அமர்ந்த நிலையில் இருப்பதால், அசைவு குறைந்துள்ளது மற்றபடி பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று கூறி அனுப்பினார் மருத்துவர்.

அவளின் உடல் நலம் கருதி, ஏழாம் மாதம் திட்டமிட்ட வளைக்காப்பு ஒன்பதாம் மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

விதியின் சதி எட்டாம் மாதத்தின் தொடக்கத்திலே ரஞ்சனிக்கு வலி வந்துவிட.. அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க சூர்யா, குழந்தை வேற வெளிய வர துடிக்கிது இந்த நிலமைல ஆபரேஷன்னும் பண்ண முடியாது.. நாம வெயிட் பண்ணி தான் ஆகணும்.

சூர்யா அவன் கிட்டனை கண்டு அழுதே விட்டான்.. அவனை யாராலும் அங்கு தேற்ற முடியவில்லை..

விஷ்வா தான் சூர்யாவுடனே இருந்தான்.. ஒன்னும் ஆகாது டா..நீ வேணும்னா பாரு ரஞ்சனி குழந்தைய நல்லபடியா பெத்துட்டு வருவா என்றான்.

ஆமா சூர்யா ரஞ்சனி ரொம்ப தைரியமா இருக்கா, நீயும் அதே தைரியத்தோட இரு என்று குழலியும் ஒரு பக்கம் ஆறுதல் சொன்னால்.

பெற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும், ஒரே மகள் உள்ளே பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.. 

அதற்கு மேல் தாயை தவிக்க விட வேண்டாம் என்று நினைத்தான் போலும், ரஞ்சனியின் பெருத்த குரலில் குறை பிரசவத்தில் சுகமாக வெளியே வந்தான் அவர்களின் புதல்வன்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

100. கண்கள் நிறைந்த ஓவியமே!!
                                                                (இறுதி அத்தியாயம் )

 

குழந்தை குறை மாதத்தில் பிறந்தாலும் 3 கிலோ வரை எடை இருக்க மருத்துவர்கள் பயப்படும் படி ஒன்றும் இல்லை என கூறி அனைவரையும் நிம்மதி பெரு மூச்சு விட வைத்தார்.

ஒரு நாள் மட்டும் குழந்தையை இன்கியூ பேட்டரில் வைத்தனர் அதன் பின் அன்னையின் மார்பு சூடே குழந்தைக்கு போதும் என கூறி, எப்போதும் ரஞ்சனியின் மார்பில் வைத்து கொள்ள கூறினர்..

சுக பிரசவம் என்றாலும் குழந்தைக்காக ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி இருந்து வந்தனர்.

ரஞ்சனி அவள் மாமியார் வீட்டிற்கே வந்துவிட, சூர்யா அவன் மாமனார் மாமியாரையும் உடன் அழைத்து வந்துவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும், முதல் வேலையாக ரஞ்சனியை நன்றாக சாப்பிட வைத்து அவள் உடலை நன்றாக தேற்றி வைத்தனர் வீட்டில் உள்ளவர்கள்.

சூர்யா அவன் வேலையை அவன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு, முழு நேரமும் அவன் கிட்டனை பார்த்து கொள்வதையே வேலையாக வைத்து இருந்தான்.

கணவனின் கவனிப்பில் இரண்டே மாதத்தில் குண்டு பப்லிமாசாக வளம் வந்தாள் கிட்டன்.

ஒரு நன்நாளில் குழந்தைக்கு நெடுஞ்செழியன் என பெயர் சூட்டினர். குழந்தைக்கு கண் பட்டுவிடும் என எண்ணி எந்த விழாவையும் கொண்டாட வில்லை.

மகனின் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடலாம் என  ரஞ்சனி சொல்லிவிட சூர்யாவும் அதை அமோதித்தான்..

குழலியும் விஷ்வாவும் இளஞ்செழியனின் முதல் பிறந்த நாளை நெடுஞ்செழியனோடு சேர்ந்து கொண்டாடி கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டனர்.

நாட்கள் குழந்தைகளின் வரவில் மகிழ்ச்சியாக சென்றது..

நெடுஞ்செழியன் இப்போது ஐந்து மாதத்தில் இருந்தான்.

சுந்தரம் அவருக்கு இப்போது எல்லாம்  குழந்தைகளை விட்டு அலுவலகம் செல்லவே விருப்பம் இல்லை..

போகணுமே என போய் வருகிறார்..

இரண்டு பாட்டிமார்களுக்கும் குழந்தைகளை கொஞ்சுவதிலே நேரம் சரியாக இருக்கிறது..

வாரத்தின் இறுதி நாட்களில் சூர்யாவும் ரஞ்சனியும் பரமு வீட்டிற்கு சென்று விடுவார்கள்.. சில நேரம் அவர்களோடு விஷ்வாவின் குழந்தைகளும் சென்றுவிடுவார்கள்..

இது என் குழந்தை இது உன் குழந்தை என்ற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மூன்று குழந்தைகளையும் இரு அன்னை மார்களும் பார்த்து கொண்டனர்.

குழலி குழந்தைக்கு திட உணவு பழக்கியதும் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் சென்று வந்தாள் அப்போது, இளஞ்செழியனிற்கு பால் நியாபகம் வந்து விட்டால்,  ரஞ்சனியை அவனுக்கும் அமுதுட்டுவால்.

பூரணி பாப்பா அக்காவாக தன் இரு குட்டி தம்பிகளையும் பொறுப்பாக பார்த்து கொள்ளும் பொறுப்பை விஷ்வாவும் சூர்யாவும் கொடுத்து இருந்தனர்.

பாப்பா, குட்டி தம்பிங்க கீழ இருந்து ஏதாவது எடுத்து வாயில வச்சா, அத நீ வாங்கி தூக்கி போட்டுடனும் என்று சொல்ல.. சரிப்பா நான் தம்பிங்கள பார்த்துகுறன் என்று பெரிய மனுஷி தோரணையில் கூறிய அவன் குட்டி மகளரசியை தூக்கி ஆசை தீர கொஞ்சி கீழே இறக்கிவிட்டான் விஷ்வா.

இரு குழந்தைங்களும் விஷ்வா செல்லம் தான். இளஞ்செழியன் பால் குடிக்க மட்டுமே தாயிடம் வருவான் மற்ற நேரம் எல்லாம் விஷ்வாவிடமே..

குழலி கூட கோவித்து கொள்வால் ரெண்டு பேரும் உங்ககிட்டயே தான் இருக்காங்க என்ன கண்டுக்கவே மாற்றங்க என்று..

குழலி கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள், குழந்தைகள் கேட்கும் பொருள் அவசியம் என்றால் மட்டுமே வாங்கி கொடுப்பால்.. அதே போல் தான் உணவும்.. கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டும் எந்த உணவையும் வீண் பண்ண கூடாது இதுவே மூன்று குழந்தைகளுக்கும் தாரக மந்திரமாக சொல்லி கொடுத்து வளர்க்கிறாள்.

அவள் கண்டிப்புடன் சொல்வதை விஷ்வா வேடிக்கையாக சொல்லி புரிய வைப்பான்.. அதனால் இரண்டு குழந்தைகளுக்கும் விஷ்வா ஃபேவரட் ஆகி போனான்.

அதற்காக குழலியை பிடிக்காமல் எல்லாம் இல்லை விஷ்வா இருந்தாள் குழலியை கண்டு கொள்ள மாட்டனர் இரண்டு வாண்டுகளும். விஷ்வா இல்லை என்றால் அம்மா அம்மா என்று முந்தானையை பிடித்து கொண்டு சுற்றுவர்.


சூர்யா.. ரஞ்சனி..

நெடுஞ்செழியன் அன்னையிடம் சமத்து பையனாக பால் குடித்து விட்டு, பொக்கை வாயை கொஞ்சமாக பிளந்து கொண்டு உறங்கி கொண்டிருந்தான்.

உறங்கும் குழந்தையை தூக்கி வைத்து ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான் சூர்யா..  அவன் மீசைப்படாமல் குழந்தைக்கு மென் முத்தம் வைக்க, தூங்கும் போது குழந்தைய கொஞ்சாத டா எரும என்று திட்டினால் அவனின் கிட்டன்..

ஏன் கொஞ்ச கூடாது??

குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போகுமாம்..

லூசு படிச்சவ தான நீ? இதெல்லாமா நம்புவ??

அதல்லாம் எனக்கு தெரில டா.. குழந்தை விஷயத்துல யாராவது ஏதாவது நெகடிவா சொல்லிட்டா அத நான் எப்பவும் செய்ய மாட்டன் என்றால்..

போடி, ரொம்ப பண்ற நானே என் பையன தூங்கும் போது தான் கொஞ்சுறன்.. முழிச்சிட்டு இருக்கும் போது என்கிட்ட வரவே மாற்றான் என்று வருத்தம் கொண்டான்..

அது உன் தப்பு டா.. என்று சிரித்தாள் ரஞ்சனி.

நெடுஞ்செழியன் சூர்யாவோடு ஒட்ட மாட்டான் ரஞ்சனி மற்றும் குழலியிடம் தான் அவனின் பொழுதுகள் கழியும்..

அவன் கிட்டனை பிரசவ காலத்தில் கஷ்ட்ட படுத்தியதற்காக மகனிடம் கொஞ்ச காலம் முறுக்கி கொண்டு இருக்க.. அந்த நேரத்தில் அவன் குழலி ரஞ்சனியின் செல்லமாகி போனான்.

அதனால் தான் இப்போது உறங்கும் மகனை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருக்கிறான்.

அவனை முறைத்து பார்த்தவள் போ.. இன்னைக்கு ஃபுல்லா உன் பையனையே கட்டி புடிச்சுகிட்டு தூங்கு என்று சூர்யாவை தலையணையால் அடித்துவிட்டு அவள் இடத்தில் உறங்கி விட்டால்.

குழந்தையை ஆசைத்தீர கொஞ்சி முடித்தவன், ரஞ்சனிக்கு மறுபுறம் படுக்க வைத்து விட்டு..

கிட்டன் என்று வந்துவிட்டான்.

போடா தூக்கம் வருது என்று அவள் சிணுங்க.. அப்படிலாம் சொல்லாத டி, இன்னைக்கு தான் உன் பையன் எனக்கு பாவம் பார்த்து சீக்கிரம் தூங்கியிருக்கான் என்று பேசி கொண்டே மனைவியை அவன் புறம் திருப்பி வேலையில் இறங்கினான் சூர்யா.

முதலில் மிஞ்சி பின் பலவீனமாக மறுத்து சூர்யாவின் ஆளுகைக்குள் மயங்கி போனாள் ரஞ்சனியாகிய அவனின் கிட்டன்..



விஷ்வ கர்ணன்.. பொற் குழலி..

இளஞ்செழியன் விஷ்வா மார்பிலும், பூரணி பாப்பா அவனின் இடது கை வளைவிலும் படுத்து கொண்டு விஷ்வா சொல்லும் கதையை கேட்டு கொண்டு இருந்தனர்.

அவர்களையே பாவமாய் பார்த்து கொண்டிருந்தாள் குழலி. விஷ்வாவும் ஒரு மணி நேரமாக கொக்கு கதையை சொல்லி கொண்டிருக்க இரண்டு வாண்டுகளும் உறங்கியதாய் இல்லை.

ஆனால் அவர்களையே பார்த்து கொண்டிருந்த குழலி விஷ்வா சொல்லும் கதையை கேட்டு கொண்டே உறங்கி விட்டால்.

ஹய்யோ என் பொண்டாட்டி தூங்கிட்டாலே என்று உள்ளுக்குள் புலம்பி அருகில் படுத்து இருந்த அவன் மகளை பார்க்க அவள் உறங்கி இருந்தாள். மகன் தான் விஷ்வாவிற்கு தண்ணி காட்டி கொண்டிருந்தான்.

தூங்குடா செல்லம் என்று கொஞ்சி கொஞ்சி உறங்க வைக்க அவனும் அப்பாவிற்கு பாவம் பார்த்து ஒரு மணி நேரம் கழித்து உறங்கி போனான்.

இதற்கு தான் காத்திருந்தேன் என்பது போல், இரு குட்டிகளையும் பாதுகாப்பாக உறங்க வைத்து விட்டு உறக்கத்தில் இருந்த குழலியை தூக்கி கொண்டு அவர்களின் ஃபேவரட் ப்ளேஸ்ஸான பால்கனிக்கு சென்று விட்டான்.

ஹய்யோ விடுங்க ஏன் இப்படி பண்றிங்க என்று அவள் சிடு சிடுத்தாள்.

அவளின் கோவம் புரியாதவனா விஷ்வா?

நான் என்ன டி பண்ணட்டும்.. ரெண்டு குட்டிகளும் தூங்குனா தான வர முடியும்?? அதலயும் என் பொண்ணு கூட பரவால்ல உன் பையன் இருக்கானே ரொம்ப மோசம் டி.. தூங்குறா மாதிரி தூங்குறான், நான் கதை சொல்றத நிறுத்துனதும் என் முகத்தை நிமிந்து பாக்குறான் டி என்று பெருமையாக மகனை பற்றி குற்ற பத்திரிகை வாசித்தான்..

கேட்டு கொண்டிருந்த குழலிக்கும் உதட்டில் தன்னால் சிரிப்பு வந்தது.

பௌர்ணமி நிலவில் டலாடிக்கும் அவன் மனைவியை கண்டு தேன் குடிக்க வந்த வண்டாக தாபம் கொண்டான்.. மலரை விட மென்மையானவளை வன்மையாக கையாளவே விரும்பினான் ஆணவன்.

பின்னலிட்டு இருந்த குழலியின் கார்மேக குழலை, தென்றல் காற்று தீண்ட அவிழ்த்து விட்டவன் அவள் கூந்தலுக்குள் எப்போதும் போல் நுழைந்து அவளின் சீயக்காய் வாசத்தை இழுத்தான்.

அவளுக்கே தெரியாமல் அவள் மாறாப்பை கலைத்தவன்..

செழித்த அழகில்…
சிவந்து நிற்கும் செந்தேனே…
என் கழுத்து வரையில்…
ஆசை வந்து நின்றேனே…

வெறித்த கண்ணால்…
கண்கள் விழுங்கும் பெண்மானே…
உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே…
காணாமல் நான் போனேனே…

இருதயத்தின் உள்ளே…
உலை ஒன்று கொதிக்க…
எந்த மூடி போட்டு…
நான் என்னை மறைக்க…
தொடட்டுமா தொல்லை நீக்க…

தங்கத் தாமரை மகளே…
வா அருகே…
தத்தித் தாவுது மனமே…
வா அழகே…

ஹய்யோ என்று அவன் மார்பில் புதைந்தவளின் காதில் டீஷர்ட்ட கழட்டி விடுடி என்றான்..

அவளும் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் அவன் சொன்னதை செய்தால்..

அதன் பிறகு.. என்ன..

பறக்கும் வண்டுகள்…
பூவில் கூடும் காா்காலம்…
கனைக்கும் தவளை…
துணையைச் சேரும் காா்காலம்…

பிாிந்த குயிலும்…
பேடை தேடும் காா்காலம்…
பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்…
பிணைத்து வைக்கும் காா்காலம்…

நகம் கடிக்கும் பெண்ணே…
அடக்காதே ஆசை…
நாகரீகம் பாா்த்தால்…
நடக்காது பூஜை…
நெருக்கமே காதல் பாஷை…

குழலி இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டவா என்றவனிடம் அவளும் அவள் வேகத்தை காண்பித்தால்..

இருவரும் ஆண் பெண் பேதமில்லாமல் அவர்கள் காதலை காட்டி கொண்டிருக்க இறுதி கட்டத்தில் விஷ்வா அவளை வன்மையாக ஆட்கொள்ள விரும்பியே அவனை ஆளவிட்டால் குழலி.

மூச்சு வாங்கி அவள் மேல் விழுந்தவனை ஆசுவாசப்படுத்த கணக்கற்ற முத்தங்களை வாரி வழங்கினால் குழலி.

லவ் யூ ஷிவா..

என்றவளுக்கு பதில் மொழி கூறாமல், அவளுக்கு அவன் காதலை உணர வைத்தான் இதழ் முத்தம் மூலம்..



திருமனம் என்பதை பாலைவனம் என கருதி விஷ்வாவுடனான திருமணத்தில் அவளையும் அவள் மகளையும் கட்டாயமாக இணைத்து கொண்டவளுக்கு.. திருமனம் என்பது பாலைவனம் இல்லையடி பெண்ணே விரும்பியே செல்லும் சோலைவனம் என அவளுக்கு நிரூபித்து கொண்டிருக்கிறான் விஷ்வ கர்ணன்..

இனி இவர்களின் வாழ்வு என்றென்றும் பூத்து குலுங்க நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்!!


முற்றும்...